முகவரி அறியா முகிலினமே – 10

5
(5)

முகில் 10

கடற்கரையின் ஓரத்தில் மணலில் அமர்ந்திருந்து ஆர்ப்பரிக்கும் அந்த கடல் அலையின் ஓசைகளை உள்வாங்கியபடி ஆதிரன் அமைதியாக இருந்தான்.

ஏனோ தெரியவில்லை அந்தக் கடல் காற்று அவனை அன்போடு அரவணைப்பது போல் இருந்தது.

மிகுந்த வேலைப்பழுவிலிருந்து விடுபட்ட மனது கூண்டில் இருந்து வெளியேறிய பறவை போலானது.

வேலையால் ஏற்பட்ட மன அழுத்தம் இப்போது எங்கோ  தூரச்சென்று இருந்தது.
அனைத்தும் மறந்தவனாக கடல் அலையின் மோதல்களை பார்த்து ரசித்தபடி இருக்கும் போது எங்கோ தூரத்தில்,

“காப்பாத்துங்க என்னை காப்பாத்துங்க..” என்று கூச்சலிடும் சத் அதை ஔதம் கேட்டது.
அந்த சத்தம் வந்தத் திசையை நோக்கி எழுந்து ஓடத் தொடங்கிய ஆதிரன் அந்தக் குறலின் பின்னே வேகமாக ஓடினான்.

தொலைதூரம் ஓடிய பின்பு கடல் அலைக்குள் சிக்குண்ட ஒரு சிறுவனின் கரம் அவனது கண்ணுக்கு தென்பட்டது.

உடனே கடல் அலைக்குள் பாய்ந்து நீந்தி ஓடிச்சென்று அந்த சிறுவனின் கரம் பற்றி இழுத்தவன் அப்படியே நீந்தி வந்து தரையில் அவனைக் கிடத்தினான்.

“அப்பாடா இந்தச் சிறுவனை காப்பாத்தியாச்சு..” என்று  பெருமூச்சு விட்டபடி அவனது வதனம் பார்த்தவன் அப்படியே வேரூன்றிய மரம் போல் அசைவற்று அதிர்ச்சியுடன் நின்றான்.
அவனது வாயில் இருந்து “அ..ர..வி..ந்..த்..” என்ற வார்த்தை மட்டுமே சப்தமின்றி காற்றாக வெளி வந்தது.

உடனே நெஞ்சில் கை வைத்தபடி தொழில் நீங்கிய ஆதிரன். அரவிந்தின் இழப்பு இவ்வளவு பாரதூரமான தாக்கத்தை மனதில் ஏற்படுத்தி இருக்கின்றது என்பது இந்த கனவின் மூலமே அவனுக்கு நன்கு விளங்கியது.

உண்மையில் செந்தாழினி கூறியது போல நான் நீச்சலை கூடிய சீக்கிரம் பழக வேண்டும் என்று மனதிற்குள் உறுதி பூண்டான்.

“அப்படி நீச்சல் பழகலன்னா உண்மையிலேயே எனக்கு நெருங்கியவங்க யாராவது ஆபத்துல மாட்டினா நான் அவங்கள காப்பாத்த முடியாம ஒரு கையாலாகா தனத்துக்கு உள்ளாகிடுவேன் மீண்டும் என்னால அப்படி ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக முடியாது.

இந்த குற்ற உணர்வு என்னை எவ்வளவு நாட்களாக தாக்கிக் கொண்டிருக்கின்றது.
எவ்வளவு அழகா என்னோட தவறை செந்தாழினி புரிய வச்சுட்டா உண்மையிலேயே அவள் கிரேட்..” என்று வாய்விட்டு கூறியவன்,

உடல் சோர்வாக இருக்க எழுந்திருக்க மனம் வராமல் அப்படியே கண்களை மூடி படுத்துக் கிடந்தான் நேரம் ஏழினைத் தொட்டிருக்கும்.

கண்களை மூடி இருக்கும்போது செந்தாழினி நேற்று அருவியில் இருந்து குளித்து எழுந்து வரும் பொழுது அவளது முன் எழில்கள் மற்றும் அனைத்து அங்கலாவண்யங்கள் அதில் காணப்படும் பள்ளத்தாக்குகளும் சுவடுகளும் அவன் கண் முன்னே அக்கணம் தோன்றி மறைந்தது.

உடனே சட்டென்று கண்விழித்து எழுந்து இருந்தவன், தலையை உழுப்பி தன்னை நிதானத்திற்கு கொண்டுவர பெரும் சிரமப்பட்டான்.

“என்ன ஆச்சு ஆதிரா ஏன் இப்படி என் புத்தி கோணலா யோசிக்குது சேச்சே.. கூடாது அப்படியெல்லாம் யோசிக்க கூடாது செந்தாழினி எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பெண்..” என்று ஒரு புறம் மனது கூற,

மறுபுறம் வேறு விதமாக சிந்தித்தது. ‘பிடித்த பெண் என்றால் இப்படி எல்லாம் தோன்றுமோ இல்ல  ஆதிரா இப்படி யோசிக்கவே கூடாது..’ என்று ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தவன் மீண்டும் கண்களை மூடி உறங்க,

“பனியில் நனைந்த ரோஜா போல அவன் கண்முன்னே மீண்டும் அவ்உருவம் வந்து அவனை பாடாக படுத்தியது.

அந்நேரம் பார்த்து வாசலில்,
“ஆதிரன் சார்.. ஆதிரன் சார்..” என்று செந்தாழினியின் குரல் கேட்க எழுந்து வந்து சலிப்புடன் கதவை திறந்தவன் அங்கு அவன் கனவில் கண்ட காட்சி போல செந்தாழினி நனைந்தபடி நிற்க உடனே அவளது எழில் பொங்கும் அழகினை பார்க்க முடியாமல் கண்களை மூடி மறுபக்கம் திரும்பிக் கொண்டவன்,

“என்ன செந்தாழினி குளத்துல குளிச்சிட்டு அப்படியே வந்துட்டியா போய் ட்ரஸ் மாத்திட்டு வா..” என்று சற்று கோபமாகக் கூற,
அவளோ ஒன்றும் புரியாமல் தன்னை மேலும் கீழும் உற்றுப் பார்த்தவள்,

“என்ன சார் தூக்கம் இன்னும் போகலையா ஒழுங்கா பாருங்க நான் குளித்து டிரஸ் எல்லாம் மாத்திட்டு தான் வந்து இருக்கேன் சீக்கிரம் கிளம்பி வாங்க கோயில்ல திருவிழா இந்நேரம் ஆரம்பிச்சிருக்கும் காலையிலேயே போனா தான் நடக்கிற சடங்குகள் சம்பிரதாயங்கள் பூசைகள் எல்லாம் அழகா பார்க்கலாம்

இதோ சார் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கேன் இன்னைல இருந்து எங்க ஊர்ல எல்லாரும் மரக்கறி உணவுகள் தான் சாப்பிடுவோம் அதனால நானும் மாமிசம் தொட மாட்டேன் நீங்க ஒரு பத்து நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்க..” என்று கூற,

உடனே கண்களை நன்றாக துடைத்து விட்டு செந்தாழினியைத் திரும்பிப் பார்க்க உண்மையிலேயே அவள் குளித்து முடித்து அழகாக உடை அணிந்து அம்சமாக  கண்ணை பறிக்கும் அழகுடன் பதுமை போல நின்றிருந்தாள்.

அவள் அணிந்திருந்த தங்க நிற பட்டுத் தாவணி புதியதாகவும் அவளது உடலை வனப்பாகவும் எடுத்துக்காட்டியது.
அதனை ரசிக்காமல் அவனது கண்களால் இருக்க முடியவில்லை.

“என்ன செந்தாழினி இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க புது டிரஸ்ஸா..?”

“அப்படியா ரொம்ப நன்றி சார் புதுசு தான் ஒரே ஒரு தடவை தான் இதை உடுத்தி இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிச்ச தாவணி
சரி சரி இதை சாப்பிட்டு சீக்கிரமா வாங்க நான் முன்ன போறேன் நீங்க பின்ன வாரிகளா..?
ஊர் மத்தியில இருக்க அந்த காளியம்மன் கோயில் தான் நான் சீக்கிரமா போகணும் சார் பார்த்து வாங்க வழி தெரியும் தானே..” என்று கேட்க,

“ஓகே நீ கிளம்பு எனக்கு வழி தெரியும் நான் வீட்டுக்கு கால் பண்ண வேண்டி இருக்கு கால் பேசிட்டு அப்புறமா குளிச்சு முடிச்சு சாப்பிட்டு வாரேன்..”

“சரிங்க சார் நான் போயிட்டு வரேன்..” என்று கூறியவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல அவள் சென்ற பாதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிரன்.

“இன்னைக்கு எனக்கு என்ன ஆச்சு எல்லாமே தப்பு தப்பாவே தோணுது செந்தாழினி பேசுறது, சிரிக்கிறது, நடை, உடை, பாவனை எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு எல்லாமே ரசிக்கிற மாதிரியும் இருக்கு அவளைப் பார்த்ததும் ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோசம் வருது ஒருவேளை எனக்கு ஏதாவது வியாதி வந்துடுச்சோ சரி பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..” என்று யோசித்தபடி குழப்பங்கள் தீர அன்னைக்கு அழைப்பெடுத்தான்.

வளமையாக காலையிலேயே அன்னையிடம் அழைத்து பேசிவிட்டு தான் ஊர் சுற்றிப் பார்க்க செல்வான் அத்துடன் இரவு உறங்கும் முன்பு அன்னையுடனும் தனது அக்காவுடனும் பேசிவிட்டு தான் உறங்கச் செல்வான்.

ஆதிரன் அழைப்பு எடுத்தவுடன் அதற்காக காத்திருந்தது போல முதலாவது ரிங்கிலேயே அங்கு அழைப்பு ஏற்கப்பட்டது.

“சொல்லுடா கண்ணா எப்படி இருக்க..? சாப்பிட்டியா..?” என்று சிவகாமி தவிப்புடன் கேட்டார்.

“அம்மா என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு ஏதாவது பிரச்சனையா..?”

‘இல்லப்பா நேத்து ராத்திரியில் இருந்து உங்க அக்கா வயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்கா மாப்பிள்ளைக்கு கால் பண்ணி சொல்லிட்டேன் உங்க அப்பாவும் இதோ புறப்பட்டு வந்துடுறேன் என்று சொன்னாரு இன்னும் ரெண்டு பேரையும் காணல்ல அதுதான் யோசனையா இருக்கு

நீ பக்கத்துல இருந்து இருந்தாலும் கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கும் உங்க அக்கா சும்மாவே சின்ன வலி வந்தாலே ஊரை எழுப்புவா இது ரொம்ப வலிக்குதுன்னு வேற சொல்லுறா எனக்கு ரொம்ப பயமா இருக்குடா..” என்று சிவகாமி கூற,

ஆதிரனிற்கும் சிவகாமியின் பதற்றம் மனதளவில் தொற்றிக் கொண்டது. இருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

“அம்மா நீங்க ஒன்னும் யோசிக்காதீங்க அது ஏதாவது சின்ன வலியா இருக்கும் இல்லன்னா பாப்பா உதைக்கிறதை தான் அவள் வலிக்குதுன்னு சொல்றாளோ தெரியால. நீங்க ராதிகா கிட்ட போன குடுங்க நான் பேசுறேன்..” என்று சொல்ல அருகில் ராதிகாவிடம் போனைக் கொடுத்தார் சிவகாமி.

“என்ன ராதிகா ஓவரா சீன் போடுற போல நான் அங்க இல்லைன்னதும் நாடகம் ஆடுற என இப்ப நான் வந்தேன் வயித்துக்குள்ள இருக்க பாப்பாவ பலமா உதையச் சொல்லுவேன்..” என்று ஆதிரன் மிரட்ட,

“ஆதிரா உண்மையிலேயே எனக்கு வலிக்குது பயமா இருக்குடா நீ சீக்கிரமா வா நீ பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும் போல இருக்கு நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்

பாப்பா வெளியே வந்துவிடுமோ இப்பவே வந்துரும் போலத் தான் இருக்கு பாப்பா பிறக்கும்போது நீ பக்கத்துல இருக்க மாட்டியா..?” என்று அன்புடனும் கலக்கத்துடனும் கேட்க அக்காவை எப்படி தேற்றுவது என்று புரியாமல் தவித்தான் ஆதிரன்.

வம்பாக பேசுபவர்களிடம் வம்புக்கு நிக்கலாம் அன்பாக பேசுபவர்களிடம் எப்படி அதட்டி பேசுவது என்று ஆதிரன் யோசித்தபடி அவளுக்கு ஆறுதல் தேடி,

“நீ ஒன்னும் கவலைப்படாதே நான் இன்னைக்கு புறப்படுறேன் பக்கத்துல இருக்க ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்த்திடுவோம் இப்போ மாமா வந்துருவாரு நான் மாமாவோட பேசினான் மாமா வந்ததும் ஹாஸ்பிடல் சேர்த்ததும் என்னன்னு சொல்லுவாங்க

நான் இன்னைக்கு இருக்கிற முதல் பஸ்ஸிலேயே ஏறி வந்திடுறேன் ஓகேயா நீ ஒன்னும் கவலைப்படாதே பாப்பா நல்லா ஆரோக்கியமா தான் இருக்கும் என்னோட செல்ல அக்கால்ல..” என்று கூறியதும்,

“சரி சீக்கிரம் வந்துர்ரா…” என்று பதில் உதிர்த்து விட்டு அன்னையிடம் அழைபேசியை கொடுத்தாள்.

அன்னையோ அதே பதற்றத்துடன்,
“என்ன ஆதிரா அவ பேசினத கேட்டியா அவ உண்மையிலேயே வலிக்குதுன்னு துடிக்கிறா பாவம் என் பொண்ணுக்கு பிரசவ வலி வார நேரம் நீங்க ஒருவரும் பக்கத்தில இல்லையே..!” என்று சிவகாமி அழுதார்.

“அம்மா அழாதீங்கம்மா அக்காக்கு ஒன்னும் இல்ல இன்னும் ஏழு மாசமே முடியல பாப்பா இப்ப வெளியே வரமாட்டா நான் இதோ புறப்பட்டு வாரன்..”

‘சரிப்பா சீக்கிரமா வா..” என்று கவலையுடன் சிவகாமி அழைபேசியை வைக்க ஆதரனின் மனதில் கவலையும், யோசனையும் அதிகமாயிற்று.

குளித்து காலை உணவை உண்டு முடித்துவிட்டு அனைத்து உடைகளையும் எடுத்து வைத்து ஆயத்தமாகிய பின்பு, ‘செந்தாழினி கிட்ட விஷயத்தை சொல்லிட்டு கிளம்புவோம்..’ என்று பெட்டியை வைத்துவிட்டு கோயில் நோக்கி புறப்பட்டான்.

அங்கு கோயிலில் பெரும் சனத்திரளாக இருந்தது. ஊரிலுள்ள அனைத்து மக்களும் கோயிலிலேயே குழுமி நின்றனர்.
கல்லு போட்டால் கூட கீழ விழாத அளவுக்கு மிகவும் சன நெருக்கடியாக இருந்தது.

செந்தாழினியை கண்களால் தேடி களைபுற்றவன், நேரம் வேகமாக நகர வேறு வழி இல்லாமல் திரும்பி செல்ல எண்ணித் திரும்பும் போது  பவள மணிகள் பூட்டிய கரம் அவனது திடமான கரத்தினைத் தீண்டியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!