Novels

வருவாயா என்னவனே : 01

காத்திருப்பு : 01 வானத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எண்ணுமளவுக்கு மழை பெய்துகொண்டிருந்தது. அதற்கு சுருதி சேர்க்கும் வகையிலே இடியிடித்தது. அவ் ஓசையினால் பதறியபடி எழுந்தாள் நம் கதையின் நாயகி சந்திரவதனா.நாம் நாயகியை வதனா என்றே அழைப்போம். பதறி எழுந்த வதனா கண்டது தன்னருகில் வாயினுள்ளே விரலினை வைத்தபடி உறங்கும் மகனையே. மகன் இடிச் சத்தத்திற்கு எழுந்திடுவான் என்றே வதனா எழுந்தாள்.ஆனால் மகனோ அசையாது படுத்திருந்தான். சிறிது நேரம் மகனையே ரசித்திருந்தாள். அவள் ரசித்தது மகனையா? […]

வருவாயா என்னவனே : 01 Read More »

இதழ் – 4

இதழ் – 04 அவளின் தேகமோ இலேசான குளிரை உணரத் தொடங்கியது. ஏதோ ஓர் மெதுமையான பஞ்சின் மேலே இருப்பதைப் போல உணர்ந்தவள் தன் கண்களை மெல்லத் திறந்து கொண்டாள். நன்கு தூங்கி விழித்ததைப் போல தேகமோ இறகைப் போல இருக்க கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவள் சுற்றிப் பார்க்கையில் அந்த இடமோ அவளுக்கு புதிதாக இருந்தது. நன்கு பரந்த விசாலமான பரப்பைக் கொண்ட அந்த அறையில் ஓர் உயர் தரப் பஞ்சு மெத்தையின் மீது தான்

இதழ் – 4 Read More »

இதழ் – 3

இதழ் – 03 கண்கள் சிவக்க முகமோ வீக்கத்துடனும் எப்போதும் சோர்வோடும் வெறுப்பை வெளிக்காட்டும் வகையிலேயே தன்னைப் பார்த்து பழகிய அதிரனுக்கு இன்றோ தான் வேறு வகையாக தெரிவதைப் போல தோன்றியது. இலேசாக அவனது வதனத்தில் தோன்றிய சிரிப்பானது அவனின் மனநிலையை சற்று மாற்றி சிந்திக்க வைத்தது.   சிறிது நேரத்திலேயே அவனது வேதனை குறைவடைந்ததையும் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ந்தவனுக்கு அந்நேரம் அந்த மருத்துவர் கூறியதே ஞாபகத்தில் வந்தது. ‘கொஞ்சமாவது சிரிங்க சார் அப்போதான் உங்களோட

இதழ் – 3 Read More »

இதழ் – 2

அத்தியாயம் – 02 கண்ணாடிக் குவளைக்குள் இருப்பதைப் போல அவனது வீட்டின் மேல் தட்டு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் பல நிற விளக்குகள் எறிந்துக் கொண்டிருக்க வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல் போல காட்சியளிக்கக் கூடியது அதிரனின் வீடு… அதிரனோ தன் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். அவனது தாய் தந்தையினைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். மேலும் தந்தையோ தாயைப் பிரிந்து சில நாட்களிளேயே அதிரனையும் உலகையும் விட்டுப் பிரிந்தார். அன்றிலிருந்து தனிமையில் இருந்த

இதழ் – 2 Read More »

இதழ் தீண்டா பதுமையே – 1

அத்தியாயம் – 01 பல அடுக்குமாடிகளைக் கொண்ட இடமானது மக்கள் கூட்டத்தில் நிரம்பிக் காணப்பட்டது. அங்குள்ளவர்களின் தோற்றமே கூறியது அவர்களின் நிலமையை.. அது சாதாரண மக்கள் வந்து செல்லக் கூடிய இடம் இல்லை ஏனெனில் அங்கு ஒரு முறை வந்தாலே போதும் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து இலட்சக் கணக்கில் பணம் காலியாகும். ஆம் அந்த நகரத்தின் உயர்தர வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனையே அது. அவ்வாறான இடத்தில் கையில் ஓர் பேப்பர் வெயிட்டை வைத்து அங்குமிங்குமாக உருட்டியப்படி

இதழ் தீண்டா பதுமையே – 1 Read More »

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21

Episode – 20   அதிலே சிறு புன்னகை புரிந்தவன் அவளை நேராக செல்லும் வழியில் இருந்த ஆடைக் கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.   தூங்கும் அவளை எழுப்ப மனம் இல்லாது தானே இறங்கிச் சென்று பேபி ஃபிங்க் நிறத்தில் ரோஜாப் பூக்கள் போட்ட சுடிதார் ஒன்றை அவளுக்காக பார்த்துப் பார்த்து வாங்கியவன் மீண்டும் வந்து காரில் ஏறி தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு நேரடியாக  காரைச் செலுத்தினான்.   அவளோ, சற்று அசைந்தாலும் தூக்கம்

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21 Read More »

யட்சனின் போக யட்சினி – 16 & 17

போகம் – 16   உலகில் ஜனித்திருக்கும் உயிரினங்கள் யாவும் தன் காதலன் காதலியுடன் கூடிக் களித்து ரிங்காரமிட்டுக் கொண்டிருந்த அர்த்த முன் ஜாம வேலை…!   தன் ஆருயிர் பெண்ணின் சம்மதம் கிடைத்த பின் இவ்வுலகில் எந்த ஒரு காதல் கணவன்தான் தாமதிக்க நினைவான்…! ருத்ரன் அவ்வாறே…!   உரசி உரசியே அவளைப் பற்ற வைக்க முடிவு செய்தானோ…?! தீக்குச்சி காந்தமாய் ருத்ரன் தன்னவளின் வெண்சங்கு கழுத்து வளைவில் முகம் புதைத்து வத்திக்குச்சியாய் உரசினான்.  

யட்சனின் போக யட்சினி – 16 & 17 Read More »

யட்சனின் போக யட்சினி – 14 & 15

போகம் – 14 வானில் உள்ள வெண்பருவதியவளோ… நட்சத்திர வாலிப கூட்டத்தைக் கண்டு வெட்கம் கொண்டு மேக மன்னனிடம் அடைக்கலம் சென்றிருந்த ஏகாந்த வேலை…!   ருத்ரன் சட்டையின்றி ஈரம் சொட்ட சொட்ட விழிகளில் தாபம் பொங்க நிற்க… அக்கோலத்தில் அவனைப் பார்த்ததும் வெட்கம் கொண்ட மாது விழியை திருப்பி நாணம் கொண்டாள்.   ருத்ரனோ அது போதாது என விடாது அவளை சீண்ட எண்ணினான் போலும்,”பொண்டாட்டிழிஇஇ…ஏன் திரும்புழற…?! நான்தான் நீ சொன்னழ்தும் குளிச்சிட்டேன்ல…!  திழும்புடிஇஇ… பாருழு

யட்சனின் போக யட்சினி – 14 & 15 Read More »

யட்சனின் போக யட்சினி – 13

போகம் – 13   காந்தனானவன் தன் வெண்பனி வீச்சால் உலகில் உள்ள மங்கையர்கள் அனைவரின் மனதினை கொள்ளையடித்த வண்ணம் இருக்க… நம் தலைவியும் வேறொரு காந்தனுக்கு மனதை தந்துட்டுவிட்டு காத்துக் கொண்டு இருந்தாளாம்…!   ரகசியா வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு முற்பகல் வேலை போல் பாட்டியுடன் கதையளந்து கொண்டிருந்த நேரம் ருத்ரன் வரும் சத்தம் கேட்டது.   தனக்கு அவசரமாக ஒரு மீட்டிங் இருப்பதாக கூறிவிட்டு, கீழேயே அவளுக்கென திருமணத்திற்கு முன் தந்த அந்த ஒரு

யட்சனின் போக யட்சினி – 13 Read More »

யட்சனின் போக யட்சினி – 12

போகம் – 12   திங்களவன் தன் சுழலும் வேலையை செவ்வென தொடங்கி செங்கதிர்களை பூமியின் மேல் முழுமையாக வீச தொடங்கியிருக்க… இளம்பனியும் தன் தாக்கத்தை இன்னும் சிறிது நேரத்தில் குறைத்துவிடுவேன் என கூறும் அழகிய காலை வேலை…!   ருத்ரன் கொம்பனுடன் அடக்கும் விளையாட்டில் மும்முரமாக இருக்க… தன் காரிகையின் கீச்சுக்குரல் கேட்டது போலவே இருக்கவும் மேலே விழி உயர்த்தி பார்த்தவனுக்கு,அவள் இல்லை என்றதும் காதல் பித்தால் ஏற்பட்ட தன் மனபித்து போல என்று நினைத்துக்

யட்சனின் போக யட்சினி – 12 Read More »

error: Content is protected !!