மின்சார பாவை-16

4.8
(5)

மின்சார பாவை-16

அழுத முகத்துடன் வந்த வெண்ணிலாவையும், கோபத்துடன் வந்த நகுலனையும் பார்த்து,”என்னாச்சு என்று அவர்களது நண்பர்கள் வினவ.

 வெண்ணிலாவோ அழுது கொண்டே இருந்தாள்.

நகுலன் தான் யுகித் பண்ண காரியத்தை கூறினான்.

 ஒரு நிமிடம் அந்த இடமே அமைதியாக இருந்தது.

“யுகா அண்ணா இப்படி நடந்துப்பாருன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல.” என்று நகுலன் மீண்டும் கூற.

ஹரிஷோ,” நகுல் எனக்கு என்னமோ யுகா அண்ணா மேல தப்பு இருக்கும்னு தோணல. வாயால சொல்லைனாலும் வெண்ணிலாவும் அவர விரும்புறாருன்னு நமக்கே தோணுச்சு தானே. இல்லன்னு சொல்லாதே.” என்றான்.

“ஆமாம் நீ சொல்றது கரெக்ட்டு தான். ஆனா இப்ப அவளுக்கு பிடிக்கவில்லைன்னா விட்டு விட வேண்டியது தானே.” என்று நகுலன் கூறினான்.

இவர்கள் பேச பேச வெண்ணிலா அழுதுக் கொண்டே இருக்க.

“ முதலில் இநத டாபிக்கை விடுங்க!” என்று அதட்டினாள் மஹதி.

**************

அங்கோ யுகித்தின் கன்றிய முகத்தைப் பார்த்து ரகுலனும் தீபிகாவும் பதற.

 அவனோ குரல் கம்ம,”வெண்ணிலா என்னை லவ் பண்ணலையாம். ஃப்ரெண்டா தான் நினைச்சாளாம். அவளை தொந்தரவு பண்ண கூடாதுனு நகுலனும் ஆர்டர் போடுறான். என்னை பார்த்தா எப்படி தெரியுது. பிடிக்காத பொண்ணை டார்ச்சர் பண்ற மாதிரியா தெரியுது. அவளுக்கும் என்னை பிடிக்கும். ஆனால் ஏன் இப்படி நடந்துக்கிறான்னு ஒன்னும் புரியலை. எனக்கு யாருடைய அன்பும் நிரந்தரமா கிடைக்காது போல. நான் ஒரு அன்லக்கி.” என்று விட்டு அங்கிருந்து கிளம்பினான் யுகித்.

தீபிகாவுக்கு தான் அவனை இப்படி பார்க்க மனது வலித்தது

தீபிகாவுக்கும் அவனை பிடிக்கும். ஆனால் யுகித்தும் நிலாவும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்ததும் தன் மனதை மாற்றிக் கொண்டாள்.

ஆனால் வெண்ணிலா ஈஸியா லவ் பண்ணலைன்னு சொன்னதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

 அடுத்து வந்த நாட்கள் யுகித் எதிலும் கவனத்தை செலுத்தாமல் யோசனையுடனே இருந்தான்.

வகுப்பிலும் கவனமின்றி இருக்க

மதன் சாரே இரண்டு தடவை அவனை கண்டித்தார்.

அடுத்தமுறையும் வகுப்பில் கவனமில்லாமல் யுகித் இருக்க.

“யுகித்! என்ன நெனச்சிட்டு இருக்க வர வர உன்னோட ஸ்டடிஸ்ல கான்ஸன்ட்ரேஷன் பண்ண மாட்டேங்குற. கேம்பஸ் இன்டர்வியூவும் ஒழுங்கா அட்டென்ட் பண்ண மாட்டேங்குற.வாட்ஸ் அப் யுவர் ப்ராப்ளம் மேன்?” என்று மதன் வினவ.

”நத்திங் சார்” என்றான்.

“எல்லாரும் உன்ன பாராட்டுறாங்கன்னு என்ற

தலைகனம் வந்துடுச்சு.ஐ டோண்ட் லைக் திஸ் பிஹேவியர். கிளாசை ஒழுங்கா கவனிக்கிறதா இருந்தா இரு. இல்லைனா என் கண்ணு முன்னாடி நிக்காத வெளியில போ”என்று மதன் திட்ட.

 ஒன்றும் கூறாமல் வெளியே வந்தவனுக்கு வாழ்க்கையே வெறுத்து தான் போனது.

அவனோட ஆஸ்தான இடத்திற்குச் சென்றவன், தன் நிலைமையை நினைத்துப் பார்த்தான்.

‘எல்லாத்துக்கும் அந்த வெண்ணிலா தான் காரணம்.” என்று எண்ணியவனுக்கு கோபம் வர. அங்கிருந்த மரத்தில் கையை குத்திக் கொண்டிருந்தான்

 அவன் பின்னே வந்த தீபிகா எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை .

அடக்க முடியாத கோபத்துடன் கிளம்பிய தீபிகா, தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வெண்ணிலாவின் முன்பு சென்று நின்றாள்.

” உன்னால ஒருத்தவன் பைத்தியக்காரனாட்டம் அங்க கைய ஒடச்சுக்கிட்டு இருக்கான். ஆனால் நீ சந்தோஷமா இருக்க. நல்லா இரு தாயே.” என்று தீபிகா கத்த.

 “என்ன சொல்ற பேபி” என்று புரியாமல் வினவினாள் வெண்ணிலா.

“ என்ன புரியலை? நீ லவ் பண்ணலன்னு சொன்னதிலிருந்து அவன் எதிலும் கவனத்தை செலுத்தாமல் அலட்சியமா இருக்கான். இன்னைக்கு மதன் சார் கிட்ட நல்லா திட்டு வாங்கிட்டு,அதை தாங்க முடியாமல் தன்னை தானே தண்டிச்சுக்கிட்டு இருக்கான். கைல ரத்தம் ஒழுகிட்டு இருக்கு நான் சொன்னா கேட்க மாட்டேங்கிறான்.” என்று கதறினாள் தீபிகா.

அவளுக்கு மேல் பதறிய வெண்ணிலாவோ வேகமாக அவனைத் தேடிச் சென்றாள்.அங்கு கையில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்தான்.

“யுகா ப்ளீஸ் . “என்று அவனது கைகளைப் பிடித்து தடுக்க முயன்றாள்.

அவளை உதறியவன்,

முதல்ல என் கண்ணு முன்னால நிக்காத போயிடு. எனக்கு எதுவுமே கிடைக்காது. நான் அவ்வளவு அதிர்ஷடசாலி. ஆனாலும் உன்னை லவ் பண்ணதும் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆனா இன்னைக்கு அனாதை மாதிரி எப்பவும் போல தனியா நிக்கிறேன். சின்ன வயசுல இருந்து நான் எதிர்பார்த்த எதுவும் எனக்கு கிடைச்சதில்ல.

நான் இழந்த அன்பு, பாசம் எல்லாத்தையும் உன் மூலமா திகட்ட திகட்ட அனுபவிக்கணும்னு நினைச்சேன். எதுவும் நடக்காதுனு எனக்கு விதி எழுதி வைச்சிருக்கு போல.” என்று தன்னையே வெறுத்து அவன் பேச

 அவளால் தாங்கவே முடியலை.

அவனை இறுகக் கட்டிக் கொண்டு , “இப்படியெல்லாம் பேசாதே. யுகா. நான் இருக்கேன். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். உனக்காகத்தான் நான் விலகி நிற்கிறேன் .” என்றவள் அழுது கரைய.

அவளது வாய் வார்த்தையாக,”உன்னைப் எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என்பதை கேட்டதுமே அவனது முகத்தில் புன்னகை மலர்ந்தது ,

அவளை அவனும இறுக அணைத்துக் கொண்டவன்,” தட்ஸ் மை கேர்ள்!” என்று அவளது நெற்றியில் முத்தமிட.

 பதறி விலகினாள் வெண்ணிலா.

அப்பொழுது தான் அவனுடைய கையை கவனித்தாள் வெண்ணிலா.

ரத்தம் வந்து கொண்டே இருந்தது. அதைப் பார்த்து பதறியவளோ, அதை துடைத்து விட்டு அவனைப் பார்த்தாள்.

“இதெல்லாம் ஒன்னுமில்ல நிலா. நீ என்ன பிடிக்கும்னு சொல்லிட்டல்ல. எனக்கு அதுவே போதும்.”என்றுக் கூறி புன்னகைத்தான் யுகித்.

 அவனுக்குக் வலிக்காதவாறு கையில் முத்தமிட்டாள் வெண்ணிலா. அவளது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் காயத்தில் பட்டது.

“என்னாச்சு நிலா? இப்ப எதுக்கு அழுற?” என்று சமாதானம் செய்தான் யுகித்.

“சாரி யுகா. எங்க வீட்ல நம்ம காதலுக்கு ஒத்துக்க மாட்டாங்க அதான் அவாய்ட் பண்ண பார்த்தேன்.” என்று வெண்ணிலா கூற.

“எந்த வீட்டில் தான் லவ் பண்ண ஒத்துக்குவாங்க. கல்யாணம் ஆனால் சமாதானம் ஆகிடுவாங்க. நீ கவலைப்படாதே .”

“அப்படியெல்லாம் இல்லை. எங்க அக்கா கல்யாணம் பண்ணிட்டு போய் மூணு வருஷமாச்சு. ஆனா அவங்க இன்னும் அவளை மன்னிக்கவே இல்லை.”

“என்ன ? உனக்கு அக்கா இருக்காங்களா?” என்று அதிர்ச்சியுடன் வினவினான் யுகித்.

“ ஆமாம். என்னை விட இரண்டு வருஷம் பெரியவ. அவ ரொம்ப அமைதி. அவ லவ் பண்ணினங்கறதையே எங்களால நம்ப முடியல. ஆனா ஒருநாள் அவ காலேஜ் விட்டு வரும்போது மாலையும் கழுத்துமா வந்து நின்றாள். அம்மா அவளை உள்ள விடவே இல்லை.

அதுக்கப்புறம் வீட்டுக்காரரோட சண்டை போட்டுட்டு ஒரு நாள் வந்தா என்ன ஏதும் என்றுக்கூட கேட்காமல் அதான் நாங்க வேணான்னு போனல்ல, அப்புறம் எதுக்கு நீ இங்க வர, நல்லதோ கெட்டதோ நீ தேடிக் கொண்ட வாழ்க்கை தானே, இத்தனை வருஷம் உன்ன வளர்த்த எங்களுக்கு தெரியாதா உனக்கு எப்படி வாழ்க்கை அமைச்சுக் குடுக்கணும்னு . அவன் தான் வேணும்னு போனல்ல, அப்புறம் எதுக்கு திரும்ப வர்ற. நல்லதோ, கெட்டதோ எதுக்காகவும் எங்கக்கிட்ட வந்து நிக்காதே. எங்களுக்கு நிலானு ஒரு மக தான் இருக்கா. நீ எப்பவோ செத்துட்டேன்னு சொல்லி திட்டி அனுப்பிட்டாங்க. எங்க அக்கா பாவம் திரும்பித், திரும்பிப் பார்த்துட்டு போனா.

அப்பக் கூட நான்அம்மாவிடம் உங்களுக்கு இரக்கமே இல்லையா மா? அம்மா அக்கா பாவம்ன்னு சொன்னேன். அதுக்கு என்ன அக்கா மேல கரிசனம் அவளை மாதிரியே நீயும் லவ் பண்ணலாம்னு நினைக்கிறியான்னு திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சது தான் வினை. எப்பப் பார்த்தாலும் என்னை சந்தேகப்பட்டுக்கிட்டே இருந்தாங்க

இப்படி பண்ணினா நானும்

எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்க போறேன்னு ஒரு நாள் கோபத்தில் திட்டிட்டேன்.

 நல்லா அன்னைக்கு எங்கம்மா என்னை அடிச்சிட்டு,அவள விட்ட மாதிரி உன்ன விட மாட்டேன். நீ எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்றால், உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். நீ இழுத்துட்டு வர்றவனை கொன்னுட்டு, நானும் உங்க அப்பாவும் தற்கொலை பண்ணிக்கிட்டு சாவோம்னு மிரட்டினாங்க யுகி “என அழுதாள் வெண்ணிலா.

“லூசு இத நினைச்சுட்டு தான் என் லவ்வ அக்செப்ட் பண்ணவில்லையா? அப்படி உன் பேரண்ட்ஸால என்ன கொன்னுட முடியுமா.

அவ்வளவு ஈஸியா எல்லாம் என்னை யாரும் நெருங்கிட முடியாது பைத்தியம்.” என்று அவளது தலையை தட்ட.

“நம்ம காதல் கைக்கூடுமா யுகா?நாம எல்லோரையும் போல கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்வோமா?” என்று ஏக்கமாக வினவினாள் வெண்ணிலா.

“கட்டாயம் நம்ம சந்தோஷமா வாழுவோம். நீ பயப்படவே பயப்படாதே நிலா.”

“ சரி யுகா இனிமேலாவது இன்டர்வியூ நல்லபடியாக அட்டென்ட் பண்ணி எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்துடுங்க.அதில் உங்க திறமையை வளர்த்து, வெளிநாட்டில் செட்டிலாயிடுங்க.

 நானும் படிப்பு முடிச்சு உங்களோட வந்துடுறேன்.” என்றாள் வெண்ணிலா.

 “ஹேய்! ரெண்டு வருஷம் உன்ன பாக்காம எல்லாம் என்னால இருக்க முடியாது. நான் இங்க மேல படிக்கலாம் தான் இருக்கேன். நீ படிச்சு முடிச்சதும், ரெண்டு பேரும் வெளிநாட்டில் வேலை தேடிக்கிட்டு போயிடலாம். அது வரைக்கும் உங்க வீடடுக்கு தெரியாமல் பார்த்துக்கலாம்.” என்று திட்டம் தீட்டினான் யுகித்.

ஆனால் மனிதர்கள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், பிறகு தெய்வம் எதற்கு?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!