அன்றைய தினம் காலேஜ் முடிந்ததும் பஸ்ஸிற்காக காத்திருந்தாள் சுதர்ஷினி. மாலை நேரம் என்றபடியால் பஸ் கூட்டமாக இருந்தது. அதனால் சுதர்ஷினி அதில் ஏறாமல் அடுத்த பஸ்ஸிற்காக காத்திருந்தாள். அப்போது ஒருவன் உடம்பில் காயத்துடன் வேகமாக ஓடி வந்தான். அவனைத் துரத்திக் கொண்டு பின்னால் வேகமாக வந்தான் வீரேந்திர ப்ரசாத். அவனைப் பார்த்த சுதர்ஷினி. ‘இவன்தானே இன்னைக்கு காலேஜ்ல ஒரு ஸ்டூடண்டைப் போட்டு அடிச்சது… இப்போ என்ன இவன் இன்னொருத்தனை துரத்திட்டு போறான்… இவனுக்கு யாரையாவது அடிக்கிறதான் வேலையா….?’ என நினைத்தவள், பஸ் வந்ததும் அதில் ஏறி வீட்டிற்குச் சென்றாள்.
இங்கே வீரேந்திர ப்ரசாத் துரத்திக் கொண்டு வந்தவன், வீதி ஓரத்தில் இருந்த இளநீர் வைத்திருந்த தள்ளு வண்டியைப் பார்த்தான். அவன் ஓடி வந்த வேகத்திலே அந்த வண்டியில் இருந்த இளநீர் குலை ஒன்றை எடுத்து முன்னால் ஓடியவன் மீது வீசினான். கனமான இளநீர் குலை அவனின் முதுகில் பட கீழே விழுந்தான். கீழே விழுந்தவன் எழ முயலும் போதே அவனை பிடித்தான் வீரேந்திர ப்ரசாத். அவன் முதுகில் முட்டுக்காலைப் ஊன்றி, அவனின் கையை முதுகுப் புறம் கொண்டு வந்தான். அதில் அவன் அலறினான்.
அவன் வாயிலையே ஒன்று போட்டு, “ஏன்டா உனக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்தா என் ஸ்டேஷனுக்கு வந்து… லாக்கப்ல இருக்கிற அந்த பொறுக்கிய கூட்டிட்டு போக பாத்திருப்ப…? நீ எப்பவுமே வெளிய வராத மாதிரி பண்றேன் வாடா ஸ்டேஷனுக்கு….” என்று அவனை இழுத்துக் கொண்டு செல்ல, அவன் முன்னால் ஒரு ஜீப் வந்து நின்றது. அதில் இருந்து எட்டிப் பார்த்தான் பரத்.
“ஹாய் மச்சான்…”
“நீ எங்கடா இங்க…? என் பின்னாடில நீ ஓடி வந்த…?”
“மச்சான் நீ சொல்றது கரெக்ட்… உன் பின்னாடிதான் நான் ஓடி வந்தன்.. ஆனால் நீ ரொம்ப வேகமாக ஓடின.. என்னால ஓட முடியல.. அதுதான் ஸ்டேஷன் போயிட்டு ஜீப்பை எடுத்துட்டு வந்தன் இவனை பிடிக்க… எப்படி மச்சான் என்னோட ஐடியா…?”
“ரொம்பபபபபப சூப்பர்… நீ எல்லாம் போலீஸ்னு வெளியில சொல்லிடாத மச்சான்…”
“ஓ.. சரிடா சரி… நீ ஜீப்ல ஏறு.. இவனை ஸ்டேஷன் கொண்டு போயிட்டு லாக்கப்ல வச்சி நம்ம வேலையை ஆரம்பிக்கலாம்…”
“அப்படியே பண்ணிடலாம்….” என்றவன் அவனை ஜீப்பில் ஏற்றி விட்டு அவனும் ஜீப்பில் ஏறினான்.
………………………………………………….
வீட்டுக்கும் வாசலிலுக்குமாய் நடந்து கொண்டு இருந்தார் சுமதி. சோபாவில் இருந்து காப்பி குடித்துக் கொண்டு இருந்த சரவணன் இவர் அங்கும் இங்கும் நடப்பதைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
“என்ன சுமதி வீட்டை அளந்துட்டு இருக்க…?”
“வீட்டை ஒண்ணும் அளக்கல.. நம்ம பொண்ணை காணோம்னு நேரத்தை பாக்குறதும் வாசலை பாக்குறதுமா இருக்கேன்…. ஆபிஸ் வேலைக்கு போற நீங்களே வந்துட்டீங்க… இவ இன்னும் வீடு வந்து சேரல….” என்று சத்தம் போட்டார்.
“சுமதி அவ ஒண்ணும் ஸ்கூல் படிக்கிற சின்னப் பொண்ணு இல்லை… காலேஜ்ல பாடம் படிப்பிக்கிற டீச்சர்… நீ இன்னும் அவளைச் சின்னப் பொண்ணுனு நெனச்சிட்டு இருக்காத சுமதி…”
“நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா…? நேரம் போயிட்டு இருக்கு… மழை வேற வர மாதிரி இருக்கு… எனக்கு பயமா இருக்கு…” என்றார்.
“பயப்படாத சுமதி… உன் பொண்ணு தைரியமானவ… அவ வந்திடுவா… ஒருவேள பஸ் வர லேட்டாயிருக்கும்…”
“என்னை சமாதானப்படுத்துறத விட்டுட்டு போய் ஒரு எட்டு அவளைப் பாத்துட்டு வாங்க…” என்றார்.
“அப்பா பாருங்க அம்மாவை… அம்மா ஸ்கூட்டிய வாங்கினா ஓடணும்மா… ஆனா இந்த ஸ்கூட்டி வாங்கினதுல இருந்து ஒரு நாலு தடவைதான் அதை ஓட விட்டுருப்ப…”
“நீ சாப்பிடாம அழுது அடம்பிடிச்சதனாலதான் நான் அந்த ஸ்கூட்டிய வாங்கிக் கொடுத்தன்… அதுல போறது உனக்கும் ஷேஃப்டி இல்ல… உனக்கு முன்னால வர்றவங்களுக்கும் உன்னால ஷேஃப்டி இல்ல…”
“அம்மா என்னமா நீ…. அங்க காலேஜ் படிக்கிறவங்க எல்லாம் ஸ்கூட்டில வர்றாங்க… படிப்பிக்கிற நான் பஸ்ல போறன்… ப்ளீஸ் மா… நான் பத்திரமா போயிட்டு பத்திரமா வருவன்மா… ப்ளீஸ் மா… அப்பா அம்மாக்கிட்ட சொல்லுங்கபா….”
“சுமதி…. அவதான் ஆசப்படுறால்ல போயிட்டு வரட்டுமே….” என்று ஒருவாறு மனைவியை சமாதானப்படுத்தினார். அதன் பின்னர் சுமதி, “சரி பாத்து பத்திரமா போகணும்… வேகமாக போகக்கூடாது…” என்றார்.
“ஐஐஐஐஐ ஜாலி… அம்மா, அப்பா லவ் யூ சோ மச்…. அம்மா நான் போய் ஃப்ரெஷாகிட்டு வந்திடுறன்… எனக்கு ஒரு காப்பி போட்டு வைங்க…” என்றவள் பாக்கை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
போகும் மகளைப் பார்த்த சுமதி சரவணனிடம், “இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா போதும்ங்க…”
“இப்போதானே சுமதி அவ காலேஜ்க்கு போறா… கொஞ்ச நாள் போகட்டுமே…”
“இப்படி சொல்லிச் சொல்லித்தான் அவள மேலும் மேலும் படிக்க வச்சீங்க… இப்போ இப்படி சொல்றீங்க… பாருங்க சீக்கிரமா வரன் பாக்குற வேலையை பாருங்க…” என்றவர் மகளுக்கு காப்பி போடச் சென்றார்.
…………………………………………………
வீராவும் பரத்தும் ஜீப்பில் ஏற்றியவனை கொண்டு வந்து சர்வேஷின் லாக்கப்லயே போட்டனர்.
“உங்க ஙொய்யாவோட பையனை காப்பாத்தி வெளில கூட்டிட்டுப் போகத்தானே வந்த… இப்போ அவன்கூட ஒரு லாக்கப்ல இருந்து கம்பி எண்ணு….” என்றான். அங்கிருந்த கான்ஸ்டபிளை அழைத்தவன், “இங்க பாருங்க இவனுக்கு டைம்க்கு சாப்பாடு குடுங்க… ஆனால் யாரையும் இவனை பாக்க விட வேணாம்… நான் வீட்டுக்கு போயிட்டு சீக்கிரமா வந்திடுறன்…”
“சரிங்க சார்…”
“மச்சான் வா வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்…”
“இல்லடா நீ போ… நான் இன்னொருநாள் வர்றேன்…”
“பரத் சொன்னா கேளு…”
“இல்லடா நான் வரல… ஆஸ்ரமத்துல இருந்து மதர் கால் பண்ணி என்னை வரச்சொன்னாங்க…”
“அப்டியா சரி நீ போய் மதரை பாரு… நானும் அவங்கள கேட்டதா சொல்லு…”
“கண்டிப்பா சொல்றேன் மச்சான்….” என்று சொல்லிவிட்டு பரத் அவனின் புல்லட்டில் செல்ல, வீரா அவனது ஜீப்பில் சென்றான்.
வீரா வீட்டிற்கு வந்ததும், அவனைப் பார்த்த அவனின் பைரவ் (நாய்க்குட்டி) அவனிடம் ஓடி வந்தது. “பைரவ்…” என்று அதைக் கொஞ்சியபடி தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான். அவனது தாய் சுபத்ரா அவனிடம், “வீரா…” என்று அழைத்து கண்ணைக் காட்டினார்.
“பாத்து கண்ணைக் காட்டி கண்ல சுழுக்கு வந்திடப் போகுது. நான் இங்க இருக்கிறது உன் பையனுக்கு நல்லாவே தெரியும்… நீ ஒண்ணும் சொல்லாத…”
“ஆமா போலீஸ்கார குடும்பத்துல இருந்திட்டு நான் படுற பாடு இருக்கே…”
“அம்மா, இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை…?”
“வீரா உன்னோட அப்பாதான் வீட்ட வந்துல இருந்து சத்தம் போட்டுட்டு இருக்கிறாரு…”
“அம்மா உண்மைய சொல்லுங்க அப்பா சத்தம் போட்டாரா இல்ல என்னை திட்டினாரா…?” என்று வீரேந்திர ப்ரசாத் கேட்க, சுபத்ராவோ, “அது வந்து வீரா….”
“சும்மா இரு சுபா… வீரா நீ பண்றது எதுவும் சரியில்லையே….”
“எதுப்பா சரியில்லை…?”
“அந்த கன்னியப்பன் ரொம்ப மோசமானவன் அவன் பையனையே அரெஸ்ட் பண்ணியிருக்க…”
“அரெஸ்ட் பண்ணாம என்ன பண்ணச் சொல்றீங்க அப்பா… நான் ஒண்ணும் நாட்டுக்கு நல்லது பண்ணவனை அரெஸ்ட் பண்ணல… அவன் ஒரு பொறுக்கினா அவன் பையன் கேடுகெட்ட பொறுக்கியா இருக்கான்… காலேஜ்க்குள்ள போதைப்பொருள் விக்கிறான்… அவன விடச் சொல்றீங்களா…?”
“வீரா நான் அவன விடச் சொல்லலை… ஆனா அந்த கன்னியப்பன் ஸ்டேஷனுக்கு வந்தப்போ நீ ஏன் சல்யூட் பண்ணல…? அது தப்புத்தானே வீரா…”
“அப்பா ஐ ஆம் சாரி… என்னால அந்த பொறுக்கிக்கு எல்லாம் சல்யூட் பண்ண முடியாது….”
“வீரா அவன் மோசமானவனா இருந்தாலும் அவனோட பதவிக்கு நாம மரியாதை குடுத்துத் தானேயாகணும்…”
“சாரிப்பா என்னால அது முடியாது… நான் முதல் முதலா இந்த காக்கிச் சட்டையை போட்டுட்டு வந்து உங்க முன்னாடி நின்னப்போ நீங்க என்னப்பா சொன்னீங்க…? வீரா இந்த காக்கிச்சட்டை உன்னோட உடம்புல இருக்கிற வரைக்கும் நீ எந்த தப்புக்கும் துணை போகக் கூடாது… எந்த அய்யோகக்கியனுக்கும் முன்னால தலைகுனியக் கூடாதுனு சொன்னீங்கல… அதனாலதான் அந்த பொறுக்கி அமைச்சராவே இருந்தாலும் நான் சல்யூட் பண்ணல…”
“வீரா புரிஞ்சிக்கோ… உன்னோட கோபத்தை குறைச்சிக்க இல்லனா அது உனக்குத்தான் பிரச்சனை….”
“உங்க பையன் உங்களைப் போலத்தானே இருப்பான்…. உங்களோட கோபத்தின் எல்லை எப்படி இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்…. இப்போதான் நீங்க உங்க கோபத்தை குறைச்சிருக்கீங்க… வீரா நீ போ.. போய் குளிச்சிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறன்… நீங்களும் வாங்க….” என்றவர் உள்ளே செல்ல, வீரா தந்தையைப் பார்த்து சிரித்து விட்டு உள்ளே சென்றான்.
…………………………………………………
“அம்மா என்ன சமையல்…?” என்றவாறு சமையல் அறைக்கு வந்தாள் சுதர்ஷினி.
“தோசைதான் சுதர்…”
“ரொம்ப பசிமா குடுமா…” என்றவள் சமையல் அறைக் கட்டில் ஏறி அமர்ந்தாள் தட்டுடன்.
“இன்னைக்கு காலேஜ் எல்லாம் எப்டி போச்சு சுதர்…?”
“ரொம்ப நல்லா போச்சுதுமா… ஆனால் நான் காலேஜ்ல காலை வச்சதும் ஒரு ஸ்டூடண்ட் எங்க இருந்து வந்தான்னு தெரிலமா என் காலடியில வந்து விழுந்தான்மா…”
“என்னடி சொல்ற அம்புட்டு மரியாதையா அந்த ஸ்டூடண்ட்க்கு….?”
“அட நீங்க வேற அம்மா… அவஅவன் மரியாதையில வந்து என் கால்ல விழல… அவனை ஒருத்தன் அடிச்சிருக்கிறான்… அந்த அடியிலதான் வந்து விழுந்தான்மா….”
“ஏன் சுதர் அப்படி அடிதடி நடக்குற காலேஜ் உனக்கு வேணுமா…?”
“அம்மா அதெல்லாம் ஒண்ணும் இல்லமா… இதுக்குப் போய் காலேஜிக்கு போகாம இருக்க முடியுமா…? அதை அப்புறம் பாக்கலாம்.. நீங்க ரெண்டு தோசை வைங்க…”
“சரி சரி எதுக்கும் பாத்து பத்திரமா இருடா மா…” என்றார்.
அவளும் தலையாட்டி விட்டு, சுடச்சுட தோசையை வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
வீரேந்திர ப்ரசாத்தின் ஸ்டேஷனின் முன்னால் வெள்ளை நிற சுமோக்கள் அணிவகுத்து நின்றன. அதில் நடுவில் வந்த கருப்பு நிற காரில் இருந்து இறங்கினார் அமைச்சர் கன்னியப்பன். அவரைத் தொடர்ந்து அவரது தொண்டர்களும் அந்த காவல் நிலையத்தில் நுழைந்தார்கள். கன்னியப்பன் உள்ளே வருவதை பார்த்த வீரேந்திர ப்ரசாத் எதுவும் பேசாமல் கால் மேல் காலைப் போட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் முன்னால் வந்த கன்னியப்பன் இருமினார்.
“ஏட்டையா தண்ணீ குடிங்க ரொம்ப இருமுறீங்க…” என்றான். அதற்கு ஏட்டையாவும், “சார் நான் இல்ல சார்… அமைச்சர் ஐயா வந்துருக்காங்க…” என்றார்.
“ஏன் மினிஸ்டருக்கு பேச்சு வராதா இருமல் மட்டும்தான் வருமா…? அவங்க வந்திருக்கிறதை நீங்கதான் சொல்லனுமா….?” என்ற வீரேந்திர ப்ரசாத் நிமிர்ந்து கன்னியப்பனை பார்த்தான்.
“ரொம்ப நல்லாத் தெரியுமே… எனக்கு ட்ரெய்னிங்கில் நல்லா சலூட் அடிக்கிறதுக்கும் சொல்லிக் கொடுத்திருக்காங்க…. குறி பார்த்து துப்பாக்கி சுடவும் சொல்லிக் கொடுத்திருக்காங்க..
நேர்மையானவளுக்கு மட்டும் தான் என்னோட கை சலூட் அடிக்கும்… இப்ப எதுக்காக நீங்க இங்க வந்து இருக்கீங்க…. கட்சி ஆபீஸை இங்க மாத்திட்டாங்களா என்ன இவ்வளவு பெரிய கூட்டமா வந்திருக்கீங்க…?”
“என்ன போலீஸ் சத்தம் ஓவரா இருக்கு…”
“இது என்னோட ஸ்டேஷன் இங்கே நான் சத்தம் போடுவேன்…. முதல்ல உங்க பின்னாடி இருக்கிற இந்த கூட்டத்தை வெளில போக சொல்லுங்க…. இங்க எனக்கு டிஸ்டர்ப்சன்ஸா இருக்கு…” என்றான்.
“ஏய் என்ன எங்களை வெளியே போக சொல்ற…. நான் யார் தெரியுமா ஐயாவோட தொண்டன் ஐயாவுக்கோ ஐயாவோட குடும்பத்துக்கோ ஒன்னுன்னா நான் இங்கேயே தீ குளிக்கவும் தயார்…” என்றான் ஒருவன்.
“அப்படியா சரி அப்ப நீ தீ குளிச்சிடு….” என்று சர்வசாதாரணமாக சொன்னான் வீரவேந்திர ப்ரசாத்.
“என்ன பண்ணுவ வழக்கம் போல சினிமாவில் வர மாதிரி தண்ணியில்லாத காட்டுக்கு மாத்த போறியா…. எனக்கு அது ஒன்னும் பிரச்சனை இல்ல… ஆனா உன் பேர சொல்ல உனக்கு பையன் இருக்க மாட்டான்….. எவ்வளவு தைரியம் இருந்தா காலேஜ் படிக்கிற பசங்களுக்கு போதை பொருள் வித்திருப்பான்…. அவன் வாழ்க்கை ஃபுல்லா உள்ளே இருக்கிற மாதிரி தண்டனை வாங்கிக் கொடுக்கல நான் வீரேந்திர ப்ரசாத் இல்லை…” என்றான்.
இதைக் கேட்ட கன்னியப்பன் சிரிக்க ஆரம்பித்தார். “என்ன போலீசு தமாஷ் பண்ற…? என்னைப் பற்றி தெரிஞ்சும் நீ இப்பிடி பேசலாமா…? நீ மட்டும் இப்போ என் பையனை வெளியில விடலனு வையேன் அப்புறம் நான் உன்னை விட பெரிய இடம்… அதுதான்பா ஐஜிக்கிட்ட போவேன்… அப்புறம் உனக்கு சஸ்பெண்ட் கிடைக்கும் ஏன் வேல கூட போக வாய்ப்பு இருக்கு… எப்பிடி வசதி…?” என்று கூற, வீரேந்திர ப்ரசாத் தனது சேரில் இருந்து எழுந்து வந்தவன்,
“அய்யோ சார் அப்படி மட்டும் பண்ணிடாதீங்க… ப்ளீஸ் சார் ஐஜி ரொம்ப மோசமானவரு சார் என்னை சஸ்பெண்ட் பண்ண காத்திட்டு இருக்கிறாரு… ப்ளீஸ் அவர்க்கிட்ட சொல்லுடாதீங்க சார்…” என்று கெஞ்சினான்.
அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த கன்னியப்பன், “ஏதோ நீ இவ்வளவு கெஞ்சுறதனால உன்னை மன்னிச்சு விடுறன்….” என்று சொல்லும் போது, சிரிக்க ஆரம்பித்தான் வீரேந்திர ப்ரசாத். “ஆஆஆ ஐயோ முடியல… ஆஆஆஆ.. அம்மா….” என்று வயிற்றில் கைவைத்து சிரித்தவனை புரியாத பார்வை பார்த்தார் கன்னியப்பன்.
“என்ன மினிஸ்டரே நான் உங்கிட்ட இப்படி எல்லாம் கெஞ்சுவன்னு நீ எதிர்பார்த்திருப்ப… அதுதான் உன்னோட ஆசையை கெடுக்க வேணாம்னு நான் அப்படி செஞ்சேன்… ஏய் நீ சொல்ற ஐஜி இல்ல அந்த ஆண்டவனே வந்தாலும் உன் பையனை வெளியில விட முடியாது… உன்னால முடிஞ்சதைப் பண்ணு….” என்றான்.
இதைக் கேட்ட கன்னியப்பனுக்கு வீரேந்திர ப்ரசாத் மீது கோபம் வர அதை அடக்கிக் கொண்டவர், “இருடா உனக்கு நான் யார்னு காட்டுறன்…” என்றவர், லாக்கபில் இருந்த மகனிடம் சென்றார். “சர்வேஷ் கவலைப்படாத உன்னை நான் எப்டியாவது வெளியில கொண்டு வந்திடுறன்….. நீ தைரியமா இரு….” என்றவர் ஆட்களையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அவர் சென்றதும் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் வீரேந்திர ப்ரசாத்.
வீராவின் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த கன்னியப்பன் நேரே சென்றது ஐஜி ஆபீஸ்க்குத்தான். அங்கே வந்து யாரிடமும் அனுமதிகூட கேட்காமல் அவரது அறைக்குள் நுழைந்தார். அமைச்சரைப் பார்த்தும் எழுந்து நின்று சல்யூட் அடித்தார் ஐஜி விநாயக்.
அவர் சல்யூட் அடிப்பதைப் பார்த்த கன்னியப்பன், “அமைச்சர் வந்தா சல்யூட் அடிக்கணும்னு உனக்கு தெரிஞ்சிருக்கு ஆனா உனக்கு கீழ வேல பாக்குறவனுக்கு அந்த மரியாதை கூட தெரியலை…”
“சார் என்னாச்சி…? அமைச்சரான உங்களுக்கு ஒரு சல்யூட் கூட அடிக்காதவன் யாருனு சொல்லுங்க சார்… அவன் மேல உடனே நான் ஆக்ஷன் எடுக்கிறன்…”
“அவன் பேரு வீரேந்திர ப்ரசாத்…”
‘அட பாவிப் பயலே…’ என மனதிற்குள் நினைத்தவர், “அவனை என்ன பண்ணலாம் சார்…? சொல்லுங்க சார் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்டியே பண்ணுடலாம்….”
“பரவாயில்ல அத விட்டுடலாம்…. உன்னால எனக்கு ஒரு வேல நடக்கணும்…”
“சார் முதல்ல உக்காருங்க… சொல்லுங்க உங்களுக்கு என்ன பண்ணணும்…?”
“என் பையன் சர்வேஷை அந்த வீரேந்திர ப்ரசாத் அரெஸ்ட் பண்ணி லாக்கப்ல வச்சிருக்கான்… அவன்கிட்ட என் பையனை ரிலீஸ் பண்ணச் சொல்லு…”
“அட ஆமாய்யா… நான் வெளியில விடச் சொல்லியும் அவன் என் பையனை வெளியில விடல…”
“சார் அவன்கிட்ட மனுஷன் பேசுவானா…? ரொம்ப திமிர் பிடிச்சவன் அவன்… அவனை யாராலும் கன்ரோல் பண்ண முடியாதே சார்… நான் சொன்னாக் கூட அவன் விடமாட்டான்… நீங்க லீகலா என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுங்க…”
“நீ என்னையா சொல்ற…? அங்க உள்ள இருக்கிறது என்னோட பையன் நீ சர்வசாதாரணமா சொல்ற லீகலா போங்கனு…”
“சார் இது ரொம்ப பெரிய கேஸ் சாதாரண கேஸையே அவன் விடமாட்டான்… இது போதைப் பொருள் கேஸ்… எனக்குத் தெரிஞ்சி உங்க பையன் திரும்ப வீட்டுக்கு வர்றது ரொம்ப கஷ்டம்…”
“என்ன விளையாடுறியா…?”
“சார் நான் விளையாட நீங்க என்ன பிளே கிரவுண்டா…? நான் உண்மையா சொல்றன் அவனுக்கு நீங்க ப்ரெஷர் குடுத்தீங்க அப்புறம் உங்க பையனை என்கவுண்டர்ல போட்டுடுவான்… நீங்க முதல்ல நல்ல லாயரை பாத்துப் பேசுங்க…”
“என்ன எல்லா போலீஸூம் சேர்ந்து ஆட்டம் காட்டுறீங்களோ… என் பையனை வெளியில எடுத்திட்டு அப்புறம் உங்களை பாத்துக்கிறன்…”
“ஓகே சார் நாங்க வெயிட் பண்றோம்… முடிஞ்சா உங்க பையனை வெளியில எடுங்க…” என்றார் ஐஜி. இதைக் கேட்ட கன்னியப்பன் கோபமாக சென்று விட்டார் லாயரைப் பார்க்க. அவர் சென்றதும் ஐஜி, ‘அவன், நான் சொல்றதையே கேக்க மாட்டான்…. இவன் சொல்றதையா கேக்கப் போறான்…? என்ன ஆட்டம் ஆடுறீங்கடா… உங்க ஆட்டத்தை எல்லாம் அடக்கத்தான் அவன் வந்திருக்கான்… ஒருத்தனையும் விட மாட்டான்…’ என்று சொல்லிக் கொண்டார் ஐஜி.
………….…………………….………….……
சுதர்ஷினி ஆபிஸ் அறைக்குள் சென்று அங்கிருந்த ப்ரின்சிப்பாலிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அப்பாயின்மென்ட் லெட்டரைக் கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்த ப்ரின்சிப்பால், “கோல்ட் மெடல்ல பாஸ் பண்ணியிருக்கிறீங்க சூப்பர் மேம்…”
“தாங்க்யூ சார்…”
“மேம் உங்களோட டியூட்டியை நீங்க சரியா பண்ணுவீங்கனு நான் நம்புறேன் வாழ்த்துகள்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேம்.. இங்க இருக்கிற எல்லா டீச்சர்ஸையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி பண்ணி வைக்கிறன்…”
“உங்களோட வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்… கண்டிப்பா என்னோட வேலையை நான் கரெக்ட்டா பண்ணுவன்…” என்றாள்.
ப்ரின்சிப்பால் எல்லா டீச்சர்ஸையும் அங்கே அழைத்து சுதர்ஷினியை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களையும் சுதர்ஷினிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களைப் பார்த்து சுதர்ஷினி சிநேகப் புன்னகை செய்தாள். பின்னர் சுதர்ஷினிக்கு நாளை டைம் டேபிள் தருவதாகவும் இன்று மட்டும் டீச்சர்ஸ் இல்லாத வகுப்பில் இருக்குமாறு கூறினார். அவளும் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தாள்.
வெளியே வந்த சுதர்ஷினி அங்கே அவள் வரும்போது ஒரு ஸ்டூடண்டைப் போட்டு அடித்தவனைத் தேடினாள். ஆனால் அவனைக் காணவில்லை. ‘சரி எங்க போயிடப் போறான்… எப்பவாவது கையில மாட்டுவான்ல அப்போ பாத்துக்கலாம்… முதல்ல போய் காலேஜை பாக்கலாம்…’ என்றவள் காலேஜை சுத்திப் பார்த்துக் கொண்டு வந்தாள். அழகிய மலர்களாலும், சுவற்றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த வாசகங்களாலும் அந்த காலேஜ் மிகவும் அழகாக இருந்தது.
சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த சுதர்ஷினி ஒரு வகுப்பில் இருந்து அதிக சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்டவள் அந்த வகுப்பினுள் சென்றாள். காலேஜ்க்கு புதிய அவளைப் பார்த்தும் மாணவர்களின் சத்தம் நின்றது. அமைதியாக அவளைப் பார்த்தனர்.
“ஹாய் என்ன எல்லோரும் என்னை ஏலியனைப் பாக்கிற மாதிரி பாக்குறீங்க…? பயப்படாதீங்க நான் ஒண்ணும் ஏலியன் கெடயாது… உங்க காலேஜ்க்கு புதுசா ஜாயின் பண்ணிக்கிற தமிழ் மிஸ்…” என்றாள்.
அந்த வகுப்பில் இருந்த ஒரு மாணவன் சட்டென்று எழுந்து, “என்ன புது மேமா…? நான் எங்க க்ளாஸ்கு புதுசா ஜாயின் பண்ண பொண்ணுனுல நெனச்சேன்….” என்றதும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
“அப்டியா… எல்லாரும் அப்டித்தான் நெனச்சீங்களா… நான் பாக்க ரொம்ப குட்டியாக இருக்கேன்ல… பரவால்ல இப்போதான் நான் மிஸ்னு தெரிஞ்சிடுச்சுல…”
“மேம் நான் இப்டி சொன்னதுக்கு உங்களுக்கு கோபம் வரலையா…?”
“ம்கூ.. கோபம் வரலை… எதுக்கு கோபம் வரணும் என்னைப் பத்தி தெரியாமதானே நீ என்னை அப்டி நெனச்ச…? அதனால எனக்கு கோபம் வரல…”
அவளும், “எனக்கும் உங்க க்ளாஸை ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றாள். இப்படியாக ஒரு சில வகுப்பிற்குச் சென்று மாணவர்களுடன் பேசி அவர்களைப் பற்றி அறிந்து கொண்டாள். காலேஜ்க்கு வந்த அன்றே மாணவர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டாள் சுதர்ஷினி. அந்த நிறைவோடு காலேஜ் முடிந்ததும் பஸ்ஸிற்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்😊
“ஹலோ யார் மேல கை வச்ச… நான் யாருனு தெரியுமா…?” என்ற குரல் கேட்க,
“டேய் நீ யாருனு உனக்கே தெரிலையா..? அய்யோ மாப்ள நீ அடிச்சதும் இவனுக்கு அவனையே மறந்துட்டு போலடா..” என்று ஒருவன் கத்த,
“அதான்றேன்.. டேய் நீ யாருனு தெரிலையா டா..? நான் அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடானு சொன்ன வேகத்துக்கு அடிச்சேனா அதான் மாப்ள மறந்துட்டான் போல….”என்று கூறினான் அவன். அவன் பெயர் வீரேந்திர ப்ரசாத்.. இதற்கு முன்னால் பேசியதோ அவனின் உயிர் நண்பன் பரத்.
அந்த அடிப்பட்டவனோ அவர்களையே முறைத்து பார்த்தவன் “என்னடா கிண்டலா..”என்று எகுறினான்.
“அடிங்க..”என்று அவன் மூக்கிலையே குத்திய வீரேந்திரனோ, “வாடா போடானா கூப்டுற..”என்று மறுபடியும் அவன் வாயில் குத்தினான்.
“மச்சான் அப்டிதான்டா அவனோட வாயில இருக்குற சைடு பல்ல கழட்டிடுடா…. அதப் பாக்கவே எனக்கு இரிட்டேட்டா ஆகுது…” என்றான் பரத் சாவகாசமாக அங்கிருந்த காரில் உட்கார்ந்தவாறே.
“அதான்டா எனக்கும் பிடிக்கல…..” என்றவன் அவர்களுக்கு பிடிக்காத பல்லை உடைத்துவிட்டே நகர்ந்தான்.
“ஆஆஆஆ அம்மா என் பல்லு..” என்று அடிப்பட்டவன் அலற,
“உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா…” என்றவாறே பரத் பாய்ந்து வந்தான். அதனை கேட்ட வீரேந்திரனோ பக்கென்று சிரித்துவிட்டான். கீழே விழுந்து புரண்டவனின் அருகில் வந்தவன், “உங்க வீட்ல அதிகமா உப்பு இருக்கோ இல்லையோ அதிகமா போத பொருள் வச்சிருக்க போல… அதான் அத பொட்டனமா போட்டு காலேஜ்ல விக்கிறியோ…?” என்றான் இவ்வளவு நேரம் இருந்த சிரிப்பு மறைந்து கடுமையான முக மாற்றம் செய்தவாறே.
அதில் அவன் மிரண்டு விழிக்க.. அவனின் பயப்பார்வை கண்டு குதுக்கலித்தவனோ, “மச்சான் இவன பாறேன்.. இவன் பயத்துல முழிக்கறத பாத்தா உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுது மச்சான்.. என்னவா இருக்கும்…?” என்றவாறே கன்னத்தில் கை வைத்தவாறு வீரேந்திர ப்ரசாத் கேட்க,
“ம்ம்ம் எனக்கு தெரிஞ்சிடுச்சி மச்சான்… அது என்னனா துன்பம் வரும்போது சிரிக்கனும்னு சொல்லுவாங்க இல்லடா அதுதான்.. ஆனா இதுல நோட் பண்ண வேண்டியது என்னனா நமக்கு துன்பம் வரும்போது சிரிக்கனும்னு சொன்னதுக்கு பதிலா இவனுக்கு துன்பம் வரும்போது சிரிக்கிறம்.. ஒருவேள அதா இருக்குமோனு நினைக்கிறன்.. நீ என்ன நினைக்கிற…?” என்று பரத் கூறினான்.
“ம்ம் இருக்கலாம்…” என்ற வீரேந்திரனோ அந்த அடிப்பட்டவனின் அருகில் உட்கார்ந்து ஒற்றை புருவத்தை உயர்த்தி காட்டியவன், “படிக்கிற வயசுல என்னடா போத கேட்குது… ம்ம் போத கேட்குது போத…..” என்றவன் அவன் தலையிலையே நங்கு நங்கு என்று கொட்டினான்.
“ஆஆஆஆ அய்யோ வலிக்கிது வலிக்கிது..”என்று கத்தியவன், “என்ன அடிச்சது மட்டும் என் அப்பாக்கு தெரிஞ்சிது மவனே நீ காலி….” என்றான்.
அதில் இன்னும் கலகலவென சிரித்த வீரேந்திரன் “அடேய் முட்டாள் டெப்ளட்டு… மிஞ்சி மிஞ்சி போனா உன் அப்பன் என்னடா செய்வான்.. ம்ம் என்ன என்னை வேலையை விட்டா தூக்க போறான்… ம்ச் இந்த பழைய படத்துல சொல்ற மாதிரி தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்துறதா பீலா விடுவான்… ஆனா ஒன்னு மட்டும் புரிலடா… தண்ணி இல்லாம எப்டிடா காடு வளரும்.. சரி விடு இதப்பத்தி நாம அப்புறம் பேசலாம்.. ம்ம் எங்க விட்டன்….?” என்று அவன் கேட்க,
“தண்ணீல்லா காடு மச்சான்..”என்று பரத் எடுத்துக்கொடுத்தான்.
“ம்ம்ச் அது எப்டி மச்சான் தூங்கத்தான் விட்டுடுவியா என்ன….?” என்று கேட்டான்.
அதில் வீரேந்திரன் ஒற்றை புருவத்தை தூக்கி முறைத்தான். அதில் கப்பென்று வாயை மூடிக்கொண்டான் பரத். “ம்ம் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்துவான்.. ம்ச் இல்லனா எங்காச்சும் அதிக க்ரைம் நடக்குற இடத்துக்கு தூக்கி போடுவானா போடட்டும்… நமக்கும் இப்டி சில்லற கேஸ்லாம் பாத்து போர் அடிக்கிதே.. நாலு குண்டார்ஸ போட்டு தள்ளுனோமா ப்ரோமோஷன் வாங்குனோமா, கல்யாணம் பண்ணுனோமா, குட்டி…”என்று வீரேந்திரன் பேச,
“மச்சான் இப்போ இது அவசியமாடா..” என்று பரத் இடைபுகுந்தான்.
“ம்ச் இல்லைல..” என்றான் வீரேந்திரன். அவனை பார்த்து பரத்தும் ஆம் என்று தலையாட்ட. “சரி விடுடா நம்ம கஷ்டம் நமக்கு….” என்றவனோ அந்த அடிப்பட்டவனின் காலடியில் உட்கார்ந்தான், “இதுலாம் தான் உன் அப்பன் பண்ணுவான்.. இத தவிர வேற ஒன்னும் உன் அப்பனால..” என்று தன் தலை முடியை பிடுங்கி காட்டியவன், “இத கூட பண்ண முடியாது..”என்றான்.
அதில் அந்த அடிப்பட்டவன் கடுப்பாகினான். “என் அப்பாக்கு போன் போடுறேன் என்னத்த புடுங்குறாருனு பாருடா..” என்றான் கத்தலாக.
“அட கொப்பன் மவனே..” என்ற வீரேந்திர ப்ரசாத் அவனை அப்படியே கழுத்தை பிடித்து தூக்கினான்.
“மச்சான் அப்டிதான் அப்டிதான் தூக்குடா.. உன்னால முடியும்டா.. ம்ம் யூ கேன்..” என்று பரத் ரன்னிங் கமென்டரி கொடுத்தான்.
வீராவின் பிடியில் இருந்தவனோ “ஆஆம்ம்ம்…ம்ம்ம்….” என்று மூச்சிக்காற்றுக்கு திணறியவாறே கால்கள் அந்தரத்தில் உதைத்துக்கொண்டிருக்க,
“இவ்ளோ நேரம் பேசுனல இப்போ பேசு.. இப்போ பேசுடா….” என்று பரத் அவனை சுற்றி சொடக்கு போட்டான். ஆனால் வீராவின் முகமோ ரெளத்திரத்தில் சிவந்து போய் இருந்தது. “மரியாதையா சொன்னா கேட்கமாட்ட… அடிச்சி சொன்னாதான் கேப்ப..”என்றவன் அவனை தூக்கி வீசியிருந்தான்.
அவனோ, “ஆஆஆ…..” என்ற கத்தலுடன் பறந்துக்கொண்டிருக்க,
அப்போது தான் காலையில் முதல்நாள் வேலைக்கு வீட்டையே அதங்களம் செய்தவாறே கிளம்பினாள் சுதர்ஷினி.
“அம்மா சாப்பாடு கட்டிட்டியா..?” என்று குரல் கொடுத்தாள். அது முடியும் முன்னரே, “அப்பா என் சேரிய அயர்ன் பண்ணியா….?” என்று அடுத்த ஆர்டரை பறக்க விட்டாள்.
“ஏன்டி டீச்சரா தானே வேலைக்கு போற.. என்னவோ சென்னைக்கே கலெக்டர போற மாதிரி ஆர்டர் மேல ஆர்டர் போட்டுட்டு கிளம்புற..”என்று அவளின் தாய் சுமதி கத்தினார்.
அதில் வெறிகொண்டு அவரை முறைத்தவாறே வந்து நின்றாள் சுதர்ஷினி. “அம்மா நீ சொல்ற கலெக்டர கூட நாங்க தான் உருவாக்குறோம்..” என்று கையை ஆட்டியவாறே அவள் பெருமை பேச,
அதில் உதட்டை சுழித்து பழிப்பு காட்டியவறே “இன்னிக்கி தான் முத நாளு காலேஜிக்கு வேலைக்கு போறா.. ஆனா பல வருஷமா நல்லாசிரியர் விருது வாங்குன மாறி பெருசா பீத்திக்கிறா..” என்று சத்தமாக முனகினார் சுமதி.
ஆனால் அவர் முகத்திலோ அவர் பேசியதற்கு மாறாக தன் மகளை ஆசிரியராக்கியதற்கான பெருமை வழிந்தது.
“ஆமாம்மா பீத்தல் தான்.. இருக்காதா பின்ன கிட்டதட்ட ஏழு வருஷம் இதுக்காக படிச்சிட்டு வந்துருக்கேன்.. அப்போ இத்துனூண்டு பீத்தல் கூடவா இல்லாம இருப்போம்..”என்றவள் தன் அன்னையை பார்த்து உதட்டை கோணியவாறே நடந்தாள்.
“அதான்டி அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில கொட பிடிப்பான்… அந்த மாதிரில இருக்கு உன்ன பாத்தா.. ஆள பாத்தா அரைகுண்டான் அழக பாத்தா முக்கா குண்டான்…” என்று அவர் ஏதோ பேசிக்கொண்டே போனார்.
“இந்தா பிள்ளைய ஏன் காலையிலையே ஒரன்ட இழுத்துட்டு இருக்க சுமதி…” என்றவாறே மகளின் சேலையை கையில் எடுத்து வந்து தன் மகளிடம் நீட்டினார் சரவணன்.
“ஆமா அப்டியே பச்சப்புள்ள தூக்கி இடுப்புல வச்சிட்டு பள்ளிக்கூடத்துல போய் விட்டுட்டு வாங்க..”என்று அதட்டியவர் தன்னுடைய சமையல் வேலையை பார்க்க கிட்சனுக்குள் சென்றுவிட்டார்.
சுதர்ஷினி தன் அப்பாவை பார்த்து உதட்டை பிதுக்கினாள். அவரோ அவளைப் பார்த்து ஒற்றை கண் அடித்து சமாதானம் செய்தவர், “போடா போய் கிளம்பு டைம் ஆச்சி பாரு..”என்று கூறினார்.
அவளோ தன் படப்படக்கும் விழிகளுடன் ஹாலில் மாட்டிருந்த வால் க்ளாக்கை பார்த்தவள், “அய்யோ அப்பா உன் பொண்டாட்டி சண்ட போட்டுட்டு இருந்ததுல டைம் ஓடியே போச்சி…. இன்னைக்கி முத நாள் காலேஜ் வேற….” என்றவள் தன் தந்தையின் கையில் இருந்த புடவையை வாங்கியவள் தன் அறைக்குப் பறந்துவிட்டாள்.
இப்படியே அரைமணி நேரம் ஓட.. தன் தாய், தந்தையர்களிடம் கூறிவிட்டு தன் கல்லூரிக்கு ஓடினாள் சுதர்ஷினி.
‘அய்யோ இந்த அம்மா கூட சண்ட போட்டதுல காலேஜ்க்கு டைம் ஆச்சே… முதல் நாள் வேற இன்னைக்குன்னு லேட்டா போனா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க…? எல்லா பஸ்சும் கூட்டமாயிடுச்சு… இதுல இந்த சாரி வேற கட்டிக்கிட்டு எப்படி போறதுன்னு வந்த ரெண்டு மூணு பஸ்ஸையும் விட்டதுக்கு…. நெருங்கமா இருந்தாலும் பரவால்லன்னு அந்த முதல் பஸ்லயே வந்திருக்கலாம்…. இப்போ டைம் ஆயிடுச்சு…’ என்றவாறு, மெல்லிய ஊதா நிற புடவையை அணிந்து, தோளில் ஹேண்ட் பேக் தொங்க, கையில் சில புத்தகங்களையும் குடையையும் எடுத்துக் கொண்டு, நெற்றியில் விழுந்த முடியை காதோரம் ஒதுக்கி விட்டவள், கண்கள் இரண்டும் அலை பாய்ந்த படி ஓட்டமும் நடையுமாக, வந்து அந்த காலேஜின் முன்னால் நின்றாள்.
காலேஜின் வாசலின் முன்னால் வந்து நின்றவள். கீழே குனிந்து, தனது கையால் அதன் வாயிலைத் தொட்டு கும்பிட்டவள் நிமிர்ந்து, ‘கடவுளே இந்த காலேஜ்ல நான் ரொம்ப ஆசைப்பட்ட மாதிரியே டீச்சர் வேலை கிடைச்சிருக்கு… இந்த வேலையில எந்த பிரச்சனையும் வரக்கூடாது…. நான் என்னால முடிஞ்ச அளவுக்கு ஸ்டூடண்ட்ஸ்க்கு நல்ல வழிய சொல்லிக் கொடுக்கணும்….’ என்று கண்ணை மூடிக்கொண்டு, இறைவனை வணங்கியவள் தனது வலது காலை எடுத்து வைத்து காலேஜுக்குள் வந்தாள். சரியாக அந்த நேரத்தில், அவள் காலடியில் வந்து விழுந்தான் ஒருவன். உடனே அவளது நடை தடைப்பட்டது. ‘என்னடா இது… இவன் எங்க இருந்து வந்தான்…? இப்பதானே முருகா எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு கேட்டேன்…. அதுக்குள்ள பிரச்சனையை பார்சல் பண்ணி அனுப்பிட்டியா…. இரு உன்னை ரெண்டு நாளைக்கு வந்து நான் பாக்கவே மாட்டேன்… அது தான் உனக்கு நான் தர்ற பனிஷ்மென்ட்….’ என்று அவள் முருகனுடன் டீல் பேசிக் கொண்டிருக்கும்போதே. கீழே கிடந்தவனை எட்டி உதைத்தான் வீரேந்திர ப்ரசாத். “என்ன விட்டு… என்ன விட்டுடு…” என்று அழுதவன் குரலை கேட்டு நினைவுக்கு வந்தவள்.
‘ஐயோ இருக்கிற இடம் தெரியாம இப்படி சிலை மாதிரி நிக்கிறியே சுதர்….’ என்று தன்னைத்தானே திட்டியவள் கீழே கிடந்தவனைப் பார்க்க, அவனை அடித்தவன் இழுத்துக் கொண்டு சென்றான்.
“ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர்…” என்றாள். ஆனால் அவன் அடித்துக் கொண்டு இருந்ததால் அவள் அழைத்து அவனுக்கு சரியாக கேட்கவே இல்லை.
அவனை நோக்கி கையை நீட்டி மீண்டும் அழைக்கும் போது வாட்ச் நேரமானதை உணர்த்தியது. ‘நேரம் போயிடுச்சு… சீக்கிரம் போய் சைன் பண்ணிட்டு அப்புறம் வந்து இவன பார்த்துக்கொள்ளலாம்….’ என நினைத்தவள் அங்கிருந்து வேகமாக ஆபீஸ்க்கு சென்றாள்.
அவள் சென்றதும், வீரேந்திர பிரதாப் அருகில் நின்ற அவனின் நண்பனிடம், “பரத் யாரோ கூப்ட மாதிரி இருந்திச்சு.. திரும்பிப் பாத்தேன் ஆளையே காணோம்…”
“நான் யாரையும் பாக்கலையே மச்சான்… நீ அவனைப் போட்டு இந்த அடி அடிச்சிட்டு இருக்கும் போது என்னால எப்படிடா அதைப் பாக்காம இருக்க முடியும் சொல்லு…”
“டேய் ஏன்டா ஏன்….” என தலையில் அடித்துக் கொண்டான் வீரேந்திர பிரதாப். அதைப் பார்த்த சிரித்தான் அவனின் நண்பன் பரத்.
“சரி வா இவன ஸ்டேஷன் கூட்டிட்டு போலாம்.. இந்நேரம் அழையா விருந்தாளியா வந்து உட்கார்ந்திருக்குற கேஸை வேற பாக்கனும்..” என்றான் பரத்.
“ஹாஹா ஒன்னாவே சமாளிப்போம்… நண்பேன்டா..” என்று வீரேந்திர ப்ரசாத் பரத்தின் தோளை பிடித்து குலுக்க, அதில் புன்னகைத்துக்கொண்டான் பரத்.
நல்லநாள் அதுவுமா புதுக் கதையோட வந்திருக்கிறன் பட்டூஸ்… நீங்க எவ்வளவு கமெண்ட்ஸ் அண்ட் ரேட்டிங் தர்றீங்களோ அவ்வளவு வேகமாக எபி வரும்..