இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இலா என்றிட இலக்கியா என்றாள் அவள். அவன் சிரித்து விட்டு ஓகே மிஸ்.இலக்கியா என்றவன் கிளம்பலாமா என்றிட சரியென்று வேகமாக கிளம்பினாள்.
என்ன எப்போ பாரு எதையோ யோசிச்சுகிட்டே இருக்க என்றவனிடம் பதில் பேசாமல் அமைதியாக அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். மவளே உன்னை என்றவன் சட்டென்று பிரேக் போட அவள் சீட் பெல்ட் அணியாத்தால் டேஸ் போர்டில் முட்டிக் கொண்டாள். பச்ஆஆ அம்மா என்றவளிடம் சாரி இலா என்றவன் மனதிற்குள்ளோ எப்படி பேபி என்னோட பனிஷ்மென்ட் என்று நினைத்துக் கொண்டான்.
இருவரும் அலுவலகம் வந்து சேர்ந்த பிறகு அவளிடம் என்ன மிஸ்.இலக்கியா லோன்க்கு அப்ளை பண்ணி இருக்கிங்க போல என்றான். எஸ் சார் என்றவளிடம் கம்பெனி ரூல்ஸ் படி இங்கே குறைஞ்சது நீங்க பைவ் இயர்ஸாச்சும் வொர்க் பண்ணி இருக்கனும் பட் நீங்க நாலரை வருசம் தான் வொர்க் பண்ணி இருக்கிங்க அதனால ஐயம் வெரி சாரி உங்க லோன் என்னால சாங்சன் பண்ண முடியாது என்றான். கார்த்திக் ப்ளீஸ் என்னோட தம்பிக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என்றவளிடம் ஐயம் வெரி சாரி மிஸ்.இலக்கியா என்றான் .
வேண்டும் என்றால் உங்களுக்காக ஒரு ஆஃபர் தரேன் என்றவன் அவளருகில் எழுந்து வந்து அவள் காதில் ஏதோ சொல்ல அவள் பட்டென்று அவனது கன்னத்தில் அறைந்து விட்டாள். என்னடா கொழுப்பா என்னை பார்த்தால் காசுக்காக உன் கூட படுக்கிறவள் மாதிரி தெரியுதா என்றதும் ஏய் ச்ச்சீ ஓவரா பேசாதடி என்னம்மோ ரொம்ப ஒழுங்கு தான் இந்த அம்மா போடி என்றவனை முறைத்து விட்டு அவள் கிளம்ப நைட் புல்லா யோசி நாளைக்கு நீயே என் ஆஃபரை அக்சப்ட் பண்ணுவ என்றவனது பேச்சு காதில் விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்.
அவன் சொன்னது தான் அவளுக்கு திரும்ப திரும்ப காதில் கேட்டது. அலுவலகம் முடியும் முன்னே அவனிடம் கூட சொல்லாமல் அவள் கிளம்பிச் சென்றாள்.
வீட்டிலோ பயங்கர அதிர்ச்சி தங்கை பிரதீபாவிற்கு பெண் பார்க்கும் படலம் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. இவ்வளவு சீக்கிரத்தில் இலக்கியா வருவாள் என்பதை எதிர்பார்க்காத சகுந்தலா அதிர்ந்தாலும் மெல்ல சமாளித்து இவள் தான் என் மூத்த மகள் இலக்கியா என்றாள். இலக்கியா நம்ம தீபாவை பொண்ணு கேட்டு வந்திருக்கிறாங்க என்றதும் ஹும் சரிம்மா என்றவள் மரியாதைக்காக அவர்களிடம் திரும்பி வாங்க என்று கூறி விட்டு தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.
பிரதீபாவிற்கு இருபது வயசு தானே ஆகுது அதுக்குள்ள கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன அதுவும் திடீர்னு பொண்ணு பார்க்க வந்தாங்க அப்படினா இவ்வளவு ஸ்வீட், பலகாரம் எல்லாம் எப்படி. பத்து, பதினைந்து பேர் வந்திருக்கிறாங்க அப்படினா பூ வைக்க வந்தது மாதிரி தானே இருக்கு என்கிட்ட இதை பத்தி அம்மா ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லலை என்று நினைத்தவளால் எதுவும் யோசிக்க முடியவில்லை.
அவள் காதுகளில் திரும்ப, திரும்ப கார்த்திக் சொன்ன விசயங்கள் தான் மண்டையை குடைந்து கொண்டு இருந்தது.
இலா கதவைத் திற என்ற சகுந்தலாவின் குரலில் நினைவு வந்தவள் கதவினைத் திறக்க வாமா என்று சகுந்தலா அழைத்துச் சென்றாள். அவர்களை இவளுக்கு அறிமுகம் செய்து வைத்த சகுந்தலா இன்னும் ஒரு மாசத்தில் மாப்பிள்ளை வெளிநாடு போறாராம் இலா அதுக்குள்ள கல்யாணம் வச்சுறலாம்ல என்று கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருக்க சகுந்தலா அவர்களிடம் என் விருப்பம் தான் என் பொண்ணோட விருப்பமும் என்று கூறி விட அப்பொழுதும் இலக்கியா அமைதியாகவே இருந்தாள்.
வந்தவர்கள் சென்று விட இலாமா உன்கிட்ட சொல்லக்கூடாதுனுலாம் அம்மா நினைக்கலைடா திடீர்னு பொண்ணு கேட்டு வந்துட்டாங்க அந்த மாப்பிள்ளை ரஞ்சித் நம்ம பிரதீபா லவ் பண்ணுற பையனாம். அது மட்டும் இல்லை இந்த பாதகத்தி அவனோட குழந்தையை வயித்துல வேற சுமக்கிறாள் என்னை என்னம்மா பண்ண சொல்லுற என்றதும் பிரதீபாவை பார்க்க அவள் தலை குனிந்தபடி இருந்தாள். பதில் சொல்லு இலா என்ற சகுந்தலாவிடம் சரிங்கம்மா என்று கூறி விட்டு அவள் சென்று விட்டாள்.
என்னம்மா நீங்க அந்த மாப்பிள்ளையைவே இன்னைக்குத் தான் பார்த்தேன். அவனோட பிள்ளை என் வயித்துல வளருதுனு சொல்றிங்க என்ற பிரதீபாவிடம் அப்படி சொன்னால் தான்டி உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாள். இருபத்தாறு வயசாச்சு நமக்கு கல்யாணம் பண்ணாமல் அவங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க அப்படினு அவள் நினைக்க வேண்டாம் பாரு அதுக்குத் தான். அதனால நீ அமைதியா இரு என்றாள் சகுந்தலா.
இலக்கியாவிடம் மெல்ல வந்து இலா என்னாச்சுமா லோன்க்கு அப்ளை பண்ணிட்டியா என்றாள் சகுந்தலா. இல்லம்மா லோன் கேன்சல் ஆகிருச்சு என்றவளிடம் என்னடா தங்கம் இப்படி சொல்லுற அதை நம்பி தான் உன் தம்பிக்கு வேலை வாங்கனும், தீபா வேற வயித்தை தள்ளிகிட்டு நிக்கிறா என்று அழுதவளிடம் என்னை என்னம்மா பண்ண சொல்றிங்க என்னால முடிஞ்சதை தானே பண்ண முடியும் என்றாள் இலக்கியா. இப்படி நீ சொன்னால் நானும் என் பிள்ளைகளும் சாகுறதை தவிர வேறு வழியே இல்லை என்று நீலிக் கண்ணீர் வடித்தாள் சகுந்தலா.
அவள் சென்று தன்னறைக்குள் அடைந்து கொண்டாள். தன்னுடைய நிலையை நொந்து கொண்டவள் மன நிம்மதியை இழந்து தவித்தாள். அழுது அழுது கரைந்தவள் ஒரு முடிவுடன் உறங்கிப் போனாள்.
மறுநாள் அலுவலகத்திற்கு சென்றவளின் கண் முன்னால் சகுந்தலா அழுத முகமும் உன்னையும் நான் பெத்த பொண்ணா தானம்மா பார்த்து பார்த்து வளர்த்தேன். இதுவே தீபா உன் கூடப் பிறந்தவளா இருந்தால் அவளது வாழ்க்கையை பத்தி யோசிச்சுருப்ப என்றாள். அம்மா என்று அவள் ஏதோ கூற வர அப்போ உன் எம்.டி சொன்ன விசயத்தை ஏத்துக்கோமா என்ற சகுந்தலாவைப் பார்த்து அழுவதா , சிரிப்பதா என்றே தெரியவில்லை இலக்கியாவிற்கு. ஆனால் இது தான் நிதர்சனம் என்று உணர்ந்தவள் அவனது வருகைக்காக காத்திருந்தாள்.
அன்று அவன் மிகவும் களைப்பாக இருந்தான். அவளைப் பார்த்தவன் பதில் பேசாமல் வேலையை பார்க்க அவன் முன்னால் சென்று நின்றவள் கார்த்திக் என்றிட சொல்லு இலா என்றவனிடம் உன்னோட ஆஃபர் என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. என்னோட ஆஃபரை நீ ஏத்துக்கிற அப்படித் தானே என்றவனிடம் சந்தோசம் சரி இரு இப்பவே காண்ட்ராக்ட் பேப்பர் ரெடி பண்ண சொல்லி என் லாயர்கிட்ட சொல்றேன் என்றான்.
அவள் அமைதியாக சென்று தன் வேலையை கவனிக்க அவள் மனமோ அலை பாய்ந்து கொண்டிருந்தது. எனக்கு மட்டும் ஏன் இப்படி பட்ட சோதனை ஆண்டவா அப்படி என்ன பெரிய தப்பு பண்ணுனேன். ஒரு காலத்தில் இதோ நிற்கிறானே இவனை உருகி உருகி காதலிச்சேன் ஆனால் இன்னைக்கு என்னோட மனசுல அந்த காதல் சுத்தமா இல்லை. நேற்று மதியம் கூட கொஞ்சம் நஞ்சம் இருந்த காதல் நேற்று அவன் என்னுடைய சூழ்நிலையை பயன்படுத்தி தன்னோட விருப்பத்தை சொன்னதும் சுத்தமா போயிருச்சு என்றவளின் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு வேலையை கவனித்தாள்.
இலா டாக்யூமென்ட்ஸ் ரெடி நீ கையெழுத்து போடு என்றவனிடம் இப்போவே கையெழுத்து போட்டினாலும் சரி, இல்லை ஒன் வீக் அப்பறம் போட்டாலும் சரிதான் என்றான்.
அவள் அதில் கையெழுத்துப் போட்டதும் நீ கேட்டதை விட இரண்டு மடங்கு பணம் உன் அக்கவுண்ட்ல கிரடிட் ஆகிருச்சு என்றவனிடம் தாங்க்ஸ் கார்த்திக் என்றாள். அவளருகில் வந்து கன்னம் தட்டியவன் இதுக்கு எதற்கு தாங்க்ஸ் சொல்ற போ போயி ரெடியா இரு ஈவ்னிங் உங்க வீட்டுக்கு வரேன் என்றவன் தன் வேலையை பார்க்க அவள் நடைபிணமாக வீட்டிற்குச் சென்றாள்.
வீட்டிற்கு சென்று சகுந்தலாவிடம் விசயத்தைச் சொல்லவும் ராசாத்தி என்று இலக்கியாவின் நெற்றி வழித்து திருஷ்டி கழித்தவள் அவள் அக்கவுண்டிலிருந்த பணத்தை தன் அக்கவுண்டிற்கு பணத்தை மாற்றி விடச் சொல்லவும் இலக்கியாவும் செய்தாள்.
தன் மகனைக் கூட்டிக் கொண்டு கையோடு பணத்தை எடுத்த சகுந்தலா மகனின் வேலைக்கு லஞ்சம் கொடுத்து விட்டு மீதி பணத்தில் மகளுக்கு நகைகள் செய்து கொண்டு மீதமுள்ள பணத்தை திருமண செலவிற்கு ஒதுக்கி வைத்தாள்.
இலக்கியா மனநிம்மதியை இழந்து தவித்தவள் சென்றதோ வடபழநி முருகன் கோவில். முருகனை கும்பிட்டவள் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது.
அங்கு அவர் நின்றிருந்தார். அவளருகில் வந்தவர் சொன்ன செய்தியைக் கேட்டவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தன் சித்தி சகுந்தலா இவ்வளவு கீழ்த்தரமானவளா என்று நினைக்க நினைக்க அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…
அண்ணா என்னை விட்ருங்கண்ணா என்று கூறியவளின் வாயைப் பொத்தியவன் சாலையைக் காட்டி அமைதியா இரு என்றான். சாலையில் வெள்ளையாக ஒரு மர்ம உருவம் இவர்களின் ஆட்டோவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தது. ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவன் உருது மொழியில் மந்திரம் போல எதையோ ஜெபித்துக் கொண்டிருந்தான்.
அந்த மர்ம உருவத்தின் மீது மோதி காற்றாய் சீறிப் பறந்தது ஆட்டோ. நேராக சென்று ஒரு கோவிலின் முன் தான் ஆட்டோ நின்றது.
மன்னிச்சுரு தங்கச்சி உன்னை ரொம்ப பயமுறுத்திட்டேன். பஸ் ஸ்டாப்ல ஒரு ஆளு உன்கிட்ட வம்பு வளர்த்தாரே அந்த ஆளு ஆட்டோவை பாலோவ் பண்ணிட்டு வந்தாரு. அவருக்கும், உங்களுக்கும் ஏதோ பிரச்சனைனு தான் ரூட்டை மாத்துனேன். அப்புறம் தான் புரிஞ்சது நான் வந்த ரூட்ல ஒரு பொண்ணோட ஆவி எப்பவும் சுத்திட்டு திரியும் அதை தாண்டி போற பைக், ஆட்டோ நிச்சயம் ஆக்சிடென்ட் தான் அதனால பயந்துகிட்டு தான் அன்வர்க்கு டெக்ஸ்ட் பண்ணினேன். அவரும் வந்தாரு. அவரு பாய் அல்லாவோட கிருபையால அந்த ஆவிகிட்ட இருந்து நம்ம தப்பிச்சோம் என்றார் அந்த ஆட்டோக்காரர்.
என்ன அண்ணா இந்த காலத்தில் போயி ஆவீ, பேய்னு என்றவளிடம் கடவுள் இருக்காருனு நம்புறியா தங்கச்சி என்ற ஆட்டோக்காரரிடம் நம்புறேன் அண்ணா என்றாள் இலக்கியா. அப்பறம் நல்லதுன்னு ஒன்று இருந்தால் கெட்டதுனு ஒன்று இருக்கும். கடவுள்னு ஒன்று இருந்தால் சாத்தான்னு ஒன்று கண்டிப்பா உண்டு தங்கச்சி என்றவர் நீ சொன்ன அட்ரஸ் வந்துருச்சு தங்கச்சி என்று ஆட்டோவை அவளது வீட்டின் முன் நிறுத்தினார்.
நன்றிங்கண்ணா என்றவளிடம் பரவாயில்லம்மா என்று காசை வாங்கிக் கொண்டு ஆட்டோக் காரரும், அவரது நண்பரும் சென்று விட்டனர்.
இலக்கியா வீடு வந்ததும் தான் சகுந்தலாவிற்கு திருப்தியாக இருந்தது. அவள் சாப்பிட்டு விட்டு மெத்தையில் சரிந்தாள்.
அவளுக்கு கார்த்திக்கின் நினைவுகள் வந்தது. அவனை முதன் முதலில் சந்தித்தது முதல் இன்றுவரை நடந்த நிகழ்வுகள் வந்து போக கூடவே அழுகையும் வந்து விட கண்ணீரைத் துடைத்தவள் அவன் முன்பு ஒருநாளும் அழுது விடக் கூடாது என்று வைராக்யமாக முடிவு செய்து படுக்கையில் சாய்ந்தாள்.
காலையில் எழுந்தவள் குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பிக் கொண்டிருக்கையில் சகுந்தலா மீண்டும் பணம் பற்றி பேசிட ஏன்மா அதான் சேவிங்க்ஸ் இருக்கே அதில் இருந்து கொஞ்சம் எடுத்து இப்போ தீபக்கிற்கு வேலை வாங்கிட்டா அவன் சம்பாதிச்சு அந்த பணத்தை திருப்பி கொடுத்திடப் போறான் என்றாள் இலக்கியா.
என்னம்மா பெரிய சேவிங்க்ஸ் கல்யாண வயசுல பிரதீபா இருக்காள். இப்பவே நாலஞ்சு வரன் வருது அவளுக்காக சேர்த்து வச்ச பணம் அதான் என்று இழுத்தார் சகுந்தலா. நான் கூட கல்யாண வயசுல தான் இருக்கேன் என்று சொல்லத் துடித்த மனதை அடக்கி சரிமா லோன் அப்ளை பண்ணி இருக்கேன் பார்ப்போம் என்றவள் தனது லன்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
பஸ்ஸில் அமர்ந்தவளின் எண்ணங்கள் எல்லாம் சகுந்தலாவின் பேச்சில் தான் இருந்தது. ஒருமுறை கூட அவங்களை நான் சித்தினு கூப்பிட்டது கிடையாது ஆனால் அவங்க மனசுல நான் அவங்க பொண்ணுங்கிற நினைப்பே இல்லை போல என்று நினைத்தவளின் கண்கள் கலங்கினாலும் அதை கட்டுப் படுத்திக் கொண்டாள்.
அலுவலகம் வந்தவள் லோனிற்கு அப்ளை செய்து தன் இருக்கையில் அமர்ந்து வேலையை கவனித்தாள். அவள் அமைதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவன் வந்தான். வந்தவன் தன் அறைக்குச் சென்ற பிறகு இண்டர்காமில் அவளை அழைக்க அவன்றைக்குச் சென்றாள்.
என்ன மிஸ்.இலக்கியா உங்களை நான் என்னோட பர்சனல் செகரட்ரியா தானே அப்பாயின்ட் பண்ணி இருக்கேன் என்றான். எஸ் சார் என்றவளிடம் அப்போ உங்களோட கேபின் இது என்று தனதறையில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட கேபினைக் காட்டினான். கார்த்திக் ப்ளீஸ் நான் என்னோட பழைய கேபின்லையே என்றவளிடம் லுக் மிஸ்.இலக்கியா இங்கே நான் தான் பாஸ். நான் சொல்றதை தான் நீங்க செய்யனும் என்று அவன் கட்டளை இட ஓகே சார் என்றவள் தன் ஹேன்ட்பேக்கை எடுத்துக் கொண்டு அவன்றையில் இருந்த கேபினில் அமர்ந்து தன் வேலையை பார்த்தாள்.
அவன் வேண்டுமென்றே அவள் கொண்டு வரும் பைல்களில் சின்னச் சின்ன மிஸ்டேக் கண்டுபிடித்து அவளைப் படுத்தி எடுத்தான். அதனால் மண்டை சூடாகிப் போனாள். தலைவலி அதிகமாகிப் போக டீ குடிக்கலாம் என்று கேண்டீன் சென்றால் தலைவலி இன்னும் தான் அதிகமானது.
பார்த்தியாடி சிடுமூஞ்சியை ஆபிஸ் வந்த இரண்டாவது நாளே புது எம்.டியை மடக்கிட்டாள். இப்போ அவள் எம்.டியோட பர்சனல்செகரட்ரி. நேத்து வெளியில் இருந்த கேபின்ல வேலை பார்த்தவள் இன்னைக்கு எம்.டி. ரூம்லையே அவளுக்கு கேபின். வேலை மட்டும் தான் பார்ப்பாங்களா என்று சிரித்து விட்டு எப்படித்தான் ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துட்டு பெரிய இடமா வளைச்சுப் போட்டுட்டாள் என்றனர் இரு பெண்கள். அவர்களின் பேச்சு காதில் விழ ஏற்கனவே இருந்த தலைவலி இரண்டு மடங்கானது தான் மிச்சம். தலையைப் பிடித்துக் கொண்டு டீயும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று தன் கேபினுக்குள் வந்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
ச்சே எப்படி இவங்க இப்படி பேசுறாங்க அவங்களும் பொம்பளைங்க தானே என்று நினைத்தவளின் கண்கள் ஆத்திரமாக எதிரில் அமர்ந்து கணினி திரையை பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தது. எல்லாம் இவனால தான் என்று நினைத்தவள் அவனை முறைத்துக் கொண்டு இருக்க.
என் முகத்தில் என்ன படமா ஓடுது என்று அவளைப் பார்த்தான். அவள் முகத்தை திருப்பி விட்டு தன் வேலையை கவனிப்பது போல் ஆமா படம் ஓடுது பரதேசி என்று அவனை மனதிற்குள் அர்ச்சித்து விட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.
வேலையில் மூழ்கியவள் வயிறு பசிக்கவும் மணியை பார்க்க இரண்டரை என்று காட்ட லன்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு அவள் கிளம்பிட இலா எங்கே போற என்றான். பசிக்குது சார் அதான் என்றவளை ஒரு நிமிசம் என்றவன் மணியைப் பார்க்க ஓ காட் இரண்டரை மணி ஆச்சா சரி வா கிளம்பலாம் என்றான்.
எங்கே சார் என்றவளிடம் சைட் விசிட் என்றவன் நீ வேணும்னா உன் லன்ச் பாக்ஸை எடுத்துட்டு வா என்றவனிடம் பரவாயில்லை சார் வெர்க் முடிச்சுட்டு வந்தே சாப்பிட்டுக்கிறேன் என்றவள் அவனோடு கிளம்ப பச் சொல்றேன்ல என்று அவன் அதட்டினான். அவளும் வேறு வழி இல்லாமல் அவனுடன் லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டே கிளம்பிச் சென்றாள்.
அவனது காரில் அவள் பின்சீட்டில் அமரப் போக மகாராணி முன்னால வந்து உட்காருங்க என்றான் . என்ன என்றவளிடம் நீ என்ன மகாராணியா நான் உனக்கு டிரைவர் வேலை பார்க்க முன்னாடி வந்து உட்காரு என்றவனை முறைத்து விட்டு சாவடிக்கிறான் பாரு பரதேசி் பசி வேற வயித்தைக் கிள்ளுது என்று நினைத்தவள் அமைதியாக வந்து முன்சீட்டில் அமர்ந்தாள்.
இருவரும் சென்று சைட்டை பார்த்து விட்டு அங்கு சில வேலைகளை முடித்து விட்டு வரும் வழியில் ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தி விட்டு அவன் சென்று பார்சலை வாங்கிக் கொண்டு வந்தான்.
அவள் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்து பூனை போல் பதுங்கி வந்தான்.
இன்னைக்கு தான் அப்ளை பண்ணி இருக்கேன். உடனே எப்படிம்மா முடியும் ஒரு வாரம்னாலும் டைம் வேண்டாமா எல்லாம் எவ்வளவு ப்ராசஸ் எம்.டி ஓகே சொன்னால் தான் கிடைக்கும் சரி வேற இடத்திலையும் ட்ரை பண்றேன் என்றவள் போனை வைத்து விட்டு கடவுளே என்று தலையில கை வைத்து அமர்ந்தாள்.
அவன் வந்து அவளருகில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவன் ஒரு பீச் ஹவுஸின் முன்பு காரை நிறுத்தினான். சார் இங்கே எதற்கு வந்திருக்கிறோம் என்றவளிடம் எனக்கும் பசிக்குது அதான் சாப்பிட்டு ஆபிஸ் போகலாம். இது என்னோட கெஸ்ட்ஹவுஸ் தான் வாங்க இலக்கியா என்று அவளை அழைத்துச் சென்றான்.
விதியே என்று அவளும் அவனுடன் வந்தவள் அமர்ந்திட அவன் தான் வாங்கி வந்த உணவை பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். அவளும் தன் பாக்ஸில் இருந்த தயிர்சாதத்தையும், பாகற்காய் பச்சடியையும் சாப்பிட்டாள். அவளுக்கு தயிர்சாதம் , பாகற்காய் இரண்டுமே பிடிக்காது ஆனால் என்னால் காலையில் இது தான் ரெடி பண்ண முடியும் என்று சகுந்தலா அதைத் தான் தினமும் கொடுத்து விடுவாள். பிடிக்கவில்லை என்று அவளும் சொல்ல மாட்டாள்.
என்ன இலா தயிர்சாதம் , பாகற்காய்பச்சடி காம்பினேசனே சரி இல்லையே என்றவனைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டாள். வாயேன் சாப்பாடு ஷேர் பண்ணிக்கலாம் என்றவனிடம் மிஸ்டர்.கார்த்திக் தப்பா எடுத்துக்காதிங்க உங்க வேலையை மட்டும் பாருங்க என்று கூறி விட்டு அமைதியாக சாப்பிட்டாள்.
திமிரு மட்டும் குறைய மாட்டேங்குது பாரு என்று அவளை மனதிற்குள் திட்டி விட்டு அமைதியாக சாப்பிட்டான்.
அலுவலகம் விட்டு அவள் கிளம்பிக் கொண்டிருந்த நேரம் எம்.டி யின் அறையில் இருந்து அழைப்பு வர அவளும் அங்கு சென்றாள்.
என்ன இலா கிளம்பிட்ட போல என்றவனை அவள் முறைக்க பச் பழக்கதோஷம் சாரி மிஸ்.இலக்கியா கிளம்பிட்டிங்க போல என்றவனிடம் டைம் ஆச்சுல சார் என்றாள். நீ சாரி் நீங்க என்னோட பர்சனல்செகரட்ரி உங்க பாஸ் நான் இன்னும் வேலை முடியாமல் உட்கார்ந்துட்டு இருக்கும் போது நீங்க எப்படி கிளம்பலாம் என்றவன் அவளிடம் ஒரு பைலை நீட்டி இதை கரைக்ட் பண்ணி கொண்டு வாங்க என்றான்.
அவள் சார் டைம் ஆச்சு நான் நாளைக்கு சீக்கிரமே வந்து இந்த பைலை கரைக்சன் பண்ணி தரேனே என்றவளை முறைத்தவன் இந்த ஆபிஸோட பாஸ் நானா இல்லை நீங்களா மிஸ்.இலக்கியா நான் சொல்ற வேலையை செய்ங்க எனக்கு ஆர்டர் போடாதிங்க என்று அவன் கூறிட கடவுளே என்று நொந்து கொண்டவள் அந்த பைலை கரைக்சன் செய்து கொண்டிருந்தாள்.
பொறுக்கி படுத்தி எடுக்கிறானே என்று நினைத்துக் கொண்டே அவன் கொடுத்த பைலில் கரைக்சன் செய்து முடித்து மணியை பார்க்க ஒன்பதரை என்று காட்டவும் நொந்து போனாள். அட ஆண்டவா கடைசி பஸ் இந்நேரத்திற்கு போயிருக்குமே இப்போ எப்படி வீட்டுக்கு போறது என்று நினைத்தவள் தன் தம்பி தீபக்கிற்கு போன் செய்ய அவனோ நன்றாக மூக்கு முட்ட குடித்து விட்டு கவுந்திருந்தான்.
போனை அட்டன் செய்த சகுந்தலா என்ன இலா இன்னும் நீ வீட்டுக்கு வரக் காணோம் என்று கேட்டிட அம்மா எனக்கு வேலை முடிய நேரம் ஆச்சு பஸ் போயிருக்கும் கொஞ்சம் தீபக்கை வரச் சொல்லுங்கம்மா என்றாள். அச்சோ இலா அவன் வேலை கிடைக்குமா கிடைக்காதாங்கிற துக்கத்தில் நல்லா குடிச்சுட்டு வந்து இவ்வளவு நேரமா அழுது புலம்பி இப்போ தான் தூங்குறான். அக்கா காசு பிரட்டி எனக்கு வேலை வாங்கித் தருவாளா மாட்டாளானு அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் பண்ணி இப்போ தான்மா படுத்துருக்கான் என்று சகுந்தலா கூறிட சரிங்கம்மா என்று போனை வைத்தவள் பைலை எம்.டி யின் அறைக்கு எடுத்துச் சென்றாள்.
என்ன இலக்கியா வேலை முடிஞ்சதா என்றவனிடம் முடிஞ்சுருச்சு சார் என்றவள் அவசர அவசரமாக ஓடினாள் பஸ் ஸ்டாப்பிற்கு.
அங்கு சென்று பார்த்தால் கடைசி பஸ்ஸும் சென்று விட நொந்து போயி பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து விட்டாள். ஆட்டோ கூட கிடைக்கவில்லை. ஆட்டோவில் தனியாக செல்ல வேறு பயம் அவளுக்கு. என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த பஸ் ஸ்டாப்பின் முன் ஒரு கார் வந்து நிற்கவும் நிமிர்ந்து பார்த்தாள். என்ன இலா பஸ் மிஸ் பண்ணிட்டியா என்றவனை முறைத்தாள். இப்படி முறைச்சா என்ன அர்த்தம் என்றவனிடம் ப்ளீஸ் மிஸ்டர் கார்த்திக் தயவுசெய்து கிளம்புங்க நானே நொந்து போயிருக்கேன் என்றாள் இலக்கியா.
சரி ஓகே உன் வீடு எங்கே இருக்குனு சொல்லு ட்ராப் பண்ணிடுறேன் என்னால தானே பஸ் மிஸ் பண்ணுன என்றவனிடம் தாங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன் ஐ வில் மேனேஜ் என்றாள். இலா என்று ஏதோ கூற வந்தவனை முறைத்து விட்டு அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மறைத்து அதில் ஏறி கிளம்பினாள்.
அவனது கார் அந்த ஆட்டோவை சிறிது இடைவெளி விட்டு பின் தொடர்ந்து கொண்டே வந்தது. என்ன கெட்ட நேரமோ ஆட்டோ ஒரு வளைவில் வளைய அவன் ஆட்டோவை மிஸ் பண்ணி விட்டான்.
ஹலோ என்ன இந்த சந்து வழியா போறிங்க நான் சொன்ன அட்ரஸ்க்கு இந்த வழியா போகக் கூடாதுங்க என்றவளிடம் கம்முனு வாமா சும்மா சும்மா நொய்னுங்காம என்று ஆட்டோகாரன் திட்டவும் அவள் பயந்தே போனாள்.
எத்தனை செய்திகளில் கேட்டிருக்கோம் ஆளில்லாத இடத்தில் வைத்து தன்னை எதுவும் செய்து விட்டாள். கடவுளே என் உயிர் போனால் கூட கவலை இல்லை மானம் போய் விட்டாள் ஐயோ முருகா என்று அவள் பதறிப் போயி அண்ணா ஏன் அண்ணா இப்படி பண்றிங்க நான் சொன்ன அட்ரஸ் என்றவளிடம் வாயை மூடிகிட்டு வாமா என்றவன் ஓரிடத்தில் நின்றிருந்த இன்னொருவனையும் தன் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செல்ல பாவம் இலக்கியா அடுத்து தன் வாழ்வில் என்ன எல்லாம் நடக்குமோ என்று கற்பனைக் குதிரையை ஓட விட்டு பதறிக் கொண்டிருந்தாள். நம்மை இவர்கள் எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் அவளது இதயம் பந்தையைக் குதிரை ஓடுவது போல் பட படவென துடித்தது.
அவள் எண்ணியது போல் ஓரிடத்தில் ஆட்டோ நின்றது . அதுவரை ஆட்டோ ஓட்டிய நபர் இறங்கி இலக்கியாவின் அருகில் அமர்ந்தான். அந்த இன்னொருவன் ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான். ஆட்டோவின் இருபுறமும் இருந்த ஸ்கீரீனை இறக்கி விட்ட அந்த நபரிடம் டேய் என்னடா பண்ணப் போறிங்க என்னை விடுங்கடா என்று கதறினாள் இலக்கியா. ஏய் வாயை மூடு என்ற அந்த நபர் அவளது வாயை தன் கைகளால் பொத்தினான். அடுத்து நடந்ததோ…
எங்கே போச்சு இந்த ஆட்டோ என்று கார் ஸ்டேரிங்கை குத்தியவன் எப்படி மிஸ் பண்ணினேன். அச்சோ இலா ஏன்டி ஒழுங்கா என் கூட வந்திருக்கலாம்ல திமிரு உன்னோட திமிரு பாரு எங்கே கொண்டு போய் விடப் போகுதோ என்று நினைத்தவனின் செல்போன் ஒலிக்க சொல்லுடா என்றான்.
அந்த நாயை உறிச்சு எடுத்துட்டியா நான் சொன்ன மாதிரி தானே செஞ்ச என்றவன் இதோ பத்து நிமிசம் நான் அங்கே இருப்பேன் என்றான்.
என்னங்க நம்ம ப்ரேம் ஏங்க இப்படி பண்ணிட்டு இருக்கான் நிதமும் குடிச்சுட்டு அவன் படுற வேதனையை தாங்க முடியலங்க என்ற சீதாலட்சுமியிடம் விடு சீதா எல்லாம் நாம வாங்கி வந்த வரம் என்றார் ராமச்சந்திரன்.
அப்படி சொல்லாதிங்க டாடி அண்ணனோட கஸ்டம் அவருக்கு மட்டும் தான் புரியும் அதனால அவரை அவரோட போக்குலையே விடுங்க எல்லாம் சரியாகிடும் என்றாள் அர்ச்சனா. சரி அர்ச்சனா உன் வாய் முகூர்த்தம் பழிச்சு உன் அண்ணன் குடிக்காமல் இருந்தால் போதும் என்ற சீதாலெட்சுமி கடும் கோபத்துடன் வீட்டிற்குள் நுழையும் மகனைக் கண்டவர் ப்ரேம் என்னாச்சுப்பா என்றிட ஒன்றும் இல்லைம்மா என்று அவன் வாய் சொன்னாலும் அவன் முகத்தில் இருந்த கடுமை அவன் ஏதோ கோபமாக இருக்கிறான் என்பதை உணர்த்தியது.
அவன் பின்னாலே கிஷோர், வினய் இருவரும் வந்தவர்கள் சீதாவிடம் அம்மா ப்ரேம் எங்கே என்றிட இப்போ தான் கோபமா மேலே போறான் என்றார் சீதா.
அவர்களும் நண்பனின் அறைக்குச் சென்று பார்த்தால் அங்கு பொருட்கள் எல்லாம் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தன. டேய் ஏன்டா உனக்கு இவ்வளவு கோபம் அங்கே ஒருத்தனை இப்போ தான் ஆத்திரம் தீர அடிச்சுட்டு வந்த என்ற கிஷோரிடம் ஆத்திரம் தீரலைடா. என்னோட ஆத்திரம் தீராது ஆஆஆஆஎன்று கத்தியவன் அந்த பொறுக்கி நாயை கொல்லாமல் விட்டுட்டேனே என்றவனிடம் டேய் என்று அவனை சமாதானம் செய்தனர் நண்பர்கள் இருவரும்.
அவர்கள் என்ன சமாதானம் சொன்னாலும் அவன் மனம் அமைதி அடையவில்லை. ஒரு வழியாக அவனிடம் சிறிது நேரம் பேசி சமாதானம் செய்த பிறகு நண்பர்கள் இருவரும் கிளம்பினர்.
என்னடி இது இவளை இன்னும் காணோம் எனக்கு பயமா இருக்குடி போன் வேற சுவிட்ச் ஆப்னு வருது என்றாள் சகுந்தலா. அம்மா அதெல்லாம் அக்கா வந்துருவாள் என்ற பிரதீபாவிடம் காலம் கெட்டு கிடக்குதுடி அவள் வயசுப் பொண்ணு என்று பதறிய சகுந்தலாவைப் பார்த்த பிரதீபா என்னம்மா அக்கா மேல திடீர் பாசம் என்றாள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் இலக்கியா இருந்தால் தான் உன் கல்யாணமும் நடக்கும். அந்த குடிகார நாய்க்கு வேலையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கிடைக்கும். பொறுக்கி பொறுக்கி இன்னைக்கு இந்த நாதாரி குடிக்கலைனு யார் அழுதா ஒழுங்கா இருந்திருந்தான்னா இந்நேரம் அக்காவை போயி கூட்டிட்டு வாடானு அனுப்பிச்சுருப்பேன் இந்த பொண்ணை வேற இன்னும் காணோமே என்று புலம்பித் தவித்தாள் சகுந்தலா.
அங்கே இலக்கியாவின் நிலைமை என்னவாக இருக்குமோ…
இலக்கியா தன் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். மாலை நேரத்தில் அலுவலகத்தில் நடந்த விசயங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்னம்மா இலக்கியா அந்த ****டென்டர் பைல் எங்கே என்றான் அந்த அலுவலகத்தின் மேனேஜர் பாஸ்கர். அது ஒரு கவர்மென்ட் டெண்டர் பைல் அது மட்டும் தொலைந்து போனால் அவ்வளவு தான் அவளது வேலை மட்டும் அல்ல கம்பெனியின் எதிர்காலமே காணாமல் போய்விடும். அந்த பைலை தன் மேஜை மட்டும் அல்லாது அலுவலகம் முழுவதும் தேடினாள் இலக்கியா.
என்ன இலக்கியா பைல் மிஸ்ஸிங்கா என்ற பாஸ்கரிடம் சார் அந்த பைல் எப்படி மிஸ் ஆச்சுனே தெரியலை என்று கூறியவளை தன் இஷ்டம் போல் வாய்க்கு வந்தபடி வசை பாடியவன் அந்த பைல் மட்டும் கிடைக்கலை அவ்வளவு தான். உன் கெரியரையே எம்.டி காலி பண்ணிருவாரு அது எவ்வளவு இம்பார்டன்ட் பைல்னு தெரியும் தானே என்று மீண்டும் மீண்டும் அவளை நோகடித்தான்.
அவள் கண்கள் கலங்கினாலும் அழாமல் சார் சத்தியமா அந்த பைலை நான் பத்திரமா தான் வச்சுருந்தேன் என்றவளிடம் அப்போ எங்கே போச்சு பைல்க்கு கால் முளைச்சு நடந்து போயிருச்சா என்ற பாஸ்கரிடம் சார் என்று ஏதோ கூற வந்தவளின் பின்னால் வந்து நின்றான். இம்மி அளவு கூட தன் உடலின் பாகங்கள் தெரியாமல் புடவை கட்டி இருக்கும் அவளைப் பார்த்து சிரித்தவன் இந்த பிரச்சனை பைல் தொலைஞ்சது எதைப் பற்றியுமே நான் எம்.டி கிட்ட சொல்ல மாட்டேன். இன்னும் சொல்லப் போனால் அந்த பைல் உன்னால தொலையலை. அதை தொலைச்சது வேற யாரோ என்று எம்.டி கிட்ட உன் பெயரே வெளியே தெரியாதபடி நான் பார்த்துக்கிறேன் என்றவனிடம் ரொம்ப தாங்க்ஸ் சார் என்றாள் இலக்கியா. வெயிட் வெயிட் இலக்கியா அவ்வளவு அவசரம் எதற்கு இதெல்லாம் நான் செய்யனும்னா ஒரு நாள் ஒரே நாள் என் கூட நீ இருக்கனும். ஒரு நாள் முழுக்க நீயும் , நானும் என் கெஸ்ட் ஹவுஸ்ல என்னோட பெட்ரூம்ல என்னோட பெட்ல என்று கூறி் அவன் அவளை அணைத்திட அவனைப் பிடித்து தள்ளி அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள் இலக்கியா.
ஏய் என்னடி கொழுப்பா என்றவன் அவளது கன்னத்தில் அறைந்து என்னடி பெரிய பத்தினி வேசம் போடுற இந்த ஆபிஸ்ல என்னை மீறி நீ வேலை பார்க்கிறதே கஷ்டம் அதனால கண்டிப்பா நாளைக்கு உன் முடிவை சொல்ற. இன்னைக்கு ராத்திரி முழுக்க யோசி நாளைக்கு உன் பதிலை சொல்லு. நளைக்கு ராத்திரி என் கூட படுக்குற இல்லை மவளே உன்னோட கெரியரையே காலி பண்ணிருவேன் என்று கூறி விட்டு எவ்வளவு திமிர் என்னையவே அடிக்கிற என்று அவளது கன்னத்தில் மீண்டும் அறைந்து விட்டு சென்றான்.
அவள் நடந்த நிகழ்வுகளை தன் மனக்கண்ணில் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டே இரவு தூக்கம் இன்றித் தவித்தாள்.
தன்னுடைய கற்பு தன் கணவனுக்கான சொத்து. தனக்கு திருமணம் என்ற ஒன்று நடக்காமல் கூட போகலாம் ஆனால் தன்னுடைய கற்பை ஒரு கயவனின் நயவஞ்சக சூழ்ச்சியில் இழக்க தயாராக அவள் இல்லை. தன்னுடைய நிலைமையை நினைத்து நினைத்து வருந்தினாள்.
கடவுளே ஏன் எனக்கு இப்படி ஒரு நிலை. ஒருவேளை அப்பா உயிரோடு இருந்திருந்தால் தனக்கு இப்படி ஒரு அவல நிலை ஏற்பட அவர் விட்டிருக்க மாட்டார் என்று புகைப்படமாக இருந்த தன் தந்தையிடம் கண்ணீர் விட்டு அழுதாள்.
அம்மா நான் பிறந்ததும் நீ இறந்து போனதற்கு பதிலாக நான் இறந்து போயிருக்கக் கூடாதா என்று வருந்தினாள்.
என்ன ஆனாலும் சரி அந்த பாஸ்கரின் எண்ணத்திற்கு எந்த சூழ்நிலையிலும் உடன் படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
இரவு உணவு கூட உண்ணாமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.
பாஸ்கர் தன் வீட்டில் தன் படுக்கையில் படுத்திருந்தவன் அருகில் உறங்கும் மனைவியைக் கண்டு இவளை எல்லாம் கட்டிகிட்டு என்று நினைத்து சலித்துக் கொண்டவன் நாளை இரவு எப்படியாவது இலக்கியாவுடன் செலவழிக்க திட்டமிட்டான். அவளை தான் ஆராதிக்கும் விதத்தில் அவள் நிரந்தரமாக தன் ஆசை நாயகியாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த நேரம் அவனது செல்போன் ஒலிக்க அதில் கவனம் சிதறி எடுத்துப் பேசினான்.
இரவு எவ்வளவு நேரம் அழுதாளோ அப்படியே உறங்கிப் போயிருந்தாள் இலக்கியா. எழுந்தவள் மணியைப் பார்க்க ஏழு எனக் காட்டவும் அவசர அவசரமாக குளித்து விட்டு வேலைக்கு கிளம்பினாள்.
சகுந்தலா வைத்த இட்லியை பெயருக்கு பிய்த்துப் போட்டவள் மதிய உணவை வாங்கிக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு ஓடிட பஸ் போய் விட்டது.
கடவுளே என்று நொந்து கொண்டவள் அடுத்த பஸ் பிடித்து அலுவலகம் வருவதற்குள் அரை மணிநேரம் தாமதம் ஆகி விட்டது.
நேற்று அவள் தொலைத்ததாக பாஸ்கர் கூறிய பைல் அவளது டேபிள் ட்ராயரில் இருக்க அவளுக்கு ஆச்சர்யம் தாங்க வில்லை.
அதை சரி பார்த்து எம்.டி அறைக்குள் நுழைந்தவள் அதிர்ந்தாள். அவள் உதடு மெதுவாக எதிரில் இருந்தவனின் பெயரை முனுமுனுத்தது கா..ர்..த்..தி..க்..
இவன் எப்படி இங்கே என்று நினைத்தவள் தன்னை சமாளித்துக் கொண்டு தயக்கத்துடன் அவன் முன்பு நிற்க அவளை அலட்சியமாக பார்த்தவன் இது தான் ஆபிஸ் வரும் நேரமா மிஸ் ஆர் மிஸஸ் என்றிட மிஸ்.இலக்கியாரவீந்திரன் என்றாள் அவள்.
பச்ச் என்றவன் இது தான் வேலைக்கு வரும் நேரமா என்று எரிந்து விழுந்தவனிடம் சாரி சார் பஸ் மிஸ் பண்ணிட்டேன் என்றாள். நீ சாரி நீங்க பஸ்ல தான் வரிங்களா என்றவனின் குரலில் ஒரு ஏளனத்தை உணர்ந்தவள் அமைதியாக நிற்க பை த வே மிஸ்.இலக்கியாரவீந்திரன் நான் தான் இந்த ஆபிஸோட புது எம்.டி. எனக்கு பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம். இன்னைக்கு ஏதோ உங்களை விட்டுட்டேன். இதே போல தொடர்ந்து லேட்டா வந்திங்கனா உங்களை டெர்மினேட் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன் போங்க மேடம் போயி உங்க வேலையைப் பாருங்க என்று அவன் எரிச்சலாக் கூற அமைதியாக தன் டேபிளுக்கு வந்து வேலையை கவனித்தாள்
அவளுக்கு அவனை அங்கு பார்த்ததும் அவளது நினைவலைகள் சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சில கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்க்க கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டவள் கண்ணை மூடி தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தாள்.
கடவுளே என் வாழ்க்கையில் யாரை நான் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ அவனை நான் தினமும் ஒரு முறையாவது பார்த்து ஆக வேண்டிய கட்டாயம் ஏன் எனக்கு இந்த நிலைமை என்று வருந்தியவள் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவளை என்ன பண்ணலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தவன் சரி என்று அவளை தன் கேபினுக்கு அழைத்தான். எஸ் சார் என்றவளை ஏற இறங்க பார்த்தான். அவளோ அவன் பார்வையை கண்டு கொண்டு தன் உடையை பார்க்க எல்லாம் சரியாக தானே இருக்கு பொறுக்கி எப்படி பார்க்கிறான் பாரு என்று மனதிற்குள் அவனை வசை பாடிக் கொண்டிருந்தாள்.
அவளது எண்ண ஓட்டத்தை உணர்ந்தவன் சிரித்து விட்டு ஆமாம் இலா என்றவன் சாரி இலக்கியா உங்களுக்கு வயசு என்ன என்றான். உங்களை விட இரண்டு வயசு கம்மி தான் சார் என்றாள். ஓஓ ட்வென்ட்டிசிக்ஸ் சரி சரி ஆமாம் உனக்கு கல்யாணம் ஆகலையா இல்லை வசதியா எவனும் கிடைக்கலையா என்றவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.
என்ன முறைப்பு உண்மையைத் தானே கேட்கிறேன் என்றவனைப் பார்த்து மிஸ்டர் கார்த்திக் மைன்ட் யுவர் வேர்ட்ஸ் ஐ யம் ஜஸ்ட் யுவர் ஸ்டாஃப் நாட் ஸ்லேவ் நீங்க என்ன பேசுனாலும் கேட்டுட்டு அமைதியா போக முடியாது என்றவளைப் பார்த்து டேபிளைத் தட்டி விட்டு எழுந்தான்.
அவளின் கழுத்தைப் பிடித்தவன் என்னடி ஓவரா சவுண்ட் விடுற நீ இப்பவும் என் கிட்ட வேலை பார்த்துட்டு இருக்க நான் நினைச்சா உன்னை வேலையை விட்டு தூக்குறது மட்டும் இல்லை வேற எங்கேயுமே உன்னை வேலையே பார்க்க முடியாத அளவுக்கு செய்ய முடியும் புரிஞ்சதா என்றவன் அவள் கழுத்தை விட்டான். அவள் இரும ஆரம்பிக்க அப்பொழுது தான் தான் செய்த காரியத்தை உணர்ந்தவன் சாரி இலா என்றிட ச்சீய் என்றவள் இருமிக் கொண்டே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
சரி மிஸ் இலக்கியா உங்களை நான் ஏன் இங்கே வரச் சொன்னேன்னா இனி நீங்க தான் என்னோட பர்சனல் செகரட்ரி சோ உங்களுக்கு என் ரூம்லையே ஒரு கேபின் ரெடி பண்ணச் சொல்லிருக்கேன் அதற்கான அப்பாயின்மென்ட் ஆர்டர். நாளையில் இருந்து என்னோட ரூம்ல என் கண்ணு முன்னாடி தான் உனக்கு வேலை சாரி உங்களுக்கு வேலை என்றவன் சிரித்துக் கொண்டே அவளருகில் வந்து அவள் இடையில் கை வைக்க வருவது போல் வர அவள் பயந்து விலக அவளுக்கு பின்னால் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்தான்.
அவளது பயத்தை ரசித்தவன் மவளே மாட்டினியா என் கிட்ட என்று நினைத்தவன் சிரித்து விட்டு தன் இருக்கையில் அமர்ந்தான். அவளது கண்கள் கண்ணீரை சிந்துவதற்கு தயாராக இருக்க அவளை மேலும் சீண்ட விரும்பாதவன் சரி போங்க போயி உங்க வேலையை பாருங்க என்றான். அவள் அமைதியாக தன் வேலையை பார்க்க அவளிடத்தில் சென்று அமர்ந்தாள்.
தன் வேலையில் கஷ்டப் பட்டு தன் கவனத்தை திருப்பி வேலையைக் கவனித்தாள். கடவுளே இத்தனை வருசமா இவன் முகத்திலே முழிக்காமல் எப்படியோ இருந்துட்டோம். இவன் ஏன் திரும்ப வந்தான். அவனைப் பற்றிய பழைய நினைவுகள் மனதில் தோன்றிட கஸ்டப்பட்டு அதை நினைவுகளில் இருந்து மீண்டு வந்தவள் தன் வேலையை பார்த்தாள்.
என்ன அம்மா ஏன் டல்லா இருக்கிங்க என்ற பிரதீபாவிடம் இல்லடி உன் அக்கா ஆபிஸ்ல லோன் போடுவாளா? மாட்டாளா? என்ற கவலை தான்டி என்றாள் சகுந்தலா. அம்மா அதான் உன்கிட்ட சேவிங்க்ஸ் இருக்குல அப்பறம் என் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்த பணத்தில் எடுத்துக் கொடுத்து அண்ணாக்கு வேலை வாங்களாமே என்றாள் பிரதீபா. ஏன்டி முட்டாளா நீ நம்ம பணத்தை பத்திரப் படுத்தினால் தான் பிற்காலத்தில் நமக்கு உதவும் அவளை நான் வளர்க்கிறதே நமக்கு உழைச்சு கொட்டனும்னு தான். அதனால் தான் அவளோட மனசுல நீ பொண்ணு இல்லை பையன் மாதிரி உன் தம்பி, தங்கச்சிக்கு உன்னால தான் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியும்னு கொஞ்சம் கொஞ்சமா அவளோட மனசை மாத்தி வச்சுருக்கேன் என்றாள் சகுந்தலா.
அப்போ அக்காவுக்கு கல்யாணம் என்ற பிரதீபாவிடம் அதெல்லாம் பண்ணி வைக்க மாட்டேன். அவளோட உழைப்பு நான் சாகும் வரை எனக்கும், அதற்கு பிறகு உங்களுக்கும் வேண்டும் என்ற சகுந்தலாவைப் பார்த்து அவள் மகள் பிரதீபாவிற்கே ஏன் தான் இந்த அம்மாவுக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணமோ என்று தான் தோன்றியது.
… தொடரும்…
அழகான காலைவேளையில் பறவைகளின் கீச் கீச் என்ற சத்தத்தில் சந்தோசமாக கண் விழித்தாள் அவள் இலக்கியா. கண் விழித்தவள் காலண்டரைப் பார்க்க கடுப்பாகிப் போனாள். பிப்ரவரி 14. உலக காதலர் தினம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அது அவளது காதல் முறிந்த தினம். துக்கநாள் என்றே சொல்லலாம். அவள் மனம் என்றோ செத்து மடிந்த தன் முதல் காதலை நினைத்துப் பார்த்தது. அது வெறும் இன்பாச்சுவேசன் தான் என்று அவள் மூளைக்குத் தெரியும் ஆனால் பாலாய் போன மனசு அதை ஒத்துக் கொள்ள வில்லை.
இலக்கியா அந்த குடும்பத்தின் மூத்தமகள். அப்பா ரவீந்திரன் ஒரு விபத்தில் தவறிவிட்டார். அம்மா வெண்மதியும் அவள் பிறந்தவுடனே இறந்து போனதால் அவளது தந்தை ரவீந்திரன் சகுந்தலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சகுந்தலாவிற்கு இரண்டு பிள்ளைகள் மகன் தீபக். மகள் பிரதீபா. மற்ற மாற்றாந்தாய் போல் சகுந்தலா அவளை அடித்து துன்புறுத்தி கொடுமை செய்யவில்லை. மாறாக அன்பு என்ற போர்வையில் அவள் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார். அதை உணராமலே தன் சித்தியை அம்மா என்று அவர் மீது அதிக பாசம் வைத்துக் கொண்டு இருக்கிறாள் இலக்கியா.
நம்ம நாயகியை பத்தி சொல்லனும்னா ரொம்ப பெரிய பேரழகி எல்லாம் கிடையாது . நம்ம அக்கம் பக்கம் வீட்டில் இருக்கிற பொண்ணுங்க மாதிரி சாதாரண பொண்ணு அவ்வளவு தான்.
இஞ்சினியரிங் முடிச்சுட்டு ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பொதுவா இந்த காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் அவளுக்கும். பார்க்கும் கண்கள் எல்லாம் நல்ல கண்கள் என்று சொல்லி விட முடியாதல்லவா. அப்படிப் பட்ட ஒரு கழுகின் கண் அவள் மீதும் பட்டது. அதனால் அலுவலகத்திற்கு செல்லவே எரிச்சலாக இருந்தது.
ஆனால் குடும்ப சூழ்நிலை அவள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். அவளது வருமானத்தை நம்பித் தான் மொத்த குடும்பமும் இருந்தது. அப்பா ஏதோ கவர்மென்ட் ஆபிஸில் வேலை பார்த்ததால் அம்மாவிற்கு பென்சன. வருகிறது. அதை வைத்து தான் பிள்ளைகளை படிக்க வைத்தார் சகுந்தலா. அவர் எங்கு படிக்க வைத்தார் இலக்கியா தான் எல்லாம் படிக்க வைத்தாள். இலக்கியாவின் பாட்டி தெய்வானை தான் பேத்தியின் கல்லூரி செலவிற்கு பணம் கொடுப்பார். தனக்கு தன் பாட்டி கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து சேமித்து தம்பி, தங்கைக்கு செலவு செய்தாள்.
எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்தவளின் சிந்தனை வீட்டு பிரச்சினைகளை பற்றியே சுற்றி வந்தது. அப்பாவின் வாரிசு வேலை தம்பி தீபக்கிற்கு கிடைக்க வேண்டும் என்று சகுந்தலா ஆசைப்படுகிறார். மூத்ததாரத்தின் மகளான இலக்கியாவிற்கு தான் வேலை கிடைக்க வாய்ப்பு இருந்த போதிலும் அவள் அதை தனக்கு வேண்டாம் என்றும் தம்பிக்கு கிடைப்பதில் தனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றும் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டாள். அதனால் சீனியாரிட்டி மிஸ் ஆவதை ஈடு செய்ய மூன்றரை லட்சம் லஞ்சம் கொடுத்தால் அந்த வேலையை உடனே தீபக்கிற்கு வாங்கி விடலாம் அதற்கு பணத்தை எப்படியாவது புரட்டிக் கொடுமா என்று சகுந்தலா இலக்கியாவிடம் கேட்க அவளும் அலுவலகத்தில் லோன் கிடைக்குமா என்று பார்க்கிறேன் என்றாள்.
வீட்டில் உள்ள சேமிப்புகள் பிரதீபாவின் திருமணத்திற்கு வேண்டும் என்று சகுந்தலா கூறி விட்டதால் தீபக்கின் வேலைக்கு எப்படி பணம் புரட்டுவது என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தாள்.
என்னம்மா ஆபிஸ் கிளம்பிட்டியா என்று வந்த சகுந்தலாவிடம் ஆமாம் அம்மா என்றாள் இலக்கியா. தம்பி வேலை விசயமா என்று இழுத்தவரிடம் சரிங்கம்மா முயற்சி பண்ணி பார்க்கிறேன் என்றாள் இலக்கியா. என்னடா முயற்சி பண்றேன்னு சொல்லிட்ட நீ தானே இந்த குடும்பத்தோட மூத்த பொண்ணு உன்னை நம்பி தானே உன் தம்பி, தங்கச்சி இருக்காங்க அவங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நீ தானே உருவாக்கி கொடுக்கனும் என்று தனது வழக்கமான டையலாக்கை அவளிடம் கூறினார் சகுந்தலா. அவளும் தன் அம்மாவிடம் ஆபிஸ்ல லோன் போட முடியுமான்னு பார்க்கிறேன்மா என்று கூறி விட்டு உணவுமேஜையில் அமர்ந்தாள். அவளுக்கான உணவாக இட்லி இருக்க பிடிக்கவில்லை என்றாலும் பெயருக்கு இரண்டு இட்லியை பிய்த்துப் போட்டு சாப்பிட்டு மதிய உணவு அடங்கிய டப்பாவை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.
பஸ் ஸ்டாப்பில் இவள் வயது பெண்கள் எல்லோரும் காதலர் தினம் என்பதால் தங்களை அலங்கரித்துக் கொண்டு நின்றிருந்தனர். அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோசத்தைக் கண்டவள் கசந்த புன்னகையுடன் அவர்களைக் கடந்து பஸ்ஸில் ஏறினாள். கூட்டமான பஸ்ஸில் இடி மன்னர்களுக்கு நடுவில் பயணம் செய்து ஒரு வழியாக அலுவலகம் சென்று விட்டாள்.
அலுவலகத்தில் அவளையே சுற்றி வந்த அந்த கழுகுப் பார்வையை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எரிச்சலாக இருந்த போதும் அதை பொருட்படுத்தாமல் தன் வேலையை பார்த்தாள்.
என்ன திமிரு நான் பார்க்கிறேன் கொஞ்சமாவது கண்டுக்கிறாளானு பாரேன். இருடி இன்னைக்கு உன்னை என்ன பண்ணுறேனு பாரு என்று நினைத்தவன் அந்த பைலை பார்த்து சிரித்துக் கொண்டு அதை மறைத்து வைத்தான்.
இலக்கியாவிற்கு பொதுவாகவே நண்பர்கள் என்று யாரும் இல்லை. அவள் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டாள். அலுவலகத்தில் அவளுக்கு பெயர் சிடுமூஞ்சி . அநாவசியமாக எவரிடமும் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள்.
அவளைப் பொறுத்தவரை நட்பு என்பது எல்லாமே பொய். ஒருவர் மற்றவரிடம் நட்பு கொள்வது ஒரு விதமான தேவைக்காகவே அவர்களது தேவை முடிந்த பிறகு நட்பு என்ற ஒன்று அங்கு இருப்பதில்லை.
இந்த உலகில் எந்த நண்பனும் நிரந்தரமானவன் இல்லை என்பதே அவளது எண்ணம். அதற்கான காரணங்களும் உண்டு. நண்பர்களால் பட்ட வலிகளும் , வேதனையும் தான் அவளால் யாரையும் நண்பனாக ஏற்றுக் கொள்ள முடியாத காரணமாகவும் உள்ளது.
அந்த கடற்கரை முழுக்க காதல் ஜோடிகளின் கூட்டம் எங்கும் அலை மோத அவனோ அவர்களைப் பார்த்து பொறம்போக்கு நாய்ங்க இதுங்க பண்ணுற எச்ச வேலைக்கு பெயர் காதலாம் என்றான். ஏன்டா அப்படி சொல்லுற என்ற நண்பனிடம் பின்ன இங்கே சுத்தற எவனாவது கூட சுத்துறவளையே கல்யாணம் பண்ணிப்பான்னு நினைக்கிற கண்டிப்பா இல்லை. அவளுக்கு அவனோட பணம் மேல ஆசை. அவனுக்கு அவளோட உடம்பு மேல மோகம். இதுக்கு பெயர் காதலா அப்படியே இவங்க ஒருத்தருக் கொருத்தர் கல்யாணம் பண்ணிகிட்டாலும் அடுத்த மூன்று மாதத்தில் அவள் இன்னொருத்தன் கூட படுத்துட்டு இருப்பாள் இது காதலா என்றவன் பீர் பாட்டிலை தூக்கிப் போட்டு உடைத்தான். என்னடா மச்சான் என்ற மற்றொரு தோழனை தடுத்தவன் ப்ரேம் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படியே முடிஞ்சு போனதை நினைத்து கவலைப் பட்டுட்டே இருப்ப என்றான். இல்லை கிஷோர் முடியலடா இந்த பைத்தியங்களை பார்க்கும் போது நானும் ஒரு காலத்தில் இப்படி பைத்தியக் காரனா தான் சுத்திட்டு இருந்தேன்னு நினைத்தால எரியுது. இங்கே இந்த இடத்தில் சுனாமி வந்து இந்த மொத்த பைத்தியங்களையும் அள்ளிகிட்டு போகனும் அதான் எனக்கு வேண்டும் என்றவன் ஒரு புல் பாட்டில் பீரைக் குடித்தான்.
கிஷோர் அவனைத் தடுக்க வர விடு கிஷோர் என்றான் இன்னொரு நண்பன் வினய். முழு பாட்டில் பீரையும் காலி செய்தவன் நேராக தன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.
குடித்து தள்ளாடியபடி வரும் மகனைக் கண்டு கவலைப் பட்டார் அவனது அன்னை சீதாலட்சுமி. கடவுளே என் பையனுக்கு எப்போ இந்த பழக்கம் விடும் . அவனை இப்படி பார்க்க முடியலையே என்று நொந்து கொண்ட சீதாலட்சுமியை தன் தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தினார் அவரது கணவன் ராமச்சந்திரன்.
அவளது கண்கள் கண்ணீரைச் சிந்தினாலும் அதை துடைத்துக் கொண்டவளின் உடலும், மனமும் கூசியது மாலை அலுவலகத்தில் நடந்த நிகழ்வை நினைத்து. பஸ்ஸில் அமர்ந்திருப்பதால் தன் கண்ணீரை பிறர் அறியாமல் துடைத்துக் கொண்டவள் நாளை எதிர்கொள்ளப் போகும் பிரச்சனையை எண்ணியபடியே நொந்து கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
நேரம் காலம் தெரியாமல் சகுந்தலா வேறு என்ன இலா லோன் பத்தி ஆபிஸ்ல பேசிட்டியா என்றதும் அவளுக்கு வந்த கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு இல்லைம்மா என்று கூறி விட்டு தன்னறைக்குள் நுழைந்து மெத்தையில் சரிந்தாள். அழுது அழுது ஓய்ந்தவள் எழுந்து சென்று பாத்ரூமிற்குள் நுழைந்து ஷவரைத் திறந்து விட்டு அதன் அடியில் நின்றாள்.
நாளை அலுவலகத்தில் என்ன நடக்குமோ. தன் வேலை போய்விட்டால் இந்த குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது. அடுத்து வேலை கிடைக்க எத்தனை நாளாகுமோ என்ற கவலையிலே அவள் நனைந்து கொண்டு இருந்தாள்.