குறிஞ்சி மலர்.. 38
தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த கோதையின் பார்வை, சுவற்றிலே தான் மாட்டி வைத்த ஜேம்ஸின் படத்திலும், கட்டிலில் கிடந்த தன் டப்பா ஃபோனிலுமே அடிக்கடி பதிந்து பதிந்து மீண்டு கொண்டிருந்தது.
காதல் கொண்ட மனது அவனுக்கு அழைத்து பேசு என்று ஆர்ப்பரிக்க, வேண்டாம் வேண்டாம் அவர் தான் ஜாலியாக கொழும்பு போய் விட்டாரே என்று அவளது பெண் மனது அவளுக்கு அணை போட, கடைசியில் ஏதாவது குறுஞ்செய்தியாவது அனுப்பி பார்ப்போமே என்கிற அளவுக்கு கோதை வந்திருந்தாள்.
முதலில் தன் ஃபோனை எடுத்து வாட்சாப்பில் அவனது டீபியை எடுத்து பார்த்தாள். கருஞ்சிறுத்தை ஒன்று தன் பழுப்பு நிற விழிகளால் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றது.
சந்தேகமே இல்லாமல் இது அவனது நம்பர் தான், அவனால் மட்டும்தான் இப்படி ஒரு டீபி வைக்க முடியும் என எண்ணிக் கொண்ட கோதை, நேரத்தை பார்க்க அது இரவு பத்து என்று காட்டியது. இவ்வளவு நேரமாகவா அவனோடு பேசவோ வேண்டாமோ என்று யோசனை செய்து கொண்டிருந்தேன் எனத் தன் தலையில் தட்டிக் கொண்டு, உடனே அவன் ஆன்லைனில் நிற்கிறானா என செக் செய்து பார்த்தாள்.
அது லாஸ்ட் சீன் ஆறு மணியெனக் காட்டியது. இப்போது என்ன செய்வது என மீண்டும் யோசனை செய்தவள், ஒரு குழந்தை பெட்டிக்குள் இருந்து எட்டிப் பார்ப்பது போன்ற ஒரு ஸ்டிக்கரை அவனுக்கு தட்டி விட, அது ஒற்றைக் கோடு தான் காட்டியது.
ஃபோனைத் தூக்கிப் பக்கத்தில் போட்டு விட்டு சலிப்போடு படுத்துக் கொண்டாள் கோதை. அவளுக்கு தூக்கமே வரவில்லை. அடிக்கடி அவளது விழிகள் ஃபோனையே பார்க்க, அலுப்பாகிப் போய்த் திரும்பிப் படுத்துக் கொண்டு விட்டாள்.
சட்டென்று வாட்சாப்பில் மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்கவே, வேகமாகத் திரும்பி ஃபோனை எடுத்துப் பார்த்தவளுக்கு ஏமாற்றமாகிப் போய் விட்டது. வஞ்சி தான் ஏதோ சமையல் வீடியோ அனுப்பி வைத்திருந்தான். ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தையை எட்டி உதைப்பது போன்ற ஒரு ஸ்டிக்கரை அவனுக்கு அனுப்பி வைத்து விட்டு, ஃபோனை தூக்கி மெத்தையின் ஓரமாக எறிந்து விட்டு, கோதை மீண்டும் திரும்பிப் படுத்து விட்டாள்.
அவள் திரும்பி படுத்து ஐந்தாவது நிமிடத்தில், இரண்டு மூன்று மெசேஜ் வருவதற்கான சத்தம் கேட்டது. அது வஞ்சியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் அப்படியே பேசாமல் படுத்திருந்தாள் கோதை. மெசேஜ் சத்தமும் சில நிமிடங்கள் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.
அலுப்போடு மெல்ல எட்டி ஃபோனை எடுத்துக் கொண்டவள், தன் வஞ்சி அண்ணனோடு ஏதாவது வம்பு இழுக்கலாம் என்ற எண்ணத்தில் போனின் திரையைப் பார்த்தாள். அதிலே வஞ்சியின் மெசேஜ் உடன், கருஞ்சிறுத்தை முகத்தோடும் ஏதோ மெசேஜ் வந்திருந்தது.
அவ்வளவு தான் கோதை அதைப் பார்த்ததுமே எப்படி உணர்ந்தாள் என அவளுக்கே தெரியவில்லை. மெல்ல வாட்சாப்பினுள் சென்று, ஜேம்ஸிடம் இருந்து வந்த மெசேஜை ஓபன் செய்து பார்த்தாள் கோதை.
“புது நம்பருல இருந்து போன மெசேஜ்க்கு என்ன போட்டிருக்காரு எண்டு பாப்பம்..”
என்றபடி ஜேம்ஸின் மெசேஜ்ஜை பார்த்தாள்.
“ஹேய் பேபீ..”
என அவன் அனுப்பியிருந்தான்.
“ஹேய் பேபீயா.. அப்போ யாரு என்னனு தெரியாமல் பேபீனு போடுவானா இவன்..”
எனக் கடுப்பாகிப் போனாள் கோதை.
“பேபீ.. தூங்காமல் என்ன பண்ணீட்டு இருக்காய்..”
என அவனிடம் இருந்து அடுத்த மெசேஜ் வந்தது.
“என்ரை நம்பர் இவனுக்கு தெரியாது தானே.. அப்புறம் யாருன்னு நினைச்சு பேபீ சோபின்டு அடிச்சு விடுறான்..”
என கோதை அவனது மெசேஜ்ஜை முறைத்தபடி இருக்க,
“என்ன பேபீ.. என்ன ஃபோனையே முறைச்சிட்டு இருக்கியோ..”
என அடுத்த மெசேஜ் வந்தது.
“இவனுக்கு எப்புடி தெரியும் நான் முறைக்கிறது..”
என கோதை தலையைப் பிய்த்துக் கொள்ள,
“டீபில ரொம்ப கியூட்டா இருக்கே பேபி..”
என அடுத்த மெசேஜ் வந்து சேர்ந்தது.
அப்போது தான் கோதை தன் வாட்சாப் டீபியையே பார்த்தாள்.
கோதை ஆறு வயதில் எடுத்துக் கொண்ட அபூர்வமான படம் அது. அதுவும் நீலரூபியின் தயவால் எடுக்கப் பட்ட படம் அது. தலையில் ஒற்றைக் குஞ்சம் கட்டி, பெரிய கறுப்பு பொட்டு வைத்து, சிவப்பு நிற சரிகை பாவாடையில், ஒற்றைக் கையால் நீலரூபியின் முந்தானையை பிடித்துக் கொண்டு, ஒற்றைக் கையில் ரோஜாப் பூவோடு நின்றிருந்தாள் சிறுமி கோதை.
அந்தப் படத்தில் இருந்த கோதையையும் அவளது நிறத்தையும் கிண்டல் செய்யாதவர்கள் யாருமே இல்லை. அவளது சாக்லேட் நிறத்துக்கும், அந்த சிகப்பு நிறச் சட்டைக்கும் பொருத்தமே இல்லாதது போல இருக்கும். ஆனாலும் அவளுக்கு அந்த படம் மிகவும் பிடிக்கும். அவளுக்கென்று இருக்கும் ஒரேயொரு சிறுவயது நினைவு அது மட்டும் தான்.
தில்லையம்பலம் அவளை ஒரு படம் கூட எடுத்ததில்லை. நீலரூபி தான் யாருக்கும் தெரியாமல், அவளை ஸ்ரூடியோவுக்கு அழைத்து சென்று இரண்டு மூன்று படங்கள் எடுத்து வைத்திருந்தார். அதில் அவளது கைக்கு கிடைத்த படம் இதுவொன்று மட்டும் தான். அதனை ஃபோன் கேமராவில் படம் பிடித்து, தன் வாட்சாப் டீபியில் வைத்திருந்தாள் கோதை.
எல்லோரும் கேலி செய்த அவளது அந்தப் படத்தை தான், இங்கேயொருவன் கியூட்டா இருக்கு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறான்.
உண்மையில் கியூட்டா தான் இருக்கிறோமா என்பது போல, தன் படத்தை தானே ஸூம் செய்து பார்த்தாள் கோதை. அதை அவனிடமே கேட்டும் வைத்தாள்.
“நிசமாவே கியூட்டா இருக்கேனா..”
“இல்லை பேபி..”
“அப்போ இப்ப சொன்னீங்களே..”
“கியூட் என்றதை விட நீ அம்சமா இருக்கேனு சொல்லலாம்..”
“அம்சமா..”
“யா..”
“சும்மா சொல்லாதீங்க..”
“நான் ஏன் சும்மா சொல்ல..”
“அப்ப உண்மையாவா..”
“எனக்கு பொய் சொல்றது பிடிக்காதுனு உனக்கு தெரியாதோ..”
“ம்ம்..”
“என்ன ம்ம்.. உன்னோட அழகு உனக்கு தெரியலை பேபீ..”
“அழகா நானா..”
“யா.. நீ தான்..”
“ஏனுங்கோ..”
“சொல்லு பேபீ..”
“நீங்கள் குடிச்சிருக்கீங்களா..”
“புரியலையே..”
“சரக்கு ஏதாவது அடிச்சு இருக்கியளோ..”
“எனக்கு அந்தப் பழக்கம் பெரிசா இல்லை பேபி.. எப்போதாவது தான்.. ஏன்..”
“இல்லை பொதுவா சரக்கு உள்ள போனால் தான் எல்லாரும் எதையாவது உளறுவாங்க.. அதான் கேட்டன்..”
“இப்ப நான் என்ன உளறீட்டன்..”
“நான் அழகு அம்சம்னு உளறுறீங்களே அது தான்..”
“போ பேபீ நீ.. எனக்கு நீ தான் அழகி நீ மட்டும் தான் அழகி..”
“ஏனாம்..”
“ஏன்னா.. நீ என்னோட பொண்டாட்டி..”
“ஓ..”
“என்ன ஓ..”
“அதெல்லாம் கூட உங்களுக்கு நினைவு இருக்கா..”
“எதெல்லாம்..”
“அது தான்.. நான் உங்க பொண்டாட்டி எண்டுறது..”
“இல்லாமலா..”
“சும்மா அளக்காதேங்கோ.. இப்புடிப் பட்டவர் தான்.. என் கிட்டே சொல்லாமல் கொள்ளாமல் கொழும்புக்கு போனீங்களோ..”
“உன் கிட்டே சொல்ல வந்தேன் பேபீ.. நீ நல்ல அசதியில தூங்கீட்டு இருந்தே.. அதான் உங்கம்மா கிட்டே சொல்லீட்டு கிளம்பீட்டன்..”
“சரி அதை விடுங்கோ.. இந்த ரெண்டு நாளுல எங்கிட்டே ஒரு தடவையாவது பேசணும் எண்டு தோணலையோ உங்களுக்கு..”
“ஏன் தோணாமல்..”
“அப்புறம் ஏன் பேசல்லை..”
“கேசப்பா தான் சொன்னாரு.. உனக்கு கொஞ்சம் டைம் குடுக்கணும்னு..”
“எதுக்கு..”
“என்னைய நீ புருஷனா ஏத்துக்கிறதுக்கு..”
“ஓ..”
“என்ன ஓ..”
“ஒண்டுமில்லை..”
“என்ன..”
“எப்போ வாரியள்..”
“எங்க..”
“இங்க வீட்டை தான்..”
“நீ என்னைய புருஷனா ஏத்துக் கொண்ட அடுத்த நிமிஷமே..”
“அப்ப ஏன் இன்னும் வரேல்லை..”
“என்னது..”
“இப்ப எங்க நிக்கிறீங்க..”
“இப்போவா.. இப்ப அவுஸ்ரேலியால..”
“அவுஸ்திரேலியாவா..”
“யா..”
“கொழும்புக்கு எண்டு தானே சொல்லிச்சினம்..”
“யா.. பட்.. இங்க திடீர்னு கொஞ்சம் வேலை வந்திட்டு..”
“ம்ம்..”
“ம்ம்..”
“தூக்கம் வரலையோ..”
“இப்போ வரலை.. உனக்கு..”
“எனக்கும் வரலை..”
“ஏன் என்னாச்சு..”
“தெரியல்லை..”
“ம்ம்.. சரி எனக்காக ஒரு பாட்டு பாடுறியா..”
“இப்போவா..”
“இப்ப தான்..”
“சரி.. என்ன பாட்டு..”
“உனக்கு பிடிச்ச பாட்டு..”
“சரி..”
“இல்லை வேண்டாம் வேண்டாம்..”
“என்ன..”
“உனக்கு பிடிச்ச பாட்டு வேண்டாம்.. எனக்கு பிடிச்ச பாட்டு பாடு..”
“உங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்..”
“எனக்கு.. தேவா இசையில இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை அந்த பாட்டு பிடிக்கும் பாடுறியோ..”
“உங்களுக்கு அந்தப் பாட்டெல்லாம் தெரியுமோ..”
“ஹேய் என்ன நீ.. நான் தேவா ரசிகன்.. எனக்கு அவங்க மியூசிக்னா அவ்வளவு பிடிக்கும்.. எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு நினைச்சிட்டியோ..”
“இல்லை அது..”
“வெளித் தோற்றம் தான் பேபீ வெளிநாட்டுகாரன் மாதிரி.. உள்ள ஓடுற உணர்வெல்லாம் இங்க உள்ளூர் டிசைன் தான்.. நீ பாடு.. நான் வீடியோக்ஹோல் பண்ணவா..”
“வேண்டாம் வேண்டாம்..”
“ஏன்..”
“நான் ஆடியோக்ஹோலிலையே பாடுறன்..”
“வை பேபீ.. வீடியோவுக்கு வர உனக்கென்ன பயம்..”
“பயம் எல்லாம் இல்லை..”
“அப்போ வா..”
“இல்லை எனக்கு உங்கடை முகத்தை பாத்தால் பாட வராது..”
“அப்ப என்னோட பக்கத்து வீடியோவை கட் பண்றன்.. நீ உன்னோட பக்க வீடியோவை ஒன் பண்ணீட்டு பாடு..”
“ஐயோ வேண்டாம்..”
“இப்ப என்ன..”
“என்னைய நீங்கள் பாத்தாலும் பாட வராது..”
“என்னடி இது புதுசு புதுசா சொல்லுறாய்..”
“அது..”
என்று கொண்டு இருக்கும் போதே, ஜேம்ஸ் அவளுக்கு வாட்சாப்பில் ஹோல் எடுத்திருக்க, அதையெடுத்து மெல்ல காதில் வைத்தாள் கோதை. அவனது அந்த கனமான கம்பீரமான குரல் கேட்டு யுகங்கள் ஆனது போன்றதொரு மனநிலை அவளுக்கு.
“சரி பேபீ.. ஏதோ செய்து தொலை.. அப்புறம் ஒரு விசியம் என்னைய அத்தான்னு கூப்பிடுறேனு சொல்லியிருந்தியே பேபீ.. மறந்திட்டியோ..”
என எடுத்த எடுப்பிலேயே ஜேம்ஸ் சொல்ல, அவனது குரலை இரசித்துக் கொண்டே
“இப்ப பாடவோ வேண்டாமோ..”
என்று கோதை கேட்க,
“ரொம்ப தான்.. சரி பாடுங்கள் பேபீ..”
என்று முடித்தான் ஜேம்ஸ்.
சில நொடிகள் கோதையின் பக்கத்தில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.
“பேபீ இருக்கியா..”
“ம்ம்..”
“பாடு..”
“ம்ம்..”
“என்னடீ..”
“அட இருங்கோ வாரன்.. டக்கெண்டு பாடெண்டு சொன்னால் வரிகள் நினைவுல வர வேண்டாமோ..”
“வரி தெரியாதோ..”
“தெரியும்.. மனசுக்குள்ள பாடிப் பாக்குறன்..”
“இப்பதைக்கு பாடிப் பாத்து முடிப்பியோ..”
“குறுக்க குறுக்க கதைக்காதேங்கோ..”
“சரி சரி..”
என்று கொண்டு ஜேம்ஸ் அமைதியாகி விட,
ஒன்றிரெண்டு நொடிகளில் கோதையின் அழகான இனிமையான குரலில், ஜேம்ஸுக்கு பிடித்த
அந்த இனிமையான பாடலை பாடத் தொடங்கினாள் அவள்.
“இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை…
பூங்காற்றே நில்லு நீ
விலகியே நில்லு பூ
மேனி திரிந்தாள்
நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே நலமா
நலமா காற்றே சொல்லு…
நெஞ்சம் மணம் நிறைந்த மஞ்சம் இரவுகளில் அஞ்சும் விழி சிவந்து கெஞ்சும் கொஞ்சம் மயக்கம் வந்து கொஞ்சும் தனிமையென மிஞ்சும் உடல் படர தஞ்சம்..
ஹோ…மாலையில் மலரும் காலையில் மணக்கும் காயங்கள் பார்த்து தனிமையில் சிரிக்கும்..
தேகம் மழை பொழியும் மேகம் கரைந்து விடும் மேகம் தணியும்
அந்த தாகம் யாகம் ஆசைகளின் வேகம் காமனது யோகம் இரண்டும் ஒரு பாகம்
ஹோ..ஊடலில் தானே தேடலின் தொல்லை கூடலில் தானே
ஊடலின் எல்லை..
பூங்காற்றே நில்லு நீ
விலகியே நில்லு பூ
மேனி திரிந்தாள்
நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே நலமா
நலமா காற்றே சொல்லு…”
கோதை பாடி முடித்ததும், இப்போது ஜேம்ஸ்ஸின் பக்கத்தில் எந்த சத்தமும் வரவில்லை.
“என்னங்கோ..”
“………………”
“என்னங்கோ..”
“ம்ம்..”
“தூங்கிட்டியளோ..”
“இல்லைடி.. இப்புடி பாடினால் நான் எப்புடி தூங்க..”
“ஏனுங்கோ நல்லா இல்லையோ பாடினது..”
“பேபீ.. ரொம்ப அழகா பாடுறேடி..”
“நிசமாவா..”
“ம்ம்.. பேபீ..”
“ம்ம்..”
“சரி தூங்கு பேபீ.. நேரமாச்சு..”
“உங்களுக்கு தூக்கம் வந்திட்டோ..”
“இனி எங்க நான் தூங்க..”
“என்னங்கோ புரியலை..”
“ஆமானு சொன்னன்..”
“சரிங்க.. அப்ப வைச்சிடுறன்.. குட்நைட்..”
“குட்நைட் பேபீ..”
என்றவன் ஃபோனை வைத்து விட்டான்.
ஜேம்ஸோடு பேசிய சந்தோஷத்தில் கோதை தூங்கி விட, அங்கே அவனோ காதில் ஒலித்த கோதையின் பாட்டில் தூக்கத்தை தொலைத்தான்.