Vageeswari

அன்னம் 21,22

அன்னம் 21,22 அத்தியாயம் 21  சரமாரியாக குத்துவனை எதிர்த்து நில்ல முடியாமல் இல்லை அவனுக்கு. அடிக்கும் கரங்களை தடுத்து விளக்கம் சொல்ல முடியும் அவனால். ஆனால் அடியை வாங்கிட்டு அப்படியே நின்றான். “போனாப் போவுது அநாதை பயலாச்சேன்னு உசுரோட விட்டு வச்சா ஆட்டைக் கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷனைக் கடிச்ச கதையா எந்தங்கச்சி மேலயே கையை வைக்கற. உன் கதைய இன்னைக்கே முடிக்கறேன் பாரு” அவன் குத்திய குத்தில் சத்தியசீலனின் மூக்கில் ரத்தம் வழிந்தது. “எந்தங்கச்சியை […]

அன்னம் 21,22 Read More »

அன்னமே 19, 20

அன்னமே 19, 20 “ஹையோ விடு” பைக் அவன் வீட்டு வாசலில் பிரேக்கிட்டு நிற்க, குதித்து இறங்க நினைத்தாள். “அடடா என்ன அவசரம் புள்ள உனக்கு புகுந்த வீட்ட பாக்கறதுக்கு? அப்புறமா பாக்கலாம். மாமன்கிட்ட இப்படி நெருக்கமா உக்காரு புள்ள” அவள் தொடையில் கைவைத்து இறங்காமல் தடுத்து கிட்ட இழுத்து நெருக்கியவன் அவள் கூந்தலில் முகம் புதைத்து முகர்ந்தான்.  பன்னீர் ரோஜா சூடியிருந்ததால் அதே வாசனையை அவள் கூந்தலும் பிரதிபலித்தது.  “அது என்னவோ புள்ள. முன்ன எல்லாம்

அன்னமே 19, 20 Read More »

அன்னமே 18 

அத்தியாயம் 18 இன்னைக்கு அப்பா இல்லைன்னா அண்ணனை கூட்டிட்டு போகணும்னு நினைத்து படுக்கையை விட்டே எழுந்தாள் அன்னம். நன்றாக தூங்கியதால் முகம் பொலிவாக இருந்தது. காச் மூச்சுன்னு பேச்சு சத்தம் காதை அடைத்ததால், ஜன்னலை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். அங்கே அப்பா அண்ணா இருவரும் கோபமாய் உரையாட, அப்பத்தா அம்மா ஒருபக்கம் உரிமைச் சண்டை போட்டனர். “மனசாட்சியோட நடந்துக்கங்கத்த. உங்க வீட்டுல கொடுத்ததுன்னா கொடுக்கறது கொடுக்காம போறது இதெல்லாம் உங்க விருப்பம். ஆனா உங்க மாமியார்

அன்னமே 18  Read More »

அன்னமே 16, 17

அன்னமே 16, 17 லைக் கமெண்ட் நிறைய வந்தால்❤️ அத்தியாயமும் தவறாமல் தொடர்ந்து வரும்னு சொல்லிக்கறேன் மக்களே 🤗   “யாருக்கு யாருன்னு முடிச்சுப் போட நாம என்ன சாமியா கண்ணப்பா. அதது பருவம் வந்தா தானா நடந்துட்டு போவுது. இப்பவே எதுக்கு கண்டதையும் பேசிகிட்டு சங்கடப்படனும். பிள்ளைங்களுக்கு மனசுக்கு பிடிக்கனும் கல்யாணத்துல” “அது என்னவோ சரிதாத்த. நம்ம கையில என்ன கிடக்கு. ஆனாக்கா மனசுக்கு பிடிக்குதுன்னு உன் மவன் கட்டிக்கிட்டு வந்தானில்ல அப்படியெல்லாம் நானு அதுங்க

அன்னமே 16, 17 Read More »

அன்னமே 14, 15

அன்னமே 14, 15 அத்தியாயம் 14  அன்னம் மரத்தின் மீது கண்களை மூடி அப்படியே சாய்ந்து நின்றுவிட்டாள். அவள் மனதை அறிந்தது போல காற்றும் சுழன்று அடித்தது. முகத்தில் அரைந்து போகும் காற்று அவளை குளிர்விக்க முயன்று தோற்றுப் போனது. தேகத்தின் வெம்மையை இன்னுமே கூட்டத்தான் செய்தது.  துச்சாதனன் போல் தன் மேலாடையை அவன் உருவியது நினைக்க. அவள் கரம் தானாய் நெஞ்சம் மறைத்தது. அவன் முன் தான் நின்ற கோலம்?… ஒருமுறை தன்னை குனிந்து பார்த்தவளுக்கு

அன்னமே 14, 15 Read More »

அத்தியாயம் 13 

அத்தியாயம் 13   அருகாமையில் மயங்கிக்கிடந்த இளவரசனை பார்வையிட்ட அன்னத்திற்கு அவன்பால் இரக்கம் சுரந்தது.   தினமும் பேருந்திற்காக இளவரசன் காத்திருப்பதை தந்தை அறியாமல் பார்த்துவிட்டே செல்வாள். ஆணிற்கான கர்வம் கலந்த திமிர் பார்வையாய் இருக்காமல் அப்பாவித்தனமும் பொறுமையும் கலந்த சாதுவான பார்வையில் ஈர்க்கப்பட்டாள் அன்னம்.   பால் வடியும் முகம் என்பார்களே அப்படித்தான் இளவரசனின் முகமும் தோற்றமும் இருக்கும். அவன் தங்கச்சி செவ்வந்தியை விட இவன் அழகில் நிறத்தில் குறைவுதான் ஆனால் கிராமத்து வழக்கில் பேசாமல்

அத்தியாயம் 13  Read More »

அத்தியாயம் 11, 12

அத்தியாயம் 11, 12 தண்ணீரில் கால்களை நனைத்து தொட்டியின் கரையின் அமர்ந்திருந்தவளுக்கு உலகம் மறந்து போனது. இளங்கன்று பயம் அறியாது, துள்ளி விளையாடினாள். யூனிபார்ம் நீர் பட்டு நனைந்து போக, அருகில்தான் வீடு என்பதால் கவலை இல்லை அவளுக்கு. தண்ணீரை வாயில் நிறைத்து கொப்பளித்தாள் பைப்பிலிருந்து நுரைத்து கொட்டும் அருவி நீர் மீது.  உள்ளே இறங்கி குளிக்க ஆசைதான். ஆனால் தங்களுடைய தோப்பு இல்லை என்பதால் ஏமாற்றமாய் இருந்தாலும், தன் மீது தெரித்துவிழும் நீரை ரசித்து அனுபவித்தாள். 

அத்தியாயம் 11, 12 Read More »

அன்னமே 9, 10, 

அன்னமே 9, 10,  பெரிய அத்தியாயமா தந்திருக்கேன் ஹனீஸ் 💕 அத்தியாயம் 9  கல்லூரி செல்ல ஆயத்தமாகி வெளியே வந்த அன்னம் ராமாயி அமர்ந்திருந்த திண்ணையில் அமர்ந்தாள். “அப்பத்தா காஃபி தரீங்களா?” கேட்ட அன்னம் கல்லூரியில் தோழிகளிடம் ஆசிரியைகளிடம் என பேசப்பழக இருப்பதால் கிராமத்துப் பேச்சு வழக்கை பேசுவதில்லை. மற்றவர்கள் கேலி கிண்டலுக்குப் பயந்தே முடிந்த அளவு தன்னை மாற்றிக்கொண்டாள். அவள் ஓரளவு நாகரீகமாய் இருப்பதுக்கு சுலோச்சனாவும் முக்கியக் காரணமாக இருந்தார். “மொத மொதல்ல காலேஜ் போற

அன்னமே 9, 10,  Read More »

அன்னமே 8 

அன்னமே 8    மக்களே ஒண்ணு கேட்கணுமே. நான் அதிகம் ஸ்டார் கமெண்ட் எல்லாம் தர சொல்லி கேட்கரதே இல்லைதானே. விருப்பம் இருந்தா தாங்கன்னுதானே சொல்லுவேன். ஆனால் எல்லாருமே படிச்சுட்டு சைலன்ட் ரீடரா இருக்கறதுதான் என்னை சோர்வடைய செய்யுதுன்னு தோணுது. லைக் கமெண்ட் இதெல்லாம் தரலாமே 🤗 கடைக்கு வரும் போகும் மக்களில் ஆயிரக்கணக்கான பேரைப் பார்த்துவிட்டார் கருணா. நல்லவன் கெட்டவன் மொள்ளமாரி குடிகாரன் என ஊரில் இருக்கும் மொத்த வரலாறும் தெரியும் அவருக்கு. “மனசுல பட்டத

அன்னமே 8  Read More »

அன்னமே 7

அன்னமே 7 அத்தியாயம் 7 விமர்சனம் ரேட்டிங் எதுவும் வரலையே. அப்போ யாரும் படிக்கலையா? கதை தொடர்ந்து தரவா?  எட்டி வைத்து நடந்த செவ்வந்தி பேயை நேரில் பார்த்த கணக்காக அரண்டு விட்டாள். இன்னும் தடக் தடக் என எஞ்சின் ஓசை செவியில் டமாரம் அடித்தது.  “எம்மாடி கருவாயன் கண்ணு பாக்கவே பயங்கரமா இருக்குது. முன்ன பின்ன பொண்ண கண்ணுல பாக்காதமேனிக்கு வெறிச்சுப் பார்க்கறான் வெக்கங்கெட்ட நாயி” முந்தியை இழுத்து கழுத்தோடு மூடினாள். இன்னும் அவன் பார்வை

அன்னமே 7 Read More »

error: Content is protected !!