family novels

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 05

வாழ்வு : 05 கீதா, சம்யுக்தா ஹாஸ்பிடலுக்கு வரும் முன்னரே சம்யுக்தாவிற்கு ட்ரீட்மென்ட் பண்ணிய டாக்டருக்கு கால் பண்ணி விஷயத்தை அறிந்து கொண்டார். அதன் பின்னர் அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டு, சம்யுக்தாவை மாத்திரம் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வீட்டில் இருந்து வக்கீலின் ஆபீசுக்கு சென்றவர், பிரகாஷையும் அங்கே அழைத்தார். அவர்கள் இருவரும் அவரிடம் சம்யுக்தாவைப் பற்றி கூறினார்கள். டைவர்ஸ் வாங்க வேண்டும் என்றான் பிரகாஷ். வக்கீலிடம் தன் மீது […]

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 05 Read More »

இன்னிசை -14

இன்னிசை- 14 நாட்கள் பல கடந்திருக்க… மேனகா, பழங்குடி மக்களின் இடத்திற்கு சர்வ சாதாரணமாக சென்று வந்துக் கொண்டிருந்தாள். ரிஷிவர்மனின், கால் சற்று குணமாகவும் அன்று தான் வேலைக்கு மீண்டும் வந்திருந்தான்‌. ரிஷிவர்மனின் கவனம் வேலையில் இருந்தாலும், விழி அவ்வப்போது அவனது பேச்சை கேட்காமல் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது. ” க்கூம்…” என்ற கார்த்திக்கின் குரலில் தான் அவன் வந்ததையே கண்டு கொண்டான் ரிஷிவர்மன். ” சார்…” ” இப்போ ஹெல்த் எப்படி இருக்கு ஓகேவா?” என்று தன்மையாக

இன்னிசை -14 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 04

வாழ்வு : 04 வீட்டின் உள்ளே செல்ல தடுமாறிய தீஷிதனை பிடிக்க வந்த புகழைத் தடுத்தான் அவன். “விடு புகழ் என்னால மனேஜ் பண்ணிக்க முடியும்…” “தீஷி நீ நிற்கவே தடுமாறிட்டு இருக்க வா நானே உன்னை விட்டுட்டு போயிடுறேன்…” “நோ புகழ் ஐ ஆம் ஸ்டெடி….” என்றவன் தன்னை பிடித்திருந்த நண்பனின் கையை விலக்கி விட்டு உள்ளே சென்றான். வாசலில் நின்றவாறு தீஷிதன் உள்ளே சென்றதைப் பார்த்த புகழுக்கு பெருமூச்சு வந்தது. அங்கிருந்து செல்லத் திரும்பியவன்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 04 Read More »

எண்ணம் -9

எண்ணம் -9 தியாழினியும், வர்ஷிதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க, நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன். “கரெக்ட்டா எங்களுக்குள்ள வந்துடு. காலையிலே எங்கப் போறேன்னு உங்க வீட்ல கேட்கவே மாட்டாங்களா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா. “ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக

எண்ணம் -9 Read More »

இன்னிசை -13

இன்னிசை-13 ” அத்தை ஈவினிங் ரோஸ் கார்டனுக்கு போகலாமா?” என்று தன் அத்தையின் முக வாட்டத்தை மாற்றுவதற்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரோஸ் கார்டனுக்கு போகலாமா என்று வினவினாள் மேனகா. “நீ வேணும்னா ரிஷி கூட போயிட்டு வா. எனக்கு முடியலை.” ” என்னத்தை ரிவென்ஞ்சா?” ” நீ என்ன சொல்ற பாப்பா? எனக்கு ஒன்னும் புரியலை. ” என்று பதிலளித்த தனம், தன் போக்கில் கிச்சனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். ” அத்தை… எப்பவும் நான்

இன்னிசை -13 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 03

வாழ்வு : 03 சம்யுக்தா வேதனையோடு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அவளது வேதனையை அதிகமாக்கும் பொருட்டு மேலும் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டிற்குள் வர முயன்றவளை வாசலிலே தடுத்து நிறுத்தினார் கீதா. வாசலில் நிற்பவளை கண்டுகொள்ளாமல். “அம்மா…” என்ற சம்யுக்தாவை முறைத்துப் பார்த்தார் கீதா.  “இங்க எதுக்காக வந்த…?” “என்ன அம்மா இப்படி கேட்கிறீங்க…? நான் நம்மளோட வீட்டிற்கு வரக்கூடாதா…?” “என்ன நம்ம வீடா…? இது ஒண்ணும் உன் வீடு கிடையாது… எப்போ கல்யாணம் பண்ணி வேற

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 03 Read More »

இன்னிசை-12

இன்னிசை-12 “மேகி… எனக்கு பசிக்குது… ஏதாவது டிஃபன் ரெடி பண்ணு.” என்று அவளை அங்கிருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான் ரிஷிவர்மன். ‘இப்போ தானே அங்கே பசிக்கலைன்னு சொன்னாங்க. ‘ என்று எண்ணிய மேனகா, அருகில் இருக்கும் அன்னியரின் முன் வாதாட விரும்பாமல் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள். “ஊஃப்.” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட ரிஷிவர்மன், கார்த்திக் அருகே சென்றான். ” டேய் கார்த்தி… என்னடா அவசரம் உன்னை யார் இங்க வர சொன்னது.”

இன்னிசை-12 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02

வாழ்வு : 02  அவர் சென்றதும் காலில் சலங்கை கட்டாத குறையாக ஆட ஆரம்பித்தார் கீதா. “ஏய் என்னடி உனக்கு கண்ணிலையும் உடம்பிலையும் பிரச்சனைனு பார்த்தால்… இப்போ வயித்துலயும் பிரச்சனை போல…. ஒரு சீக்காளியை புடிச்சி என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி அவனோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே….” என்று சத்தம் போட்டார். கணவன் தனக்கு ஆதரவாக ஏதாவது பேசுவான் என்று பார்த்தாள் சம்யுக்தா. ஆனால் அவனோ எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நின்றிருந்தான்.   அவளும் எதுவும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02 Read More »

எண்ணம் -8

எண்ணம் -8 தியாழினி பேசியதைக் கேட்டு முகம் இறுகிய ரித்திஷ்பிரணவின் காதில் தங்கை கூறியது மீண்டும் ஒரு முறை ஒலிக்க. ‘ஓ! காட்! ஒரு வேளை தன்வியோட சாபம் பலிச்சு, இந்த பொண்ணு மாதிரி ஒரு பி.ஏ கிடைச்சா, அவ்வளவு தான். அந்த பொண்ணுக் கிட்ட மாட்டி நான் பி.பி பேஷண்டா ஆகிடுவேன். ஓ! நோ!’ என்று எண்ணித் தலையைக் குலுக்கியவன், சாப்பிடணுங்குற எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு, தலைத் தெறிக்க ஓடி விட்டான். தியாழினியோ, தனக்கு முன்பு

எண்ணம் -8 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 01

வாழ்வு : 01 சென்னையில் உள்ள மிகப் பிரபல்யமான வைத்தியசாலை. ஆம்புலன்ஸ் வண்டியின் சத்தம் ஒருபுறம், மருந்து எடுக்க வந்திருக்கும் மக்களின் சத்தம் ஒருபுறம், ஊசி போட்டதால் அழும் சிறு குழந்தைகளின் சத்தம், செக்அப் செய்ய நிறைமாத வயிற்றுடன் கணவனின் கைகளை பிடிக்துக் கொண்டு கண்களில் ஒருவித சந்தோசமும் பயமும் நிறைந்த கண்களுடன் இருக்கும் பெண்கள் ஒரு புறம் என அந்த வைத்தியசாலையே ரொம்ப பிஸியாக இருந்தது.  அறை ஒன்றில் டாக்டர் ஒருவரின் முன்னிலையில், கையில் ஒரு

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 01 Read More »

error: Content is protected !!