என் கண்ணாடி-5

4.2
(13)

அத்தியாயம்-5

பல்லவி அந்த அதிகாலை நேரத்தில்  எழுந்தவள் தன்னுடைய வழக்கமான வேலை எல்லாம் முடித்தவள் எப்போதும் போல மொட்டை மாடியில் நின்று கொண்டு அந்த இயற்கை சூழலை தான் ரசித்துக்கொண்டிருந்தாள்.. “அடடா சின்ன குழந்தைகள கூட நம்ம அதட்டி,உருட்டி,மிரட்டி சரி பண்ணிடலாம் போல இருக்கு.. ஆனா இந்த பிள்ளையை ஒன்னும் பண்ண முடியலையேப்பா..” என்று கீழே கத்திக் கொண்டிருந்தார் அவளின் பாட்டி..

அது நன்றாக பல்லவிக்கு கேட்டாலும் அவள் அதனை கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய வழக்கமான வேலை போல அந்த இயற்கை சூழலை ரசித்துக்கொண்டிருந்தாள்.. “பல்லவி கீழ வாமா..” என்று அன்புடன் கூப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டியை மறுபடியும் சலித்தவாறே நின்றுக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க..

அடுத்த நிமிடமே.. “இப்ப மட்டும் நீ கீழ வரல நான் மேல வந்து உன்ன பெண்டு எடுத்துடுவேன்..”வேறு அதட்டலான குரல் கேட்கவே.. அதில் அதிர்ந்தவள் அய்யய்யோ அம்மா எப்ப வந்தாங்க..” என்று அதிர்ந்தவளோ வேகவேகமாக மாடியில் இருந்து கீழே ஓடி வந்தாள்.

அடியே ஏன்டி இப்படி ஓடி வர பச்ச உடம்புக்காரி தானே நீ..” என்று அதட்டிக் கொண்டிருந்தது என்னவோ பல்லவியின் தாயார்  ருக்மணி தான்.. ஆனாலும் அந்த சிறு பெண் அதனை கேட்கவில்லை.. பட்டாம்பூச்சியாக தன் அன்னையிடம் தாவியவளோ… அம்மா..” என்று அழகாக முகம் மலர்ந்து சிரித்தவளோ ஓடி சென்று தன்னுடைய தாயை இறுக்க அணைத்துக்கொள்ள.. ருக்மணிகோ தன்னுடைய மகளின் சிறுபிள்ளைத்தனத்தை பார்த்து அப்பொழுதும் சிரிப்பு தான் வந்தது..

ஆனாலும் அந்த பொறுப்பான அன்னையோ அதனை முகத்தில் காட்டாமல் அவளை முறைத்தவர்.. “சொல்ற பேச்ச கேட்கமாட்டியா பல்லவி.. கல்யாணத்துக்கு முன்னாடி தான் அப்டினா இப்போவும் இப்டிதான் பண்ற.. உனக்கு கல்யாணாகி எவ்ளோ வருஷம் ஓடிப்போச்சி ம்ம் கிட்டதட்ட எட்டு வருஷம் ஆகிப்போச்சி.. ஆனாலும் இன்னும் சின்னபுள்ளையாவே தான் இருக்க…”கடுமையாக சாட..

ம்மா…..”சிணுங்கிய பெண்ணவளோ.. “இன்னும் என்ன திட்டனுமாம்மா.. அதுவும் வந்ததும்..”குழைந்தவளோ.. “பாருங்க பாட்டி உங்க பொண்ண வந்ததும் உங்க பேத்தி அப்புறம் உங்க மருமகளான என்னை எவ்ளோ திட்டு திட்டுறாங்கன்னு.. இத கேட்கமாட்டீங்களா நீங்க..”தன் பாட்டியிடம் பம்மிக்கொண்டு ஓடியவளை கண்டு ருக்மணி தலையில் தான் அடித்துக்கொண்டார்..

அதானே ஏன்டி ருக்கு.. ஊருல இருந்து வந்ததும் பாப்பாவ திட்ட ஆரம்பிச்சிட்டியா அதுவும் எனக்கு முன்னாடியே..”தன் பேத்தியின் கன்னத்தை ஆசையாக வருடியவறை கண்டு ருக்மணி மனம் குளிர்ந்து போனார்.. என்னதான் தன் மகளை தன் தம்பிக்கு திருமணம் செய்து வைத்திருந்தாலும் மற்ற அன்னைகளை போல இவருக்கும் தன் மகளின் வாழ்க்கையை நினைத்து பயம் இருக்கத்தானே செய்யும்..

தன் தம்பியை நினைத்து ருக்கு ஒருநாளும் பயந்ததில்லை.. சொல்லப்போனால் தன் மகள் தன்னை விட தன் தம்பியிடம் நன்றாகவே இருப்பாள் என்று அவருக்கு தெரியும்.. அதுவும் அவரின் சகோதரன் அவளை கையில் வைத்து தாங்குவான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்த விடயம் தான்.

ஆனாலும் ஒரு அன்னையாக சிறுபயம் இருக்கத்தான் செய்தது. அதுவும் தன் மகளுக்கு திருமணமாகி சுமார் ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் போக அன்னையாக அவருக்கு அவ்வளவு பயம் தான்.

பேசாம நம்ம குலதெய்வம் ராக்காயிக்கிட்ட போயி பரிகாரம் பண்ணிட்டு வருவோமா..”பலநாள் புலம்பியிருக்கிறார் அவரின் தம்பியான ரஞ்சித்திடம்.

ரஞ்சித்தோ தன் அக்காவை முறைத்தவன்.. “அக்கா அவ சின்ன குழந்தைக்கா அவள போய் எனக்கு கட்டி வச்சதும் இல்லாம இப்போ என்னனா குழந்தை இல்ல குட்டி இல்லன்னு படுத்துறீங்க.. பாவம் அவ ஸ்கூல் கூட ஒழுங்கா முடிக்காத புள்ள.. படிக்கனும்னு ஆசையா சுத்துன பொண்ண எனக்கு கட்டி வச்சதும் இல்லாம உடனே அவளோட வாழ்ந்து குழந்தைய வேற பெத்துக்கனுமா..”ஒரடியாக போட்டு உடைக்க.. ருக்மணி ரஞ்சித்தின் பேச்சில் அதிர்ந்து போனார்.

அடேய் இப்போ என்னடா சொல்ல வர.. இன்னும் நீ அவளோட வாழலையா..”கன்னத்தில் கை வைத்து அடங்காத அதிர்வுடன் கேட்டவரை பார்த்து இல்லை என்று தலையாட்டினான்..

அவ இப்போதானே ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிக்க போறா.. முடிச்சதும் ஒரு வருஷம் வேலைப்பார்க்கட்டும் அதுக்கு அப்புறம் குழந்த, குட்டினு வாழுறோம்..”என்றவனின் மனம் அவருக்கு புரியாமல் இல்லை.. அவர்களின் குடும்ப, சாதி வழக்கப்படி விரைவில் திருமணம் நடத்துவது தான் ஐதீகம். என்னதான் ருக்மணி வேறு ஊரில் இருந்தாலும் அவரும் அவரின் குடும்ப வழக்கத்தை கண்ணாக பாதுகாப்பார்.. அப்படிதான் வெகு விரைவாக அதுவும் பல்லவிக்கு பதினைந்து வயதிலையே ரஞ்சித்திற்கு கட்டிவைத்துவிட்டனர்.

இது மிகவும் அதிகப்படிதான்.. ஆனாலும் ருக்மணியோ, அவரின் பெற்றோர்களோ அதனை கேட்கவில்லை. ரஞ்சித் எவ்வளவோ திருமணத்தை தடுக்க பார்த்தான். ஆனால் அவனின் குடும்பமோ அதற்கு விடவே இல்லை.

அடேய் ரஞ்சி.. நீ கல்யாணம் கட்டிக்கலனா அவள அப்டியே படிக்க வச்சிடுவேனு கனவு காணாத.. வேற ஒருத்தனுக்கு அவள கட்டிக்கொடுத்து என் கடமைய முடிப்பேன்டா..”ருக்மணி அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க தலையால் தண்ணி குடித்தார்.

ஆமா கண்ணா.. என் பேத்தி என்னோடவே இருக்கனும்னு தான் உனக்கு கட்டி வைக்க ஆசைப்பட்டோம்.. அதும் இல்லாம உனக்கு வேற வயசாகிட்டே..”இருபத்தி ஒன்றே ஆன ரஞ்சித்தை பார்த்து அவனின் அன்னை உருக.. அவனோ வெறிக்கொண்டு முறைத்தான்.

ஏன்ம்மா.. அக்கா தான் புரியாம பேசுதுனா நீயுமா.. எனக்கு வெறும் இருபத்தி ஒரு வயசு தான் ஆகுது. பத்தாததுக்கு எனக்கும் பல்லவிக்கும் எட்டு வயசு வித்தியாசம் இருக்கு.. அத கூட விடுங்க.. நானே ராணுவத்துல சேர்ந்து இப்போதான் மூணு வருஷம் ஓடிருக்கு.. எனக்கு என்ன ஆகும் ஏது ஆகும்னு தெரியாது.. இந்த மாதிரி சூழ்நிலையில வெறும் பதினெஞ்சே வயசான பல்லவிய எனக்கு கல்யாணம் செய்றதா சொல்றீங்களே.. உங்கள என்ன செய்றது…”கோவத்தில் கத்தியவனின் இரும்பு கரத்தை சட்டென்று பூப்போலான கை ஒன்று பிடித்துக்கொள்ள.. அந்த தொடுகையிலையே அது யார் என்று புரிந்து போனது ரஞ்சித்திற்கு..

இந்த உலகிலையே பூப்போன்ற மனமும், பூப்போன்ற உடலையும் பெற்றது தன் அக்கா மகளான அவனின் செல்ல பாப்பு தான் என்று அவனுக்கு தான் தெரியுமே.. ஆம் அது பல்லவிதான் அழகான தன் பூமுகத்தை, குழந்தை தனமான சிரிப்பை சிந்தியவளை கண்டவனுக்கு இதயம் முழுவதும் இனிப்பாக அல்லவா இருந்தது.

பல்லவி பிறந்ததும் முதன் முதலாக தன் கையில் வாங்கியது ரஞ்சித் தான். அப்போது ரஞ்சித்திற்கு ஒன்பது வயதிற்குக்கும். அவனின் அக்காவும், பல்லவியின் அன்னையான ருக்மணிக்கு திருமணமான போது அவருக்கு வயது வெறும் பதினான்கு தான். ரஞ்சித்திற்கு அப்போது வயது ஆறு இருக்கும். ருக்மணிக்கோ பதினாறு வயதில் எல்லாம் பல்லவி பிறந்தாள்.

அய்ய்ய் பாப்புகுட்டி மாமாவ பாருங்க பாப்புக்குட்டி..”என்று துருதுரு கண்களை உருட்டி பார்க்கும் அந்த குட்டி தேவதையை ரஞ்சித் கீழே இறக்கவே இல்லை..

ம்மா பாப்பாவ நாந்தான்மா இனி பாத்துப்பேன்..” கண்களில் கனவு மின்ன கூறியவனை கண்டு அனைவரும் புன்னகைத்தனர். சொல்லபோனால் அப்போதே அவர்கள் மனதில் பதிந்து போனது என்னவோ ரஞ்சித்திற்கு தான் அந்த குட்டி தேவதை என்பது தான்.

அதன் பிறகு வழக்கம் போல காது குத்துவதில் தொடங்கி பல்லவி பெரிய மனுசி ஆனதில்வரை அவளுக்கு அனைத்தும் செய்தது ரஞ்சித் தான். அவனின் கோவம் அவளை கண்டால் மட்டும் பனிபோல கரைந்து ஓடிவிடும். ஆனால் அதற்கு காதல் மட்டும் காரணமில்லை.. பல்லவி மீது அவன் அளவு கடந்த அன்பை வைத்திருந்தான்.

ரஞ்சித் இப்போது பல்லவியை நிமிர்ந்து பார்த்து கோவமான முகத்தை சாதாரணமாக்க.. பல்லவியோ அவனை பார்த்து சிரித்தவள்.. “எனக்கு வேற வீட்ல கல்யாணமாகி போக விருப்பம் இல்ல மச்சான்.. என் தாய்மாமன் உன்ன தான் நான் கட்டிக்க நினைக்கிறேன்..”அந்த பதினைந்து வயதில் கூற.

அதில் பொய்யாக அவள் தலையில் தட்டியவனோ.. “வயசுக்கு ஏத்தமதிரி பேசு அம்மு…”கண்டிப்பாக..

அதில் மூக்கை சுருக்கி முறைத்தவள்.. “நான் வயசுக்கு ஏத்தா போலதான் மச்சான் பேசுறேன்… எனக்கு இந்த கல்யாணத்துல அதுவும் என் மச்சான கட்டிக்கிறதுல முழு சம்மதம்..”என்று கூறியவளை என்ன செய்வது என்றே தெரியவில்லை ரஞ்சித்திற்கு. பெண்ணவளின் பதிலை கேட்டு யார் சந்தோஷம் கொண்டார்களோ இல்லையோ ருக்மணி பன்மடங்கு சந்தோஷம் கொண்டார்.

அதான் புள்ளையே ஒத்துக்கிட்டே..”தடபுடலாக ஏற்பாடுகளை செய்ய பட்டியல் போட.. அதற்கு பிறகு ரஞ்சித்தின் பேச்சு அங்கு எடுப்படாமல் போய்விட்டது. இதோ இப்போது திருமணமாகி எட்டு வருடங்கள் ஓடிப்போக. இப்போது தான் குழந்தையே பிறந்திருக்கின்றது. அதுவும் ரஞ்சித் அவள் படித்து முடித்ததும் தான் அனைத்தும் என்று கட்டளை போட்ட பின்பே.

இப்போது.. “ஏண்டி இப்படித்தான் பாட்டிகிட்ட எப்ப பாத்தாலும் ஆர்டர் பண்ணிக்கிட்டே இருக்கியா.. கால காட்டிலும் எழுந்து போய் மாடியிலே நின்னுகிட்டு இருக்கியே இந்த குளிர் உன் உடம்புக்கு செட் ஆகுமா.. உனக்கு மட்டும் ஒத்துக்காம போச்சுன்னா உன்னோடையே நிக்காதடி அதை அடுத்தது பிள்ளைகளுக்கும் தாவும்.. பச்ச பிள்ளைங்களுக்கு பால் தர பச்சை உடம்புக்காரின்ற நெனப்பு இல்லாம தான் சுத்துறியா…” என்றவாறே தன்னுடைய மகளை தன்னை விட்டு பிரிந்து நிறுத்தியவர் உடனே பல்லவியின் அறைக்குள் புகுந்து கொண்டார்.

அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரிந்த பல்லவி முகத்தை அழகாக சுளித்துக் கொண்டவள்… “உனக்கு எப்ப பார்த்தாலும் உன் பேர புள்ளைங்க தான் ஃபர்ஸ்ட் அதுக்கப்புறம் தான் நான்..” என்று நொடித்துக் கொண்டவளோ உறங்கும் தன்னுடைய மகளையும், மகனையும் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

ம்ச் அடியேய் தூங்கும்போது இப்படி புள்ளைய பார்க்காதடி..” என்று அதட்டல் போட்ட ருக்மணியோ பிள்ளைகள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் ரசித்து இருந்தார்.

அட நீ மட்டும் தூங்கும் போது கொஞ்சளாமா அம்மா..”அவர் கேட்டதையே திரும்ப கேட்க..

நல்லா பேசுவடி நானே மாசத்துக்கு ஒரு தடவை ஊர்ல இருந்து வந்து என் பேர பிள்ளைங்கள பார்த்துட்டு போறேன்.. நீ எப்ப பார்த்தாலும் பிள்ளைங்களோட தானே இருக்க அந்த கொழுப்பு உனக்கு..”என்றவரோ அப்போது தான் தன் மலர் கண்களை விரித்து கைகால்களை அசைத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார்.

அந்த சிறிய மொட்டுக்களும் தன்னுடைய பாட்டியின் கதகதப்பான உடல் சூட்டினை உணர்ந்து கொண்டவர்களோ அழகான மலர் கண்களைத் திறந்து அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு விழித்துக் கொண்டிருந்தனர்.. “என் தங்க குட்டிங்களா, என் செல்ல குட்டிங்களா எழுந்துட்டீங்களா பாட்டி வந்து இருக்கேன் பாருங்க ஊர்ல இருந்து உங்களுக்கு மருந்து எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன் தெரியுமா.. இந்த மருந்தெல்லாம் குடிச்சா உங்களுக்கு சளியும் வராது, காய்ச்சலும் வராது தெரியுமா..”ஆசையாக குழந்தைகளை மூக்கை பிடித்து ஆட்டி கொஞ்சிக் கொண்டிருக்க.. அதனைப் பார்த்த பல்லவிக்கும் சிரிப்புதான் வந்தது..

ம்மா அவனுங்களுக்கு இன்னும் ஆறு மாசம் தான் ஆகுது… அவங்க கிட்ட கதை சொல்லிகிட்டு இருக்கியே..”சலித்துக்கொண்டவளும் தன் பிள்ளைகளை ஆசையாக பார்த்தவாறே தன்னுடைய போனை எடுத்து பார்த்தவளின் உதடுகளோ அவள் எதிர்பார்த்த அழைப்பு வராததனால் பிதுங்கியது..

ம்ச் என்னடி உதட்டை பிதுக்குற இன்னும் உன் மாமன் போன் பண்ணலையா..”தன் பேரன், பேத்திக்கு உடம்பில் எண்ணெய்யை தடவியவாறே கேட்ட தன் தாயை முறைத்தவளோ..

அம்ம்மாஆஆஅமாமான்னு சொல்லாதம்மா மச்சானு சொல்லு எனக்கு அதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு…” என்ற பல்லவியின் முகம் மலர்ந்து காணப்பட்டது.. அதனை பார்த்த ருக்மணிக்கும் தனது மகளும் தனது உடன் பிறந்த சகோதரனான ரஞ்சித்தின் வாழ்க்கையும் அன்போடும், பாசத்தோடும் செல்வதை நினைத்து மனம் குளிந்து போனார்.

பல்லவி தந்தை சேகரன்.. சேகரனுக்கு சொந்த ஊர் திருச்சி.. திருச்சியில் தான் இப்போது ருக்மணியும் இருக்கின்றார்.. பிறந்ததிலிருந்து சேகரன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் தான். 22 வருடங்களுக்கு முன்பு சேகரன் ஒரு விவசாய கூட்டத்திற்காக ஊட்டிக்கு வந்திருந்தவரின் கண்களோ ருக்மணியை கண்டு காதலித்து தொலைத்தார். அப்போதிலியிருந்து சேகரன் ருக்மணி மீது அலாவிய காதலில் தொலைந்து போனார்.

அதன் விளைவாக தன்னுடைய தாய் தந்தையை அழைத்து வந்து ருக்மணியை தனக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பேச அவர்களும் படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கொஞ்சம் கட்டுக்கோப்போடு முடியவே முடியாது என்று கட்டளையாக கூற.. ஆனால் ருக்மணிக்கும் சேகரனை மிகவும் பிடித்து விட்டது.. இதனை தன்னுடைய தந்தையிடம் போய் கூற அவரும் முதலில் மறுத்தாலும் பின்பு தனது மகளின் வாழ்க்கை தான் முக்கியம் என்று யோசித்தவர் சேகரனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்..

ருக்மணிக்கு ரஞ்சித்தின் மீது அளவாளவிய பாசம் இருந்தது அது எப்படி என்றால் தன்னுடைய மகன் போல அவனை பார்த்துக் கொண்டார்.. ருக்மணி திருமணம் செய்து போகும்போது ரஞ்சித் கதறிய கதறலோ இப்போது வரை ருக்மணிக்கு கண்களிலேயே நிற்கும்.. அவ்வளவு ஒரு அழுகை அழுதான் ரஞ்சித்.. அப்படிப்பட்ட பாசக்கார தம்பிக்கு வெளியில் எங்கும் பெண் எடுக்கக் கூடாது தன்னுடைய மகளை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே பேசி முடிவு செய்து வைத்தவர்..

பல்லவி பத்தாம் வகுப்பு முடித்த கையோடு அவளையும் ரஞ்சித்திற்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்.. பல்லவிக்கும் சிறுவயதிலிருந்து ரஞ்சித்தின் மீது மச்சான் என்ற அளவிற்கு பாசம் இருந்தது உண்மைதான்.. ஆனால் அது காதல் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.. ரஞ்சித்திற்கும் அப்படித்தான் பல்லவியை தாய் மாமா என்ற முறையில் நன்றாக பாசமாக தான் பார்த்துக் கொண்டான்..

திடீரென்று தனது மனைவியாக திருமணம் செய்து வைக்கவே அவனுக்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது.. ஆனால் அது தயக்கத்தை உடைத்தது பல்லவி தான்.. “ஏன் மாமா தயங்குற நம்ம ரெண்டு பேரும் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனா நான் கொஞ்சம் மேஜர் ஆகிக்கிறேன் அதுக்கப்புறம் குழந்தைக்குட்டினு நம்ம பாட்டுக்கு அப்படியே செட்டில் ஆயிடலாம் சரியா..” என்று கூறும்போது ரஞ்சித்தே வாயில் விரல் வைத்துக் கொண்டான்..

அடியேய் பாப்பு நீ என்னடி இப்ப எல்லாம் இவ்ளோ பேசுற.. ரொம்ப மெச்சூர் ஆயிட்டியோ..” என்று நக்கலாக கேட்டவனை கண்டு பிள்ளை சிரிப்பு சிரித்த பெண்ணவளோ அவனுக்கு குழந்தை போல தான் தோன்றியது.. அந்நேரம் ரஞ்சித்தும் ராணுவத்தில் இருந்ததால் சரி ஓகே நீ சொல்ற டீலுக்கு நானும் ஒத்துக்கிறேன்.. இப்போதைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டாம்.. நீ இதுக்கு அப்புறம் லெவன்த், ட்வல்த் முடிச்சுட்டு அதுக்கப்புறம் காலேஜ் சேர்ந்து உனக்கு என்ன படிக்கணும்னு ஆசைப்படுறியோ அத படி.. நான் உன்னை படிக்க வைக்கிறேன் அதுக்கப்புறம் ஏதாவது ஒரு ஜாபுக்கு போ.. நீ வேலைக்கு போய் தான் நம்ம வாழனும்னு எந்த அவசியமும் கிடையாது.. ஆனால் பொண்ணுங்க எப்போதுமே சொந்த காலில் நிற்கனும்னு நினைக்கிறவன் நான்.. அதனாலதான் சொல்றேன் நீ படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போ.. அதுக்கப்புறம் நம்ம வாழ்க்கையை பார்த்துக்கலாம்..”நேர்க்கொண்ட பார்வையாக ரஞ்சித் பேச…

இதுதான் இந்த ஒரு காரணத்திற்காகவே ரஞ்சித்தை பல்லவிக்கு மிகவும் பிடிக்கும்,, ரஞ்சித் சிறுவயதில் இருந்தே இப்படித்தான் நியாயவாதி அப்படிப்பட்டவன் பேச்சாக மட்டுமில்லாமல் அவள் பன்னிரெண்டாம் வகுப்பு வரை முடித்துவிட்டு அவளுக்கு மிகவும் விருப்ப படிப்பான ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸை சேர்த்து விட்டான்.. ஊட்டியிலேயே ஒரு கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸை படித்து முடித்தவளோ அங்கேயே ஒரு ரெசார்ட்டில் இப்போது அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்..

பல்லவிக்கு இப்போது 21 வயது ஆகிவிட்டது.. அவள் படித்து முடித்த கையோடு தான் அவளுடன் ரஞ்சித் சேர்ந்து வாழ்ந்து இருந்தான்.. அதன் விளைவாக தான் இப்போது கட்டில் படுத்து இரு மலர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.. அது எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்த பல்லவியோ..

ம்ச் எல்லாம் உன் தம்பி தான்மா.. கால் பண்ற கால் பண்றேன்னு இப்ப வரைக்கும் காலே பண்ணல.. என்னதான் நினைச்சுட்டு இருக்காரு தெரியல.. லொள்ளு மச்சான்…” என்று தன் மச்சானை மனசுக்குள் திட்டிக் கொண்டவளின் கண்களில் அவ்வளவு ஏக்கம்.. பின்னே இருக்காதா பிரசவமான பிறகு ஒரு வாரம் இங்கேயே தங்கி இருந்தவன் அதன்பிறகு வேலை இருக்கிறது என்று போய்விட்டான்..

அதன் பிறகு ஒரு தரம் மட்டும் தான் இவளை வந்து பார்த்துவிட்டு சென்றான்.. அப்போது கூட எனக்கு நிறைய வேலை இருக்கும் அம்மு நான் உன்னையே சுத்தி வர முடியாது.. நீ என்னை புரிஞ்சிக்கிற இல்ல…” என்று அவளை சமாதானம் செய்துவிட்டு தான் ஊருக்கே சென்றிருந்தான்அதனை இப்போது நினைத்து பார்த்த பல்லவியோ என்ன இருந்தாலும் நீங்க என்னையும் கொஞ்சம் கேர் பண்ணிருக்கலாம் மச்சான்..” என்று மனதிற்குள் எண்ணாமல் இல்லை..

சரி அத விடு அவன் கால் பண்ணுவான்.. அவன் ஏதாவது வேலை பிசியா இருப்பானு நினைக்கிறேன்அவன் வேலைய பத்தி தான் உனக்கே தெரியுமே..” என்று தனது தம்பிக்கு சப்போர்ட் செய்த அந்த அன்புமிகு அக்காவோ தனது பேரக்குழந்தைகளை கொஞ்ச ஆரம்பித்து விட்டார்..

மா போதும்மா உங்களுக்கு கொஞ்சுனது.. வரியா ரெண்டு பேரையும் குளிக்க வைக்கலாம்..” என்று அடுத்த கட்ட நடவடிக்கையாக பல்லவி கூற.. அதில் அவரும் சரி என்று தலையாட்டியவாறே நன்றாக சுடுதண்ணீர் தனது அன்னையை வைக்க சொல்லிவிட்டு மழலைகள் இருவரையும் நன்றாக குளிக்க வைத்தார்.. அப்படியே தனது மகளையும் குளிக்க வைத்தவர்.. அவளது தலையை சாம்பிராணி போட்டு நன்றாக உலர காய வைத்துக் கொண்டிருந்தார்..

ருக்மணி எப்போமா ஊரிலிருந்து வந்தா…” என்று கேட்டவாறே வீட்டிற்குள் வந்தார் அவரின் தந்தை… ம்ம்ம் வாங்கப்பா இப்பதான் ஒரு ஒரு மணி நேரம் இருக்கும்..” என்றவரும் தனது தந்தையுடன் சில விஷயங்கள் பேசிக் கொண்டிருக்க அவரும் தலையாட்டியவாறு பேசிக் கொண்டிருந்தார்..

இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டிருந்தது..ஒரு வாரத்திற்கு பின்பு தான் பல்லவியின் வீட்டிற்கு முன்னால் ஒரு ஆம்புலன்ஸ் வந்து நிற்க.. அதனை என்ன என்று புரியாமல் வெளியில் வந்து எட்டிப் பார்த்த பெண் அந்த ஆம்புலன்ஸில் உள்ளே இருந்து இறங்கியவரை பார்க்க அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது…

(நீதான்டி…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!