குறிஞ்சி மலர்.. 29
சுற்றி நின்ற மரங்களினை ஊடறுத்து வந்த காற்று கோதையின் முகத்தில் வேகமாக வீச, அவள் நெற்றியோரம் வந்து விழுந்த முடி அவள் கண்களை மறைத்தது.
அவளையே பார்த்திருந்தவன் அவளது கண்களில் விழுந்த முடியை ஒதுக்கி காதோரம் விட்டான்.
இப்போது கோதை சாதாரண நிலைக்கு வந்திருந்தாள். நாய்கள் மூன்றும் வேறெங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் வந்த தைரியம் தான் அது.
தன் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கியவனின் கையைப் பிடித்துக் கொண்ட கோதை
“இப்புடி சும்மாச் சும்மா என்னையத் தொடக் கூடாது.. எனக்கு தொட்டுத் தொட்டுப் பேசுறது பிடிக்காது சரியோ.. இப்ப நான் உங்களை தப்பா சொல்ல வரேல்லை.. நீங்கள் வெள்ளைக்காரர் உங்களுக்கு இந்த தொட்டுப் பேசுறது அப்புறம் இந்த கட்டிப் பிடிக்கிறதெல்லாம் சாதாரணம் தான்.. ஆனா இங்க அப்புடி இல்லை தொட்டு பேசினாலே கம்பி கட்டுற கதையெல்லாம் கட்டி ஒரு வழி பண்ணீடுவாங்கள்.. நீங்கள் நல்ல பிள்ளை எண்டு எனக்கு தெரியும்.. அதனால தள்ளியே நில்லுங்கோ..”
எனச் சின்னப் பிள்ளைக்கு விளக்கம் சொல்லுவது போலச் சொல்ல, சிறு சிரிப்போடு அவள் சொல்வதற்கெல்லாம் மண்டையை ஆட்டி வைத்தான் அந்த பெரிய பிஸினஸ்காரன்.
“சரி அதெல்லாம் இருக்கட்டும் ஏதவோ கேக்க வந்தியே என்னது..”
“ஓமெல்லே.. உங்கடை முகத்தை பாத்த உடனே எல்லாம் மறந்து மறந்து வருது எனக்கு..”
“நான் வேணுமெண்டால் அந்த பக்கம் திரும்பி நிக்கவோ..”
“சிரிப்பே வரேல்லை.. இருங்கோ யோசிக்கிறன்.. என்ன கேக்க வந்தனான்.. ஆ நினைவு வந்திட்டு..”
“என்ன..”
“நான் இதுக்கு முந்தி ஒரு வீட்டை இருந்தனான்.. அவா எனக்கு அத்தைக்காரி முறை வேணும்.. சரியான வக்கிரம் புடிச்ச மனுஷி என்னைய ரொம்ப பாடு படுத்தீட்டுது.. அந்த மனுஷியை உந்த நாயை விட்டு துரத்தோணும்.. அவாக்கு ரெண்டு குலக் கொழுந்துகள் இருக்குதுகள்.. அவனுங்களையும் நாயை விட்டுத் துரத்தோணும்.. கடிக்க எல்லாம் விட வேண்டாம்.. பயங் காட்டினால் போதும்.. முக்கியமா எனக்காக ஒரு ஆள் இருக்குதெண்டு உங்களை காட்டோணும் செய்வியளோ..”
“……………..”
“என்ன அமைதி ஆயிட்டியள்.. நான் சொல்லுறதை செய்யிறது கஷ்டமோ.. கஷ்டமெண்டால் விடுங்கோ பிறகு வேறை ஏதாவது யோசிச்சு சொல்லுறன்.. அப்புறமா இன்னுமொரு விருப்பம்.. எனக்கு நிறைய அநாதைப் பிள்ளையளுக்கு உதவ விருப்பம்.. ஆனா அவ்வளவு வசதி என்னட்டை இல்லை அதனால ஒரு குழந்தையை தத்தெடுத்து வளக்க போறன்.. அதுக்கு என்னென்ன செய்யோணும் எண்டு தெரியாது.. அதுக்கும் நீங்கள் உதவி செஞ்சியள் எண்டால் நான் கொஞ்சம் கொஞ்சமா உங்களிட்டை வேலை செஞ்சு உங்கடை கடனை அடைச்சிடுவன்.. அதோட முக்கியமான ஒரு விசியம் எனக்கு வேலை போட்டு குடுங்கோ.. அப்ப தானே குழந்தையையும் வளத்து உங்கடை கடனையும் அடைக்கலாம்.. இதெல்லாம் நான் சும்மா கேக்கேல்லை உங்களோட இருக்கோணும் எண்டால் மட்டும் செய்து குடுங்கோ.. ஏனெண்டால் உங்கடை கோபத்தை சமாளிக்க என்னை விட ஒருத்தருக்கும் தைரியம் பத்தாது..”
எனக் கோதை சொல்லிக் கொண்டே போக, ஜேம்ஸ் எப்படி உணர்ந்தான் என அவனுக்கே தெரியவில்லை.
அசையாமல் அவளையே பார்த்திருந்தவனுக்கு முன்னால், கையை அசைத்து
“என்னங்கோ..”
என கோதை அழைக்கவும் தான், தலையை உலுக்கிக் கொண்டு வேறெங்கோ பார்த்தான் ஜேம்ஸ்.
மெல்ல அவனுக்கு அருகில் போய், அவன் தோள் தொட்டு
“என்னாச்சு.. நான் சொன்னது செய்றது கஷ்டமோ.. கஷ்டமெண்டால் விடுங்கோ..”
என கோதை சொல்ல, திரும்பி அவளது முகம் பார்த்தவனுக்கு, அவளது அந்த சோகமான முகம் கொஞ்சங் கூடப் பிடிக்கவேயில்லை.
அதனால் அவளைச் சாதாரண நிலைக்கு கொண்டு வர, தன் தோள் மீதிருந்த அவளது கையைப் பார்த்து
“தொட்டு தொட்டுப் பேசக் கூடாதெண்டு சொல்லீட்டு நீ மட்டும் தொடுறியே பேபி..”
எனக் குறும்பாகக் கேட்டான்.
அவனது முகத்தில் மிளிர்ந்த குறும்பையே இமைக்காமல் பார்த்திருந்தவளுக்கு, அவள் மனதில் இந்த பன்னாடையோட முகத்துல குறும்பு கூட வருமா என்ற எண்ணம் தோன்ற, அவன் பார்த்த குறும்புப் பார்வையில் கொஞ்சம் தடுமாறித் தான் போனாள்.
அவன் தோளில் இருந்த தன் கையை மெல்ல இழுத்தபடி
“அது அது.. ஆ.. நான் தொட்டு பேசலாம் நீங்கள் தான் தொட்டுப் பேசக் கூடாது..”
எனச் சட்டென்று சொல்ல, இழுத்த கையை மீண்டும் இழுத்து தன் தோள் மீது வைத்து
“அப்போ கன்டினியூ பண்ணு பேபி..”
என்றவனை, எதை என்பது போல கோதை புரியாத பார்வை பார்க்க,
“தொட்டுப் பேசுறதை கன்டினியூ பண்ணுனு சொன்னன்..”
என விளக்கம் கொடுத்தான் ஜேம்ஸ்.
அவ்வளவு தான் பக்கென்று சிரித்து
“லூசு..”
என்று கொண்டு அவனை அடித்தவளது கையை மென்மையாகப் பற்றி,
“இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிரு பேபி..”
என்று கொண்டு அவளது கன்னம் பற்றி, மீண்டும் மேற்குப் பக்கமாக மேலே காட்ட, கோதையின் விழிகள் அங்கு கண்ட காட்சியில் விரிந்தது.
“இதையாப்பா பிடிச்சிருக்கோண்டு கேட்டியள்.. சாரிப்பா அப்போதை நீங்கள் சொன்னதுல கொஞ்சம் கடுப்பாயிட்டனா அது தான் அப்புடி சாரி சாரி..”
என்று கொண்டு திரும்பியவளின் முன்னால், தன் ஃபோன் திரையைக் காட்டினான் ஜேம்ஸ்.
அதில் கோதையின் அத்தைக்காரி திரிலோகநாயகியையும், அவனது மகன்களையும் நிறைய நாய்கள் விட்டுத் துரத்தும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு கணம் அதைப் பார்த்து விழித்தவள் மறு கணமே கை கொட்டிச் சிறு பிள்ளை போல துள்ளிச் சிரிக்கத் தொடங்கினாள்.
“வேணும் வேணும் நல்லா வேணும்.. எனக்கு சூடெல்லாம் வைச்சிது தெரியுமா உந்த மனுஷி.. எப்புடி வலிச்சிது தெரியுமாப்பா..”
என்று சொல்லிக் கொண்டே போனவளது சிரிப்பு சட்டென்று நின்று போக
“போதும் விட்ருங்கோப்பா.. எனக்கு உவையளைப் பாக்கவே புடிக்கேல்லை..”
என முகம் திருப்பிக் கொண்டாள் கோதை.
அவள் அப்படிச் சொன்னதும், ஃபோனை சட்டைப் பைக்குள் போட்ட ஜேம்ஸ்
“சூடா அப்புடியெண்டால் என்ன பேபி..”
என்று கொண்டு அவளைப் பார்க்க
“இந்த கரண்டி இருக்கே.. அதை அடுப்பு நெருப்பில சூடு காட்டிட்டு என்ரை உடம்பில அழுத்தி வைப்பா.. தோலே பொசுங்கியிடும்.. நிறைய வாட்டி கை கால் முதுகு இடுப்புல எல்லாம் வைச்சுக்கிறா..”
என விளக்கம் சொன்னவளது கண்கள் லேசாகக் கலங்க, அவளை அறியாமலேயே அவளது கை அவளது இடுப்பைப் பிடித்துக் கொண்டது.
முன்னால் நின்றிருந்தவனது நீல விழிகள் அவளது இடையைத் தொட்டு மீள, லேசாக தெரிந்த அவளது இடையில் அவளது லேசான கறுப்பு நிறத்தையும் மீறி ஒரு கறுப்பு அடையாளம் தெரியவே, கை முஷ்டி இறுக பக்கத்தில் இருந்த மரத்தில் தன் வலக் கையை இறுகக் குத்தினான் ஜேம்ஸ்.
அவனது அந்த திடீர் செயலில் பதறிக் கொண்டு வந்து அவனைப் பிடித்தாள் கோதை.
“இப்ப என்னாச்சு..”
என அவள் கேட்டு முடிக்கவும் அடுத்த கணமே, அவளுக்கு முன்னால் மீண்டும் தன் ஃபோன் திரையைக் காட்டினான் ஜேம்ஸ்.
அதிலே முகமூடி போட்ட யாரோ இருவர் நாயகியை பிடித்திருக்க யாரோ ஒருவன் அவரது கையில் ஒரு சூடான கரண்டியால் சூடு வைத்துக் கொண்டு இருந்தான். அவர் கத்திய கத்தலில் கோதைக்கு காதுக்குள் குடைந்தது.
“ஐயோ என்னது.. யாரு அது நீங்களா.. நீங்கள் சொல்லியோ செய்யினம்.. அதுக்குள்ளயேவா போதும் போதும் விடச் சொல்லுங்கோப்பா பிளீஸ்..”
என அவனது கையைப் பிடித்துக் கொண்டு கோதை கெஞ்ச, அவள் சாதாரணமாகக் கேட்டாலே அதை நிறைவேற்றிக் கொடுக்க ஜேம்ஸ் காத்திருக்கும் போது, அவளது கெஞ்சலைக் கண்டு கொள்ளாமல் இருப்பானோ அவன், நாயகியை அப்படியே விடச் சொல்லி அவன் சைகை காட்ட அடுத்த கணமே அவர்கள் விலகினார்கள்.
அப்படியே கீழே அமர்ந்து விட்டாள் கோதை. இப்படி ஒருத்தனை அவளது வாழ்வில் அவள் இதுவரை பார்த்ததே இல்லை. தனக்காகவா இதை செய்தான் என்பதே அவளுக்கு ஏதோ புதுவித உணர்வைத் கொடுத்தது. நாயகியின் கத்தலில் மனதோரம் கொஞ்சம் திருப்தியாகவும் இருந்தது.
அவள் ஒன்றும் மகாத்மா இல்லையே சூடு வைத்தவளை உடனே மன்னிக்க, எத்தனை தடவை சூடு வாங்கியிருப்பாள். அன்று அனுபவித்த அத்தனை வலிகளுக்கும் இந்தவொரு காட்சியே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
அண்ணாந்து தன் முன்னால் நின்றவனைப் பார்த்தாள். அவனைக் கட்டியணைத்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்து தன் மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும் போல அவளுக்கு உள்ளூர ஒரு வேகம் வர, பெரும்பாடு பட்டு அதை அடக்கிக் கொண்டாள் கோதை.
மெல்ல தானும் அவளுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டான் ஜேம்ஸ்.
“வீட்டுக்கு போலாமா பேபி..”
“ஓம் போகலாமே.. உன்ரை சாரி சாரி.. உங்கடை நாயளோட மல்லுக் கட்டி களைச்சுப் போனன்.. ஏதாவது குடிச்சால் தான் திரும்ப எனேர்ஜி வரும்..”
“நீ என்னைய டா போட்டே கூப்பிடு..”
“அச்சோ அது கூடாது.. மரியாதை குறைவா நடக்க கூடாதெல்லோ..”
“அப்ப கொஞ்சம் முதல் மரியாதை வண்டில் வண்டிலா வந்திச்சுதே..”
“அதூஊ… அப்ப..”
“இதூஊ.. இப்பவா.. சரி என்னை பேர் சொல்லியாவது கூப்பிடன்..”
“ஐயையோ கூடாது கூடாது..”
“அப்ப எப்புடி தான் கூப்பிடப் போறாய்..”
“எப்புடிக் கூப்பிடுறதெண்டால்.. நீங்கள் என்ரை சகோதரியை கட்டப் போறியள்.. அப்ப அத்தான் தான்.. அத்தான் எண்டு கூப்பிடுறன்..”
“ஓ.. அது சரி ஒரு வேளை உன்னைய கட்டினால் எப்புடி கூப்பிடுவாய்..”
“அச்சோ வாயில போடுங்கோ வாயில போடுங்கோ..”
“என்னத்தை..”
“நான் வாழ்விழந்தவள்.. உந்த மாதிரி என்னட்டை கேக்க கூடாது..”
“லிஷன் பேபி.. ரொம்ப பண்ணாத.. இதெல்லாத்தையும் யாரு வகுத்தது.. உன்னை நீயே முடக்கிக்காத.. என்கிட்டே சாதாரணமா இரு..”
“சாரி கொஞ்சம் பதட்டம் ஆயிட்டன்..”
“ம்ம்.. புரியுது.. இப்ப சொல்லு.. நான் உன்னைக் கட்டினால் என்னை எப்புடிக் கூப்பிடுவாய்..”
“நீங்கள் என்னைக் கட்டினாலும் அத்தான் தான்..”
“ஓ அப்புடியோ..”
“ஓம்..”
“அப்போ சரி.. என்னைய அத்தான் எண்டே கூப்பிடு..”
“சரி கூப்பிடுறன்.. ஆனா ஒண்டு..”
“இப்ப என்ன..”
“ஆருமே இல்லாத நேரம் தான் கூப்பிடுவன்..”
“என்னவோ செய்து தொலை..”
“சரி வாங்கோ வீட்டை போவம்..”
“அப்போ அங்க போகேல்லையோ..”
“எங்க..”
என அவன் காட்டிய மேற்குப் பக்கத்தை பார்த்த கோதை
“அச்சோ இதை எப்புடி மறந்தன்.. வாங்கோ அங்க போவம்..”
என்று கொண்டு வேகமாக எழுந்தாள்.
வழமை போல் அவள் முகத்தைப் பார்த்தபடியே எழுந்தவன்
“அத்தான்னு சொல்லு கூட்டிட்டு போறன்..”
என ஆசையோடு கேட்க,
“அத்தான்.. பொத்தான்.. கொத்தான்.. வாங்கோ போவோம்..”
என்று துள்ளிக் குதித்துக் கொண்டு முன்னே ஓடினாள் கோதை.
தலையை அழுந்தக் கோதி, உல்லாசமாகச் சிரித்தபடி அவளைத் தொடர்ந்தான் கோதையின் அத்தான்.
ஒரு பெரிய வரம்பில் நடந்து செல்ல, மரங்கள் அடர்ந்திருந்த அந்தப் பகுதியில், ஒரு பெரிய மரத்தில் ஓரளவு பெரிய குடில் ஒன்று கட்டப் பட்டிருந்தது.
அந்தப் பெரிய மரத்தை மஞ்சள் மற்றும் ஊதா நிறத்து பூக் கொடி பற்றிப் படர்ந்து, அந்த குடிலையும் அலங்கரிப்பது போல அதன் மேலேயும் படர்ந்திருந்தது.
மேற்கே மெல்ல அமிழ்ந்து கொண்டிருந்த சூரியனின் அந்தி நேரக் கதிர்கள் வேறு அந்தக் குடிலுக்கு அழகு கொடுத்துக் கொண்டிருந்தது.
இந்த இடம் தான் ஜேம்ஸுக்கு உலகிலேயே மிகவும் பிடித்த இடம், அதனால் தான் அந்த இடத்தை தனக்கு பிடித்தவளுக்கு காண்பிக்க அழைத்து வந்திருந்தான்.