அசுரனின் குறிஞ்சி மலரே.. 57

4.9
(14)

குறிஞ்சி மலர்.. 57

நீலரூபியின் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மனைவியை கீழிருந்து மேலாக ஆராய்ந்த ஜேம்ஸ், அவள் நலமாக இருக்கிறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே அவளுக்கு பக்கத்தில் போனான்.

அவன் போவதற்குள் நீலரூபியும் கண் விழித்து விடவே, அவரது கையைப் பிடித்துக் கொண்டாள் கோதை.

“நீலும்மா.. இப்போ எப்புடி இருக்கு..”

“இப்போ கொஞ்சம் பரவாயில்லைடா..”

“அங்க போற அவசரத்துல போனிங்களோ.. எந்த வாகனத்தோட மோதினீங்கள்..”

“நான் அவசரமா போகேல்லை பிள்ளை.. ஒழுங்கா தான் போனான்.. வேணுமெண்டே ஒரு கார்காரன் வந்து என்னைய இடிச்சுப் போட்டான் தெரியுமோ..”

“வேணுமெண்டே வந்து இடிச்சானோ..”

“ஓம் பிள்ளை.. இடிச்சிட்டு ஆருக்கோ ஃபோன் செஞ்சு நீங்கள் சொன்ன மாதிரியே அந்தம்மாவை இடிச்சிட்டன் எண்டு வேறை சொன்னான்..”

“ஓ.. அப்போ ஆரவோ திட்டம் போட்டு தான் செஞ்சிருக்காங்கள்.. சரி அதைப் பிறகு பாப்பம்.. உங்களுக்கு எப்ப டிக்கெட் வெட்டுறது எண்டு டாக்டரிட்டை கேட்டு வாரன்..”

“அதெல்லாம் பிறகு கேப்பம்.. நீ எனக்கு பக்கத்துலயே இரடி பிள்ளை..”

“சரி சரி நான் ஒரிடமும் போகேல்லை.. நீங்கள் டென்ஷன் ஆகாமல் படுங்கோ..”
என தாயைத் தட்டிக் கொடுத்தாள் கோதை.

அவர்கள் பேசிக் கொண்டதைப் பார்த்த ஜேம்ஸ், உடனே அங்கிருந்த தன் வைத்திய நண்பனிடம் பேச, அவனும் அவருக்கு விருப்பம் என்றால் தாராளமாக வீட்டுக்கு அழைத்துப் போய் விடலாம் என்று சொல்லி விட்டான்.

அதைக் கேட்டுக் கொண்டே மீண்டும் மனைவியிடம் வந்தான் ஜேம்ஸ்.

“பேபீ..”

“நீங்கள் எப்ப வந்தனீங்கள்.. அம்மாவையும் அப்பம்மாவையும் கூட்டிக் கொண்டு வந்திட்டியளோ..”

“ஓம் ஓம் அவை வீட்டை போய்க் கொண்டு இருக்கினம்..”

“ஆ நல்லது.. இண்டைக்கு எங்களுக்கு ஒண்டு மாத்தி ஒண்டு பிரச்சினையாவே வந்து கொண்டிருக்குதுங்கோ.. பாருங்கோ அவையளை மீட்டாப் பிறகு அம்மா வந்து இப்புடிப் படுத்து இருக்கிறா..”

“ம்ம்.. எல்லாம் சரியாயிடும்..”

“ம்ம்.. அம்மாவை எப்ப வீட்டை கூட்டிக் கொண்டு போறது எண்டு கேக்கோணும்..”

“அதெல்லாம் கேட்டாச்சு.. இப்ப கூட கூட்டிக் கொண்டு போகலாமாம்..”

“ஆ அப்ப இன்னும் நல்லதா போச்சு..”
என்ற கோதை தாயைத் தூக்கப் போகவும், அவளுக்கு முன்பாக நீலரூபியைத் தூக்கிக் கொண்ட ஜேம்ஸ் வெளியே நடக்க, தானும் கணவனைத் தொடர்ந்தாள் கோதை.

நீலரூபியை காரின் பின்னால் வசதியாக அமர வைத்து விட்டு
“பேபி.. இங்கேயே இரு இதோ வந்திடுறன்..”
என்று கொண்டு உள்ளே போன ஜேம்ஸ், வியாகேசை அழைத்து வந்தான்.

தலையிலும் கையிலும் கட்டோடு வந்த வியாகேசைப் பார்த்ததும், கோதை பதறிக் கொண்டு அவரிடம் ஓடிப் போனாள்.

“என்னப்பா.. என்ன நடந்தது..”

“வீட்டை விட்டு வெளியால போகேக்கை சொல்லீட்டு போகத் தெரியாதோ உனக்கு..”

“ஏனப்பா.. என்ன நடந்த..”

“என்ன நடந்ததோ.. நீ பாட்டுக்கு விறுவிறெண்டு வெளியால வந்திட்டாய்.. நீ எங்க தனியா அவசரமாப் போறாய் எண்டிட்டு நானும் உனக்கு பின்னாலேயே வந்தன்.. அதுக்குள்ள உன்னைத் தூக்கிட்டு.. என்னைய அடிச்சுப் போட்டிட்டு போயிட்டாங்கள்..”

“அச்சோ.. எனக்குப் பின்னாலயோ நீங்களும் வந்தனீங்கள்..”

“வந்தனானோ.. பிள்ளை பிள்ளை எண்டு தொண்டை கிழிய எல்லோ கத்திக் கொண்டு வந்தனான்..”

“அச்சோ.. சாரிப்பா சத்தியமா எனக்குக் கேக்கேல்லை.. அம்மாக்கு ஆக்சிடென்ட் எண்டு ஃபோன் வந்தது.. அப்ப உங்களுக்கு சொல்லீட்டு போக உங்களைத் தேடினான்.. நீங்களும் அண்ணாவும் ஏதவோ மும்முரமாக் கதைச்சுக் கொண்டு இருந்தியள்.. நேரம் வேறை போய்க் கொண்டே இருந்த.. அம்மாவுக்கு என்னவோ ஏதவோ எண்டுற பயத்துல தான் தனியா வெளுக்கிட்டனான்.. சாரிப்பா..”

“சரி.. சரி மன்னிப்பு எல்லாம் வேண்டாம்.. அம்மாக்கு இப்ப எப்புடி..”

“இப்போ பரவாயில்லை.. காருக்குள்ள தான் இருக்குறா..”

“ஆ சரி சரி.. உன்னைத் தூக்கிக் கொண்டு போனது ஆரு பிள்ளை.. பிறகு பீட்டரோ வந்து உன்னையக் கூட்டிக் கொண்டு வந்தவன்..”

“ஆரு தூக்கிக் கொண்டு போனது எண்டு தெரியேல்லை.. ஆனா என்னைய லாரன்ஸண்ணா தான் காப்பாத்தி இங்கேயும் கூட்டிக் கொண்டு வந்து விட்டவர்..”

“லாரன்ஸண்ணாவோ..”

“ஓமப்பா..”
என்றபடி லாரன்ஸ்ரோமியோ பற்றி வியாகேசிடம் சொன்னாள் கோதை.

அவள் சொன்னதைக் கேட்டவரோ ஜேம்ஸை என்னடா இது என்பது போலப் பார்த்தார். அவனோ பதிலுக்கு அவரைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு
“அவன் ஒண்ணும் அவ்வளவு மோசமில்லை கேசப்பா..”
என அவரின் காதுக்குள் முணுமுணுத்தான்.

“சரி வாங்கோ வீட்டை போவம்.. உவரிந்தை அம்மாவும் அப்பம்மாவும்.. இந்தளவும் வந்திருப்பினம் எல்லோ..”
என்று கொண்டே காரில் ஏறி அமர்ந்த கோதையைத் தொடர்ந்து வியாகேசும் ஜேம்சும் காரில் ஏறிக் கொண்டார்கள்.

……………

கோதையை லாரன்ஸிடம் ஒப்படைத்து விட்டு, அவன் கொடுத்த காசோலையோடு ஜோசப்பிடம் வந்து சேர்ந்தான் அல்போன்ஸ்.

ஜோசப்புடனேயே தில்லையம்பலமும் ரூபாவும் கூட இருந்தார்கள்.

“என்ன அல்போன்ஸு போன காரியம் எப்புடி..”

“சக்சஸ்.. லாரன்ஸ் கிட்டயே அவளை விட்டிட்டன்..”

“அப்போ நான் ஜேம்ஸிட்டை போயி என்ரை மகளை கலியாணம் கட்டுறியோ எண்டு வடிவாக் கேக்கலாம் என்ன..”

“தாராளமாக் கேக்கலாம்.. அதுக்கு முதல் உன்ரை மனுஷி உன்ரை கௌரவத்தை காத்துல பறக்க விட்டிட்டு உன்ரை எதிரி லாரன்ஸோட ஓடிட்டாள் எண்டுறதை நானும் ஜோசப்பும் ஜேம்சுக்கு சொல்லுறம்.. அதுக்கு பிறகு நீங்கள் ரெண்டு பேரும் உள்ள வாங்கோ..”

“சரி தான்..”

“ஆனாலும் தில்லை.. உங்களை நான் சாதாரணமா நினைச்சிட்டன்.. ஆனா நீங்கள் உங்களுக்கு காரியம் ஆகோணும் எண்டுறதுக்காக கட்டின மனுஷியையே காரை விட்டு மோத வைச்சிட்டியளே..”

“ஹா ஹா.. அவளை நான் ஒரு மனுஷியாவே நினைச்சதில்லை.. பிறகு எப்புடி என்ரை மனுஷி எண்டு யோசிக்க.. அவளைக் கூடவே வைச்சிருக்கிறதுக்கு காரணமே என்ரை கௌரவத்துக்காக மட்டும் தான்..”

“உங்க கூட பாத்து தான் பழகோணும் போல..”

“ஹா ஹா புரிஞ்சு கொண்டால் சரி..”

“சரி நாங்கள் முன்னுக்கு ஜேம்ஸிட்டை போறம் நீங்கள் ரெண்டு பேரும் பின்னாலயே வாங்கோ..”

“கொஞ்சம் பொறு ஜோசப்.. அல்போன்ஸும் நீயும் தான் ஜேம்ஸிந்தை அம்மாவையும் அப்பம்மாவையும் கடத்தின்னியள் எண்டு நீங்களே சொல்லீட்டியளே.. பிறகு எப்புடி அவனோட போயி கதைக்கப் போறியள்..”

“அதெல்லாம் ஒரு விசியமே இல்லை.. லாரன்ஸ் தான் எங்களை மிரட்டி அப்புடிச் சொல்லச் சொன்னவன் எண்டு.. எப்பவும் போல ரெண்டு பேருக்கும் இடையில ஒரு நெருப்புக் குச்சியைத் தட்டிப் போட்டால் விசியம் முடிஞ்சிது..”
என்று சொன்ன ஜோசப், அல்போன்ஸை அழைத்துக் கொண்டு ஜீவோதயம் புறப்பட்டார்.

அவர்கள் இருவரும் சென்ற பின்னர் தில்லையம்பலத்தின் பக்கம் திரும்பினாள் ரூபா.

“ஏனப்பா.. இவனுங்க ரெண்டு பேரையும் எந்தளவுக்கு நம்பலாம்..”

“ஆரு பிள்ளை உவனுங்களை நம்பினது..”

“அப்போ நீங்கள் அவங்களை நம்பவே இல்லையோ..”

“நான் ஆரையுமே அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டன்.. அவ்வளவு ஏன் உன்னைய கூட நான் நம்பவே மாட்டன்.. என்னையப் போல உனக்கும் அப்பனைப் போட்டுத் தள்ளுற புத்தி இருந்திட்டால் நான் என்ன சொல்ல..”

“அதென்ன இருந்திட்டால் எண்டு இழுவை.. இருக்கு நிறையவே இருக்கு.. அவசியம் எண்டால் அதைச் செய்யவும் நான் தயங்க மாட்டன்..”

“ஹா ஹா என் புத்தி அப்புடியே உங்கிட்டே இருக்கு..”

“உந்த பீத்தல் பெருமை எல்லாத்தையும் பிறகு பாப்பம்.. முதல்ல விசயத்துக்கு வாங்கோ..”

“என்ன விசியம் பிள்ளை..”

“நாங்கள் ஏன் உவனுங்களுக்கு பாகம் குடுக்கோணும்.. அப்புடியே குடுக்க வெளுக்கிட்டாலும் ஒவ்வொருத்தனும் தனக்கும் தன்ரை பொஞ்சாதியளுக்கும் கேப்பானுங்கள்.. உதெல்லாம் நமக்கு தேவையா..”

“அவனுங்களுக்கே நான் ஒத்தைப் பைசா கண்ணுல காட்ட மாட்டன்.. இதுக்குள்ள அவையளிந்தை பொஞ்சாதிமாருக்கு கிள்ளிக் குடுத்திட்டு தான் மற்ற வேலை பாப்பன்.. போ அங்காலை..”

“அப்போ முதலே ஐடியா போட்டுட்டியளோ..”

“அவனுங்க கூட திட்டம் போட முதலே இந்த ஐடியாவோட தான் கை கோர்த்தன்..”

“பக்கா கிருமினல் தானப்பா நீ..”

“இல்லாட்டிக்கு இவ்வளவு தூரம் நான் வளந்திருக்க முடியுமோ சொல்லு..”

“அதுவும் சரி தான்.. ஆனா அவனுங்களை எங்கையாவது மாட்டி விட்டால் மட்டும் தானே மொத்த சொத்தையும் நாங்கள் ஆட்டையப் போடலாம்..”

“அதுக்கும் ஆன வேலை பாத்தாச்சு..”

“என்ன வேலை அது..”

“ஜேம்ஸோட வீட்டு பொம்பிளைங்கள அவனுங்க ரெண்டு பேரும் கடத்தும் போது.. ஆள் விட்டு வீடியோ எடுத்திட்டன்.. அதை இப்ப உவங்கள் போன கையோட ஜேம்ஸுக்கு அனுப்பியும் வைச்சிட்டன்..”

“அப்பா.. கில்லாடி தானப்பா..”

“இனி அங்க ஒரு திருக் கூத்து நடந்த பிறகு.. நான் போய் ஒரு கூத்து போட்டு உன்னைய அந்த வீட்டுக்கு எசமானி ஆக்குறன்..”

“ம்க்கும்.. உதை தான் சொல்லிக் கொண்டு திரியிறியளே தவிர ஒண்டத்தையும் காணோம்.. பாப்பம் இந்த முறை என்னத்தைக் கிழிக்கிறியள் எண்டு..”

“பாக்கத் தானே போறே.. இப்போ வெளுக்கிடு..”
என்றபடி மகளை அழைத்துக் கொண்டு, அரைமணி நேரம் கழித்து ஜீவோதயம் புறப்பட்டார் தில்லையம்பலம்.

நீலரூபியையும் வியாகேசையும் வீட்டுக்கு அழைத்து வந்த ஜேம்ஸ் இருவரையும் ஓய்வெடுக்க அனுப்பி விட்டு மனைவி பக்கம் வந்தான்.

அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் தோட்டப் பக்கம் போக, அவளின் கையை இழுத்து
“என்ன பேபி.. கண்டுக்காம போறே..”
என ஆதங்கத்தோடு கேட்டவனை முறைத்தவள்
“கொஞ்சம் நேரம் தனியா இருக்க விரும்புறன்.. விடுவியளோ..”
என்று கோபத்தோடு கேட்க, அப்போது மனைவியோடு சண்டை போட விரும்பாதவன் அவளின் கையை விட்டு போய் விட்டான்.

தோட்டத்தில் வந்து புல் தரையில் அமர்ந்த கோதைக்கு, தாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் தன் கணவன் போதை கடத்தும் வேலையை விட்டே ஆக வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அதோடு என்ன ஆனாலும் பரவாயில்லை இன்றைக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என மனதில் உறுதி செய்து கொண்டாள்.

ஜேம்ஸ் வீட்டினுள் நுழையப் போன அதே நேரம், வியாகேசின் நண்பர் மூலம் மீட்கப்பட்ட எலிசபெத்தையும் செபமாலையையும் அழைத்துக் கொண்டு வஞ்சி வந்து சேர்ந்தான்.

வாசலில் நின்றபடி தாயையும் அப்பம்மாவையும் பார்வையால் வருடிய ஜேம்ஸ், அவர்கள் நலமாகவே திரும்பி வந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு கொண்டு, உள்ளே செல்லத் திரும்ப

“தம்பீ..”
என எலிசபெத்தும்
“கண்ணா..”
என செபமாலையும் அவனை ஒரே நேரத்தில் அழைத்தார்கள்.

திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பார்த்த ஜேம்ஸை, இருவரும் ஓடி வந்து இறுக அணைத்துக் கொள்ள, அப்படியே அசையாது நின்றிருந்தான் ஜேம்ஸ்.

கணவனிடம் இன்று பேசி விட வேண்டும் என தோட்டத்தில் இருந்து வந்த கோதை கண்ட காட்சி இது தான்.
அசையாமல் இறுகிப் போய் நின்றிருந்த கணவனின் தோளில் மெல்லக் கை வைத்து
“அவங்க சுயநினைவோட தான் உங்களைக் கட்டிப் பிடிக்கினம்..”
என்று காதுக்குள் கிசுகிசுக்க, மனைவியை ஒரு நொடி பார்த்தவன் தன்னை அணைத்துக் கொண்டு நின்றிருந்த இருவரையும் விலக்கி அவர்களை ஆராய்ந்தான்.

அவனது ஆராய்ச்சிப் பார்வையில் எலிசபெத் அதுவரை பூட்டி வைத்திருந்த தன் மனதைத் திறந்து மகனிடம் பேசினார்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!