
Author
Vaasanthi Shankar
மேக விருஷ்டியோ நிவர்த்தனன் கேள்வியில் சற்று அதிர்ந்தவள் அதை வெளி காட்டிக் கொள்ளாது, “டேய் எருமை என்னடா சொல்லிக்கிட்டு இருக்க காதல் காலர் அப்டின்னு லூசுத்தனமா உலறிக்கிட்டு இருக்க. நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, அதுக்கு பதில் சொல்லாம நீ என்கிட்ட இப்படி கேட்டு வைக்கிற” என்றவள் சீற…
“ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சிசி எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆக்குற” நிவர்த்தனன் வினவ…
அவளோ தனலாய் முறைத்தவள், “அவரு என்னோட ஷோ காலர். ஜஸ்ட் காலர் மட்டும் தான். ஷோல பேசுவாரு தட் சிட். மற்றபடி அவரு யாரு, எங்க இருக்காரு, அவரு கேரக்டர் என்ன, இன்னுழவன் அப்பிடிங்கிற பெயரே ரியல் நேம் தான. இப்பிடி ஏதுமே தெரியாத அவர நான் ஏன்டா காதலிக்கணும். நீயா கற்பனை பண்ணிக்காத. அப்படி இருந்தா நான் உன்கிட்ட சொல்லாம இருப்பேனா” பதில் வினவினாள் ஆவேசமாக.
“அதே மாதிரி தான் அந்த பொண்ணு என்னோட கிரஷ். பட் அவள பாக்கும்போது எனக்குள்ள ஏதோ தோணுது. அது லவ்வான்னு எனக்கு தெரியல. அப்படி இருந்தா என் செல்ல அக்கா உன் கிட்ட சொல்லாம இருப்பேனா” என்றவன் அவள் தோளில் கை போட்டுக் கொண்டான்.
“நீ சொல்லறத வச்சு பார்த்தா சீக்கிரமே அப்ப அந்த பொண்ண நீ லவ் பண்ணிட்டு வந்து நிக்க தான்டா போற” என்றாள் மேக விருஷ்டி ஒரக்கண்ணில் நகைக்க.
“பார்க்காலாம் சிசி, மேபி என்ன மாதிரி நீயும் நிக்கலாம்ல” அவன் புதிராயாய் பேச…
“டேய் கொஞ்ச நாள்ல கலயாணத்த வச்சிகிட்டு, நான் லவ்ன்னு வந்து நின்னா மைதிலி என்ன ஓட விட்டே அடிக்கும் டா…” குலுங்கியவள் நகைத்தாள் மனம் முழுதும் வெறுமையாக.
“அட ஆமால்ல கல்யாணம் இருக்குல உனக்கு. அப்போ அப்போ நியாபகம் படுத்து சிசி எனக்கு அது வேற மறந்து மறந்து போகுது” என்றான் நிவர்த்தனன் நெற்றி வருடி சலிப்பாக .
“டேய் அத நானே நியாபக படுத்திக்க மாட்டேன். இதுல உனக்கு வேற நியாபக படுத்தனுமா போடா…” என அவன் மண்டையை ஆட்டி விட்டு நகர்ந்தாள் மேக விருஷ்டி.
நடக்க விருக்கும் கல்யாணத்தில் துளியும் நாட்டம் இல்லாத செல்லும் தன் சகோதரியினை நினைத்து விரக்தியாய் சிரிக்க மட்டும் தான் முடிந்தது நிவர்த்தனனால்.
இன்னுழவன் தவிர்த்து அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பாட்டிற்காக அமர்ந்திருக்க பரிமாறிக் கொண்டிருந்தார் கோதாவரி.
சக்திவேல் குரலை செருமியவர், “என்ன இன்னும் உன் பையன் வீட்டுக்கு வரலையா?” கேட்டார் சாப்பிட்டவராய்.
“இல்லங்க இப்ப வரக்கூடிய டைம் தான் இப்ப வந்துருவான்” கோத்தாவரி கூற…
“அவ பையன்ன நீ எதுக்குடா விசாரிக்கிற. ஏண்டி இவள என்ன பார்த்துகிட்டு இருக்க கொஞ்சம் சட்னி வை. எப்ப பார்த்தாலும் நைட் இந்த இட்லியை மட்டுமே எனக்கு தா…” என்றவாரு சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அம்பிகாமா.
அவரை ஏற இறங்க முறைத்த சக்திவேலோ, “அவ பையனா…! ஏன் அவனப் பத்தி கேட்க எனக்கு உரிமை இல்லையா?” காரமாக வந்தது அவர் வார்த்தை.
இம்முறை சக்திவேல் நேர் கொண்டு பார்த்த அம்பிகாமாவோ,
“நான் அவன உன் பையன் இல்லைன்னு சொல்லலப்பா, நீ தான் அவகிட்ட உன் மகன் இன்னும் வரலையான்னு கேட்ட. நீ கேட்ட தோரணைய வச்சு தான் நான் அவன அவ மகன்னு சொன்னேன்,
நீ அவகிட்ட நம்ம பையன் வந்துட்டானா கேட்கலையே… அப்படி கேட்டிருந்தன்னா நான் உன் பையனும் சொல்லி இருப்பேன்” என்றார்.
“என்கிட்ட மட்டும் இப்படி கூட கூட பேசுங்க, ஆனா உங்க பேரன் பண்றது எதையுமே கேட்காதீங்க” சக்திவேல் கோவமாய் சாட…
“என் பேரன் உன்ன விட எல்லா இடத்துலயும் எல்லா விதத்துலயும் சரியா தான் நடந்துகுவான் டா…” என்றவர் பதிலுக்கு விடாது சாடிக் கொண்டிருக்க, இனிதுழனியோ கோத்தாவரியை பார்த்தாள் இருவரையும் சமாளிக்கும் பொருட்டு.
“அத்தை விடுங்கலேன் எதுக்கு போட்டு வீணா நீங்க டென்ஷன் ஏத்திட்டு இருக்கீங்க” கோதாவரி குறிக்கிட்டார்.
“நீ சும்மா இருடி… நீ கேட்க வேண்டிய கேள்வி தான் நான் கேட்டுட்டு இருக்கேன். அது என்ன எப்ப பாத்தாலும் உன்மகன் உன்மகன். அப்போ இவனுக்கு பிறக்கலையா அவன். இல்ல அவன் வேற யாருக்கும்…”
“அம்மா என்ன பேசுறீங்க நீங்க” என அம்பிகா வார்த்தைக்கு இடை மறித்து கத்தி இருந்தார் சக்திவேல் ஆக்ரோஷமாக.
சரியாக அந்நேரம் வீட்டை அடைந்திருந்தான் இன்னுழவனும். போனில் அகரனுடன் பேசிக்கொண்டு உள்ளே நுழைந்தவனுக்கு சக்திவேலின் சத்தம் வாசல்படியிலேயே காதை கிழித்தது.
“டேய் நான் அப்புறம் பேசுறேன். அப்பத்தாவும் அப்பாவும் ஏதோ உள்ள காமெடி பொங்கல் கிண்டிகிட்டு இருக்காங்க நான் அதை எங்கன்னு பார்த்துட்டு கூப்பிடுறேன்” என அலைபேசி ஊடு கூறியவன், வேகமா உள்ளே நுழைந்திருந்தான்.
“என்னாச்சு அப்பத்தா ஏன் சத்தம் வாசல் வர கேக்குது?” அவ்வளவு நேரம் இலகுவாக பேசிக்கொண்டு வந்தவன் முகமது சக்திவேலை கண்டவுடன் விறைத்தது.
சக்திவேலும் எழுந்து நின்றவர் இன்னுழவனை கண்டு மேலும் ஏதும் பேசாது அமைதியாய் அமர்ந்து கொள்ள, “அந்த பயம் இருக்கட்டும்” என கிளுக்கி சிரித்து வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்ட அம்பிகாமாவோ,
“அது ஒன்னும் இல்லடா பேராண்டி சும்மா நானும், உன் அப்பனும் யார் குரல் ஒசத்தின்னு குரல் கொடுத்து விளையாடிகிட்டு இருந்தோம். நீ போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்றார் சக்திவேலை நக்கலாய் பார்த்த தன் பார்வையை மீட்டு புன்முறுவலுடன் இன்னுழவனிடம்.
அதை கேட்டு அவனும் பெருமூச்சு விட்டவன், “சரி இந்தா… அகரன் உனக்கு மோமோஸ் வாங்கி கொடுத்து விட்டான்” தன் கையில் இருந்த பார்சலை அம்பிகாமா அருகில் வந்து நீட்டி இருந்தான் இன்னுழவன்.
பற்கள் தெரிய வேகமாக அதைப் பெற்றுக் கொண்டவர், “வெஜ் மோமோஸா? இல்ல சிக்கன் மோமோஸாடா?” என்ன கேட்டபடி ஆர்வமாக அதை பிரித்தவர், இந்தாடி இவளே இந்த கல்ல உன் புருஷன் தலையிலேயே சக்திவேல் ஏறெடுத்து முறைக்க…
“சாரி… உன் புருஷன் தட்டுலையே கொட்டு” என அதை எடுத்து வாயில் வைத்தவர் ஒரு கடி கடித்தவாறு, “என்னடா வெஜ் வாங்கி கொடுத்து விட்டு இருக்கான்” என்ற போதும் அதை ருசித்து சாப்பிட தான் செய்தார்.
அப்படியே கோதாவரியையும், இனிதுழனியையும் பார்த்தவர், “அடியேய் ஆளுக்கு ஒன்னு ஒன்னு எடுத்துக்கோங்க. உங்கள பாக்க வச்சு தின்ன அப்பறம் என் வகுத்துக்கு ஏதாவது ஆயிட போகுது” என ஆர்வமாய் சாப்பிட கோதாவரியும், இனிதுழனியும் மென்புன்னகையுடன் தலையில் அடித்துக் கொண்டனர்.
“இந்த நேரம் சிக்கன்” இன்னுழவன் பேச… குறுக்கிட்ட சக்திவேலோ, “ஏன் மா இந்த நேரம் இந்த மாதிரி உணவெல்லாம் சாப்பிட்டா உன் உடம்புக்கு ஏத்துக்குமா. இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா?” அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தான் இன்னுழவன்.
“கொடுக்குறத திண்ணட்டு இருக்க வேண்டியது தான இதுல சிக்கனா… ஜொக்கன்னு சொல்லிக்கிட்டு, கண்டவன் எல்லாம் வாங்கி…” என்றவர் பொறிந்து தள்ள…
படியேறி சென்று கொண்டிருந்த இன்னுழவனோ அதைக் கேட்டு விட்டான். “அப்பா…” சட்டென்று திரும்பியன் குரலில் கடுமை நிறைந்திருக்க, அவன் கூர்பார்வையால் அவர் மீது நெருப்பை உமிழ்ந்திருந்தான் ஏகத்திற்கு.
அதில் தடுமாறிய சக்திவேலோ சட்டென்று கையை கழுவி எழுந்து கொள்ள கால்கள் சற்று தடுமாறி விட்டது.
வேகமா இனிதுழனி விழாது தாங்கி பிடிக்க, “பார்த்துடா வயசாகிட்டுப் போகுது இல்ல. பொறுமையா போ. ஏதுக்கும் சுகர், பிபி இருக்கான்னு சோதிச்சிக்கோ. ஒரு தடி வாங்கி பிடிச்சுக்கோ. சக்திவேல் புரியாது பார்க்க, ஏன்னா எப்போதும் பிடிச்சிக்கிட்டு இருக்க முடியாதுல. கோதாவரியை பார்த்தவர் உன் புருஷனுக்கு இனி பத்திய சாப்பாடு போடு” என்றார் எள்ளலாக மோமோஸை ரசித்து சாப்பிட்ட வண்ணம் அம்பிகாமா.
பெருமூச்சு இழுத்து விட்டு சக்திவேல் கடுப்புடன், “என்னமா நான் உன்ன சொன்னா… நீ என்ன சொல்றியா…” என்றவரிடம், “டேய் நிதர்சனத்த சொன்னேன் டா…” என்றார் வாயில் மோமோஸை மென்றவாரு புன்னகை தவழ.
சக்தி வேல் மேலும் ஏதும் பேசாது அனைவரையும் பார்த்து முறைத்து வைத்துவிட்டு நகர, அப்பத்தாவின் பேச்சில் அவ்வளவு நேரம் முகத்தில் இருந்த கடுமை தன்மை மறைய, “ஆனா அப்பத்தா நீ இருக்கியே…” என இதழ்கள் மெல்ல விரிந்து கொள்ள அறைக்குள் சென்று கொண்டான் இன்னுழவன்.
இங்கு எப்படி இருக்க அங்கோ…
சோமசுந்தரம்,மைதிலி, மேக விருஷ்டி, நிவர்த்தனன் உட்பட நால்வரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“மாப்பிள்ளை வீட்ல பேசியாச்சு நெக்ஸ்ட் வீக்கே கல்யாணத்தை வெச்சுக்கலாம் சொல்லிட்டாங்க. அதுக்கு அடுத்த வாரம் ஷாம் லண்டன் கிளம்புறானாமா… அதனால மேகாவையும் ரெடியா இருக்க சொன்னான்.” என ஆரம்பித்தார் சோமசுந்தரம்.
“ரெடியா இருக்க சொன்னானா…” இல்ல சொன்னாங்களாப்பா…?” என கேட்டான் அவரைப் பார்த்து நிவர்த்தனன்.
“ப்ச்… நிவர்த்தனா என்ன இது மரியாதை இல்லாம பேச்சு. அவன், இவன்னு…” எனக் கடிந்து கொண்டாள் மேக விருஷ்டி.
“சாரிக்கா” என்றவனிடம், “சொன்னாங்கப்பா…” என்றார் சோமசுந்தரம்.
“ஏன் அத நீங்க பார்த்து வச்சிருக்க மாப்பிள்ளையால சொல்ல முடியாதா…” என அடுத்த கேள்வியைத் அவன் தொடுக்க,
“ப்ச்… நிவர்த்தனா நீ என்ன கூட கூட பேசிக்கிட்டு இருக்க. அவன் ரொம்ப பிசியா இருக்கதால வீட்ல சொல்லி சொல்ல சொல்லி இருக்கான், இதுல என்ன தப்பு இருக்கு” என்று குரல் நுழைத்தார் மைதிலி.
“ஓ… அவளுக்கு நிச்சயதார்த்தம் பண்ணி வச்சி ஒரு வருஷம் ஆச்சு. இந்த ஒரு வருஷத்துல ஒரு நாள் கூட அந்த ஷாம்பு பாட்டிலால… நிவர்த்தனா…” மைதிலி கத்த, மேக விருஷ்டி சிரிப்பை அடக்க,
பெருமூச்சு இழுத்து விட்டவன், “சாரிமா… அந்த ஷாமுக்கு இவகிட்ட ஒரு ஹாய் சொல்ல கூட டைம் இல்லையா. ஹாய் சொல்ல கூட டைம் இல்லாதவன் நாளைக்கு கல்யாணம் முடிச்சுட்டு போயி என் அக்காவ எப்படி பார்த்துப்பான்” என்றான் தாடை இறுகியவனாய்.
“அதெல்லாம் நல்லா பாத்துப்பான் நீ கொஞ்ச நேரம் வாய மூடு. கல்யாணம் பண்ணிக்க போற அவளே அமைதியா இருக்கா நீ என்னடா கூட கூட பேசிக்கிட்டு இருக்க” என அவன் வாயை அடைத்தார் மைதிலி.
அவனோ மேக விருஷ்டியை முறைத்து சாப்பாட்டை தொடர…
மேலும் பேசிய மைதிலி, “இந்த கல்யாணம் அப்பா ஊர்ல வச்சி நடத்தணும்னு அப்பா ஆசைப்படுறாரு. இதை மாப்பிள்ள வீட்டிலும் பேசியாச்சு அவங்களும் சம்மதிச்சுட்டாங்க. அதனால அடுத்த வாரம் எல்லாரும் ஊருக்கு கிளம்பற மாதிரி இருக்கும். உங்க ரெண்டு பேரோட வேலைய எப்பிடி ஷெட்யூல் பண்ணனுமோ பாத்துக்கோங்க” என்றார்.
“வாவ்… வாவ்… உங்க விருப்பப்படி மாப்பிள்ளை பார்த்துட்டீங்க. அவர் விருப்பப்படி கல்யாணத்த அவர் ஊர்ல பிக்ஸ் பண்ணிட்டீங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்க போறவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தை நீங்க கேட்டீங்களா” என சாப்பாட்டை இடையில் முறித்து ஆதங்கமாக எழுந்துவிட்டான் நிவர்த்தனன்.
“டேய் நிவர்த்தனா…” என மேக விருஷ்டி அவனை அடக்கியவள், “என்னடா இது அப்பா, அம்மாவ எதிர்த்து பேசிட்டு இருக்க. இப்படித்தான் நான் உன்ன வளர்த்தேனா…?” என சகோதரியானவள் தாயாய் மாறி கண்டிக்க…
“ப்ச்…” என முகம் கோண சலித்துக் கொண்டு பெருமூச்சு இழுத்து விட்டவன், “சாரிக்கா”
“சாரி என்கிட்ட இல்ல அப்பா அம்மாகிட்ட” அவள் திருத்த,
“சாரிப்பா… சாரிமா… அண்ட் நீங்க எல்லாரும் நெக்ஸ்ட் வீக் ஊருக்கு கிளம்புங்க. என்னோட டீன் டாட்டர்க்கு சர்ஜரி இருக்கு. அதனால நான் ஆஸ்திரேலியா போக வேண்டி இருக்கும். அதை முடிச்சிட்டு நான் டைரக்ட்டா ஊருக்கு வந்துடறேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.
செல்லும் அவனை வெறித்து பார்த்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள் மேக விருஷ்டியும். பின் சோமசுந்தரமும், மைதிலியும் பார்த்துக் கொண்டனர் ஆழ்ந்து ஒருவரை ஒருவர்.
செங்கோதை மணம் வீசும்…
Don’t miss it your Golden comments and likes friend’s
மாலைப் பொழுதானது நெருங்க கண்ணாடி அறையில் தீவிரமாக கணிணியின் முன் இருந்து வேலை செய்து கொண்டிருந்தான், இன்னுழவன்.
“டேய் முடிஞ்சுதா… மணி 5:30” என கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அகரன்.
“இதோ முடிஞ்சுது” என நிமிராது பதில் அளித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியவன் எழும்ப, அவர்களின் முன் வந்து நின்றார் மேனேஜர்.
“சொல்லுங்க பிரசாந்த் சார்” இன்னுழவன் கேட்க,
“சார் ஜெர்மன் பைனல் பெமெட் கோட்டேஷன் பைல், நீங்க இதுல சைன் பண்ணனும். அகரனை பார்த்தவர் அண்ட் சார் நீங்களும் தான்” என்றார் பணிவாக.
“இன்னுழவன் டேபிள்ல வச்சிருங்க சார், நாங்க செக் பண்ணிட்டு அப்புறமா சைன் பண்ணிக்கிறோம்” என் அகரன் கூற… அவரும் சிறு தலையசைப்புடன் கோப்பை டேபிளில் வைத்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
பெருமூச்சு இழுத்து விட்டு “சரி போலாமாடா இப்ப கிளம்புனா தான் கரெக்ட்டா இருக்கும்” என்றவனாய் அகரன் முன் செல்ல… “6:00 மணிக்கு தானடா மணி 5:35 தான் ஆகுது” இன்னுழவன் பின் செல்ல… இருவரும் வெளியே வந்து வண்டியில் ஏறி புறப்பட்டனர் இனிதுழனியின் கல்லூரியை நோக்கி.
பரம்பரை சொத்தான தோட்டம், துறவு, வயல் என அனைத்தையும் இன்னுழவன் கவனித்துக் கொண்டாலும், அவனுடனே இருந்தான் அகரனும் அவனுக்கு உதவியாக.
அகரன் அவ்வாறு இருப்பது இன்னுழவனுக்கு சரியாக படவில்லை. நாளை பின் அவனுக்கு குடும்பம் என்று வந்தால் அப்பொழுது அவன் நிலையும் தரமும் சரியாக இருக்க வேண்டும் என எண்ணினான்.
அதனால் அவனை தனியாக தொழில் நடத்து உனக்கு பக்க பலமாய் நான் இருக்கிறேன் என இன்னுழவன் கூற, அகரனோ நீ பக்க பலமா இருக்க வேண்டும் பாட்னரா இருந்து நீயும் என்னோடு சேர்ந்து கொள் என அவன் கை கோர்க்க…
பின் இருவரும் சேர்ந்து யார் தயவும் இல்லாமல் வங்கியில் கடன் வாங்கி சிறிய அளவில் தொடங்கிய அவர்களின் கார்மெண்ட்ஸ் பிசினஸானது இன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்து நின்றது.
சரியாக இருவரும் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்துகொள்ள அவர்களின் முன் பரதநாட்டிய உடையோடு எழில் கொஞ்சும் ஓவியமாய் நடந்து வந்து வரவேற்றாள் இனிதுழனி.
“பரவால்லையே 6:00 ஓ கிளாக் ஃபங்ஷனுக்கு 5:55 க்கு வந்துட்டீங்க” என்றவள் இருவரையும் பார்த்து முறைக்க, “அதுவா குடை மிளகா ரொம்ப டையர்டா இருக்கா. அதான் சீக்கிரமா வந்து ரெஸ்ட் எடுக்கலாமென்னு” என்றவாற அகரன் அவளை வார…
“அதுக்கு நீ வீட்டுக்கு தானே போயிருக்கணும் எருமை எதுக்கு இங்க வந்து” என ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள் இனிதுழனி அவனை.
“எப்படியும் கொஞ்ச நேரத்தில நீ டான்ஸ் என்கிற பேர்ல ஆடி எல்லாரையும் தூங்க வைக்க போற. வீட்டுக்கு போனா இப்படி ஒரு தாலாட்டு கிடைக்காது பார்த்தியா” என்றவன் மண்டையில் நன்கென்று ஒரு குட்டையவள் வைக்க, தன் கரத்தை நீட்டியிருந்தான் இன்னுழவன் இனிதுழனியின் முன்.
அவளும் அண்ணன் அவன் கரங்களுக்குள் தன் கரம் நுழைத்துக் குலுக்கி கொள்ள… “நல்லா பண்ணுடா ஆல் த பெஸ்ட்” என அவள் தலை வருடி இன்முகமாய் இன்னுழவன் வாழ்த்துக் கூற… அவளும் மென்னகையுடன் அண்ணனின் வாழ்த்தை மனமார பெற்றுக்கொண்டு அவர்களை முன் வரிசையில் அமர சொல்லி அங்கிருந்து விடை பெற்றாள்.
இது இன்று நடப்பது மட்டுமல்ல வாடிக்கையே! இனிதுழனியின் ஒவ்வொரு பரத அரங்கேற்றத்திலும் இன்னுழவனிடம் வாழ்த்து வாங்காது அவள் மேடை ஏற மாட்டாள். ஐந்தாம் வகுப்பு படிக்கையில் இனிதுழனியின் முதல் அரங்கேற்றம் நடந்ததிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.
கூறியது போல் ஆறு மணி அளவில் அரங்கேற்றம் நடைபெற்றது.
அகரன், இன்னுழவன் மற்றும் கல்லூரி அரங்கத்தில் அனைவரும் ஆர்வமாக இருந்தார்கள் என்றால், இங்கோ அதற்கு மேல் கண்களில் மின்னல் வெட்ட மிளிர்வுடன் அதீத ஆர்வத்துடன் இரு கண்கள் மையலிட்டிருந்தன, இனிதுழனியின் நாட்டியத்தைக் காண்பதற்காக மடிக்கணினியின் முன்.
அனைவரும் கரகோஷங்கள் எழுப்ப…
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….
என ஆரம்பமானது இனிதாய் இனிதுழனியின் நாட்டியம்.
சரியாக அந்நேரம் வேலையை முடிந்து வீட்டை அடைந்து இருந்தாள் மேக விருஷ்டி.
மேக விருஷ்டி தாய் தந்தையான சோமசுந்தரமும், மைதிலியும் நடு கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க, “ம்மா… எங்கம்மா உன் அருமை புதல்வன? என்ன பிக்கப் பண்ண வரேன் சொல்லிட்டு என்ன பன்றான் மாடு” என கத்திக் கொண்டு உள்ளே வந்தாள்.
“ஏண்டா அப்பாக்கு கால் பண்ணி இருக்கலாம்ல அப்பா பிக்கப் பண்ணி வந்து இருப்பேன்ல உன்ன” சோமசுந்தரம் வினவ…
“ப்ச் பரவாலப்பா ஃபிரண்ட் டிராப் பண்ணிட்டா. சரி அவனை எங்க?”
“அவனுக்கு ஆறு மணிக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னான். அதனால தான் உன்ன பிக்கப் பண்ண வந்திருக்க மாட்டான். ரூம்ல தான் இருக்கிறான். அவன டிஸ்டர்ப் பண்ணாத” என்று மகனுக்கு பரிந்து பேசினார் மைதிலி.
“உன் மகனுக்கு தானே… மீட்டிங் தானே… அந்த மீட்டிங் என்னனு எனக்கும் தெரியும் நான் போய் பாக்குறேன்” அவள் மேலே செல்ல, “காஃபி குடிச்சிட்டு போடி…” என்றார் மைதிலி.
“போட்டு வைமா ப்ரெஷப் ஆகிட்டு, அந்த எரும மாட பார்த்துட்டு வரேன்” என சென்றாள் மேக விருஷ்டி மேலே.
சரியாக மேக விருஷ்டி உள்நுழைய
இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….
ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ..ஓ..
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…
என்ற பாடல் வரிகள் தங்களுக்காகவே எழுதபட்டது போல், அவளின் அழகான ஒப்பனையும் நேர்த்தியான முகபாவனையும் என அவளுடனான தனக்கானது என கற்பனையில் சிந்தை மயங்கி நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும் இனிதுழனியினை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்க,
“எருமை… எருமை… இதுதான் உன்னோட முக்கியமான மீட்டிங் ஆ…” தன் தோள் பையினால் மண்டையில் அடித்தவளாய் சரியாக அந்நேரம் உள்ளே வந்திருந்தாள் மேக விருஷ்டி.
இனிதுழனி நாட்டியதை மடிக்கணினி முன் அமர்ந்து திளைத்து பார்த்ததும்… மேக விருஷ்டி அடித்ததும்… வேறு யாருமல்ல மேக விருஷ்டியின் உடன் பிறப்பான
யாதவ நிவர்த்தனன்.
மேக விருஷ்டியின் உடன் பிறந்த ஒரே தமயன்.
( யாதவன் – கண்ணன்,
நிவர்த்தனன் – குறைகளை நிவர்த்தி செய்பவன்.)
அவளின் அடிக்கு சற்றும் அசராது எருமை மாட்டின் மேல் மழை பொழிந்தது போல் பார்வையை எங்கும் விலக்காது கணினியில் மயில் நடனம் ஆடும் கன்னிகையான இனிதுழனி மீது தான் செலுத்தியிருந்தான் யாதவ நிவர்த்தனன்.
மேக விருஷ்டியோ அவன் அருகில் அமர்ந்தவள், “டேய் தொடச்சிக்கோ டா…” என நீட்டினாள் அவள் கைக்கூட்டையை.
இனிதுழனி நாட்டியத்தில் லையித்து இருந்தவன், “ப்ச்… டிஸ்டர்ப் பண்ணாதக்கா… ஷோ முடிஞ்சதும் ஏதுவா இருந்தாழும் நானே துடைச்சி தரேன் உனக்கு” என பார்க்கும் ஆர்வத்திலவன் எதை சொல்கிறாள் என அறியாது சீறினான்.
“டேய் அதுக்குள்ள ஆறா ஓடிரும் டா…” என்றவள் மேலும் சீண்ட…
“ஹா… இப்ப என்னக்கா உன் பிரச்சனை?” என்றவன், கண் அப்போதும் மடிகணிணி விட்டு அகலவில்லை.
“வாய துடைச்சிட்டு பாருடா எருமை…” என்றாள் அவள் மண்டையிலேயே ஒன்று போட்டு.
அவனோ வாயில் ஏதோ ஓட்டியிருக்கிறது என வேகமாக மௌவாயை தடவியவன் நிதர்சனம் புரிய பார்வையாலே அவளை எரித்தான்.
“பின்ன என்னடா எருமை… நீ அந்த பொண்ண பார்க்க பார்வையில வாயிலயிருந்து நிக்காம ஜொள்ளு வடியிது…” என அவனை வாரினாள் மேக விருஷ்டி.
“அக்கா… உன்ன… ” என்றவன் கையை அவள் கழுத்தை நோக்கி கோவமாக கொண்டுவர, “டேய் ஷோ போகுது பாரு…” அவளோ அவனை திசை திருப்ப…
“ஐயோ ஆமால்ல… உன்ன அப்புறம் வச்சுகிறேன்” என்றவன் மீண்டும் பார்வையை கணிணியில் பதிக்க,
புன்னகையுடன் மேக விருஷ்டியும் அவனுடன் இணைந்து கொள்ள, இருவரும் இனிதுழனியின் நாட்டியம் முற்றுப்பெறும் வரை பார்த்து முடித்தனர்.
அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்டும் வண்ணம் மிக நேர்த்தியாக நடனம் ஆடி அனைவருக்கும் இறுதி வணக்கத்தை பறைசாற்றி இனிதுழனி மலர்ந்த முகத்துடன் அன்ன நடையிட்டு உள்ளே சென்றாள்.
செல்லும் அவள் முதுகை பார்த்தவாரு பெருமூச்சு இழுத்து விட்டு, “ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ… ஓ..
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…” என உதட்டை பிதுக்கி பாடியவனாய் மடிக்கணினியை மடித்து வைத்து ஏறிட்டு பார்த்தான் எதிரில் அமர்ந்திருந்த மேக விருஷ்டியை நிவர்த்தனன்.
அவளோ முறைத்து கொண்டு இருக்க, “வாட் சிசி… எதுக்கு என்ன இப்படி குறுகுறுன்னு பாக்குற… நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்” என்றவன் மேல் மேலும் அவள் கூர் பார்வையே பதிக்க…
“ஐயோ அப்பிடி பார்க்காத அக்கா… வெக்கமா இருக்கு” என்றவன் நகைக்க, “அடிங்க” என அருகில் இருந்த பிளவர் வாஷ்சை தூக்கி வீசி இருந்தாள் மேக விருஷ்டி அவன் மீது.
அதை அவன் பிடிப்பதற்குள் அதுவோ மண்டையை பதம் பார்க்க, “ஸ்ஸ்ஸ்… ஆஆ… எதுக்குடி எறிஞ்ச…”
“மார்னிங் சொல்லிட்டு தானடா போன என் ஸ்கூட்டியை நான் சர்வீஸ் விட்டு இருக்கேன், என்ன பிக்கப் பண்ண வான்னு” அவள் சீற…
“ஐயோ சிசி நான் உன்ன பிக்கப் பண்ண தான் வேகமாக கிளம்புனேனா… அதுக்குள்ள என் கிரஷ் டான்ஸ் ஷோ டைம் என் மண்டையில ஒளி வட்டமா தெரிஞ்சிச்சா… சரி எப்பிடியும் நீ வந்து என் மண்டைய பிளப்ப, அதுக்குள்ள அந்த ஒளி வட்டம் வழியா என் கிரஷ்ஷ பார்த்துத்துறலாம்னு இருந்துட்டேன் சோ… சாரி… அக்கா…” என்றான் இதழை பிரிக்காது நகைத்தவனாய் அசடு வழிய.
“இதுல அம்மாகிட்ட முக்கியமான மீட்டிங் வேற சொல்லிருக்க. சொல்லுடா என்ன நடக்குது இங்க? உண்மையா அந்த பொண்ண கிரஷ்ஷா தான் பாக்குறியா…? இல்ல எனக்கு தெரியாம லவ் எதுவும் பண்றியா…?” கேட்டாள் புருவம் உயர மேக விருஷ்டி தீவிரமாக.
“எனக்கும் அந்த டவுட் இருக்கு சிசி…” அவன் யோசிக்க,
“ஏதேய் டேய் நிவர்த்தனா…” மேக விருஷ்டிக்கோ அவனுடைய சந்தேகம் அவனுக்கும் இனிதுழனிக்கும் தான் என்று எண்ணி அதிர…
அவனோ வெகு சாதாரணமாக மேக அவள் பார்த்தவன், “இல்ல அந்த மார்னிங் தேனீர் காலர் பேர் கூட… இன்னு… இன்னு இன்னு… யோசித்தவன் ஹான்… இன்னுழவன், அவரு உனக்கு ஷோ காலர் ஆ? இல்ல காதலர் ஆ?ன்னு…” என்றான் அவள் கேள்வி பதில் கூறாது, தன் கேள்விக்கு பதில் கூற முடியாத அளவிற்கு குதர்க்கமாக மேக விருஷ்டியிடம் இதழுக்குள் சிரிப்பை அடக்கியவனாய் அவளை போல் புருவம் உயர…
செங்கோதை மணம் வீசும்…
இனிதுழனியிடம் கூறியது போல் அடுத்த பத்து நிமிடத்தில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை சகிதம் நெற்றியில் சந்தனக்கீற்றுடன் முழங்கை சட்டையை மடக்கி கையில் இருக்கும் காப்பினை மேல் நோக்கி ஏற்றிவிட்ட வண்ணம் மிடுக்கான தோரணையில் கீழ் இறங்கி வந்தான் இன்னுழவன்.
இறங்கி வருபவனுக்காக காத்துக் கொண்டிருந்தனர் வீட்டின் முன் கூடத்தில் ஊர் பெரியவர்கள்.
முன் கூடம், நடு கூடம், சுற்றிலும் வாழை, தென்னை, தோட்டம், கீழே பூஜை அறை மற்றும் சமையலை அறையுடன் கூடிய மூன்று அறைகள், மேலே நான்கு அறைகள் என அனைத்து வசதிகளுடன் தேக்கு, பர்மா என கட்டப்பட்ட அழகான அந்தகால மாளிகையே இன்னுழவனின் வீடு.
எள்ளும் கொள்ளுமாய் நடு கூடத்தில் அமர்ந்து செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருந்த சக்திவேலின் பார்வை ஒரு கணம் அவரை கடந்து செல்லும் இன்னுழவன் மீது விழ்ந்து மீண்டு மீண்டும் செய்தித்தாளில் படிந்தன.
ஆனால் சற்றும் அவரை பார்த்து திரும்பாது கைகளைக் மார்புக்கு இடையில் கூப்பியவனாய் புன் சிரிப்புடன் நடுக்கூடத்தை நோக்கி சென்றான் இன்னுழவன்.
இன்னுழவன் தந்தை தான் சக்திவேல். இன்னுழவனுக்கு சக்திவேலுக்கும் கிஞ்சித்தும் ஒத்து போகாது.
இருவரும் எப்பொழுதும் கீரியும் பாம்புமாக தான் முறைத்துக் கொண்டிருப்பர். தந்தை மகனாக பாசமாய் சீராட்டுவார்கள் என்றால் அது கேள்விக்குறியே! இவர்களுக்கு இடையில் பாலமாய் இருப்பது இன்னுழவன் தாய் கோதாவரி தான். அவருக்குமே சக்திவேல் செயல்கள் பிடிக்காது தான். எனினும் கணவன் என்பதால் சகித்து கொள்வார்.
கிருஷ்ணகிரியில் சக்திவேலின் குடும்பம் தான் அவ்வூரின் பெரிய தலக்கட்டு குடும்பம். ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சக்திவேலின் குடும்பத்திற்கு முதல் மரியாதை.
விவசாயம்,ரைஸ் மில்,தோப்பு துறவு என வாழையடி வாழையாக பரம்பரை நிலத்தில் சாகுபடி செய்து வருமானத்தையிற்றி வருகின்றனர். அதில் ஒரு பங்கை ஊருக்காக்கவும் இல்லாதவர்களுக்கும் செய்ய தவறியாதே இல்லை இன்று நாள் முதல்.
சக்திவேலின் அப்பாவின் காலத்திற்கு பின்பு சக்திவேல் தான் ஊரின் பொறுப்பையும் ஊர்மக்கள் பொறுப்பையும் ஏற்றி நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சக்திவேலுக்கு திடீரென்று இதயத்தில் கோளாறு ஏற்பட்டதால் அனைத்து பொறுப்புகளையும் அவரால் மேற்கொள்ள முடியாத பட்சத்தால் ஊர் மக்களாக பொறுப்பை குடும்பத்தின் அடுத்த தலைமுறையான இன்னுழவன் கையில் ஒப்படைத்தனர்.
அவனும் இதுக்காக தான் காத்துக் கொண்டிருந்தான். சக்திவேலோ ஜாதி, மதம், இனம் என பார்க்கும் பிற்போக்குவாதி. ஆனால் இன்னுழவன் அதை எதையும் துளியும் கருத்தில் ஏற்க்காது ஆண், பெண் என்று இரு ஜாதியே… அதுவும் அவர்கள் மனதால் இணைந்தால் ஒரே ஜாதி,மதம் எனக் கொள்கை கொண்டு ஊரை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கின்றான் முற்போக்குவாதியாய்.
சக்திவேல் நாட்டாமையாகவும் ஊர் அறங்காவலராகவும் இருந்த தருவாயில் ஜாதி மதத்திற்கு கொடுத்த அனைத்து முக்கியத்துவத்தைக்கும் தவிடு பொடியாக்கி, நல்வழியில் ஊரையும் ஊர் மக்களையும் செலுத்திக் கொண்டிருக்கின்றான் இன்னுழவன். அதானாலே தனது கொள்கைக்கு எதிராய் நிற்கும் மகனையும், மகனின் செயல் யாவிலும் பிடிக்காது மனம் ஓவ்வாது போனது சக்திவேலுக்கு.
விவசாயத்தின் மீது அலாதி பிரியம் கொண்டவன் இன்னுழவன். படித்ததும் முதுகலை விவசாயம், பார்த்துக் கொண்டிருப்பதும் விவசாயம் தான். விவசாயம் படித்தவனுக்கு மற்ற துறைகள் பற்றி தெரியுமா என்று கேட்டால் அனைத்துமே அத்துபடி தான் அவனுக்கு. நடப்பு சமூகத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நேர்த்தியாக மெய்தேர்ந்தவன்.
ஊரார் அனைவரும் வசதியாக அமர்ந்து பேசி செல்ல வெளி கூடத்தில் கதிரைகள் அமைக்கப்பட்டிருக்க, அதில் அமர்ந்திருந்த ஊர் பெரியவர்கள் கோதாவரி கொடுத்த தேனீரை, ராகி புட்டையும் இரசித்து பருகி கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு எதிர் புறத்தில் திண்டில் கால்களை நீட்டி கொட்டாம் பாக்கைய் இடித்துக் கொண்டிருந்தார் அம்பிகாமா.
அம்பிகாமாவின் பார்வை தன் பேரனின் மீது படிந்தது. சக்திவேலின் தாயாரே அம்பிகாமாள். பேரனின் மீது அலாதி பிரியம் கொண்டவர்.
வந்தவர்களுக்கு வணக்கத்தை வைத்துவிட்டு அவர்கள் அருந்தி முடிக்கட்டும் என அம்பிகாமாவை நெருங்கியவன் அவர் தோள் அழுத்த பிடித்தவனாய், “என்ன அப்பத்தா அப்படி பாக்குற என்ன?” என்றவனின் புன்சிரிப்பை கண்டு விரல்கள் மடக்கி நெற்றியில் நெட்டி முடித்தவர்…
“என் ராசா அப்படியே உன் தாத்தாவ பார்க்கிற மாதிரியே இருக்குயா. குணத்திலும் சரி நடந்து வர தோரணைலையும் சரி சாட்சாத் அவரே தான்” என்றவர் சில்லாக்கிக்க…
“அது சரி நீ காலம் புல்லா இப்படியே சொல்லிட்டு இரு. உள்ள இருக்குற உன்ற மகனுக்கு எரிகிற நெருப்புல எல்லாம் பொசுங்க போகுது” என்றான் நக்கலாய் இன்னுழவன் அருகில் அமர்ந்து பாக்கை இடித்தவனாய். அந்நேரம் அவர்களுடன் வந்து சேர்ந்தான் இன்னுழவன் நண்பன் அகரன்.
(அகரன் – முதன்மையானவன்)
“வாடா” என அவங்களுடன் அவனும் சேர்ந்து கொள்ள, “அவன் கிடைக்குறான் ***யிராண்டி…” என்றவரிடம், சத்தமாக சிரித்தவன், “சரி எதுக்கு இப்படி ஒத்தைல இருக்கிற. உள்ள போய் டிவி பார்க்க வேண்டியது தானே உன்ற மகன் கூட சேர்ந்து” வம்புழுத்தான் இன்னுழவன் அசட்டு நகையுடன்.
அம்பிகாமாவோ முகத்தை அஷ்ட கோலமாக சுழித்தவர், “ஐய்ய… அவன் கூட உக்காந்து எவன் பாக்க. நான் என்ற லோப்பு டப்லையே (லேப்டாப்) சூரிய நமஸ்காரம் எல்லாத்தையும் பாத்துட்டேன். இப்போ இந்த சொன்னு மிக்சில, ஆத்தா அது சன் மியூசிக்” அகரன் திருத்த…
“ஹான் அதாம்ல அந்த கழுதைல தான் காலை நேர புதுப்பாட்டு போடுவான். நல்லா ஜிலுக்கு ஜிலுக்குன்னு இருக்கும். அத பார்க்கலாம்னு பார்த்தா அதுக்குள்ள கழுத அது சார்சி இல்லாமல் போயிடுச்சு.
அதான் சார்சில குத்தி போட்டு வந்து இருக்கேன். இன்னுழவனை பார்த்தவர், நீ காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை முடிச்சு பிள்ளைய பெத்து போட்டா நாங்க ரெண்டு பேரும் கிளுகிளுனு பாட்டு போட்டு டான்ஸ் ஆடுவோம். நீ என்னடா வெள்ளையுஞ் ஜொல்லையுமா சுத்துறியே தவிர ஒண்ணுத்துக்கும் தேற மாட்டேங்குற” என்றவர் அலுத்து கொள்ள…
இன்னுழவனோ பாக்கை வெத்தலையில் வைத்து மடித்தவன், “நீ தான அப்பத்தா வாய்க்கு வாய் நான் தாத்தா மாதிரின்னு சொல்லுறவ. அப்ப நான் அப்படி தானே இருப்பேன்”
“அட கோமட்டி பயலே, உன் தாத்தாவ பத்தி உனக்கு என்ன தெரியும். அவர் என்ன கண்ணாலம் பண்றதுக்கு முன்னாடி ஊர்ல ஒரு பொண்ண விட மாட்டாரு. எல்லாவளும் அவர் பின்னாடி வாலாட்டோம் திரிவாளுவ.
அப்புறம் என்ன கட்டினதுக்கு அப்புறம் அந்த மனுஷன் தலையில நாலு போடு போட்டு அவரு சண்டியர்த்தனத்த அடைக்கி என்ற பக்கத்துல உட்கார வச்சேன். அப்புறம் என் மேல மயங்கினவர் தான், முன்னாடி மேலோகத்து ரதியே வந்து நின்னாலும் திரும்ப மாட்டார்ன்னா பார்த்துகேயேன்.” என்றவறவாரு கணவரை சில்லாகித்தார் முகம் மின்ன அம்பிகாமா.
“ஆத்தா உண்மையை சொல்லு தாத்தாக்கு பாயசம் போட்டுட்டுவேன்னு சொல்லி தான உன் பின்னாடி சுத்த வச்ச” அகரன் வினவி கிளுக்க…
“அதெல்லாம் புருஷனை முந்தானைல முடிஞ்சு, பொட்டி பாம்பா அடைக்கி வைக்கிற சூட்சுமம்லே. உனக்கு என்னாலே தெரியும் அத பத்தி” என்றார் அம்பிகாமா அகரன் தலையில் கொட்டியவராய்.
“ஓ அப்போ அந்த சூச்சமத்த கொஞ்சம் எனக்கும் சொல்லித் தர்றது ” என்றான் இன்னுழவன் வெற்றிலையை அவரிடம் நீட்டியவனாய் புருவம் தூக்க.
அதை வாங்கி பல் இடுக்கில் அதக்கியவர், “ஹிம் அத நான் உன்ற பொண்டாட்டியா வருவாள அவகிட்ட சொல்லிக்கிறேன் போடா அங்கிட்டு” என அவர் தோள் தட்டி உள்ளே நகர எத்தனித்தவரிடம்…
“அவகிட்ட சொன்னாலும் அவ என்கிட்ட தான் வரணும் நியாபகம் வச்சிக்கோ அப்பத்தா” என்றான் இன்னுழவன்.
“பார்ப்போம்ல அவ உங்கிட்ட வரலா நீ அவ பின்னாடி சுத்துறீயான்னு” என்றவர் உள்ளே செல்ல…
இன்னுழவனின் அவ்வளவு நேரம் உதட்டில் இருந்த சிரிப்பும் முகத்தில் இருந்த இன்முகபாவனையின் பின்னோக்கி செல்ல, கூர் விழிகளுடன் முகம் சற்று கட்டமாய் மீண்டும் கைகாப்பை இழுத்து விட்டவன் அனைவரின் முன் சென்று அமர்ந்தான் தலைமையாய். அவனின் பின் நின்று கொண்டான் அகரன்.
ஊர்க்காரங்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் சில நிமிடம் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தவன் இறுதியாய் வணக்கம் வைத்து எழும்ப, அனைவரும் புன்னகையுடன் விடைபெற, “வாடா சாப்பிட போலாம்” என அகரன் தோளில் கையை போட்டான் இன்னுழவன்.
“இல்லடா… அப்பா…” என சக்திவேலை குறித்தவன் தயங்கி வாசலிலேயே நிற்க, “ஏன்டா அவர் சாப்பிட்டா தான் நீ சாப்பிடுவியா?” என்றான் நக்கலாய்.
“அப்படி இல்லடா நான் உள்ள வந்தா அப்பா டென்ஷன் ஆவாரு. அதான் நான் இங்கேயே உக்காந்து இருக்கேன் நீ போய் சாப்பிட்டு வா நம்ம வெளில கிளம்பலாம்” அகரன் சாட…
இன்னுழவனோ, “அடேய் நீ என்ன புதுசாவா வர, தினமும் உன்னோட ரோதனையா போச்சுடா ஒழுங்கு மரியாதையா வா” என அகரன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று டைனிங் டேபிளில் அமர வைத்து உடன் அமர்ந்து கொண்டான்.
அகரன் உள்ளே வரும்பொழுதே டிவி பார்த்துக் கொண்டிருந்த சக்திவேல் கையிலிருந்த ரிமோட்டை தூக்கி ஒரே போடாய் போட, அது இரண்டாய் பிளக்க கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.
காரணம் அகரன் கீழ் ஜாதியாம்.
முதல் தடவை அகரனை இன்னுழவன் வீட்டிற்குள் அழைத்து வர சாமி ஆடினார் சக்திவேல் அனைவரிடமும்.
“தெருவுல நின்னு பிச்சை போட வேண்டியவன எல்லாம் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வர. கொஞ்சம் கூட வரைமுறை இல்லையா இன்னுழவா உன்கிட்ட?”
இன்னுழவன் தாடை இறுக்க அவரை எதிர் கொண்டவன், “அந்த தெருவுல நின்னு பிச்சை போடுறவன் இல்லனா நீங்க இப்படி வெள்ளையும் ஜொல்லையுமா சுத்த முடியுமா?” என காரப்பார்வை அவர் மீது வீசியவன்,
“சொல்லுங்க அவனோட அப்பாவும் அம்மாவும் வெளுக்கலைன்னா நீங்க இப்படி வெள்ளை சட்டை போடுவிங்களா. இல்ல அவங்க வயல்ல இறங்கி வேலை பார்க்கலனா நீங்க மூணு வேலை ருசியா சாப்பிடுவீங்களா?
எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் அவன் உழைப்பான்னா அப்பிடி உழைப்பவனுக்கு என் வீட்டுக்குள்ள வரையும் உரிமை இருக்கு தகுதியும் இருக்கு.
அப்புறம் எல்லாத்துக்கும் மேல அவன் என் நண்பன் அதைவிட அவனுக்கு பெரிய தகுதி எதுவுமே தேவையில்லை. அந்த உரிமையை அவனுக்கு போதுமானது. இன்னொரு தடவ பிச்ச, அது இதுன்னு சொன்னிங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என சக்திவேல் ஆடிய சாமியை வேப்பிலை அடித்தே அடக்கி வைத்தான் இன்னுழவன்.
கோதாவரியும் இனிதுழனியும் பரிமாற, “சும்மா தினமும் ரிமோட்டை உடைச்சா மட்டும் போதாது வாங்கி வைக்கணும்.” என்றவாரு உள்ளே செல்லும் சக்திவேலுக்கு கேட்குமாரு சாப்பிட்ட வண்ணம் இன்னுழவன் சாட…
அமர்ந்திருந்த அகரன் சட்டென்று எழுந்து தனது கால் பாக்கெட்டுக்குள் இருந்த ரிமோட்டை உருவி எடுத்து நீட்டியிருந்தான் இனிதுழனியிடம்.
சிரித்துக் கொண்டே அதை பார்த்து இன்னுழவன் சாப்பிட முறைத்து வைத்தாள் இனிதுழனி அவனை. இது இன்று நடப்பது அல்ல வருடமாக நடந்து கொண்டு தான் இருப்பது. சக்திவேல் உடைப்பதும் அகரன் வாங்கி வைப்பதும் வாடிக்கையே!
ரிமோட்டை வாங்கிக் கொண்டவள் இன்னுழவனிடம், “அண்ணா முதல்ல இவர சாத்துன்னா… இவரு தினமும் வாங்கிட்டு வாங்கிட்டு வர தான் அப்பா உடைக்கிறாரு. இல்லனா அவரு என்ன பண்ணுவாரு” என அகரனை காண்பத்தவள் கூற…
(இனிதுழனி சைகையில தான் ஃப்ரெண்ட்ஸ் பேசுவா. அத நான் டைலாக் ஆ கொடுக்குறேன் ஓகே)
“முதல்ல உன்னைய தான் வெளுக்கணும், என்ன சட்னி வச்சிருக்க, டேஸ்ட்டாவே இல்ல இன்னும் நாலு கரண்டி இதுல ஊத்து” என்றவனாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அகரன்.
“ஊத்துறேன் ஊத்துறேன் முதல்ல உன் தலையில ஊத்துறேன்” என சட்னியை அகரன் தலை அருகினில் கொண்டு சென்றவள், தலையில் உத்தாது அவன் தட்டில் ஊற்றிவிட்டு மேலும் இரண்டு இட்லியை அதில் எடுத்து வைத்தவள் “ஒழுங்கா தின்னு” என சைகையின் மூலம் சொல்லிவிட்டு” மண்டையில் நங்கென்று ஒரு கொட்டையும் வைத்துவிட்டாள்.
“அவனோ ஆ… குடை மிளகா” என்றவாரு அகரன் கத்த, அவன் வாயில் முழு இட்லியை திணித்திருந்தாள் இனிதுழனி.
அவ்விருவர் செல்ல சண்டையையும் பார்த்தும் பார்க்காதது போல் மன நிறைவாய் சாப்பிட்டு கொண்டிருந்தான் இன்னுழவன். இனிதுழனி இன்னுழவனுக்கு மட்டும் செல்ல தங்கை கிடையாது அகரனுக்கும் தான். ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம்.
வேகமாக ஒடிச் சென்று கை கழுவி வந்தவள், “ஈவினிங் ஃபங்ஷன் இருக்கு மறக்காம வந்துருங்கன்னா ரெண்டு பேரும்.” எனக் கூறி டாடா காண்பித்து கல்லூரிக்கு கிளம்பினாள் இனிதுழனி.
“இனி இரு நான் ட்ராப் பண்றேன்” என பாதி சாப்பாட்டில் அகரன் எழும்ப, “டேய் நீ இரு நான் விட்டுட்டு வரேன்” என சாப்பிட்டு எழுந்தான் இன்னுழவன். “டேய் நான் சாப்பிட்டேன் வா போலாம்” என எழுந்துக் கொண்டான் அகரனும்.
செங்கோதை வருவாள்…
டியர் ஃப்ரெண்ட்ஸ் comments 🤗🤗.
சூரியனின் செம்மை நிறக் கதிர்கள் பரவிக் கொண்டிருந்த அந்த அழகான இளம் காலை வேளையில் தன்னில்…
சிலு சிலுவென்று எதிர்வரும் இயற்கை தென்றல் காற்று தன் மேனியில் தழுவி செல்ல, நெற்றியிலோ முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வைத் துளிகள் அக்காலை நேர ஒளியில் பிரகாசிக்க…
பூமியின் இதமான ஈர்ப்புத் தன்மையை பாத சுவட்டின் வழியே யாக்கை தன்னில் உள்வாங்கு விதமாக வெறும் காலில் தனது காலை நேர ஓட்ட பயிற்சியில் எதிரில் வருபவர்களுக்கு இன்முகத்துடன் சிறு கீற்று புன்னகை சிந்தி தலை அசைப்புடன் தன் வணக்கத்தை வைத்து ஓடிக்கொண்டிருந்தான் , சந்தன திராவிட நிறம் ஒத்த, சீரான உடற்க்கோப்புடன் ஆறடி ஆண்மகனாய் நம் கதையின் நாயகன் இன்னுழவன்.
(இன்னுழவன் – இனிமையான உழவன்.)
ஓடிச் சென்றவன் தன் ஓட்டத்திற்கு தடை போட்டு பசுமையாய் தெரியும் நெற்கதிர்களுக்கு இடையில் தன் சிறு ஒளிக் கால்களால் வானில் மேல் நோக்கி நடந்து கொண்டிருக்கும் கதிரவனை பார்த்தவன்,
தனது கால் சட்டைக்குள் இருந்த அலைபேசியை உயிர்ப்பித்து அதனுடன் காதொலிப்பானை (head phone) இணைத்தவன் செவி மடலில் எதிர் புறத்திலிருந்து கேட்ட இனிமையான குரலில் இதழ்கள் தானாகப் பிரிந்தன… உள்ளிருக்கும் பற்கள் தெரியும் வண்ணம் மௌனமாய்.
“ஹாய் ஹலோ ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிஸ். உங்க எல்லாருக்கும் என் இனிமையான சந்தோஷமான காலை வணக்கங்கள்.” ரேடியோவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க,
“இதோ உங்கள் விருப்பமான மனம் கவர்ந்த காலை தேநீர் நேரத் தென்றல் நிகழ்ச்சியில் உங்களுடன் இணைவது நான் உங்கள் செல்லம் மேக விருஷ்டி” என தன் காந்த குரல் வளத்தால் அனைவரையும் ஒலிபெறுக்கி வாயிலாக கட்டி ஈர்த்துக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி மேக விருஷ்டி.
மேக- மேகம், விருஷ்டி – மழை.
பத்தி இலக்க அலைபேசி எங்களைக் கூறியவள் “அப்புறம் இன்னும் என்ன எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க. சீக்கிரமா உங்களுடைய அழைப்பு கொடுத்து உங்களுடைய முதல் காலை வணக்கத்தை எனக்கு தெரிவிங்க.
இன்னைக்கு யார் அந்த முதல் மற்றும் கடைசி அதிர்ஷ்டசாலின்னு பார்க்கலாம்” என்றவள் சொல்லி முடிக்க… அவள் எண்களை சொல்லி கொண்டிருக்கும் தருவாயிலேயே
இன்னுழவனும் தன் அலைபேசி வாயிலாக அழைத்திருந்தான்.
சரியாக தனது ரேடியோ அலையின் காற்றின் அலை கற்றைகள் வாயிலாக இன்னுழவனின் அழைப்பை இணைத்திருந்தாள் மேக விருஷ்டி.
இது இன்று நடக்கும் எதார்த்தமல்ல! தினமும் நடக்கும் வாடிக்கையே. பல பேர் முயற்சிக்கும் இந்த நேரடியலை நிகழ்ச்சியில் தவறாது தன் முதல் அழைப்பை பதித்துக் கொண்டிருக்கின்றான் இன்னுழவன்.
ஒவ்வொரு நாளும் முதலில் மேக விருஷ்டியின் குரலும் அதில் அடையும் இதமும் இன்னுழவன் மனதையும் தேகத்தையும் புத்துணர்ச்சிக்கும் உத்வேகத்திற்கும் அழைத்து செல்கின்றது மனதளவில்.
சொல்லப்போனால் அவள் குரலில் போதையையும் கண்டான் இன்னுழவன். அவள் குரலில் மட்டுமா…? இல்லை அவளிளுமா என்ற கேள்விக்கு பதில் அவனிடமே!
“ஹாய் ஹலோ வணக்கம். லைன்ல இருக்கும் அந்த காலை நேர அதிர்ஷ்டசாலி யாரு?” மேக விருஷ்டி குரல் எழுப்ப…
“இனிய காலை வணக்கம் ரெயினி ஏஞ்சல் மேடம்” என எப்போதும் போல் தன் முதற்கண் வணக்கத்தை வைத்தான் இன்னுழவன் இனிமையாய்.
அவன் குரலில் அதிர்ந்தவள், “ஓ காட்… இன்னுழவன் சார் இன்னைக்கும் நீங்களா?” என்றாள் மேக விருஷ்டி ஆச்சரியம் குறையாமல்.
“எஸ் ரெயினி ஏஞ்சல் மேம் நானே தான்” என முத்துப்பல் தெரிய சிரித்தான் இன்னுழவன் நெற்றி வருடியவனாய்.
“இத நான் ஆச்சரியமாக சொல்லையா… அதிசயம் சொல்லலையா… இல்லன்னா இதுல ஏதும் உள்குத்தா எப்படி சொல்லனு எனக்கு தெரியல. எல்லா நாளும் உங்களோட இந்த முதல் அழைப்பு மட்டும்தான் எனக்கு வந்துட்டு இருக்கு, நான் ஷோ ஆரம்பிச்சதுல இருந்து. உங்களோட குரல தான் எல்லா நாளும் முதல்ல கேட்குறேன்.
ஆனா, பாருங்க இதோ உங்களால முயற்சி பண்ற மத்த எல்லாருமே ரொம்ப பீல் பண்ணுவாங்க இல்ல லைன் கிடைக்கலன்னு” என்றவளின் குரலில் சற்று தளர்வு மேலோங்கியிருந்தது.
அதை உணர்ந்தவன், “அப்போ என் ரெயினி ஏஞ்சல்” என்றவனின் ஒருமை அழைப்பை அவள் கவனித்தாலும் கவனிக்காதது போல் இருக்க, “அப்போ என்ன போல தினமும் உங்க குரலையும், பேச்சையும் கேட்ட பிறகு தான் என்னோட நாள நான் ஆரம்பிக்கிற மாதிரி நீங்களும் என்னோட குரல கேட்டு ஆரம்பிக்கிறீயா ரெயினி ஏஞ்சல்”
அவளோ, “ஐயோ… அது” பேச வருவதற்கு முன்…
கள்ள புன்னகை உதிர்த்தவனாய், “நான் என்ன பண்றது அழுத்த குரலில் என் ரெயினி ஏஞ்சல். நானும் எல்லாரும் போல தான் போன் ஆன் பண்ணி உங்களுக்கு போன் பண்றேன். நீங்க அத்தனை பேர் க்காலையும் விட்டு கரெக்ட்டா என்னோட க்கால் தான் அட்டென்ட் பண்றீங்க. இதுல என்கிட்ட எந்த உள் குத்தும் இல்ல ஏஞ்சல் மேடம். எல்லாம் அந்த கடவுளோட ப்ளனோ என்னவோ” என்றவன் நகைக்க…
“என்கிட்ட எந்த உள்குத்தும் இல்ல சார். கடவுள் எதுக்கு பிளான் போடணும் தினமும் நம்ம பேச?” என்றவள் வினவ…
“அத நீங்க கடவுள் கிட்ட தான் கேட்கணும் ரெயினி ஏஞ்சல் மேடம்” என்றவன் பதில் சாட…
“ஓ… அந்த கடவுள் மட்டும் கிடைச்சாரு உங்களுக்கும் எனக்கும்….”
“உங்களுக்கும் எனக்கு…” இடை புகுந்தவன் வார்த்தை இழுக்க,
அப்பொழுது தான் பேசும் செயல் சூழல் புரிந்தவள் அதை அப்படியே நிலுவையில் விட்டுவிட்டு “ஏனிவே உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா. சுதாரிச்சிட்டா அவன் இதழுக்குள் முணு முணுக்க, சரி உங்களுக்கு இன்னைக்கு என்ன பாட்டு வேணும் இன்னுழவன் சார். பாட்டோட பெயர சொல்றீங்களா? இல்ல வழக்கம் போல பாடிய காட்டுறீங்களா?” என்றாள் ஆர்வமாய்.
அவன் தினமும் கேட்கும் பாடலுக்கு அவளோ அவனறியா அடிமையவள். காரணம் அவன் கேட்கும் பாடலும் அவளுக்கென்றே பாடி வடிவமைத்து வழங்கபட்டது போல் இருக்கும். அவளும் தனக்கென தான் என உள்ளுக்குள் போலியாய் யூகித்துக் கொண்டிருக்கிறாள்.
இன்னுழவன் இது நாள் வரை கேட்கும், கேட்ட பாடல்கள் அத்துணையும் அவளுக்காக மட்டுமே. இது போலி இல்லை நிதர்சனம் என்று அறிவாளா! இல்லை அறிய வைப்பானா?
“என் குரல்ல பாட்டு கேக்க அவ்வளவு ஆசையா?” நக்கலாய் விழிகள் மின்ன இன்னுழவன்.
“ஹிம்… ஆசைத்தான்…” என்றவள் சலித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் இன்பித்துக் கொள்ள தான் செய்தாள்.
“பார்ரா என் குரல்ல பாட்டு கேக்க இவ்வளவு ஆர்வம் வச்சிருக்கீங்க. வாய் திறந்து ஆசைதான்னு வேற கேக்குறீங்க.” என்றவன் இரு பொருள் அர்த்தம் கொண்டு வசை பாட…
“ஐயோ நான் அப்படி சொல்லல…” என்றவள் வேகமாய் இடை மறிக்க,
“எப்படி சொன்னாலும் உங்க வாய் நிறைய ஆசைன்னு வந்துருச்சு. அதனால உங்க ஆசைய நான் நிறைவேற்றாம விட்டா எப்படி?” என்றவன் துள்ளளாய் நகைக்க.
“ஹலோ ஹலோ சார் இங்க நான் ஷோ பண்றேனா? நீங்க ஷோ பண்றீங்களா? ஏன்னா நான் தான் சார் இந்த டயலாக் எல்லாம் பேசணும்” என்றவள் சற்று சினம் கொண்டாள் செல்லமாய்.
மூக்கு நுனில கோவம் சட்டுன்னு வந்துரும் என அவள் கேட்கா கூறி தலை சாய்த்து பிடரி வருடியவன், “இருக்கட்டும் ஏஞ்சல்”
“ஏஞ்சல் மேடம் அல்லனா மேக விருஷ்டி மேடம்” அவள் திருத்த,
இதழுக்குள் வசீகரமாய் புன்னகைத்தவன், “ஓகே… ஓகே… நீ கேட்குறது வேற, நான் கேட்குறது வேறையா?” அதாவது நீ வேறு நான் வேறா என பொருள் பட அவன் பேச… சில நொடி கழித்தே அதன் அர்த்தம் உணர்ந்தவள்
“வாட்… ஹெலோ மிஸ்டர் இன்னுழவன்” அவள் ஏகத்திற்க்கும் ஏகிற…
இதழ் பிரிய மௌனப் புன்னைகையுடன் சுதாரித்து கொண்டவன், “நீ மட்டும் ம்… என்றால்…
உடலோடு உடல் மாற்றம் செய்வேனே…
நீ மட்டும் போ என்றால்…
அப்போதே உயிர் விட்டு செல்வேனே…
அடி பருவ பெண்ணே நீயும்…
ஒரு பங்கு சந்தை போலே…
சில ஏற்ற இறக்கங்கள்…
அட உந்தன் மேனி மேலே…
ஏதோ ஏதோ வலி
எந்தன் ஐம்புலன்களில்
ஏன்…
மழை மழை…
என் உலகத்தில் வருகின்ற…
முதல் மழை… நீ முதல் மழை…
அலை அலை…
என் இதயத்தில் அடிக்கின்ற…
முதல் அலை… நீ முதல் அலை…
என தன் கேட்க இருந்த பாடலை அவள் கேட்டு மயங்கும் குரலில் பாடி அழைப்பை துண்டித்து இருந்தான் இன்னுழவன் வழக்கம் போல்.
மேக விருஷ்டியும் இன்னுழவன் அழைப்பு துண்டிக்கப்பட்டதை திரையில் பார்த்தவள், “ஓகே ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிஸ் இன்னைக்கும் இன்னுழவன் சார் உங்களுக்கு முன்னாடி முந்திகிட்டாரு… முந்திரி கொட்டை” என பல்லிட்டுக்கில் அவனை வாட்டி வதைத்தவள்,
தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க. கண்டிப்பா உங்களோட அழைப்பும் ஒருநாள் ஏற்கப்படும். அப்போ நீங்களும் என்னோட பேசி உங்க மனம் கவர்ந்த பாடலை கேட்டு சந்தோசபடுவீங்க. ஆல் தே பெஸ்ட்.
இப்போ இன்னுழவன் சார் ஆசையோடு பாடிய அந்த அழகான பாடல் உங்களுக்காக. சோ ஸ்டேட் டியூன் தேநீர் நேரத் தென்றலில் நான் உங்கள் செல்லம் மேக விருஷ்டி”
பாடலை ஒலிக்க விட்டு செவிமடலில் இருந்து ஒலிவாங்கியை (head microphone) கழற்றி கழுத்தில் போட்டவள், “யாருடா இவன்” என பொறுமிக் கொண்டாலும் அவன் குரல்வள இசையில் மயக்கம் கொள்ளத்தான் செய்தாள் பாவையவள் அனுதினமும்.
செவியோலிப்பானில் அவள் ஒலிப்பித்த இசையையும் அவளையும் மனதில் ஓட விட்டவன், தனது ஓட்ட பயிற்சி மீண்டும் தொடர்ந்தான் வீட்டை நோக்கி.
சரியாக பாடல் வரிகள் முற்றுப்பெற பெருமூச்சுடன் வீட்டை அடைந்திருந்தான் இன்னுழவன்.
உள்ளே வந்தவன் விழிகள் அவன் தாயை கோதாவரியை தேட, அவரோ சப்தமில்லா முணுமுணுப்புடன் பூஜை அறையில் ஆழ்ந்த பிரார்த்தனையில் இருக்க, அதைக் கண்டு புன்முறுவலுடன் தாவி குதித்து படியேறி சென்று தன் அறைக்குள் அடைந்து கொண்டான்.
குளியலறைக்குள் புகுந்து தன் காலை நேர கடமைகளை செய்து முடித்தவன் வெளியே வர கதவு தட்டப்பட்டது.
அதன் ஓசையில் பிடரி முடி சொட்டிய நீர்தன்னை தோளில் கிடக்கும் பூத்துவாலை கொண்டு துடைத்தவனாய் கதவை திறக்க, வாசலில் பாவாடை தாவணி சகிதம் நிறைமதியாய் பொண் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள் கையில் காபி கப்புடன் இனிதுழனி
இனிதுழனி – இன்னிசை போன்ற குரல் கொண்டவள். இன்னுழவனின் செல்ல தமக்கை.
அதே புன்சிரிப்பு கிஞ்சித்தும் தாளமல் அவளிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டவனிடம், இதழ்கள் பிரியா கைகள் அசைத்து அவன் விழி பார்த்தவள் சைகையில் அவள் சில விஷயங்களை கூற…
அதன் பொருள் உணர்ந்தவன், “சரி நீ கீழ போ நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன். அம்மாட்ட சொல்லி அவங்களுக்கு காபி கொடுக்க சொல்லு” என்றவன்,
“உனக்கு இன்னைக்கு காலேஜ் கல்ச்சுரல்ஸ் இருக்குல்ல” ஆமோதிப்பாய் அவள் தலையசைக்க,
“நீயும் பார்ட்டிஸ்ஃபேட் பண்றது தான எத்தனை மணிக்கு?” என்ற அவனிடம்,
தன் விரல்களால் நிகழ்ச்சியின் நேரத்தை அவள் குறிப்பிட்டுச் சொல்ல, “ஓகேடா கண்டிப்பா அண்ணன் அந்த டைம்க்கு அங்க இருப்பேன் ஒகேவா” என்றவனுக்கு…
விழிகள் மின்ன முத்தத்தை காற்றில் பறக்க விட்டாள்.
தலை வருடி அவன் அறைக்குள் செல்ல, அவளும் கீழே இறங்கினாள் நிலம் தழுவிய பாவாடையை கையில் ஏந்திய வண்ணம் புள்ளி மானாய்.
பெயரில் இனிய குரல் என்ற அர்த்தத்தை பெற்றவளுக்கு நிதர்சனத்தில் அக்குரல் வளத்தை சூறையாடி இருந்தார் கடவுள்.
செங்கோதை மணம் வீசும்…
டியர் ஃப்ரெண்ட்ஸ் story படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க.
I’m waiting for Golden comments and like Friend’s 🤗😍😍.
Older Posts