
Tag:
anti hero novels
வாழ்வு : 34
அறைக்குள் சென்ற சம்யுக்தாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். அவளது மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றின. அந்த நேரத்தில் அவளது போன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க தீஷிதன்தான் அழைத்திருந்தான். “ஹலோ யுக்தா.”
“சொல்லுங்க.”
“யுக்தா என்ன பண்ணிட்டு இருக்க?”
“படுத்திருக்கேன்.. நீங்க என்ன இந்த டைம்ல கால் பண்ணியிருக்கிறீங்க?”
“யுக்தா கொஞ்சம் மொட்டை மாடிக்கு வர்றியா?”
“இப்பவா?”
“ஆமா, நான் அங்கதான் இருக்கேன் நீயும் வா”
“ம்ம்ம் சரி” என்றவள் எழுந்து சென்றாள்.
அங்கே நிலவைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தீஷிதன். சம்யுக்தாவின் கொலுசு சத்தம் கேட்டதும் திரும்பினான். சம்யுக்தா புன்னகையுடன் வந்திருந்தாள். ஆனால் அந்த புன்னகையில் உண்மைத் தன்மை இல்லாததைப் பார்த்தவன் அவளது கையைப் பிடித்தான்.
“யுக்தா, என்ன மனசு ரொம்ப குழப்பமா இருக்கா?” என்றான். அவனைப் பார்த்த சம்யுக்தா, “ம்ம்ம்.. மனசு ஒரு மாதிரி இருக்குங்க. நாளைக்கு என் வாழ்க்கையில நடக்குற ஒரு சந்தோஷமான நாள், ஆனால் என்னோட அம்மா அப்பா யாருமே இல்லையேங்க.. அவங்களை கூட்டிட்டு வருவேன்னு சொன்னீங்க.”
“இப்போ உனக்கு என்ன யுக்தா? உன்னோட அம்மா அப்பா முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை நடத்தணும் அவ்ளோதானே. அதுக்காகத்தானே வித்யாவோட அம்மாவையும் அப்பாவையும் வரவழைச்சிருக்கேன். அவங்க கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி, அவங்க வந்திடுவாங்க.” என்றான்.
அவன் சொன்னதை கேட்ட சம்யுக்தா, எதுவும் பேசவில்லை.
“உனக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன். அதை தர்றதுக்குத்தான் இங்க கூப்டேன்.”
“எதுக்குங்க கிப்ட்?”
“இன்னைக்குத்தான் நாம லவ்வர்ஸ்.. நாளையில இருந்து நம்ம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். நான் என்னோட காதலிக்கு தர்ற கிப்ட் இது.” என்றான். அதை வாங்கிப் பார்த்த சம்யுக்தா அதிர்ச்சி அடைந்தாள்.
“என்னங்க இது? எதுக்காக இந்த வேலை பார்த்தீங்க?”
“யுக்தா உன்னை கொடுமைப்படுத்தின பிரகாஷை விட மோசமானவங்க வித்யாவோட அம்மாவும் அப்பாவும். நிற்க இடமில்லாம இருந்த உன்னை, நடுரத்திரியில நாயை விடக் கேவலமா உன்னை அடிச்சு விரட்டினாங்க. அதுக்கு பதிலடி கொடுக்காம நான் விடமாட்டேன் யுக்தா.”
“ஏங்க அதுக்காக அவங்க பேர்ல இருக்கிற சொத்து எல்லாத்தையும் என்னோட பேர்ல மாத்தணுமாங்க? இது எப்படி நடந்திச்சு?”
“அவங்க பணம் வாங்கிருந்த விக்டர், அவனோட பேர்ல சொத்து எல்லாத்தையும் எழுதி எடுத்திருந்தான். அவன்கிட்ட பணத்தை கொடுத்திட்டு நான் உன்னோட பேர்ல வாங்கிட்டேன்.”
“இப்போ இது தேவையாங்க?”
“தேவைதான் யுக்தா கல்யாணம் முடிஞ்சதும் நீயும் நானும் சென்னை போறோம். நீ அங்க இருக்கிற கம்பனியை டேக்ஓவர் பண்ற.”
“நான் எப்பிடீங்க?”
“யுக்தா நீ கண்டிப்பா இதை பண்ணியேயாகணும். சரி ரொம்ப லேட்டாச்சு. நீ போய் தூங்கு காலையில மண்டபத்துல பார்க்கலாம்” என்றான்.
………………..………………..………………
மணிகண்டனும் லீலாவதியும் தீக்ஷிதன் அனுப்பிய காரில் ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். விடியும் போது ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர். ஒரு ஹோட்டலில் காரை நிறுத்திய ட்ரைவர்,“இந்த ஹோட்டல்ல போய் ரெடியாகிட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன்” என்றான். அவர்களும் சரி என்று சொல்லி உள்ளே சென்று ரெடியாகினார்கள்.
பிரகாஷ் மற்றும் சீமாவும் அதே ஹோட்டலில்தான் இருந்தார்கள்.
“இந்த கல்யாணத்துக்கு வர்றதுக்கு எனக்கு விருப்பமே இல்லை” என்றாள் சீமா.
“எனக்கு மட்டும் விருப்பமா என்ன? போய் தானேயாகணும்” என்று சிடுசிடுத்தவாறு ரெடியாகினான் பிரகாஷ்.
………………..………………..………………
புகழும் நேரத்திற்கு எழுந்து ரெடியாகி விட்டு துர்க்காவை அழைக்க, அவரும் கிருபாகரனும் ரெடியாகி வந்தனர்.
“வாவ் அம்மா, அப்பா நீங்கதான் புது ஜோடி மாதிரி அழகா இருக்கிறீங்க. அதுவும் அம்மா அப்படியே மகாலக்ஷ்மி மாதிரி இருக்காங்க” என்றான்.
“டேய் என்னோட பொண்டாட்டி மேல கண்ணு வைக்காத” என்று அவனுடன் சண்டைக்கு வந்தார் கிருபாகரன்.
“ஐயோ அப்பா என்னை விட்டுடுங்க, நான் எதுவும் சொல்லலை.”
“உங்களுக்கு பொறாமைங்க.” என்றவர் “நீ ரொம்ப அழகா இருக்க புகழ்” என்று புகழுக்கு திருஷ்டி கழித்தார்.
“சரி சரி அவனை புகழ்ந்தது போதும் கல்யாணத்துக்கு போகலாமா?”
“பாருங்க அம்மா அப்பாவை நீங்க எதுவும் சொல்லலைனு கடுப்பாகிட்டாங்க.”
“என்னோட புருஷன் எப்பவும் அழகுதான் புகழ்.” என்றார் துர்க்கா.
“ஐயோ உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வரவேயில்லை. போகலாம்” என்றான். மூவரும் மகிழ்ச்சியுடன் கல்யாண மண்டபத்திற்கு வந்தனர்.
………………..………………..………………
கல்யாண மண்டபம் அலங்காரங்களால் கண்களை கவரும் வண்ணம் இருந்தது. பெரிய பெரிய விஐபிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியான ஒரு இடம் மண்டபத்தின் கீழே ஒதுக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தின் உள்ளே அனைவரும் அழகாக அமரும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேடையில் ஐயர் அக்கினி குண்டத்தின் முன்னே அமர்ந்து மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
மணமகன் அறையில் தீஷிதன் ஆணழகனாக ரெடியாகிக் கொண்டிருந்தான். அவனை அழகுபடுத்திக் கொண்டிருந்தான் விக்ராந்த்.
“அத்தான் சும்மா சொல்லக்கூடாது நீங்க பார்க்க ரொம்ப ஹேண்ட்ஸமா மேன்லியா இருக்கீங்க.”
“டேய் சும்மா கலாய்க்காத”
“நெஜமாத்தான் அத்தான். நீங்க வேணும்னா பாருங்க இன்னைக்கு சம்மு அக்கா உங்களை வைச்ச கண் வாங்காம பார்த்திட்டு இருப்பாங்க.” என்றதைக் கேட்ட தீக்ஷிதனின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“அத்தான் பொண்ணுங்க வெட்கப்பட்டா அழகுன்னு தெரியும். உங்களைப் பார்த்த பிறகுதான் ஆண்கள் கூட வெட்கப்பட்டா அழகுன்னு தெரியுது.” என்று அவனை மேலும் வெட்கப்பட வைத்தான் விக்ராந்த்.
“டேய் போதும்டா,ரொம்ப ஓட்டாத.” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போது புகழிடமிருந்து தீஷிதனுக்கு கால் வந்தது. அதே நேரத்தில் அமரேந்திரன் ஒரு வேலையாக விக்ராந்தை அழைக்க, “இதோ வந்திடுறன் அத்தான்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். அவன் சென்றதும் போனை எடுத்த தீஷிதன், “சொல்லு புகழ், எங்க இருக்க? அத்தையும் மாமாவும் எங்க?”
“தீஷி நாங்க மண்டபத்துக்கு வந்திட்டோம். இப்போ எங்க வர?”
“நீ யார் கண்லேயும் படாம நாலாம் நம்பர் அறைக்கு கூட்டிட்டு போ, கல்யாணத்துல கைப்பிடித்துக் கொடுக்க தயாராகும் போது அவங்களை கூட்டிட்டு வா” என்றான்.
“சரி” என்றவன் அவர்களை யாரும் அறியாமல் மெல்ல தீஷிதன் சொன்ன அறைக்கு அழைத்து வந்தான்.
“அம்மா, அப்பா நீங்க இங்கேயே இருங்க, நான் வந்து கூப்பிடுற வரைக்கும் வெளியே வராதீங்க”
“சரி புகழ்” என்றனர்.
பின்னர் புகழ் தீஷிதன் அறைக்கு வந்து அவனுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
மணமகள் அறையில் ப்யூட்டிஸனின் கைவண்ணத்தில் தேவதை போல தயாராகினாள் சம்யுக்தா. அவளை கேலி செய்து கொண்டிருந்தனர் வித்யாவும் மதுராவும்.
“அக்கா உன்னைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிமே உன் வாழ்க்கையில எல்லாமே நல்லதுதான் அக்கா நடக்கும்.”
“ஆமா வித்து, அண்ணிக்கு இனிமே கஷ்டமே இல்லை. என் அண்ணா அண்ணியை உள்ளங்கைல வைச்சித் தாங்குவாங்க” என்றாள் மதுரா. இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த தமயந்தி, “என் பொண்ணு என்ன அழகு.” என்று சம்யுக்தாக்கு திருஷ்டி கழித்தார்.
“சம்மு ஐயர் உங்களை அழைச்சிட்டு வரச் சொல்றாரு.. மதுரா வித்யா ரெண்டு பேரும் சேர்ந்து சம்முவை கூட்டிட்டு வாங்க”
“சரி” என்றனர் இருவரும்.
மணமகன் அறையில் இருந்த தீஷிதனை விக்ராந்த் மற்றும் புகழ் அழைத்து வந்தனர். மணமேடைக்கு வந்த தீக்ஷிதன் பரந்தாமன் காலிலும், துர்க்கா அமரேந்திரன் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். அவர்களும் அவனை மனதார ஆசிர்வதித்தனர்.
மணமேடையில் அமர்ந்தவன் சபைக்கு வணக்கம் சொல்லும்போது, அங்கே மணிகண்டன் லீலாவதி ஒரு பக்கமும், பிரகாஷ் சீமா ஒரு பக்கமும் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன் இதழ்களிலே ஒரு கேலிப் புன்னகை தோன்றியது.
பின்னர் ஐயர் கூறும் மந்திரங்களை சிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்தான். பின் ஐயர் வழமை போல, “பொண்ணை அழைச்சிட்டு வாங்க” என்று சொன்னதும், சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு மதுராவும் வித்யாவும் அங்கே வந்தனர். சம்யுக்தாவுடன் வரும் வித்யாவைப் பார்த்த மணிகண்டனுக்கு அவளை கொல்லும் வெறி வர எழுந்தார். லீலாவதிதான், “ஏங்க கொஞ்சம் அமைதியா இருங்க. இது கோபப்படுவதற்கான நேரம் இல்லை” என்று அவரை சமாதானப்படுத்தி வைத்திருந்தார்.
தேவதை போல அலங்கரிக்கப்பட்டு வரும் சம்யுக்தாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீஷிதன். அவனைப் பார்த்த புகழ் சற்றுக் குனிந்து, “தீஷி ஹேண்ட்சீஃப் வேணுமா?” என்றான்
அவனை திரும்பிப் பார்க்காமல், “இருடா உனக்கு கல்யாணம் நடக்கும் போது பார்த்துக்கிறன்” என்றான்.
மேடைக்கு வந்த சம்யுக்தா அங்கிருந்த பரந்தாமன் தமயந்தி அமரேந்திரன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு தீஷிதன் அருகில் அமர்ந்தாள்.
அவள் தனக்கு அருகில் அமர்ந்ததும் தீஷிதன் அவள் புறம் சாய்ந்து, “யுக்தா ரொம்ப அழகா இருக்க” என்றான். அவள் வெட்கத்தில் குனிந்து கொண்டான்.
சபைக்கு வணக்கம் சொன்னவள் கண்களில் பட்டனர் மணிகண்டன் மற்றும் லீலாவதி. அவர்களைப் பார்த்ததும் பாசத்தில் கண்கள் கலங்கின. பின்னர் ஐயர் சொல்லும் மந்திரங்களை இருவரும் சேர்ந்து சொல்லி, அவர் கூறும் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஐயர், “கன்னிகாதானம் பண்ணணும் பொண்ணோட அப்பா அம்மா வாங்க” என்றார். அப்போது தீஷிதன் புகழைப் பார்க்க அவன் துர்க்காவையும் கிருபாகரனையும் அழைத்து வரச் சென்றான். பரந்தாமன் ஐயரிடம், “ஐயரே சம்யுக்தாவோட அம்மா அப்பாக்கு பதிலா என்னோட தங்கச்சியும் அவங்க வீட்டுக்காரரும் செய்யலாமா?” என்றார்.
இதைக் கேட்டதும் லீலாவதி அங்கிருந்து எழுந்து, “அதெப்டி சம்முவோட அம்மா அப்பா நாங்க இருக்கும் போது இவங்க செய்யணும்?” என்றார். அப்போதுதான் வித்யா அவர்களைப் பார்த்தாள்.
‘ஐயோ என்ன அம்மாவும் அப்பாவும் வந்திருக்கிறாங்க. இவங்களுக்கு எப்படி அக்காவோட கல்யாணம் தெரிஞ்சது?’ என்று யோசித்தாள்.
அப்போது வாய் திறந்தான் தீஷிதன், “நீங்க ஒண்ணும் யுக்தாவோட சொந்த அம்மா அப்பா இல்லையே.. அதுமட்டுமல்ல நீங்க அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு இப்போ எந்த உரிமைல கன்னிகாதானம் பண்ண வர்றீங்க?” என்று கேட்டதும், லீலாவதிக்கு கோபம் வர, “அவளுக்கு எங்களை விட்டா யாரும் இல்லை.. அம்மா அப்பா இல்லாத அநாதைக்கு போனா போகுதுன்னு இந்த சடங்கை பண்ணி வைக்கலாம்னா நீங்க இப்படி சொல்றீங்க?” என்றார்.
“ஹலோ மேடம் ஒரு நிமிஷம். நீங்க சொல்ற மாதிரி சம்யுக்தா ஒண்ணும் அநாதை இல்லை. அவளுக்கு பெரிய குடும்பமே இருக்கு. அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, மாமானு எல்லா சொந்தமும் இருக்கு.” என்று தீஷிதன் சொல்லும் போதே மேடைக்கு துர்க்காவையும் கிருபாகரனையும் அழைத்து வந்தான் புகழ்.
“அத்தை மாமா முன்னாடி வாங்க.” என்றுதும் அவர்கள் முன்னாடி வர, அப்போதுதான் பரந்தாமன், தமயந்தி, கிருபாகரன் எல்லோரும் துர்க்காவைப் பார்த்தனர்.
“துர்க்கா…”
“அக்கா..”
“துர்க்கா நீ எப்படிமா இங்க?”
“தீஷிதான் அண்ணா எங்களை கூட்டிட்டு வந்தான்.”
“அத்தை உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னேன்ல.. அன்னைக்கு நடந்த ஆக்ஸிடெண்ட்ல நீங்க தொலைச்ச உங்க பிள்ளை இதோ இவதான், பேரு சம்யுக்தா” என்றான். இதைக் கேட்டதும் சபையே அமைதியானது.
“தீஷி நீ… நீ சொல்றது?”
“நெஜம்தான் அத்தை. யுக்தா இவங்கதான் உன்னோட அப்பா அம்மா.. இனிமே உன்னை அநாதைனு யாரும் சொல்ல முடியாது. நீ என்னோட சொந்த அத்தை பொண்ணு..”என்றான். துர்க்கா பாய்ந்து அணைத்துக் கொண்டார் சம்யுக்தாவை. அவளும் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதாள்.
சில நிமிடங்களில் பரந்தாமன், “துர்க்கா முதல்ல நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னாடி கல்யாணம் நடக்கட்டும். மற்றதை அப்புறமா பேசிக்கலாம்” என்றார்.
“சரிங்க அண்ணா” என்றார் துர்க்கா.
பின்னர் துர்க்காவும் கிருபாகரனும் சேர்ந்து சம்யுக்தாவை தீஷிதனுக்கு கன்னிகாதானம் பண்ணி வைத்தனர். அனைவரின் ஆசிர்வாதத்துடன் தீஷிதன் சம்யுக்தா திருமணம் நல்லபடியாக நடந்தேறியது.
திருமணம் நடந்து முடிந்ததும், வந்திருந்தவர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சென்றதும் தீக்ஷிதன் மணிகண்டன், லீலாவதி, பிரகாஷ் மற்றும் சீமாவை அங்கே அழைத்தான்.
“மிஸ்டர் பிரகாஷ் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, நீங்க வேணாம்னு சொன்னதாலதான் எனக்கு இப்பிடி ஒரு லைஃப் பார்ட்னர் கிடைச்சிருக்காங்க.. அதே போல மிஸ்டர் மணிகண்டன் அண்ட் மிஸஸ் மணிகண்டன் உங்களுக்கு என்னோட நன்றி, நீங்க மட்டும் அன்னைக்கு நடுராத்திரி இவளை வீட்டை விட்டு அனுப்பலனா எனக்கு சம்யுக்தா கிடைச்சிருக்கமாட்டா, அவளுக்கும் அவளோட குடும்பம் கிடைச்சிருக்கமாட்டோம்” என்றான்.
“ரொம்ப பேசாதீங்க மிஸ்டர். இவளை கல்யாணம் பண்ணினதே வேஸ்ட். இவளால உங்களுக்கு ஒரு குழந்தை பெத்ததுக் குடுக்க முடியாது. அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டார் லீலாவதி.
இதைக் கேட்ட சம்யுக்தாவிற்கு அழுகை வந்தது. அவளது கையை இறுக்கிப் பிடித்த தீஷிதன் புகழைப் பார்க்க, அவன் ஒரு ரிப்போர்ட்டை தீஷிதனிடம் கொடுத்தான். அதை வாங்கியவன், “பிரகாஷ் நீ எல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது. உனக்கு சீமாவைத்தான் பிடிச்சிருக்குனா அவளையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே. இவளை எதுக்கு கல்யாணம் பண்ணி இவளோட வாழ்க்கையை அழிச்ச? என்ன சொன்ன சம்யுக்தாவால குழந்தை பெத்துக்க முடியாதுனுதானே டைவர்ஸ் பண்ண? நீ சொல்றத யுக்தா நம்பலாம் மற்றவங்க யாரு வேணும்னாலும் நம்பலாம். ஆனால் நான் நம்ம மாட்டேன். இதோ இந்த ரிப்போர்ட்ல என்ன இருக்கு தெரியுமா? யுக்தாக்கு தாயாகுற அத்தனை தகுதியும் இருக்குனு சொல்றாங்க” என்றான்.
இதை எதிர்பார்க்காத பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தாலும், “ என்ன சார் இவளை மற்றவங்க திட்டுறதுல இருந்து காப்பாத்த பொய் ரிப்போர்ட் ரெடி பண்ணியிருக்கிறீங்களா?”
“வெல்டன் பிரகாஷ். நல்லா சொன்னீங்க போங்க, பொய் ரிப்போர்ட்தான் நீங்க சம்யுக்தா மேல போட்ட குற்றத்துக்கு உங்களோட டாக்டர் குடுத்தது. இதோ என்னோட கைல இருக்கிற ரிப்போர்ட் ஒரிஜினல்னு டாக்டர் குடுத்த ரிப்போர்ட். அதுமட்டுமல்ல நீங்க சொல்லி, பணத்துக்கு ஆசைப்பட்டு உங்களுக்கு பொய் ரிப்போர்ட் குடுத்த அந்த டாக்டரும் தன்னோட தப்பை ஒத்தக்கிட்டாங்க.” என்றவன் அவர் பேசிய வீடியோவை எல்லோருக்கும் காட்டினான்.
“மிஸ்டர் பிரகாஷ் இதுக்கு மேல எங்க வழியில குறுக்க வந்தீங்க.. அப்புறம் இந்த தீஷிதனோட இன்னொரு முகத்தை பார்ப்பீங்க.. பொறக்க போற இந்த குழந்தைக்காவது நல்ல அப்பாவா இருங்க” என்றான்.
தீஷிதன் சொன்னதை கேட்ட சம்யுக்தா தனது கண்களை துடைத்து விட்டு பிரகாஷ் முன்னால் வந்தவள், அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். வேறு எதுவும் பேசாமல் தீஷிதன் அருகில் வந்து நின்று கொண்டாள். பிரகாஷிற்கோ சீமாவுக்கோ எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர்.
“இதுக்கு மேல நீங்க இங்க இருக்கவே கூடாது.. கெட் லாஸ்ட்” என்றான் தீஷிதன். அவர்களும் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல, தீஷிதன் அடுத்து மணிகண்டன், லீலாவதி பக்கம் வந்தான்.
“தாய்னா யாருனு தெரியுமா? பிள்ளை ஒரு கஷ்டம்னா தன்னோட உயிரைக் கூட கொடுப்பாங்க. ஆனால் நீங்க எல்லாம் தாயா இல்லை ஒரு மனுஷனா இருக்கவும் தகுதி இல்லாதவங்க. ஒரு பொண்ணு மனசு உடைஞ்சி உங்ககிட்ட வரும்போது அவளுக்கு ஆதரவா இல்லைன்னாலும் மேலும் கஷ்டப்படுத்தாம இருந்திருக்கலாம்.. நீங்க என்ன பண்ணீங்க அவளை நடுரத்திரியில போட்டிருக்க ட்ரெஸ்ஸோட வீட்டை விட்டு அனுப்பியிருக்கிறீங்க.. அதனாலதான் இப்போ நீங்க இருக்க இடம் இல்லாம கஷ்டப்படுறீங்க. இதுதான் நான் உங்களுக்கு குடுக்கிற தண்டனை” என்றான்.
“ஏய் நீ எங்களை பற்றி பேசுறியா? நீ இவகூட குடும்பம் நடத்து இல்லை கும்மியடி எங்களுக்கு என்ன வந்துது. என் பொண்ணு வித்யாவை கூட்டிட்டு நாங்க இங்க இருந்து போயிடுறம்” என்ற லீலாவதி வித்யா அருகதை வர, வித்யா விக்ராந்த் கையை பிடித்துக் கொண்டு அவருடன் வர மறுத்தாள்.
“இல்லை நான் உங்ககூட வர மாட்டேன்.”
“ஏய் யாருடி இவன். இவன் கையை பிடிச்சிட்டு நிற்கிற வா போகலாம். உன்னால்தான் இப்போ சொத்து எல்லாம் இழந்திட்டு நடுரோட்டில நிற்கிறம். வா போலாம்” என்றார் லீலாவதி.
“நான் வரமாட்டேன்.” என்றவளை அடிக்க கை ஓங்கினார் லீலாவதி. ஓங்கிய அவரின் கையைப் பிடித்து நிறுத்தினான் விக்ராந்த்.
“ஹலோ மேடம், அதுதான் அவ வரலனு சொல்றால்ல அப்புறம் என்ன, அவளை விட்டுட்டு நீங்க இங்க இருந்து கிளம்பலாம்.”
“அதை சொல்ல நீ யாருடா?”
“நான் யாரா.. மை டியர் அத்தை நான்தான் உங்க பொண்ணு வித்யாவை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை. இன்னைக்கு நைட் அத்தானோட ரிஷப்ஷன் மட்டுமல்ல எங்களோட என்கேஜ்மென்டும் இருக்கு.”
“என்ன என்கேஜ்மென்டா? யாருக்கு யாரு மாப்ள? உனக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணி தர முடியாது”
“அதை நீங்க சொல்ல முடியாது அத்தை. என்னோட கல்யாணம் வேணாம்னு வித்யாதான் சொல்லணும்”
“வித்யா சொல்லு இவன் உனக்கு வேணாம்.. நாங்க நல்ல மாப்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறன் வா என்கூட” என்றார்.
“போதும் நிறுத்துங்க.. எனக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா? இப்போ உங்கிட்ட ஒரு சொத்தும் இல்லை. உங்களுக்கு பணம் வேணும்னா என்னை யாருக்கும் விக்ககக் கூட நீங்க தயங்க மாட்டீங்க.. உங்களோட வர்றது எனக்கு பாதுகாப்பில்ல” என்றவள் தீஷிதனிடம் வந்து, “மாமா என்னை அவங்க கூட அனுப்பாதீங்க, சொத்துக்காக அந்த கேடுகெட்ட விக்டர்க்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தவங்க, இப்போ பணத்துக்காக என்னை யாருக்கும் வித்தாலும் விப்பாங்க.. நான் அவங்க கூட போகல மாமா” என்றாள். அவளது தலையை வருடிக் கொடுத்த தீஷிதன்.
“எந்த பிள்ளையும் பாதுகாப்பை உணர்வது பெத்தவங்ககிட்டதான். ஆனால் எப்போ அந்த பெத்தவங்ககிட்டேயே பாதுகாப்பு இல்லைனு இவ சொன்னாளோ அப்பவே நீங்க தரம் குறைஞ்சி போயிட்டீங்க.. இதுக்கு அப்புறம் உங்களுக்கு இங்க இடம் இல்லை. நீங்க கிளம்பலாம்” என்றான்.
அவனை எதிர்த்து பேச முடியாமல் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
அத்தியாயம் : 02
வீரேந்திர ப்ரசாத்தின் ஸ்டேஷனின் முன்னால் வெள்ளை நிற சுமோக்கள் அணிவகுத்து நின்றன. அதில் நடுவில் வந்த கருப்பு நிற காரில் இருந்து இறங்கினார் அமைச்சர் கன்னியப்பன். அவரைத் தொடர்ந்து அவரது தொண்டர்களும் அந்த காவல் நிலையத்தில் நுழைந்தார்கள். கன்னியப்பன் உள்ளே வருவதை பார்த்த வீரேந்திர ப்ரசாத் எதுவும் பேசாமல் கால் மேல் காலைப் போட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் முன்னால் வந்த கன்னியப்பன் இருமினார்.
“ஏட்டையா தண்ணீ குடிங்க ரொம்ப இருமுறீங்க…” என்றான். அதற்கு ஏட்டையாவும், “சார் நான் இல்ல சார்… அமைச்சர் ஐயா வந்துருக்காங்க…” என்றார்.
“ஏன் மினிஸ்டருக்கு பேச்சு வராதா இருமல் மட்டும்தான் வருமா…? அவங்க வந்திருக்கிறதை நீங்கதான் சொல்லனுமா….?” என்ற வீரேந்திர ப்ரசாத் நிமிர்ந்து கன்னியப்பனை பார்த்தான்.
“என்ன போலீசு அமைச்சரு வந்தா எழுந்து நின்னு சலூட் அடிக்கத் தெரியாதா….? உங்க ட்ரெய்னிங்ல சொல்லிக் கொடுக்கலயா…?”
“ரொம்ப நல்லாத் தெரியுமே… எனக்கு ட்ரெய்னிங்கில் நல்லா சலூட் அடிக்கிறதுக்கும் சொல்லிக் கொடுத்திருக்காங்க…. குறி பார்த்து துப்பாக்கி சுடவும் சொல்லிக் கொடுத்திருக்காங்க..
நேர்மையானவளுக்கு மட்டும் தான் என்னோட கை சலூட் அடிக்கும்… இப்ப எதுக்காக நீங்க இங்க வந்து இருக்கீங்க…. கட்சி ஆபீஸை இங்க மாத்திட்டாங்களா என்ன இவ்வளவு பெரிய கூட்டமா வந்திருக்கீங்க…?”
“என்ன போலீஸ் சத்தம் ஓவரா இருக்கு…”
“இது என்னோட ஸ்டேஷன் இங்கே நான் சத்தம் போடுவேன்…. முதல்ல உங்க பின்னாடி இருக்கிற இந்த கூட்டத்தை வெளில போக சொல்லுங்க…. இங்க எனக்கு டிஸ்டர்ப்சன்ஸா இருக்கு…” என்றான்.
“ஏய் என்ன எங்களை வெளியே போக சொல்ற…. நான் யார் தெரியுமா ஐயாவோட தொண்டன் ஐயாவுக்கோ ஐயாவோட குடும்பத்துக்கோ ஒன்னுன்னா நான் இங்கேயே தீ குளிக்கவும் தயார்…” என்றான் ஒருவன்.
“அப்படியா சரி அப்ப நீ தீ குளிச்சிடு….” என்று சர்வசாதாரணமாக சொன்னான் வீரவேந்திர ப்ரசாத்.
“இங்க பாரு போலீசு என் பையன மறுவாதியா வெளில விட்டுரு… இல்ல அதோட பின்விளைவு ரொம்ப மோசமா இருக்கும்….”
“என்ன பண்ணுவ வழக்கம் போல சினிமாவில் வர மாதிரி தண்ணியில்லாத காட்டுக்கு மாத்த போறியா…. எனக்கு அது ஒன்னும் பிரச்சனை இல்ல… ஆனா உன் பேர சொல்ல உனக்கு பையன் இருக்க மாட்டான்….. எவ்வளவு தைரியம் இருந்தா காலேஜ் படிக்கிற பசங்களுக்கு போதை பொருள் வித்திருப்பான்…. அவன் வாழ்க்கை ஃபுல்லா உள்ளே இருக்கிற மாதிரி தண்டனை வாங்கிக் கொடுக்கல நான் வீரேந்திர ப்ரசாத் இல்லை…” என்றான்.
இதைக் கேட்ட கன்னியப்பன் சிரிக்க ஆரம்பித்தார். “என்ன போலீசு தமாஷ் பண்ற…? என்னைப் பற்றி தெரிஞ்சும் நீ இப்பிடி பேசலாமா…? நீ மட்டும் இப்போ என் பையனை வெளியில விடலனு வையேன் அப்புறம் நான் உன்னை விட பெரிய இடம்… அதுதான்பா ஐஜிக்கிட்ட போவேன்… அப்புறம் உனக்கு சஸ்பெண்ட் கிடைக்கும் ஏன் வேல கூட போக வாய்ப்பு இருக்கு… எப்பிடி வசதி…?” என்று கூற, வீரேந்திர ப்ரசாத் தனது சேரில் இருந்து எழுந்து வந்தவன்,
“அய்யோ சார் அப்படி மட்டும் பண்ணிடாதீங்க… ப்ளீஸ் சார் ஐஜி ரொம்ப மோசமானவரு சார் என்னை சஸ்பெண்ட் பண்ண காத்திட்டு இருக்கிறாரு… ப்ளீஸ் அவர்க்கிட்ட சொல்லுடாதீங்க சார்…” என்று கெஞ்சினான்.
அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த கன்னியப்பன், “ஏதோ நீ இவ்வளவு கெஞ்சுறதனால உன்னை மன்னிச்சு விடுறன்….” என்று சொல்லும் போது, சிரிக்க ஆரம்பித்தான் வீரேந்திர ப்ரசாத். “ஆஆஆ ஐயோ முடியல… ஆஆஆஆ.. அம்மா….” என்று வயிற்றில் கைவைத்து சிரித்தவனை புரியாத பார்வை பார்த்தார் கன்னியப்பன்.
“என்ன மினிஸ்டரே நான் உங்கிட்ட இப்படி எல்லாம் கெஞ்சுவன்னு நீ எதிர்பார்த்திருப்ப… அதுதான் உன்னோட ஆசையை கெடுக்க வேணாம்னு நான் அப்படி செஞ்சேன்… ஏய் நீ சொல்ற ஐஜி இல்ல அந்த ஆண்டவனே வந்தாலும் உன் பையனை வெளியில விட முடியாது… உன்னால முடிஞ்சதைப் பண்ணு….” என்றான்.
இதைக் கேட்ட கன்னியப்பனுக்கு வீரேந்திர ப்ரசாத் மீது கோபம் வர அதை அடக்கிக் கொண்டவர், “இருடா உனக்கு நான் யார்னு காட்டுறன்…” என்றவர், லாக்கபில் இருந்த மகனிடம் சென்றார். “சர்வேஷ் கவலைப்படாத உன்னை நான் எப்டியாவது வெளியில கொண்டு வந்திடுறன்….. நீ தைரியமா இரு….” என்றவர் ஆட்களையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அவர் சென்றதும் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் வீரேந்திர ப்ரசாத்.
வீராவின் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த கன்னியப்பன் நேரே சென்றது ஐஜி ஆபீஸ்க்குத்தான். அங்கே வந்து யாரிடமும் அனுமதிகூட கேட்காமல் அவரது அறைக்குள் நுழைந்தார். அமைச்சரைப் பார்த்தும் எழுந்து நின்று சல்யூட் அடித்தார் ஐஜி விநாயக்.
அவர் சல்யூட் அடிப்பதைப் பார்த்த கன்னியப்பன், “அமைச்சர் வந்தா சல்யூட் அடிக்கணும்னு உனக்கு தெரிஞ்சிருக்கு ஆனா உனக்கு கீழ வேல பாக்குறவனுக்கு அந்த மரியாதை கூட தெரியலை…”
“சார் என்னாச்சி…? அமைச்சரான உங்களுக்கு ஒரு சல்யூட் கூட அடிக்காதவன் யாருனு சொல்லுங்க சார்… அவன் மேல உடனே நான் ஆக்ஷன் எடுக்கிறன்…”
“அவன் பேரு வீரேந்திர ப்ரசாத்…”
‘அட பாவிப் பயலே…’ என மனதிற்குள் நினைத்தவர், “அவனை என்ன பண்ணலாம் சார்…? சொல்லுங்க சார் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்டியே பண்ணுடலாம்….”
“பரவாயில்ல அத விட்டுடலாம்…. உன்னால எனக்கு ஒரு வேல நடக்கணும்…”
“சார் முதல்ல உக்காருங்க… சொல்லுங்க உங்களுக்கு என்ன பண்ணணும்…?”
“என் பையன் சர்வேஷை அந்த வீரேந்திர ப்ரசாத் அரெஸ்ட் பண்ணி லாக்கப்ல வச்சிருக்கான்… அவன்கிட்ட என் பையனை ரிலீஸ் பண்ணச் சொல்லு…”
“சார் உங்க பையன்னு தெரிஞ்சுமா அரெஸ்ட் பண்ணியிருக்கிறான்…?”
“அட ஆமாய்யா… நான் வெளியில விடச் சொல்லியும் அவன் என் பையனை வெளியில விடல…”
“சார் அவன்கிட்ட மனுஷன் பேசுவானா…? ரொம்ப திமிர் பிடிச்சவன் அவன்… அவனை யாராலும் கன்ரோல் பண்ண முடியாதே சார்… நான் சொன்னாக் கூட அவன் விடமாட்டான்… நீங்க லீகலா என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுங்க…”
“நீ என்னையா சொல்ற…? அங்க உள்ள இருக்கிறது என்னோட பையன் நீ சர்வசாதாரணமா சொல்ற லீகலா போங்கனு…”
“சார் உங்க பையனை எதுக்கா அரெஸ்ட் பண்ணியிருக்கிறான்…?”
“அது காலேஜ்ல போதைப்பொருள் வித்தானாம்னு பிடிச்சிருக்கான்…”
“சார் இது ரொம்ப பெரிய கேஸ் சாதாரண கேஸையே அவன் விடமாட்டான்… இது போதைப் பொருள் கேஸ்… எனக்குத் தெரிஞ்சி உங்க பையன் திரும்ப வீட்டுக்கு வர்றது ரொம்ப கஷ்டம்…”
“என்ன விளையாடுறியா…?”
“சார் நான் விளையாட நீங்க என்ன பிளே கிரவுண்டா…? நான் உண்மையா சொல்றன் அவனுக்கு நீங்க ப்ரெஷர் குடுத்தீங்க அப்புறம் உங்க பையனை என்கவுண்டர்ல போட்டுடுவான்… நீங்க முதல்ல நல்ல லாயரை பாத்துப் பேசுங்க…”
“என்ன எல்லா போலீஸூம் சேர்ந்து ஆட்டம் காட்டுறீங்களோ… என் பையனை வெளியில எடுத்திட்டு அப்புறம் உங்களை பாத்துக்கிறன்…”
“ஓகே சார் நாங்க வெயிட் பண்றோம்… முடிஞ்சா உங்க பையனை வெளியில எடுங்க…” என்றார் ஐஜி. இதைக் கேட்ட கன்னியப்பன் கோபமாக சென்று விட்டார் லாயரைப் பார்க்க. அவர் சென்றதும் ஐஜி, ‘அவன், நான் சொல்றதையே கேக்க மாட்டான்…. இவன் சொல்றதையா கேக்கப் போறான்…? என்ன ஆட்டம் ஆடுறீங்கடா… உங்க ஆட்டத்தை எல்லாம் அடக்கத்தான் அவன் வந்திருக்கான்… ஒருத்தனையும் விட மாட்டான்…’ என்று சொல்லிக் கொண்டார் ஐஜி.
………….…………………….………….……
சுதர்ஷினி ஆபிஸ் அறைக்குள் சென்று அங்கிருந்த ப்ரின்சிப்பாலிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அப்பாயின்மென்ட் லெட்டரைக் கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்த ப்ரின்சிப்பால், “கோல்ட் மெடல்ல பாஸ் பண்ணியிருக்கிறீங்க சூப்பர் மேம்…”
“தாங்க்யூ சார்…”
“மேம் உங்களோட டியூட்டியை நீங்க சரியா பண்ணுவீங்கனு நான் நம்புறேன் வாழ்த்துகள்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேம்.. இங்க இருக்கிற எல்லா டீச்சர்ஸையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி பண்ணி வைக்கிறன்…”
“உங்களோட வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்… கண்டிப்பா என்னோட வேலையை நான் கரெக்ட்டா பண்ணுவன்…” என்றாள்.
ப்ரின்சிப்பால் எல்லா டீச்சர்ஸையும் அங்கே அழைத்து சுதர்ஷினியை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களையும் சுதர்ஷினிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களைப் பார்த்து சுதர்ஷினி சிநேகப் புன்னகை செய்தாள். பின்னர் சுதர்ஷினிக்கு நாளை டைம் டேபிள் தருவதாகவும் இன்று மட்டும் டீச்சர்ஸ் இல்லாத வகுப்பில் இருக்குமாறு கூறினார். அவளும் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தாள்.
வெளியே வந்த சுதர்ஷினி அங்கே அவள் வரும்போது ஒரு ஸ்டூடண்டைப் போட்டு அடித்தவனைத் தேடினாள். ஆனால் அவனைக் காணவில்லை. ‘சரி எங்க போயிடப் போறான்… எப்பவாவது கையில மாட்டுவான்ல அப்போ பாத்துக்கலாம்… முதல்ல போய் காலேஜை பாக்கலாம்…’ என்றவள் காலேஜை சுத்திப் பார்த்துக் கொண்டு வந்தாள். அழகிய மலர்களாலும், சுவற்றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த வாசகங்களாலும் அந்த காலேஜ் மிகவும் அழகாக இருந்தது.
சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த சுதர்ஷினி ஒரு வகுப்பில் இருந்து அதிக சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்டவள் அந்த வகுப்பினுள் சென்றாள். காலேஜ்க்கு புதிய அவளைப் பார்த்தும் மாணவர்களின் சத்தம் நின்றது. அமைதியாக அவளைப் பார்த்தனர்.
“ஹாய் என்ன எல்லோரும் என்னை ஏலியனைப் பாக்கிற மாதிரி பாக்குறீங்க…? பயப்படாதீங்க நான் ஒண்ணும் ஏலியன் கெடயாது… உங்க காலேஜ்க்கு புதுசா ஜாயின் பண்ணிக்கிற தமிழ் மிஸ்…” என்றாள்.
அந்த வகுப்பில் இருந்த ஒரு மாணவன் சட்டென்று எழுந்து, “என்ன புது மேமா…? நான் எங்க க்ளாஸ்கு புதுசா ஜாயின் பண்ண பொண்ணுனுல நெனச்சேன்….” என்றதும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
“அப்டியா… எல்லாரும் அப்டித்தான் நெனச்சீங்களா… நான் பாக்க ரொம்ப குட்டியாக இருக்கேன்ல… பரவால்ல இப்போதான் நான் மிஸ்னு தெரிஞ்சிடுச்சுல…”
“மேம் நான் இப்டி சொன்னதுக்கு உங்களுக்கு கோபம் வரலையா…?”
“ம்கூ.. கோபம் வரலை… எதுக்கு கோபம் வரணும் என்னைப் பத்தி தெரியாமதானே நீ என்னை அப்டி நெனச்ச…? அதனால எனக்கு கோபம் வரல…”
“மேம் நீங்க ரொம்ப ஸ்வீட்டா இருக்கிறீங்க…”
“அச்சச்சோ அப்போ என்னை எறும்பு கடிச்சிடுமோ….?”
“என்ன மேம் சொல்றீங்க…?”
“ஆமா ஸ்வீட்னா எறும்பு வந்துடும்ல அதுதான் என்னை எறும்பு கடிக்குமானு கேட்டேன்…” என்றதும் மாணவர்கள், “மேம் நீங்க ரொம்ப ஜாலியா பேசுறீங்க… உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றனர்.
அவளும், “எனக்கும் உங்க க்ளாஸை ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றாள். இப்படியாக ஒரு சில வகுப்பிற்குச் சென்று மாணவர்களுடன் பேசி அவர்களைப் பற்றி அறிந்து கொண்டாள். காலேஜ்க்கு வந்த அன்றே மாணவர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டாள் சுதர்ஷினி. அந்த நிறைவோடு காலேஜ் முடிந்ததும் பஸ்ஸிற்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்😊
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 32
மணிகண்டன் மிகுந்த கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். “என்னங்க, என்னாச்சு உங்க முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு? ஏதாவது பிரச்சனையா?”
“உன்ன சொல்லணும் டி.. எல்லாம் நீ பெத்து போட்டியே ஒரு பொண்ணு அவளால வந்த பிரச்சனை. ஓடுகாலி கழுதை.. எவனோட ஓடிப்போச்சுன்னே தெரியல.. இப்போ அந்த விக்டர் வந்து நம்ம பொண்ணு தேவையில்ல ஒன்னும் தேவை இல்லன்னு சொல்லி கத்திட்டு இருந்தான். அப்புறம் நம்ம சொத்து எல்லாம் அவனோட பேருக்கு மாத்தி எடுத்திட்டு போயிட்டான்.”
“என்ன சொல்றீங்க, அப்போ நம்ம பேருல எந்த சொத்தும் இல்லையா? இப்போ என்ன தாங்க பண்றது?” “என்ன பண்றதா? ரோட்ல போய் பிச்சை தான் எடுக்கணும். இந்த வீட்டுக்கு கூட ஒரு நாள் தான் டைம் கொடுத்து இருக்கிறான். ஒரு நாள்ல இங்க இருந்து நம்ம கிளம்பனும் இல்லைன்னா நம்ம உசுரு கூட மிஞ்சாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் உன்னோட பொண்ணு வித்யாவை மட்டும் கண்டுபிடிச்சேன்னு வை என் கையால தான் அவளோட சாவு.”
“என்னங்க இப்படி பேசுறீங்க? என்ன இருந்தாலும் அவ நாம ஆசையா பெத்த பொண்ணுங்க.”
“அதுக்காக இப்படி நம்மள சந்தி சிரிக்க வச்சுட்டு, பிச்சைக்காரங்க ஆக்கிப்புட்டு போனவ அவளை எப்பவும் என்னால மன்னிக்க முடியாது.”
“இப்ப என்னங்க பண்றது?”
“என்ன பண்றது, எங்கையாவது போய் தொலைவோம், உன் ட்ரெஸ் எல்லாம் எடுத்து வை.”
“எங்க தாங்க போறது?”
“எங்க போறது? எங்க போறதுனு என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்? கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?” என்றவர் தனது அறைக்குள் சென்றார்.
‘என்ன இப்படி சொல்லிட்டு போயிட்டாரு.. இவரு இருக்கிற கோவத்தில என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரே. என்ன பண்ணலாம்’ என்று யோசித்தவாறு உட்கார்ந்தார் லீலாவதி.
அப்போது லீலாவதிக்கு ஒரு போன் வந்தது. “யாரா இருக்கும், புது நம்பர்ல இருந்து கால் வருது. ஒரு வேளை வித்யாவா இருக்குமோ?”என்றவர் உடனே போனை எடுத்தார்.
“ஹலோ யாரு?”
“நான் யார் என்றது முக்கியம் இல்ல. நான் சொல்ல போற விஷயம் தான் முக்கியம்.”
“என்ன விஷயம்?”
“இங்க பாருங்க உங்க வளர்ப்பு பொண்ணு சம்யுக்தாவுக்கும் ஊட்டியில இருக்கிற பெரிய பிஸ்னஸ்மேனுக்கும் நாளைக்கு கல்யாணம்.”
“வாட் சம்யுக்தாவுக்கும் இன்னொரு கல்யாணமா? என்ன விளையாட்டுறீங்களா?”
“இங்க பாருங்க மேடம், நான் சொல்றது உண்மைதான். நாளைக்கு சம்யுக்தா மேடம்க்கும் தீஷிதன் சார்க்கும் கல்யாணம். அதுவும் ஊட்டியில் இருக்கிற பெரிய ஹால்ல நடக்க இருக்கு. நீங்க கண்டிப்பா வரணும்னு எங்க பாஸ் உங்க கிட்ட சொல்ல சொன்னாரு.”
“எவன்டா உன் பாஸ்?”
“என் பாஸ் தீஷிதன் சார். இதோ இப்போ கூட உங்களுக்கு வாட்ஸ் அப்ல அவங்களோட இன்விடேஷன் அனுப்ப சொன்னாரு. நான் அனுப்பி இருக்கேன் பாருங்க. கண்டிப்பா நீங்க இங்க வந்தே ஆகணும்.”
“அந்த ஒன்னுத்துக்குமே உதவாதவ கல்யாணத்துக்கு நான் எதுக்கு வரணும்? அதெல்லாம் வர முடியாது.”
“நீங்க வநுதே ஆகணும்ன்றது என் பாஸோட ஆர்டர்.”
“டேய் யார்டா உன் பாஸ்? எனக்கு தெரியாது சும்மா ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்க? நான் வேற கடுப்புல இருக்கேன். நீ வேற மரியாதையா போனை வை..” என்று கத்திவிட்டு ஃபோனை வைத்தார்.
பின் தனது போனை எடுத்து வாட்ஸ்அப்பை பார்க்க, அங்கே சம்யுக்தா தீஷிதனின் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் படமும் அவர்களுடைய திருமண அழைப்பிதழும் வந்திருந்தது. அதைப் பார்த்ததற்கே லீலாவின் வாய் வயிறு எல்லாம் எரிந்தது. ‘இங்க நாங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம். இவ எப்படி சந்தோஷமா இருக்கான்னு பாரு..’ என்று கோபப்பட்டவர், “என்னங்க…. என்னங்க…” என்றார்.
அவரது சத்தத்தில் அங்கே வந்த மணிகண்டன், “என்னடி ஒரு மனுஷனை நிம்மதியா கொஞ்ச நேரம்கூட இருக்க விட மாட்டியா?”
“இங்க பாருங்க அந்த வீணா போன சம்யுக்தாக்கு ரெண்டாவது கல்யாணமாம். மாப்பிள்ளை பெரிய பிசினஸ்மேன்னு போட்டு இருக்கு.”
“என்ன ரெண்டாவது கல்யாணமா? எங்க பார்ப்போம்.” என்றவர் அந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
“அடியே இவன் ஊட்டியிலேயே பெரிய பிசினஸ்மேன்.. சென்னைல கூட இவனுக்கு நிறைய கம்பெனிஸ் இருக்கு.. ரொம்ப பெரிய இடம்.. ஆனா இவ எப்படி அங்க இவன் கூட?”
“யாருக்குத் தெரியும்? அதிர்ஷ்டம் தான் பாருங்களேன். அவளுக்கு வந்த வாழ்க்கையை.. இவெல்லாம் நல்லாவே இருக்க மாட்டா. நம்ம இப்போ எப்படி கஷ்டப்படுறோம்.. இவ மட்டும் எப்படி சொகுசா வாழ்றா பாருங்க?” என்று கடுகு போல பொரிந்து தள்ளினார் லீலாவதி.
சற்று நேரம் அந்த போட்டோவை பார்த்து மணிகண்டனுக்கு ஒரு ஐடியா வந்தது. “லீலா எனக்கு ஒரு ஐடியா தோணுது.”
“என்னங்க?”
“இங்க பாரு இப்போ நம்ம போறதுக்கு போக்கிடம் ஒன்னும் இல்ல. சொத்து பத்து எல்லாம் அந்த விக்டருக்கு போயிடுச்சு. இப்போ நமக்கு இருக்கிற ஒரே ட்ரம் காட் இந்த சம்யுக்தா தான்.”
“என்னங்க சொல்றீங்க?”
“நம்ம போய் சம்யுக்தாவைப் பார்க்கலாம்.. அவ கல்யாணத்துக்கு போற மாதிரி போய் நைசா அவ கூடவே தங்கிக்கலாம். இப்போ இவளை விட்டா நமக்கு வேற வழி கிடையாது.”
“அதுக்காக நம்ம வீட்டை விட்டு விரட்டின அவளோட கால்ல போய் விழச் சொல்றீங்களா? நாம போனாலும் அவ ஏத்துப்பாளா?”
“ஏய் அவ ரொம்ப நல்லவ. அதனால நம்ம எப்போ போனாலும் ஏத்துக்குவா. இப்பா நமக்கு இருக்கிற ஒரே வழி இவதான். இங்க பணம் இல்லாம இருக்க முடியாது. ஆமா உனக்கு கால் பண்ண நம்பருக்கு கால் பண்ணி நம்ம அங்க வர்றதா சொல்லு.”
“என்னால அவன்கிட்ட பேச முடியாது நீங்களே பேசுங்க.” என்றவர் அவரனுக்கு போன் பண்ணினார். கால் அடித்ததும் எடுத்தவர், “ஹலோ யாருங்க நீங்க? என் பொண்ணு சம்யுக்தா எங்க?”
“இருங்க சார் மணிகண்டன் சார்.. எங்க பாஸ்தான் இந்த நம்பருக்கு இன்விடேஷன் அனுப்ப சொன்னாங்க.. கண்டிப்பா நீங்க இதை கல்யாணத்துக்கு வரணும்னு சொல்ல சொன்னாங்க..”
“சரிங்க நான் வரேன் ஆனா நான் எப்படி வர்றது?”
“அதுக்கு ஒன்னும் பயப்பட வேண்டாம் சார்.. எங்க பாஸ் அதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணுவாரு. நீங்க ரெடியாயிட்டு கால் பண்ணுங்க. நான் உங்களுக்கு கார் அனுப்பறேன்.”
“சரி நான் உங்களுக்கு கால் பண்றேன்.” என்றவர் ஃபோனை வைத்துவிட்டு, “பெரிய புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்கா. நம்மள அவனே காரை அனுப்பி நம்மல வீட்டுக்கு கூப்பிடுறான். நாம அங்க போயிடலாம்.. நீ நமக்கு தேவையான ட்ரெஸ்ஸ மட்டும் எடுத்து பேக் பண்ணு.”
“சரிங்க..” என்று லீலாவதி அந்த வேலையை செய்ய உள்ளே சென்றார்.
…………………………………………………
தீஷிதன் வீட்டிற்கு கூட செல்லாமல் நேரே ஹாஸ்பிடலுக்குச் சென்றான். அங்கே அவன் கொண்டு வந்தவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கி டெஸ்ட் எடுக்க அனுப்பி வைத்தார். “தீஷிதன் நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ரிப்போர்ட் இப்போ வந்திடும்.”
“ஓகே டாக்டர். நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி என் ஃபியான்சி மயக்கம் போட்டுட்டாங்கனு கூட்டிட்டு வந்தப்போ ஒரு டெஸ்ட் எடுக்க சொன்னேனே.. அந்த ரிப்போர்ட்டை வந்திட்டா?”
“யெஸ் தீஷிதன். அந்த ரிப்போர்ட் நேற்றுதான் வந்தது.” என்றவர் நர்ஸை அழைத்து தீஷிதன் கேட்ட ரிப்போர்ட்டை எடுத்து வரச் சொன்னார். நர்ஸ் ரிப்போர்ட்டை எடுத்து வந்து டாக்டரிடம் கொடுத்தார்.
தீஷிதன் தனக்கு முன் இருக்கும் டாக்டரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் கூறும் பதிலால் பல மாற்றங்கள் நடக்க இருக்கிறது. தனது கையில் இருந்த ரிப்போர்ட்டை நன்கு பார்த்து விட்டு, தீஷிதனை நிமிர்ந்து பார்த்தார் டாக்டர். அப்போது தீஷிதனுக்கு போன் வந்தது. எடுத்துப் பார்க்க சம்யுக்தாதான் அழைத்திருந்தாள். சிரித்துக் கொண்டு டாக்டரிடம், “டாக்டர் ப்ளீஸ் ஒன் மினிட்..”
“ இட்ஸ் ஓகே தீஷிதன்.” என்றதும் போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“யுக்தா சொல்லுமா”
“எங்க இருக்கீங்க? இன்னும் வீட்டிற்கு வரல.. மாமாவேற உங்களை தேடிட்டு இருக்காங்க.. எங்க போறீங்கனு சொல்லிட்டாவது போயிருக்கலாமே..”என்று படபட என்று பேசினாள். இதைக் கேட்ட தீஷிதன், “என்ன மேடம், படபடனு பட்டாசு மாதிரி வெடிக்கிறீங்க? அக்மார்க் பொண்டாட்டியாவே மாறிட்டீங்க.. எனக்கு வேலை மிச்சம் போ.. நான் நல்லா இருக்கேன்.. ஊட்டியிலதான் இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களை பார்க்க ஓடி வந்திடுவன்” என்றான்.
“இல்லைங்க மாமா தான் உங்களை காணோம்னு…”
“அப்போ மேடம் என்னை தேடலையா?” என்றதற்கு சம்யுக்தா பதில் பேசவில்லை. அமைதியாக இருந்தாள்.
“ஓகே இதுக்கு நீங்க இப்போ பதில் சொல்ல வேண்டாம்.. நான் சீக்கிரமாவே வந்துடறேன்..” என்றவன் போனை வைத்து விட்டு டாக்டரிடம் சென்றான்.
“சாரி டாக்டர்..”
“இட்ஸ் ஓகே தீஷிதன்.. இந்த ரிப்போர்ட்ல நீங்க சொன்ன மாதிரி எந்த ப்ராப்ளமும் இல்ல. சம்யுக்தா நல்லா இருக்கிறாங்க. அவங்க ஹெல்த் ரொம்ப நல்லா இருக்கு. அப்புறம் அவங்களால குழந்தை பெத்துக்க முடியும். அதுல எந்த பிரச்சனையும் இல்லை..”
“டாக்டர் நிஜமா சம்யுக்தாக்கு குழந்தை பிறக்கிறதுல ப்ராப்ளம் இல்லையே..”
“உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்கிறாங்க தீஷிதன். நூறு வீதம் நான் அடிச்சு சொல்லுவேன் சம்யுக்தாவால் தாயாக முடியும்.”
இதை கேட்டதும் தீஷிதன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.. யுக்தா இதை நினைச்சித்தான் ரொம்ப கவலைப்பட்டா…”
“அவங்க கிட்ட சொல்லுங்க தீஷிதன்.. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுத்த ரிப்போர்ட்டை எடுத்து வந்தார் நர்ஸ்.
அந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர், தீஷிதனிடம், “தீஷிதன் இன்னைக்கு உங்களோட சந்தேகம் எல்லாம் தீர்ந்து போகணும்னு இருக்கு போல..”
“என்ன டாக்டர் சொல்றீங்க?”
“ஆமா தீஷிதன் நீங்க கேட்டது இப்போ கன்பார்மாகிருக்கு.. உங்களுக்கு இதுல எந்த டவுட்டுமே வேண்டாம்” என்றார் டாக்டர்.
தீஷிதனுக்கு என்ன சொல்றதுனே தெரியல. எல்லாப் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது போல இருந்தது. அதே சமயத்தில் அவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தான். டாக்டரிடம் நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்வாழ்வு : 32
மணிகண்டன் மிகுந்த கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். “என்னங்க, என்னாச்சு உங்க முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு? ஏதாவது பிரச்சனையா?”
“உன்ன சொல்லணும் டி.. எல்லாம் நீ பெத்து போட்டியே ஒரு பொண்ணு அவளால வந்த பிரச்சனை. ஓடுகாலி கழுதை.. எவனோட ஓடிப்போச்சுன்னே தெரியல.. இப்போ அந்த விக்டர் வந்து நம்ம பொண்ணு தேவையில்ல ஒன்னும் தேவை இல்லன்னு சொல்லி கத்திட்டு இருந்தான். அப்புறம் நம்ம சொத்து எல்லாம் அவனோட பேருக்கு மாத்தி எடுத்திட்டு போயிட்டான்.”
“என்ன சொல்றீங்க, அப்போ நம்ம பேருல எந்த சொத்தும் இல்லையா? இப்போ என்ன தாங்க பண்றது?” “என்ன பண்றதா? ரோட்ல போய் பிச்சை தான் எடுக்கணும். இந்த வீட்டுக்கு கூட ஒரு நாள் தான் டைம் கொடுத்து இருக்கிறான். ஒரு நாள்ல இங்க இருந்து நம்ம கிளம்பனும் இல்லைன்னா நம்ம உசுரு கூட மிஞ்சாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் உன்னோட பொண்ணு வித்யாவை மட்டும் கண்டுபிடிச்சேன்னு வை என் கையால தான் அவளோட சாவு.”
“என்னங்க இப்படி பேசுறீங்க? என்ன இருந்தாலும் அவ நாம ஆசையா பெத்த பொண்ணுங்க.”
“அதுக்காக இப்படி நம்மள சந்தி சிரிக்க வச்சுட்டு, பிச்சைக்காரங்க ஆக்கிப்புட்டு போனவ அவளை எப்பவும் என்னால மன்னிக்க முடியாது.”
“இப்ப என்னங்க பண்றது?”
“என்ன பண்றது, எங்கையாவது போய் தொலைவோம், உன் ட்ரெஸ் எல்லாம் எடுத்து வை.”
“எங்க தாங்க போறது?”
“எங்க போறது? எங்க போறதுனு என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்? கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?” என்றவர் தனது அறைக்குள் சென்றார்.
‘என்ன இப்படி சொல்லிட்டு போயிட்டாரு.. இவரு இருக்கிற கோவத்தில என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரே. என்ன பண்ணலாம்’ என்று யோசித்தவாறு உட்கார்ந்தார் லீலாவதி.
அப்போது லீலாவதிக்கு ஒரு போன் வந்தது. “யாரா இருக்கும், புது நம்பர்ல இருந்து கால் வருது. ஒரு வேளை வித்யாவா இருக்குமோ?”என்றவர் உடனே போனை எடுத்தார்.
“ஹலோ யாரு?”
“நான் யார் என்றது முக்கியம் இல்ல. நான் சொல்ல போற விஷயம் தான் முக்கியம்.”
“என்ன விஷயம்?”
“இங்க பாருங்க உங்க வளர்ப்பு பொண்ணு சம்யுக்தாவுக்கும் ஊட்டியில இருக்கிற பெரிய பிஸ்னஸ்மேனுக்கும் நாளைக்கு கல்யாணம்.”
“வாட் சம்யுக்தாவுக்கும் இன்னொரு கல்யாணமா? என்ன விளையாட்டுறீங்களா?”
“இங்க பாருங்க மேடம், நான் சொல்றது உண்மைதான். நாளைக்கு சம்யுக்தா மேடம்க்கும் தீஷிதன் சார்க்கும் கல்யாணம். அதுவும் ஊட்டியில் இருக்கிற பெரிய ஹால்ல நடக்க இருக்கு. நீங்க கண்டிப்பா வரணும்னு எங்க பாஸ் உங்க கிட்ட சொல்ல சொன்னாரு.”
“எவன்டா உன் பாஸ்?”
“என் பாஸ் தீஷிதன் சார். இதோ இப்போ கூட உங்களுக்கு வாட்ஸ் அப்ல அவங்களோட இன்விடேஷன் அனுப்ப சொன்னாரு. நான் அனுப்பி இருக்கேன் பாருங்க. கண்டிப்பா நீங்க இங்க வந்தே ஆகணும்.”
“அந்த ஒன்னுத்துக்குமே உதவாதவ கல்யாணத்துக்கு நான் எதுக்கு வரணும்? அதெல்லாம் வர முடியாது.”
“நீங்க வநுதே ஆகணும்ன்றது என் பாஸோட ஆர்டர்.”
“டேய் யார்டா உன் பாஸ்? எனக்கு தெரியாது சும்மா ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்க? நான் வேற கடுப்புல இருக்கேன். நீ வேற மரியாதையா போனை வை..” என்று கத்திவிட்டு ஃபோனை வைத்தார்.
பின் தனது போனை எடுத்து வாட்ஸ்அப்பை பார்க்க, அங்கே சம்யுக்தா தீஷிதனின் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் படமும் அவர்களுடைய திருமண அழைப்பிதழும் வந்திருந்தது. அதைப் பார்த்ததற்கே லீலாவின் வாய் வயிறு எல்லாம் எரிந்தது. ‘இங்க நாங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம். இவ எப்படி சந்தோஷமா இருக்கான்னு பாரு..’ என்று கோபப்பட்டவர், “என்னங்க…. என்னங்க…” என்றார்.
அவரது சத்தத்தில் அங்கே வந்த மணிகண்டன், “என்னடி ஒரு மனுஷனை நிம்மதியா கொஞ்ச நேரம்கூட இருக்க விட மாட்டியா?”
“இங்க பாருங்க அந்த வீணா போன சம்யுக்தாக்கு ரெண்டாவது கல்யாணமாம். மாப்பிள்ளை பெரிய பிசினஸ்மேன்னு போட்டு இருக்கு.”
“என்ன ரெண்டாவது கல்யாணமா? எங்க பார்ப்போம்.” என்றவர் அந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
“அடியே இவன் ஊட்டியிலேயே பெரிய பிசினஸ்மேன்.. சென்னைல கூட இவனுக்கு நிறைய கம்பெனிஸ் இருக்கு.. ரொம்ப பெரிய இடம்.. ஆனா இவ எப்படி அங்க இவன் கூட?”
“யாருக்குத் தெரியும்? அதிர்ஷ்டம் தான் பாருங்களேன். அவளுக்கு வந்த வாழ்க்கையை.. இவெல்லாம் நல்லாவே இருக்க மாட்டா. நம்ம இப்போ எப்படி கஷ்டப்படுறோம்.. இவ மட்டும் எப்படி சொகுசா வாழ்றா பாருங்க?” என்று கடுகு போல பொரிந்து தள்ளினார் லீலாவதி.
சற்று நேரம் அந்த போட்டோவை பார்த்து மணிகண்டனுக்கு ஒரு ஐடியா வந்தது. “லீலா எனக்கு ஒரு ஐடியா தோணுது.”
“என்னங்க?”
“இங்க பாரு இப்போ நம்ம போறதுக்கு போக்கிடம் ஒன்னும் இல்ல. சொத்து பத்து எல்லாம் அந்த விக்டருக்கு போயிடுச்சு. இப்போ நமக்கு இருக்கிற ஒரே ட்ரம் காட் இந்த சம்யுக்தா தான்.”
“என்னங்க சொல்றீங்க?”
“நம்ம போய் சம்யுக்தாவைப் பார்க்கலாம்.. அவ கல்யாணத்துக்கு போற மாதிரி போய் நைசா அவ கூடவே தங்கிக்கலாம். இப்போ இவளை விட்டா நமக்கு வேற வழி கிடையாது.”
“அதுக்காக நம்ம வீட்டை விட்டு விரட்டின அவளோட கால்ல போய் விழச் சொல்றீங்களா? நாம போனாலும் அவ ஏத்துப்பாளா?”
“ஏய் அவ ரொம்ப நல்லவ. அதனால நம்ம எப்போ போனாலும் ஏத்துக்குவா. இப்பா நமக்கு இருக்கிற ஒரே வழி இவதான். இங்க பணம் இல்லாம இருக்க முடியாது. ஆமா உனக்கு கால் பண்ண நம்பருக்கு கால் பண்ணி நம்ம அங்க வர்றதா சொல்லு.”
“என்னால அவன்கிட்ட பேச முடியாது நீங்களே பேசுங்க.” என்றவர் அவரனுக்கு போன் பண்ணினார். கால் அடித்ததும் எடுத்தவர், “ஹலோ யாருங்க நீங்க? என் பொண்ணு சம்யுக்தா எங்க?”
“இருங்க சார் மணிகண்டன் சார்.. எங்க பாஸ்தான் இந்த நம்பருக்கு இன்விடேஷன் அனுப்ப சொன்னாங்க.. கண்டிப்பா நீங்க இதை கல்யாணத்துக்கு வரணும்னு சொல்ல சொன்னாங்க..”
“சரிங்க நான் வரேன் ஆனா நான் எப்படி வர்றது?”
“அதுக்கு ஒன்னும் பயப்பட வேண்டாம் சார்.. எங்க பாஸ் அதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணுவாரு. நீங்க ரெடியாயிட்டு கால் பண்ணுங்க. நான் உங்களுக்கு கார் அனுப்பறேன்.”
“சரி நான் உங்களுக்கு கால் பண்றேன்.” என்றவர் ஃபோனை வைத்துவிட்டு, “பெரிய புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்கா. நம்மள அவனே காரை அனுப்பி நம்மல வீட்டுக்கு கூப்பிடுறான். நாம அங்க போயிடலாம்.. நீ நமக்கு தேவையான ட்ரெஸ்ஸ மட்டும் எடுத்து பேக் பண்ணு.”
“சரிங்க..” என்று லீலாவதி அந்த வேலையை செய்ய உள்ளே சென்றார்.
…………………………………………………
தீஷிதன் வீட்டிற்கு கூட செல்லாமல் நேரே ஹாஸ்பிடலுக்குச் சென்றான். அங்கே அவன் கொண்டு வந்தவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கி டெஸ்ட் எடுக்க அனுப்பி வைத்தார். “தீஷிதன் நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ரிப்போர்ட் இப்போ வந்திடும்.”
“ஓகே டாக்டர். நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி என் ஃபியான்சி மயக்கம் போட்டுட்டாங்கனு கூட்டிட்டு வந்தப்போ ஒரு டெஸ்ட் எடுக்க சொன்னேனே.. அந்த ரிப்போர்ட்டை வந்திட்டா?”
“யெஸ் தீஷிதன். அந்த ரிப்போர்ட் நேற்றுதான் வந்தது.” என்றவர் நர்ஸை அழைத்து தீஷிதன் கேட்ட ரிப்போர்ட்டை எடுத்து வரச் சொன்னார். நர்ஸ் ரிப்போர்ட்டை எடுத்து வந்து டாக்டரிடம் கொடுத்தார்.
தீஷிதன் தனக்கு முன் இருக்கும் டாக்டரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் கூறும் பதிலால் பல மாற்றங்கள் நடக்க இருக்கிறது. தனது கையில் இருந்த ரிப்போர்ட்டை நன்கு பார்த்து விட்டு, தீஷிதனை நிமிர்ந்து பார்த்தார் டாக்டர். அப்போது தீஷிதனுக்கு போன் வந்தது. எடுத்துப் பார்க்க சம்யுக்தாதான் அழைத்திருந்தாள். சிரித்துக் கொண்டு டாக்டரிடம், “டாக்டர் ப்ளீஸ் ஒன் மினிட்..”
“ இட்ஸ் ஓகே தீஷிதன்.” என்றதும் போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“யுக்தா சொல்லுமா”
“எங்க இருக்கீங்க? இன்னும் வீட்டிற்கு வரல.. மாமாவேற உங்களை தேடிட்டு இருக்காங்க.. எங்க போறீங்கனு சொல்லிட்டாவது போயிருக்கலாமே..”என்று படபட என்று பேசினாள். இதைக் கேட்ட தீஷிதன், “என்ன மேடம், படபடனு பட்டாசு மாதிரி வெடிக்கிறீங்க? அக்மார்க் பொண்டாட்டியாவே மாறிட்டீங்க.. எனக்கு வேலை மிச்சம் போ.. நான் நல்லா இருக்கேன்.. ஊட்டியிலதான் இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களை பார்க்க ஓடி வந்திடுவன்” என்றான்.
“இல்லைங்க மாமா தான் உங்களை காணோம்னு…”
“அப்போ மேடம் என்னை தேடலையா?” என்றதற்கு சம்யுக்தா பதில் பேசவில்லை. அமைதியாக இருந்தாள்.
“ஓகே இதுக்கு நீங்க இப்போ பதில் சொல்ல வேண்டாம்.. நான் சீக்கிரமாவே வந்துடறேன்..” என்றவன் போனை வைத்து விட்டு டாக்டரிடம் சென்றான்.
“சாரி டாக்டர்..”
“இட்ஸ் ஓகே தீஷிதன்.. இந்த ரிப்போர்ட்ல நீங்க சொன்ன மாதிரி எந்த ப்ராப்ளமும் இல்ல. சம்யுக்தா நல்லா இருக்கிறாங்க. அவங்க ஹெல்த் ரொம்ப நல்லா இருக்கு. அப்புறம் அவங்களால குழந்தை பெத்துக்க முடியும். அதுல எந்த பிரச்சனையும் இல்லை..”
“டாக்டர் நிஜமா சம்யுக்தாக்கு குழந்தை பிறக்கிறதுல ப்ராப்ளம் இல்லையே..”
“உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்கிறாங்க தீஷிதன். நூறு வீதம் நான் அடிச்சு சொல்லுவேன் சம்யுக்தாவால் தாயாக முடியும்.”
இதை கேட்டதும் தீஷிதன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.. யுக்தா இதை நினைச்சித்தான் ரொம்ப கவலைப்பட்டா…”
“அவங்க கிட்ட சொல்லுங்க தீஷிதன்.. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுத்த ரிப்போர்ட்டை எடுத்து வந்தார் நர்ஸ்.
அந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர், தீஷிதனிடம், “தீஷிதன் இன்னைக்கு உங்களோட சந்தேகம் எல்லாம் தீர்ந்து போகணும்னு இருக்கு போல..”
“என்ன டாக்டர் சொல்றீங்க?”
“ஆமா தீஷிதன் நீங்க கேட்டது இப்போ கன்பார்மாகிருக்கு.. உங்களுக்கு இதுல எந்த டவுட்டுமே வேண்டாம்” என்றார் டாக்டர்.
தீஷிதனுக்கு என்ன சொல்றதுனே தெரியல. எல்லாப் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது போல இருந்தது. அதே சமயத்தில் அவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தான். டாக்டரிடம் நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
அத்தியாயம் : 01
“ஹலோ யார் மேல கை வச்ச… நான் யாருனு தெரியுமா…?” என்ற குரல் கேட்க,
“டேய் நீ யாருனு உனக்கே தெரிலையா..? அய்யோ மாப்ள நீ அடிச்சதும் இவனுக்கு அவனையே மறந்துட்டு போலடா..” என்று ஒருவன் கத்த,
“அதான்றேன்.. டேய் நீ யாருனு தெரிலையா டா..? நான் அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடானு சொன்ன வேகத்துக்கு அடிச்சேனா அதான் மாப்ள மறந்துட்டான் போல….”என்று கூறினான் அவன். அவன் பெயர் வீரேந்திர ப்ரசாத்.. இதற்கு முன்னால் பேசியதோ அவனின் உயிர் நண்பன் பரத்.
அந்த அடிப்பட்டவனோ அவர்களையே முறைத்து பார்த்தவன் “என்னடா கிண்டலா..”என்று எகுறினான்.
“அடிங்க..”என்று அவன் மூக்கிலையே குத்திய வீரேந்திரனோ, “வாடா போடானா கூப்டுற..”என்று மறுபடியும் அவன் வாயில் குத்தினான்.
“மச்சான் அப்டிதான்டா அவனோட வாயில இருக்குற சைடு பல்ல கழட்டிடுடா…. அதப் பாக்கவே எனக்கு இரிட்டேட்டா ஆகுது…” என்றான் பரத் சாவகாசமாக அங்கிருந்த காரில் உட்கார்ந்தவாறே.
“அதான்டா எனக்கும் பிடிக்கல…..” என்றவன் அவர்களுக்கு பிடிக்காத பல்லை உடைத்துவிட்டே நகர்ந்தான்.
“ஆஆஆஆ அம்மா என் பல்லு..” என்று அடிப்பட்டவன் அலற,
“உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா…” என்றவாறே பரத் பாய்ந்து வந்தான். அதனை கேட்ட வீரேந்திரனோ பக்கென்று சிரித்துவிட்டான். கீழே விழுந்து புரண்டவனின் அருகில் வந்தவன், “உங்க வீட்ல அதிகமா உப்பு இருக்கோ இல்லையோ அதிகமா போத பொருள் வச்சிருக்க போல… அதான் அத பொட்டனமா போட்டு காலேஜ்ல விக்கிறியோ…?” என்றான் இவ்வளவு நேரம் இருந்த சிரிப்பு மறைந்து கடுமையான முக மாற்றம் செய்தவாறே.
அதில் அவன் மிரண்டு விழிக்க.. அவனின் பயப்பார்வை கண்டு குதுக்கலித்தவனோ, “மச்சான் இவன பாறேன்.. இவன் பயத்துல முழிக்கறத பாத்தா உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுது மச்சான்.. என்னவா இருக்கும்…?” என்றவாறே கன்னத்தில் கை வைத்தவாறு வீரேந்திர ப்ரசாத் கேட்க,
“ம்ம்ம் எனக்கு தெரிஞ்சிடுச்சி மச்சான்… அது என்னனா துன்பம் வரும்போது சிரிக்கனும்னு சொல்லுவாங்க இல்லடா அதுதான்.. ஆனா இதுல நோட் பண்ண வேண்டியது என்னனா நமக்கு துன்பம் வரும்போது சிரிக்கனும்னு சொன்னதுக்கு பதிலா இவனுக்கு துன்பம் வரும்போது சிரிக்கிறம்.. ஒருவேள அதா இருக்குமோனு நினைக்கிறன்.. நீ என்ன நினைக்கிற…?” என்று பரத் கூறினான்.
“ம்ம் இருக்கலாம்…” என்ற வீரேந்திரனோ அந்த அடிப்பட்டவனின் அருகில் உட்கார்ந்து ஒற்றை புருவத்தை உயர்த்தி காட்டியவன், “படிக்கிற வயசுல என்னடா போத கேட்குது… ம்ம் போத கேட்குது போத…..” என்றவன் அவன் தலையிலையே நங்கு நங்கு என்று கொட்டினான்.
“ஆஆஆஆ அய்யோ வலிக்கிது வலிக்கிது..”என்று கத்தியவன், “என்ன அடிச்சது மட்டும் என் அப்பாக்கு தெரிஞ்சிது மவனே நீ காலி….” என்றான்.
அதில் இன்னும் கலகலவென சிரித்த வீரேந்திரன் “அடேய் முட்டாள் டெப்ளட்டு… மிஞ்சி மிஞ்சி போனா உன் அப்பன் என்னடா செய்வான்.. ம்ம் என்ன என்னை வேலையை விட்டா தூக்க போறான்… ம்ச் இந்த பழைய படத்துல சொல்ற மாதிரி தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்துறதா பீலா விடுவான்… ஆனா ஒன்னு மட்டும் புரிலடா… தண்ணி இல்லாம எப்டிடா காடு வளரும்.. சரி விடு இதப்பத்தி நாம அப்புறம் பேசலாம்.. ம்ம் எங்க விட்டன்….?” என்று அவன் கேட்க,
“தண்ணீல்லா காடு மச்சான்..”என்று பரத் எடுத்துக்கொடுத்தான்.
“ஹான் ஆமா ஆமா.. மச்சான் நீ தூங்கலடா முழிச்சிதான் இருக்க..?”என்று பரத்தின் தோளை வீரேந்திரன் தட்ட
“ம்ம்ச் அது எப்டி மச்சான் தூங்கத்தான் விட்டுடுவியா என்ன….?” என்று கேட்டான்.
அதில் வீரேந்திரன் ஒற்றை புருவத்தை தூக்கி முறைத்தான். அதில் கப்பென்று வாயை மூடிக்கொண்டான் பரத். “ம்ம் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்துவான்.. ம்ச் இல்லனா எங்காச்சும் அதிக க்ரைம் நடக்குற இடத்துக்கு தூக்கி போடுவானா போடட்டும்… நமக்கும் இப்டி சில்லற கேஸ்லாம் பாத்து போர் அடிக்கிதே.. நாலு குண்டார்ஸ போட்டு தள்ளுனோமா ப்ரோமோஷன் வாங்குனோமா, கல்யாணம் பண்ணுனோமா, குட்டி…”என்று வீரேந்திரன் பேச,
“மச்சான் இப்போ இது அவசியமாடா..” என்று பரத் இடைபுகுந்தான்.
“ம்ச் இல்லைல..” என்றான் வீரேந்திரன். அவனை பார்த்து பரத்தும் ஆம் என்று தலையாட்ட. “சரி விடுடா நம்ம கஷ்டம் நமக்கு….” என்றவனோ அந்த அடிப்பட்டவனின் காலடியில் உட்கார்ந்தான், “இதுலாம் தான் உன் அப்பன் பண்ணுவான்.. இத தவிர வேற ஒன்னும் உன் அப்பனால..” என்று தன் தலை முடியை பிடுங்கி காட்டியவன், “இத கூட பண்ண முடியாது..”என்றான்.
அதில் அந்த அடிப்பட்டவன் கடுப்பாகினான். “என் அப்பாக்கு போன் போடுறேன் என்னத்த புடுங்குறாருனு பாருடா..” என்றான் கத்தலாக.
“அட கொப்பன் மவனே..” என்ற வீரேந்திர ப்ரசாத் அவனை அப்படியே கழுத்தை பிடித்து தூக்கினான்.
“மச்சான் அப்டிதான் அப்டிதான் தூக்குடா.. உன்னால முடியும்டா.. ம்ம் யூ கேன்..” என்று பரத் ரன்னிங் கமென்டரி கொடுத்தான்.
வீராவின் பிடியில் இருந்தவனோ “ஆஆம்ம்ம்…ம்ம்ம்….” என்று மூச்சிக்காற்றுக்கு திணறியவாறே கால்கள் அந்தரத்தில் உதைத்துக்கொண்டிருக்க,
“இவ்ளோ நேரம் பேசுனல இப்போ பேசு.. இப்போ பேசுடா….” என்று பரத் அவனை சுற்றி சொடக்கு போட்டான். ஆனால் வீராவின் முகமோ ரெளத்திரத்தில் சிவந்து போய் இருந்தது. “மரியாதையா சொன்னா கேட்கமாட்ட… அடிச்சி சொன்னாதான் கேப்ப..”என்றவன் அவனை தூக்கி வீசியிருந்தான்.
அவனோ, “ஆஆஆ…..” என்ற கத்தலுடன் பறந்துக்கொண்டிருக்க,
அப்போது தான் காலையில் முதல்நாள் வேலைக்கு வீட்டையே அதங்களம் செய்தவாறே கிளம்பினாள் சுதர்ஷினி.
“அம்மா சாப்பாடு கட்டிட்டியா..?” என்று குரல் கொடுத்தாள். அது முடியும் முன்னரே, “அப்பா என் சேரிய அயர்ன் பண்ணியா….?” என்று அடுத்த ஆர்டரை பறக்க விட்டாள்.
“ஏன்டி டீச்சரா தானே வேலைக்கு போற.. என்னவோ சென்னைக்கே கலெக்டர போற மாதிரி ஆர்டர் மேல ஆர்டர் போட்டுட்டு கிளம்புற..”என்று அவளின் தாய் சுமதி கத்தினார்.
அதில் வெறிகொண்டு அவரை முறைத்தவாறே வந்து நின்றாள் சுதர்ஷினி. “அம்மா நீ சொல்ற கலெக்டர கூட நாங்க தான் உருவாக்குறோம்..” என்று கையை ஆட்டியவாறே அவள் பெருமை பேச,
அதில் உதட்டை சுழித்து பழிப்பு காட்டியவறே “இன்னிக்கி தான் முத நாளு காலேஜிக்கு வேலைக்கு போறா.. ஆனா பல வருஷமா நல்லாசிரியர் விருது வாங்குன மாறி பெருசா பீத்திக்கிறா..” என்று சத்தமாக முனகினார் சுமதி.
ஆனால் அவர் முகத்திலோ அவர் பேசியதற்கு மாறாக தன் மகளை ஆசிரியராக்கியதற்கான பெருமை வழிந்தது.
“ஆமாம்மா பீத்தல் தான்.. இருக்காதா பின்ன கிட்டதட்ட ஏழு வருஷம் இதுக்காக படிச்சிட்டு வந்துருக்கேன்.. அப்போ இத்துனூண்டு பீத்தல் கூடவா இல்லாம இருப்போம்..”என்றவள் தன் அன்னையை பார்த்து உதட்டை கோணியவாறே நடந்தாள்.
“அதான்டி அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில கொட பிடிப்பான்… அந்த மாதிரில இருக்கு உன்ன பாத்தா.. ஆள பாத்தா அரைகுண்டான் அழக பாத்தா முக்கா குண்டான்…” என்று அவர் ஏதோ பேசிக்கொண்டே போனார்.
“இந்தா பிள்ளைய ஏன் காலையிலையே ஒரன்ட இழுத்துட்டு இருக்க சுமதி…” என்றவாறே மகளின் சேலையை கையில் எடுத்து வந்து தன் மகளிடம் நீட்டினார் சரவணன்.
“ஆமா அப்டியே பச்சப்புள்ள தூக்கி இடுப்புல வச்சிட்டு பள்ளிக்கூடத்துல போய் விட்டுட்டு வாங்க..”என்று அதட்டியவர் தன்னுடைய சமையல் வேலையை பார்க்க கிட்சனுக்குள் சென்றுவிட்டார்.
சுதர்ஷினி தன் அப்பாவை பார்த்து உதட்டை பிதுக்கினாள். அவரோ அவளைப் பார்த்து ஒற்றை கண் அடித்து சமாதானம் செய்தவர், “போடா போய் கிளம்பு டைம் ஆச்சி பாரு..”என்று கூறினார்.
அவளோ தன் படப்படக்கும் விழிகளுடன் ஹாலில் மாட்டிருந்த வால் க்ளாக்கை பார்த்தவள், “அய்யோ அப்பா உன் பொண்டாட்டி சண்ட போட்டுட்டு இருந்ததுல டைம் ஓடியே போச்சி…. இன்னைக்கி முத நாள் காலேஜ் வேற….” என்றவள் தன் தந்தையின் கையில் இருந்த புடவையை வாங்கியவள் தன் அறைக்குப் பறந்துவிட்டாள்.
இப்படியே அரைமணி நேரம் ஓட.. தன் தாய், தந்தையர்களிடம் கூறிவிட்டு தன் கல்லூரிக்கு ஓடினாள் சுதர்ஷினி.
‘அய்யோ இந்த அம்மா கூட சண்ட போட்டதுல காலேஜ்க்கு டைம் ஆச்சே… முதல் நாள் வேற இன்னைக்குன்னு லேட்டா போனா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க…? எல்லா பஸ்சும் கூட்டமாயிடுச்சு… இதுல இந்த சாரி வேற கட்டிக்கிட்டு எப்படி போறதுன்னு வந்த ரெண்டு மூணு பஸ்ஸையும் விட்டதுக்கு…. நெருங்கமா இருந்தாலும் பரவால்லன்னு அந்த முதல் பஸ்லயே வந்திருக்கலாம்…. இப்போ டைம் ஆயிடுச்சு…’ என்றவாறு, மெல்லிய ஊதா நிற புடவையை அணிந்து, தோளில் ஹேண்ட் பேக் தொங்க, கையில் சில புத்தகங்களையும் குடையையும் எடுத்துக் கொண்டு, நெற்றியில் விழுந்த முடியை காதோரம் ஒதுக்கி விட்டவள், கண்கள் இரண்டும் அலை பாய்ந்த படி ஓட்டமும் நடையுமாக, வந்து அந்த காலேஜின் முன்னால் நின்றாள்.
காலேஜின் வாசலின் முன்னால் வந்து நின்றவள். கீழே குனிந்து, தனது கையால் அதன் வாயிலைத் தொட்டு கும்பிட்டவள் நிமிர்ந்து, ‘கடவுளே இந்த காலேஜ்ல நான் ரொம்ப ஆசைப்பட்ட மாதிரியே டீச்சர் வேலை கிடைச்சிருக்கு… இந்த வேலையில எந்த பிரச்சனையும் வரக்கூடாது…. நான் என்னால முடிஞ்ச அளவுக்கு ஸ்டூடண்ட்ஸ்க்கு நல்ல வழிய சொல்லிக் கொடுக்கணும்….’ என்று கண்ணை மூடிக்கொண்டு, இறைவனை வணங்கியவள் தனது வலது காலை எடுத்து வைத்து காலேஜுக்குள் வந்தாள். சரியாக அந்த நேரத்தில், அவள் காலடியில் வந்து விழுந்தான் ஒருவன். உடனே அவளது நடை தடைப்பட்டது. ‘என்னடா இது… இவன் எங்க இருந்து வந்தான்…? இப்பதானே முருகா எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு கேட்டேன்…. அதுக்குள்ள பிரச்சனையை பார்சல் பண்ணி அனுப்பிட்டியா…. இரு உன்னை ரெண்டு நாளைக்கு வந்து நான் பாக்கவே மாட்டேன்… அது தான் உனக்கு நான் தர்ற பனிஷ்மென்ட்….’ என்று அவள் முருகனுடன் டீல் பேசிக் கொண்டிருக்கும்போதே. கீழே கிடந்தவனை எட்டி உதைத்தான் வீரேந்திர ப்ரசாத். “என்ன விட்டு… என்ன விட்டுடு…” என்று அழுதவன் குரலை கேட்டு நினைவுக்கு வந்தவள்.
‘ஐயோ இருக்கிற இடம் தெரியாம இப்படி சிலை மாதிரி நிக்கிறியே சுதர்….’ என்று தன்னைத்தானே திட்டியவள் கீழே கிடந்தவனைப் பார்க்க, அவனை அடித்தவன் இழுத்துக் கொண்டு சென்றான்.
“ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர்…” என்றாள். ஆனால் அவன் அடித்துக் கொண்டு இருந்ததால் அவள் அழைத்து அவனுக்கு சரியாக கேட்கவே இல்லை.
அவனை நோக்கி கையை நீட்டி மீண்டும் அழைக்கும் போது வாட்ச் நேரமானதை உணர்த்தியது. ‘நேரம் போயிடுச்சு… சீக்கிரம் போய் சைன் பண்ணிட்டு அப்புறம் வந்து இவன பார்த்துக்கொள்ளலாம்….’ என நினைத்தவள் அங்கிருந்து வேகமாக ஆபீஸ்க்கு சென்றாள்.
அவள் சென்றதும், வீரேந்திர பிரதாப் அருகில் நின்ற அவனின் நண்பனிடம், “பரத் யாரோ கூப்ட மாதிரி இருந்திச்சு.. திரும்பிப் பாத்தேன் ஆளையே காணோம்…”
“நான் யாரையும் பாக்கலையே மச்சான்… நீ அவனைப் போட்டு இந்த அடி அடிச்சிட்டு இருக்கும் போது என்னால எப்படிடா அதைப் பாக்காம இருக்க முடியும் சொல்லு…”
“டேய் ஏன்டா ஏன்….” என தலையில் அடித்துக் கொண்டான் வீரேந்திர பிரதாப். அதைப் பார்த்த சிரித்தான் அவனின் நண்பன் பரத்.
“சரி வா இவன ஸ்டேஷன் கூட்டிட்டு போலாம்.. இந்நேரம் அழையா விருந்தாளியா வந்து உட்கார்ந்திருக்குற கேஸை வேற பாக்கனும்..” என்றான் பரத்.
“ஹாஹா ஒன்னாவே சமாளிப்போம்… நண்பேன்டா..” என்று வீரேந்திர ப்ரசாத் பரத்தின் தோளை பிடித்து குலுக்க, அதில் புன்னகைத்துக்கொண்டான் பரத்.
நல்லநாள் அதுவுமா புதுக் கதையோட வந்திருக்கிறன் பட்டூஸ்… நீங்க எவ்வளவு கமெண்ட்ஸ் அண்ட் ரேட்டிங் தர்றீங்களோ அவ்வளவு வேகமாக எபி வரும்..
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 31
பரந்தாமன் மிகவும் யோசனையில் இருந்தார். அவரிடம் வந்த தமயந்தி, “அண்ணா என்ன காலையிலிருந்து உங்களோட முகம் நல்லா இல்ல, ஏதாவது பிரச்சனையா அண்ணா?”
“இல்ல தமயந்தி, தீஷிதன் நைட் வேலை இருக்குனு போனான். இன்னும் வந்து சேரல அதுதான் எங்க போனான்? என்ன பண்றானு புரியல. பயமா இருக்கு” என்றார்.
அதற்கு உடனே தமயந்தி, “அண்ணா நீங்க எதுக்கு பயப்படுறீங்க? தீஷி பத்திரமா வந்துடுவான். அது மட்டும் இல்ல அவன் தனியா போகல துணைக்கு புகழையும் கூட்டிட்டு தான் போயிருக்கிறான்.”
“அப்படியா? இதை யாரு உன் கிட்ட சொன்னது?”
“இல்ல அண்ணா, சம்மு அவனுக்கு கால் பண்ணினா, அப்போ தான் அவன் சொல்லி இருக்கிறான். புகழையும் கூட்டிட்டு தான் போயிருக்கேன் சீக்கிரம் வந்துடுவேன்னு. அவன் வந்ததுக்கப்புறம் எங்க போனானு கேட்டுக்கலாம் அண்ணா.”
“சரிமா நீ நலங்கு வைக்கிறதுக்கான வேலையை ஆரம்பி.”
“ஓகே அண்ணா, நீங்க கவலைப்படாதீங்க. அந்த வேலையை நான் இப்பவே ஆரம்பிக்கிறேன்.”
“ஆமா விக்கி எங்க ஆளையே காணோம்.”
“அவனா, அவன் வீட்டுக்குள்ள இருக்கே போரடிக்குதுனு வெளியே போயிட்டு வரேன்னு போனான்.”
“சரிம்மா.” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள் சம்யுக்தா.
“சம்மு நான்தான் உன்கிட்ட நீ எந்த வேலையும் செய்ய வேணான்னு சொன்னேன்ல. இப்ப எதுக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்த?”
“ஐயோ அம்மா இதெல்லாம் ஒரு வேலையா?”
“சரி நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, கொஞ்ச நேரத்தில நலங்கு வைக்கிறதுக்கு ஆளுங்க எல்லாம் வந்துருவாங்க, அப்புறம் உன்னால ரெஸ்ட் எடுக்க முடியாது.”
“சரிங்க அம்மா.” என்ற சம்யுக்தாவிடம், “வித்யாவையும் மதுவையும் காலையிலிருந்து காணோமே சம்மு.” என்றார் தமயந்தி.
“அதை ஏன் அம்மா கேக்குறீங்க? நைட்டுக்கு மெஹந்தி பங்க்ஷன் இருக்குல, அதனால அதுக்கு டான்ஸ் பாட்டு எல்லாம் செய்யணும்னு பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.”
“நல்ல பொண்ணுங்கமா, அது பரவால்ல சம்மு, அதுங்க ரெண்டும் பேரும் பாட்டு, ஆட்டம்னு இருக்கத்தான் வீடே கலகலனு இருக்கு.”
“சரி சம்மு நீயும் போய் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சு ரெடியாகு.”
“சரிங்க அம்மா.” என்று அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் பரந்தாமனிடம் திரும்பிய தமயந்தி, “ஏன் அண்ணா சம்முக்கு உண்மை தெரிஞ்சா, அவளுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்ல.”
“உண்மைதான் தமயந்தி, ஆனா அவங்க இருக்கும் நிலைமைக்கு, அவங்களை பற்றி சம்முக்கு தெரியாமல் இருக்கிறதே நல்லது. அவங்கள நினைச்சு தினம் தினம் வேதனைப்படுறன். அந்த வேதனை என்கூடையே போயிடட்டும்.”
“அண்ணா அப்படி இல்லை. யாரும் இல்லைனு அவ ரொம்ப கஷ்டப்படுறால்ல, அதுக்காகவாவது சொல்லலாமே.”
“தமயந்தி நீ நல்லா யோசிச்சு தான் பேசுறியா? இருக்கிறாங்க என்பதைவிட இருந்தும் இல்லைன்றது எவ்வளவு வலிக்கும் தெரியுமா? அந்த வலியை நான் தினமும் அனுபவிச்சிட்டு இருக்கிறேன். அதை சம்முக்கு கொடுக்க நான் விரும்பலாமா. இதுக்கெல்லாம் அந்த காலம் தான் பதில் சொல்லணும்.”
“அண்ணா நானும் அதுக்காக தான் காத்திருக்கேன். சரிங்க அண்ணா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஆளுங்க வந்த உடனே அப்புறம் செய்ய முடியாமல் போய்விடும் நான் போய் வேலையை பார்க்கிறேன்.”
“சரிமா நீ போய் பாரு” என்று சொல்ல சம்யுக்தா அங்கிருந்து சென்றுவிட, பரந்தாமன் தனது அறைக்குள் சென்றார்.
………………………………………………….
ஜெகன் ஆபீஸ் அறைக்குள் வேகமாக வந்தான் விக்டர். அவனை அங்கே பார்த்த ஜெகன், “என்னாச்சு விக்டர் எதுக்கு இவ்வளவு வேகமா வர?”
“டாடி அந்த மணிகண்டனும் அவன் பொண்டாட்டியும் நம்மளை நல்லா ஏமாத்திட்டாங்க டாடி.”
“என்ன சொல்ற விக்டர், அப்பிடி என்னாச்சு?”
“என்ன ஆகணும் டாடி? அந்த வித்யா வந்து வீட்டை விட்டு காணாமல் போயிட்டா. இவங்க அதை நம்ம கிட்ட சொல்லாம டூர் போயிட்டா, அங்க போயிட்டா, இங்க போயிட்டானு நம்ம தலையில மொளகா அரைச்சுட்டாங்க.”
இதைக் கேட்ட ஜெகனுக்கோ கோவம் எல்லை கடந்தது. “இப்போ என்ன பண்றது விக்டர்? அவங்கள சும்மாவே விடக்கூடாது.”
“ஆமா டாடி, நம்மகிட்ட அவங்களே பணம் வாங்கிட்டு, அந்த பணத்தையும் தராமல், அவங்க பொண்ணையும் தராமல் நம்மளை ஏமாத்த பார்க்கிறாங்க. இப்படி ஓடிப்போன பொண்ணு எனக்கு தேவையில்லை டாடி, அவங்ககிட்ட இருக்கிற சொத்தை நம்ம பேர்ல மாத்தி எடுத்துக்குவோம்.”
“நம்ம அந்த வித்யாவை தேடி கண்டுபிடிக்கலாம். நீ அவளை கல்யாணம் பண்ணிக்கலாமே.”
“டாடி இது என்ன சினிமாவா ஓடிப்போன பொண்ணை தேடி கண்டுபிடித்து கூட்டிட்டு வந்து பழிவாங்க? எனக்கு வேற வேலை இல்ல பாருங்க, டாடி நம்ம கம்பெனியோட புதுசா ஒருத்தர் பார்ட்னர்ஷிப் வச்சிருக்கிறாரு மிஸ்டர் ரத்தன்லால். அவரோட பொண்ணு ஹேமா, கொஞ்சம் என்கிட்ட நெருக்கமா பேசுறா. இவங்களை விட அவரு ரொம்ப வசதி. அதனால நான் இந்த ஓடிப்போனவளை தேடாம அப்பிடியே விட்டுட்டு, நான் ஹேமா பக்கம் தூண்டில் போட்டு பார்க்கலாம்னு நினைக்கிறேன்.”
“அதுதானே நான் பார்த்தேன். சோழியன் குடும்பி எப்படி சும்மா ஆடும்?”
“ஆனால் டாடி நம்மளை ஏமாத்தினவர்களை மட்டும் சும்மா விடவே கூடாது. இப்பவே கிளம்புங்க டாடி, அவங்க கிட்ட இருக்குற சொத்தை எல்லாம் நமக்கு மாத்தி எழுதுவோம்”
“இதோ, இப்பவே போலாம்.” என்ற ஜெகன் தான் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்துவிட்டு விக்டருடன் சென்றார்.
மணிகண்டன் தனது கம்பெனியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஜெகனும் விக்டரும் வந்தனர். மணிகண்டனின் பிஏ வந்து, “சார் உங்கள பாக்க ஜெகன் சாரும் விக்டர் சாரும் வந்திருக்காங்க” என்று சொல்லும் போதே அந்த கேபின் கதவை திறந்து கொண்டு வந்தான் விக்டர். அவன் பின்னாலயே ஜெகனும் வந்தார்.
இவர்கள் இப்படி திடீரென்று வருவார்கள் என்று நினைக்காத மணிகண்டன், சேரில் இருந்து எழுந்து நின்றார்.
“வாங்க மாப்ள… வாங்க ஜெகன்..” என்றார்.
“யோவ் நிறுத்தியா, யாரு யாருக்கு மாப்பிள்ளை?” என்றான் விக்டர்.
“மாப்பிள்ளை என்னாச்சு? எதுக்கு இப்படி பேசுறீங்க?”
“என்னாச்சா? உன் ஓடுகாலிப் பொண்ணு ஓடிப் போயிடுச்சாம் நீ இன்னும் தேடிக்கிட்டு இருக்கிறதா எனக்கு தகவல் வந்துச்சு. நீ எங்ககிட்ட டூர் போயிருக்கானு பொய் சொல்லியிருக்க.”
‘ஐயோ கடவுளே இந்த விஷயம் இவனுக்கு எப்பிடி தெரிஞ்சுது?’ என்று நினைத்த மணிகண்டன் வெளியே, “இல்ல மாப்ள, உங்க கிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க.”
“யோவ் நிறுத்து. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுதான் என் பையன் வந்திருக்கிறான். உனக்கு வெட்கமா இல்ல, எங்ககிட்ட கடனை வாங்கிட்டு கடனை கொடு, இல்லன்னா பொண்ண கல்யாணம் பண்ணி வைனு சொன்னப்போ நீயே வந்து என் பொண்ணை கல்யாணம் பண்ணி தர்றேன், சொத்து தான் எனக்கு முக்கியம்னு சொல்லிட்டு இருந்த, இப்ப எங்களுக்கு என்ன பதில்? இங்க பாரு இப்படி ஓடிப்போன பொண்ணு எங்களுக்கு தேவை இல்லை. உன் சொத்தை எல்லாம் மரியாதையா இப்பவே எங்க பேர்ல எழுதி குடு. இல்ல பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.”
“ஜெகன் எதுவா இருந்தாலும் நாம கொஞ்சம் பேசிக்கலாம்.”
“உன்கிட்ட மனுஷன் பேசுவேனா? உங்கிட்ட இனிமே எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. மரியாதையா இந்த டாக்குமெண்ட்ல கையெழுத்து போட்டு இப்பவே இந்த நிமிஷமே, இங்க இருந்து கிளம்பு” என்றான் விக்டர்.
“எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க, அதுக்குள்ள நான் என்னோட பொண்ணை எப்படியாவது கண்டுபிடிச்சிடுவேன்.”
“உனக்கு புரியுதா இல்லையா? எனக்கு தான் உன்னோட பொண்ணு வேணாம்னு சொல்றேன்ல, நீ ரெண்டு நாள் தேடுகிறாயோ இல்ல ரெண்டு மாசம் தேடுறியோ அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. என்கிட்ட நீங்க வாங்கின அந்தப் பணத்துக்கு பதில் சொல்லணும்.”
“என்னால பணத்தை எவ்வளவு சீக்கிரம் தர முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல பணத்தை கொடுத்திடுறேன்.”
“உனக்கு அவ்ளோதான் மரியாதை. ஒழுங்கு மரியாதையா உன் சொத்து எல்லாத்தையும் என் பேர்ல மாத்தி எழுதியிருக்கிற இந்த டாக்குமெண்ட்டில கையெழுத்து போட்டுட்டு அமைதியா போயிடு, உயிராவது மிச்சமாகும்.” என்றான் விக்டர்.
விக்டரிடம் தனது பேச்சு எடுபடாது என்பதை உணர்ந்த மணிகண்டன் வந்து ஜெகனிடம், “நீங்களாவது விக்டர்கிட்ட சொல்லுங்களேன்.”
“இங்க பாரு மணிகண்டா, அவனை விட உன் மேல செம கோபத்துல இருக்கிறது நான். இப்படி எங்களை நம்ப வைத்து ஏமாத்திட்ட இல்ல, உன்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல, நீ மரியாதையா சைன் போடு” என்று இருவரும் அவரை கட்டாயப்படுத்தினர். வேறு வழியில்லாத மணிகண்டன் அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டார்.
“சரி இனிமே இந்த சொத்தை எல்லாம் என் சொத்து, சீக்கிரம் இங்க இருந்து கிளம்பு” என்றான்.
“டாடி இவரை பார்த்தாலும் ரொம்ப பாவமா இருக்குல்ல, இங்க பாரு உன் வீட்டில் இருந்து நீ வெளியே போகணும், அதுக்காக நான் உனக்கு ஒரே ஒரு நாள் டைம் தரேன். அந்த ஒரு நாள்ல நீ வீட்டை காலி பண்ணிட்டு போய்கிட்டே இருக்கணும். இல்ல ஏதாவது பிரச்சனை பண்ணுவேன்னு எங்கேயாவது போனேன்னு வை, அப்புறம் சத்தமே இல்லாம உங்க ரெண்டு பேரோட சங்கையும் அறுத்துப் போட்டுக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்றான் விக்டர்.
“மணிகண்டன், உன்கூட பழகின பாவத்திற்காக சொல்றேன், என் பையன் என் பேச்சை கேட்க மாட்டான். அவனை கோபப்படுத்தாம, நீ ஒரே நாள்ல வீட்டை காலி பண்ணிட்டு போயிடு. உன்னோட உயிரையாவது பத்திரப்படுத்திக.” என்று ஜெகன் விக்டருடன் அங்கிருந்து செல்ல, தான் இத்தனை நாள் உழைத்து சேர்த்த தனது கம்பெனியை கொடுத்துவிட்டு, கையாலாகாதவராக அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்றார் மணிகண்டன்.
………………………………………………….
புகழின் வீட்டில் முன்னால் வந்து இறங்கினார்கள் அனைவரும்.
“அத்தை, மாமா இது தான் புகழோட வீடு, அது மட்டும் இல்ல என் தங்கச்சி மதுரா..”
“என்ன சொல்ற தீஷி உனக்கு தங்கச்சி வேற இருக்கா?”
“ஆமா அத்தை பேரு மதுரா. அவளும் நம்ம புகழும் லவ் பண்ணாங்க, அப்புறம் ரெண்டு பேருக்கும் சரி போனா போகுதுன்னு கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்து இருக்கோம்.”
“ஏன் புகழுக்கு என்ன அவனும் நல்ல பையன் தானே. பார்த்த கொஞ்ச நேரத்திலேயே அவனைப் பத்தி புரிஞ்சுகிட்டேன்” என்று அவனுக்கு சப்போர்ட் பண்ணினார் துர்கா.
“அத்தை உங்களை இத்தனை நேரம் தீஷி போல அத்தைனு கூப்டேன். இனிமே அம்மானு கூப்பிடட்டுமா?”
“அதுக்கென்ன புகழ் நீயும் என் பையன் மாதிரித்தான் நீ தாராளமா என்னை அம்மானு சொல்லலாம்.”
“ரொம்ப சந்தோஷம் அம்மா, எனக்கும் இந்த வீட்ல சப்போர்ட் பண்ண ஒரு ஜீவன் கிடைச்சது. சரி வீட்டுக்கு வெளியே நின்னு பேசிட்டு இருக்காமல் வாங்க உள்ள போகலாம்” என்று அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் புகழ்.
அவர்களுடன் வந்த தீக்ஷிதன், “மாமா நீங்களும் அத்தையும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். நாளைக்கு ஒரு நாள் மட்டும் எனக்காக பொறுத்துக்கோங்க. நாளைக்கு உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு.”
“சர்ப்ரைஸா? அதுறஎன்ன தீஷி?”
“இருக்க மாமா, அதான் சொன்னேன்ல சர்ப்ரைஸ்னு சொல்லிட்டேனே. அதுக்கப்புறம் எப்படி இப்போ சொல்றது?”
“சரி சரி உன் சர்ப்ரைஸ் என்னனு தெரிஞ்சிக்க வெயிட் பண்றேன்.”
“சரி மாமா, அப்புறம் நான் கிளம்புறேன். நான் நைட்டு வந்தேன். அப்பா என்னை இன்னும் காணவே இல்லைனு பயந்துட்டு இருப்பாரு.”
“சரி தீஷி, ஆனா நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட போட்டோவை இதுவரைக்கும் எங்ககிட்ட காட்டலையே.”
“அத்தை போட்டோல என்ன நாளைக்கு வந்து நேரிலேயே பாருங்க” என்றான் தீஷிதன்.
“அதுவும் சரிதான்.”என்றார் துர்க்கா.
“புகழ் அத்தையையும் மாமாவையும் பாத்துக்கோ.”
“நீ கவலையேபடாத நான் அவங்களை பத்திரமா பாத்துக்கிறேன்” என்றான்.
“சரி நான் போயிட்டு வரேன்.” என்றவன் அங்கிருந்து நேராக வீட்டிக்கு செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 30
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த புகழ் திடீரென கண் விழித்தான். அப்போதும் கார் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தவன் தீஷிதனிடம் திரும்பி, “தீஷி எங்க போறோம்? இவ்வளவு நேரமாச்சு ஆனா இன்னும் நீ கார் ஓட்டிக்கிட்டு இருக்க. ரொம்ப தூரம் போயிருப்போம்னு நினைக்கிறேன்.”
“ஆமா புகழ் ரொம்ப தூரம் தான். ஆனா இப்போ அந்த இடத்துக்கு பக்கத்துல வந்துட்டோம்.”
“டைம் என்னனு பாத்தியா தீஷி காலைல மணி நாலரை. நாலு மணி நேரம் நீ கார் ஓட்டிக்கிட்டு வந்திருக்க. எங்கேயாவது காரை நிறுத்தியிருக்கலாம்ல”
“இல்ல புகழ் எனக்கு அப்படி நிறுத்தி திரும்ப காரை எடுத்து அங்க போய் சேர லேட் ஆகிடும். அங்க போறதுக்கு கொஞ்சம் கூட லேட் ஆகக்கூடாதுனு தான் நான் ஃபுல்லா டிரைவ் பண்ணிட்டு வரேன்.”
“அப்படி என்ன முக்கியமான இடத்துக்கு போறோம் தீஷி?”
“நான் முன்னாடியே சொன்னேன்ல அங்க போனதுக்கு அப்புறம் உனக்கே தெரியும்.”
“சரி கொஞ்ச நேரம் நீ ரெஸ்ட் எடு. நான் காரை ஓட்டுறேன்.”
“இல்ல.. இல்ல.. இன்னும் கொஞ்ச தூரம் தான். நானே ஓட்டுறேன் நீ வேணும்னா தூங்கு.”
“என்ன தூங்குறதா? நல்லா தூங்கிட்டேன்.”
“ சரி சரி அப்போ வெளிய பாத்துட்டு வா” என்று கார் ஓட்டுவதில் மும்முரமானான்.
………………………………………………….
நேரத்துக்கு எழுந்த சம்யுக்தா, வழமை போல குளித்து விட்டு வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு, சுவாமிக்கு பூஜை செய்தாள். பின் சமையல் அறைக்கு வந்தவள், அப்போதுதான் பரந்தாமன் ஹாலிலேயே அமர்ந்தவாறு தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவரின் அருகில் வந்தாள்.
“மாமா… மாமா…” என்று அவரை எழுப்ப, மெல்ல எழும்பியவர், “சொல்லுமா..” என்றார்.
“மாமா என்னாச்சு? ஏன் ஹாலிலேயே படுத்து தூங்கிட்டீங்க?” என்று கேட்டாள்.
“ஒன்னும் இல்ல சம்யுக்தா. நைட் இங்கே உக்காந்து இருந்தனா அப்படியே தூங்கிட்டேன் போல.”
“சரி மாமா போய் ரூம்ல படுத்து தூங்குங்க” என்றாள்.
பரந்தாமன், “சரிமா தீக்ஷி வந்துட்டானா?”
“அவரு எங்க போனாரு மாமா?”
“இல்ல சம்யுக்தா நைட்டு ஏதோ முக்கியமான வேலை இருந்துதுனு போனான். அதான் வந்துட்டானானு கேட்டேன்.”
“தெரியலை மாமா நான் பாக்கறேன்” என்றாள். அவனது அறைக்கு வந்து பார்க்க அங்கே அறையில் அவனில்லை. அவனது ஜிம், ஆபீஸ் ரூம் எங்கும் தேட அவன் வீட்டிலேயே இல்லை. திரும்பி பரந்தாமனிடம் வந்தவள், “மாமா அவங்க வீட்ல இல்ல.”
“அப்படியா ஆனா அவன் நைட்டு வெளிய போறேன்னு போனான். அப்போ இன்னும் வரல போல.”
“எங்க மாமா போனாங்க?”
“எங்க போறேன்னு சொல்லல, ஒரு முக்கியமான வேலையா போறேன் டாடி வந்திடுறன்னு போனான். சரிமா நீ யோசிக்காத அவன் பத்திரமா வந்திடுவான்.”
“சரி மாமா நீங்க போய் தூங்குங்க.”
“சரிமா” என்றவர் அவர் அறைக்கு சென்று தூங்கினார்.
சம்யுக்தா கிச்சன் வேலைகளையும் முடித்துவிட்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்தாள். யாரும் இன்னும் எழும்பி இருக்கவில்லை. நேரமோ ஆறு மணியைக் காட்டியது. வாசலுக்கும் போவதும் திரும்ப ஹோலுக்கு வருவதுமாக நடந்து கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்தவாறு வந்த தமயந்தி, “என்ன சம்மூ ஹாலுக்கும் வீட்டுக்கும் நடந்துட்டு இருக்க என்னாச்சு?”
“இல்லம்மா மாமா சொன்னாங்க இவங்க நைட்டு வெளியில போறேன்னு சொல்லிட்டு போனதா. ஆனா இன்னும் வரல அதுதான் பாத்துட்டு இருக்கேன்.”
“பார்டா கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு கவனிப்பா கொடுத்து வச்சவன் சம்மு அவன், எதுவும் முக்கியமான வேலையா போயிருப்பான். நீ டென்ஷனாகாத. அவன் வந்திடுவான்.”
“சரி அம்மா.” என்றவள் முகம் இன்னும் தெளிவடையாமல் இருப்பதைப் பார்த்தவர், “அம்மு உன்னோட முகம் இன்னும் தெளிவாக, நீ வேணும்னா அவனுக்கு போன் பண்ணி பாரேன்.”
“இல்லம்மா அவங்க வேலையா இருந்தா தொல்லை பண்றது போல இருக்கும்ல.”
“ஒரு தொல்லையும் இல்ல. நீ போன் பண்ணா கண்டிப்பா, அவன் உடனே எடுப்பான். நீ போன் பண்ணி பேசு.”
“சரிங்க அம்மா, நான் போன் பண்ணி பாத்துட்டு வரேன். காபி எல்லாம் போட்டு வச்சுட்டேன் அம்மா. டிபன் செஞ்சுட்டேன்.”
“ஏம்மா எல்லா வேலையும் நீ செஞ்ச நான் என்ன வேலைதான் சம்மூ பாக்குறது? இங்க பாரு இதுக்கு அப்புறம் நீ எந்த வேலையும் செய்யக்கூடாது. நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு இப்படி வேலை வேலைன்னு இருக்காத”
“சரி அம்மா” என்று சிரித்து விட்டு மேலே சென்றாள்.
‘நல்ல பொண்ணு இவ’ என்றவர் ஒரு பெரும் மூச்சை விட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றார்.
தனது ரூமுக்கு வந்த சம்யுக்தா போனை எடுத்து தீஷிதனின் நம்பரை அழுத்தினாள். சில நிமிடங்களில் போன் கனெக்ட் ஆகியது.
காரை ஓட்டிக்கொண்டே ருந்த தீஷிதன் போனை எடுத்துப் பார்க்க சம்யுக்தா அழைத்திருப்பது தெரிய அவன் உதடுகளில் புன்முறுவல். அதைப் பார்த்த புகழ், “என்னடா தங்கச்சி கால் பண்ணுதா?”
“ஆமாடா”
“பரவாயில்லையே.. ஒரு மாதிரி தங்கச்சியை உன்னோட வழிக்கு கொண்டு வந்துட்ட போல இருக்கு.”
“டேய் சம்யுக்தா அன்புக்காக ஏங்கிறவடா, அவ மேல அன்பு காட்டினாலே போதும் அன்புக்காக ரொம்ப ஏங்கிப் போய் இருக்கா, ஆனால் அதை வெளிப்படையா காட்டிக்கிட்டதுல ஆனா அதை நான் புரிஞ்சுகிட்டேன். அவளைக் கொடுமைப்படுத்தின வித்யாவோட அம்மா, அப்பாவுக்கு கூட நல்லது செய்ய நினைக்கிற மனசு அவளுக்கு.”
“சரிடா முதல்ல தங்கச்சியோட போனை எடுத்துப் பேசு.”
“சரி” என்றவன் போனை எடுத்து காதில் ப்ளூடூத் ஐ போட்டு போனை கனெக்ட் பண்ணினான்.
“ஹலோ சொல்லுங்க யுக்தா.”
“எங்கங்க இருக்கீங்க?”
“ஒரு வேலையா வந்து இருக்கேன். ஏன் யுக்தா பேபி என்னை தேடினியா?”
“இல்ல மாமா சொன்னாங்க நீங்க நைட்டே வெளில போனதா. அதான் இன்னும் வீட்டுக்கு வரல எப்ப வருவீங்கன்னு கேட்கலாம்னு தான்…” என்று இழுத்தாள்.
“பாருடா என்னோட யுக்தாவை. இப்படி பேசறது யுத்தானா? ரொம்ப முக்கியமான ஒரு வேலையாக வந்திருக்கேன், நான் தனியா வரல புகழும் என் கூட தான் இருக்கிறான். நான் வேலைய முடிச்சுட்டு சீக்கிரமாவே வீட்டுக்கு வந்துடுறேன். சரியா டென்ஷனாகாத.”
“சரிங்க இப்ப நான் போனை வச்சிடவா?”
“சரி ஓகே நீ வீட்டிலே இருக்கிறவங்க கிட்ட சொல்லிடு நான் வர லேட் ஆகும்னு.”
“சரிங்க பார்த்து பத்திரமா வாங்க.” என்றவள் ஃபோனை வைத்தாள்.
………………………………………………….
அதிகாலை வேளையில் அந்த ஆச்சிரமத்தில் லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. குருஜி உட்பட அங்கிருந்த அனைவரும் அதில் கலந்து கொண்டனர். கிருபாகரனும் துர்க்காவும் கூட அந்த பூஜையில் கலந்து கொண்டனர். தங்கள் கண்கள் குளிர சிவனின் தரிசனத்தை பார்த்து மகிழ்ந்தனர் அனைவரும். பூஜையை நல்லபடியாக நடத்தி முடித்த குருஜி, “இந்த ஆசிரமத்துக்கு வந்து எத்தனையோ பேரு தாங்களோட நோய்களை தீர்த்துட்டு போயிருக்காங்க. அதுவும் கொஞ்ச நாட்களிலேயே அவங்களுக்கு சரியகிடும். ஆனா இவங்க மட்டும் தான் இத்தனை வருஷமா நம்ம ஆச்சிரமத்துல இருந்திருக்காங்க. அந்த எமன்கிட்ட இருந்து தன்னோட புருஷன் உயிரை மீட்டவள் சாவித்திரி. அந்த மாதிரி கிருபாகரனும் தன்னோட மனைவியோட உயிரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்.
“கிருபாகரா, துர்க்கா உங்களோட வாழ்க்கையில இனிமே எந்த கவலையும் துன்பமும் இருக்காது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா வாழ போறீங்க. நீங்க இங்கேயே இருக்கணும்னாலும் இருக்கலாம். இல்ல உங்க உறவினர்களிடம் போகணும்னாலும் நீங்க தாராளமா போகலாம். ஆனால் இந்த இடம் எப்பவுமே உங்களுக்காக காத்திருக்கும்” என்றார் குருஜி. கிருபாகரனும் துர்க்காவும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.
அப்போது அங்கே ஒரு பிஎம்டபிள்யூ கார் வந்து நின்றது. ‘இந்த நேரத்துல கார்ல யாரு வர்றாங்க’ என்று எல்லோரும் அந்த காரை நோக்கி தமது பார்வையை திருப்பினார்கள். அங்கே தீக்ஷிதனும் புகழும் காரை விட்டு இறங்கினார்கள். ஆச்சிரமத்திற்கு புதியவர்களான அவர்களைப் பார்த்த உதவியாளர் ஒருவர் அவர்கள் அருகே சென்று, “நீங்க யாருங்க? எங்கிருந்து வர்றீங்க?”
“ஐயா நாங்க ஊட்டியில் இருந்து வர்றோம். இங்க குருஜியை பாக்கணும்.”
“அப்படியா சரி அதோ அந்த அருவியில் போய் முகம் கைகள் கழுவிட்டு வாங்க” என்றார்.
“சரி” என்று இருவரும் அந்த அருவிக்குச் சென்று முகத்தைக் கைகால்களை கழுவி விட்டு வந்தனர். புகழ் தீஷிதனிடம், “இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த? நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இங்க எதுக்குடா வந்த?”
“சொல்றன் வா” என்றவன் புகழை அழைத்துக் கொண்டு வந்து குருஜியின் முன்னால் நின்றான். இவர்களைப் பார்த்த குருஜி, “யாருப்பா நீங்க எங்க இருந்து வர்றீங்க?”
“ஐயா குருஜி நாங்க ஊட்டியில் இருந்து வரோம். இங்க ஒரு முக்கியமான வேலையா வந்திருக்கிறோம்” என்றான்.
“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க குருஜி” என்ற தீஷிதன் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். புகழும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.
“சொல்லுங்கப்பா என்ன முக்கியமான வேலை?”
“குருஜி இங்கே இருக்காங்களே துர்க்கா கிருபாகரன் இவங்களை பார்க்க வந்திருக்கிறோம். இவங்க என்னோட அத்தையும் மாமாவும். நான் துர்க்கா அத்தையோட அண்ணன் பரந்தாமனோட மகன்” என்றார்.
“என்ன என் அண்ணன் மகனா? தீஷி நீயா கண்ணா?” என்றார் துர்க்கா.
“ஆமா அத்தை நானே தான். அத்தை மாமா நல்லா இருக்கீங்களா?”
“தீஷி உனக்கு எப்படி நாங்க இங்க இருக்கிறது தெரியும்?”
“மாமா அப்பா உங்களைப் பற்றி என்கிட்ட சொன்னாங்க. ஆனா நீங்க எங்க இருக்கிறீங்கனு சொல்லவேயில்லை. நீங்கதான் யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேணாம்னு சத்தியம் வாங்கினதா அப்பா சொன்னாங்க. அதனால நான்தான் உங்களை தேடி கண்டுபிடிச்சேன் மாமா. இவன் என் ப்ரெண்ட் புகழ்.”
“தீஷி என்ன சொல்ற நீ? உனக்கு ஒரே ஒரு அத்தை தமயந்தி அத்தை தானே.”
“ஆமா புகழ். எங்க அப்பாவோட முதல் தங்கச்சி இவங்க துர்க்கா அத்தை. இவங்களோட தங்கச்சி தான் தமயந்தி அத்தை” என்றான். புகழுக்கு நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் ஆனால் இப்போது தீஷிதனிடம் எதுவும் கேட்க முடியாது என்று அமைதியாக இருந்தான்.
குருஜிதான், “பார்த்தாயா துர்க்கா, உன்னோட உறவுகள் உன்னை தேடி வந்துட்டு. ரெண்டு பேரும் சந்தோஷமா அவங்க கூட போயிட்டு வாங்க” என்றார்.
“ஆமாம் குருஜி, நாங்க அத்தையும் மாமாவையும் இங்கிருந்து கூட்டிட்டு போகலாம்னு தான் வந்து இருக்கோம்.”
“அப்படியாப்பா நல்லபடியா கூட்டிட்டு போங்க. அவங்க இனிமேல் சந்தோஷமா இருக்கட்டும்” என்றார்.
பின்னர் அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு துர்க்காவும் பிரபாகரனும் தீஷிதனுடன் வந்தார்கள்.
காரின் அருகே வந்ததும், “அத்தை நான் உங்க அண்ணனோட பையன்னு சொன்னதும் எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க? ஒருவேளை நான் பொய் சொல்லி உங்களை கூட்டிட்டு போகலாம் இல்ல”
“தீஷி இதோ உன் வலது கையில் இருக்கிற மச்சத்தை வச்சுத்தான் என் அண்ணன் பையன் தான் நீனு கண்டுபிடிச்சேன்.”
“அத்தை பயங்கர ஆள்தான் நீங்க என்றான் புகழ்.
“புகழ் நீயும் தீஷி கூடவா இருக்குற? ஆமா அத்தை. காலேஜ்ல இருந்து ரெண்டு பேருமே திக் ப்ரண்ட்ஸ்.”
“சூப்பர் பா, சரி தீஷி அண்ணா, தமயந்தி எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க அத்தை. மாமா அத்தைக்கு தான் இப்படி ஆயிடுச்சு நீங்களாவது எங்களோட காண்டாக்ட்ல இருந்து இருக்கலாம் இல்ல. கஷ்டத்துல உங்களுக்கு ஆறுதலா இருந்திருப்போமே”
“இல்லப்பா எனக்கு யார் கூடவும் பேசுற மனநிலை இல்ல. அப்படியே துர்க்காவை பார்த்துட்டு அவ கூடவே உட்கார்ந்துட்டு இருப்பேன்.”
“உண்மையா மாமா உங்கள மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க ரியலி கிரேட் என்ற தீஷிதன் அவரை அணைத்துக் கொண்டான்.
“சரி வாங்க, உங்கள பாக்க வீட்ல எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க.”
“ஆமா தீஷி வீட்டுல சொல்லிட்டியா அத்தை வாங்கன்னு?”
“இல்ல புகழ் நீ யாருக்கும் இந்த விஷயத்தை சொல்லாத.”
“ஏன்டா மாமா அத்தை எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க இல்ல.”
“சந்தோஷப்படுவாங்க தான் புகழ் ஆனா இதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. அத்தை மாமா நீங்க ரெண்டு பேரும் தப்பா நினைக்க கூடாது. நாளைக்கு எனக்கு கல்யாணம் நீங்க இன்னைக்கு புகழ் கூடத்தான் இருக்கணும். நாளைக்கு கல்யாணம் மேடைக்கு உங்களை புகழ் அழைச்சிட்டு வருவான் சரியா? அதுவரைக்கும் அப்பாவுக்கும் தமயந்தி அத்தைக்கும் நீங்க குணமாயின விஷயம் தெரிய வேணாம். அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டும் ப்ளீஸ் அத்தை.”
“அப்படியா தீஷி, சரி ஏதோ நீ ஆசைப்படுற அது அப்படியே நடக்கட்டும்” என்றார்.
பின்னர் நால்வரும் காரின் ஏற வரும்போது புகழ், “தீஷி வரும்போது ஃபுல்லா நீதான் காரை ஓட்டிட்டு வந்த. இப்போ நான் ஓட்டுறேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.”
“சரி நீயே ஓட்டு” என்றவன் டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்தான். பின்னால் துர்க்காவும் கிருபாகரனும் ஏறிக்கொண்டனர். புகழ் காரை எடுத்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 28
சம்யுக்தாவுடன் அவளது அறைக்குள் வந்தான் தீஷிதன். அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் அவளை தனக்கு அருகில் உட்காருமாறு சொன்னான். அவளும் மறுக்காமல் அவனின் அருகில் அமர்ந்தாள். “யுக்தா நான் வெளியில வித்யாவோட கல்யாணத்த பத்தி எடுத்த முடிவுல உனக்கு ஏதும் வருத்தம் இருக்கா?” என்றான்.
அதற்கு சம்யுக்தாவோ, “இல்லைங்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்களுக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்றிங்க நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதுல எங்களுக்கு சந்தோசம் தான். ஆனா ஒன்னு எனக்கு லீலா அம்மாவையும் அப்பாவையும் நினைச்சா தான் பயமா இருக்கு.”
“அவங்கள பத்தி நீ எதுக்கு பயப்படுற? அவங்களால என்ன பண்ண முடியும்? அவங்க அந்த விக்டர் கிட்ட நல்லா மாட்டிகிட்டாங்க.”
“விக்டரா அது யாருங்க?”
“அது யாரா? உன் தங்கச்சி வித்யாவுக்கு அவங்க பார்த்த மாப்பிள்ளை. அவன் ரொம்ப மோசமானவன். உங்க அப்பா அவங்க கிட்ட ஏதோ கடன் வாங்கி இருக்கிறார் போல. அதை கொடுக்கலைன்னா உன் பொண்ண கல்யாணம் பண்ணி வை. இல்லனா சொத்தை என் பேருல எழுதி வைனு சொல்லியிருக்கிறான். உங்க அப்பாவும் எனக்கு என்னோட சொத்து முக்கியம். அதனால என் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேனு வாக்கு கொடுத்துட்டாரு. இப்ப அவன் வித்யா எங்க வித்யா எங்கன்னு கேட்கிறான். இவங்களோ வித்யா ஊருக்கு போய் இருக்கா அங்க போய் இருக்கா இங்க போயிருக்கான்னு சமாளிக்கிறாங்களே தவிர இன்னும் அவன்கிட்ட உண்மைய சொல்லல.”
“என்னங்க இது, உங்களுக்கு இவ்வளவு தெரிஞ்சிருக்கு. அப்படியே நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க.”
“அதுதான் நான். அங்க என்ன நடக்குதுனு எனக்கு தெரியணும் இல்ல. ஏன்னா அவங்களோட எந்த ஒரு நடவடிக்கையும் உன்னையோ வித்யாவையோ பாதிக்க கூடாதுன்னு நான் உறுதியா இருக்கேன். அதனாலதான் அங்க ஒரு ஆளை வச்சிருக்கேன்.”
“ஏங்க அந்த விக்டரால அம்மா அப்பாக்கு ஏதாவது ஆபத்து வந்திடாதே?”
“இதான் நீ யுக்தா. ஏன் நீ இப்படி இருக்க? உன்னை அனாதராவா நடு ரோட்டில் விட்டவங்க அவங்க. அவங்களுக்கு போய் நீ பாவம் பாக்குற.”
“என்ன இருந்தாலும் அவங்க என்னை வளத்தவங்க இல்லையா? அந்த நன்றி எப்பவும் எனக்கு இருக்கும். ப்ளீஸ்ங்க அந்த விக்டர்கிட்ட இருந்து அவங்களை எப்படியாவது காப்பாத்துங்க.”
“யுக்தா அதுக்கு ஒண்ணு அவனுக்கு வித்யாவை கல்யாணம் பண்ணி வைக்கணும். அது உனக்கு ஓகேவா?”
“ஏங்க இப்படி பேசுறீங்க? நீங்க தானே சொல்றீங்க அவன் ரொம்ப மோசமானவன்னு இப்போ அவனுக்கு வித்யாவை கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீங்க? அவளோட வாழ்க்கை என்ன ஆகும்?”
“இப்போ புரியுதா உனக்கு? அதனால தான் அவங்களுக்கு சீக்கிரமாவே நிச்சயம் பண்ணனும்னு சொன்னேன். அந்த விக்டரால வித்யாவுக்கு எந்த ஆபத்து வரக்கூடாது. அது மட்டும் இல்ல உங்க அம்மா அப்பா அவங்க சொத்தை அவன் பெயரை எழுதி கொடுத்துட்டா இந்த பிரச்சனை முடிஞ்சிடும். வித்யாவை கல்யாணம் பண்ணி கொடுத்துத்தான் பிரச்சனையை முடிக்கணும்னு இல்ல.”
“ஆனா அப்பா சொத்தை கொடுக்க ஒத்துக்கலனா என்ன பண்றது?”
“அது அவங்களோட சாய்ஸ். ஆனா நான் இப்ப எதுக்கு இங்க வந்தேன் தெரியுமா? எனக்கு அர்ஜென்டா உங்கிட்ட இருந்து ஒரு ஹக் இல்லனா ஒரு கிஸ் வேணும்” என்று சொன்னான்.
இதைக் கேட்டதும் யுக்தாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. “ஏய் எதுக்குடி இப்பிடி பார்க்கிற? நான் கேட்டதை கொடுப்பியா இல்லையா?” என்று அவளை நெருங்கினான். அவளோ எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு இருந்தாள். அவளை நெருங்கியவன், அவள் முகத்தை கையில் ஏந்தி, அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான். அவளும் கண்களை மூடிக் கொண்டு அந்த முத்தத்தை ஏற்றாள். சிரிப்புடன் அவள் நெற்றியில் முட்டியவன், “யுக்தா கண்ணை தொற”
“ம்கூம் முடியாது..”
“ப்ளீஸ் டி” என்றான். அவளும் மெல்ல கண்களை திறக்க, அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன் பார்வை உணர்த்திய செய்தியை புரிந்து கொண்டவள் அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள்.
“யுக்தா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். நீ அதை யார்க்கிட்டேயும் சொல்லக்கூடாது.”
“சரி சொல்ல மாட்டேன்.” என்றாள்.
“நான் வித்யாவோட அம்மாவையும் அப்பாவையும் நம்மளோட கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான். இதைக் கேட்டு அவனிடம் இருந்து பதறியபடி விலகினாள் சம்யுக்தா.
“ஏய் எதுக்கு இப்பிடி பதறுற? இங்க வா” என்று மறுபடியும் அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
“என்னங்க ஏங்க இப்படி பண்றீங்க? அவங்களுக்கு மட்டும் வித்யா இங்க இருக்கிறது தெரிஞ்சா, அதுக்கு அப்புறம் என்ன பண்ணுவாங்கனே தெரியாது.”
“நீ என்ன நெனச்சிட்டு இருக்க யுக்தா உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் கையாலாகாதவன்னு நினைக்கிறாயா? இங்க பாரு உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. உன்னை அன்னிக்கு கதற கதற வெளியே அனுப்பினாங்க தானே. அதுக்கு அவங்களுக்கு பாடம் சொல்லியே ஆகணும். அவங்க உன்னை கைவிட்டாலும் நீ ராணி மாதிரி இருக்கிறதை அவங்க பாக்கணும். இந்த விஷயத்தில நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறதா இல்ல யுக்தா.”
“வேணாம்ங்க.. ப்ளீஸ் சொன்னா கேளுங்க. எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. வித்யாக்கோ உங்களுக்கு இங்க இருக்கிற மத்தவங்களுக்கோ ஏதாவது தப்பா நடந்தா அதை என்னால தாங்கிக்க முடியாது.”
“நான் திரும்பவும் சொல்றேன் என்னை மீறித்தான் உனக்கும் வித்யாக்கும் ஏதாவது பிரச்சனை வரும். நான் உன்னை பாத்துக்குவேன்ற நம்பிக்கை இருக்குல உனக்கு?”
“ம்ம்ம் ரொம்ப”
“அப்புறம் என்ன? எதைப் பத்தியும் யோசிக்காமல் நீ நம்ம கல்யாணத்தை பற்றி மட்டும் யோசிம்மா. அதை எப்படி என்ஜாய் பண்ணலாம்னு பாரு” என்றவனிடம் சம்யுக்தாவிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அமைதியானவள் அவனது கையை பிடித்துக்கொண்டு, அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
வித்யாவை அழைத்துக் கொண்டு விக்ராந்த் மாடிக்கு சென்றான். அங்கே வித்யா அவனைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு நின்றாள். அவனும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அந்த மௌனத்தை அவளே கலைத்தாள்.
“என்ன ஏதோ பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க?” என்று கேட்க, விக்ராந்த், “வித்யா எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. உன்னைப் பார்த்த உடனே புடிச்சு போயிடுச்சு. அதனாலதான் வீட்ல உள்ளவங்க கிட்ட பேசி நம்ம கல்யாணத்தை பத்தி பேச சொன்னேன். உனக்கு என்னைய புடிச்சிருக்கா? இல்ல இவங்க எல்லாம் சொல்றாங்கனு என்னை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டியா?”
“நான் உண்மையை சொல்லவா? எனக்கு உங்க மேல எந்த தப்பான அபிப்பிராயமும் இல்லை. அதே நேரத்துல எனக்கு எங்க வீட்டுக்கு போக இஷ்டம் இல்ல. இங்கே இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. மதுரா உங்களை பற்றி எங்கிட்ட நிறைய சொல்லியிருக்கிறா. அது மட்டும் இல்ல மாமா எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும். அவங்களே நீங்க நல்லவங்கன்னு சொல்லும் போது நீங்க ரொம்ப நல்லவங்களாதான் இருப்பீங்கனு நான் கெஸ் பண்ணேன். அதனால தான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டேன்”என்றாள்.
“அப்போ என்ன லவ் பண்ண மாட்டியா?”
“அதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேனே. அப்புறம் என்ன லவ் பண்ணி தானே ஆகணும்” என்று சொல்லி சிரித்தாள்.
“சான்ஸ்ஸே இல்ல தியா. நீ இப்படி பேசுவேன்னு நான் நினைச்சு கூட பாக்கல.”
“வேற அப்படி பேசுறது? வாழ்க்கை எதை நோக்கி போகுதோ அதன் போக்கிலேயே நாம போய்க்கொண்டே இருக்கணும். என்னோட அம்மா அப்பா இங்க வர்றது கஷ்டம். ஆனா ஒருவேளை அவங்க இங்க வந்து என்னை கூட்டிட்டு போனாங்கன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”
“என்ன பண்ணுவேன்னா கேக்கிற, வித்யா என்னோட பொண்டாட்டி, அவளை எப்படி நீங்க கூட்டிட்டு போகலாம்னு அவங்ககூட சண்டை போய்டுவேன்.”
“அதையும் மீறி கூட்டிட்டு போக பார்த்தாங்கனா?” என்றாள்.
“உன்னை கடத்திட்டு மலேசியாக்கு போய்டுவேன். அங்க யாராலையும் உன்னை கண்டுபிடிக்க முடியாதுடி” என்று சிரித்தவன், “தியா நீ எதுக்கு பயப்படுற? அதுதான் அத்தான் இருக்காங்கல அவரை மீறி எதுவும் நடக்காது. நான் மட்டும் என்ன அவ்வளவு குறைந்தவனா அவங்க உன்னை கூட்டிட்டு போகும் வரைக்கும், நான் பார்த்துட்டு அமைதியா இருப்பேன்னு நினைச்சியா? என்கிட்ட இருந்து உன்னை யாராலும் பிரிக்க முடியாது. என்னை நம்பி வா கண்டிப்பா உன்னை நான் எப்பவும் விட மாட்டேன்” என்று கூறியவனின் வார்த்தைகளைக் கேட்டு கண்கலங்கினாள் வித்யா.
“ஏய் இது என்ன? நீ எப்பவுமே சின்ன பிள்ளை போல கலகலன்னு தான் இருக்கணும்” என்றவனை அணைத்துக் கொண்டாள் வித்யா.
………………………………………………….
இரவு வேளையில் இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்தது. அந்த இடமே ஒரு அமைதியை தத்தெடுத்துக் கொண்டிருந்தது. அங்கங்கே இருந்த ஒவ்வொரு குடிசைகளிலும் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஒரு சிலர் அந்த இடத்திலுள்ள நடைபாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலரோ தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு இடத்தில சிலருக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பெரிய சிவலிங்கத்திற்கு முன்பாக ஒரு குருஜி தியானத்தில் அமர்ந்திருந்தார்.
ஒரு குடிசையில் மட்டும் கீழே விரிக்கப்பட்ட துணியில் ஏராளமான இலைகள் போடப்பட்டிருந்தன. அதன் மீது ஒரு பெண் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது முகமே நீண்ட நாள் அவள் உறக்கத்தில் இருப்பதாக தெரிந்தது. அவளுக்கு அருகில் அவள் முகத்தில் எதையோ தேடியவாறு ஒரு ஆண் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்திருந்தார்.
அவர் எத்தனை மணி நேரம் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. திடீரென்று அந்த தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் ஒரு அசைவு. அவளது கண்களோ பட்டாம்பூச்சி போல படபடவென்று அடித்துக் கொண்டது. அவர் பிடித்திருந்த கைவிரல்கள் அசைய தொடங்கின.
இதுபோல் எத்தனை முறை நடந்திருக்கிறது. அவர் அவள் எழுந்துவிட்டார் என்று எண்ணி எத்தனை தடவைகள் ஏமாற்றம் அடைந்திருப்பார். அதுபோல இதுவும் தனது பிரம்மை என்று நினைத்துக் கொண்டவர் அமைதியாக இருந்தார். ஆனால் இம்முறை அப்பெண் அவரை ஏமாற்றவில்லை. படுக்கையில் இருந்தவர் மெல்ல மெல்ல தனது கண்களை திறந்தார். இதைப் பார்த்த அவர் அவளது கையை கீழே வைத்துவிட்டு சட்டென்று வெளியே ஓடினார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 27
சம்யுக்தாவும் தீஷிதனும் வீட்டிற்கு உள்ளே வரும்போது, இவர்கள் பேசிக் கொண்டிருப்பது அவர்கள் காதில் விழுந்தது. அப்போது தீஷிதன், “என்ன பேசிட்டு இருக்கீங்க? எது சரியா வராது?” என்றவாறு வந்து விக்கியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். சம்யுக்தா தமயந்தியின் அருகில் நின்றாள்.
தீஷிதனிடம் திரும்பிய விக்ராந்த், “நீங்களே சொல்லுங்க அத்தான். நான் ஒரு பொண்ணை விரும்புறேன். அந்த பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொல்றாங்க. இது நியாயமா? உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் எனக்கு மட்டும் ஒரு நியாயமா?” என்று கேட்டான்.
அதற்கு சிரித்துக் கொண்டே தீஷிதன், “இப்போ என்ன விக்கி, உனக்கு நீ விரும்புற பொண்ணோட கல்யாணம் நடக்கணும் அவ்வளவுதானே. நீ பொண்ணு யார்னு மட்டும் சொல்லு, எங்க இருந்தாலும் தூக்கிட்டு வந்திடு” என்றான் தீஷிதன்.
அதற்கு விக்கியோ, “அதெல்லாம் தூக்கிட்டு வர தேவையில்லை. பொண்ணு இங்கதான் இருக்கா”
“என்ன பொண்ணு இங்க இருக்கா? ஆமா நீ யாரை சொல்ற?” என்று கேட்க,
“வேற யாருப்பா அது தான் நம்ம சம்யுக்தாவோட தங்கச்சி வித்யாவைதான் சொல்றாங்க” என்றார் தமயந்தி.
“என்ன நம்ம வித்யாவையா?” என்றாள் சம்யுக்தா.
“ஆமாங்க அக்கா, இங்க பாருங்க அக்கா, சம்யுக்தா உங்க கூட பொறந்த தங்கச்சி இல்ல தானே. அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கறதுல என்ன தப்பு இருக்கு? இவங்க எல்லாம் நீங்க எனக்கு அக்கா முறையாம். அதனால உங்க தங்கச்சி எனக்கு தங்கச்சி முறைன்னு சொல்றாங்க. அக்கா பாருங்க உங்க கூட பிறந்திருந்தாக்கூட பரவால்ல இது…” என்று இழுத்தான்.
இப்போது சம்யுக்தா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். தீக்ஷிதன் தான், “விக்கி” என்றான்.
“சொல்லுங்க அத்தான் நீங்க ஒரு முடிவு சொல்லுங்க. என்னோட வாழ்க்கையே உங்க கையில தான் இருக்கு” என்றவனைப் பார்த்தவன், அமரேந்திரனிடம் திரும்பி, “நீங்க என்ன சொல்றீங்க மாமா?”
“இதுல நான் சொல்ல என்னப்பா இருக்கு? இது அவனோட லைப் அவனுக்கு யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா லைஃப் சந்தோஷமா இருக்கும்னு நினைக்கிறானோ அவங்களையே அவன் கல்யாணம் பண்ணிக்கட்டும்”என்றார்.
“சரியா சொன்னீங்க மாமா, இத்தனை நாள் என்னை மாதிரி அவனும் கல்யாணம் வேணாம்னு தான் சொல்லிட்டு இருந்தான். இப்போ வித்யாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றான். இதுல என்ன இருக்கு, அவளும் நல்ல பொண்ணு தானே. தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கலாம். சம்யுக்தாவுக்கு தங்கச்சி தான். ஆனா அதனால எந்த பிரச்சனையும் இல்லை. தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கலாம். வேணும்னா எங்க கல்யாணம் நடக்கிற அன்னைக்கு இவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் பண்ணிடலாம்” என்றான்.
சம்யுக்தாவ, “ஒரு தடவை லீலா அம்மாகிட்ட பேசிட்டா நல்லா இருக்கும்ங்க. ஏன்னா அவங்க எப்ப பிரச்சனை பண்ணலாம்னு இருப்பாங்க. வித்யா வேற சொல்லாம கொள்ளாம இங்க வந்துட்டா. நாளைக்கு ஏதும் பிரச்சனை வந்துட்டா என்ன பண்ணுறது?”
“எந்த பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன். நீ பீல் பண்ணாத.”
“அதுக்கு இல்ல முதல்ல வித்யாக்கிட்ட இவங்களை கட்டிக்க சம்மந்தமான கேக்கணும்” என்றாள்.
“அவ மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் நடக்காது. வித்யாக்கிட்ட இதைப் பற்றி நானே கேட்கிறேன். அத்தை எங்க வித்யா?” என்றான்.
“வித்யாவும் மதுராவும் உன் கல்யாணத்துக்கு மதுராவோட பிரெண்ட்ஸை அழைக்கிறதுக்காக போயிருக்காங்க.”
“அப்படியா சரி வரட்டும், வந்தது நான் வித்யா கிட்ட கேட்கிறேன்.” என்றான்.
பரந்தாமன், “தீஷி என்னாச்சுப்பா போன விஷயம் என்னாச்சு?” என்றார்.
“ரொம்ப சிறப்பா முடிஞ்சுது டாடி. யுக்தா தான் அங்க பிரகாஷைப் பார்த்த உடனே ரொம்ப பயந்துட்டா. அதுக்கப்புறம் சமாளிச்சுட்டு பேசினா பாருங்க, அவனை யார்னே தெரியாத மாதிரி பேசினா. யுக்தா நீ எப்பவும் இதே மாதிரி ரொம்ப போல்டா இருக்கணும் சரியா”என்றான். பின்னர் அனைவரும் கல்யாண வேலை சம்மந்தமாக அங்கே பேசிக்கொண்டு இருந்தார்கள். மதுராவின் வித்யாவும் வீடு வந்து சேர்ந்தனர்.
………………………………………………….
மணிகண்டனும் லீலாவதியும் தங்களது வீட்டில் உட்கார்ந்து இருந்தார்கள். இருவருக்கும் தங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கி இருப்பது புரிந்தது. ஆம் வித்யா மட்டும் கிடைக்கவில்லை என்றால் விக்டர் இவர்களை சும்மா விடமாட்டான். இத்தோடு நூறாவது முறையாக கால் பண்ணி வித்யா வந்துவிட்டாளா வந்துவிட்டாளா என்று கேட்டு விட்டான். இவர்களும் ஏதோ ஒன்றைக் கூறி சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இது எத்தனை நாட்களுக்கு என்று தான் தெரியவில்லை. இருவரின் ஆட்களும் ஒவ்வொரு இடங்களிலும் வித்யாவை தேட ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் வித்யா எங்கே என்று தான் யாருக்கும் தெரியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு அப்போதுதான் லீலா, “ஏங்க இப்ப என்ன பண்றது? பேசாம நீங்க வாங்கின கடனுக்கு நம்ம சொத்து எல்லாத்தையும் கொடுத்து இருக்கலாமா?”
“அப்புறம் சொத்து எல்லாத்தையும் கொடுத்துட்டு ஒண்ணும் இல்லாம ரோட்ல பிச்சை எடுக்கப் போறியா?” என்று எரிந்து விழுந்தார் மணிகண்டன்.
“வேற என்ன தான்ங்க பண்றது? அந்த எடுபட்ட சிரிக்கி வேற நம்மகிட்ட சொல்லாம இப்படி மாயமா மறைஞ்சுட்டாளே. எங்க போன என்ன பண்றானு எதுவுமே தெரியல” என்று வித்யாவின் மீது தனது கோபத்தை காட்டினார் லீலா.
………………………………………………….
வித்யாவும் மதுராவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வித்யாவிடம் தீஷிதன், “வித்யா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இப்ப பேசலாமா இல்ல அப்புறமா பேசவா?” என்று கேட்டான்.
வித்யாவும், “ஐயோ என்ன மாமா இது? எதுக்கு நீங்க என்கிட்ட பேச டைம் கேட்டுட்டு இருக்கீங்க. சொல்லுங்க மாமா என்ன விஷயம்?” என்றாள்.
தீஷிதனும் அங்கே இருந்தவர்களைப் பார்த்துவிட்டு, “வித்யா இதோ இங்க இருக்கானே விக்கி இவனுக்கு உன்ன ரொம்ப புடிச்சி இருக்காம். கல்யாணம்னு ஒண்ணு பண்ணினா உன்னைத்தான் பண்ணிக்குவானாம். ஆனா இவங்க தான் நீ சம்யுக்தாவோட தங்கச்சி. அதனால இவனுக்கு முறை இல்லன்னு சொல்லி சொல்றாங்க. ஆனா தப்பா எடுத்துக்காதமா நீ இப்படி இருந்தாலும் யுக்தாவோட கூட பிறந்த தங்கச்சி இல்லையே அதனால உனக்கு விருப்பம்னா இந்த கல்யாணம் நடக்கும். மற்றபடி உன்னை யாரும் இங்கே கட்டாயப்படுத்த மாட்டாங்க. உனக்கு புடிச்சிருந்தா மட்டும் உன்னோட முடிவை சொல்லுமா” என்றான்.
இதைக் கேட்ட வித்யா சம்யுக்தாவைப் பார்த்தாள். சம்யுக்தாவோ, “நான் எதுவும் சொல்லல வித்து. இது உன் வாழ்க்கை. நீ தான் முடிவு எடுக்கணும்.”
மதுரா வித்யாவை கட்டி அணைத்துக் கொண்டு, “வித்து நிஜமா நீயே எங்க விக்கி அத்தனை கல்யாணம் பண்ணிக்கோ டி. அவங்க ரொம்ப நல்ல பர்சன்” என்றாள்.
அதைப் பார்த்த தமயந்தி, “யாரும் அவளை கன்பியூஸ் பண்ண வேணாம். வித்யா அவளோட முடிவை சொல்லட்டும். எனக்கு வித்யா என் வீட்டுக்கு மருமகளா வர்றதுல எந்த பிரச்சினையும் இல்ல. அவளுக்கு பிடித்திருந்தா ஓகே தான். நான் ரெண்டு பேருக்கும் முறை சரியா வருதுன்னு யோசிச்சேன். ஆனால் இவங்க சொல்ற மாதிரி சம்முவோட ரெத்த பந்தம் இல்லல வித்யா. அதனால எந்த பி இல்லை” என்றார்.
வித்யா அமைதியாக நிற்பதைப் பார்த்த விக்ராந்த், “வித்யா எனக்கு உன்னை பார்த்ததுமே படிச்சுப் போச்சு. அதனால நான் இதை தள்ளிப் போடாம சொன்னேன். உனக்கு என்னை பிடிச்சிருந்தா சொல்லு இல்லன்னா இப்பவே சொல்லிடு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றான்.
“ஏன் விக்கி எதுக்குப்பா அவசரப்பட்டு? அவளுக்குரிய டைம் நம்ம கொடுப்போம்” என்ற தீஷிதன் வித்யாவிடம் திரும்பி, “வித்யா அவன் கிடக்கிறான். உனக்கு வேண்டிய டைம் எடுத்துக்கோ. அப்படி இந்த கல்யாணத்துல இஷ்டம்னா சொல்லு, எங்க கல்யாணம் நடக்கிற அன்னைக்கே உங்களுக்கு நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம்” என்றான்.
இவர்கள் எல்லோரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்ற வித்யா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். பின்னர் தீஷிதனிடம், “மாமா எனக்கு இந்த கல்யாணத்துல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா எங்க அப்பா அம்மாவை நினைச்சாத்தான் பயமா இருக்கு. அது மட்டும் இல்ல அவங்களோட ஆளுங்க வேற என்னை தேடிட்டு இருப்பாங்க. அதுதான் ரொம்ப பயமா இருக்கு.”
“அப்படியா வித்யா, அதெல்லாம் பாத்துக்கலாமா நீ ஒண்ணும் பயப்படாத, இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்ல. உனக்கு இவனை கட்டிக்க சம்மதம்னா மட்டும் சொல்லும் நிச்சயதார்த்தம் நடக்கும். இல்லை, இன்னும் டைம் வேணும்னா எடுத்துக்கோ ஒன்னும் அவசரமில்லை” என்றான் மீண்டும் சொன்னதையே சொல்லியபடி.
“மாமா எனக்கு திரும்பவும் எங்க வீட்டுக்கு போக விருப்பம் இல்லை. நான் இங்கேயே இருந்துடறேனே. மாமா நீங்க எங்க அக்காவுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கீங்க. நீங்க சொன்ன அவங்க நல்லவங்களா தான் இருப்பாங்க. அதனால நான் இவங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன் மாமா” என்றாள்.
“வித்யா வாவ் சூப்பர் …வித்து ஐ அம் சோ ஹாப்பி.” என்றாள் மதுரா.
விக்ராந்த், “பாத்தீங்களா இப்ப வித்யாவே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா. இப்ப இந்த கல்யாணத்துல யாருக்காவது எந்த அப்ஜக்ஷனாவது இருக்கா?” என்று கேட்ட, எல்லோரும் சேர்ந்து, “எந்அப்ஜெக்ஷனும் இல்லை. தீக்ஷிதன் சம்யுக்தா கல்யாணத்து அன்னைக்கே உங்களுடைய நிச்சயதார்த்தத்தோட இவங்க நிச்சயதார்த்தத்தையும் சிறப்பாக பண்ணிடலாம்” என்றார் பரந்தாமன்.
“யுக்தா நீ மட்டும் என்ன அமைதியா இருக்க? உனக்கு இதுல விருப்பம் இல்லையா?” என்ற தமயந்தியிடம், “ஐயோ அம்மா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு அங்க அம்மாவையும் அப்பாவையும் நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்கு. அவங்களுக்கு மட்டும் இது தெரிந்தது என்றால், என்ன பண்ணுவாங்கன்னு தெரியாது. அதுதான் பயமா அமைதியா இருக்கேன்” என்றாள்.
என்னோட தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு நான் நம்புறேன். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்” என்றவளை அணைத்துக் கொண்டாள் வித்யா.
“இங்கே யாரும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவங்களால உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. எந்த பிரச்சனையும் வராது. சரி போங்க போய் ஃப்ரெஷாகிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றார் தமயந்தி.
அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல, விக்ராந்த் மெல்ல வித்யாவிடம் சென்று, “உன் கூட கொஞ்சம் பேசணும் மொட்டை மாடி வரைக்கும் வா” என்று சொன்னான்.
அவளோ, “அங்க எதுக்கு என்னால வர முடியாது” என்ற வித்யாவிடம் விக்ராந்த், “ப்ளீஸ் வித்து கொஞ்சம் வா. கண்டிப்பா உன் கூட பேசியே ஆகணும்” என்றான்.
இதைக் கேட்ட மதுரா, “அதுதான் அத்தான் கூப்பிடறாங்கல போயிட்டு வா வித்து. ஏதாவதுனா ஒரு குரல் கொடு நான் வந்து பாத்துக்குறேன்.” என்றாள்.
“உன்னை..” என்று அவளை போலியாக மிரட்டிய விக்ராந்த் மதுராவின் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்து விட்டு, “உன் ப்ரெண்டுக்கு என்னால எந்த பிரச்சனையும் வராது மேடம்” என்றான்.
சம்யுக்தாவின் பின்னாடியே தீக்ஷிதன் சென்றான். அவன் தன் பின்னால் வருவதை உணர்ந்த சம்யுக்தா, “ஏதாவது பேசணுமா?” என்றாள்.
அவனும், “ஆமா பேசணும், உள்ள வா” என்று அவளுக்கு முன்னால் அவள் அறைக்குள் சென்றான்.
‘என்னவா இருக்கும்’ என்று யோசித்துக் கொண்டு உள்ளே வந்தாள் சம்யுக்தா. அப்போது தீஷிதன் சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் அவளது கண்கள் விரிந்தன.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்ய சதுர்ஷி💙
வாழ்வு : 25
விக்ராந்த் வித்யாவைப் பார்த்து கண் அடித்து விட்டு உள்ளே போய் அமர்ந்தான். வித்யா, ‘என்ன இது வந்ததும் வராததுமா ஒரு பொண்ண பாத்து கண்ணாடிக்குறான்’ என்று மனதுக்குள் அவனைத் திட்டியவள் உள்ளே சென்றாள். “தமயந்தி, மச்சான் எல்லாரும் போங்க.. போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க சாப்பிடலாம்.” என்று பரந்தாமன் சொல்ல அவர்களும் சரி என்று அவரவர் அறைக்குச் சென்றனர். அவர்கள் சென்றதும் தீக்ஷிதன் தந்தையிடம், “டாடி நாளைக்கு ஏதாவது இம்பார்ட்டண்ட் ஒர்க் இருக்கா?” என்று கேட்டான்.
அவரும், “இல்ல தீஷி.. உன்னோட வெடிங் ஒர்க்தான் இருக்கு” என்றார்.
“அப்டியா, சரி அப்போ நாளைக்கு நான் சம்யுக்தாவ ஆபீஸ்க்கு கொஞ்சம் கூட்டிட்டு போயிட்டு வரேன்.” என்றான்.
பரந்தாமனும், “இல்லப்பா ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுட்டு இப்படி வெளியில போறது நல்லா இல்ல. நலங்கு வைக்கணும் இப்படி நிறைய ஒர்க் இருக்கு.” என்றார்.
அதற்கு தீஷிதன், “இல்லப்பா இது ரொம்ப முக்கியமான விஷயம் கண்டிப்பா போய் ஆகணும்” என்றான்.
அதற்கு மேல் அவரும் எதுவும் பேசவில்லை. “சரி ஆனால் பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” என்றார்.
பின் அனைவரும் வந்ததும் ஒன்றாக சேர்ந்து உணவு உண்டனர். பயண கிளப்பினால் விக்ராந்த் தான் தூங்க செல்வதாக சென்றுவிட்டான். தமயந்தி பரந்தாமன் இருவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அமரேந்திரனுக்கு போன் வர அவர் போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார்.
மதுவும் வித்யாவும் இன்று ஷாப்பிங் செய்த களைப்பில் அவர்கள் அறைக்குச் செல்ல, சம்யுக்தா சமையலறையில் இருந்தாள். அங்கே வந்த தீக்ஷிதன், “யுக்தா இந்த வேலையை எல்லாம் எதுக்கு பாத்துட்டு இருக்க? இந்த வேலையை பாக்கத்தான் இத்தனை பேரு இருக்காங்களே.” என்றான்.
“கொஞ்ச வேலை தானே முடிச்சு வச்சுட்டு வந்துடறேன்.”என்றாள்.
“சரி எனக்கு கொஞ்சம் பால் சூடாக்கி தரியா?” என்று கேட்க இருங்க என்றவள் அவனுக்கு பாலை சூடாக்கி கொடுத்தாள். அதை வாங்கி குடித்துக் கொண்டே தீஷிதன் அவளிடம், “நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு. சீக்கிரமா எழுந்து ரெடியாகு. அப்புறம் நான் உன்னை கூட்டிட்டு போனதும் அங்க நீ எந்த டென்ஷனும் ஆகக்கூடாது. அந்த நிலமைய நீ ரொம்ப கூலா ஹேண்டில் பண்ணனும்.” என்றான்.
அவளுக்கு எதுவும் புரியாவிட்டாலும், “சரிங்க.” என்று மட்டும் சொன்னாள். “சரி சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு போய் தூங்கு குட் நைட்” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். தமயந்தியும் பரந்தாமனும் பேசிக்கொண்டு இருந்தனர். “அண்ணா இந்த விஷயம் தீஷிக்கு தெரியுமா?”
“அவனுக்கு தெரியும் தமயந்தி. ஆனா அவங்க எங்க இருக்காங்கன்னு மட்டும் அவனுக்கு தெரியாது.”
“என்ன அண்ணா சொல்றீங்க? அப்போ உங்களுக்கு அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா?”
“அது வந்து தமயந்தி…” என்று இழுத்தார்.
“சொல்லுங்க அண்ணா உங்களுக்கு தெரியுமா?”
“தெரியும் தமயந்தி.”
“அப்போ ஏன் அண்ணா இவ்வளவு நாளும் எங்க கிட்ட சொல்லல? எதுக்காக இப்படி பண்ணிங்க?”
“தமயந்தி எல்லாம் சொல்ல வேண்டிய நேரம் வரும். அப்போ நான் சொல்றேன். இப்போ எதுவும் எங்கிட்ட கேக்காதமா.”
“அண்ணா நீங்க என்கிட்ட வேணா ஏதாவது சொல்லி என்னை சமாளிக்கலாம். ஆனால் தீக்ஷிக்கிட்ட அது நடக்காது. எனக்குத் தெரிஞ்சு அவன் அவங்க இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சி இருப்பானு தான் நான் நினைக்கிறேன்.”
“இல்ல தமயந்தி அவனுக்கு எதுவும் தெரியாது.”
“வாய்ப்பே இல்ல அண்ணா கண்டிப்பா தீஷிதன் அவங்க இடத்தை கண்டு பிடிச்சு இருப்பான். நீங்க வேணும்னா பாருங்க.” என்று அடித்துக் கூறினார் தமயந்தி.
“சரிமா அதை அப்புறம் பாக்கலாம். நீ போய் ரெஸ்ட் எடும்மா.”
“சரிங்க அண்ணா எதையும் போட்டு நீங்க குழப்பிக்காதீங்க. எல்லாம் நல்லாதாவே தான் நடக்கும். போய் தூங்குங்க காலையில பேசலாம்.” என்று தமயந்தி அங்கிருந்து சென்றார்.
……………….…………………………………
அடுத்த நாள் காலை நேரத்துக்கு எழுந்து வேலைகளை செய்து முடித்து இருந்தாள் சம்யுக்தா.
“என்ன சம்மு நான் வந்து செஞ்சு இருப்பேன்ல?” என்றவாறு அங்கே வந்தார் தமயந்தி.
“பரவாயில்ல அம்மா.” என்றவள் அவரிடம் ஒரு காபி கப்பை கொடுத்தாள்.
“அம்மா நீங்க குடிச்சிட்டு இருங்க நான் மத்தவங்களுக்கும் காபி கொடுத்துட்டு வந்துடுறேன்.”
“சம்மு விக்ராந்த்தும் அவரும் நல்ல தூங்குறாங்க அவங்கள எழுப்பாதடா அப்புறமா கொடுக்கலாம்.”
“சரிங்க அம்மா” என்றவள் ஹாலுக்கு வர அங்கே பரந்தாமன் அன்றைய பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தார். அவரிடமும் காபியை கொடுத்துவிட்டு மதுரா வித்யாவின் அறைக்குச் சென்று அவர்களை எழுப்பி காப்பியை கொடுத்தாள்.
பின் சமையல் அறைக்கு வந்து தமயந்தியுடன் சமையல் செய்யும்போது தமயந்தி, “அம்மாடி நீ எதுவும் பண்ணாதம்மா.. நான் இதை எல்லாம் பண்ணிக்கிறேன் நீ போய் ரெடியாகு. தீஷி ஏதோ முக்கியமான இடத்துக்கு போறேன்னு சொன்னான்ல லேட்டானா அவனுக்கு ரொம்ப கோபம் வரும்” என்றார். “சரி அம்மா” என்ற சம்யுக்தா அவளது அறைக்கு வந்து அழகான பச்சை நிற புடவை ஒன்றை அணிந்து ரெடியாகி விட்டு அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
“இவங்க எங்க கூப்பிடறாங்கன்னு தெரியலையே.. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்குமா? அப்படி என்ன விஷயமா இருக்கும்?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
அப்போது அங்கே வந்த தீக்ஷிதன் “யுக்தா எதுக்கு இவ்வளவு யோசிச்சிட்டு இருக்க? இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க போக போறோம்னு உனக்கே தெரிஞ்சிரும் போலாமா?” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.
“நீங்க இன்னும் காபி குடிக்கலையே” என்றாள். அவனும் “இல்ல யுக்தா எனக்கு இப்போ வேணாம். நான் அப்புறமா கிடைச்சிக்கிறேன் வா போலாம்” என்றவன் தந்தையிடமும் அத்தையிடமும் சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.
………………………………………………….
பிரகாஷ் காலையில் தீஷிதன் ஆபிஸ்க்கு போக ரெடியாகிக் கொண்டிருக்கும்போது சீமா அவனிடம், “எனக்கு மார்னிங் சாப்பிட ஃபுட் ஆர்டர் பண்ணிட்டு போயிடுங்க” என்றாள். அவனோ இருக்கிற கடுப்பில், “ஏன் அது கூட உனக்கு ஆர்டர் பண்ண தெரியாதா? என்று கத்தினான். அதற்கு அவள், “என்ன இப்போ எதுக்காக இப்படி கத்துறீங்க? இங்க பாருங்க என்கிட்ட உங்க குரலை உசத்தி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. உங்க பிள்ளையை தானே நான் சுமந்திருக்கிறன் அப்போ அதை பாத்துக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு தானே இருக்கு. என்ன மொத பொண்டாட்டிய பார்த்ததும் என் மேல கோபம் வருதா? என்றாள் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவாறு.
“சீமா ஏன் என்னை இப்படி புரிஞ்சுக்காம பேசுற? நானே செம்ம டென்ஷன்ல இருக்கேன் நீ வேற மேலும் டென்ஷன் படுத்தாத. இப்ப என்ன உனக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணனும் அவ்ளோதானே. சரி நான் ஆர்டர் பண்றேன் நல்லா ரெஸ்ட் எடு.”
“ஆமா இப்ப எங்க போறீங்க?”
“ப்ரொஜெக்ட் சைன் பண்ணனும்ல அதுக்கு தான்.”
“அப்படியா சரி அந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா வந்துடுங்க. என்னை இந்த ஊர் சுத்தி பார்க்க கூட்டிட்டு போங்க.”
“நாம என்ன ஹனிமூனா வந்துருக்கோம்?”
“வந்துட்டாலும் சொன்னதைக் கேளுங்க. என்னை வெளியே கூட்டிட்டு போறீங்க அவ்வளவுதான்” என்றவள் மறுபடியும் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.
பிரகாஷ் தனது காலை ஓங்கி தரையில் உதைத்து விட்டு அங்கிருந்த பேக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். போகும் போது மறக்காமல் அவளுக்கு உணவு அனுப்புமாறு சொல்லிவிட்டே சென்றான்.
தீஷிதனின் ஆபீசுக்கு சென்று அவனுக்காக காத்திருந்தான். பிரகாஷிற்கு அந்த சம்யுக்தாவின் கீழ் வேலை செய்ய வேண்டும் என்ற நினைப்பே வேப்பங் காயாக கசத்தது. ‘ச்சே போயும் போய் அவ கீழ தான் வேலை செய்யணும். இப்பிடியாயிடுச்சே. இதை டாடிக்கிட்ட சொன்னா என்ன பண்ணுவாங்கன்னு தெரியாதே. இவன் வேற அவ பெரிய உலக அழகி மாதிரி அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கிறான்.’ என்று மனதுக்குள் தீஷிதனை திட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அப்போது அந்த ஆபீஸை முன்னால் ஒரு பிஎம்டபிள்யூ ஒன்று வந்து நின்றது. அதைப் பார்க்க அதிலிருந்து இறங்கிய தீஷிதன் மறுபக்கம் வந்து, சம்யுக்தாவின் பக்கம் இருந்த கார் கதவை திறந்து விட்டான். சம்யுக்தாவிற்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.
“என்னங்க இது நானே வந்திருப்பேன்ல.”
“பரவால்ல இப்போ நீ என்னோட வைஃப் ஆகப் போறவ. உன்னை எப்படி எல்லாமோ பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுறேன்னு உனக்கு தெரியாது யுக்தா. இதுவும் நான் உன்னை பார்த்துக்கிற விஷயத்துல ஒன்று. நீ என்னோட மகாராணி டி” என்றவன் அவளின் கையைப் பிடித்து அழைத்து வந்தான்.
அங்கே முன்னாடி இருந்த ஷோபாவில் உட்கார்ந்து இருந்த பிரகாஷை கண்டுகொள்ளாமல் அவனுடைய கேபினுக்கே அவளை அழைத்துச் சென்றான். சம்யுக்தாவிற்கும் அவன் கையைப் பிடித்துக் கொண்டு வருவது கூச்சமாக இருந்ததால் தலையைக் குனிந்து கொண்டே சென்றாள். அதனால் அவள் பிரகாஷை கவனிக்கவில்லை.
தனது அறைக்கு அழைத்துச் சென்ற தீஷிதன் அவளை அங்கிருந்த அவனின் எம்பி சீட்டில் அமர வைத்தான். “ஐயோ என்னங்க பண்றீங்க? எனக்கு எந்த சீட்டெல்லாம் வேண்டாம். நான் இதுல உட்கார மாட்டேன். நீங்களே உட்காருங்க. இதுக்கு நான் கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவங்க” என்று சட்டென்று அந்த சேரில் இருந்து எழுப்பினாள்.
அவளது தோளைப் பிடித்து மறுபடியும் அந்த சேரில் உட்காரவைத்த தீஷிதன், “யுக்தா நான் சொல்ல வர்றதை கவனமா கேளு. இன்னைக்கு நீ இந்த சீட்டிலேதான் உட்கார்ந்துக்க போறே. இந்த கம்பெனில நீயும் ஒரு பார்ட்னர். நீ தாரளமா இந்த சேரில் உட்காரலாம்.”
“நீங்க ஏங்க இப்படி எல்லாம் பண்றீங்க?”
“நீ என்னை கல்யாணம் பண்ணிக்க போறதையே என்னால ஏத்துக்க முடியல. இது வேறயா? ப்ளீஸ் என்னை ரொம்ப சங்கடப்படுத்தாதீங்க. எனக்கு இதெல்லாம் வேணாம்” என்றாள். தீக்ஷிதன் அவளை கண்டிப்புடன் ஒரு பார்வை பார்த்தான். இங்க பாரு இன்னைக்கு நீதான் இந்த கம்பனியோட எம்டி புரிஞ்சுதா?” என்று கேட்க, அவளும் அவன் கூறியதற்கு அதற்கு மேல் மறுத்துப் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“குட் கேர்ள் இப்படித்தான் என்னைக்கு நான் எது சொன்னாலும் நீ மறுத்து பேசக்கூடாது” என்றவன் அவள் தலையை வருடி விட்டான்.
அப்போது அவன் கேபின் கதவை தட்டிக் கொண்டு அனுமதி கேட்டு உள்ளே வந்தான் புகழ்.
“உள்ளே வரலாமா?” என்றான் புகழ்.
“அடி வாங்குவடா. நீ வரும்போது எதுக்குடா பர்மிஷன் கேட்டுக்கிட்டு?”
“இல்ல நண்பா முன்னாடின்னா நீ மட்டும் இருப்ப நான் வரலாம். இப்போ தங்கச்சி வேற இருக்குல்ல அதான் எதுக்கும் ஒரு சேப்டிக்கு கதவை தட்டிட்டே வந்தேன்” என்றான்.
அவனது தோளைத் தட்டிய தீஷிதன், “சரி எல்லாரும் வந்தாச்சா? அந்த முக்கியமான ப்ராஜெக்ட் பண்ண அந்த கம்பனியோட எம்டி வந்துட்டாங்களா?”
“வந்துட்டாங்க.. முன்னாடிதான் உக்காந்து இருக்காங்க நீங்க பாக்கலயா?”
“அப்படியா நான் கவனிக்கலடா.”
“எது நீ அவன கவனிக்கல. சூப்பர்டா நான் நம்பிட்டேன் நம்பிட்டேன்..” என்றான் புகழ்.
“யார் அது?” என்றாள் சம்யுக்தா.
“அதுவா சம்மு நீயே அவர் வரும்போது பார்த்து தெரிஞ்சுக்கோ சரியா? நான் போய் அவரை வரச் சொல்றேன்” என்ற புகழ் பிரகாஷைப் பார்க்க வெளியே சென்றான்.
“மிஸ்டர் பிரகாஷ் எம்டி வந்தாச்சு. நீங்க உள்ள போங்க” என்றான். அவனும் சரி என்று கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான்.
“எஸ் கம்மிங்” என்றான் சம்யுக்தா அருகே ஒரு சேரை எடுத்து போட்டுக் கொண்டு அதில் உட்கார்ந்திருந்த தீஷிதன்.
உள்ளே வந்த பிரகாஷ் அங்கே எதிர்ப்பக்கமாக எம்டி சீட்டில் அமர்ந்து இருந்த சம்யுக்தாவைப் பார்த்து அதிர்ச்சியடையவில்லை. ஆனால் பிரகாஷை நிமிர்ந்து பார்த்த சம்யுக்தா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். சேரில் இருக்கும் அவளது கையை பற்றிக் கொண்டான் தீஷிதன். அவள் தீஷிதனை தனது கலங்கிய கண்களால் பார்க்க, அவனோ அவனது கண்களாலே அவளை சமாதானப்படுத்தினான். அவளும் ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்டு, கண்களை மூடி திறந்தாள். பின் பிரகாஷைப் பார்த்து, “உட்காருங்க மிஸ்டர் பிரகாஷ்” என்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
Newer Posts