Category:
காளையனை இழுக்கும் காந்த மலரே
காளையனை இழுக்கும் காந்தமலரே : 42
written by Thivya Sathurshi
காந்தம் : 42
மகனைப் பார்த்ததும் நீலகண்டன் அவன் அருகில் சென்று அணைத்துக் கொண்டு அழுதார். திடீரென்று இவரின் அழுகை எதற்காக என்று அறியாத காளையினும் அவரை அனைத்து தேற்றினார். “என்ன பிரச்சினை? எதற்காக அழுறீங்க? உங்களுடைய பையன் நல்லா இருக்கான்ல?” என்று கேட்டான்.
காளையன் கேட்க, அதற்கு அவரும் “இதோ காருக்குள்ளதான் காளையா ஹர்ஷா உட்கார்ந்து இருக்கிறான். இப்போது நல்லம். ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க. அதுதான் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி உன்னை பார்த்துட்டு போகலாம்னு” நினைத்து இங்க வந்தோம். என்று சொன்னார்.
அதற்கு காளையன், “எதுக்குங்க சும்மா, இப்போதான் ஆப்பரேஷன் பண்ண உடம்பு. ஹர்ஷாவை எதற்கு இப்போ அங்கேயும் இங்கேயுமாக வீணா அழைச்சிக்கிட்டு இருக்கிறீங்க? நீங்க போனே பண்ணிருக்கலாமே” என்று சொன்னான் காளையன். அதற்கு அவர், “இல்லப்பா நான் உன்ன பார்க்க வந்தது வேறொரு முக்கியமான விஷயமா” என்று சொன்னார்.
அவனும், “என்ன சார்? என்கிட்ட பேச அப்படி என்ன முக்கியமான விசயம் இருக்கு? “என்று கேட்டான். அதற்கு நீலகண்டன், “இருக்குப்பா நிறைய விசயம் இருக்கு. உனக்கு தெரியாத பல உண்மைகள் இருக்கு. “என்று சொன்னார். காளையன் அவர் சொல்வது புரியவில்லை என்றவாறு பார்த்தான். பின் அவரிடம், என்னவென்று கேட்க, ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு காருக்குச் சென்று ரிப்போர்ட் எடுத்து வந்து அவனிடம் குடுத்தார்.
அவன் சிரித்துக் கொண்டு,”சார் எனக்கு படிக்க தெரியாது” என்று சொன்னான். “சரிப்பா அப்போ நான் சொல்றதை நீ நம்புவியா நீனு எனக்கு தெரியலை. ஆனால் நான் சொல்லணும்” என்று சொல்லிக் கொண்டு, அவனின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டார். “காளையா உன்னோட அம்மா அப்பா யாரு?” என்று கேட்டார். அதற்கு அவனும், “என்னோட அப்பா தேவச்சந்திரன் அம்மா” என்றான்.
அதற்கு அவர், “நான் சொல்றதை ஏத்துக்கப்பா என்று, அவர்கள் உன்னை பெத்தவங்க இல்லப்பா. அவங்க உன்னை வளர்த்தவங்க. உன்னைப் பெத்த உண்மையான அம்மா அப்பா யார் தெரியுமா? உன்னோட உண்மையான அப்பா நான், உன்னோட அம்மா குமுதா, அவ இறந்து அஞ்சு வருஷம் ஆச்சுப்பா.” என்று சொன்னார்.
இதை கேட்டதும் காளையன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. திடீரென்று ஒருவர் வந்து, இத்தனை நாள் வாழ்ந்த குடும்பம் உன்னுடைய குடும்பம் இல்லை. என்று சொல்வதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இருந்தது. அதே நேரத்தில் தான்தான் அவருடைய உண்மையான மகன் என்று தெரிந்து, கண்களில் பாசத்தோடும் கண்ணீரோடும் நின்றுகொண்டு தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் இவர் பொய் சொல்வாரா என்று கூட ஒரு நிமிடம் யோசித்தான் காளையன்.
அவனது முக பாவங்களே அவரிடம் சொன்னது, அவனது நிலமை என்னவென்று. “காளையா நீ சின்ன வயசா இருக்கும்போது திருச்செந்தூர் கோயிலுக்கு போயிருந்தோம். அங்கே தான் உன்னை தொலைச்சிட்டோம். உன்னைத் தேடாத இடம் இல்லப்பா. கேட்காத ஆட்கள் இல்லை. உன்னை நினைக்காத நாளில்லை. எங்களிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும், நாங்க இந்த சமூகத்துல உயர்ந்து இருந்தாலும், நீ இல்லை என்கிற குறை எங்ககிட்ட இருந்துகிட்டே இருந்துச்சு. இப்போதான் எனக்கு அந்த குறையே இல்லை.
என்னோட மூத்த மகன் நீ, இங்க உயிரோடு இருக்க. இப்போ என்கிட்ட ரொம்ப பக்கத்தில கைஎட்டும் தூரத்தில இருக்க. இதை நினைக்க நினைக்க மனசுக்குள்ள அத்தனை சந்தோஷமா இருக்கு” என்று சொன்னார். அப்போது காரில் இருந்து இறங்கி அவர்களிடம் வந்த ஹர்ஷா,” அண்ணா உன்னை நான் சின்ன வயசு போட்டோல மட்டும்தான் பார்த்திருக்கிறன். ஏன்னு தெரியலை எனக்கு அம்மா உன்னை பத்தி சொல்லச் சொல்ல உன் மேல கொஞ்சமும் கோபம் வரலை.
எனக்கு உன் கூட இருக்கணும். உன் கூட கை கோர்த்துக்கிட்டு போகணும். டிரஸ்ஸ ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கணும். இந்த உலகத்தில நம்மைப் போன்ற அண்ணன் தம்பி இருக்கக் கூடாதுனு பல பல கனவுகளை வச்சிருந்தேன். எனக்கு உன்ன பார்க்காமலே ரொம்ப புடிச்சிருந்திச்சு அண்ணா. உன்னை எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு முயற்சி பண்ணிட்டே இருந்தேன்.
நீதான் என்னோட உயிரை காப்பாத்தியிருக்க அண்ணா. வந்துட்டேன் நான். என் கூட வா அண்ணா, இங்க இருந்து போயிடலாம் அண்ணா” என்று சொன்னான். அவனது பாசம் காளையனுக்கு புரிந்தது. பாசத்தில் உணர்ச்சிவசப்பட்டு அவன் பேசுகின்றான் என்று நினைத்துக் கொண்டே,” ஹர்ஷா இங்க பாரு நீ திடீர்னு வந்து என்னை அண்ணன்னு சொல்ற. நீ எனக்கு தம்பி மாதிரி தான். மாதிரி என்ன மாதிரி நீ என்னோட தம்பிதான் சரியா? அதுல எந்த மாற்றமும் இல்லை.
சார் நீங்களும் பார்க்க என் அப்பா மாதிரி தான் இருக்கிறீங்க அதனால உங்களை அப்பானு சொல்றது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் இத்தனை நாள் என்ன அவங்களோட சொந்த பிள்ளையா நினைச்சு என்னை வளர்த்தாங்க. அவங்களை விட்டுட்டு என்னால எப்பவுமே வர முடியாது. மன்னிச்சுக்கோங்க அப்பா.
நான் உங்களோட பையன் என்று நீங்க சொல்றீங்க. அது உண்மையாவே இருக்கட்டும். உங்களுடைய நம்பிக்கை உண்மையாக இருக்கட்டும். ஆனால் இந்த ஊரை விட்டு இந்த மக்களை விட்டு இந்த இயற்கை காற்று, நான் வாழ்ற இந்த இடத்தை விட்டு எப்பவுமே வேற எங்கேயும் வரவே மாட்டேன்” என்று சொன்னேன்.
இதைக் கேட்ட நீலகண்டனுக்கு கவலையாக இருந்தாலும், மகன் சொல்வதும் சரிதானே இத்தனை நாள் வாழ்ந்த இடத்தை விட்டு இப்போது வந்தவர்கள் நான்தான் உன்னுடைய அப்பா உன்னுடைய தம்பி என்று சொன்னால், அவனால் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அவனது நிலைமை அவருக்குப் புரிந்தது.
அவர் சிரித்துக் கொண்டே, “பரவாயில்லப்பா எப்படியோ நீ என்னோட பிள்ளை. நீ சாகல உயிரோட நல்லா இருக்கிறான்னு தெரிஞ்சது. ரொம்ப சந்தோசம். எனக்கு அதுவே போதும். ஆனால் ஒண்ணு காளையா, இந்த அப்பா, உன் தம்பி எப்பவும் உனக்காக இருக்கிறோம். உனக்கு என்ன பிரச்சினைனு சொன்னாலும் நீ உடனே என்கிட்ட சொல்லணும். சரியா நாங்க எங்க இருந்து இப்ப போகலாம். ஆனால் எங்களோட பார்வை உன்னை சுத்தி தான் இருக்கு.
உனக்கு எப்போ எங்களை பார்க்க வரணும்னு தோணுதோ, அப்போ ஒரு போன் பண்ணு உடனே வந்து கூட்டிட்டு போயிருவேன். என்ன மகனை கைகிட்ட பார்த்துட்டு என்கூட கூட்டிட்டு போக முடியலையே எனக்கு என்ற கவலையோட நான் போறேன்” என்று சொன்னார்.
அதைக் கேட்ட காளையன்” அப்பா என்று அவரை அழைத்துக்கொண்டு அப்பா என்னை மன்னிச்சிடுங்க அப்பா. நீங்க என்னோட அப்பா. என்னால உணர முடியாத பாசத்தை நீங்க காட்டுனீங்க. ஆனால் கண்ணுக்கு முன்னுக்கு இத்தனை வருஷமா என்னை பாதுகாத்து அவங்களுடைய மொத்த அன்பையும் கொட்டிக் கொடுக்கிற குடும்பத்தை விட்டு என்னால வர முடியலை. ஒருவேளை இங்க இருந்து நான் வரணும்னு இருந்துச்சுன்னு, நீங்க சொன்னா மாதிரி கண்டிப்பா உங்க கிட்ட தான் வருவேன்” என்று சொன்னான்.
அதற்கு நீலகண்டன்,” உன்னை எப்படி என்கிட்ட விதி அடையாளம் காட்டிச்சோ அதே மாதிரி அதே விதியே உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும் காளையா. பத்திரமா இரு எதனாலும் எனக்கு போன் பண்ணு. நான் அடிக்கடி உன்கூட போன் பண்ணி பேசலாம் தானே “என்று கேட்டார். அருகில் இருந்த ஹர்ஷாவும் நான் போன் பண்ணலாமா என்று காளையனிடம் கேட்க, காளையன் சிரித்துக்கொண்டே “அண்ணா கூட பேசுறதுக்கு தம்பி அனுமதி கேட்கணுமா என்ன? உனக்கு எப்போ என்கூட பேசணும்னு தோணுதோ அப்போ எல்லாம் எனக்கு நீ போன் பண்ணலாம்” என்றான். அணைத்துக் கொண்டு பாசமழை பொழிந்தனர். பின்னர் காளையன் அவர்கள் இருவரையும் கண்ணீருடன் வழி அனுப்பி வைத்துவிட்டு அங்கேயே மடிந்து உட்கார்ந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 41
written by Thivya Sathurshi
காந்தம் : 41
திடீரென்று வந்த ஒருவன் காளையனை அண்ணா என்று கட்டிப்பிடிப்பதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளியனும் தன்னை அணைத்துக் கொண்டவனை அணைத்து கண்கள் கலங்கினான். பின்னர் எல்லோரையும் பார்த்து, “இது என்னோட தம்பி ஹர்ஷவர்த்தனன்.” என்று சொல்லி அறிமுகப்படுத்தினான். அவர்களை இங்கே அழைத்து வந்த பெரியவரை காட்டி, “இதுதான் என்னோட அப்பா நீலகண்டன்” என்று சொல்லி அவரையும் அறிமுகப்படுத்தினான்.
இதை கேட்டவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இருக்காதா பின்ன, ஊரில் தேவசந்திரன், நேசமதியே காளையனின் தாய் தந்தை என்று அனைவரும் அறிவார்கள். அப்படி இருக்கும்போது இப்பொழுது இங்கு ஊட்டியில் புதிதாய் ஒரு தந்தையையும் தம்பியையும் காளையன் அறிமுகப்படுத்தும் போது இவர்கள் ஆச்சரியப்படுவதில் தவறில்லையே.
துர்க்கா, “என்ன காளையா சொல்ற? இவர் உன்னோட அப்பா, இவங்க உன்னோட தம்பின்னு சொன்னா, அப்போ ஊர்ல இருக்கிறவங்க யாரு?” என்று கேட்டார். அதற்கு காளையன், “அத்தை உங்களுக்கு நான் சொன்னால் எதுவும் புரியாது. அப்பாவே உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லுவாரு” என்று சொன்னான். நீலகண்டனும் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு,” நான் சொல்றேன் எல்லாரும் கேளுங்க” என்று சொன்னார்.
“என்னோட மனைவி குமுதாவும் நானும் என்னோட மூத்த பையன் ஒரு வயசாக இருக்கும்போது வேண்டுதல் செய்வதற்காக திருச்செந்தூருக்கு வந்திருந்தோம். அப்போது எங்களது மகனை நாங்கள் தொலைத்து விட்டோம். அவனைத் தேடாத இடமில்லை. கேட்காதவர்கள் இல்லை. எல்லோரிடமும் அவனைத் தேடித் தேடி நாங்கள் உடைந்து போய் விட்டோம். நாள் தோறும் அவனை நினைத்து, எனது மனைவி வருந்தாத நாள் இல்லை. கொஞ்சம் காலம் போனதும், எங்களுக்கு அடுத்த மகன் ஹர்ஷவர்த்தனன் பிறந்தான்.
ஹர்ஷவர்த்தனன் ஒருமுறை சென்னைக்கு வரும்போது அவனுக்கு மிகப்பெரிய ஒரு ஆக்சிடென்ட் நடந்தது. அந்த ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் இருந்த காளையன் தான் அவனை அழைத்து ஹாஸ்பிடலில் சேர்த்தான். அதுமட்டுமில்லம்மா நான் ஊட்டியில் இருந்து அங்க ஹாஸ்பிடல் வர வரைக்கும் அவனே கூட இருந்து எல்லாத்தையும் பார்த்துகிட்டான்.
ஹர்ஷாவுக்கு நிறைய இரத்தம் போயிருந்தது. அதனால் அவனுக்கு இரத்தம் தேவைப்பட்டது. என்னோட இரத்தமும் அவனுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆபரேஷன் உடனடியாக செய்ய வேண்டும் என்ற நிலை வேறு. நான் கலங்கிக் கொண்டு நின்ற வேளையில்தான் காளையன் என்னிடம் வந்து, “நான் முடிந்தால் இவருக்கு இரத்தம் கொடுக்கலாமா?” என்று சொல்லிக் கேட்டான். அதற்கு நானும், “நீ டாக்டர்கிட்ட கேட்டு பாருப்பா” என்று சொன்னேன்.
காளையனின் பின்னாடி டாக்டரை சந்தித்தேன். அவரிடம் தனது இரத்தத்தை கொடுத்து பரிசோதனை செய்தான். காளையனுடைய இரத்தம் ஹர்ஷவர்த்தனுக்கு நன்றாக பொருந்தியது. எனக்கு ஏனோ தெரியவில்லை, காளையனை பார்த்ததிலிருந்து அவன் மீது ஒரு தனிப்பட்ட பாசம் வந்தது. இரத்தம் கொடுத்து விட்டு வந்த காளையன் தனது சட்டையின் கைகளை உயர்த்திக் கொண்டு இரத்தம் கொடுக்க ஊசி குத்தியிருந்த அந்த இடத்தில் பஞ்சை வைத்து தேய்த்தவாறு இருந்தான்.
அப்போது தான் நான் கண்டேன். காளையனின் முழங்கையில் ஒரு பெரிய அரச இலையில் மச்சம் இருந்தது. அதே பெரிய மச்சம் என்னுடைய தொலைந்து போன மகனுக்கும் இருந்தது எனக்கு ஞாபகம் வந்தது. ஏன் காளையன் நம் மகனாக இருக்கக் கூடாது என்று எனது உள்ளம் தவித்தது. காளையன் இரத்தம் கொடுத்ததும் ஹர்ஷாக்கு ஆபரேஷன் நடந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் வேறு எதைப் பற்றியும் என்னால் சிந்திக்க முடியவில்லை.
ஹர்ஷாவுக்கு நல்ல விதமாக ஆபரேஷன் முடிந்த பின்பு அங்கிருந்து செல்ல முயன்றவனை நான் வற்புறுத்தி என்னுடன் இருக்க வைத்தேன். ஹர்ஷா கண் முழிக்கும் வரையில் என்னுடன் இருக்கும் படி வற்புறுத்தினேன். காளையனும் மறுத்து எதுவும் பேசவில்லை. என்னுடன் கூடவே இருந்தான். இரண்டு மணி நேரங்களின் பின்னர் ஹர்ஷா கண் விழித்தான். அதன் பின் தான் எனக்கு உயிரே வந்தது போல் இருந்தது.
இருவரும் சென்று ஹர்ஷாவை பார்த்துவிட்டு வந்தோம். அப்பொழுது அங்கிருந்த டாக்டரிடம் ஹர்ஷாவின் உடல்நிலையைப் பற்றி நான் விசாரிக்கச் செல்ல, ஹர்ஷாவுக்கு துணையாக காளையனை இருக்க சொல்லிவிட்டு, டாக்டரிடம் சென்றார். “ஹர்ஷாவைப் பற்றி இனிமேல் பயப்பட ஒன்றும் இல்லை” என்று டாக்டர் சொன்னார். அதைக் கேட்ட பின்னரே என்னோட உயிரே வந்தது.
அதன் பிறகு நான் நான் காளையனைப் பற்றி கூறி, எனது தொலைந்து போன மகனைப் பற்றியும் சொன்னேன். பின் காளையனுடைய டிஎன்ஏ வை எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய டாக்டரிடம் கேட்டேன். அவரும் என்னை புரிந்து கொண்டதால் சரி என்று சம்மதித்தார். ஆனால் முடிவு தெரிவதற்கு இரண்டு நாட்கள் செல்லும் என்று சொன்னார். நானும் பரவாயில்லை டாக்டர் என்று சொன்னேன்.
டாக்டரிடம் பேசி விட்டு வந்த நான் காளையனிடம் எதையும் சொல்லவில்லை. ஹர்ஷாவுடன் இருந்து கொண்டேன். காளியன் எங்களிடம் சொல்லிவிட்டு அவன் ஊருக்கு வந்து விட்டான். நானும், “சரி ரிப்போர்ட் வரும்வரை காத்திருக்கலாம்” என்று காளையன் போன் நம்பரை மட்டும் வாங்கிக் கொண்டு அவன் போக அனுமதித்ததன். அவனும் சென்று விட்டான். இரண்டு நாட்கள் ஹாஸ்பிடல்லேயே கழிந்தது. இரண்டு நாட்களின் பின்னர் டாக்டரை சந்திக்க சென்றேன்.
டாக்டர் முகத்தில் புன் சிரிப்பு. அதனை பார்த்ததும் எனக்கு பாதி புரிந்தது. மீதியை டாக்டரிடம் கேட்கலாம் என்று, அவரிடம் விசயத்தைக் கேட்டேன். அவரும், “கவலைப்படாதீங்க நீலகண்டன். உங்களோட பையன் கிடைச்சுட்டான். காளையன் உங்களோட டிஎன்ஏ 100% மெச்சா இருக்கு. உங்களோட பையன்தான் காளையன் என்றதுல எந்தவிதமான மாற்றுக் கருத்துக்மே இடமில்லை. காளையன் உங்களோட பையன் தான் என்று சொன்னார். இதைக் கேட்ட நீலகண்டனுக்கு கண்கள் கலங்கியது.
எத்தனை நாள் தவம், தன்மகன் கிடைக்க மாட்டானா, கிடைக்க மாட்டானா என நினைத்து அழுது கொண்டிருந்த தன் மனைவி கண் முன்னே வந்து போனார். தான் என்னதான் ஹர்ஷாவை அன்பால் பார்த்துக் கொண்டாலும், அவனுக்கு எந்த குறை இன்றி வைத்திருந்தாலும், அவளுக்கு தன் முதல் மகன் மீது கொள்ளை பிரியம். அவர் இறக்கும் தருவாயில் கூட, “என் மகன் நிச்சயமாக கிடைப்பான்,” என்று சொல்லிவிட்டு தான் சென்றார். என்ன செய்வது மகன் கிடைத்து விட்டான். ஆனால் மனைவி இவ்வுலகத்திற்கு இல்லையே என்று கவலை வந்தது. மனதோடு மனைவியோடு பேசிக்கொண்ட நீலகண்டன் காளையன் தன் இரத்தம் தான் என்று தெரிந்ததும், அவனை கட்டி அணைத்துக்கொள்ள, கைகள் துடித்தன. இருப்பினும் அதனை கட்டுப்படுத்திக் கொண்டார்.
முதலில் காளையனைப் போய்ப் பார்க்கலாம். என்று நினைத்து, ஹர்ஷவர்த்தனின் உடல்நிலை குறித்து டாக்டரிடம் பேசினார். டாக்டரும், “ஹர்ஷா பிரயாணம் செய்யலாம்” என்று சொன்னதும், அவனையும் கூட்டிக்கொண்டு முதலில் சென்றது தேன்சோலையூர் ஊருக்குத்தான்.
அங்கு சென்று நேரடியாக அவர் காளையனை சந்திக்கவில்லை. காளையனுக்கு, கால் பண்ணி ஊரின் எல்லைப் பக்கம் வரச்சொன்னார். உடனே தோட்டத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை கதிரிடம் ஒப்படைத்து விட்டு, அவர்களைக் காணச் சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 40
written by Thivya Sathurshi
காந்தம் : 40
அதிகாலை நேரத்தின் குளிரானது உடலை ஊசி போல குத்திக் கொண்டிருந்தது. குளிரைத் தாங்க முடியாமல் கடினப்பட்ட மலர்னிகா, போட்டிருந்த தனது துப்பட்டாவை இழுத்து இழுத்து கைகளை மூடிக்கொண்டாள் மலர்னிகா, காளையனின் நெஞ்சில் சாய்ந்தவாறு. காளையன் அவளது துப்பட்டாவை எடுத்து, கைகளை நன்றாக மூடிவிட்டான்.
ஊட்டியின் அந்த பெரிய பேரூந்து தரிப்பீடத்தில் வந்து நின்றது பேரூந்து. ஒவ்வொருவராக இறங்கியதும் காளையன் மெதுவாக மலர்னிக்காவின் கைகளை பிடித்துக் கொண்டு கீழே இறங்கினான். அவன் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. தான் இந்த இடத்திற்கு வருவான் என்று. என்ன செய்வது விதி வலியது அல்லவா? அவனை மறுபடியும் இங்கு கொண்டு வந்து விட்டது விதி.
துர்க்கா, கதிர், நிஷாவுக்கும் எதுவும் புரியவில்லை. காளையன் அழைத்து வந்ததால் இவர்கள் வந்திருக்கிறார்கள். இங்கு என்ன செய்யப் போகிறார்கள்? எங்கு தங்கப்போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கான விடைதான் இன்னும் தெரியவில்லை. மலர்னிக்காவிற்கு காய்ச்சல் விட்டிருந்தாலும் உடல் அசதியாக இருந்தது. அதனால் அவள் காளையனின் அணைப்பிலே இருந்தாள்.
காளையன் மலர்னிகாவை பிடித்துக் கொண்டு முன்னே செல்ல, பின்னால் மற்றவர்கள் மூவரும், தமது பைகளை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த டீக்கடி ஒன்றிற்கு சென்றனர். அங்கே பயணக் களைப்பு போவதற்காக டீ வாங்கி குடித்தார்கள். அவர்களிடம் டீயை குடிக்குமாறு சொல்லிவிட்டு தனது போனை எடுத்துக் கொண்டு சற்று விலகி வந்து வந்தான் காளையன்.
இரவு நேரத்தில் அவன் அழைத்த நம்பருக்கு இப்போது ஃபோன் பண்ணினான். மறுபக்கம் இருந்தவர் அவனது போனுக்காக காத்திருந்ததைப் போல ஒரு ரிங்கிலேயே போனை எடுத்தார் எதிர்பக்கம் இருந்தவர். “காளையா சொல்லுப்பா, வந்துட்டியா?” என்று கேட்டார். அதற்கு காளையனும் ஆமா, வந்துட்டோம். ஆனால் இங்க இருந்து எப்படி வீட்டுக்கு வர்றதுன்னு எனக்கு தெரியல” என்று சொன்னான்.
அதற்கு அவர் சிரித்துக் கொண்டு, “அதுக்கு என்ன நீ அங்கேயே இரு, ஒரு பத்து நிமிஷத்துல நானே வந்து உங்களை கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார். பின்னர் வீட்டில் உள்ளவர்களை அழைத்து அவர் சொன்ன வேலையை செய்யச் சொன்னார். பின்னர் தானே காரை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தார்.
அவருடன் பேசி போனை வைத்துவிட்டு, காளையன் டீக்கடையில் வந்து அவர்களுடன் அமர்ந்தான். அப்போது துர்க்கா தான் முதலில் பேச ஆரம்பித்தார். “காளையா இங்க எதுக்குப்பா வந்திருக்க? இங்கே யார் இருக்கிறாங்க? உனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களா? என்று கேட்டார்.
அதற்கு காளையன் சிரித்துக்கொண்டு , “இருக்கிறாங்க அத்தை.” என்று காளையன் சொல்லிக் கொண்டு இருக்கும்போது, அங்கே ஒரு பெரிய கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கியவரை பார்த்ததும் முதலில் டீக்கடையில் இருந்த முதலாளி ஓடி வந்தார். “ஐயா வாங்க, ஐயா என்னையா இந்த நேரத்துல இந்த பக்கம் வந்திருக்கிறீங்க? யாராவது முக்கியமானவங்க வராங்களா ஐயா?” என்று கேட்டார்.
அவர் டீக்கடை முதலாளியை பார்த்து, “என்ன கண்ணப்பா இப்படி ஒரு கேள்வி என்னோட வாழ்க்கையில ரொம்பவே முக்கியமானவங்க வந்திருக்கிறாங்க.” என்று சொல்லியவாறு காளையன் அருகில் வந்து அவனை அணைத்துக் கொண்டார். அவனும் அவரை பதிலுக்கு அணைத்து கண்கள் கலங்கினார்.
அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். காளையன் இவங்க என்று அவரிடம் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்த முனைந்தான். அதற்கு அவர், “கொஞ்சம் இரு காளையா, நான் சொல்றேன். இது உன்னோட அத்தை துர்க்கா. இது அவங்களோட பொண்ணு மலர்னிகா, அதைவிட சிறப்பானா, உன்னோட மனைவி மலர்னிகா என்று சொல்லலாம்.
இது நிஷா, மலர்னிகாவிற்கு தங்கை மாதிரி. இது கதிர் உன்னோட தம்பி மாதிரி சரியா? நான் கரெக்டா சொன்னேனா?” என்று அவனிடம் கேட்டார். அதற்கு காளையன், உங்களிடம் போய் எதையாவது நான் மறைக்க முடியுமா? முடியவே முடியாது” என்று சிரித்தான். “சரி வாங்க மீதிய வீட்ல போய் பேசிக்கலாம். உங்களுக்காக அங்க ஒருத்தன் காத்துட்டு இருக்கிறான்” என்று சொல்லி அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.
ஊட்டி பாதையின் வளைவுகளில் காரானது சீராக சென்று கொண்டிருந்தது. பாதையில் இரு பக்கங்களிலும் சிறிய சிறிய கடைகள், சற்று தொலைவில் பெரிய மலைகள் என்று இயற்கை அன்னை அங்கே தனது அழகை கொட்டி தீர்த்து இருந்தார். அத்தனை அழகாக இருந்தது ஊட்டி.
மெதுவாக இவர்கள் வந்த கார் அந்த வீட்டின் நுழைவாயிலில் நின்று ஹாரனை அடிக்க, சத்தம் கேட்டு காவலாளி வேகமாக வந்து கதவைத் திறந்தார். கதவை திறந்ததும் கார் உள்ளே பாதையில் சென்றது. உள்ளே செல்ல அழகிய பூக்கள் நிறைந்த அந்தத் தோட்டம் இருபுறமும் கண்களைக் கவர்ந்தன.
தோட்டத்திற்கு நடுவில் செல்லும் பாதையில் கார் சென்று, அந்த பெரிய மாளிகை முன் நின்றது. காரில் இருந்து இறங்கியவர்கள் தயக்கத்துடன் வெளியே நின்றனர். இவர்களைப் பார்த்த அவர், “எந்த தயக்கம் உங்களுக்கு வேண்டாம். இந்த வீடு எல்லாம் உங்க வீடு மாதிரி தான். மாதிரி என்ன மாதிரி உங்க வீடுதான். உள்ளே வாங்க என்று சொன்னவர் ஒரு நிமிஷம் இருங்க காளையா” என்று சொல்லிவிட்டு, உள்ளே பார்த்து, “பொன்னி….பொன்னி…” என்று குரல் கொடுத்தார் .
அப்போது வீட்டில் இருந்து பொன்னி கையில் ஆரத்தி தட்டுடன் வெளியில் வந்தார். இதை பார்த்த காளையன்,” இது எதற்கு? “என்று கேட்க,” நீ சும்மா இரு, நீ எப்பவாவது இங்க வருவேன்னு தெரியும் அதுக்காக நீ வரப்போற நாளுக்காக இங்க இருக்கிற எல்லோரும் காத்திட்டு இருக்கிறம்.” என்று சொல்லி, ” பொன்னி என்ன பார்த்திட்டு இருக்க? எடு ஆர்த்தியை, இவங்க இப்பதான் கல்யாணம் ஆனவங்க. முதன் முதலாக நம்ம வீட்டுக்கு வராங்க, அதனால நல்லா எடுத்துக்கணும் ஆர்த்தி” என்று சொல்ல பொன்னியும் ஆர்த்தி எடுத்தார்.
பொன்னியின் தட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டினை வைத்தார் அவர். பின்னர் அனைவரும் உள்ளே சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தனர். அப்போது படிகளில் இறங்கி வந்த வாட்டசாட்டமான ஒருத்தன், காளையனை அங்கு பார்த்ததும் ஓடி வந்து “அண்ணா” என்று கட்டிக் கொண்டான். இதை பார்த்த கதிர் காளையனை குழப்பத்துடன் பார்த்தான். துர்க்காவும் நிஷாவும் என்னது அண்ணாவா? “என்று பார்த்தனர்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 39
written by Thivya Sathurshi
காந்தம் : 39
மலர்னிகாவையும் நிஷாவையும் அழைத்துக் கொண்டு தனது பிறந்த வீட்டை விட்டு, நெஞ்சு முழுதும் பெரும் கவலையோடு வெளியே சென்றவர்களை நிறுத்தினார் விசாகம் பாட்டி. இவர்கள் திரும்பி அழைத்தார். “துர்க்கா உன் பொண்ணோட கழுத்தில இருக்கிறது என்னோட பேரன் கட்டின தாலி. அதை கழட்டி வைச்சிட்டு அவளை கூட்டிட்டு போ. நாங்க காளையனுக்கு நல்ல எப்படி நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறம்.” என்றார்.
இதைக் கேட்ட துர்க்கா பதற்றத்துடன் மலர்னிகாவைப் பார்த்தார். அவளோ நடப்பதை பார்த்தாலும், என்ன நடக்கிறது என்று உணர்ந்தாலும் அதற்கு பதில் குடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் நின்றிருந்தாள். அப்போது மேலே இருந்து பையுடன் வந்தான் காளையன்.
இதைப் பார்த்த ராமச்சந்திரன், “என்ன காளையா இது பை? ஓஓ.. இவங்க மறந்து விட்டுட்டாங்களா?” என்றார். அவர் கேட்டதற்கு பதில் சொல்லாமல் தடுமாறியபடி நின்ற மலர்னிகா அருகில் சென்று, நிஷாவை விலக்கி விட்டு மலர்னிகாவின் தோளைப் பிடித்து தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவளும் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். இதைப் பார்த்த துர்க்கா, நிஷா, கதிர், காமாட்சிக்கு நிம்மதியாக இருக்க, ஏனையவர்களுக்கு எரிச்சலாக இருந்தது.
பெருந்தேவனார், “காளையா நீ என்ன பண்ற? பாட்டி சொன்னது காதில விழலை? இவளோட போனா உனக்கு என்ன மரியாதை? மரியாதையாக இந்தப் பக்கம் வந்திடு” என்றார். அவரையும் மற்றவர்களையும் பார்த்தவன் பேச ஆரம்பித்தான்.
“நீங்க இப்படி பண்ணுவீங்கனு தெரியும். அதனால்தான் நான் யாருக்கும் சொல்லாமல் மலர் கழுத்தில தாலி கட்டினேன். ஏன் பாட்டி ஒரு பொண்ணை பற்றி தப்பாக யாரும் சொன்னா, உடனே அவ தப்பானவ இல்லை. பொண்ணுங்க கழுத்தில இருக்கிற தாலியை எப்போ கழட்டுவாங்க? அவங்க புருஷன் செத்ததுக்கு அப்புறமா அப்படித்தானே. மலரோட புருஷன் நான் இங்க உங்க எல்லோருக்கும் முன்னாடி உயிரோட தானே நின்னுட்டு இருக்கிறன்.
அப்படி இருக்கும் போது, என்னோட பொண்டாட்டி கழுத்தில இருக்கிற தாலியை எதுக்காக கழட்ட சொன்னீங்க? உங்களுக்கு கொஞ்சமும் மனசாட்சி உறுத்தலயா? அத்தையை காணோம்னுதானே இத்தனை நாளாக நீங்க எல்லோரும் கவலைப்பட்டுட்டு இருந்தீங்க? ஆனால் இப்போ மலர் செய்யாத தப்புக்காக அவங்களை வீட்டை விட்டு போக சொல்றீங்க.
ரொம்ப சந்தோசம். என்னோட பொண்டாட்டியை வேணாம்னு சொன்ன யாரும் இனிமேல் எனக்கும் வேணாம். இதற்கு காரணம் யாருனு எனக்கு தெரியும். இத்தனை நாள் பாசமான காளையனைத்தானே பார்த்திருப்பீங்க.. இனிமேல் இந்த காளையனோட மறுமுகத்தை பார்ப்பீங்க. நான் அவங்ககூடவே போயிடுறன். அத்தை வாங்க போகலாம்.” என்றவனை தடுத்தது காமாட்சியின் குரல்.
அவனருகில் வந்து கையை பிடித்தவள்,” அண்ணா, என்னை விட்டுட்டு போறியா? நானும் உன்கூடவே வரட்டுமா?” என்று கேட்டாள். அதற்கு காளையன்,” நீ காலேஜ்ஜை முடி குட்டிமா. அப்புறம் அண்ணா வந்து கூட்டிட்டு போறன். இங்கேயோ இல்லை, காலேஜ்லயோ உனக்கு எதாவது பிரச்சனைனா சொல்லு, அங்க இந்த அண்ணா வந்து நிற்பேன். வர்றன் டா” என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு, கண்ணீரை துடைத்து விட்டு சென்றான். அவன் பின்னால் துர்க்காவும் நிஷாவும் செல்ல, இவர்களுடன் கதிரும் வந்தான்.
ஐவரும் பஸ்க்காக காத்திருந்தனர். அப்போது கதிரை பார்த்த காளையன்,” சரி கதிர் நீ இங்க இரு. நாங்க போயிட்டு உனக்கு கால் பண்றம்.” என்றான். இதைக் கேட்ட கதிர், “என்ன அண்ணே, என்னை போக சொல்ற? எனக்கு இங்க யாரு இருக்கிறா? உன்கூடவே தானே இருப்பேன். இப்போ என்னை மட்டும் தனியாக விட்டுட்டு போறன்னு சொல்ற? நான் உங்களை விட்டு போகமாட்டேன். நீங்க எங்க போனாலும் நானும் வருவேன்.” என்றார்.
அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டான் காளையன். கதிரும் அவனை நன்றாக அணைத்துக் கொண்டு கண்கலங்கினான். பின்னர் துர்க்காவிடம்,” அத்தை எங்க போகலாம்னு இருக்கிறீங்க? ” என்று கேட்டான். அதற்கு அவர்,” பிறந்த வீட்டிலே இடமெ இல்லைனு சொல்லிட்டாங்க. இதுக்கு மேல போறதுக்கு இடம் இல்லாதவயா இந்த அத்தை.” என்று அழுதார். அப்போது ஊட்டி செல்லும் பேரூந்து அந்த பக்கம் வர எதையும் யோசிக்காமல் எல்லோரையும் அதில் ஏறச் சொன்னான். அவர்களும் காளையன் சொன்ன மாதிரியே அதில் ஏறினர்.
அவர்களுக்கு இருக்கை கிடைத்ததும், கதிர், துர்க்கா, நிஷா ஒரு பக்கமும் காளையனும் மலர்னிகாவும் இரண்டு சீட் இருக்கும் பக்கத்திலும் இருந்தனர். காளையன் நெஞ்சில் சாய்ந்து நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள் மலர்னிகா. களைப்பில் அனைவரும் தூங்கினார்கள். ஆனால் காளையனுக்கு இதற்கு பிறகு, தெரியாத ஊருக்கு சென்று, என்ன செய்வது? எங்கே தங்குவது? ” என்ற யோசனையில் வந்தவனுக்கு ஒருவர் ஞாபகம் வந்தது. உடனே அவருக்கு அழைத்து பேசினான். அவரும் இவர்களை தாராளமாக அங்கு வரச் சொன்னார். பஸ் நிலையத்திற்கு வந்ததும் போன் பண்ணச் சொன்னார். இவனும் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். அப்போதுதான் காளையனுக்கு நிம்மதியாக இருந்தது.
இங்கே வீட்டில் யாரும் காளையன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. சபாபதி இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து பேசினான். “பாருங்க, நல்லா பாருங்க நீங்க தலையில தூக்கி வைச்சிக் கொண்டாடின காளையன், எப்படி உங்களை உதறித் தள்ளிட்டு போறான்னு பார்த்தீங்களா? உங்க எல்லாருக்கும் இது வேணும்” என்றான். அவர்களும் அவனின் பேச்சிற்கு ஆமோதித்து பேச, காமாட்சிக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை. அங்கிருந்து தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.
காளையன் வீட்டில் நடந்தவற்றை எல்லாம் அறிந்த கேசவனும் முகேஷ்ஷூம் ரொம்ப சந்தோசப்பட்டனர். அவர்கள் நினைத்து நடந்து விட்டது
இனிமேல் அவர்கள் பிளான் பண்ணியவாறு ஒவ்வொன்றாக செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டனர்.
ஊட்டியில் இருந்த பெரிய வீட்டில் இரவு நேரத்திலும் அந்த வீடு பரபரப்பாக இருந்தது. விருந்தினர்கள் வந்தால் தங்கும் அறைகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு, புதிய திரைச்சீலை, புதிய பெட்சீட், தலையணை எல்லாம் மாற்றி அறைகளை அழகுபடுத்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது வீட்டிற்கு வந்தவன், தனது வீடு இருக்கும் நிலையை பார்த்து குழம்பினான். அவனது தோளைத் தொட்டவர், சொன்னதை கேட்டவன் சந்தோசத்தினால் அவரைத் தூக்கிச் சுற்றினான். அவனால் இதை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இருவரும் மிகுந்த சந்தோசத்துடன் இருப்பதைப் பார்த்து, அங்கு வேலை செய்பவர்களும் சந்தோசப்பட்டனர்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 38
written by Thivya Sathurshi
காந்தம் : 38
காளையன் மலர்னிக்காவிற்கு கசாயத்தையும் உணவையும் எடுத்துக் கொண்டு சென்றதும், அனைவரும் சேர்ந்து உணவு உண்டனர். காமாட்சியும் நிஷாவும் வீட்டிற்கு வெளியே இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அப்போது கதிர் அந்த தெருவால் சென்றான். அப்போது அவனை பார்த்த இருவரும் அழைத்தனர்
அவர்களுடன் வந்து பேசிக் கொண்டு இருந்தான் கதிர்.
உள்ளே கூடத்தில் எல்லோரும் சபாபதி பற்றியும் காளையன் மலர்னிகாவின் திருமணம் பற்றியும் பேசிக் கொண்டு இருந்தனர். சபாபதி கம்பனி ஆரம்பிக்க ஒத்துழைக்க கூடாது என்று பெருந்தேவனார் சொன்னார். அதற்கு மற்றவர்களும் சரி என்று ஆமோதித்தனர். அந்த வேளையில் அங்கிருந்த அனைவரின் போனும் மெசேஜ் வந்த ஒலியை எழுப்பியது. அதைக் கேட்டவர்கள் குழப்பத்துடன் தங்களது போனை எடுத்துக் கொண்டனர்.
முதலில் பெருந்தேவனார் அவரது போனை எடுத்து அதில் வந்திருந்த வாய்ஸை கேட்டார்.”இங்க பாருங்க உங்க எல்லோருக்கும் ஒரு வீடியோ அனுப்பியிருக்கிறேன். அந்த வீடியோவை பார்த்துட்டு நீங்க அந்த வீடியோல இருக்கிறவங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பணும் என்ற முடிவு எடுக்கிறீங்கனு பார்க்கலாம். அப்படி அவங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பல,உங்களுக்கு அனுப்பின அந்த வீடியோவை டீவில போட்டு இந்த உலகத்துக்கே காட்டுவேன்.” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
இதைக் கேட்டவர்களுக்கு எதுவும் புரியவில்லை. துர்க்காவிற்கும் அவனது குரல் தெளிவாக விளங்கவில்லை. “யாருப்பா இது? ஒரே நேரத்தில எல்லோருக்கும் என்ன வீடியோ அனுப்பியிருக்கிறான்னு முதல்ல பார்க்கலாம்.. ” என்று தேவச்சந்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போது குணவதி, “ஐயோ, யாரும் அந்த வீடியோவை பார்க்காதீங்க” என்றவர் போனை தவற விட்டார்.
“என்னாச்சி குணவதி? அந்த வீடியோல என்ன இருக்கு? “என்று பதட்டத்துடன் கேட்டார் விசாகம். குணவதி எதுவும் சொல்லாமல் துர்க்காவைப் பார்த்தார். பின்னர் மேலை பார்த்தார். “அத்தை, அந்த வீடியோல…வீடியோல…மலர்… மலர்.. உடம்புல ஒட்டுத்து…துணி இல்லாமல் இருக்கிறா.” என்றார்.
“ஐயோ.. மலரு…என்னடி இது?” என்று நிலத்தில் விழுந்து அழுதார் துர்க்கா. அவரது அழுகுரல் கேட்டு உள்ளே ஓடி வந்தனர் வெளியே இருந்தவர்கள். நிஷா அவரின் அருகில் இருந்தார்.” நிஷா.. நிஷா.. நம்ம மலரை.. மலரை யாரோ தப்பா வீடியோ எடுத்து இந்த வீட்டில உள்ளவங்களுக்குஅனுப்பியிருக்கிறான்டி.. இதை ஊர்ல உள்ளவங்களுக்கு தெரிஞ்சா எப்படி உயிரோட இருக்கிற? ஐயோ இதை அவ பார்த்தா தாங்க மாட்டாளே..” என்று ஒப்பாரி வைத்தார்.
நடப்பதை பார்த்துக் கொண்டு நின்ற காமாட்சி மெதுவாக மேலே போய் மலர்னிகாவின் அறைக் கதவைத் தட்டினாள். மலர்னிகாவை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்து விட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தான் காளையன். காமாட்சியின் முகத்தில் இருந்த பதட்டமே அவனுக்கு சொன்னது, தனக்குத் தெரிந்த விசயம் இப்போ எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்று. “அண்ணி கூடவே இரு…” என்று சொல்லிவிட்டு கீழே போனான்.
கீழே துர்க்கா அழுது கொண்டு இருக்க, நிஷா அவரை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தாள். கீழே போட்ட சத்தத்தில் சபாபதியும் வந்து நின்றிருந்தான். காளையன் கீழே வந்ததும் பெருந்தேவனார் நேரடியாக , “காளையா எங்க எல்லோருக்கும் ஒரு வீடியோ வந்திருக்கு. நான் அதைப் பார்த்து ஒரு முடிவு எடுத்திருக்கிறன்” என்றார். அதற்கு காளையன் எதுவும் சொல்லவில்லை. கீழே இருந்த துர்க்காவை எழுப்பி, சோபாவில் இருக்க வைத்தவன் நிஷாவிடம் தண்ணீர் கொண்டு வரச் சொல்ல, அவளும் எடுத்து வந்து குடுத்தாள்.
அதை துர்க்காவிற்கு குடிக்கக் குடுத்தான். பின்னர் தனது தாத்தாவைப் பார்த்து,” தாத்தா எனக்கு இந்த வீடியோவை, உங்களுக்கு அனுப்ப முதல்லே அனுப்பிட்டான். நான் கோயில்ல இருக்கும் போதுதான் இந்த வீடியோவை பார்த்தன்.” என்றான். இதைக் கேட்டவர்கள் அதிர்ச்சியுடன் காளையைப் பார்த்தனர்.
தேவச்சந்திரன் உடனே, “அதைப் பார்த்த பிறகுதான் மலர்னிகாவிற்கு தாலி கட்டினயா? ” என்று கேட்க, அவனும், “ஆமா அப்பா, நான் அந்த வீடியோவை பார்த்த பிறகுதான் அந்த தாலியை மலர் கழுத்தில கட்டினேன்.” என்றான்.
பெருந்தேவனாருக்கு வந்த கோபத்தில் காளையனை அறைந்திருந்தார். இதுவரை அவனை எதற்கும் அவர் அடித்ததில்லை. “என்ன காரியம் பண்ணியிருக்க நீ? இங்க பெரியவங்கனு நாங்க எதுக்கு இருக்கிறம்? எங்ககிட்ட நடந்ததை சொல்லியிருக்கலாம்தானே.” என்றார்.
“தாத்தா பேசாமல் அந்த பொண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுங்க தாத்தா. இல்லனா நம்மளோட குடும்ப மானமே போயிடும்.” என்று சபாபதி சொல்ல, ராமச்சந்திரனுக்கும் அதுவே சரி என்று பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பேசினார் விசாகம்.
” ஆமா சபா, நீ சொல்றதுதான் சரி. நாளை பின்னே இந்த வீடியோவை போன்ல அவன் சொன்ன மாதிரி டிவில போட்டா, இத்தனை நாள் கட்டிக் காப்பாத்தி வந்த நம்ம குடும்ப மானம் என்னாகிறது? நம்ம வீட்டுலையும் ஒரு பொண்ணு இருக்கு, நாளைக்கு அவளுக்கு என்று கல்யாணம் காட்சி வரும்போது இது பிரச்சனையாக வரக்கூடாதுல” என்று சொன்னார்.
இதைக் கேட்ட துர்க்காவிற்கு இடி விழுந்தது போல இருந்தது. அவரது மகளின் எதிர்காலம் குறித்த பயம் ஏற்பட்டது. தனது அம்மாவா இப்படி சொல்றது? என்று பார்த்தார். பெருந்தேவனார்,” நீ சொல்றதும் சரிதான் விசாகம். மலர்னிகாவை இங்க இருந்து அனுப்பிடலாம். அதுதான் நம்ம எல்லோருக்கும் நல்லது.” என்று மனைவியை போலவே பேசினார்.
தனது அப்பாவும் அம்மாவும் இப்படி ஒரு முடிவு எடுப்பார்கள் என்று துர்க்கா சிறிதும் நினைக்கவில்லை. ” அம்மா அப்போ என்னோட பொண்ணோட வாழ்க்கை என்னாகிறது? அவளை வீட்டை விட்டு அனுப்ப சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது?” என்று அழுதவாறு கேட்டார்.
விசாகம், “உன்னோட பொண்ணு இங்க அமைதியா இருக்கிற மாதிரி நடிக்கிறா போல, நீங்க இருந்த இடத்தில எப்படி எப்படி எல்லாம் இருந்திருக்கிறானு பாரேன். ஏன் துர்க்கா உன் பொண்ணை ஒழுங்கா உனக்கு வளர்க்க தெரியாதா? ” என்று அவரிடம் சத்தம் போட்டார்.
அப்போது பெருந்தேவனார், “இங்க பாரு துர்க்கா,நீ எங்களோட பொண்ணு அதனால நீ இங்க இருக்கலாம் ஆனால் அவ இங்க இருக்க கூடாது. பத்து நிமிசத்துல அவ வீட்டை விட்டு போயிடணும்.” என்றார்.
காளையன் எதுவும் பேசவில்லை. அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு நின்றான். துர்க்காவிற்கு கோபம் வந்தது. “என்ன சொன்னீங்க? உங்க பொண்ணு நான் உங்ககூட இருக்கணும். ஆனால் நான் என்னோட பொண்ணை விட்டுட்டு உங்ககூட இருக்கணும். நீங்க அந்த வீடியோல இருந்தது உண்மையானு கூட ஒரு வார்த்தை கேட்கலை. அவளுக்கு காய்ச்சல்னு தெரியும். ஆனாலும் இப்பவே வீட்டை விட்டு போகணும்னு நிற்கிறீங்க.
ரொம்ப ரொம்ப சந்தோஷம். என்னோட கஷ்டத்துல நீங்க என்கூட இருப்பீங்கனு நினைச்சு இங்க வந்தேன். ஆனால் நீங்க இப்படி பண்ணுவீங்கனு நான் நினைக்கவே இல்லை. இதுக்கு மேல நாங்க இங்க இருக்கிறது சரியில்லை. எங்களால உங்களோட மானம் மரியாதை போகக் கூடாது. நாங்க போயிடுறம். நிஷா நீ போய் எல்லாத்தையும் எடுத்துட்டு சீக்கிரம் வா” என்றார்.
துர்க்காவும் அவரது அறைக்குச் சென்று அவரது உடமைகளை எடுத்து வந்து வெளியே வைத்து விட்டு, மேலே சென்று மலர்னிகாவின் உடமைகளையும் எடுத்துக் கொண்டு காய்ச்சலினால் வாடியவாறு படுத்திருக்கும் மலர்னிகாவை ஒரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு வர, நிஷாவும் ஒரு பக்கம் வந்து மலர்னிகாவைப் பிடித்தாள்.
மூவரும் தமது பைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு செல்லும் போது அவர்களை நிறுத்திய விசாகம் சொன்னதைக் கேட்ட துர்க்கா பதற்றத்துடன் மலர்னிகாவைப் பார்த்தார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 37
written by Thivya Sathurshi
காந்தம் : 37
காளையன் கசாயத்தையும் சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு மலர்னிகாவின் அறைக்குள் சென்றான். அவள் அருகில் இருந்த மேசையில் சாப்பாட்டுத் தட்டையும், கசாயத்தையும் வைத்தான். பின்னர் அவளின் அருகில் சென்று அமர்ந்தான். மலர்னிகா குளிரினால் நடுநடுங்கிக் கொண்டு இருந்தாள். அவளின் நெற்றியில் மெல்ல கை வைத்துப் பார்க்க, அது மிகவும் சூடாக இருந்தது. அதிலே அவனுக்குத் தெரிந்தது மலர்னிகாவிற்கு அதிகமான காய்ச்சல் இருப்பது.
“அம்மணி… அம்மணி” என்று அழைத்தான். அவனது சத்தத்தில் மெல்ல கண்களை திறக்க முயன்றாள். அதற்கு கூட அவளால் முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு சுருண்டு படுத்தாள். அவளைப் பார்க்க பாவமாக இருந்தது காளையனுக்கு. அவளின் தலைப்பக்கம் வந்து இருந்தவன். அவளை மெதுவாக தூக்கி அவனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
அவளுக்கு அவனது நெஞ்சில் படுத்ததும் ஒருவித கதகதப்பாக இருந்தது. அது மிகவும் இதமாக இருக்க, மேலும் அவனுடன் ஒன்றினாள். அவனும் அவளை வாகாக அணைத்துக் கொண்டு, அருகில் மேசையில் வைத்திருந்த கசாயத்தை எடுத்தான். மெதுவாக மலர்னிகாவிடம், “அம்மணி, நான் இப்போ உனக்கு ஒண்ணு குடுப்பனாம், நீ அதை அடம்பிடிக்காம குடிக்கணும்.” என்று சொல்லி, கசாயத்தை அவள் வாயினுள் வைத்து, மெது மெதுவாக பருக்கினாள். அதை குடித்துக் கொண்டு இருக்கும் போது லேசாக இருமினாள். அவளது முதுகை வருடி விட்டான்.
பின்னர் சாப்பாட்டு தட்டை எடுத்து, அதில் இருந்த தோசையை கறியுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக குடுத்தான். அவளும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, வேண்டாம் என்று தலையாட்டினாள். காளையன்தான், “இல்ல கண்ணு, கொஞ்சம்தான் இருக்கு. சாப்பிட்டால் தானே காய்ச்சல் சீக்கிரமா குணமாகும்.” என்று சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போல சொன்னான். அவளும் அதற்கு பிறகு எதுவும் பேசாமல், அவன் குடுத்த தோசையை வாங்கிக் கொண்டாள். சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிக்க குடுத்தான். அதையும் வாங்கிக் குடித்தவள், அப்படியே அவன் மார்பில் தூங்கினாள்.
மோனிஷா அறையில் படுத்திருந்தாள். அவளது சிந்தனை முழுவதும் சபாபதியே நிறைந்திருந்தான். அவன் போனை எடுத்துப் பேசியிருந்தாலாவது அவளுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவனோ மோனிஷாவை மறந்தே விட்டது போல, போன் எடுக்காது இருந்தான்.
மோனிஷாவின் தோழி ஒருத்தி அவளுக்கு போன் பண்ணினாள். “ஹாய் கீத்து, எப்படி இருக்க? உன்னோட லைஃப் எப்படி இருக்கு?” என்று கேட்க, மறுபக்கம் இருந்த மோனிஷாவின் தோழி கீர்த்தனா, “மோனி என்னோட லைஃப்ஏ போயிடுச்சு டி” என்று அழுதாள். இதைக் கேட்ட மோனிஷா, “ஏய் என்னாச்சிடி? எதுக்கு இப்போ இப்படி அழுதிட்டு இருக்க முதல்ல சொல்லுடி, என்ன பிரச்சினைனு” என்று சொல்லுடி என்றாள்.
அதற்கு கீர்த்தனா, ” மோனி உனக்கு தெரியும்ல நான் ராகேஷை எவ்வளவு லவ் பண்றேன்னு. அவனும் ஆரம்பத்துல என்னோட லவ்வை ஏத்துக்கல, ஆனால் அப்புறம் ஏத்துக்கிட்டான். ரெண்டு வருஷமா எவ்வளவு டீப்பா லவ் பண்ணோம், இப்போ ராகேஷோட அம்மா, அவங்க தம்பி பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றாங்க. வீட்டில இருக்கிறவங்க எல்லோரும் ராகேஷ்க்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் பண்ண முடிவெடுத்துட்டாங்க. ராகேஷூம் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்றான்டி. எனக்கு என்ன பண்ணணும்னு தெரியலை. ” என்று அழுதாள்.
இதைக் கேட்ட மோனிஷாவுக்கு உடனே சபாபதியின் ஞாபகம் வந்தது. அதை விட்டு அழும் தோழியை சமாதானப் படுத்தினாள். அவளோ அழுது கொண்டு,” இல்லை மோனி, நீ என்ன சொன்னாலும் என்னோட மனசு ஏத்துக்குது இல்லை. வீட்டில உள்ளவங்க எது சொன்னாலும் அவன் கேட்கணுமா? அப்படினா என்னை லவ் பண்ணது பொய்யா?” என்று எதிர் கேள்வி கேட்டாள்.
மோனிஷாவிற்கு அவள் பக்கம் நியாயம் இருப்பதாகப் பட்டது. “கீத்து நாளைக்கு நான் ஊருக்கு போறன். போயிட்டு வந்ததும் வா நாம ரெண்டு பேரும் போய் அந்த ராகேஷை ஒரு வழி பண்ணிட்டு வந்திடலாம். “என்று மோனிஷா சொன்ன பின்னரே கீர்த்தனா சமாதானமாகி போனை வைத்தாள்.
கீர்த்தனா நன்றாக மோனிஷாவை குழப்பி விட்டாள். மோனிஷாக்கு எங்கே கீத்துவை ராகேஷ் ஏமாத்திட்டு, வீட்டில சொன்னாங்கன்னு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க தயாராக இருப்பதைப் போல எங்கே சபாபதியும் தன்னை ஏமாற்றி விடுவானோ என்ற பயம் மேலும் அதிகரித்தது. “சபா நீ என்னை ஏமாத்தினா, கீத்துவைப் போல அழுதிட்டு இருக்க மாட்டேன். எனக்கு பிடிச்சதை எப்படி எடுத்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்.” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.
முகேஷ் தனது அறையில் குடித்துக் கொண்டு இருந்தவன் காளையனைப் பற்றி எதுவும் தெரியாமல், அவனை மிரட்ட நினைத்து போன் பண்ணினான். நெஞ்சில் தன்னவளை சுமந்து கொண்டு, அவளை பழையபடி மீட்டெடுக்க என்ன செய்யலாம்? என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவனது பாக்கெட்டில் இருந்த போன் அடித்தது. அதில் தூக்கம் கலைந்த மலர்னிகாவை தட்டிக் கொடுத்து விட்டு, போனை எடுத்தான்.
“ஹலோ யாருங்க?” என்றான். அதற்கு மறுபக்கம் இருந்த முகேஷ், “நான்தான் சொன்னேன்ல என்னைப் பற்றி நீ தெரிஞ்சிக்க தகுதியில்லாதவன்னு.
நான் அனுப்பின அந்த வீடியோவை பார்த்ததுக்கு பிறகும் அவளோட கழுத்தில தாலி கட்டிருக்கனா, உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? நான் சொன்னதை நீ மறந்துட்டியா? நீ அவளை கல்யாணம் பண்ணினா, அந்த வீடியோவை, இல்லை…. இல்லை உன்னோட பொண்டாட்டியோட வீடியோவை வீட்டில உள்ளவங்களுக்கு அனுப்பி வைப்பேன்னு சொன்னதை மறந்துட்டியா? “என்றான்.
அதற்கு சிரித்துக் கொண்ட காளையன்,” என்னோட குடும்பத்தைப் பற்றி எனக்கு தெரியும். அவங்க மலரை…. இல்லை நீ சொன்ன மாதிரி என்னோட பொண்டாட்டியை தப்பா நினைக்க வாய்ப்பே இல்லை. அவங்க நிச்சயம் நடந்ததை புரிஞ்சிப்பாங்க “என்றான் தைரியமாக.
“என்ன தைரியம் காளையன், சரி உன்னோட குடும்பத்து மேல நீ வச்சிருக்கிற நினைப்பு சரியானதானு பார்க்கலாம். “என்றவன் போனை கட் பண்ணி விட்டான். காளையனுக்கு ஒருபக்கம் பயமாக இருந்தது. அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்துப் பயந்தான். ஆனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை. மலர்னிகா பக்கம் எந்த தப்பும் இல்லை. அதனால் அவள் பக்கம்தான் இருக்க வேண்டும். அவளை எந்த நிலையிலும் கைவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டான்.
அதே நேரத்தில் கூடத்தில் இருந்த ராமச்சந்திரன், தேவச்சந்திரன், குணவதி, நேசவதி, விசாகம், பெருந்தேவனார், துர்க்கா இவர்கள் மூவரின் போனிலும் ஒரே நேரத்தில் மெசேஜ் வந்த சத்தம் கேட்டது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 36
written by Thivya Sathurshi
காந்தம் : 36
சபாபதி போன் கட் பண்ணியது மோனிஷாவிற்கு கோபமாக இருந்தது. அதே கோபத்துடன் வீட்டிற்கு வந்தவள் தனது கைப்பையை தூக்கி சோபாவில் எறிந்தாள். அழகாக நிறப்பூச்சி பூசியிருந்த கைவிரல்களைக் கடித்து அவளது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். சபாபதி போனை ஆஃப் பண்ணின பிறகு, அவனிடம் பேசமாட்டேன் என சபதம் எடுத்தவள், மீண்டும் ஒரு பத்து நிமிடத்தில் அவனுக்கு அழைத்தான். இம்முறை ஆனில் இருந்தது போன். ஆனால் அதை எடுக்காமல் கட் பண்ணி விட்டான். அதுதான் இவளுக்கு கோபம் உச்சத்தை தொட்டது.
வெளியே வந்து கேசவனும் முகேஷும் மோனிஷாவைப் பார்த்தவாறு வந்து சோபாவில் இருந்தனர். கேசவன், “என்ன மோனி, கோபமாக இருக்கிற போல,என்னாச்சி?” என்றார். அவரைப் பார்த்து முறைத்தவள், “என்ன நடக்கணும்? அந்த சபா பார்த்த வேலை தெரியுமா அப்பா? அவன் ரொம்ப மோசம்” என்றாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். முகேஷ், “தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் இப்படி சொன்னா, நாங்க என்னத்தை நினைக்கிறது? என்னாச்சினு சொல்லு மோனி” என்றான். அதற்கு அவள் இதழ்களில் இருந்து விரல்களுக்கு விடுதலை குடுத்து விட்டு,” அண்ணா நான் சபாக்கு போன் பண்ணினேன். ஆனால் அவன் போனை கட் பண்ணிட்டான்.
நான் திரும்ப திரும்ப கூப்பிட போனை ஆஃப் பண்ணிட்டான். நான் கோபத்தில அவனுக்கு எடுக்கக் கூடாதுனு இருந்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்தில மறுபடியும் கூப்பிட்டா போன் ஆன்ல இருக்கு ஆனால் போனை கட் பண்றான்.
பாருங்க அப்பா இனிமேல் அவனா போன் பண்ணாலும் நான் எடுக்க மாட்டேன். ” என்று கோபப்பட்டாள்.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தார்கள்.” மோனி பாரு ஊருக்கு போனதுக்கு அப்புறம் உன்னை மறந்துட்டாரு. இப்படியே போச்சுனா உன்னை மறந்திட்டு, அவங்க வீட்டில சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவான் பார்த்துக்க” என்றார்.
கேசவன் இப்படி சொன்னதும் மோனிஷா பயந்து விட்டாள். அவளுக்கு எங்கே சபாபதி தன்னை விட்டுச் சென்றிடுவானோ என்ற பயம் ஏற்பட்டது.” அப்பா என்ன ஆனாலும் சரி, என்னோட சபா எனக்கு வேணும் அப்பா. ப்ளீஸ் அப்பா, எனக்கும் சபா அங்க இருக்கிறதை நினைக்க பயமா இருக்கு. என்னை அங்க கூட்டிட்டு போங்க அப்பா. நாம போய் சபாவை கூட்டிட்டு வந்திடலாம்.” என்றாள் கேசவனின் கைகளை பிடித்துக் கொண்டு.
கேசவனும் முகேஷூம் அர்த்தத்துடன் பார்த்து சிரித்தனர்.” சரி மோனி, நீ சொல்லிட்டல. என்ன நடந்தாலும் சரி, சபாவை உன்கூட சேர்த்து வைப்போம். நாம சபாபதியோட ஊருக்கு போய், அவரையும் நம்மகூட கூட்டிட்டு வரலாம்.” என்று முகேஷ் சொன்னான். மோனிஷாவும் கேசவனும் அதற்கு சம்மதித்தனர்.
காமாட்சியும் நிஷாவும், காளையன் மலர்னிகாவின் திருமணம் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போது டிடெக்டிவிடம் இருந்து நிஷாவிற்கு போன் வந்தது. உடனே அதை அட்டென்ட் பண்ணினாள். “சொல்லு ரஞ்சித், அந்த கேசவனைப் பற்றி எல்லாத் தகவலும் கிடைச்சுதா?” என படபடப்புடன் கேட்டாள்.
மறுபக்கம் இருந்த ரஞ்சித், “ஹே.. வெயிட்.. வெயிட், எதுக்கு இப்போ இவ்வளவு அவசரப்பட்டு? நீ கேட்டு நான் ஒரு ஹெல்ப் பண்ணாமல் இருப்பானா நிஷா. எல்லாம் பக்காவா இருக்கு. உனக்கு வாட்ஸ்ஆப்பில அனுப்பியிருக்கிறன். அவனுங்க சரியான கேடிங்க நிஷா. எதற்கும் பத்திரமா இருங்க.” என்று சொன்னதும் நிஷா, “அதெல்லாம் பார்த்துக்கிறன் ரஞ்சித். ரொம்ப நன்றி ” என்றாள். அதற்கு ரஞ்சித்,” லூசு ஃபிரண்ட்ஸ்க்குள்ள எதுக்கு நன்றி எல்லாம்? ஓகே எனக்கு வேலை இருக்கு. நான் அப்புறமாக கூப்பிடுறன். “என்று வைத்தான்.
காமாட்சியையும் அழைத்துக் கொண்டு காளையன் அறைக்குள் சென்றாள். மலர்னிகாவைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தவன் அருகில் வந்தனர் காமாட்சியும் நிஷாவும்.” அண்ணா, நீங்க கேட்ட தகவல் எல்லாம் எடுத்தாச்சு ” என்றனர். உடனே காளையன் அதைக் கேட்க, தனது போனை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி படித்தவனுக்கு கோபம் வந்தது.
காமாட்சி நிஷாவை பார்த்தவன், “இதை நீங்க படிச்சீங்களா?” என்று கேட்டான். அவர்கள் இல்லை என்று தலையசைத்தனர். அவர்களிடம் அதில் இருந்த விசயங்களை சொன்னான். அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
காளையன் மேலும் அவர்களிடம், “இந்த விசயம் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம். உங்களுக்கும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க” என்று அவர்களிடம் சொல்ல, அவர்களும் சரி என்று தலையாட்டி விட்டு சென்றனர்.
நேசமதி எல்லோரையும் சாப்பிட அழைத்தார். எல்லோரும் கீழே வந்தனர். தூங்கும் மலர்னிகாவை வந்து எழுப்பினார் துர்க்கா. அவள் எதுவும் பேசாமல் இருக்க, கையை பிடித்து எழுப்ப முயன்றார். அவளது மேல் சூடாக இருந்தது. அவளுக்கு காய்ச்சல் வந்திருந்தது.
மலர்னிகாவை எழுப்ப முயன்றாள். ஆனால் மலர்னிகா எழவில்லை. அவளால் எந்திரிக்க முடியவில்லை. துர்க்கா அவளுக்கு மாத்திரை வாங்க கீழே வந்தார். குணவதியின் அருகே வந்தவர், “அண்ணி மலருக்கு காய்ச்சலாக இருக்கு. மாத்திரை ஏதாவது இருந்தா குடுங்க அண்ணி.” என்று கேட்டார்.
உடனே எல்லோரும் பதறினர். பெருந்தேவனார், “குணவதி மாத்திரை எல்லாம் குடுக்காத, கசாயம் வச்சிக் குடு, எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் போயிடும்.” என்றார். உடனே குணவதி கசாயம் வைத்துக் கொண்டு வந்து துர்க்காவிடம் குடுத்தாள். ஆனால் துர்க்கா,” ஐயோ அண்ணி, கசாயம் எல்லாம் என்னால குடுக்க முடியாது. அவள் மாத்திரைனாலே அலறுவாள். இதுல காயத்தை குடுத்தா ஊரையே கூட்டிட்டுவா”என்றார்.
விசாகம்,” உன் பொண்ணுக்கு போய் நீ பயப்படுறியே துர்க்கா” என்று சொல்ல, துர்க்காவோ, “அவ என் பொண்ணுனாலதான் எனக்கு அவளைப் பற்றி தெரியும். “என்றார். அங்கிருந்த காளையனை பார்த்து துர்க்கா,” காளையா நீ தாலி கட்டின, உன்னோட பொண்டாட்டி காய்ச்சலா இருக்கா, அதனால இந்த கசாயத்தை நீயே குடுத்திடு” என்று அவனை மாட்டிவிட்டார்.
அப்போது பெருந்தேவனார், “என் பேரன் ஒண்ணும் பயந்தவன் இல்லை. அவன் சிங்கக் குட்டி. நீ போ காளையா, இந்த கசாயத்தை மலருக்கு குடுத்திட்டு, அப்படியே சாப்பாட்டையும் குடுத்திட்டு வா” என்றதும் காளையன்,” அம்மா அதை குடுங்க நான் போய் குடுத்திட்டு வர்றன்” என்று கசாயத்தையும் ஒரு தட்டில் சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு மேலே சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 35
written by Thivya Sathurshi
காந்தம் : 35
விசாகம்,” மலர்னிகா நான் சொல்றதை கேளுமா, காளையா நீ மலரோட கழுத்தில தாலி கட்டியிருக்க. அதனால நீங்க ரெண்டு பேரும் ஒரே அறையில்தான் இருக்கணும். தேவா யோசியருக்கு போன் போட்டு குடு, சடங்கு வைக்கணும், அவர்கிட்ட நல்ல நேரம் கேட்கணும்” என்றார்.
காளையன், “பாட்டி, இப்போதைக்கு எதுவும் தேவையில்லை. சொன்னால் புரிஞ்சிக்கோங்க. நாங்க ஒரே அறையில இருக்கிறம், ஆனால் இப்போ சடங்கு எதுவும் வேண்டாம் பாட்டி. “என்றான். காளையனிடம் பேச வந்த விசாகத்தை தடுத்தார் துர்க்கா,” அம்மா, அதுதான் காளையன் சொல்றான்ல. விடுமா” என்றவர், “நீ போ மலர்.”என்றார். அவளும் விட்டால் போதும் என்று சென்றுவிட்டாள்.
எல்லோரும் அவர் அவர் வேலையைப் பார்க்கச் சென்றனர். காமாட்சியும் நிஷாவும் அவர்களின் அறைக்குச் சென்றார்கள். தனது அறைக்கு வந்த காளையன் உடையை மாற்றி விட்டு, காமாட்சியின் அறைக் கதவை தட்டினான். நிஷா வந்து கதவைத் திறந்தாள். “அண்ணா, உள்ள வாங்கண்ணா” என்றாள். காளையனும் உள்ளே வந்து அங்கிருந்த கதிரையில் இருந்தான்.
நிஷாவைப் பார்த்தவன், “நிஷா எனக்கு உன்னோட உதவி தேவைப்படுது. எனக்கு உதவி பண்ண முடியுமா?” என்றான். “ஐயோ அண்ணா என்ன இது? உதவினு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு இருக்கிறீங்க? அதெல்லாம் ஒண்ணுமில்லை. என்ன செய்யணும்னு சொல்லுங்க அண்ணா” என்றாள்.
காளையன், “எனக்கு மலர்னிகா பற்றி தெரியணும் நிஷா. அன்னைக்கு நீ அவளைப் பற்றி சொன்னது சரி, ஆனால் அவளோட எதிரிகள் யாருனு தெரியணும் “என்றான். அதற்கு நிஷா,” அண்ணா அவங்களுக்கு எதிரினா ஒரே ஒருத்தர் தான். அந்த கேசவனும் அவனோட பையன் முகேஷ். ரெண்டு பேரும்தான் மேமோட எதிரிங்க. அவங்களை தவிர பெருசா யாரும் இல்லை அண்ணா. “என்றாள்.
இவங்க ரெண்டு பேரும் எதுக்காக மலரை கொலை பண்ண முயற்சிக்கிறாங்க? இப்போ நம்மளோட முழு குடும்பத்தையும் கொல்லப் பார்க்கிறாங்க? என்று யோசித்தவன் மீண்டும் நிஷாவிடம்,” நிஷா எனக்கு அந்த கேசவனோட முழு தகவலும் வேணும். உன்னால எடுத்து குடுக்க முடியுமா? ” என்றான்.
உடனே நிஷாவும், “முடியும் அண்ணா, என்னோட ப்ரண்ட் ஒருத்தன் டிடெக்டிவ்வா இருக்கிறான். அவன்கிட்ட கேட்டுட்டு சொல்றன்.” என்றவள் உடனே அவனது ப்ரண்ட்க்கு போன் பண்ணி பேசினாள். அவனும் கொஞ்ச நேரத்தில் தகவல்களை எடுத்து அவளுக்கு அனுப்புவதாக சொன்னான்.
காளையன், “அவரு அனுப்பினதும் எங்கிட்ட சொல்லுமா “என்றவன் அவர்களிடம் சொல்லிவிட்டு அவனது அறைக்குச் சென்றான். அங்கே சென்று குளித்து விட்டு வெளியே வர, அவனது அறைக்குள் நின்றிருந்தாள் மலர்னிகா.
தனது அறைக்குள் அவளை எதிர்பார்க்காதவன், “என்ன அம்மணி இங்க வந்திருக்கிறீங்க?” என்றான். அவனைப் பார்த்த மலர்னிகா தனது தாலியை எடுத்து அவனிடம் காட்டி, “எதுக்காக என்னை கல்யாணம் பண்ணீங்க?” என்று கேட்டாள். அதற்கு சிரித்துக் கொண்டவன், “இது என்ன கேள்வி அம்மணி, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணணும்னு முன்னாடியே பேசினாங்கதானே. அதுதான் தாலி கட்டினேன்” என்றான்.
அவன் அப்படி சொன்னதும், “இல்லை,இது காரணம் இல்லை. வேற ஏதோ இருக்கு. என்னனு சொல்லுங்க” என்றாள். அவனும் “அப்படி எதுவும் இல்லைங்க. நீங்க போங்க, போய் ரெஸ்ட் எடுங்க “என்றான். அவளும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவனை பார்த்து விட்டு சென்றாள்.
களைப்பாக இருக்கவும் குளித்து விட்டு வந்து, சுடிதார் ஒன்றை போட்டுக் கொண்டு வந்து ஜன்னலின் அருகில் நின்று, வெளியே தெரிந்த வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளது தோளைத் தொட்டது ஒரு கரம். திரும்பிப் பார்க்க அங்கே நேசமதியும் குணவதியும் நின்றிருந்தனர்.
“என்ன கண்ணு இப்படி வெளியே பார்த்துக் கொண்டு நிற்கிற? கொஞ்ச நேரம் தூங்கலாமே கண்ணு” என்றார் குணவதி. நேசமதி, “உன்னோட படிப்புக்கு காளையன் பொருத்தம் இல்லாதவன்தான். ஆனால் அவனோட மனசு ரொம்ப சுத்தம் மலரு. அவன் ஒருத்தங்களை உறவாக ஏத்துக்கிட்டான்னா, அவங்களுக்காக உயிரையும் குடுப்பான்.
தங்கமான பையன் காளையன். உனக்கு அவன்கிட்ட ஏதாவது பிடிக்கலனா, உடனே அப்பவே அவன்கிட்ட சொல்லிடு கண்ணு. அதுமட்டுமல்ல அவனுக்கு பொய் பேசுறது பிடிக்காதுமா. அவன் மேல தப்பு இருந்தால், சொன்னா கேட்டுக்குவான். ரொம்ப பாசக்காரன். புரிஞ்சி நடந்துக்கடா. உனக்காக நாங்க எல்லாரும் இருக்கிறம்.” என்றார் நேசமதி. பின்னர் அவளிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றனர். அவர்கள் சென்றதும் கட்டிலில் வந்து படுத்தவள், அப்படியே தூங்கினாள்.
சபாபதி கோபத்துடன் இருந்தான். அவனுக்கு வீட்டினரை நினைக்க கோபம் வந்தது. இனியரூபன் பிஸ்னஸ் பண்ணபோய், இவங்களோட தொடர்பு இல்லாமல் போனால், நானும் அப்படியே இருப்பேன்னு இவங்க எப்படி நினைக்கலாம்? என்று கோபத்தில் இருந்தான் சபாபதி.
அவனது நிலமை புரியாமல், அவனுக்கு போன் பண்ணினாள் மோனிஷா. போனைப் பார்த்த சபாபதி அதை கட் பண்ணினான். மீண்டும் அவள் கால் பண்ணினாள். ஆனால் சபாபதி போனை எடுக்கவே இல்லை. மறுபடியும் கட் பண்ணினான். அவளும் உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்று மீண்டும் மீண்டும் போன் பண்ணினாள். கட் பண்ணிப் பார்த்தவன் போனை ஆஃப் பண்ணினான்.
சபாபதி போனை ஆஃப் பண்ணியதும், இந்தப் பக்கம் மோனிஷாவிற்கு கோபம் வந்தது. நான் எடுத்த போனை பேச முடியாதளவிற்கு இவன் என்ன பண்ணிட்டு இருக்கிறான். இனிமேல் அவன் போன் பண்ணாமல் நாமளா போன் பண்ணக் கூடாது. என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.
கேசவனுக்கு போன் பண்ணி உடனே வீட்டிற்கு வரச் சொன்னான். அவரும் என்னவோ ஏதோ என்று வந்து சேர்ந்தார். “என்ன முகேஷ் எதுக்காக இப்போ உடனே என்னை வரச்சொன்ன?” என்றார். “அப்பா அந்த குடும்பத்தையே அடியோட அழிக்கலாம்னு அன்னதானம் நடக்கிற இடத்தில விசத்தை வைச்சி கொல்லணும்னு முயற்சி பண்ணோம். ஆனால் அது நடக்கலை. அதுகூட பரவாயில்லை அப்பா. ஆனால் நான் எது நடக்கவே கூடாதுனு நினைச்சனோ அது நடந்திட்டு” என்றான் .
கேசவன் அவனை புரியாமல் பார்த்தார்,” என்ன முகேஷ் நடக்க கூடாதுனு நினைச்ச? “என்று கேட்க, அவன்” அந்த மலர்னிகாவிற்கு கல்யாணம் நடந்திடுச்சி அப்பா, அதுவும் காளையன்கூட. நான் அவனுக்கு மலர்னிகாவோட வீடியோவை அனுப்பி வைச்சேன். அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் அவன் கல்யாணம் பண்ணிருக்கிறான் அப்பா. அவங்களை விடவே கூடாது. ஏதாவது பண்ணணும்” என்றான்.
முகேஷ் சொன்னதைக் கேட்ட கேசவன்,” என்ன சொல்ற முகேஷ், அந்த வீடியோவைப் பார்த்துமா அவன், அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அப்போ அவன் ஏதாவது பிளான் பண்ணுவான். அவன் நம்மளைப் பற்றி கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி, நாம அவங்க கதையை முடிச்சுடணும். அதுக்கு முன்னாடி, சபாபதியை நம்மளோட சைட்டுக்கு வரவைக்கணும் முகேஷ். ” என்றார். இருவரும் சேர்ந்து பல திட்டங்களை தீட்டினர்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
காளையனை இழுக்கும் காந்தமலரே : 34
written by Thivya Sathurshi