டீசர்
சோழங்குறிச்சி திருமண மண்டபம்
நான் தான் அப்போவே சொன்னனே இந்த கல்யாணம்லாம் எனக்கு வேண்டாம்னு யாராவது கேட்டிங்களா. இப்போ அந்த பொண்ணு இல்லைனு யாருன்னு தெரியாத ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க அப்படின்னு மணமகனான ஹீரோ சோழன் தன்னுடைய அப்பா ராஜன் கிட்ட கத்திக்கொண்டு இருந்தான். அதற்கு அவர் என்னைக்கா இருந்தாலும் அந்த பொண்ணு தான் என் மருமகள் நீ என் மேலே மரியாதை வச்சிருந்தா இந்த கல்யாணம் பண்ணிக்கோ இல்லனா என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கோன்னு சொல்லி விட்டு போய்டுறார்.
மணமகள் அறையில் என்னம்மா தெரிஞ்சவங்க கல்யாணம் னு கூட்டிட்டு வந்துட்டு இப்போ உனக்குதான் கல்யாணம் னு சொல்றிங்க. யாருன்னே தெரியாத ஒருத்தரை எப்படிம்மா கல்யாணம் பண்ணிக்கறது. அதுவும் நம்ம ஸ்டேட்டஸ் என்ன இங்கே வந்து இந்த வில்லேஜ்ல போய் கல்யாணம் பண்ணிக்கொண்டு இருக்க சொல்றிங்க என்னால முடியாதும்மா அப்படின்னு நம்ம மணமகளான ஹீரோயின் கவிநிலா சொல்றா.
அதற்கு அவளோட அம்மா எதோ சொல்றாங்க கவி அழுது கொண்டே சரிம்மா நீங்கள் சொல்றவரையே கல்யாணம் பண்ணிக்கறேன் அப்படின்னு சொல்றாள். ஆனால் இதையெல்லாம் இந்த கல்யாணம் வேண்டாம் நிறுத்தி விடு னு மணப்பெண் கிட்ட சொல்ல வந்த நம்ம ஹீரோ கவியோட அம்மா பேசறதுக்கு முன்ன வரைக்கும் கவி பேசின எல்லாம் கேட்டு விட்டு கோபமா மணமகன் அறைக்கு போய்ட்டான்.
எவ்வளவு தைரியம் இருந்தால் ஸ்டேட்டஸ் பத்திலாம் பேசுவா. கல்யாணம் பண்ணிக்கொண்டு அவளுக்கு என்னோட ஸ்டேட்டஸ் என்னன்னு காட்டுறேன்.
யாரு இவங்க ரெண்டு பேருமே கல்யாணம் வேணாம்னு நினைக்கிறாங்க. ஆனால் இவங்களோட அப்பா அம்மா கல்யாணம் கண்டிப்பாக நடக்கணும்னு நினைக்கிறாங்க. யாரு நினைக்கிறது நடக்குதுன்னு கதையில் பாப்போம்.