தேவா எதையோ டைப் செய்வது தெரிய தியா முகம் பிரகாசத்தில் மின்னியது. ஆனால் பத்து நிமிடங்கள் ஆகியும் பதில் ஏதும் வரவில்லை. என்னடா இது என்று நொந்தவள் அவளே தேவாவிற்கு போன் செய்தால்,
தியாவை திட்டி வேகமாக மெசேஜ் டைப் செய்தவன் அதை அனுப்பவில்லை. இப்போது திட்டினாலும் பிரயோசனமில்லை. தியா அடங்கமாட்டாள். தன் மீது அந்த பெண்ணுக்கு ஒரு சின்ன ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதுவே அவளை தன்னிடம் இவ்வாறு நடந்து கொள்ள செய்கிறது. அந்த ஈர்பை முளையிலே கிள்ளி எறிய வேண்டும். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். திட்டி பயனில்லை என்று டைப் செய்தை மெசேஜை டெலிட் செய்து விட்டு யோசிக்க ஆரம்பித்தான்.
“என்னடா என்ன நடக்குது இங்க” சூர்யா கேட்க
தேவா அவனிடம் தியாவை அன்று தன் வீட்டில் பார்த்ததில் இருந்து நேற்று மாலில் நடந்த வரை கூறியவன் தியாவை தன்னிடம் இருந்து விலக்கி வைக்க என்ன செய்யலாம் என்றும் கேட்டான்.
தேவா சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்ட சூர்யா “வாவ் எவ்ளோ சூப்பரான இண்டர்ஸ்டிங்கான கேரெக்டர் இந்த பொண்ணையாட இரிட்டேங் கேரெக்டனு சொன்ன லூசு பயலே. அய்யோ பொண்ணு பொண்ணு எவ்ளோ நேரம் சொல்றது பேர் என்னனு சொல்டா” என்று கேட்க,
“எனக்கு பேர் எல்லாம் தெரியாது ஏதோ சொன்னுச்சு நியாபகம் இல்ல” என்றான் தனது நெற்றியை நீவியபடி,
“போன் நம்பர் கொடுக்கிற அளவுக்கு க்ளோஸ்ஸா பழகி இருக்க ஆனா பேர் மட்டும் தெரியாத என்ன பாவா நீ “என்று சூர்யா நக்கலடிக்க.
தேவா தன் அருகே இருந்த பொருளை அவன் மேல் தூக்கி எறிந்தான்.
அதிலிருந்து லாவகமாக தப்பிய சூர்யா “நம்ம ரெண்டு பேரும் அப்புறம் கொஞ்சிக்கலாம் பர்ஸ்ட் போன் அட்டன் பண்ணி பேசுடா அந்த பொண்ணுக்கு உன் மேல் எவ்ளோ அக்கறை இருந்தா நம்பர் கண்டுபிடிச்சு இத்தனை தடவை கால் பண்ணி மெசேஜ் பண்ணும் அதற்கு கொஞ்சுமாச்சும் ரெஸ்பான்ஸ் பண்ணு தேவா” என்று கூறினான்.
“நான் யார்கிட்டேயும் அன்பு, பாசம், அக்கறை எல்லாம் எதிர்பார்க்கல. இது வெறும் ஈர்ப்பு இந்த வயசுக்கே உண்டான இன்ஃபேக்ச்சுவேஷன் அவ்ளோ தான். இன்னும் கொஞ்சம் நேரத்தில் அதுக்கும் முடிவு கட்டுறேன்” என்றவன் விடாமல் தொடர்ந்து கால் செய்து கொண்டு இருந்த தியா ஃபோன் காலை அட்டன் செய்வதன் பக்கத்தில் வைத்து விட்டான். தியா மறுபுறம் “பாவா பாவா” என்று கத்தி கொண்டு இருக்க.
“சரியான இம்சை ஒரே தொல்லை” ஒரு கால் பண்ணணும் உன் ஃபோன் தா டா என்று சூர்யா மொபைலை எடுத்து ஒரு கால் செய்து “ஹலோ மெக்கானிக் ஷாப்பா கார் சர்வீஸ் பண்ணணும் அட்ரஸ் சொல்றேன் வந்து எடுத்துட்டு போங்க” என்று தனது முகவரியை கூறினான் வேண்டுமென்றே,
அவனுக்கு தெரியும் தியா அனைத்தையும் கேட்டு கொண்டு இருக்கிறாள். இப்போது கண்டிப்பாக தியா இங்கு வருவாள் என்று வேண்டுமென்றே தான் அவன் வீட்டு முகவரி கூறினான். இன்று இங்கு வரும் தியாவிற்கு தான் அளிக்க போகும் ஷாக் டீரிட்மெண்டில் இனி எப்போதும் தன்னை கனவில் கூட தான் இருக்கும் திசையை கூட நினைக்க மாட்டாள் என்று எண்ணினான். ஆனால் அவனுக்கு தெரியவில்லை இன்று அதிர்ச்சி வைத்தியம் அளிக்க போவது அவன் இல்லை தியா என்றும், இதற்கு பின்பு தான் தியா அவனை விடமால் விரட்டி அவனின் தீராத தலைவலியாய் மாற போகிறாள் என்று,
அடுத்து அமர் எண்ணிற்கு அழைத்து ஒரு பொண்ணை தன் வீட்டுக்கு அனுப்புமாறு கூறினான். அமர்ற்கே ஆச்சர்யமாக இருந்தது. தேவா தினம் ஒரு பெண் இல்லாமல் தூங்க மாட்டான் என்னும் அளவுக்கு எல்லாம் பெண் பித்தன் கிடையாது. எப்போதாவது கடந்த கால கசப்பான நினைவுகள் வந்து அவனை முழ்கடிக்கும் போதும். முப்பது வயது ஆண்மகனாக அவனுக்கு அந்த வயதில் ஏற்பட உணர்ச்சிகளால் தேவைப்படும் சமயங்களில் மட்டுமே பெண்களை நாடுவான். அதன் பிறகு இவன் என்ன பண்றான் எதுக்கு பண்றான் என்னும் ரீதியில் பார்த்து கொண்டு இருந்த சூர்யாவை வம்படியாக வீட்டை விட்டு வெளியே அனுப்பினான்.
தியாவும் தேவா எண்ணியது போல் அவன் முகவரியை மனதிற்குள் குறித்து கொண்டு அவனை காண புறப்பட்டாள். மகள் இரவு சரியாக உண்ணததால், இப்பொழுது அவளுக்கு பிடித்ததை சமைத்த யமுனா வந்து சாப்பிட சொல்ல,
“காலேஜ்க்கு லேட்டாகுதுமா நான் கிளம்புறேன்” என்றவளை யமுனா இழுத்து சாப்பாட்டை ஊட்டி விட்டு அதன் பிறகு தான் அனுப்பினார். ஆனாலும் இந்த இரண்டு நாள் மகளின் நடவடிக்கை சரியில்லை என்பதை மனதிற்குள் குறித்து கொண்டார்.
இங்கு தேவா வீட்டில் தேவா ஹாலின் நடுவே இருந்த ஒரு ஷோபாவில் அமர்ந்து இருக்க. எதிரே ஒற்றை ஷோபா ஒன்றில் அமரினால் அனுப்பட்ட பெண் அமர்ந்து இருந்தாள். அவள் வந்து அரைமணி நேரத்திற்கு மேல் இருக்கும் வந்ததில் இருந்து தேவாவையே தான் அந்த பெண் பார்த்து கொண்டு இருக்கிறாள். அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை. அந்த பெண் தனது மனதிற்குள் ‘இப்படி சும்மாவே உக்கார்ந்துட்டு இருக்காவா வர சொன்னாங்க’ என்று நினைத்தாள்.
அப்போது கேட் திறக்கும் சத்தம் கேட்க. தேவா எழுந்து ஜன்னல் அருகே சென்று திரைசீலையை விலக்கி பார்க்க அவன் நினைத்தது போலவே தியா தான் வந்து இருந்தாள். உடனே தேவா அங்கு இருந்த அந்த பெண்ணின் கை பிடித்து மேலே அறைக்கு அழைத்து சென்றான்…
தியா கேட்டை திறந்து உள்ளே வந்தவள் கதவு அருகே வந்து காலிங் பெல் அடிக்க யாரும் இல்லை திறக்கவில்லை. சரி என்று கதவை தட்டலாம் என்று கதவில் கை வைக்க அது தாழிலிடாமல் சும்மா சாத்திருப்பது தெரிய கதவை திறந்து உள்ளே வந்தாள். கீழே யாரும் இருப்பது போல் தெரியவில்லை மேலே தான் ஏதோ அறையில் சத்தம் கேட்கிறது அங்கு தான் தேவா இருக்க வேண்டும் என்று எண்ணியபடியே படிகளில் எறியவள் அங்கு இருந்த ஒரு கதவை திறந்து பார்த்தால் அங்கு தேவாவும் அந்த பெண்ணும் முத்தமிட்டு கொண்டு இருப்பது போன்று இருந்தது. அது மட்டுமின்றி தேவா மேல் சட்டையும் அந்த பெண்ணின் துப்பட்டாவும் கதவு அருகே கிடந்தது. தியாவிற்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. கூடவே வருத்தமும் வந்து இலவச இணைப்பாக ஒட்டி கொண்டது.
கதவை திறக்கும் சத்தத்தில் தொடர்ந்த முத்தம் கலைந்து போலவும் அங்கு இருக்கும் தியாவை பார்த்து அதிர்ந்தது போலவும் தேவா காட்டி கொண்டு,
“ஏய் நீ இங்க என்ன பண்ற” என்று கேட்டான் எதுவுமா தெரியாதது போல,
“அது வந்து நான் உங்களை நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்த்ததுட்டு போலாம்ன்னு வந்தேன் பாவா” என்று மெதுவான குரலில் கூறினாள் பார்வை மொத்தத்தையும் அந்த பெண்ணின் மீது வைத்து கொண்டு,
“எனக்கு என்ன வியாதி வந்து படுக்கையிலையா கிடக்குறேன். பழம் வாங்கிட்டு வந்து பார்த்துட்டு போக, நேத்து தானே என்னை தொந்தரவு பண்ண கூடாது அவ்ளோ எடுத்து சொல்லிட்டு வந்தேன். ஆனா நீ என் நம்பரை எப்படியோ தெரிஞ்சிங்கிட்டு போன்ல கொடுத்த தொந்தரவு பத்தாதுனு இப்ப நேர்லயும் வந்து தொல்லை கொடுக்கிற. நீ பர்ஸ்ட் கிளம்பு” என்று சத்தம் போட்டான்.
தியா அதை எல்லாம் கவனியாது போல” இவங்க யார்னு சொல்லவே இல்லையே பாவா, உங்க லவ்வரா” என்று கேட்டாள்.
“இல்லை கேர்ள் ஃப்ரெண்ட் இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும். எங்களுக்கு வேலை இருக்கு நீ கிளம்பு” என்றான் தேவா. தேவா நினைத்தது இதை சொன்னதும் நிற்காமல் தியா ஓடி விடுவாள் என்று,
ஆனால் அங்கு நிலையோ வேறு, அந்த பெண் தன் காதலி இல்லை என்று சொன்ன பிறகு தான் தியாவிற்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது…
வந்ததே உங்களை பார்க்க தான் உங்ககிட்ட இரண்டு வார்த்தை பேசாமா எப்படி போறது பாவா, நீங்க இரண்டு பேரும் உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க. நான் இன்னைக்கு ஃபுல்லா ஃப்ரீ தான் காலேஜ்க்கு லீவ் போட்டுடேன். நான் கீழ போய் சாப்பிட்டே ஹாலில் டிவி பார்த்துட்டு இருக்கேன்” என்று அலட்சியமாக கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
தேவாவிற்கு தான் என்னடா இது என்பது போல் இருந்தது. மேலும் கோவமும் எரிச்சலும் வர அவனும் கீழே இறங்கி வந்து “உனக்கு என்ன வேணும். ஏன் இப்படி இம்சை பண்ற” என்று வினவ, தியாவோ நேத்து பாடிய அதே பல்லவியை பாடினாள்.
“இப்ப உனக்கு என்ன தெரியனும் நான் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கமா இருக்கேன் அதானே” என்று கேட்டான் தேவேந்திரன் எதிரே நின்று இருந்த திரவியாவை பார்த்து கோவமாக,
ஆம் என்பது போல் தலையை வேகமாக மேலும் கீழும் ஆட்டினாள் திரவியா…
கண்களை இறுக மூடி நீண்ட பெருமூச்சு விட்டவன், “சரி சொல்றேன் ஆனா அதுக்கு அப்புறம் நீ எந்த விதத்திலும் என்னை தொந்தரவு பண்ண கூடாது… ஏன் என் கண்ணு முன்னாடி கூட வரக்கூடாது ஓகே”,
“ம்… ம்….” என்று அதற்கும் வேகமாக தலை அசைத்து அவன் என்ன பதில் கூற போகிறான் என்று கண்களில் ஆர்வம் பொங்க அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்…
தேவேந்திரனோ சற்று நகர்ந்து சென்று ஹாலில் இருந்த அலமாரியின் கதவை திறந்து அதில் இருந்து ஒரு மதுப்பொத்தலை எடுத்து அப்படியே வாயிக்குள் சரித்தவன், மீண்டும் அவள் எதிரே இருந்த ஷோபாவில் அமர்ந்து பேச ஆரம்பிக்கும் போது,
“சார் நீங்க இரண்டு பேரும் தானே பேச போறீங்க? நான் வேணா கிளம்பட்டுமா? ஏற்கெனவே நான் வந்து இரண்டு மணி நேரம் ஆச்சு, சும்மா தான் இருக்கேன்… எனக்கு இன்னும் ஒன் ஹவர்ஸ்ல வேற ஒரு கஸ்டமரோட மீட்டிங் இருக்கு” என்றாள் தேவேந்திரனால் அன்று அழைத்து வரப்பட்ட பெண்…
“அட ஏம்மா நீ வேற கொஞ்சம் நேரம் சும்மா இரேன், நானே ரொம்ப நாளா இவர் பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சு கேட்ட கேள்விக்கு, இன்னைக்கு தான் அவரே மனசு வந்து பதில் சொல்றேன்னு சொல்லிருக்கிறார்… இதுல நீ வேற இடையில் இப்படி நொய் நொய்னுட்டு, கோபப்பட்டு சொல்ல போயிட போறார்… போ போய் அப்படி அமைதியா உக்காரு” என்று எரிச்சல்பட்ட திரவியா பின்பு தேவேந்திரன் புறம் திரும்பி “நீங்க சொல்லுங்க பாவா” என்றாள்…
“சரி இப்ப நான் உன் கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு, அதுக்கு அப்புறம் நான் சொல்றேன்” என்றவன், “ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் ஏன் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க”? என்று கேட்டான் திரவியாவை பார்த்து,
“எதுக்குனா, நாமா வாழ்றத்துக்கு நமக்கு ஒரு துணை தேவை… கடைசிவரை நம்ம பெத்தவங்க நம்ம கூட வர முடியாது இல்லையா அதுக்காக தான்” என்றாள் தனக்கு தெரிந்த அளவு,
“அதுக்கு மட்டும் தானா வேற எதுவும் இல்லையா? ப்ராக்டிகலானா பதில் சொல்லு” என்றான் அவளின் முகத்தை கூர்ந்து நோக்கியபடி,
அவன் என்ன கேட்க வருகிறான் என்பது புரியாமல் முழித்து கொண்டு திரவியா இருக்க,
“நானே சொல்றேன் ஒரு ஆணும் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிறது முக்கியமான காரணம் அவங்க உடல் தேவைகளை தீர்ந்துக்கிறதுக்காகவும் தான், கல்யாணத்தோட பிரதானமான விஷயம் செக்ஸ் தான்”, என்று கேவலமான பதிலை கூற, அதற்கு ஏதோ சொல்ல வந்த திரவியாவை கை நீட்டி தடுத்த தேவேந்திரன் “இது என்னோட கருத்து, என் தேவைகளை நான் வேற வழியில் தீர்த்துக்கிறேன்”..
“என்ன பொறுத்தவரை காபி குடிக்கனும்னு தோணுனா நேரா போய் காபி ஷாப்பில் குடிச்சிரனும்… ஒரு காபிக்காக மொத்த தேயிலை தோட்டத்தையே விலைக்கு வாங்கிறது முட்டாள் தனம்… இப்ப என்ன பாரு தினம் ஒவ்வொரு காபி ஷாப் விதவிதமான டேஸ்ல, அதனால் எனக்கு கல்யாணம் தேவையில்லாத ஒன்னு நான் என் லைஃப்பா என்ஜாய் பண்ணி வாழுறேன்” என்று கேவலமாக பேச அங்கு நின்று இருந்த விலைமாது பெண்ணோ என்ன இவன் ரொம்ப மட்டமான கேரெக்ட்டரா இருப்பான் போல என்று முகம் சுளிக்க,
திரவியாவோ அதற்கு நேர்மாறாக வித்தியாசமான ஆளு தான்ப்பா இந்த பாவா என்று நினைத்தபடி அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.
மேலும் தொடர்ந்த தேவா “நான் இப்படி தான் ஜாலியா கடைசிவரை இருப்பேன் என் வாழ்க்கை எப்பவும் மாறாது. எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்குற ஆசை இல்லை. என்னை எந்த பொண்ணும் கல்யாணம் பண்ணிக்க விரும்ப மாட்டா” என்று கூறினான் தேவா.
“அது எப்புடி நீங்களா சொல்வீங்க” என்று தியா கேட்க…
“இரு உனக்கு நான் டெமோ காட்றேன்” என்ற தேவா அங்கு அப்பாவியாக நின்று முழித்து கொண்டு இருந்த அந்த பெண்ணை அருகே அழைத்தான்… அவளும் கிட்ட வந்து என்ன என்பது போல் அமைதியாக நிற்க…
“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் வை. நீ என்னை கல்யாணம் பண்ணிக்குவயா” என்று கேட்டு முடிப்பதற்குள் ‘இல்ல இல்ல மாட்டேன்’என்பது போல் தலை அசைக்க,
பார்த்தியா என்பது போல் தேவா பார்க்க,
“அதை அவகிட்ட கேட்டதுக்கு பதிலாக என்கிட்ட கேட்டு இருந்தீங்கனா நான் டபுள் ஓகே சொல்லி இருப்பேன்” என்று தியா கண்களில் ஒளி மின்ன கூறியதில் தேவாவை விட அதிர்ச்சி ஆனது அங்கு நின்று இருந்த அந்த பெண் தான்.
பிழைகள் என்று தெரிந்த போதும் பிடித்து போனது புதையல் ஆனது.