என் தேடலின் முடிவு நீயா – 27

4.6
(39)

தேடல் 27

அந்த உடைந்த கப்பல் இருக்கும் இடத்தை சுற்றி கேமரா கண்காணிப்பு வேலைகள் நடைபெற்று முடியும்போதே மின்னல் வேகத்தில் ஒரு வாரம் கழிந்து விட்டது…

அவ் இடத்தை சூழ நடக்கும் விடயங்களை தங்களால் முடிந்த மட்டும் அவதானித்து தகவல்களை திரட்டி இருந்தனர்.

கரனிற்கு ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது ஓரளவு நன்றாகி விட்டது…. இப்பொழுது பிசியோதெரபி எடுத்துக் கொண்டிருந்தான்.

மூன்றாம் தளத்திலிருந்த வெட்ட வெளியில் கரனை அமர்த்தி வைத்து விட்டு மீதி ஐந்து பேரும் கடலைப் பார்த்தபடி இருந்தனர்…

ஆறு பேரின் மனநிலையும் இருந்ததுக்கு இப்போது நன்றாகவே மாற்றம் ஏற்பட்டு விட்டது…

அந்த சம்பவத்திலிருந்து வெளியே வந்து விட்டார்கள் என்றே சொல்லலாம்…

“அவர்களைப் பார்த்த மகிமா ஸ்விம்மிங் காம்பெடிஷன் ஒன்னு வெப்போமா” என்று கேட்க…

“இது நல்ல ஒரு ஐடியா… யுனிவர்சிட்டி காலத்துல இவங்க காம்பெடிஷன பார்த்தது” என்றாள் சஞ்சனா…

“நான் பார்க்கலயே அது தான்… கேட்கிறேன்” என்றாள் மகிமா…

“அப்ப வச்சிட்டா போச்சு” என்றான் அபின்ஞான்…

“அபி கிட்ட இருந்து… மகிமா பேச்சுக்கு எங்க மறு பேச்சு வரப்போகுது” என்று அமர்ந்த படியே கரன் சொல்ல…

“ஆரம்பத்துல எப்படி விறைச்சி போய் சுத்திட்டு இருந்த பையன்… இப்ப அவன் பொண்டாட்டி பேச்ச மீறாத புருஷனா மாரிட்டான்… உனக்கு தெரியாதா?” என்று ராகவ் கேட்க,

“டேய் என்னடா… ஓகேன்னு ஒரு வார்த்தை சொன்னது குத்தமாடா” என்று அபின்ஞான் கேட்க,

“இப்போ தானே உன் வாயிலிருந்து இப்படி முத்து கொட்டுது, இதுக்கு முன்னாடி நீ சொல்லாம இப்போ சொல்றது குத்தம் தானே” என்று கரன் சொல்ல…

“ஆமா குத்தம் தான்… என்ன மன்னிச்சிடு” என அவனை விழி இடுங்க பார்த்தவன், “நேரம் பார்த்து வெச்சி செய்றான்… ராஸ்கல்… எனக்கு டைம் கிடைச்சட்டும் அப்போ இருக்குடா உனக்கு” என முனு முனுத்தவன்,

“வாங்க ஸ்விம்மிங் ஃபூல்க்கு போகலாம்” என்றவன் எல்லோருக்கும் முன்னாடியே அங்கிருந்து செல்ல…

கரனும் ராகவும் சத்தமாக சிரித்துக் கொண்டனர்.

“அபின்ஞான் டி-ஷர்ட் மற்றும் ஷார்ட் சகிதம் வந்து நின்றான்…

மகிமா அவனையே பார்த்துக் கொண்டிருக்க… தன் டீ ஷர்டை கழட்டி விட்டு, நீந்த ஆயத்தமானான்…

போட்டியும் ஆரம்பித்தது…

மகிமா எங்கே போட்டியை கவனித்தாள்…

அவளின் விழிகளோ அபின்ஞானை விட்டு அசையவில்லை…

போட்டியில் வெற்றி பெற்றது என்னவோ அபின்ஞான் தான்…

ஆனால் அதையும் அவள் கவனிக்கவில்லை…

அவள் முதுகில் தட்டிய சஞ்சனா, “தேவ் தோத்துட்டான்” என்றாள் சோகமாக…

சட்டென்று அபின்ஞானின் விழிகளை பார்த்தாள்…

அவனோ மகிமாவை பார்த்து முத்தமிடுவது போல சைகை செய்ய… அவளோ இதழ்களுக்குள் புன்னகைத்தபடி முகத்தை திருப்ப, மகிமாவை ஒரு மார்க்கமாக பார்த்த சஞ்சனா, “அபி அத்தான் போட்டில ஜெயிச்சது கூட தெரியாம சைட் அடிச்சிட்டு இருந்த போல” என்று கேட்க…

அவள் உண்மையை கண்டுபிடித்து விட்டதில் மகிமாவின் முகமோ சிவந்துவிட்டது, “என் புருஷனை சைட் அடிக்கிறது தப்பா?” என்று சஞ்சனாவை பார்த்து கேட்டாள்.

“பைத்தியம் நல்லாவே முத்திருச்சு… உன்கிட்ட பேச முடியாது” என்றவள் மகாதேவை நோக்கிச் சென்றாள்…

தனக்குள் சிரித்தபடியே டவளைக் கொண்டு சென்று அபின்ஞான் கையில் கொடுத்தாள் மகிமா…

“என்ன மேடம் சைட் அடிச்சு முடிச்சிட்டீங்களா?” என்று அவன் கேட்க…

அவளோ, “உங்கள இறுக்கமா ஹக் பண்ணி டீப்பா லிப் லாக் ஒன்னு பண்ணணும் போல இருக்கு” என்று சொல்ல…

அதிர்ந்தபடி சுற்று முற்றும் பார்த்தான்… நல்ல வேளை யாரும் அருகில் இருக்காததால் யார் காதிலும் அவள் சொன்னது விழுந்து விடவில்லை…

நிம்மதியா மூச்சு விட்டு கொண்டான்… ஏற்கனவே அவன் அசைந்தாலே அவனை வைத்து கலாய்த்து கொண்டிருக்கின்றனரே… இது கேட்டிருந்தால் நாள் முழுவதும் அவனை வைத்து ஓட்டி இருப்பர்…

குரலை செருமிக் கொண்டவன் மீண்டுமொறு முறை சுற்றிலும் பார்த்து விட்டு அவள் முகம் நோக்கி குனிந்து, “அதுக்கு என்ன பண்ணிட்டா போச்சு” என்றான்…

“ஓஹ்…” என்று உதடு குவித்து சொன்னவள், “நம்ம ரூமுக்கு போய் கிஸ் பண்றேன்” என்றபடி அவள் அங்கிருந்து செல்ல… சிரித்தபடியே அவள் பின்னாலே சென்றான் அபின்ஞான்…

தொடர்ந்து வேலையிலே ஈடுபட்டிருந்ததால் அன்று இரவு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…

இனிவரும் அடுத்தடுத்த நாட்களில் வேலையில் ஈடுபட தொடங்கினால் வேறொன்றுக்கும் நேரம் இருக்காது என்பதாலும் எல்லாரும் மனநிலையை நிதானமாகவும் இயல்பாகவும் வைப்பதற்காகவே இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தான் அபின்ஞான்…

பார்ட்டி என்றால் கேட்கவும் வேண்டுமா…

மது போத்தல்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ராகவ்…

அவன் அருகே வீல் செயாரில் அமர்ந்து இருந்த கரன் போத்தல்களை எண்ணிக் கொண்டிருந்தான்.

அவர்களை பார்த்த தேவ், “குடிக்க போறீங்களாடா” என்று கேட்க,

“இல்லடா கரன் கேட்டான்… அதுக்காக இன்னைக்கு மட்டும் கொஞ்சம் குடிக்க போறோம்” என்று சமாளிப்பாக ராகவ் சொல்ல…

தலையை உயர்த்தி அவனை பார்த்து துப்புவது போல் செய்கை செய்தான் கரன்.

அதை கண்டு கொள்ளாமல் ராகவ் தேவ் முன்னால் பணிவாக நிற்க,

 “போதும் டா உன் நடிப்பு… மட்டையாகுற அளவுக்கு மட்டும் குடிச்சிடாதீங்க…” என்றவன் அருகில் நின்றிருந்த சஞ்சனாவின் கையை பற்றிய படி சென்றான் மகாதேவ்…

அபின்ஞானும் மகாதேவும் குடிக்க மாட்டார்கள்… ஏதாவது பார்ட்டி என்றால் மட்டும் தவிர்க்க முடியாது குடித்தால் தான் உண்டு…

அதையும் முடிந்தவரை தவிர்த்து விடுவார்கள்…

“இவனுங்க குடிக்கவும் மாட்டானுங்க எங்கள குடிக்க விடவும் மாட்டானுங்க… இப்ப லவ் பண்ணி, கலியாணம் முடித்து லைப் ல செட்டில் ஆகிட்டாங்க… கூட இருந்த நாம தான் சிங்களா சுத்திட்டு இருக்கோம்” என்ற கரன்…

“டேய்… அங்க பாரு டா… இது எப்போல இருந்து நடக்குது” என்று சஞ்சனாவுடன் கை கோர்த்து செல்லும் மகாதேவைப் பார்த்து அதிர்வுடன் கேட்க,

“ஆமா டா… இது எங்க போய் முடியுமோ தெரியல… ஆனா ஒன்னு மட்டும் இப்போ தான் புரியுது… எவ்ளோ அடி தடி ல இவன்னுங்க இருந்தாலும் எதிரி தங்கச்சி அத்தை பொண்ணு கூட சேர்ந்து இவனுங்க வாழ்ரானுங்க… ஆனா கூட இருந்த நாம ரெண்டு பேரும் தான் முட்டாளாகி தனிக் காடா சுத்திட்டு இருக்கோம்” என்றான் ராகவ் பெரு மூச்சுடன்…

“ம்ம்ம் அது சரி… கப்பல் ல சிங்கிள் பசங்க முன்னாடி ரோமேன்ஸ் பண்ணிட்டு எங்க வயித்தெரிச்சல கொட்டிகிறானுங்க… இதுக்கே நாம ரெண்டு பேரும் நம்ம நாட்டுக்கு போன உடனே கல்யாணம் பண்ணி லைப் ல செட்டில் ஆகி காட்டணும்” என்று கரன் உறுதியுடன் சொல்ல… ராகவும் தலையாட்டிக் கொண்டான்…

இவர்களை பார்க்க வந்த மகிமா அவர்களின் பேச்சை கேட்டு பைத்தியக் காரனுங்க… என தலையை உலுக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்…

“அபி இவ்ளோ நேரமா என்ன பண்ற… சீக்கிரமா வா… பொண்ணு நானே குயிக்கா ரெடியாயிட்டேன்… நீங்க எதுக்கு இவ்ளோ நேரம் எடுத்துக்குறீங்க” என்று ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வெளியே இருந்து கத்திக் கொண்டிருந்தாள் மகிமா…

“பொண்ணுங்க நீங்க மட்டும் அழகா ரெடியாகிட்டு வருவீங்க… நாங்க சும்மா வரணுமா…” என்றவன் கதவை திறந்து கொண்டு நிதானமாகத் தான் வெளியே வந்தான்…

நீட்ட கை கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற டெனிம் அணிந்து கையில் அபள் வாட்ச் கட்டிருந்தான்…

மகிமாவும் கருப்பு நிற கையில்லாத நீளமான பிராக் அணிந்து இருந்தாள்…

உடை நிறத்திலே பென்சில் ஹீலும் அணிந்திருந்தாள்…

கழுத்தில் எப்போதும் அணிந்திருக்கும் எம் பெண்டெட் போட்ட ஒரு செயின் மாத்திரம்…

முடியை கொண்டை போட்டு இருந்தவள் முகத்தில் ஓரிரு முடிகளை விட்டிருந்தாள்…

அதே அவளுக்கு அழகாக இருந்தது…

அந்த செயினை மெதுவாக வருடியவன், “இந்த செயின் உனக்கு பெர்பெக்டா இருக்கு” என்று அதை வருடிய படி கூற,

“ஜுவல் ஷாப் ஓனர் மாதிரியே நகய மட்டும் பார்த்து சொல்லுங்க” என்று முகத்தை சுளித்தபடி முன்னோக்கி செல்ல பார்க்க…

“நீதான் ரொம்ப அழகுன்னு உனக்கே தெரியுமே… ” என்று அவன் கேட்க…

“ஒன்னு கேட்டா… இப்படி வக்கனையா மட்டும் பேச வேண்டியது” என்றவளின் கையுடன் தன் கையை கோர்த்துக் கொண்டவன் அவளுடன் இணைந்து பார்ட்டி நடக்கும் ஹோலுக்கு சென்றான்…

பார்ட்டி டிரஸ் கோட் கருப்பு நிறம் என்பதால் எல்லோருமே கருப்பு நிறத்திலே உடை அணிந்து வந்திருந்தனர்….

அங்கே அவர்களுக்கு உதவியாக வந்திருந்த அனைவரையுமே அழைத்து இருந்தான் அபின்ஞான்…

கரன் வீல்ச்சியாரில் வந்திருந்தான்…

 ஆண்கள் ஓரத்துக்கு சென்று அரட்டை அடிக்க ஆரம்பித்து விட, அந்நேரம் சஞ்சனா கருப்பு நிற சாரியில் வந்து நின்றாள்…

அவளைப் பார்த்த தேவுக்கோ மூச்செடுக்க முடியவில்லை…

மெதுவாக சஞ்சனா அருகே சென்றவன், “சாரில செம்ம செக்ஸியா இருக்க” என்றான் அவளை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டு…

தன்னை குனிந்து பார்த்தவள், “எவ்ளோ ஒழுக்கமா சாரி உடுத்தியிருக்கேன் தேவ் இதுல என்ன இருக்கு” என்று கேட்டாள்…

“ஆனா என் கண்ணுக்கு அப்படித்தான் தெரியுது” என்று சொல்ல,

“ஐயோ… இங்க வச்சு இப்படியெல்லாம் பேச வேணாம்” என்றாள் சுற்றியும் பார்த்தபடி…

“யாரும் இல்லடி” என்றபடி அவளை இன்னும் நெருங்கி நின்றபடி கூற…

“ஹாய் சஞ்சு” என்றபடி அங்கே வந்தாள் மகிமா…

“ஹேய் மகி… வா நாம அந்தப் பக்கம் போலாம்” என்று மகிமாவை அங்கே இருந்து அழைத்து சென்றாள் சஞ்சனா…

எதுவும் செய்ய முடியாது மகாதேவ் மகிமாவை முறைத்துக் கொண்டிருந்தான், “இவ வேற எப்ப பார்த்தாலும் இடையில புகுந்து கொண்டு” என்று தலையை வருடியபடி ஆண்களுடன் சென்று சேர்ந்து கொண்டான்…

எல்லாரும் சாப்பிட்டு முடிய, “மகி எனக்கு தாகமா இருக்கு கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வரியா” என்று சஞ்சனா கேட்க…

“எனக்கும்தான்… சாப்பாட்டுக்கு அதிகமா எண்ணெய் ஊற்றி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்… அது தான் தாகமா இருக்கு” என்றவள் சென்று வாங்கிக் கொண்டு வந்தது என்னவோ… ராகவ் ஆர்டர் பண்ணியிருந்து வோட்காவைத் தான்…

ஆரம்பத்தில் புரியாமல் அதை குடித்தவர்கள், அதன்பின் அதையே கேட்டு கேட்டு வாங்கி குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்…

இரு பெண்களுக்குமே சந்தோஷத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வு…

“சஞ்சு உனக்கு தெரியுமா? இன்னைக்கு அபி என்ன பிடிக்கலைன்னு சொல்லிட்டான்” என்றாள் மகிமா அவள் தோளில் சாய்ந்து அழுதபடி,

“உன்ன பிடிக்கலன்னு சொல்லிட்டானா அந்த ராஸ்கல்… எவ்ளோ தைரியம் இருக்கணும்… உன்னையே பிடிக்காதுன்னு சொல்றதுக்கு” சஞ்சனாவும் போதையில் எகிறிக் கொண்டு வந்தாள்…

“ம்ம்… அவனுக்கு இந்த ரிசேர்ச்சும்… அதுல தேடி கண்டுபிடிக்கிற ப்ரொபஷனல் விஷயமும் தான் புடிக்குமாம் பாரேன்…” என்றாள் அழுதபடி…

“அப்ப அவன் அவனுக்கு பிடிச்சதையே கல்யாணம் பண்ணியிருக்கணும் உன்ன எதுக்கு கல்யாணம் பண்ணனும்” என்று அவளை அணைத்து தோளில் தட்டிக் கொடுத்தாள் சஞ்சனா…

“ம்ம்… ” என்றபடி அவள் தோளில் சாய்ந்து கொண்டாள் மகிமா…

இரவு ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருக்க பார்ட்டி முடிந்து அனைவரும் சென்று விட்டிருந்தனர்…

அபின்ஞானும் மகாதேவும் கூட சென்றிருந்தனர்…

இருவரும் அறைக்குள் சென்று தம் துணையை தேடினால் இருவருமே இருக்கவில்லை…

மகாதேவ் வருவதை கண்ட அபின்ஞான், “மகிய பார்த்தியா” என்று கேட்டான்…

“இல்ல நான் அவள காணவே இல்ல… சஞ்சனாவ தான் தேடிட்டு இருக்கேன்” என்றான்…

“இன்னும் ரெண்டும் இங்க வரவே இல்லையா” என்று இருவரும் சொல்லிக்கொண்டே பார்ட்டி நடந்த ஹோலை நோக்கிச் சென்றனர்…

அங்கோ மகிமாவும் சஞ்சனாவும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தனர்…

சஞ்சனாவோ, “அழாதே மகி… நான் எல்லாத்தையுமே பார்த்துக்கிறேன்” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்…

இரு ஆண்களும் அவர்களை புரியாது பார்த்தனர்…

“நீ என்னத பார்த்துப்ப… நீ அபிக்கு கொடுத்த சாபம் கூட பலிக்கவே இல்ல தெரியுமா?” என்று சொன்னாள் மகிமா…

இரு ஆண்களும் சஞ்சனாவை பார்த்தனர்…

“இவ எனக்கு என்ன சாபம் கொடுத்திருப்பா” என்று அபின்ஞான் புருவம் சுருக்கி பார்க்க…

சஞ்சனாவுக்குகோ தான் கொடுத்த சாபம் மறந்து விட்டது போலும், “என்ன சாப்பாடு கொடுத்தேன் டி…” என்று கேட்க,

“அடிப்பாவி… சாபம் கொடுத்துட்டு இப்ப சாப்பாடு கொடுத்தன்னு கேட்கிறாயா” என்றபடி அங்கே அபின்ஞான் செல்ல பார்க்க மகாதேவ் அவனை தடுத்து நிறுத்தினான்…

“கொஞ்சம் பொறுடா… என்ன சொல்றான்னு பார்க்கலாம்” என்றான் சிரித்தபடி…

“ஏண்டி மறந்துட்டியா… நீ தேவ கல்யாணம் பண்றத தடுத்த… என் புருஷன் லைஃப் லாங் கன்னிப் பையனா இருக்கணும்னு சொன்னியே டி” என்று மகிமா சொல்ல…

“அடிப்பாவி என்ன சாபமெல்லாம் விட்டு இருக்கா…” என்று அவன் நினைக்க

 தேவோ இரு கைகளையும் வாயில் வைத்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்…

அபின்ஞான் திரும்பி மகாதேவை முறைத்துப் பார்க்க, இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டு சிரித்தவன், “முடியல மச்சி… கண்ட்ரோல் பண்ண முடியலடா” என்றபடி சிரித்தான்…

இருவரும் பெண்களை நெருங்கி விட்டனர்…

மகிமாவோ அத்துடன் நிறுத்தாமல், “உன் சாபம் பலிக்கல… என் புருஷன் கன்னி கழிஞ்சிட்டான்…” என்று சொல்லிக் கொண்டிருக்க, கண்களை அதிர்ந்து விரித்தவன் வேகமாக வந்து மகிமாவின் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டான்…

ஆனால் அது சஞ்சனாவுக்கும் கேட்டு விட்டது…

“என் புருஷனும் கன்னி கழிஞ்சிட்டான்” என்று கூற, அவள் வாயை பொத்திக் கொண்டான் தேவ்…

தங்களுக்கு இடையே நடந்ததை இப்படி வெளிப்படையாக பேசி விட்டாளே என்று மகாதேவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது…

அபின்ஞான், “இது எப்போதிலிருந்துடா… என்ன வேல பண்ணி வெச்சு இருக்க… இவ அம்மா தெரிஞ்சா உன் கத முடிஞ்சி” என்று அவனை முறைத்த படி சொல்லிக்கொண்டு இருக்கும் போது,

சஞ்சனா தன் வாயிலிருந்து தேவ் கை எடுத்து, “ஹேய் ஹை ஃபை போடுடி… நம்ம ரெண்டு பேர்ட புருஷனும்” என்ற படி கையை நீட்ட… இறுக்கமாக அவளது வாயை மூடிய தேவ் அவளை முறைத்துப் பார்த்தன்.

“டேய் முதல்ல இவள கூட்டிட்டு போடா” என்றபடியே மகிமாவை இழுத்துக் கொண்டு சென்றான் அபின்ஞான்…

“ஏண்டா அவ கிட்ட இருந்து என்ன பிரிச்சிட்டு போற” என்று அழுதபடியே அவனுடன் இழுபட்டு சென்றாள் மகிமா…

ஒரு கட்டத்தில் அவன் மேல் இருந்த கோபத்தில் கழுத்தை பிராண்டி வைக்க, “உனக்கு இப்படி இறக்கமா மென்மையா சொன்னா சரி வராது” என்றவன் அவளை தன் தோளில் தூக்கி போட்ட படியே அறைக்குள் சென்றவன்…அவளை கட்டிலில் அமர்த்தி, “என்ன பேச்சு பேசுற… உனக்கு விவஸ்தையே இல்லையா” என்று அவளை முறைத்தபடி கேட்க,

“இல்லையே… நான் பேசினது தப்பா என்ன” என்ற அப்பாவியாக கேட்க…

“மக்கு… மக்கு… என்னதாண்டி குடிச்சு தொலைச்ச” என்று எரிச்சலாக கேட்டான் அபின்ஞான்…

“கூல் ட்ரிங்க்ஸ்… எனக்கு அது இன்னும் வேணும்” என்றாள் அவன் இரு கன்னத்தையும் பிடித்து கிள்ளிய படி..

“ராட்சஷி கைய எடேன்டி வலிக்குது” என்றவன், அவள் வாயைத் திறந்து முகர்ந்து பார்க்க, “ஓட்கா எடுத்து குடிச்சியா” என்று கேட்டான்…

“இல்ல இல்ல… நான் என்ன உன்ன மாதிரி மொடக்குடிகாரனா…” என்றவள் தன் கையாலே தன் வாயை அடித்துக் கொண்டவள், “இல்ல…. மொடக்குடிகாரியா…. நான் என்ன உன்ன மாதிரி மொடக்குடிகாரியா” என்று குழறலாக திரும்பவும் கேட்டாள்…

“நீ பேசுற பேச்சிலே விளங்குது” என்றவன்… அவளை குளியல் அறைக்குள் இழுத்து செல்ல,

“என்னடா சொல்ற நீ… என்ன பார்த்து குடிகாரின்னு சொல்ல வரியா” என்று அதற்கும் சண்டை போடத்தயாராக, “எங்கடி மரியாதை…” என்று அதிர்ந்து கேட்டான்…

“நீ எனக்கு மரியாத தந்தியாடா? சொல்லு நீ எனக்கு மரியாதை தந்தியா?” என்று அவன் டீ சட்டை பிடித்து இழுத்தபடி கேட்டவள்… “நீ டி போட்டு பேச கிட்ட நான் டா போட்டு பேசினா தப்பா…” என்று நடக்க முடியாமல் அவன் மார்பில் சாய்ந்தபடியே கேட்க,

சலிப்பாக அவளைப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் அவளை அழைத்துச் சென்று ஷவருக்கு அடியில் நிறுத்தியவன், தண்ணீரைத் திறந்து விட்டான்…

“எதுக்குடா பாத்ரூமுள்ளுக்கு மழை பெய்து” என்று அண்ணாந்து பார்த்தபடி கேட்க…

“நீ மழையில நனஞ்சிட்டே வா… நான் வெளியே இருக்கேன்” என்றவன்

 அங்கிருக்க முடியாமல் வெளியே வந்தான்…

 சிறிது நேரத்தில் அவளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக போதை தெளிய ஆரம்பித்தது…

முழுமையாக போதை இறங்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு நிதானத்துக்கு வந்து விட்டாள்…

நான் எதுக்கு குளிக்க வந்தேன் என்று யோசித்தவளுக்கு எதுவும் நினைவில்லை…

 உடையை மாற்றி அங்கிருந்த டவளை கட்டியபடி வெளியே வந்தாள்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 39

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!