ஆதிசேஷன் வீட்டை விட்டு கிளம்பிய சில நிமிடங்களில் உள்ளே வந்தாள் வித்யா. வீட்டின் அலங்காரத்தை பார்த்தவளுக்கோ வியப்பே மேலிட்டது. அதில்,
“என்னடி..? பர்த்டே செலப்ரேஷன் எல்லாம் ரொம்ப கிரேன்டா முடிஞ்சுது போலருக்கு? காலைல இருந்து புலம்பி தள்ளுனியே இப்போ ஹேப்பியா?” என்றதும்,
“அப்போ உனக்கு ஏற்கனவே தெரியுமா? நான் நெனச்சேன்டி. என்னடா.. நான் வீட்டை பூட்டிட்டு தானே போனேன். ஆதி எப்படி இதையெல்லாம் ரெடி பண்ணினானு. எல்லாம் உன்னோட வேலை தானா?”
“ஆமாம். உனக்கு எதுதான் புரிஞ்சிருக்கு? சரி வா, சமையல் வேலையை பாப்போம்” என்றதும் சரி என்று சம்யுக்தாவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.
இருவருமாக சேர்ந்து சமைத்து முடித்து ஒன்றாக அமர்ந்து பேசியப்படியே சாப்பிட்டு முடித்தனர். பிறகு அவரவர் அறையில் சென்று படுத்து விட, ஆதிசேஷனிடமிருந்து அழைப்பு வந்தது.
ஆதிதான் அழைக்கிறான் என்றதும் அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்,
“சொல்லு ஆதி..” என்றாள்.
“ஹேய்.. அதுக்குள்ள தூங்கிட்டியாடி? ஒரு குட் நைட் கூட சொல்லல.”
“இல்லடா.. இன்னும் தூங்கல. ஆனா தூக்கம் வர மாதிரி இருக்கு. சரி நீ சொல்லு பத்திரமா வீடு போய் சேர்ந்துட்டியா?”
“ம்ம்ம்.. வந்துட்டேன்.”
என்று கூறி கொண்டிருக்கும்போதே சம்யுக்தாவின் அன்னை அனிதா அழைத்திருந்தார்.
“டேய்.. நீ கட் பண்ணு, கட் பண்ணு, அம்மா கால் பண்றாங்க.
“இப்போதானடி பேச ஆரம்பிச்சோம்.. அதுக்குள்ள கட் பண்ணனுமா?” என்றான் கொஞ்சலும் சலிப்புமாய்.
“ப்ளீஸ் ஆதி.. புரிஞ்சுக்கோ..”
“சரி. ஆனா பேசி முடிச்சுட்டு மறக்காம கால் பண்ணு. நான் வெயிட் பண்ணுவேன்.”
“சரி.. சரி.. முதல்ல நீ ஃபோன வை.” என்றவள் உடனே அவளது அன்னை அனிதாவின் அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ.. சொல்லுங்க மா..”
“இந்த டைம்ல யார்கிட்ட பேசிட்டு இருக்க? இன்னும் தூங்கலையா நீ?”
“இல்லமா ஃப்ரெண்ட் கிட்டதான் பேசிட்டு இருந்தேன்.” எனும்போதே அன்னையை ஏமாற்றுக்கிறோமோ என்று குற்ற உணர்வாக இருந்தது சம்யுக்தாவுக்கு.
“சரி, ரொம்ப நேரம் பேசிட்டு இருக்காம சீக்கிரம் தூங்க பாரு” என்றவரது குரலில் அக்கறையும், கண்டிப்பும் சேர்ந்தே இருந்தது.
“சரி மா.”
“சம்யூ.. ஒரு நல்ல வரன் வந்திருக்கு. இப்போதான் உன் சித்தப்பா மாப்பிள்ளையோட ஃபோட்டோவும் டீடெயில்ஸ்சும் அனுப்பினாரு.
என்றதும் சம்யுக்தாவுக்கோ பதற்றம் அதிகரித்தது. அதில் கைகளை பிசைந்தப்படி அவள் அமைதியாகவே இருக்க, அவள் அன்னையோ,
“சம்யூ.. நான் பேசுறது கேக்குதா? இல்லையா?”
“கே.. கேக்குது மா.”
“ம்ம்ம்.. டீடெயில்ஸ் எல்லாம் அனுப்புறேன். பார்த்துட்டு நல்ல முடிவா சொல்லு.”
“சரி மா..” என்றவளுக்கோ அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆகிறதே என்று உள்ளுக்குள் பயப்பந்து உருள துவங்கியது.
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி திருமணத்தை தள்ளி வைக்கிறாள். ‘ஆனால் இந்த முறை என்ன சொல்வது? புதிதாக என்ன காரணத்தை தேடுவது?’
என்று சிந்தித்தாலே தலை வெடிப்பது போல் ஆகிறது சம்யுக்தாவிற்கு. அதே சிந்தனையில் அவளிருக்க,
“சரி சம்யூ.. நான் காலைல கால் பண்றேன். நீ ரொம்ப நேரம் ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டு இருக்காம சீக்கிரம் தூங்குற வழிய பாரு.” என்றவர் அழைப்பை துண்டித்தார்.
சம்யூவின் தந்தை விஜய் ஆனந்த் அனிதாவிடம், “ஏன் எப்போ பாரு பிள்ளையை மிரட்டிட்டே இருக்க? கொஞ்சம் பொறுமையா பேச கூடாதா?” என்றார்.
“எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம். வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல அவளை பெங்களூர் அனுப்பி வச்சீங்க.
இப்போ யாரை மாப்பிள்ளையா காமிச்சாலும் வேண்டாம் வேண்டாம்னு சொல்றா. இதுவே அவ இங்க இருந்திருந்தா, இந்நேரம் அவளை எப்படியும் சம்மதிக்க வச்சிருப்பேன்”
“இது கல்யாண விஷயம் ஹனி.. கொஞ்சம் பொறுமையாதான் இருக்கணும். அவசர பட கூடாது. நாளைக்கு ஏதாவது பிரச்சனைனா நம்ம பிள்ள வாழ்க்கை தானே கேள்வி குறியாகும்? அவளுக்கும் பிடிக்கணும்ல?”
“இப்படியே ஏதாவது சொல்லி சொல்லி என் வாயை அடைச்சுடுங்க.” என்று சத்தமாக கூறியவர்,
“ஹனியாம் ஹனி.. தோளுக்கு மேல வளர்ந்த பையன் பக்கத்துல இருக்கானேன்னு ஏதாவது விவஸ்தத்தை இருக்கா இந்த மனுஷனுக்கு?” என்று முனுமுனுத்து கொண்டே சமையலறையை சுத்தம் செய்ய கிளம்பிவிட்டார்.
சம்யூவின் அண்ணன் ராகவன் இது எதையுமே கண்டு கொள்ளாமல் ஹால் சோஃபாவில் அமர்ந்தப்படி டிவி பார்த்து கொண்டிருந்தான். சம்யுக்தா திருமணத்திற்கு சம்மதிப்பாள் என்று அவனுக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.
இந்த முறையும் ஏதாவது காரணத்தை சொல்லி தட்டி கழிக்கத்தான் போகிறாள் என்று எண்ணியவனுக்கு உள்ளுக்குள் ‘தன் தங்கை யாரையாவது காதலிக்கிறாளா?’ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
‘ஆனால் அப்படி எதுவும் இருந்திருந்தால் அவள் நிச்சயம் வீட்டில் சொல்லி இருப்பாளே? நாங்கள் யாரும் காதலுக்கு எதிரி இல்லையே?’ என்று நினைக்கும்போது தான் சற்று குழம்பி போவான்.
‘சரி எதுவா இருந்தாலும் அவளே சொல்லட்டும்’ என்று காத்திருக்கிறான் ராகவன்.
சம்யுக்தாவோ அழைப்பை துண்டித்தவள் அடுத்த நொடி ஆதிக்கு அழைத்திருந்தாள்.
“ஹலோ..” என்று அவன் காதலோடு அழைக்க,
“இதோ பாரு ஆதி. இன்னைக்கு அம்மா மறுபடியும் கலயாணத்த பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. நீ இப்படியே இருந்தா நான் என்ன செய்ய முடியும்?” என்றாள் சற்று கோபமாக.
“நான் நம்ம இரண்டு பேர் நல்லதுக்காகதானே சொல்றேன் சம்யூ. கொஞ்சம் புரிஞ்சுக்க பாரு.”
“நீ முதல்ல என் நிலைமையை புரிஞ்சுக்கோ ஆதி.”
“சரி சம்யூ. எனக்கு ஒரு ஒன் மந்த் மட்டும் டைம் கொடு. கண்டிப்பா அதுக்குள்ள ப்ரோமோஷன் பத்தி சொல்லிடுவாங்க. அப்படி ஒரு வேலை சொல்லலைனா நீ சொல்றதை நான் கேக்குறேன். என்ன ஓகேவா?”
அதில் சற்றே சிந்தித்தவள், “சரி. சரியா ஒரு மாசம்தான் உனக்கு டைம். அதுக்குள்ள ஒருவேளை நீ நெனச்சது நடக்கலைனா இப்போ சொன்ன வார்த்தையை காப்பாத்தணும்.”
“சரி செல்லமே.. இப்போ கொஞ்சம் கோபத்தை குறைங்க. என்றவன் காதலாட நீண்ட நேரம் அவளுடன் உரையாடி விட்டே உறங்கி போனான்.
அடுத்த நாள் காலை பொழுது சம்யுக்தாவும், வித்யாவும் வீட்டு வேலைகளை சேர்ந்தே முடித்தவர்கள் சேர்ந்தே அலுவலகத்திற்கும் சென்று சேர்ந்தனர்.
ஆதிசேஷனும் சரியாக அலுவலகத்திற்கு வந்திருக்க, மற்றவர்கள் முன்னிலையில் ஆதியும், சம்யூவும் யாரோ போலதான் நடந்து கொண்டனர். வேலை விடயத்தில் ஏதேனும் பேச வேண்டிய அவசியம் வந்தால் மட்டும் இருவரும் பேசி கொள்வர்.
மற்றபடி பார்வை பரிமாற்றம் மட்டுமே. அதுவும் யாரேனும் தங்களை கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்த பிறகே நடக்கும்.
அனைவரும் அவரவர் இருக்கையில் அர்ந்து கொள்ள, வழக்கம் போல் வேலை தொடங்கியது.
அலுவலகத்தின் முதலாளி அனைவரையும் ஒருமுறை நோட்டம் விட்டப்படி உள்ளே நுழைய, ஒவ்வொருவரும் அவருக்கு தங்களுடைய வணக்கத்தை தெரிவித்தனர்.
பதில் வணக்கத்தை தெரிவித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தவர் ஆதிசேஷனை பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது.
“மிஸ்டர் ஆதி. கம் டு மை கேபின்” என்று அவனை பார்த்து கூறியவர், அவரது அறைக்குள் நுழைந்து கொள்ள, ஆதிசேஷன் தன்னுடைய மடி கணினியை மூடி வைத்துவிட்டு முதலாளியின் அறை கதவின் முன்பு நின்று,
மே ஐ கம் இன் சார்.. என்றான்.
“வாங்க ஆதி..” என்றவர் அவன் உள்ளே நுழைந்ததும்,
“டேக் யுவர் சீட் என்றார்” இவனுக்கான இருக்கையை காட்டியப்படி.
அவனும் வந்து அமர்ந்தவன், “சொல்லுங்க சார்..” என்றான்.
அதை கேட்ட ஆதிசேஷனின் விழிகள் மின்னியது. இதற்காகத்தானே இவனும் காத்து கிடந்தான். அவனது ஆர்வம் அவன் கண்களிலேயே தெரிந்திட,
ஆனால் என்ன பொசிஷன்னு இப்போ சொல்ல போறது இல்லை. இன்னும் பத்து நாளைல அதைப்பத்தி உங்ககிட்ட சொல்லிடுவேன். சம்மதமா இல்லையானு நீங்கதான் சொல்லணும்” என்றதும் சற்றே குழப்பமடைந்தவன்,
‘ஒரு வேலை ப்ரோமோஷன் கொடுத்து டெல்லில இருக்குற அவர் கம்பெனிக்கு என்னை மாத்த போறாரோ?’ அப்படீன்னா சம்யுக்தாவும் நானும் கல்யாணம் பண்ணிட்டு டெல்லிக்குதான் போகணும் போலயே. என்று அதற்குள் அவன் மனம் கற்பனை வானில் பறக்க துவங்கியது.
“மிஸ்டர் ஆதி? என்ன யோசிக்கிறீங்க? உங்க ப்ரோமோஷன் பத்தி இன்னும் பத்து நாளைல உங்களுக்கே தெரிஞ்சுடும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
ஆனா அதுக்கு நீங்க நூறு சதவிகிதம் பொருத்தமான ஆளு. அதை மட்டும் நான் உறுதியா சொல்லுவேன்” என்றவர் முகத்தில் கர்வ புன்னகை மிளிர்ந்தது.
ஆதிசேஷனின் மீது அவருக்கு எப்போதும் ஒரு நல்ல எண்ணம் உண்டு. இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு புத்திசாலித்தனமான ஒரு ஆள் தன்னிடம் வேலை பார்ப்பதில் அவருக்கு மகிழ்ச்சியே.
அவன் வேறு எந்த அலுவலகத்திற்கும் மாறி விட கூடாது, எப்போதும் தன்னுடைய அலுவலகத்திலேயே இருக்க வேண்டும் என்ற அளவிலேயே அவனுடைய பதவி உயர்வை பற்றி சிந்தித்து வைத்திருந்தார் அவர்.
ஆதிக்கும் இதில் அளவற்ற மகிழ்ச்சி. எப்படியும் தன் திறமைக்கு ஏற்ற பதவியையே முதலாளி வழங்குவார் என்ற அளவு கடந்த நம்பிக்கை அவனிடம் இருந்தது.
“தேங்க் யூ சார்.. தேங்க் யூ சோ மச்.. எப்போதுமே நீங்க என்மேல வச்ச நம்பிக்கையை நான் காபாத்துவேன்.”
“சரிங்க ஆதி. நீங்க கிளம்பலாம். இதை சொல்லத்தான் வர சொன்னேன்.” என்றதும்
“சரிங்க சார்.” என்றவன் சம்யூவை எண்ணியப்படியே புன்னகையோடு அறையை விட்டு வெளியேறினான்.
பெங்களூருவின் ஒரு பிரபலமான ஐ.டி அலுவகத்தில், மாலை ஆறு மணி அளவில் முகத்தில் சோகமும், கோபமும், ஏமாற்றமுமாக தன்னுடைய மடி கணினியை மூடி வைத்தாள் சம்யுக்தா.
இருபத்தி ஐந்து வயது அழகிய பதுமை அவள். அரிதாரம் பூசாமலே அழகாய் மின்னும் கலங்கமில்லாத சருமம். நிலவின் ஒளியை தனதாக்கி கொண்ட சருமத்திற்கு அவள் எந்த ஒப்பனையும் செய்து கொள்வதில்லை.
மயில் இறகை போன்ற நெருக்கமான இமை முடிகளை கொண்ட விழிகளுக்கு மட்டும் அஞ்சனம் தீட்டி கொள்வது அவள் வழக்கம். அஞ்சனத்தை தீட்டி முடித்து ஒப்பிட்டு பார்க்கையில் அழகிய ஓவியமும் அவள் விழி அழகின் முன்பு தோற்று போகும்.
மனதில் நினைப்பதை மறைக்க தெரியாமல் கண்ணாடியாய் காட்டிடும் முகம் அவளுடையது. அப்படி அவள் மனதில் உள்ள வாட்டத்தை முகம் காட்டிட, காதலன் மீதுள்ள அளவு கடந்த கோபத்தில் அவனை காலையிலிருந்தே திட்டி தீர்த்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.
தனியாக புலம்பி கொண்டிருப்பவளை பார்த்த அவளது தோழி வித்யாவோ, இவளுக்கு சமாதானம் கூறியே சோர்ந்து போனாள். எங்கே.. அவள் கேட்டால் தானே?
“வித்யா.. இன்னைக்கு மட்டும் அவன் தனியா என் கைல சிக்கட்டும். அப்புறம் இருக்கு அவனுக்கு.” என்றாள் மாறாத கோபத்துடன்.
“பாவம் டி. ஏதோ வேலை டென்ஷன்ல மறந்திருப்பாரு.”
“உடனே அவனுக்கு சப்போர்ட் பண்ண வந்துடுவியே. நீ எனக்கு ஃப்ரெண்டா இல்லை அவனுக்கு ஃப்ரெண்டாடி?” என்று சிறு பிள்ளை போல் கோபித்து கொள்பவளிடம் என்னதான் சொல்வது?
“சரி.. நான் வீட்டுக்கு கிளம்பறேன். நீ வரியா இல்லையா?”
“எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு. நீ கிளம்பு. நான் வர லேட் ஆகும்” என்றதும்,
“சரி, சீக்கிரம் வந்துடு” என்றவள் அங்கிருந்து கிளம்பி சென்றாள்.
அதே தருணம்,
“என்னடா காலைல இருந்து உன்னோட ஆளு உன்னை திரும்பி கூட பார்க்காம இருக்கா? இந்நேரத்துக்கு இரண்டு பேரும் பார்வையாலேயே டூயட் பாடி இருப்பீங்களே..?” என்றான் பிரதீப்.
“அதுவா.. இன்னைக்கு அவளோட பர்த்டே. மேடம் நான் மறந்துட்டதா நெனச்சுட்டு இருக்காங்க. அதான் கோபம் என்றான் ஆதிசேஷன்.
எதையும் விரைவாகவே கற்றுக்கொள்ளும் புத்தி கூர்மை உடையவன். தலைமை பண்பும், காண்போரை ஈர்க்கும்படியான அழகும் உடைய இருபத்தி எட்டு வயதான ஆண்மகன்.
சம்யுக்தாவிற்கு தன் மீதான கோபத்தினை ஆதிசேஷன் தன் நன்பனிடன் விளக்கி கொண்டிருக்க,
“ஓ.. ஓ ஓ ஓ.. அதான் விஷயமா. அப்படீனா நீ மறக்கல. அப்புறம் என்ன? போய் விஷ் பண்ண வேண்டியது தானே?”
“அதெல்லாம் முடியாது. ஒரு சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணிருக்கேன். கொஞ்ச நேரம் அவ வெயிட் பண்ணட்டும்.”
“சரி டா. அவளை ரொம்ப டென்ஷன் பண்ணாம சீக்கிரம் சர்ப்ரைச ஓபன் பண்ணிடு.”
“வேலை முடிஞ்சுதுல. வெளில போனதும் அதுதான் முதல் வேலை.” என்றவன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து வெளியே சென்றான்.
“சம்யுக்தா தன்னுடைய ஸ்கூட்டரை எடுத்து கொண்டு தான் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி செல்ல, தன்னுடைய பைக்கில் அவளை பின்தொடர்ந்தான் ஆதி.
அவன் பின் தொடர்வதை தெரிந்தும் தெரியாதது போல் வண்டியை ஓட்டி கொண்டு முப்பது நிமிடங்களில் தன்னுடைய வீட்டை அடைந்தவள் எந்த திசையிலும் தன்னுடைய பார்வையை திருப்பாமல் தன் வீட்டை நோக்கி அதே கோபத்துடன் நடந்து சென்றாள்.
சம்யுக்தாவின் குடும்பம் தமிழ்நாட்டில் திருச்சியை சேர்ந்தது. வேலை காரணமாக பெங்களூரில் தன் தோழி, வித்யாவுடன் சேர்ந்து ஒரு வீட்டினை வாடைகைக்கு எடுத்து தங்கி இருக்கிறாள்.
ஆதிசேஷனுக்கும் தமிழ்நாடுதான் சொந்த மாநிலம். ஆனால் பெங்களூரில் தன்னுடைய தாய் தந்தையருடன் செட்டில் ஆகிவிட்டான்.
சம்யுக்தாவோ கோபத்துடன் தான் தங்கி இருக்கும் அறை கதவின் பூட்டினை திறந்து கொண்டு உள்ளே நுழைய, வீடு வண்ண வண்ண மின்விளக்குகளால் பிரகாசித்தது.
தரையின் நடைபாதையில் சிவப்பு வண்ண ரோஜா இதழ்கள் பரப்பப்பட்டு மற்றைய இடங்களில் இதய வடிவிலான சிவப்பு வண்ண பலூன்களால் நிரப்பப்பட்டு இருந்தது.
ஹால் சுவற்றில் எல்லாம் அவளுக்கு பிடித்த பூக்கள் கொண்டு அலங்கரிக்கபட்டிருக்க, அறையின் நடுவே ஒரு கண்ணாடி மேஜையின் மீது சிறிய கேக் ஒன்று தயார் நிலையில் இருந்தது.
இவை அனைத்தின் மீதும் சம்யுக்தாவின் பார்வை ஒரு முறை படிந்து மீள, அவளின் காதருகே வந்து “ஹேப்பி பர்த்டே சம்யூ..” என்றான் மெல்லிய குரலில்.
கலங்கிய விழிகளுடன் அவன் புறம் திரும்பியவள்,
“ஏன்டா இப்படி பண்ணின? நீ மறந்துட்டேன்னு நெனச்சு நான் காலைல இருந்து எவ்வளவு டென்ஷனா இருந்தேன் தெரியுமா?” என்றவள் அவன் மார்மீதே செல்ல அடிகளை கொடுக்க, அதை புன்னகையுடனே வாங்கி கொண்டவன், அதே மாறாத புன்னகையுடன்,
“அது எப்படிடி மறப்பேன்? உள்ள வா. உனக்காக ஒரு சார்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு” என்றான்.
“அதான் இவ்வளவும் பண்ணி வச்சிருக்கியே. இதுவே பெரிய சர்ப்ரைஸ்தான். இன்னும் என்ன?”
“நீ முதல்ல உள்ள வா சம்யூ..” என்றதும்
“சரி” என்று அவன் பின்னாலேயே செல்ல, அவளுடைய அறை கதவை திறந்ததும் அவன் ஒரு ரிமோட் பட்டனை அழுத்த, அதில் அவர்கள் முதல் சந்திப்பிலிருந்து நேற்றைய தினம் வரை அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் அழகான காட்சியாக விரிந்தது.
அவளுடைய கோபம், அழுகை, சிரிப்பு என அனைத்தையும் அழகாக படம் பிடித்து வைத்திருந்தவன், தன்னுடன் சேர்ந்து இருந்த அழகிய தருணங்களையுவும் படமாக்கி அதில் இணைத்திருந்தான்.
முகம் கொள்ளா புன்னகையுடன் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்து கொண்டிருந்தவள், மகிழ்ச்சி மிகுதியில் அவனை அணைத்திருந்தாள்.
“தேங்க் யூ சோ மச் ஆதி.. ஐ லவ் யூ டா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள்.
“ஐ லவ் யூ சம்யூ.. உன்னோட சந்தோசம்தான் எனக்கு முக்கியம்” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
கடந்த இரண்டு வருடமாக ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் தங்களுடைய நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. ஆதிசேஷன்தான் தற்போதைக்கு யாரிடம் வெளிப்படுத்த வேண்டாம் என கூறியிருந்தான். தேவையற்ற வதந்திகள் பரவும் என்பது அவனது எண்ணம்.
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒருவர் இன்னொருவரை விட்டுக்கொடுத்ததே இல்லை. இருவருமே நல்ல வேலையில், நல்ல ஊதியத்தில் பணியாற்றுகிறார்கள். வேலையில் அடுத்த நிலையை அடைந்ததும் திருமணம் செய்து கொள்வதாக முடிவும் எடுத்திருந்தனர்.
சம்யுதாவின் மனம் முழுவதும் நிறைந்து இருந்தான் ஆதிசேஷன். இருவரின் மனதிலும் அத்தனை காதல்.
ஆதிசேஷனுக்கும் சம்யுக்தாவே உலகம். எப்போதும் அவளுடைய விருப்பங்களுக்கே முன்னுரிமை கொடுப்பவன்.
இருவருமாக சேர்ந்து கேக் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் மாற்றி ஊட்டி விட்டு, மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாட, ஆதி தன் பாக்கெட்டிலிருந்து சிறிய அடர் சிவப்பு வண்ண பெட்டியை வெளியே எடுத்தவன் அதிலிருந்து ஒரு தங்க மோதிரத்தை எடுத்து அவள் முன்பு ஒற்றை காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்து,
“நோ சாய்ஸ் மை கேர்ள்.. சே எஸ்..” என்றான் குறும்பு புன்னகையோடு.
சம்யுக்தாவின் விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்தன. சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க, “எஸ்” என்றவள், தன்னுடைய வெண்டை பிஞ்சு விரல்களை அவன் முன்பு நீட்ட, அதில் மோதிரத்தை அணிவித்தான் ஆதிசேஷன்.
எழுந்து நின்று மீண்டும் இன்னொரு சிறிய பெட்டியை தன்னுடைய பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தவன் அதிலிருந்த மோதிரத்தை எடுத்து அவளிடம் கொடுத்து, இதை எனக்கு போட்டு விடு சம்யூ என்றான்.
அவளும் அதை போலவே செய்ய, இதுதான் நம்ம எங்கேஜ்மெண்ட் ரிங். பத்திரமா வச்சுக்கோ. நம்ம இரண்டு பேர் வீட்டுலயும் சம்மதம் வாங்கி ஊரறிய இதை உன் கைல திரும்பவும் போட்டு விடணும் என்றான்.
முகம் முழுவதும் புன்னகையாக சரி என்றவள்,
“ஆதி.. நம்ம லவ் மேட்டரை வீட்ல சொல்லிடவா? இன்னைக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. எனக்கும் இப்போதான் கொஞ்சம் தைரியம் வந்திருக்கு.”
“கொஞ்சம் பொறு சம்யூ.. ஆஃபீஸ்ல எனக்கு ப்ரமோஷன் கிடைக்க போகுது. உனக்கே தெரியும்தானே. கிடைச்ச அடுத்த நாளே என்னுடைய அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து உங்க வீட்ல பொண்ணு கேக்குறேன்” என்றான்.
“ஹ்ம்ம்ம்.. சரி. எங்க வீட்லயும் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். எனக்கு கல்யாணம் பண்ணிட்டுதான் அவனுக்கு பண்ணனும்னு வீட்ல எல்லாரும் வெயிட் பண்றாங்க.
இப்போ நீ இருக்க வேலைக்கு என்னடா குறைச்சல்? இப்போவே வந்து எங்க வீட்ல பேச வேண்டியதுதானே.” என்றாள் ஒருவித எதிர்பார்போடு.
“கொஞ்சம் பொறு மா. கொஞ்ச நாள்தானே. நான் நல்ல பொசிஷன்ல இருக்கும்போது உங்க வீட்டுக்கு வந்து பேசினா இன்னும் கெத்தா இருக்கும்ல?”
“எங்க வீட்ல பேச மாட்டேன். நேரா உங்க வீட்டுக்கு வந்துடுவேன் பார்த்துக்கோ.”
“அம்மா தாயே.. அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதமா. அப்புறம் எங்க அம்மாவும் அப்பாவும் என்னை கொன்னே போட்டுடுவாங்க. நம்ம இரண்டு பேர் வீட்டுலையும் பேசி சம்மதம் வாங்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ அமைதியா இருந்தா மட்டும் போதும்.
உன்னுடைய அடுத்த பர்த்டேவ நம்ம இரண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபாதான் செலிப்ரேட் பண்ணுவோம். ஓகே..?”
“அதையும் பாக்கலாம்..”
“என்ன பார்க்கலாம். எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். இன்னைக்கு என்னோட பர்த்டே பேபி ஹேப்பியா இருக்கணும். அதுக்கென்ன செய்யணுமோ அதை பத்தி மட்டும் பேசுவோம்.”
“அதெல்லாம் நீ செஞ்ச வரைக்குமே நான் ரொம்ப ஹேப்பிதான். டைம் ஆகிடுச்சு. நீ வீட்டுக்கு கிளம்பு.”
“வெளில மழை வேற பெய்யுதுடி. கண்டிப்பா நான் போகணுமா? இங்கேயே இருந்துட்டு நாளைக்கு போகட்டுமா?”
“என்னது நாளைக்கா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மழை நின்னு ரொம்ப நேரம் ஆச்சு. நீ முதல்ல கிளம்பு.”
“கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லைடி உனக்கு.”
“அதெல்லாம் நிறையவே இருக்கு. நீ முதல்ல பத்திரமா உன்னோட வீட்டுக்கு போற வழிய பாரு” என்று அவனை வெளியே அனுப்பி வைக்க, மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்றான் ஆதிசேஷன்.