என்னப்பா சொல்றீங்க என்ற வைஷ்ணவியிடம் ஆமாம் உனக்கும், வினித்துக்கும் கல்யாணம் நடக்காது என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார் கதிர்வேலன் .
லிப்ட்ல மாட்டிகிட்டு ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு வந்து இருக்கிற இந்த இடைப்பட்ட கேப்ல என்ன நடந்தது அப்பா உனக்கு அந்த பொறுக்கி கூட நடக்க இருந்த கல்யாணத்தை ஸ்டாப் பண்றாரு என்று கேட்ட ஷ்ராவனியிடம் தெரியவில்லை ஷ்ராவி ஆனால் ஒன்னு அவனுக்கும், எனக்கும் நடக்க இருந்த கல்யாணம் ஸ்டாப் ஆயிடுச்சுல அது வரைக்கும் சந்தோஷம் என்று கூறிவிட்டு சந்தோஷமாக தங்கையை கட்டிக் கொண்டாள் வைஷ்ணவி .
என்னங்க இது ஊரைக் கூட்டி நிச்சயம் பண்ணிட்டு அந்த பையன் கூட நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நடக்காதுன்னு சொல்றீங்க என்ற காயத்ரியிடம் அவன் நல்லவன் இல்லை காயத்ரி இப்போ தான் அவனைப் பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுகிட்டேன் பொறுக்கி நம்ம பொண்ணு பாத்துட்டு நிச்சயம் பண்ணின அப்புறம் கூட ஏதோ ஒரு பொண்ணு கூட இல்லீகல் அஃபேர் வச்சிருக்கான்.
உன் தங்கச்சி வீட்டுக்காரர் இந்த போட்டோவை காட்டினார் என்று ஒரு புகைப்படத்தை மனைவியிடம் காட்டினார் கதிர்வேலன். இவ்வளவு மோசமான ஒருத்தனையா நீங்க நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தீர்கள் என்று காயத்ரி வருடத்துடன் கூறிட அவசரப்பட்டுட்டேன் அவனை பத்தி சரியா விசாரிக்காமல் அவசரப்பட்டுட்டேன் அவனோட அப்பா என் பையன் உத்தம புத்திரன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாரு என்று நொந்து கொண்டார் கதிர்வேலன்.
இப்போ நிச்சயம் முடிந்து ஊரெல்லாம் தெரிஞ்சு போயி என்று காயத்ரி ஏதோ சொல்ல வர அதுக்காக தெரிஞ்சே என் பொண்ணு வாழ்க்கையை படு குழியில் தள்ள சொல்றியா என் பொண்ணுங்களுக்கு நான் பாக்குற மாப்பிள்ளையை தான் அவங்க கல்யாணம் பண்ணிக்கணும் ஒரு அப்பாவா அவங்களுக்கு நல்ல வாழ்க்கையை தான் அமைச்சு கொடுக்கணும் ஒரு பொம்பள பொறுக்கி பையனுக்கு என் பொண்ணை கட்டி கொடுத்து சிக்கலான வாழ்க்கையை நான் என்னைக்குமே உருவாக்க மாட்டேன் என்று கதிர்வேலன் கூறிட காயத்ரிக்கு தன் கணவனை பார்க்க மலைப்பாக இருந்தது .
அவர் தான் இப்படி பேசுகிறாரா தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் சொல்லி சண்டை போடுற ஒரு மனுஷன் முதல் முறையா அவர் எடுத்த முடிவு தப்புன்னு அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியமாக பார்த்தார் காயத்ரி.
என்ன காயத்ரி அப்படி பாக்குற என்ன இந்த ஆளு அந்த ஆளு எடுத்த முடிவு தப்புன்னு அவரே ஒத்துட்டு இருக்காருன்னு பாக்குறியா இதுவரைக்கும் நான் ஒரு விஷயம் பண்ணி அது தப்பா போனாலும் அதை தப்புன்னு நான் ஒத்துக்கிட்டதில்லை ஆனால் எல்லா விஷயத்தை போல இதுல இருக்க முடியுமா சொல்லு இது என் பொண்ணோட வாழ்க்கை பிரச்சினை என் பொண்ணு என் மேல வச்சிருந்த நம்பிக்கையால் தான் நான் காட்டின மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்ட தயாரா இருக்கா அப்படி இருக்கிற பொண்ணுக்கு நான் துரோகம் பண்ண முடியாது. அவள் வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும் அது கண்டிப்பா இந்த வினித் கூட இருக்காதுன்னு நான் புரிஞ்சுகிட்டேன் அதனால தான் இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன் நாளைக்கு சம்மந்தி வீட்டுக்காரங்க கிட்ட போய் பேசி இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன் என்று கதிர்வேலன் கூறினார்.
ரொம்ப சந்தோஷம் சரி சாப்பிட வாங்க என்று காயத்ரி அழைத்திட இல்லமா எனக்கு மனசு சரியில்லை காயத்ரி என்று கூறிவிட்டு கதிர்வேலன் படுத்துக்கொண்டார்.
என்னாச்சும்மா அப்பா ஏன் சாப்பிட வரல என்ற வைஷ்ணவியிடம் ஒன்னும் இல்லமா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்றார் காயத்ரி.
அப்பா எதுவும் சொன்னாரா? ஏன் இந்த கல்யாணத்தை நிறுத்துனாராம் என்ற ஷ்ராவனியிடம் அந்த மாப்பிள்ளை வினித் நல்லவன் இல்லையாம்மா அவன் ஏதோ ஒரு பொண்ணு கூட தப்பான தொடர்புல இருக்கானாம். அதை உங்க சித்தப்பா போட்டோ ஆதாரத்தோட உங்க அப்பா கிட்ட காட்டி இருக்காரு அதனாலதான் அப்பாஅவன் வேணாம்ன்னு சொல்லி முடிவு பண்ணி இருக்காரு சரி எப்படியோ ஒரு கெட்டவன் கையில என் பொண்ணோட வாழ்க்கை சிக்காமல் இருக்கு அதுவரைக்கும் சந்தோசம் என்ற காயத்ரி மகள்களுக்கு உணவினை பரிமாறினார் .
எப்படி இது சாத்தியம். சித்தப்பாவுக்கு எப்படி ஃபோட்டோ கிடைச்சுருக்கும் என்று யோசனையாக இருந்த ஷ்ராவனியின் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது.
மேடம் மிஷன் சக்சஸ் என்று தசகிரிவனிடம் இருந்து மெசேஜ் வர அவளுக்கு ஆர்வம் தாங்கவில்லை.
மிஷன் சக்சஸ்னு தஷி மெசேஜ் அனுப்புறான் சித்தப்பா போட்டோ கொடுத்ததாக தானே அப்பா சொன்னதாக அம்மா சொன்னாங்க எப்படி என்று யோசித்தவள் அவனது எண்ணிற்கு போன் செய்தாள்.
சொல்லுங்க மேடம் என்ற தசகிரிவனிடம் என்ன மிஷன் சக்சஸ் எனக்கு புரியலை என்றாள் ஷ்ராவனி.
என்ன மேடம் புரியலன்னு சொல்றீங்க இந்நேரத்துக்கு என் மாமனார் மிஸ்டர் ஹிட்லர் கதிர்வேலன் அவங்க மூத்த பொண்ணோட கல்யாணத்த ஸ்டாப் பண்ணி இருக்கணுமே என்றான் தசகிரிவன்.
ஹலோ என்ன கொழுப்பா என்ன மாமனார் என்ற ஷ்ராவனியிடம் ஆமாம் மேடம் நீங்க என்னோட பொண்டாட்டினா உங்க அப்பா எனக்கு மாமனார் தானே உறவு முறை எல்லாம் கரெக்டா தானே சொல்றேன் என்றான் தசகிரிவன் .
ஏய் அடி வாங்க போற என்ன மிஷன் சக்சஸ் நீ முதல்ல அதை சொல்லு என்றாள் ஷ்ராவனி.
அது ஒன்னும் இல்லை மேடம் உங்க சித்தப்பா ஒர்க் பண்றாரே ஹோட்டல் அது எங்களோடது தான் அவர் தானே அங்கே மேனேஜர். நாங்க தான் பிளான் பண்ணி அந்த வினித் வேற பொண்ணு கூட இன்டிமேட்டா இருந்ததை போட்டோ எடுத்து அந்த போட்டோவை உங்க சித்தப்பா மூலமா உங்க அப்பா கிட்ட கொடுக்க சொன்னது என்றான் தஷகிரீவன்.
நிஜமா தான் சொல்றியா என்ற ஷ்ராவனியிடம் ஆமாம் மேடம் நீங்க கேட்டு நான் எப்படி செய்யாமல் இருப்பேன் என்றான் தஷகிரீவன். தஷி ரொம்ப தேங்க்ஸ் என்றாள் ஷ்ராவனி.
என்ன மேடம் எனக்கு போய் தேங்க்ஸ் சொல்றீங்க உங்க அக்கா யாரு என்னோட மச்சினிச்சி. ஒரு நல்லவனோட அவங்க கல்யாணம் நடக்கணும்ங்கறது தானே உங்களோட ஆசை நீங்க ஆசைப்பட்டு அதை நிறைவேற்றவில்லை என்றால் அப்புறம் நான் என்ன காதலன் என்றான் தசகிரீவன்.
சரி சரி ஓவரா பேசாத போனை வை என்றாள் ஷ்ராவனி .அதானே மண்டோதரி உன் வேலை முடிஞ்ச உடனே என்னை கழட்டி விடுற பாத்தியா என்றான் தசகிரிவன் .
ஓய் என்ன கொழுப்பா மேடத்திலிருந்து மரியாதை தேயுது என்ற ஷ்ராவனியிடம் காலேஜ்ல தாங்க நீங்க ப்ரொபசர் மத்தபடி நீங்க என்னோட மண்டோதரி தாங்க அப்போ கூட நீங்க என்னோட மண்டோதரி தான் என்ன காலேஜ்ல நீங்க டீச்சரா இருக்கீங்க அதனால கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுக்கிறேன் என்று சிரித்தவன் சரி சரி என் மாமனார் நம்ம போன்ல பேசுறதை பாத்து நம்ம லவ் கட் பண்ணாலும் கட் பண்ணிடுவாரு பாய் பாய் நான் எதா இருந்தாலும் காலேஜ்ல பேசுறேன் என்று கூறிவிட்டு போனை வைத்தான் தஷகிரீவன்.
அவளும்
சிரித்து விட்டு ஃபோனை வைத்தாள்.
… தொடரும்…