
Tag:
Romantic Love Story
4. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 4
“அம்மா… அண்ணனுக்கு பசிக்குதாம்… இப்ப மீட்டிங் முடிஞ்சிடுமாம்… உடனே டின்னர் எடுத்து வைக்கணுமாம்…” என்று மேல் மாடியிலிருந்து கத்திக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் குட்டி வாண்டு, பதினேழு வயதே ஆன சஷ்விகா.
“சச்சு… எல்லாம் ரெடியா தான் இருக்கு… நீயும் இறங்கி வா, நாலு பேரும் ஒன்னாவே சாப்பிடலாம்…” என்று பார்வதி சொல்ல,
“ஓகே ம்மா… டூ மினிட்ஸ்…” என்றவள் கீழே வந்தாள்.
“எங்க டி உங்க அண்ணன்… அந்த கூப்பாடு போட்ட, இன்னும் காணோம்?” என்று பார்வதி கேட்க,
“ஹான்… இதோ வராங்க ம்மா…” எனக் கூறி பூரியை விழுக்கினாள் சஷ்வி.
“என்னடா கண்ணா, வேலை அதிகமா?”
“எஸ் ம்மா… கொஞ்சம் லைட்டா ஹெவி தான்…”
“சரி மொதல்ல வந்து சாப்பிடு…” எனக் கூறியபடி அவனுக்கும் பூரியை தட்டில் வைக்க, அமைதியாக சாப்பிட்டான் எல்வின்.
“எங்க ம்மா அப்பா?”
“ரூம்ல இருக்கார் பா… வாங்க ன்னு கூப்பிட்டேன்… வரேன்னு சொல்லியே அரை மணி நேரம் ஆகிடுச்சு…”
“மணி ஒன்பது ஆகுது… இன்னமும் சாப்பிடாம என்ன பண்றார்?” எனக் கேட்கும் பொழுதே சாமுவேல் வந்துவிட்டார்.
“வந்துட்டேன் டா கத்தாத!” என்றபடி அவர் இருக்கையில் உட்கார,
“சுகர் டேப்லெட் போடணுமே ப்பா… அதுக்கு நீங்க சீக்கிரம் சாப்பிட்டா தானே…”
“சரிடா இனி டைமுக்கு சாப்பிடறேன் போதுமா…”
எல்வினோ, “ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க… அப்பறம் நம்பறேன்…” எனவும்,
பார்வதி கணவரிடம், “ஏங்க நீங்க பேசறீங்களா? இல்ல நானே கேட்கட்டுமா?” என்று கண்களால் மிரட்ட,
சாமுவேலோ பதிலுக்கு, “நீயே கேட்டுக்க…” என்று ஜாடை காட்ட, அதற்கு அவரை முறைத்தபடி இருக்க,
“அண்ணா… எனக்கு அண்ணி தேடுறது பத்தி தான் ரெண்டு பேரும் தீவிர டிஸ்கஷன்ல இருக்காங்க…” என்று சஷ்விகா உடைத்து பேசிவிட,
“ஏது… உனக்கு அண்ணியா!”
“ஈஈஈ… உன் வருங்காலம் எனக்கு அண்ணி தானே ண்ணா… அத சொன்னேன்…”
அதில் ஆரோனும், “வாண்டு சும்மாவே இருக்க மாட்டீயா நீ…” எனச் சொல்லி சிரிக்க,
“சொல்லுடா கண்ணா, உனக்கு ஏதாச்சும் பொண்ணை பிடிச்சி இருக்கா என்ன?” என்று பார்வதி கேட்க,
சாமுவேலும், “நீ லவ் பண்றதா இருந்தாலும் சொல்லு எல்வின், அப்பாவும் அம்மாவும் அந்த பொண்ணு வீட்ல போய் பேசிட்டு வரோம்…” என்று சொல்ல,
“அப்படி இருந்திருந்தா மொதல்ல உங்க கிட்ட தானே சொல்லி இருப்பேன் ப்பா…”
சஷ்வியோ இடையில் புகுந்து, “ப்பா… இதெல்லாம் என் கிட்டயும் கேட்கலாமில்ல… நானும் ஏதாவது சொல்லுவேன்ல….” என்று குறும்புடன் பேச,
“அடிக்கழுதை… ஸ்கூல் படிக்குற வயசுல என்னடி பேச்சு…” என்று பார்வதி அவளது காதை திருக,
“ம்மா… ம்மா… விடுங்க, நான் ஒன்னும் ஸ்கூல் படிக்குற பொண்ணு இல்ல… இந்த வருஷம் காலேஜ் ஜாயின் பண்ண போறேன்… ஹான்… அப்பறம்… நீயும் என் வயசுல தானே அப்பாவ லவ் பண்ணி… கல்யாணமும் பண்ணிக்கிட்ட, அப்பறம் என்னவாம்!” என்று காதை தேய்த்து கொண்டே கூற,
“பாரு… பிள்ளை மேல கை வைக்காத… நீ வாடா செல்லம், உனக்கு யாரை பிடிச்சி இருந்தாலும் சரி அப்பா சேர்த்து வைக்கறேன் ஓகேவா…” என்று தந்தை சொல்ல,
“அய்ய… அப்பா, இந்த லவ்ல எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லப்பா… நான் சும்மா அம்மா கூட விளையாடினேன் ப்பா…” என்றவள், “ப்பா… நீங்க அண்ணன கேளுங்க ப்பா…” என்றாள்.
சாமுவேல் மகளின் தலையை செல்லமாக தடவி விட்டு, மகனை பார்த்து, “சொல்லு எல்வின்…” என்றார்.
“எனக்கு நோ இன்ட்ரெஸ்ட் ப்பா… இப்போதைக்கு மேரேஜ் பண்ற தாட் வர மாட்டேங்குது…” என்று ஆரோன் சொல்லவும்,
“டேய்… இப்பவே உனக்கு வயசு 29 டா… கல்யாணம் வேணாம்னு சொல்ற, யாரையும் பிடிக்குது அப்படின்னு கூட சொல்ல மாட்ற… என்னதான் கண்ணா பிரச்சனை?” என்று பார்வதி ஆதங்கமும் கவலையுமாக கேட்க,
“ப்ச்… பாருங்க மம்மி… நான் ஒன்னும் பிரம்மச்சாரி ஆக போறேன்னு சொல்லல… இப்ப வேணாம், கொஞ்ச நாள் போகட்டும்னு மட்டும் தான் சொன்னேன்… அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்…”
“இருந்தாலும் கண்ணா…”
“ம்மா… இப்ப நான் என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்ககறீங்க…”
“வேற என்ன அண்ணா… ஜஸ்ட் வன் வேர்ட், டூ லெட்டர்ஸ், O…K… அவ்வளவு தான்… அப்படி தானே மம்மி…” எனச் சொல்லி சிரித்தாள் சஷ்விகா.
“சச்சுசுசு….”
“நான் எதும் பேசல ம்மா… யூ கண்டியூ…” என்று வாயைப் பொத்தி கொண்டாள் சஷ்வி.
“சரி விடு கண்ணா… இது உன் வாழ்க்கை… உன் முடிவு… உன் இஷ்டம்… இதுல நான் ஆசையோ அபிப்பிராயமோ சொல்றதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல பா… சீக்கிரம் சாப்பிட்டு போய் படு… உனக்கு நிறைய வேலை வேற இருக்கும்…” என்று ஏனோதானோவென்று பேசினார் பார்வதி.
சஷ்வியோ அடங்காமல், அண்ணனின் காதில், “அண்ணா, மம்மி உங்களை எமோஷனலா பேசி கவுக்க பார்க்கறாங்க… ஏமாந்து போய்டாதீங்க ப்ரதர்… உசார் அய்யா உசாருரு…” என்று குசு குசுவென்று பேச,
அதில் சத்தமாக சிரித்து வைத்து பார்வதியிடம் இருந்து முறைப்பை பெற்றுக் கொண்டான் எல்வின் ஆரோன்.
சாமுவேல் மற்றும் பார்வதி தம்பதிகள் இருவரும் முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஊரை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
இதுநாள் வரையிலும் கூட அவர்களுடைய இரு வீட்டாரின் சொந்தங்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை! அந்த மனவருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும், அவற்றை கடந்து வந்து, இருவரும் இணைந்து இத்தனை வருடத்தில் அவர்களின் பிள்ளை செல்வங்களை நன்முறையில் வளர்த்து, கணவன் மனைவி இடையே எவ்வித சண்டை சச்சரவுகளும் இன்றி அன்னியோன்யமாக காதலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தாயின் முகம் பொலிவிழந்து வாடிப் போய் இருப்பதை காண பொறுக்காமல், “ம்மா… நான் இப்ப ஓகே தான சொல்லணும்… நீங்க பொண்ணு பார்க்குறது பாருங்க… எனக்கு பிடிச்சா மாதிரி இருந்தா ஓகே… கல்யாணம் மட்டும் ஒரு வருஷம் கழிச்சு பண்ற போல இருக்கட்டும்…” என்று விட்டான் எல்வின்.
“சரி சரி அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் டா கண்ணா… உனக்கு பொண்ணு இந்துவா இருக்கட்டுமா? இல்ல கிறிஸ்டியனில் பார்க்கட்டுமா?” என்று பார்வதி கேட்க,
அதில் மென்னகை புரிந்தவன், “ம்மா… உங்களை போல ஸ்வீட் அண்ட் சாஃப்ட்டா இருந்தா எந்த மதமா இருந்தாலும் சம்மதம் தான் போதுமா…” என்று சொல்லி விட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் எல்வின் ஆரோன்.
இரவு 11.45.
சென்னை நகரம் தூங்க தயாராகி விட்டிருந்தது. வீடுகளின் விளக்குகள் மெதுவாக அணைந்து கொண்டிருந்தன. ஒரு சில வீடுகளின் ஜன்னல்கள் மட்டும், யாரோ இன்னும் விழித்திருக்கிறார்கள் என்பதை அடையாளம் விதமாக பளிச்சென்று இருந்தன.
ஆரோனின் அன்றைய நாளுக்கான அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன.
வீடியோ ஷூட்டிங், பிண்ணனி ஒலி சரிபார்ப்பு, வீடியோ எடிட்டிங், அலுவலக கால்கள், அவர்கள் உடனான ஜூம் மீட்டிங் கலந்துரையாடல்கள், நெருங்கிய வட்டத்தின் நட்பான விசாரணைகள், அவனது காணொளிக்கு வரும் கருத்துக்களை பார்வையிடுவது என்று அனைத்தும் முடிந்து, அவனது படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான் ஆரோன்.
அவனது படுக்கையறையின் ஓரத்தில் ஒரு சிறிய வின்டேஜ் தேக்கட்டயில் ஆன மெத்தையும் டேபிளும் போடப்பட்டிருக்க, அதன் பக்கத்தில் ஒரு கிளாசிக் ஸ்டைல் வாசிப்பு விளக்கு, அதன் அருகே ஒரு மூடப்படாத புத்தகம், அவன் போடும் வீடியோவிற்கான குறிப்புகளை எழுத ஒரு அழகிய எழுதுகோல், ஒருசில ஓட்டும் குறிப்புகள் (sticky notes), அவன் நான்கு நாளாக எழுத ஆரம்பித்திருக்கும் புதிய காணொளிக்கான ஸ்கிரிப்ட் என்று அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக பொருந்தி இருந்தது.
அவனது தனிப்பட்ட கைப்பேசியை திறக்க, அதில் இருந்த அறிவிப்பை கண்டதும், அவனது இதழ்கள் தானாக மென்னகையில் விரிந்தன.
“தஞ்சாவூர் அரோமா சமையல் – Kulukku Roti | Healthy sweet recipe for kids”
அந்த நொடி அவனது கண்கள் அந்த அறிவிப்பையே ஆர்வமுடன் பார்க்க, கைகளோ அதை தொட்டு, உள்ளே செல்லவும் சிறிய விளம்பரம் ஒன்று வந்தது.
அவன் கண்ணை மூடி, தலையணியில் தலையை மிதமாக தள்ளி வைத்து, அந்த குரலை கேட்க ஆர்வமாக காத்திருந்தான்.
30 வினாடி காத்திருப்புக்கு பின், அவள் குரல் ஒலித்தது.
“ஹெலோ கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ், நான் அரோமா, ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்திருக்கேன், சில கமெண்ட்ஸ் என்ன வீடியோ வரலன்னு, கொஞ்சம் பெர்சனல் வொர்க்..”
அந்த சில வாக்கியங்கள் போதுமானதாய் இருந்தது. அவனது நெஞ்சினுள் ஒரு மெல்லிய வெறுமை – யாரும் நிரப்ப முடியாத அந்த இடம் – ஏதோ ஓரளவுக்கு நிரம்பியதைப் போல உணர்ந்தான் எல்வின் ஆரோன்.
“எனிவே, இப்போ ஒரு புது ரெசிபி உடன் வந்திருக்கேன், இது நம்ம குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், நமக்கு பசங்க ஹெல்தி முக்கியம், ஆனா பிள்ளைகளுக்கு டேஸ்ட் முக்கியம், இது ரெண்டையும் பேலன்ஸ் பண்ற போல ஒரு ரெசிபி தான்,
குலுக்கு ரொட்டி, குழந்தைகளுக்கு சாக்கோ பால்ஸ் ன்னு சொல்லி குடுத்து பாருங்க, நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா அவங்களே உங்க கிட்ட வேணும்னு வந்து நிப்பாங்க…” என்று பெண்ணவள் தொடர்ந்து அதன் செய்முறை விளக்கங்களை விரிவாக சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் குரல் வரக்கூடிய அந்த காணொளியை பார்க்கும் பொழுது , அவனுடைய உள்ளத்தில் ஒரு பதட்டமா, காத்திருப்பா, மென்மையான துடிப்பா ஏதோ ஒன்று ஓடிச் சென்றது. எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாத ஓர் நிம்மதியை தந்தது.
அவள் குரல் அவனது மனதில் மெல்லிசை பாடல் போல ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த குரல் அவனுக்கு அமைதியை இனிமையாய் கொடுத்தது எனலாம்.
அவனது மனமோ எப்போதும் போல, ‘சச் அ மெஸ்மெரிசிங் வாய்ஸ்… இட்ஸ் ஹெவன்லி ஏஸ்தெட்டிக் ஃபீல்…’ என்று வியந்து நினைக்க, அந்த சமையல் வீடியோவை முடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதில் இருப்பது யார் எவர் என்ற தெரியாமல் போனாலும், அதில் சமையலை தவிர்த்து எவ்வித உணர்வுகளை பற்றியும் கூறாத போதிலும், அந்த அரோமா பேசும் விதம், பக்குவமாக சமைப்பது, அந்த சமையலில் எடுத்துக்காட்டும் பழைய பாரம்பரியம், அதில் உபயோகப்படுத்தும் உபகரணங்கள், அவளது உள்ளங்கையில் போட்டிருக்கும் மருதாணியின் அடர் சிவப்பு நிறம், அவள் அணிந்திருக்கும் அந்த கண்ணாடி வளையிலின் மெல்லிய சினுங்கல்… என்று அனைத்தும் ஒரு அழகிய கவிச் சிந்தனையை போல இருந்தது.
இவை அனைத்துமே அவனுக்கு ஒரு அழகியல் தோற்றத்தை கொடுத்தது. அவளது சமையலின் ஒவ்வொரு அசைவும் அவனது பார்வையில் கவிதையாகவே பட்டது.
எல்வின் மனமோ, “காட், இந்த வாய்ஸ்யை கேட்டுடவே கூடாதுன்னு நினைச்சாலும் கூட, கேட்காமல் இருக்க முடிய மாட்டேங்குது… இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாருன்னே தெரியல… இது ஒரு பெண்ணா, ஆன்டியா ன்னு கூட எனக்கு சரியா தெரியல, அப்படி இருந்தாலும் கூட இந்த குரலை கேட்ட அடுத்த நிமிஷம் மயங்கி போய் தான் கேட்டுட்டு இருக்கேன்… என்ன நினைச்சா எனக்கே கோபம் தான் வருது...” என்று வெளிப்படையாகவே திட்டிக் கொண்டான்.
அவனது புத்திக்கு எல்லாமே புரிந்து இருந்தாலும் கூட, மனமோ அவனது பேச்சை துளியும் கேட்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்ததில் நொந்து போய் விட்டான் எல்வின் ஆரோன்.
3. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 3
அன்வியின் கைகளோ மிதமாக புளித்திருந்த மாவை கரண்டியில் எடுத்து இட்லி பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தது.
அப்படியே சிறிது மாங்காய் நறுக்கி, அதனுடன் அரை கைப்பிடி சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், மூன்று பச்சை மிளகாய், இரண்டு பற்கள் பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலையும் உப்பும் சேர்த்து சட்னியை அரைத்து முடித்து, கொஞ்சம் தாளிப்பையும் சேர்த்து முடித்திருந்தாள்.
அவள் சமையல் செய்யும் அழகை மாங்காய் தின்றபடி பார்த்துக் கொண்டு இருந்தாள் ஷிவாஷினி.
“ஏலே! நீ ஒரு ஆர்டிஸ்ட்டுன்னு அடிக்கடி நிருபிக்குற புள்ள… நீ சமைக்கும் அழக பார்த்தாலே சாப்பிட நாக்குல எச்சி ஊருடி…” என்று புகழவும்,
“ஊரும்… ஊரும்…”
“இன்னுமும் அவங்களை காணல பாரேன்…”
“வரட்டும் இன்னைக்கு, சட்னியில நாலு கரண்டி உப்பை அள்ளி போட்டு தரேன்…” என்று அன்விதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஆதித்யனின் புல்லட் சத்தம் காதில் கேட்டது.
ஷிவாவோ, “வந்துட்டான் கரிச்சட்டி, அவனோட தங்க ரதத்துல…” என்று உதட்டை சுழித்துச் சொல்ல,
அன்வி முறைத்து விட்டு, “ஆதிய திட்டாம விட்டுட்டா உனக்கு அந்த நாளே ஓடாது ல…”
“க்கும்… நீயாச்சும் உன் ஆசை நண்பனாச்சு…” என்றவள், ‘என்னை விட இவளுக்கு அவன் தான் ரொம்ப முக்கியம்… வரான் பாரு காலன்… கரிச்சட்டி காலன்…’ என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தபடி இருந்தாள் ஷிவா.
“டேய் மச்சான், அந்த முட்டைகோஸ் வேற இன்னேரம் ஏதோதோ பத்த வச்சி இருப்பா… அதனாலேயே உன் தங்கச்சி செம காண்டுல இருக்கான்னு நினைக்கேன்…” என்று ஆதித்ய கரிகாலன் முழி பிதுங்கிட,
வந்தியத்தேவனோ, “விடுடா… நம்ம அம்மு தானே பார்த்துக்கலாம்… ஒரு அழகான வீடியோவ ஷூட் பண்ணி எடிட்டிங் பண்ணி தந்துட்டா கூல் ஆகிடுவா…” என்று அசட்டையாக கூறிச் சென்றான்.
வீட்டிற்குள் நுழையும் போதே, “தங்கச்சி…” என அன்போடு அழைக்க,
அவனது பாசமலரோ, “தங்கச்சி நொங்கச்சி ன்னு வந்த, கத்திய எடுத்து சொறுகிடுவேன்…” எனவும், ஷிவாவோ சத்தம் போட்டு சிரித்தாள்.
“சுண்டெலி கம்முனு இருந்துடு…” என்று ஆதி கத்திட,
“நான் ஒன்னும் உன் மூஞ்சிய பார்த்து சிரிக்கல… வந்திய பார்த்து தான் சிரிச்சேன்…”
வந்தியனோ, “அம்மாடி பரதேவதை…” என்று அவளுக்கு கையெடுத்து கூப்பிட்டவன், வாயை பொத்திக்கொண்டு இருக்கும்படி சொல்லிவிட்டு,
“அம்மு, நாங்க சும்மா வாய்க்கால் பக்கம் போனோம்… அப்படியே கிணத்தை பார்க்கவும்…”
“விழுந்துறலாம்னு முடிவு பண்ணிட்டங்களோ?” அன்வி கேட்க,
“ச்சீ… ச்சீ… ஒரேயடியா குளிச்சு ஃப்ரெஷ் ஆகிட்டு… நேரா இங்க தான் வந்தோம்… பாரு என் மச்சான் கையில என்ன இருக்குன்னு… என் கையில் லேப்டாப் கூட வச்சி இருக்கேன் பாரு… முதல்ல நாம சுடச்சுட மல்லிப்பூ இட்லியை ஒரு கை பார்த்துட்டு, களத்துல இறங்கறோம்… இன்னைக்கு வேற லெவல் சம்பவம் பண்றோம்… ஓகேவா டி அம்மு…” என்று ஆதித்யா பேசவும், அப்படியே மலையிறங்கி விட்டாள் பெண்ணவள்.
“சரி சரி… அம்மு வா… இட்லி வச்சி எங்களுக்கு குடு… இல்லாட்டி இந்த வெட்டி பீஸே மொத்தத்தையும் முழுங்கிடுவா…” என்றபடி தட்டை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான் வந்தியத்தேவன்.
‘அவன் பேச ஆரம்பிச்சாவே இவளுக்கு கோபம் எல்லாம் போயிடும்… இதுல என் மேல சத்தியம் பண்ணி நீ மட்டும் தான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ன்னு சொல்லுவா… ஹ்ம்ம்… உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…’
ஆதித்யனோ ஷிவாவின் தலையில் தட்டி, “அடியே கிறுக்கி… அங்க மைண்ட் வாய்ஸ்ல புலம்பாம வந்து சேரு…” என்கவும்,
“ஆஹ்! நீ போடா, எனக்கு வரத் தெரியும்…”
“உனக்கு மரியாதை ன்னா என்னன்னே தெரியாதா டி…”
“இந்த அழகு மூஞ்சிக்கு இந்த மரியாதையே ஜாஸ்தி தான் கரிச்சட்டி…”
“அடிங்…”
“அம்மு என்ன காப்பாத்து டி…” என்றபடி ஓடி விட்டாள் ஷிவாஷினி.
“குட்டி சாத்தான்… உன்னைய நான் ஒன்னுமே பண்ணல…”
“அம்மு… அதையெல்லாம் கண்டுக்காத… நீ எனக்கு ரெண்டு இட்லி சேர்த்து வை… சட்னி சூப்பர்…” என்று சப்புக் கொட்டி சாப்பிட்டான் வந்தியத்தேவன்.
ஷிவாஷினியும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க, “தீனி பண்டாரம்… யாரும் அந்த சுண்டெலிய எதுவும் கேட்டுடாதீங்க… அதுனால தான் ரொம்ப ஆடறா…” என்றதும் அவள் அன்வியை முறைக்க,
“ஆதி…” என்று சத்தம் போட்டதும் மௌனமாக சாப்பிட ஆரம்பித்தான்.
அன்வியும் இட்லியை விழுங்கிய படி, “எல்லாரும் சாப்பிட்டு முடிச்சா… தோட்டத்துக்கு கிளம்பலாம்… அங்க போய் இன்னைக்கு விடியோ ஷூட் எடுக்கலாம்… ஒரு சிம்பலான டிரெடிஷனல் ஸ்வீட் ரெசிபி பண்ணலாம்னு யோசிச்சு இருக்கேன்…” எனக் கூற,
வந்தியத்தேவனோ, “அப்படி என்ன செய்ய போற?”
“ஈசு சொல்லி குடுத்த குலுக்கு ரொட்டி தான்… பட் அதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமா சின்ன பிள்ளைங்க விருப்பி சாப்பிடற போல பண்ணலாம்னு இருக்கேன்… பாப்போம் இன்னைக்கு செய்யறது நல்லா இருந்தா வீடியோ அப்லோட் செய்யலாம், இல்லன்னா வேணாம்… வேற ஏதாவது ட்ரை பண்ணுவோம்…”
“நல்லா வராம போனாலும், வீடியோ அப்லோட் பண்ண சொன்னா பண்ணவே மாட்டீயே நீ..” என்று ஷிவு அலுத்துக் கொள்ள,
“அதெப்படி ஷிவு முடியும்… என்ன நம்பி எத்தனையோ பேர் என்னோட வீடியோ பார்த்து அவங்களோட நேரத்தை ஒதுக்கி சமையல் செய்றாங்க… அவங்களை எப்படி நம்ம ஏமாத்த நினைக்கலாம் சொல்லு… உன்னோட கம்பல்ஷனுக்காக தான் சொதப்புன ரெசிப்பி சிரீஸ் ன்னு தனியாவே வீடியோஸ் போடுறோமே… அப்பறம் என்ன… நம்ம கஷ்டபட்டு எடுக்கும் வீடியோ எல்லா வீணாகாம தானே இருக்கு…” அன்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
இடையில் புகுந்த ஆதியோ, “எல்லாரும் அவங்கவங்க செய்யும் வேலைக்கான ஒருசில எதிக்ஸ் வச்சி இருப்பாங்க… அப்படி சிலது அம்மு கிட்டயும் இருக்கு… அதுல நீ ஏன் குறுக்க போற சுண்டெலி…”
“எனக்கு எல்லாம் தெரியும்… யூ ஷட் யோர் மவுத்…” எனக் கூறி முகத்தை திருப்பி கொண்டாள் ஷிவு.
“அன்வி… உனக்கு தேவையான பொருள் எல்லாம் எடுத்து வை போ… இவங்க இந்த ஜென்மத்துல திருந்த மாட்டாங்க… நான் போய்ட்டு வீடியோ எடுக்க லொகேஷன் செக் பண்ணிட்டு வரேன்…” எனச் சொல்லி சென்றான் வந்தியன்.
அதன் பின்னரே நண்பர்கள் இருவரையும் முறைத்து கொண்டே, தேவையான பொருட்களை எடுக்க சென்று விட்டாள் அன்விதா.
“எல்லாம் உன்னால தான்டி… எப்பவும் சண்டை தான்…”
“ஆமா… எனக்கு அது மட்டும் தான் வேலை பாரு… மரியாதையா போய்டு கரிச்சட்டி…”
“சூனிய பொம்மை இப்ப வந்தேன்னு வச்சிக்க அவ்வளவு தான்…” என்றபடி ஆதித்யன் அவளை அடிக்க துரத்த,
ஷிவாஷினியோ அதற்குள், “போடா பொடலங்கா…” என கத்திக் கொண்டே ஓடி விட்டாள்.
அதன் பின்னர், நால்வரும் இணைந்து தோட்டத்திற்கு சென்று அன்வி சமைக்கவும், அதனை படம் பிடிக்கவும் ஏதுவாக அனைத்தையும் எந்த ஒரு அமர்க்களமும் ஆர்பாட்டமும் இல்லாமல் செய்து கொண்டிருந்தனர்.
தஞ்சாவூர் அரோமா சமையல்
அன்விதா அவளுடைய பதினைந்தாவது வயதின் தொடக்கத்தில் ஆரம்பித்த யூடியூப் சேனல், அதாவது கொரோனா தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்து எடுத்த சமையல் வீடியோக்கள் தான் இன்று மூன்று மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இது முழுக்க முழுக்க அவளுடைய சமையல் செய்யும் திறனையும் அவளது குரலையும் வைத்து மட்டுமே கிடைத்த வெற்றி.
சிறு வயதிலிருந்தே அவளுடைய பாட்டி சமைக்கும் பொழுதெல்லாம் எல்லாவற்றையும் பார்த்து, அதனை ரசிக்க, அவளுக்கும் சமையல் மீது ஆர்வம் ஏற்பட, அவளாகவே சமைக்க ஆரம்பித்திருந்தாள்.
அவற்றில் கொஞ்சம் புதுமையையும் சேர்ந்து புதுப்புது வகைகளில் செய்து வீட்டினரை அசத்தினாள், அவளுக்கு சமையலின் மீதிருந்த அந்த ஆர்வமே இன்று இப்படி வளர்ச்சி அடைய வழிசெய்து இருந்தது.
அவளது சமையல் வீடியோவை காணும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பசுமையாகவும் பாரம்பரிய முறையிலும் இருக்கும், அதுமட்டுமின்றி அவளது குரல் கேட்பவர்களை கவர்ந்திழுத்து மயங்க வைக்கும்.
இதுநாள் வரையிலும் அவள் யாரென்று ஒருவருக்கும் தெரியாது, உண்மையான பெயர் கூட என்னவென்று தெரியாது, அவளது முகத்தை கூட இத்தனை வருடத்தில் காட்டியதே கிடையாது.
இன்றளவும் அவளது பெயரை அரோமா என்று தான் காணொளிகளில் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
அவளது இனிமையான குரலும், பக்குவமாக செய்யும் சமையலும் மட்டுமே தஞ்சாவூர் அரோமா சமையலின் ஆணிவேர்.
அதுமட்டுமின்றி அவள் தனித்துவமாக சமைக்கும் விதம்! பாட்டி ராஜேஸ்வரியின் செம்பு பித்தளை பாத்திரங்களிலும், மண்பாண்டங்களிலும் மட்டுமே சமைப்பாள். சில நேரங்களில் இயற்கை சூழலில் தோட்டத்திற்கு சென்று விறகு அடுப்பில் சமைத்தும் வீடியோ போடுவாள்.
அன்வி உடைய சமையல் காணோளிகளின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமே அவளது கையில் இருக்கும் செந்நிற மருதாணியும், அவள் அணிந்திருக்கும் வானவில் நிறத்திலான கண்ணாடி வளையல்களும் தான்! அதுவே அவளது காணொளிகளுக்கு தனி அழகினை சேர்த்திடும் விதமாக அமைந்திருந்தது.
இவை அனைத்தும் தான் மற்ற சமையல் காணொளிகளுக்கும் இவளது காணொளிக்கும் உள்ள வித்தியாசத்தினை அழகாக பிரித்துக் காட்டிடும் வகையில் இருந்திருப்பது கூட தஞ்சாவூர் அரோமா சமையலின் வளர்ச்சிக்கு காரணம் எனலாம்.
அன்விதா தன்னுடைய முகத்தினை எப்பொழுதும் காட்ட நினைத்தது கிடையாது, ஏனெனில், அவளுக்கு அதிலெல்லாம் துளியும் விருப்பமில்லை.
அவள் அவளது திறமையை வெளிக்கொண்டு வர நினைத்தாலே ஒழிய முகத்தினை அல்ல! ஏனோ, அவளுக்கு இந்த சமூக வலைத்தளங்களில் முகத்தை காட்ட துளியும் இஷ்டமில்லாது இருந்தது.
ஆரம்பத்தில் அவளது நண்பர்கள் கூட அவளிடம் கொஞ்சம் சொல்லி பார்த்தனர், ஆனால், பெண்ணவளோ திட்டவட்டமாக மறுத்து விட, கடைசியில் அவர்களும் அன்வியின் விருப்பப்படி விட்டுவிட்டனர்.
அன்விதா குலுக்கு ரொட்டி செய்ய ராகி மாவை எடுத்து அதனுடன் கொஞ்சம் கொக்கோ பவுடரையும் பால் பவுடரையும் சேர்த்து, சிறிது உப்பையும் நெய்யையும் சேர்த்து சுடு தண்ணீரில் பிசைந்து விட்டு, அதனை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வேக வைத்துக் கொண்டிருந்தாள்.
அன்வி செய்யும் அனைத்தையும் விதவிதமான கோணங்களில் அழகாக படம் பிடித்த படி இருந்தான் வந்தியத்தேவன், ஆதித்யனும் அவனுக்கு ஏதேனும் உதவிகளை செய்தபடி இருக்க, ஷிவாஷினியும் சமத்து பிள்ளையாக நண்பிக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
முதலில் அன்வியின் சமையல் வீடியோவிற்கு வந்தியத்தேவனும் ஆதித்ய கரிகாலனும் அவர்களுக்கு தெரிந்த அளவில் படம் பிடித்து, எடிட்டிங் செய்து கொண்டிருக்க, காலப்போக்கில் அதுவே அவர்களுக்கு பிடித்துப் போய் விட, இருவருமாக கல்லூரியில் காட்சி தொடர்பு (Visual communication) பிரிவையே தேர்ந்தெடுத்து படித்து முடித்தனர்.
ஆரம்பத்தில் அன்விதா தான் வருத்தமாக அவர்களிடம் பலமுறை உங்களுக்கு பிடித்து தானே படிக்கிறீர்கள் இல்லை எனக்கு உதவ வேண்டும் என்று இதை எடுத்தீர்களா என கேட்டபடியே இருப்பாள், அதன் பிறகு, அவர்களின் உண்மையான ஆர்வத்தை கண்டு அதுபற்றி கேட்பதை நிறுத்து விட்டு, அவளால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்தாள்.
தற்பொழுது இருவருமாக சேர்ந்து ஒரு ஸ்டூடியோ ஒன்றையும் வைத்து, கல்யாணம், பிறந்தாள், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பிரத்தியேகமாக புகைப்படங்கள் வீடியோக்கள் என்று எடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து நான்கு குறும்படங்களையும் எடுத்து இருக்கின்றனர். அவர்களது கனவு தாங்கள் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது தான்.
கடைசியாக, ஒரு செம்பு பாத்திரத்தில் கருப்பட்டியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, சிறிது ஏலக்காயை தட்டிப் போட்டு, வேக வைத்த உருண்டைகளையும் சேர்த்து துருவிய தேங்காயை கொட்டி இறக்கி விட்டாள் அன்விதா.
ஷிவாஷினி அதனை ருசி பார்க்க, அதன் சுவை நாக்கில் நாட்டியம் ஆட, “அம்மு வேற லெவல் போ… செம டேஸ்டா இருக்கு டி… அப்படியே சாக்லேட் சாப்பிடற போலவே இருக்கு…” என சப்புக் கொட்டி சாப்பிட்டாள்.
ஆதித்ய கரிகாலனோ ஷிவுயை ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு, வந்தியத்தேவன் எடுத்த வீடியோவை எடிட்டிங் செய்ய அமர்ந்து விட்டான்.
அதன் பின்னர், அனைத்தையும் ஒழுங்கு படுத்தி விட்டு, நால்வருமாக வீட்டிற்கு சென்று ராஜேஸ்வரி பாட்டி சமைத்திருந்த மட்டன் குழம்பை ஒரு பிடி பிடித்ததும் தான் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
அன்விதாவும் அவர்களை அனுப்பி விட்டு, ஆதி எடிட்டிங் செய்த காணொளிக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து விட்டு, அதனை வலையொளியில் பதிவேற்றிய பிறகு, அவளுமே ஒரு குட்டி தூக்கத்தை போட்டாள்.
என் தேடலின் முடிவு நீயா – 34
written by Competition writers
தேடல் 34
அடுத்த இரண்டு வாரங்களிலேயே மகிமாவுக்கு பிரசவ வலியும் வந்துவிட… அவளை அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றான் அபின்ஞான்…
அரசாங்க வைத்தியசாலை என்பதால் அவனால் உள்ளே செல்ல முடியவில்லை…
பதற்றமாகவே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்…
அன்னபூரணி அம்மாளோ அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்…
சிறிது நேரத்திலே இரு தாதிகள் வந்து, “கங்கிராஜுலேஷன் சார் உங்களுக்கு ரெண்டு பசங்க பிறந்து இருக்காங்க” கூறி ரோஜா குவியல் போல் இருந்த குழந்தைகளைக் கொண்டு வந்து நீட்ட இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன் முதலில் எந்த குழந்தையை தூக்குவது என்று தடுமாற்றமாக இருந்தது…
அவன் தடுமாற்றத்தை போக்கும் விதமாக அன்னபூரணி அம்மாளும், பசுபதியும் குழந்தைகளை தூக்கிக் கொண்டனர்…
“என் வைஃப் எப்படி இருக்கா டாக்டர்” என்று வெளியே வந்த வைத்தியரை பார்த்து கேட்க, “ஷீ இஸ் ஃபைன், இன்னும் கொஞ்ச நேரத்துல நார்மல் போர்டுக்கு மாத்திடுவோம்… அப்ப நீங்க வந்து பாத்துக்கோங்க” என்றவர் அங்கிருந்து செல்ல தாதி மாறும் குழந்தைகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்…
அவளை அறைக்கு மாற்றியதுமே, உடனே அவளை பார்க்க சென்று விட்டான்…
வாடிய கொடியாக படுத்திருந்தாள் மகிமா…
அவள் தலையே மென்மையாக வருடியவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு, “ஆர் யூ ஒகே” என்று கேட்டான்…
“ம்ம்… நம்ம பசங்கள பார்த்தீர்களா?” என்று கேட்க,
“பார்த்தேன் டி… ரொம்ப சின்னதா இருக்கானுங்க… தூக்கவே பயமாயிருக்கு” என்றான் அருகில் தொட்டிலில் வளர்த்த பட்டு இருந்த குழந்தைகளை பார்த்தபடி, அவன் பேச்சைக் கேட்டு அவளும் சிரித்துக் கொண்டாள்…
சஞ்சனாவுக்கும் பிரசவ நேரம் நெருங்கியதால் மகாதேவ் மட்டும் அவளை வந்து பார்த்துவிட்டு சென்றான்…
அடுத்த இரு நாட்களிலே அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்…
அபின்ஞான் கட்டிலில் அமர்ந்து குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருக்க மகிமா கன்னத்தில் கை வைத்தபடியே அவனது தந்தை அவதாரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்…
அன்னபூரணி அம்மாளும் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார்…
“அம்மா நான் சின்ன வயசுல இருந்த போலவே இவனுங்களும் இருக்கானுங்க” என்றான் சிரித்தபடி…
“உன் பசங்க உன்ன மாதிரி இல்லன்னா தான் புதினம்… இவ உன்ன மட்டும் நினைச்சிட்டு இருந்தா… அதனால எப்டியுமே குழந்தை உன்ன மாதிரி தான் பிறக்கும்” என்றவர் குழந்தைகளை ஆசையாக வருடிக் கொடுத்தார்…
குழந்தைகளுக்கும் விஹான் வியான் என்று பெயரும் சூட்டினர்…
அன்று தோட்டத்திலிருந்த பெஞ்சில் அமர்ந்து ஓரிடத்தை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
ஒரு பெரிய வாத்து டாப்பி டாப்பி வந்து கொண்டிருந்தது…அதன் பின்னாலே பன்னிரெண்டு சிறிய வாத்து குஞ்சுகள் தாய் பறவையை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தன…
அவற்றின் தாய் வாத்து அங்கே இருந்த குளம் போன்ற நீர் தொட்டியில் பாய, தாயைப் பார்த்த குஞ்சுகளும் ஒன்றின் பின் ஒன்றாக பயந்தபடி மெது மெதுவாக பாயத் தொடங்கின…
ஒரு குஞ்சு மட்டும் பாயாமல் நின்று இருக்க, அதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
அக்குஞ்சின் பின்னால் வந்து நின்ற தந்தை வாத்தோ அதனிடம் ஏதோ “பேக் பேக்” என்று கூற அக்குஞ்சோ தந்தையின் சிறகின் மேல் பாய்ந்து நின்றுகொள்ள, தந்தையே நீரில் பாய்ந்தது…
அவற்றைப் பார்த்து கண்களை விரித்த மகிமா, “ஹவ் ஸ்வீட்” என்று இதழ் விரித்து சொல்லிக் கொண்டாள்…
“ரொம்ப அழகான ஒரு குடும்பமா இருக்குல்ல” என்றபடி அவள் அருகே வந்து அமர்ந்தான் அபின்ஞான்…
அவனை விசித்திரமாகப் பார்த்தவள், “என்ன இன்னைக்கு நேரத்தோடு வந்து இருக்கீங்க” என்று கேட்டாள்…
“உன்ன பார்க்கணும் போல இருந்துச்சு… அதுதான் வந்துட்டேன்” என்றான்…
“ஓஹோ” என்றாள் மகிமா…
“எங்க நம்ம பசங்க… வீடு அமைதியா இருக்கு” என்று கேட்டான் மகிமா…
“ரெண்டு பேரும் நல்லா தூங்குறாங்க” என்றவளது கண்களோ வாத்துக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய குளத்தில் குளித்துக் கொண்டிருந்த வாத்துக்களிலே ஆகாமல் நிலைத்தது…
இறகுகளை விரித்துக்கொண்டும் அதை தண்ணீரில் அடித்துக் கொண்டும் அது குளிப்பதோ தனி அழகு…
அபின்ஞானோ அவளை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தான்…
அவனை திரும்பிப் பார்த்தவள், “ஏன் என்னையே பார்த்துட்டு இருக்கீங்க” என்று கேட்டாள்…
“சும்மாதான்” என்றவன், “நான் லைஃப்ல எத்தனையோ ரிசர்ச் பண்ணி இருக்கேன்… எத்தனையோ விஷயங்களை தேடித் கண்டுபிடிச்சு இருக்கேன்… நான் தேடி போற சில விஷயங்களுக்கு ஒரு முடிவு இருக்கும்… சில விஷயங்களுக்கு முடிவே இருக்காது… ஆனா நீ கூட இருந்தா என் எல்லா தேடல் ட முடிவு நீ மட்டும்மா தான் இருப்ப… ஐ லவ் யூ சோ மச் மகி… என் தேடலின் முடிவு நீ மகி” என்றான் அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து…
அவளுக்கோ கண்கள் கலங்கிவிட்டது…
என்ன வார்த்தைகள் இவை…
எவ்வளவு ஆழமாக தன் காதலை சொல்லி விட்டான்…
கண் கலங்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு பதில் சொல்வதற்கு கூட அவர் வாயில் இருந்து வார்த்தை வரவில்லை…
“நான் லாஸ்ட்டா கடல்ல மூழ்க கிட்ட
உன்ன மட்டும் தான் நினைச்சேன்… நீ மட்டும் தான் என் கண்ணுல தெரிஞ்சா… உனக்காக வாழனும்னு தோணுச்சு… நீ கூட இருந்தா என்னால எதையும் சாதிக்கலாம் மகி… அந்த கணத்ல தான் உண்மையா என்னையே உணர்ந்தேன்… இந்த டைமெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சு இல்லாட்டி கூட நான் கவலைப்பட்டு இருக்க மாட்டேன் மகி….
நான் என்னதான் தேடல் தேடல்ன்னு சுத்தினாலும் இதுக்கு முந்தியும் சரி இதுக்கு பிறகும் சரி… என் எல்லா தேடலின் முடிவு நீ மட்டுமா தான் இருப்ப” என்றவன் அவள் இதழ்களை கவ்விக் கொண்டான்…
அவள் வார்த்தைகளில் மயங்கியவள் இப்போது அவன் முத்தத்தில் முற்றாக அவனில் பைத்தியமே ஆகிப்போனாள்…
அவளிடம் இருந்து மெதுவாக விலகியவன், “வா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றவன் அவளை கண்ணை கட்டிக்கொண்டு அழைத்து சென்றான்…
காரில் செல்லும்போது அவள் எங்கு செல்கிறோம் என்று எத்தனையோ முறை கேட்டு விட்டாள். ஆனால் அவன் தான் வாயே திறந்த பாடில்லை…
காரை நிறுத்தியவன், அவளை இறக்கி அவள் முதுகில் கையை வைத்து தள்ளியப்படியே சென்றவன் அவரிடத்தில் அவளை நிறுத்தி அவள் கண்கட்டை அவிழ்த்து விட்டான்…
“மகி ட்ரஸ்ட்” என்ற போர்ட் போடப்பட்ட ஒரு பாரிய கட்டிடம்…
அதை ஆச்சரியமாக பார்த்தவள், “இது என்ன அபி… எதுக்காக என் பேர வச்சிருக்க” என்று கேட்டபடியே அவனுடன் உள்ளே நுழைந்தாள்…
“நான் கடலிருந்து எடுத்து டைமண்ட்ஸ என் தேவைக்கு யூஸ் பண்ண விரும்பல… நம்ம நாட்டுல ஊட்டச்சத்து, போசனை குறைந்த நிறைய குழந்தைங்க இருக்காங்க… அவங்களுக்கு தேவையான வசதிகளை செய்யணும்னு தான் இத கட்டியிருக்கேன்… இதுக்காக நான் எடுத்து டைமண்ட்சா யூஸ் பண்ண இருக்கேன்” என்று கூற அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் மகிமா…
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அபி நீங்க என்ன இம்ப்ரஸ் பண்ணிட்டே இருக்கீங்க… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல” என்ற அவளது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது…
“நீ எனக்கு தேங்க்ஸ் சொல்ல தேவல்ல நானே எனக்கு தேவையானதை உன் கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்” என்று கூறி சிரித்தான்…
“அபி லேட் ஆகுது… நம்ம பசங்க தேட போறாங்க… அத்தைய என்ன பாடு படுத்துகிறார்களோ தெரியல” என்று கூற,
“சரி போலாம்” என்றவாறு இருவரும் வீட்டுக்கு வந்து அபின்ஞான் ஒரு குழந்தையும் மகிமா இன்னொரு குழந்தையும் தூக்கியபடி அறைக்குள் நுழைந்தனர்…
எபிலோக்
மூன்று வருடங்களுக்குப் பிறகு…
விஹான் மற்றும் வியான் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்க… “டேய் விளையாடினது போதும்டா…” என்று அவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு வந்தவர், கட்டிலில் போட்டு குட்டி வாண்டுகளை தயார் படுத்த தொடங்கினார் அன்னபூரணி அம்மாள்…
விஹானும் வியானும் தன் கையில் இருந்த பவுடர் டப்பவை வைத்து கொட்டி விளையாடிக் கொண்டிருக்க, “டேய் எங்கடா உங்க அம்மா… நான்தான் உன்னை வளர்த்துட்டு இருக்கேன், அவ சொகுசா ரூம்ல உக்காந்துகிட்டு என்ன வேல வாங்கிட்டு இருக்கா… நீங்க என்னாண்டா உங்க அம்மா விட்டுட்டு என் மடில தொத்திட்டு இருக்கீங்க” என்றபடி இருவரையும் தயார் படுத்திக் கொண்டிருந்தார்…
அபின்ஞானின் அறையிலோ, “இப்ப சரியா?” என்று கேட்டான் அபின்ஞான்.
“இல்ல சரியா வரல அபி” என்றாள் மகிமா…
“என்னடி இவ்ளோ நேரமா உனக்கு புடவை கட்டி விட்றேன்… என்ன கொஞ்சம் பாவம் பார்க்கலாமே” என்று கோபமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடித்தான் அவன்…
“நான் நேரத்தோட எழும்புறேன்னு சொன்னேன், நீங்க என்ன விட்டீங்களா… என்ன எழுந்துக்க விடாம நீங்க உங்க வேலைய காட்டிட்டு இப்ப என்ன கேக்குறீங்களா” என்று அவனை முறைத்தாள்…
“சரி சரி… கட்டி விட்றேன்” என்றவன் எரிச்சலாக அவள் புடவையில் பிளிட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க,
“நான் காலையில் எழும்ப பார்க்க…” என்று அவள் ஏதோ சொல்ல பார்க்க, எட்டி அவள் வாயை மூடியவன், “கட்டி முடிச்சிட்டேன்… இப்போ ஓகே” என்று கேட்டான்…
“பேபெக்ட்” என்றவாறு மகிமா அவன் கன்னத்தில் முத்தமிட…
“கிஸ் பண்ணியே என்ன டெம்ப் பண்ண வேண்டியது… பிறகு அங்க புடிச்சான் இங்க புடிச்சான்னு வர வேண்டியது, போடி…” என்றான் அவளை முறைத்தபடி…
“அழகா சாரி கட்டி விட்டிங்கன்னு எபிரிஷியேட் பண்ணா குத்தமா…” என்று கூறிக் கொண்டிருந்தவளின் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் இதழ்களுடன் தன் இதழ்களை உரசிய படி, “உனக்கு எப்படி எப்ரிஷியேட் பண்ணனும் இன்னும் தெரியல” என்றபடி அவள் இதழ்களை சிறை பிடித்தவன், தன் கைகளை அவள் மேனியில் இஷ்டத்துக்கு அழைய விட்டான்… அவளும் அவனில் பாகாக உருகிக் கரைந்து கொண்டிருக்க, அந் நேரம் அவர்களது ஒரு வயது மகள், ஆத்யா அழத்தொடங்க சட்டென்று இருவரும் விலகிக் கொண்டனர். மகிமாவின் புடவை முழுவதும் அவிழ்ந்து இருக்க அவனை முறைத்தாள்.
தலையை அழுத்தமாக கோதிக் கொண்டவன் குழந்தையை தூக்கிக் கொண்டு அவளை துகிலுரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வையில் கூச்சத்தில் நெளிந்தவள், “அபி வெளிய போங்க நான் புடவ கட்டணும்…” என்றாள்.
“நீ உன் பாட்டுக்கு புடவ கட்டு… நான் என் பாட்டுக்கு ஓரமா இருக்கேன்” என்றான் அசையாமல் நின்று அவளைப் பார்த்தபடி,
“உங்க பார்வயே சரி இல்ல, முதல்ல வெளிய போங்க” என்றாள்.
அவன் அசையாமல் நிற்கவும் அவனை முறைத்துப் பார்த்தபடியே புடவையை கட்டி முடித்தாள்.
இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன் அவள் காதருகே குனிந்து, “சும்மா சொல்ல கூடாது… உன்ன பார்த்தா மூனு குழந்தைக்கு அம்மா மாதிரியே விளங்கள” என்றான்…
அவனை அதிர்ந்து பார்த்தவள், “குழந்தய வெச்சிட்டு என்ன பேச்சு பேசுறீங்க” என்றவளது முகமோ தன்னை மீறி சிவந்து தான் போனது.
மகிமா பழுப்பு நிற புடவை கட்டியிருக்க அதற்கு, மெச்சாக பழுப்பு நிற சர்ட் மற்றும் வெண்ணிற வேட்டி அணிந்திருந்தான் அபின்ஞான்…
மகிமா மென்மையான அழகுடனும் கம்பீரமாகவும் இருவரும் ஜோடியாக நடந்து வர… அவர்களைக் கண்ட இரு குட்டி வண்டுகளும், “அம்மா…அப்பா…” என்று ஓடிச் சென்று அவர்களை காலை கட்டி கொண்டனர்….
“என் கண்ணே பட்டுடும்” என்ற அன்னபூரணி அம்மாள் குடும்பமாக நின்ற ஐந்து பேருக்கும் சுத்தி போட்டு விட்டே அனைவரும் காரில் ஏரி கிளம்பினர்… மகிமா ட்ரஸ்ட்க்கு…
மகிமா இப்பொழுது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்… அவள் பிஎச்டி படிக்க அபிஞ்ஞானே உதவி செய்தான்… அவள் பசுபிக் சமுத்திரத்தில் வைத்து செய்த ஆய்வு உலகில் ஆய்வுகளிலும் முதலாவது இடத்தை பெற்றிருந்தது…
இன்று மகிமா ட்ரஸ்டின் இரண்டாவது ஆண்டு விழா…
அதற்காகத்தான் இன்று குடும்பமாக சென்று கொண்டிருந்தனர்…
மகாதேவ் குடும்பமும் வந்திருந்தது…
மகாதேவுகக்கு முதலாவது பெண் குழந்தை அவள் தேவகாசினி, இரண்டாவது ஆண் குழந்தை அவன் பிரனீதன்…
அனைவரும் உள்ளே நுழைந்தனர்…
இப்போது மகிமா ட்ரஸ்டின் கிளைகள் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக நாட்டில் மொத்தம் எட்டு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தன…
எல்லாரும் பேசிக் கொண்டிருக்க மகாதேவ் அருகே வந்த அபின்ஞான், “உனக்கு இந்த தேவான்ற பெயர்ல என்னடா அவ்ளோ க்ரஷ்… மகிக்கு தேவகன்யான்னு பேர் வெச்ச, இப்ப உன் பொண்ணுக்கே தேவஹாசினின்னு பெயர் வெச்சிருக்க… உண்மைய சொல்லு ஸ்கூல்ல தேவான்னு ஒரு பொண்ணுக்கு பின்னாலே சுத்தினியே… உன் க்ரஷ்ட பெயரையா வச்சிருக்க” என்று கேட்க…
“உனக்கு எப்படி டா தெரியும்” என்று அதிர்ந்து கேட்டான்…
“சும்மா கெஸ் பண்ணினேன் ஆனா உன் வாயால சொல்லிட்டியே…” என்றவன் மகிமா அருகே சென்று நின்று கொள்ள,
‘டேய் அதை சஞ்சனா கிட்ட சொல்லிடாதே” என்று கத்தினது காற்றிலே கரைந்து போனது…
மகிமா தன் கையில் ஆத்யாவை வைத்துக் கொண்டு நின்று இருக்க…
விஹானும் வியாானும் அபின்ஞானிடம் தூக்க சொல்லி சண்டை பிடிக்க, அவன் தன் மகன்களை தூக்கி இரு தோள்பட்டையிலும் வைத்துக் கொண்டான்…
அவனை நிமிர்ந்து பார்த்த மகிமா, “உங்கள போலவே… உங்க பசங்களுக்கும் பிடிவாதம் கூட” என்று சொல்ல
“ஏன் அவங்க அம்மா கிட்ட பிடிவாதமே இல்லையா… அதிலிருந்தும் இங்க பாதி வந்துருக்கு” என்று அவள் முகம் நோக்கி குனிந்து சிரித்தபடி கூற,
இவ் அழகான குடும்பக் கட்சியை தூர இருந்து புகைப்படம் எடுத்தான் ஒருவன்… கேமராவில் பதிவான புகைப்படத்தை பார்த்து சிரித்துக் கொண்டவன், “மேட்ச் போ ஈச் அதர்” என்று சொல்லிக்கொண்டு தன் கேமராவை தூக்கித் தோளில் போட்டபடி அங்கிருந்து சென்றான் அவன்…
முற்றும்….
என் தேடலின் முடிவு நீயா – 32
written by Competition writers
தேடல் 32
இருவரும் படுத்திருந்தாலும் இருவருக்கும் தூக்கம் தான் வரவில்லை…
இருவருக்கிடையேயும் ஒரு திரை விழுந்த உணர்வு…
மெதுவாக அவளை நெருங்கி வந்தவன், அவளை அணைத்துக் கொள்ள மகிமா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்…
ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், “நமக்கு பேபீஸ் ஃபாம் ஆகுற அளவுக்கு நெருக்கமா இருந்திருக்கோம்… நீ எதுக்கு நான் உன்ன லைட்டா ஹக் பண்ணதுக்கே ஷாக் ஆகுற” என்று கேட்க…
“திடீர்னு நீங்க அணச்சதால தான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்…” என்றவள், திரும்பிப் படுக்க சிரமமாக இருந்ததால் மல்லாக்க படுத்திருந்தாள்…
அவளை அணைத்தபடியே அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்…
ஆறு மாதங்கள் கடந்தும் அன்று போல் இன்றும் அவன் தொடுகையில் அவள் மேனி உருகிக் குழைந்தது…
உணர்சியின் பிடியில் இதழ் விரித்து கண் மூடி படுத்திருந்தவளின் உதடுகளோ அவனை ஈர்க்க… சட்டென்று குனிந்தவன் அவள் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்…
மிக மிக ஆழமான முத்தம்… அவர்களது இதழ்களுடன் சேர்த்து உமிழ்நீரும் பரிமாறப்பட்டன…
அவன் இதுவரை அவளுடன் பேசாதது எல்லாம் சேர்த்து அவன் முத்தம் அவளுடன் பேசிக் கொண்டிருந்தது…
அவன் ஒரு கை அவள் வயிற்றிலிருந்த தன் மகவுகளை வருடிக் கொண்டிருந்தது…
கொஞ்ச நேரத்திலே அவள் மூச்சு வாங்கவும் தான் அவளிடமிருந்து பிரிந்தவன் அவளை தன் மார்புக் கூட்டுக்குள் சுருட்டிய படியே தூங்கிப் போனான்…
அடுத்த நாள் அபின்ஞானின் கைவளைவுக்குள் தான் மகிமா கண்விழித்தாள்.
அவனைப் பார்த்ததும் அவள் இதழ்கள் தானாகவே புன்னகைத்துக் கொண்டன.
மெதுவாக அவனிடமிருந்து விலகப் பார்க்கும் பொதே அவனும் முழித்து விட்டான்.
அவள் முகத்தை அருகில் கண்டதும் அதிர்ந்தவன் தன் கைவளைவுக்குள் இருந்தவளை பிடித்து தள்ளி விட்டவன், “ஏய் நீ இங்க என்னடி பண்ற” என்று கேட்க, இப்பொழுது அதிர்வது என்னவோ மகிமாவின் முறையாகப் போனது.
நேற்று அவன் அல்லவா அவளை அவனுடன் வந்து தங்குமாறு கூறினான். இன்று இவ்வாறு மாற்றிப் பேசினால் அவளும் என்னதான் செய்வது.
“நீ தேவ் தங்கச்சி தானே… என் கம்பெனிக்கு வந்து என் ப்ராஜெக்ட் கொட்டேஷன நீதானே திருடிட்டு போன… இப்ப என் ரூம்ல நீ என்ன பண்ற” என்று தலையை அழுத்தமாக வருடிக் கொண்டே கேட்க,
மகிமாவுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போனது…
அவனுக்கு எது முதலில் நினைவு வரக்கூடாது என்று நினைத்தாலோ அதுவே அவனுக்கு முதலில் நினைவு வந்துவிட, என்ன செய்வது என்று புரியாது கண்களில் கண்ணீர் ததும்ப கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அப்பொழுதுதான் அவனுக்கு நேற்று நடந்ததும், அவள் கர்ப்பமாக இருப்பதும் புரிய தலையை அழுத்தமாக தேய்த்துக் கொண்டான்.
ஏனோ அவனுக்கு அவளை பிடிக்கவில்லை.
ஆனாலும் அவன் தங்கள் திருமண புகைப்படங்களை பார்த்ததில் அவள் தன் மனைவி என்று ஏற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.
அதே நேரம் அவள் தனக்கு இழைத்த துரோகம், தேவின் தங்கச்சி தான் அவள் என்ற உண்மை அறைந்ததில் அதை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
தங்களுக்கு இடையில் எப்படி திருமணம் முடிந்தது? அவள் எதற்காக தன்னை திருமணம் முடித்தாள் என்று அவனுக்கு இப்பொழுது சந்தேகமாக இருந்தது.
அவன் மனமோ, “இவள் என்னை ஏமாற்றி திருமணம் முடித்திருக்கிறாள்” என்று அடித்துக் கூறிக் கொண்டிருந்தது. இதற்கு மேல் எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல் அவன் தலை வேறு விண் விண் என்று வலிக்கத் துவங்கியது.
தன்னை நினைத்து சுய பரிதாபம் ஒரு பக்கம்… அடுத்தது அவன் நினைவுகள் சரியாக திரும்பாமல் அவன் தலைவலியில் அவதிப்படுவதை பார்த்து அவளால் மனதினுள் மட்டுமே கதற மட்டுமே முடிந்தது…
ஒரே ஒரு முறை அவள் திருட்டுத்தனம் செய்ததற்கு அவளும் எத்தனை முறை தான் தண்டனை அனுபவிப்பது…
அவள் முகத்தைப் பார்க்க பிடிக்காதவன் அறையிலிருந்து வெளியே சென்று விட்டான்.
நேற்று சந்தோஷத்தை குடுத்தவன் இன்று அதையும் பிடுங்கிக் கொண்டான்.
இருவரது முகமும் சோர்ந்து போய் இருப்பதைக் கண்ட அன்னபூரணி அம்மாள் மகிமாவிடம், “ஏதாவது பிரச்சினையா மகி” என்று கவலையாக கேட்டார்.
அவளும் அவரிடம் என்னதான் சொல்வது. இதற்கு மேல் பேசி அவர் மனதை நோகடிக்க விரும்பாதவள் ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டிக் கொண்டாள்.
அவள் தலையை வருடிவிட்டவர், “கடவுள் எல்லாத்தையும் சரியாக்கி விடுவார்னு நம்புவோம்” என்றவர் அங்கிருந்து சென்றார்.
அன்று முழுவதும் அவன் அவளுடன் பேசவே இல்லை.
காணும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே திரிந்தான்.
வார்த்தைகளால் எதுவும் குத்தி கிளிக்கவில்லை என்பது மட்டுமே அவளுக்கு நிம்மதி.
அவன் ஏதாவது ஒரு வார்த்தை தவறாக பேசி விட்டால் அதற்குப் பிறகு அவளால் அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடிய வில்லை.
அவனும் அவள் குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறாள் என்பதால் தான் எதுவும் பேசாமல் விலகி சென்று கொண்டிருக்கிறான்.
அவனுக்கு அவள் தேவ் தங்கை என்பதை தாங்கிக் கொள்ளவே முடியவில்ல. அது மட்டும் இல்லாமல் தன்னை ஏமாற்றி பெரிய ஒரு திருட்டுத்தனம் செய்திருக்கிறாள்… அதை அவளிடம் வெளிப்படுத்தவும் முடியாமல், நினைவுகள் சரியாக வராத நிலையில் அவனுக்குத்தான் தலைவலி உயிர் போனது…
மகிமாவுக்கும் அவன் தலைவலியில் அவதிப்படுவது புரிந்தது. அவனிடம் பேச பயந்தவள் அன்னபூரணி அம்மாளிடம் சென்று கூற விட, அவரோ அவனுக்கு தைலம் தேய்த்து விட்டார்…
மகிமா அவனுக்கு காபியை கொண்டு வந்து வைத்து விட்டு அமைதியாக சென்று விட்டாள்.
அவனும் இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்கி விட, அவன் தூங்கியதை உறுதி செய்து கொண்டவள் அவன் அருகே படுத்து அவன் மார்பில் தலையை வைத்து தூங்கிப் போனாள்.
அவன் அருகே உறங்குவதில் அவள் இன்பம் கண்டு கொண்டிருக்கிறாள் இப் பேதை.
அடுத்த நாள் விடியலில் அவளுக்கு மூச்சு விட சிரமமாக இருக்க தூக்கத்திலிருந்து சிரமப்பட்டு கண்களை திறந்தவளது விழிகளோ சாசர் போல் விரிந்தன.
அபின்ஞான் அவள் இதழ்களை அழுத்தமாக கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தான்.
“ம்ம்ம்” என முனங்கிய படி அவன் மார்பில் கையை வைத்து அவனை தள்ளிவிட, அவள் தள்ளுவாள் என்பதை எதிர்பாராதவன் கட்டிலில் இருந்து கீழே விழுந்தான்.
அவன் விழுந்ததை பார்த்து அதிர்ந்தவள் இரு கைகளையும் வாயில் வைத்துக் கொண்டாள்.
நிலத்திலிருந்து அவளை முறைத்தபடியே எழுந்தவன், “என்ன திமிரு டி உனக்கு” என்று கேட்டபடி அவள் அருகே வர பயத்துடன் கண்களை மூடிக்கொண்டாள்.
அவன் எதுவும் செய்யாமல் இருக்கவும் மெதுவாக கண்ணை திறந்து பார்க்க அவள் அருகே அமர்ந்து அவன் அவளைத்தான் கணிவாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளும் எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்கிக் கொள்வாள். நேற்று காலையில் ஒரு மாதிரி நடந்தான். இன்று காலையில் வேரு ஒரு அவதாரத்தில் இருக்கிறான்.
“அபி ஏன் இப்படி பண்றீங்க” என்று உள்ளடங்கிய குரலில் கேட்க,
“நீ என் பொண்டாட்டி தானே உன்னை நான் கிஸ் பண்ண கூடாதா” என கேட்டான்.
“நீங்க நேத்து என்னென்னமோ பேசிட்டு இப்போ இப்படி நடக்குறது மட்டும் சரியா?” என்றாள்.
“நமக்கிடையில் என்ன பிரச்சன இருந்தாலும் நீ இப்போ என் பொண்டாட்டி… என் குழந்தைக்கு அம்மா அதனால நான் உன்ன எனக்கு தோன்ற நேரம் எல்லாம் கிஸ் பண்ணலாம்… தப்பில்ல” என்றவன் அவள் கன்னத்தில் தட்டி விட்டு குளியலறைக்குள் சென்றான்.
அவள் தான் என்ன செய்வதென்று அறியாது அப்படியே அமர்ந்திருக்க,வெளியே தேவின் சத்தம் கேட்கவும் பதறி எழும்பினாள்.
அபின்ஞான் தேவை கண்டால் என்ன செய்வன் என்று தெரியாதே…
நல்ல வேலை அவன் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருக்கின்றான். அவன் வருவதற்கு முன்னரே தேவை அனுப்ப நினைத்தவள் வேகமாக வெளியே சென்றாள்.
வெளியே வந்தவள் மகாதேவ் அருகே சென்று, “அண்ணா எப்ப வந்த நீ” என்று கேட்டாள்…
“இப்போ தான் டி… ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும்… நீ எப்படி இருக்க மகி” என்று கேட்டான்…
“நான் இருக்கேன் டா… அபி மட்டும் கண்டான்டா பெரிய பிரச்சினை ஆயிடும்… ஃபாஸ்டாக கிளம்பு” என அவனை அவசரப்படுத்தினாள் மகிமா…
“இன்னும் பழைய ஞாபகம் வரலையா?” என்று மகாதேவ் கேட்டுக் கொண்டிருக்கும்போதே,
“நீ இங்க என்னடா பண்ற” என்று கேட்டபடி வந்தான் அபின்ஞான்…
மகிமா அச்சத்தில் கையை பிசைந்தபடி நின்று இருந்தாள்…
மகாதேவை முறைததுப் பார்த்தவன், “என்ன தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து… என் பொண்டாட்டி கூடவே பேசிட்டு இருப்ப” என்று கேட்டான் அபின்ஞான்…
“ஆஹ் ஸ்டார்ட் பண்ணிட்டான்… டேய் முதல்ல நான் உன் பொண்டாட்டியாகுறதுக்கு முந்தியே நான் அவன் தங்கச்சி டா… இவன் இப்ப முதல்ல இருந்து ஆரம்பிக் போறான்” என்று நினைத்தபடி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
மீண்டும் இருவருக்கும் சண்டை ஆரம்பித்து விடுமோ என பயந்தவள் அபின்ஞானின் கையை பற்றிக் கொண்டவள், “அவன ஒன்னும் பண்ணிடாதீங்க… ” என்றாள் மகிமா வேகமாக…
“நீ போ மகி…” நான் பேசிக்கொறேன் என்ற தேவ், அபின்ஞானை அறைக்குள் இழுத்துக்கொண்டு சென்று கதவை மூடினான்…
“டேய் என்ன விடுடா…” என்று அவன் கையை தட்டிவிட்டான் அபின்ஞான்….
அவனை அழுத்தமாக பார்த்த மகாதேவ், “எதுக்குடா நடிக்கிற” என்று எடுத்த எடுப்புக்கே கேட்டான்…
அபின்ஞான் ஒரு கணம் அசையாது நின்றவன், பின் “நான் என்னத்துக்கு நடிக்கணும்… நீ ஏதாவது டிராமா போடாதே” என்றான்…
“மத்தவங்க வேணும்னா உன் நடிப்ப நம்பலாம்… ஆனா நான் உன்ன நம்பவே மாட்டேன்… இதுக்கு முன்ன நீ என்ன பார்க்க கிட்ட உன் கண்ணுல ஒரு கோபம், வெரி, வெறுப்பு இருக்கும்… ஆனா இன்னைக்கி அது ஒண்ணுமே இல்லாமா ரொம்ப சாதாரணமா இருந்துச்சு… எதுக்குடா நடிக்கிற” என்று மீண்டும் கேட்டான் மகாதேவ்.
“உண்மையா எல்லாம் மறந்துட்டேன்டா… இன்னைக்கு காலையில தான் எல்லாமே ஞாபகம் வந்துச்சு… மகி என்ன பண்றான்னு பார்க்க ஆசையா இருந்துச்சு… அதுக்காகத்தான் சும்மா நடிச்சு பார்த்தேன்… நாளைக்கு சொல்லலாம்னு இருந்தேன்… நீயே கண்டுபிடிச்சுட்ட” என்றான் சிரித்தபடி…
“டேய்… உனக்கு விளையாட வேற நேரமே கிடைக்கலயா டா… மகி ரொம்ப வீக்கா இருக்கா… கொஞ்சம் கவனமா இருந்துக்கோ… நீயே தான் இத அவ கிட்ட பார்த்து சொல்லணும்” என்றான் ஒரு அண்ணாவின் பாசத்துடன்…
“சரி டா… கவலைப்படாதே… இனி நான் அவள கவனமா பாத்துக்குறேன்” என்றான் அபின்ஞான்…
“அப்ப சரிடா… நான் கிளம்புறேன்… சஞ்சனா தனியா இருக்கா… நீ கவனமா இருந்துக்கோ… மகிய கவனமா பார்த்துக்கோடா” என்ற படி மகாதேவ் கதவை திறக்க…
அங்கே தேனீர் கோப்பையுடன் எடுத்துக் கொண்டு வந்த மகிமா கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தாள்…
உள்ளே வந்து அங்கிருந்த மேசையில் தேநீர் கோப்பைகளை வைத்தவள், “அண்ணா நீ வெளியே போ” என்றாள் கோபமாக….
“மகி” என்று அவன் இழுக்க…
“போ அண்ணா” என்று கத்தவும் அபின்ஞானும் வெளியே செல்லும்படி கண்ணசைத்தான்…
ஒரு தலையசைப்புடன் அபின்ஞானிடம் விடை பெற்றுக் கொண்டவன் வெளியே செல்லவும் கதவை அடித்து மூடியவள் அபின்ஞான் முன்னே வந்து நின்றாள்…
“உன்ன அரஞ்சே சாவடிக்கனும் போல இருக்கு டா” என்றாள் அவனை முறைத்தபடி…
“மகி” என்று அவன் என்ன சொல்வது என்று தெரியாது மாட்டிகொண்டதில் முழித்துக் கொண்டிருந்தான்.
“எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? நேத்து காலையில இருந்து நான் எவ்வளவு துடிச்சிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா” என்றாள் கண்களில் கண்ணீர் ததும்ப கேட்டாள்.
அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளை மிக மிக இறுக்கமாக அணைத்துக்கொண்டான்…
அவளுக்கும் அந்நேரம் அந்த அணைப்பு தேவையானதாகவே இருந்தது…
“எனக்கு புரியுது மகி… எனக்கு இன்னைக்கு காலையில தான் எல்லாமே ஞாபகம் வந்துச்சி… நீ என்ன பண்றன்னு பார்க்கத்தான் அப்படி நடந்துகிட்டேன்… சொல்லலாம்னு தான் இருந்தேன் டி” என்றான் அவள் முதுகை வருடிக் கொடுத்தபடி…
அவளுக்கும் புரிந்தது… இன்று காலையிலே அவன் நடத்தையில் வித்தியாசத்தை பார்த்தளே… அவளிடம் மென்மையாக அல்லவா நடந்து கொண்டான்.
அறை குறை நினைவுடன், தான் அவனுக்கு துரோகம் இழைத்தது நினைவிருந்தாலும் அவளை மனதால் வேதனைப்படுத்த வில்லையே… பேசாமல் ஒதுங்கி தானே போனான்…
அவளோக்கோ அவனுடன் பேசவும் முடியவில்லை… பேசாமல் இருக்கவும் முடியவில்லை…
அவன் உயிர் தப்பி பிழைத்து வந்ததே அவளுக்கு பெரிய விஷயம் தான்….
வாழும் கொஞ்ச நாட்களில்… சண்டை போட்டுக் கொண்டோ அவனிடமிருந்து பிரிந்து வாழ்வதற்கோ அவளிடம் தெம்பில்லை…
எத்தனை நாள் தான் அவளும் அவனைப் பிரிந்து வலியை அனுபவிப்பாள்…
“இனிமே இப்படி பண்ணாதீங்க அபி” என்றவள்… அவனிடமே நியாயமும் கேட்டு… அவனிடமே ஆறுதலும் தேடி ஏங்கி ஏங்கி அழுதாள்.
எத்தனை நாளைய வலி அவளுடையது…
அபின்ஞான் அமைதியாக அவள் தலையை கோதிக் கொண்டிருந்தான்…
அந்த வருடலே அவளுக்கு ஆயிரம் மடங்கு பலத்தை கொடுத்தது போல் இருந்தது…
அவன் அவன் பேசியிருந்தால் கூட அவள் இப்படி உணர்ந்திருப்பாலோ என்னவோ…
இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது…
நீண்ட நேர அமைதியின் பின் அவளே பேசினாள், “அத்த கிட்ட போய் சொல்லலாம்” என்று கூறியவள் அது கையை பற்றிய படியே அன்னபூரணி அம்மாளிடம் சென்றாள்.
அவரும் இருவரும் ஜோடியாக வருவதை வஞ்சையாக பார்த்துக் கொண்டிருந்தார்…
“அத்த அபிக்கு எல்லாமே ஞாபகம் வந்துருச்சு” என்று கூற,
அவருக்கோ இரட்டிப்பு சந்தோஷம்… “இனியாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க” என்றவர் மகிமாவின் தலையை வருடியவர், “இப்போ உனக்கு சந்தோஷமா… எனக்கு என் பையன் எழுந்திருவான்னு தெரியும்… உன்னை நினைத்து தான் ரொம்ப பயந்தேன்… நான் கும்பிட்ட சாமி என்ன கைவிடல” என்றவர் அவளை அணைத்து விடுவித்தார்…
மகிமாவும் கண்சிமிட்டி சிரித்துக்கொண்டாள்…
“சரி என் பையனோட நீ சுத்தினது போதும் வா என்னோட… இனி உன்ன விட்டா பிடிக்கவே முடியாது… உனக்கு ஃபுருட்ஸ் கட் பண்ணி வெச்சேன் வந்து சாப்பிடு” என்று அவளை கையுடன் அழைத்துச் செல்ல,
அபின்ஞானும் அவர்கள் பின்னாலே வர, அவனை திரும்பிப் பார்த்தவர், “நீ எதுக்குடா எங்க பின்னால வர”என்று கேட்டார்…
“அம்மா உங்க பையன் நான்… நான் தான் கஷ்டப்பட்டு எழும்பி வந்து இருக்கேன்… நீங்க என்ன கவனிச்சுறத விட்டுட்டு மகிய கவனிச்சிட்டு இருக்கீங்க” என்றான் விளையாட்டாக…
அவனை முறைத்துப் பார்த்தவர், “நீ கஷ்டப்படுறது உன் மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கு பாரு… அழகா படுத்துட்டு மகி கிட்ட ஒவ்வொரு வேலயா சொல்லிட்டு இருக்கிற… உன்ன பார்த்துக்க எத்தன பேர் இருக்கோம்…. மகிய பார்த்துக்க தான் யாரும் இல்ல… நான் தான் அவள கவனிக்கனும்” என்றவர் அவள் சாப்பிட பழங்களை நீட்ட,
“அப்படி சொல்லுங்க அத்த” என்று சலுகையாக அவர் தோளில் சாய்ந்து ஆப்பிள் துண்டை கடித்த படி அபின்ஞானை முறைத்துப் பார்த்தாள்.
அவள் தட்டில் இருந்து ஆப்பிள் துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு சமையல் கட்டில் ஏறி அமர்ந்தவன், “மத்த இடத்தில மாமியார் மருமகள கொடுமைப்படுத்துவாங்க, இல்லன்னா மருமக மாமியார கொடுமை படுத்துவா… இங்க என்னன்னா மாமியாரும் மருமகளும் சேர்ந்து சொந்த பையன கொடுமப்படுத்துறீங்க” என்றான் மகிமாவின் தட்டில் இருந்து அடுத்த ஆப்பிள் துண்டையும் எடுத்தபடி…
அவன் கையில் ஒரு அடி போட்டவர், “எதுக்குடா அவளுக்கு கொடுத்தத நீ எடுத்து சாப்பிடுற… உனக்கு தாரத மட்டும் சாப்பிடு” என்று அவன் கையில் இருந்த ஆப்பிள் துண்டை பறித்துக் கொள்ள, மகிமா பக் என்று சிரித்து விட்டாள்…
“கொடுமப்படுத்துறன்னா இப்படித்தான் கொடுமைப்படுத்தனும்” என்று அன்னபூரணி அம்மாளும் சிரித்தபடி கூறினார்.
அந்நேரம் இருவரது ஓர விழிப் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ள அவர்களுக்கு பேசுவதற்கு வார்த்தை தேவைப்படவில்லை… விழி மொழியே போதுமானதாக இருந்தது…
அவளோ இனி ஒவ்வொரு நொடியையும் அவனுடன் ரசித்து வாழ நினைத்தாள்.
அவன் அவளைப் பார்த்து கண் சிமிட்ட, அவள் சிரித்தபடி அன்னபூரணி அம்மாளை திரும்பிப் பார்த்தாள்.
அவர் இருவரையும் கண்டும் காணது போல் மனதிற்குள் மகனையும் மருமகளையும் நினைத்து சந்தோஷப்பட்ட படி தன் வேலையை கவனித்தார்.
“சரி சரி… மாமியும் மருமகளும் இருந்து உங்க கதைய பேசிக்கோங்க…” என்றவன் மகிமா தட்டில் இருந்து ஆப்பிள் துண்டுகளை எடுத்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்…
“சாப்பாடு கொடுக்காம நாம இவன காய போட்ட மாதிரி தான் நடந்துக்கிறான்” என்றவர் அவள் சாப்பிட்டு முடிந்ததும் தன் வேலைகளை கவனிக்க சென்றார்…
அன்று அபின்ஞானை பார்க்க காரனும் ராகவும் வந்திருந்தார்கள்…
மூன்று பேரும் அபின்ஞானின் அறைக்குள் சென்று கதைக்க ஆரம்பித்து விட்டனர்…
“தேவ் வரலையா டா” என்று கேட்டான் அபின்ஞான்.
“வரத்தான் இருந்தான்… இப்போ எதோ முக்கியமான வேலைன்னு வர முடியல, அதுக்கு அப்புறம் தான் நாங்க ரெண்டு பேரும் வந்தோம்” என்ற கரன், “அபி எங்கள நல்லாவே பயமுறுத்துட்ட… இப்ப எல்லாம் ஓகே தானே” என்று கேட்டான்…
“இப்போ ஓகேடா…” என்றான் அபின்ஞான்…
“நல்லா ரெஸ்ட் எடுடா” என அவன் தோளில் தட்டியபடி கூறிய ராகவ், “டேய் மகிய நல்லா பார்த்துக்கோ… அவ ரொம்ப பயந்துட்டா… உன்ன பார்க்க வர டைம்ல, எங்களுக்கு அவள பார்த்தா தான் பயமாயிக்கும்… பேசக்கூட மாட்ட, எங்கயாவது வெரிச்சு பார்த்துட்டே இருப்பா… நல்லாவே மாறிட்டா… கொஞ்ச நாள் டிப்ரஷன்ல கூட இருந்தா… நாங்க எல்லாம் நல்லாவே பயந்துட்டோம்… நீ தான் இனி அவள கவனமா பார்த்துக்கனும்” என சொல்ல…
அபின்ஞானுக்கு அதிர்ச்சியாய் இருந்தது இந்த விடயம்….
இத்தனை விடயங்கள் நடந்திருக்கிறதா என்று?
யாருமே… தன் பெற்றோரோ… மகாதேவ் கூட இதை அவனிடம் கூறவில்லையே…
அவளைப் பார்த்ததுமே அவள் தோற்றத்திலே அவள் உடைந்து போய் இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது தான்…
ஆனால் இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று இன்று தான் தெரிந்தது…
இப்பொழுது அவன் மனதுக்கு இரு மடங்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது…
அவள் நிலைமையை புரியாமல் அவளுடன் விளையாடியதை நினைத்து…
பெருமூச்சுவிட்டுக் கொண்டான்…
இனி அதை நினைத்து எந்த பயனுமே இல்லை அல்லவா…
இனி அவளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்…
தன் மேல் அவள் எவ்வளவு பாசம் வைத்திருந்தால் தான் படுக்கையில் இருக்கும்போது அவள் நடைபிணமாக சுற்றி இருப்பாள்…
இனி அவளை காவமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் நண்பர்களுடன் பேச ஆரம்பித்தான்…
அந்நேரம் அவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் தேநீர் கோப்பைகளை எடுத்துக்கொண்டு வந்தாள் மகிமா…
அப்போது தான் அவளை ஊன்றிக் கவனித்தான் அபின்ஞான்…
உடலுக்கு இலகுவான கருப்பு நிற காட்டன் சல்வார் அணிந்திருந்தாள்…
முடியை கொண்டை போட்டிருந்தாள்…
மெலிந்து போய் அவளது வயிறு மட்டும் அவளை விட பெரிதாக தெரிந்தது…
தன் தோற்றத்தில் எந்த ஒரு அக்கறையும் இல்லை என்று அவளை பார்க்கும் போதே விளங்கியது…
ஆனால் அவள் தோற்றத்துக்கு மாறாக அவள் இதழ்களிலோ புன்னகை நிறைந்திருந்தது…
அன்றைய மகிமாவுக்கும், இன்று தன் முன்னால் இருப்பவளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் கூறி விட அவனால் முடியும்…
அவளை பார்க்கும் பொழுதே அவனுக்கு வேதனையாக இருந்தது…
கூடிய சீக்கிரம் அவளை பழைய மகிமாவாகவே மாற்றி விட வேண்டும் என நினைத்துக் கொண்டான்…
8. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 8
“ஹே…” என்ற பெரும் அதிர்வோடு வண்டியை ஓரம் நிறுத்திய கருடேந்திரன், காரை நோக்கி ஓடினான். நெடுஞ்சாலைக்கு நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, புகைச்சலுக்குள் காணாமல் போனது அவன் மனைவி ஓட்டிச் சென்ற கார்.
அவனுக்குள் உண்டான அதிர்வு, அதிவேகத்தில் ஓட வைத்தது. அதற்குள் வாகன ஓட்டிகள் அந்தக் காரைச் சூழ்ந்தனர். பயத்தின் ஒலச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. அருகில் வந்தவன், “ரிது!” என அழைத்துக் கொண்டு ஆள்களை விலக்கிட, சிறு ரத்தக் காயங்களோடு சுயநினைவு இல்லாமல் இருந்தாள் ரிதுசதிகா.
“ரிது!” எனக் கார் கதவைத் திறந்தான்.
கதவைத் திறந்ததுமே அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள். பயத்தின் உச்சத்தை அடைந்த அவன் மனம், கன்னத்தைத் தட்டி எழுப்ப முயற்சித்தது. மணாளனின் எந்தக் குரலுக்கும் செவி மடுக்காதவள் அதே நிலையில் அப்படியே இருந்தாள். நசுங்கிப் போயிருந்த தண்ணீர் பாட்டிலில் மீதமிருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தவன்,
“இங்கப் பாரு, கண்ணத் திற. உனக்கு ஒன்னும் இல்ல. நீ நல்லாத்தான் இருக்க…” எனக் கத்திக் கூப்பாடு போட்டும் எந்த அசைவும் இல்லை அவள் தேகத்தில்.
சுற்றி இருந்தவர்கள், ஆளாளுக்கு ஒன்று பேசி அவன் பயத்தின் அளவுகோலை இன்னும் உயர்த்தி வைக்க, உயிர் இருக்கிறதா எனச் சோதித்தவனின் கை கால்கள் நடுங்கியது. தன்னவளின் உயிர் நாடி பத்திரமாக இருப்பதை உணர்ந்து, அந்தப் பயத்திற்கு நடுவிலும் சின்னதாகப் புன்னகைத்தான்.
யார் உதவி செய்ததோ தெரியவில்லை, சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. யாரையும் தன் மனைவி அருகில் விடாதவன் கையோடு தாங்கிக் கொண்டு வண்டியில் ஏறினான். உடனடி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இமையின் விளிம்பில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தைத் துடைத்தவன்,
“நல்லாத் தான இருக்காங்க?” என ஆழ்ந்த குரலில் கேட்டான்.
“பெருசா எதுவும் இருக்க மாதிரித் தெரியல சார். பயத்துல அன்கான்சியஸ் ஆகி இருக்கலாம். ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனா என்னன்னு தெரிஞ்சிடும்.”
“கொஞ்சம் சீக்கிரம் போங்க சார்”
“இவங்க உங்களுக்கு யார் சார்?”
ஒரு நொடி தடுமாறியவன் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்ட வார்த்தையை மேல்நோக்கி இழுத்து, “என்னோட வைஃப்!” என்றான்.
முதல்முறையாக, அவளுடனான உறவை ஒப்புக் கொண்டவன் இமை சிமிட்டாது அவளையே பார்த்துக் கொண்டு பயணிக்க, துணைவனின் மடியில் சுகமாக உறங்கிக் கொண்டு வந்தாள் ரிதுசதிகா. ஓட்டநரின் அசாத்திய தைரியத்தால், இருபது நிமிடத்தில் மருத்துவமனைக்கு வந்தடைந்தாள். வண்டியை விட்டு இறங்கியதுமே ஓட்டுநரின் கைப்பிடித்தவன்,
“ரொம்பத் தேங்க்ஸ் சார்!” என்றான்.
அவர் சின்னப் புன்னகையுடன் கடக்க, அந்தச் சிரிப்புக்குப் பின் எத்தனை நபர்கள் இந்த நன்றியை உரைப்பார்கள் என்ற எண்ணம் ஒளிந்திருந்தது. உயிர்ச் சுமையைத் தாங்கிக்கொண்டு, எமனோடு போராடி பல உயிர்களைக் காப்பாற்றும் ஓட்டுநர்கள் நிலை, பெரிதாக வெளியில் தெரிவது இல்லை. சுய விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நபர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை.
கண்ணாடிக் கதவின் வழியாக, மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான். மாமனார் சொன்ன போதே யோசித்திருக்க வேண்டும் எனத் தாமதமாக உணர்ந்தான். கம்பீரத்திற்குச் சொந்தக்காரி, ஒரு இருக்கையின் மேல் இவ்வளவு பயம் ஏன் கொள்கிறாள் என்ற கேள்வி அவனைத் துரத்தியது. அவள் தோரணையும், வாயிலிருந்து உதிக்கும் கடுமையான சொற்களும், ஒரு பயத்திற்குக் கட்டுப்படுவது ஆச்சரியமாக இருந்தது.
“ரிது எங்க?”
மாமனாரின் குரலுக்குத் திரும்பியவன் விலகி நின்றான். கண் கலங்கக் கண்ணாடி வழியாக மகளைப் பார்த்தவர், “டாக்டர் என்ன சொன்னாரு?” விசாரித்தார்.
“பெருசா அடி எதுவும் இல்லை. அங்கங்க சின்னக் காயம் தானாம்.”
மருமகனின் வார்த்தையை நம்பாது மருத்துவர் வெளியில் வரும் வரை அப்படியே நின்றிருந்தார் பொன்வண்ணன். கொடுக்க வேண்டிய சிகிச்சையைக் கொடுத்துவிட்டுக் கதவைத் திறந்த மருத்துவர்,
“ரொம்ப பேனிக் ஆனதோட ரிஃப்ளெக்ட் தான் இந்த மயக்கம். மத்தபடி பயப்பட எதுவுமில்லை. நர்ஸ் ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரத்துல நீங்க போய் பார்க்கலாம்.” என்றார்.
உள்ளே சென்றவரின் கண்கள், கண்ணீருக்கு நடுவில் மிதந்து கொண்டிருந்தது. அங்கங்கே ரத்தக் காயங்களோடு, பயம் தெளியாது மருந்தின் வீரியத்தோடு படுத்துக் கொண்டிருக்கும் மகளைக் கரிசனத்தோடு பார்த்தார். அவருக்குப் பின் வந்தவன் மனநிலை, குற்ற உணர்ச்சியில் தத்தளித்தது. தன்னால் தான் இப்படி ஒரு நிலை என்று எண்ணியவன்,
“சாரி சார்!” என்றான் வருத்தத்தோடு.
மருமகன் பக்கம் திரும்பாதவர், மகள் தலையில் கை வைத்து மெதுவாக வருடிவிட்டு, “என்ன ஆனாலும் டிரைவ் பண்ண மாட்டான்னு நம்புனதால தான் எல்லாரையும் அனுப்பி விட்டேன். இந்த அளவுக்குத் துணிவான்னு எதிர்பார்க்கல. என் பொண்ணைப் பத்தி நானே சரியாப் புரிஞ்சுக்கல. இப்ப வந்த நீ எப்படிப் புரிஞ்சிப்ப?” என்றதும் புருவங்களைச் சுருக்கினான்.
“எதனால உங்க பொண்ணுக்கு இவ்ளோ பயம்னு தெரிஞ்சுக்கலாமா?”
மெல்ல மகள் மீதிருந்த பார்வையை மருமகன் மீது திருப்பியவர், “வாழ்க்கையில எந்தக் குறையுமே இல்லாம வளர்ந்தவ என் பொண்ணு. கேட்ட எல்லாத்தையும் உடனே நடத்திக் கொடுக்குற அண்ணன். பசங்களை மட்டுமே உசுரா நினைக்கிற அம்மான்னு, இவ உலகம் ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. என் பையனுக்குப் பொண்ணு பார்த்தோம். அன்னைக்கு ரிது ஒரு வேலை விஷயமா வெளிநாடு போயிட்டா. திரும்ப வந்தவ உடனே அண்ணனுக்குப் பார்த்த பொண்ணைப் பார்க்கணும்னு அடம் பிடிச்சா. நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்கல. அண்ணனைக் கூப்பிட்டுட்டுக் கிளம்பிட்டாள்.
அன்னைக்கு ரிது தான் டிரைவ் பண்ணிட்டுப் போனா… அதுதான் என் பொண்ணைச் சாதாரணமாய் பார்த்த கடைசி நாள். கொஞ்ச நேரத்துல ஆக்சிடென்ட்னு போன் வந்துச்சு. இதே மாதிரி தான் ஓடி வந்தேன். அன்னைக்கும் என் பொண்ணு இப்படித்தான் படுத்திருந்தா. பையன் தான் மொத்தமா படுத்துட்டான்…” என இடைவெளி விட்டார் தொண்டை அடைத்ததில்.
மாமனாரின் வார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், “தண்ணி குடிக்கிறீங்களா சார்” கேட்டிட, தொண்டையைச் செருமிக் கொண்டு,
“அன்னைக்குப் படுத்த படுக்கை ஆனவதான் என் பொண்டாட்டி. பிள்ளையோட மரணம் அவளை மொத்தமா மாத்திடுச்சு. யாரைப் பார்க்குறதுன்னு தெரியாம திண்டாடி நின்னேன். சொந்தம்னு சொல்லிக்கிட்டு வந்து பார்த்த அத்தனைப் பேரும், அவங்களோட வன்மத்தைக் கொட்டிட்டுப் போனாங்க. அன்னைக்குத் தான் தெரிஞ்சுது, பணத்தைச் சம்பாதிச்ச நான் நல்ல மனுஷங்களைச் சம்பாதிக்கலன்னு.
நினைவு திரும்பிக் கண் முழிச்சதும் அண்ணனைக் கேட்டா. நல்லா இருக்கான்னு எவ்ளோ சொல்லியும் நம்பல. தன்னோட அண்ணன் உயிரோட இல்லன்னு தெரிஞ்சு துடிச்சா… அவனோட சாவுக்கும் நான் தான் காரணம்னு பைத்தியக்காரி மாதிரி உளறிட்டு இருந்தா. அதை இன்னும் அதிகப்படுத்துச்சு என் மனைவியோட விஷயம். கண்ணு முன்னாடி உணர்வில்லாமல் படுத்திருக்க அம்மா, தன்னோட ஆசையால உயிரை விட்ட அண்ணன், பெரிய இழப்பைத் தாங்கிக்க முடியாமல் தனியா நிக்கிற அப்பான்னு அவளோட தண்டனை ரொம்பப் பெருசு!” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.
அவர் நிலை கண்டு ஆதரவாகத் தாங்கிப் பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான். மருமகன் கையைத் தன் உள்ளங்கையில் வைத்து மூடியவர் ஆழமாகப் பார்த்தார். அந்தப் பார்வைக்குப் பின், ஒரு தேடுதலும் பாதுகாப்பும் இருப்பதை உணர்ந்து கொண்டவன் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான்.
ரிது சதிகா அந்தச் சம்பவத்திலிருந்து மீள முடியாமல் மனநல மருத்துவரைத் தேடிச் செல்லும் அளவிற்குச் சிதிலமடைந்தாள். மனைவிக்காக வெளிநாட்டிலிருந்து கூட மருத்துவரை அழைத்து வந்து பார்த்து விட்டார். அதிர்வு தாங்காமல் சரிந்தவர், சரிந்தவராக இன்று வரை இருக்கிறார்.
பெற்ற பிள்ளையைத் தொலைத்துவிட்டு, மீதம் இருக்கும் மகளைத் தேற்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவர், மனைவியைத் தனி ஆளாக மருத்துவமனையில் சேர்த்துக் கவனித்துக் கொண்டார். தந்தையின் அவஸ்தைகளைப் புரிந்து கொள்ளாதவள், தனி ஒரு உலகில் குற்ற உணர்ச்சியில் நாள்தோறும் பயணிக்க ஆரம்பித்தாள்.
இம்மூவரின் தாக்கத்தால், முடங்கிப் போன நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாமல் இவர்களைச் சுற்றியே இருந்து விட்டார் பொன்வண்ணன். நன்றியோடு வேலை பார்க்க வேண்டிய சில கயவர்கள், இதுதான் சமயம் என்று அவர்கள் சொத்தை அனுபவிக்க ஆரம்பித்தார்கள். மெல்ல மெல்லச் சுரண்டி பெரும் நஷ்டத்திற்குத் தள்ளப்பட்டது பொன்வண்ணனின் தொழில்கள் அனைத்தும்.
வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, ஆறு மாதமாகச் சம்பளம் தராமல் இருக்கும் தகவலைத் தெரிந்து கொண்டவர் அனைத்துக் கையாடலையும் கண்டு பிடித்தார். தனி ஆளாக நிற்கும் இவர் என்ன செய்து விடப் போகிறார் என்ற எண்ணத்தில், பணத்தைச் சுருட்டிய அனைவரும் தைரியமாக ஒப்புக்கொண்டு வெளியேறினார்கள்.
ஏற்கெனவே மனமுடைந்து முடங்கி இருந்தவர், தப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடத் திராணி இன்றி, போனது போகட்டும் என்று விட்டுவிட்டார். மனநல மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும் வழியில், மூடி இருக்கும் கம்பெனியைப் பார்த்தாள். தந்தையிடம் விசாரிக்கலாம் என்று வீடு வந்தவள் பாதி மயக்கத்தில் இருந்த தந்தையைக் கண்டு பதறினாள்.
“அப்பா…”
மகளின் அனத்தல் சத்தத்தில் அசைந்தவர் தண்ணீர் கேட்டார்.
அதைக் கூடச் செய்யாமல் அழுது கொண்டிருந்த தன் முட்டாள் தனத்தை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டவள், தந்தையை இயல்புக்கு மீட்டாள். வெகு மாதங்கள் கழித்துத் தந்தை, மகள் இருவரும் அன்றுதான் முகம் பார்த்துக் கொண்டனர். தங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் விவரித்தவர் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாதவராய் கண்ணீர் சிந்தினார்.
அந்தக் கண்ணீரும், சுற்றி இருந்தவர்கள் செய்த துரோகமும், அவளை எழ வைத்தது. இவ்வளவு இழப்புகளைத் தன்னால் சந்தித்த தன் தந்தைக்கு அனைத்தையும் திருப்பிக் கொடுக்க முடிவு செய்தாள். சொந்தம் என்று சொல்லிக்கொண்டு பணத்திற்காக உறவாட வந்தவர்களை முதல் வேலையாக வெட்டி விட்டாள். அவளுக்கென்று இருந்த நம்பகமான தோழர்களின் உதவியால் நம்பிக்கைத் துரோகம் செய்த அனைவரையும் பிடித்தாள்.
பெண், என்ன செய்து விடப் போகிறாள் என்ற எண்ணத்தில் அவளுக்குப் போக்கு காட்ட, கையடக்கக் கத்தியைக் கழுத்தில் வைத்து,
“எண்ணி ஒரு மணி நேரத்துல எடுத்த பணம் எல்லாம் முழுக் கணக்கோட வந்தாகணும். இல்லனா, செத்தது நீதான்னு கண்டு பிடிக்க முடியாத அளவுக்குக் கிழிச்சுக் குப்பையா போட்டுடுவேன்.” என்றவளின் புது அவதாரம் தான் கருடேந்திரன் பார்த்தது.
மகளைப் பற்றிய வரலாறைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தவர் அமைதியாகக் கண்மூடிச் சுவரில் சாய்ந்து கொண்டார். அவரையும், படுத்திருக்கும் மனைவியையும் பார்த்தவனுக்குப் பலத்த பெருமூச்சு.
***
கண் முழித்ததும் தந்தையானவர் ஓடிச் சென்று நலம் விசாரிக்க, தாலி கட்டியவன் பெயருக்கென்று நின்றிருந்தான். வாய்மொழி தந்தைக்காக இருக்க, விழிமொழி அவனுக்காக இருந்தது. சிவந்த விழிகள் கோபத்தின் அளவைப் புரிய வைத்தது. சிறிது குற்ற உணர்வு இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாது திடமாக நின்றிருந்தான் கருடேந்திரன்.
“என்ன நினைச்சு இவனை எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னு தெரியல. இப்ப அது தப்புன்னு புரியுதா?” என்றவள் பார்வை அவன் மீதுதான் நிலை குத்தியது.
கொடுக்க வார்த்தைகள் இல்லாததால் தடுமாறிக் கொண்டிருந்தார் பொன்வண்ணன். தந்தையின் தடுமாற்றத்தைப் பார்த்தவள், வெற்றி பெற்ற மிதப்பில் லேசாக உதடு வளைத்து, “ரொம்ப அவசரப்பட்டுட்டிங்கப்பா… இதுக்கான விலையா என் உசுரை எடுக்கப் பார்த்திருக்கான். இனியும் இவன் கட்டுன இந்தத் தாலி என் கழுத்துல இருக்கனுமா?” என்ற இரண்டாவது கேள்வியில் அந்தத் தடுமாற்றம் ஆட்டம் கண்டது.
கனகச்சிதமாகத் திட்டம் போட்டுக் கொலை செய்யப் பார்த்தது போல் பிதற்றும், மனைவி மேலிருந்த சின்னக் கருணையும் மறைந்து போனது. அப்படியே விட்டுச் செல்லாமல் காப்பாற்றியதற்கான தண்டனையாகக் கருதியவன்,
“என்னமோ அந்தத் தாலிக்கு மதிப்புக் கொடுத்துக் கழுத்துல மாட்டிருக்க மாதிரிப் பேசுற. உனக்கெல்லாம் அது ஒரு தூசு. ஏற்கெனவே தூக்கிப் போட்டவ தான… காரியம் ஆகாம ஒன்னும் அது உன் கழுத்துல இல்ல. என்னை வச்சு உன்னை நல்லவளாக்கிக்காத.” என்றான்.
“நான், என் அப்பாகிட்டப் பேசிட்டு இருக்கேன்.”
“என்னைப் பத்திப் பேசிட்டு இருக்க.”
“சோ வாட்!”
“என்னைப் பத்திப் பேசினா நான்தான் பதில் கொடுப்பேன்.”
“முதல்ல உனக்கு இங்க என்னடா வேலை? அதான் கொலை பண்ணப் பார்த்த பர்ஸ்ட் அட்டெம்ட் நல்லபடியா முடிஞ்சிருச்சில்ல. அடுத்து என்ன பண்ணலாம்னு ஓசில தின்னுட்டு யோசி.”
“அடுத்த தடவை உன் வாயைக் கிழிக்கிற மாதிரி தான்டி ஸ்கெட்ச் போடுவேன்.”
“அதுக்கு நீ உயிரோட இருக்கணும்.”
“இப்படியே உன் மூஞ்சப் பார்த்துட்டு இருந்தா, சத்தியமா நெஞ்சு வலி வந்து செத்துடுவேன்.”
“அப்போ நல்லாப் பாரு.”
“ரெண்டு பேரும் நிறுத்துங்க.”
“அவன மட்டும் நிறுத்தச் சொல்லுங்கப்பா. உங்களுக்கும் எனக்கும் நடுவுல அவன் யாரு? பஞ்சப் பரதேசிய வீட்டுக்குள்ள விட்டதே தப்பு. இதுல நமக்கு நடுவுல விடுறது பெரிய தப்பு!” என்ற வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் சரளா, சத்யராஜ் தம்பதிகள்.
மருமகளின் வார்த்தை ஊசியாய் உள்ளத்தைக் குத்தினாலும் காட்டிக் கொள்ளாது, “எப்படிம்மா இருக்க? பார்த்து வண்டிய ஓட்டிட்டுப் போகக் கூடாதா? நல்லவேளையா சின்னக் காயத்தோட ஆச்சு.” கருணையாக நலம் விசாரித்தார் சரளா.
“பெருசா எந்தப் பிரச்சினையும் இல்லல்ல சார்.”
மகள் பேசிய வார்த்தைகள் அவள் புகுந்த வீட்டு ஆள்களின் காதில் விழுந்திருக்கும் என்ற சங்கடத்தோடு நின்று கொண்டிருந்தவர், “அதெல்லாம் இல்ல.” என நெளிந்து கொண்டு பதில் கொடுத்தார்.
“பெருசா ஏதாச்சும் ஆகும்னு நினைச்சுப் போட்ட பிளான் சொதப்பிடிச்சா?”
தங்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி புரியாததால் பக்கத்தில் நின்றிருக்கும் மகனைப் பார்த்தார்கள். அவனோ சுழற்றி அடிக்கும் சூறாவளி போல், கடுமையான பார்வையோடு நின்றிருந்தான். வாய் வார்த்தை, பிரச்சினையாக மாறிவிடக் கூடாது எனப் பயந்தவர் மகளை அடக்க முயன்றார்.
“என்னை எதுக்காகப்பா அடக்குறீங்க? குடும்பமா சேர்ந்துதான் இந்தப் பிளானைப் போட்டு இருப்பாங்க. உங்களுக்கு ஒரே வாரிசு நான் மட்டும்தான். என்னைக் கொலை பண்ணிட்டா, இவனைப் புருஷன்னு காரணம் காட்டி எல்லாச் சொத்தையும் வாங்கிக்கலாம் பாருங்க. அதுக்கான முயற்சியா தான் இவனை என் தலையில கட்டிய வச்சாங்க. அதுக்காக, இவங்க சொன்ன அத்தனையும் பொய்! அந்த ரவி கூடச் சேர்ந்து பித்தலாட்டம் ஆடி இருக்காங்க.”
“என்னம்மா இப்படிப் பேசுற?”
“இவ்ளோ சீக்கிரம் குட்டு உடையும்னு நினைக்கலையோ? நல்லா அருமையா அடுத்தவன் சொத்தை ஆட்டையப் போடுறதுக்காகவே பிள்ளையைப் பெத்து வச்சிருக்கீங்க.”
“ஏய்! என் அப்பா, அம்மாகிட்ட மரியாதையா பேசு. அவங்களுக்கும், நடந்ததுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.”
“சம்பந்தமில்லாம தான் இப்படி நல்லவங்க மாதிரி வந்து விசாரிக்கிறாங்களா? உங்களை மாதிரித் திருட்டுக் குடும்பத்து கிட்ட இருந்து சொத்தைக் காப்பாத்த தான்டா, கடவுள் என்னை உயிரோட விட்டு வச்சிருக்காரு.”
“உன் பொண்டாட்டி என்னப்பா சொல்றா?” என்ற தந்தையின் கேள்விக்குப் பதில் அளிக்காதவன்,
“உங்க பொண்ணை வாயை மூடச் சொல்லுங்க. தேவை இல்லாம என் அப்பா அம்மாவை அசிங்கப்படுத்துறதைப் பார்த்துட்டுச் சும்மா இருக்க மாட்டேன்.”
“இங்கப் பாருடா, கொலைகாரனுக்கு ரோஷத்தை. என்னைக் கல்யாணம் பண்ண கையோட வீட்ட மீட்டுட்ட. உன் தம்பிய பெரிய ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் பார்க்குற. இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுகிட்டு இருக்கியா? என் வாழ்க்கைலயே பார்த்த மிகப்பெரிய பிச்சைக்காரத் திருட்டுக் குடும்பம் நீங்க தான்டா.” என்றவளை அடிப்பதற்காகப் பாய்ந்தான் கருடேந்திரன்.
பாயும் மகனைத் தடுத்துப் பிடித்தார் சத்யராஜ். ஒரு நொடியில் தலைகீழான சூழ்நிலையில், பதறிப் போன பொன்வண்ணன் மகள் பக்கம் நின்று கொள்ள, “சரியான ஆம்பளையா இருந்தா, மேல கை வச்சுப் பாருடா.” என அவனை உசுப்பேற்றினாள்.
“நீ பேசுறது ரொம்பத் தப்பா இருக்கும்மா. உங்க அப்பாவா வந்து தான் வீட்டை மீட்டுக் கொடுத்தார். நாங்க எவ்வளவோ வேணாம்னு சொன்னோம். அவர்தான் என் பொண்ணு பண்ணலனாலும், அவளால உங்களுக்கு ஏற்பட்டதைச் சரி பண்ண வேண்டிய கடமை எனக்கு இருக்குன்னு மீட்டுக் கொடுத்தார். என் பையன் முன்ன விட இப்ப ரொம்ப நல்லா இருக்கான். வேற ஹாஸ்பிடல் மாத்த வேண்டிய தேவையே இல்ல. அதையும் உங்க அப்பா தான் வலுக்கட்டாயமாய் பண்ணாரு. காசு பணத்துக்குப் பிள்ளையை விக்கிற பெத்தவங்க நாங்க இல்ல.”
“ஹா ஹா!” கம்பீரமாகப் பேசும் மாமனாரைக் கண்டு சத்தமிட்டு நகைத்தவள், “அவர் கொடுத்தா வெட்கமே இல்லாம வாங்கிப்பீங்களா? ரோஷத்தோட இருக்க எந்த மனுஷங்களும் இப்படிச் சொல்ல மாட்டாங்க.” என்றதைக் கேட்டதும் தந்தையை விட்டுத் திமிறப் பார்த்தான் கருடேந்திரன்.
அவனை அடக்க முடியாமல் அடக்கியவர், “அந்தக் காசை நாங்க திருப்பிக் கொடுத்திடறோம். எங்க பிள்ளைய எப்படிப் பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும். இன்னொரு வார்த்தை எங்க குடும்பத்தைப் பத்தியும், என் பிள்ளைங்களைப் பத்தியும் பேசாதம்மா.” என்றவரின் வார்த்தையில் இருக்கும் கோபத்தை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள்.
“நல்ல டிராமா கம்பெனி! உங்க பையன் திட்டம் போட்டு என்னைக் கொலை பண்ணப் பார்ப்பான். அதுக்கு வக்காலத்து வாங்கப் பின்னாடியே நீங்க வருவீங்க. ஏன்டா இப்படிப் பண்ணிங்கன்னு கேட்டா துள்ளிக் குதிப்பீங்க. நல்லா இருக்கு உங்க கூத்து!”
“வேணாம்டி! என்னை மிருகமா மாத்தாத. அப்படியே செத்துத் தொலைன்னு விடாமல் கூட்டிட்டு வந்து சேர்த்ததுக்கு நல்லா நன்றியைக் காட்டுற.”
“ஆக்சிடெண்ட் ஆனதுக்குக் காரணமே நீதான்டா”
“இதுக்கு மேல இங்க இருக்குறது சரி வராது. நம்ம போகலாம் கருடா…” என மகனை இழுக்கும் கணவனைத் தடுத்த சரளா, “உனக்கு இப்படி ஆனதுக்கு எந்த விதத்துல என் பையன் காரணம்?” அழுத்தமாகக் கேட்டார்.
தான் பேச ஆரம்பித்ததற்குப் பின்னர், அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மாமியார் கேள்வி எழுப்பியதும், வெகுண்டு எழுந்தவள் நடந்த அனைத்தையும் விவரித்தாள். உண்மையா என்பது போல் மகனை ஒரு பார்வை பார்க்க, தலை குனிந்து கொண்டான் கருடேந்திரன். அவன் கையைப் பிடித்திருந்த கணவனின் கையைப் பிரித்தார்.
“என் வளர்ப்பை அசிங்கப்படுத்தினதுக்காகத் தான் இந்தக் கல்யாணத்தையே நடத்தி வச்சேன். இப்பத் திரும்பவும் அதையே பண்ணிட்டு வந்து நிக்கிற. இனி ஒரு தடவை இந்தப் பொண்ணு என் வளர்ப்பைத் தப்புச் சொன்னா, உசுரோடவே இருக்க மாட்டேன்.” என்றவர் பொன்வண்ணனைப் பார்த்து,
“உங்க பணம் உங்க வீடு தேடி வரும், சார்.” என்றதோடு மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேற, அவருக்குப் பின்னால் சத்யராஜும் வெளியேறினார்.
அன்னை பேசி விட்டுச் சென்ற வார்த்தையால் கடும் ஆத்திரத்திற்கு ஆளானவன், பக்கத்தில் இருந்த மருந்து பாட்டிலைத் தூக்கிப்போட்டு உடைத்து விட்டுச் சரசரவென்று வெளியேற, செய்வதறியாது நின்று கொண்டிருந்தார் ரிதுவின் தந்தை.
***
மாமனார் வீட்டிற்குச் செல்ல விரும்பாதவன் பூங்காவில் அமர்ந்து விட்டான். உள்ளம் கொதியாய் கொதித்துக் கொண்டிருந்தது. தன் வாழ்வில் மனைவி என்றவள் வந்த நாளிலிருந்து, தனக்கு எதிராக நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனுக்குக் கொலைவெறி உண்டானது. இனி ஒரு நொடி கூட அன்னை முன்பு, இன்று நின்றது போன்ற சூழ்நிலையில் நிற்கக்கூடாது என்ற சபதத்தை எடுத்தவன், அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய அனைத்தையும் துல்லியமாகத் திட்டமிட்டான்.
முதல் வேலையாக, அந்த ரவியைச் சுற்றி வளைக்க நினைத்தவன் எண்ணத்தைக் குறுஞ்செய்தி கலைத்தது. கட்டியவள் தான், மருத்துவமனைக்கு வருமாறு செய்தி அனுப்பி இருந்தாள். அதைப் பார்த்ததும் குபுகுபுவென்று கோபம் கொப்பளிக்க,
“என்னால வர முடியாது. கூப்பிட்டதும் வரதுக்கு நான் உன் வீட்டு நாய் இல்ல.” எனப் பதில் அனுப்பி வைத்தான்.
“இதுதான உன்னோட அம்மா நம்பர்?” எனச் சரளாவின் எண்ணை அனுப்பி வைத்து மறைமுகமாக மிரட்ட,
“இவள…” எனப் பல்லைக் கடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
அவன் வருகைக்காகக் காத்திருந்தவள் பார்த்ததும் மிதப்பாகக் காலை ஆட்ட, “அங்கங்க அடி பட்டதுக்குப் பதிலா இந்தக் கால் உடைஞ்சு இருக்கலாம்.” என முணுமுணுத்தான்.
“அடுத்த அட்டெம்ப்ட்ல ட்ரை பண்ணுடா.”
“உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் மொத்தமா முடிச்சு விட தான் ட்ரை பண்ணனும்.”
“அடுத்த தடவையாவது சொதப்பாம ஒழுங்காப் பண்ணு.” எனக் கேலி செய்தாள்.
“இப்ப எதுக்கு என்னை வரச் சொன்ன?”
“ஹாஸ்பிடல் பில்ல யாரு கட்டுவா?”
“அடியே…” என அடிக்குரலில் சீறும் கணவன் முன்னால் கைபேசியை உயர்த்திக் காட்டியவள், “போன் போடவா?” என இழுத்து எள்ளல் செய்தாள்.
“எங்கிட்டக் காசு இல்ல.”
“அது என்னோட பிரச்சினை இல்ல.”
“ஏன்டி! என் உசுர வாங்கிட்டு இருக்க.”
“சீக்கிரம் போய் ஹாஸ்பிடல் பில்ல கட்டு.”
“முடியாதுன்னு சொன்னா…”
“சோ சிம்பிள்!” எனச் சரளாவிற்கு அழைப்பு விடுத்தாள். அதைப் பார்த்தவன் பிடுங்கப் போக, லாவகமாக அவனிடமிருந்து தப்பித்தவள்,
“ரொம்ப ஆடிட்ட. இனி என்னோட ஆட்டத்தைப் பார்க்கப் போற.” என்றாள்.
இப்போது தனக்கு நேரம் சரியில்லாததால், முறைக்க மட்டுமே முடிந்தது அவனால். அந்த முறைப்பிற்கு ஏளனத்தைப் பதிலாகக் கொடுத்தவள் வாசலைக் கை காட்ட, பல்லைக் கடித்துக் கொண்டே வெளியேறினான் ரிதுவின் கணவன்.
7. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 7
குளிக்கும் நீரில் கூட உயர் ரகத்தை வைத்திருந்தவள் மேனியெங்கும் சந்தன வாசனை. அவை போதாது என்று செயற்கை வாசத்தை ஆடையாகத் தெளித்துக் கொண்டவள், பருத்தி ஆடையை அதற்கு ஆடையாக மேல் உடுத்தி, மீண்டும் ஒரு திரவியத்தைப் பட்டும் படாமலும் தெளித்தாள்.
கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டவளுக்கு, கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறு அசிங்கமாகத் தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அவன். கண்ணாடியில், சிரித்த முகமாக நின்றிருந்தவன் உருவத்தைக் கண்டு முறைத்தவள் கையில் இருந்த சீப்பைத் தூக்கி அடித்தாள்.
இவளால் ஒன்றும் செய்ய முடியாத அவனை, அந்தச் சீப்பு மட்டும் என்ன செய்யும்? பாவமாகக் கண்ணாடியில் பட்டுக் கீழே விழ, “பைத்தியக்காரி!” எனப் பல்லைக் காட்டிச் சிரித்தான் கருடேந்திரன்.
“ராஸ்கல்!” என்று சிங்கப்பல்லை மேலும் கீழும் நசுக்கிக் கோபம் கொண்ட ரிது, “உன்னை அழிக்கிறது மட்டும்தான்டா என் வாழ்நாள் லட்சியம்..” கர்வத்தோடு கூறும் நேரம் கதவு திறக்கப்பட்டது.
தலை திருப்ப, அவளுக்குத் தரிசனம் கொடுத்தவன் தாவி மெத்தையில் விழுந்தான். உடம்பு நோகாமல் சுகமாகத் தூங்குவதற்காகப் பார்த்துப் பார்த்துத் தனக்கென்று வரவழைத்த மெத்தையில், இப்படி யாரோ ஒரு குப்பையானவன் விழுவதைச் சகித்துக் கொள்ள முடியாது, “உவாய்க்!” எனக் குமட்டினாள்.
சற்றுத் தலையைத் தூக்கி அவளைப் பார்த்தவன், “ராத்திரி ஒன்னுமே நடக்கலையே, இதுக்கேவா வாந்தி வருது?” என்றதும் சிவக்கும் அவள் முகம் கண்டு மனம் மகிழ்ந்து,
“அப்போ களத்துல குதிச்சா உடனே புள்ள பொறந்திடும் போலயே.” என்றான்.
“கருமம்… கருமம்… ச்சீ! உன்ன மாதிரி ஒருத்தன் கூட வாழுறதே அசிங்கம். இதுல குழந்தை வேறயா? அதுவும் உன்ன மாதிரி லோ கிளாஸா தான் இருக்கும்.”
“நீ ஒன்னும் கவலைப்படாத செல்லம். நம்ம புள்ளைய நானே ஆட்டோல கூட்டிட்டுப் போய் ஸ்கூல்ல விடுறேன்.”
“நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும், அது வாலாட்டிக்கிட்டு எங்கயோ போகுமாம். அந்த மாதிரித் தான்டா, எவ்ளோ வசதியான வீட்ல இருந்தாலும் உன் புத்தி குப்பைக்கே போகுது.”
“தேங்க்யூ!” எனச் சுகமாகப் படுத்துக் கொண்டான்.
பார்த்துப் பார்த்துத் தன்னை அலங்கரித்தவள், கோபம் என்னும் சிவப்பில் அத்தனை அழகையும் கெடுத்துக்கொண்டு கிளம்பினாள். அவளைப்போல், போகும் வரை அமைதியாக நின்றிருந்தவன், “அய்யய்யோ!” என அவசரமாகக் குரல் கொடுக்க, அலறியடித்துத் திரும்பியவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு படியேறினான்.
பல நிமிடங்கள் கழித்தும், என்ன நடந்தது என்று புரியாமலே அவன் கைக்குள் குழந்தையாகச் சுருங்கி இருந்தவளைத் தன் அறையின் பால்கனிக்கு அழைத்துச் சென்றவன்,
“கன்னியப்பன் என் கைக்கு வர வரைக்கும் நீ இங்கதான் இருக்கணும்.” ஒவ்வொரு வார்த்தையாக இழுத்துப் பேசியவன், என்ன செய்யப் போகிறான் என்ற சிந்தனை சிறிதும் இல்லை ரிதுவிற்கு.
அவன் கத்திய வேகத்தோடு தன் சிந்தனையை இழந்தவள், இந்தப் பால்கனியில் என்ன செய்து விட முடியும் என அசாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருக்க, சிறிதும் அஞ்சாமல் பால்கனியிலிருந்து தூக்கி வீசினான். கீழ்த்தளத்தில் நின்று கொண்டு எமன் தன்னைக் கயிறு கட்டி இழுப்பது போல் அஞ்சியவள், இன்றோடு ரிதுவின் சரித்திரம் முடிந்தது என்று கண்களை மூடிக் கொள்ள, கஷ்டத்தையே பார்க்காமல் சொகுசாக வளர்ந்த அவளின் பூமேனி தண்ணீரில் விழுந்தது.
நீச்சல் குளத்தில்தான் தூக்கி வீசி இருந்தான் கருடேந்திரன். நல்ல வேளையாக இவன் மனைவி, முதல் தளத்திலேயே தன் அறையை வைத்திருந்தாள். அதற்கும் நீச்சல் குளத்திற்கும் பெரிதாக உயரம் இல்லாததால், எந்தச் சேதாரமும் இல்லாமல் நீருக்குள் வீணாக விழுந்தவள் தத்தளித்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த பொன்வண்ணன் அலறித் துடித்துக் காப்பாற்ற ஓட,
“சேத்துப் பன்னி மாதிரி இங்கயே இருடி. செத்துடுவன்னு தோணுனா மட்டும் குரல் குடு, என் கன்னியப்பன் இருக்கான்… ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போக.”
பால்கனிச் சுவரில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு நின்றான். ஓடிவந்த தந்தை மகளின் நிலை எண்ணிக் காப்பாற்றக் கை கொடுத்தார். அவருக்காகத் தன் பயத்தைக் குறைத்துக் கொண்டவள் திடமாக, அவர் உதவியை நாடாமல் நீச்சல் குளத்தின் விளிம்பில் ஏறி அமர்ந்தாள்.
“உனக்கு ஒன்னும் இல்லைலடா ரிது…”
“ஒன்னும் இல்லப்பா”
“என்னடா ஆச்சு, எப்படி இதுல விழுந்த?”
“நான்தான் உங்க பொண்ணைத் தூக்கிப் போட்டேன்.”
“ஏம்பா இப்படிப் பண்ண? ஒன்னு கிடக்க ஒன்னு ஆகி இருந்தா என்ன ஆகுறது. உன் கோபத்துக்கு ஒரு அளவே இல்லையா? இவ எனக்கு ஒரே பொண்ணு. எனக்குன்னு வாழ்க்கையில இருக்கிறது இவ மட்டும் தான். இப்படி என் பொண்ண என் கண்ணு முன்னாடியே சித்திரவதை பண்றியே.”
மாமனாரின் குரலுக்குச் சீறியவன், “அப்படித்தான் பண்ணுவேன். அவளுக்கு இந்த மாதிரிப் பண்ணா தான் புத்தி வரும். இப்பக்கூட ஒன்னும் கெட்டுப் போகல. என் ஆட்டோவைத் திருப்பிக் கொடுத்தா இத்தோட எல்லாத்தையும் முடிச்சுப்பேன். இல்லனா, ஒவ்வொரு நாளும் உங்க பொண்ணுக்கு உயிர் பயத்தைக் காட்டிக்கிட்டே இருப்பேன்.” என்றவனைப் பார்க்கப் பயமாக இருந்தது அவருக்கு.
“டேய்!”
மாமனாரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன் மனைவி புறம் பார்வையைத் திருப்ப, “இதுக்கெல்லாம் நடுங்குற ரகம் நான் இல்ல. இதுக்கான சேதாரத்தைப் பார்க்கறியா?” எனப் பொறுமையாக நீச்சல் குளத்திலிருந்து எழுந்தவள்,
“இவன் தங்கச்சி இந்நேரம் காலேஜுக்குக் கிளம்பி இருப்பா. சரியா பத்து நிமிஷத்துல எம் கே மெயின் ரோடுக்கு வருவா. கொஞ்சம் கூட யோசிக்காம வண்டியை ஏத்தி ஆறு மாசத்துக்கு நடக்க முடியாம பண்ணிடுங்க.” எனத் தன்னைக் காட்சிப் பொருளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் தன் வேலை ஆள்களுக்குக் கட்டளையிட்டாள்.
“ஏய்ய்ய்…”
“உன்ன விட என் குரல் ரொம்பச் சத்தமா ஒலிக்கும். அதோட சத்தத்தை உன்னாலயும், உன் குடும்பத்தாலயும் தாங்கிக்க முடியாது. நீ என்னடா எனக்கு உயிர் பயத்தக் காட்டுறது? நான் நெனச்சா நிமிஷத்துக்கு நிமிஷம் உன் குடும்பத்துக்கே அந்தப் பயத்தைக் காட்ட முடியும். வேணும்னா சாம்பிள் பார்க்கறியா?” என்றவள் அங்கு நின்றவர்களைச் சீற்றம் பொங்க நோக்கி,
“சொல்லிப் பத்து நிமிஷம் ஆகுது. இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? அவ கால் ரெண்டும் உடைஞ்சிடுச்சுன்னு நியூஸ் வரணும்.” எனக் கர்ஜிக்க அரக்கப் பறக்க ஓடினார்கள்.
தந்தை கத்துவதையும், அவன் கத்துவதையும் சிறிதளவும் காதில் வாங்கிக் கொள்ளாதவள், நனைந்த உடலோடு வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். மொத்த நீரும் அந்த விலை உயர்ந்த இருக்கையில் சிந்திக் கொண்டிருக்க,
“ம்ஹூம்!” என அவனைக் கண்டு ஓசை கொடுத்தாள்.
“வேணாம்டி. என் தங்கச்சிக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சு, உன்னைச் சும்மா விடமாட்டேன். போனவங்களைத் தடுத்து நிறுத்து.”
“இல்லனா…”
“சார், உங்க பொண்ணுகிட்டச் சொல்லுங்க. இதுக்கான பலன் ரொம்ப மோசமா இருக்கும்.”
“அதையும் தான் பார்த்திடுவோம்.”
“ஏய்!” எனத் தாவிச் சென்று அவள் கழுத்தைப் பிடித்தவன், அவள் பார்க்கும் பார்வையில் இருக்கும் நகைப்பை உணர்ந்து,
“ரொம்ப விஷமுள்ள மனசுடி உனக்கு. குடும்பம்னா என்னன்னே தெரியாம வளர்ந்த உன்ன மாதிரிப் பிசாசுக்கெல்லாம் ஒரு உயிரோட மதிப்புத் தெரியாது. நீ செத்தா பணம் மட்டும் தான்டி உன்னைச் சுத்தி இருக்கும். எங்களை மாதிரி ஆளுங்களுக்குப் பாசமும், அன்பும்தான் நிக்கும். உங்க அப்பா இல்லனா நீ ஒரு அனாதைடி! அனாதையா இருக்கும்போதே உனக்குள்ள இவ்ளோ கொழுப்பு இருக்கே, இன்னும் அப்பா அம்மா சேர்ந்து இருந்து, கூடப் பொறந்த பொறப்பெல்லாம் இருந்தா எவ்ளோ ஆடி இருப்ப…” என்றிடப் பக்கத்தில் நின்றிருந்த பொன்வண்ணனின் மனம் நொறுங்கியது.
ரிதுசதிகா பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க, “போனவங்களைத் திரும்பி வரச் சொல்லுடி.” எனக் கழுத்தில் அழுத்தத்தைக் கூட்டினான்.
“விடு அவளை…”
“உங்களுக்கு உங்க பொண்ணு எப்படியோ, அப்படித்தான் என் தங்கச்சி எனக்கு. அவளுக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்லுங்க, உங்க பொண்ண விடுறேன்.”
“உன் தங்கச்சிக்கு எதுவும் ஆகாது. என் பொண்ண விடு.”
“அதை இவளைச் சொல்லச் சொல்லுங்க.”
“நான்தான் சொல்றேன்ல. முதல்ல என் பொண்ணு மேல இருந்து கையை எடு.” என்றதும் மெல்லக் கைகளை விலக்க, அவன் கொடுத்த அழுத்தத்தில் இருந்து உடனே மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
வேலையாள்களைத் தொடர்பு கொண்ட பொன்வண்ணன் கிளம்பி வர உத்தரவிட, எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். மாமனாரின் வார்த்தைக்குப் பின் கோபத்தை விட்டவன், “மோதுறதா இருந்தா என்கிட்ட மோது… என் குடும்பத்துப் பக்கம் போகாத. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என அங்கிருந்து சென்று விட்டான்.
“எதுக்கு ரிது இப்படிப் பண்ற? உன்னப் பார்க்க ரொம்பப் புதுசாத் தெரியுது. ஒரு சின்னப் பொண்ணு கால உடைக்கச் சொல்ற. நடந்த பிரச்சினைக்கே இன்னும் ஒரு தீர்வு கிடைக்கல. அதுக்குள்ள புதுப் பிரச்சினையைக் கிளறாத.”
தந்தைக்கு எந்தப் பதிலையும் உரைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தனிமை கொடுக்க எண்ணி நகர்ந்தார். பல மணி நேரங்களுக்குப் பின், தன்னை மீட்டெடுத்துக் கொண்டவள் எதுவும் நடக்காதது போல் மீண்டும் குளித்துவிட்டுக் கிளம்பினாள்.
“கன்னியப்பன் எப்ப வருவான்?”
“உன்கிட்டப் பேச எனக்கு நேரமில்லை.”
“சொல்லிட்டுப் போடி!”
“உனக்கு எதுக்குடா நான் பதில் சொல்லணும்? நீ யாருடா எனக்கு.”
“அப்புறம் எதுக்காக நான் ஆட்டோ ஓட்டக் கூடாதுன்னு நினைக்கிற. யாருன்னு தெரியாதவன் மேல உனக்கு எதுக்கு அக்கறை?”
“அக்கறையா?” என அவன் முகம் நோக்கியவள், “விஷமுள்ள மனசுக்காரிக்கு அக்கறை எங்க இருக்கும்?” என்று விட்டுத் தன் பையைக் கையில் எடுத்தவள் குதிகாலணியை அணிந்துகொண்டு அவன் செவி அலற நடந்தாள்.
அவள் பேசிய வார்த்தையை விட, விழிகளில் தெரிந்த விரக்தி பெரும் யோசனைக்கு ஆளாக்கியது. அத்தோடு நின்றிருந்தவன் காதில், “பணம் இருந்தால் தான் பாசமுள்ளவங்களை எடுத்துப் போடக் கூட முடியும். பணம் இருந்தால் தான் உன் தம்பி, தங்கச்சிங்க மேல நீ எவ்ளோ பாசம் வச்சிருக்கன்னு காட்ட முடியும். பணம் இருந்தால் தான் நீ நீயா இருப்ப, உன்னச் சுத்தி இருக்கவங்க சொந்தக்காரங்களா இருப்பாங்க.” என்றவள் தன்னையே ஆராய்ந்து கொண்டிருக்கும் அந்த விழிகளுக்குள் தொலைய விரும்பாது,
“பணத்துக்காகத் தான்டா, உனக்கும் எனக்குமான இந்தத் திருமணமே நடந்திருக்கு. பணமில்லாத வாழ்க்கை உனக்கும் நரகம் தான், எனக்கும் நரகம் தான். பணத்த வச்சுப் பாசத்தை வாங்கிட முடியும். பாசத்தை வச்சுப் பணத்தை வாங்க முடியுமா?” என்ற கேள்வியோடு அங்கிருந்து விடை பெற்றாள்.
***
சிங்கத்திற்கும், புலிக்கும் திருமணம் ஆகி ஆறு நாள்கள் நிறைவடைந்து விட்டது. இந்த ஆறு நாள்களில், பொன்வண்ணன் தான் நொந்து நூலாகி விட்டார். இருவரும் சரிக்குச் சமமாக அடித்துக் கொள்வதைப் பார்த்தவர் சமாதானம் செய்ய நடுவில் செல்வதை நிறுத்தி விட்டார். அதிலும் நேற்று இரவு நடந்த சம்பவம் மொத்தமாகக் கொண்ட நம்பிக்கையை சரித்து விட்டது.
ஆட்டோவைச் சிறைப்படுத்தி வைத்துக் கொண்டவள், ஓயாமல் வீட்டோடு மாப்பிள்ளை என்று கருடனை வம்பு இழுத்துக் கொண்டிருக்க, பொறுக்க முடியாதவன் நேராக மாமனார் முன்பு நின்றான். அவர் என்னவென்று விசாரிப்பதற்குள்,
“இனி இந்த வீட்ல எந்த வேலைக்காரங்களும், டிரைவர்ஸும் இருக்கக் கூடாது. என் ஆட்டோவைத் திருப்பித் தர வரைக்கும் அவளேதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்.” கடகடவென்று கட்டளையிட்டான்.
“அவ ட்ரைவ் பண்ண மாட்டாப்பா…”
“இவ்ளோ வாய் பேசுற உங்க பொண்ணுக்கு வண்டி ஓட்டத் தெரியாதா?”
மருமகன் முகத்தில் தெரியும் ஏளனத்தைக் கண்டு சிறிதும் வருந்தாதவர், “என் பொண்ணு ரேசர்! அவளை மாதிரி நுணுக்கமா வண்டி ஓட்டுற ஆளைப் பார்க்கவே முடியாது.” என்றதைக் கேட்டவன் தன் முகத்தைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாமல்,
“அப்புறம் என்ன கேடு?” என்றான்.
“அவ கார் ஓட்டிட்டுப் போகும்போது தான், ஆக்சிடென்ட் ஆகி அவ கண்ணு முன்னாடியே என் மூத்த பையன் இறந்தான். அதுல இருந்து அவ கார் ஓட்டுறது இல்லை. அவளுக்கு அந்த சீட்டைப் பார்த்தாலே பயம் வரும்.”
“ஓஹோ!”
“அவளைப் பத்தி உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்றதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன்,
“உங்க பொண்ணு மாதிரி ஒரு ஆளு வண்டி ஓட்டாம இருக்குறதே நல்லது. கூடப் பிறந்தவனையே கொன்னவ, எத்தனைப் பேரைக் கொல்லுவாளோ? நான் சொன்ன மாதிரி எல்லா டிரைவரையும் அனுப்பிடுங்க.” என்று நகர்ந்து விட்டான்.
மருமகன் வார்த்தைக்காகப் பணி அமர்த்திய ஆறு ஓட்டுநர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டார். அதில் ஒருவர் ரிதுவை அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்றிருந்தார். பாதியிலேயே மகளுக்குத் தெரியாமல் கிளம்பச் சொல்லி விட்டார். பணி முடித்து வந்தவள் ஓட்டுநரைக் காணாது அழைப்பு விடுக்க, நடந்த அனைத்தையும் கேட்டுக் குதித்தாள்.
“யாரைக் கேட்டு என் டிரைவரை நிறுத்துனீங்க?”
“என்னைக் கேட்டுத்தான்…”
சத்தம் தனக்குப் பின்னால் வருவதால் திரும்பியவள் நிற்பவனைக் கண்டு, “எல்லாம் உன்னோட வேலை தானாடா ராஸ்கல்.” பல்லைக் கடித்தாள்.
“புத்திசாலி தான்!”
“ச்சீ! உன் பாராட்டு ஒன்னும் எனக்குத் தேவையில்லை. எதுக்குடா இந்த வேலையைப் பார்த்த.”
“என் ஆட்டோவைக் கொடுக்கலன்னா, உன்னோட சலுகை ஒவ்வொன்னும் குறைஞ்சுகிட்டே போகும்.”
“என்னமோ உன் சம்பாத்தியத்துல சொகுசா வாழுற மாதிரி, சலுகையைக் குறைப்பேன்னு சொல்ற. நீயே ஓசில என் சலுகையை அனுபவிக்க வந்தவன் தானடா.”
“இந்த வாய் தான்டி உனக்குப் பெரிய எதிரி. இதைக் குறைக்காம உன் வாழ்க்கை விளங்கவே விளங்காது.”
“அதை நான் பார்த்துக்குறேன். என் விஷயத்துல இருந்து ஒதுங்கி இருக்குற வேலையை மட்டும் நீ பாரு.”
“அது எப்படி ஒதுங்கி இருக்க முடியும்? முறைப்படி இரண்டு தடவை தாலி கட்டி லைசென்ஸ் வாங்கி இருக்கேன்.”
“ஏய்!”
“என் குடும்பத்தை என்கிட்ட இருந்து பிரிச்சுட்ட. எனக்குன்னு இருந்த கன்னியப்பனையும் பறிச்சிட்ட. உன் வீட்ல ஒரு வேலைக்காரன் மாதிரி வச்சிருக்க. இத்தனையும் பண்ண உன்னைச் சும்மா விட, நான் என்ன புள்ளப் பூச்சியாடி. இனி என் ஆட்டத்தை மட்டும் தான் நீ பார்ப்ப. என் தொல்லை தாங்க முடியாம, இந்தாடா உன் ஆட்டோன்னு கையெடுத்துக் கும்பிட்டுட்டு எல்லாத்தையும் நான்தான் பண்ணன்னு போலீஸ்ல போய் சரணடைஞ்சிடுவ.”
“ஹா ஹா! அடப் பகல்கனவு காணுற பைத்தியமே! ஏன்டா உன் மண்டையில கொஞ்சம் கூட மசாலா இல்லையா? என் முன்னாடி செல்லாக் காசா இருக்க நீ…” என்றவள் அவனை நெருங்கி, “நல்லாக் கேட்டுக்கடா, செல்லாக்காசு.” என அசிங்கப்படுத்தினாள்.
“செல்லாக் காசா இருக்கற நீ தான் ஆட்டத்தைக் காட்டப் போறியா? உண்மை என்னன்னு தெரியுற வரைக்கும் தான் இந்த லைசென்ஸ்ல உன் பேரு இருக்கும். அதுவரைக்கும் ஓசில தின்னுட்டுப் போடா.”
“ஆமா, நீதான் கார் ஓட்டிட்டுப் போய் உன் அண்ணனைக் கொன்னுட்டன்னு கேள்விப்பட்டேன், உண்மை தானா? இந்தச் சொத்து மொத்தத்தையும் அனுபவிக்கத் தான அவனைக் கொன்ன? கூடப் பிறந்தவனையே கொன்னுருக்கியே நீயெல்லாம்…”
கட்டியவன் வார்த்தையைக் கேட்டவள், அவன் கைப்பேசியைப் புடுங்கித் தூக்கிப் போட, பல வருடமாகப் பாதி உசுரில் உலாவிக் கொண்டிருந்த அந்தக் கைப்பேசி தன் உயிரை மாய்த்தது. அதுவரை விளையாட்டாக இருந்தவன் உடனே மாறும் வானிலை மாற்றம் போல் முகம் சிவந்து பிடுங்கியவள் கையைப் பிடிக்க, அடுத்த நொடி அவன் முகம் போல் கன்னமும் ஐவிரல் மருதாணியில் சிவந்தது.
ரிதுசதிகாவின் உள்ளங்கையில் எத்தனை ரேகைகள் இருக்கிறது என்று அவன் கன்னத்தை எண்ணியிருந்தால் தெரிந்து கொள்ளலாம். வாங்கிய அடியில் உடல் மொத்தமும் விரைத்து நின்றது. ஆத்திரத்தில் தாடையைக் கடித்துக் கொண்டு, தன்னைப் பார்வையால் தொலைக்கும் அவன் பார்வைக்குச் சிறிதும் அஞ்சாதவள்,
“உன் லிமிட்ல இருந்துக்க.” என விரல் நீட்டினாள்.
அந்த விரலோடு அவளையும் சேர்த்துப் பிடித்து அங்கிருந்த காரில் சாய்த்து நிற்க வைத்தவன், மூக்கு நுனி அனல் காற்றால் பொசுங்கும் அளவிற்கு முறைத்து, “நீதான உன் அண்ணனைக் கொன்ன? உன்ன மாதிரி ஒரு பணப் பிசாசுக்குக் கூடப்பிறந்தவன் கூடத் தொல்லையா தான் தெரிவான். உன் அப்பாவை மட்டும் ஏன் விட்டு வச்சிருக்கன்னு தெரியல. அவரையும் சீக்கிரம் ஏதாச்சும் பண்ணிட்டு இந்த மொத்தப் பணத்தையும் அள்ளி வாயில போட்டுக்க. உன்கிட்ட வந்தாலே பண நாத்தம் தான்டி வீசுது. உன்ன மாதிரி இரக்கமில்லாத பிசாசுக்குப் பயம் எதுக்கு? கொலை பண்ணது தெரியக் கூடாதுன்னு வண்டி ஓட்ட மாட்டேன்னு ஊர நம்ப வச்சுட்டு இருக்க. இன்னைக்கு உன் முகத்திரையைக் கிழிக்கிறேன்.” என அவள் வலது கை தோள்பட்டையில் மாட்டியிருந்த ஸ்லிம் பேகைப் பிடுங்கினான்.
அவன் வார்த்தை ஒவ்வொன்றும், முழுவது நீரை நிரப்பி வைத்து, அதில் தன் தலையை இறுக்கமாக அமுக்கி மூச்சு முட்ட வைத்தது போல் இருந்தது. நன்றாகப் பழுக்க வைத்த இரும்புக் கம்பியை ஈவு இரக்கம் பார்க்காமல் அங்கங்கே தொட்டு எடுத்தது போல் எரிச்சல். கரடு முரடான கற்கள் படிந்த பாதையில் படுக்க வைத்துத் தரதரவென்று இழுத்து வந்த உணர்வில் சிக்கிக் கொண்டவள் அப்படியே உறைந்து நின்றாள்.
தன்னவளின் மனத்தைப் படிக்கத் தவறியவன், “இப்ப எப்படி எதுவுமே இல்லாம நிக்கறியோ, அதே மாதிரிக் கூடிய சீக்கிரம் மொத்தமா நிர்கதியா நிக்க வைப்பேன்.” என்றவன் இருசக்கர வாகனத்தில் மறைந்து விட்டான்.
எப்படியும் அவளிடம் இருந்து ஆட்டோவை வாங்க முடியாது என நன்குணர்ந்து கொண்டவன், வீட்டிலிருந்த பழைய இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து விட்டான். ஆறு நாள்கள் எதுவுமே இல்லாமல் நடையாக நடக்க வைத்தவளை, அதேபோல் நடக்க வைக்கத்தான் இத்தனை நாடகம். மாமனாரிடம் பேசி ஓட்டுநரை நிறுத்தியவன், அவள் தேவைகளை நிரப்பி வைத்திருக்கும் அந்தப் பையையும் வாங்கிக் கொண்டான். கைப்பேசி உட்பட அனைத்தும் அதில் தான் இருக்கிறது.
அவளுக்குச் சொந்தமான அந்த வெள்ளை நிறக் காரும், அவளும் மட்டும் தான் அங்கு நின்றிருந்தார்கள். இரவு ஏழு மணி ஆகிவிட்டதால், அவள் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் அனைவரும் கிளம்பினார்கள். வரும் அனைவரின் முன்பும், கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அழகு பொம்மை போல் தன்னைக் காட்சிப்படுத்திக் கொண்டாள் ரிதுசதிகா.
என்றும் தங்கள் முதலாளியின் முகத்தில் தெரியும் கர்வம், இன்றுக் காணாமல் போய் இருப்பதை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே அனைவரும் கிளம்ப, இன்னும் அவன் கொடுத்த திகைப்பிலிருந்து மீளவில்லை. தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த நாளுக்குச் சென்றது அவள் நினைவு. அங்கிருந்த காவலாளி, ஒரு மணி நேரமாகத் தங்கள் முதலாளி அங்கே நிற்பதைக் கண்டு,
“மேடம்!” என நிகழ்வுக்குக் கொண்டு வந்தார்.
“ரொம்ப நேரமா இங்கயே நின்னுட்டு இருக்கீங்க, ஏதாச்சும் பிரச்சினையா?”
“ரொம்ப நேரமா…” என நேரத்தைப் பார்த்த பின்பு தான் நிகழ்வை உணர்ந்தாள்.
தனக்குக் கீழ் பணி புரிபவரிடம், தன் நிலையைக் கூற விரும்பாதவள் யாரிடமும் உதவி கேட்கவும் விரும்பவில்லை. இங்கிருந்து நடையாக நடந்தால் கூட ஏழு மணி நேரமாகும் அவள் வீட்டிற்குச் செல்ல. தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் காவலாளியைப் பார்வையால் விலகிச் செல்ல வைத்தவள், அங்கு நிற்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
அவள் தகுதியும், சுய கௌரவமும் அங்கு நிற்கத் தடை விதித்தது. அவன் விட்டுச் சென்ற கார் மட்டுமே வீட்டிற்குச் செல்ல ஒரே வழி. ஆனால், உடல் நடுங்கியது, அதில் ஏறி அமர. அவள் உடன்பிறந்தவன் மறைந்து பல மாதங்கள் ஆன பின்புதான் காரைப் பார்க்கவே தைரியம் வந்தது. பொன்வண்ணனின் ஆதரவால் மெல்ல இயல்புக்கு மீண்டவள், தங்கள் வாழ்க்கைக்காக அதில் பயணிக்கும் அளவிற்கு மாறினாளே தவிர, ஓட்டுநர் இருக்கையில் அமரும் அளவிற்குத் தேறவில்லை.
இரும்பு மனிதியாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டவள் மனத்திற்குள் சின்னப் பூ ஒன்று இருக்கிறது. அதைக் கருடேந்திரன் எனும் காற்று மொத்தமாக அடித்து வீழ்த்தியது. தோல்வியை ஒத்துக்கொள்ள விரும்பாது, கார்க்கதவைத் திறந்தவளுக்குப் பயம் எனும் அரக்கன் கண் முன் தெரிந்தான். வேகமாக அதைச் சாற்றி விட்டுத் திரும்பியவள் பார்வையில் அந்தக் காவலாளி. அவர் பார்வையும், தன்னை எடை போடும் எண்ணத்தையும் புரிந்து கொண்டவள் மூச்சை இழுத்து விட்டுக் காரில் ஏறி அமர்ந்தாள்.
எடுத்ததுமே அசுர வேகத்தில் அதை இயக்கியவள், கண்மண் தெரியாமல் ஓட்ட ஆரம்பித்தாள். உடன் பிறந்தவனின் அலறல் சத்தம் பின் தொடர்ந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலைக்கு வரும் வரை பின் தொடர்ந்த அந்தச் சத்தம், இதயத்திற்குள் நுழைந்து இதயத்திற்குக் கை கால்களாக இருக்கும் ரத்தக்குழாய்களைப் பிடுங்கிப் போட்டது. அன்று அவன் அண்ணன் தேகத்திலிருந்து பீய்ச்சி அடித்த ரத்தம் போல், இவள் இதயத்தில் இருந்த ரத்தம் பிய்த்துக் கொண்டு சிதறியது.
அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாதவள் மெல்லக் கண் சோர ஆரம்பித்தாள். தன் மன நிலையை உணர்ந்து கொண்டவள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தவரை போராடிக் கொண்டிருக்க, உணர்வுகள் ஒத்துழைக்க மறுத்தது. தன் கதை இத்துடன் முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்தவள், எதிரில் வரும் எந்த உயிருக்கும் எந்தச் சேதாரமும் நடக்கக்கூடாது என்ற வேண்டுதலோடு கண் மூடினாள்.
கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 8
written by Competition writers
அத்தியாயம் 8
ராஜனும் கீதாவும் இருவருக்கும் கல்யாணம் நடந்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். மாலை ஆனதும் கீதா தான் கிளம்புவதாகக் கூறினார். ஆனால் ராஜன் இங்கேயே இருக்க சொல்லினார். அதற்கு அவர் இல்லை நான் டிரீட்மண்ட்காக மும்பை போகனும்னு சொல்றாங்க. உடனே அவரும் இங்கேயே இருந்துப் பார்க்க முடியாதா என்று கேட்கிறார்.
இங்கேயே இருந்தால் கவி உங்கள் கூட எல்லாம் சரியாக பேசிக் கொள்ள மாட்டாள். அதனால் நான் போறேன் என்று சொன்னார். சரிம்மா உன் விருப்பம் கவிக்கிட்ட போய் பேசு என்று அனுப்பி வைக்கிறார். கீதாவும் கவி இருக்கும் அறைக்குச் சென்று பார்க்கிறார். அங்கே கவி ஏதோ யோசனையிலே அமர்ந்து இருந்தாள்.
கீதாவும் அவளிடம் சென்று கவி நான் போறேன் இனிமே நீதான் இங்கே இவர்களைப் பார்த்துக்கணும். என்ன பிரச்சினை வந்தாலும் இந்த வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது சரியா என்று கூறினார். அவள் ஏன் அம்மா அதற்குள் போறீங்க இங்கே எனக்கு யாரையுமே தெரியாது நீங்களும் போறேன் சொல்றிங்க அப்படின்னு சொல்றா.
கவி நீ எவ்வளவு தைரியமான பொண்ணு இங்கே இருக்கவங்க எல்லாரும் உன் சொந்தம் தான் அதனால் நீதான் அவங்களோட பேசிப் பழகணும் அப்புறம் நான் டிரீட்மண்ட் போணும் ல அதனால நான் போறேன் அப்படின்னு கீதா சொல்லிட்டு இரண்டு பேரும் வெளியே வராங்க. அப்புறம் சேரனிடமும் அவ டக்குன்னு பழக மாட்டாப்பா கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று சொல்றார்.
சேரனும் சரி என்று சொன்னான். சோழன் எங்கே நான் சொல்லிட்டு கிளம்பறேன் என்று கேட்டார். உடனே ராஜனும் சேரனை அனுப்பி அவசர வர சொன்னார். சேரனும் சென்று தன் அண்ணனை அழைத்து வந்தான். சோழன் தான் இப்போ எதுக்கு என்ன கூப்பிடுறாங்க அதான் அவங்க நினைச்ச மாதிரி எல்லாமே நடந்துருச்சே அப்படின்னு கோவத்தில் வந்தான்.
சோழன் வந்ததும் கீதா அவனிடம் சென்று கவி ரொம்ப நல்ல பொண்ணு தம்பி. அவளுக்கு என்ன வேண்டும் என்று சொல்லக் கூட மாட்டாள். சிட்டில வளர்ந்த பொண்ணு இப்படிலாம் வில்லேஜ் பக்கம் வந்தது இல்லை இது எல்லாம் அவளுக்கு புதுசு. அங்கேயும் அவளுக்கு ஃபிரண்ட்ஸ்னு யாரும் இல்லை. யாருடையும் டக்குன்னு பழக மாட்டாள் தம்பி நீங்க அவளை நல்லா பார்த்துப்பிங்க என்று தான் அவளை விட்டுட்டு போறேன் பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு கிளம்புறார்.
அவர் பேசியதற்கு சோழன் எந்த பதிலும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினான். ராஜன் தான் நாங்க கவியை நல்ல படியாக பார்த்துப்போம் நீங்க கவலைப் படாமல் போய்ட்டு வாங்க என்று சொன்னார். அப்புறம் அனைவரும் சென்று கீதாவையும் ராமையும் அனுப்பி வைக்க வீட்டிற்கு வெளியே சென்றனர். கவி தான் கண்ணீர் கண்ணத்தைத் தாண்டிப் போவதைக் கூட கண்டுக் கொள்ளாமல் கீதாவை கட்டி அணைத்து அழுதாள்.
கீதாவும் நீ எப்போதும் சந்தோஷமாக இருக்கணும் கவி அப்படின்னு சொல்லிட்டு அவளோட கையை சோழனின் கையில் சேர்த்து வைத்து விட்டு சென்றார். பின்னர் இருவரும் காரில் ஏறிக் கொண்டு கிளம்பினர். கீதா இருவரின் கைகளையும் பார்த்து விட்டு மகிழ்ச்சியாகச் சென்றார். கார் சாலையை விட்டு மறையும் வரை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள் கவி.
ராஜன் தான் உள்ளே போலாம் மா என்று அழைத்தார். பின்னர் தான் இருவரும் கையைப் பிரித்தனர். சோழன் முதலில் உள்ளே சென்று விட்டான். கவியும் மற்றவர்களும் பின்னர் சென்றனர். கவியிடம் ராஜன் இது உன் வீடும்மா நீ இங்கே உன் விருப்பப்படி இருக்கலாம். அம்மாவ பாக்கணும்னா எபபோனாலும் சொல்லு நான் அவனை கூட்டிட்டுப் போக சொல்றேன் சொல்றார். அவளும் சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
இரவு 8 ஆனதும் சாப்பிட எல்லாரும் வந்தனர். அமைதியாக அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். சோழன் மட்டும் சீக்கிரமாக சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு சென்று விட்டான். கவிக்கு சாப்பாடு தொண்டையைத் தாண்டி இறங்கவில்லை. அவளும் ஏதோ சாப்பிட்டேன் என்று எழுந்து முன் இருந்த அறைக்கு சென்று விட்டாள்.
கொஞ்சம் நேரம் ஆனதும் உறவுக்கார பெண் ஒருவர் வந்து கவியைக் குளித்து விட்டு ஒரு புடவையை கட்டிக்கொண்டு வர சொன்னார். அவளும் குளித்து ரெடியாகி வெளியே வந்தாள். வெளியே அனைவரும் உறங்க சென்று விட்டனர். அவளிடம் ஒரு சொம்பு நிறைய பால் கொடுத்து மேலே இருக்கும் முதல் அறைக்கு சென்று விட்டுட்டு சென்று விட்டார்.
அங்கே கதவின் அருகே நின்று கதவைத் தட்டினாள் கவி. சோழன் வந்து கதவைத் திறந்து விட்டான். இவளும் உள்ளே சென்றாள். அங்கு முதலிரவிற்கான எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் அறையே சுத்தமாக இருந்தது. ஏனெனில் அனைத்துமே இவன் தான் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டிருந்தான். அவன் இவளைப் பார்த்து விட்டு ஒரு போர்வையும் தலையணையும் கொண்டு வந்து சோஃபாவில் வைத்து விட்டு சென்று முதுகைக் காட்டிக் கொண்டு படுத்து விட்டான்.
கவியும் அவனையும் சோஃபாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சொம்பைக் கொண்டு போய் டேபிளில் வைத்து விட்டு வந்து அமர்ந்தாள். பின்னர் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் திரும்பியும் பார்க்கவில்லை. அவளும் விளக்கை எல்லாம் அணைத்து விட்டு வந்து படுத்து விட்டாள். டிராவல் செய்து வந்த அசதியில் படுத்ததும் தூங்கி விட்டாள்.
ஆனால் சோழனுக்கு தான் தன் அறையில் ஒரு பெண் இருக்கிறாள் என்றதும் தூக்கமே வரவில்லை. அப்புறம் அவனும் சிறிது நேரத்தில் அப்படியே தூங்கி விட்டான்.
அதிகாலையிலேயே ஒரு ஃபோன் கால் வந்தது. அதில் கூறிய செய்தியில் அதிர்ந்து நின்றார் ராஜன்.
அப்படி என்ன செய்தியாக இருக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
6. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 6
“யூ… யூ ராஸ்கல்… ஐ கில் யூ” என நீருக்குள் இருந்த மீன் தவறித் தரையில் விழுந்து குதித்தது போல் குதித்துக் கொண்டிருந்தாள்.
அதைத் தாலி கட்டியவனோ, ஏதோ குரங்கு வித்தை காட்டுவது போல் பல்லை இளித்துக் கொண்டு பார்த்திருந்தான். அவன் பார்வையும், சிரிப்பும் அடிவயிற்றைக் கபகபவென்று எரிய வைத்தது. அந்த நெருப்பின் எரிச்சலைத் தாங்கிக் கொள்ள முடியாத பழங்களுக்கு நடுவில் மறைந்திருந்த கத்தியை உருவி எடுத்து,
“நாளைக் காலையில நீ செத்துட்டன்ற நியூஸ் தான்டா இந்தத் தமிழ்நாட்டையே யோசிக்க வைக்கப் போகுது.” அவன் வயிற்றில் குத்துவதற்காக ஓடினாள்.
அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவனுக்குக் கதி கலங்கியது. அவற்றைப் பார்வையில் காட்டினால் அவளின் ஆக்ரோஷம் அதிகமாகிவிடும் என்பதால், சுதாரிப்போடு நின்றிருந்தவன் தன் வயிற்றின் மேலிருக்கும் ஆடையை உரசிக்கொண்டு கத்தி வந்ததும் பாய்ந்து அவள் கையைப் பிடித்தான்.
“கைய விட்டின்னா ஒரே குத்துல சாவடிச்சிடுவேன். இல்ல உடம்பு முழுக்கக் குத்திக் குத்திச் சாவடிப்பேன்டா.”
“ஹேய்! இது அதுல்ல!” கேலி செய்து திசை திருப்பப் பார்த்தான்.
அவன் எண்ணத்தை அறியாதவள் குத்தும் செயலை நிறுத்திவிட்டு, “எதுடா?” எனச் சிடுமூஞ்சியைக் காட்டினாள்.
“அதான்டி! ஒரு நாளைக்கு ஒரு டிவி ஷோல ஐஸ்கிரீமைக் குத்திக் குத்திப் பார்த்துச் சாப்பிடுவன்னு உன்ன மாதிரியே ஒரு கிறுக்கி சொல்லிக்கிட்டு இருந்துச்சே, அதோட ஃபபேனா நீ”
“என்னடா பேசுற பைத்தியக்கார! உன் குடலை உருவிச் சாவடிக்கப் போறன்னு சொல்றேன், கொஞ்சம் கூடப் பயம் இல்லாம நக்கல் அடிக்கிற.”
“உன் கழுத்துல எனக்கு ஆறு முடிச்சுப் போட்டனோ, அன்னைக்கே நான் செத்துட்டேன். இந்த உடம்பு என் குடும்பத்துக்காக மட்டும் தான் இருக்கு. குத்தி என்ன பண்ணப் போற?” என்றவன் அவள் கைகள் தளறுவதை நன்கு உணர்ந்தான்.
எண்ணம் எளிதாக முடிந்தது, அவளைப் பிடித்திருந்த கையில் இறுக்கத்தைக் கூட்டிக் கத்தியை உருவும் செயலில் கண்ணும் கருத்துமாக கருடேந்திரன் இருக்க, “பரவால்ல, செத்த உடம்பா இருந்தாலும் திரும்பச் சாவு… இப்படி ஒருத்தன் பிணமாய் கூட என் வீட்ல இருக்கக் கூடாது.” எனத் தோல்வியின் பக்கம் சென்று கொண்டிருந்தாள்.
“அப்போ, குத்தத்தான் போற.”
“ஆமாடா நாயே!”
“சரிடி பேயே!”
“ஏய்! மரியாதையா பேசுடா…”
“அதை முதல்ல நீ ஃபாலோ பண்ணுடி களவாணி.”
“நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளு, உனக்கு மரியாதை ஒரு கேடு.” எனக் காரித் துப்ப முகத்தைத் திருப்பியவளின் கழுத்து சுளுக்கிக் கொண்டது.
கழுத்தை ஒரே வளையாக வளைத்தவன், “ஆம்பளை ஹேர்கட் வச்சிருந்தா, நீ பெரிய கபாலியா? மூஞ்சியும், மொகரையும் பாரு. என்னையவா குத்த வர, இருடி! நடுமண்டையில நச்சுன்னு கத்தியச் சொருகுறேன்.” என அவள் கையில் இருந்த கத்தியை லாவகமாகப் பிடுங்கினான்.
கழுத்தைத் திருப்ப முடியாது நொந்து போனவள் கத்தியை அவன் கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட, அவன் சொன்ன வார்த்தை உச்சி மண்டையில் சொருகியது பயத்தைக் கொடுத்தது. பயத்தில் விழிகளைச் சுழற்றி, அஞ்சிக் கொண்டிருக்கும் தைரியசாலி மனைவியைக் கண்டவன்,
“கொஞ்சமாச்சும் புத்தி இருந்தா தான மண்டையில மசுரு முளைக்கும். வளராத முடியை வெட்டிவிட்டு, எனக்கு திமிர் ஜாஸ்தின்னு பந்தா வேற.” என்றான் கேலியாக.
“என் கழுத்தை என்னடா பண்ண நாயே?”
“என்ன?”
“என் கழுத்தை என்னடா பண்ண நாயேன்னு கேக்குறேன்டா நாயே…” என்றதும் தான் தாமதம், சுளுக்கிப் போயிருந்த கழுத்தின் மற்றொரு புறத்தில் முள் எனும் பற்களால். கடித்தான்.
ஒரே நேரத்தில், இடதுபுறக் கழுத்தின் பக்கம் ஆயிரம் முள்கள் ஒன்றாகக் குத்தியது போல் அலறித் துடித்தவளுக்குச் சரியானது. அதைக் கூட உணராது, கடித்த பல் தடத்தின் மீது கை விரல்களை அழுத்தமாக வைத்தவள் துள்ளிக் குதித்தாள். அதையும் அவன் குரங்கு ஆடுவது போல் சாவகாசமாகப் பார்த்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான்.
“பொறுக்கி நாயே, ஏன்டா கடிச்ச?”
“நாய் கடிக்கத்தான் செய்யும்!”
“நாயே… அதுக்கு இப்படியாடா கடிச்சு வைப்ப…” என்றவளை ஒரே இழுப்பில் தன்மீது சரிய வைத்தவன், மெத்தையில் தள்ளிச் சுளுக்குப் பிடித்த கழுத்தின் பக்கம் பல். தடங்களைப் பதித்தான்.
“ஆ… ஹே… அம்மா…” என அவள் எவ்வளவு கத்தியும் பலனில்லாமல் போனது.
ஒரு கட்டத்திற்கு மேல் வலி பொறுக்க முடியவில்லை ரிதுவால். விழிகளின் விளிம்பில், ஒரு துளிக் கண்ணீர் தேங்கி நின்றது. அதை அறியாதவன் தன் ஆத்திரம் முழுவதையும் காட்டிவிட்டு,
“எதைக் கேவலம்னு சொல்லி என்னைக் குத்திக் காட்டுறியோ, அதுக்குக் கோவம் வந்தா உன் உடம்பு தாங்காது. வைக்கிறதும் உன் பாம்புநாக்கு கைல தான்டி இருக்கு.” என்றான்.
அதற்குமேல், ரிதுசதிகா என்னும் சூறாவளி அமைதி காப்பதாக இல்லை. வலி போகும் வரை தன்னைப் பொறுக்கச் செய்தவள், எழுந்து நின்று அவன் மூக்கில் ஒரு குத்து விட, மொத்த மூளையும் உருகி மூக்கு வழியாக வந்தது போல் இருந்தது. கருடேந்திரனுக்கு. சிவப்பு நிறச் சாயம் வழிவதைக் கண்டு பதறியவன் கழிவறைக்கு ஓட,
“எங்கடா போற?” என இழுத்துப் பிடித்து மெத்தையில் தள்ளினாள்.
“இந்த வயலன்ஸ் வேலையெல்லாம் இந்த ரிது கிட்ட ஆகாது. கராட்டெல்லாம் கரகாட்டம் ஆடுற மாதிரி எனக்கு. பணக்காரி தான, பஞ்சுமெத்த மாதிரி இருப்பான்னு நெருங்கிடாத. தூக்கி அடிச்சேன், ஒன்னுக்குப் போகக் கூட எந்திரிக்க முடியாது.”
விடாமல் இரத்தம் சிந்திக் கொண்டிருக்க மயக்கம் வருவது போல் இருந்தது. அதை எப்படியோ கட்டுப்படுத்தியவன், பெயருக்கென்று சிறிதாக வளர்ந்திருக்கும் அந்த முடிகளைக் கைக்குள் சுருட்டி, “பொண்ணா நீ! சரியான பஜாரிக்குப் பொறந்தான். பஜாரியா இருப்ப போல.” எனத் தலையைச் சுழற்ற,
“எங்க அம்மாவப் பத்திப் பேசாதடா” என எச்சரித்தாள்.
“அப்படித்தான்டி பேசுவேன். உன்ன உங்க அம்மா சரியா வளர்த்திருந்தா, இப்படிப் பஜாரி மாதிரி ஆடிட்டு இருக்க மாட்ட. எந்த ஹேங்கில்ல உங்கப்பனுக்கு நீ பொண்ணு. மாதிரித் தெரியுறன்னு இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்காரு.”
பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வலது காலை அவன் இரு கால்களுக்கு நடுவில் வைத்தாள். ஒரு கையை அவன் இடையோடு சுற்றிக்கொண்டு, மறுகையால் அவன் கழுத்தை வளைத்து நடுமுதுகில் கை முட்டியால் ஓங்கிக் குத்த, சர்வமும் அடங்கிப் போனது அவளின் கணவனுக்கு. பிடித்திருந்த முடியை விட்டவன், கண்ணெல்லாம் இருந்து போய் தொப்பென்று அமர்ந்தான்.
“இதைத்தான்டா சொல்லுவாங்க, எங்கயோ போற மாரியாத்தா… இவனக் கொஞ்சம் என்னன்னு கேளாத்தான்னு. வார்னிங் கொடுத்தும் திருந்த மாட்டல்ல. நீ இன்னைக்கு எப்படித் தூங்குறன்னு பார்க்கிறேன்டா.”
அவளைப் போல் அவள் கால்களுக்கு நடுவில் இரு கால்களையும் நுழைத்தான். இடையில் கை நுழைத்து இழுத்த கருடன், அவள் பாரம் தாங்காது தரையில் விழுந்தான். அவனுடன் எந்தச் சேதாரமும் இல்லாமல் கணவன் மீது சரிந்தவள் விலகப் பார்த்தாள். சிறிதும் இடம் தராதவன் சேர்த்தணைத்துக் கொண்டு, அவளைத் தரையில் படுக்க வைத்து உரசாமல் கைகளை ஊன்றிப் படுத்திருந்தான்.
ரிதுசதிகா தரையில் படுத்துக் கொண்டு பார்வையால் எரிக்க, “ராத்திரியெல்லாம் தூங்காம நான் தூங்குற அழகைப் பார்க்கப் போறியா?” குறும்புடன் கேட்டதும்,
“இவர் பெரிய மன்மதக்குஞ்சு! தூங்குற அழகைப் பார்க்கப் போறாங்க.” என முகத்தைச் சுழித்தாள்.
“உன் முகரக் கட்டைக்கு மன்மதன் ஒரு கேடு!”
“எனக்கு என்னடா?”
கண்ணியமாக அவள் விழிகளை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்தவன், பார்வையைக் கீழே தாழ்த்தி மேலே கொண்டு வந்து, “ஒருத்தன் உருண்டு பிறந்து, பேண்ட்குள்ள கையை விட்டு இழுத்துப் படுக்கவச்சு இப்படிப் பேசிட்டு இருக்கான், கொஞ்சம் கூடச் சொரணை இல்லாம எருமை மாடு மாதிரிப் படுத்திருக்க. இந்த லட்சணத்துல மன்மதன் வந்து என்ன கிழிக்கப் போற? உன் இடத்துல வேற எந்த பொண்ணாவது இருந்தா, இந்நேரம் ஃபஸ்ட் நைட்ட முடிச்சிருப்பா…” எனக் கிசுகிசுத்தான்.
பொங்கி வரும் ஆத்திரத்தை அடக்க முடியாமல், வாய்க்குள் சுரந்த அனைத்து எச்சிலையும் குவித்து அப்படியே அவன் முகத்தில் இடம் மாற்றி, “எந்திரிடா…” என்றாள்.
சிறிதும் சலித்துக் கொள்ளாமல் அவள் கொடுத்த எச்சிலை அவள் முகத்திற்கே மாற்றினான் உரசி.
தன் முகத்தோடு முகம் உரசியவன் நெருக்கத்தை வெறுத்தாள். இரு முகத்திற்கும் நடுவில் உலாவிக் கொண்டிருக்கும் எச்சிலால், உச்சகட்ட அருவருப்பிற்கு ஆளானவள் தள்ளிவிட்டு, “வெளிய போடா” கத்தினாள்.
“நான் எதுக்காகப் போகணும்? உங்க அப்பாதான் என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுன்னு கல்யாணம் பண்ணி வச்சாரு.’ நீதான் புடிக்கலனாலும் பரவால்ல. என்கூடவே இருன்னு இங்க கூட்டிட்டு வந்த. நான் இங்கதான் இருப்பேன். உனக்குப் பிடிக்கலைன்னா நீ வேற ரூமுக்கு…” என இழுத்தவன் அவளுக்கு நேராக விரல் நீட்டி,
“தெருவுல போய் படுடி களவாணி!” என்றான்.
“வெளிய போன்னு சொல்லிட்டேன்.”
“முடியாதுன்னு நானும் சொல்லிட்டேன்.”
“இது என்னோட வீடு, நான் சொல்றதைத் தான் நீ கேட்கணும்.”
“அது நான் வராத வரைக்கும். இனிமே இது என்னோட வீடு!” என்றவன் முழு உடலையும் மெத்தையில் ஒட்ட வைத்து, கால்களை அகலமாக வீசிச் சுதந்திரமாகப் படுத்தான்.
“சொல்லிட்டே இருக்கேன், படுக்கவா செய்யுற?”
மூக்கு விதைக்க முறைத்து, அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து அவன் மீது ஊற்ற, “அய்யய்ய! பெரிய இம்சைடி நீ. இதுக்கு மேல உன்கிட்டப் பேச இந்த உடம்புல எனர்ஜி இல்லை.” என முகத்தைத் துடைத்து எழுந்தவன் அவளே அதிரும்படி ஒன்றைச் செய்தான்.
உன் போல் தனக்கு எந்த அதிர்வும் இல்லை என்று இரு கைகளால் அவளைத் தாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தவன், நேராகப் பொன்வண்ணன் அறைமுன் நின்று,
“மாமனாரே… யோவ்! கேக்குதா இல்லையா? இந்த ராட்சசியைப் பெத்த என் மாமனாரே! வெளிய எழுந்து வாயா. நைசா இந்தப் பிசாசை என் தலையில கட்டிட்டு நிம்மதியாத் தூங்குற…” அறைக் கதவைக் காலால் உதைக்க ஆரம்பித்தான்.
காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டிருக்கும் மனைவியின் பேச்சைச் சிறிதும் காதில் வாங்காதவன், “யோவ்! வெளிய வாய்யா…” என்றிட கதவைத் திறந்தார்.
ஏதோ தலையணையை நீட்டுவது போல் கட்டியவளை அவருக்கு முன்பாக நீட்டியவன், “இது தொல்லை கொஞ்சம் கூடத் தாங்க முடியல. வருஷம் இது கூடக் குப்பை கொட்டுனியோ? இத்தனை வருஷம் கொட்டுன மாதிரி இன்னிக்கு ராத்திரியும் தூங்கி எந்திரிச்சுத் தோல. காலையில வந்து இந்தப் பிசாசைக் கூட்டிட்டுப் போறேன்.” என்றவன் மாமனார் பேசுவதைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மனைவியை உள்ளே தள்ளிவிட்டு,
“குட் நைட் டி களவாணி!” என நடையைத் திருப்பினான்.
இரவு எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும், சரியாக எழும் நேரத்துக்கு எழுந்து விட்டான் கருடேந்திரன். எப்போது கண் விழித்தாலும் எதிரில் இருக்கும் குடும்பப் புகைப்படம் தான் வரவேற்கும். இன்று யார் என்று தெரியாதவள் வீட்டில், குடும்பத்தை இழந்து கண் விழித்திருக்கிறான். இயல்பை ஒத்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது அவனுக்கு. பெருமூச்சோடு எழுந்தவனுக்கு எல்லாம் புதிதாக இருந்தது.
இந்தப் புதிய சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை என்றாலும், தன்னைப் புகுத்திக் கொண்டான் வலுக்கட்டாயமாக. அன்னையின் மனம் மாறும் வரை இங்குதான் இருக்க வேண்டும் என்ற நிலையை எண்ணி வருந்திக் கொண்டே கிளம்பியவன் கதவைத் திறக்க, நின்று கொண்டிருந்தாள் ரிது சதிகா.
மனையாளைச் சற்றும் எதிர் பார்க்காதவன், ஒரு நொடி திகைத்துப் பின் தெளிந்து, “பேய் மாதிரி வந்து நிக்கிற. காலங்காத்தால உன் மூஞ்சியப் பார்த்துட்டுப் போனா. தொழில் என்ன ஆகுறது?” என்றவன் நெஞ்சில் கை வைத்தவள்,
“ஆட்டோக்காரனுக்கு எப்படியும் அஞ்சோ பத்தோ தான் கிடைக்கப் போகுது. இதுக்கு எதுக்குடா இவ்ளோ பேச்சு?” எனத் தள்ளி விட்டு உள்ளே நுழைந்தாள்.
“எதுவா இருந்தாலும் உழைச்சுச் சாப்பிடுறேன். உன்னை மாதிரி அப்பன் காசுல வாழல.”
“எனக்கு இருக்கு, நான் சாப்பிடுறேன். உங்க அப்பா சம்பாதிச்சுப் போட்டு தான நீ படிச்ச. நீயா சுயமா முளைச்சிடலையே.”
“ஒரு வயசுக்கு மேல என் சொந்தக்கால்ல தான் நான் நிக்கிறேன்.”
“நல்லாப் பாருடா, நானும் என் சொந்தக்கால்ல தான் நிக்கிறேன்.”
“காலங்காத்தால ஏண்டி என்கிட்ட வம்பு பண்ற?”
“இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள சலிச்சுக்கிற.”
“ச்சீ ப்பே…”
வீட்டை விட்டு வெளியேறும் வரை பொறுமையாகக் கைகட்டிக் கொண்டு நின்றிருந்தவள், “எங்கடா போற?” அதிகாரமாகக் கேட்டாள்.
“தெரிஞ்சு என்ன பண்ணப் போற?”
“அட, சும்மா சொல்லு.”
“சவாரிக்குப் போறேன்.”
“சரி போ…”
“நீ என்னடி போன்னு சொல்றது?”
“எப்படியும் மூஞ்சக் கடுகடுன்னு வச்சுக்கிட்டுப் போன வேகத்துல வரப் போற. அதைத் தெரிஞ்சுதான் எதுவும் பேசாம, போயிட்டு வான்னு வழி அனுப்புது. வைக்கிறேன்.”
கட்டியவளின் வார்த்தைக்கு பின் அர்த்தம் புரியாது, முறைத்துக் கொண்டு தன் வீட்டிற்குக் கிளம்பினான். வரும் வரை இல்லாத தயக்கம் வீட்டு வாசலில் நின்றதும் உண்டாக, எப்போதும் அதிகாலை எழுந்து கிளம்பும் மகனுக்காகத் தேநீர் கோப்பையோடு நிற்பார். அன்னையின் சிரித்த முகமும், சுவையான டீயும் தான் அவனின் உற்சாகம்.
அந்த நினைவோடு எழுந்த சரளா, வாசல் தெளித்துக் கோலம் போடுவதற்காகக் கதவைத் திறக்க, அன்னைக்காக நின்று கொண்டிருந்தவன் அழகாகப் புன்னகைத்தான். மகனைப் பார்த்ததும் சடசடவென்று கண்ணீர் சுரந்தாலும்,
“இங்க எதுக்குடா வந்த?” கேட்டார்.
“நான் இங்க வரக்கூடாதாம்மா?”
“உன் பொண்டாட்டி இல்லாம வரக்கூடாது.”
“அவளுக்கும், நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? நம்ம இந்த நிலைமையில இருக்குறதுக்கு அவ மட்டும்தான் காரணம். அவளுக்காக என்னை ஒதுக்கி வைக்கிறீங்க.”
“அவ இப்ப இந்த வீட்டோட மருமகள். புள்ள மட்டும் போதும்னு நினைக்கிற மாமியார் நான் இல்ல. சரியோ தப்போ, என் புள்ளைக்குப் பொண்டாட்டின்னு ஆகிட்டா. அவளை மையப்படுத்தி தான் நம்ம எல்லாரோட உறவும் இருக்கு. அது எனக்கும் நிலைக்கனும்னு தான் அவளோட உன்னை வரச் சொல்றேன்.”
“நீ நினைக்கிற மாதிரி அவ இல்லம்மா. அவளுக்கும் நமக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. அப்படிப்பட்டவ இங்க வந்து வாழ்வான்னு எப்படி நினைக்கிற?”
“எல்லாம் உன் மேல இருக்க நம்பிக்கைதான். இதுவரைக்கும், எந்தச் சூழ்நிலையிலும் உன் மேல வச்ச நம்பிக்கையை நீ தோற்கடிச்சதே இல்லை.” என்றவர் கவலை படித்த முகத்தோடு,
“வலுக்கட்டாயமா அவளுக்குத் தாலி கட்டுனதைத் தவிர.” என்றார்.
அன்னை முன் தலை குனிந்து நின்றவன், “சாரிம்மா… ஏன் அப்படிப் பண்றேன்னு இப்ப வரைக்கும் புரியல. தெரியாமல் பண்ற தப்புக்கு இவ்ளோ பெரிய தண்டனையைக் கொடுக்குறீங்களே.” என்றான்.
“தெரியாமப் பண்ணாலும் அவதான் இனி உன் வாழ்க்கை. நான் எனக்கு வேணா உன் வாழ்க்கையை விட்டுப் போகலாம் கருடா. ஆனா, அவதான் உன் கூட கடைசியா. வரைக்கும் வரப்போறா… அப்படிப்பட்ட உறவை நல்லபடியா வச்சுக்கோன்னு சொல்றேன்.”
“சரி விடும்மா. அதெல்லாம் அப்புறம் பார்த்து. நேத்துல இருந்து ஒண்ணுமே சாப்பிடல, கொஞ்சம் டீ தரியா…” என்று கேட்டேன் அந்தத் தாயின் வயிறு பிரசவ வலிக்கு. ஈடான பன்மடங்கு வலியை உணர்ந்தது.
இந்த முறை வந்த கண்ணீரை மறைக்காது, மகன் முன்பு படம் போட்டுக் காட்டியவர், “என் மகன் வாழ்க்கைக்காகத்தான் இந்தப் பிரிவு. கொஞ்ச நாள் கஷ்டப்பட்டா வாழ்க்கை. முழுக்க நல்லா இருக்கலாம். அம்மா சொல்றதை இப்பவாவது கேட்டு நடந்துக்க…” எனச் சொல்லாமல் சொன்னார்.
தன் முகம் பார்த்தால் அன்னையின் மனம் கரைந்து விடும் என்ற எதிர்பார்ப்போடு வந்தவன், முழுவதும் தோற்றுப்போய் விரக்தியான புன்னகையோடு, “எனக்காக இல்லனாலும் என் அம்மாவுக்காக அவளை இங்க கூட்டிட்டு வருவேன்.” என்று விட்டுக் கிளம்பியவன் மீண்டும் அன்னையின் முகத்தைப் பார்த்து, “ஒன்னு மட்டும் சொல்றேம்மா. இப்போ உங்க மகன் ரொம்பக் கஷ்டப்படுறான். இந்தக் கஷ்டத்துக்கு நீங்களும் ஒரு காரணம். இனி நீங்களே பேசினாலும் உங்ககிட்ட நான் பேசமாட்டேன்.” என்று விட்டு வெளியேறினான்.
கதவைச் சாற்றிய சரளா, கண்ணீரோடு அறைக்கு ஓடிவிட்டார். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சத்தியராஜ் மனைவியின் தலை வருடி, “எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.” என்றிட,
“என் புள்ள பசிக்குதுன்னு சொல்லிட்டுப் போறாங்க. பெத்தவளா அந்த வார்த்தையைத் தாங்க முடியல. அப்படி என்னங்க பெரிய பாவத்தைப் பண்ணிட்டேன்… பெத்த ரெண்டும் அங்கயும், இங்கயும் இருந்து கஷ்டப்படுத்துறானுங்க.” என மனம் விட்டு அழுதார்.
அவனது ஆட்டோ இரண்டு தெரு தள்ளி நின்றிருக்கும். இவன் இருக்கும் தெருவில், ஆட்டோ நிறுத்த இடமில்லை. குடும்பத்திற்கு அடுத்து நெருக்கமான ஒரு ஆள் இந்த ஆட்டோ தான். அதற்குக் கன்னியப்பன் எனப் பெயரிட்டவன், தம்பியைப் போல் நடத்திக் கொண்டிருப்பான். அந்த வாகனத்திற்குத் தெரியும், கருடனின் உழைப்பு, கஷ்டம், மன உளைச்சல், கண்ணீர் அனைத்தும்.
சில நேரம் உணவைக் கூட மறந்து ஓடிக் கொண்டிருப்பவனிடம், சிறிது நீரையாவது அருந்து எனக் கவலை கொண்டான் கன்னியப்பன். புது ஆட்டோ போல் தினந்தோறும் நேரமெடுத்து அதைத் துடைத்து, முத்தமிட்ட பின்பு தான் சவாரியை ஆரம்பிப்பான். கடந்த சில நாள் ஏற்பட்ட மனக்கசப்பால், கன்னியப்பனைச் சரியாகப் பார்க்காமல் இருந்தவன் காணச் சென்றான்.
அவனுக்காக என்றும் காத்திருக்கும் கன்னியப்பன் இன்று காத்திருக்கவில்லை. வண்டியைக் காணாது முதலில் மிரண்டவன், பின் தேடி அலைய ஆரம்பித்தான். கன்னியப்பனைத் தொலைத்துப் பெரும் அச்சத்திற்கு ஆளானவன், வீட்டிற்குச் சென்று கேட்கலாம் என்று நடந்து கொண்டிருக்க, அலைபேசியின் ஓசை காதை நிறைத்தது.
புதிய எண்ணமாக இருப்பதால் நெற்றிப் போட்டிக்கு நடுவில் கேள்விக் குறியைக் கொண்டு வந்தவன், ட்ரூ காலரில் வந்த பெயரைக் கண்டு செவியோடே ஓட்ட வைக்க,
“என்னப்பா புது மாப்பிள்ளை, உன் கன்னியப்பன் அங்க இருக்கானா?” என்ற எள்ளல் குரல் கேட்டது.
கட்டியவளின் வார்த்தையில் நடையை நிறுத்தியவன், கேள்விக் குறியைப் பெரிதாக்கி அடுத்து வரும் வார்த்தைக்காகக் காத்திருக்க, “ரொம்பத் தேடி அலையாத, நேரம் தான் வேஸ்ட். உன் கன்னியப்பனுக்கு உன்னைப் பிடிக்கலையாம். அதனால என்கிட்ட வந்துட்டான். இப்ப நீ என்ன பண்ற, போன வேகத்துலயே கிளம்பி வர… சாரி மேடம், நேத்து ராத்திரி உன்கிட்ட நடந்ததுக்காக மனப்பூர்வமா மன்னிப்புக் கேட்டுக்குறேன். தயவு செஞ்சு என் பொழப்பைக் கெடுத்துடாதீங்க. அதை வச்சுதான் நான் சோறு தின்னுட்டு இருக்கேன். கால்ல விழுறேன், என் கன்னியப்பனைக் கொடுத்துடுங்கன்னு சொல்லிக் கை எடுத்து கும்பிடு.” என்ற ரிதுவின் குரல் மிளகாய்ப் பொடியைக் கரைத்து வெறும் வயிற்றில் குடித்தது போல் இருந்தது.
நான்கு புறமும் பற்றிக் கொண்டு எரியும் எரிச்சலுக்கு நடுவில் எச்சிலை விழுங்கி, “நீ என் விஷயத்துல ரொம்ப விளையாடுற. என் குடும்பத்துக்காக ரொம்ப நாளுக்குப் பொறுமையா இருக்க மாட்டேன். பத்து நிமிஷம் டைம் தரேன், அதுக்குள்ள என் கன்னியப்பன் இங்க வந்து நிக்கணும்.” எனக் கருடேந்திரன் மிகத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க,
“இல்லனா நீ வந்து எடுத்துட்டுப் போவியா?” எனக் கலகலவென்று சிரித்தாள் ரிதுசதிகா.
“வேணாம்!”
கணவன் என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டவன், கடிக்கும் பல்லின் ஓசை தெள்ளத் தெளிவாகக் கேட்டது கட்டியவளுக்கு. அந்தச் சத்தத்தைக் கண்டு உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவள் சாவகாசமாக,
“ஒரு ஆட்டோக்காரன் என் புருஷனா இருக்கக் கூடாது. வேலை வெட்டிக்கே போகாம, மூணு வேளைக்கும் இந்த வீட்டோட உட்கார்ந்து சோறு தின்னால் கூட எனக்கு. ஓகே. தாலி கட்டின பாவத்துக்கு வகை வகையா தின்னு. ஓசிக் காத்துல உட்கார்ந்து கூச்சமே இல்லாம வாழ்க்கையை அனுபவி. என்ன வேணா பண்ணிட்டுப் போ… ஆனா ஆட்டோ ஓட்டக் கூடாது.” பதில் கொடுத்தாள்.
“எந்த ஸ்டேட்டஸ்காக என்னை அவமானப்படுத்துனயோ, அதைத்தான் ஒண்ணுக்கு ரெண்டு தடவை தாலி கட்டிச் சிதைச்சிருக்கேன். இனியும் புத்தி கெட்டு மட்டமாப் பேசின, உன் சாம்ராஜ்யம் மொத்தமும் கலைஞ்சிடும்.”
“கலையுதோ, முளைக்குதோ? இனி நீ ஆட்டோ ஓட்டப் போகக்கூடாது.” என்றவள் தன் கையில் இருக்கும் கை கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,
“உனக்காக ஒதுக்குன இந்தப் பத்து நிமிஷத்தை என் வாழ்க்கையில ரொம்ப வேஸ்ட்டான டைமா பீல் பண்றேன். இனியும் டைம் வேஸ்ட் பண்ண என்கிட்ட டைம் இல்ல. சோ, பாய்டா வெட்டி புருஷா…” என்றவளின் நேரத்தை முழுதாகக் கெடுப்பதற்காக, இரண்டு கால் பாய்ச்சலோடு ஓடினான் கருடேந்திரன்.
5. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 5
விட்டது தொல்லை என்று கருடேந்திரன் மாலையைக் கழற்றி விட்டு நிம்மதியாக ஓரிடத்தில் நின்றுகொள்ள, அவன் பெற்றோர்களுக்குத்தான் என்ன செய்வதென்று புரியவில்லை. மகளின் பின்னால் ஓடிய பொன்வண்ணன்,
“நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல ரிது. தாலி கட்டுன கையோட யாராவது இப்படிப் போவாங்களா?” கேட்டார்.
“நீங்க பண்ணது மட்டும் நல்லா இருந்துச்சா? எல்லா அப்பாவும் தன் பொண்ணுக்கு, அப்படி மாப்பிள்ளை வரணும். இப்படி மாப்பிள்ளை வரணும்னு மெனக்கெட்டுப் பார்த்துப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. நீங்க என்னடான்னா இந்தப் பொறுக்கிக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க.”
“அதை ஒரு பொறுக்கி சொல்லுது பாரு.” தூரமாக நின்றிருந்தவன் வேண்டுமென்றே கத்தினான்.
“கோவில்னு பார்க்குறேன்.”
“உன்னை விட நான் நல்லாவே பேசுவேன். கோவில விட்டு வெளிய வா, பேச்சு வார்த்தை வச்சுக்கலாம்.”
“உன்கிட்ட எனக்கென்னடா பேச்சு. நீ எனக்கு யாரு? தாலி கட்டுனமா, மூடிக்கிட்டுக் கிளம்புனமான்னு இருக்கணும்.”
“அதே தான்டி உனக்கும். ஒழுங்கு மரியாதையா என் பின்னாடி வந்து என் வீட்டுல சாணி அள்ளிக்கிட்டு இரு.”
“கருடா!”
“எவ்ளோ திமிராப் பேசுறான்னு பார்க்குறீங்க தான. இப்படி ஒருத்தியை என் தலையில கட்டிட்டீங்களே.”
“இது நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை!”
“தெரியாம நடந்த விபத்து அது. அப்படியே விட்டுட்டுப் போகாம, இந்தச் சனியனை என் கால்ல கட்டிட்டீங்க. இப்பப் பாருங்க, காலச் சுத்துன பாம்பா எப்படித் தொல்ல தரான்னு. இவல்லாம் குடும்பத்துக்குச் செட்டாக மாட்டாம்மா.”
“திருட்டுத் தாலி கட்டின உனக்கெல்லாம் என்னைப் பத்திப் பேசத் தகுதியில்லடா.”
“திருட்டுத் தாலியைக் கழற்றிப் போட்டவ, எதுக்குடி வந்து வெட்கமே இல்லாம உட்கார்ந்த.”
“அந்த வெட்கம் உனக்கும், உன் குடும்பத்துக்கும் இருந்திருந்தா இப்படி வந்து நின்னு இருப்பீங்களா? உழைச்சுச் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. அதை விட்டுட்டு ஒரு டிராமாவைப் போட்டு, நல்லா சொகுசா வாழலாம்னு பார்க்குறீங்க. இந்தப் பொழப்புக்குக் குடும்பத்தோட…” என்றவளைச் சீறிப் பாய்ந்து பிடித்தவன்,
“என் குடும்பத்தைப் பத்திப் பேசாத. அவங்களைப் பத்தி என்னடி தெரியும் உனக்கு. உன்ன மாதிரிப் பணத்துக்குப் பல்லக் காட்டுறவங்கன்னு நினைச்சியா எங்களை…” என இல்லாத முடியை இறுக்கிப் பிடித்தான்.
“விடுடா அவளை…”
“தயவு செஞ்சு ஓரமா போங்கம்மா. எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்.”
“விடுடா கருடா…”
“முடியாதுப்பா, இவளை மாதிரி ஆளை விட்டு வைக்கிறது தப்பு.”
“என் பொண்ண விடு!” என்ற அதிகாரக் கட்டளையில் கருடனின் கைகள் அவள் தலைமுடியில் இருந்து விடுபட, “என் முன்னாடியே என் பொண்ண இப்படிப் பண்றது நல்லா இல்ல. நல்லாப் பார்த்துப்ப என்ற நம்பிக்கையில தான் நீ பண்ணதையும் மன்னிச்சு, இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கேன். அந்த நம்பிக்கையைக் கெடுத்துடாத.” என்றார்.
“உங்களை யாரு என் மேல நம்பிக்கை வைக்கச் சொன்னா? முதல்ல உங்க பொண்ண ஒழுங்கா வளர்க்காதது உங்க தப்பு. இத்தனைக்கும், பிள்ளையார் சுழி நீங்க தான். நியாயமானவரா இருந்திருந்தா, உங்க பொண்ணு பண்ண தப்பைத் தட்டிக் கேட்டு இருப்பீங்க. கல்யாணம் பண்ணி வச்சிருக்க மாட்டீங்க.”
“என்னடா பேச்சு இது? பெரியவங்கன்னு கூட இல்லாம. இந்தக் கல்யாணம் நடக்க அவர் காரணம் இல்ல, நீ தான் காரணம்! ஒரு அப்பாவா என்ன செய்யணுமோ அதைத்தான் அவரு செஞ்சிருக்காரு. இதுக்கு மேல எதுவும் பேசாத. எதுவா இருந்தாலும் நாங்க பேசிக்கிறோம்.” என மகனை அடக்கிய சரளா மருமகளின் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டார்.
“ரெண்டு பேருக்கும், கல்யாணத்தோட மதிப்புச் சரியாப் புரியல. புரியும்போது பேசுன வார்த்தைக்கு ரொம்ப வருத்தப்படுவாங்க.”
“உங்க டிராமா முடிஞ்சுதா, நான் கிளம்பலாமா?”
“எங்கம்மா போற?” எனத் தன்மையாகக் கேட்ட சரளா மருமகள் முன் நின்று, “புகுந்த வீட்டுக்கு வந்து விளக்கு ஏத்திச் சாமி கும்பிடுறது ஒரு மருமகளோட முதல் கடமை. அதைச் செய்யாமல் போற.” என்றவரை உதாசீனப் பார்வையோடு பார்த்தாள்.
“நான் உங்க மருமகளும் இல்ல, உங்க வீடு எனக்குப் புகுந்த வீடும் இல்லை.”
“ஒன்னுக்கு ரெண்டு தடவை என் மகன் தாலி கட்டி இருக்கான். அவன் உனக்குப் புருஷனா இருக்க வரைக்கும், நான் உனக்கு மாமியார் தான். நம்ம வீடு உனக்குப் புகுந்த வீடு தான்…”
“ஓஹோ… வர முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?”
“நாங்க சண்டைக்கு வரலம்மா. உன்னை எங்க வீட்டுக்கு மருமகளாய் கூட்டிட்டுப் போக வந்திருக்கோம். இனி உன்னோட வாழ்க்கை அந்த வீட்லதான். உன்னோட கோபம் எங்களுக்குப் புரியுது. இருந்தாலும் நடந்ததை மறந்துட்டு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ முயற்சி பண்ணலாமே.”
சரளாவை விட மிகவும் தன்மையாக சத்யராஜ் புரிய வைக்க, வர மாட்டேன் என்று ஒட்டாரம் செய்தாள். பொறுத்துப் பார்த்த பொன்வண்ணன், “அவன் உன்னைக் குடும்பத்துப் பொண்ணு இல்லன்னு சொல்லாம சொல்றான். அதுக்கு உனக்குக் கொஞ்சம் கூட ரோஷம் வரலையா? அவன் சொல்ற மாதிரி தான் உன்னை வளர்த்திருக்கனா?” என உசுப்பி விட முயற்சித்தார்.
அவை அவள் முகத்தில் நன்றாக வேலை செய்ய, “அவன்கிட்டத் தோத்துப் போயிட்டன்னு ஒத்துக்கப் போறியா?” என மீண்டும் அதே வேலையைக் கனகச்சிதமாகச் செய்தார்.
சில நொடிகள் பார்வை சுருக்கி யோசித்தவள், “நான் உங்க மருமக தான…” எனச் சரளாவைப் பார்த்துக் கேட்க, மன மகிழ்வில் ஒன்றும் புரியவில்லை அவருக்கு.
“சொல்லுங்க?”
“ஆமாடா!”
“மருமகளா உங்ககிட்ட முதல் முறையா ஒன்னு கேட்கப் போறேன்.”
“கேளுடா, உனக்கு இல்லாத உரிமையா?”
“உங்க வீட்டு மருமகள் கழுத்துல எவனாது ஒருத்தன் வற்புறுத்தித் தாலி கட்டுனா சும்மா விடுவீங்களா?” என்ற கேள்வியை அவர் தலையில் இடியாக இறக்க, அதைச் சற்றும் எதிர்பார்க்காதவர் உறைந்து நின்றார்.
“அதைப் பண்ண உங்க பையன் கூட எப்படிச் சேர்ந்து வாழ முடியும்? உங்க வீட்ட எப்படி என் புகுந்த வீடாய் பார்க்க முடியும்.”
“என் பையன் பண்ணது தப்பு தான். அதுக்கான பிராயச்சித்தமா தான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சிருக்கோம்.”
“அப்போ வேற ஒருத்தன் தாலி கட்டினாலும், அவன் கூடவும் கல்யாணம் பண்ணி வச்சு வாழச் சொல்லுவீங்களா?”
தன் வார்த்தைக்குப் பதில் வார்த்தை கூறிய மருமகளை, எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சத்தியராஜ் வாயை மூடிக்கொள்ள, “எங்க வீட்டுக்குத் தான் வரச் சொன்னமே தவிர, அவனை மன்னிச்சு ஏத்துக்கச் சொல்லல. அவனை மன்னிக்கிறதும் மன்னிக்காமல் போறதும் உன்னோட முழு உரிமை! என்னைக்கும், அதுல எங்க தலையீடு இருக்காது.” என வாக்குறுதி கொடுத்தார் சரளா.
“குட்!” என மெல்லிய புன்னகையை வீசியவள்,
“உங்க பையனை நான் மன்னிக்கிற வரைக்கும் உங்க வீட்டுக்கு வர மாட்டேன். அவனை வேணா என் கூட வந்து வாழச் சொல்லுங்க. ஒருவேளை என் மனசு மாறுனா, உங்க பையனையும் ஏத்துக்கிட்டு உங்க வீட்டுக்கு வரேன்.” என்றதும் அடித்துக் கொண்டிருந்த அலை நின்றது போல் திகைத்து நின்றான் கருடேந்திரன்.
இவ்வார்த்தையை அவனின் பெற்றோர்களும் எதிர்பார்க்காததால் அதே நிலையில் நிற்க, மகளை அடக்கப் பார்த்தார் தந்தை. “இது என் வாழ்க்கை விஷயம்!” என அவரை ஒதுங்க வைத்தாள்.
“இதான் உங்க பையனுக்கு நான் கொடுக்குற தண்டனை. எந்தக் குடும்பத்துக்காக எனக்கு இப்படி ஒரு பாவத்தைப் பண்ணானோ, அந்தக் குடும்பத்தை அவன் பிரிஞ்சு இருக்கணும். நீங்க அவனப் பார்க்க முடியாம, அவன் உங்களைப் பார்க்க முடியாம தவிக்கணும். என் வீட்ல ஒரு வேலைக்காரன் மாதிரி வாழனும். இதுக்கெல்லாம் சம்மதம்னு சொன்னா உங்க பையனைக் கார்ல ஏறி உட்காரச் சொல்லுங்க. இல்லன்னா நீங்க தனியாப் போங்க, நான் தனியாப் போய்க்கிறேன்.” என்று விட்டாள் ஒரே முடிவாக.
“கடைசி ஆப்ஷன் நல்லா இருக்கு. நீ அப்படியே கிளம்பு. என் குடும்பத்தை எல்லாம் விட்டு வந்து உன் முகரையப் பார்த்துட்டு இருக்க முடியாது.”
“அப்போ கடைசி வரைக்கும் வாழாவெட்டியா உன் வீட்டுலயே வாழு. எப்படியும் உன் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணுவ தான. அப்போ உன்னப் பத்தின கேள்வி வரும். உன் பொண்டாட்டி எங்கன்னு கேப்பாங்க. அன்னைக்கு அவங்க முன்னாடி வந்து நின்னு இவன் எனக்குத் திருட்டுத் தாலி கட்டிட்டான். அதனால வாழா வெட்டியா இருக்கான்னு சொல்லி உன் தங்கச்சி வாழ்க்கையைக் கெடுப்பேன்.”
“அடிங்க்குகுகு…” என அடிக்கப் பாயும் மகனை சத்யராஜ் தடுக்க,
“என் பையன் உன் வீட்டுக்கு வருவான். அவன் பண்ண தப்புக்குத் தண்டனையா வீட்டோட மாப்பிள்ளையா இருப்பான். நீ எப்போ சமாதானமாகி என் வீட்டுக்கு வரியோ, அப்பத்தான் அவன் எனக்குப் புள்ள… அதுவரைக்கும், அவனுக்கும் எனக்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் இருக்காது. இது என் மருமகள் உன்மேல சத்தியம்.” என்றவரால் பெரும் நிலநடுக்கம் அங்கு.
மனைவியின் வார்த்தையை உதாசீனம் செய்வது போல், அன்னையின் வார்த்தையைச் செய்ய முடியாது கருடேந்திரனால். அதனால்தான் பிடிக்காதவளைத் திருமணம் செய்திருக்கிறான். எடுத்த முடிவிலிருந்து நிச்சயம் பின்வாங்க மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். எங்கு அடித்தால் எப்படி வளைவோம் என்பதைத் தெரிந்து அடித்திருக்கும் மனைவியைக் குரோதத்தோடு பார்த்தவன்,
“என்னால முடியாது.” என்றான்.
“அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கேன். ஒருத்தி என் முன்னாடி உன் புள்ள வளர்ப்பு இதுதானான்னு கேட்காமல் கேட்டுட்டா. அவ வாயாலயே உங்க புள்ளை மாதிரி ஒரு புள்ளை எங்க தேடி எடுத்தாலும் கிடைக்காதுன்னு சொல்லணும். உண்மையாவே நீ எனக்குத்தான் பிறந்தன்னா, அப்படி அவளைச் சொல்ல வச்சுட்டு வீட்டுக்கு வா…”
சரளாவின் முடிவில் யாருக்கும் உடன்பாடு இல்லை என்றாலும், ஒருத்தி மட்டும் மிகுந்த ஆனந்தத்தோடு நின்றிருந்தாள். சிரித்த முகமாக, “வரம்மா…” எனத் தலையசைத்து அவர் விடைபெற, எந்தப் பாவனைகளும் இல்லை அவளிடம். போட்ட திட்டம் அப்படியே நடந்ததில் மனமகிழ்ந்தவர், மகளின் திட்டத்தில் மனம் கசங்கி நகர்ந்தார்.
“என்னடா, வீட்டோட மாப்பிள்ளை! கக்கூஸ் கழுவத் தெரியுமில்ல… இன்னையோட வேலைக்காரங்களுக்குச் சம்பளம் கொடுக்குற காசு மிச்சம்.” என்றவள் அவனை நெருங்கி,
“இந்தப் பலி கொடுக்கப் போற ஆட்டைக் கயிறு கட்டி இழுத்துட்டுப் போவாங்க தெரியுமா, அப்படித் தெரியுற என் கண்ணுக்கு.” எனத் தலையை உயர்த்திச் சத்தமிட்டுச் சிரித்தாள்.
“யாரு யாருக்குப் பலியாகுறாங்கன்னு பார்த்துடலாம்.”
“பார்க்கலாமே!”
“ஆணவத்துல ஆடாதடி. எங்க அம்மா சொன்ன மாதிரி, எந்த வீட்டுக்கு வர மாட்டன்னு சொன்னியோ அந்த வீட்டுக்கு வர வச்சு, எங்க எல்லாருக்கும் சோறாக்கிப் போட்டு, வேர்வை சிந்தி வேலை பார்த்து அக்மார்க் மருமகளா நடக்க வைக்கல, என் பேரு கருடேந்திரன் இல்லடி.”
“கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்…” என நக்கலாகப் பாடியவள்,
“வேலைக்காரனா வாழப் போற வசந்த மாளிகைக்குப் போகலாமா?” என முன்னே நடக்க, ஒவ்வொரு செல்லிலும் அவள் மீதான குரோதத்தைச் செலுத்தி, பகையைத் தீயாக உருவாக்கி வைத்தவன் அதை அணைக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறான்.
***
எந்த வீட்டின் முன்பு கழுகாகக் காவல் காத்தானோ, அந்த வீட்டிற்குள் இப்படியான தருணத்தில் நுழைவோம் என்ற எண்ணம் சிறிது கூட உதித்ததில்லை. முதல்முறையாக இந்தக் கட்டிடத்தைத் தலை உயர்த்திப் பார்க்கும்பொழுது, ‘இன்னும் ரெண்டு மாடி சேர்த்துக் கட்டிருந்தா சூரியன், நிலா, நட்சத்திரம் எல்லாத்தையும் கைலயே பிடிச்சிருக்கலாம்.’ என்ற எண்ணம் தான் அவனுக்குள்.
என்ன கோபம் இருப்பினும், இந்தக் கட்டிடத்தை அவன் உள் மனம் ரசித்தது. ஆனால், இன்று நிலைமையோ வேறு. அவன் விரல் நுனி பட்டால், இந்த மொத்தக் கட்டிடமும் எரிந்து சாம்பல் ஆகிவிடும். அந்த அளவிற்கு இறுகிப் போயிருந்தது மொத்த உடலும். துடிக்கும் இதயம் கல்லாக மாறி, அதில் யாரோ உளியை வைத்து அடிப்பது போன்ற ஓசை.
வெடிக்கத் துடிக்கும் எரிமலைக்குள் இவனைத் தள்ளிவிட்ட சூழ்நிலை, எரிமலையின் நிலையைச் சிறிதும் கவனிக்கவில்லை. பூமி மொத்தத்தையும் தன் சூட்டால் கதி கலங்க வைக்கும் அந்த எரிமலையே இவனால் கதி கலங்கிப் போயிருக்கிறது. விழிகளுக்குள் இரு கத்தி கூர்மையாக நின்று கொண்டிருக்க, அழுத்தத்தின் மொத்த உருவம் இந்தக் கருடேந்திரன்.
தன்னவன் நிலையைச் சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதவள், வந்த கையோடு வேறு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட, “உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்றார் பொன்வண்ணன்.
அவன் மறுக்கவும் செய்யாமல், சம்மதிக்கவும் இல்லாமல் அதே இடத்தில் அப்படியே நின்றிருக்க, “என்னை உனக்கு நினைவு இருக்கா?” முதல் கேள்வியை மருமகனிடம் இடமாற்றினார்.
பதில் உரைக்காமல் புருவத்தை மட்டும் சுருக்கியவனுக்கான பதிலைக் கொடுக்க, “சரியா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் உன்னைப் பார்த்தேன்.” எனப் புதிதாகப் புதிர் ஒன்றைப் போட்டார்.
சுருங்கிக் கொண்ட புருவங்கள் இன்னும் நான்கு ஐந்து சுருக்கங்களைக் காட்டி, அவன் நெற்றியில் கேள்விக் குறியாக வந்து நிற்க, “எஸ்7 போலீஸ் ஸ்டேஷன்!” என்ற வார்த்தையோடு கடந்த காலத்திற்குள் நுழைய, புத்திக்குள்
பொறி அடித்த உணர்வு அவனுக்கு.
இரண்டு வருடத்திற்கு முன்பு, லட்சக்கணக்கில் பணத்தைப் பையில் அடுக்கி வைத்தவர் தன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். நள்ளிரவைத் தொடப்போகும் நேரத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் பழுதாகியது. பணத்தைப் பத்திரமாக எடுத்துச் செல்ல முடியாமல், நடுரோட்டில் திண்டாடிக் கொண்டிருந்தவருக்குத் தரிசனம் கொடுத்தான் வருங்கால மருமகன்.
விலையைக் கூடப் பேசாமல் செல்ல வேண்டிய இடத்தைக் கூறியவர், பந்தாவாக ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். சரியாக இருபது நிமிடத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அவரது ஓட்டுநர், கார் சரியாகிவிட்ட செய்தியைக் கூறத் தான் இருக்கும் இடத்தைக் கூறியவர் காத்திருந்தார்.
“சார்!” எனக் குரல் கொடுத்தான்.
“என்னப்பா?”
“எக்ஸ்ட்ரா 200 ரூபாய் இருக்கு சார்.”
“பரவால்லப்பா, வச்சுக்க.”
“என் உழைப்புக்கான பணம் மட்டும் போதும் சார். உங்க உழைப்புக்கான பணம் உங்க கிட்டயே இருக்கட்டும்.” என்றவன் முகத்தை அப்போதுதான் பார்க்கவே செய்தார் பொன்வண்ணன்.
வருங்காலத்தில், திமிர் பிடித்தவளின் கணவனாகவும், இந்தக் கதையை மாமனார் சொல்லிக் கேட்கப் போகும் மருமகனாகவும், அந்த இரவு வெளிச்சத்தில் தன் முகத்தை ஆழமாகப் பதிவு செய்தான். கைநீட்டிக் காசை வாங்கிக் கொண்டவர்,
“இந்தக் காலத்துல உன்ன மாதிரி மனுசனைப் பார்க்குறது ரொம்ப அபூர்வம். பியூச்சர்ல நீ ரொம்பப் பெரிய ஆளா வருவ…” என வாழ்த்திட, சிரித்த முகமாக அங்கிருந்து கிளம்பினான்.
காரில் ஏறியவர் வீடு வந்ததும் இறங்கி, “உள்ள இருக்கற பேகை எடுத்துட்டு வாப்பா…” என ஓட்டுநருக்குக் கட்டளையிட்டார். அடுத்த சில நிமிடங்களில்,
“உள்ள எந்தப் பேகும் இல்லையே சார்.” என்றார் ஓட்டுநர்.
அப்போதுதான் ஆட்டோவில் அந்தப் பையை அப்படியே விட்டது நினைவிற்கு வந்தது. பல லட்சங்கள் என்பதால் பெருத்த மனஉளைச்சலுக்கு ஆளானவருக்கு, எங்குச் சென்று அந்த நல்லவனைத் தேடுவது என்று தெரியவில்லை. எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அத்தனைப் பணத்தை மொத்தமாகப் பார்க்கும் பொழுது மனம் மாறி இருப்பான் என அஞ்சியவர் காவல் நிலையத்திற்கு ஓடினார்.
அங்கு அவருக்கு முன்பாகக் கருடேந்திரன் நின்றிருந்தான். யோசனை படிந்த முகத்தோடு இருந்தவருக்கு, அங்கிருந்த அதிகாரி அனைத்தையும் புரிய வைத்தார். தன்னைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல், பணம் இருப்பதைக் கண்டதும் இந்தக் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறான்.
“காசு கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க சார்.”
லட்சங்களை எண்ணிப் பார்க்காமல், “உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. இது மிஸ் ஆகி இருந்தா பெரிய லாஸ் ஆகி இருக்கும். நீ பண்ண உதவிக்கு என்ன வேணும்னாலும் கேளு. எதுவா இருந்தாலும் செஞ்சு தரேன்.” என்றிட,
“அதெல்லாம் எதுக்கு சார்? உங்களைப் பத்தி எந்த டீடைல்ஸும் தெரியல. எப்படியும் இந்த ஏரியாவைச் சுத்திதான் இருப்பீங்கன்னு கெஸ் பண்ணி இங்க வந்தேன். பணம் கரெக்டா இருக்கான்னு பார்த்துக்கோங்க சார்.” என்றான்.
“இவ்ளோ தூரம் வந்தவன் ஒத்தத் தாளையா உருவி இருக்கப் போற?”
தன்னை நம்பியவருக்கு நன்றியுரைத்தவன் அங்கிருந்து கிளம்பும் முன், “இந்த மாதிரி நேரத்துல ரொம்ப ஜாக்கிரதையா வரணும் சார். அடுத்த தடவை யாரையாவது கூடக் கூட்டிட்டு வாங்க.” என அறிவுரை கூற,
“உன்ன மாதிரி நம்பிக்கையான ஆளு என் பக்கத்துல இல்லப்பா…” என்றவர் முகத்தில் அத்தனை வேதனைகள்.
அதை நன்கு உணர்ந்து கொண்டவன், கனத்த மனத்தோடு அங்கிருந்து கிளம்பினான். வீடு வந்தவர் தன் மகளிடம் நடந்த அனைத்தையும் சொல்லிப் புகழாரம் சூட்டிவிட்டார். இப்படிப் புகழும் அளவிற்கு என்ன செய்து விட்டான் என அலுத்துக் கொண்டவள், ஒரு கட்டத்திற்கு மேல் யார் அவன்? என்று யோசிக்க ஆரம்பித்தாள். சில நேரம் நம் தேடுதல், வாழ்க்கையோடு இணைந்து விடும் என்பதை எந்நொடி உணர்வாளோ அவனைத் தேடியவள்.
நடந்த அனைத்தையும் கூறியவர், “உன்ன மாதிரி ஒருத்தனுக்கு, என் பொண்ணைக் கட்டிக் கொடுக்கணும்னு பல நாள் யோசிச்சிருக்கேன். நீயே அதுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு அப்புறமும் எப்படி நழுவ விடுவேன்?” என்றவரின் செயலுக்கான காரணம் இப்போதுதான் புரிந்தது கருடேந்திரனுக்கு.
“இனி என் சாம்ராஜ்யமும், என் பொண்ணும் உன்னோட பொறுப்பு. பல வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்குத் தான் கொஞ்சம் நிம்மதியா பீல் பண்றேன். கூடிய சீக்கிரம் இந்த நிம்மதி சந்தோஷமா மாறனும்.”
“சாரி சார். கிடைச்ச நிம்மதியே நிலைக்குமான்னு தெரியல. எனக்கும் உங்க பொண்ணுக்கும் சுத்தமா செட் ஆகாது. என் அம்மாவுக்காக மட்டும் தான் இந்தக் கல்யாணம். இதை முறியடிக்க, ஒரு சின்னச் சந்தர்ப்பம் கிடைச்சா கூட உதறித் தள்ளிட்டுப் போய்கிட்டே இருப்பேன்.”
“என் பொண்ணு வார்த்தையை வச்சு அவ கேரக்டரை முடிவு பண்ணாத. இந்த சொசைட்டிக்காக, அவளுக்கு அவளே போட்டுகிட்ட வேஷம் அது. ரொம்ப சென்சிட்டிவான பொண்ணு. என்னைக்கு அவ கண்ணு முன்னாடி அவ அண்ணன், இந்த உலகத்தை விட்டுப் போனானோ அன்னைக்கே மொத்தமா மாறிட்டா. என் பொண்ணைப் பழைய மாதிரி நீ தான் மீட்டுத் தரணும்.”
“அது என் டியூட்டி இல்ல சார். என் குடும்பத்துகிட்ட இருந்து பிரிச்சுக் கூட்டிட்டு வந்த உங்க பொண்ணப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல. என் தம்பி கேஸ்ல உங்க பொண்ணுதான் குற்றவாளின்னு நிரூபிச்சுட்டு இங்க இருந்து கிளம்பிடுவேன்.”
“நிச்சயமா அதைப் பண்ணது என் பொண்ணா இருக்காது. இந்த விஷயத்துல உனக்குத் தோல்வி மட்டும் தான் மிச்சம்.” என்றவர் அவனை நெருங்கித் தோள் மீது கை போட்டு,
“உன்னை வெளிய எடுக்கும்போதே ரவியையும் வெளிய எடுத்துட்டேன். அதுக்கு என்ன காரணம் தெரியுமா?” என மருமகன் முகத்தைப் பார்த்தார்.
அவனோ எந்த உணர்வுகளையும் காட்டாமல் ஜடமாக நின்றிருக்க, “என் பொண்ணைச் சுத்தி, துரோகமும் பகையும் மட்டும் தான் சொந்தமா இருக்கு. உன் தம்பிக்காக நீ தேடப் போற வேட்டையில, அந்தத் துரோகமும் பகையும் அழிஞ்சு என் பொண்ணு மீண்டு வந்துடுவா…” என மருமகன் மீதுள்ள அதீத நம்பிக்கையில் வகுத்து வைத்த திட்டத்தைப் போட்டு உடைத்தார்.
அப்போதும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அதை உணர்ந்தவர், அவனுக்கான நேரம் வரும்வரை காத்திருக்க முடிவு செய்து, “உன் வீட்டுப் பத்திரம் இந்நேரம் உன் அப்பா கையில சேர்ந்திருக்கும். உன் தம்பியோட வேலையும், மெடிக்கல் செலவும் இனி என்னோட பொறுப்பு. என் பொண்ண மட்டும் பத்திரமா பார்த்துக்க கருடா…” என அங்கிருந்துச் சென்று விட்டார்.
***
இரவுப் பார்ட்டியை முடித்துவிட்டு, நள்ளிரவு ஒரு மணி அளவிற்கு வீடு திரும்பினாள் ரிதுசதிகா. நண்பர்களோடு ஜாலியாக லூட்டி அடித்து விட்டு வந்தவள், தன் அறையில் தாலி கட்டியவன் இருப்பதைப் பார்த்துக் கொந்தளித்து விட்டாள். அவனோ, அவள் வந்ததைக் கூட அறியாமல் தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தான்.
“டேய் வேலைக்காரா! உனக்கு என் ரூம்ல என்னடா வேலை?”
அந்த அதிகாரக் குரலில் தன் நினைவைக் கலைத்தவன் ஆயாசமாகத் திரும்பி, “இதெல்லாம் பழைய டயலாக்!” என மூக்கை அறுத்தான்.
“பிளடி ராஸ்கல்…”
பாய்ந்து அவன் சட்டைக் காலரைப் பிடிக்கப் போக, அவள் வரும் வேகத்தை வைத்து எண்ணத்தைப் படித்தவன், “ப்பே! ஓரமா…” என மெத்தையில் தள்ளி விட்டான்.
“ஹேய்! என்ன தைரியம் இருந்தா என் மேல கை வைப்ப? உச்சி மண்ட சூடாகி உன்னைக் கடிச்சுக் குதறுறதுக்குள்ள இங்க இருந்து போயிடு.”
“மப்புல எப்படி உளறுது பாரு. திருடின்னு மட்டும் தான் நினைச்சேன், நீ குடிகாரியாடி!” எனத் தன் இடையில் விரல்களை ஒட்ட வைத்தவன்,
“சரக்கு மட்டும் தானா, இல்ல எல்லா மேட்டரும் கைவந்த கலையா?” அருவருப்பான முகத்தோடு வினவினான்.
தலையணையைத் தூக்கி அவன் முகத்தில் அடித்து, “என்னைப் பார்த்தா குடிகாரி மாதிரியாடா இருக்கு.” சீறினாள்.
“ம்ம்… மகா மட்டமான தண்ணிப் பார்ட்டின்னு அப்பட்டமாய் தெரியுது.”
என்ன சொல்லித் திட்டுவதென்று தெரியாமல் வார்த்தையைத் தேடிக் கொண்டிருந்தவள் செவியில், “போதை தெளிஞ்சாதான் கை நடுங்கும். உனக்கு என்னடி இப்பவே நடுங்குது?” என்ற வார்த்தைகள் விழுந்தது.
Newer Posts