ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்..(5)

5
(2)

உனக்கு பிடிக்கும் தான் அம்மு ஆனால் நீ கீழே விழுந்து அது உடைஞ்சு உன் கையில் குத்தி ரத்தம் வருதே. உன் அம்மா சாகும்போது உன்னை என் கையில கொடுத்துட்டு என் பொண்ணு கண்ணுல இருந்து கண்ணீர் கூட வரக்கூடாது அவளை தேவதை மாதிரி வளர்க்கணும்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டு தான் செத்தாள்.

உன் கையில ரத்தத்தை பார்த்தால் உன் அம்மாவோட ஆன்மா எப்படிம்மா நிம்மதியா இருக்கும் என்று ரகுராமன் கூறிட டாடி எனக்கு ஒன்றும் இல்ல வளையல் குத்துறது எல்லாம் ஒரு பெரிய விஷயமா அப்பா என்று கூறியவள் சரி சரி அப்பா அடுத்த வாரம் இன்டர் காலேஜ் காம்பெடிசன் இருக்கு அதுக்காக நான் மதுரைக்கு போறேன் போயிட்டு வரட்டுமா என்று அவள் கேட்டிட தாராளமா போயிட்டு வா அம்மு என்றார் ரகுராமன் .

தாங்க்ஸ் அப்பா என்ற யாழிசையை பார்த்தவர் என்னென்ன காம்பெடிஷன் மா என்று கேட்டிட அவளோ ஒரு பெரிய லிஸ்ட்டே கொடுக்க டான்ஸ் எப்படிடா இந்த கால வச்சுட்டு ஆடுவ என்றுதான் கேட்டார் ரகுராமன். அதெல்லாம் ஆடிருவேன் பா அது ஒரு பிரச்சனையா என்ற யாழிசை யஷ்வந்த் இங்க பார் அப்பா வந்திருக்காரு என்று தன் தம்பியை அழைத்திட அக்கா என்று வந்தவனும் தன் தந்தையை கண்டவுடன் கட்டிக் கொண்டான் .

ராகவனோ ஐயையோ இந்த ஆளு எப்ப வந்தான் இனிமேல் அந்த இசை பக்கத்துல நெருங்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்றுவிட ரோகிணியும் என்னங்க கடலுக்கு போய் ரெண்டு மாசம்தான் ஆகுது அதுக்குள்ள திரும்பி வந்துட்டீங்க என்று கேட்டிட ஏண்டி ஆறு மாசத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தா என்ன அடிச்சு விரட்டி விட்டுருவியா என்ன என்று தான் கேட்டார் ரகுராமன்.

என்னங்க இது என்று ரோகிணி இழுத்திட எனக்கு என்னவோ தெரியல ரெண்டு நாளா உன் அக்கா என் கனவுல வந்து என் பொண்ணை போய் பாருங்க ன்னு சொன்னாள். எனக்கும் என் பொண்ணை பார்க்கணும்னு ரொம்ப ஆசை  கப்பல் வேற டெக்னிக்கல் இஸ்யூஸ்னால திரும்ப கரைக்கு வந்துருச்சு  எனக்கும் என் பொண்ணை பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு அதான் வந்தேன். அவளுக்கு ஏதோ ஆபத்து இருக்குற மாதிரி மனசுல தோன்றிக் கிட்டே இருந்துச்சு அதனால தான் வந்தேன். வந்து பார்த்தால் இங்க என் பொண்ணு காலில் கட்டு போட்டு இருக்காள். நீ என்னதான் அவளை வளர்க்கிறாயோ தெரியல உன் அக்கா பொண்ணா பார்க்காத நீ பெத்த பொண்ணா பாரு என்று அவர் கூறிட நான் பெத்த பொண்ணா தாங்க அவளை பார்த்து பார்த்து வளர்க்கிறேன் அவள் போய் அடிபட்டு வந்தால் அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா? என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ரோகினி கூறிக் கொண்டிருக்க யாழிசையோ அவரை பார்த்து கசந்த புன்னகையை புரிந்தவள் சித்தி என்ன பண்ணுவாங்கப்பா  எனக்கு அடிபட்டதற்கு சித்தி என்னை நல்லா தான் பாத்துக்கிறாங்க என்று கூறினாள் .

அவ மட்டும் உன்ன நல்லா பார்க்காம மட்டும் இருக்கட்டும் அவளை அடிச்சு விரட்டி விட்ருவேன் என்று ரகுராமன் கூறினார். ஐயோ அப்பா அடிச்சு விரட்டி விடுற வயசா அவங்களுக்கு ஏப்பா நீங்க வேற என்று சிரித்தவள் சரி சரி அப்பா இன்னைக்கு நம்ம வெளியில போய் டின்னர் சாப்பிடலாமா என்று தான் கேட்டாள் .

இப்பதான் மனுஷன் வந்திருக்காரு வந்தவரை ஒரு நாளாவது ஓய்வு எடுக்க விடு என்று ரோகிணி மகளை கண்டித்தார் . இதோ பாரு ரோகினி நான் எவ்வளவு டயர்டா இருந்தாலும் சரி என் பொண்ணு கேட்டு என்கிட்ட இல்லை என்கிற வார்த்தையே வராது நீங்க எல்லாரும் ரெடியா இருங்க நம்ம எல்லாரும் டின்னருக்கு வெளியில போகலாம் என்று கூறிய ரகுராமன் தன் அறைக்கு சென்று உடைமாற்ற ஆரம்பித்தார் .

என்ன விகாஸ் ஏன் டல்லாவே இருக்க என்ற சத்தியேந்திரனிடம் இல்லை டாடி அண்ணா நம்மளை விட்டு தள்ளி இருக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை என்று விகாஸ் கூறினான். அதுக்கு என்ன பண்ண முடியும் விகாஸ் தாத்தாவோட முடிவை நம்மளால மீற முடியுமா சொல்லு அவர் சொல்றத நம்ம கேட்டு தான் ஆகணும் உன் அண்ணனை அவர் தான் வீட்டை விட்டு போக சொல்லி இருக்காரு அவரே அவனை கூப்பிடுவார் அதுவரை பொறுமையா தான் இருக்கணும் என்று  சத்யேந்திரன் கூறிட விகாஷ் உன்னால சும்மாவே இருக்க முடியாதா ஒவ்வொருத்தர்கிட்டயாவது அண்ணன் புராணம் பாடிகிட்டு இருப்பியா அடுத்த வாரம் உனக்கு இன்டர் காலேஜ் காம்பெடிசன் இருக்குல்ல அதுக்கான பிராக்டிஸ் பாரு சும்மா தேவை இல்லாமல் அண்ணனை பாக்கணும் போல இருக்கு ஆட்டுக்குட்டியை பாக்கணும் போல இருக்குனு வெட்டியா கதை பேசிட்டு இருக்காமல் போய் வேலையை பாரு என்று சிவரஞ்சனி கோபமாக கூறினார்.

ரஞ்சனி விடு அவன் சின்ன பையன் ஏதோ அவன் அண்ணன் மேல இருக்கிற பாசத்துல அவனை பத்தி விசாரிச்சிட்டு இருக்கான் என்று சத்யேந்திரன் கூறினார்.

இத பாருங்க அவனை நீங்களும் நானும் வீட்டை விட்டு அனுப்பலை வீட்டை விட்டு போக சொன்னது மாமா சும்மா தேவையில்லாமல் இவன் எப்ப பார்த்தாலும் அவனை பத்தியே பேசிட்டு இருக்கிறது மாமாவுக்கு தெரிஞ்சா தேவையில்லாத சங்கடங்கள் வரும் அதனால தான் சொல்றேன் ஆனால் உங்க பையனுக்கு எதுவுமே புரியாது என்று கோபமாக சொல்லிவிட்டு சிவரஞ்சனி சென்றுவிட்டார்.

எத்தனை நேரம் சவரில் நின்றிருந்தானோ அவனுக்கு உடல் குளிர் எடுக்க ஆரம்பித்த பிறகு தான் சவரரை அனைத்து விட்டவன் தன்னைத்துவட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். அவனுக்கு உணவருந்த பிடிக்கவில்லை ஆனால் என்ன செய்ய உயிர் வாழ உணவும் அவசியமே அதனால் உணவகத்திற்கு கிளம்பினான் வித்யுத் அபிமன்யு.

அப்பா அப்பா என்று தன் தந்தையின் கையை பிடித்துக் கொண்டு அவள் உணவகத்திற்குள் நுழைந்தாள். ரகுராமனும் மகள் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டு இருந்தார். சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் எதார்த்தமாக திரும்பிட அவளது நாயகன் அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அவனைக் கண்டவள் இருக்கும் இடம் மறந்து பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல அவனை ரசித்துக்கொண்டு இருந்தாள்.

இசை இசை என்று அவளது அப்பா அழைத்த பிறகே தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று உணர்ந்து என்னப்பா என்றாள். அங்கே என்னம்மா பார்த்துட்டு இருக்க என்ற ரகுராமனிடம் சும்மா தான் என்றவள் சரிப்பா எனக்கு போதும் என்று அவள் எழுந்து கை கழுவச் சென்றாள்.

ஹாய் சார் என்ற குரலில் திரும்பினான் வித்யுத் அபிமன்யு. புன்னகையுடன் யாழிசை நின்று கொண்டு இருந்தாள். அவளை முறைத்து விட்டு அவன் கடந்து செல்ல பார்க்க என்ன சார் பார்த்தும் பார்க்காதது போல போறீங்க என்றாள்.

அவளை முறைத்தவன் உனக்கு வேற வேலையே இல்லையா என்னை ஃபாலோவ் பண்ணுறதை தவிர என்றவன் கோபமாக கிளம்பிட உங்களை ஃபாலோவ் பண்ணி ஒன்றும் நான் இங்கே வரவில்லை சாப்பிட தான் வந்தேன். வந்த இடத்தில் உங்களை பார்த்துவிட்டு பேசாமல் எப்படி போக முடியும் என்று அவள் கூறிட இசை என்று அவன் பற்களைக் கடித்தான்.

சரி சரி ரொம்ப சூடா இருக்கீங்க போல ஒரு லெமன் ஜூஸ் குடிச்சிட்டு கூலாகுங்க என்று கூறி விட்டு அவள் சென்று விட அவனோ தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டான்.

என்ன மேடம் ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க என்ற மிதுனா விடம் என் அப்பா வந்துருக்காரு டீ  அப்போ யாழிசை ஹாப்பி தான் என்று துள்ளிக் குதித்தாள் . சரி சரி இன்னும் இரண்டு நாளில் மதுரை போகிறோம் நியாபகம் இருக்கா என்ற உத்ரா விடம் நியாபகம் இருக்கா வா என் ஆளு கூட போறோம் டீ அதை எப்படி மறப்பேன் என்று கூறிய யாழிசை சரி சரி வாங்க ப்ராக்டீஸ் பண்ணலாம் என்று தோழிகளை அழைத்தாள்.

பத்திரம் அம்மு என்று மகளுக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பினார் ரகுராமன். அப்பா அவள் மட்டும் இல்லை நானும் தான் அதே காம்பெடிசனுக்கு போகிறேன் என்று யாமினி கூறிட நீயும் பத்திரமா போயிட்டு வா அம்மு என்று இளைய மகளுக்கும் பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தார் ரகுராமன்.

இசை ஒழுங்கா சாப்பிடனும் சரியா என்று மகளுக்கு நிறைய ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் எல்லாம் வாங்கி அனுப்பி வைத்தார் ரகுராமன்.

ஏய் எவளாவது என் ஆளு பக்கத்தில் உட்கார்ந்தீங்க கொன்னுருவேன் என்றாள் யாழிசை. சார் பக்கம் நாங்க யாரும் வர மாட்டோம் நீயே உட்கார்ந்துக்கோ என்று மற்ற தோழிகள் அனைவரும் கூறிட யாழிசை சந்தோஷமாக அந்த பேருந்தில் ஏறினாள்.

வித்யுத் அருகில் சென்று அவள் அமர்ந்து கொள்ள அவனோ “ஏய் என்ன இங்கே வந்து உட்கார்ந்து இருக்க” என்றவனை பாவமாக பார்த்தவள், “நல்லா பாருங்க சார் பஸ் ஃபுல்லா இருக்கு உங்க பக்கத்தில் தான் சீட் காலியா இருக்கு எவ்வளவு நேரம் நான் நின்னுட்டே வர முடியும்” என்று அவள் கூறிட அவளை முறைத்துக் கொண்டு, “சரி உட்கார்ந்து தொலை” என்று பற்களைக் கடித்துக் கொண்டே கூறினான்.

அவளோ,  “ப்ளான் சக்சஸ்” என்று நினைத்து தன் தோழியைப் பார்த்து கண்ணடித்து விட்டு அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அவளோ நேராக அமராமல் திரும்பி அமர்ந்து அவள் தோழியுடன் அரட்டை அடித்துக் கொண்டு வந்தாள்.

“ஏய்” என்று அவன் அழைத்திட என்ன சார் என்று திரும்பினாள் வாயெல்லாம் பல்லாக.

அவளை முறைத்தவன் , “நீ நேராக உட்கார்ந்து பேச மாட்டியா இப்படி தான் மேலே சாய்வியா” என்று அவன் கோபமாக கேட்டிட,‌ “அவள் அந்த பக்கம் தானே இருக்கிறாள் நேரா உட்கார்ந்து எப்படி பேச முடியும்” என்றவளை அவன் தீயென முறைத்திட , “ஆத்தி வாத்தி கடுப்பாகிருச்சு போலையே” என்று நினைத்தவள்,  “ஸாரி சார்” என்று கூறிட உஃப் என்று ஊதிவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பி  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் தோளில் அவள் மீண்டும் சாய்ந்து கொள்ள கடுப்பானவன் திரும்பிட அவளோ குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளது குழந்தை முகத்தை கண்டவன் புன்னகைத்து விட்டு அவளை எழுப்பாமல் உறங்கட்டும் என்று விட்டு விட்டான்.

…. தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!