‘அச்சோ டைமாச்சு’ என்றபடி தனது பையை தோளில் மாட்டி கொண்டு அவசர அவசரமாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் சௌதாமினி…
“அம்மா அப்பா நான் காலேஜ் கிளம்புறேன் பாய்” என்று கூறவும்.
“ஏய் என்னடி இவ்வளோ அவசரம் சாப்பிடமா? ஒழுங்கா இரண்டு இட்லியாவது சாப்பிட்டு அப்புறம் கிளம்பு”என்று தாய் கௌரியும்,
“நீ சாப்பிட்டு வாம்மா நான் உன்னை காலேஜ்ல டிராப் பண்றேன்” என்று தந்தை செந்திலும் சொல்வார்கள் என்ற சௌதாமினியின் ஆசையும் எதிர்பார்ப்பும் எப்போதும் போல் இன்றும் நடக்கவில்லை…
அவள் கிளம்புகிறேன் என்று சொன்னதும் சரி என தலை அசைக்க கூட இல்லை… தந்தை செந்திலோ எப்போதும் போல ஏதோ யோசனையில் இருக்க, தாயோ அண்ணண் ஜீவாவின் படத்திற்கு முன்பு அமர்ந்து இருந்தவர் அவள் கூறியதை கூட சரியாக கவனிக்க வில்லை…
இல்லாத ஜீவா மேல் வைத்திருக்கும் அன்பில் கால்வாசி கூட அவர்கள் முன்னே இருக்கும் மகள் மேல் இல்லையே என்று நினைக்கும் போதே சௌதாமினியின் மனம் கலங்கி கண்ணில் நீர் தேங்கியது..
தன்னுடைய அம்மா அப்பாவுக்கு எப்போதும் ஜீவா தான் செல்லப்பிள்ளை. நான் என்றுமே வேண்டாத பிள்ளை என்ற எண்ணம் விவரம் தெரிந்த நாளிலிருந்தே சௌமிக்கு உண்டு… ஜீவாவோ படிப்பில் கெட்டிக்காரன் புத்தி கூர்மை அமைதியான குணம் அவனின் பெற்றோரை பொறுத்தவரை ஜீவா அச்சு வெல்லம் கட்டி தங்கம் தான்..
சௌமி படிப்பில் கொஞ்சம் மந்தம் பத்தாக்குறைக்கு சிறு வயதில் சேட்டையும் அதிகம். அதனாலேயே சௌமி பள்ளி படிக்கும் காலத்தில் நிறைய முறை செந்திலும் கௌரியும் ஆசிரியர் முன்பு போய் நிற்கும் நிலை வரும்… அப்பொழுது வீடு வந்தும் அவர்கள் சௌமியிடம் கூறுவது உன் அண்ணா ஜீவாவால் எங்களுக்கு எப்பவும் பெருமை கௌரவம் தான். அதே உன்னால் எல்லா இடத்திலையும் அசிங்கம் அவமானம் தான்.. ஜீவாவை பார்த்து எப்புடி நல்லா பிள்ளையா இருக்கறதுன்னு கத்துக்க. ஜீவா போல் படி, ஜீவா போல் நட, ஜீவா போல் அதை செய் இதை செய் என்று சௌமியை அவளாக இருக்க விடாமல் அனைத்திலும் ஜீவாவை முன்னிறுத்தி
அவளின் மனதில் இருந்த தன் மேல் பெற்றோர்களுக்கு அன்பு இல்லையோ என்ற எண்ணத்தை வளர்த்தனர்…
அதுவும் ஜீவாவின் இறப்புக்கு பின் துக்கத்தில் அவர்கள் மொத்தமாக முடங்கி, அவளை சரியாக கவனிக்காமல் விட அந்த எண்ணமே அவள் மனதில் வேரூன்றி போனது…
சௌதாமினியின் மனதை பெற்றோரும் அவர்களின் இன்றைய மனநிலையை சௌமியும் புரிந்து கொள்ளமாலே இருக்கின்றனர்..
சில விநாடிகள் அவர்களையே பார்த்து கொண்டு நின்று இருந்தாள்.. அப்பொழுது அவளின் செல்போனில் மெசேஜ் டோன் அடித்தது.. அதை எடுத்து பார்த்ததும் இவ்வளவு நேரம் வாடி இருத்தவளின் முகம் பிரகாசமானது.. தனக்காக யாரும் இல்லை தன் மீது யாருக்குமே பாசம் அக்கறை இல்லை என்னடா வாழ்க்கை இது என்று போய் கொண்டு இருந்தவளின் வாழ்வில், உனக்காக நான் இருக்கிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பு வந்தவன் தான் வினோத்…
வினோத் சௌமிக்கு முகநூல் மூலம் அறிமுகமானவன். முதலில் நட்பாக பழகினார்கள். சௌமியும் அவனிடம் அவள் கஷ்டத்தை அனைத்தும் கூறினாள்.. இதற்காகவே காத்து இருந்தவன் அவளுக்கு ஆறுதல் கூறுகிறேன் என்னும் பெயரில். நான் உனக்காக இருக்கேன் உன்னை நல்லா பார்த்துப்பேன் என்று எல்லாம் அவனின் தேன் தடவை வார்த்தைகளில் கூற… ஏற்கெனவே பாசத்திற்காக ஏங்கி இருந்தவள் அவனின் போலி அன்பில் விழுந்து விட்டாள்… அதுவே நாளடைவில் காதலாகி வந்து நிற்கின்றது…
‘சௌமி சாப்டியாடா’ என்ற அந்த ஒற்றை வரி மெசேஜ் இருந்தது… அதை பார்த்ததும் அவன் தன் மீது வைத்து இருக்கும் அந்த அன்பை நினைத்து பூரித்து போனாள்.. தன் மீது வினோத்திற்கு எவ்ளோ அன்பு, அக்கறை, பாசம் என்று எல்லாம் எண்ணி எண்ணி மனமகிழ்ந்து போனாள்… அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யும் நிலைக்கு அவன் மீது காதல் வைத்து உள்ளாள்… கடவுள் தனக்காக படைத்தவன் தனக்கானவன் அவன் என்று ஆணித்தரமாக நம்புகிறாள்..
சாப்பிட போறேன் என்று இவள் புன்னகை முகமாகவே பதில் அளிக்க அடுத்து அவன்..
இவ்வளோ நேரம் சாப்பிடமா என்ன பண்ற ஹான் என்று கோவமான இமோஜி போட்டு அவன் லேசாக கடிந்து கொள்ள.
மறுபடியும் சௌமி வானில் பறக்க ஆரம்பித்தாள்.. இந்த சாதாரணமான பேச்சில் கூட அவன் தன்மீது நிறைய அக்கறை வைத்து உள்ளான் என்று, செந்திலும் கௌரியின் அலட்சியப்போக்கே இப்புடி பசை தடவிய வார்த்தைகளுக்கு சௌமி மயங்கி கிடக்கிறாள்.. இந்த மாதிரி முகநூல் காதலினால் எத்தனை பேர் நிம்மதி சந்தோஷம் மானம் இழந்து தவிக்கின்றார்கள்.. இது அனைத்துமே போலி என்பதை அவள் எப்போது உணர்வாளா?
எருமை, குரங்கு, பேயே, பிசாசே ஊர் உலகத்தில்ல பத்து பதினைஞ்சு ப்ரெண்ட் வச்சு இருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.. ஒரே ஒரு ஃப்ரெண்டை வச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே இந்த டயலாக் உலகத்திலே எனக்கு தான்டி ரொம்ப பொருத்தமா இருக்கும்… உன்கூட சேர்ந்ததற்கு பதில் நாலு நாய் குட்டி வாங்கி மேய்ச்சு இருந்தாலும் நான் உருப்பட்டு இருப்பேன் என்று ஹரிணி தியா வை பார்த்து கூற
அது நாய்க்குட்டி இல்ல பேயே பன்னிக்குட்டி ஒரு பழமொழி கூட ஒழுங்கா சொல்ல தெரியலை இந்த லட்சணத்துல உருப்பட்டு ஊட்டி கலெக்டரா ஆக போறது மாதிரி டயலாக் வேற,
கையில்ல அடிபட்டு காயமா இருக்காளே நம்ப ப்ரெண்ட்ன்னு உன் மேல்ல இருக்கற அக்கறையில்லை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன் இது ஒரு தப்பா, அதுக்கு போய் எண்ணெயில் போட்டு கடுக்காட்டா இப்புடி பொறியறயே லூசு..
என் கையில் எப்புடி அடிபட்டுச்சே பேயே, உன் பாவா பத்தி பகல் கனவு கண்டுட்டே வண்டிய ஓட்டி போஸ்ட் கம்பத்துல்ல இடிச்சு கீழ விழ வச்சதே நீ தான் என்று ஹரிணி தியா வை குற்றம் சாட்ட,
ஈஈஈஈஈ வாழ்க்கையில் விபத்துங்கிறது ரொம்ப சாதரணமான விஷயம் ஹனிமா, அப்படி ஒன்னும் பெரிசா உனக்கு அடிப்படலையே, கையில் சின்னதா சிராய்ப்பு காயம் அவ்ளோ தானே,
அதே தான்டி நானும் சொல்றேன் சின்னதா கையில்ல ஒரு சீராய்ப்பு.ஒரு பத்து ரூபாய்க்கு தேங்காய் எண்ணெய் வாங்கி போட்டா சரியா போயிடும். இதுக்கு என்னவோ என் கையே இரண்டு துண்டா போன மாதிரி வம்பு பண்ணி ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து இருக்கியே, இப்ப பாரு இந்த சின்ன காயத்துக்கு எக்ஸ்ரே எடுங்க, ஸ்கேன் எடுங்க, இசிஜி எடுங்கன்னு சொல்லி ஒரு பத்து பதினைஞ்சு ஆயிரத்துக்கு பில்ல தீட்ட போறானுங்க…
சரி கூட்டிட்டு வந்தது தான் வந்த ஒரு நல்ல ஹாஸ்பிடல்லுக்கு கூட்டிட்டு வந்து இருக்க கூடாது. போயும் போயும் இந்த ஹாஸ்பிடலுக்கு போய் கூட்டிட்டு வந்து இருக்கியே,
ஹனிமா என்ன இப்புடி சொல்லிட்ட ஆரோக்கியம் ஹாஸ்பிடல் கோவையிலேயே பெஸ்ட் ஹாஸ்பிடல் இதை போய் இப்புடி சொல்லலாமா!
சொல்லலாம் சொல்லாம் இது ஒரு மொக்கை ஹாஸ்பிடல்டி.. இதை பார்த்தாலே சந்திரமுகி படத்துல பேய் பங்களா நியாயபகம் தா வருது… பாரு நம்ம வந்து அரை மணி நேரத்திற்கு மேலாச்சு இன்னும் டாக்டரை காணோம் என்று ஹாஸ்பிட்டலை ஹரிணி வறுத்தெடுக்க, தியா சிரித்து கொண்டு இருந்தாள்… இதை எல்லாம் இவர்கள் அருகே ஒருவன் கேட்டு கொண்டு இருந்ததை இவர்கள் இருவருமே கவனிக்கவில்லை…
ஹனிமா டூடே உனக்கு என்னாச்சு ஏன் இப்புடி எல்லாம் பேசுற.. பொதுவா நான் தானே எப்பவும் இந்த மாதிரி எல்லாம் பேசுவேன்…
அதானே எனக்கு என்னாச்சு ஏன் இப்புடி பேசுறேன்?
உன் ராசிக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம் ஹனிமா வாயை வச்சுக்கிட்டு அமைதியா இரு இல்லைன்னா ஏதாவது வம்பு வந்து சேர்ந்திர போகுது…
வம்பு புதுசா வேற வரனுமா, அதான் என் கூடவே சுத்திட்டு இருக்கே என்று ஹரிணி பேசி கொண்டு இருக்கும் போதே,
ஹரிணி யாருங்க நீங்க தான் நெக்ஸ்ட் உள்ள போகனும் என்ற ரிஷப்னிஸ்ட் கூறியதும் ஹரிணி எழுந்து டாக்டர் இருந்த அறைக்குள் சென்றாள்…
ஹரிணி சென்றதும் தியா எழுந்து அந்த வராண்டாவில் நடக்க ஆரம்பித்தாள்.. ஆரோக்கியம் மருத்துவமனைக்குள் வந்ததும் அவளின் நினைவு முழுவதும் ஜீவா தான் வந்தான்.. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக இங்கு வந்த போது ஜீவா எவ்வளவு நல்லவன் போல் பேசினான். அவனா இப்புடி ஒரு அநியாயத்தை செய்தது. இப்போது கூட தியா வால் நம்ப முடியவில்லை.. ஆனால் அது தானே நிஜம்.. அவனால் நான்கைந்து உயிர் போயிருக்கிறது. அவன் செய்த தவறுகளை மறைப்பதற்கும் இந்த உயிரில்லாத கட்டிடத்தை காப்பதற்கும் தன்னுடைய பாவா வாழ்க்கையை அல்லவா இந்த மகேஸ்வரன் நரகமாக்கி இருக்கிறார்கள்.. அவர்கள் தவறுகள் அனைத்தையும் வெளி கொண்டு வந்து தண்டனை வாங்கி தர வேண்டும். இந்த மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும். தன் பாவாவிற்கு நியாயம் வாங்கி தர வேண்டும் என்று எல்லாம் தோன்றுகிறது. ஆனால் இது அனைத்தையும் எப்புடி செய்து முடிப்பது அதற்கான வழி தான் அவளுக்கு தெரியவில்லை..
ஹரிணி மருத்துவர் அறையில் இருந்து வெளி வந்தாள்.. அவளை பார்த்த தியா ஹனிமா டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்க.. ஹான் உன் ப்ரெண்ட்ஷிப்ப பர்ஸ்ட் கட் பண்ண சொன்னான் என்று கோவமாக கூறி விட்டு ஹரிணி விறுவிறு வென நடந்தாள்..
இவளுக்கு இப்ப என்னாச்சு ஏன் முகம் பேய் அறைஞ்ச மாதிரி இருக்கு என்று தனக்குள் பேசி கொண்டே ஹனிமா ஹனி செல்லம் என்னாச்சுடா என்றபடி ஹரிணி பின்னால் சென்றாள் தியா…
மூன்று மாதங்களுக்கு தேவா கண்ணில் பட கூடாது என்று நினைத்த சூர்யா மூன்றே நாளுக்குள் தேவா கையில் சிக்கினான்.. அவன் செய்த செயலுக்குரிய வெகுமதியை தேவா சூர்யாவின் உடம்பு எங்கும் பாரபட்சம் பார்க்காமல் அளித்து விட்டு அதற்குரிய வைத்தியத்தையும் அவனே அளித்தான்..
தேவா காரை ஓட்டி கொண்டு வர, சூர்யா அவன் அருகே அமர்ந்து இருந்தான். இருவரும் எதுவும் பேசி கொள்ள வில்லை. அந்த கார் அமைதியை தத்தெடுத்து இருந்தது..
அந்த அமைதி சூர்யாவுக்கு பிடிக்கவில்லை போல், தன் மொபைலை எடுத்து பாட்டு ஒன்றை ஓட விட்டான்..
யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் எனது என்ற பாடல் ஓட,
கோவமாக திரும்பி சூர்யாவை பார்த்த தேவா வாங்கனது பத்தலையா பரதேசி இன்னும் வேணுமா? பாட்டை இப்ப நீ ஆஃப் பண்ணுல உன்னோட செல்போனும் நீயும் என்ன ஆகுவீங்கன்னு எனக்கே தெரியாது என்று மிரட்ட,
மொபைலை அணைத்த சூர்யா.. இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு சொல்லி நீ இந்த குதி குதிக்கிற என்று கேட்டான்..
அவ தான் சின்ன பொண்ணு விளையாட்டு தனமா ஏதோதோ செய்றானா, அவளுக்கு புத்தி சொல்றதை விட்டுட்டு, நீயும் அவ கூட சேர்ந்து கூத்தடிச்சு, அவள் மனசுல இருக்க ஆசையை வளர்த்து விடுறியா என்று கோவமாக கேட்க.
என் தங்கச்சி சின்ன பொண்ணா வேணா இருக்கலாம். ஆனா அவ விளையாட்டு தனமாக எதுவும் பண்ணல. ரொம்ப சின்சியரா உண்மையான தான் உன்னை லவ் பண்றா.
ஏய் என்று தேவா பல்லை கடிக்க..
மச்சி புரிஞ்சுக்கோடா தியா ரொம்ப நல்ல பொண்ணுடா. உன்னை ரொம்ப லவ் பண்றாடா..
இதை கேட்டு லேசாக சிரித்த தேவா, அதனால் தான் வேண்டாம் சொல்றேன்.. ஆனாலும் உனக்கு இவ்வளோ சுயநலம் இருக்க கூடாதுடா. உன் ப்ரெண்ட் வாழ்க்கை நல்லா இருக்கனும் அப்புடிங்கிறதுக்கா ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிக்க நினைக்கிறியே,
ஏன் உனக்கு என்னடா குறைச்சல்,
ஏகபட்ட் குறைச்சல் இருக்கு, டமுன்னாடி வேணா நான் எந்த தப்பும் செய்யாமா இருந்திருக்கலாம். ஆனா இப்ப நான் வாழ்ற வாழ்க்கையே தப்பானது தான்…
தப்புன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏன் அதை செய்ற சூர்யா கோவபட,
எனக்கு இப்புடி இருக்க தான் பிடிச்சு இருக்கு.. காதல் கல்யாணம் குடும்பம்ன்னு கமிடிட்மெண்ட்க்குள்ள போக இஷ்டம் இல்லை.. அதை எல்லாம் நினைச்சாலே கடுப்பாக இருக்கு.. இதில் நீ,அந்த பொண்ணு நினைக்கிறது எல்லாம் நடக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை..
தியா பாவம் டா அந்த பொண்ணு என்ற சூர்யாவை முறைத்த தேவா,
இப்ப நீ ஒருத்தன் பாவம்ன்னு சொல்ற, நீயும் அவளும் ஆசை படறது நடந்தா உலகமே அவளை பாவம்ன்னு சொல்லும்,
உனக்கு ஏன் சூர்யா புரிய மாட்டேங்குது.. நான் வாங்கி வைச்சு இருக்க பேர் காலம் பூரா என்னை துரத்தும்.. அந்த பொண்ணை நான் கல்யாணம் பண்ணுனா என்ன நடக்கும் இந்த ஊரும் உலகமும் கொலைக்காரன் பொண்டாட்டி பொம்பளை பொறுக்கி பொண்டாட்டின்னு பேர் வைக்கும்.. அவளை பெத்துவங்களே அவளை வெறுத்துற மாட்டாங்களா,
பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம் சொல்ற மாதிரி நான் செஞ்ச தப்புக்கு, எந்த சம்பந்தமும் இல்லாத அவ ஏண்டா தண்டனை அனுபவிக்கனும்…
மச்சி உனக்கு அந்த பாப்பா மேல்ல உண்மையான பாசம் இருந்தா அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையனும் நினை.. என் கூட கோர்த்து விட முயற்சி பண்ணாத..
நீ சொல்ற மாதிரி ரொம்ப நல்ல பொண்ணு தான், அந்த பாப்பாவோட குழந்தை மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமான வாழ்க்கையை அவ வாழனும் என மனதார கூறினான்..
மச்சி அது வந்து தியா என்று மறுபடியும் சூர்யா ஏதோ பேச ஆரம்பிக்க…
சூர்யா என சீறிய தேவா இது தான் என்னோட கடைசி முடிவு. மறுபடியும் மறுபடியும் இந்த விஷயத்தை பத்தி என் கிட்ட பேசதா, அவ கூட சேர்ந்து அன்னைக்கு செஞ்ச மாதிரி இன்னோரு தடவை ஏதாவது கிறுக்கு தனம் பண்ண,
அதற்கு அப்புறம் தேவா வாழ்க்கையில்ல சூர்யா கிடையவே கிடையாது… நான் சாகற வரை உன் முகத்திலே முழிக்க மாட்டேன் என்ற தேவா முகத்திலும் குரலிலும் இருந்த தீவிரமே சூர்யாவை பயமுறுத்தியது…
இரண்டு மாதங்களுக்கு பிறகு…
பளார்……
டேய் துரோகி என்றபடி
அந்த ஹால்லே அதிரும் அளவு ஒரு அடியை சூர்யாவின் கன்னத்தில் வைத்தான் தேவா…
ஆத்தாடி என்னா அடி கன்ஃபார்மா காது ஜவ்வு கிழிச்சுருக்கும்… இதுக்கு நமக்கு விழுந்த அடி எவ்வளவோ பரவாயில்லை என்று தேவா விடம் அடி வாங்கி சிவந்து போயிருந்த தன் இரு கன்னத்தையும் தடவியபடியே மைண்ட் வாய்ஸ் என்று எண்ணி சத்தமாகவே சொல்லி சிரித்தவளின் கன்னத்தில் அடுத்த அடி விழ, சுருண்டு போய் அருகே இருந்த ஷோபாவில் விழுந்தாள் மிசஸ் திரவியா தேவேந்திரன்… அவள் விழும் போது அவள் கழுத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தேவா கட்டிய தாலியும் முகத்தின் மீது விழுந்தது…