கதிரவன் ஓய்வுக்கு செல்ல… சந்திரன் வேலையை தொடங்க… இரவு வேளையும் தொடங்கியது ஏகமாய்.
இளம் மஞ்சள் மற்றும் பச்சை வண்ண காட்டன் புடவை உடுத்தி மல்லிகை சரம் சூட்டி பூஜை அறையில் கோதாவரி முன் நின்று கொண்டிருந்தாள் மேக விருஷ்டி.
“சாமி நல்லா கும்பிட்டுக்கோ மேகா சந்தோஷமா உங்க வாழ்க்கை ஆரம்பிக்கணும்னு” என்றவர் அவளுக்கு குங்குமம் வைத்து விடார்.
சாமி கும்பிட்டு முடித்தவள் கேட்டாள் “அப்பத்தா எங்கே?” என்று.
“அவங்களுக்கு தல நோவா இருக்குன்னு போய் படுத்துட்டாங்கமா. நீ மேல போ நேரமாச்சி பாரு, காலைல பார்த்துக்கலாம்” என்றார் கோதாவரி வேக வேகமாய்.
“தலைவலியா…! சொல்லவே இல்ல. வாங்க போய் முதல்ல பாத்துட்டு வரலாம்” என்றவள் வெளியேற முன்னே அடி வைத்தாள்.
“அவங்க படுத்துட்டாங்க அப்பவே. தூங்கட்டும் மேகாமா நீ மேல போ இன்னு காத்துட்டு இருப்பான். அத்தை எங்க போயிற போறாங்க. இங்க தான நீ இருக்க போற. காலையில பாத்துக்கலாம் நீ போ” என இடை மறித்தார் கோதாவரி செல்ல விடாது.
பால் சொம்பை அவர் கைகளில் திணித்தவள், “என்ன உங்க மாமியார் என்னைய பாக்க விடக் கூடாதுன்னு சொல்லி உங்களை தடுக்க சொன்னாங்களா அத்தமா.”
என வேகமாக அம்பிகாமாவின் அறையை நோக்கி நகர்ந்தாள் விறுவிறுவென மேகவிருஷ்டி.
அங்கு அம்பிகாம்மாவோ “மோனிகா லவ் யூ மோனிகா…” என மடிக்கணினியில் பாடல் ஓடிகொண்டிருக்க, செவிகளில் காதொலிப்பான் அதிர கட்டில் மெத்தை மேல் குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தார் குதூகலமாக.
அவரை பார்த்து இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றாள் கோதாவரியை மேக விருஷ்டி.
அவரோ தலை குனிய எட்டி மடிக்கணினியை அவள் அணைக்க, “ஊ தீஸ் பாலோவ்…”( who this fellow) என சத்தம் நின்று திரும்பி பார்த்தவர், இருவரை கண்டு முக்கியமாக மேக விருஷ்டி கண்டு குதித்து இறங்கி நுழைத்துக் கொண்டார் கட்டிலுக்கு அடியில் தலையை.
“அப்பத்தான் அதுக்கு கீழ எல்லாம் உங்களால ஒளிய முடியாது ஒழுங்கா எந்திரிச்சி முன்னாடி வாங்க.” என்றாள் மேக விருஷ்டி அதட்டலாய் குரல் உயர.
“அடியேய் உன்ன யாரு டி இப்ப என் முன்னாடி வர சொன்னது. அடியேய் இவள கோதாவரி நான் தூங்கிட்டேன் தானே சொன்னேன். நீ எதுக்கு இவள இழுத்துட்டு வந்து நிக்கிறவ” பாய்ந்தார் அம்பிகாமா கோதாவரியிடம் அதைவிட குரல் உயர.
“சொல்ல தான் செஞ்சேன் அத்தை. கேட்கமாட்டேன்னு அவளே வந்துட்டா நான் என்ன பண்ண” என்றார் கோதாவரி தோளை குலுக்கி.
மேக விருஷ்டி சென்று அம்பிகாமா காதை பிடித்து மேலே எழுப்பியவள், “இது தான் உங்க ஊர்ல தல நோவா… வயசான காலத்துல குத்தாட்டம் எல்லாம் தேவையா அப்பத்தா உங்களுக்கு” என்றவள் கையை வெடுக்கென்று தட்டி விட்டவர்…
“ஆர பாத்துடி வயசாயிருச்சுன்னு சொன்ன… இப்ப மட்டும் உன் தாத்தன் உசுரோட இருந்துருந்தா அசராம அஞ்சு புள்ள பெத்து போடுவேன்டி ஒத்த பிரசவத்துல. உன் தாத்தனுக்கு தான் மூச்சு வாங்கும். ஐம் ஆல் வேசு எங்கடி…” என்றவர் கொதித்து எழுந்தார் இடுப்பையாட்டி.
“எங்கடின்னா என்னது அப்பத்தா…?” அவள் புரியாது விழிக்க,
“அடியேய் உனக்கு இங்கிலிபீசு தெரியாதா. எங்கு எங்கு(யங்) அதான் இளமை டி. இது கூட தெரியல உன் அப்பன் உன்ன அமெரிக்கா அனுப்பி காச கரியாக்கி இருக்கான்” என்றவர் வாதாட…
நேரத்தை பார்த்த கோதாவரியோ “அத்த… ” என அழுத்தமாய் குரல் கொடுத்தார் பல்லை கடித்து.
“சரி சரி நாளைக்கு என்கிட்ட ஒழுங்கா கிளாசுக்கு வா… இப்ப மேல லைபு கிளாசுக்கு போ என் பேரன் கிளாசு எடுப்பான். இப்போ உன்னை யாருடி என் முன்னாடி வர சொன்னா ஒழுங்கா மேல போ டி..” என்றார் அதட்டலாக முகத்தை சுழித்து.
அதில் நகைத்தவள் “உங்க ஆசீர்வாதம் வாங்க தான்” அம்பிகாமா காலில் விழுந்தாள் மேக விருஷ்டி பட்டென்று.
“அடியேய்…” என்று சட்டென்று அவளை தூக்கி நிறுத்தியவர், “உன் அத்தை காலைல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போடி.” என்றார் முறைப்பாய் ஆணையாய்.
“வாங்கியாச்சு வாங்கியாச்சு… அவங்க கால்லெல்லாம் ஆசிர்வாதம் வாங்கியாச்சு. நீங்க தான் பேலன்ஸ். நீங்க எதுக்கு இங்க வந்து ஒளிஞ்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும். கோயில்ல வச்சி உங்க பேரன் சொன்னது ஞாபகம் இருக்கு தானே. இல்ல திரும்பியும் உங்க பேரன கூப்பிடனுமா..?” என்றாள் அதிகார தோணியில்.
அதற்கு அம்பிகாமா “அடியேய் கோதாவரி உன் மருமகள பேசிவிட்டு நீ வேடிக்கை பாக்குறியாக்கும்” கோதாவரியிடம் ஏகிற…
“அவ கரெக்டா தான் சொல்றா. இதையே தான் நானும் சொன்னேன்.” என சலித்துக் கொண்டார் கோதாவரி.
தந்தட்டி குலுங்க “ஓ… உன்புட்டு மருமக பேச்சு கேட்டு ஆடுற இல்ல, இருடி இரு உன்ன வச்சிக்கிறேன்” என்றவர் மனதார மீண்டும் ஆசீர்வதித்தவர்…
“எச்சுபிரசூ ( எக்ஸ்பிரஸ்) வேகத்தில் வேலை பார்த்து சீக்கிரமா எம்பேரன் மாதிரி ஒரு பிள்ளையை கையில் கொடு” என்றார் மேக விருஷ்டி தலை வருடி.
“ஒன்னு போதுமா…? உங்கள மாதிரி ஐஞ்சு கேட்பிங்கன்னு நினைச்சேனே நானு” என கிளுக்கி சிரித்தவள் நகர…
சந்தோஷமாகவும் இன்முகத்துடன் அனுப்பி வைத்தனர் அவளை இருவரும்.
மேக விருஷ்டிக்கோ அறையை நெருங்க நெருங்க கண் காணாத படபடப்பு தொற்றிக் கொண்டது உள்ளுக்குள்.
பார்த்த நொடி முதல் அவனுடன் இருந்தவள் தான், இருந்தாலும் முழுமையாக அவனுக்குள் செல்லவிருக்கும் இத்தருணத்தை எண்ணியவளுக்கு உள்ளுக்குள் உருவமில்லா பூகம்பம் கிளம்பியது மெய்யே.
கையில் பாலுடன் கை நடுங்க கதவை திறந்த உள்ளே சென்றவளுக்கு பன்னீர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சந்தன வாசனை திரவியம் நாசி துளைக்க, பெரும் நிசப்தன் நிலவ காட்சியளித்தது அவ்வறை.
சுற்றிலும் தன்னவன் எங்கிருப்பான் என்ற பார்வையை தன் விழிகளில் சுழல விட்டவள் கதவினை அடைத்து முன்னேறினாள் உள்ளே அன்னனடையிட்டு.
பால் சொம்பை மெதுவாக மேசையில் வைத்தவள் பார்வைக்குள் சிக்கிக் கொண்டான் அவள் மன்னவன்.
பால்கனியில் நின்று வானத்து வெண்ணிலவை அவன் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பின் சென்று நின்றாள் மௌனமாய் கொலுசோலி சத்தத்துடன்.
அவள் உள்ளே நுழையும் பொழுதே அவளது வாசமும் அவளது அரவமும் அவன் செவியையும் நாசியையும் சென்றடைய நின்றான்.
மனதிற்குள் சிறு நடுக்கத்துடன் அவன் அருகில் சென்று நின்றவள், “இங்கிருந்து பார்க்கும்போது நிலா அழகா இருக்குள்ள உழவா” என்றாள் விழிகள் மின்ன.
அவளை பார்க்காதவனோ, “அப்படியா…! எனக்கு ஒன்னும் தெரியலையே ரெயினி ஏஞ்சல்” என்றவன் தன்னவளின் குரலிலே தங்களுக்கான வாழ்வின் அடுத்தக்கட்ட பயணத்தை நோக்கிய படபடப்பையும் உணரத்தான் செய்தான்.
“நல்லா பாருங்க எவ்வளவு அழகா பிரகாசமா மேகங்களுக்கு நடுவுல அதுவும் இங்கே இருந்து இப்படி உங்க கூட பார்க்கும்போது..” என்றவளை தன்னை நெருக்க இழுத்து நிற்க வைத்தவன்,
“ஆனா அதைவிட என் ஏஞ்சல் அழகா தெரியுறாளே என் கண்ணுக்கு!” என்றான் விழிகள் மின்ன இதழ் குவித்து முத்தத்தை காற்றில் பறக்க விட்டவனாய்.
அவனின் காற்றோடு கலந்த முத்ததிலேயே கன்ன கதுப்புகள் செம்மை விரவ வேகமா அவன் பிடியில் இருந்து நழுவி ஓடினாள் மானாய்.
முகம் மலர “ஹேய் ஏஞ்சல்..” புன்னகையுடன் சென்றான் இன்னுழவனும் உள்ளே அவள் பின்னோடு.
“இந்த ரூம் கூட அழகா இருக்குல்ல உழவா” என்றாள் சுற்றி முற்றி பார்த்து.
மெல்ல அவளை நெருங்கியவனோ “ஹிம் நல்லா தான் இருக்கு…”
“அப்புறம் இந்த செல்ஃப் இந்த மிர்ரர்…” அவள் பேச…
சோழியாய் சுழட்டி அவளை தன் கை வளைவுகள் கொண்டு வந்தவன், “இந்த காட், இந்த பெட், இந்த பிளவர்ஸ், பெட்ஷீட், பில்லோ அப்புறம் நீ… நான்… சொல்லு ஏஞ்சல் இன்னும் என்ன எல்லாம் நல்லா இருக்குனு” என அவளின் கள்ளத்தனத்தை புரிந்து கொண்டு விழி சிமிட்ட புருவம் ஏற்றினான் செல்ல கோவத்தோடு.
நாவை கடித்தவள் வெட்கத்தில் தலை குனிய, அவள் நாடி பிடித்து உயர்த்தி தன் விழிகளோடு விழிகளை கலக்க விட்டவன் “என்னாச்சு ஏன் ஏஞ்சலுக்கு எதுக்கு இவ்வளவு பயம் அதுவும் என்கிட்ட?”
கேட்டான் மூச்சு காற்று அவள் முகமதில் விழ.
இமைகளும் உதடுகளும் தந்தி அடிக்க, “பயம் இல்ல… பதட்டமா இருக்கு” என்றவள் அடுத்த நொடி அவன் கைகளில் மிதந்தாள்.
அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள் “உழவா என்ன பண்றீங்க?” விழிகள் விரிய
“இன்னும் எதுவுமே பண்ணலையே ஏஞ்சல்” குறும்பாய் அவன்.
“ஐயோ அது இல்ல” என்று நாணத்திலவள்.
“அப்ப எது ஏஞ்சல்?” என்றவன் அவள் இதழில் ஆழ இதழ் பொருத்தி மேலும் அவளை சிவக்க வைத்து விடுவிக்க.
மேக விருஷ்டிக்கோ அவனின் எதிர்பாராத இதழ் தாக்குதலில் “ஐயோ அதான்… என்ன… இப்படி… ப்ச் உழவா…” என மூளை செயல் இழக்க வார்த்தைகள் வராது வெளிநடப்பு செய்தது.
உடையவள் தடுமாற்றத்தை இரசணையாய் தனக்குள் வாங்கி அமிழ்த்திக் கொண்டவன் “எப்படி…? இன்னும் ஒன்னு அப்படி ஆகலையே ஏஞ்சல்”
“உங்ககிட்ட பேச முடியுமா போங்க உழவா” என்றவள் அவனை மேலும் கழுத்தோடு அணைத்துக் கொள்ள…
“அப்ப என்கிட்ட என்ன பண்ண முடியும் ஏஞ்சல்” என்றவன் பார்வையில் வசீகரம் குடியேறியிருந்தது.
சலிப்பாய் நெற்றியில் கைவைத்தவள் “உண்மையாவே உங்ககிட்ட பேச முடியல” என்றவள் அவன் மார்புக்குள் புதைந்தாள்.
“என்கிட்ட பேச நிறைய இருக்கு ஏஞ்சல். நீ ஆசைப்பட்ட மாதிரி பேசலாம்… நிறைய பேசலாம்…” என்றவனின் காந்த பார்வையால் ஈர்த்தான் அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய்.
அதை கண்டுக் கொண்டவள் மேனி சிலிர்த்தாலும் “ஏது இப்படியா…?”
என்றவள் அவனை தூக்கி வைத்திருக்கும் பாங்கை காண்பித்து கேட்க,
இன்னுழவனோ சத்தமாக சிரித்தவன் அவள் கன்னம் கடித்து “கள்ளி… அப்போ பேச நீ தயார். எனிவே நீ கேட்ட மாதிரி இப்படியே பேசறது கொஞ்சம் கஷ்டம் தான்” என்றான் தங்கள் உடைகளை விழிகளால் சுட்டிக் காட்டியவனாய்..
“நம்ம இன்னும் வசதியா ப்ரீ ஆகிட்டு பேசலாம் ரெயினி ஏஞ்சல்” இரண்டுற பொருளில் அவன் சாட…
அவளோ மீண்டும் வெட்கத்தில் தேகம் சிவந்தவள் “உங்க கிட்ட சொல்லியா கொடுக்கணும் பேசுறதுக்கு” என்றாள் இன்பமாய் அலுத்து கொண்டு உதடு பிதுங்க.
பிதுங்கி நின்ற அவளின் செவ்விதழை மீண்டும் களவாடி விடுவித்தவன் “எனக்கு தெரிஞ்ச அளவுக்கு பேசுறேன் ஏஞ்சல் நான். விதமா விதமா பேசலாம். பேசுறதுக்கு மொழியா இல்ல.
நான் இந்த கிருஷ்ணகிரி வில்லேஜ் மேன் ஏஞ்சல். நீ தான் அமெரிக்கா வர வலம் வந்து இருக்க. உனக்கு தெரிஞ்ச மொழி எல்லாம் நீ சொல்லிக் கொடுக்கணும் எனக்கு” என்றான் மன்மத கள்வனாய் கட்டளையாய்.
“அது சரி நானும் சொல்லி தந்துட்டா போச்சி. நம்ம ஊர்ல அதிக ஆள் நடமாட்டம் இருக்க இடம் எது உழவா?” அவள் ஆர்வமாய் கேட்க,
“அது என்ன கோவில காலை பூஜைல கூட்டம் இருக்கும். வயல்ல அதிகாலை வேளை ஆள் நடமாட்டம் இருக்கும் வேலைக்கு. கடை தெருவுல எல்லா நேரமும் கூட்டம் இருக்கும். பொறவு சாயங்காலம் சந்தைல கூட்டம் இருக்கும். எதுக்கு ஏஞ்சல்?”
“ஹான்… நீங்க ஆசைப்பட்ட மாதிரி அமெரிக்க மொழியில பேச தான்.” என்றாள் நக்கலாய் அவன் கன்னம் கிள்ளி.
அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தவன், “ஐயோ ரெயினி ஏஞ்சல் நான் ஊர் தலைவர் டி…” முன் மொழிய…
“பரவாயில்ல அமெரிக்க மொழி பேசி ஏட்டின் பிளஸ் தலைவரா நான் உங்கள ப்ரொமோட் பண்றேன் உழவா..” என்றாள் விழி சிமிட்டி துள்ளல் சிரிப்பில்.
“எனது ப்ரமோட் பண்றியா…! ஏட்டின் பிளஸ் அப்பிடின்னா என்னனு கூட தெரியாதாக்கும் எனக்கு” என்றவன் முழித்தான் பாவமாய் உதடு பிதுங்க அப்பாவியாய் நகைத்து.
“அவ்வா… அவ்வா… அவன் வாயிலே அடி போட்டவள் பேசுறது எல்லாம் ஏட்டின் பிளஸு. இவருக்கு அப்பிடின்னா என்னன்னே தெரியாதம்ல” என பிதுங்கி நின்ற அவன் ஆரஞ்சு சுளை இதழை மெல்ல கடித்து விடுவித்தாள் மேக விருஷ்டி.
அதை சுகமாய் வாங்கியவன் “ஸ்ஸ்… ஏஞ்சல் நல்லா கடி டி… நிறையா கடிச்சி சாப்பிடு. அது என்ன இலைல தண்ணி தெளிச்ச மாதிரி தொட்டேன் துடைச்சேன்னு. ” என்றவன் மூச்சு காற்றை தழுவியது அவள் இதழ்.
உடையவனின் செங்கோதை மணப் பேச்சிலும் செயலிலும் தேகம் செவ்வானமாய் சிவக்க மோகம் ஒருபக்கம் மையம் கொண்டிருந்தாலும்…
அவள் மனம் கொண்ட பதட்டம் எங்கே சென்றது என்று கூட தெரியாத அளவிற்கு சுற்று பயணம் சென்றிருந்தது.
சென்றடைய வைத்திருந்தான் இன்னுழவன், அவளினவன்.
அவளுடன் பேசியபடியே அறையை விட்டு வெளியே வந்து வீட்டை கடந்து ஜீப்பில் அவளை அமர்த்தியிருந்தான் பதுமையாய்.
உடையவனுடனான பேச்சில் அதைக் கூட அவள் கவனிக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.
வண்டியை இன்னுழவன் கிளப்ப… “பேராண்டி…” என மேலே இருந்து குரல் கொடுத்தார் அம்பிகாமா.
அவனும் வண்டியை செலுத்தாத நிறுத்தி மேலே பார்க்க…
அவரோ “அங்கதானா…?”
இன்னுழவனும் “அங்கயே தான்.” என்றான் பிடரி வருடி ஆண்மைக்கு உரித்தான வெக்கத்தில்.
“அப்படியே உங்க தாத்தன மாதிரி… ” என சில்லாகித்தவர் நிற்க, புன்னகையுடன் கண்ணசைத்தவன் வண்டியை கிளப்பி விடைபெற… செல்லும் அவர்களுக்கு திருஷ்டி சுற்றி விரல் நெட்டி முறித்தார் அம்பிகாமா.
அந்நேரம் அவருக்கு எதிரில் உறக்கம் தூரம் செல்ல விழிகளில் ஈரம் சுரக்க நடந்து கொண்டிருந்தாள் இனிதுழனி.
அவளைக் கண்டவரோ “சீக்கிரம் இவ வாழ்க்கையும் சரியாகணும். சரி ஆக்குவான்.” என பெருமூச்சுடன் உள்ளே சென்றார்.
இன்னுழவன் ஜீப் நேரே வந்து நின்றது அவ்விருள் சூழ்ந்த இரவிலும் சந்திர ஒளியில் சலசலக்கும் நீரோடைக்கு நடுவில் பச்சைபசேலென்று இருக்கும் வயல்வெளிக்கு மத்தியில்.
முதலில் தாவி குதித்து இறங்கியவன் தன்னவளுக்கு கரம் நீட்ட, புன்னகையுடன் தன்னவன் கரம் பற்றி ஈரம் சுரக்கும் பூமிமகள் மீது தன் பொற்பாதங்கள் பதிய குளிர் தென்றல் முகமதை தழுவிச் செல்ல இறங்கிய மேக விருஷ்டிக்கோ தேகம் பரவசம் கொள்ள மனமோ இதம் கண்டது.
விழிகள் ஆர்வம் குடியேற முன்னேறி நடந்து சுற்றி பார்த்தவளுக்கு வாழ்நாளில் இதுவரை அவள் கண்டிடாத ஒரு அழகிய தருணம், அதுவும் அவள் விரும்பும் அழகான இடத்தில் அவளவனுடன் கண்டவளுக்கோ உள்ளுக்குள் ஆயிரம் பட்டம் பூச்சிகள் சிறக்கடித்தன ரீங்காரமாய்.
“என்ன ஏஞ்சல் பிடிச்சிருக்கா…?” என பின்னிருந்து அணைத்து கழுத்து வழி முகம் பதித்து தோளில் நாடி குத்த நின்றவனாய் கேட்டான் இன்னுழவன்.
விழிகளில் நீர் கோர்க்க சட்டென்று அவன் புறம் திரும்பி கழுத்தில் கரம் கோர்க்க அவன் மார்பில் மாலையாய் ஆடியவள் முகம் முழுதும் முத்த மழை கொடுத்து “ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு உழவா…” என்றாள் பூரிப்புடன்.
கொண்டவள் இதழ் தீண்டலில் கிறங்கியவன் “தினமும் காலையில உன்கிட்ட இங்க இருந்து தான் ஏஞ்சல் நான் பேசுவேன்” நெற்றி முட்டினான்.
“அப்பிடியா… உங்க பேச்சில பெயர்ல மட்டும் தான் மண் மனம் விசுதுன்னு நினைச்சேன். ஆனா உங்கள சுத்தியுமே மண் மனம் தான் வீசியிருக்கு” என கர்வமாய் புருவம் வளைய சில்லாகித்தாள்.
“ம்ம்…ஹீம்…” என அவள் கேச கால்களுக்குள் முகம் புதைய அடிமூச்சி வாங்கி கொண்டுவன் “அப்பிடியா… ஆனா எனக்கு இனி என் மேலயும் சரி என்ன சுற்றிலும் சரி உன் வாசம் மட்டும் தான் இருக்கணும் என் மனசு சொல்லுதே ஏஞ்சல்…” என்றவன் பார்வையிலும் குரலில் வசீகரம் தழைத்தது.
தன்னவன் பார்வையில் அர்த்தம் சிந்தை ஏற அதை எதிர் நோக்க முடியாது அவள் விலக..
வர்ணதேவன் மாறி பொழிய ஆரம்பிக்க.. அவளின் முந்தானை சேலை அவன் கைவசமானது.
முத்து மழையில் அங்கம் முழுதும் நனைய.. தன்னவன் சில்மிஷ விளையாட்டில் இதயம் வேக துடிப்பு எடுக்க சேலையை நழுவ விடாது பிடித்தவள் பார்த்தாள் விழிகள் படபடக்க.
அவனோ கீழ் அதரம் கடிப்பட “தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே…” இழுத்தான் குரும்பாய் மேலும் அவனோடு இசை மீட்ட.
அவளும் புடவையை விடாது தன்னோடு இறுக்கி பிடித்தவள், “அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே…” என்றாள் தன் பெண்மையை மறைக்க அரும்பாடுபட்டு அவனுக்கு இணையாய் இசை மீட்டி..
“ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்து வைப்பதேனம்மா…” என்றவன் பார்வையில் மாரன் அம்பு துளைத்தது அவளை அடி முதல் நுனி வரை.
அதில் உள்ளங்கால் வரை கூசி செவ்வரழியாய் சிலிர்த்துவளோ “காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா…?” என விழிகளை சுழட்டி சூழலை காட்டி வினவினாள் அவனை நெருங்கி.
அதில் இதழ் பிரியா நகைத்தவன் தேனுறும் பார்வையில் அவள் விழிகளோடு அவன் விழி கலந்தவன் “ரசிக்க வந்த ரசிகனின் விழிகளை மூடாதே…” என்றவன் கரம் பதியம் போட ஆரம்பித்து அவளில் அங்குல அங்குலமாய்.
அவளுக்கோ மழையின் குளிரிலும் உடையவன் உள்ளங்கை சூட்டில் மூச்சுக்கள் மேல் வாங்க “விழியை மூடும் போதிலும் விரல்களாலே தேடாதே… ”
என உடையவன் தொடுகையில் வெக்கம் சதிராட முழுவதும் அவன் வசம் புகுந்து மார்புக்குள் புதைந்தவளை கைகளில் அள்ளியவன் அடுத்தகணம் அவனின் பிடித்த இடமான தோட்டத்து பண்ணை வீட்டிற்குள் கடத்தினான்.
அழகிய மர வேலைபாடுகளுடன் கூடிய பண்ணை வீட்டின் அவனின் அறையில் புகுந்தவன் கதவை காலால் சாற்றி பெண்ணவளை மஞ்சத்தில் சரித்தான் கண்ணாடி பதுமையாய்.
பின் அவளுடன் தானும் சரிந்தவன் விழி பார்த்தவனாய் “பேசலாமா ஏஞ்சல்…” ஒப்புதல் கேட்டான் நடத்தவிருக்கும் கூடல் அரங்கேற்றத்திற்கு அஸ்திவாரமாய்.
அவன் விழி பார்த்து தலையசைத்தவள் வார்த்தையற்று சம்மதம் தெரிவிக்க,
அடுத்த நொடி ஆடவன் ஆயக்கலையில் இருவர் உடைகளையும் அறையின் மூலைகள் தத்தெடுத்து கொள்ள…
மூச்சு காற்று வேகம் எடுக்க, ஒருவருள் ஒருவர் காற்றுக்கும் இடம் இல்லாது தழுவி கொள்ள…
மஞ்சம் மன்மதன் சன்னதி திறந்து வரவேற்பு நடத்த…
“உழவா…” “ரெயினி…” என இருவரின் முனங்கள்களும் இதழ் ஓசைகளும் அறையெங்கும் சங்கீத ஸ்வரம் மீட்ட..
மேனி தரித்திருந்த வர்ண துளிகள் வியர்வை துளிகளாய் அவதாரம் எடுத்து தீர்த்தம் பரிமாற வீணையாய் அவளில் அவன் மீட்ட..
அதிலோ பெண்மையின் விழிகளில் சுகமாய் வலி நீர் கசிய தொடங்கியது.
அதனை தன் இதழ் கொண்டு ஸ்ரீகரித்தவன் தனக்குள் அவளை கொண்டு சில நிமிடம் மென்மையாய் சில நிமிடம் வன்மையாய் அவனக்குள் அவளும் அவளுக்குள் அவனும் பேசி ஆட்கொண்டு சங்கமிக்க.. அழகாய் அறங்கேறியது ஆலிங்கனம் அங்கு.
செங்கோதை மணம் வீசும்…
ரொம்ப நாள் கழிச்சி ud தந்துருக்கேன் சோ I’m waiting for உங்க பொண்ணான ரேட்டிங் ⭐ and 👍🏻❤️ plus கோல்டன் comments friend’s.