September 2024

நாணலே நாணமேனடி – 21

அன்று, ஸ்டோருக்குள் நுழைந்த சற்று நேரத்துக்கெல்லாம் சேமிக்கப்படாத ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, சம்யுக்தாவுக்கு. பொதுவாக அவள் வேலை நேரத்தில் அலைபேசியுடன் சரசம் புரியும் ரகத்தை சேர்ந்தவள் அல்ல. திருமணத்துக்கு முன்பு என்றால், பெரும்பாலும் துணிக்கடைக்குள் நுழையும் போதே அவளின் அலைபேசி சைலன்ட் மோடில் உறங்கிக் கொண்டிருக்கும். தான் அழைப்புக்கு பதில் கொடுக்கவில்லை என்றால், அடுத்த கணம் வீட்டிலிருந்து வித்யாவுக்கு அழைப்பு செல்லும் என்றபடியால் பயம், பதற்றம் எதுவுமில்லை. ஆனால் இப்போது அவ்வாறு அலட்சியமாக இருக்க […]

நாணலே நாணமேனடி – 21 Read More »

நாணலே நாணமேனடி – 20

காலச் சக்கரம் முன்னும் பின்னுமாக சுழன்று, யுக்தா-நந்தன் வாழ்வில் மூன்று மாதங்களை தன் சுழற்சிக்கு இரையாக்கிக் கொண்டிருந்தது. இடையில் ஒருநாள், முதல் மாத சம்பளத்தை மொத்தமாக கொண்டு வந்து யுக்தாவுக்கு நீட்டி, அவளின் மனம் குளிர்வித்த சாந்தனா, மறுநாள் விடியலில் அவினாஷின் குடும்பத்தினரை எந்தவொரு முன் அறிவித்தல், ஏற்பாடும் இன்றி வீட்டுக்கு வரவழைத்து அவளுக்கு நெஞ்சுவலியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தாள். முன்னாளில், அவள் சம்பளத்தைக் கையில் பொத்தியதும் ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா! கண்களுக்குச் சொந்தமில்லை.’ என ஐயத்தில் மயங்கிய

நாணலே நாணமேனடி – 20 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

நாணலே நாணமேனடி – 19

சம்யுக்தா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது. திருமணத்துக்கு உடுத்திக் கொண்ட அதே சந்தன நிற பட்டுச் சேலையில், தலை நிறைய மல்லிப்பூ சூடி இருந்தவளை விட்டு வேட்டி சட்டையில் இருந்தவனுக்கு பார்வையை அகற்றவே முடியவில்லை. திருமணமன்றும் இதையே தான் கட்டி இருந்தாள். சொல்லப் போனால் சகல ஒப்பனைகளுடன், கைகளில் மருதாணி மணம் வீச, கூந்தல் அலங்காரங்களுக்குச் சற்றும் குறைவின்றி இதை விட ஜகஜோதியாய் ஜொலித்தாள். ஆனால் அன்றெல்லாம் அவளைப் பார்த்து மயங்கி நிற்கவில்லை யதுநந்தன். ஏதோ

நாணலே நாணமேனடி – 19 Read More »

நாணலே நாணமேனடி – 18

வெளிர் நிற ஆடையில், லட்சக்கணக்கான ஜோடிக் கண்களுக்கு விருந்தூட்டியபடி வானவெளியில் உலா வந்து கொண்டிருந்தவளை, மார்புக்கு குறுக்காகக் கைகளை கட்டியபடி பார்த்திருந்தாள் சம்யுக்தா. ஊர் உறங்கிப் போயிருக்கும் காரிருள் சூழ்ந்த இந்நிஷப்த ராத்திரிப் பொழுதில், சகல ஒப்பனைகளுடன் இந்த நிலவு யாருக்காகத் தான் காத்திருக்கிறாளோ! ஒருவேளை, இந்த பூலோகத்துப் பூவை போன்றே அகம் திருடியவன் மனை திரும்பும் வரை தனிமையில் வானவீதியிலே நடை பயின்று கொண்டிருக்கிறாளோ, என்னவோ?! தெரியவில்லை. உடலை தொட்டுச் சென்ற கூதல் காற்று சில்லென்ற

நாணலே நாணமேனடி – 18 Read More »

நாணலே நாணமேனடி – 17

யாவரும் உறங்கிப் போன அந்த ஆளரவமற்ற இராப் பொழுதில், தன்னந்தனியே மறுகி தவித்து மதியாளிடம் ‘நிம்மதி’யைத் தேடுவதாக யுக்தா சொன்னதிலிருந்து நந்தனுக்கு மனமே சரியில்லை. புகுந்த வீட்டில் கூட சந்தோசமாக வாழ வழியின்றி, பிறந்த வீட்டைப் பற்றிய கவலையில் உழன்று கொண்டிருக்கும் யுக்தாவின் மனம் அவனுக்கு பிரமிப்பைக் கொடுத்தாலும், ‘ஆனா பாவம் இல்ல?’ என்ற இரக்கத்தையும் அவள் மீது தோற்றுவித்தது. அன்றிலிருந்து சரியாக மூன்றாவது நாள், யுக்தா துணிக்கடையிலிருந்து வீட்டுக்கு வரும் போது, கூடத்தில், சக்கர நாற்காலியில்

நாணலே நாணமேனடி – 17 Read More »

நாணலே நாணமேனடி – 16

அன்றிரவு வீட்டுக்கு வந்ததும் நந்தனைப் பிடித்துக் கொண்டாள் சம்யுக்தா. “நீங்க எதுக்கு சந்தாவுக்கு மாமாவோட கம்பெனியை சஜஸ்ட் பண்ணீங்க?” என ஆரம்பித்தவளை கை நீட்டிப் பேச விடாமல் தடுத்தவன், “சொந்தத்துக்குள்ள அவ விரும்பும்படி வேலை பார்க்க கம்பெனிஸ் இருக்குறப்போ, சாந்தனா எதுக்கு வெளியே போய் தடுமாறி திரியனும்? என்கிட்ட பேசிட்டு இருக்கும் போது கம்பெனிஸ் பத்தி கேட்டா. நான் என்னவோ நார்மலா தான் சொன்னேன். அதுவுமில்லாம அது என் அப்பாவோடதுனு அவளுக்கு தெரியாது..” என்றான், அமைதியான குரலில்.

நாணலே நாணமேனடி – 16 Read More »

error: Content is protected !!