Tag:
ஸ்ரீ வினிதா நாவல்
விடியல் – 19
எப்போதும் பெண்கள் இயல்பாக இருப்பது தங்களுடைய பிறந்த வீட்டில் தானே.
அப்படித்தான் நந்தினியும் தான் எப்போதும் போல அணியும் குட்டை கவுன் ஒன்றை அணிந்திருந்தாள்.
அது சற்று முழங்காலுக்கு மேலே வரை மட்டுமே இருந்தது.
அவள் சோபாவில் அமர்ந்திருந்ததால் அந்த கவுன் தாறுமாறாக தொடைவரை மேலே ஏறி இருக்க அதைப் பற்றி சிறிதும் கவலையில்லாமல் கையில் இருந்த குளிர்களியை ருசித்தவாறு தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளை அப்படிப் பார்த்தவனுக்கோ பெரும் அதிர்ச்சி.
தாறுமாறாக அலையும் தன் பார்வையை இழுத்து அடக்கியவன் வாசலில் அப்படியே நின்று விட்டான்.
“உள்ள வாங்க மாப்ள.. ஏன் அப்படியே நினைட்டீங்க..” என்றவாறு ராமகிருஷ்ணன் உள்ளே அழைக்க தன் தந்தையின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியோடு “அப்பா வந்துட்டீங்களா…?” என்ற சிறு கூச்சலுடன் திரும்பியவள் அங்கே நின்ற தன் கணவனைக் கண்டதும் உறைந்து போனாள்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவளுடைய முகமோ நொடியில் இஞ்சி தின்ற குரங்கைப் போல மாறிப் போனது.
அவனையும் தன்னையும் குனிந்து பார்த்தவள் சட்டென தன்னுடைய கவுனை இழுத்து விட்டாள்.
என்னதான் இழுத்து விட்டாலும் அது அவளுடைய தொடையை மட்டுமே மறைக்கப் போதுமாக இருந்தது.
முழங்கால்களும் கெண்டைக்கால்களும் அப்படியே தெரிய அவளுக்கோ கூச்சமும் சங்கடமும் ஒருமித்தது.
‘ஐயோ இந்த போலீஸ்காரன் எதுக்கு இங்க வந்திருக்கான்னு தெரியலையே…’ மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள் அவள்.
“பாப்பா என்ன அப்படியே ஷாக் ஆகி நிக்கிற..? மாப்பிள்ளைக்கு இன்னைக்கு ரொம்ப வேலை ஜாஸ்தி… டயர்டாகி வந்திருக்காரு.. உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ ஃபிரெஷ் ஆகட்டும்…” என அவர் கூற,
‘அடப்பாவி டாடி…’ என மனதிற்குள் அலறி வைத்தாள் நந்தினி.
இப்போது அவளுடைய பார்வை தன் கரத்தில் இருந்த குளிர்களியின் மீது பதிந்தது.
“அத அப்புறம் சாப்பிட்டுக்கலாம் கண்ணம்மா..” அவளைப் பற்றி புரிந்தவராய் கூறினார் அவளுடைய தந்தை.
அதே கணம் சமையலறைக்குள் இருந்து வெளியே வந்த நிர்மலாவிற்கோ தன்னுடைய மாப்பிள்ளையைக் கண்டதும் அவ்வளவு சந்தோஷம்.
“அடடா வாங்க மாப்ள.. உள்ள வாங்க.. உட்காருங்க…” என அவர் அவனை வரவேற்க சிறு தலை அசைப்புடன் சோபாவின் அருகே வந்தவன் உட்காராமல் அப்படியே நின்றான்.
“என்னாச்சுப்பா..?” எனக் கேட்டார் ராமகிருஷ்ணன்.
“இல்ல நான் கொஞ்சம் டர்ட்டியா இருக்கேன்.” என்றான் அவன்.
“அதெல்லாம் பிரச்சனை இல்ல.. நீங்க உட்காருங்க..” என நிர்மலா மீண்டும் கூற வேறு வழியின்றி அங்கே இருந்த சோபாவில் அவன் அமர்ந்து கொள்ள வெடுக்கென்று எழுந்து நின்றாள் நந்தினி.
“என்ன சாப்பிடுறீங்க மாப்ள..? ஜூஸ் இல்லன்னா டீ ஸ்னாக்ஸ்..?”
“காபி…” என்றான் அவன் ஒற்றைச் சொல்லாக.
“இதோ கொண்டு வரேன்..” என்ற நிர்மலாவோ சமையலறைக்குள் நுழைய முயன்ற கணம்,
“அம்மா நானே காபி போடுறேன்..” என்றாள் நந்தினி.
நிர்மலாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் பேசியது தன்னுடைய மகளா என தலை சுற்றலே வந்து விட்டது.
இங்கே இருக்கும் போது ஒரு வேலை கூட செய்ய மாட்டாளே..
தன் கணவனுக்கு என்றதும் காபி போடுகிறேன் என்ற மகளை மெச்சுதலாகப் பார்த்தார் நிம்மலா.
பெருமை பொங்க பார்த்தார் ராமகிருஷ்ணன்.
அவர்கள் இவருடைய பார்வையும் பார்த்தவளுக்கோ,
‘அடக்கடவுளே நீங்க எத்தனை தடவை காபி போட்டாலும் அவன் சக்கர கம்மியா வேணும்னு திரும்பத் திரும்ப காபி போட வைப்பான்.. உங்கள காப்பாத்துறதுக்காகத்தான் நான் காபி போடுறேன்னு சொன்னேன்.. இது தெரியாம என்ன இப்படி பார்க்கிறாங்களே..’ என மனதிற்குள்தான் கூறிக் கொண்டாள் அவள்.
பின்னே அவள் நினைப்பதை எல்லாம் தற்சமயம் வெளியே கூறவா முடியும்..?
அவளோ அவனுடன் எதுவும் பேசாது சமையலறையை நோக்கிச் செல்ல அவனுடைய பார்வை அவளைத்தான் தொடர்ந்தது.
அவள் இறுக்கமாக அணிந்திருந்த அந்த சிறிய கவுனோ அவளுடைய இடையின் வளைவை அப்பட்டமாகக் காட்டியது.
இடையில் பதிந்த பார்வையை அப்படியே கீழே இறக்கியவன் அவளுடைய கெண்டைக் கால்களைப் பார்த்து விட்டு சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
உடல் தகிக்க ஆரம்பித்தது.
‘இதுக்கு நடு ரோட்லயே நின்னுருக்கலாம் போலையே…’ என எண்ணிக் கொண்டது அவனுடைய மனம்.
ராமகிருஷ்ணனும் நிர்மலாவும் இயல்பாக அவனுடன் பேச ஆரம்பித்தனர்.
யாரும் நடந்து முடிந்த சம்பவத்தை பற்றிப் பேச விரும்பவில்லை.
அவர்கள் இயல்பாக பேசும் போது அவனால் அதை புறக்கணிக்கவும் முடியவில்லை.
முடிந்த அளவு அவர்கள் பேசுவதற்கெல்லாம் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தான் அவன்.
சற்று நேரத்தில் காபியுடன் அவன் அருகே வந்தவள் அதை அவனுக்குக் கொடுக்க அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு காபியை வாங்கிக் கொண்டவன் அதை அருந்தத் தொடங்கினான்.
அவனுடைய உடலில் இருந்த சோர்வுக்கு அந்த காபி புத்துணர்ச்சியை கொடுப்பது போல இருந்தது.
அவன் எதிர்பார்க்கும் சுவை அப்படியே இருந்தது.
ஆனால் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது குடித்து முடித்தவன் வெறும் கப்பை முன்னிருந்த டீபாய் மீது வைத்தான்.
அதே கணம் உள்ளே இருந்த வெள்ளை நிற நாய்க் குட்டியோ வர்மாவை பார்த்து குரைத்தவாறு ஓடி வந்தது.
புசுபுசுவென்று அழகாக இருந்த நாய்க்குட்டியை எரிப்பது போல பார்த்தான் அவன்.
எத்தனையோ வேட்டை நாய்களுடன் பழகுபவனுக்கு இந்த சிறிய நாயைப் பார்த்தா பயம் வரும்..?
வேகமாக குரைத்துக் கொண்டு வந்த அந்த அழகான நாய்க்குட்டிதான் அவனைப் பார்த்து பின்வாங்க வேண்டியதாக இருந்தது.
“ஏய் டோரா உஷ்.. அவர கடிக்கக் கூடாது..” என அதட்டினாள் நந்தினி.
‘டோராவா.. இது வேறயா..?’ என எண்ணிக் கொண்டான் அவன்.
அவளுடைய டோராவோ சமத்தாக அவளுடைய கால்களை சுற்றத் தொடங்கி விட அப்படியே அதை அள்ளி அணைத்து தன் மார்போடு சாய்த்துக் கொண்டவள்,
“என்னடி பட்டுத் தங்கம்..? உங்களுக்கு பசி வந்துருச்சா…?” என நாயோடு அவள் கொஞ்சத் தொடங்கி விட அவனுக்கோ பொறுமை பறந்தது.
“சரி நான் கிளம்புறேன்..” என்றவாறு எழுந்து கொண்டான் அவன்.
“ஃப்ரஷ் ஆகலாமே மாப்பிள்ளை..?”
“இட்ஸ் ஓகே… தேங்க்ஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்தான் வர்க் இருக்கு..” என்றான் அவன்.
ஆனால் அவனுடைய மனமோ ஃபிரஷ் ஆகினால் சற்று நன்றாக இருக்கும் என்றுதான் எண்ணியது.
உடல் முழுவதும் வியர்வை வழிந்து கசகசவென்று இருந்தது.
“ரொம்ப டயர்டா இருக்கீங்க.. இப்படியே எப்படி ஒர்க் பண்ண முடியும்..? ஏன்டி இப்படியே அமைதியா நிக்கிற.. மாப்பிள்ளைய உன்னோட ரூமுக்கு கூட்டிட்டுப் போ.. அவர் ப்ரஷ் ஆகட்டும்..” என்றார் நிர்மலா.
‘வில்லங்கத்துக்கு ரூம் மேட்டா ஆயிட்டோம்… விபரீதத்த ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்..’ என எண்ணியவள் வேறு வழியின்றி அவனை “வாங்க..” என்று அழைத்தவள் தன்னுடைய அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.
பெற்றோருடன் அவன் அருகே இருக்கும் போது அவளுக்கு எந்தவிதமான பதற்றமும் எழவில்லை என்பதே உண்மை.
ஆனால் அவனைத் தனியாக தன்னுடைய அறைக்குள் அழைத்துச் செல்வதை நினைக்கவே அவளுக்கு தேகம் படபடக்க ஆரம்பித்து விட்டது.
மெல்ல படிகளில் ஏறியவள் முதல் தளத்தில் இருந்த தன்னுடைய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றாள்.
அவனும் அவளிடம் எதுவும் பேசவில்லை
அவளுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அத்துடன் அவள் இப்போது கோபமாக அல்லவா இருக்க வேண்டும் கோபித்துக் கொண்டுதானே வீட்டை விட்டு வந்திருக்கிறாள்.
அந்தக் கோபத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள் “பாத்ரூம் அங்க இருக்கு..” என குளியலறையை அவனுக்குக் காட்டினாள்.
அவளை மேலிருந்து கீழ் வரை ஆழ்ந்து பார்த்தவன்,
“உன் டவல் கொடு..” என்றான்.
“என் டவலா..? என்கிட்ட புது டவல் இருக்கு..” என்றவள் மடித்து வைத்திருந்த புதிய துவாலையை எடுத்து அவனிடம் நீட்ட அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“உனக்கு இன்பெக்ஷஸ் டிசீஸ் இல்லன்னா ரேஷஸ் ஏதாவது இருக்கா..?” எனக் கேட்டான்.
அவளோ அதிர்ந்து போனவள் “வாட்..?” என்றாள் அவனைப் பார்த்து.
“இருக்கா இல்லையா..? எஸ் ஆர் நோ..?” மீண்டும் அவனிடம் அதே அழுத்தம்.
அவனை முறைத்துப் பார்த்தவள் “எனக்கு எந்த டிசீஸும் இல்ல.. ஐ ஆம் ஃபர்பெக்ட்லி ஆல்ரைட்..” என்றாள்.
“தென் வை திஸ் நியூ டவல்..?” எனக் கேட்டான் அவன்.
அவளோ பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனாள்.
என்னவென்று சொல்வது..?
நான் உபயோகித்ததை நீ உபயோகிக்க கூடாது என்று சொல்வதா..?
அவன்தான் மனதை படிக்கும் வித்தைக்காரனாயிற்றே.
கைதிகளின் கண் அசைவிலும் உடலின் அசைவிலும் உண்மையை அறிந்து கொள்பவன் அவளின் எண்ண ஓட்டத்தையும் அக்கணம் அறிந்து கொண்டான்.
“உன்னையே யூஸ் பண்ணிட்டேன்.. உன் டவலை யூஸ் பண்ண மாட்டேனா என்ன..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ மூச்சடைத்துப் போனது.
இதற்கு மேலும் விட்டால் எக்குத் தப்பாக பேசி வைப்பான் எனப் புரிந்து தன்னுடைய துவாலை எடுத்து சட்டென அவனை நோக்கி நீட்டி விட்டாள் அவள்.
அவனோ அதை வாங்கியவன் தன்னுடைய யூனிஃபார்மை கழற்றத் தொடங்க அவளுக்கோ இன்னும் பதற்றம்தான் அதிகரித்தது.
“ஓகே.. நீங்க ப்ரஷ் ஆயிட்டு வாங்க… நான் கீழ வெயிட் பண்றேன்..” என்றவள் அங்கிருந்து நழுவ முயன்ற நேரம்,
“இப்போ நீ ரூமை விட்டு வெளியே போனா நடக்கிறதே வேற..” என்றான் அவன்.
அதிர்ந்து விட்டாள் அவள்.
இது என்ன அநியாயம்..?
நான் இந்த அறையில் இருக்க வேண்டுமா இல்லை வெளியே இருக்க வேண்டுமா என்பதை நான் தானே முடிவு செய்ய வேண்டும்.
இவன் என்ன கூறுவது..?
அவளுக்கோ கோபம் கோபமாக வந்தது.
இங்கே வந்ததும் அராஜகம் பண்ண ஆரம்பித்து விட்டானா..?
“இந்த யூனிஃபார்ம் ரொம்ப டர்ட்டியா இருக்கு.. வேற ட்ரஸ் இருந்தா நல்லா இருக்கும்..” எனக் கூறியவன் யூனிஃபார்மை அங்கிருந்த இருக்கையில் கழற்றி வைத்து விட்டு திரும்ப அவர்களுடைய அறைக் கதவு தட்டப்பட்டது.
அவனோ காக்கி பேன்ட் மட்டுமே அணிந்திருந்தான்.
நந்தினியோ சென்று கதவைத் திறந்தவள் வெளியே நின்ற தன் தந்தையைப் பார்த்ததும் “உள்ள வாங்கப்பா..” என்று அழைத்தாள்.
“பாப்பா மாப்பிள்ளை இங்க மறு வீட்டுக்கு வந்தா கொடுக்கணும்னு கொஞ்சம் ட்ரஸ் வாங்கி வச்சிருந்தேன்.. இப்போ அது அவருக்கு யூஸ் ஆகும்னு நினைக்கிறேன்.. இது எல்லாத்தையும் அவர்கிட்ட கொடு..” எனக் கூறிவிட்டு அவர் சென்று விட, சில பைகளுடன் அவனிடம் வந்தவள் அந்த ஆடைகளை அவனிடம் கொடுத்தாள்.
ராமகிருஷ்ணன் கூறியது அவனுடைய செவிகளையும் எட்டத்தான் செய்தது.
“தேங்க்ஸ்..” என்றவன் அவளுடைய துவையாலையுடன் குளியலுக்குள் சென்றுவிட அவளுக்கோ பெருமூச்சு.
இவன் இங்க இருந்து கிளம்பும் மட்டும் இவன் கூடவே இருந்து இவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் போலையே..
அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டாள் அவள்.
அவளுக்கு அருகே இருந்த அவனுடைய யூனிபார்மை பார்த்தவளின் விழிகள் விரிந்தன.
‘அப்பா ஏதோ ஆக்சிடென்ட் கேஸ்னு சொன்னாரே.. வேலை ரொம்ப அதிகம்னு வேற சொன்னாரு.. இவரும் பாவம்தான்..” என எண்ணிக் கொண்டாள் அவள்.
என்னதான் வெளியே கோபம் போலக் காட்டிக் கொண்டாலும் அவன் தன்னுடைய வீட்டிற்கு வந்தது அவளுடைய அடி மனதில் இனிக்கத்தான் செய்தது.
சற்று நேரத்தில் குளித்து முடித்து அவளுடைய துவாலையை மட்டும் இடையில் கட்டிக் கொண்டு வெளியே வந்தவனைப் பார்த்ததும் அவளுக்கும் இதயம் எகிறி குதிக்கத் தொடங்கியது.
முகம் சிவக்க திரும்பி நின்றவளின் அருகே வந்தவன்,
“வாட்..?” என்றான்.
“மு.. முதல்ல ட்ரெஸ்ஸ போடுங்க..” என்றாள் அவள்.
“ஏன் இதுக்கு என்ன குறைச்சல்..?” என்றான் அவன்.
“எல்லாமே குறைச்சலாதான் இருக்கு..” என்றாள் அவள்
அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன்,
“நீயும்தான் செ**ஸியா ட்ரெஸ் பண்ணிருக்க.. நான் ஏதாவது சொன்னேனா..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
🥀🥀
விடியல் – 18
கொய்யாப் பழத்தைக் கையில் வைத்து கொறித்துக் கொண்டிருந்த நந்தினியை கவலையோடு பார்த்தார் நிர்மலா.
அவருடைய மனமோ நந்தினியை நினைத்து பதறிக் கொண்டிருந்தது.
பின்னே திருமணம் முடித்துக் கொடுத்த சில நாட்களிலேயே கணவனுடன் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்தால் எந்தத் தாய்தான் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்..?
தன்னுடைய பெண்ணின் வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சனையாகி விடுமோ என அந்தத் தாயின் உள்ளம் தவித்தது.
நிர்மலாவின் மனநிலைக்கு எதிராக இருந்தார் ராமகிருஷ்ணன்.
அவரைப் பொறுத்தவரை மகளின் மகிழ்ச்சி மட்டுமே பிரதானம்.
அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் சிறிதும் யோசிக்காமல் இந்த வாழ்க்கையிலிருந்து முழுதாக அவளை அழைத்து வந்துவிடும் மனநிலையே அவருக்கு.
ராமகிருஷ்ணனைப் பற்றி தெரிந்ததாலேயே நிர்மலாவின் மனதின் அச்சம் இன்னும் அதிகரித்தது.
சிறிய பிரச்சனையை பெரிதாக எண்ணி கோபித்துக் கொண்டு வந்த மகளுக்கு புத்தி சொல்லி மீண்டும் அவளுடைய வீட்டிற்கு அவளை அனுப்பி வைக்காமல் மகளுடன் சேர்ந்து மருமகனைத் திட்டிக் கொண்டிருந்தால் அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்..?
தன் மகளிடமாவது பேசி புரிய வைக்கலாம் என்ற நம்பிக்கையோடு அவளை நெருங்கினார் நிர்மலா.
“நந்து..”
“என்னம்மா..” என்றவள் கொய்யாப் பழத்தைக் கடித்து விட்டு தன்னுடைய அன்னையின் முகத்தை என்னவென்பது போலப் பார்க்க, அவளை நெருங்கி அமர்ந்து அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டார் அவர்.
“நீ இங்க வந்து முழுசா ஒரு நாள் முடிஞ்சிடுச்சு..”
“என்னம்மா.. என்னை துரத்தி விட பாக்கறீங்களா..”
“புரியாம பேசாதடி.. வாழ்க்கைல சின்னச் சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாமே..”
“அம்மா.. எனக்கு அவரை சுத்தமா பிடிக்கல.. கல்யாணத்தன்னைக்கே அவர் என்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கணும்.. ஆனா இப்போ வரைக்கும் அவர் பண்ணது சரிதான்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு.. அன்னைக்கு நைட் ரெண்டு மணிக்கு திரும்பி வந்தவரு என்கிட்ட எதுக்கு போனேன்னு காரணத்தைக் கூட சொல்லல..”
“அடியே.. மா�ப்பிள்ளையோட வேலை அந்த மாதிரிடி..”
“எனக்கும் புரியுது.. அன்னைக்கு அவர் போனதாலதான் சைக்கோகிட்ட மாட்டிருந்த பசங்களைக் காப்பாத்த முடிஞ்சுது.. அவர நான் போக வேணாம்னு எல்லாம் சொல்லலம்மா.. ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா என்னன்னுதான் கேட்கிறேன்.. எப்பவுமே தான் பண்றது மட்டும்தான் சரின்னு நடந்துக்கிறாரு..” என்றாள் நந்தினி.
“அம்மாடி நந்து.. நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குப் புரியுது.. உன் மேலயும் தப்பு இல்ல.. அவர் மேலயும் தப்பு இல்ல.. அவரோட டியூட்டியைப் பண்ணத்தானே போயிருக்காரு.. அதை நாம தப்பு சொல்ல முடியாது..”
“அம்மா.. நீங்களும் அப்பாவும் கூட என்னை அடிச்சதே இல்லை.. தப்பு பண்ணாம அடி வாங்கியிருக்கேன்..” அவள் குரல் நடுங்கியது.
“உன்னை அடிச்சதுல எனக்கும் வருத்தம்தான்.. எதுவா இருந்தாலும் பேசி புரிய வச்சிருக்கலாம்.. சரி விடு.. நீ எல்லா விஷயத்துலயும் தைரியமா இருக்கணும்னு அவர் எதிர்பார்க்கிறார்போல.. அதனாலதான் இப்படி பண்ணிட்டாரு..”
“என்னம்மா.. நீங்களும் இப்படி பேசுறீங்களே..” என்றாள் நந்தினி.
“அடியேய் அவர் என்ன குடிச்சிட்டு வந்து அடிச்சு கொடுமைப்படுத்துறாரா.. இல்ல வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா.. இல்ல வேற எந்த பொண்ணு கூடவும் தப்பான உறவுல இருக்காரா.? எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனுஷன்டி.. எங்க தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்காது..” என்ற அன்னையை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க தான் மெச்சுக்கணும்..” என முணுமுணுத்தாள்.
“என்னடி.. என்னை திட்றியா..”
“சே சே இல்லம்மா.. அவரைத்தான் திட்டுவேன்..” என்றாள் நந்தினி.
“அப்படிலாம் திட்டக் கூடாது நந்து… இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் சந்திச்சது கூட இல்ல.. இப்பதான் கல்யாணம் பண்ணியிருக்கீங்க.. ஒரு வாரம் கூட ஆகல.. நீங்க ரெண்டு பேரும் பேசி பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க உங்களுக்கு டைம் தேவை.. அவருக்கான டைமை நீ கொடுமா.. எல்லாம் சரியாயிடும் நந்து..”
“இப்போ என்னம்மா சொல்ல வர்றீங்க.. என்னை மறுபடியும் அந்த வீட்டுக்கு போகச் சொல்றீங்களா..”
“இனி அதுதான் உன்னோட வீடு.. உங்க அப்பாவும்தான் நிறைய பிரச்சனை பண்ணுவாரு.. அதுக்காக நான் என்ன கோவிச்சுக்கிட்டு எங்க அம்மா வீட்டுக்கு போறேனா.. இல்லைல்ல.. புரிஞ்சுக்கோடி.. இதுதான் உன்னோட வாழ்க்கை.. இனி இத மாத்த முடியாது..”
“சரிம்மா.. கொஞ்ச நாள் இருந்துட்டு நானே போயிடுறேன்..” எனக் கூறிவிட்டு எழுந்தவள் கையில் இருந்த கொய்யாப் பழத்தை அப்படியே அங்கிருந்த மேசை மீது வைத்து விட்டு தன்னுடைய அறைக்குள் வந்து விட்டாள்.
என்னதான் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அவளுடைய மனதிலும் வேதனை இருக்கத்தான் செய்தது.
அன்றைய நாள் இரவு தன்னுடைய சம்மதம் இல்லாமல் அவன் தன்னை எடுத்துக் கொண்டதை அவளால் இப்போதும் கூட ஜீரணிக்க முடியவில்லை.
அதைப் பற்றி எல்லாம் தன் அன்னையிடமோ தந்தையிடமோ சொல்லிவிட முடியாது.
விழிகளில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் என்ன செய்வது என சிந்திக்கத் தொடங்கினாள்.
இந்தத் திருமண வாழ்க்கையை முறித்துவிடும் எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை.
வர்மாவின் மீது கோபத்தில் இருந்தவள் தந்தையைக் கண்டதும் கிளம்பி வந்துவிட்டாள்.
ஆனால் இப்போது மீண்டும் அங்கே செல்வதற்கு சங்கடமாக இருந்தது.
அதுவும் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு அவன் அணைத்து முத்தமிட்டது நினைவில் வந்ததும் அவள் முகம் சிவந்து போனது.
அதே கணம் தன் மீது கோபமும் வந்தது.
எப்படி அவனுடைய முத்தத்திற்கு ஒத்துழைத்தோம்..?
அவனைத் தள்ளி அல்லவா விட்டிருக்க வேண்டும்..
தன்னை அடித்துவிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்காமல் முத்தமிட்டவனின் முத்தத்தில் உருகி குழைந்திருக்கின்றோமே என்று தன்னையே நொந்து கொண்டாள் அவள்.
“ஓ மை காட்.. இந்த போலீஸ்காரனோட போராடணும்னுதான் என் தலைல எழுதியிருக்கு போல.. இவன் மாறுவானா என்னனு கூட தெரியலையே..” என புலம்பியவாறு தன் நெற்றியை அழுத்தமாக வருடினாள் அவள்.
****
மூன்று நாட்களுக்குப் பிறகு..
நந்தினி வீட்டை விட்டுச் சென்று மூன்று நாட்கள் முழுதாக முடிந்திருந்தன.
வர்மா அவளுடைய வீட்டிற்கு சென்று அவளை அழைக்கவும் இல்லை.
அவளும் அவனுடைய வீட்டிற்கு கிளம்பி வரவும் இல்லை.
இவர்களுடைய பெற்றோர்கள்தான் அவர்களை எண்ணி தவித்துக் கொண்டிருந்தனர்.
அன்று காலையில் பிரதான சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலரின் உயிர் பறிபோயிருந்தது.
ஒன்று கூடிய மக்களை விலக்கி நிறுத்தி உயிருக்கு போராடியவர்களைக் காப்பாற்றி அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளை அங்கே நின்று மேற்பார்வையிட்டு வழங்குவதற்கே வர்மாவிற்கு நேரம் சரியாக இருந்தது.
முடிந்த அளவிற்கு பலரின் உயிரைக் காப்பாற்றியிருந்தார்கள்.
சிலர் அந்த இடத்திலேயே இறந்து போயினர்.
சிலர் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டிராஃபிக் போலீஸின் உதவியுடன் வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தி அந்த வீதியைக் கிளியர் செய்து தனக்குக் கீழே இருந்த காவல் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து முடிக்கவே கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாகியது.
மதிய நேரம் தொடங்கிய பணி அன்று மாலை வரை நீடித்தது.
வர்மாவோ தண்ணீர் கூட அருந்தவில்லை.
இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அதிகாரி அல்ல அவன்.
“சார்.. நீங்க போங்க.. இனி நாங்க பார்த்துக்குறோம்..” என்றார் கான்ஸ்டபிள்.
“இல்ல கணேசன்.. இப்போ வீட்டுக்கு போயிட்டு வர்றதுக்கு எல்லாம் டைம் இல்லை.. சம்டைம் பிரச்சனை வேற மாதிரி கூட போகலாம்.. லாரி டிரைவர் மேல நிறைய பேர் செம கோவத்துல இருக்காங்க.. முதல்ல அவருக்கு பாதுகாப்பு கொடுங்க..” என்றான் யுகேஷ் வர்மா.
சற்று நேரத்தில் மருத்துவமனையில் இருந்த அவனுடைய டீம் மெம்பர்களான ரகு சரவணன் மதன் மூவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.
“எத்தனை பேர் பிழைச்சிருக்காங்க..?”
“பிழைச்சவங்களை விட இறந்தவங்கதான் அதிகம் சார்..” என சற்று கவலையுடன் கூறினான் சரவணன்.
வர்மாவிடமோ பெருமூச்சு.
“இது ரொம்ப பெரிய இழப்பு சார்..” என்றான் மதன்.
“யாரோ ஒருத்தரோட கவனக் குறைவால எத்தனையோ உயிர் இப்படி பரிதாபமா போகுது.. ஷிட்.. எனக்கு தலைவலியே வந்துடுச்சு..” என் தன் தலையை அழுத்தமாக வருடினான் அவன்.
“சார்.. நாங்களாவது இருபது நிமிஷம் பிரேக் எடுத்தோம்.. நீங்க மதியத்துல இருந்து இப்போ வரைக்கும் இங்கேயே நிக்கிறீங்க.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க சார்.. நாங்க பார்த்துக்க மாட்டோமா..?” எனக் கேட்டான் ரகு.
“வீட்டுக்கு போயிட்டு வரவே ரெண்டு மணி நேரம் ஆகும் டா..”
“அப்போ ஏதாவது ஹோட்டல்ல ஃபிரஷ் ஆகலாமே..”
“பாக்கலாம்..” என்றவன் தனக்கு அருகே வந்து நின்ற காரைப் பார்த்ததும் புருவம் உயர்த்தினான்.
காரிலிருந்து வேகமாக இறங்கி வந்தார் நந்தினியின் தந்தை ராமகிருஷ்ணன்.
“மாப்பிள்ளை..” என அழைக்க வந்தவர் அவன் யூனிஃபார்மில் இருப்பதைப் பார்த்து “சார்..” என்று தொடங்கினார்.
“வாங்க..” என்றான் வர்மா சோர்வான குரலில்.
அவனுடைய கம்பீரமான குரல் இப்படி சோர்ந்து ஒலிப்பதைக் கண்டதும் அவருக்கே ஒரு மாதிரியாகிப் போனது.
அவன் இவ்வளவு நேரமும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததை எல்லாம் தொலைக்காட்சியில் நேரலை செய்தி மூலம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.
அந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் அவருடைய வீடும் இருந்தது.
ஏதாவது தன்னாலான உதவியைச் செய்து கொடுக்கலாம் என தன்னுடைய கம்பனியில் இருந்து தன் காரை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்கே வந்துவிட்டிருந்தார் ராமகிருஷ்ணன்.
“ரொம்ப நேரமா இங்கேயே நிற்கிறீங்க.. நியூஸ்ல பார்த்தேன்.. அதுதான் ஏதாவது உதவி வேணுமான்னு கேட்க வந்தேன்..”
“நான் கொஞ்சம் பிரெஷ் ஆகணும்.. இங்க பக்கத்துல உங்களுக்கு தெரிஞ்ச ஹோட்டல் ஏதாவது இருக்கா..?”
“நம்ம வீடு இருக்கே மாப்பிள்ளை.. ஹோட்டல் எதுக்கு..?”
உணர்ச்சிவசப் பட்டு மாப்பிள்ளையென அழைத்து விட்டார் அவர்.
சரவணன் ரகு மதன் மூவருக்கும் அதிர்ச்சி.
“சார்.. உங்க மாமனாரா இவரு..?” சிரித்தபடி கேட்டான் சரவணன்.
சரவணனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் ஆம் என்று தலையசைத்தான்.
“அப்புறம் என்ன.. பக்கத்திலேயே வீடு இருக்கு.. நீங்க அங்க போய் பிரெஷ் ஆகிட்டு ஏதாவது சாப்பிட்டு வாங்க.. நாங்க பார்த்துக்கிறோம்..” என்றான் ரகு.
“வாங்க மாப்பிள்ளை.. போகலாம்..” என்றவாறு ராமகிருஷ்ணன் கார் கதவையே திறந்து விட,
“இட்ஸ் ஓகே.. நானே ஓப்பன் பண்றேன்..” என்றவன் முன்புற கார்க் கதவைத் திறந்தவாறு சட்டென நின்றான்.
“எல்லார் மேலயும் ஒரு கண் வச்சிருங்க.. ரகு, சரவணன் நீங்க ரெண்டு பேரும் இந்த ஸ்பாட்லையே நில்லுங்க.. மதன் நீ கணேசனைக் கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போ.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க வந்துடுறேன்..” எனக் கூறி விட்டு காருக்குள் அமர்ந்தான் வர்மா.
ராமகிருஷ்ணனோ தானும் முன்புறம் அமர்ந்தவர் காரைச் செலுத்தத் தொடங்கினார்.
காரினுள் இருந்த ஏசி வர்மாவை சற்றே ஆசுவாசப்படுத்தியது.
“உங்களால வீட்டுக்கு வர முடியலன்னாக் கூட ஒரு கால் பண்ணியிருக்கலாமே மாப்பிள்ளை.. குடிக்கிறதுக்கு ஜூஸ் ஆவது கொண்டு வந்து கொடுத்திருப்பேனே..” என்ற தன்னுடைய மாமனாரை வியந்து பார்த்தான் அவன்.
இதுவரை அவன் அவருடன் சில வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் பேசியது இல்லை.
வீட்டிற்கு வந்தவரை வரவேற்றது கூட இல்லை.
ஆனால் தனக்காக இவ்வளவு தூரம் சிந்திக்கின்றாரே என நினைத்தவன் “டென்ஷன்ல எனக்கு எதுவுமே தோணல..” என்றான்.
சற்று நேரத்தில் நந்தினியின் வீடு வந்திருந்தது.
“உள்ளே வாங்க மாப்பிள்ளை..”
முதல் முறையாக அவர்களுடைய வீட்டுக்குள் செல்கிறான்.
அவனுடைய தோற்றமோ படுமோசமாக இருந்தது.
உடல் முழுவதும் வியர்வை.
யூனிஃபார்மில் ஆங்காங்கே ரத்தக்கறை வேறு அப்பியிருந்தது.
பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தவன் வரவேற்பறையின் சோபாவில் எக்குத்தப்பாக அமர்ந்திருந்த நந்தினியின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து விட்டான்.