என் எண்ணமே ஏன் உன்னால

எண்ணம் -27

எண்ணம் – 27 இதயத்துடிப்பு ஓசையில் அதிர்ந்து நின்றான் ரித்திஷ்ப்ரணவ். தியாழினியோ, மெல்ல சுய நினைவுக்கு வந்தவள், பதறி விலகினாள். “சாரி யாழினி! சும்மா விளையாட்டுக்கு பண்ணேன்‌.” என்று ரித்திஷ்ப்ரணவ் கூற.  அவனது சட்டையை பிடித்தவள்,”உங்கள விட எளியவங்கன்னா, உங்களுக்கு அவ்வளவு எளக்காரமா. அவங்க பயம் உங்களுக்கு விளையாட்டா? உங்களுக்கெல்லாம் விளையாடுவதற்கு நான் தான் கிடைச்சேனே?” என்று ஆவேசமாக வினவ. “யாழினி! இப்ப என்னாச்சு? இது ஜஸ்ட் ஃபன்.” “எது ஃபன்? உயிர் பயத்துல நான் அலறுறது […]

எண்ணம் -27 Read More »

எண்ணம் -26

எண்ணம் -26 “யாழினி! யாரோ ரொம்ப புடிச்சவங்களுக்கு மட்டும் தான் செல்லப் பேரு வைப்பாங்களாமே! அப்படியா?” என்று புருவத்தை உயர்த்தி வினவினான் ரித்திஷ்பிரணவ். ரித்திஷ்ப்ரணவ் இருக்குறதை உணராமல் வாய்விட்டு பேசிய தன் மடத்தனத்தை நினைத்து நொந்தவள், அதற்குப் பிறகு தான் அவன் கூறியதையே கவனித்தாள். ‘ஆமாம் நாம எப்பவும் மனதுக்கு நெருக்கமானவர்களுக்குத் தானே செல்ல பெயர் வைப்போம். அப்புறம் எப்படி இவருக்கு பேர் வைத்தோம்.’என்று குழப்பத்துடன் பார்க்க. அவளது குழப்பமான பார்வை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. முயன்று

எண்ணம் -26 Read More »

எண்ணம் -25

எண்ணம்-25 தியாழினி, ரித்திஷ்ப்ரணவின் நினைவில் மோனத்தில் ஆழ்ந்திருக்க. அவளது அமைதியில் பயந்துப் போன மஹதியோ, “தியா! என்னாச்சு டி. மறுபடியும் மயக்கம் வருதா? ஹாஸ்பிடலுக்கு வண்டியைத் திருப்ப சொல்லவா?” என்று வினவ. “ப்ச்! நான் நல்லா தான்டி இருக்கேன். கொஞ்சம் டயர்டா இருக்கேன்னு அமைதியா இருந்தா நீ என்னென்ன வேலை பண்ற. எல்லாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.” என்ற தியாழினிக்கு தெரியவில்லை. அவள் எதிர்ப்பார்த்த ஓய்வு கிடைக்கப்போவதில்லை. ****************** வீட்டிற்குள் நுழைந்ததும், அங்கு டென்ஷனோடு

எண்ணம் -25 Read More »

எண்ணம் -24

எண்ணம் -24 ரித்திஷ்ப்ரணவ் திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான்‌‌. பிறகு தலையை உலுக்கிக் கொண்டு, “ டாட்! நீங்க இங்கே எப்படி?’ என்று தடுமாற. தன் மகனின் தடுமாற்றத்தைக் கண்டுக் கொண்ட கேசவ்வோ,” நான் வந்ததுனால தானே நீ பண்ற காரியம் எல்லாம் தெரியுது. என்று  முறைத்தார். “டாட் ! நீங்க நினைக்கிற போல எதுவும் இல்லை. தியாவோட முடி காத்துல பறந்து வாய் கிட்ட போகுது. அதான், ஜஸ்ட் கரெக்ட் பண்ணேன். அவ்வளவு தான்.”

எண்ணம் -24 Read More »

எண்ணம் -23

எண்ணம் -23 கோபியின் ஆச்சரியமான பார்வையை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல், ஹாஸ்பிடல் வந்ததும் கார் நின்னதோ, இல்லையோ, “ஓபன் த டோர்.” என்று கத்தினான். “இதோ சார்!” என்ற கோபி வேகமாக இறங்கி கதவைத் திறந்தார். ஹாஸ்பிடல் வாட்ச்மேன்,” என்ன? ஏது ?” என்று விசாரித்து விட்டு, ஸ்ட்ரக்சரை எடுத்து வருவதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான் ரித்திஷ்ப்ரணவ். “சார்! சார்!” என்ற கோபியின் குரல் அவன் காதில் விழவே இல்லை. இது போல் பல

எண்ணம் -23 Read More »

எண்ணம் -22

எண்ணம் -22 எண்ணம் -22 வர்ஷிதா கூறியதை கேட்ட ரித்திஷ்ப்ரணவ் முகம் இறுக.  அதற்கு மாறாக தீபாவின் முகம் மலர்ந்தது. “ ஹே! எனக்கு விஷ் பண்ண தான் இங்கே வந்தியா. பின்னே ஏன் தயங்குற மா.உன்னை இங்க பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றவரிடம், மறுத்துக் கூற இயலாமல், லேசாக சிரித்து வைத்தாள் தியாழினி. “ சரிங்க மேடம்… நாங்க கிளம்புறோம்.” என்றாள் தியாழினி. “ முதல்ல மேடம்னு கூப்பிடுறதை நிறுத்து. நான் ஒன்னும் உன்னோட

எண்ணம் -22 Read More »

எண்ணம் -21

எண்ணம் -21 தியாழினி, தன் குடும்ப விஷயத்தில் தலையிடுவதாக எண்ணிய ரித்தீஷ் பிரணவ் அவள் மேல் கோபத்தோடு தான் இருந்தான்‌. அதை எதுவும் அறியாத தியாழினியோ, அலுவலகத்திற்கு நேரத்தோடு வந்துவிடுவாள்.  அப்படி வருபவள் உடனே அவளிடத்துக்கு செல்லாமல் ரிஷப்னிஸ்டோடும்‍‍‍, வாட்ச்மேனோடும் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருப்பாள். ரித்திஷ்ப்ரணவ் வந்ததும் நல்லப்பிள்ளையாக வேலை செய்வாள். வேலையிலும் ஆர்வமிருக்க‍, சிரத்தையாக வேலையைக் கற்றுக் கொண்டாள். யார் எந்த உதவி கேட்டாலும், புன்னகையுடன் செய்துக் கொடுத்து அவர்களுடன் நல்ல நட்பை வளர்த்துக்

எண்ணம் -21 Read More »

எண்ணம் -20

எண்ணம் -20 தியாழினியின் வெளிறிய முகத்தைப் பார்த்த கேசவ்,”என்னாச்சு தியா? உயரம்னா பயமா?” என்று ஆச்சரியமாக வினவ. “ஆமாம்!” என்பது போல் தலையாட்டினாள் தியாழினி. “அப்போ நீ கீழே இரு‌. நான் இன்ஜியரோட மேல போய் பார்த்துட்டு வர்றேன்.” என்று கேசவ் கூற. “இல்லை நானும் வர்றேன் சார்.” “சரி அப்போ வா!” என்ற கேசவ் மேலே ஏறாமல் அவளுக்காக நிற்க. தயக்கத்துடன் மேலே ஏறினாள். முகத்தில் இருந்து வியர்வை ஆறாக ஓடியது.  என்ன நினைத்தாரோ கேசவ்,

எண்ணம் -20 Read More »

எண்ணம் -19

எண்ணம் -19 வெளியே சென்ற தியாழினி சற்று நேரத்தில் முகம் கழுவி உள்ளே வர.  அவளைப் பார்த்து கேசவனுக்கு சற்று இரக்கமாக இருந்தது. ‘எல்லாம் இவனால வந்தது.’ என்று எண்ணியவாறே ரித்திஷ்ப்ரணவை பார்க்க. தியாழினியிடம் மன்னிப்பு கேட்பதற்காக காத்திருந்தவன், அவள் வரவில்லை என்றதும் தலையசைத்து விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டான். ‘ம்! தன் செய்த தப்பை நினைச்சு எங்கேயாவது மன்னிப்பு கேட்குறானா! இவன் திருந்தவே மாட்டான்.’ என்று மனதிற்குள் புலம்பிய கேசவ், “சாரிமா! என் பையன்

எண்ணம் -19 Read More »

எண்ணம் -18

எண்ணம் -18 “எக்ஸ்க்யூஸ் மீ சார்!” என்று கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த கோபி, ரித்தீஷ்ப்ரணவை பார்த்து புன்னகைத்தான். “உங்கக் கிட்ட இதை எதிர்பார்க்கவில்லை கோபி.” “ என்ன சார் சொல்றீங்க?”என்று புரியாமல் கோபி வினவ. “ இன்னைக்கு கன்ஸ்ட்ரக்ஷன் விசிட் பண்ற நாளாச்சே அதை மிஸ் தியாழினி கிட்ட இன்பாஃர்ம் பண்ணலையா நீங்க? இவனுக்கு தான் கால்ல அடிபட்டுருச்சே. இவன் எங்க ரொட்டீன் வொர்க் ஃபாலோ பண்ண போறேன்னு முடிவு பண்ணிட்டீங்களா.” “அப்படியெல்லாம் இல்லை

எண்ணம் -18 Read More »

error: Content is protected !!