என் தேடலின் முடிவு நீயா – 26

4.8
(32)

தேடல் 26

அடுத்த நாள் காலையிலே எல்லோரும் கரனது அறையில் தான் அமர்ந்திருந்தனர்…

அவனது அறையிலே அனைத்து கேமரா திரைகளும் பொருந்தப் பட்டிருந்தன…

ராகவ், கரன் கடலுக்கு சென்ற அன்று கேமராவில் பதிவான காட்சிகளை திரையில் போட்டான்…

அந்த உயிரினம் எவ்ளோ பெரிதாக இருந்ததோ அதை விட அதன் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தது…

அதன் வேகத்தில் நீரும் மங்கலாகி விட திரையில் காட்சிகள் சரியாக புலப்படவில்லை…

எவ்வளவு தான் திரையில் ஓடிக் கொண்டிருந்த கட்சிகளை பார்த்தாலும் அந்த உயிரினம் என்னவென்று தான் யாருக்கும் சரியாக புரியவில்லை…

 கரனை பார்த்த மகாதேவ், “நீ டென்ஷன் ஆகாம அன்னக்கி நடந்தத ரிலாக்ஸா இருந்து சொல்ல முடியுமா கரன்?” என்று கேட்டான்.

“கண்டிப்பா அதுல எந்த பிரச்சனையும் இல்ல… இப்ப நான் ஓகே ஆகிட்டேன்” என்றவன் ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டே, “அன்னக்கி நான் போன இடம் ரொம்பவே ஆழமா இருந்துச்சு… ஒரு கட்டத்துக்கு மேல வெளிச்சமே இல்ல… என் டார்ச் லைட் மூலமா தான் உள்ள இருந்தத பார்த்தேன்… கும்மிருட்டா இருந்துச்சு… அதனால தான் நான் ஆழத்துக்கு போகாம கேமராவை வீசிட்டு வர நினைச்சேன்… அந்த டைம்ல தான் என் சென்சர் லைட் ஒன் ஆக ஏதோ ஆபத்துன்னு விளங்கிடுச்சு… பாஸ்டா மேல வர தொடங்கினேன்… திடீர்னு தண்ணி ரொம்ப கலங்க ஆரம்பிச்சிடுச்சி… ரொம்ப பெருசா ஷார்க் மாதிரி ஏதோ ஒன்னு… எனக்கிட்ட வாய தொறந்துட்டே வந்துச்சி… நான் வேகமா நீந்தினேன்…

நீந்திட்டே இருக்கும் போது என் கால் எதிலோ சிக்கின மாதிரி இருந்துச்சு… நான் திரும்பி கூட பாக்கல…என் காலை இழுத்துட்டு மேல வரத் தொடங்கிட்டேன்… என் காலுக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியல… வலிக்க கூட இல்ல… என் மனசுல இந்த ஒரே ஒரு எண்ணம் எப்படி சரி தப்பிக்கனும்ன்னு தான் இருந்துச்சி… கனவு மாதிரி இருந்துச்சி டா… போட்டுக்கு வந்ததுக்கு பிறகு தான் வலியே விளங்கிச்சு… இந்த சின்ன காயத்தோட நான் தப்புவேன்னு நெனைக்கவே இல்லடா” என்று பெருமூச்சுடன் சொல்லி முடித்தான்…

அவன் தோளில் தட்டிய அபின்ஞான், “ரிலாக்ஸ் டா… அதோட சாரி… ரொம்ப கவனயீனமா இருந்துட்டேன்… டெக்னலாஜியால எல்லாம் கரெக்டா நடக்கும்ன்னு நெனச்சேன்… இனி ரொம்ப கவனமா இருக்கலாம்… ” என்றான் குற்ற உணர்வுடன்.

“டேய் நான் சும்மா சொன்னேன்டா… நீ கவல படாதே… இனி தான் நம்ம தேடல ஸ்டார்ட் பண்ணும்… அதுக்கு இது நல்ல ஒரு அனுபவமா இருக்கட்டும்… இனி கேயார்புல்லா இருக்கலாம்” என்றான் கரன்…

“ம்ம்… கரன் சொல்றதும் சரி தான்… இனி ஒண்ணுக்கு ரெண்டு மடங்கு கவனமா இருப்போம்” என்ற ராகவ், “அத உயிரினத்த பத்தி நமக்கு ஒண்ணுமே தெரியாது… அது எப்படிப்பட்டது… அதோட வீக்னெஸ் என்ன? அதுட பலம் என்னனு கூட தெரியல… இது ரொம்ப ரிஸ்க்கான ஒரு வேல…” என்று கூறியபடியே கரன் நீரினுள் போட்டு விட்டு வந்த ஐந்து கேமராக்களின் காட்சிகளையும் ஐந்து திரைகளில் ஓட விட்டான்…

முதல் மூன்று கேமராக்களும் வேலை செய்யவில்லை…

நான்காவது கேமராவோ தனி இருட்டாக இருந்தது…

அதில் எந்த ஒரு காட்சியும் புலப்படவில்லை…

ஐந்தாவது கேமராவின் காட்சிகள் மங்கலாக இருந்தது…

எல்லாரும் அந்த ரெண்டு கேமராக்களின் திரைகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஏதாவது கிடைக்குமா என்று…

பல மணி நேரங்களாக கவனித்து விட்டனர்…

அதைப் பார்த்துக் கொண்டே உதட்டை சுழித்த சஞ்சனா, “இத வச்சி நம்மளால எதுவுமே கண்டுபிடிக்க முடியாது” என்று கூற, அங்கிருந்தவர்களுக்கும் அதே எண்ணம் தான்…

“இந்த இடத்துல எக்ஸ் த்ரீ(X3) பாக்ஸ் இருக்குனுன்னே வச்சுக்குவோம்… ஆனா அத எடுக்க நாங்க எப்படி போறது” என்று மகிமா கேட்க…

“நாம அங்க போனா எக்ஸ் த்ரீ பாக்ஸ் இருக்கும், அத எடுக்க நாம தான் இருக்க மாட்டோம்” என்று சிரித்தபடி ராகவ் சொல்ல,

“பி சீரியஸ் காய்ஸ்… இது விளையாட்டு இல்ல” என்ற மகாதேவ், “ராகவ் நாலாவது கேமரா சவுண்ட்ட நல்லா கூட்டி வை” என்று கூற,

அனைவரும் காதை தீட்டிக்கொண்டு அதை கேட்க ஆரம்பித்தனர்…

அதிலோ ஏதேதோ வித்தியாசமமான சத்தங்கள் கேட்டன…

தன் தாடியை வருடியபடி யோசித்த அபின்ஞான், “இரும்புல ஏதோ முட்ற சத்தம்…நடுக்கடல்ல எப்படி இரும்பு சத்தம் கேட்கலாம்…” என்றவன் கண்களை விரித்து, “அப்படின்னா… அங்க தான் எக்ஸ் த்ரீ(X3) பொக்ஸ் இருக்க சான்ஸ் இருக்கு” என்று அபின்ஞானும் மகாதேவும் ஒன்றாகவே கூறினர்…

“எப்படிடா உங்க ரெண்டு பேருக்கும் மட்டும் இப்படி தோணுது” என்று கட்டிலில் படுத்திருந்தபடியே கரன் கேட்க,

“அது ஜீனியஸ்க்கு மட்டும் தான் புரியும்… உன்ன மாதிரி பசங்களுக்கு புரியாது” என்று மகிமா கூற,

“ஒரு மாடு அத இன்னொரு மாட்டுக்கு சொல்லுது பாரேன்” என்று சிரித்தபடி அபின்ஞான் கூற,

அவனை முறைத்துப் பார்த்தாவள் யாரும் அறியாது அவன் இடையில் நறுக்கென கிள்ளி விட்டு சமத்தாக அமர்ந்து கொண்டாள்…

அவன் தான் வலியை முகத்தில்

காட்டாமல் அமர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்…

அவள் கிள்ளியத்தை கண்ட கரன், “அட நம்ம பையன மகி அடக்கிட்டா போல” என சத்தமாக ராவிடம் சொல்ல,

அபின்ஞான் அதிர்ச்சியாக அவனை பார்த்தான்.

“ம்ம்ம்… நானும் இந்த கூத்த பத்துட்டு தான் இருக்கேன்” என்றான் ராகவ்.

“ம்ம்ம்… என்னமாய் வாய் அடிச்சிட்டு இருந்தான்… இப்போ இவன் பல்லு புடிங்கின பாம்பா மாறிட்டான்” என்று கரன் சிரித்தபடி சொல்ல…

“எனக்கு ஒரு சான்ஸ் கிடக்க கிட்ட பார்த்துகிறேன்டா” என்றான் அபின்ஞான் அவனை முறைத்தபடி…

மகாதேவ் அவர்களை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்…

“இவ்ளோ நாளும் நீ மட்டும் தான்டா பேசின… இப்போ தான் நாம பேசுரோம்… நீ கேட்டு தான் ஆகணும்” என்று சிரித்த படி கரன் சொல்ல,

“சரி தான்” என்றவன் மகிமாவை அழுத்தமாக பார்க்க,

அவளோ இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல், “அப்படின்னா அந்த இடத்தில தான் பிரிட்டிஷ் ஷிப் இருக்கணும்… எவ்ளோ ஆழம் உள்ள போகணும்னு தெரியாது… வெளிச்சமும் இல்ல… உள்ள என்ன இருக்கும்னு கூட தெரியாது…” என்று மெதுவாக கதையை மாற்ற…

அவளை முறைத்துப் பார்த்த அபின்ஞான் “நாம அந்த இடத்த பத்தி முழுசா தேடலாம்… புல் ப்ராக்டிஸ் எடுக்கலாம்… கரன் வரத் தேவையில்லை… அவன் இங்க இருந்து எங்கள கைய்ட் பண்ணட்டும்… மீதி அஞ்சு பேரும் போகலாம்” என்று கூற,

மற்றவர்களும் ஆமோதிப்பாக தலையசைத்துக் கொண்டனர்…

அடுத்த இரு நாட்களும் அனைவரும் கப்பலில் உள்ளே அடைந்து கிடந்தனர்…

கேமராக்களை ரிமோட் மூலம் செலுத்தி அப்பகுதியை தங்களால் முடிந்த அளவுக்கு ஆராய்ந்து முடித்திருந்தனர்…

“காய்ஸ் நாம இன்னக்கி போட்டிங் போகலாம்” என்றபடி தயாராகி வந்தான் அபின்ஞான்.

 எல்லோருக்கும் மனமாற்றம் தேவைப்படவே போட்டிங் செல்ல ஆயத்தமானார்கள்…

மனதினுள் பயம் இருக்கிறது தான் ஆனால் அதிலே உலன்று கொண்டிருக்க முடியாதே…

அதிலிருந்தும் வெளியே வரத்தானே வேண்டும்…

பயந்து ஒரு இடத்திலே பின்தங்கி விட்டால் வாழ்க்கையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலுமோ பிரச்சினையிலுமோ நம்மால் முன்னேற முடியாது…

தடைகள் வருவது நிச்சயம்…

அதை கடந்து தான் ஆக வேண்டும்…

கரனும் ராகவும் மட்டும் செல்லவில்லை…

மற்ற இரு ஜோடிகளும் இரு படகுகளை எடுத்துக் கொண்டு சென்றனர்…

ஆண்கள் பயப்படவில்லை என்றாலும் பெண்களுக்கோ மனதினுல் பயம் இருந்தது… ஆனால் அதை வெளிப்படுத்தவில்லை….

மகிமாவோ படகில் இருந்தபடியே சுற்றிலும் பயந்தபடி பார்த்துக் கொண்டு வந்தாள்…

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற நிலையாகி போனது அவளுக்கு…

அபின்ஞான் கூலாக ஒரு பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்…

ஓரிடத்தை பார்த்து படகை நிறுத்தியவன், அவள் தோளில் கையை போட்ட படி வந்து நிற்க அவனை அதிர்ந்து பார்த்தவள், “எதுக்கு இப்ப போட்ட நிறுத்தினீங்க” என்று படபடப்பாக கேட்டாள்…

அவளுக்கோ பயம் அவனிடம் சொல்லவில்லை…

சொன்னால் கேலி செய்து சிரிப்பான்…

அவ்விடத்தை சுற்றி ரசித்தபடியே அவளை தன் கை வளைவுக்குள் வைத்துக்கொள்ள… அவளும் பயத்திலே அவனுடன் நன்றாக ஒட்டி நின்றபடி சுற்றிலும் வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்…

“ஏன் நிப்பாட்ட கூடாதா? எவ்ளோ ரொமான்டிக்கான பிளேஸா இருக்கு பாறேன்” என்றான்…

“என்னது ரொமான்டிக்கான பிளேஸ்ஸா… நானே பயந்துட்டு இருக்கேன்… நானும் ரசிச்சா தான்டா அது ரொமான்டிக்கான பிளேஸ், நீ பாட்டுக்கு பேசிட்டே போற” என்று நினைத்தவள் வாய் திறந்து சொல்லவில்லை…

“நாம இங்க ஹனிமூன் வந்த மாதிரியே பீலிங்கா இருக்கு… இட்ஸ் ஹெவன் ஃபீலிங்…” என்று அவன் யாரும் இல்லாத தனிமையில் அவள் மேனியில் எல்லை மீறிய படி கூற,

“அடப்பாவி இந்த ரணகளத்தில உனக்கு கிளுகிளுப்பா” என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை…

அவன் தொடுகையில் அவள் உருகி நின்ற நேரம் ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர்ந்து அவளை மடியில் அமர்த்திக் கொண்டவன்… அவள் இதழ்களில் தன் முரட்டு அதரங்களால் அழுத்தமாக முத்தமிட்ட படியே அவள் மேனியில் தன் சில்மிஷங்களை தொடர்ந்தான்…

அவளுக்கும் உடலில் என்னென்னவோ உணர்வுகள்…

அவள் உணர்வுகளையும் தூண்டிவிட்டுக் கொண்டு அல்லவா இருக்கிறான் அவன்…

அவனிடமிருந்து விலகி எழுந்து நின்று கொண்டவள், “நீங்க இங்க என்னத்துக்கு வந்திருக்கீங்க… இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று மகிமா கேட்க…

“உன்ன பார்த்தா என்ன என்னவோ பண்ணனும் போல இருக்குடி” என்றபடி அவளை தன் லேசர் விழிகளால் அங்குளம் அங்குளமாக ரசித்தான்…

அவன் பேச்சில் தன் முக உணர்வுகளை காட்டாமல் பக்கவாட்டாக திரும்பி மறைத்துக் கொண்டடவள், “சரி அது இருக்கட்டும்… நான் இப்ப உங்க கிட்ட ஒன்னு கேட்கவா” என்று கேட்க…

“அதுக்கு ஏன் இவ்ளோ தூரம் இருந்து கேக்குற…” என்று ஒற்றை கண்ணை சிமிட்டிக் கேட்டவன், எட்டி அவள் கையை பற்றி இழுத்தவன் அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்…

சலிப்பாக தலையாட்டியபடி அவன் மடியில் வாவாக அமர்ந்தவள் அவன் தாடி அடர்ந்த கன்னத்தை வருடியபடி … “அபி” என்றாள் இழுவையாக…

“ம்ம்…” என்றான் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்த படி.

“நான் கேக்குறது பைத்தியக்காரத்தனமான கேள்வின்னு எனக்கே புரியுது… ஆனாலும் கேட்கணும்னு தோணுது… உங்களுக்கு என்ன பிடிக்குமா… இல்லன்னா உங்களுக்கு இந்த கடல் நிலம் மலைன்னு நீங்க தேடுற உங்க தேடலா புடிக்கும்…” என்று கேட்டாள்…

“டிபிகல் பொண்டாட்டி மாதிரி நீயும் கேட்டுட்ட…” என்றான் அவள் விழிகளை உற்றுப் பார்த்தபடி…

“ஜஸ்ட் கேக்கணும்னு தோணிச்சி” என்றவள் பார்வையை அவனிடமிருந்து விளக்கிக் கொண்டாள்.

அவனை நேரடியாக பார்க்க ஏனோ தடுமாற்றமாக இருந்தது அவளுக்கு…

இது எந்த மாதிரியான உணர்வு என்று அவளுக்கும் புரியவில்லை.

அவள் தடுமாற்றத்தை தனக்குள் உள்வாங்கிக் கொண்டவன், “உண்மைய சொல்லப்போனா என் லைஃப் லாங் இப்படி காடு மலை கடல் என்று போய் ரிசேர்ச் பண்ணி புதிய விஷயங்கள கண்டுபிடிக்கிறது தான் என் கனவு… அதனால என் லைஃப்ல இந்த தேடலும் தொடர்ந்துட்டே இருக்கணும்னு நினைக்கிறேன்…. ” என்று சொல்ல அவள் முகம் கூம்பி விட்டது…

அவன் இந்தப் பதிலை தான் சொல்வான் என்று தெரியும்…

ஆனாலும் அவன் சொல்லும் போது மனதுக்கு வேதனையாக இருந்தது…

“இதே கேள்விய நீ கொஞ்ச நாளைக்கு முந்தி கேட்டிருந்தா உன்ன பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்லி இருப்பேன்… ஆனா எனக்கு இப்ப உன்ன ரொம்ப புடிச்சு போச்சு… அதுக்காக உன்கிட்ட பொய் சொல்ல நான் விரும்பல” என்று அவள் இதழை வருடியபடி கூறினான்…

பெருமூச்சு விட்டவள், “எனக்குத் தெரியும், இத உங்ககிட்ட கேட்க கூடாதுன்னு நினச்சேன், இந்த இடத்துல என்ன மீறி ஒரு பீலிங்ஸ்ல கேட்டுட்டேன்” என்றாள்…

“நோ ப்ராப்ளம்… ஏன்ன… இந்த கேள்விய நீ என்கிட்ட மட்டும் தானே கேட்க முடியும்” என்றவன், “இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க…” என்றான் அவளை ரசித்தபடியே…

அவனைப் பார்த்து கண் சிமிட்டியவள், “எனக்கு தெரியும்” என்றாள்.

“உன்கிட்ட போய் நான் இத சொன்னேனே…” என்றவன் ஆய்வுக்கு தேவையான சில விஷயங்களை சேகரித்துக் கொண்டே இருவரும் கப்பலை நோக்கி சென்றனர்…

இங்கு வரும்போது இருந்த பாரமான மனநிலை இருவருக்குமே இல்லை…

அதற்காகத்தானே அவளை இங்கு அழைத்து வந்திருந்தான் அபின்ஞான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 32

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!