Vageeswari

வேந்தன்… 24

வேந்தன்… 24 sorry honeys, konjam work athigamaakittu🤗. நடக்கும் தூரம்தான் என்பதால் குறுக்கு வழியில் புகுந்து வீட்டிற்கு சென்றுவிட்டாள் நளிரா. தன் பின்னேயே வந்திருந்தாலும் சுபியின் வீடு வரைக்கும்தான் பின்தொடர்ந்து வந்திருக்கிறான். அதனால் தன் வீடு அவனுக்குத் தெரியாததால் எப்படியும் அவன் இங்கே வீட்டுக்கு வரமாட்டான் என்பதில் நிச்சயம் அவளுக்கு. இன்னைக்கு சம்பந்தி வீட்டிலிருந்து வருவதாகத் தகவல் வந்திருப்பதால், விரைவில் அப்பா அம்மா வீட்டிற்கு வருவார்கள் என்று கேட்டைப் பூட்டாமல் விட்டுவிட்டாள், ஆனாலும் அவள் வந்த  […]

வேந்தன்… 24 Read More »

வேந்தன்… 23

வேந்தன்… 23 கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்தவளுக்கு கைகால்கள் உதறியது பயத்தில். கட்டியிருந்த புடவை வேறு இருக்கும் புழுக்கத்தை இன்னும் அதிகரித்தது. உள்ளாடை அதற்கு மேல் ரவிக்கை அதை தாண்டி மாறாப்பு என மூச்சுக் கூட விடமுடியாமல் போனது அவளுக்கு. ‘யாரு கண்டுபிடிச்சா இந்தப் புடவை கட்டும் கலாச்சாரத்தை?’ ஆயிரம் எண்ணிக்கையை தாண்டிப் போயிருக்கும் இந்தக் கேள்விகள்.  “கல்யாணம் முடியும் வரைக்கும் ஒழுங்கா லட்சணமா புடவையைக் கட்டுடி” என வீட்டில் சொல்லியிருக்க, வேறு வழியில்லாமல் புடவையைத்தான்

வேந்தன்… 23 Read More »

வேந்தன்…22

வேந்தன்…22   “வீட்டுக்கு வந்தா சிரமப்படக் கூடாதுன்னு சொல்லித் தந்தா அதை ஒழுங்கா கத்துக்கணும். அத விட்டுட்டு இந்தப் பிள்ளைங்க ரெண்டும் நறுக்குன்னு பேசுதுங்க” ஓரக்கண்ணால் இரண்டு மகன்களையும் பார்த்தார். ஆரவ் லேப்டாப்பில் பார்வையை பதித்திருக்க, நிஷாந்த் தன்னுடைய பேக் செக் பண்ணிட்டு இருந்தான். நிஷாந்த் கூட அம்மாவின் புலம்பல் தாங்காமல் காது கொடுத்துக் கேட்பான். ஆனால் ஆரவ் பெரிதாக எதையும் கண்டுகொள்ள மாட்டான். என்கிட்டே எப்படியிருப்பியோ அப்படியிருப்பேன் நான். இதுதான் அவன் கொள்கை. மற்றபடி சண்டை

வேந்தன்…22 Read More »

வேந்தன்…21

வேந்தன்…21     குடும்பத்தின் பாச மழையில் நனைந்து கொஞ்சம் தெளிந்துவிட்டாள் நளிரா. அதுபோக ராஜியின் அறிவுரை மழையில் சொட்ட சொட்ட நனைந்து “சுபி நாளைக்கு கடைக்கு வாடி செயின் தேடுவோம்” என்றுவிட்டு வீட்டுக்கு ஓடியே வந்துவிட்டாள்.   இரவு உணவை ராஜி வீட்டிலேயே உண்டுவிட்டதால், ஹாலில் பாயை விரித்துப் போட்டு படுக்கையை தயார் செய்தார்கள். சைத்ரா ராஜன் படுப்பதற்கு கட்டிலை போட்டு, பெட்சீட் விரித்துக் கொடுத்தாள்.   ஆர்த்தி குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்தாள்.

வேந்தன்…21 Read More »

வேந்தன்… 20 

வேந்தன்… 20   ரொம்ப நேரம் தோழிகள் அப்படியே அமர்ந்திருக்க, கதவை தட்டும் ஓசையிலேதான் சுயநினைவுக்கு வந்தனர். நளிரா பதறி எழுந்திருக்க, “அம்மாதான் நளி. நீ படு. நான் ஏதாவது சொல்லிக்கறேன்” என்றவள் அவசரமாக யோசித்தாள். நளிராவின் முகமே அவளது கவலையைக் காட்டித் தரும். அதனால் எதையாவது சொல்லி சமாளிக்கணுமே.   சட்டென யோசனை உதயமாக, “அம்மா கதவு திறந்திருக்கும்மா” என்று சொன்ன சுபியின் கரங்கள் நளிராவின் கழுத்துச் செயினை கழட்டியது.   “செயினை காணம்னு சொல்லிக்கலாம்

வேந்தன்… 20  Read More »

வேந்தன்…19 

வேந்தன்…19   சிவதானு அங்கிள், ராஜி அத்தை மகள்தான் சுபி. சுபியும் நளிராவும் நெருங்கிய தோழிகள். சிறுவயது தோழி. நளிரா வேகமாய் மூச்சு விட்டால் கூட தோழியிடம் சொல்லிவிடுவாள் அவ்வளவு நெருக்கம் இருவரும்.   பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்தவளுக்கு யாரோ தன்னையே உற்றுப் பார்ப்பதைப் போலவே இருக்கவும், தேகம் நடுங்க, விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் கம்பியை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள.   அதற்கு தகுந்தார் போல சுபி பைக்கை லேசாய் உழட்டி பிறகு ஓட்ட.   “ஒழுங்கா

வேந்தன்…19  Read More »

வேந்தன்…18

வேந்தன்…18   “எங்க பக்கம் புளிக்குழம்புல வெங்காயம் சேர்க்க மாட்டோம்மா. தாளிப்பும் வெந்தயமும் கூடவே கொஞ்சமா பூண்டும்தான் சேர்ப்போம். நீங்களும் கத்துக்கோங்க” என்று மாமியார் வீடியோ காலில்  சமையல் குறிப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்க,   “சரிங்க அத்த, ஆமா அத்த. ஓகே அத்த” என்று முகத்தை சிரிச்சபடிக்கே வைத்திருக்கும் கொடுமையை வெகு நேரமாக அனுபவித்திருக்கும் சகோதரிகள் மீது கொஞ்சமும் எதிர்பாராமல் இவள் விழுந்து வாரி வைக்க.   என்னவோ ஏதோவென்று பதறிப் போனார்கள் பெண்கள் இருவரும்.

வேந்தன்…18 Read More »

வேந்தன்…17

வேந்தன்…17 பெண்கள் எப்போதுமே பேச்சில் பொடி வைத்துதான் பேசுவார்கள். அதாவது அவர்களின் ஒரு சொல்லில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். ஆர்த்தி தன்னைத் தொட்டுத்தான் நளிராவுக்கு தினமும் எங்காவது ஒரு இடத்திலிருந்தாவது அறிவுரையும் வண்டி வண்டியாக திட்டும் பறந்து வருகிறது என்பதால் பாவமாகவும் இருக்கும் அதேநேரம் குதூகலமாகவும் இருக்கும்.  “ஏம்மா நளிரா. அவங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சத்தோட உங்கப்பா நிப்பாட்டியாச்சு. உன்ன? பாட்டு கிளாஸ்ன்னு அனுப்பி பணத்தைக் கரைச்சார். அந்த அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டாமா உனக்கு?”

வேந்தன்…17 Read More »

வேந்தன் 16

வேந்தன் 16 எதிரே கண்ணுக்கு எட்டிய வரை நீலக் கடலின் ஆதிக்கம் கம்பீரமாய் வீற்றிருந்தது. தங்கமாய் ஜொலித்த மணல் மீது திமிராய் நின்றிருந்தது சிபினின் வாகனம்.  சூரியன் அஸ்தமனம். ஆகும் நேரம் அது, இளவெய்யில், கடற்கரை காற்றும் சுகமாய் மேனியை தழுவிப் போக, ஆங்காங்கே மக்களின் நடமாட்டம் இருந்தது.  ஆரம்பத்தில் தம்பியை அடித்துவிட்டாளே என்ற கோபம்தான் அவனுக்கு. செல்லமாய் ஒரு துரும்பு கூடப் படாமல் வளர்ந்தவனை இப்படி கன்னத்தில் தடம் வரும் அளவிற்கு அடித்துவிட்டாளே என்ற ஆவேசத்தில்தான்

வேந்தன் 16 Read More »

வேந்தன் 15 

வேந்தன் 15    honeys❤️ உங்களை சந்திப்பதில் சந்தோசம் எனக்கு. எனக்கு share பண்ணவே டைம் இல்லடா. so என்னால் முடிந்த நேரத்தில் கதைகளை அப்டேட் பண்ணிட்டே இருக்கேன். நீங்க விருப்பமிருந்தால் சனிக்கிழமை டைம் ஒதுக்கிப் படிங்க.  முடிந்தால் விருப்பமிருந்தால் இங்கே ஒரு ரேட்டிங்ஸ் ⭐இருக்கே டச் பண்ணுங்க. உங்க கமெண்ட் இங்கயே தாங்க. எனக்கு சந்தோசமாக இருக்கும். “மச்சி இங்க எதுக்காக வந்திருக்கோம்?” சற்றுமுற்றும் பார்த்த ஆத்மா ரவிக் இருவருக்கும் நன்றாகவே புரிந்து போனது.  தாங்கள்

வேந்தன் 15  Read More »

error: Content is protected !!