மைவிழி – 23

4.6
(19)

தன் மேல் கொலைவெறியில் இருந்த மைவிழியோ திடீரென அவனை அணைத்து காதல் சொல்லி முத்தமிடவும் அவனோ திகைத்துப் போனான்.

அவளிடம் இருந்து விடுபட முயன்றவனின் தாடி அடர்ந்த கன்னங்களைப் பற்றிக் கொண்டவள் “எங்க போறீங்க.?” எனக் கேட்டாள்.

“உனக்கு என்ன ஆச்சு.?”

“ஒன்னும் ஆகலையே.” என்றவளின் இதழ்களை குனிந்து முத்தம் இட்டான் அவன்.

அவன் தொட்டாலே வெறுத்து ஒதுக்குபவள் இன்று அவனுடைய கழுத்தை வளைத்து அவளும் முத்தமிட அவனோ கிறங்கிப் போனான்.

“அம்மு.” என கிறங்கியவன், அவளுடைய இதழ்களை முழுவதும் உண்ணத் தொடங்கினான்.

அவளோ தனக்கு மேல் படர்ந்தவனை இழுத்து படுக்கையில் தள்ளியவள் அவன் மீது படர்ந்தாள்.

“ஹே அம்முஉஉஉ.” என விழிகளை கிறக்கமாக முடியவனின் முகம் முழுவதும் முத்தமிட்டு முத்த மழை பொழியத் தொடங்கினாள் அவள்.

அவளுடைய முத்தத்தில் மொத்தமும் உருக, அவளை இறுக அணைத்துக் கொண்டவன் அவளுடைய இடையை வளைத்தான்.

“அம்மு அம்மு…” என அவளை காதலோடு அழைத்தவன் அவளுடைய கழுத்து , முதுகு, கன்னம் , மார்பு என ஒவ்வொரு அங்கத்தையும் கடித்துச் சுவைக்க, அவளோ வெட்கத்தில் சிவந்து போனாள்.

அவனுக்கு ஈடாக அவளும் ஒத்துழைக்க, அவனோ அவளுடைய நெருக்கத்தில் சொர்க்கம் கண்டான்.

அவளுடைய ஆடையை நெகிழ்த்தி உள்ளாடை விலக்கி, அவளுடைய மாதுளைகளை மென்மையாக வருடியவன் அவற்றில் பல் படாமல் கவ்விச் சுவைக்கத் தொடங்க, அவளோ அவனுடைய செயலில் செத்துப் பிழைத்தாள்.

அவனோ அவளுடைய இடையில் முகம் புதைத்து அவளுடைய சுரங்கம் சுவைத்து தன் ஆண் ஆயுதத்தை அவளுடைய உறைதனில் செலுத்தி அவளோடு திகட்டா இன்பம் கொண்டு கூட, அவளும் அவனோடு முழு மனதாக கலந்து கரைந்தாள்.

அவனோ திருப்தி அடைந்தவனாக தன்னை மறந்து தன்னவளின் நெற்றியில் முத்தம் பதித்து விலகிப் படுக்க, அடுத்த கணமே அவனுடைய மார்பில் முகம் புதைத்தவள் கதறிக் கதறி அழத் தொடங்கினாள்.

அவளுடைய கதறலில் திடுக்கிட்டுப் போனான் அவன். அவனுடைய வெற்று மார்போ அவளுடைய கண்ணீரில் நனையத் தொடங்கியது.

“ஹேய் என்ன அம்மு..? என்னாச்சு.?” எனக் கேட்டவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்,

“ஏன் என்கிட்ட பொய் சொன்னீங்க.?” என அழுது கரைந்தவாறு கேட்டாள்.

“ப்ச் என்ன பொய்.? நான் ஏன் உன்கிட்ட பொய் சொல்லனும்.?” என்றான் அவன்.

“நீங்க என்னை காதலிச்சது உண்மைதானே.? சொல்லுங்க தீரா. உங்களோட காதல் உண்மைதானே.?” என அவள் அழுகையோடு கேட்க, திகைத்தான் அவன்.

“உனக்கு எத்தனை தடவைதான் சொல்றது.? நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணலை.” என்றான் அவன். அவனுடைய பார்வையோ அவளுடைய விழிகளை சந்திக்க முடியாது தடுமாறின.

அவளோ அவனுடைய கரத்தை எடுத்து தன் தலை மீது வைத்தவள், “நீங்க என்னைக் காதலிக்கவே இல்லைன்னு என் தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்க.” என்றதும் அவனுக்கோ உடல் இறுகியது.

“முட்டாள் மாதிரி நடந்துக்காத அம்மு.” என்றவன் அவளை விட்டு விலகி நடக்க, “எனக்கு எல்லா உண்மையும் தெரியும்.” என்றாள் அவள்.

“வாட் ரப்பிஷ்.? என்ன உளர்ற.?” எனக் கேட்டான் அவன்.

“நீங்க ஏன் இப்படிலாம் பண்றீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.”

“என்னடி தெரியும்.? என்ன தெரியும்.?” எனக் கர்ஜித்தவாறு அவளை நெருங்கியவன் அவளுடைய கழுத்தை பற்றப் போக,

“அருண் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டார். எனக்கு எல்லாமே தெரியும்.” என்றவளை அதிர்ந்து போய் பார்த்தான் அவன்.

“எ.. என்ன சொ.. சொன்னான் அந்த இடியட்.? சொல்லு என்ன சொன்னான்.?” என அவன் கர்ஜிக்க, அவளோ கதறிக் கதறி அழத் தொடங்கினாள்.

தாங்க முடியாத வலியை தாங்கி நின்றவாறு கதறும் அவளையே இமைக்காது வெறித்தான் அவன்.

அவளோ தொப்பென தரையில் அமர்ந்தவள்,

தன் கரங்கள் இரண்டையும் விரித்து அவனை நோக்கி நீட்ட, அடுத்த கணம் விரைந்து தரையில் அமர்ந்தவன் அவளுடைய கரங்களுக்குள் நுழைந்து தன் தேவதையை இறுக அணைத்தான்.

அவனுடைய விழிகளும் கசியத் தொடங்கின.

அப்படியே சரிந்து அவளுடைய மடியில் தலை வைத்துப் படுத்தான் ருத்ரதீரன்.

அவனுடைய கேசத்தினுள் விரல் நுழைத்து கோதியவள் அவனுடைய கன்னத்தில் குனிந்து முத்தம் இட்டாள்.

“ஹாஸ்பிடல் போகலாம் சார்..” நலிந்த குரலில் கூறினாள் அவள்.

“சார் வேணாம் அம்மு. என்னை தீரான்னே கூப்பிடேன்.” என்றான் அவன்.

“அச்சோ அதுவா இப்போ முக்கியம்.? ஹாஸ்பிடல் போகலாம் தீரா.” என்றாள் அவள்.

“ப்ச் வேணாம்டி. பிழைக்க மாட்டேன்னு தெரிஞ்ச பிறகு எதுக்கு ஹாஸ்பிடல்.?” என விரக்தியான குரலில் கூறினான் அவன்.

அவனுடைய வார்த்தைகளில் அவளுக்கோ உடல் உறைந்தது. நிதர்சனத்தை அவளால் ஏற்க முடியாது போக, துவண்டு போனவளின் கண்ணீர் அவனுடைய கன்னத்தை தொட்டது.

“சாரி அம்மு. நீ என்னை வெறுக்கணும்கிறதுக்காக உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் சாரிடி.” என்க, அவளோ தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

“நீ இப்படிலாம் வேதனைப்படுவேன்னு நெரிஞ்சுதான்டி நான் உனக்கு உண்மை தெரியக் கூடாதுன்னு நினைச்சேன். பட் அந்த ஸ்டுப்பிட் இடியட் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லித் தொலைச்சுட்டான் சே.” என்றவன் அவளுடைய விழிகளை துடைத்து விட்டான்.

“நீங்க இருக்கும் வரைக்கும் நாம சந்தோஷமா இருக்கலாம் தீரா..”  என விம்மலோடு கூறியவளின் வயிற்றில் முகம் புதைத்தவன் ஆம் என்றான்.

“நான் இல்லாம போனாலும் நீ ஹேப்பியா இருக்கணும் அம்மு.” என்றான் அவன்.

“ம்ஹூம் நானும் உங்க கூடவே வந்துர்றேன்.” என நிதானமாக கூறினாள் அவள்.

“வாட்…!!??” என அலறியே விட்டான் அவன்

அவளுடைய வார்த்தைகள் அவனுடைய இதயத்தை உலுக்கி விட்டது.

“எஸ் நீங்க இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையே இல்ல. நீங்க இல்லாத உலகம் எனக்கு நரகம் மாதிரிதான் இருக்கும். வேணாம் தீரா. இந்த வேதனை எனக்கு வேணாம். நானும் செத்துருவேன். நீங்க இல்லாம ஒரு நிமிஷம் கூட வாழவே மாட்டேன்.” என்றவளைப் பார்த்து உடைந்து போனான் அவன்.

“அம்மு ப்ளீஸ்.. நான் இல்லைன்னாலும் நீ வாழணும்டி.” என்றவனின் இதழ்களில் குனிந்து முத்தம் வைத்தாள் அவள்.

அவளுடைய இதழ்களில் தன்னை மறந்து சில நொடிகள் கரைந்து போனவனுக்கு சுயம் அடைந்ததும் மீண்டும் வேதனை சூழ்ந்து கொண்டது.

இந்த வேதனைக் கடலில் தன்னோடு சேர்ந்து தன்னவளும் மூழ்குவதை உணர்ந்து தவித்துப் போனான் அந்த ஆண்மகன்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!