“டேய் குரங்கு எருமை உண்மையிலே படிச்சு தான் பாஸ் பண்ணுனயா இல்ல பீட் அடிச்சு எழுதுனியா, உன்னை எல்லாம் எவன்டா போலீஸ் வேலைக்கு எடுத்தது. ஒரு வேலை கூட உருப்படியா செய்ய மாட்டேங்குறே” என்று தியா சபரியை போனில் திட்ட, எதிர்முனையில் இருந்த சபரியோ “ஏய் சைனா பொம்மை இப்ப எதுக்கு கதவு சந்துல மாட்டுன எலி மாதிரி கீச்சு கீச்சுங்கிற”,
“பின்ன என்னடா பாவா நம்பர் கொடுத்து எங்க இருக்காங்க ட்ரேஸ் பண்ணி தர சொன்னா, மூணு மணி நேரமா அங்க போ இங்க போன்னு அழைய வைச்சிட்டு இருக்கியே தவிர கரெக்ட்டா பாவா இருக்க இடத்தை சொல்ல மாட்டேங்கிறேயே” என்று அவனிடம் குறைபட்டு கொண்டாள்.
“இதுக்கு நீ கோவபட வேண்டியது உன் பாவா கிட்ட தான். என்னமா ஆளு பிடிச்சு வைச்சு இருக்க. ஊருக்குள்ள வேற நல்ல ஆளே உனக்கு கிடைக்கலையா. கொஞ்சம் நேரம் கூட ஒரு இடத்தில் இருக்க மாட்டேங்கிறார். அங்க இங்கன்னு சுத்திட்டே இருக்கார். ட்ரேஸ் பண்ணற எனக்கே மண்டை காயுது. உன்னை சுத்தல விடுறது உன் பாவா தான். ஆனா நீ என்கிட்ட கோவபடுறீயா. தேவை தான் எனக்கு, இருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு உனக்கு ஹெல்ப் பண்றேன்ல. என்னை நானே அடிச்சுக்கனும். இனிமே நா உனக்கு உதவி பண்ணறதா இல்ல. என்னமோ பண்ணிக்கோ” என்று போனை வைக்க போக.
‘அய்யோ கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டமோ பயபுள்ள டென்சன் ஆகுதே’ என்று எண்ணிய தியா “சபரி சபரி என் தங்கம்ல செல்லம்ல போனை வைக்காதாடா நான் சும்மா உன்கிட்ட ஒரு லொலாய்க்கு பேசுனேன். கோவம் எல்லாம் ஒன்னும் இல்ல. அதை எல்லாம் ரப்பர் வைச்சு அழிச்சுடுடா. இந்த ஒருவாட்டி மட்டும் எந்த இடத்தில் இருக்குறார்னு சொல்லுடா” என்று கெஞ்சலில் இறங்க. போய் தொலை என்ற சபரியும் “நீ இருக்கிற இடத்தில் இருந்து கொஞ்சம் தூரம் தான் போ” என்றான்…
ஆள் அரவமற்ற அந்த சாலையில் தேவா தன் வீட்டிற்கு காரில் சென்று கொண்டு இருந்தான். மெயின் ரோட்டில் சென்றால் சிக்னல் ட்ராஃபிக் என அரை மணி நேரத்தில் போக வேண்டிய வீட்டிற்கு இரண்டு மணி நேரமாவது ஆகி விடும். அதனால் எப்போதுமே அவன் தன் வீட்டிற்கு செல்ல இந்த பாதையை தான் தேர்ந்தெடுப்பான். தேவா சென்று கொண்டு இருக்கும் போது சாலையின் நடுவே இருசக்கரம் இரண்டு மோதிய படி கீழே கிடந்தது.. என்ன இது இந்த ரோட்ல ஆக்ஸிடெண்ட் எல்லாம் ஆகாதே அப்புறம் எப்படி என்ற எண்ணம் எழுந்தாலும் யாருக்காவது அடி பட்டு இருக்க போகுது என்று காரை விட்டு இறங்கி வண்டி அருகே சென்று பார்த்தான்.
அங்கு யாரும் இல்லை வெறும் வண்டி மட்டுமே இருந்தது. என்ன ஆளே இல்ல என்று எண்ணியபடி திரும்ப அவன் கண்ணில் பயங்கர எரிச்சல் உண்டானது. அவன் கண்களில் யாரோ பெப்பர் ஸ்பேர அடித்து இருந்தனர்.. “ஸ்…. ஆ”…. என்று கண்ணில் கை வைக்க அவன் இரண்டு கைகளையும் இருபுறமும் இறுக்கி பிடித்தனர் இருவர். பின்புறமும் தேவா திமிரதாபடி இறுக்கமாக ஒருவன் பிடித்து கொண்டு இருந்தான். தேவாவின் எதிர்ப்புறம் ஒருவன் அவனை நோக்கி கத்தியுடன் அருகில் வந்து கொண்டு இருந்தான்.
கண்கள் எரிச்சலில் திறக்க முடியவில்லை தான். ஆனால் என்ன நடக்க போகின்றது என்று தேவாவிற்கு தெரிந்தது.. “ஏய் யாருடா நீங்க எல்லாம் தைரியம் இருந்தா நேரா வர வேண்டியது தானே இது என்னடா பொ**** மாதிரி *****” என்று திட்டிய படி திமிறி கொண்டு இருந்தான்.
தியா சபரி சொன்ன வழியிலே வர தூரத்தில் தேவா காரை கண்டு விட்டாள். அப்படியே அவனை தொடர்ந்து வரும் போது தான் பார்த்தாள். முன்று பேர் அவனை பிடித்து கொண்டு இருப்பதையும், தேவா முன்பு ஒருவன் கத்தியோடு வருவதையும் அதை முதலில் பார்த்தவளுக்கு அதிர்ந்து போனாள்..
அய்யோ பாவா என்றவள் கை தானாக ஆக்சிலேட்டரை முறுக்க வேகமாக வந்தவள் கத்தியுடன் தேவாவை நெருங்கியவனை இடிக்க அவன் கீழே விழுந்தான். தியாவும் வேகமாக வந்ததால் அவளும் வண்டியோடு சேர்த்து கீழே விழுந்தாள்… அங்கு இருந்த கூர்மையான ஒரு கல் தியா உள்ளுங்கையை கொஞ்சம் பலமாக குத்த ஆ…. அம்மா என்று சத்தம் போட்டாள்…
அந்த குரல் தேவா காதை அடைந்ததும் கண்டு கொண்டான் அது தியா தான் என்று, இதே நேரம் இந்த நிகழ்வதால் தேவாலவை பிடித்து இருந்தவர்களின் பிடி கொஞ்சம் தளர, மறுநொடி தன்னை பிடித்து இருந்தவனின் வலது புறம் இருந்தவரிடம் காலை தன் கால் கொண்டு மடக்க அவனும் வலி எடுக்க தேவாவின் வலது கையை விட்டு இருந்தான். பின்புறம் பிடித்து இருந்தவனின் வயிற்றிலே குத்த அவனும் தேவாவை விட இடது புறம் இருந்தவனின் முகத்திலும் ஓங்கி குத்தினான். கண்ணில் இருந்த எரிச்சலையும் பொருட்படுத்தாமல் கண்ணை திறந்து பார்க்க அங்கு தியா கீழே கிடக்க வண்டி அவள் மேல் இருந்தது. அவள் கிட்ட போவதற்குள்,
தியா இடித்ததில் கீழே விழுந்தவன் கையில் இருந்த கத்தி எங்கோயோ விழுந்து இருந்தது. இருந்தாலும் அவன் எழுந்து தேவாவிடம் சண்டைக்கு வர தேவா அவனையும் மற்ற மூவரையும் அடித்து நொறுக்கினான்…
தேவா அடித்த அடியில் சமாளிக்க முடியாத நால்வரும் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தெறித்து ஓடினர். அதன் பிறகு தியா அருகில் வந்தவன் அவள் மேல் விழுந்து கிடந்த வண்டியை எடுத்துவிட்டு அவளையும் கை கொடுத்து தூக்கி விட்டவன் அவளை திட்ட வாயெடுக்க அதற்குள்,
“பாவா பாவா உங்களுக்கு எதுவும் இல்லையே எங்காவது அடிபட்டு இருக்கா என்று அவனின் முகம் கை என்று ஆராய்ந்தாள் எங்காவது அடிபட்டு இருக்குமோ என்ற பயத்தில்,
தேவா தியா முகத்தை தான் பார்த்தான். அதுவும் அவள் கண்களில் எத்தனை தவிப்பு எஅதை பார்த்தவனின் தலை தானாக ஆடியது இல்லை என்று அவள் கேட்ட கேள்விக்கு,
அடுத்த விநாடி தியா தேவாவை அணைத்து இருந்தாள். “நான் ரொம்ப பயந்து போயிட்டேன் பாவா என்றவள் அழ ஆரம்பித்து விட்டாள். தேவா அவளை விலக்க வில்லை.. அவனுக்கே அதிர்ச்சி தான் தியாவின் செய்கைகளில், எதற்காக அவள் தன் மேல் இவ்வளவு அன்பை பொழிகிறாள் என்று எண்ணியவனுக்கு சற்று முன்பு நடந்த சண்டை நினைவு வர அவளை தன்னிடமிருந்து விலக்கினான்.
“ஏய் அறிவில்லையா டி உனக்கு எத்தனை தடவை திட்டினாலும் உனக்கு ரோசமே வராதா, சோத்துல உப்பு தானே போட்டு திங்கிற, இனிமே என் முன்னாடி வந்து டார்ச்சர் பண்ண அவ்ளோ தான் என்று திட்டி விட்டு காரை எடுத்து கொண்டு ஆள் அரவமற்ற சாலையில் தனியாக விட்டுட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்…
சிறிது தூரம் கூட அவனால் செல்ல முடியவில்லை.. அவனுக்குள் இருக்கும் மருத்துவனும் மனசாட்சியும் அவளை அப்புடியே அம்மோவென விட்டு செல்ல விடவில்லை..
சூர்யாவிற்கு கால் செய்து அங்கு நடந்ததை பற்றியும் தியா கையில் அடிபட்டு இருப்பதையும் கூறி உடனே சென்று பார்க்குமாறு கூறினான்…
தான் இவ்வளவு கடுமையாக தியாவிடம் நடந்து கொள்ளும் போதே அவள் இவ்வளவு அன்பாக நடந்து கொள்கிறாள்… அவளிடம் கொஞ்சம் இளகினாள் கூட
அது அவளுக்கு தான் பிரச்சனை. இன்று கூட அவள் கையில் அடிபட்டதற்கு அந்த அன்பு காதல் தானே காரணம்… தான் என்றுமே தியா காதலை ஏற்க போவது இல்லை. அப்படி இருக்கையில் இன்று அக்கறையாக நடந்து கொண்டால் தியா எண்ணத்திற்கு மேலும் எண்ணெய் ஊற்றி திரியை தூண்டி விடுவது போலாகி விடும்.
இதோ இப்போது தனக்கு அடிபட்டு இருக்கும் போது கூட தன்னை கண்டுக்காம போறனே என்று தன் மீது கோவம் வரும் என்று தேவா நினைக்க,
ஆனால் அங்கு தியாவோ சூர்யா கிளினிக்கில் சூர்யா தியா கையில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட்டு கொண்டு இருக்க… அவனை போட்டு படுத்தி எடுத்து கொண்டு இருந்தாள். அதெப்படி சூர்யா அண்ணா கரெக்டா நான் இருந்த இடத்திற்கு நீங்க வந்தீங்க என்று,
தேவா சொல்ல கூடாது என்று சொன்னதால் சூர்யாவும் ஏதோதோ கூற தியா நம்பவில்லை… அது எப்புடி தேவா சென்ற பத்து நிமிடத்திற்குள் எதேச்சையாக ஒருவர் அதுவும் டாக்டரே வருவார்..
“பொய் சொல்றீங்க என் பாவா தானே உங்கிட்ட சொல்லி என்னை கூட்டிட்டு வர சொன்னது” என்று தியா கேட்க
சூர்யா இல்லை என்று தலை ஆட்டினான்..
நீங்க சொல்றது பொய். எனக்கு தெரியும் பாவாவை பத்தி என்றாள். சூர்யாவிற்கே தியாவை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது…
சிரித்த சூர்யா பாவா பாவா சொல்றியே யாரும்மா அந்த பாவா என தெரியாது போல் கேட்க,
உங்களை அனுப்புன தேவா தான் என் பாவா என்றாள்..
தேவாவா அது யார் என யோசிப்பது போல் சூர்யா பாவனை செய்ய,
“சும்மா நடிக்காதீங்க சூர்யா அண்ணா” ஆமா என் பாவா உங்ககிட்ட என்னை பத்தி என்னை சொல்லி அனுப்பி வச்சார் என கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்..
அவளை கண்டு கொள்ளாமல் சென்றவன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளே என மீண்டும் ஆச்சர்யம் தான் வந்தது..
ஆனால் இது எல்லாம் அவனை பற்றி முழுமையாக தெரியாத வரை தான். தெரிந்தால் தியாவிற்கு தேவா என்று ஒருவன் உள்ளான் என்பதே மறந்து விடும் என்று எண்ணம் வர, சூர்யாவிற்கு தியா காதலை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது… ஏனெனில் தன் நண்பன் மறுபடியும் எந்த ஒரு விஷயத்திலும் ஏமாற கூடாது என்று எண்ணி,
தியா, நீங்க மஞ்சு அக்கா வெண்ணிலா அக்கா பிரதர் தானே… பர்ஸ்ட் அடையாளம் தெரியலை.. இப்ப தான் வெண்ணிலா அக்கா ஜாடை தெரியுது என கேட்க,
ஆமா என தலை அசைத்து சூர்யா தியாவை பார்த்து “உனக்கு உண்மையாவே இன்னைக்கு தேவா நடந்துகிட்டதுக்கு கோவம் வரலையா” என்று கேட்டான்..
‘இல்லை’ என்று தியா புன்னகையுடன் தலை அசைக்க.
“ஏன் அப்படி” என்று சூர்யா கேட்க.
“நான் அவரை அவ்ளோ லவ் பண்றேன்” என்று தியா கூறியதும் சூர்யா பலமாக சிரித்தான்.
“லவ்வா உனக்கு தேவாவை பத்தி என்ன தெரியும். அவனை பத்தி ஒன்னுமே தெரியாம லவ்வா. அவனை பத்தி முழுசா தெரிஞ்சா அதுக்கு அப்புறம் நீ அவன் இருக்க பக்கம் கூட வர மாட்டா தலை தெறிக்க ஓடிருவ” என்று மறுபடியும் சிரிக்க.
தியாவிற்கு புசுபுசுவென கோவம் எகிறியது தேவா மீது வைத்திருக்கும் காதலை கேலி செய்கிறானே என்று சூர்யா மீது. கோவமாக ஏதோ சொல்ல வாயெடுத்தவள் முன்பு கை நீட்டி தடுத்த சூர்யா அங்கு இருந்த டேபிளை திறந்து ஏதோ இரண்டு பொருட்களை எடுத்து தியா கையில் கொடுத்தான்…
என்ன இது தியா கேட்க, பிரிச்சு பாரு என சைகை செய்தான்..
அதில் ஒன்று என்னவென்று பார்த்தவளுக்கு பயங்கர அதிர்ச்சி. தியா கண்களில் அவளை அறியாமல் கலங்கியது.. அது ஒரு திருமண பத்திரிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமண தேதி இருந்தது… தேவேந்திரன் வெட்ஸ் வெண்ணிலா என்று இருந்தது…
அந்த வெண்ணிலா யார் என்று அவளுக்கே தெரியுமே. அந்த பத்திரிகையின் முகப்பில் தேவா வெண்ணிலாவை பின்புறம் லேசாக அணைத்து நிற்பது போன்று இருந்தது.. இருவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே கூறியது அது காதல் திருமணம் தான் என்று. ஆனால் இப்போது வெண்ணிலா திவேஷ் மனைவியாக அல்லவா இருக்கிறாள். அப்படி என்றால் திருமணம் நடக்கவில்லையா ஏன் என்ற கேள்வியோடு சூர்யாவை பார்க்க.
அவனோ அவளின் இன்னோரு கையில் இருந்த மற்றோரு பேப்ரை பார்க்க சொன்னான். அதை பார்த்தவளுக்கு இதயமே நின்று விடும் அளவுக்கு அப்படியோரு அதிர்ச்சி. “இல்லை என் பாவா அப்படி கிடையாது. பாவா அப்படி கிடையாது. இது எல்லாமே பொய் பொய் பொய்” என்று கத்தியபடி மயங்கி சரிந்தாள்…