விடாமல் துரத்துராளே 13

4.7
(13)

பாகம் 13

தேவா வீட்டில் பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது. அவன் தான் அப்படி எல்லாத்தையும் போட்டு உடைத்து வீட்டையே தலைகீழாய் மாற்றி இருந்தான்…

 பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறியது என்று ஒரு பழமொழி சொல்வார்களே அதே நிலை தான் இப்போது தேவாவின் நிலைமை. அவன் தியாவை விலக்க வேண்டும் என்று நினைத்து இங்கே வரவழைத்தால் நடந்தததோ வேறு. அவன் தியாவிற்கு எதிராக வீசிய அனைத்தை பாலையும் அவள் சிக்சராய் அடித்து நொறுக்கினாள்.

“கடுகு சைஸ்ல இருந்துட்டு எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டேவே லவ் பண்றேன் சொல்லுவா லூசு பைத்தியம் மெண்டல்” என்று திட்டி விட்டு கோவத்தில் அருகில் இருந்த பொருளை கீழே தள்ளி விட்டான்.

நான் இனி காற்றில் பறக்க

போகின்றேன் 🎶

கூடவே உன் கைகள் பிடித்து கொள்வேன்🎶

இந்த பிரபஞ்சம் தாண்டியே

ஒரு பயணம் போகலாம்🎶

அதில் மூச்சு கூட தேவையில்லை

முத்தம் ஒன்றில் சேர்ந்து செல்லலாம்🎶

மிதந்து மிதந்து வந்தாய்

நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்🎶

அசந்து அசந்து நின்றேன்

அய்யோ அளந்து அளந்து கொன்றாய்🎶

ஒரு ஜாடை செய்யடா

உன் பாத சுவற்றில் தூசி போல படிகின்றேன் மடிகின்றேன் 🎶

 யுவனின் இசையில் வந்த காதல் கீதம் பின்னணியில் தியாவின் மனநிலைக்கு ஏற்ப ஓட

அவளோ கண்மூடி கன்னத்தில் கை வைத்தபடி ஏன் இப்படி சொன்னேன் என்ற பயங்கர யோசனையில் இருந்தாள்…

தேவாவிடம் சொல்லும் அந்த நொடி வரை அப்படிபட்ட யோசனை அவளிடம் இல்லவே இல்லை… எப்போது வந்தது, எப்படி வந்தது இந்த காதல் அதை அதை தான் யோசித்து யோசித்து பார்க்கின்றாள் பிடிபடவே இல்லை..

ஆனால் இப்போது முழுமையாக உணர்ந்து இருந்தாள்.. தேவா மீது அவளுக்கு இருக்கும் காதலை,

தேவா மறுப்பான், தன் வீட்டில் ஒத்து கொள்ளவே மாட்டார்கள் என்பது எல்லாம் தெரியும்.. இருந்தாலும் பார்த்துக்கலாம் சமாளிச்சுக்கலாம் என்ற அசட்டு தைரியம் வந்தது..

தேவாவை பற்றி இப்போதும் ஒன்றுமே தெரியாது.. ஆனால் காதலிக்கின்றாள்..

அவனின் கடந்த கால வாழ்க்கையில் ஏதோ ஒன்று இருக்கின்றது.. அதில் தேவா பக்கம் தவறு இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.. ஆனாலும் தேவா நிச்சயம் தப்பானவாக இருக்க மாட்டான்.. மனம் அடித்து கூறியது.. என்ன நடந்தாலும் தேவாவை கடைசி வரை விட கூடாது என்ற உறுதியும் எடுத்து கொண்டாள்..

அவனின் கடந்த காலம் அவளின் நினைப்பிற்கு அப்பாற்பட்ட பயங்கரமானதாக இருந்தால் அப்போதும் இதே உறுதியோடு இருப்பாளா காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

அவளுக்கு எதிரே தேவா வீட்டில் இருந்த அந்த பெண் அமர்ந்து இருந்தாள். சாப்பிடுவதற்கு ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தனர்.அந்த பெண்ணின் பார்வை முழுவதும் தியா கன்னத்திலே இருந்தது. ராமர் அணிலுக்கு மூன்று கோடு போட்டது போல் தேவாவும் தியாவிற்கு அவள் காதலை சொல்லியதற்கு கன்னத்தில் பரிசு கொடுத்து தான் அனுப்பி இருந்தான். அவன் அடித்த அடியில் கன்னம் சிவந்து கன்றி இருந்தது.

தியா தன் காதலை வெளிப்படுத்தியதும் தேவா ஓங்கி ஒரு அறை கொடுத்து அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளி இருந்தான். கூடவே இந்த பெண்ணையும் தான்.

அங்கு இருந்து கிளம்பும் போது “வா நான் உன்னை டிராப் பண்றேன் என்று தியா சொல்லி அழைக்க, அந்த பெண் தயங்கி நின்றாள்.. அட வாம்மா நல்லா ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுக்குள்ள வீட்டை கட்டி வச்சு இருக்கார்.. நீ எப்புடி போவ மெயின் ரோட்ல ட்ராப் பண்றேன் வா என தியா மறுபடியும் அழைக்க, அந்த பெண் தியா வண்டியில் ஏறினாள்..

பாதி வழியில் “எனக்கு ரொம்ப பசிக்குது வா ஏதாவது ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டு போலாம்” தியா அழைக்க,

அந்த பெண் “இல்லை எனக்கு பசிக்கலை நீங்க போங்க என்று தயங்க அட வா மகேஸூ எனக்கு தனியா உக்கார்ந்து சாப்பிட பிடிக்காது” என்று இழுத்து வந்தாள்.

அந்த பெண்ணின் பெயர் மகேஷ்வரி.

மகேஸ்வரிக்கு தான் ஆச்சர்யமாக இருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் குடும்ப நிதி நிலைமை இந்த தொழிலுக்கு தள்ளப்பட்டாள் மகேஸ்வரி. அவளை பற்றி தெரியாத பெண்கள் தான் அவளிடம் நன்றாக பழகுவார்கள். அதுவும் அவள் செய்யும் வேலை தெரிந்ததால் அதன் பிறகு முகத்தை திருப்பி கொண்டும் அருவருப்புடனும் பார்த்து செல்வார்கள். ஆனால் தியாவிற்கு அவளை பற்றி தெரிந்தும் இப்படி இயல்பாகவே நடந்து கொள்கிறாளே என்று,

அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்து விட தியா சாப்பிட ஆரம்பித்தாள். அந்த பெண் இப்போதும் சாப்பிட்டாமல் தன்னையே பார்த்து கொண்டு இருக்க ‘என்ன’ என்று கேட்டாள் தியா.

“இது எல்லாம் தேவையா?” என்று தியா கன்னத்தை பார்த்து மகேஸ்வரி கேட்க,

“காதலில் இதெல்லாம் சாதரணம்ப்பா” என்றாள் தியா..‌

“என்ன காதலா அவரையா” என்று மகேஸ்வரி ஒரு மாதிரி இழுக்க.

“ஏன் அவருக்கு என்ன குறைச்சல் மகேஸூ நல்ல வாட்டசாட்டமா தானே இருக்கிறார்” என்ற தியா.

“இங்க பாரு மகேஸ் நான் இப்படி தான் அப்படின்னு உண்மையை சொல்றதுக்கு எல்லாருக்கும் தைரியம் வராது. ஊருக்குள்ள நிறைய பேரு நான் நல்லவன் அப்படின்னு வேஷம் போடுவானுங்க ஆனா பண்றது எல்லாமே கேவலமான விஷயமா தான் இருக்கும். என் பாவா கெட்டவர் மாதிரி தெரியலாம் ஆனா ரொம்ப ரொம்ப நல்லவர் மகேஸ். சரி சரி சாப்பிடு கிளம்பலாம் என்று தியா கூற இருவரும் அதன் பிறகு இருவரும் அமைதியாக சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் மகேஸ்வரி சொன்ன இடத்தில் அவளை இறக்கி விட்ட தியா,

“மகேஸ் நான் பொதுவா யாருக்கும் அட்வைஸ் பண்ண மாட்டேன். யார் எப்படி இருக்காங்களோ அவங்களை அப்படியே ஏத்துக்கிறது தான் உண்மையான அன்பு. அதனால் சொல்றேன் நீ மாறனும் அப்படின்னு நான் சொல்லல. ஆனா மாறனும்னு உனக்கு தோணுனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லு உனக்கு என்ன உதவினாலும் செய்றேன். இது என் நம்பர் வச்சுக்கோ உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னை கூப்பிடலாம். உதவிக்காக மட்டும் இல்லை சும்மா மொக்க போடலாம்னு தோணுனாலும் கூப்பிடு, இனிமே நாமா ஃப்ரெண்ட்ஸ்” என்று அவளை மெலிதாக அணைத்து விட்டு அங்கிருந்து சென்றால் தியா. செல்லும் அவளையே பார்த்து கொண்டு நின்று இருந்தாள் மகேஸ்வரி.

அன்று தியா கல்லூரியில் க்ளாஸ் ரூமில் தனக்கு சற்றும் பொருந்தாத சோகத்தை தத்தெடுத்து முகத்தில் அப்பி கொண்டு அமர்ந்து இருந்தாள். எதிரே ப்ரொப்சர் பாடம் நடத்தி கொண்டு இருந்தார். ஹரிணிக்கு அவளை பார்க்கும் போது கோவமாக வந்தது…

தியா சோகமாக இருப்பதற்கு காரணம் இதோ இன்றோடு அவள் அவளின் பாவாவை பார்த்து மூன்று மாதங்கள் ஆகின்றதாம். அன்று தேவா வீட்டில் இருந்து வந்த பின்பு அவனை பார்க்க முடியவில்லை. அவனை பார்க்க வீட்டுக்கு சென்றால் வீடு எப்போதும் பூட்டியே இருந்தது. அவன் எண்ணிற்கு அழைத்தால் அவன் தியா எண்ணை ப்ளாக் செய்தது மட்டும் இல்லை போனையே அணைத்து வைத்து இருந்தான். தன் பாவாவை எப்படி பார்ப்பது பேசுவது என்பது தெரியாமல் சுத்தி கொண்டு இருக்கிறாள்..

 ஹரிணியும் தியா வை திட்டி விட்டாள் அன்பாக பேசி புத்தியும் சொல்லி பார்த்து விட்டாள் தியா கேட்பதாக இல்லை. எப்போதும் தேவாவை பற்றியே பேச்சு அவனை பற்றியே நினைத்து கொண்டு சுத்தி கொண்டு இருக்கின்றாள்.

அப்போது எதிரே இருந்த வகுப்பாசிரியர் இவர்கள் ஜெர்னலிசம் படிப்பதால் ஒரு கேஸை எப்படி புத்திசாலி தனமாக ஒரு பத்திரிகையாளர் கண்டுபிடித்தார்… அதில் அவர் பங்கு எப்படி இருந்தது என்று ஒரு கதை சொல்லி கொண்டு இருக்க. இங்கு தியாவிற்கு மண்டையில் பல்பு எரிந்தது. உடனே ஹரிணியிடம் “ஹே ஹனிமா சபரி புது நம்பர் உன்கிட்ட இருக்கா” என்று கேட்டாள் சத்தமாக, அதில் இருவரையும் ப்ரொபசர் வெளியே துரத்தி விட்டு இருந்தார்.

சபரி ஹரிணியின் மாமா பையன்… ஹரிணியின் வீட்டில் தான் அவனும் இருக்கின்றான்.. ப்ளே ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே தியா ஹரிணி நட்பு என்பதால்.. அவர்களை விட மூன்று வயது பெரியவனான சபரியுடனும் நல்ல நட்பு..

சபரி ஒரு போலிஸ் அதிகாரி… இவ்வளவு நாள் வேறு ஊரில் பணியில் இருந்தவன்.. இரண்டு நாள் முன்பு தான் மாற்றலாகி கோவைக்கு வந்து இருக்கின்றான் என ஹரிணி சொல்லி இருக்க.. சபரி எண்ணை கேட்டாள்..

எருமை எருமை என்னை உருப்படவே விட மாட்டியா வகுப்பை விட்டு வெளியே ப்ரொப்சர் அனுப்பிய கடுப்பில் ஹரிணி திட்ட,

ஆமா ஆமா உருப்பட்டு உலக வங்கிக்கு அதிபரா ஆக போற, ஏதோ இன்னைக்கு தான் உலக அதிசயமாக உள்ள போய் உட்கார்ந்தோம்.. அது அந்த சொட்ட மண்டைக்கு பொறுக்கலை.. விடுடா நாமா அவுட் சைட் இருந்தே கோல்ட் மெடல் வாங்குவோம்.. நீ நம்பர் கொடுடா என்ற தியாவை, மறுபடியும் திட்டி கொண்டே நம்பர் கொடுத்தாள்..

 சபரி எண்ணை வாங்கி அவனுக்கு அழைத்தாள்.. கால்லை அட்டன் செய்த சபரி எடுத்ததுமே “என்ன அதிசயமா இருக்கு எனக்கு கால் பண்ணி இருக்கயே மச்சான்… நம்பரை மாத்தி கித்தி கூப்டயா” என்றான் நக்கலாக,

“ஏண்டா சொல்லமாட்டா எரும நீயூ நம்பர் வாங்கிட்டு எனக்கு சொல்லமா உன் அத்தை பொண்ணுக்கு மட்டும் சொல்லி இருக்க இதில் நான் கால் பண்ணலைன்னு நக்கல் வேற. நேரில் வந்தன்னு வை மண்டையை பிளந்துருவேன்” என்றாள் தியா.

அதில் சிரித்தவன் “சொல்லு மச்சான் எப்படி இருக்க நல்லா இருக்கியா என்று பொதுவாக சில விஷயம் பேசி விட்டு தியா தனக்கு வேண்டியதை கேட்டாள். தேவா எண்ணை கொடுத்து அதை ட்ரேஸ் செய்து எங்கு இருக்கிறது என்ற தகவல் தர வேண்டும் என்று,

“டேய் மச்சான் இது யாரோட நம்பர்” என்று சபரி கேட்க. அவனிடம் தேவாவை தான் விரும்புவதையும் அவன் அதன் பிறகு இவள் எண்ணை ப்ளாக் செய்ததையும் கூற அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

அவன் சிரிப்பில் கடுப்பான தியா “எதுக்குடா சிரிக்குற” என்று கேட்க. “இல்லை உன் தொல்லை தாங்க முடியாம தானே அந்த மனுஷன் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு வீட்டுக்கு கூட வரமா எஸ்கேப் ஆகி இருக்கார். அவரை ஏன்மா மறுபடியும் தொல்லை பண்ற பாவம் இல்ல விட்டுரு” என்று கேலி பேசினான்.

“செருப்பால் அடிப்பேன் நாயே எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா”.

“மாட்டேன் ஒரு ஆணோட மனசு இன்னோரு ஆணுக்கு தான் தெரியும். அந்த மனுஷனை உன் டார்ச்சரில் இருந்து காப்பத்த வேண்டியது என் கடமை” என்று சொன்ன சபரியை தியா நல்ல வார்த்தைகள் நாலு கொண்டு அர்ச்சிக்க அவன் ஒத்து கொண்டான்.

சிறிது நேரம் கழித்து தியாவிற்கு தேவா இருக்கும் இடத்தை சபரி சொல்ல தியாஅங்கு சென்றாள். அதே நேரம் வேறு நான்கு பேரும் தேவாவை கொலை பண்ண ஆயுதங்களுடன் தேவாவை பின் தொடர்ந்தனர்… 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!