என் தேடலின் முடிவு நீயா – 32

4.9
(43)

தேடல் 32

இருவரும் படுத்திருந்தாலும் இருவருக்கும் தூக்கம் தான் வரவில்லை…

இருவருக்கிடையேயும் ஒரு திரை விழுந்த உணர்வு…

மெதுவாக அவளை நெருங்கி வந்தவன், அவளை அணைத்துக் கொள்ள மகிமா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்…

ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், “நமக்கு பேபீஸ் ஃபாம் ஆகுற அளவுக்கு நெருக்கமா இருந்திருக்கோம்… நீ எதுக்கு நான் உன்ன லைட்டா ஹக் பண்ணதுக்கே ஷாக் ஆகுற” என்று கேட்க…

“திடீர்னு நீங்க அணச்சதால தான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்…” என்றவள், திரும்பிப் படுக்க சிரமமாக இருந்ததால் மல்லாக்க படுத்திருந்தாள்…

அவளை அணைத்தபடியே அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்…

ஆறு மாதங்கள் கடந்தும் அன்று போல் இன்றும் அவன் தொடுகையில் அவள் மேனி உருகிக் குழைந்தது…

உணர்சியின் பிடியில் இதழ் விரித்து கண் மூடி படுத்திருந்தவளின் உதடுகளோ அவனை ஈர்க்க… சட்டென்று குனிந்தவன் அவள் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்…

மிக மிக ஆழமான முத்தம்… அவர்களது இதழ்களுடன் சேர்த்து உமிழ்நீரும் பரிமாறப்பட்டன…

அவன் இதுவரை அவளுடன் பேசாதது எல்லாம் சேர்த்து அவன் முத்தம் அவளுடன் பேசிக் கொண்டிருந்தது…

அவன் ஒரு கை அவள் வயிற்றிலிருந்த தன் மகவுகளை வருடிக் கொண்டிருந்தது…

கொஞ்ச நேரத்திலே அவள் மூச்சு வாங்கவும் தான் அவளிடமிருந்து பிரிந்தவன் அவளை தன் மார்புக் கூட்டுக்குள் சுருட்டிய படியே தூங்கிப் போனான்…

அடுத்த நாள் அபின்ஞானின் கைவளைவுக்குள் தான் மகிமா கண்விழித்தாள்.

அவனைப் பார்த்ததும் அவள் இதழ்கள் தானாகவே புன்னகைத்துக் கொண்டன.

மெதுவாக அவனிடமிருந்து விலகப் பார்க்கும் பொதே அவனும் முழித்து விட்டான்.

அவள் முகத்தை அருகில் கண்டதும் அதிர்ந்தவன் தன் கைவளைவுக்குள் இருந்தவளை பிடித்து தள்ளி விட்டவன், “ஏய் நீ இங்க என்னடி பண்ற” என்று கேட்க, இப்பொழுது அதிர்வது என்னவோ மகிமாவின் முறையாகப் போனது.

நேற்று அவன் அல்லவா அவளை அவனுடன் வந்து தங்குமாறு கூறினான். இன்று இவ்வாறு மாற்றிப் பேசினால் அவளும் என்னதான் செய்வது.

“நீ தேவ் தங்கச்சி தானே… என் கம்பெனிக்கு வந்து என் ப்ராஜெக்ட் கொட்டேஷன நீதானே திருடிட்டு போன… இப்ப என் ரூம்ல நீ என்ன பண்ற” என்று தலையை அழுத்தமாக வருடிக் கொண்டே கேட்க,

மகிமாவுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போனது…

அவனுக்கு எது முதலில் நினைவு வரக்கூடாது என்று நினைத்தாலோ அதுவே அவனுக்கு முதலில் நினைவு வந்துவிட, என்ன செய்வது என்று புரியாது கண்களில் கண்ணீர் ததும்ப கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

அப்பொழுதுதான் அவனுக்கு நேற்று நடந்ததும், அவள் கர்ப்பமாக இருப்பதும் புரிய தலையை அழுத்தமாக தேய்த்துக் கொண்டான்.

ஏனோ அவனுக்கு அவளை பிடிக்கவில்லை.

ஆனாலும் அவன் தங்கள் திருமண புகைப்படங்களை பார்த்ததில் அவள் தன் மனைவி என்று ஏற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.

அதே நேரம் அவள் தனக்கு இழைத்த துரோகம், தேவின் தங்கச்சி தான் அவள் என்ற உண்மை அறைந்ததில் அதை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

தங்களுக்கு இடையில் எப்படி திருமணம் முடிந்தது? அவள் எதற்காக தன்னை திருமணம் முடித்தாள் என்று அவனுக்கு இப்பொழுது சந்தேகமாக இருந்தது.

அவன் மனமோ, “இவள் என்னை ஏமாற்றி திருமணம் முடித்திருக்கிறாள்” என்று அடித்துக் கூறிக் கொண்டிருந்தது. இதற்கு மேல் எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல் அவன் தலை வேறு விண் விண் என்று வலிக்கத் துவங்கியது.

தன்னை நினைத்து சுய பரிதாபம் ஒரு பக்கம்… அடுத்தது அவன் நினைவுகள் சரியாக திரும்பாமல் அவன் தலைவலியில் அவதிப்படுவதை பார்த்து அவளால் மனதினுள் மட்டுமே கதற மட்டுமே முடிந்தது…

ஒரே ஒரு முறை அவள் திருட்டுத்தனம் செய்ததற்கு அவளும் எத்தனை முறை தான் தண்டனை அனுபவிப்பது…

அவள் முகத்தைப் பார்க்க பிடிக்காதவன் அறையிலிருந்து வெளியே சென்று விட்டான்.

நேற்று சந்தோஷத்தை குடுத்தவன் இன்று அதையும் பிடுங்கிக் கொண்டான்.

இருவரது முகமும் சோர்ந்து போய் இருப்பதைக் கண்ட அன்னபூரணி அம்மாள் மகிமாவிடம், “ஏதாவது பிரச்சினையா மகி” என்று கவலையாக கேட்டார்.

அவளும் அவரிடம் என்னதான் சொல்வது. இதற்கு மேல் பேசி அவர் மனதை நோகடிக்க விரும்பாதவள் ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டிக் கொண்டாள்.

அவள் தலையை வருடிவிட்டவர், “கடவுள் எல்லாத்தையும் சரியாக்கி விடுவார்னு நம்புவோம்” என்றவர் அங்கிருந்து சென்றார்.

அன்று முழுவதும் அவன் அவளுடன் பேசவே இல்லை.

காணும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே திரிந்தான்.

வார்த்தைகளால் எதுவும் குத்தி கிளிக்கவில்லை என்பது மட்டுமே அவளுக்கு நிம்மதி.

அவன் ஏதாவது ஒரு வார்த்தை தவறாக பேசி விட்டால் அதற்குப் பிறகு அவளால் அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடிய வில்லை.

அவனும் அவள் குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறாள் என்பதால் தான் எதுவும் பேசாமல் விலகி சென்று கொண்டிருக்கிறான்.

அவனுக்கு அவள் தேவ் தங்கை என்பதை தாங்கிக் கொள்ளவே முடியவில்ல. அது மட்டும் இல்லாமல் தன்னை  ஏமாற்றி பெரிய ஒரு திருட்டுத்தனம் செய்திருக்கிறாள்… அதை அவளிடம் வெளிப்படுத்தவும் முடியாமல், நினைவுகள் சரியாக வராத நிலையில் அவனுக்குத்தான் தலைவலி உயிர் போனது…

 மகிமாவுக்கும் அவன் தலைவலியில் அவதிப்படுவது புரிந்தது. அவனிடம் பேச பயந்தவள் அன்னபூரணி அம்மாளிடம் சென்று கூற விட, அவரோ அவனுக்கு தைலம் தேய்த்து விட்டார்…

மகிமா அவனுக்கு காபியை கொண்டு வந்து வைத்து விட்டு அமைதியாக சென்று விட்டாள்.

அவனும் இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்கி விட, அவன் தூங்கியதை உறுதி செய்து கொண்டவள் அவன் அருகே படுத்து அவன் மார்பில் தலையை வைத்து தூங்கிப் போனாள்.

அவன் அருகே உறங்குவதில் அவள்  இன்பம் கண்டு கொண்டிருக்கிறாள் இப் பேதை.

அடுத்த நாள் விடியலில் அவளுக்கு மூச்சு விட சிரமமாக இருக்க தூக்கத்திலிருந்து சிரமப்பட்டு கண்களை திறந்தவளது விழிகளோ சாசர் போல் விரிந்தன.

அபின்ஞான் அவள் இதழ்களை அழுத்தமாக கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தான்.

“ம்ம்ம்” என முனங்கிய படி அவன் மார்பில் கையை வைத்து அவனை தள்ளிவிட, அவள் தள்ளுவாள் என்பதை எதிர்பாராதவன் கட்டிலில் இருந்து கீழே விழுந்தான்.

அவன் விழுந்ததை பார்த்து அதிர்ந்தவள் இரு கைகளையும் வாயில் வைத்துக் கொண்டாள்.

நிலத்திலிருந்து அவளை முறைத்தபடியே எழுந்தவன், “என்ன திமிரு டி உனக்கு” என்று கேட்டபடி அவள் அருகே வர பயத்துடன் கண்களை மூடிக்கொண்டாள்.

அவன் எதுவும் செய்யாமல் இருக்கவும் மெதுவாக கண்ணை திறந்து பார்க்க அவள் அருகே அமர்ந்து அவன் அவளைத்தான் கணிவாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளும் எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்கிக் கொள்வாள். நேற்று காலையில் ஒரு மாதிரி நடந்தான். இன்று காலையில் வேரு ஒரு அவதாரத்தில் இருக்கிறான்.

“அபி ஏன் இப்படி பண்றீங்க” என்று உள்ளடங்கிய குரலில் கேட்க,

“நீ என் பொண்டாட்டி தானே உன்னை நான் கிஸ் பண்ண கூடாதா” என கேட்டான்.

“நீங்க நேத்து என்னென்னமோ பேசிட்டு இப்போ இப்படி நடக்குறது மட்டும் சரியா?” என்றாள்.

“நமக்கிடையில் என்ன பிரச்சன இருந்தாலும் நீ இப்போ என் பொண்டாட்டி… என் குழந்தைக்கு அம்மா அதனால நான் உன்ன எனக்கு தோன்ற நேரம் எல்லாம் கிஸ் பண்ணலாம்… தப்பில்ல” என்றவன் அவள் கன்னத்தில் தட்டி விட்டு குளியலறைக்குள் சென்றான்.

அவள் தான் என்ன செய்வதென்று அறியாது அப்படியே அமர்ந்திருக்க,வெளியே தேவின் சத்தம் கேட்கவும் பதறி எழும்பினாள்.

அபின்ஞான் தேவை கண்டால் என்ன செய்வன் என்று தெரியாதே…

நல்ல வேலை அவன் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருக்கின்றான். அவன் வருவதற்கு முன்னரே தேவை அனுப்ப நினைத்தவள் வேகமாக வெளியே சென்றாள்.

வெளியே வந்தவள் மகாதேவ் அருகே சென்று, “அண்ணா எப்ப வந்த நீ” என்று கேட்டாள்…

“இப்போ தான் டி… ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும்… நீ எப்படி இருக்க மகி” என்று கேட்டான்…

“நான் இருக்கேன் டா… அபி மட்டும் கண்டான்டா பெரிய பிரச்சினை ஆயிடும்… ஃபாஸ்டாக கிளம்பு” என அவனை அவசரப்படுத்தினாள் மகிமா…

“இன்னும் பழைய ஞாபகம் வரலையா?” என்று மகாதேவ் கேட்டுக் கொண்டிருக்கும்போதே,

“நீ இங்க என்னடா பண்ற” என்று கேட்டபடி வந்தான் அபின்ஞான்…

மகிமா அச்சத்தில் கையை பிசைந்தபடி நின்று இருந்தாள்…

 மகாதேவை முறைததுப் பார்த்தவன், “என்ன தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து… என் பொண்டாட்டி கூடவே பேசிட்டு இருப்ப” என்று கேட்டான் அபின்ஞான்…

“ஆஹ் ஸ்டார்ட் பண்ணிட்டான்… டேய் முதல்ல நான் உன் பொண்டாட்டியாகுறதுக்கு  முந்தியே நான் அவன் தங்கச்சி டா… இவன் இப்ப முதல்ல இருந்து ஆரம்பிக் போறான்” என்று நினைத்தபடி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…

மீண்டும் இருவருக்கும் சண்டை ஆரம்பித்து விடுமோ என பயந்தவள் அபின்ஞானின் கையை பற்றிக் கொண்டவள், “அவன ஒன்னும் பண்ணிடாதீங்க… ” என்றாள் மகிமா வேகமாக…

“நீ போ மகி…” நான் பேசிக்கொறேன் என்ற தேவ், அபின்ஞானை அறைக்குள் இழுத்துக்கொண்டு சென்று கதவை மூடினான்…

“டேய் என்ன விடுடா…” என்று அவன் கையை தட்டிவிட்டான் அபின்ஞான்….

அவனை அழுத்தமாக பார்த்த மகாதேவ், “எதுக்குடா நடிக்கிற” என்று எடுத்த எடுப்புக்கே கேட்டான்…

அபின்ஞான் ஒரு கணம் அசையாது நின்றவன், பின் “நான் என்னத்துக்கு நடிக்கணும்… நீ ஏதாவது டிராமா போடாதே” என்றான்…

“மத்தவங்க வேணும்னா உன் நடிப்ப நம்பலாம்… ஆனா நான் உன்ன நம்பவே மாட்டேன்… இதுக்கு முன்ன நீ என்ன பார்க்க கிட்ட உன் கண்ணுல ஒரு கோபம், வெரி, வெறுப்பு இருக்கும்… ஆனா இன்னைக்கி அது ஒண்ணுமே இல்லாமா ரொம்ப சாதாரணமா இருந்துச்சு… எதுக்குடா நடிக்கிற” என்று மீண்டும் கேட்டான் மகாதேவ்.

“உண்மையா எல்லாம் மறந்துட்டேன்டா… இன்னைக்கு காலையில தான் எல்லாமே ஞாபகம் வந்துச்சு… மகி என்ன பண்றான்னு பார்க்க ஆசையா இருந்துச்சு… அதுக்காகத்தான் சும்மா நடிச்சு பார்த்தேன்… நாளைக்கு சொல்லலாம்னு இருந்தேன்… நீயே கண்டுபிடிச்சுட்ட” என்றான் சிரித்தபடி…

“டேய்… உனக்கு விளையாட வேற நேரமே கிடைக்கலயா டா… மகி ரொம்ப வீக்கா இருக்கா… கொஞ்சம் கவனமா இருந்துக்கோ… நீயே தான் இத அவ கிட்ட பார்த்து சொல்லணும்” என்றான் ஒரு அண்ணாவின் பாசத்துடன்…

“சரி டா… கவலைப்படாதே… இனி நான் அவள கவனமா பாத்துக்குறேன்” என்றான் அபின்ஞான்…

“அப்ப சரிடா… நான் கிளம்புறேன்… சஞ்சனா தனியா இருக்கா… நீ கவனமா இருந்துக்கோ… மகிய கவனமா பார்த்துக்கோடா” என்ற படி மகாதேவ் கதவை திறக்க…

அங்கே தேனீர் கோப்பையுடன் எடுத்துக் கொண்டு வந்த மகிமா  கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தாள்…

 உள்ளே வந்து அங்கிருந்த மேசையில் தேநீர் கோப்பைகளை வைத்தவள், “அண்ணா நீ வெளியே போ” என்றாள் கோபமாக….

“மகி” என்று அவன் இழுக்க…

“போ அண்ணா” என்று கத்தவும் அபின்ஞானும் வெளியே செல்லும்படி கண்ணசைத்தான்…

ஒரு தலையசைப்புடன் அபின்ஞானிடம் விடை பெற்றுக் கொண்டவன் வெளியே செல்லவும் கதவை அடித்து மூடியவள் அபின்ஞான் முன்னே வந்து நின்றாள்…

“உன்ன அரஞ்சே சாவடிக்கனும் போல இருக்கு டா” என்றாள் அவனை முறைத்தபடி…

“மகி” என்று அவன் என்ன சொல்வது என்று தெரியாது மாட்டிகொண்டதில் முழித்துக் கொண்டிருந்தான்.

“எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? நேத்து காலையில இருந்து நான் எவ்வளவு துடிச்சிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா” என்றாள் கண்களில் கண்ணீர் ததும்ப கேட்டாள்.

அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளை மிக மிக இறுக்கமாக அணைத்துக்கொண்டான்…

 அவளுக்கும் அந்நேரம் அந்த அணைப்பு தேவையானதாகவே இருந்தது…

“எனக்கு புரியுது மகி… எனக்கு இன்னைக்கு காலையில தான் எல்லாமே ஞாபகம் வந்துச்சி… நீ என்ன பண்றன்னு பார்க்கத்தான் அப்படி நடந்துகிட்டேன்… சொல்லலாம்னு தான் இருந்தேன் டி” என்றான் அவள் முதுகை வருடிக் கொடுத்தபடி…

அவளுக்கும் புரிந்தது… இன்று காலையிலே அவன் நடத்தையில் வித்தியாசத்தை பார்த்தளே… அவளிடம் மென்மையாக அல்லவா நடந்து கொண்டான்.

அறை குறை நினைவுடன், தான் அவனுக்கு துரோகம் இழைத்தது நினைவிருந்தாலும் அவளை மனதால் வேதனைப்படுத்த வில்லையே… பேசாமல் ஒதுங்கி தானே போனான்…

அவளோக்கோ அவனுடன் பேசவும் முடியவில்லை… பேசாமல் இருக்கவும் முடியவில்லை…

அவன் உயிர் தப்பி பிழைத்து வந்ததே அவளுக்கு பெரிய விஷயம் தான்….

வாழும் கொஞ்ச நாட்களில்… சண்டை போட்டுக் கொண்டோ அவனிடமிருந்து பிரிந்து வாழ்வதற்கோ அவளிடம் தெம்பில்லை…

எத்தனை நாள் தான் அவளும் அவனைப் பிரிந்து வலியை அனுபவிப்பாள்…

“இனிமே இப்படி பண்ணாதீங்க அபி” என்றவள்… அவனிடமே நியாயமும் கேட்டு… அவனிடமே ஆறுதலும் தேடி ஏங்கி ஏங்கி அழுதாள்.

எத்தனை நாளைய வலி அவளுடையது…

அபின்ஞான் அமைதியாக அவள் தலையை கோதிக் கொண்டிருந்தான்…

அந்த வருடலே அவளுக்கு ஆயிரம் மடங்கு பலத்தை கொடுத்தது போல் இருந்தது…

அவன் அவன் பேசியிருந்தால் கூட அவள் இப்படி உணர்ந்திருப்பாலோ என்னவோ…

இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது…

நீண்ட நேர அமைதியின் பின் அவளே பேசினாள், “அத்த கிட்ட போய் சொல்லலாம்” என்று கூறியவள் அது கையை பற்றிய படியே அன்னபூரணி அம்மாளிடம் சென்றாள்.

அவரும் இருவரும் ஜோடியாக வருவதை வஞ்சையாக பார்த்துக் கொண்டிருந்தார்…

“அத்த அபிக்கு எல்லாமே ஞாபகம் வந்துருச்சு” என்று கூற,

அவருக்கோ இரட்டிப்பு சந்தோஷம்… “இனியாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க” என்றவர் மகிமாவின் தலையை வருடியவர், “இப்போ உனக்கு சந்தோஷமா… எனக்கு என் பையன் எழுந்திருவான்னு தெரியும்… உன்னை நினைத்து தான் ரொம்ப பயந்தேன்… நான் கும்பிட்ட சாமி என்ன கைவிடல” என்றவர் அவளை அணைத்து விடுவித்தார்…

மகிமாவும் கண்சிமிட்டி சிரித்துக்கொண்டாள்…

“சரி என் பையனோட நீ சுத்தினது போதும் வா என்னோட… இனி உன்ன விட்டா பிடிக்கவே முடியாது… உனக்கு ஃபுருட்ஸ் கட் பண்ணி வெச்சேன் வந்து சாப்பிடு” என்று அவளை கையுடன் அழைத்துச் செல்ல,

அபின்ஞானும் அவர்கள் பின்னாலே வர, அவனை திரும்பிப் பார்த்தவர், “நீ எதுக்குடா எங்க பின்னால வர”என்று கேட்டார்…

“அம்மா உங்க பையன் நான்… நான் தான் கஷ்டப்பட்டு எழும்பி வந்து இருக்கேன்… நீங்க என்ன கவனிச்சுறத விட்டுட்டு மகிய கவனிச்சிட்டு இருக்கீங்க” என்றான் விளையாட்டாக…

அவனை முறைத்துப் பார்த்தவர், “நீ கஷ்டப்படுறது உன் மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கு பாரு… அழகா படுத்துட்டு மகி கிட்ட ஒவ்வொரு வேலயா சொல்லிட்டு இருக்கிற… உன்ன பார்த்துக்க எத்தன பேர் இருக்கோம்…. மகிய பார்த்துக்க தான் யாரும் இல்ல… நான் தான் அவள கவனிக்கனும்” என்றவர் அவள் சாப்பிட பழங்களை நீட்ட,

“அப்படி சொல்லுங்க அத்த” என்று சலுகையாக அவர் தோளில் சாய்ந்து ஆப்பிள் துண்டை கடித்த படி அபின்ஞானை முறைத்துப் பார்த்தாள்.

 

அவள் தட்டில் இருந்து ஆப்பிள் துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு சமையல் கட்டில் ஏறி அமர்ந்தவன், “மத்த இடத்தில மாமியார் மருமகள கொடுமைப்படுத்துவாங்க, இல்லன்னா மருமக மாமியார கொடுமை படுத்துவா… இங்க என்னன்னா மாமியாரும் மருமகளும் சேர்ந்து சொந்த பையன கொடுமப்படுத்துறீங்க” என்றான் மகிமாவின் தட்டில் இருந்து அடுத்த ஆப்பிள் துண்டையும் எடுத்தபடி…

அவன் கையில் ஒரு அடி போட்டவர், “எதுக்குடா அவளுக்கு கொடுத்தத நீ எடுத்து சாப்பிடுற… உனக்கு தாரத மட்டும் சாப்பிடு” என்று அவன் கையில் இருந்த ஆப்பிள் துண்டை பறித்துக் கொள்ள, மகிமா பக் என்று சிரித்து விட்டாள்…

“கொடுமப்படுத்துறன்னா இப்படித்தான் கொடுமைப்படுத்தனும்” என்று அன்னபூரணி அம்மாளும் சிரித்தபடி கூறினார்.

அந்நேரம் இருவரது ஓர விழிப் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ள அவர்களுக்கு பேசுவதற்கு வார்த்தை தேவைப்படவில்லை… விழி மொழியே போதுமானதாக இருந்தது…

அவளோ இனி ஒவ்வொரு நொடியையும் அவனுடன் ரசித்து வாழ நினைத்தாள்.

அவன் அவளைப் பார்த்து கண் சிமிட்ட, அவள் சிரித்தபடி அன்னபூரணி அம்மாளை திரும்பிப் பார்த்தாள்.

அவர் இருவரையும் கண்டும் காணது போல் மனதிற்குள் மகனையும் மருமகளையும் நினைத்து சந்தோஷப்பட்ட படி தன் வேலையை கவனித்தார்.

“சரி சரி… மாமியும் மருமகளும் இருந்து உங்க கதைய பேசிக்கோங்க…” என்றவன் மகிமா தட்டில் இருந்து ஆப்பிள் துண்டுகளை எடுத்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்…

“சாப்பாடு கொடுக்காம நாம இவன காய போட்ட மாதிரி தான் நடந்துக்கிறான்” என்றவர் அவள் சாப்பிட்டு முடிந்ததும் தன் வேலைகளை கவனிக்க சென்றார்…

அன்று அபின்ஞானை பார்க்க காரனும் ராகவும் வந்திருந்தார்கள்…

மூன்று பேரும் அபின்ஞானின் அறைக்குள் சென்று கதைக்க ஆரம்பித்து விட்டனர்…

“தேவ் வரலையா டா” என்று கேட்டான் அபின்ஞான்.

“வரத்தான் இருந்தான்… இப்போ எதோ முக்கியமான வேலைன்னு வர முடியல, அதுக்கு அப்புறம் தான் நாங்க ரெண்டு பேரும் வந்தோம்” என்ற கரன், “அபி எங்கள நல்லாவே பயமுறுத்துட்ட… இப்ப எல்லாம் ஓகே தானே” என்று கேட்டான்…

“இப்போ ஓகேடா…” என்றான் அபின்ஞான்…

“நல்லா ரெஸ்ட் எடுடா” என அவன் தோளில் தட்டியபடி கூறிய ராகவ், “டேய் மகிய நல்லா பார்த்துக்கோ… அவ ரொம்ப பயந்துட்டா… உன்ன பார்க்க வர டைம்ல, எங்களுக்கு அவள பார்த்தா தான் பயமாயிக்கும்… பேசக்கூட மாட்ட, எங்கயாவது வெரிச்சு பார்த்துட்டே இருப்பா… நல்லாவே மாறிட்டா… கொஞ்ச நாள் டிப்ரஷன்ல கூட இருந்தா… நாங்க எல்லாம் நல்லாவே பயந்துட்டோம்… நீ தான் இனி அவள கவனமா பார்த்துக்கனும்” என சொல்ல…

அபின்ஞானுக்கு அதிர்ச்சியாய் இருந்தது இந்த விடயம்….

இத்தனை விடயங்கள் நடந்திருக்கிறதா என்று?

யாருமே… தன் பெற்றோரோ… மகாதேவ் கூட இதை அவனிடம் கூறவில்லையே…

அவளைப் பார்த்ததுமே அவள் தோற்றத்திலே அவள் உடைந்து போய் இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது தான்…

ஆனால் இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று இன்று தான் தெரிந்தது…

இப்பொழுது அவன் மனதுக்கு இரு மடங்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது…

அவள் நிலைமையை புரியாமல் அவளுடன் விளையாடியதை நினைத்து…

 பெருமூச்சுவிட்டுக் கொண்டான்…

 

 இனி அதை நினைத்து எந்த பயனுமே இல்லை அல்லவா…

 

இனி அவளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்…

தன் மேல் அவள் எவ்வளவு பாசம் வைத்திருந்தால் தான் படுக்கையில் இருக்கும்போது அவள் நடைபிணமாக சுற்றி இருப்பாள்…

இனி அவளை காவமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் நண்பர்களுடன் பேச ஆரம்பித்தான்…

அந்நேரம் அவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் தேநீர்  கோப்பைகளை எடுத்துக்கொண்டு வந்தாள் மகிமா…

அப்போது தான் அவளை ஊன்றிக் கவனித்தான் அபின்ஞான்…

உடலுக்கு இலகுவான கருப்பு நிற காட்டன் சல்வார் அணிந்திருந்தாள்…

முடியை கொண்டை போட்டிருந்தாள்…

மெலிந்து போய் அவளது வயிறு மட்டும் அவளை விட பெரிதாக தெரிந்தது…

தன் தோற்றத்தில் எந்த ஒரு அக்கறையும் இல்லை என்று அவளை பார்க்கும் போதே விளங்கியது…

ஆனால் அவள் தோற்றத்துக்கு மாறாக அவள் இதழ்களிலோ புன்னகை நிறைந்திருந்தது…

அன்றைய மகிமாவுக்கும், இன்று தன் முன்னால் இருப்பவளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் கூறி விட அவனால் முடியும்…

அவளை பார்க்கும் பொழுதே அவனுக்கு வேதனையாக இருந்தது…

கூடிய சீக்கிரம் அவளை பழைய மகிமாவாகவே மாற்றி விட வேண்டும் என நினைத்துக் கொண்டான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!