அசுரனின் குறிஞ்சி மலரே.. 30

4.8
(16)

குறிஞ்சி மலர்.. 30

ஜேம்ஸ் பீட்டர் தன்னிடம் கொடுத்து விட்டுப் போன, அந்தப் பெரிய பெட்டியைக் கையில் திறந்து வைத்திருந்தபடி வியாகேசு விழித்துக் கொண்டு நிற்க, அவருக்கு பின்னால்
“பெரிசு.. பெரிசூஊஊ..”
என ஏலம் போட்டபடி வந்து நின்றான் வஞ்சிமாறன்.

“என்ன பெரிசு நிண்டபடியே நித்திரையோ.. உதென்ன கையில ஏதும் புதையல் கிடைச்சிதோ..”
என்று கொண்டு அவரின் கையில் இருந்த பெட்டியை எட்டிப் பார்த்தவன்
“வாவ்..”
என வாயைப் பிளந்தான்.

“பூச்சியேதும் உள்ள போவப் போகுது வாயை மூடடா..”
என்று கொண்டு அவர் கீழே அமர்ந்து விட, தானும் அவரோடு அமர்ந்து கொண்டு அந்தப் பெட்டியை ஆராய்ந்தான் வஞ்சி.

பெட்டிக்குள் அழகான சிகப்பு வண்ண கூரைப் பட்டு சேலையும், அதற்கு படு பொருத்தமாக ஆரி வேலைப்பாடு செய்த பிளவுஸும் இருக்க, அதற்கு மேலே மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலிக்கயிறும், வெள்ளி மெட்டியும், வெள்ளிக் கொலுசும் அப்படியே குங்குமச் சிமிழும் வரிசையாகக் கிடக்க, ஒரு பக்கத்தில் வண்ண வண்ண வளையல்களும் ஒரு பெரிய வைர ஆரமும் கிடந்தது.

“எல்லாம் சரி தான் பெரிசு இது யார் குடுத்தது.. நம்ம பாஸா..”

“ஓமடா..”

“அதை ஏன் உங்க கிட்டே குடுத்தாரு..”

“அது தான்டா எனக்கும் தெரியேல்லை..”

“ஒரு வேளை கலியாணப் பொண்ணுட்ட குடுக்க சொல்லிக் குடுத்திருப்பாரோ..”

“அவன் ஒண்டுமே சொல்லேல்லை.. என்னட்டை குடுத்திட்டு நான் கேக்கும் போது குடுங்கோண்டு மட்டும் சொன்னான்..”

“அப்ப பவுத்திரமா வைச்சுக் கொள்ளுங்கோவன்..”

“ம்ம்..”

“அது சரி என்ன பலமா யோசிக்கிறியள்..”

“பீட்டருக்கு போயும் போயும் அந்த தில்லையம்பலத்தின்ரை பிள்ளையைத் தான் கலியாணம் கட்ட விருப்பம் வந்திருக்குதோ.. அதை நினைக்க நினைக்க தான் கடுப்பா கிடக்குது.. பிறகு என்ன இருந்தாலும் வாழப் போறவன் அவன் தானே எண்டு என்னை நானே சமாதானப் படுத்தி வைச்சிக்கிறன்..”

“ஏன் உங்களுக்கு அந்தப் பிள்ளையைப் பிடிக்கேல்லை..”

“அந்தப் பிள்ளையும் சரியில்லை அந்தப் பிள்ளையிந்த அப்பனும் சரியில்லை..”

“எங்கடை கோதை அந்தக் குடும்பத்துல இருந்து வந்தவள் தானே..”

“அங்க இருந்து வந்தாலும் எங்கடை கோதைக்கும் அவைக்கும் எந்த விதமான ரத்த சம்மந்தமும் இல்லை.. அதோட அவள் சேத்துல முளைச்ச செந்தாமரை.. அவள் ஆறு வயசுலயே அப்பாம்மா இல்லாமல் இவையிந்தை வீட்டுக்கு வந்திருக்கிறாள் அவ்வளவு தான்..”

“ம்ம்ம்.. ஆனால் அவை என்ன சரியில்லை பெரிசு.. சொத்துபத்துக்கோ ஆசைப் பட்டு வருகினம்..”

“அதுகள் மோசமான ஆக்களடா.. அப்புடியான ஆக்களை பீட்டர் எப்புடி தான் உள்ள விட்டானோ தெரியேல்லை.. ஒருவேளை எனக்கே தெரியாமல் புதுசா வேறை ஏதும் ஐடியா போட்டிருப்பான் எண்டு நினைக்கிறன்..”

“அவை என்ன மோசம் எண்டு சொல்லுங்கோவன்..”

“என்னடா கதை கேக்க படு ஆர்வமா இருக்கிறாய் போலயே..”

“ஹீ ஹீ அப்புடியெல்லாம் இல்லையே..”

“உன்ரை உந்த இளிப்பே உன்ரை வள்ளலைச் சொல்லிக் குடுக்குதே பிறகென்ன..”

“இல்லை அவை எப்புடிப் பட்டவை எண்டு தெரிஞ்சால் நானும் கொஞ்சம் அலேட்டா இருக்கலாம் எல்லோ அது தான்..”

“உனக்கு எல்லாமே விளையாட்டு தான்.. சரி ரொம்ப ஆர்வமாக் கேக்கிறதால சொல்லுறன்..”

“தில்லையம்பலத்துக்கு எங்கடை பீட்டர்ல சரியான பொறாமை.. அவன்ரை பேரில தானே எல்லா பிஸினஸும் கொடி கட்டிப் பறக்குது அது தான் அந்த பொறாமைக்கு காரணம்.. கிட்டதட்ட ஒரு ரெண்டு மாசத்துக்கு முதல் இங்க வந்து துள்ளினானே ஒருத்தன் அவன் அந்தாளிந்தை ஆள் தான்.. அவனை அனுப்பினதே பீட்டரை போட்டுத் தள்ளத்தான்.. பீட்டரோட பார்வைக்கு இதெல்லாம் தப்புமா.. ஆனா அவன் பெரிசா கண்டு கொள்ளேலை.. பிறகு இந்த வீட்டுல பெரியாக்கள் எண்டுற பேருல சுத்தித் திரியுதுகளே நாலு பன்னாடையள் அதுகளுக்கும் ஏதவோ ஆசை காட்டி தன்ரை பக்கம் இழுத்து.. அதுகளை வைச்சும் ஏதவோ சதி பண்ணுறான்.. அவையிந்த நினைப்பு பீட்டருக்கு ஒண்டும் தெரியாதாக்கும் எண்டு.. அவனுக்கு தெரியாம இங்க எதுவுமே நடக்காது எண்டு அவைக்கு தெரியேல்லை.. பொறுமையா விட்டு வைச்சிருக்கிறான்.. இதுக்குள்ள அவன் செய்யிறதை எல்லாம் செஞ்சு போட்டு நல்ல பிள்ளை போல அவனிட்டையே வந்து தன்ரை மிகளை கலியாணம் கட்டுறியோ எண்டு கேட்டால் அவனுக்கு கோபம் வருமோ வராதோ.. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அந்தாளிந்தை மகளெண்டு ஒருத்தி வந்திருக்காளே கோவாவர்ஷியோ சோவாவர்ஷியோண்டு..”

“ரூபவர்ஷி..”

“அந்த மேனாமினுக்கி தான்.. இது வரை ரெண்டு பேரை காதலிச்சு ஏமாத்திப் போட்டாள்.. ஒருத்தன் சரி தான் போடி ரூபா இல்லாட்டிக்கு சோபா எண்டு வேறை ஒருத்தியை காதலிச்சு கலியாணம் கட்டியிட்டான்.. இன்னொருத்தன் போத்திலும் தாடியுமா திரியுறான்.. இப்ப இங்க வந்து நிக்கிறாள்..”

“கடவுளே உதெல்லாம் தெரிஞ்சே அதுகளை பாஸ் உள்ள விட்டிருக்கிறார்..”

“தெரிஞ்சதால தான் உள்ளயே விட்டிருக்கிறான்..”

“பாஸ் அதெல்லாம் தெரிஞ்சுமா அந்தப் பிள்ளையைக் கட்டப் போறாரு..”

“அதெல்லாம் எனக்கு தெரியேல்லை.. பீட்டர் எப்போ என்ன முடிவு எடுப்பான்னே தெரியேல்லை..”

“சரி பாப்பம்.. நடக்குறது நடக்கட்டும்.. பாஸுக்கு தெரியும் தானே எது செய்யோணும் செய்யக் கூடாதெண்டு.. நீங்கள் ஒழும்பி வாங்கோ நாங்கள் போய் வீட்டு அலங்காரம் எல்லாம் எப்புடி இருக்கெண்டு பாப்பம்..”

“நீ போ.. நான் கொஞ்சத்தால வாரன்..”

“சரி பெரிசு.. நீங்கள் ஆறுதலா வாங்கோ.. உவள் கோதையைக் கண்டியளோ..”

“அறைக்குள்ள படுத்திருந்தாளேடா.. ஏதும் அவசரமோ..”

“இல்லை குழிப் பணியாரம் கேட்டனான்.. முறைச்சுப் பாத்துட்டு.. எத்தினை அடியில குழி கிண்டுறது எண்டு கேட்டிட்டு போனவள்.. ஒரு வேளை குழி கிண்ட மண்வெட்டி எடுக்க போட்டாளோ தெரியேல்லை..”

“இப்ப வந்தன் எண்டால் உன்னையக் குழி கிண்டிப் புதைப்பன் ஓடிரு..”

“வர வர உமக்கு என்னில பாசமே இல்லை.. கோதை வந்ததும் கட்சி மாறிட்டாய்.. மகளுக்கும் அப்பாவுக்கும் என்னுல கொஞ்சங் கூட மரியாதை இல்லை..”

“வெட்டிக்கதையை விட்டிட்டு போய் மகளுக்கு ஏதாச்சும் உதவி செய்..”

“இப்ப போறன்.. திரும்பி..”

“திரும்பி..”

“திரும்பி வர மாட்டன் எண்டு சொல்ல வந்தன்..”

“வந்திராதே..”

“தங்கச்சீ கோதாவாரி..”
என இராகமாக அழைத்தபடி வஞ்சி அங்கிருந்து போக
“நல்ல காலம் கோதாரினு கூப்பிட்டு.. அவளிட்டை அகப்பைக் காம்பால அடி வாங்காமல் விட்டியே..”
எனப் பின்னால் இருந்த வியாகேசு சிரிக்க, அவருக்கு பழிப்பு காட்டி விட்டு ஓடி விட்டான் வஞ்சி.
………………….
அந்தப் பெரிய மரத்தின் கீழே நின்று மேலே இருந்த குடிலை அண்ணாந்து பார்த்தாள் கோதை. அவளது முகத்தில் அத்தனை சந்தோஷம்.

இப்படி ஒரு அழகான, இயற்கையான, ஏகாந்தமான சூழலில் ஒரு மரத்தின் மேல் ஓரளவு பெரிய குடில் என்பதெல்லாம் அவள் கனவில் மட்டுமே கண்டு இருக்கிறாள்.

அதை நேரில் பார்க்கையில், அந்த இடத்தை தனக்கு அறிமுகப் படுத்தியவன் மேல் தனி அன்பே வந்து விட்டது.

“ப்ப்ப்பாஆஆ.. இப்புடி ஒரு இடத்தை நான் பாத்ததே இல்லை.. எவ்வளவு அழக்கா இருக்கு.. உங்களுக்கும் என்னையப் போலத் தான் ரசனை என்ன.. நான் இந்த இடத்தை எதிர்பார்க்கவே இல்லை.. சும்மா சொல்லக் கூடாது உந்த சிடுமூஞ்சிக்கு பின்னாலயும் இப்புடி ஒரு ரசனையா எண்டு திகைக்க வைக்குது..”
என முகமெல்லாம் பிரகாசமாக அவனைப் பார்ப்பதும் அந்தக் குடிலைப் பார்ப்பதுமாக நின்றவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ஜேம்ஸ்.

“என்ன நிண்டபடியே நித்திரையோ.. இதுல எப்புடி ஏறுறது.. கொஞ்சம் சொல்லுங்களேன்..”
என அவன் முன்னால் அவள் சொடக்கிட்டு கேட்க, தலையை உலுக்கி தன்னைச் சமன் படுத்தியவன், பக்கவாட்டில் கிடந்த பெரிய ஏணியைக் காட்டினான்.

கிட்டத்தட்ட அரைப் பனையளவு உசரத்தில், அந்த மரத்தில் கட்டப் பட்டிருந்த அந்தக் குடிலுக்கு பத்தே பத்து ஏணிப்படிகள் தான் இருந்தன. ஒரு படியில் இருந்து அடுத்த படிக்கிடையில் இருந்த இடைவெளி பெரிதாக இருந்தது.

அவன் காட்டிய ஏணியை ஆர்வத்தோடு எட்டிப் பார்த்த கோதைக்கு ஒரே கவலையாகிப் போய் விட்டது. அந்தப் படிகளில் ஜேம்ஸ் தாவித் தாவி ஏறி விடுவான். ஆனால் பாவம் கோதையால் எப்படி ஏற முடியும். சாதாரண ஏணிகளில் ஒரு படிக்கும் அடுத்த படிக்கும் இருக்க வேண்டிய இடைவெளி, இங்கே இரண்டு படிகளுக்கு நடுவில் மூன்று மடங்கு இடைவெளியாக இருந்தது.

அவளையே பார்த்திருந்தவன்
“என்ன பேபி.. ஏன் பாத்துட்டே நிக்கிறாய்.. மேல ஏறிப் பாக்க ஆசையில்லையோ..”
என்று கேட்டபடி, முன்னால் போய் அந்த ஏணிகளில் வேகமாகத் தாவி ஏறினான்.

ஐந்து படிகளைக் கடந்த நிலையில் நின்று கீழே பார்த்தவன், கீழே நின்று அவனையே அண்ணாந்து பாவமாகப் பார்த்தவளின் பார்வையில்
“என்னடி..”
என்று கேட்க,
“உங்கடை பாட்டுக்கு பாஞ்சு பாஞ்சு போறியளே.. உதுல நான் எப்புடி ஏறுறது எண்டு கொஞ்சமாச்சும் யோசிச்சியளோ..”
எனக் கடுப்பாகிப் போனாள்.

“ஏன்டி ஏறத் தெரியாதோ..”

“ஏறத் தெரியாதாவோ.. லூசாப்பா நீயி..”

“ஏன்டி..”

“உதுல நான் எப்புடி ஏற..”

“ஏன்டி ஏறுறதுக்கு என்ன..”

“டேய் வந்தன் எண்டால் உழக்குவன்..”

“ஏன்டி..”

“கொஞ்சம் கீழ குனிஞ்சு பாருங்கோ..”

“என்னத்தை..”

“ஆ.. என்ரை மூஞ்சியை..”

“சரி பாக்கிறன்..”
என அவன் சொல்லி முடிப்பதற்குள், அவனை நோக்கி ஒரு மண்ணாங்கட்டியை எடுத்து எறிந்திருந்தாள் கோதை.

அது தன்னில் படாமல் மெல்ல விலகிக் கொண்டவன்
“என்ன தான்டி உன்ரை பிரச்சினை..”
என சீரியஸாகக் கேட்க,
ஏணிப்படிகளைக் கை காட்டி
“இதுல நான் எப்புடி ஏறுறது.. ஒரு படிக்கும் மத்தப் படிக்கும் எவ்வளவு இடைவெளி எண்டு பாத்தியளோ.. நீங்கள் பாட்டுக்கு ஏறி நிண்டு கொண்டு மேல வா மேல வா எண்டால் எப்புடி வாரது நான்..”
எனக் கடுப்புக் குறையாமல் கோதை சொல்ல, அப்போது தான் அவள் சொன்னதைக் கவனித்தவன், வேகமாகக் கீழே வந்தான்.

“இப்ப எப்புடியுங்கோ ஏறுறது.. எனக்கு அழுகையா வருது.. இதுக்கு நீங்கள் என்னைய இங்க கூட்டிக் கொண்டு வராமலேயே விட்டிருக்கலாம்..”
என கோதை முகத்தைத் தூக்கி வைத்தபடி சொல்லி விட்டு
“மரியாதையா..நாளைக்கே நான் விழாமல் டக்கெண்டு ஏறுற போல படியள் கட்டி விடுங்கோ..”
என்றும் சொன்னாள்.

சில நொடிகள் யோசனை செய்தவன், அவளைப் பார்த்து
“நான் சொல்லுற போல செய்றியோ..”
எனக் கேட்க,
“டக்கெண்டு செல்லுங்கோ.. எனக்கு எப்படா மேல போய் சுத்திப் பாப்பன் எண்டு கிடக்கு..”
எனப் பரபரத்தாள் கோதை.

“இப்ப மட்டும் உன்னை ஒரே ஒரு தடவை தொடட்டோ..”
என அவன் கேட்க, அவள் அவனை முறைக்க
“உனக்கு இப்ப மேல போகோணுமோ இல்லையோ..”
என அவன் பாயிண்டை பிடிக்க,
“போகோணும் போகோணும்..”
என்று கொண்டு அவனுக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டாள் கோதை.

அதை அனுமதியாக எடுத்துக் கொண்டவன், அவளைப் பட்டும் படாமலும் மெல்லத் தூக்கி, முதல் படியில் அமர்த்தினான். இப்படியே மெல்ல மெல்ல தானும் ஏறி, அவளையும் ஒவ்வொரு படியாக தூக்கி அமர்த்த, ஒரு வழியாக இருவரும் ஏழு படிகளுக்கு வந்து சேர்ந்தனர்.

ஆனால் கோதைக்கு தான் வாய் சும்மா கிடக்குமா,
“ஏனுங்கோ.. நான் பாரமா இல்லை தானே.. தெரியும் எனக்கு.. ஏனெண்டால் நான் இப்ப சிலிம் ஆயிட்டன்.. அது தான் உங்களுக்கு கஷ்டமா இல்லை எண்டு நினைக்கிறன்..”
எனக் கேட்டு வைக்க, அடுத்த படிக்கு அவளைத் தூக்க கையைக் கொண்டு போனவன், அவளை மேலும் கீழுமாகப் பார்த்த பார்வையில், கோதையின் தலை தானாக கவிழ்ந்து கொண்டது.

சிலிண்டர் சைஸில் உருளைக் குட்டி வடிவத்தில் இருந்து கொண்டு சிலிம் அது இதென பேசினால், பாவம் அவனும் தான் என்ன செய்வான்.

ஏற்கனவே அவனுக்கு அவளைத் தூக்கித் தூக்கி வைத்ததில் லேசாக மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. இதில் அவளது அந்த வெண்ட கதைக்கு அவன் பேசாமல் நின்றதே பெரிய விசயமாக இருந்தது.

ஒரு ரியாக்சனும் காட்டாத அவனது முகத்தைப் பார்த்தவள்,
இதற்கு பேசாமலேயே வாயை மூடி வைத்திருக்கலாம் என மானசீகமாக தன் தலையில் குட்டிக் கொண்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!