அரிமாவின் காதல் இவள்

அரிமா – 11

இதற்கிடையில் மதுமதியோ தனது ஆழ்ந்த உறக்கத்திலும் ஆதித்யாவின்  காயம் பட்டிருந்த  புஜத்தை  அழுத்தமாக பிடித்திருக்க, அவனுக்கோ வலிக்காமல் இல்லை ஆனாலும் பொறுத்துக்கொண்டு, மதியின் முகத்தில் விழுந்து கிடந்த முடி கற்றை நீக்கினான். அன்று மின்னல் ஒளியில் அவனை ஈர்த்த அதே அழகு மதி முகம் இப்பொழுதும் அவனை ஈர்த்தது. வலியை மறந்து அவளது முகத்தில் இருந்து தன் பார்வையை அகற்றாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யா. எங்கோ இருட்டில் கிடந்தவனுக்கு மின்மினியாய் வெளிச்சத்தை கொடுத்தது அவளது முகம். மனதிற்குள் […]

அரிமா – 11 Read More »

அரிமா – 10

“இப்போ ஏன் எல்லாரும் இப்படி உட்கார்ந்திருக்கீங்க? ஓடிப்போனவளையே நினைச்சுட்டு இருக்காம, அடுத்து என்ன பண்ணனும்னு யோசிங்க. எல்லாரும் வந்துட்டாங்க” என்ற மிருதுளாவிடம், ” இனிமே என்ன பண்றது வந்தவங்க கிட்ட கல்யாணம் நடக்காதுன்னு எடுத்து சொல்லி அனுப்ப வேண்டியது தான்” என்றார் அருள்நிதி. ” கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா   என் தம்பியும் என் தம்பி பையனும் அசிங்கப்பட்டு நிக்க மாட்டாங்களா” ” அதுக்காக கல்யாணம் நடக்கும்னு பொய்யா சொல்ல முடியும்” ” குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணம் நடந்தா

அரிமா – 10 Read More »

அரிமா – 9

“ரன் வேகமா வா மதி” என்று கத்தியபடி அவளை இழுத்துக்கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடிய ஆதித்யாவுக்கு தன் பின்னால், ஆட்கள்களின் தட தடக்கும் காலடி சத்தம் மற்றும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்க அவன் முகம் விகாரமானது. உடனே தான் இருக்கும் இடத்தை ஒருமுறை நோட்டம் விட்டான். இருள் சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று எண்ணியவன், தன்னையே மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருக்கும் மதுவை பார்த்தான். சட்டென்று அவன் கையை பிடித்தபடியே

அரிமா – 9 Read More »

அரிமா – 8

மயக்கம் மெது மெதுவாக தெளிய தெளிய, சிரமத்துடன் தன் இமைகளை பிரித்து பார்த்தாள் மதுமதி. பார்வையில் தெளிவில்லை, அனைத்தும் மங்கலாய் தெரிந்தது.  சுற்றியும் ஒரே இருள். காற்றில் ஜன்னல் வேறு மாறி மாறி அடித்துக்கொள்ள, இரும்பு ஜன்னலில் ‘ டமார் ‘ என்னும் சத்தம் அவளது மெல்லிய இதயத்தை நடுங்க செய்தது. ‘ எங்கே இருக்கிறோம்?’ பயத்தில் அவள் மனம் நடுங்கியது . மிகுந்த சிரமத்துடன் எழ முயற்சித்தாள் முடியவில்லை.  அப்பொழுது தான், தன் கைகளும் கால்களும்

அரிமா – 8 Read More »

அரிமா – 7

ஆதித்யா சென்ற சொற்ப நிமிடத்தில் அவளைத் தேடிக் கொண்டு அங்கு ஜுவாலாவும் இளமாறனும் வந்திருந்தனர். அப்பொழுது, “இங்க என்ன பண்ணிட்டு இருக்க மது?” என்ற இளமாறனை தொடர்ந்து, “டிரஸ்ஸ ஏன் மாத்திருக்க உன் புடவைக்கு என்ன ஆச்சு?”  என்று வினவினாள் ஜுவாலா. ” புடவை எனக்கு வசதியாவே இல்ல ஜுவாலா, ஜுவல்ஸ் எடுக்க வேண்டி இருந்தனால தான் அதை வியர் பண்ணினேன். இப்போதான் எனக்கு வேண்டியத பர்சேஸ் பண்ணியாச்சே   அதான் இதை பில் போட்டுட்டு வியர் பண்ணிக்கிட்டேன்”

அரிமா – 7 Read More »

அரிமா – 6

ஹாலில் மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க, “ஒரு நாள் தான் டா இருக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணணும்ன்னா என்ன அர்த்தம் அர்ஜுன்” என்று ராம்குமார் கோபத்துடன் வினவ, மிருதுளாவோ அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார். ” உன் அப்பா சொல்றதும் சரிதானே அர்ஜுன், நாளைக்கு ஒரு நாள் தானே இருக்கு அதுக்குள்ள கல்யாணம்ன்னா எப்படி பா?” என்று அருள்நிதியும் கேட்டுவிட, தன் தந்தை ராம்குமார் மற்றும் தன் மாமா அருள்நிதி இருவரையும் ஒருமுறை மாறி மாறி பார்த்த அர்ஜுன், ” நான்

அரிமா – 6 Read More »

அரிமா – 5

மதுமதியின் நடுங்கும் கரத்தை தன் திடமான கரத்தால் பற்றிக்கொண்டு, நாகாவின் முறைப்பையும் வாங்கிக்கொண்டு அவளுடன் காரின் பின் சீட்டில் அமர்ந்தான் ஆதித்யா. அப்பொழுது தன் கரத்திற்குள் இருந்த மதுவின் கரம் நடுங்குவதை உணர்ந்த ஆதி நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, அவளுக்கோ பயத்தில் அழுகையே வந்து விட, கீழ் உதட்டை கடித்தபடி உடல் நடுங்க அமர்ந்திருந்தாள். அவளை அப்படி பார்க்கவே ஆதித்யாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிடவும், சட்டென்று அவளது கண்ணீரை துடைப்பதற்காக தன் கரத்தை அவளது வதனம்

அரிமா – 5 Read More »

அரிமா – 4

 ஆதித்யாவின் செய்கை குழப்பமாக இருந்தாலும், நடந்த கோர சம்பவத்தில்  பிரச்சனையின்றி தப்பித்ததை எண்ணி நிம்மதி அடைந்த மதுமதி, ஆதித்யாவை பற்றிய சிந்தனையை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு, தன் உயரத்திற்கு சற்றே குறைவாக இருந்த அந்த கதவை மெதுவாக தள்ள அது, ‘கிரீச் ‘ என்னும் சத்தத்துடன் திறந்து கொண்டு அவளுக்கு வழிவிட்டது. நேராக உள்ளே சென்றவள் காலிங் பெல்லை அழுத்தியபடி வாசலில் காத்திருந்தாள். வீட்டின் கதவுக்கு மேல் சிறிய விளக்கு நொடிக்கு நொடி கண்ணடித்துக்கொண்டிருக்க, மெனிக்யூர் செய்யப்பட்டு அழகாய்

அரிமா – 4 Read More »

அரிமா – 3

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், வேதாச்சலம் என்னும் தொழிலதிபர் தன் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக மதர் மேரியின் தலைமையில் இயங்கும் ஆசிரமத்திற்கு வருகை தந்திருந்தார். இது போல் கருணை உள்ளம் கொண்ட செல்வந்தர்கள் யாரவது தங்களின் வீடு விசேஷங்களை முன்னிட்டு உணவு வழங்கினால் தான் இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு, வயிறும் மனமும் நிறைய

அரிமா – 3 Read More »

அரிமா – 2.2

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், ” இந்தியா அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று ஒருபுறம் பெருமையாக மாருதட்டி கொண்டாலும், ஆண்டிற்கு ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதை போலீஸ் துறையின் புள்ளிவிவரம் எடுத்துரைக்கிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் ரவுடிகள் மற்றும் தாதாக்களின் அட்டகாசம் பரவலாக அதிகரித்து வருகிறது. ” என்று நாளிதழில் உள்ள

அரிமா – 2.2 Read More »

error: Content is protected !!