சமர் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது வீட்டிற்குள் வந்தனர் அவனின் அம்மா, அப்பா இருவரும்.
“டேய், சமர் நீ ஹாஸ்பிடல் போகலையா” என்றபடி தன் மகனின் அருகில் அமர்ந்தார் நேத்ரன்.
“இல்லப்பா, நான் இன்னைக்கு போகல,”
“அதான் ஏன்னு கேட்டேன்? இன்னைக்கு ஈவினிங் பாலாவோட ஊருக்கு எல்லாரும் கிளம்புறீங்கதானே, “
“நான் போகலப்பா”
“போகலையா, என்னாச்சுடா உனக்கு, ஹாஸ்பிடல் போகலையான்னு கேட்டால், போகலைன்ற, ஊருக்கு போகலையான்னு கேட்டாலும் போகலன்னு சொல்ற, என்னாச்சு என் தங்கபுள்ளைக்கு” என அவனிடம் வந்தார் வைஷ்ணவி.
“எனக்கு ஒன்னும் ஆகலைம்மா. இன்னைக்கு உங்களோட கல்யாண நாள், நான் போயிட்டு வரதுக்கு எப்படியும் 15 நாளைக்கு மேல ஆகலாம். அதான் இன்னைக்கு ஒரு நாள் முழுவதும் உங்க கூட இருந்துட்டு போகலாம் என்று முடிவு பண்ணிட்டேன்.”
“பொய் சொல்லாதடா, அந்த ஊருக்கு போனதும் எங்களை மறந்திடுவேன்னு சொல்லு”
“நான் ஏன்ம்மா உங்களை மறக்க போறேன். என்னோட உயிரே நீங்க ரெண்டு பேரும் தானே”
“இன்னொரு உயிர், அந்த ஊர்ல தானடா இருக்கு” என சமரை பார்த்து சிரித்தார் வைஷ்ணவி.
“ம்மா” என்றவனின் முகத்தில் வெட்கத்தில் சாயல்.
“சமர், எத்தனையோ வருஷம் கழிச்சு நீ அவளை பார்க்க போற, என் மருமகளை ஒரு போட்டோ அடுத்து எங்களுக்கு அனுப்பி விடுடா.”
“அம்மா அதுதான் எனக்கு யோசனைவே இருக்கு, இத்தனை வருஷம் கழிச்சு நான் அவளை பார்க்க போக போறேன். ஆனால், அவள் மனசுல நான் இருப்பேனான்னு தெரியலையே, அவள் என்னை நியாபகம் வச்சிருக்காலான்னு கூட தெரியவில்லை என்றவனுக்கு அவள் பதினைந்து முடிந்து பதினாறின் தொடக்கத்தில் இருந்த முகம் வந்து சென்றது. எப்போதும் பாவாடை சட்டையில் ரெட்டை ஜடை போட்டுக் கொண்டு சிரித்த முகமாக சுற்றித் திரிவாள். அவனை மட்டும் வித்தியாசமாக அழைக்கும் பெண்ணவளின் குரல் இன்றும் காதுக்குள் கேட்கிறது, அப்படியே பத்து வருடங்களுக்கு முன் நடந்தது ஞாபக அலைகளாய் மனதினை தொட்டுச் செல்ல,
அவன் தோளை தொட்டு உலுக்கினார் வைஷ்ணவி.
“என்னடா? என் மருமகள் நியாபகம் வந்துடுச்சா”
“ம்மா, நான் அவளை பார்க்கும் போது அவளுக்கு 16 வயசு இருக்கும். இப்பவும் அதே மாதிரி இருப்பாளான்னு தெரியாது. நான் அவ முன்னாடி போய் நின்றதும் நீங்க யாருன்னு கேட்டால் மொத்தமா நான் உடைந்து போய்டுவேன்.”
“தைரியமா இருடா, போறதுக்குள்ள இப்படியா பேசுவாங்க, நம்பிக்கை இல்லாத மாதிரி, அதெல்லாம் என் மருமக உன்னை ஞாபகம் வச்சு இருப்பாள்” என்றார் நேத்ரன்.
“காதல்னாலே தைரியம் எல்லாம் காணாம போய்டும் போல” என தந்தையின் தோலில் சாய்ந்தான் சமர்.
“சரி விடு, உனக்காக அவ தான் பிறந்து இருக்கான்னா, கண்டிப்பா உன்னோட கை சேருவாள். என்னோட பையனோட காதல் உண்மையானது. அதனால கடவுள் கண்டிப்பா உன்னை சோதிக்க மாட்டார்.”
“சரிம்மா நாளைக்கு போய் தான் தெரியும் எதுவென்றாலும்,”
“நாளைக்கு எப்போடா கிளம்புற.?”
“நாளைக்கு மார்னிங் கிளம்புனேன்னா, ஈவ்னிங் அவங்க ஊருக்கு போயிடலாம், நாளைக்கு தான் அவங்க ஊர் திருவிழா ஸ்டார்ட் ஆகுது.”
“கிட்டத்தட்ட பத்து வருஷம் கழிச்சு நீ அந்த ஊருக்கு போக போறியா”
நாள் போனதே தெரியலை சமர். வருஷம் எவ்வளவு வேகமாக கடந்து போயிருக்கு .”
“ எல்லாமே என்னோட நேரம்.”
“சரி விடு சமர், இனிமே எல்லாமே உனக்கு சரியா அமையும்.”
“சரிம்மா, நீங்க போய் ரெடியாகுங்க, நம்ம போகலாம்.”
தாயும், தகப்பனும் தயாராகி வர சமர் அவர்களோடு சுற்றி பார்க்க கிளம்பினான்.
மாட்டை தொழுவத்தில் கட்டியபடியே சந்திரா “செம்பா இதுல பால் இருக்கு, அதை கொண்டு போய் சொசைட்டில ஊத்திட்டு வந்துடுறியா.” அம்மாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா,”
“சரிம்மா” என கோகிலாவை அழைத்துக் கொண்டு செம்பா கிளம்பினாள்.
கொஞ்ச தூரம் நடந்து வரவும் “அடியே என் அத்தை மகளே” என சத்தம் கேட்க திரும்பி பார்த்தனர் இருவரும்.
ிக மிக அருமை அருமையாக எழுதி உள்ளீர்கள்..