Priya Pandu
அத்தியாயம் – 6
மகேஸ்வரனாலும் நாகராஜிடம் எதையும் அதட்டி கேட்க முடியாது.. இப்போது அவர் ஐஜி வேறு… அதனால்தான் இந்த அமைதி.. அவருக்கு நன்றாக தெரியும் நளனை யார் இந்த விவாகத்திற்கு அழைத்து இருப்பார்கள் என்று யோசித்தவருக்கு நாகராஜன் தான் கண்ணுக்கு வந்து சென்றார்… ஏனென்றால் அந்த வீட்டில் அவர் ஒருவரே நளனை பற்றி அதிகம் யோசிப்பவர்.. ஏன் அவனிடம் பேசுபவர்கள் கூட அவர் ஒருவரே… ஆனால் மகேஸ்வரனுக்கு தன்னுடைய மாப்பிள்ளையை அதும் ஐஜி மாப்பிள்ளையை அதட்டி கேள்வி கேட்பது சரி என்று படவில்லை… அதனால் தான் அமைதியாக விட்டுவிட்டார்.
இங்கு தமையாவோ தன்னுடைய அறைக்கு சென்று புகுந்துக்கொண்டவள் தன்னுடைய முகத்தி போட்டிருக்கும் மேக்கப்களை களைந்து விட்டு தன் இலகுவான இரவு உடைக்கு மாறியவள் அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டத்தை வெறிக்க பார்த்தவளுக்கு இப்போது வரை இடை குறுகுறுவென்று தான் இருந்தது..
அதனை கண்டு யோசனையானவள்.. “எதுக்காக நம்மளுக்கு இங்க கூசிட்டே இருக்கு…” என்று தன்னுடைய இடையே வருடியவளுக்கோ அப்போதுதான் நளனின் ஞாபகமே அவளுக்கு வந்தது.. நளன் நியாபகம் வந்த வேகத்திற்கு அவள் உடல் ஜிவ்வென்று சிலிர்க்க.. அவள் சதைப்பற்றான கீழ் உதடுகளோ அவளின் வெண்மையான பால்பற்களிடையே மாட்டிக்கொள்ள, அவள் முகமோ அவளுக்கு மிகவும் பிடித்த ரோஸ்மில்க் போல சிவந்து போனது.
“அட ஆமால்ல நம்ம மாமாஜி தானே நம்ம இடுப்ப தொட்டாரு.. அதனால தான் குறுகுறுன்னு இருக்கு போல…” என்று தன் இடையையே வருடிக் கொண்டே இருந்தவளுக்கு ஏனோ அவன் வருடியது இப்போது கூச்சமாக இருந்தது… “ஆஆ ஐயோ மாமாஜி நம்மள மொத மொதல்ல இன்னைக்கு தான் தொட்டு இருக்காரு…” என்று நினைத்தவளுக்கு மனம் குதுகலமாக இருந்தது..
“அட லூசே அவர பல வருஷத்துக்கு அப்புறம் இன்னிக்கி தான்டி பாக்குற… அவரும் இன்னிக்கி தான் பல வருஷத்துக்கு அப்புறம் உன்ன பாக்குறாரு.. இதுல மொத மொதலா தொட்டுருக்காறாம்…”என்று அவள் மனம் கேலி செய்ய…
“அட வாய மூடு வனக்குரங்கே…கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்தா நோக்கு பிடிக்காதே…”என்று தன் மனதை அதட்டியவளோ.. தன்னுடைய இடையை வருடியவாறே… “ஆமா இந்த மாமாஜிய கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம் போலையே என்ன செய்யலாம்…” என்று கன்னத்தில் கை வைத்து யோசித்துக் கொண்டிருக்க
அந்நேரம் பார்த்து அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது… “அய்யோ நானே காலங்காத்தால எழுந்ததுல டயர்டா இருந்தா… எந்த கடங்காரன் கூப்டுறான்னு தெரிலையே…”என்றவள் போனை எடுத்தவள் யார் என்று பார்க்க அதுவோ அவளுடைய உயிர் தோழன் சலீம் என்று காட்ட…
“அட பாய் இவன் எதுக்கு இப்ப கால் பண்றானோ…” என்று யோசனையுடன் போனை எடுத்து காதில் வைக்க…
“ம்ம் என்னடி மாமி கல்யாணம் பேஷா முடிஞ்சிருச்சா…” என்று கேட்க
“சொல்லுடா பாய்…அதெல்லாம் நன்னாவே முடிஞ்சிருச்சு… ஆமா நீ ஏண்டா வரல..” என்று கேட்க
“கேடி மாமி..நான்தான் சொன்னேனே எங்க அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கேன்னு…” என்று கூற
அதில் நாக்கை கடித்துக்கொண்டவளோ… “அட ஆமால்ல நான் மறதி கேஸ்ஸுன்னு நோக்கு தெரியும்ன்னோ… மறந்து போயிட்டேன் டா நாளைக்கு அம்மாவ பாக்குறதுக்கு ஹாஸ்பிடல் வாரேன் சரியா…” என்று கூற
“அட மாமி அதெல்லாம் ஒன்னும் வேணாம்… இப்ப தானே கல்யாணம் பண்ணி இருக்கீங்க… ரொம்ப பிசியா இருப்ப நீ வீட்டை பாரு அப்புறம் கூட அம்மாவ வீட்ல வந்து பார்த்துக்கோ…” என்று கூற
அதுவும் அவளுக்கு சரியாகவே பட்டது.. நாளை என்ன என்ன வேலைகளை தன் தாயாரும், தந்தையும் வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை.. இந்த லட்சணத்தில் தான் பாட்டிற்கு ஏதோ ப்ளானை போடுவது சரியாக படவில்லை…
“சரி நேக்கு தெரியும்…“என்றவள் “ஆமா இப்ப அம்மா எப்டி டா இருக்காங்க… ஆல் குட் தானே…” என்று கேட்க
“ம்ம் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நல்லா இருக்காங்க… ஹெல்த் பார்த்துக்க சொன்னா சுத்தமா பாத்துக்குறது இல்ல… பின்ன உடம்பு முடியாம போகாம என்ன பண்ணும்…” என்றவனோ…
“ஆமா அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே…. கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சில்ல…” என்றவாறே கேட்க
“ம்ம் அதெல்லாம் நன்னபடியா முடிஞ்சிருச்சு… இதுல என்ன சந்தோஷம்னா என் அக்கா அவ மாமியார் வீட்டுக்கு ஓடிட்டா…இனிமே நான் இங்க தனியா சந்தோஷமா இருப்பேன் …”என்று கூற
அவள் குணம் தெரிந்தவனாயிற்றே அவள் நண்பன்… ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட பத்து வருட ப்ரண்ஷிப் இருவரதும்… கிட்டதட்ட இருவரின் நட்பும் அவர்களின் ஆறாம் வகுப்பில் இருந்து ஆரம்பித்தது.
சலீம் தன்னுடைய ஐந்தாம் வகுப்பு வரை தன் தந்தையுடன் சவுதியில் படித்தான். அதன் பின் அவன் அன்னை அவனை இந்தியாவிற்கு கூட்டி வந்துவிட.. அவனோ தமையா படித்த பள்ளியில் தான் தன்னுடைய படிப்பை தொடங்கினான். அவனுக்கு கொஞ்சம் தமிழ் குளறுபடிதான். அப்போதெல்லாம் தமையா தான் அவனுக்கு உதவி செய்வாள்.. அப்போது ஆரம்பித்தது அதன் பின் இப்போது இருவரும் சேர்ந்து தான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் படிக்கின்றனர்.
இதிலும் இருவருக்குமே பொருத்தம் தான்.. சலீமிற்கும் சமையல்கலையில் நல்ல ஆர்வம்.. அதே போல தமையாவிற்கும் சிறுவயதில் இருந்து அமிர்தம் ஹோட்டலை பார்த்தாலே தானும் அது போல சமையல்கலையில் சேர வேண்டும் என்ற விருப்பத்துடனே சேர்ந்தாள்.அவளின் ஆசையை கேட்ட மகேஸ்வரனுக்கோ அவ்வளவு சந்தோஷம்.. அவரின் செல்ல பேத்தி அவள் அவளாக எதை கேட்டாலும் படிக்க வைத்திருப்பார் தான்… ஆனால் அவரின் குடும்ப தொழிலை பற்றியே படிக்க போவதாக கூற அவருக்கோ இரட்டை சந்தோஷம் தான்.
“தாராளமா செல்லம்… போய் படி.. படிச்சி பெரிய செஃப் ஆகி நம்ம ஹோட்டல நீதான் பாத்துக்கனும்..”என்று மலர்ந்த முகத்துடன் கூற… அவளோ தன் தாத்தனை கட்டிக்கொண்டாள்.
“ஏன்டி நாங்க தான் இதுல மாட்டிக்கிட்டோம்னா நீயாச்சும் வேற எதாவது எடுத்து படிக்கலாம்ல… நீயும் இப்டி வந்து மாட்டிக்கிறியே…”என்று அபிநிதி கேட்க
அதற்கோ புன்னகைத்தவாறே… “நேக்கு இதான் மன்னி பிடிச்சிருக்கு… நேக்கு சாப்ட கொள்ள விருப்பம்னு நோக்கு தெரிம்னோ… அதான் இந்த ஃபீல்டுக்குள்ள போய்ட்டா நன்னா சாப்டலாம்ல்ல..”என்று மழலையாக கூற…
அதனை கேட்ட விபி, மகி, அபி,ஈஸ்வர் என்று அனைவரும் புன்னகைத்து கொண்டார்கள்… “அடிப்பாவி சாப்டவா இந்த ஃபீல்ட சூஸ் பண்ணுன…”என்று அபிநிதிதான் வாயில் கை வைக்க வேண்டியதாகி போனது.
அந்த வீட்டிலையே சித்ராவின் மகன் அஸ்வினுக்கு முன் சிறியவள் என்றாள் அது தமையா தான். அதனால் அவளின் சேட்டை அங்கு கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும்.. அபிநிதியை விட தமையா கிட்டதட்ட மூன்று வயது சிறியவள்.
“அட உன் அக்காவுக்கு தானேடி தமையா கல்யாணம் ஆகிருக்கு… அவங்கள தவிர இன்னும் ஒரு கும்பலே உங்க வீட்ல இருக்குமே… அப்புறம் எப்டி நீ சந்தோஷமா இருப்ப..”என்றான் சலீம்…
அதில் முகத்தை சுருக்கியவளா… “நன்னா இருக்கு பாய் உன்னோட கத… நானே ஏதோ சொல்லி மனச தேத்தின்டு இருக்கேன்… அது உனக்கு பொருக்கலையாக்கும்… ” என்று சோகமாக பேச…
தன் தோழியின் பேச்சினை கண்டுக்கொண்டவனோ… “என்னாச்சி உன் அந்த மாமாஜீய பாத்தியாக்கும்…”என்றான் சலீம்
அவனுக்கு தெரியாதது அவளிடத்தில் எதுவும் இல்லை… அனைத்தையும் இருவரும் பகிர்ந்துக்கொள்வார்கள். முதலில் அவளுக்கு வந்த லவ் லெட்டர் தொடங்கி அவனுக்கு வந்த ப்ரோஃபோஷல் வரை அனைத்தும் இருவருக்கும் அத்துப்படி…
“ம்ம்ம் ஆமா வந்தா.. அவருக்கு என்ன நன்னா பெருமாள் கணக்கா கம்பீரமா காட்சி தந்தார்… என்னை பாத்தார் ஆனா கண்டுக்க கூட இல்ல தெரியுமோ…ஆனா நான் தான் அவர பாத்து ஃப்ளாட் ஆகிட்டேன்…”என்றாள் தமையா…
அதனை கேட்ட சலீமோ… “உங்க ஆத்துல இருக்கறவா கொஞ்ச நஞ்சமா அவருக்கு பண்ணிருக்கா… அதுக்கலாம் அவா எல்லாம் அனுபவிக்க வேண்டாமோ… அதுக்கு அப்புறம் பாரு உங்கிட்ட நல்லா பேசுவார்…”என்றான் அவனும் அவளை போல அய்யர் பாஷை பேசிக்கொண்டே…
இவளோ “போன்ல பேசுறேன்னு மரியாதையா பேசுறேன்… இல்லைன்னு வை..” என்று அவள் ஆரம்பிக்க..
“ம்ம் சரி ரைட்டு விடு…”என்று சமாதானம் ஆகியவன்… “ம்ம் ஆமா இன்னைக்கு அந்த சரத் இருக்கானே அவன் போன் பண்ணான்டி… காலேஜ்ல நம்மளுக்கு தேர்ட் இயர் ஃபுல்லா இன்டர்ன்ஷிப் தானாம்… அதுக்கு ஏதாவது ரிஜிஸ்டர்ட் ரெஸ்டாரன்ட்ல தானே பண்ணனும்… அதுக்கு ஏதும் ஹோட்டல் பாத்துட்டீங்களான்னு கேட்டுட்டு இருந்தான்…” என்று சலீம் கூற
“அட ஆமாண்டா நான் கூட தான் அதே யோசனைலயே இருக்கேன்…” என்றவளை இடைமறித்தவனாக…
“ஆமா நாம ஏன் உங்க ஹோட்டல்லையே ஜாயின் பண்ண கூடாது… அங்கையே சைனிஸ், இட்டாலியன்னு நிறைய பண்றாங்களே…”என்று சலீம் ஐடியா குடுக்க…
அதில் முகம் சூடாகியவள்…“அடேய் பாய்… உன்ன வெளுக்க போறேன்ட்டா… எங்க ஹோட்டல்ல ஜாயின் பண்ண நான் ஏன்டா உங்கிட்ட ஐடியா கேட்க போறேன்… எங்க ஹோட்டல்லாம் வேணாம்,.. அது ட்ரெஸ்பாஸ் ஏரியா தொட்டம்ன்னு வையி கரென்ட் ஷாக் தான்… தாத்தா வேற நொய்ய நொய்யன்னு உயிர வாங்கிடுவாரு… அது செட் ஆகாது…நீ பேசாம ஹோட்டல் ஏதாவது கிடைக்குமான்னு பாரேன்..” என்று அந்த வேலையை சலீம் தலையில் கட்ட பார்க்க…
“அத மட்டும் ஏன் என் தலையில கட்டுற… பேசாம நீயே இடத்த கண்டுபிடி நானும் உன் கூடவே ஒட்டிப்பேன்…” என்று சலீம் நக்கலாக கூற…
“ஆஆ நீ சரியான ஒட்டுண்ணி பாய்ன்னு தெரியாம சொல்லிட்டேன்டா…” என்றவளோ… “சரி நா பாக்குறேன்… நாளைக்கி நாம காலேஜ்ல மீட் பண்ணுவோம்…”என்றவளோ அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தவளுக்கு அப்போதுதான் அவள் மூளையில் ஒரு எண்ணம் உதயமாகியது…
“ஐ மாமாஜி உங்கள கரெக்ட் பண்றதுக்கு சரியான ஒரு வழி கிடைச்சிருக்கு… எனக்கு இன்டர்ன் பண்ணனும் வழி கிடச்சிடுச்சி…”என்று குதுக்கலித்தவளோ அவனை மயக்க வழி கிடைத்ததை எண்ணி மனம் இறக்கை விரித்து பறந்தது.. அப்படியே அவனை நினைத்தவாறு இருந்தவளுக்கு அவனின் மூச்சுக்காற்று இன்னும் தன் கழுத்தடியில் படுவது போல ஒரு எண்ணம் தோன்ற ஏதோ இம்சையான உணர்வை உணர்த்தவாறே அப்படியே கண்களை மூடி படுத்திருந்தவள்… அப்படியே அவளையும் அறியாமல் உறங்கிப் போனாள்…
இங்கு இவள் உறங்க அங்கோ ஒருவன் உறங்காமல் தன்னுடைய அருகில் இருக்கும் பால்கனி வழியாக நிலாவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்… இத்தனை வருடமாக தோன்றாத ஏதோ ஒரு இம்சையான உணர்வு அவனுக்கு தோன்ற… அந்த உணர்வும் அவனுக்கு பிடித்தே போனது…
“ம்ச் இதெல்லாம் அந்த ராபிட்டால வந்தது…” என்றவாறே தன்னுடைய கேசத்தை கோதிக்கொண்டவனோ அப்படியே தன் அறையில் இருக்கும் கட்டிலில் அப்படியே படுத்துக்கொண்டான்…
ஆனால் அவனுக்கு உறக்கம் தான் எட்டாக்கனி ஆகிப்போனது.. ஏனோ இன்று பருவக்காய்ச்சல் வந்தது போல மனம் அடித்துக்கொண்டது.. அவன் உடல் சிலிர்க்க… அவனின் கையோ ஏதோ மென்மையை உணர்த்தியவாறே குறுக்குறுத்தது…
“ம்ச் ஏன் எனக்கு இப்டிலாம் வித்தியாசமா தோணுது…” என்று யோசனை செய்தவாறே இருந்தவனுக்கு அது கண்டிப்பாக அவனுடைய ராபிட்டினால் தூண்டப்பட்ட உணர்வுகளால் தான் என்று ஆணித்தரமாக நம்பினான்.
“நோ நோ நளா… இந்த மாதிரி உணர்வுகளுக்கு எப்போதும் இடம் கொடுக்காத… ஏற்கனவே இது மாதிரியான உணர்வுகளால தான் உன் வாழ்க்கையே இப்டி மாறி போச்சி.. திரும்ப இதே தப்ப பண்ணாத… அதும் இல்லாம உங்கிட்ட எந்த உணர்வுகளும் இல்ல… எல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னால மரிச்சி போன உணர்வுகள் தான்…“என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவனோ தன் கண்களை போல தன் மனக்கதவுகளையும் இறுக்கமாக மூடிக்கொண்டான்.
(நீயடி….)
அத்தியாயம் – 5
வர்ஷி திருமணம் நல்லபடியாக முடிந்த பிறகும் கூட மகேந்திரனின் முகம் எரித்தனலாகவே தான் இருந்தது.. யாரிடமும் அவ்வளவாக பேசவில்லை. அப்படியே வாயை இறுக்க மூடிக்கொண்டு இருக்க.. ஆதிசங்கரன் தான் அவரிடம் போய் பேசினார்…
“ஏன்ப்பா இப்டி அமைதியா இருக்கேள்… உங்க ஆச பேத்திக்கு விவாகம் முடிஞ்சிட்டு ஆனா உங்க முகத்துல அதுக்கான சந்தோஷமே இல்லையேப்பா…”என்று கேட்க
“எப்டி ஆதி சந்தோசமா இருக்க சொல்ற… அதான் நான் வாழ்நாள் ஃபுல்லா யார பார்க்கவே கூடாதுன்னு நினைச்சின்டு இருந்தனோ அவனே எனக்கு முன்னாடி வந்து நிறுத்திட்டீங்களே.. அப்புறம் நான் எப்படி சந்தோசமா இருப்பேன்னு நோக்கு தெரிய வேணாம்…”என்று கோவமாக பேசியவர்… “ம்ச் இது என் ஆசை பேத்தியோட விவாகம்தான்.. நான் இல்லன்னல… ஆனா அதை கூட அனுபவிக்க முடியாத அளவுக்கு அந்த படுபாவி பய செஞ்சுன்டு போயிட்டானே.. காலம் ஃபுல்லா அவன் மூஞ்சிலேயே முழிக்க கூடாதுனு நான் நினைச்சுன்டு இருந்தேன்… ஆனா இப்படியான என் பேத்தி கல்யாணத்துக்கே வர வச்சு என் முகத்தில அவன முழிக்க வச்சிட்டீங்களே…” என்று ஆற்றாமையாகவும், எரிச்சலாகவும் கூறியவரின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம் பொங்கி வழிந்தது..
அதனைக் கேட்ட சிவசங்கரனோ “ஐயோ அப்பா நாங்க யாரும் அவன கூப்பிடலப்பா…”என்று சங்கடமாக கூற
“பின்ன வேறு யாருடா அவன கூப்ட்டா…” என்று வெறுப்பாக கேட்டவருக்கு கோவத்தில் இருமல் வந்து விட…
“லொக் லொக்…”என்று இருமியவாறெ இருந்தவரை அவ்வளவு நேரமாக பார்த்துக்கொண்டிருந்த தமையாவோ சட்டென்று தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு அவரிடம் ஓடிவந்தவள் அவரிடம் கொடுக்க… அவரோ வேகமாக தண்ணீரை அருந்தியவர் அப்போதும் அடங்காதவராக “அந்த ராசி இல்லாத பையல என்னோட கண்ணுல காட்டுனதுனால தான் என் முகம் எப்படி இருக்கு போதுமா…” என்றார்
அதனை கேட்ட தமையாவிற்கு தான் மனம் கேட்கவே இல்லை.. பின்னே அவளுக்கு மிகவும் பிடித்த அவளின் மாமாஜியை பார்த்து அப்படி கூறினால் கோவம் வராதா என்ன… “அய்யோ தாத்தா நீ கொஞ்சம் வாயை மூடுறியா… இன்னிக்கு அக்காவுக்கு விவாகம் அத நிம்மதியா அனுபவிக்காம ஏன் இப்டி இம்சை பண்ணிக்கிட்டு இருக்கேள்…” என்ற தமையா கத்த
அதனைக் கேட்ட மகேந்திரனோ கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டார்… ஏனென்றால் தமையாவின் மீது அவருக்கு கொள்ளை பிரியம்… மற்ற பேரன் பேத்திகளை விட தமையா ஒரு படி மேல்தான் அவருக்கு… ஏனென்றால் அவள் பிறந்த விதம் அப்படி… தமையா ஒன்றும் சாதாரணமாக பிறந்தவள் இல்லை…
தமையா எட்டு மாதம் அவள் தாய் சுபஸ்ரீயின் வயிற்றில் இருக்கும்போது.. ஒருநாள் மாடியில் துணி காய வைத்திருந்ததை எடுப்பதற்காக சென்ற சுபஸ்ரீ கால் தடுக்கி மாடியிலே விழுந்து விட அவரை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி சென்றவர்களுக்கு மனம் பயத்தில் வேகமாக அடித்துக்கொண்டது.
ஏனென்றால் சுபஸ்ரீயின் தலையில் பலமாக அடிபட்டு இருப்பதால் நிறைய ரெத்தம் போய்விட்டதென்றும் அவர் பிழைப்பது கடினம் என்றும் கூறிவிட்டனர்.. அதனால்தான் இந்த பயம்… வேக வேகமாக மகேஸ்வரன் தங்களுடைய குலதெய்வமான சிவனுக்கு வேண்டிக்கொண்டவர் “என் மகளுக்கும் அவ வயித்துல இருக்குற குழந்தைக்கும் எதுவும் ஆகக்கூடாது கடவுளே… எப்படியாச்சும் ரெண்டு உயிரையும் காப்பாத்தி கொடுத்துரு… ரெண்டு பேரையும் கண்ணு மணியா வச்சு நான் பாதுகாக்கிறேன்..” என்று அவர் வேண்டிக் கொள்ள
அதனை நிறைவேற்றுவது போல அடுத்த அரை மணி நேரத்தில் தமையாவும் நலமாகவே பிறந்துவிட்டாள்… அதேபோல சுபஸ்ரீக்கும் எந்த ஒரு ஆபத்தும் நேராமல் போக அன்றிலிருந்து சுபஸ்ரீயும் தமையாவும் அவருக்கு உயிராகி போனார்கள்… யார் என்ன சொன்னாலும் முரண்டு பிடிப்பவர் தமையாவோ அல்லது சுபஸ்ரீயோ ஏதாவது கூறினால் அதனை உடனே ஏற்றுக் கொள்வார்… இந்த இருவருக்கு மட்டுமே அந்த சலுகை இருக்கின்றது.. தன் பேத்தியையும் மகளையும் பிரிய முடியாமல் தான் அவர்கள் குடும்பத்தையே தங்கள் வீட்டிலேயே வைத்திருக்கிறார் பெரியவர்… அதனால் அவருக்கு மற்ற பேரன் பேத்திகள் மீது அவருக்கு அன்பு இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது…
இவர்கள் எல்லாம் ஒரு படி மேல்தான் அவருக்கு… அவருக்கு பிடிக்காத ஒரே பேரன் என்றால் அது நளன் மட்டுமே…தன் பேத்தி தமையா அதட்டுவதை அமைதியாக கேட்டுக் கொண்டவர் சரண்டர் என்பது போல கையை தூக்கிக்கொண்டு “சரிடாமா நான் எதுக்கும் கோபப்படல போதுமா…” என்று அமைதியாக கூறினார்.
“ம்ம்ம்.. அது தான் மகேஸ்வரனுக்கு அழகு…“என்று தன் தாத்தாவின் கன்னத்தை பிடித்து கிள்ளியவளோ… “இப்டி எதுக்கெடுத்தாலும் கத்த கூடாது தாத்து..அப்புறம் உனக்கு பிரஷர் அதிகமாயிடும்… நான் சொல்றது உனக்கு புரிதா…”என்று சிறுபிள்ளைக்கு சொல்வது போல சொல்ல…
இவர்கள் இருவரையும் பொறாமையாக பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி. அவனுக்கு தன்னை விட யாரிடமும் தனக்கு நெருக்கமானவர்களோ, அல்லது தன்னுடைய உரிமைப்பட்டவர்களோ பாசத்தை பொழிவது பிடிக்காது.. “ஹலோ மேடம்..நான்தான் இங்க டாக்டர்… நீ ஒன்னும் டாக்டர் இல்ல… நீ சமையலுக்கு தான் படிச்சின்டு இருக்க…” என்று அவளை பார்த்து பரிகாசமாக கூறியவாறே அங்கு வந்து ஆஜர் ஆகினான் ரிஷி…
அவனுக்கு எப்போதும் தமையாவை மட்டம் தட்டுவது முதன்மை வேலையாகி போனது… ஏனென்றால் தாத்தாவிற்கு தமையா என்றால் உயிர் என்பதே அவனுக்கு போதுமானதாக ஆக… அவளை எப்படியெல்லாம் மட்டம் தட்டுவானோ அப்படி எல்லாம் மட்டம் தட்டுவான்.
தமையாவோ அவனை நிமிர்ந்து முறைத்துப் பார்த்தவள்… “ரிஷி மாமா நீ வேணா டாக்டரா இருக்கலாம்… ஆனா தாத்தாவோட செல்ல பேத்தி நான் தான்… நா என்ன சொன்னாலும் அத தாத்தா கேப்பாரு… அதுவே நீ சொல்லி பாரேன் அவர் கேட்பாரா என்ன பார்க்கலாம்…” என்று அவளும் இளக்காரமாக கூற
ரிஷிக்கோ அவள் கூறுவதை கேட்டு கோவத்தில் பல்லை கடித்துக் கொண்டு நின்றான்… “ம்ச் தாத்தா நீங்க எப்ப பார்த்தாலும் அவளுக்கு அதிக டிஸ்கவுன்ட் தரதுனால தான் அவ இப்டிலாம் பிஹேவ் பண்ணிட்டு இருக்கா… நீங்களே பாருங்கோ என்ன கொஞ்சம் கூட மதிக்கவே மாற்றா…” என அவளை பற்றி குறை வாசிக்க…
தமையாவோ தன் இடையில் கை வைத்து அவனை புருவம் உயர்த்தி உறுத்து பார்த்தவாறே “அத எதுக்கு தாத்தா கிட்ட சொல்ற என்கிட்ட சொல்ல வேண்டியது தானே… சரி பெரியவரே இனிமே நான் உங்களை மதிக்கிறேன் ஓகேவா… இந்த மரியாதை போதுமா…” என்று அவனை ஏதோ வயதானவன் போல பேச
அதில் இன்னும் காண்டாகி போனவன் ஏதோ பேச வர… “அட ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துங்க… அங்க வர கெஸ்ட் எல்லாம் பாக்குறதுக்கு ஆள் பத்தலையாம் இப்பதான் வகி போன் பண்ணான் ரெண்டு பேரும் முதல்ல ஸ்டேஜிக்கு போங்கோ…” என்று ஒரு அதட்டலை போட்டார் சிவசங்கரன்.
அதில் தமையாவும், ரிஷியும் வாயை கப்பென்று மூடிக்கொண்டனர்… ஆனால் இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் முறைக்க மட்டும் தவறவில்லை.
மகேஸ்வரனோ இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தவருக்கு சிறிது நேரத்திற்கு முன்பு வரை இருந்த சுணக்கமோ, கோவமோ மறைந்து போனது.. அதற்கு பதில் புன்னகையே வந்து குடிக்கொண்டது அவர் முகத்தில்… “டேய் பசங்கள அதட்டாதடா…”என்று அவர்கள் இருவருக்கும் வக்காலத்து வாங்க…
“போதும்ப்பா நீங்க தான் இவங்கள கெடுக்குறது..”என்றவர்… “ம்ம் தமையா போ போய் உன் அக்கா பக்கத்து போய் நில்லு…”என்றவறை பொய்யாக முறைத்து பார்த்தளோ….
“அந்த பக்கம் தள்ள பேசாம இந்த பக்கம் தள்ளிவிடுங்கோ மாமா… என் அக்காளுக்கு இதோ இந்த டெரர் பீஸே எவ்வளவோ மேலு…”என்று ரிஷியை காட்டி கூற.. அதுவோ மற்றவர்களுக்கு சிரிப்பையும், ரிஷிக்கு கோவத்தையும் தான் உண்டாக்கியது.
“யார பாத்துடி டெரர் பீஸுன்னு சொல்ற…”என்று ரிஷி எகுற..
“உங்கள பாத்துதான் அப்டி சொன்னேன் மாமா…”என்றவள்.. “அப்புறம் இப்டிலாம் என்ன பாத்து வாடி போடின்னு சொல்லாதேள்.. அப்புறம் நம்ம வாயோ சும்மான்னு இருக்காது.. உங்கள பாத்து நானும் வாடா போடா சொல்ல வேண்டியதா இருக்கும்.. புரிஞ்சிதோன்னோ…”என்றவள் அவனை முறைத்தவாறே மேடை ஏற…
ரிஷியோ கோவத்தில் புஸ் புஸ்வென மூச்சை வெளியிட்டவன்.. “பாத்தீங்களாப்பா.. இவளுக்கு எத்தன வாயின்னு.. கொஞ்சமாச்சும் பெரியவாள்ன்னு அடங்கி போறாளான்னு பாருங்கோ.. இதுல எல்லாரும் அவளுக்கு சப்போட்டு வேற…”என்று அலுத்துக்கொள்ள..
“போதும் ரிஷி.. அவ விளையாட்டு புள்ள… நீதான் பெரியவன் கொஞ்சம் அவள பொருத்து போய்க்கோ கண்ணா..”என்ற சிவசங்கரனொ… “ம்ம் போய் மேடையில இருக்குற வேலைய பாருப்பா..”என்று அனுப்பி வைக்க..
“ஆமா இதையே சொல்லுங்கோ ப்பா…”என்று அலுத்துக்கொண்டவனோ மேடையை நோக்கி நடக்கலானான்.
இருவரும் ஒரே போல மேடைக்கு செல்ல… “இவங்க ஜோடி பொருத்தமே நன்னா இருக்குல்ல…” என்று என்றால் மகேஸ்வரன் கீழே அவர்களை ரசித்தவாறே
அதனைக் கேட்ட சிவசங்கரனோ சிரித்தவர்… “யாரப்பா சொல்றேள்… இவாளையா… இவங்களோட ஜோடி பொருத்தமா.. ஏன்பா இப்படி காமெடி பண்றேள்…எப்ப பாத்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்ட தான் போட்டுன்டு இருக்கா.. அவங்க ரெண்டு பேரையும் போயி நல்ல ஜோடி பொருத்தம் சொல்றீங்களே..” என்று கிண்டல் செய்ய
அதனை கேட்ட மகேஸ்வரனோ “அடேய் உறவுக்குள்ள ஒவ்வொருத்தருக்கும் இப்டித்தாண்டா செல்ல கோவமோ, சண்டையும் இருந்துச்சுன்னா அவங்க வாழ்க்கை நன்னா இருக்கும்… நானும் உன் அம்மாவும் சண்டை போடாமலா வாழ்ந்தோம்.. அதெல்லாம் நிறைய சண்டை போட்டோம் இல்ல கோசலை..” என்று அருகில் இருக்கும் கோசலையை திரும்பிப் பார்க்க அவர் முகமோ கலையிழந்து இருந்தது.
அவர் எதற்கு இப்படி இருக்கிறார் என்பது மகேஸ்வரனுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் அதனை பற்றி பேச அவருக்கு விருப்பம் சுத்தமாக இல்லை. “சரி விவாகம் நல்லபடியா முடிஞ்சின்டு இல்லையா.. மாப்பிள்ளையும் பொண்ணையும் கூட்டின்டு முதல்ல நம்ம ஆத்துக்கு தானே வரீங்க..” என்று பேச்சை மாற்றும் வகையில் அவர் கேட்க
“இல்லப்பா சம்மந்தி அவங்கள அவங்க ஆத்துக்கு கூட்டின்டு போறதா சொல்லிட்டாரு… நம்ம ஆத்துக்கு நாளைக்கி மறுவீட்டுக்கு கூட்டிட்டு போங்கோன்னு சொல்லி இருக்காங்க…” என்று கூற
மகேஸ்வரனோ அனைத்திற்கும் தலையாட்டிக்கொண்டார். இப்படியே வர்ஷியின் திருமணம் நல்லபடியாக முடிய… வர்ஷியையும்,வம்சியையும் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தவர்கள் மகேஸ்வரன் குடும்பத்தார். சம்மந்தி வீட்டுடன் சுபாவும்,குணாவும் சென்றுவிட்டனர்.
மற்றவர்கள் அனைவரும் தங்களின் வீட்டிற்கு சென்று அடைத்து விட்டார்கள்… வர்ஷினி முகமோ காரில் செல்லும்போது எல்லாம் அவ்வளவாக சந்தோஷத்தில் இல்லை.. ஒருவித குழப்பத்திலையே தான் இருந்தது. அதனை பார்த்த வம்சிக்கோ சரி அவர்களின் வீட்டினரை பிரிவதில் உண்டான கஷ்டமோ என்று நினைத்தவாறு அப்படியே விட்டுவிட்டான்.
“ம்ச் ஏன் மாப்ள உங்களுக்கு இந்த வேல.. எதுக்கு அவன வர்ஷியோட விவாகத்துக்கு கூட்டின்டு வந்தீங்க… எங்க எல்லாருக்கும் தெரியும் அவன கூட்டின்டு வந்தது நீங்களாதான் இருப்பீங்கன்னு…” என்று நாகராஜிடம் கடிந்துக்கொண்டிருந்தார் தர்மேந்திரன்… அவருக்கு அருகில் நின்று அவரை முறைத்துக் கொண்டிருந்தார் ஜான்வி.
“அதானே நானும் கேட்கிறேன்… சும்மா வேலியில போறவனை தூக்கி வேட்டில விட்ட கதையா அவனை எதுக்கு இந்த கல்யாணத்துக்கு கூப்பிடுறீங்க…” என்று ஜான்வியும் பிற்பாடு பாட…
அவர்கள் இருவரையும் கேவலமான ஒரு பார்வையை பார்த்த நாகராஜோ… “ஆமா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க ரெண்டு பேரும் தானே அவனை பெத்தவங்க..” என்று கேலியாக கேட்க
அதில் இருவரின் முகமும் சட்டென்று இருளடைந்துவிட்டது… ஆனாலும் அதனை காட்டிக்கொள்ளாமல்… “அட நாங்க என்ன கேட்கிறோம்.. நீங்க என்ன பதில் சொல்றீங்க மாப்ள…” என்று தர்மேந்திரன் கேட்க
“இல்ல எனக்கு இந்த வீட்டில கல்யாணம் ஆகி வந்ததுல இருந்து இந்த டவுட் இருக்கு அதனால தான் கேட்கிறேன்… சும்மா சொல்லுங்க நீங்க ரெண்டு பேரும் தான அவனை பெத்தீங்க…” என்று அழுத்தமாக திரும்ப கேட்க
அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தலையை குனிந்துக் கொண்டு நின்று இருந்தவர்கள்… அவர்களை ஏற இறங்க நக்கலாக பார்த்தவறோ… “இல்ல யாரோ பெத்த புள்ள மாதிரி அவன இப்டி கேவலமா ட்ரீட் பண்றீங்களே அதான் எனக்கு டவுட்..” என்று நாகராஜன் கேட்க… அதில் இருவரும் அவரை முறைத்தவாறே அங்கிருந்து சென்று விட்டனர்.
இங்கு நளனோ தன்னுடைய காரை அந்த ரிசார்ட்டின் ஓரமாக நிறுத்தியவனோ அப்படியே ஸ்டேரிங்கிலையே படுத்துவிட அவன் இமைகளின் நடுவே ஏற்பட்ட சுருக்கத்திலையே ஏதோ தேவை இல்லாத நியாபகம் வந்து அவனை அலக்கழிப்பது நன்றாக தெரிந்தது.
(நீயடி…)