Author
Ruthra Lakshmi
பாகம் 10
தேவா தனக்கு ஹச் ஐ வி என்று சொல்லி விட்டு தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தான்.
அதை கேட்ட தியாவிற்கு தான் பெரும் அதிர்ச்சி. அவளின் இதயமே துடிப்பதை ஒரு நொடி நிறுத்தியது… இப்படி ஒரு காரணம் இருக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. தன்னை அறியாமல் கண்கள் கண்ணீரை வெளி ஏற்றியது…
தேவாவிற்கு தியாவின் கண்ணீரை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. அவன் இவ்வாறு கூறியதும் அவள் எழுந்து ஓடி விடுவாள் இனி தன்னை தொந்தரவு செய்ய மாட்டாள் என்று நினைத்து தான் விளையாட்டாக கூறினான். ஆனால் தியா அதை உண்மை என நினைத்து அவள் அழுவாள் என்று நினைக்கவில்லை.. தனக்காக இவள் கண்களில் ஏன் இந்த கண்ணீர் என்ன காரணம் என்று கேள்வி எழுந்தாலும் அமைதியாக இருந்தான்…
தியாவோ தேவா சொன்ன இந்த இரண்டு மூன்று நொடிகளுக்குள் கடவுளை திட்டி தீர்த்தாள்… பாவாவிற்கு ஏன் இப்படி என்று,
அப்போது பக்கத்து டேபிளில் இருந்து ஒரு சத்தம் வந்தது. அங்கு இரு ஒரு குழந்தை தனது அண்ணனிடம் “டேய் பொய் சொல்லாத, நீ சொல்றது பொய் என்னை ஏமாத்த பார்க்குற” என்றது. அது தியா காதில் விழுந்தது…
பின்பு தான் உலகின் எட்டாவது அதிசயமாய் அவள் மூளை வேலை செய்தது. ஏன் அவன் பொய்யுரைத்து இருக்க கூடாதென்று,
“பாவா நீங்க பொய் தானே சொன்னீங்க. அப்படி எல்லாம் எதுவும் இல்லைல… நீங்க என்னை ஏமாத்தறதுக்காக விளையாட்டா தானே சொன்னீங்க” என்று கேட்டாள்.. ஆம் பொய் தான் என்று கூறி விட மாட்டானா என்ற ஒரு வித தவிப்புடன்.
“ஏய் எனக்கு வேற வேலை இல்லை பாரு உன் கூட பொய் சொல்லி விளையாடிட்டு இருக்க பைத்தியம்” என்று தேவா திட்ட,
“இல்ல இல்ல நீங்க பொய் தான் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன்”..
“நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன். அதுவே பெரிய விஷயம். எதோ நான் நல்ல மூட்ல இருந்ததால் சொன்னேன்.. அதை நீ நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்.. இனிமே என்னை தொந்தரவு பண்ணாத…ப்ராமிஸ் பண்ணிருக்க மீறினேன்னு வையேன் சாமி கண்ணை குத்துதோ இல்லையோ நான் குத்துவேன். மறுபடியும் எல்லா ஐட்டமும் ஆர்டர் பண்ணிட்டு போறேன் பாப்பா எல்லாத்தையும் நல்லா சாப்பிட்டு பத்திரமா வீட்டுக்கு போய் சேரு” என்று கூறி விட்டு எழுந்தான்.
தேவா எழுந்து திரும்ப அங்கே நடுத்தர வயது பெண்மணி ஒருவர் வந்து நின்றார்… அவர் அருகே தியா வயதை ஒட்டிய ஒரு இளம் பெண்ணும் இருந்தாள்.. அவர்களை பார்த்த தேவாவின் கண்கள் வேதனையும் குற்ற உணர்வையும் கொண்டது..
ஆனால் அவரோ தேவாவை எரிப்பது போல கோவமாக பார்த்து கொண்டு இருந்தார். “என்ன டாக்டர் தேவா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல” என்று கேட்டார் பார்வையை தியா மேல் பதித்து, எந்த பதிலும் தேவா கூறவில்லை…
“நீ சந்தோஷமா தான் இருப்ப உனக்கு என்ன பிரச்சனை… நாங்க தான் உன்னால் எங்க பிள்ளையை இழந்துட்டு தினம் தினம் தவிச்சுட்டு இருக்கோம். வாழ வேண்டிய என் பிள்ளையை இப்படி பண்ணீட்டியே. உன்னை மாதிரி அயோக்கியனை எல்லாம் அந்த கடவுள் தண்டிக்கமா எப்படி ஜாலியா சுத்த விடுறாருன்னு தெரியலடா. பெத்த வயிறு பத்தி எரியுதடா. நீ நல்லாவே இருக்க மாட்டா. நாசமா தான் போவ. கல்யாணம் குடும்பம் புள்ளை குட்டின்னு எதுவும் அமையாது. அப்படியே அமைஞ்சாலும் பொண்டாட்டி புள்ளை எல்லாத்தையும் இழுந்திட்டு அநாதையா தான் நிப்ப என்றார். கடைசியாக கூறிய வார்த்தைகள் தியா வை பார்த்து தான் கூறினார்.
அவர் பேசுவதை கேட்ட தியாவிற்கு ‘யார் இவங்க ஏன் இப்படி பேசுறாங்க’ என்ற எண்ணமும் கோவமும் அவர்கள் மேல் வந்தது. என்ன பிரச்சனை என்று தெரியாமல் என்ன பேசுவது. தேவாவே அமைதியாக தான் நின்று இருந்தான்.. தியாவிற்கு தான் அவர் தேவாவை திட்டுவதை கேட்க முடியவில்லை. அவளுக்கு மிகவும் வலித்தது. தேவா எந்த உணர்வையும் காட்டாது அமைதியாக இருந்தான்.. அவரின் சத்தத்தில் கூட்டமே கூடி விட்டது..
மேலும் சில வார்த்தைகளால் தேவாவை அந்த பெண்மணி திட்ட அவரோட இருந்த மகளோ ம்மா வாங்க வாங்க என அழைக்க அந்த பெண்மணி கேட்பதாக இல்லை.. அந்த நேரம் அங்கு வந்த அவரின் கணவன் தேவாவை எரிப்பது போல் பார்த்து விட்டு “எல்லாரும் பார்க்குறாங்க வா” என்று தனது மனைவியை அழைத்து சென்றார்.
அவர்கள் சென்ற பின் தியா தேவாவின் முகம் பார்த்தால் இறுக்கமாக இருந்தது.. கண்களிலோ வேதனை அப்பட்டமாக தெரிந்தது..
“யாரு இவங்க ஏன் இப்புடி பேசுறாங்க” என்று தியா தேவாவின் தோள் மீது கை வைத்து பாவா என்க. அவன் அவள் கையை தட்டி விட்டு அங்கிருந்து வேகமாக சென்றான். பின்னால் தியா ஓடி சென்றும் கூட இந்த முறை தேவா காரை புயல் வேகத்தில் கிளப்பி சென்று இருந்தான்…
காரில் சென்ற அவன் மனமோ பழையதை நினைத்து பார்த்தது. இன்று சபிக்கும் இவர் ஒரு காலத்தில் எவ்வளவு அன்பாக பாசமாக தேவா என்று அழைப்பார். நடந்த கோர சம்பவம் அனைத்தையும் மாற்றி விட்டதே. அவர் கூறியது போல் தன்னால் அவருக்கு இழப்பு ஏற்பட்டது உண்மை தான்..
ஆனால் திட்டமிட்டு தான் எதையும் செய்யவில்லை. நடந்த நிகழ்வுகளில் தனக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஒரு புறம் அவனை வதைக்கிறது என்றால் மறுபுறம் குற்ற உணர்ச்சி கொல்லாமல் கொல்கிறது. ஏதோதோ எண்ணங்களால் மனம் குழம்பியது போல் காரும் சீரற்ற வேகத்தில் சாலையில் பறந்தது…
தியா அடுத்து யமுனாவிடம் மீண்டேம் சிலபல பொய்களை சொல்லி விட்டு போய் நின்றது தேவா வீட்டின் முன்பு அவர்கள் குடும்பத்தினர் வசிக்கும் வீட்டு முன்பு தான்…
தேவாவை அந்த பெண்மணி என்ன என்ன வார்த்தைகளால் எல்லாம் பேசி சாபம் வேறு அளித்தாரே, எதற்காக அவர் இவ்வாறு பேசினார். என்னவாயிருக்கும் அப்படி என்ன தவறு செய்து இருப்பான் என்று சிந்தித்தவள். அது எதுவாக இருந்தாலும் அதற்காக இப்படியா பேச வேண்டும் என்று அந்த பெண்மணி மீது கோவம் எழுந்தது.. அது தனக்கே இவ்வளவு வருத்தத்தை அளித்தது என்றால் தேவா எவ்வளவு வேதனையில் இருப்பான். அங்கு இருந்து கிளம்பும் போது வேற அவ்வளவு வேகத்தில் சென்றானே, பத்திரமாக சென்று இருப்பானா, இப்போது என்ன மனநிலையில் இருப்பான். வேதனையான அவன் முகமே அவளின் நினைவுக்கு வர,
தேவாவை சந்தித்து அவன் எப்படி இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவன் தான் எங்கு இருக்கின்றான் என்று தெரியாது. அதனால் தான் இப்போது தேவா வீட்டின் முன்பு வந்து நிற்கிறாள்.
தேவா அன்னை மீனாட்சியிடம் எப்படியாவது பேசி தேவா இருப்பிடம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று, வாசல் வரை வந்து விட்டாள் உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. காரணம் இனியா ராகவ் இருவரும் வெளியூர் சென்று இருக்கின்றனர்..
இனியாவுக்கு திருமணமான இரண்டு நாளில் இங்கிருந்து சென்றவள் தான் அதன் பின்பு இந்த வீட்டுக்கு வரவில்லை. வரவில்லை என்பதை விட வர பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.. அன்று அவர்கள் தேவாவை நடத்திய விதத்தினால், தனது அக்காவை பார்க்க வேண்டும் என்று தோன்றினால் அவள் அலுவலகத்திற்கு சென்று பார்த்து கொள்வாள். இனியா இல்லாத நேரத்தில் உள்ளே சென்றால் என்ன காரணம் சொல்வது என்று தயக்கத்தில் நின்றாள்..
தேவா என்று வரும் போது தயக்கம் எல்லாம் தள்ளி போக எதையாவது கூறி சமாளிப்போம் என்றபடி உள்ளே சென்றாள். அங்கு மஞ்சுவை தவிர வேறு யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவளிடம் பக்கத்தில் ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்ததுண்டு போலாம் வந்தேன் என்றாள்..
மேலும் ஏதோ கேள்வி கேட்க வந்த மஞ்சுவை மீனாட்சி தான் “வீட்டுக்கு வந்த பிள்ளையை ஏன் இவ்வளோ கேள்வி கேட்கிற மஞ்சு” என்று கண்டித்தார்.. மீனாட்சியிடம் பேச தான் சென்றால் ஆனால் பேச முடியவில்லை. கருவாட்டு பானையை சுற்றும் பூனை போல் மஞ்சு தியா பின்னாலே வந்தாள். ஆனால் சென்றதற்கு ஒரு பலன் மஞ்சு மீனாட்சி இருவரும் அசந்த நேரம் மீனாட்சி போனில் இருந்து தேவ் கண்ணா என சேமித்து வைக்கப்ட்டு ஒரு நம்பர் இருக்க, நிச்சயம் அது தேவா நம்பர் தான் என எடுத்து விட்டாள்… அதன் பின்பு ஒரு நொடி கூட அங்கு இருக்கவில்லை டைம் ஆச்சு வீட்டுக்கு போறேன் என்று கிளம்பி விட்டாள்.
இதோ நம்பர் கிடைத்த நொடியில் இருந்து இப்போது வரை கை ரேகையே தேய்ந்து போகும் அளவுக்கு அவனுக்கு கால் செய்து பார்க்காறாள் அவன் எடுக்கவில்லை.பின்பு எண்ணற்ற மெசேஜை வாட்ஸ்அப்பில் அனுப்ப ஒன்று கூட இன்னும் அவனால் பார்க்கப்படவில்லை. அவனின் நிலை என்னவென்று தெரியாமல் வேதனை கொள்கிறாள்…
மேலே வந்த யமுனா “தியா சாப்பிட வாடா டாடி கூப்பிடுறாங்க” என அழைக்க,
“கொஞ்ச நேரமாகட்டும்மா என்றாள்..
அவளுக்கும் பசி தான்.. ஆனால் சாப்பிட போகும் நேரம் தேவா அழைத்து விட்டால் என்ன செய்வது,
மொபைலை கையில் வைத்து கொண்டு சென்றால் யமுனா திட்டுவார்..
தியா உனக்கு பிரச்சினை யமுனா அழுத்தமான குரலில் கேட்டார்..
ஒன்னுமில்லம்மா என்றவளை கையை கட்டி யமுனா ஒரு பார்வை பார்க்க,
இதுக்கு மேல் முகத்தை இப்புடி வைத்து இருந்தால் யமுனா என்ன என்ன என கேட்டே விஷயத்தை அவள் வாயில் இருந்து கறந்து முதுகு தோலையும் உரித்து விடுவார் என்பது புரிய, சாப்பிட சென்றால்,
என்னவோ நிச்சயம் இருக்கின்றது யமுனா மனம் அடித்து சொன்னது.. இதற்கு மேல் தான் கேட்டு அழுத்தம் கொடுக்க கூடாது.. பெரிய மகளை விட்டு பேச வைக்க வேண்டும் என நினைத்து கொண்டவரும் கீழே சென்றார்…
இனியாவும் தியாவிடம் ஊருக்கு வந்த பின் நிச்சயமாக பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இருந்தாள்…
மஞ்சு அனுப்பிய போட்டோவை பார்த்தவளுக்கு அதிரிச்சி.. அது தங்கை தான் என அக்காகாரிக்கு தெரியாமல் போகுமா,
தேவாவோடு அமர்ந்து இருக்கும் ஒரே காரணத்திற்காக தங்கையை அந்த மஞ்சுவும் திவேஷும் என்ன பேச்சு பேசி விட்டார்கள், யார் என்று தெரியாமல் தான் பேசினார்கள் என எடுத்து கொள்ள முடியாது,
தெரிந்தாலும் பேசுவார்கள்.. அவர்கள் இருவருக்கும் மற்ற எல்லாரையும் விட தேவா மீது பயங்கர கடுப்பு கருவாட்டுக்கு அலையும் மீன் போல தேவா விஷயம் எப்போதடா கிடைக்கும் மனதிலிருக்கும் வன்மத்தை கக்கலாம் என அலைபவர்களுக்கு அவலாக மாறி விட்டாளே இந்த பையத்தியகாரி இனியாவிற்கு தங்கை மீது கோவம் வந்தது..
அடுத்தவங்க தனிப்பட்ட விஷயத்தை போட்டோ எடுத்து அதை வைத்து கேலி கிண்டல் அடிக்குதுங்களே இங்கிதம் தெரியாத எருமைங்க.. மஞ்சு திவேஷை வறுத்து எடுத்தவள், இந்த மஞ்சுக்கு ஒரு நாள் நல்லா திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் நினைத்து கொண்டாள்..
அவசர அவசரமாக அள்ளி போட்டு விட்டு வந்த தியா மிஸ்டு காலில் இருக்கும் தன் எண்ணை பார்த்து விட்டு தனக்கு அழைப்பானா, இல்லை மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணுவா என்று தனது மொபைலின் டிஸ்பேளயை பார்த்து கொண்டு இருக்கிறாள். இரவு முழுவதும் தூங்காமல்,
இங்கு இவள் இப்படி இருக்க அங்கு தேவாவோ இன்று நடந்த நிகழ்வுகளால் பழைய கசப்பான நினைவுகள் வந்து அவனை தாக்க, அந்த நினைவை மறக்க, தன்னையே மறக்க குடித்து குடித்து உலகத்தையே மறந்தளவு கண்ணை திறக்க முடியாதளவு போதையில் நடுஹாலில் சைட் டிஷ்ஷாக வைத்து இருந்த மிக்சர் பாக்கெட் மீது இவன் கிடக்க, அவன் போன் எந்த மூலையிலோ கிடந்தது...
மாலில் இருந்து அந்த பெண்மணியை வீட்டுக்கு அழைத்து சென்றார் அவர் கணவர்..
“கெளரி ஏன்மா இவ்வளோ டென்ஷன் ஆகுற, கொஞ்சம் அமைதியா இரு அழதா” என்றார் செந்தில்.
“அந்த தேவாவை பார்த்ததும் டென்ஷன் ஆகாம என்ன பண்றதுங்க. அவனை பாருங்க எவ்ளோ சந்தோஷமா இருக்கானு. ஆனா நம்ம பிள்ளை” என்றவருக்கு மேலும் பேச முடியவில்லை அழுகை தான் வந்தது.
“அவன் உயிரோடு இருக்கிறதை பார்க்க பார்க்க ஆத்திரமாக வருதுங்க. அவனும் சாகனும் என் பிள்ளை செத்தது போல் அவனும் சாகனும்ங்க. அப்ப தான் என் பிள்ளை ஆத்மா நிம்மதியா இருக்கும்” என்று சொல்லி கெளரி இன்னும் இன்னும் அழுதார்… அவர் பிள்ளையின் நினைவில்,
“நடக்கும் மா நீ சொல்றது நடக்கும் கவலைப்படாத” என்று கூறிய செந்தில் கண்களில் தேவா மீது அவ்வளவு வன்மம்.
பாகம் 9
இரவு யமுனா டைனிங் டேபிளிலில் உணவு பதார்த்தங்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தார். அவரது கணவர் பாலகிருஷ்ணன் சாப்பிட வந்து அமர்ந்தவர், “தியா குட்டி எங்க யமுனா?” என்று கேட்டார்…
“அவ ரூம்ல இருக்கா”…
“என்னது ரூம்ல இருக்காளா, என் கார் சத்தம் கேட்டாலே போதும் டாடி சொல்லி என் பொண்ணு ஓடி வருவா, இப்ப நான் வந்து ஓன் ஹவருக்கு மேல் ஆக போகுது… நான் வந்ததில் இருந்து பார்க்கிறேன் ஆளையே காணோம்… நீ ஏதாவது என் பொண்ணை தீட்டுனயா? நான் போய் என் பொண்ணை பார்த்ததுட்டு வரேன்” என்று எழுந்தார்…
“அட சாப்பிட உட்கார்ந்துட்டு எழுந்திருக்க கூடாது உட்காருங்க… உங்க பொண்ணை நான் எதுவும் சொல்லலை, ரூம்ல உட்கார்ந்து படிச்சிட்டு இருக்கா.. அதான் நீங்க வந்தது கூட தெரியலை… நீங்க இருங்க நான் போய் கூப்பிட்டு வரேன்” என்று யமுனா மாடிப்படிகளில் ஏறினார்…
அவருக்கு ஒரே யோசனை தியா மாலுக்கு சென்றதிலிருந்தே சரியில்லை.. ஷாப்பிங் முடித்து வீடு திரும்புகையில் அவள் முகமே வாடி இருந்தது…
என்னடா என்னாச்சு யமுனா விசாரிக்க ஒன்னுமில்ல என்றாள்..
வீட்டிற்கு வந்து அவளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் யமுனா செய்து கொண்டு போய் கொடுத்த போது கூட வேண்டாம் என்று கூறி அறைக்குள் போய் அடைந்து கொண்டாள்… ஒரு நாளும் அவளை இப்படி அவர் பார்த்தது கிடையாது… எப்போதும் சிரித்து கொண்டே இருக்கும் மகள் வாட்டத்துக்கு என்ன காரணம் என்று மறுபடியும் விசாரிக்க ஏதேதோ கூறி சமாளித்து விட்டாள்…
அறைக்குள் இருந்த தியாவோ பயங்கரமான குழப்பத்திலும் கவலையிலும் இருந்தாள்… அவளின் எண்ணம் முழுவதையும் எப்போதும் போல் தேவாவே ஆக்கிரமித்து இருந்தான்… இன்று மாலில் நடந்த விஷயங்களை பற்றியே யோசித்து கொண்டு இருந்தாள்…
ஃப்ரோசோன் மால்:
தேவா தனக்கு தேவையான சில பொருட்களை வாங்கி விட்டு ஒரு ஷாப்பில் இருந்து வெளியே வர, அவனின் முன்பு வந்து நின்றாள் தியா… அதுவும் இவ்வளவு நேரம் ஓடி வந்ததன் விளைவாக இரெயில் எஞ்சின் புகை விடுவது போல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்து நிற்க,
தேவாவிற்கு உண்மையிலே அவளை அடையாளம் தெரியவில்லை.. யார் இந்த பொண்ணு இப்புடி வழியை மறைச்சு வந்து நிற்குது என எண்ணியவன் அவளை கடந்து போக எத்தனிக்க,
மூச்சு வாங்கியதில் தியாவால் பேச கூட முடியவில்லை…
ஒரு நிமிஷம் நில்லுங்க எனும் விதமாக தேவா முன்பு கை நீட்டி செய்கை செய்ய,
ஓய் யார் பாப்பா நீ வழியை விடாம நிற்கிற நகரு தேவா சொல்ல,
யார் என்று கேட்டதில் தியாவிற்கு புசுபுசுவென கோவம் வந்தது.. தன்னை தெரியவில்லையே என,
என்ன…. எ… ன்னை தெரியலையா பாவா உங்களுக்கு திக்கி திமிறி கேட்டாள்…
பாவா என்ற விழிப்பில் ஓ… இந்த லூசா என நியாயபகம் வந்தது.. ஆனாலும் தெரியலை பாப்பா வழியை விடு என்றவன்
அவள் எதிரே நிற்கவும் அவளின் வலது புறம் இடமிருக்க நகர பார்த்தான், தியாவும் நகர்ந்தாள் அவனுக்கு வழி விடாமல் இரண்டு கையையும் நீட்டியபடி, சரி என்று எதுவும் பேசாமல் இடது புறம் நகர்ந்தால் அவளும் இடது புறம் நகர்ந்து வழி மறித்தாள்…. தேவா நிமிர்ந்து பார்த்து முறைத்தான்…
தியா பயப்படுபவளா அப்புடியே நிற்க,
இவளை கோவமாக வந்தது.. இருந்தும் பொது இடம் என்பதால் திட்டவும் முடியவில்லை.. அதனால் அவள் காதை பிடித்து இழுத்து ஓரமாக நிறுத்தி விட்டு முன்னேறி நடந்தான்…
ஆ…. என்றபடி வலியில் காதை தேய்த்து கொண்டே திரும்பி பார்க்க
தேவா ரொம்ப தூரம் நடந்து இருந்தான்.. நடக்க சொன்னா பறக்குறார் என சலித்து கொண்டவள் மீண்டும் ஓடி அவன் அருகே சென்றாள்..
இப்போதும் தேவா நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடி கொண்டே பேசினாள்…
அச்சோ ஒரு நிமிஷம் நில்லுங்க பாவா ஏன்ஸிப்புடி பண்றீங்க.. உங்களுக்காக உங்ககிட்ட பேசுறதுக்காக என் அம்மாகிட்ட பொய்க்கு மேல்ல பொய் சொல்லி ஓடி வந்தா நீங்க கண்டுக்காம போறீங்களே இது எல்லாம் நியாயமா குறைப்பு,
ஹு ஆர் யூ என கேட்டான் தேவா…
என்னை தெரியாத உங்களுக்கு, சும்மா பொய் சொல்லாதீங்க பாவா, கொஞ்ச நேரம் முன்ன இவளான்னு நீங்க ஒரு லுக் விட்டிங்களே அதை நான் கவறிச்சுட்ணேன்.. அதனால் வேஸ்ட்டா பொய் சொல்லாதீங்க.. என்னை உங்களுக்கு நல்லாவே தெரியும்…
தெரிஞ்சா என தேவா தான் கேள்வியாக நிறுத்தி தியாவை பார்த்தான்… அதுக்கு என்ன பண்ணனும்ங்கிற என்ற கேள்வி இருந்தது அந்த பார்வையில் அது தியாவிற்கு புரிய,
தெரிஞ்சவங்களை வெளிய எங்கையாவது பார்த்தா சின்னதா ஒரு ஸ்மைல் ஹாய் ஹலோ எப்புடி இருக்கீங்க இரண்டு வார்த்தை பேசனும் தானே,
அப்புடி ஏதாவது கவர்மென்ட் புதுசா ரூல்ஸ் போட்டு இருக்காங்களா என்ன ஆச்சர்யம் போல் தேவா கேட்க,
ரூல்ஸ் எல்லாம் இல்லை.. அது ஒரு பேஸிக் மேன்னர்ஸ் தானே,
நான் மேனர்ஸே தெரியாத பொறம் போக்குன்னு வச்சுக்கோ… ஆனா நீ தான் மேனர்ஸ்ல பி.ஹெச்.டி படிச்சவாளாச்சே.. ஒருத்தவங்க உன்னை தெரிஞ்ச்சும் தெரியாத போல கண்டுக்காம அவாய்ட் பண்ணிட்டு போறாங்கன்னா அவங்களுக்கு நம்ம கூட பேசுறது பிடிக்கலை.. அவங்களை தொந்தரவு பண்ண கூடாதுங்கிற அந்த மேனர்ஸ் தெரியாத உனக்கு கோவமாக கேட்டான்… வார்த்தைகளில் இருந்த கோவம் குரலில் இல்லை.. மற்றவர்கள் கவனத்தை திருப்பாத மெதுவான குரலில்,
இங்க பாரு எனக்கு உன்கிட்ட பேச பிடிக்கல.. சுத்தமா பிடிக்கல.. உன் பேச்சு எரிச்சலூட்டுது.. இனிமே பாவா மயிர் மண்ணாங்கட்டின்னு கூப்பிட்டு என் முன்னாடி வந்த அவ்ளோ தான் என விரல் நீட்டி எச்சரித்து விட்டு அங்கிருந்து நகன்றான்..
புட் கோர்ட்டில் சாப்பிட தனக்கு தேவையான ஐட்டங்களை வாங்கிய தேவா ஒரு டேபிளில் அமர்ந்து உண்ண ஆரம்பிக்க, அவன் எதிர்புறம் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் தியா…
அவளை பார்த்து உஃப் என பெருமூச்சு விட்டவன் ஏய் உனக்கு என திட்ட ஆரம்பிக்கும் முன்னரே,
அவன் முன்பு ஒரு நிமிஷம் என் கை நீட்டியவள் புரியுது நான் உங்களை தொந்தரவு பண்றேன்னு, ஆனா இதுக்கு எல்லாம் காரணம் நான் இல்ல நீங்க தான்..
ஏதே.. நானா தேவா கோவப்பட,
நீங்கன்னா நீங்க மட்டும் இல்ல.. உங்க வீட்டு ஆளுங்க தான்.. எப்ப பார்த்தாலும் என் முன்னாடி தேவாவா அச்சச்சோ அவர் ரொம்ப பயங்கரமான ஆளாச்சே.. அவன் அப்புடி இப்புடின்னு பில்டப் பண்றாங்க.. அந்த அப்புடியும் இப்புடியும் எப்புடின்னு நான் போய் கேட்டா… ஒருத்தரும் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க..
சரி உங்ககிட்டே கேட்டு தெரிஞ்சிக்கலாம் பார்த்தா நீங்க எப்ப பாரு வெந்நீர்ல விழுந்த வெறி அடுத்த வார்த்தை அவள் சொல்லும் முன்பு
ஏய் என தேவா உறுமி கொண்டு இருக்கையை விட்டு எழ பார்க்க,
அட உக்காருங்க, வெறி பிடிச்ச சிங்கம் போல கர்ஜிக்கிறீங்களேன்னு சொல்ல வரதுக்குள்ள டென்ஷனாக்கிட்டு என கேவலமாக சமாளிக்க,
அவளை முறைத்து தேவா உனக்கு இப்ப என்ன தான் வேணும் ஏன் ஏதேதோ உள்ளிட்டு இருக்க என் கேட்க,
எனக்கு நிறைய ஏன்க்கு ஆன்சர் வேணும்… அதுக்கு முன்ன இந்த மொஜிட்டோ வேணும் என்றவள் அவனிடம் கேட்காமலே அவன் வாங்கி வைத்திருந்த மொஜிட்டோ எனப்படும் குளிர்பானத்தை எடுத்து பருக தொடங்கினாள்…
உங்களை பார்க்க அடிச்சு பிடிச்சு ஓடி வந்ததில் தாகம் எடுக்குது என்றவள் மீதியையும் பருகினாள்…
தேவா அவளையே பார்த்து இருந்தான்.. ஏனோ அவளின் இன்றைய செய்கைகள் எதுவும் பெரிதாக அவனுக்கு கோவத்தை தரவில்லை…. அவளின் செய்கைகள் அவனுக்கு சூர்யாவை தான் நியாபிப்படுத்தின..
அவனையும் பிரச்சினை ஏற்பட்ட காலத்திலிருந்து எத்தனையோ முறை தன்னை விட்டு தள்ளி நிறுத்த அலட்சியப்படுத்தி இருக்கிறான்… திட்டி இருக்கிறான்.. ஆனால் சூர்யா ஒரு நாளும் அதை எல்லாம் பெரிது படுத்தாது தேவா பேசவில்லை என்றாலும் பேசவான்.. அவன் அன்னை கூட வாரம் ஒரு முறை இல்ல பத்து நாள் ஒரு முறை தான் பேசுவதும்.. சூர்யாவோ ஒரு நாள் கூட அவனை பார்க்காமல் கூட இருக்க மாட்டான்.. எங்க இருக்க என கேட்டுட்டு நச்சரித்தாவது வந்து பார்த்து விட்டு தான் செல்வான்.. இவளின் இந்த செய்கை சூர்யா போல என்ற எண்ணம் வர,
ச்சே இது என்ன கேணதனமான யோசனை அவன் என் ஃப்ரெண்ட் இந்த பொண்ணு யாரோ, ஆனா இனி என்கிட்ட பேசாத படி என்னை பக்கம் வராதபடி பார்த்துக்கணும் அதுக்கு என்ன பண்ணலாம் என யோசித்தான்…
இவர்கள் இங்கு அமர்ந்து இருக்க. அதே மாலிற்கு வந்து இருந்தனர் தேவாவின் அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி நால்வரும். நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம் அருகே இருந்த திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு திரும்பும் போது மஞ்சுளா தனது மாமனார் வேதசாலத்திடம் மாலிற்கு சென்று ஷாப்பிங் செய்து விட்டு செல்லலாம் என்று கூற, வேதாசலம் தனது ப்ரியமான மருமகள் மஞ்சுவிற்காக அவரும் வந்தார்…
அவர்கள் தனது ஷாப்பிங்கை முடித்து விட்டு புட் கோர்ட்டிற்குள் நுழையும் போது மஞ்சுளா கண்ணில் தேவா பட்டான். மாமா உள்ள போக வேணாம் நாமா திரும்பி போயிடலாம் என்றாள் மஞ்சு. ஏம்மா என்னாச்சு என்று வேதாசலம் கேட்க.. அங்க பாருங்க மாமா என்று மஞ்சு கை நீட்ட மற்ற மூவரும் திரும்பி பார்த்தனர்… அங்கு தேவாவும் அவனுடன் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தது பட்டது… தேவா முகமே அவர்களுக்கு தெரிந்தது தியா திரும்பி அமர்ந்து இருந்ததால் அவள் முகம் தெரியவில்லை…
ஏன் மஞ்சு அவன் இருந்தா நமக்கு என்ன அதற்கு ஏன் நாமா போக கூடாது என்று ஜெயேந்திரன் கேட்டார்…
ஏங்க நம்ம மாமாக்கு ஒரு கெளரவம் மரியாதை இருக்கு.. அவர் போய் பட்ட பகல்ல பப்ளிக் ப்ளேஸ்ல உங்க தம்பி அடிக்கிற கூத்தையும் அந்த மாதிரி பொண்ணு முகத்தை எல்லாம் பார்க்கன்னுமா அதான் வேண்டாம் சொல்றேன் என்று மஞ்சுளா கூற வேதாசலத்திற்கு தேவா மேல் வெறுப்பு தான் அதிகரித்தது… அங்கிருந்து விறு விறுவென வெளியே சென்றார்…
மஞ்சு தேவா உட்கார்ந்து அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு இருக்கான் அவ்ளோ தான். அவங்க என்ன பேசுறாங்க யார் அந்த பொண்ணுன்னு தெரியாம உன் வாய்க்கு வந்த மாதிரி தப்பா பேசாதா என்று மீனாட்சி கடிந்து கொண்டார்.
அத்தை உங்க பையன் தேவா எப்படின்னு எல்லாருக்கும் தெரியும்.. அப்படி பட்டவர் கூட ஒரு பொண்ணு பேசுறானா அவ மட்டும் நல்ல பொண்ணாவா இருப்பா என்று மஞ்சு கூற மீனாட்சி இருக்கும் இடம் கருதி அமைதியாக தன் கணவன் பின்னே சென்றார். மஞ்சு தனது மொபைலை எடுத்து தேவாவை போட்டோ எடுத்து அதை இந்துமதி அவள் கணவன் கார்த்திக். ராகவ், இனியா, சூர்யா என் அனைவருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியபடியே கீழே இறங்கி சென்றாள்…
எனக்கு ஒரு டவுட் என்றான் தியா வை பார்த்து அவள் என்ன என்று கேட்க, நீ பொறந்ததில் இருந்தே இப்படி தானா இல்லை இடையில் மண்டையில் அடிபட்டாதால் இப்படி மாறிட்டாயா?
தியா அவனை முறைத்து என்னை பார்த்தா உங்களுக்கு லூசு மாதிரி தெரியுதா? என கேட்க,
பார்த்தா ஒன்னும் தெரியலை ஆனா நீ வாயை திறந்து பேச ஆரம்பிச்சா இரண்டு செகண்ட்ல கண்டு பிடிச்சிரலாம் என்றான் தேவா நக்கலாக,
தியா அதற்கு எதுவும் கூறவில்லை..
தேவாவே அடுத்தும் பேசினான் என்ன படிக்குற ப்ளஸ் ஓன்னா ப்ளஸ் டூவா என்று கேட்க.
இல்ல நேத்து தான் எங்க அம்மா என்னை ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டாங்க. என்னை பார்த்தா உங்களுக்கு ஸ்கூல் பாப்பா மாதிரியா தெரியுது… நான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறேன் அதுவும் ஜெர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் என்றாள் கெத்தாக இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டு,
ஓ… ஜெர்னலிசமா அதான் அடுத்தவங்க பர்சனல்க்குள்ள இப்புடி மூக்கை நுழைக்கற போல் என்று தேவா கூறியதும். ஈஈஈஈ என்று சிரித்து சமாளித்த தியா தேவா சாப்பிட்டால் இருப்பதை பார்த்து நீங்க சாப்பிடலையா? என்று கேட்டாள்…
எனக்கு எதுவும் வேண்டாம் நீயே எல்லாத்தையும் கொட்டிட்டு கிளம்பு, இனி என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது சரியா என்று அங்கிருந்து எழ,
அவனின் கை பிடித்து தடுத்தவள் நம்ம டீல் இன்னும் முடியலை பாவா நான் கேட்கிற கொஸ்டினுக்கு நீங்க பதில் சொல்லனும் அதுக்கு முன்னாடி எழுந்து போனா எப்படி உட்காருங்க உட்காருங்க பாவா என்றாள்…
ஏய் பர்ஸ்ட் என் கையை விடு நான் எப்ப உங்கிட்ட டீல் போட்டேன். நீ யார் எனக்கு நான் எதுக்கு நீ கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லனும். சின்ன பொண்ணா இருக்கியே பாவம் சொல்லி தான் பார்க்கிற நேரம் எல்லாம் நீ பண்ற பைத்தியகார தனதுக்கு பேசமா அமைதியா இருக்கேன். வீணா என் பொறுமையை சோதிக்காத பாப்பா அவ்வளோ தான் என்று விரல் நீட்டி எச்சரித்தவன் டேபிளில் இருந்து எழுந்து நகர பார்க்க,
இப்பவும் அவன் கையை விடாத தியா பாவா நீங்க இப்ப பதில் சொல்லிட்டீங்கனா. நான் உங்களை இனிமே தொந்தரவு பண்ணவே மாட்டேன். ப்ராமிஸ்ஸா இல்லைன்னு வைங்க பார்க்கிற இடத்தில் எல்லாம் உங்கிட்ட வந்து பேசி உங்களை டிஸ்டர்ப் பண்ணுவேன். அதுவும் பாவா பாவா அப்படின்னு கூப்டுவேன் பரவாயில்லையா உங்களுக்கு என்று தியாவும் அவனை சீண்ட,
ஏய் பொடி டப்பா சைஸ்ல இருந்துட்டு என்னையேவே மிரட்டுறீயா என்று கேட்க,
ஆமாம் என்பது போல் தியா தலை அசைத்தாள்.
தேவா தியாவை தீயாய் முறைத்து விட்டு கேளு கேட்டு தொலை இன்னையோட உன் தொல்லை முடியட்டும் என்று கடுப்புடன் சொல்லி விட்டு அமர்ந்தான். குரலில் கடுமையும் முகத்தில் பிடிக்காத பாவனை இருந்தாலும் தேவாவிற்கு தியா பேசுவதும் அவளுடன் அமர்ந்து பேசுவதும் ஒரு இலகு தன்மையை தான் கொடுத்தது.. அதனால் தான் அவளிடம் இவ்வளவு நேரம் பேசி கொண்டு இருந்தான்.
ஆனால் இது நீட்டிக்க கூடாது என்றும் அவள் தன்னோடு அமர்ந்து பேசுவதை மற்றவர்கள் பார்த்தால் அவளை தவறாக எண்ண வாய்ப்பு அதிகம்.. அடுத்த தடவை அவனை பார்த்தால் அவள் தெறித்து ஓட வேண்டும்.. ஓட வைக்க வேண்டும் என்பதால் அமர்ந்தான்..
உங்க வீட்டில் ஏன் நீங்க தங்கிறது இல்லை.. உங்க வீட்டு ஆளுங்க ஏன் உங்ககிட்ட பேச மாட்டேங்கிறாங்க.. உங்க தம்பிக்கு மேரேஜ் ஆகிருச்சு.. ஆனா நீங்க ஏன் இன்னும் மேரேஜ் பண்ணிக்கல… உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெயிலியரா? அதான் பண்ணிக்கலையா..
ஏய் பொடி டப்பா ஒருத்தன் வாழ்க்கையில் கல்யாணம் பண்ணிக்காமா இருந்தா அதற்கு காரணம் லவ் பெயிலிரா மட்டும் தான் இருக்கனுமா. வேற எதுவும் இருக்க கூடாது…
இருக்கலாமே! அப்படி வேற என்ன காரணம் சொல்லுங்க சொல்லுங்க என்றாள் ஆர்வமாக,
சொல்லுவேன் ஆனா நீ வருத்தப்பட கூடாது என்றான் முகத்தை சோகமாக வைத்து கொண்டு அவனின் குரலில் கூட ஒரு சோகம் இருந்தது.. தியா வருத்தப்பட மாட்டேன் என்பது போல் தலை அசைத்தாள்.. இருந்தும் நொடியில் அவன் முக வேதனையாய் மாறி இருக்க. அதை பார்த்தவளுக்கு ஏதோ கேட்க கூடாததை கேட்டு அவனை சங்கடபடுத்தி விட்டோமோ என்று கவலையாக இருந்தது..
பெரிசா ஒன்னும் இல்லை எனக்கு ஹச்.ஐ. வி பாசிட்டிவ் அதான் காரணம் என்றான்..
அதை கேட்டு தியாவிற்கு தான் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. தனது இதயமே துடிப்பதை நிறுத்தியது போன்று உணர்ந்தாள். சத்தியமாக இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று அவள் நினைத்து பார்க்கவே இல்லை. கண்களில் கூட அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது..
பாகம் 8
காரில் இருந்து இறங்கிய வெண்ணிலா கோவமாக செருப்பை கழற்றி வீசிவிட்டு வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு ஷோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்…
அவள் பின்னேயே காரை பார்க் செய்து விட்டு வந்த திவேஷ் அவன் மனைவி கோவமாக உள்ளாள் என்பதும் எதனால் கோவமாக இருக்கிறாள் என்பதும் தெரியும்…
அதனால் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு அவள் அருகே சென்று அமர்ந்து அவள் கையை பிடிக்க,
வெண்ணிலா தட்டி விட்டு தள்ளி அமர்ந்தாள்… திவேஷும் அவள் பக்கம் மறுபடியும் நகர்ந்து அவள் கையை பிடிக்க,
“என் கையை விடு திவேஷ், நான் பயங்கர கோவத்தில் இருக்கேன்… ஏதாவது சொல்லி திட்டிற போறேன், கொஞ்சம் நேரம் தனியா விட்டுட்டு போ” என்று சத்தம் போட்டாள்…
“ஏய் எதுக்குடி இப்ப ஓவரா கத்துற?, இப்ப என்ன நடந்துச்சுருச்சு?”,
“என்ன சொன்ன? எவ்ளோ அசாலாட்ட சொல்ற? என்ன நடந்துச்சுனு, ஹாஸ்பிட்டல் எல்லார் முன்னாடியும் நீ செஞ்ச தப்புக்காக நானும் தானே தலை குனிஞ்சு நின்னேன்… கார்த்திக் உன்னை எப்படி திட்டுனார்… அப்ப எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்துச்சு தெரியுமா?”
“அதுமட்டுமா கூட ஃவொர்க் பண்ற மத்த டாக்டர்ஸ் எல்லாம் வெண்ணிலா உன் ஹஸ்பண்ட் ஏன் இப்படி இருக்காரு சொல்லி சிரிக்காறாங்க… உன்னால் எனக்கு எப்பவும் அசிங்கம் அவமானம் மட்டும் தான் திவேஷ் கிடைக்குது… ஏன் திவேஷ் நீ ஒரு டாக்டர் அந்த பொறுப்பு உனக்கு கொஞ்சம் கூட இல்லையா? செய்ற வேலையை கவனமா செய்ய மாட்டாயா? எப்ப பாரு தப்பு செஞ்சு மகேஸ்வரன் சார் கிட்ட, இல்ல கார்த்திக் கிட்ட திட்டு வாங்கிட்டே இருக்கே”,
“உன்னை மாதிரி ஒரு அன்பர்ஃபெக்ட் ஃபர்சனை நான் பார்த்தே இல்லை… உன்னை மேரேஜ் பண்ணிகிட்டது என் தப்பு தான் அப்பவே சூர்யா சொன்னான் நான் தான் அவன் பேச்சை என்று அந்த வாக்கியத்தை முழுதாய் முடிக்கும் முன் ஸ்… ஆ… என்ற முனகல் அவளிடம் வலி தாங்க முடியாததால் வந்தது…
இவ்வளவு நேரம் அவள் திட்டுவதை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த திவேஷ் அவள் சொன்ன உன்னை திருமணம் செய்து கொண்டதே தவறு என்ற வார்த்தையில் கண்மண் தெரியாத அளவு கோவம் எழ அவள் கூந்தலை பற்றி அமர்ந்து இருந்தவளை மேலே தூக்கி இருந்தான்…
“என்னடி சொன்ன என்னை கல்யாணம் பண்ணுனது தப்பா? அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீ அடிச்ச கூத்துக்கு எல்லாம் என்னை தவிர வேறு ஒருத்தனும் உன்னை சீண்டி இருக்க மாட்டான்டி, அப்புறம் என்ன சொன்ன நான் அன்பர்ஃபெக்ட்”,
“ம்ம்…. ஒத்துக்கிறேன்டி, நான் என் வேலையில் பர்ஃபெக்ட் இல்லை தான்… ஏதோ ஒன்னு இரண்டு தப்பு பண்ணி இருக்கலாம்… ஆனா என் பர்சனல் லைஃப்ல, நான் ரொம்ப பர்ஃபெக்ட்… சொல்ல போனா ராமன்டி நான்… உன் ஒருத்தியை தான் மனசார காதலிச்சேன் உன்னை தான் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்… ஒரு வேளை உன்னை கல்யாணம் பண்ண முடியாத சூழ்நிலை வந்திருந்தாலும் வேற யாரையும் பண்ணி இருக்க மாட்டேன்”,
“ஆனா நீ”? என்று கேள்வியாக வெண்ணிலாவை பார்த்தான்…
அந்த பார்வையும் கேள்வியும் அவளை கூச செய்தது.. வெண்ணிலா அமைதியாக விழிகளை தரை தாழ்த்தினாள்… திவேஷ் பற்றி இருந்த கூந்தலை வேகமாக விட்டுட்டு வீட்டை விட்டு வெளியேற டொக் என்ற சத்தம் காதில் விழ, திரும்பி பார்த்தான்…
இவன் கூந்தலை விட்ட வேகத்தில் நிலைகொள்ள முடியாதவள் கீழே விழ அங்கிருந்த டீபாய் முனை நெற்றியில் பட்டு இரத்தம் வந்தது..
“வெண்ணிலா” என பதறியவன் வேகமாக அவள் அருகே ஓடி வந்து அவளை எழுந்து அமர செய்தவன், அச்சோ சாரிமா சாரிமா தெரியாம பண்ணிட்டேன்… என்ன வேணா நீ அடிச்சுக்கோ என அவள் கையை எடுத்து அவன் கன்னத்தில் நெஞ்சில் என மாறி மாறி அடிக்க செய்தவன்
“நீ நீ அப்புடி பேசினதால் தானே எனக்கு கோவம் வந்துட்டு, அதனால் தான் சாரி சாரி வெண்ணிலா.. சாரி வெண்ணிலா, கோவிச்சுக்காத, என்னை திருப்பி எவ்ளோ வேணா அடிச்சுக்கோ, ஆனா என்ன விட்டு மட்டும் போய்டாத, போய்ட மாட்டால்ல, சொல்லு வெண்ணிலா போய்ட மாட்ட தானே, ப்ளீஸ் ப்ளீஸ் போயிடாத வெண்ணிலா நீ இல்லன்னா, போய்ட மாட்ட தானே, என அதையே திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருந்தான் காயத்திற்கு மருந்திட வேண்டும் என்பதையும் மறந்து,
அவள் மாட்டேன் என தலை அசைக்கும் வரை அதையே கேட்டு கொண்டு இருந்தவனுக்குஅதன் பின்பு தான் காயம் நினைவு வர, அச்சோ என் தலையில் அடித்து கொண்டவன் முதலுதவி பெட்டியை எடுக்க சென்றான்..
வெண்ணிலா அப்படியே சுவரை ஒட்டி அமர்ந்து கால்களை இறுக கட்டி கொண்டு அதில் தலை சாய்த்து சத்தம் இல்லாமல் அழ ஆரம்பித்தாள்… தாலி கழுத்தில் ஏறும் வரை ‘வெண்ணிலா எனக்கு அது எல்லாம் எந்த பிரச்சினையும் இல்ல, நான் பெருசா எடுத்துக்கக மாட்டேன்.. இது எல்லார் லைஃப்லையும் நடக்கறது தான் என்று கூறியவன் தான்..
ஆனால் திருமணம் முடிந்த பின்பு
அவன் இப்புடி ஏதாவது தவறு செய்து அதை சுட்டி காட்டினாளோ, இல்லை சாதாரணமான கணவன் மனைவி சண்டையின் போது வெண்ணிலா ஏதாவது ஒரு வார்த்தையை வாய் தவறி இப்போது போல் விட்டு விட்டாள் போதும், உடனே திவேஷ் நீ ரொம்ப ஒழுங்கா என்று தூக்கி கொண்டு வந்து விடுகிறான் அவளின் கடந்த காலத்தை,
அதனாலே பெரும்பாலும் திவேஷ் தவறு செய்தால் கூட வெண்ணிலா கண்டும் காணாததுமாக இருந்து கொள்வாள்… என்றாவது இன்று போல் நடந்து விடுகிறது.. அப்போதே அவளின் அண்ணன் சூர்யா அவ்வளவு கூறினான், அவன் வேண்டாம் நிலாம்மா என் பேச்சை கேளு என்று,
கேட்டாளா இல்லையே, அவசரமாக எதிலிருந்தோ தப்பிப்பதற்காக எரிகிறதில் தலை விட்ட கதை தான் அவள் நிலை..
கோவை சரவணம்பட்டி ஃபுரோசோன் மால்,
இந்த ட்ரெஸ் உனக்கு ஓகே வா நல்லா இருக்கா ஹெங்கரில் மாட்டி இருந்த டீசர்ட்டை எடுத்து தியா மீது வைத்தபடி கேட்டார் யமுனா…
ஹான் நல்லா இருக்கு நல்லா இருக்கு சீக்கிரம் மம்மி எவ்ளோ நேரம் தான் ஷாப்பிங் பண்ணுவீங்க என சலித்த தியாவை முறைத்து பார்த்தார் யமுனா..
பின்னே முறைக்காமல் என்ன செய்வார் மால் போகலாம் ம்யி ஷாப்பிங் போகலாம் மம்மி ப்ளீஸ் மம்மி ப்ளீஸ் மம்மி என நச்சரிக்க அதை பொறுக்க முடியாமல் அழைத்து வந்தார்..
கிளம்பி இங்கு வரும் வரை குஷியாக தான் இருந்தாள்… ஆனால் இங்கு வந்ததிலிருந்து என்ன ஆனதோ தெரியவில்லை.. மம்மி சீக்கிரம் சீக்கிரம், இல்லைன்னா நீங்க பொறுமையா ஷாப்பிங் பண்ணிட்டு வாங்க நான் பர்ஸ்ட் கிளம்புறேன் என்கிறாள்.. அதற்கும் வந்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை.. அவளுக்கு தான் ஆடைகள் பார்த்து கொண்டு இருக்கின்றார்…
யமுனா முறைக்கவும் இல்ல முக்கியமான அசைமெண்ட் சப்மிட் பண்ணா நாளைக்கு தான் லாஸ்ட் டேட்.. ஹரிணியும் நானும் சேர்ந்து ரெடி பண்ணலாம் ப்ளான்ல இருந்தோம்.. நான் மற்நதே போயிட்டேன்.. அவ இப்ப தான் மெசேஜ் பண்ணுனா அதான்
பொய் அப்பட்டமான பொய் சொன்னாள்.. தேவாவிற்காக சொன்னாள்..
பின்னே வேறு என்ன செய்ய அன்று மருத்துவமனையில் தேவாவை பார்த்தது அதன் பின்பு மாத கணக்கு ஆகின்றது இன்னும் தியா கண்ணில் அவன் சிக்கவில்லை…
அன்று தேவா காரில் வேகமாக சென்று விட, ச்சே என தரையில் காலத்தை உதறியவள் இந்த ஹாஸ்பிடல் தான் வேலை பார்க்குறாங்க போல என நினைத்து கொண்டு,
உள்ளே சென்று ரிஷப்சனில் தேவாவை பற்றி விசாரிக்க, அவர் இந்த ஹ்ஸ்பிடலில் வொர்க் பண்ணலை மேம்.. சர்ஜரிக்கா மட்டும் வந்து இருப்பாங்க போல
டாக்டர் தேவேந்திரன் கார்டியாலாஜி அதை தவிர வேற எந்த தகவலும் அவரை பற்றி இல்லை மேம் என்றார் ரிஷப்சனிலிருந்த பெண்…
சரியான மர்ம தேசமா இருக்கும் போல தேவாவை மனதிற்குள் திட்டி கொண்டாள்,
அதன் பின்பு இதோ மூன்று மாதமாகிறது அவனை பார்க்க முடியவில்லை…
கல்லூரி செல்லும் போது வெளியே எங்காவது போகும் போது சாலையில் எங்காவது தேவா தென்படுகின்றானா என கண்களை அலைய பாய் விட்டு அவனை தேடியவாறே தான் இந்த மூன்று மாதமும் இருந்தாள்…
உனக்கு பைத்தியமாடி பிடிச்சு இருக்கு ஏன் இப்புடி பண்ற ஹரிணி திட்ட,
ஹய்யோ ஹனிமா உனக்கு புரியலை அதை நான் எப்புடி சொல்ல இப்ப உன் கையில் ஒரு மர்ம நாவல் கிடைக்குது… அதோட முதலும் தெரியாம முடிவும் தெரியாம இடையில் படிச்சா எப்புடி இருக்கும்.. என்ன நடந்தது ஏன் எப்புடின்னு உன் மண்டைக்குள்ள அந்த நாவல்லே ஓடிட்டு இருக்கும்ல என்க்கும் இப்ப அப்புடி தான் இருக்கு என்று சொல்ல,
இது எல்லாம் திருந்தாத கேஸ் என தலையில் அடித்து கொள்வாள் ஹரிணி…
அப்புடி மூன்று மாதங்களாக கண்ணில் சிக்காமல் போக்கு காட்டி கொண்டு இருந்தவன், இன்று மால்க்கு காரில் வரும் போது அம்மா பக்கத்தில் இருக்கும் போது அல்லவா காட்சி தருகின்றான்..
மால் ரோட்டிற்கு பக்கத்து ரோட்டில் அமைந்து இருக்கும் ஆண்களுக்கான ஆடை ஷோ ரூம் ஒன்றின் உள்ளே தேவா செல்ல காரில் வேடிக்கை பார்த்து கொண்டே வந்தவள் பார்த்து விட்டாள்…
அய்யோ போறாரே போறாரே கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம் போயிடுச்சு என மனதிற்குள் அலற மட்டும் தான் முடிந்தது… யமுனா முன்பு வேற என்ன செய்ய முடியும்...
இருந்தும் பக்கத்து ரோடு தானே போய் பார் இன்று விட்டால் இன்னும் எத்தனை மாதம் கழித்து தரிசனம் கிடைக்குமோ என்ற ஆசை உந்த அது தான் யமுனாவை இப்புடி நச்சரிக்கின்றாள்…
அசைன்மெண்ட் என்றது வேலை செய்ய சரி வா போகலாம் என யமுனாவும் கிளம்ப
நீங்க பர்ச்சேஸ் பண்ணுங்க நான் ஆட்டோவில் போய்க்கிறேன்..
நீ இல்லாம நான் மட்டும் என்ன பார்க்கிறது என சலித்த யமுனா உடன் வர,
நீங்க கார்ல் வீட்டுக்கு போய்டுங்க மம்மி… நான் ஆட்டோவில் போய்க்கிறேன்.. வரும் போது ஹரிணி அப்பா ட்ராப் பண்ணிட்டுவாங்க… நீங்க ஹரிணூ வீட்ஞுக்கு என்னை விட வந்துட்டு அப்புறம் நம்ம வீட்டுக்கு போனா லேட் ஆகிடும்… வீட்டுத் வேற உங்களுக்கு நிறைய வேலை இருக்கு சொன்னீங்களே என்றாள் அவசரமாக
நான் உன்னை ட்ராப் பண்றேன் என யமுனா சொல்லி விடுவாரோ என பயந்து,
சரி என யமுனா தலை அசைத்தார்…
உஃப் என பெருமூச்சு விட்டு வெரி குட் தியா என தனக்கு தானே சொல்லி கொண்டு
ஹரிணிக்கு அவசர மெசேஜ் இப்போது யமுனாவிடம் சொன்ன பொய்களை மெயின்டெய்ன் பண்ணனுமே அதற்காக டைப் செய்தபடி நான்கடி தான் எடுத்து வைத்து இருப்பாள்..
மம்மி என சத்தமாக அழைக்க முன் சொன்னது கொண்டு இருந்த யமுனா திரும்பி பார்த்தார்…
ஆ…. அது வந்து இப்ப தான் ஹரிணி மெசேஜ் பண்ணுனா நிறைய பேர் இன்னும் அசைமெண்ட் முடிக்கலயாம்.. அதனால் டூ டேஸ் எக்ஸ்டென்ட் பண்ணி இருக்காங்களாம்..
அதனால் நாளைக்கு அசைமெண்ட் வொர்க் பார்த்துக்கலாம் சொல்றா.. அவளும் பக்கத்து வீட்டு பாட்டியோஞ பர்த் டே பங்ஷனுக்கு போறாளாம்….
நாமாளும் ஷாப்பிங் முடிச்சிட்டு போகலாமே,
தியா யமுனா கோவமாக பல்லை கடிக்க
மம்மி நீங்க இந்த ஷாப்பில் பாருங்க.. தெர்ட் ப்ளோர்ல நியூ ஷாப் ஓபன் பண்ணி இருக்காங்களாம் அங்க கேஷீவல் வெர் நல்லா இருக்காம்.. நான் போய் பார்க்கிறேன் என்றவள் தியா தியா என யமுனா அழைக்க அழைக்க நிற்கவே இல்லை ஓடி விட்டாள்..
கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது என்பது போல் யாரை பார்க்க வேண்டி இத்தனை கலாட்டா சொய்தாளோ அவனே மாலுக்குள்..
இந்த முறை தவற விட அவள் தயாரில்லை.. அதான் ஓடி விட்டாள்.. மூன்றாம் தளத்தில் நிற்கும் அவனை நோக்கி,
அங்கு…
விடாமல் துரத்துராளே 7
ஆரோக்கியம் மருத்துவமனை நான்கு மணி நேரத்திற்கு முன்பு….
கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள 20 அடுக்குமாடிக் கொண்ட மிகப்பெரிய பிரபலமான மருத்துவமனை தான் ஆரோக்கியம் மருத்துவமனை… கோவை மக்களின் முதல் தேர்வு இந்த மருத்துவமனை என்று தான் சொல்ல வேண்டும்.. ஏன் தமிழக அளவில் இந்திய அளவில் கூட மருத்துவமனை பெயர் சொன்னால் தெரியுமளவு பிரபலமான மருத்துவமனை இது..
அந்த அளவு தரமானதாக இருக்கும் இங்கு வைத்தியம்… அனைத்து வியாதிகளுக்குமான ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் இங்கு இருக்கின்றனர்…
இந்த மருத்துவமனையின் இன்னோரு சிறப்பு பணக்காரர்கள் ஏழைகள் என்ற பாகுபாடு இங்கு பார்க்க மாட்டார்கள்… அனைவருக்கும் ஒரே மாதிரியாக மருத்துவம் பார்க்கப்படும்…. இன்னும் சொல்லப்போனால் ஏழை எளிய மக்களுக்கு அவர்களிடம் ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் எவ்வளவு பெரிய வியாதி என்றாலும் அதற்கான அறுவை சிகிச்சைகளும் இலவசமாக செய்யப்படும்…
அது இந்த மருத்துவமனை சிறியதாக ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது..
ஆரோக்கியம் மருத்துவமனை தொடங்கப்பட்டதன் முதன்மை நோக்கமே எந்தவித ஏற்ற தாழ்வும் இல்லாது அனைவருக்கும் உரிய மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பது தான்..
அதனுடைய தற்போதைய உரிமையாளர் மகேஸ்வரன்.. அவரின் தாத்தா சிறிய அளவில் கட்ட அதை அவர் அப்பா ஓரளவுக்கு கொண்டு வந்தார் என்றால் மகேஸ்வரன் தன் காலத்தில் இந்திய அளவில் பேசப்படும் மருத்துவமனையாக மாற்றி இருந்தார்..
அதிகாலை வேளை டாக்டர் மகேஸ்வரன் மருத்துவமனையின் நீண்ட அந்த வராண்டாவில் சற்று பதட்டமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தார்… அவரின் மகன் டாக்டர் கார்த்திக்கோ( தேவா தங்கை இந்துமதி கணவன்) கோவமாக அங்கு நின்று இருந்த திவேஷை முறைத்து கொண்டு நின்றான்…
அந்த வராண்டாவில் மேலும் வெண்ணிலாவும் அங்கு பணிபுரியும் இரு டாக்டர்களும் பதட்டத்துடனும் குழப்பத்துடனும் நின்று இருந்தனர்…
அனைவரும் அமைதியாக இருக்க அங்கு இருந்த மூத்த மருத்துவர் நாராயணன் “சார் இப்படியே யோச்சிட்டே இருந்தா என்ன பண்றது மினிஸ்டருக்கு உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு… இமீடியட்டா ஓபன் ஹார்ட் சர்ஜரி இன்னைக்கு பண்ணியே ஆகனும் டீலே பண்ணா அது அவருக்கு ரொம்ப ஆபத்தா முடியும்… அது மட்டுமில்லை நம்ம ஹாஸ்பிடல் பேரும் கெட்டு போயிரும் சார்” என்றார்…
“நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா” என்றான் திவேஷ் மெதுவான குரலில்,
“யூ ஜஸ்ட் ஷ்ட்டப்ப் திவேஷ் இப்ப உருவாகி இருக்கிற இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு காரணமே உன்னோட கேர் லெஸ் தான்… அதனால் நீ அமைதியா இரு” என்று கடுப்புடன் கூறினான் கார்த்திக்…
தாரிகா தந்தை ஒரு ஆளும் கட்சியின் மினிஸ்டர் பெயர் சேரன்… அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட அவரை மகேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதித்தனர்… பரிசோதித்தில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரிய வர உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்னும் நிலை…
ஆரோக்கியம் மருத்துவமனையின் முதன்மை இருதய நோய் நிபுணர் (cardiologist) விடுமுறையில் குடும்பமாக தீவு ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை..
திவேஷும் ஒரு இருதய நோய் நிபுணர் தான்… ஆனால் அவன் இதுவரை அறுவை சிகிச்சை செய்தது இல்லை… அதுபோக அவன் மேல் மகேஸ்வரனுக்கே நம்பிக்கையும் இல்லை… இருந்தாலும் அவனை இந்த மருத்துவமனையில் வேலைக்கு வைத்து இருக்கிறார்… அதற்கு ஒரு காரணம் இருக்கிறது…
இப்புடிப்பட்ட சூழ்நிலை ஒன்றும் புதிது அல்ல.. சில நேரங்களில் ஏற்படும்.. அப்போது வேறு மருத்துவமனையிலிருந்து மருத்துவரை அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்வார்கள்.. ஆனால் இங்கோ அதிலும் ஒரு சிக்கலாகி விட்டது..
அறுவை சிகிச்சைக்கா இந்தியாவிலேயே சிறந்த புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை வட இந்தியாவில் இருந்து வரவழைக்க சொல்லி அந்த பொறுப்பை திவேஷிடம் ஒப்படைத்து இருந்தார் மகேஸ்வரன்… அந்த வேலையையும் திவேஷ் சொதப்பி வைத்து விட்டான்…
அந்த மருத்துவரிடம் மினிஸ்ட்ரின் உடல்நிலை குறித்து விரிவாக கூறி இன்றைய நாளுக்கு அப்பாயிண்மெண்ட் வாங்க சொன்னார் மகேஸ்வரன்… அவனும் அவர் ஒத்து கொண்டார் என்று கூற மகேஸ்வரன் மினிஸ்டரின் குடும்பத்தினரிடமும் பத்திரிகைகளிலும் இன்று அறுவை சிகிச்சை என்று சொல்லி அதற்கான வேலையில் இறங்கினார்…
அறுவை சிகிச்சை இன்னும் ஒருமணி நேரத்தில் துவங்க வேண்டும் ஆனால் மருத்துவர் வரவில்லை… அவருக்கு கால் செய்து பார்த்தால் அவர் வேறு ஒரு அறுவை சிகிச்சையில் இருப்பதாகவும் திவேஷிடம் நாளைக்கு தான் அப்பாயிண்மெண்ட் கொடுத்தேன் என்று கூறினார்… அது தான் அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டு இருக்கின்றனர்…
“இப்ப என்ன பண்றது டாக்டர் நாராயணன் இந்த பிரச்சினையை தீர்க்கிறது எப்படி? உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க” என்று கேட்டார் மகேஸ்வரன்…
“சார் இப்ப நம்மளால உடனே வேற சர்ஜனை அதர் ஸ்டேட்டில் இருந்து வர வைக்க முடியாது” நாராயணன் சொல்ல,
“புரியுது டாக்டர், ஆனா வேற ஏதோ ஒரு யோசனை இருக்குன்னு சொன்னீங்களே அதை சொல்லுங்க மகேஸ்வரன் கேட்க,
“சார் அது வந்து உங்களுக்கு பிடிக்குமா தெரியலை... ஆனா மினிஸ்டர் ஹெல்த் ரொம்ப மோசமான இருக்கு, அதனால் இப்ப நமக்கு வேற வழி இல்லை சார் நாமா டாக்டர் தேவேந்திரன் கிட்ட தான் ஹெல்ப் கேட்டு ஆகனும்“ என்றார்…
“தேவா வேண்டாம் டாக்டர் நாராயணன்” என்றான் கார்த்திக் அவசரமாக
“கார்த்திக் சார் வீ கேவ் நோ அதர் ஆப்ஷன்,
ஆளுங் கட்சியோட மினிஸ்டர் அவர்.. அடுத்த எலெக்சன்ல சி.எம் வேட்பாளராக நிற்க போகிறவர்… அவருக்கு ஏதாவது ஒன்னுனா அவரோட தொண்டர்கள் ஹாஸ்பிடலை சும்மா விட மாட்டாங்க” என்ற நாராயணன்
மேலும் “சார் தேவேந்திரன் ஆல்ரெடி நம்ம ஹாஸ்பிடல் வொர்க் பண்ணி இருக்கிறார்… அவரை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரியம்னு ஒன்னும் இல்லை… ஐந்து வருஷத்துக்கு முன்னாடியே அவர் நம்ம ஹாஸ்பிடல் பண்ண எல்லா ஹார்ட் சர்ஜரியும் சக்ஸஸ் ஒரு பெயிலியர் கூட கிடையாது சார்… இப்ப கூட இந்தியாவின் சிறந்த ஹார்ட் சர்ஜரி ஸ்பெஷலிட்டில் டாக்டர் தேவாவும் ஒருத்தர் … அவர் நம்ம ஹாஸ்பிடல் விட்டு போன அப்புறம் நடந்த எந்த ஆப்ரேஷனும் சக்ஸஸ் ஆகல சார்,
டாக்டர் தேவாவோட பாஸ்ட் அண்ட் இப்ப இருக்க பர்சனல் லைஃப் பத்தி நாமா யோசிச்சா லாஸ் நமக்கு தான் சார்” என்றார்…
மகேஸ்வரன் யோசிக்க ஆரம்பித்தார்..
ஓகே டாக்டர் நாராயணன் ஆனா இப்ப நாமா எப்படி ஹெல்ப் கேட்டு டாக்டர் தேவா வா காண்டாக்ட் பண்றது… எனக்கு தெரிஞ்சு அவரை நாமா நேரடியா காண்டாக்ட் பண்ண முடியாது…அப்படியே கேட்டாலும் அவர் ஒத்துக்குவாரா? என்றார் அங்கு நின்று இருந்த மற்றுமொரு மருத்துவர் லட்சுமணன்…
தேவாவோட ஃப்ரெண்ட் டாக்டர் சூர்யா கிட்ட பேசலாம் அவர் சொன்னா தேவா கேட்பார்… சூர்யா கிட்ட டாக்டர் வெண்ணிலாவே பேச சொல்லலாம் சார் அவங்க அவரோட சிஸ்டர் தானே என்றார்…
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த மகேஸ்வரன் யோசிக்க ஆரம்பித்தார்…
டாக்டர் நாராயணன் கூறுவது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இருக்கும் ஒரே வழி தேவா தான்… ஆனால் தேவா இதற்கு ஒத்து கொள்வானா, இந்த மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வில் தானே நேர்கோட்டில் பயணித்து கொண்டு இருந்த தேவா வாழ்க்கையை திசை மாற்றியது… அவனுக்கு ஏற்பட்ட அவமானம், அவனை சுற்றி இருப்பவர்கள் அவனை வெறுத்தது இது எல்லாம் இந்த மருத்துவமனையில் நடந்தது தானே அதனால் தேவா ஒத்து கொள்வானா என்று மகேஸ்வரன் பயந்தார்…
இவர்கள் கூறுவது போல் சூர்யாவிடம் அணுகினால் தேவா விஷயத்தில் தான் செய்த தவறால் தேவாவை விட அதிக கோவத்துடன் ஏன் கொலை வெறியுடன் இருப்பது சூர்யா தான்… இப்போது தான் உதவி என்று போய் நின்றால் சூர்யா அதற்கு பதிலாக அன்று நடந்த உண்மைகளை அனைவரிடமும் கூற சொன்னால் என்ன செய்வது, ஒரு உயிரை வைத்து பேரம் பேச மாட்டார்கள் தான் சூர்யாவும் தேவாவும், ஆனாலும் ஒரு வேளை அப்படி சூர்யா சொன்னால் தன்னுடைய கெளரவம் இந்த மருத்துவமனைக்கு இருக்கும் மரியாதை அனைத்துமே ஒரு நொடியில் காற்றில் பறந்து விடும்…
அதனால் சூர்யாவிடம் தான் நேரடியாக சென்று உதவி கேட்க முடியாது… வேறு யாரையாவது தான் தூது அனுப்ப வேண்டும்… யாரை அனுப்புவது என்று யோசித்தார்… வெண்ணிலாவை தூது அனுப்புவது மிக மோசமான ஒரு தேர்வு தான்… அவள் சென்று உதவி கேட்டாலும் சூர்யாவிடம் வேலைக்கு ஆகாது… திவேஷ் மீதும் அவன் கொலை வெறியில் இருக்கிறான்…
அடுத்து தன் மருமகள் தேவாவின் தங்கை இந்துமதியை அனுப்பலாமா என்ற சிந்தனை வந்தது… ஆனால் இந்துமதி தூது போக ஒத்து கொள்ள மாட்டாள்… இந்துமதி கொஞ்சம் கர்வம் பிடித்தவள் என்றும் யாருக்காகவும் தன் நிலையை விட்டு கீழ் இறங்க மாட்டாள்… அதுவும் இப்போது அவளுக்கு தேவா மீது பயங்கர கோவம் வெறுப்பு எல்லாமே உள்ளது…
இறுதியாக முடியிது என மறுத்த தனது மகன் கார்த்திக்கை சமாதானம் படுத்தி சூர்யாவிடம் பேச வைத்தார் மகேஸ்வரன்…
கார்த்திக் சென்று பேசினால் சூர்யா தேவா இருவருமே மறுப்பு கூற மாட்டார்கள்… கார்த்திக் சூர்யா தேவாவின் நண்பன் தான்… ஆனால் அன்று தான் தேவா பற்றி கூறிய பொய்யை நம்பி தேவாவிடம் இருந்து பிரிந்து விட்டான்…
கார்த்திக் சூர்யாவிற்கு அலைப்பேசியில் அழைத்தான்.. கார்த்திக் நம்பரை பார்த்து எதிரி குரூப் எதுக்கு நமக்கு கால் பண்ணுது என புருவம் சுரூக்கி ஒரு வித யோசனையுடன்
அழைப்பை ஏற்று காதில் வைத்தான் சூர்யா..
“ஹலோ நான் கார்த்தி பேசுறேன்” என கார்த்திக் பேச ஆரம்பிக்க,
மறுமுனையில் இருந்த சூர்யாவோ “அச்சோ கார்த்திக் சார் நீங்களா நீங்க எனக்கு போன் பண்ணி இருக்கீங்களா என்னால் நம்பவே முடியலை.. உங்க கைதி மூவியை நான் பல தடவை பார்த்து இருக்கேன்” என வேண்டுமென்றே கார்த்திக்கை கேலி செய்யும் விதமாக பேச,
கடுப்பான கார்த்திகோ “சூர்யா விளையாடத, நான் கார்த்திக் ரொம்ப முக்கியமான விஷயத்துக்காக கால் பண்ணி இருக்கேன்” என எரிச்சல் பட,
“அவ்ளோ எரிச்சலா இருக்குன்னா எதுக்கு எனக்கு கால் பண்ணுற? ஏதோ உங்களுக்கு என்னை வச்சு காரியம் ஆக வேண்டிய இருக்கு… அதுக்கு தானே உங்கப்பன் ஐடியா கொடுக்க நீ கால் பண்ணி இருக்க என முடிப்பதற்குள்
“சூர்யா அப்பாவை மரியாதை இல்லாம பேசாதா நல்லா இருக்காது”…
“எனக்கு நல்லா இருக்கு”..
சூர்யா கார்த்திக் பல்லை கடிக்க
இதோ பார் உங்கப்பனுக்கு இந்த மரியாதையே அதிகம்.. நீ இடையில் மரியாதை கொஞு மாலை கொடுன்னு வந்து இன்னும் எக்ஸ்ட்ரா நாலு திட்டு வாங்கி கொடுக்காத, அதுவும் அசிங்க அசிங்கமா திட்டுவேன்.. என்ன விஷயத்திற்காஇ கால் பண்ணுனீயோ அதை சொல்லு என சூர்யா கேட்கவும்..
கார்த்திக் அங்குள்ள நிலவரத்தை சொல்ல,
ஓ… இதுக்கு தான் எலி நியூடா அங்குட்டும் இங்குட்டும் சுத்துதா என கேலி செய்ய,
கார்த்திக் பல்லை கடித்தான்..
அது சரி நான் ஹார்ட் சர்ஜனும் இல்ல.. தேவாவும் இல்ல அப்புறம் எதுக்கு எனக்கு கால் பண்ணி இருக்க, யார் மூலமாக உதவி தேவையோ அவங்களுக்கு கூப்டுங்க..
சூர்யா இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் ப்ளீஸ்… தேவாகிட்ட நீ..
என்னால முடியாது…. உங்க ஹாஸ்பிடலுக்காவும் உங்கபப்பனுக்காகவும் என்னால் பேச முடியாது… ஆனா நீ சொன்னது போல ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் அப்புடிங்கிறதால் பேசுறேன் என்றவன் கோவமாக அழைப்பை துண்டித்தான்..
எப்புடி பேசுறான் இதுக்கு தான் வேண்டாம் சொன்னேன் எனும் விதமாக மகன் தந்தையை பார்க்க, மகேஸ்வரனோ நம்ம சூழ்நிலை அப்புடி என அவனின் தோள் தட்டி சமாதனம் செய்தார்…
சூர்யா விஷயத்தை சொன்னதும் தேவா இந்த அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக் கொண்டான் ஒரு நிபந்தனையுடன்,
ஆரோக்கியம் மருத்துவமனைக்குள் எந்நிலையிலும் காலடி எடுத்து வைக்க மாட்டேன்… அருகில் இருக்கும் வேறு மருத்துவமனைக்கு மினிஸ்டரை மாற்றினால் வந்து அறுவை சிகிச்சை செய்வேன் என்று கூறினான்…. கார்த்திக்கும் அதற்கு ஒத்து கொண்டான்…
மகேஸ்வரனுக்கு அமைச்சரை வேறு மருத்துவமனை அனுப்புவது விருப்பமில்லை… அது தனது மருத்துவமனைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால், ஆனால் இப்போது வேறு வழியில்லை என்று அமைதியாக இருந்தார்… அடுத்த சில விநாடிகளில் அமைச்சர் அருகில் இருந்த நலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தேவா சென்று அறுவை சிகிச்சையை முடித்து விட்டு வெளியே வந்தான்….
அப்போது தான் அங்கு நின்று இருந்த தியா அவனை பார்த்து,
“பாவா நீங்க டாக்டரா?’
“ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை” என்று அவனை கண்டு விட்ட சந்தோஷ மிகுதியில் இடம் பொருள் ஏவல் எதுவும் பார்க்காமல் கத்தி விட்டாள்….
தாரிகா, அமைச்சர் மனைவி, கட்சி ஆட்கள் அனைவரும் அவளை தான் திரும்பி பார்த்தனர்… அவளோ முகத்தில் தேவாவை பார்த்ததால் அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நின்று கொண்டு இருந்தாள்… அவளுக்கு இப்போது தான் இருப்பது மருத்துவமனை தனது தோழியின் தந்தை அங்கு இருக்கிறார்… அவர்கள் குடும்பம் அழுது கொண்டு இருக்கின்றனர் என்பது எல்லாம் நினைவில் இல்லை… அவளின் நிலை ஒரு சாக்லேட் கேட்கும் குழந்தைக்கு தீடிரென பத்து டெய்ரி மில்க் சாக்லெட் வாங்கி கொடுத்தால் அந்த குழந்தை எவ்வளவு மகிழ்வாக துள்ளி குதிக்கும் அந்த மனநிலையில் இருந்தாள் தியா….
ஹரிணிக்கு தியா மகிழ்வை பார்த்தே இது தான் தேவா என்று தெரிந்து கொண்டாள்… கத்தி கொண்டு இருந்த தியா அருகில் வந்து அவள் கையை அழுத்தி பிடித்து அமைதியா இரு என்று அங்கு நின்று இருந்த தாரிகாவை கண்காட்டினாள் ஹரிணி… அதன் பின்பே சுற்றம் அறிந்து சற்று அமைதியானால் தியா…
இதில் கொடுமை என்னவென்றால் தேவாவிற்கு தியாவை யாரென்றே தெரியவில்லை… யார் இந்த பொண்ணு?எதற்காக தன்னை பார்த்ததும் இவள் கண்களில் இவ்வளவு பிரகாசம் முகத்தில் இவ்வளவு மகிழ்வு எதனால் என்று ஒரு நொடி யோசித்தவன்,
பின்பு ம்பச் என அவள் சம்மந்தப்பட்ட யோசனையை அலட்சியம் செய்து விட்டு, அமைச்சரின் மனைவியிடம் அமைச்சருக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்தும் இனி அவரின் உடல்நிலை குறித்தும் கூறி கொண்டு இருந்தான்…
அதன் பிறகே அவள் அழைத்த பாவா என்பதில் தான் அன்று வீட்டில் பார்த்தா ராகவ் கசின் என்பது புரிந்தது…
தியா அவன் பேசுவதையே இமைக்காமல் பார்த்து கொண்டு நின்று இருந்தாள்… முதன் முதலில் அவனை பார்க்கும் போது அவன் முகத்தில் அவ்வளவு இறுக்கம் கடுகடுப்பு இருந்தது… இன்றோ அது இரண்டுமே இல்லை… சாந்தமாக அவன் முகம் இருந்தது…
அவனை பார்த்த தியாவின் உதடுகளோ சிரித்த வண்ணமாகவே இருந்தது… ஹரிணி தாரிகா அன்னை தியா வை தவறாக எண்ண கூடாது என்று தியா கன்னத்தை அழுத்தி சிரிக்காத மாதிரி வைத்தாலும், மறுபடியும் தியா சிரித்த முகமாகவே நின்று இருந்தாள்… இந்த சூழ்நிலையில் தன்னுடைய முகபாவனை தவறானது என்று தியாவின் மூளைக்கு புரிகிறது… ஆனாலும் தேவாவை பார்த்ததும் தன் உள்ளம் கொண்ட மகிழ்வை அவள் எவ்வளவு அணை போட்டு தடுத்தாலும் மனது கேட்காமல் அணையை உடைத்து வரும் வெள்ளம் போல் அவள் கண்களும் முகமும் அந்த மகிழ்ச்சியை அப்பட்டமாக வெளிபடுத்துகிறது…
தேவா அவர்களிடம் பேசி விட்டு கிளம்பும் போது தாரிகா அன்னை தேவாவின் கைப்பிடித்து ரொம்ப “தாங்க்ஸ் டாக்டர் என் புருஷன் உயிரை காப்பாத்தி கொடுத்துட்டிங்க… நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கனும் குழந்தை குட்டியோடு” என்று கூறினார்… அதை கேட்டு தேவா மகிழ்ந்தானோ என்னவோ தியாவிற்கு மனதிற்குள் சொல்ல முடியாத அளவு அவ்வளவு மகிழ்வு… அவனை புகழ்வது அவளுக்கு பெருமையாக இருந்தது…
தேவாவோ அவர்கள் சொன்னதுக்கு நன்றி எனும் விதமாக உதட்டோரம் சின்ன சிரிப்பை அளித்து விட்டு கிளம்பினான்… இதழ் பிரிக்காமல் உதட்டை லேசாக வளைத்ததுக்கே, என் பாவா சிரிக்கும் போது எவ்ளோ அழகு ப்பா என்று தியா அதையும் ரசித்தாள்…
தேவா தியா வை கடந்து சென்றான்… என்ன இவரு நம்ம கிட்ட பேசாம போறாரு? என்று அவள் முகம் சுருங்கியது.. செல்லும் அவனையே பார்த்து கொண்டு நின்றவள்…
பின்பு “பாவா ஒரு நிமிஷம் நில்லுங்க பாவா” என்றபடி தேவா பின்னே சென்றாள்…
“ஹாய் பாவா எப்படி இருக்கீங்க… நல்லா இருக்கீங்களா, நாமா பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு” என தியா அருகே பேசி கொண்டே வர,
முதலில் யார் என்று தெரியாது புருவம் சுருக்கி பார்த்த தேவாவிற்கு.. அவளின் இந்த பாவா என்ற அழைப்பும் எரிச்சல்ப்படுத்துப் பேச்சும் அவள் யார் என்பதை நியாகப்படுத்தி விட்டது.. இரிட்டேடிங் இடியட் மனதிற்குள் திட்டி கொண்டான்…
“ என்ன பாவா நான் பேசிக்கிட்டே வரேன் நீங்க கண்டுக்காம போறீங்க… இது எல்லாம் நியாயமா கொஞ்சம் நில்லுங்க பாவா” தியா கேட்க,
“ஹூ ஆர் யூ” வேண்டுமென்றே தேவா கேட்க,
“என்னை தெரியலையா பாவா உங்களுக்கு” என கேட்டவளுக்கு உள்ளுக்குள் பயங்கர ஏமாற்றமாக இருந்தது.. இருந்தும் நான் உங்களோட என ஆரம்பிக்கும் முன்னரே,
“நீ யாரா வேணா இரு அந்த விளக்கம் எல்லாம் எனக்கு தேவையில்லை, என்ன பாவா கூப்பிடுற வேலையோ என் பின்ன வர வேலையோ வச்சுக்காதா”, என்று மெதுவாக அவள் புறம் திரும்பி விரல் நீட்டி கோவமாக எச்சரித்து விட்டு தேவா விறு விறுவென நடந்தான்…
அவன் கோவபேச்சை எல்லாம் சட்டை செய்யாது மீண்டும் லொட லொடவென பேசி கொண்டே இருந்தாள்… அவன் நடந்து தான் செல்கிறான்… ஆனால் தியா வால் அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை… அதனால் தேவா அருகில் ஓடி கொண்டே பேசினாள்…
தியாவிற்கு ஓடி கொண்டே பேசுவது மூச்சு வேறு வாங்கியது…
“பாவா மெதுவா நடங்க, இல்லைனா இப்படி ஓரமா நின்னு பேசாலாம் முடியலை ஓடி கிட்டே பேசுறது” என்று தியா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூறினாள்… தேவா எதுவும் பேசாது அமைதியாக நடந்து கொண்டு இருந்தான்…
மருத்துவமனை நிறைய ஆங்காங்கே ஆட்கள் வேற இருந்தனர்.. இவளோடு நின்று கோவமாக பேசினால் மற்றவர்கள் கவனம் இங்கு திரும்பும் என்பதால் அமைதியாக நடந்தான்…
“பாவா உங்க கிட்ட தான் நான் பேசுறேன்… ஏதோ காது கேட்காத மாதிரி போறீங்க… அதுவும் இவ்வளோ வேக வேகமா, ஏதாவது எக்ஸ்பிரஸ் ட்ரைன் பிடிக்க போறீங்களா, உங்க கிட்ட நிறைய கேட்க வேண்டிய கேள்வி இருக்கு… அதற்கு எல்லாம் பதில் தெரியலைனா எனக்கு மண்டை வெடிச்சிரும்… பாவா நில்லுங்க என்று அவன் கைபிடித்து நிறுத்தியவள், இப்ப நீங்க பிசினா பரவாயில்லை, உங்க மொபைல் நம்பர் கொடுத்துட்டு போங்க… நான் உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டு நீங்க ஃப்ரியா இருக்க டைம் வந்து என் கொஸ்டினுக்கு ஆன்சர் தெரிஞ்சிக்கிறேன்” என்று இரண்டு கண்ணையும் சிமிட்டியபடி கூறினாள்…
தேவா பெரு மூச்சை இழுத்து விட்டவன், தனது நெற்றியை தடவினான்…
“என்ன பாவா தலை வலிக்குதா, வாங்களேன் வெளியே காஃபி ஷாப் போய் காபி சாப்பிட்டே பேசலாம் என்றாள்..
உண்மையாகவே தேவாவிற்கு இவளால் தலை வலி வரும் போல தான் இருந்தது.. கோவமாக முகத்தை திருப்பினாலும் திரும்ப திரும்ப சிரித்த முகமாக பேசும் இவளை எப்புடி கையாள்வது என்றே குழப்பமே வந்தது..
இவர்கள் இருவரும் நின்ற இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டு இருந்த ஹரிணியை கை காட்டி இங்கு வருமாறு அழைத்தான் தேவா…
ஹரிணியும் அருகில் வர,
ஹரிணியிடம் “யார் இது உன்னோட ஃப்ரெண்டா” என்று தியாவை காட்டி கேட்டான்….
ஹரிணி ‘ஆம்’ என்று தலை ஆட்டினாள்…
தேவா தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து தனது வால்டை எடுத்து அதில் வைத்து இருந்த ஒரு விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து ஹரிணி கையில் கொடுக்க,
“என்கிட்ட கொடுங்க பாவா உங்க கார்டா இது” என்றபடி தேவா கையில் இருந்து பிடிங்கினாள் தியா…
“இதுல ஒரு சைகார்டிஸ்ட் அட்ரஸ் இருக்கும்மா… உன் பிரெண்டா கூட்டிட்டு போய் காட்டுங்க… அவரு எவ்ளோ முத்துன கேஸா இருந்தாலும் சரி பண்ணிருவார்… அசாலாட்டா விட்றாதீங்க அப்புறம் பாவம் சங்கிலி போட்டு கட்டி வைக்கிற நிலைக்கு வந்துர போகுது” என்று அலட்சியமாக கூறி விட்டு அங்கிருந்து சென்றான்…
“என்னடி சொல்லிட்டு போறாரு புரியலையே” தியா கேட்க
“ஆ… நீ சரியான பைத்தியம் உனக்கு வைத்தியம் பார்க்கனும்னு சொல்றாருடி அந்த ஆளு”,
“ஹனிமா பாவா மரியாதையா பே”சு என்று ஹரிணியிடம் கூறி விட்டு மறுபடியும் அவன் பின்னால் வெளியே ஓடி வர, ஹரிணி தான் தன் தலையில் அடித்து கொண்டாள்…
அதற்குள் தேவா தனது காரை எடுத்து கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றான்…
‘ச்சே இப்புடி மிஸ் பண்ணிட்டன்னே’ என காலால் தரையில் உதைத்தாள் கோவத்தில்,
தொடரும்…..
பாகம் 6
மறுநாள் காலை பாலகிருஷ்ணன் யமுனா வேதாசலம் வீட்டுக்கு வந்து ராகவ் இனியாவை மறுவீட்டு சம்பிரதாயத்திற்கு அழைத்து செல்ல வந்தனர்.. அவர்களுடன் தியா தன் வீட்டுக்கு சென்று விட்டாள்… அங்கு இரண்டு நாள் தங்கிய ராகவ் இனியா இருவரும் அதன் பின்பு தங்கள் இல்லத்திற்கு திரும்பி விட்டனர்…
இரண்டு மாதங்கள் ஓடி விட்டது… தியா எப்போதும் போல் கல்லூரி சென்று வந்து கொண்டு இருந்தாள்… ஆனால் இந்த இரண்டு மாதத்தில் தேவா பற்றி எண்ணம் எழாமல் இல்லை… தேவாவை ஏன் வீட்டில் உள்ளவர்கள் இவ்வாறு வெறுக்கிறார்கள்… என்ன காரணமாக இருக்கும்… அவன் இந்த வீட்டில் தங்குவதில்லை என்றால், வேறு எங்கு இருப்பான்… என்ன செய்து கொண்டு இருப்பான்… ஏன் அவனுக்கு திருமணம் நடக்கவில்லை என்று அவனை பற்றி விடை தெரியா நிறைய கேள்விகள் மனதில் எழுந்தது…
அதற்கு அவளுக்கு விடை தெரிய வேண்டும்… ஆனால் யாரிடம் கேட்பது, அவன் வீட்டில் உள்ள யாரிடமும் கேட்க முடியாது… கேட்டாலும் அவர்கள் யாரும் பதில் சொல்ல போவது கிடையாது… இனியா விடம் கேட்டால் முதலில் தெரியாது என்றவள், பின்பு நீ ஏன் இந்த விஷயத்தூல் இவ்வளவு இன்டரஸ்ட் காட்டுற என சந்தேகமாக கேட்க, சும்மா தான் போடி என சமாளித்து விட்டு அவளிடம் கேட்பதையும் நிறுத்தி இருந்தாள்…
அப்படியே விட்டு விட்டு அடுத்த வேலை பார்க்க முடியவில்லை… அதனால் தேவாவை அடுத்த முறை பார்க்கும் போது அவனிடமே நேரடியாக கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்… ஆனால் அவனை தான் பார்க்க முடியவில்லை... ச்சே என அதில் கொஞ்சம் கடுப்பு தான்…
இன்று தியா பின்னே அமர்ந்து வர அவள் தோழி ஹரிணி ஸ்கூட்டி ஓட்டி கொண்டு இருக்க இருவரும் பேசி கொண்டு வந்தனர்…
“ஏய் ஹனி ஹனி சீக்கிரம் ப்ரேக் போடுடி ப்ரேக் பிடி” என்று கத்தினாள் தியா…
அதில் பயந்த ஹரிணி அவசரமாக ப்ரெக் போட்டு வண்டியை நிறத்தியவள் “என்னடா? ஏன் சத்தம் போட்ட? என்று தியா வை கேட்க,
தியா ஹரிணி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வண்டியை விட்டு வேகமாக இறங்கியவள் சாலையை கடந்து ஓடினாள்… ஹரிணியும் ஏதோ பிரச்சனை என்று எண்ணி அவள் பின்னே ஓட,
சாலையை கடந்து சென்ற தியாவோ மறுபுறம் நிறுத்தப்பட்டு இருந்த ப்ளாக் லேண்ட் ரோவர் காரை சுத்தி சுத்தி வந்து பார்த்தவள் “ச்சே” என்றபடி எரிச்சலுடன் அந்த காரை எட்டி உதைத்து விட்டு திரும்ப, அங்கு இடுப்பில் கை வைத்து தியாவை முறைத்து கொண்டு நின்றாள் ஹரிணி…
அவளை பார்த்து “ஈஈஈஈஈஈ” என்று இளித்து, “சாரி ஹனிமா ஒரு வேளை பாவா கார் இருக்குமோன்னு நினைச்சு பார்க்க வந்தேன்… ஆனா பாரு இது அவரோட காரே இல்லை” என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு சொன்னவளை இன்னும் முறைத்தாள் ஹரிணி…
தேவாவுடைய கார் கருப்பு நிற லேண்ட் ரோவர்… அன்று அவன் வீட்டில் இருந்து செல்லும் போது தியா பார்த்தாள்… அதனால் இந்த இரு மாதங்களில் அந்த மாடல் கார் எங்கு நின்றாலும் தியா இப்படி தான் போய் ஓடி போய் பார்க்கின்றாள்… அதான் ஹரிணி அவளை முறைத்து கொண்டு நிற்கின்றாள்…
“சரி சரி வாடா ஹனி கோவபடாத லேட்டாகுது” என்று அவளின் கைப்பிடித்து ஸ்கூட்டி இருக்கும் பக்கம் இழுத்து சென்றாள் தியா…
ஹரிணி தியாவின் உயிர் தோழி… இந்த இரண்டு மாதங்களில் ஹரிணி காதில் இரத்தம் வராத குறையாக தேவா புராணமே பாடி இருக்கிறாள் தியா… ஹரிணியும் நீ ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாய்… அவருக்கு கல்யாணம் ஆன என்ன? ஆகாமல் இருந்தால் என்ன? அதை பற்றி தெரிந்து கொள்ள நீ ஏன் இவ்வளவு மெனக்கெடற என்று தியாவிடம் கேட்டு விட்டாள்… ஆனால் அதற்கு தியா பதில் அளித்தது இல்லை…
ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை பற்றி அறிய சொல்கிறது… அது ஏன் என்று அவளுக்கே தெரியவில்லையே, அவளுக்கே அதற்கான சரியான காரணம் தெரியாத போது ஹரிணியிடம் என்ன பதில் சொல்வாள்… ஆனாலும் திரும்ப திரும்ப ஹரிணி கேட்க, தியா அதற்கு அவர் என்னோட க்ரஷ் என்று கூறி விட்டாள்…
இப்போது தியா ஸ்கூட்டி ஓட்டி வர பின்னாடி ஹரிணி அமர்ந்து வந்தாள்…
“தியாமா”….
“சொல்லுடா ஹனிமா”…
“நான் ஒன்னு கேட்பேன் நீ உண்மையான பதில் தான் சொல்லனும்”…
“கேளுடா கேளு என் மம்மிக்கிட்ட கூட பொய் சொல்வேன் உன்கிட்ட என்னைக்காவது சொல்லி இருக்கன்னா என்றவளை இதுவே எவ்வளவு பெரிய பொய் என்ற ரீதியில் வண்டியின் மிரர் வழியாக தூ என சைகை செய்த ஹரிணி,
“நீ பண்றதை எல்லாம் பார்க்கும் போது, தேவா சார் உனக்கு வெறும் க்ரஷ் மட்டும் தான்ங்கிற மாதிரி இல்லையே, வண்டி வேற ரூட்ல போற மாறி இருக்கு, பார்த்து டா ஆக்ஸிடென்ட் ஆகிட போகுது”…
அதை கேட்டு சிரித்த தியா “நான் கரெக்ட்டானா ரூட்ல தான் போறேன் ஹனிமா, நீ எதை எதையாவது சொல்லி டைவர்ட் பண்ணாமா இருந்தா அதுவே போதும் நா ரொம்ப ஃஷேப்பா போய் சேருவேன்”…
“என்னடா இது இந்த நாட்டில் ஒரு க்ரஷை பார்க்கனும்னு ஆசை படறதும், அவரை பத்தின டீடைல்ஸ் தெரிஞ்சுக்க நினைக்கிறதும் பெரிய தப்பா, அதற்கு போய் ஏதோ கொலை குத்தம் பண்ணுன மாதிரி இப்படி குறுக்கு விசாரணை பண்ணுறீங்களேடா இது எல்லாம் நியாயமா?”
“இது நியாயாம இல்ல அநியாயமான்னு நாமா அப்புறம் பேசிக்கலாம், நீ ப்ர்ஸ்ட் வண்டியை ஸ்டாப் பண்ணு, நம்ம ஹாஸ்பிடல் தாண்டி போயிட்டு இருக்கோம்” என்று ஹரிணி கூறியதும் தியா வண்டியை அந்த மருத்துவமனை வளாகத்தின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த இருவரும் கீழே இறங்கினர்…
அந்த மருத்துவமனை முன்பு சிலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர்… அவர்களை கடந்து தியா ஹரிணி இருவரும் உள்ளே சென்றனர்…
“ஹனி தாரிகா கிட்ட கேளுடா, அவங்க அப்பாவுக்கு ஆப்ரேஷன் நடக்கிறது எந்த ஃப்ளோர்னு”,
“கேட்டுட்டேன்டா த்ர்ட் ஃப்ளோர்னு சொன்னா வா போலாம்” என்றாள் ஹரிணி…
தாரிகா இவர்களின் வகுப்பு தோழி இன்று அவள் தந்தைக்கு இருதயம் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை நடைபெறுகிறது… தாரிகா தியாவிற்கு போன் செய்து “டாடியை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குடா, ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கு… அம்மா ரொம்ப அழுறாங்கடா” என்று அவள் அழுது கொண்டே சொல்ல,
தியாவும் ஹரிணியும் அவளுக்கு ஆறுதலாக இருக்க இங்கு அவளை காண வந்துள்ளனர்… மூன்றாம் தளம் இவர்கள் இருவரும் வந்தனர்… அந்த தளம் முழுவதும் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த கட்சி ஆட்கள் பத்து பதினைந்து பேர் இருந்தனர்…
தாரிகா தந்தை ஆளும் கட்சியின் அமைச்சர்… ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்வர்க்கு… இதய கோளாறு என்பதால் இன்று அறுவை சிகிச்சை நடைப்பெறுகிறது… அதனால் அவரின் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் தான் அந்த மருத்துவமனை முழுவதும்,
அறுவை சிகிச்சை நடைபெறும் அறையின் முன்பு தாரிகா, அவளின் அன்னை, தம்பி மூவரும் நின்று அழுது கொண்டு இருந்தனர்… கட்சி ஆட்களை கடந்து தியா ஹரிணி இருவரும் தாரிகா அருகில் சென்றனர்…
இவர்களை பார்த்ததும் தாரிகா வந்து அணைத்து கொண்டாள்… டாடிக்கு எதுவும் ஆகாதுடா என அவளுக்கும் அம்மா நீங்களும் ஏன் கவலை படுறீங்க அப்பாவுக்கு ஒன்னும் இல்லை என்று அவள் அம்மாவிடமும் ஆறுதல் கூறி விட்டு அவர்கள் அருகிலே நின்றனர…
சிறிது நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்தது… அந்த அறுவை சிகிச்சை அறையில் இருந்து முதலில் மருத்துவர் வெளியே வந்தனர்… அந்த மருத்துவரை நோக்கி தாரிகா அன்னை, தாரிகா, கட்சி ஆட்கள் ஓடி ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்ததா என்று விசாரித்தனர்…
இவர்கள் அனைவருக்கும் பின்னே ஹரிணி தியா இருவரும் நின்று இருந்தனர்…
டாக்டர் ஆப்ரேஷன் நல்ல படியாக முடிஞ்சுதா, அவர் எப்புடி இருக்கார் தாரிகா அன்னை கெட்டதா டாக்டர் எதையும் சொல்லி விட கூடாது என்ற வேண்டுதலுடன் மருத்துவரிடம் கேட்க,
அந்த மருத்துவரோ தனது முகத்தில் இருந்த மாஸ்கை கழற்றி விட்டு அவர்களிடம் பேச ஆரம்பிக்கும் முன்
பாவா நீங்களா?
நீங்க டாக்டரா? ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை என மருத்துவ உடையில் இருந்த தேவாவை பார்த்து, இரண்டு மாதங்களாக தான் பார்க்க நினைத்த தேவாவை கண்டு விட்ட சந்தோஷ மிகுதியில் சுற்றி இருந்தவர்களை கருத்தில் கொள்ளாமல், இடம், பொருள், ஏவல் சூழ்நிலை எதுவும் புரியாமல் கண்களில் பிரகாசம் பொங்க உற்சாகமாக கத்த,
தாரிகா, அவள் அன்னை, கட்சி ஆட்கள் தேவா உட்பட அனைவரும் அவளை தான் திரும்பி விநோதமாக பார்த்தனர்..
தொடரும்….
பாகம் 5
தியா வீட்டுக்குள் ஓடி வந்தவள் கண்டது… தேவா வீட்டில் அனைவரும் சிரித்து பேசி கொண்டே சாப்பிடுவதை தான், அவளுக்கு அவர்களை பார்க்கும் போது கோவமாக வந்தது… குடும்பத்தில் உள்ள ஒருவனை தனியாக ஒதுக்கி விட்டு இவர்களால் எப்படி சிரித்து மகிழ்வாக இருக்க முடிகிறது என்று தோன்றியது… அங்கு இருக்கவே பிடிக்க வில்லை… தனது அக்காவிற்காக அந்த ஒரு நாளையும் கடினப்பட்டு அந்த வீட்டில் கழித்தாள்…
தனது வீட்டில் இருந்து கோவமாக கிளம்பிய தேவா… தனது கோவத்தை எல்லாம் காரின் மீது காட்டி வேகமாக ஓட்டி கொண்டு வந்தான்…
சிட்டியை விட்டு தாண்டி அதிக ஜன கூட்டம் இல்லாத ஏரியாவில் அமைந்திருந்த அந்த வீட்டின் கேட்டின் முன்பு காரை நிறுத்தியவன் கீழே இறங்கி கேட்டை திறந்து விட்டு, மறுபடியும் காரில் ஏறி காரை ஓட்டி வந்து உள்ளே நிறுத்தி விட்டு கீழே இறங்கினான்…
வீட்டுக்குள் போக கதவை திறக்க பேண்ட் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து கதவருகே செல்ல, கதவு லாக் ஏற்கெனவே திறந்து இருந்தது… அதிர்ச்சி எல்லாம் இல்லை.. யாராக இருக்கும் என்பது அவன் அறிந்ததே, அதனால் கோவமாக உள்ள நுழைந்தான்…
அது ஒரு அழகான சிறிய வீடு… தேவாவுடையது அவன் தங்கி இருக்கும் வீடு… வீட்டுக்கு வெளியே கேட்டில் இருந்து வீட்டு முகப்பு வரை கார் வர கற்கள் பதிக்கப்பட்ட தரை, இருபுறமும் கார்டன் அமைக்கப்பட்டு இருந்தது… வீட்டுக்குள் கீழே பெரிய ஹால் வலது புறம் கிச்சன்… அதை ஒட்டிய டைனிங் ஹால்… இடது புறம் இரண்டு படுக்கை அறை, ஒரு பூஜை அறை அது எப்போதும் பூட்டப்பட்ட இருக்கும்…மேலே மாடியில் இரண்டு படுக்கை அறை அவ்வளவே,
குட்டியாக இருந்தாலும் அழகாக இருக்கும்…அங்கு அவன் ஒருவன் மட்டுமே தங்கி இருக்கிறான்… வேறு யாரும் கிடையாது… வேலைக்கு கூட ஒரு ஆள் கிடையாது… அவன் தனிமையை அது கெடுக்கும் என்பதால் யாரையும் பணிக்கு அமர்த்தவில்லை… அவன் தேவைகளை அவனே கவனித்து கொள்வான்…
வீட்டுக்குள் வந்த தேவா நேராக மாடியேறி ஒரு அறையை திறந்து பார்க்க மெத்தையில் அங்கு ஒரு உருவம் தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி கொண்டு படுத்து இருந்தது… உள்ளே வந்தவன் தனது ஷீ வை கழற்றி விட்டு அந்த உருவத்தை எட்டி உதைத்தான்…
அதில் கீழே விழுந்த உருவமோ “அய்யோ அம்மா என்னை யாரோ பள்ளத்துல தூக்கி போட்டுட்டாங்க” என்று தூக்க கலக்கத்தில் கத்தியபடி கண்ணை திறந்து பார்க்க, அப்போது தான் கீழே விழுந்து கிடந்தது புரிய மெல்ல எழுந்து திரும்பி பார்த்தான்… தேவா அங்கு முறைத்து கொண்டு நிற்பது தெரிந்தது…
“எரும எரும நீ தானா? ஏன் இப்படி கழுதை மாதிரி எட்டி உதைச்ச? என்று தேவாவை திட்டினான் சூர்யா… சூர்யா தேவாவின் நண்பன்..
அவனை முறைத்த தேவா நீ ஏன் இங்க வந்த? என்று கேட்டான்…,
“என்ன கேட்ட தேவா? என்ன கேட்ட? யாரை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்ட? சூர்யாடா உன் சூர்யா, நீ கேட்டா என் உயிரை கூட கொடுப்பேன் இப்படி பட்ட உயிர் நண்பனை பார்த்து ஏன் வந்தேன்னு கேட்கிற” என்று தளபதி பட டயலாக்கை கொஞ்சம் மாற்றி கூறி வராத கண்ணீரை துடைத்து விட்டான்..
“ஏய்… இப்ப எதுக்கு நீ நைட்ல இங்க வந்தேன்னு கேட்டேன்…அதுக்கு பதில் சொல்லாமா படத்தோட டயலாக் பேசி கடுப்பாக்காத, சொல்லுடா ஷோபானா கூட சண்டை போட்டயா?”
“சண்டை வர கூடாதுன்னு தான் இங்க வந்தேன்டா, நேத்து ராகவ் மேரஜ்க்கு வர சொன்னா நான் போகலை, கண்டிப்பா உன் அண்ணி அதான் என் அக்கா மஞ்சு எதையாவது சொல்லி ஏத்தி விட்டுறுப்பா, அதை கேட்டுட்டு வந்து ஷோபா சாமி ஆடுவா அதான் வீட்டுக்கு போக வேண்டாம்னு இங்க வந்தேன்… ஆமா நீ நைட்டு எங்க போயிருந்த ஆளை காணோம்”…
“உன் ஃவொய்ப்க்கும் உனக்கும் சண்டை வரதே என்னால தான் அப்புறம் ஏண்டா இங்க வர, எத்தனை தடவ சொல்றது என் வீட்டுக்கு வராத, என் கூட சேரதன்னு எத்தனை தடவை சொல்றது, உன் புத்தியில் ஏறாதா கோவகமாக தேவா முறைத்து கொண்டு பேச,
“அதே தான் உனக்கும் எத்தனை தடவை சொல்றது உன்னை விட்டு விலக சொல்லி யார் சொன்னாலும், ஏன் நீயே சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்னு”…
“ஷோபா பத்தி உனக்கு தெரியாதா அவளுக்கு சொந்த புத்தி கிடையாதுன்னு… யார் என்ன சொன்னாலும் உடனே நம்பிருவா அதான் அவள் கிட்ட இருக்க பிரச்சனை… நான் அவளை பார்த்துக்கிறேன்டா, அவளுக்காக நான் உன்னை விட மாட்டேன்” என்றான் உறுதியாக,
தேவா வெளியே முறைத்து கொண்டாலும் உள்ளுக்குள் கர்வம் கொள்ள வைத்தது சூர்யா பேச்சு,
இந்த ஐந்து ஆண்டுகளில் தேவா தனது தந்தை உடன்பிறந்தவர்கள் சொந்த பந்தங்கள் அனைவரையும் விலகி இருக்கிறான்… அவர்களும் அவனை முழுதாக வெறுக்கிறார்கள்… அவன் அன்னை மீனாட்சி கூட தேவா மீது அன்பு இருந்தாலும் தனது கணவருக்காக அவனை ஒதுங்கி தான் இருக்கின்றார்…
ஆனால் சூர்யா அவன் மனைவி குடும்பத்தினர் அனைவரும் தேவாவுடன் பழகாதே என்றாலும், ஏன் அவனே விலகி நின்றாலும் சூர்யா விடுவதில்லை… துரியோதனனுக்கு கிடைத்த கர்ணன் போல தப்பே செய்தாலும் இறுதி வரை உனக்கு துணையாக இருப்பேன் என்கிறான்…
“நீ எங்க போன நைட்டு வீட்டுக்கு வரல”சூர்யா கேட்க
“உன்கிட்ட எதுக்கு சொல்லனும்” என தேவா திரும்ப கேட்க
“சொல்லனும் சொல்லி தான் ஆகனும் என்னனா நான் உன் நட்பு”
“நட்பு தான, பொண்டாட்டி இல்லையே,
“ஆச தான் என தேவா கன்னத்தை இடித்தவன், டூ லேட் உனக்கு முன்ன ஷோபா முந்திக் கிட்டா, நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான்” என சூர்யா கண்ணடிக்க,
“செருப்பு” என தேவா அடிக்க வர,
“நீ எவ்ளோ அடிச்சு லவ் டார்ச்சர் பண்ணினாலும் என்னால் ஷோபாவுக்கு துரோகம் பண்ண முடியாது” என்ற சூர்யாவை தேவா விரட்டி பிடித்து மொத்தி எடுத்தான்…
அதில் இவ்வளவு நேரம் தன் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்த இறுக்கம் மறைந்து இருந்தது.. அது தானே நட்பின் நண்பர்களின் மகிமையும் கூட,
“டேய் விட்டுரா என தன் மீது இருந்த தேவாவை தள்ளி விட்ட சூர்யா சரி இப்ப சொல்லு எங்க போன என் கேட்டான்..
“மிஸ்டர் வேதாசலம் வீட்டுக்கு” …
அங்கயா எதுக்கு போன? காரணம் இல்லாமல் செல்ல மாட்டான் என்பதால் சூர்யா கேட்டான்…
“ராகவ் மேரேஜ்க்கு கிஃப்ட்டா ரேஸ்கோர்ஸ் வீட்டை கொடுக்கிறாங்களாமாடா எல்லாரும் சைன் பண்ணிட்டாங்க, நீயும் வந்து சைன் பண்ணி கொடுன்னு சொல்லி அம்மா ஒன் வீக்கா கால் பண்றாங்க டா, நேத்து மட்டும் ஒரு நூறு தடவை கால் பண்ணிட்டாங்க அதான் போனேன்… ஆனா இப்ப ஏண்டா போனேன்னு நினைக்கிற அளவுக்கு பயங்கர டென்ஷன், பார்க்க கூடாது ஆளுங்களை எல்லாம் பார்க்க வேண்டியதா போயிருச்சு” என்றான் கோவமாக,
“யாரு அந்த ஆளு மகேஸை பார்த்துயா?” சரியாக கேட்டான் அவனை தவிர தேவாவை இவ்வளவு கோவம் படுத்து விஷயம் வேறு எதுவும் இருக்காது என்பதால்,
“ஆமாடா” என்றவனுக்கு மகேஸ்வரன் தனக்கு செய்தது எல்லாம் நினைவு வந்து கோவம் தலைக்கு ஏற, அங்கு டேபிள் மேல் தன் கையை ஓங்கி அடித்தான்…
“டேய் லூசு நீ என்னடா பண்ற கை என்னாகிறது என கையை பிடித்து சூர்யாவிற்கு இந்த கேள்வியை கேட்காமல் இருந்திருக்கலாம் என இப்போது தோன்றியது…
அப்போது தேவா போன் இசைத்தது… சூர்யா தேவா இருவரும் மெத்தையின் மேல் இருந்த மொபைலை பார்க்க அதில் அமர் என்ற பேர் தெரிந்தது… தேவா மொபைலை அட்டன் செய்து தனியே சென்று பேசி விட்டு வந்து சூர்யாவிடம் “நீ கிளம்பு எனக்கு வேலை இருக்கு” என்றான்…
“என்ன வேலை போன்ல யாரு அந்த அமர் தானே, ஏதாவது பொண்ணை வர சொல்லி இருக்கியா?” என்று சூர்யா கேட்க,
தேவா ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தான்…
சூர்யாவிற்கு புரிந்தது அவன் வீட்டிற்கே சென்றாலே அங்கு அவர்கள் அவனை நடத்தும் விதத்தில் அவன் மனம் வேதனைப்படும்… பற்றாக்குறையாக அந்த மகேஸை பார்த்து விட்டு வந்து இருக்கிறான்… அதனால் இப்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று அவனுக்கு தெரிந்தது… இருந்தாலும் நண்பன் இப்படி கெட்டு போவது பிடிக்கவில்லை…
ஐந்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு நல்லவனாக இருந்தவன்… எப்படி அழகாக தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எவ்வளவு கனவு கண்டவன், அனைத்திலும் மண் அள்ளி போட்டு, இப்படி மது மாது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு நம்பிய அனைவரும் தள்ளி விட்டனரே என்று நினைத்து வேதனைப்பட்டான் சூர்யா…
“ஏன் தேவா யார் யார் மேலேயோ இருக்க கோவத்தில் உன்னை நீயே கெடுத்துக்கிற, வேண்டாம் தேவா இது எல்லாம்… நீ பழைய தேவாவே இருடா”
சூர்யா கூறியதை கேட்டு பயங்கரமாக சிரித்த தேவா, “என்ன நட்பு சொன்ன பழைய தேவாவா இருக்கவா, ஏண்டா அந்த இளிச்ச வாயன் தேவாவ எல்லாரும் ஏறி மிதிச்சது பத்தாத, போதும்டா சாமி வாங்குன செருப்படி, இருப்பதைந்து வருஷமா உத்தமனா ராமனா வாழ்ந்ததுக்கு கிடைச்ச பரிசு தான் இந்த வாழ்க்கை… தப்பு பண்ணாமா பொறுக்கினு பேர் வாங்குகிறதுக்கு, தப்பு பண்ணிட்டே அந்த பேர் வாங்கிக்கலாம்… இப்ப என்ன என்னை பார்க்குறவன் பொறுக்கி குடிக்காரன் சொல்வாங்களா, சொல்லிட்டு போட்டும் எனக்கு இப்படி வாழ்றதில் எந்த வருத்தமும் கஷ்டமும் இல்லை..
சொல்ல போனா முன்ன இருந்ததை விட இது நல்லதா தான் இருக்கு…என்னை இங்க குடும்ப மானம் கெளரவம் அப்படி இரு இப்படி இருன்னு ரூல் பண்ண யாரும் கிடையாது… நான் ரொம்ப சந்தோஷமா என் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுறேன்… அது உனக்கு பிடிக்கலையா நட்பு.”..
“தேவா நீ சொல்றது எல்லாமே தற்காலிக சந்தோஷம் தான்டா, இது உன் ப்ராப்ளம் க்கு நிரந்தரமான சொல்யூஷன் கிடையாது… நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ அது தான் நல்லது” என்று சூர்யா கூறியவுடன்,
கல்யாணமா என்று மீண்டும் பயங்கரமாக சிரித்த தேவா மெத்தையில் சென்று அமர்ந்து சீக்ரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்து கொண்டு புகையை வெளியிட்டவாறே, “நட்பு பொதுவா கல்யாணம் எதுக்கு பண்றாங்க” என்று திரும்பி சூர்யாவை கேள்வி கேட்க,
அடுத்து அவன் என்ன பதில் கூறுவான் என்று தெரிந்த சூர்யா தனது இருகையையும் கூப்பி தலைக்கு மேல் தூக்கி “அய்யா சாமி ஆளை விடுடா, தெரியாம சொல்லிட்டேன்டா கல்யாணம் பண்ணிக்க சொல்லி, உடனே உன் காபி கதையை தூக்கிட்டு வராத, நான் கிளம்புறேன்” என்று தேவா விடம் கூறி விட்டு வெளியே சென்றான்… செல்பவனை தேவா சின்ன சிரிப்புடன் பார்த்து இருந்தான்…
காரில் சென்று கொண்டு இருந்த சூர்யா தனது நண்பன் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை நினைத்து பார்த்தான்… கண்கள் கலங்கியது… தேவா வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும்… அவன் இப்போது வாழ்வும் இந்த வாழ்க்கை விட்டு வெளி வர வேண்டும்… இது எல்லாம் நடக்க அவனை உயிராய் நேசிக்கும் ஒரு உறவு வர வேண்டும்… அந்த உறவு அவன் வாழ்வில் வந்து அவனுக்கு துணையாக ஆறுதலாக அவன் பட்ட காயத்திற்கு மருந்தாக அமைந்து அவன் வாழ்வை மாற்ற வேண்டும்…
ஆனால் அப்படி எல்லாம் நடக்குமா?, அப்படி ஒரு பெண் வருவாளா? அப்படி வந்தாலும் தேவா அந்த பெண்ணை ஏற்று கொள்வானா? நிச்சயம் அவன் ஏற்று கொள்ள மாட்டான்… அவனின் பிடிவாதம் சூர்யா அறிந்ததே, கடவுளிடம் தேவாவின் வாழ்வை சீராக்கு என்று ஒரு வேண்டுதலை வைத்து கொண்டே காரை ஓட்டி கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தான்…