முகில் 8
அந்த உயர்ந்த நீர்வீழ்ச்சியின் அழகில் தன்னை மறந்து நின்ற ஆதிரனை கைப்பிடித்து அதன் அருகில் அழைத்துச் சென்றாள் செந்தாழினி.
“நல்லா இருக்குல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் இதுதான் வாங்க சார் கிட்ட போய் பார்க்கலாம் இன்னும் நல்லா இருக்கும்..” என்றிட
முறுக்கி விடும் பொம்மை போல செந்தாழியின் பின் சென்றான் ஆதிரன்.
சிறிது நேரம் சுற்றும் முற்றும் அதன் அழகினை திகைப்புடனும், ஆச்சரியத்துடனும் கண்கள் விரிய பார்த்து ரசித்தவன் உடனே தனது ஆயுதத்தை கையில் ஏந்தினான்.
ஆயுதம் என்றதும் ஆயுதமா அது என்ன ஆயுதம் என்று பயப்படத் தேவையில்லை அவனது ஆயுதமே கேமரா தான். கேமராவை கையில் எடுத்து ஒவ்வொன்றாக படமெடுக்க செந்தாழினிக்கோ இருப்புக் கொள்ளவில்லை.
அவள் இங்கு வந்து ஒரு நாளும் அந்த நீரில் குளிக்காமல் சென்றதே இல்லையே! தண்ணீரைக் கண்டதும் மனம் பரபரக்க தாவிக் குதித்து ஓடும் அருவியில் அழகாக நீந்தத் தொடங்கினாள்.
ஒவ்வொன்றாக தனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தவன் நீரின் மேலே நீச்சல் அடிக்கும் செந்தாழினியைப் பார்த்ததும் உடனே தனது கேமராவில் அதனையும் படம் பிடித்தான்.
கேமராவின் ஊடாக அவள் நீந்தும் அழகைப் பார்த்ததும் கடல் கன்னியே தரை இறங்கி கண் முன் வந்து நிற்பது போல அவளுடைய அழகு அவனது கண்களை கவர்ந்து இழுத்தது.
நீரின் மேல் வந்து இரு கைகளையும் வாய்க்கு அருகில் வைத்து கொண்டு, “கூ…. கூ… கூ…” எனப் பெரும் சத்தத்துடன் கத்தி நீரில் மூழ்கி எழுவதுமாக விளையாடினாள்.
அவளது சிறுபிள்ளைத்தனமான செய்கையைப் பார்த்தவன் சிறு புன்னகையுடன் தலையசைத்து விட்டு அங்கிருக்கும் ஒவ்வொன்றையும் அழகாக படம் பிடித்து அதனை கேமராவில் சரியாக இடம் பிடித்து இருக்கின்றனவா என்று சோதித்துக் கொண்டிருந்தான்.
நன்றாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்த செந்தாழினி அதிரனின் அருகில் நீந்தி வந்து,
“சார் வாங்க சார் இந்த தண்ணீர் ரொம்ப குளிர்ச்சியா இருக்கும் ஒரு தடவை இறங்கி நீந்திப் பாருங்க நல்லா இருக்கும் இதுல குளிச்சா தான் மனசுக்கு ரொம்ப லேசா இருக்கும் வேணும்னா முயற்சி செஞ்சு பாருங்க..” என்று கூறியதும்
மாவீரன் போல் நின்றிருந்த ஆதிரன் உடனே இரண்டு அடி பின் நகர்ந்து,
“இல்ல என்னால முடியாது..” என்று பின்னோக்கி நகர அந்தோ பரிதாபம் பாறையில் படிந்திருந்த பாசியினால் வழுக்கி கால் இடறி பாறையில் இருந்து நீருக்குள் விழுந்தான்.
அவன் விழுந்ததும் சிரிப்புடன் செந்தாழினியும்,
“பாத்தீங்களா மாட்டேன்னு சொன்னீங்களே இதோ எப்படி நல்லா இருக்கா..” என்று அவள் கிழுக்கிச் சிரிக்க,
ஆதிரன் உள்ளே சென்று மூச்செடுக்க முடியாமல் மேலே வந்து ஹெல்ப் பண்ணு..” கத்தியபடி மீண்டும் நீரின் உள்ளே சென்றான்.
‘இவருக்கு உண்மையிலேயே நீச்சல் தெரியாதா என்னைய ஏமாத்துறாரா இல்லைன்னா நான் பயப்படனும் என்று நடிக்கிறாரா..?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது தடவையும் மேலே வந்து மூச்சுக்கு போராடி மீண்டும் உள்ளே சென்றான்.
‘பார்த்தா நடிக்கிற மாதிரி தெரியலையே..!’ என்று அப்போதுதான் செந்தாழினிக்கு மண்டையில் உரைத்தது.
“அப்படின்னா இவருக்கு உண்மையிலேயே நீச்சல் தெரியாதா..?” என்று உடனே நிலைமையை சுதாரித்து உள் நீச்சல் அடித்து ஆதிரனைத் தேட, ஆதிரன் மூச்சுக்குத் தள்ளாடி அப்படியே மயங்கும் தருவாயில் அருவியின் ஆழத்தில் சென்று கொண்டிருந்தான்.
அவனது கையினை பிடித்து இழுத்துக் கொண்டு மேலே நீந்தி வந்து மெதுவாக பாறையின் மீது இழுத்து மேலே அவனை படுக்க வைத்தாள்.
“அப்பாடா என்ன வெயிட் ஒரு மாதிரி காப்பாத்தியாச்சு..” என்று அவன் அருகில் சென்று,
“சார் எழுந்திருங்க சார்..” என்று மெதுவாகத் தட்டி எழுப்பினாள். ஆனால் ஆதிரனிடம் இருந்து எந்த வித அசைவுகளும் இல்லை.
‘ஒரு வேளை மயங்கி இருப்பாரோ..!’ என்று கன்னத்தில் தட்ட அப்போதும் எந்த வித உணர்வற்றவனாக அப்படியே கிடந்தான்.
சிறிது நேரத்தில் செந்தாழியின் உடல் பயத்தில் குளிர் ஏறி நடுங்கத் தொடங்கியது.
உடனே ஆதிரனின் அருகில் செல்ல தடுமாறியவள், பின்பு யாரும் இல்லாத இடத்தில் என்ன செய்வது என்று தவிப்புடன் அவன் அருகில் சென்று நெஞ்சில் படுத்து இதயத்துடிப்பு விளங்குகின்றதா என்று சோதித்து பார்த்தாள்.
பதற்றத்திலோ என்னவோ அவளுக்கு சரி வர ஒன்றுமே கேட்கவில்லை. அவளது இதயம் எகிறித் துடிப்பது தான் அவளுக்கு நன்றாக விளங்கியது.
உடனே நெஞ்சில் கை வைத்து ஒரு தடவை அம்முக்க அவளுக்கோ பதற்றம் மேலும் கூடியது. இதுவரை யாருக்கும் முதலுதவி செய்து பழக்கமே இல்லை.
ஊரில் இப்படி ஏதும் நடந்தால் வண்டில் சக்கரத்தில் அவர்களை கிடத்தி வண்டில் சக்கரத்தை சுழற்ற அருந்திய நீர் அவ்வளவும் வெளியேறிவிடும் ஆனால் இங்கே இந்த இடத்தில் வண்டில் சக்கரத்திற்கு நான் எங்கு சென்று தேடுவது.
பின்பு நீர் அதிகம் அருந்தி இருப்பாரோ என்று வயிற்றில் கை வைத்து அமுக்க சிறிது நீர் கூட வெளியே வரவே இல்லை என்ன செய்வது என்று படத்தில் பார்த்த காட்சி ஒன்று அவளுக்கு உடனே ஞாபகத்திற்கு வர,
அப்படி செய்தால் தான் சரி என்று அடுத்த முயற்சியை கையில் எடுக்க எண்ணியவளது மனம் அதை செய்வதற்கு இடம் கொடுக்கவில்லை.
படத்தில் நீரில் மூழ்கியவரை செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்றுவது போன்ற ஒரு காட்சி தான் அது. அதை நினைவில் கொண்டவள் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று ஆதிரனின் தடித்த அதரங்களை தனது இதழ்களால் கவ்வி வாயோடு வாய் வைத்து ஊதினாள்.
அப்படி செய்தும் அதிர நிலமிருந்து எந்த ஒரு துலங்களும் கிடைக்கவில்லை. மனம் தளராமல் மீண்டும் தொடர்ந்து முயற்சி செய்ய சிறிது நேரத்தில் வாயிலிருந்து நீர் விசிறி அடித்த வண்ணம் பெரும் இருமலுடன் கண் விழித்தான் ஆதிரன்.
ஆதிரன் பலமாக இரும அவனது முதுகை தட்டிக் கொடுத்தபடி,
“என்ன சார் இது நீச்சல் தெரியாதுன்னு சொல்லி இருக்கலாமே நான் இங்க எல்லாம் கூட்டியே வந்திருக்க மாட்டேன் எப்படி ஒரு நிமிஷத்துல என்னோட ஆவியே அடங்குற மாதிரி செய்திட்டிங்களே சார்..”
“நீ என்கிட்ட நீந்தத் தெரியுமா என்று கேட்கவே இல்லையே அதோட நான் இங்க போட்டோ எடுக்க மட்டும் தான் வந்தது இங்கே குளிக்கணும்னு எல்லாம் எனக்கு ஆசை இல்லை அப்படி ஆசை இருந்தாலும் நான் அதைச் செய்ய மாட்டேன்..”
“ஏன் சார் உங்களுக்குத் தண்ணின்னா பயமா..?”
“அப்படியெல்லாம் இல்ல சின்ன வயசுல நானும் என்னோட ஃப்ரெண்ட்டும் சேர்ந்து கடலுக்கு குளிக்கப் போனோம். அப்போ எங்களுக்கு ஒரு 13 வயசு இருக்கும் அந்த நேரம் ஒரு பெரிய அலை வந்து அடிச்சி அவனை தூக்கிட்டு போயிட்டு
அன்னையிலிருந்து நான் இப்படி குளம், அருவி, கடல் ஒன்னுலையும் குளிக்கிறது இல்ல. பயம் என்றத விட என் கண்ணு முன்னாடியே..” என்று கூற வந்ததை கூற முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, செந்தாலி நிற்க ஆதிரனின் கவலை நன்கு விளங்கியது.
“சாரி என் கண்ணு முன்னாடியே ஆதி ஆதி என்று அவன் கத்திக்கொண்டு அலையோடு சேர்ந்து போய்விட்டான். இதெல்லாம் ஒரு ஒரு செக்கன்ல நடந்து முடிஞ்சிருச்சு.
இப்போவும் என்னோட கண்கள்ல அவன கடைசியாக பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கு. அது எப்பவும் என் கண்ணுக்குள்ள இருக்கும் என்னோட மறக்க முடியாது. அந்த சம்பவத்தின் தாக்கம் என்னவோ எனக்கு தண்ணில குளிக்க விருப்பமில்லை அதோட நீச்சலும் நான் பழகல..” என்று கவலையுடன் கண்களில் கசிந்த நீரை செந்தாழினி பார்க்காத நேரம் துடைத்தான்.
“ஆனா சார் நீங்க அதுக்கப்புறம் தான் நீச்சல் பழகி இருக்கணும் உங்க பிரண்டு கண்ணு முன்னால அலை அடிச்சிட்டு போகும் போது கொஞ்சம் நீச்சல் பழகியிருந்தீங்கன்னா உங்க பிரண்டா தைரியமா நீங்க காப்பாற்றி இருக்கலாம்
ஆனா அதுக்கு அப்புறமும் நீங்க நீச்சல் பழகாம இருந்தது தான் தப்பு யோசிச்சு பாருங்க..” என்று சொல்லிவிட்டு மீண்டும் நீருக்குள் குதித்து விட்டாள் செத்தாழினி.
‘உண்மையிலேயே செந்தாழினி கூறிச் சென்றது சரிதானே அதற்கு அப்புறம் தானே நான் நீச்சல் பழகி இருக்க வேண்டும் அடியோட அதை வெறுத்தவனாக அப்படியே விட்டு விட்டேனே உண்மையில் அந்நேரத்தில் எனக்கு நீச்சல் தெரிந்திருந்தால் அரவிந்தை அப்படி விட்டிருக்க மாட்டேன்..’ என்று மனம் காலம் கடந்து நொந்து கொண்டது.
இந்த சிறு பெண்ணுக்கு இருக்கின்ற அறிவு கூட நம்மளுக்கு இல்லாமல் போய்விட்டது என்று சிரித்தான் ஆதிரன். செந்தாழினியோ அவனது புன்னகையைப் பார்த்து அருகில் வந்து,
“என்ன சார் ஏன் சிரிக்கிறீங்க..?”
“அதுவா அது வந்து இல்ல நீ சொன்ன ஐடியா எனக்கு அந்த நேரம் வராமல் போயிட்டு அவன் இறந்த கவலைல நான் மொத்தமா அதை வெறுத்துட்டேன் ஆனா உண்மையில நீ சொன்னததான் நான் செஞ்சிருக்கணும் சென்னைக்கு போனதும் கிளாசுக்கு போனா போச்சு ஒரு மாசத்துலையே வடிவா கத்துக்கலாம்..”
“இதுக்கெல்லாமா கிளாஸ் போவாங்க நீங்க வாங்க நான் ரெண்டே நாள்ல உங்களுக்கு கத்து தரேன் ஒரு மாசம் எல்லாம் அதிகம் நீங்க வாங்க நான் அமைதியா சொல்லித்தாரேன்..”
“என்னது இங்க வா இப்படியா இப்ப விழுந்து எழும்பினது காணாத எனக்கு வேணாம் பா எனக்கு இது ரொம்ப பயமா இருக்கு இது ரொம்ப ஆழம் ஆழம் குறைந்த ஸ்விம்மிங் ஃபூல் அங்க வச்சு பழகினா பரவாயில்லை இந்த ஆழத்தில நான் வரமாட்டேன்..” என்று பின்வாங்கினான் ஆதிரன்.
அவனது சிறுபிள்ளைத்தனமான பயத்தை பார்த்து சிரித்த செந்தாழினி தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் நீருக்கடியில் சென்றாள்.
ஒருவாறு குளித்து முடித்தவள் மேலே வந்து
“படம் எல்லாம் எடுத்து முடிஞ்சா சார் போவமா..?” என்று செந்தாழினி கேட்க,
அவளுக்கு பதில் கூற திரும்பியவன் அவளை மேலும் கீழும் பார்த்த உடன் சற்றென்று திரும்பிக் கொண்டான். அவள் அப்போதுதான் தன்னை மேலிருந்து கீழ் வரை கவனித்துப் பார்த்தாள்.
அவள் அணிந்திருந்து தாவணி நீரில் நனைந்து கண்ணாடி போல அவளது முன் பருவ அழகை எழிலாகக் காட்டியது.
உடனே நெஞ்சில் கை வைத்துக் கொண்டு திரும்பியவள் அப்போதுதான் ஒன்றை மறந்தே போனாள்.
எப்போதும் இந்த இடத்திற்கு தனியாக வந்து குளித்துவிட்டு செல்வதற்குள் இந்த வெட்ட வெயிலில் ஆடைகள் அனைத்தும் காய்ந்து விடும்.