அசுரனின் குறிஞ்சி மலரே.. 45

4.8
(16)

குறிஞ்சி மலர்.. 45

அந்தப் பெரிய அறையில், ஜேம்ஸ் போகின்ற பக்கமெல்லாம் தானும் போய்க் கொண்டேயிருந்தாள் கோதை.

“என்ன பேபீ.. எம் மேல அம்புட்டு காதலோ..”

“ஏனாம்..”

“நான் போற பக்கம் எல்லாம் வாரியே.. ஒருவேளை காதல் கூடி பாசத்துல வாரியோனு..”

“நினைப்பு தான்..”

“நினைப்புக்கு என்னடி குறைச்சல்..”

“வெட்டிக் கதையை விட்டிட்டு சீக்கிரமா குளிச்சிட்டு விடுங்கோ.. நானும் குளிக்கோணும்..”

“வாயேன் ரெண்டு பேரும் சேர்ந்தே குளிக்கலாம்..”

“என்னது..”

“இல்லடி.. நேரம் மிச்சமாகுமேனு தான் கேட்டேன்..”

“ஒண்டும் தேவையில்லை.. சீக்கிரமா போய் குளியுங்கோ.. அவையள் எல்லாரும் குளிச்சு முடிச்சிட்டு எங்களுக்காக வெயிட்டிங்..”

“அப்போ நீயும் போக வேண்டியது தானே..”

“குளிக்காமல் எப்புடி போக.. அதோட குளிச்சு முடிச்சாலும் போக ஏலாது போலயே..”

“ஏன் பேபீ..”

“ஏன் எண்டு உங்களுக்கு தெரியாது..”
என அவனைப் பார்த்து முறைத்து விட்டு, அறை வாசலைப் பாவமாகப் பார்த்தாள் கோதை.

ஜேம்ஸுக்கும் கோதைக்கும் கொடுக்கப் பட்டிருந்த அறை உள் பக்கமாக பூட்டியிருக்க, அறை வாசலோடு றொம்மி படுத்துக் கிடந்தது.

ஜேம்ஸுக்கு பக்கத்தில் கோதை நிற்கும் போது, நல்ல பிள்ளை போல பேசாமல் படுத்துக் கொள்ளும் றொம்மி, அவள் அவனை விட்டு ஒரு இஞ்ச் அப்படி இப்படி அசைந்தாலும் உடனே உறுமிக் கொண்டே பாய வந்து விடுமா.  அதனால் கோதை கணவனையே பிடித்து தொங்கிக் கொண்டு அலைந்தாள்.
கள்வன் அதற்கென்றே தன் செல்ல நாய்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து வைத்திருந்தான்.

“என்ன பேபி.. இப்ப நான் குளிக்க போகவோ வேண்டாமோ..”

“இன்னும் போகலையோ நீங்கள்..”

“நீ விட்டாத் தானடி போக..”
என்றபடி ஜேம்ஸ் கோதையை பார்க்க, அசடு வழிந்து கொண்டே, அவனைப் பிடித்திருந்த கையை விட்டாள் கோதை.

ஜேம்ஸ் அவளைக் கடந்து குளியலறை வாசலுக்கு போகவும், சொல்லி வைத்தது போல றொம்மி உறுமவும் சரியாக இருந்தது. ஐயோவென்று கத்திக் கொண்டே மீண்டும் கணவனுக்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டாள் கோதை.

“என்னங்கோ.. உதுக்கு இப்ப என்ன வேணுமாம்.. கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க சொல்ல மாட்டியளே..”
என்று கொண்டு தனக்கு பின்னால் நின்று நெளிந்த மனைவியை, முன் பக்கமாக இழுத்து அணைத்தபடி
“சரி நீ சொல்லுறதை நான் செய்றன்.. பதிலுக்கு நான் சொல்றதை நீ செய்வியா..”
என டீல் பேசினான் ஜேம்ஸ்பீட்டர்.

“செய்யிறன் செய்யிறன்..”

“பேச்சு மாற மாட்டியே..”

“மாற மாட்டன்..”

“சரி ஓகே.. என்னைய இப்ப இந்த நிமிஷத்துல இருந்து அத்தான்னு கூப்பிடணும்..”

“போங்கோ மாட்டன்..”

“அப்ப சரி நானும் மாட்டன்..”

“நீங்கள் என்ன மாட்டியள்..”

“றொம்மியை போகச் சொல்ல மாட்டன்..”

“அச்சச்சோ போகச் சொல்லுங்கோ..”

“அப்போ கூப்பிடுறியா..”

“அது மாட்டன்..”

“ஏன்டி..”

“எனக்கு..”

“உனக்கு..”

“ஒரே..”

“ஒரே..”

“வெக்கம் வெக்கமா வருகுது போங்கோ..”
என்று கொண்டு கணவனின் தோளில் முகத்தை மறைத்துக் கொண்டாள் கோதை.

உல்லாசமாகச் சிரித்தபடி அவளது கூந்தலை வருடி, முகத்தை மெல்ல நிமிர்த்தி தன் முகம் பார்க்க வைத்தவன்
“என்ன பேபீ.. வெக்கப் படுறியோ.. அத்தான்னு தானேடி கூப்பிட சொன்னேன்..”
என குறும்பு மின்ன கேட்டான்.

“அது.. எனக்கு தானா வரணும்..”

“ஓ..”

“ம்ம்..”

“எப்போ வரும்..”

“தெரியல்லையே..”

“அப்போ நீ கூப்பிட மாட்டாய்.. அப்புடி தானே..”

“இப்ப கூப்பிட மாட்டன்..”

“சரி அப்ப நானும்..”
என தொடங்கியவனது நாடியைப் பிடித்து
“என்ரை செல்லக்குட்டியெல்லே.. அதை போகச் சொல்லுங்கோ.. நான் பிறகு கூப்பிடுவன் தானே..”
கிட்டத்தட்ட கெஞ்சியவளை இமைக்காமல் பார்த்திருந்தவன், அடுத்த நிமிடமே றொம்மியை ரகுமானுடன் அனுப்பி விட்டு, குளிக்க போய் விட்டான்.

அதன் பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டபடி, தானும் வெளியே போவதற்கு ஆயத்தமானாள் கோதை.

இருவருள்ளும் ஒருவர் மீது ஒருவர் காதலும் நேசமும் இருந்தாலும், தன் காதலையும் நேசத்தையும் ஜேம்ஸ் அவளிடம் வார்த்தையில் சொல்லவில்லை என்றாலும் தன் செயலில் அதனை தினம் தினம் சொல்லிக் கொண்டிருந்தான். கோதையால் தான் தன் காதலை சொல்லவும் முடியவில்லை. செயலிலும் காட்ட முடியவில்லை.

என்ன இருந்தாலும் ரூபாவை தானே திருமணம் செய்ய விருப்பப் பட்டார், இடையில் நடந்த பிசகால் மட்டுமே தன்னை திருமணம் செய்து, இப்போது இது தான் விதி என்பது போல அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் போல என்று தான் அவள் இப்போது வரை எண்ணிக் கொண்டிருக்கிறாள்.

…………………………

சிட்னி துறைமுகத்தின் குறுக்காக, உருக்கினால் வடிவமைக்கப்பட்ட வளைவுப் பாலத்தில் நின்றிருந்தார்கள் ஜேம்ஸும் கோதையும். மற்றவர்களும் அதே பாலத்தில் புது தம்பதியினருக்கு தனிமை கொடுத்து விலகி நின்று அந்த நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாலத்தில் நின்று பார்க்கும் போது, பென்னலோங் முனையில் அமைக்கப் பட்டிருந்த சிட்னி ஒப்பேரா மாளிகை அத்தனை அழகாகத் தெரிந்தது.

கன்னங்களில் கை வைத்து அதைப் பார்த்தபடி நின்ற மனைவியின் தோளில் கை போட்டு, அவளை தன் பக்கமாக அணைத்துக் கொண்டான் ஜேம்ஸ்.

“என்ன பேபீ.. அப்புடி பாக்கிறே..”

“ரொம்ப அழகா இருக்குங்கோ..”

“உன்னை விடவா..”

“என்ன உன்னை விடவா..”

“உன்னை விடவோ அழகா இருக்குனு கேட்டன்..”

“என்ன கிண்டலா..”

“இப்போ என்ன கிண்டல் பண்ணீட்டன்..”

“நான் என்ன அழகாவோ இருக்கிறன்..”

“இல்லையா பின்னே..”

“அப்புடி என்ன அழகை கண்டுட்டியள் நீங்கள்..”

“ஒன்றா ரெண்டா.. எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா..”

“ஓஹோ.. அப்புடியோ எங்க சொல்லுங்கோ..”

“ஒரு மனுஷனா சொல்லவா.. இல்லை உன் புருஷனா சொல்லவா..”

“மனுஷனாவே சொல்லுங்கோ..”

“நோ புருஷனா தான் பேபி சொல்ல முடியும்..”

“சரி எப்புடியோ சொல்லுங்கோ..”

“எனக்கு எப்பவுமே உன் கண்ணு தான்டி கொள்ளையழகு..”

“நிசமாவா..”

“நிமிஷத்துக்கு நிமிஷம் உன்னோட கண்ணுல வந்து போற அந்த இது இருக்கே..”

“எந்த எது..”

“அது உனக்கு சொன்னாப் புரியாதுடி..”

“உங்களுக்கு புரியற போல சொல்லத் தெரியேல்லை எண்டு சொல்லுங்கோ..”

“சரி அப்புடியே வைச்சுக்கோ..”

“என்ன அப்புடியே வைச்சுக்கிறது.. அது தான் உண்மை.. சரி வேறை சொல்லுங்கோ..”

“வேறை உன்னோட இந்த கூந்தல் ஒரு அழகுடி..”

“எது இந்த கூந்தலா..”

“யா பேபி..”

“சும்மா காமெடி செய்யாமல் அந்த பக்கம் போங்கோ..”

“இப்ப நான் என்ன காமெடி செய்தனாம்..”

“இந்த அரையடி முடியை போய் அழகெண்டு சொல்றீங்களே..”

“ஆறடியோ அரையடியோ அது அழகு தான்டி..”

“அப்புறம் வேறை சொல்லுங்கோ..”

“நிறைய சொல்லுவன்.. பிறகு நீ முட்டைக் கண்ணை போட்டு உருட்டுவாய்.. எதுக்கு எனக்கு வம்பு.. வா சுத்தி பார்ப்போம்..”

“ஓ..அப்போ உங்களுக்கு நான் எண்டால் பயம் அப்புடி தானே..”

“அப்புடியே வைச்சுக்கோ..”

“என்னால நம்பவே முடியேலையுங்கோ..”

“எதை..”

“உங்களை தான்..”

“ஏன்..”

“இல்லை.. உங்கடை வீட்டை நான் முதல் வரேக்குள்ள இருந்த உங்களுக்கும்.. இப்ப இருக்கிற உங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்..”

“எவ்வளவு..”

“முன்ன எண்டால் உங்களுக்கு கிட்ட வரவே பயமாக் கிடக்கும்..”

“இப்போ..”

“அதெல்லாம் இல்லை..”

“ஓ..”

“என்ன ஓ..”

“ஒண்ணுல்லை.. அடுத்து எங்க உன்னை கூட்டிட்டு போலாம்னு யோசிக்கிறன்..”

“நான் சொல்லுற இடத்துக்கு கூட்டிக் கொண்டு போறியளோ..”

“ம்ம்.. எங்க..”

“மெல்போர்ன்ல ஏதவோ பூத் தோட்டம் இருக்காமே.. அங்க கூட்டிக் கொண்டு போறியளோ..”

“போயிட்டா போச்சு..”
என்றவனை சந்தோஷமாக கட்டிக் கொண்டாள் கோதை.

அவுஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் அத்தனை இடங்களையும் ஜேம்ஸ் தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் சுற்றிக் காட்ட, இதுவரை பார்த்து அறியாத அதிசய பிறவி ஜேம்ஸை அனைவருமே பார்த்தார்கள். அவுஸ்திரேலியாவுக்கு வந்து இருபது தினங்கள் இறக்கை கட்டிக் கொண்டு ஓடி மறைந்தது.

இருபது தினங்களுக்கு பிறகு, பெரியவர்களான நீலரூபியும் வியாகேசும் இணைந்து, நாள் நட்சத்திரம் பார்த்து ஜேம்ஸ் கோதை ஜோடியின் முதலிரவுக்கு நாள் குறிக்க, அதற்கான அறை அலங்காரங்கள் தடல்புடலாகியது.

“என்னம்மா இதெல்லாம்..”

“உங்களை இங்க போகச் சொன்னதே தேன் நிலவு கொண்டாட தான்.. நீ என்னடா எண்டால் எங்களையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்திட்டாய்..”

“உங்களோட இருக்கேக்குள்ள எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமோ நீலும்மா.. இதெல்லாம் நானும் அவரும் தனியா வந்தா கிடைக்குமோ சொல்லுங்கோ..”

“அதெல்லாம் சரி தான்.. இனியாச்சும் உங்கடை வாழ்க்கையை ஆரம்பிக்கிற வழியை பாருடி பிள்ளை..”

“என்னம்மா நான் இப்பவும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறன்..”

“அறைஞ்சன் எண்டால் கன்னம் பிய்யும்..”

“ஆத்தி ஏனம்மா இவ்வளவு கோபம்..”

“நான் சொல்லுறதை புரிஞ்சு கொண்டு.. புருஷனோட ஒழுங்கா குடும்பம் நடத்தி எனக்கு பேரப் பிள்ளையளை பெத்துக் குடுக்கிற வழியைப் பாரு..”

“ஓ..”

“என்ன ஓ..”

“போங்கோம்மா எனக்கு வெக்கம் வெக்கமா வருகுது..”

“அதுக்கு ஏன்டி.. என்ரை சீலையைப் பிய்க்கிறாய்..”

“ஓ இது உங்கடையோ.. நான் என்ரை எண்டு நினைச்சன்..”

“நல்லா நினைச்சாய்.. போ போய் இந்த சீலையை கட்டிக் கொண்டு வா.. உன்ரை புருஷன் தான் எடுத்தவன்..”
என்று கொண்டு கையில் வைத்திருந்த மஞ்சள் நிற புடவையை மகளிடம் கொடுத்து விட்டார் நீலரூபி.

அவர் கொடுத்து விட்ட புடவையை உடுத்திக் கொண்டு வந்த கோதையின், தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து, அவளுக்கு திருஷ்டி சுத்தினார்.

“என்னம்மா என்னத்துக்கு இதெல்லாம்..”

“வந்த இடத்துல ரெண்டு பேரும் விதம் விதமா ஃபோட்டோ எடுத்து வைக்க வேண்டாமோ..”

“அது சரி.. என்ரை நிறத்துக்கும் இந்த சீலைக்கும் என்ன பொருத்தம் பாக்கவே சகிக்கேல்லை..”

“வாயில போடுவன் உனக்கு.. போ போய் வாய் காட்டாமல்.. நல்ல பிள்ளையா புருஷன் சொல்லுறதை கேட்டு ஒழுங்கா வாழுற வழியை பாரு..”

“ஏன் அவரு நாங்க சொல்லுறதை கேக்க மாட்டாராமோ..”

“உதை படுவாய்..”
என்று கொண்டு வந்த தாயின் கன்னத்தை கிள்ளி விட்டு, தங்கள் அறைக்குள் ஓடியவள், அறையின் அலங்காரத்திலும் பட்டு வேஷ்டியில் நின்ற கணவனது தோற்றத்திலும் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டாள்.

அவளைப் பார்த்ததும் அருகில் வந்தவன், அவளது கை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே ஒரு விதமான மோன நிலை குடியேறியது.

அறையின் பின்னணியில்
“மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத் தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத் தானே
பூவோடு தேனாட தேனோடு
நீயாடு..”
பாட்டு ஒலிக்க, கோதையோ அவனது முகம் பார்க்க முடியாமல் நெளிந்தாள்.

சில நொடிகள் மனைவியையே பார்த்திருந்தவன், சட்டென்று அந்த பாடலை நிறுத்தினான்.

“பேபி..”

“ம்ம்..”

“என்ன அமைதியா இருக்காய்..”

“அது.. அம்மா உங்க கிட்ட வாய் காட்ட கூடாது எண்டு சொன்னவா..”

“சரி.. நான் கேட்கிற பாட்டு பாடுறியோ..”

“ம்ம்.. என்ன பாட்டு..”

“அன்பே அன்பே நீ என் பிள்ளை..”

“சரி..”
எனச் சொன்ன கோதை, தன் கரத்தை பிடித்திருந்த அவனது கரத்தை பார்த்தபடி அந்த பாடலை தனது இனிய குரலில் பாடத் தொடங்கினாள்.

“அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம்
தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்..
பூமியில் நாம் வாழும் காலம்
தோறும் உண்மையில் உன்
ஜீவன் என்னைச் சேரும்..

அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை..

கண்ணா என் கூந்தலில்
சூடும் பொன் பூக்களும்
உன்னை உன்னை அழைக்க..

கண்ணே உன் கைவளை
மீட்டும் சங்கீதங்கள் என்னை
என்னை உரைக்க..

கண்களைத் திறந்து கொண்டு
நான் கனவுகள் காணுகிறேன்..

கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்..

உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்..

பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்..

அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை..

யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க..

யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க..

உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி..

மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுங்கள் பழையபடி..

உன் வாசத்தை சுவாசிக்கிறேன்
என் ஆயுள் நீளும்படி..

பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்..
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்..”
கோதை பாடி முடித்ததும், அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் ஜேம்ஸ். அங்கே வேறு பேச்சுக்கு இடமின்றி போனது.

இத்தனை நாட்களில் ஜேம்ஸின் அதீத அக்கறை, அதீத அன்பு  எல்லாம் கோதையை அவன் மீது பைத்தியம் கொள்ள வைக்கவே, புதிய சூழலும் கணவனின் அருகாமையும் அவளுக்கு கணவனோடு மனதாற தன் இல்லற வாழ்வை ஆரம்பிக்க ஏதுவாக அமைந்து போனது.
அதோடு ரூபா தான் வேறு ஒருவனை விரும்பி போய் விட்டாளே, இனி நீ உன் கணவனோடு வாழும் வழியை பார் என நீலரூபி கூட சொல்லி விட, அது தான் சரி என கோதையின் மனமும் அவளுக்கு சொன்னது.

ஜேம்ஸோடு நகர்ந்த ஒவ்வொரு நாளையும் தன் வாழ்வின் பொற்காலமாகவே கோதை தன் மனதில் பதித்து கொண்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!