
Author
Vaasanthi Shankar
அவள் பேச…
அவன் இரசிக்க…
குறுக்கே கரடியாய் அழைதிருந்தார் மைதிலி அவளை போனின் வாயிலாக.
அவ்வளவு நேரம் இன்னுழவனுடன் புதிதாய் பூத்த மலராய் பேசிக் கொண்டிருந்தவள் முகமது அலைபேசியின் திரையை பார்த்தவுடன் சுருங்கியது.
முகம் மட்டும் சுருங்கவில்லை குரலும் தளர்ந்தது.
அனைத்தையும் மறந்து பேசியவள் மனமும் விழிகளும் வெறுமையை உமிழ்ந்தது.
இன்னுழவன் கண்ணில் இருந்து அதுவும் தப்பவில்லை.
இன்னுழவனை ஏறெடுத்து பார்த்தவளோ “சரிங்க நீங்க பாத்து போங்க இருங்க. எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பனும். சாரி உங்கள நான் தப்பா பேசி இருந்தா மன்னிச்சிகோங்க.
அண்ட் தேங்க்ஸ் சரியான நேரத்துல கார்ல சத்தம் கொடுத்ததுக்கு. அந்த தாத்தா வெயில்ல நின்னது எனக்கு தெரியாது. நான் டென்ஷன்ல இருந்தனா அதனால கவனிக்கல” என்றவள் போன் விடாது அடித்தது.
இவ்வளவு நேரம் தன்னுடன் துள்ளி குதித்து பேசிக் கொண்டிருந்தவளின் நொடி நேர முக வாடலை கண்டவன் மனமோ கணக்க ஆரம்பித்து விட்டது.
அவளின் தளர்ந்த வதனத்தை கொடுத்த அந்த அலைபேசியை பறித்து உடைக்கும் அளவிற்கு கோவம் கனல் கன்றது இன்னுழவனிற்கு உள்ளுக்குள்.
ஏதும் செய்யாது அவனும் அமைதியாக தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவளை உள்ளுக்குள் அனல் வீச.
போனுக்கு உயிர் கொடுத்து காதில் வைத்தவளும், “மா நான் வந்துட்டேன் மா… இன்னும் கொஞ்சம் நேரத்துல வீட்டுக்கே வந்துருவேன், எப்படி வரணும்னு எனக்கு லொகேஷன் மட்டும் ஷேர் பண்ணுங்க” என்றாள் எரிச்சல் கலந்த சலிப்புடன்.
எதிர்புறத்தில் மைதிலியோ, “மேகா நீ ஊருக்குள்ள என்ட்ரி ஆகும் போது எனக்கு கால் பண்ணுன்னு சொல்ல தான செஞ்சேன். ஏன் சொல்லல? நீ தனியாலாம் வர வேண்டாம். இரு நானும் அப்பாவும் வண்டி எடுத்துட்டு வர்றோம்” என்றார்.
அவர் பேச்சி மேலும் அவளுக்கு எரிச்சலூட்ட “அம்மா நீங்க வண்டியில வந்தாலும் நான் என் வண்டியில தானே வர முடியும். எதுக்கு இவ்வளவு பயப்படுறீங்க. ஏம்மா என்ன போட்டு படுத்துறீங்க. முடியல மா மூச்சு முட்டுது” என்றவள் அலுத்து கொண்டு அலைபேசியை துண்டித்திருந்தாள் பெரும் மூச்சுடன்.
இங்கு அவளின் சம்பாஷனையை கேட்ட இன்னுழவனுக்கோ அதுவும் கடைசி கடைசியாக அவள் கூறிய வார்த்தையில் சர்வமும் ஒடுங்கியது. இதயம் ஒரு கணம் வேலை நிறுத்தம் செய்தது.
மீண்டும் அவனை பார்த்தவள், “வளர்ந்த சார் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” கேட்க,
என்ன என அவன் புருவம் தூக்க…
“இங்க சோமசுந்தரம் இல்ல… இல்ல… ஆறுமுகனார் தாத்தா வீட்டுக்கு எப்பிடி போகணும்?” என்றாள்.
“மூச்சு முட்டுற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு அத்தை இப்பிடி பயப்புடுறாங்க? பிடிக்காத கல்யாணத்த குடும்பத்தையே எதிர்த்து என் நடத்த நினைக்கிறாங்க?” என பல கேள்விகளை மௌனமாய் தனக்குள் கேட்டு வைத்தான்.
“அவங்களுக்கு நீங்க என்ன வேணும்?” கேட்டான் தெரிந்தும் தெரியாதது போல்.
“அவரு என் தாத்தா”
“அப்போ சோமசுந்தரம்?”
“அவரு என் அப்பா?”
“ஓ… ஏதும் பிரச்சனையா?” அவன் கேட்க,
அவள் புருவம் சுருக்க
“இல்ல ஏதோ அப்ப டென்ஷன், இப்போ கூட இவ்வளவு டென்ஷன் அதான் கேட்டேன் தப்பா நினைச்சிகாத்திங்க”
“இல்ல இல்ல அதெல்லாம் இல்ல. ஊர்ல இருந்து தனியா வரேன்ல அதான் அம்மா பயப்படுறாங்க வேற ஒன்னும் இல்ல. கொஞ்சம் வழி சொல்றிங்களா” கேட்டாள் கெஞ்சுதலாக.
இவ்வளவு நேரம் அவளின் துடுக்கு பேச்சில் இரசித்து மிதந்தவன், இப்பொழுது அவளின் கெஞ்சல் மொழியினையும் இரசித்தாலும் மனமானது காரணம் தேடி அலைந்தது.
பெருமூச்சுடன் இன்னுழவனும் வழியை சொல்ல, அவனுக்கு நன்றி வைத்து சிறு தலையசைபுடன் அங்கிருந்து நகர்ந்தாள் மேக விருஷ்டி.
செல்லும் அவளை தான் இமை அசையாது பார்த்து நின்றான் இன்னுழவன்.
வயலை கடந்து கார் கதவை திறந்தவளோ மீண்டும் அவளை நோக்கயவளாய், “ஹலோ சார் நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க நான் யார் கூடயும் கடலை போடலாம் இல்ல. நான் என் தம்பி கூட தான் பேசிட்டு வந்துட்டு இருந்தேன். எனக்கு எல்லாமே என் அப்பாவும் அம்மாவும் சொல்லிக் கொடுத்து தான் வளர்த்திருக்காங்க ” என ஏறி காரை எடுத்து புறப்பட்டாள்.
மேக விருஷ்டி வீட்டை அடைய யோசனையுடனே வீட்டை அடைந்து உணவருந்தாது உடை மாற்றி கார்மென்ட்ஸை அடைந்திருந்தான் இன்னுழவன்.
கார்மெண்ட்ஸில் வேலைகள் ஆயிரம் கிடக்க அத்துணையும் ஒதுக்கி வைத்து தீவிர யோசனையுடன் அவன் இருக்க, “டேய் அந்த யூரோப் லோடு செக் பண்ணிட்டியா டெஸ்பேஜ் பண்ணிடலாமா?” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்திருந்தான் அகரன் கையில் கோப்புகளுடன்.
யோசனையோடு அமர்ந்திருந்தவன் முன் அமர்ந்தவன், “டேய் என்ன யோசனை எல்லாம் தீவிரமா இருக்கு. நாளைக்கு உன் மாமா பொண்ணு கல்யாணத்தை பத்தி யோசிக்கியா… அதெல்லாம் பக்கா எந்த பிரச்சனையும் இல்லாம கல்யாணம் நல்லபடியா நடக்கும்” என்றான் அகரன் உறுதியாக.
அவன் பதிலுக்கு இடவலமாய் தலையசைத்த இன்னுழவனோ “ஹீம்… ஹிம்… இப்ப அந்த கல்யாணம் நடக்கணுமானு தோணுது டா எனக்கு” என்றானே பார்க்கலாம்.
அவன் பதிலில் இப்பொழுது அதிர்ந்தது என்னவோ அகரன் தான்.
“டேய் என்னடா சொல்ற…?” அகரன் அதிர
அனைத்தையும் ஒன்று விடாது சொல்லி இருந்தான் கோர்வையாக நண்பனிடம் இன்னுழவன்.
அனைத்தையும் கேட்ட அகரனோ, “என்னடா சொல்ற அப்போ பொண்ணுக்கு விருப்பம் இல்லாம கல்யாணம் நடக்குதா…?”
இன்னுழவனும் மீண்டும் இடவலமாய் தலையசைத்தவன், “பொண்ணுக்கு மட்டும் இல்ல பொண்ணோட அப்பா, தம்பி அம்மாவ அதான்… என் அத்தைய தவிர யாருக்குமே விருப்பமில்ல இந்த கல்யாணத்துல அப்படிங்கறது பட்டவட்டமா தெரியுது டா” என்றான் தீர்க்கமாக.
“ஒருவேளை அவங்க ரொம்ப பயப்படுறாங்கன்னா அப்பாவுக்காக இருக்குமோ. ஏன்னா அவங்க காலத்துல பார்த்த சக்திவேல நெனச்சி இப்பவும் பயந்துட்டு இருக்கலாம்.
ஆனா அதுக்கும் இப்படி அவசர அவசரமா விருப்பமே இல்லாத கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்?” எனக் கேள்விகளுடன் குழம்பினான் அகரன்.
“இல்ல இதுல வேற ஏதோ பிரச்சனை இருக்கு. நமக்கு டைம் வேற ரொம்ப கம்மியா இருக்கு அகரா. விடிஞ்சா கல்யாணம் அதுக்குள்ள என்ன பிரச்சனைனு கண்டு பிடிக்கணும்.
நீ மாப்ள சைடுல இருந்து கொஞ்சம் டீடெயில்டா விசாரி. மாப்பிள வீட்டுக்கும் எங்க அத்தைக்கும் என்ன சம்பந்தம் அவங்களோட உறவு வட்டாரம் எப்படி என்று கொஞ்சம் விசாரி” என்றான் தீவிரமாக.
“சரிடா ஆனா இவ்வளவு யோசிக்கும் போது உன் மாமாக்கே கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா நீ உன் மாமாகிட்டயே கேட்கலாமே. இல்ல உன் மாமா பொண்ணுகிட்ட கூட கேட்கலாம்” அகரன் கேட்க,
“கேட்டாலும் ரெண்டு பேருமே சொல்ல மாட்டாங்க. என் மாமா ரொம்ப அழுத்தக்காரர் டா அவர் பொண்ணு அவர மாதிரி தானே இருப்பா” என்றவனோ,
“ஆனா இத பத்தி ஒருத்தன் கிட்ட கேட்கலாம், அவன் சொல்றதுக்கு வாய்ப்பு இருக்கு” என்றான் இன்னுழவன் உறுதியாக நாடி தடவி.
“யாருடா அது?” கேட்டான் அகரன் ஆர்வமாய்.
“நிவர்த்தனன், என் மாமா பையன்” என்றான் இன்னுழவன்.
“ஏத வச்சி சொல்ற அவன் நம்மகிட்ட எல்லாத்தையும் சொல்லுவான்னு?” சந்தேகமாய் அகரன் வினவ
அன்று நடந்த உரையாடலை பற்றி கூறினான் இன்னுழவன் ஒன்று விடாமல்.
“ஓ… அப்போ வாய்ப்பு இருக்கு டா…”
“அவன் கல்யாணத்துக்கு வந்துட்டானா, நேர்ல போய் பேசுற வேண்டியது தான…”
“இல்ல டா அகரா அவன் நாளைக்கு தான் இங்கயே வரான். வொர்க்கா அவுட் ஆப் கண்ட்ரி”
“அப்போ அவன் போன் நம்பர் இருக்கா?”
ஹீம்… ஹிம்… உதட்டை பிதுகினான் இன்னுழவன் வெறுமையாய்.
“போன் நம்பரும் இல்ல… அவனும் இங்க இல்ல… அப்போ இப்ப என்னடா பண்றது?”
“என் மாமாகிட்ட இருந்து நான் அவன் நம்பர் வாங்குறேன் டா” என்றான் இன்னுழவன் சிந்தனையில்.
“அப்போ சரி டிலே பண்ணாம வாங்கி கேளு டைம் இல்ல. அப்புறம் நான் சொல்ல வந்ததே மறந்துட்டேன்” என்றான் அகரன்.
“என்ன?”
“உன்னோட ஆள் டீடைல் கேட்டிருந்தியே…” அகரன் கூறும் போது சடுதியில் தென்றல் வீசினாள் நண்பகளில் தன்னுடன் உரையாடிய தன் மாமன் மகள். அவன் அறியா அவன் காதலி ரெயினி ஏஞ்சலான மேக விருஷ்டி.
“ஹிம் ஆமா கிடைச்சுதா…?” விழிகள் மின்னியது மனம் மாமன் மகள் தான் அவளோ எதிர்பார்த்தது காலையில் அவள் அருக்காமையில் உள்ளுக்குள் ஏற்பட்ட ஈர்ப்பில்.
“அவங்களுக்கு இன்னைக்கு தான் லாஸ்ட் ஷோவாம் டா. அதுமட்டும் இல்லாம அவங்க இன்னையோட வேலைய ரிசைன் பண்ணிட்டாங்களாம்” அகரன் சோகமாய் கூற…
“எனக்கு தெரியும்.” என்றான் இன்னுழவன் இறுக்கத்துடன்.
“எப்பிடி டா?”
“அவ என்கிட்ட பேசுனதுல வச்சே நான் புரிஞ்சிகிட்டேன், நீ மேல சொல்லு…”
கையை விரித்து, “மேல சொல்ல ஒன்னும் இல்ல… அதுக்கு மேல உள்ள டீடைல் எல்லாம் சேனல் மேனேஜர் தான் சொல்லணுமாம். சோ அவங்க உனக்கு மெயில் பண்றேன்னு சொல்லி இருக்காங்க. நாளைக்குள்ள மெயில் வந்துரும்.
எப்படியோ நம்ம ப்ரண்ட் ஆட் கொடுக்கிறேன் சொன்னதால டீடைல் உடனே தரேன் சொல்லிட்டாங்க” என்றான் அகரன் சிறு நகைப்புடன்.
மேலுமவன், “டேய் இன்னுழவா நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டியே…?”
“என்ன?” இன்னுழவன் புருவம் உயர்த்தன…
எச்சிலை கூட்டி விழுங்கியவன், “இல்ல நீ அவங்கள காதலிக்கிற ஓகே, அவங்க உன் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணது கூட இல்ல, நீயுமே ஷோ வழியா பாட்டு மூலமா தான் அவங்ககிட்ட பேசி இருக்க.
அவங்க டீடைல் எடுத்து தேடி போற அளவுக்கு ரொம்ப ரிஸ்க் எடுத்துட்டு இருக்கியே, உன்ன லவ் பண்ணுவாங்களா அவன் முறைக்க, இல்ல லவ் பன்றாங்களான்னு…
ஒரு வேளை வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருக்கலாம், கமிட் ஆயிருக்கலாம். அப்படி இருந்தா என்ன பண்ணுவ டா” கேட்டான் அகரன் குரல் தளர.
நண்பன் காதல் கை கூட வேண்டும் என மனம் விருப்பினாலும், அதுவே அவன் கை சேராது போய் விட்டால் அவன் தாங்குவானா என மனம் பரிதவிக்கவும் செய்தது ஒருபக்கம்.
“அவ என்ன தவிர வேற யாரையும் லவ் பண்ணல, பண்ணவும் மாட்டா. அவ மனசுக்கு சொந்தக்காரன் எப்போதும் நான் ஒருத்தன் மட்டும் தான். இந்த இன்னுழவன் தான்.” என்றான் மிக உறுதியாக இன்னுழவன்.
“ஓ அவ்வளவு லவ்வு…” அகரன் நகைக்க…
இன்னுழவன் போன் ரீங்கானது.
“என்ன அப்பத்தா கூப்பிடுது…”
“பீட்ஸா வாங்கிட்டு வர சொல்லிச்சு டா மறந்துட்டேன்” என அட்டென்ட் செய்து காதில் வைத்தான் இன்னுழவன்.
“டேய் பேராண்டி…”
“அப்பத்தா பீட்ஸா மறந்துட்டேன். இரு வாங்கிட்டு வரேன்.”
“சரி டா… சரி டா… சிக்கன் பிஸா அதுவும் பைசியா (பீட்சா ஸ்பைசி) வாங்கிட்டு வா…”
இதழுக்குள் நகைத்தவன், “சரி அப்புறம்…”
“அப்புறம் என்ன நான் பெத்து வச்சிருக்க ரெண்டு வெஸ்ட் பாலவ்ஸும் ஏழரைய கூட்டிக்கிட்டு இருக்குதுங்க. சோ எங்க இருந்தாலும் சீட்டா பறந்து வா டா கோமுக்கு” என்றார் அம்பிகாமா.
“ப்ச்… இப்ப என்ன பஞ்சாயத்து? சரி வரேன் வை” இன்னுழவன் எரிச்சலாக…
“அடேய் பிஸாவ மறந்துறாத ஓகேய்…” என அழைப்பை தூண்டித்திருந்தார் அம்பிகாமா.
செங்கோதை மணம் வீசும்…
காற்றடித்து ஓய விழிகள் நான்கும் மோத இருவரும் ஒருவருக்கொருவர் நின்றனர் அருகாமையில்.
இருவருக்குமான முதலாம் சந்திப்பு அரை நிமிட மோதல் சந்திப்பாக இருந்த போதும், இப்பொழுது இச்சந்திப்பானது பல வருட பிணைப்பிற்கான சந்திப்பாய் உயிர்தெழுந்தது இருவர் மனதிலும்.
இன்னுழவன் மேக விருஷ்டி முன் நின்றவன், “ஏய் பொண்ணே ஏன் என்ன தேங்கா பிஞ்சால அடிச்ச” என்றான் தாடை இறுகியவனாய்.
“யோவ் வளர்ந்தவரே… அதான் காத்து அடிக்குதுன்னு தெரியுது இல்ல சுத்தி முத்தி பார்க்க மாட்டீங்களா” கேட்டாள் ஆவேசமாக தேங்காய் தலையில் விழுந்திருந்தாள் என்ன நடந்திருக்கும் என்ற பதட்டத்துடன்.
முன்னும் பின்னும் திரும்பி பார்த்தான் அவள் யாரை பேசுகிறாள் என்று இன்னுழவன் புரியாது.
அவனின் செயல் மேலும் அனல் கன்ற அவன் முன் கை நீட்டியவள், “யோவ் வளர்ந்தவரே உங்கள தான் யாரையோ பேசுற மாதிரி நிக்கிறீங்க” என்றாள் கடுக்காய்.
அவனும் நெஞ்சில் விரல் பதித்து “நானா… இட்ஸ் மீ வளர்ந்தவன்!” என்று கேட்டான் இறுக்கம் தளர்ந்து உள்ளுக்குள் நகைத்து.
“ஹிம்… ஆமா நீங்க தான் எத்தனை டைம் கூப்பிட்டேன். காது கேட்காதா போன்ல அவ்வளவு பிஸியா பேசிட்டு இருக்கீங்க. அங்க பாருங்க எவ்வளவு தேங்காய் விழுந்திருக்குன்னு மண்டையில் விழுந்திருந்தா இந்நேரத்துக்கு பொளந்து இருக்கும் மண்டை” என மேலும் சீறினாள்.
அவள் கோபத்தின் சீற்றலில் சிவந்திருந்த அவள் நுனி முக்கு தன்னை பார்த்தவனுக்கோ சிந்தையில் சடுதியில் வந்து சென்றாள் அவனின் மனம் கவர்ந்து மழையாய் அவனுக்குள் பொழிபவள்.
இன்னுழவனோ அவள் திட்டுவதை எல்லாம் ஏற்க்காது, “எனக்கு என் இவங்கள பார்த்ததும் என் ரெயினி ஏஞ்சல் நியாபகம் வருது. கார்ல வச்சு பார்க்கும் போதும் அப்பிடித்தான் மனசு கிடந்து அடிச்சுகிச்சி. இப்பவும் அப்பிடி தோணுது ஏன்?” என தனக்குள்ளே கேள்விகளை கேட்டான் சில நொடி சுற்றம் மறந்து.
ஆம் காரில் முதல் முதலில் ஜன்னல் வழி அவளை பார்த்த உடனே அவன் இதயம் கட்டுக்கடங்காது துடித்தது என்பது அவன் அறிந்த நிதர்சனம். அதனாலே அடுத்த நொடி அவள் முன் நிற்காது அவள் முகம் பார்க்காது பறந்து வந்தான்.
பின் தன்னிலை அடைந்தவன், “சாரி போன் பேசினதுல கவனிக்கல அண்ட் தேங்க்ஸ்” என்றான் அவளை நுனி முதல் அடி வரை ஆராய்ந்தவனாய்.
பார்க்காதே ஒரு பெண்ணை இப்பிடி பார்ப்பது தவறு என மூளை கட்டளையிட்டாலும் அவனே அறியாது மனமானது உந்தி தள்ளியது அவளை ஆராயச் சொல்லி.
“ஹலோ சார் போன் பேசும் போதும் கவனம் சுத்தி இருக்கணும்.” என்றாள் சிறிது நேரத்திற்கு முன் தான் செய்த தவறை மறந்து.
அதில் மீசைக்குள் நகைத்தவன், “ஓ அத நீங்க சொல்றீங்களா மேடம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடுரோட்ல காரை விட்டுட்டு ஃபோன் பேசிட்டு பின்னாடி ஒரு வயசானவரு வெயில்ல தனக்காக காத்து காயிறாருன்னு கூட பாக்காம ஏசில உட்கார்ந்திருந்தீங்களே, அதை மறந்துட்டீங்களோ…” என்றான் அவள் தவறை சரியாக சுட்டிக்காட்டி.
அதை எண்ணி நாக்கை கடித்து சட்டென்று தலையில் கை வைத்தவள் உதடுகள் பிதுங்க, “ஹான்… பின்னாடி அந்த தாத்தா நின்னத நான் கவனிக்கல. அதுக்கு நான் அந்த தாத்தா கிட்ட சாரி சொல்ல வந்தேன் அவங்க அதுக்குள்ள போயிட்டாங்க.
அதுக்காக நீங்களும் இப்படித்தான் போன்ல பேசும்போது கவனம் இல்லாமல் இருக்கணுமா. ஒன்னு கிடக்க ஒன்னு நடந்துருச்சின்னா என்னத்துக்கு ஆகுறது” என அவள் அறியாத அவன் மீது அக்கறையோடு பேசிக் கொண்டிருந்தாள் மேக விருஷ்டி.
யாருக்கோ நடந்திருந்தாள் கூட இதயம் இப்படி துடித்திருக்காது என்னவோ அவளுக்கு. மாறாக இதயம் இன்னும் துடித்து கொண்டிருந்தது சீரற்று.
ஆம், அவனை அந்நிலைமையில் பார்த்த நொடி முதல் இக்கணம் வரை அவளுக்குள் எழுந்த பதட்டம் இன்னும் அடங்கவில்லை என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த நிதர்சனம்.
இங்கு இன்னுழவனுக்கோ, “யாருடா இவ பார்த்து முழுசா ஒருமணி நேரம் கூட ஆகல. ஆனா, எனக்கும் அவளுக்கும் ஏதோ பல நாள் பழக்கம் இருக்கிற மாதிரி தோணுது”
“இன்னுழவா இந்த பொண்ண நினைச்சி உன் ஏஞ்சலுக்கு நீ துரோகம் பண்ணாதடா” அவன் மனசாட்சி எச்சரிக்க…
“இல்ல என் ஏஞ்சலுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்” மனசாட்சிக்கு பதில் உரைத்தவன்,
“முதல்ல இவ யாருன்னு நான் தெரிஞ்சுக்கணும். முன்ன பின்ன நான் இவள பார்த்ததும் மாதிரியும் இருக்கு பார்க்காத மாதிரியும் இருக்கு. முக்கியமா இவளோட குரல் எனக்கு ரொம்ப பழக்க பட்ட குரலாட்டோம் இருக்கு” என மனதுக்குள் புலம்பியவன் அவள் யார் என்று விவரம் அறிய முற்பட்டான்.
“உங்களுக்கு ஏன் மேடம் என் மேல இவ்வளவு அக்கறை அப்படியே தேங்காய் மண்டி விழுந்தாலும் என் மேல தான விழுந்திருக்கும் காயம் எனக்கு தானே நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க” என்றான் அவள் பதிலை எதிர்பார்த்து, அதை வைத்து அவளை கண்டுகொள்ள யூக்கித்து.
அவன் கேள்வியில் சட்டென்று அதிர்ந்தவள் அப்பொழுது தான் அவனுடனான பேசிய வார்த்தைகளை நீதானித்து பார்த்தாள்.
“அடியேய் விருஷ்… அவனுக்கு நீ யாருடி எதுக்காக அவன் மேல இவ்வளவு கேர் எடுத்து மூச்சு முட்ட பேசிட்டு இருக்க லூசு. இதுவே உன்ன கடிக்க போற அந்த வீணா போன ஷாப்பு பாட்டிலுக்கோ, இல்ல நீ காதலிச்சிட்டு இருக்க நம்ம இன்னுழவனுக்கோ கவலை பட்டா ஒரு நியாயம் இருக்கு. இவனுக்கு எதுக்குடி வாண்ட்டடா குடை பிடிக்கிற” என அவள் உள்மனசாட்சி கண்டமேனிக்கு காரி துப்பியது.
“அட ஆமா எனக்கு இவரு யாரு? நான் ஏன் இவ்வளவு பதட்டபடுறேன்? எல்லாத்துக்கும் மேல நான் எப்போ இன்னுழவன் லவ் பண்ணேன்!” அதையே அவள் மீண்டும் அதனிடம் கேட்டு வைக்க…
“கொய்யால நான் கேட்டதையே திருப்பி கேட்குற. அங்க பாரு உன்ன தான் அவன் குறுகுறுன்னு பார்க்குறான் ஏதாவது பேசி தொலை. அதுமட்டும் இல்லாம நீ இன்னுழவன் லவ் பண்றது ஊருக்கே தெரியும் ஆத்தா” என வறுத்தெடுத்தது அவள் மனசாட்சி அவளை.
இன்னுழவனும் அசையாது அவளையே தான் பார்த்துக் கொண்டு நின்றான் பதிலை எதிர்பார்த்து.
‘பேசாம இங்க இருந்து கிளம்பிடுவோமா… ப்ச்… ஹான் சமாளிப்போம்” என தனக்கு தானே காலரை தூக்கி விட்டுக் கொண்டவள்.
அவன் விழி பார்த்தாள். விழி பார்த்தவளுக்கோ இதய கூட்டில் ஏதேதோ உணர்வுகள். அடுத்த கணம் பார்வையை திருப்பியிருந்தாள்.
இவ்வுணர்வு அவளுக்கு மட்டுமா என்றால் அது தான் இல்லை அவனுக்கும் தான்!
அவளோ, “ஹான்… எதுக்கு அக்கறைன்னா நீங்க நிக்கிறது எங்களோட வயல்ல” இன்னுழவன் புருவங்கள் இடுக்கின, ஏனென்றால் அதுவோ அவன் வயலாக்கிற்றே!
“நீங்க பாட்டு எதையும் கவனிக்காம போன் பேசி உங்க மண்ட பொளந்து அதுக்கப்புறம் ஊருக்குள்ள இவங்க தோட்டத்துல தான்னு தம்பட்டம் அடிக்கவா. அப்புறம் எங்க குடும்ப கவுரவம் என்னத்துக்கு ஆகுறது.
நீங்க சூதானமா இல்லாம உங்களுக்கா நாங்க கஷ்டப்படுறதா” என்றவள் மனசாட்சியோ, “என்னடி விருஷ் பொசுக்குன்னு உன்னோட வயலுன்னு சொல்லிட்ட” என எதிர் கேள்வி கேட்டது.
“சொல்லி போடுவோம், இவனுக்கு என்ன தெரியவா போகுது. நீ வாய மூடிட்டு பேசாம உள்ள கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு இரு, நான் முதல்ல இவன்கிட்ட இருந்து நழுவி இந்த இடத்தை விட்டு காலி பண்ணனும்” என்று மீண்டும் தன் மனசாட்சியை அடக்கினாள் மேக விருஷ்டி.
அவளின் எங்களின் வயல் என்ற உரிமை பேச்சிலே “உங்களுடைய வயலா…?” கேட்டான் புருவம் வளைய இன்னுழவன்.
அவளும், “ஹான் எங்களோட வயல் தான். ஏன் பட்டா, பத்திரத்தை எல்லாம் எடுத்துட்டு வந்து உங்ககிட்ட காட்டணுமா என்ன?” என்றாள் அகத்திலும் புறத்திலும் சற்றும் அசராது.
தன்னிடமே தன் வயலை தான் வயல் என்று கூறுபவளை கண்டவனுக்கு கோபம் வராது மாறாக புன்னகையே வந்தது.
உள்ளுக்குள் நகைத்தவன் அவளின் துடுக்குதன பேச்சை இரசித்து அவளுடன் மேலும் சிறிது நேரம் பேச்சை வளர்க்க எண்ணினான் சுவாரசியமா.
இருப்பினும் இவ்வளவு நாள் அவள் குரலில் இதம் கண்டவன் இன்று அறியாது அவள் அருகாமையில் இதம் கண்டான் அவள் அறியா.
“சுத்தி இருக்கிறது உங்க வயல் தானா..?” இன்னுழவன் கேட்க,
“ஹிம் ஆமா விழிகளை சூழல விட்டவள் கண்ணுக்கு எட்டுற தூரத்தில இருக்கிற எல்லாம் எங்களுது தான், உனக்கு இப்ப என்ன பிரச்சனை.
ஏதோ மண்டையில தேங்காய் விழக்கூடாதுன்னு ஹெல்ப் பண்ணா ஓவரா பேசிகிட்டு இருக்கீங்க. என்னோட பேக்ரவுண்ட் தெரியாம பேசிட்டு இருக்கீங்க” என்றாள் இடுப்பில் கை வைத்து.
இடுப்பில் கை வைத்து நிற்கும் அவள் அழகை அவன் விழிகள் அழகாய் படம் பிடித்து வைக்க… மூளையோ உன் ரெயினி ஏஞ்சல்டா ஏஞ்சல் என குச்சலிட… அதை எல்லாம் எங்கே அவன் கேட்டான்.
இதழ் கடித்து விடுத்தவன், “அப்படி என்ன உங்களுக்கு இந்த ஊர்ல பெரிய பேக்ரவுண்ட் இருக்கு. சொன்னீங்கன்னா நான் கொஞ்சம் தெரிஞ்சிக்குவேன்” என்றான் நக்கலாய்.
“தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க?” அவள் விழிகள் சுருக்க
அவனும் விடாது “நீங்களோ பெரிய இடம் உங்ககிட்ட நாங்க கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துக்குவோமில” என்றான் பவ்வியமான பாவனையில் கேலியாய்.
“ஹலோ என்ன பக்குவம் அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்க” என்றவளுக்கோ அப்பொழுதே அவள் மனதிற்கு தன் தந்தை சகோதரியின் மகன் தான் இந்த ஊர் தலைவர் நாட்டாமை எனக் கூறியது நினைவில் வர…
“நீங்க இப்பிடி பேசுறத மட்டும் எங்க அத்தான்ட சொன்னேன் வீச்சருவாள் எடுத்து வகுந்திருவாரு பார்த்துக்கோங்க. அப்புறம் தலை தனியா முண்டம் தனியா தான் இருக்கணும், யாரு என்னனு பார்த்து பேசணும் புரிஞ்சுதா…” என தில்லா மிரட்டினாள் சிற்றிடையில் கரம் பதித்து.
தன் முன் நிற்பவன் தான் அவள் கூறும் அத்தான் என் அவளும் அறியாது போனால், அவள் புகழ் பாடுவது தன்னை தான் என்று அவனும் அறியாது தான் போனான்.
அவள் பேச… பேச… அவள் பேச்சை ரசித்து அதில் லயித்தவனோ “அத்தானா ஓ அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா.. விட்டா உன் அத்தான் இந்த ஊருக்கே பெரிய மஸ்துன்னு சொல்லுவ போலயே” என்றான், இருப்பினும் சிந்தை அவள் குரல் வளத்தை ஆராயாமல் இல்லை.
“ஆமா என் அத்தான் இந்த ஊர் மஸ்துதான் அவர் தான் இந்த ஊர் தலைவர் உனக்கு தெரியுமா. அவர் பெயரை சொன்னா எல்லாரும் நடுங்குவாங்க. அவர் முன்னாடி வர்றதை பார்த்தா கூட எல்லாருமே தல குனிஞ்சு வணக்கம் வச்சு தான் போவாங்க. அது சின்ன சின்ன நண்டுல இருந்து பெரிய பெரிய சுண்டுவர” என வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள் மெச்சுதலாக.
இன்னுழவன் முகமோ கோண, “ங… சுண்டுவா…” என்றவனோ அவளே கூறாது அவள் வாய்மொழி தன்னில் வைத்தே தன்னை பற்றி அவள் கூறியதை அவதானித்து விட்டான் மிகச் சரியாக இவள் தன் மாமாவின் மகள் என்று.
எனினும் அதையும் தாண்டிய நெருக்கம் அவளிடத்தில் அவனின் ஆழ்மன ஏஞ்சலுக்கு நிகராய் காணாமல் இல்லை. அது என்னவென்று தான் அலசிக் கொண்டு இருந்தான்.
இன்று நடந்த சந்திப்பை எண்ணி ஆராய்ந்தவன் பருவ வயதில் அவளுடனா நடந்த சந்திப்பை சற்று சிந்தை ஏற்று ஆராய்ந்திருந்தால், உடையவள் கடந்து வந்த இன்னல்களை அறிந்து இன்றே இக்கணமே தனக்குள் மீட்டெடுத்திருப்பானோ என்னவோ!
இன்று நழுவ விட்டவனுக்கு இனி வரும் காலத்தில் மிட்டெடுக்கும் நிலையை அறிந்தாலும் விதி அதன் வேலையை செய்யும்.
செங்கோதை மணம் வீசும்…
எப்பிடியோ விதி மேல பழிய போட்டாச்சி. இனி நிம்மதியா தூங்குவோம்…🤗🤗.
சரியாக நண்பகல் வேளையில் கிருஷ்ணகிரியை அடைந்திருந்தாள் மேக விருஷ்டி மணம் முழுவதும் வெறுமை சூழல.
அந்தியூர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற மஞ்சள் வண்ண பலகை அவளை வரவேற்க…
காரை செலுத்தாது அவ்வூரினுள் நுழைய இருந்த ஒரே நேரத்தில் ஒரு வாகம் மட்டுமே முன்னும் பின்னும் செல்லும் அளவிற்கு இருந்த பாலத்தில் காரை அணைத்தபடி ஸ்டியரிங்கில் தலைசாய்த்து அமர்ந்தாள் வாடிய முகத்தோடு.
ஒருபுறம் விரும்பியவன் விரும்பிய வேலை என அணைத்தும் இழந்த எண்ணம் ஒருபக்கம் வதைக்க, விருப்பம் இல்லா வாழ்க்கை எண்ணி மனம் மறுபக்கம் பறிதவிக்க ஒரு நிலையில் இல்லாது அமர்ந்திருந்தாள்.
அந்நேரம் அவளை அழைத்த அலைபேசிக்கு உயிர் கொடுத்து சலிப்புடன் காதில் வைத்தவளிடம்,
“ஹிம் சொல்லுங்க மா…”
“மேகா நீ எங்க இருக்க? ரீச் ஆகிட்டியா எப்படி?” கேட்டார் மைதிலி தீவிரமாக எதிர் முனையில் இருந்து.
பெருமூச்சு எடுத்து விட்டவள் “நான் இன்னும் ரீச் ஆகலமா. நான் இன்னும் ரீச் ஆக ரெண்டு மணி நேரம் ஆகும். செம டிராபிக் நான் ரீச் ஆயிட்டு கண்டிப்பா உங்களுக்கு கால் பண்றேன் ப்ளீஸ்” என மேலும் அவர் பேச்சை ஏற்காது அழைப்பை துண்டித்திருந்தாள் மேக விருஷ்டி.
மீண்டும் அவள் ஸ்டியரிங்கில் தலை சாய மீண்டும் அழைத்தது அவள் அலைபேசி அவளை.
இம்முறை பல்லைக் கடித்து பார்த்தவள் கண்கள் சற்று துளிர்விட உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
“என்ன சிசி போய் சேர்ந்துட்டியா அங்க?” நிவர்த்தனன் வினவ…
மைதிலி படுத்திய பாட்டில் “ஆமாண்டா போய் சேர்ற நிலைமைல தான் இருக்கேன் சீக்கிரமா பால் ஊத்தவா” என்றாள் சினம் எழும்ப.
விளையாட்டான அவள் பேச்சில் அதிர்ந்தவன் “அக்கா… என்ன வார்த்தை பேசுற நீ” எனப் பல்லை கடித்தான் நிவர்த்தனன் எதிர்முனையில்.
தமையன் அவன் குரல் அதிர்வில் தான் தான் பேசிய வார்த்தையின் கடுமையை உணர்ந்தவள் தலையை அடித்து “சாரி டா… சாரி டா… வெரி சாரி டா…” என்றவள் மன்னிப்பு யாசிக்க
“ஏன் அக்கா இப்படி பேசுற, அந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி தொலைனாலும் சொல்லி தொலைய மாட்டேங்குற. இப்பிடி உன்னையும் வறுத்திகிட்டு எங்களையும் வருத்திகிட்டு ஏன்கா?” என்றான் விட்டேரியாக.
“சரி சரி அதெல்லாம் பிரீயா விடு. நம்ம வேற பேசலாம்” என்று அவன் பேச்சை திசை திருப்ப, “அதான பார்த்தேன் கல்யாணத்த பத்தி பேசும் போதெல்லாம் என்ன மட்டும் தான் திசை திருப்புற உன்ன எல்லாம் வச்சுக்கிட்டு…” தலையில் அடித்துக் கொண்டவன்,
“சரி போய் அங்க ரீச் ஆயிட்டியா இல்லையா? அம்மா உனக்கு கால் பண்ணாங்களா?”
“இன்னுமா பண்ணாம இருப்பாங்க, கிளம்புன நேரத்துல இருந்து குறைஞ்சது 50 போன் கால் வந்திருச்சுடா. முடியலடா எங்கயாவது ஓடி போயிரலாம் போல இருக்குது”
“இப்பவும் ஒன்னு கெட்டுப் போல அக்கா உன் கையிலேயே பாஸ்போர்ட் இருக்கு தான. காரை திருப்பி ஏர்போர்ட்டு போ உனக்கு நான் டிக்கெட் ரெடி பண்றேன். ஒன்னு ஆஸ்திரேலியாவா இல்ல உனக்கு பிடிச்ச வேற எங்க வேணாலும் போ. இல்ல அமெரிக்காவே போறியா போ. நான் இருக்கேன் அந்த இன்னு…” என்னும் போது
பின்னோடு இருந்து பலமாக கேட்ட ஹாரன் சத்ததில் அதிர்ந்தவள் கையில் இருந்த போனை நழுவ விட்டிருந்தாள் பட்டென்று.
திடுக்கிட்டவள் யார் என்று உள்ளிருந்து ஜன்னல் வழி பார்க்க, ஐவிரல் பதித்து கார் கண்ணாடியை தட்டும் சத்தம் அவள் செவிமடல் அடைந்தது.
“யாருடா அவன்…?” என்று கார் கண்ணாடிய அவள் இறக்க, அங்கு நின்று கொண்டிருந்தது வேறு யாருமல்ல சாட்சாத் நம் இன்னுழவன் தான்.
அவன் செயலில் திடீரென்று திடுக்கிட்டிருந்தவள் அவனை முறைக்க, கொளுத்தும் வெயிலில் நெற்றி சுருங்க அவளுக்கு மேல் அவளை முறைத்தவனோ,
“ஏய் இந்தா புள்ள யாருமா நீ. நடுரோட்டில வண்டி விட்டுட்டு தூங்கிட்டு இருக்கிறவ. என் வீட்ல நைட்டு ஃபுல்லா தூங்கலையோ? ஓரமா வண்டிய விட்டுட்டு தூங்கு மா. இல்ல வீட்டுக்கு போய் தூங்கு. இப்படி வண்டிய நெடுவாள நடு ரோட்ல விட்டு நின்னனா மத்தவங்க போக வர வேண்டாமா” என்றான் ஏகத்துக்கு சினம் கொண்டவனாய்.
அவளோ கோவத்தில், “யூ பிளாடி ரஸ்க்கள், ஸ்டுபிட், நோன்சன்ஸ், கவுண்டர்” என்று ஆங்கில வார்த்தைகளால் அவனை அவள் அர்ச்சிக்க…
கையில இருந்து தவறி எதிர்ப்புறம் இருந்த சீட்டில் விழுந்த அலைபேசியில் திடீரென்று ஏற்பட்ட சத்தத்தில் நிவர்த்தனனோ “ஹலோ… ஹலோ சிசி…” என்று விடாது குரல் கொடுத்தான்.
பைக்கில் அமர்ந்தப்படி அவளின் ஆங்கில பேச்சிலும் அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த நிவர்த்தனன் குரலையும் கேட்டவன், “ஓ வெளியூர் பிள்ளையா நீ. எதுவோ இருந்துட்டு போ… அந்த பக்கம் ஓரஞ்சாரமா போய் கடலை போடுமா.
இனி உன் வண்டி ஊருக்குள்ள நடுரோட்டில் நிக்கிறத பார்த்தேன் நாலு டயரையும் பஞ்சராக்கி போடுவேன் பார்த்துக்கோ. அப்புறம் தள்ளிட்டு தான் போகணும். வீட்டுல மரியாதையா பேச சொல்லி கொடுக்கலையா உனக்கு? முதல்ல வண்டிய எடு” என்று மீண்டும் அவன் கார் கதவில் அடித்தான் பளார் பளாரென்று.
ஏனென்றால் காருக்கு பின்பு மாட்டு வண்டியில் காய்கறிகளை வைத்துக்கொண்டு வயதான முதியவர் ஒருவர் வெயில் பொழுதில் தலையில் துண்டை போட்டு அமர்ந்திருந்தார்.
டவுனில் வேலையை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தவனுக்கு இந்த காட்சி புலப்பட்டது. அதிலும் எசியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் மேக விருஷ்டி பார்த்தவனுக்கு கோவம் கொந்தளித்து.
அவன் பேச்சில் மட்டு பட்டிருந்த சினம் மீண்டும் கிளர்த்தெழ மேலும் எரிச்சல் கண்டவள் வேகமாக காரை ஓரமாக செலுத்தி நிறுத்தி கதவை திறந்த படார் என்று அறைந்து இறங்கினாள்.
இன்னுழவனும் பைக்கை ஓரமாக நிறுத்தியவன் இறங்காது திரும்பி, “நீங்க போங்கய்யா முதல்ல. அவங்க நின்னா போக சொல்லாம வெயிலேயே அவங்க போகும் வர கத்துக்கிட்டு நிற்பிரா நீரு… சத்தம் கொடுக்க வேண்டாமா…” என அவரை கடிந்து கொண்டு முதலில் அப்பெரியவரை அனுப்பி வைத்தான்.
இதையெல்லாம் அதன் பின்பு தான் கவனித்திருந்தாள் மேக விருஷ்டி.
தான் செய்த தவறின் விளைவை எண்ணி வருந்தியவள் “சாரி” என அவரிடம் மன்னிப்பு கூற வருவதற்குள் அம்முதியவர் முன்னே செல்ல… அவருக்கு ஓரம் வாங்கி பைக்கில் பறந்திருந்தான் இன்னுழவன்.
வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் மிடுக்காக புல்லட்டில் சென்று கொண்டிருக்கும் அவன் பின்புறத்தை தான் பார்த்து நின்றாள் மேக விருஷ்டி.
இங்கோ அலைபேசியில் விடாத அழைத்துக் கொண்டே இருந்தான் நிவர்த்தனன்.
“அச்சோ பாவம் அந்த தாத்தா, எவ்வளவு நேரம் நின்னாரோ இந்த வெயில்ல. எல்லாம் இந்த அம்மா பண்றதால” என மைதிலியை வறுத்தெடுத்து தன் மனம் வருந்தியவள் மீண்டும் காரில் ஏறி அலைபேசியை காதில் வைத்தாள்.
“என்னாச்சு அக்கா எதுவும் ப்ராப்ளம் இல்லையே? யாருக்காக அவன் குறுக்கே ஏதோ ஒரு வாய்ஸ் கேட்டுச்சு” என நிவர்த்தனன் கேட்க, நடந்துவற்றை கூறினாள் மேக விருஷ்டி.
“தப்பு உன் மேல தான் சிசி. ஓகே அந்த தாத்தாகிட்ட சாரி கேட்டியா?”
“எங்க அந்த தாத்தாவும் போயிட்டாரு. அவருக்காக என்ன திட்டுன அந்த வில்லேஜ் ஜென்ட்டில் மேனும் பைக்குல பறந்துட்டாரு.” என்றாள் மேக விருஷ்டி உதட்டை பிதுக்கி.