திவேஷ் கோவமாக அந்த வீட்டிற்குள் வந்தான். அங்கு நடு ஹாலில் அமர்ந்து இருந்த செந்திலை பார்த்தவனின் கோவம் இன்னும் அதிகமானது.. (இந்த செந்தில் யாருன்னா மாலில் ஒரு நாள் தியா தேவா இருக்கும் போது ஒருத்தவங்க வந்து தேவாகிட்ட சண்டை போடுவாங்களே அவங்க தான்)
திவேஷை பார்த்த அவரோ “வாப்பா திவா” என்று இன்முகத்துடன் வரவேற்றவர், “கௌரி நம்ம திவா வந்து இருக்கான் பாரு, காபியை எடுத்துட்டு வாம்மா” என்று தன் மனைவியிடம் கூறி விட்டு திவேஷை அமரும் படி கூற, அவர் அருகில் வந்த திவேஷ் கோவமாக பேச ஆரம்பிக்கும் போது,
“திவா எப்புடி இருக்கப்பா இந்த காபி எடுத்துக்கோ, எங்களை எல்லாம் மறந்துட்ட போல, இப்ப எல்லாம் இந்த பக்கம் வரதே இல்ல” என்றபடி கையில் ட்ரேயுடன் அவ்விடம் வந்தார் கௌரி..
“நல்லா இருக்கேன் அம்மா .கொஞ்சம் வேலை அதான் வர முடியலை” என சொல்லி கொண்டே இருக்கும் போதே அவர்களின் மகள் சௌதாமினியும் அவ்விடம் வந்தாள்..
“எங்க வெளிய போறிங்களா” என்று கேட்டான் திவேஷ் கௌரி சௌதாமினி உடையை பார்த்து,
“ஆமா திவா” நான் கோவிலுக்கு போறேன்…
“இவ ஏதோ ப்ரெண்ட் வீட்டுக்கு படிக்க போறாளாம்” சௌதாமினியை கை காட்டி சொன்னவர்.. “சரி நீங்க பேசிட்டு இருங்க நாங்க போய்ட்டு வந்துடறோம்” என்று திவேஷிடமும் செந்திலிடமும் கூறி விட்டு சென்றனர்..
சௌதாமினியும் கௌரியும் வாசலை கடக்கும் வரை பொறுமையாக இருந்த திவேஷ். அதன் பின்பு கோவமாக செந்திலின் புறம் திரும்பி,
“அப்பா உங்களுக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஒரு வேலை பண்ணுனீங்க?”என்று கேட்டான்
திவேஷ் அவ்வாறு கேட்டதும் அதிர்ந்து போன செந்தில் இவனுக்கு எப்படி தெரிஞ்சுது என்று மனதுக்குள் அதிர்ந்தாலும்,
தன்னை வெகு சிரமப்பட்டு இயல்பாக காட்டி கொண்டு “நான் என்னப்பா பண்ணுனேன். நீ எதை பத்தி என்கிட்ட கேட்கிற ஒன்னும் புரியலையேப்பா” என்றார் செந்தில்.
“ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்காதீங்கப்பா, உங்க முகமே சொல்லுது நீங்க செஞ்ச வேலை என்னனு. நீங்க யார் கிட்ட சொல்லி இந்த ரவுடிகளை ஏற்பாடு பண்ணீனுங்களோ, அவனே என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான்”.
“உங்களுக்கு என்ன பைத்தியமா. தேவாவை கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்கீங்க. ஏதோ சப்பையா நாலு ரவுடிகளை ஏற்பாடு பண்ணுனா தேவாவை கொன்னுடலாம் அப்படிங்கிற நினைப்போ, தேவாவிற்கு அந்த ரவுடிங்க எல்லாம் தூசு மாதிரி தட்டி விட்டு போயிட்டே இருப்பான்” என திவேஷ் சத்தம் போட,
ம்பச் என அலட்சியம் செய்த செந்தில் “இன்னைக்கு அந்த பொண்ணு அந்த சின்ன பொண்ணு மட்டும் இடையில் வரலைன்னா இப்ப அந்த தேவா உயிரோட இருந்திருக்க மாட்டான்… எத்தனை நாள் எவ்ளோ அழகா போட்ட ப்ளான்…மொத்த ப்ளானையும் அந்த பொண்ணு தான் கெடுத்து விட்டு தேவாவை காப்பாத்திருச்சு” என்றவரின் கோவம் இப்போது தியா மேல் இருந்தது.
“அந்த பொண்ணு காப்பாத்துனது தேவாவை இல்லை உங்களை, அவனுக்கு மட்டும் ஏதாவது தப்பா நடந்திருந்தா, அடுத்த நிமிஷம் போலீஸ் உங்களை தேடி தான் வரும். அதில் பாதிக்கப்பட போறது நீங்களும் உங்க குடும்பமும் தான், அது உங்களுக்கு அது புரியலையா?
செந்தில் “அது எப்படி” என்று திவேஷை பார்த்து கேட்க.
“என்ன அப்படி பார்க்கிறீங்க? நீங்க இப்ப இவ்ளோ பெரிய வீட்டில் இருக்கிறதுக்கம், சௌமி நல்லபடியா படிக்கிறதிற்கும் உதவி பண்றது தேவா அப்பா வேதாசலமும் மகேஸ்வரன் சாரும் தான். அவங்க எதுக்கு உங்களுக்கு உதவி பண்றாங்க. தேவா செஞ்ச தப்பால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்ய தான். தேவா மேல் அவருக்கு கோவம் இருக்கலாம் வெறுக்க கூட செய்யலாம். ஆயிரம் இருந்தாலும் தேவா அவர் மகன் அவனுக்கு ஏதாவது ஆனா உங்களை சும்மா விடுவாரா?”
“தேவா அப்பா சும்மா இருந்தாலும் மகேஸ்வரன் சார் சூர்யா இரண்டு பேரும் உங்களை என்ன பண்ணுவாங்கன்னே தெரியாது” என திவேஷ் சத்தம் போட …
“என்ன சொன்ன திவா, தேவாவுக்கு ஏதாவன்னுனா வேதாசலம் அமைதியா இருக்க மாட்டார்ன்னு தானே, பையன் பொறுக்கியா இருந்தாலும் அவனுக்காக அவர் அப்பா வரும் போது, நான் மட்டும் என் பையன் சாவுக்கு காரணமானவன ஒன்னும் செய்ய கூடாதா…
“பணம் இருக்கிறவனுக்கு ஒரு நியாயம் இல்லாதவனுக்கு ஒரு நியாயமா? முடியல திவா சத்தியமா முடியல எங்க பையன் ஜீவா இழப்பை தாங்கிக்க முடியல. கௌரி தினம் தினம் அதை நினைச்சு கண்ணீர் விட்டுட்டு இருக்கிறதை என்னால் பார்க்க முடியலைப்பா…
“என் பையன் ஜீவா அப்படி என்னடா தப்பு பண்ணுனான். நல்லவன்னா இருந்ததை தவிர, எங்க பையைனை கொன்ன அவன் மட்டும் ஜாலியா ஊரை சுத்திட்டு இருக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை. உடம்பில் மட்டும் வலு இருந்துச்சுன்னா நானே அவனை
நானே அவனை அன்னைக்கே கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் இருப்பேன் முடியலையே” என்று கூறி அழுதபடி அப்படியே அவர் ஷோபாவில் விழ,
அவரின் அருகே சென்று ஷோபாவிற்கு கீழ் அமர்ந்து அவரின் கை பிடித்த திவேஷ். “புரியுதுப்பா உங்க கஷ்டமும் வேதனையும் என்னனு.. ஜீவா இடத்தில் இருந்து இப்ப உங்களை நான் தான் பொறுப்பா பார்த்துக்கணும் அதனால் தான் கொஞ்சம் கோவப்பட்டுட்டேன் சாரிப்பா… தேவா மேல் உங்களை விட அதிகமான கோவமும் வெறியும் எனக்கும் இருக்கு. ஏன்னா ஜீவா என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்.. அவனை கொன்னவனா சும்மா விட மாட்டேன் என அவரிடம் சொன்னவன் மனதிற்குள்,
என் பொண்டாட்டி ஒரு காலத்தில் உருகி உருகி காதலிச்சவனை எப்புடி சும்மா விடுவேன் என நினைத்துப் கொண்டான்..
“உங்களுக்கு என்ன தேவா உயிரோட இருக்க கூடாது அவ்ளோ தானே. அது கண்டிப்பா நடக்கும். அதுக்கு ஏன் இவ்வளோ ரிஸ்க் எடுக்குறீங்க. அந்த தேவாவே அய்யோ இந்த வாழ்க்கையை என்னால் வாழ முடியலையே அப்படின்னு தன்னை தானே அழிச்சுக்கனும் அப்புடி பண்ணனும்” என பழிவெறி முகத்தில் மின்ன கூறியவனை புரியாமல் பார்த்தார் செந்தில்.
“உங்களுக்கு புரியலையா என்று திவேஷ் கேட்க. அவரும் இல்லை என தலையாட்ட,
“பார்வை இல்லாதவனுக்கு தீடிர்னு கண்பார்வை கிடைச்சா அவன் எவ்ளோ-சந்தோஷமா இருப்பான். உலகத்திலுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் அழகையும் அந்த கண் கொண்டு பார்த்து ரசிச்சு ரசிச்சு வாழ ஆரம்பிப்பான்.
“அப்புடி அவன் வாழ்க்கையை ரசிச்சு சந்தோஷமா வாழுற அந்த நேரம் மறுபடியும் அவன் பார்வையை பிடிக்கிட்டா, அதை அவனால் தாங்க முடியாது.. பார்வை இல்லாமா வாழ முடியாது. அந்த மாதிரி தான் இப்ப இருக்க தேவா வாழ்க்கை சந்தோஷமா மாறனும். அவன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது அதை அவன் கிட்ட இருந்து பறிச்சரனும், அதற்கு மேல் அவனால் உயிரோட இருக்க முடியாது, அவனை அவனே அழிச்சுப்பான்” என்று குரூரமாக கூறினான்.
இதை எல்லாம் கேட்ட செந்திலின் முகத்திலும் இவ்வளவு நேரம் இருந்த சோகம் மறைந்து ஒரு மகிழ்ச்சி உண்டாக்கியது. “கண்டிப்பா நீ சொன்னது எல்லாம் நடக்குமா திவா.. அதற்கு நாமா இப்ப என்ன பண்ணணும்” என்று ஆர்வமாக கேட்க.
“தேவாவுக்கு சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணணும் என்று கூறியவன் மனக்கண் முன் வந்தது தியா முகம்… அன்று தேவா அமைச்சருக்கு ஆப்ரேஷன் செய்த நலம் மருத்துவமனையில் திவேஷிம் தான் இருந்தான்.. தேவாவை பார்த்து தியா அடித்த கூத்தை கவனிக்கவே செய்தான்.. தியா ஹரிணி இருவரும் பேசியதை ஒட்டு கேட்க வேறு செய்தான்.. அப்போதே தியாவிற்கு தேவா மேல் பிடித்தம் என்பதை அறிந்து கொண்டான்..
இன்று அவனிடம் இந்த விஷயத்தை பற்றி கூறியவர்கள் ஒரு சின்ன பொண்ணு இடையில் வந்து காரியத்தை கெடுத்துருச்சு என சொல்லும் போதே அது தியாவாக தான் இருக்குமோ என திவேஷிற்கு சந்தேகம் எழ, அவனிடம் அன்று ராகவ் இனியா திருமணத்தில் யாருக்கும் தெரியாமல் எடுத்த தியா போட்டோவை காண்பித்து கேட்க, அவர்களும் ஆமா இந்த பொண்ணு தான் என்று உறுதிபடுத்த, அப்போதே முடிவு செய்து விட்டான்..
தேவா வாழ்க்கைக்குள் தியாவை சிக்க வைக்க வேண்டுமென,
சூர்யாவிற்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை… தியா மயக்கம் அடைந்ததும் வெகு நேரமாகியும் அவள் இன்னும் கண் திறக்கவில்லை. அவளை படுக்க வைத்து டீரிப்ஸ் போட்டு விட்டு இருந்தான்.
மனமோ தேவை இல்லாமல் தியாவிடம் இதை காட்டி விட்டோமோ தவறு செய்து விட்டோமோ என்று அடித்து கொண்டது. தியா மயங்கும் முன்பு தவற விட்ட பேப்பரை கையில் எடுத்தான்…
ஐந்து வருடங்களுக்கு முன்பு தன் நண்பனின் வாழ்க்கையை புரட்டி போட்ட மிக மோசமான நடந்திருக்கவே கூடாது என்று இன்று வரை நினைக்கும் மோசமான நிகழ்வுகளை சுமந்து ‘இருந்த தினசரி நாளிதழ் அது. ‘அதில் கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டு இருந்தது அந்த செய்தியை பார்த்தான்
கோவையின் மிக பிரபலமான ஆரோக்கியம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் தேவேந்திரன் கைது. உடன் பணிபுரியும் பெண் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததற்காகவும், அதை தட்டி கேட்ட மற்றோரு மருத்துவர் ஜீவாவை கீழே தள்ளி கொலை செய்த குற்றத்திற்காகவும் என போட்டு இருந்தது..
சூர்யாவின் நினைவு ஐந்து ஆண்டுகள் பின்னோக்கி சென்றது..