Vaasanthi Shankar

அத்தியாயம் 22

அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து நிற்க.. “உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன், இங்க எல்லோரும் அவங்க அவங்க நடத்துகிற விதத்துலயும் அவங்கவங்க பேசுற விதத்தையும் பொருத்து தான் மதிப்பு மரியாதை எல்லாம். முக்கியமாக உங்களுக்கும் சேர்த்து தான் அத்தை. வயசுக்கு இங்க மரியாதை கொடுக்கணும்னா அந்த வயசுக்கு தகுந்த மாதிரி பெரிய மனுஷதனமா நடந்துக்கணும். பின்னாடி மாட்டுத் தொழுவுல நிக்கிற எருமை மாட்டுக்கு கூட தான் 40 வயசு ஆகுது. அது வயசுக்கு மரியாதை கொடுத்து தள்ளிப்போன்னு […]

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

முழங்கை சட்டையை மடித்து விட்டபடி கண்ணாடியின் முன் இன்னுழவன் நிற்க அவனுக்கு முன் அழகிய சிகப்பு நிற சில்க் சுடிதாரில் நின்று கொண்டிருந்தாள் கையில் குங்குமச்சிமிழை ஏந்திய வண்ணம் மேக விருஷ்டி. இருவரின் பார்வையும் கண்ணாடியின் வாயிலாக மையம் கொண்டிருந்தது ஒரே நேர் கோட்டில். சட்டையை மடித்து விட்டவனோ, “அப்பிடி பார்க்காத டி… வேலை இருக்கு எனக்கு” என்றவன் அவளை பின்னிருந்து தன்னோடு அணைத்து குங்குமத்தை எடுத்தவன் பின்னிருந்தே அவளின் பிறை நெற்றி நெற்றியில் சூட்டினான். விழிப்பார்வையோ

அத்தியாயம் 21 Read More »

அத்தியாயம் 20

இன்னுழவன் மேக விருஷ்டி இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளால் நிறைத்து அவர்களுக்கென்று தனி உலகம் தேடிக் கொண்டு போக… “ம்க்கு…” குரலை திரும்பி அவர்களை நிகழ்வு உலகிற்கு கொண்டு வந்திருந்தார் கோதாவரி. அதில் தெளிந்தவர்கள் அனைவரையும் பார்த்தனர் அசடுவழிய. “இனி அண்ணிய ரூமுக்கு கூட்டிட்டு போ… நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா” என்றார் கோதாவரி மேக விருஷ்டியை பார்த்து. அவளோ இன்னுழவன் விழி பார்க்க அவனும் செல்லென்று இமை அசைக்க.. எழுந்துக் கொண்டவளை இனிதுழனி

அத்தியாயம் 20 Read More »

அத்தியாயம் 19

கோவிலில் இருந்த அனைவரும் வீட்டை வந்தடைந்திருந்தனர். இனிதுழனி ஆரத்தி எடுக்க அவளையே தான் அதிர்ந்து பார்த்துக் கொண்டு நின்றாள் இன்னுழவன் கரம்பிடித்து மேக விருஷ்டி. நிவர்த்தனனை சொல்லவே வேண்டாம் விழிகள் ஏகத்துக்கு விரிய பத்து ஈகள் உல்லாசமாய் உலாவிவிட்டு வரும் அளவிற்கு வாயை பிளந்து நின்றான் சகோதரிக்கு நிகரான அதிர்வில் இனிதுழனியை பார்த்தவனாய். அவன் அனுதினமும் திரையில் கண்டு காதலித்தவள் இன்று நேரில் நிற்கின்றாளே! இனிதுழனி ஆரத்தி எடுத்தவள் இருவருக்கும் குங்கும திலகமிட இன்னுழவனை ஏறெடுத்து பார்த்தாள்

அத்தியாயம் 19 Read More »

அத்தியாயம் 18

விழிகளில் நீருடன் அம்பாய் பாய்ந்து சென்றவள் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் இன்னுழவனைக் கடந்து அவனுக்குப் பின் நின்று கொண்டிருந்தவனின் மார்புக்குள் தஞ்சமடைந்து இருந்தாள். இன்னுழவன் திரும்பிப் பார்க்க, அங்கு நின்று கொண்டிருந்தான் நிவர்த்தனன். ஆம், மேக விருஷ்டி ஓடிச் சென்று தஞ்சம் அடைந்தது அவளவனிடம் இல்லை. அவள் உடன் பிறந்தவனிடம். இப்பொழுது வரை தன் முன் நிற்பவன் தான் தன் மனதிற்கு பாத்தியப்பட்டவன் என அவள் அறியா நிதர்சனம். “நிவர்த்தனா…” என அவனை கட்டி அணைத்து அவன்

அத்தியாயம் 18 Read More »

அத்தியாயம் 17

இறுகி முகத்துடன் வீட்டை வந்தடைந்து இருந்தான் இன்னுழவன். வீட்டுக்குள் அவன் பிரவேசிக்க, கல்யாணத்திற்காக தயாராகி அனைவரும் ரெடியாக அமர்ந்திருந்தனர். எல்லாவற்றிற்கும் மேல் சக்திவேல் மிகவும் ஆர்வமாக அமர்ந்திருந்தார். “இன்னு சீக்கிரமா கிளம்பி வாப்பா முகூர்த்தத்துக்கு டைம் ஆச்சு இல்ல” என கோதாவரி கையில் தாம்பூலத்துடனும் பட்டு சேலை சகிதம் வந்து நின்றார். “அடியேய் ஏஞ்சல் என் நிலைமைய பார்த்தியா என் தலைமைல உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணம். இதுக்கு நான் மூச்ச கொடுத்து என் நைனாகிட்ட கட்டளை

அத்தியாயம் 17 Read More »

அத்தியாயம் 16

காலைப்பொழுது விடிய ஆதவன் அவன் வேலையை செவ்வன செய்து கொண்டிருக்க, வழமை போல் காலை நேர ஓட்ட பயிற்சியினை முடித்துவிட்டு தனது அலைபேசியை காற்றலையில் இணைத்து அதனுடன் செவி மடலில் காதொலிப்பானுடன் இணைத்து இருந்தான் இன்னுழவன். உடையவள் குரல் இன்று அவன் செவிகளில் எட்டப் போவதில்லை என்று ஏற்கனவே யூகித்தவன், இருந்தாலும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் காற்றலையில் சிந்தையை செலுத்தினான். கவனம் செவிமடலில் ஒலிக்க இருக்கும் சப்த குரலில் இருந்தாலும், விழிகளோ தொடுதிரையில் முன்தினம் உடையவள்

அத்தியாயம் 16 Read More »

அத்தியாயம் 15

“வாடா வீட்டுல பஞ்சாயத்து” என வீட்டை அடைந்திருந்தனர் இன்னுழவன் அகரனும். இன்னுழவன் வீட்டிற்குள் நுழைய அவன் பின் அகரன் நுழைய.. வீட்டு நடுக்கூடத்தில் சக்திவேல் மற்றும் தங்கமணி அவரின் கணவன் ராஜசேகர் அமர்ந்திருக்க, வீங்கிய கன்னங்களுடன் விழிகளில் நீருடன் நின்று கொண்டிருந்தாள் நந்தனா. நந்தனாவின் விழிகளோ முதலில் வந்த இன்னுழவனைத் தாண்டி பின்னால் வந்த அகரனின் மீது படிந்தது ஏக்கமாய். அகரனும் அவளை தான் பார்த்தான் விழி அதிர்வுடன். தன்னவள் கலங்கிய விழி கண்டு உள்ளமது பதைபதைத்தாலும்

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

அவள் பேச… அவன் இரசிக்க… குறுக்கே கரடியாய் அழைதிருந்தார் மைதிலி அவளை போனின் வாயிலாக. அவ்வளவு நேரம் இன்னுழவனுடன் புதிதாய் பூத்த மலராய் பேசிக் கொண்டிருந்தவள் முகமது அலைபேசியின் திரையை பார்த்தவுடன் சுருங்கியது. முகம் மட்டும் சுருங்கவில்லை குரலும் தளர்ந்தது. அனைத்தையும் மறந்து பேசியவள் மனமும் விழிகளும் வெறுமையை உமிழ்ந்தது. இன்னுழவன் கண்ணில் இருந்து அதுவும் தப்பவில்லை. இன்னுழவனை ஏறெடுத்து பார்த்தவளோ “சரிங்க நீங்க பாத்து போங்க இருங்க. எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பனும். சாரி

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 13

காற்றடித்து ஓய விழிகள் நான்கும் மோத இருவரும் ஒருவருக்கொருவர் நின்றனர் அருகாமையில். இருவருக்குமான முதலாம் சந்திப்பு அரை நிமிட மோதல் சந்திப்பாக இருந்த போதும், இப்பொழுது இச்சந்திப்பானது பல வருட பிணைப்பிற்கான சந்திப்பாய் உயிர்தெழுந்தது இருவர் மனதிலும். இன்னுழவன் மேக விருஷ்டி முன் நின்றவன், “ஏய் பொண்ணே ஏன் என்ன தேங்கா பிஞ்சால அடிச்ச” என்றான் தாடை இறுகியவனாய். “யோவ் வளர்ந்தவரே… அதான் காத்து அடிக்குதுன்னு தெரியுது இல்ல சுத்தி முத்தி பார்க்க மாட்டீங்களா” கேட்டாள் ஆவேசமாக

அத்தியாயம் 13 Read More »

error: Content is protected !!