
Tag:
tom and jerry fight couple
4. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 4
“அம்மா… அண்ணனுக்கு பசிக்குதாம்… இப்ப மீட்டிங் முடிஞ்சிடுமாம்… உடனே டின்னர் எடுத்து வைக்கணுமாம்…” என்று மேல் மாடியிலிருந்து கத்திக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் குட்டி வாண்டு, பதினேழு வயதே ஆன சஷ்விகா.
“சச்சு… எல்லாம் ரெடியா தான் இருக்கு… நீயும் இறங்கி வா, நாலு பேரும் ஒன்னாவே சாப்பிடலாம்…” என்று பார்வதி சொல்ல,
“ஓகே ம்மா… டூ மினிட்ஸ்…” என்றவள் கீழே வந்தாள்.
“எங்க டி உங்க அண்ணன்… அந்த கூப்பாடு போட்ட, இன்னும் காணோம்?” என்று பார்வதி கேட்க,
“ஹான்… இதோ வராங்க ம்மா…” எனக் கூறி பூரியை விழுக்கினாள் சஷ்வி.
“என்னடா கண்ணா, வேலை அதிகமா?”
“எஸ் ம்மா… கொஞ்சம் லைட்டா ஹெவி தான்…”
“சரி மொதல்ல வந்து சாப்பிடு…” எனக் கூறியபடி அவனுக்கும் பூரியை தட்டில் வைக்க, அமைதியாக சாப்பிட்டான் எல்வின்.
“எங்க ம்மா அப்பா?”
“ரூம்ல இருக்கார் பா… வாங்க ன்னு கூப்பிட்டேன்… வரேன்னு சொல்லியே அரை மணி நேரம் ஆகிடுச்சு…”
“மணி ஒன்பது ஆகுது… இன்னமும் சாப்பிடாம என்ன பண்றார்?” எனக் கேட்கும் பொழுதே சாமுவேல் வந்துவிட்டார்.
“வந்துட்டேன் டா கத்தாத!” என்றபடி அவர் இருக்கையில் உட்கார,
“சுகர் டேப்லெட் போடணுமே ப்பா… அதுக்கு நீங்க சீக்கிரம் சாப்பிட்டா தானே…”
“சரிடா இனி டைமுக்கு சாப்பிடறேன் போதுமா…”
எல்வினோ, “ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க… அப்பறம் நம்பறேன்…” எனவும்,
பார்வதி கணவரிடம், “ஏங்க நீங்க பேசறீங்களா? இல்ல நானே கேட்கட்டுமா?” என்று கண்களால் மிரட்ட,
சாமுவேலோ பதிலுக்கு, “நீயே கேட்டுக்க…” என்று ஜாடை காட்ட, அதற்கு அவரை முறைத்தபடி இருக்க,
“அண்ணா… எனக்கு அண்ணி தேடுறது பத்தி தான் ரெண்டு பேரும் தீவிர டிஸ்கஷன்ல இருக்காங்க…” என்று சஷ்விகா உடைத்து பேசிவிட,
“ஏது… உனக்கு அண்ணியா!”
“ஈஈஈ… உன் வருங்காலம் எனக்கு அண்ணி தானே ண்ணா… அத சொன்னேன்…”
அதில் ஆரோனும், “வாண்டு சும்மாவே இருக்க மாட்டீயா நீ…” எனச் சொல்லி சிரிக்க,
“சொல்லுடா கண்ணா, உனக்கு ஏதாச்சும் பொண்ணை பிடிச்சி இருக்கா என்ன?” என்று பார்வதி கேட்க,
சாமுவேலும், “நீ லவ் பண்றதா இருந்தாலும் சொல்லு எல்வின், அப்பாவும் அம்மாவும் அந்த பொண்ணு வீட்ல போய் பேசிட்டு வரோம்…” என்று சொல்ல,
“அப்படி இருந்திருந்தா மொதல்ல உங்க கிட்ட தானே சொல்லி இருப்பேன் ப்பா…”
சஷ்வியோ இடையில் புகுந்து, “ப்பா… இதெல்லாம் என் கிட்டயும் கேட்கலாமில்ல… நானும் ஏதாவது சொல்லுவேன்ல….” என்று குறும்புடன் பேச,
“அடிக்கழுதை… ஸ்கூல் படிக்குற வயசுல என்னடி பேச்சு…” என்று பார்வதி அவளது காதை திருக,
“ம்மா… ம்மா… விடுங்க, நான் ஒன்னும் ஸ்கூல் படிக்குற பொண்ணு இல்ல… இந்த வருஷம் காலேஜ் ஜாயின் பண்ண போறேன்… ஹான்… அப்பறம்… நீயும் என் வயசுல தானே அப்பாவ லவ் பண்ணி… கல்யாணமும் பண்ணிக்கிட்ட, அப்பறம் என்னவாம்!” என்று காதை தேய்த்து கொண்டே கூற,
“பாரு… பிள்ளை மேல கை வைக்காத… நீ வாடா செல்லம், உனக்கு யாரை பிடிச்சி இருந்தாலும் சரி அப்பா சேர்த்து வைக்கறேன் ஓகேவா…” என்று தந்தை சொல்ல,
“அய்ய… அப்பா, இந்த லவ்ல எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லப்பா… நான் சும்மா அம்மா கூட விளையாடினேன் ப்பா…” என்றவள், “ப்பா… நீங்க அண்ணன கேளுங்க ப்பா…” என்றாள்.
சாமுவேல் மகளின் தலையை செல்லமாக தடவி விட்டு, மகனை பார்த்து, “சொல்லு எல்வின்…” என்றார்.
“எனக்கு நோ இன்ட்ரெஸ்ட் ப்பா… இப்போதைக்கு மேரேஜ் பண்ற தாட் வர மாட்டேங்குது…” என்று ஆரோன் சொல்லவும்,
“டேய்… இப்பவே உனக்கு வயசு 29 டா… கல்யாணம் வேணாம்னு சொல்ற, யாரையும் பிடிக்குது அப்படின்னு கூட சொல்ல மாட்ற… என்னதான் கண்ணா பிரச்சனை?” என்று பார்வதி ஆதங்கமும் கவலையுமாக கேட்க,
“ப்ச்… பாருங்க மம்மி… நான் ஒன்னும் பிரம்மச்சாரி ஆக போறேன்னு சொல்லல… இப்ப வேணாம், கொஞ்ச நாள் போகட்டும்னு மட்டும் தான் சொன்னேன்… அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்…”
“இருந்தாலும் கண்ணா…”
“ம்மா… இப்ப நான் என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்ககறீங்க…”
“வேற என்ன அண்ணா… ஜஸ்ட் வன் வேர்ட், டூ லெட்டர்ஸ், O…K… அவ்வளவு தான்… அப்படி தானே மம்மி…” எனச் சொல்லி சிரித்தாள் சஷ்விகா.
“சச்சுசுசு….”
“நான் எதும் பேசல ம்மா… யூ கண்டியூ…” என்று வாயைப் பொத்தி கொண்டாள் சஷ்வி.
“சரி விடு கண்ணா… இது உன் வாழ்க்கை… உன் முடிவு… உன் இஷ்டம்… இதுல நான் ஆசையோ அபிப்பிராயமோ சொல்றதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல பா… சீக்கிரம் சாப்பிட்டு போய் படு… உனக்கு நிறைய வேலை வேற இருக்கும்…” என்று ஏனோதானோவென்று பேசினார் பார்வதி.
சஷ்வியோ அடங்காமல், அண்ணனின் காதில், “அண்ணா, மம்மி உங்களை எமோஷனலா பேசி கவுக்க பார்க்கறாங்க… ஏமாந்து போய்டாதீங்க ப்ரதர்… உசார் அய்யா உசாருரு…” என்று குசு குசுவென்று பேச,
அதில் சத்தமாக சிரித்து வைத்து பார்வதியிடம் இருந்து முறைப்பை பெற்றுக் கொண்டான் எல்வின் ஆரோன்.
சாமுவேல் மற்றும் பார்வதி தம்பதிகள் இருவரும் முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஊரை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
இதுநாள் வரையிலும் கூட அவர்களுடைய இரு வீட்டாரின் சொந்தங்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை! அந்த மனவருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும், அவற்றை கடந்து வந்து, இருவரும் இணைந்து இத்தனை வருடத்தில் அவர்களின் பிள்ளை செல்வங்களை நன்முறையில் வளர்த்து, கணவன் மனைவி இடையே எவ்வித சண்டை சச்சரவுகளும் இன்றி அன்னியோன்யமாக காதலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தாயின் முகம் பொலிவிழந்து வாடிப் போய் இருப்பதை காண பொறுக்காமல், “ம்மா… நான் இப்ப ஓகே தான சொல்லணும்… நீங்க பொண்ணு பார்க்குறது பாருங்க… எனக்கு பிடிச்சா மாதிரி இருந்தா ஓகே… கல்யாணம் மட்டும் ஒரு வருஷம் கழிச்சு பண்ற போல இருக்கட்டும்…” என்று விட்டான் எல்வின்.
“சரி சரி அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் டா கண்ணா… உனக்கு பொண்ணு இந்துவா இருக்கட்டுமா? இல்ல கிறிஸ்டியனில் பார்க்கட்டுமா?” என்று பார்வதி கேட்க,
அதில் மென்னகை புரிந்தவன், “ம்மா… உங்களை போல ஸ்வீட் அண்ட் சாஃப்ட்டா இருந்தா எந்த மதமா இருந்தாலும் சம்மதம் தான் போதுமா…” என்று சொல்லி விட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் எல்வின் ஆரோன்.
இரவு 11.45.
சென்னை நகரம் தூங்க தயாராகி விட்டிருந்தது. வீடுகளின் விளக்குகள் மெதுவாக அணைந்து கொண்டிருந்தன. ஒரு சில வீடுகளின் ஜன்னல்கள் மட்டும், யாரோ இன்னும் விழித்திருக்கிறார்கள் என்பதை அடையாளம் விதமாக பளிச்சென்று இருந்தன.
ஆரோனின் அன்றைய நாளுக்கான அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன.
வீடியோ ஷூட்டிங், பிண்ணனி ஒலி சரிபார்ப்பு, வீடியோ எடிட்டிங், அலுவலக கால்கள், அவர்கள் உடனான ஜூம் மீட்டிங் கலந்துரையாடல்கள், நெருங்கிய வட்டத்தின் நட்பான விசாரணைகள், அவனது காணொளிக்கு வரும் கருத்துக்களை பார்வையிடுவது என்று அனைத்தும் முடிந்து, அவனது படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான் ஆரோன்.
அவனது படுக்கையறையின் ஓரத்தில் ஒரு சிறிய வின்டேஜ் தேக்கட்டயில் ஆன மெத்தையும் டேபிளும் போடப்பட்டிருக்க, அதன் பக்கத்தில் ஒரு கிளாசிக் ஸ்டைல் வாசிப்பு விளக்கு, அதன் அருகே ஒரு மூடப்படாத புத்தகம், அவன் போடும் வீடியோவிற்கான குறிப்புகளை எழுத ஒரு அழகிய எழுதுகோல், ஒருசில ஓட்டும் குறிப்புகள் (sticky notes), அவன் நான்கு நாளாக எழுத ஆரம்பித்திருக்கும் புதிய காணொளிக்கான ஸ்கிரிப்ட் என்று அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக பொருந்தி இருந்தது.
அவனது தனிப்பட்ட கைப்பேசியை திறக்க, அதில் இருந்த அறிவிப்பை கண்டதும், அவனது இதழ்கள் தானாக மென்னகையில் விரிந்தன.
“தஞ்சாவூர் அரோமா சமையல் – Kulukku Roti | Healthy sweet recipe for kids”
அந்த நொடி அவனது கண்கள் அந்த அறிவிப்பையே ஆர்வமுடன் பார்க்க, கைகளோ அதை தொட்டு, உள்ளே செல்லவும் சிறிய விளம்பரம் ஒன்று வந்தது.
அவன் கண்ணை மூடி, தலையணியில் தலையை மிதமாக தள்ளி வைத்து, அந்த குரலை கேட்க ஆர்வமாக காத்திருந்தான்.
30 வினாடி காத்திருப்புக்கு பின், அவள் குரல் ஒலித்தது.
“ஹெலோ கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ், நான் அரோமா, ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்திருக்கேன், சில கமெண்ட்ஸ் என்ன வீடியோ வரலன்னு, கொஞ்சம் பெர்சனல் வொர்க்..”
அந்த சில வாக்கியங்கள் போதுமானதாய் இருந்தது. அவனது நெஞ்சினுள் ஒரு மெல்லிய வெறுமை – யாரும் நிரப்ப முடியாத அந்த இடம் – ஏதோ ஓரளவுக்கு நிரம்பியதைப் போல உணர்ந்தான் எல்வின் ஆரோன்.
“எனிவே, இப்போ ஒரு புது ரெசிபி உடன் வந்திருக்கேன், இது நம்ம குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், நமக்கு பசங்க ஹெல்தி முக்கியம், ஆனா பிள்ளைகளுக்கு டேஸ்ட் முக்கியம், இது ரெண்டையும் பேலன்ஸ் பண்ற போல ஒரு ரெசிபி தான்,
குலுக்கு ரொட்டி, குழந்தைகளுக்கு சாக்கோ பால்ஸ் ன்னு சொல்லி குடுத்து பாருங்க, நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா அவங்களே உங்க கிட்ட வேணும்னு வந்து நிப்பாங்க…” என்று பெண்ணவள் தொடர்ந்து அதன் செய்முறை விளக்கங்களை விரிவாக சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் குரல் வரக்கூடிய அந்த காணொளியை பார்க்கும் பொழுது , அவனுடைய உள்ளத்தில் ஒரு பதட்டமா, காத்திருப்பா, மென்மையான துடிப்பா ஏதோ ஒன்று ஓடிச் சென்றது. எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாத ஓர் நிம்மதியை தந்தது.
அவள் குரல் அவனது மனதில் மெல்லிசை பாடல் போல ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த குரல் அவனுக்கு அமைதியை இனிமையாய் கொடுத்தது எனலாம்.
அவனது மனமோ எப்போதும் போல, ‘சச் அ மெஸ்மெரிசிங் வாய்ஸ்… இட்ஸ் ஹெவன்லி ஏஸ்தெட்டிக் ஃபீல்…’ என்று வியந்து நினைக்க, அந்த சமையல் வீடியோவை முடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதில் இருப்பது யார் எவர் என்ற தெரியாமல் போனாலும், அதில் சமையலை தவிர்த்து எவ்வித உணர்வுகளை பற்றியும் கூறாத போதிலும், அந்த அரோமா பேசும் விதம், பக்குவமாக சமைப்பது, அந்த சமையலில் எடுத்துக்காட்டும் பழைய பாரம்பரியம், அதில் உபயோகப்படுத்தும் உபகரணங்கள், அவளது உள்ளங்கையில் போட்டிருக்கும் மருதாணியின் அடர் சிவப்பு நிறம், அவள் அணிந்திருக்கும் அந்த கண்ணாடி வளையிலின் மெல்லிய சினுங்கல்… என்று அனைத்தும் ஒரு அழகிய கவிச் சிந்தனையை போல இருந்தது.
இவை அனைத்துமே அவனுக்கு ஒரு அழகியல் தோற்றத்தை கொடுத்தது. அவளது சமையலின் ஒவ்வொரு அசைவும் அவனது பார்வையில் கவிதையாகவே பட்டது.
எல்வின் மனமோ, “காட், இந்த வாய்ஸ்யை கேட்டுடவே கூடாதுன்னு நினைச்சாலும் கூட, கேட்காமல் இருக்க முடிய மாட்டேங்குது… இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாருன்னே தெரியல… இது ஒரு பெண்ணா, ஆன்டியா ன்னு கூட எனக்கு சரியா தெரியல, அப்படி இருந்தாலும் கூட இந்த குரலை கேட்ட அடுத்த நிமிஷம் மயங்கி போய் தான் கேட்டுட்டு இருக்கேன்… என்ன நினைச்சா எனக்கே கோபம் தான் வருது...” என்று வெளிப்படையாகவே திட்டிக் கொண்டான்.
அவனது புத்திக்கு எல்லாமே புரிந்து இருந்தாலும் கூட, மனமோ அவனது பேச்சை துளியும் கேட்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்ததில் நொந்து போய் விட்டான் எல்வின் ஆரோன்.
25. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 25
கதவைத் திறந்து வெளிவந்தவனைக் குடும்பம் மொத்தமும் வரவேற்றது. அவர்களைக் கண்டும் காணாமலும் கடக்க நினைத்தவனை, “ஹா ஹா…” என்ற சத்தம் வெறுப்பேற்றியது. ஆட்டோ சாவியைக் கையில் நுழைத்துச் சுற்றிக்கொண்டு,
“ஒன்னு கூடிக் கலாய்க்கிறீங்களா? என் பொண்டாட்டி மட்டும் சமாதானம் ஆகட்டும், இந்த வீட்டுப் பக்கமே தலை வச்சுப் படுக்க மாட்டேன்.” என்றான்.
“இந்த முடிவ அப்பவே எடுத்திருந்தா, இந்த நிலைமைல நின்னிருக்க மாட்ட.”
“என்னம்மா பண்ண? நீங்க எல்லாரும் இவ்ளோ விஷமா இருப்பீங்கன்னு தெரியலையே.”
மீண்டும் நால்வரும் சேர்ந்து சிரிக்க, நிற்க முடியவில்லை கருடனால். கடுப்போடு இரண்டு சவாரிகளை முடித்துவிட்டு, மாமியாரின் பயிலகத்திற்கு வந்தமர்ந்தவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு ஃபேக்டரிக்குக் கிளம்பினான். அங்குத் தாலி கட்டியவள் இல்லை என்பதை அறிந்தவன் மாமனாரை அழைத்து விபரத்தைக் கேட்க,
“வீட்லதான் இருக்கா…” தகவல் கொடுத்தார்.
“ஆபீஸ் வரலையா?”
“தெரியலப்பா, நீதான் வந்து கேட்டுப்பாரு!”
“கிண்டலா மாமா?”
“அட நிஜமாப்பா… எவ்ளோ நாள் தான், நீயும் இப்படிப் பின்னாடியே ஓடிக்கிட்டு இருப்ப. டக்குனு வந்து முடிச்சு விடு.”
“கோபம் குறையுற வரைக்கும் கிட்ட வர முடியாது மாமா…”
“என் பொண்ணு மேல அவ்ளோ பயமா?”
“இப்படி ஒரு பொண்ணை வளர்த்து வச்சிருக்கோம்னு கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சி இல்லாமல் கேக்குறீங்க பார்த்தீங்களா?”
“அடிக்கடி மாமனார் என்றதை மறந்துட்டுப் பேசுறீங்க மாப்பிள்ளை.”
“என்ன பண்றது மாமனாரே? என்னையும் மீறி வந்துடுது!”
“அது சரி, நீங்களாச்சு. என் பொண்ணாச்சு!” என வைத்து விட்டார்.
என்ன செய்வதென்று தெரியாமல் நடுரோட்டில் நின்றிருந்தவனைத் தாண்டிச் சென்றார் பூ வியாபாரி. இன்றைக்குக் காதலர் தினம் என்பதால், வகை வகையான நிறத்தில் ரோஜாப் பூக்கள் குவிந்து இருந்தது. நின்று கொண்டிருந்தவன் கவனம் அதில் திரும்பியது. புத்தி நல்ல யோசனை கூறியது. மெல்லக் காதலோடு சிரித்தவன், கைகொள்ளா அளவிற்கு ரோஜாப் பூக்களை வாங்கிக் கொண்டு,
“ஆட்டோக்காரன் கம்மிங் முதலாளி…” சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
தன்னவன் முகத்தைப் பல மாதங்கள் கழித்துப் பார்க்கப் போவதை அறியாது, கடல் அலையைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். எப்போதும் அவளுக்கு இந்த அமைதி சொந்தம். ஆனால், கருடன் வருவதற்கு முன்னால் அதில் ஒரு அழுத்தம் இருக்கும். இப்போது அது காதலாக மாறியிருக்கிறது. அவன் கொடுத்த காதலிலும், நிராகரிப்பிலும் அவளுக்குள் மட்டும் இருந்த அமைதி, அவளையே அமைதியாக மாற்றிவிட்டது.
மனத்தில் என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியவில்லை. அவனது நிராகரிப்பும், அதற்கான காரணமும் அவன் பக்கம் இருந்து பார்த்தால் சரி என்று உணர்ந்தவளால், தன் பக்கம் இருந்து சரி என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. தன் ஒருத்திக்காக அவனை வளைய வைப்பதற்குப் பதில், அவன் விருப்பப்படியே விலகி இருக்கலாம் என்ற முடிவில் தான் இத்தனை நாள்களும் போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். ஆனாலும், மனம் அவனுக்கானது அல்லவா! ஓயாமல் அவன் நினைவுகளை ஞாபகப்படுத்தித் தொந்தரவு செய்கிறது.
அதிலும், இந்த அறை அவன் ஞாபகங்களை மட்டும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து தப்பிப்பதற்காக, வேலைக்கு ஓடுபவளைப் பின்னால் துரத்தி வருகிறான் கட்டியவன். வந்துவிட்டதால் ஓடிச் சென்று அணைக்கவும், வேண்டாம் என்ற முடிவில் உறுதியாகவும் இருக்க முடியாது தள்ளாடிக் கொண்டிருக்கிறாள்.
மனையாளின் நினைவில் வீட்டின் முன்பு நின்றவனுக்கு முதன்முதலாக நின்ற நினைவு. தனக்குள் சிரித்துக் கொண்டு கதவைத் திறந்தவனைக் கண்ட காவலாளி இன்பமாக அதிர, இவரே இப்படி என்றால் தன்னவள் முகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு உள்ளே நுழைந்தான். வழக்கம்போல் அறைக் கதவு சாற்றப்பட்டு இருந்தது. திறப்பதற்கு முன்னால், தன் அலங்காரங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டான். மனைவியைக் கவர்வதற்காக, அவளுக்குப் பிடித்த நிறத்தில் உடை அணிந்தவன் பளபளவென்று சிங்காரித்துக் கொண்டு வந்திருக்கிறான்.
மூச்சை இழுத்து விட்டுக் கதவைத் திறந்தான். கண்கள் அறையை வட்டமிட்டது. அலைபாய்ந்து வந்து கொண்டிருந்த கண்கள், பால்கனிப் பக்கம் சென்றதும் ஸ்தம்பித்து நின்றது. அடியெடுத்து வைத்தவன் கால்கள் அங்கேயே உறைந்தது. தன் கண்ணையே தன்னால் நம்ப முடியாது இன்பமாக அதிர்ந்தவன், தோள் வரை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் அந்தக் கூந்தலை ரசித்துக் கொண்டே நடந்தான்.
அவள் மனத்தில், தன் மீதான எண்ணங்கள் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவளின் கூந்தலே பதில் சொல்லியது. பட்டு நூல்கள் கருப்பு நிறத்தில், காதைத் தாண்டி லேசாகத் தோளைத் தொட்டு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. திகட்டாத இன்பத்தேனை அள்ளி அள்ளிப் பருகியது போல் பின்னால் வந்து நின்றவன் முகத்தில் கடற்கரையின் காற்று தழுவிச் சென்றது. கண்மூடித் திறந்தவன் முன்னால் அந்தக் குட்டிக் கூந்தல்.
அவன் வந்ததை அறியாது, சிலை போல் நின்றிருந்தவள் கூந்தலுக்குள் நுனி மூக்கை நுழைத்தவன், அதன் வாசத்தை நுகர்ந்து மெய் மறந்து போனான். அந்த மூச்சுக்காற்றில் திரும்பினாள் ரிதுசதிகா. பின்னால் இருந்து கூந்தலை மட்டுமே ரசித்து மதி மயங்கிப் போனவன், அவள் மதி முகத்தில் தொலைந்து போனான். கண்கள் சொருகப் போதை தலைக்கேறிய ஆசாமி, தன்னையும் மீறி அவளோடு நெருங்கி நின்று முகத்தோடு முகம் உரசத் துணிந்தான்.
தூக்கத்தில் கனவு காண்பது போல், ஒரு நிமிடம் அவன் உருவத்தைக் கண்டு குழம்பியவள் தன்னை மோத வரும் அவன் முகத்தில் தெளிந்து நகர்ந்து நின்றாள். உறவாட வந்தவன் சுவரில் மோதி அதில், “உம்மா…” என்றான்.
சுவரிற்கு முத்தம் கொடுத்தவனைக் கட்டியவள் முறைக்க, கொடுக்க வைத்ததற்காக அவனும் முறைத்தான். இருவரின் முறைப்பும் பத்து நிமிடம் கூட நீடிக்கவில்லை. அவன் முகத்தைப் பார்க்கத் தைரியம் இன்றி ரிது திரும்பிக் கொள்ள, திரும்பும் முன் முத்தமிட்ட சுவரைப் பார்த்துவிட்டுத் திரும்பியதைக் கவனித்தவன் கோபம் ‘புஸ்’ என்றானது.
“ம்க்கும்! ம்க்கும்!” பலமாகத் தொண்டையைச் செருமிடத் திரும்பவில்லை அவள்.
“எப்படி இருக்க முதலாளி?” என்றதற்கும் பதில் இல்லாமல் போக, கைப்பிடித்தான்.
உடனே தட்டி விட்டவள் நகர, தடை விதித்துத் தன்பக்கம் திருப்பிக் கொண்டவன் சுவரோடு நிற்க வைத்து, “ரொம்ப அழகா இருக்க…” என்றான்.
“எதுக்கு வந்த?”
“இந்த அழகுல நான் மயங்கி விழுந்திடக் கூடாதுன்னு தான், ஹேர் கட் பண்ணி வச்சிருந்தியா?”
“எதுக்கு இங்க வந்தன்னு கேட்டேன்?”
“ப்ச்! எனக்காகவா?”
“உன்னை யாரு உள்ள விட்டது?”
“அவ்ளோ லவ்வா?”
“வெளிய போ…”
“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!”
“நீயா போயிட்டினா மரியாதை!”
“சத்தியமா எதிர்பார்க்கல. பார்த்ததும் அப்படியே உடம்புக்குள்ள ஏதோ ஒன்னு புகுந்த மாதிரி ஆளைத் தள்ளுது.”
“வெளிய போ…”
“அணுஅணுவா பக்கத்துல இருந்து ரசிக்க வேண்டியவன்… பெரிய தப்புப் பண்ணிட்டேன்!”
“போ…”
“என்னால கண்ட்ரோலே பண்ண முடியல.”
“கைய விடுடா…” என உதறிய பின் தான் புத்தி தெளிந்தது.
பெருமூச்சோடு, “சாரி ரிது!” என்றிட, “முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். திரும்பவும் பிள்ளையார் சுழி போட நான் விரும்பல. ஆரம்பத்துல இருந்தே நீ ரொம்பத் தெளிவா தான் இருந்திருக்க. நான்தான் சொன்னது ஒன்னும், நடந்துக்கிட்டது ஒன்னாவும் இருந்திருக்கேன்.” என அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கட்டி அணைத்தான்.
“சத்தியமா உனக்காகத் தான்…” எனும் பொழுதே அவனைத் தள்ளி விட்டவள்,
“உன்னோட முடிவு சரியா இருந்ததால தான் நானும் விலகிட்டேன். திரும்ப எதுக்காக வர? என் மேல பாவப்பட்டு வரியா? உன்னோட பரிதாபம் எனக்குத் தேவையில்லை. ரிது அந்த அளவுக்கு வீக்கான பொண்ணு இல்ல. அவளால அவ நேசிச்சவங்க இல்லாம வாழ முடியும்.” என்றாள்.
“நான் இல்லாம?”
“ஏன்? இருக்க முடியாதுன்னு நினைக்கறியா?”
“ஆமா!” என்றவனை அழுத்தமாகப் பார்த்தவள், “முடியும்!” என்றாள்.
“அப்புறம் ஏன் கண்ணு கலங்குது?” என்றதும் திரும்பியவள், “முதல்ல இங்க இருந்து கிளம்பு…” கத்தினாள்.
அமைதியாக நின்றிருந்தவனுக்கு, அவள் முகம் தெரியவில்லை என்றாலும் உணர்வுகள் தெரிந்தது. அதில் மனம் கரைந்து போனவன், “திரும்பு!” என்றான்.
அவளோ விடாப்பிடியாக அப்படியே நின்றிருக்க, “நீ திரும்புனா, நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டுப் போயிடுவேன்.” என்றதும் தனக்குள் ஆயிரம் சமாதானங்கள் சொல்லிக் கொண்டு திரும்பியவள், அவன் முகம் பார்க்காது தலைகுனிந்து கொள்ள பூங்கொத்தை அவள் முன்பு நீட்டினான்.
வண்ண நிறங்களில் பூத்துச் சிரிக்கும் ரோஜாக்களைப் பார்த்தவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு, “ஐ லவ் யூ பொண்டாட்டி!” என்றிட, அவள் விழிகள் சொந்தமானவன் விழிகளை நோக்கியது.
ஆழமாகப் பார்த்த கருடன், “ஐ லவ் யூ சொல்லி, கல்யாணம் பண்ணி, சண்டை போட்டு, வேண்டாம்டா சாமின்னு பிரியனும்… நம்ம எல்லாத்தையும் தலைகீழா பண்ணிட்டோம். இனியாவது சரியாப் பண்ணனும்னு நினைக்கிறேன்.” என்று விட்டு மண்டியிட்டான்.
“நம்ம லைஃப்ல நிறைய நடந்துருச்சு. அதுக்கு நான்தான் அதிகக் காரணம். இன்னைக்கு உனக்கு நான் ஒரு ப்ராமிஸ் பண்றேன். இனி எப்பவும் உன்னை விட்டுப் போக மாட்டேன். நீயே வேண்டாம்னு சொன்னாலும், இந்த ஆட்டோக்காரன் போக மாட்டான். என் பொண்டாட்டியக் கஷ்டப்படுத்துனதுக்காக இனி இந்த உடம்ப விட்டு உயிர் போற வரைக்கும், அவளுக்காக மட்டும் வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன். இந்த ஆட்டோக்காரனை ஏத்துக்க…” என மனதாரப் புன்னகைக்க, அவன் முகம் பார்ப்பதை மட்டுமே செய்து கொண்டிருந்தாள் ரிதுசதிகா.
மூளைக்கும், மனத்திற்கும் அவன் வார்த்தைகள் புரிந்தாலும், உடல் செயலற்றுப் போனதால் அப்படியே இருக்க, “ஐ லவ் யூ டி…” என்றான். உதடுகளைக் குவித்துப் பறக்கும் முத்தத்தை அவள் உதட்டிற்குத் தூது அனுப்பினான். அதன் கனம் தாங்க முடியாது அறையை விட்டுச் சென்று விட்டாள்.
பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், அவள் சென்ற பின்னும் சிரித்த முகத்தை மாற்றிக் கொள்ளாமல் பூங்கொத்தை மெத்தையில் வைத்து விட்டு வெளியேறினான். வெகு நேரம் கழித்து அறைக்குள் வந்தவளை அந்தப் பூங்கொத்து வரவேற்றது.
கண்ணீர் கரைய, மெத்தை அருகில் சென்றவள் அதைக் கையில் எடுக்கப் போக, “மிஸ் யூ முதலாளி!” என்று அவன் எழுதி வைத்து விட்டுச் சென்ற வாசகம் உயிர் நாடியைத் தொட்டு வந்தது.
இரண்டையும் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டவள் அவன் நினைவில் கரைய, நேராக வீட்டிற்குச் சென்றவன் சரளாவின் காலில் தொப்பென்று விழுந்தான்.
தீவிரமாகச் சமைத்துக் கொண்டிருந்தவர் திடுக்கிட்டுக் கையில் பிடித்திருந்த கரண்டியை அவன் மீது போட்டார். கொதித்துக் கொண்டிருந்த குழம்பு மேலே பட்டும் சொரணை இல்லாது,
“என்னை என் பொண்டாட்டி கூடச் சேர்த்து வைம்மா…” என்றான் பாவமாக.
“ச்சீ! எந்திரிடா…”
“உன் மருமகளோடு சேர்த்து வைப்பேன்னு என் தலையில அடிச்சுச் சத்தியம் பண்ணு. அப்பத்தான் எந்திரிப்பேன்.”
“என் மருமகள் வாழ்க்கை இப்பத்தான் நல்லா இருக்கு. திரும்ப அதைக் கெடுக்க என்னால முடியாது.”
“தாயே…” என வெகுண்டு எழுந்தவனைக் கண்டு கொள்ளாது சமைக்கும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தவன், முடியாததால் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் தந்தையிடம் கோரிக்கை வைக்க, “இவனை என்னன்னு கேளு சரளா…” அலட்சியமாகச் சொல்லிவிட்டு அவர் வேலையைக் கவனித்தார்.
“என்னடா?”
“ப்ளீஸ்மா…”
“என்னடா பண்ணச் சொல்ற?”
“எப்படியாவது ஒரு நாள் மட்டும் அவளை என்கூட இருக்க வச்சிடு. சமாதானம் செஞ்சு என் வாழ்க்கையைக் காப்பாத்திக்கிறேன்.”
“உன் வீட்டுக்கு ஓட வேண்டியதுதான, இங்க உட்கார்ந்துட்டு எதுக்கு எங்க உசுர வாங்கிக்கிட்டு இருக்க…”
“எது?”
“ப்ச்! என்னால எதுவும் பண்ண முடியாது.”
“அங்கப் போறது பிரச்சினை இல்ல. அவ டக்குனு சமாதானம் ஆக மாட்டா. இந்த வீட்டுக்கு ஒரே ஒரு தடவை வந்துட்டால் போதும். உங்க எல்லாரையும் பார்த்துப் பேசினா அவ மனசு கொஞ்சம் லேசாகிடும். அதை வச்சே நான் சமாதானம் பண்ணிடுவேன்.”
“அண்ணன் தான் இவ்ளோ கேக்குதுல்லம்மா, ஏதாச்சும் பண்ணு.”
“நீ வேற சும்மா இருடி!”
“அண்ணன் பாவம்மா…” என்றான் மூர்த்தி.
“நாளைல இருந்து வேலைக்குப் போகணும். அதுக்கான வேலையைப் போய் பாரு.”
யார் சொல்லியும் கேட்காத அன்னையின் காலைப் பிடித்து வழிக்குக் கொண்டு வந்தவன், “இந்த வீட்டுக்குக் கூட வேண்டாம்மா, வேற எங்கயாவது நம்ம எல்லாரும் சேர்ந்து மீட் பண்றதுக்கு மட்டுமாவது ஏற்பாடு பண்ணு. அன்னைக்கு பீச்சுல அவ ரொம்பச் சந்தோஷமா இருந்தா. அந்த மாதிரி ஒரு இடமா இருந்தா அவ மனசு லேசாகிடும். நானும் ஈசியா சமாதானம் பண்ணிடுவேன்.” என்றவனைக் கேவலமாகப் பார்த்தவர் ஒரே ஒரு போன் காலில் மருமகள் சம்மதத்தை வாங்கி விட்டார்.
எட்டாவது அதிசயமாக வாய் பிளந்து பார்த்தவன் எப்படி என்று கேட்க, “நான் டெய்லி என் மருமகள் கிட்டப் பேசிட்டுத் தான்டா இருக்கேன்.” குண்டைத் தூக்கி அவன் தலை மீது போட்டார்.
“கேட்டீங்களாப்பா, அம்மா சொல்றதை…”
“அவரும் தான்டா பேசிட்டு இருக்காரு!”
“என்னை மட்டும் ஏன் மாட்டி விடுற சரளா…” என்றதும் அவன் பார்வை நதியா மீது செல்ல, “ஈஈஈ” என இளித்தாள். அவளை முறைத்தவன் பார்வை நம்பிக்கையோடு மூர்த்தி மீது திரும்ப, “இவன் நாளைல இருந்து வேலைக்குப் போறேன்னு சொன்னான்ல. அந்த வேலையை வாங்கிக் கொடுத்ததே அண்ணி தான். நேத்து அண்ணி கூட தான் போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வந்தான்.” என்றதும் நெஞ்சில் கை வைத்துத் தரையில் அமர்ந்தான் கருடேந்திரன்.
அவனை நால்வரும் பாவமாகப் பார்க்க, “நல்லா இருங்க போங்க.” என்றான்.
“தேங்க்யூ!” கோரஸாகக் குடும்பமே நன்றியுரைக்க, வாய்க்குள்ளே புலம்பிக் கொண்டு தன் அறைக்குச் சென்றவன், வேகமாக வெளியில் வந்து மூர்த்தியைப் போட்டு அடிக்க ஆரம்பித்தான்.
அவனைத் தடுத்துப் பிடித்த மூவரும் காரணம் கேட்க, “எல்லாம் இந்தப் பரதேசிப் பையனால வந்தது. பண்றதெல்லாம் பண்ணிட்டு அவ கூடவே போய் வேலை வாங்கிட்டு வந்திருக்கான்.” புலம்பியவன் மற்ற மூவரையும் அடிக்க முடியாததால், அவர்களுக்கும் சேர்த்து மூர்த்தி தலையிலேயே கட்டிவிட்டுச் சென்றான்.
***
சரளாவின் முடிவுப்படி குலதெய்வக் கோவிலுக்குப் போகிறார்கள். வேன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான் கருடன். குளிரூட்டி நிரம்பிய வேன் என்பதால் தொகை அதிகம் வர, “சாதாரண வண்டி எடுக்காம ஏன்டா ஏசி வச்சதை எடுத்திருக்க…” கேட்டார் சத்யராஜ்.
“என் பொண்டாட்டிக்காக!” முறுக்கிக் கொண்டு பதில் கொடுத்தான்.
அன்றைய மாலையே வீட்டிற்கு ஏசி வர, “என் பொண்டாட்டிக்கு!” பதில் வந்தது அவனிடமிருந்து.
போதாக்குறைக்கு கல், மணல், செங்கல் அனைத்தும் வந்திறங்க, “மேல எங்களுக்குன்னு தனியா ரூம் கட்டப் போறேன்.” என்றான்.
“அப்ப எதுக்குடா, கீழ் ரூம்ல ஏசி மாட்டுற?”
“என் பொண்டாட்டிக்காக!”
“திரும்ப மேல போனதும் மாத்துவியா?”
“ஆமா!”
“எதுக்குடா ஒன்னுக்கு ரெண்டு செலவு. கொஞ்ச நாள் வெயிட் பண்ணா மேலயே மாட்டிக்கலாம்ல.”
“உங்க பொண்டாட்டி ஏசி இல்லாம தூங்குவாங்க. என் பொண்டாட்டி தூங்க மாட்டா… இந்த இத்துப்போன வீட்டுக்கு அவ வரதே பெருசு. இதுல ஏசி இல்லாமல் தூங்கணுமா? எவ்ளோ செலவானாலும் அதை நான் பார்த்துக்குறேன்.”
“இவன் என்ன சரளா, இப்படிப் பேசிட்டுப் போறான்.”
“ஈவினிங், அவன் ரூமுக்குப் பெயிண்ட் அடிக்க ஆள் வேற வராங்களாம்.”
“இது வேறயா?”
“விடுங்க… எப்படியும் நம்ம மருமகள் இவனைச் சீண்டக் கூட மாட்டாள்.” என்றது அவன் காதில் தெளிவாக விழுந்தது.
திரும்பி அன்னையை ஒரு முறை முறைக்க, “நீ வரலன்னு சொன்னதால தான்டா, அவ எங்க கூட வரவே சம்மதிச்சா… எங்கடா, அதைச் சொன்னா உன் மனசு கஷ்டப்படும்னு சொல்லாம வச்சிருந்தேன்.” என்றவர் பேச்சைக் கேட்டு மொத்தக் குடும்பமும் சிரித்தது.
“உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? அவ என்னைப் பார்க்கத் தான் வரா…”
அவன் வார்த்தைக்கு மீண்டும் அனைவரும் சிரிக்க, “அவ வந்ததும் முதல்ல யாரைத் தேடுறான்னு மட்டும் பாருங்க.” சவால் விட்டுவிட்டுச் சென்றான்.
***
தொடக்கம் என்று இருந்தால் முடிவு என்றும் இருக்கும். அந்த முடிவை நோக்கி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கருடேந்திரன் காத்திருக்க, புகுந்த வீட்டு ஆள்களைக் கண்டு சிரித்த முகமாக இறங்கினாள் ரிது. மனைவியைக் கண்டதும் வெட்கத்தில் முகம் சிவந்தவன், தன்னை அழகாகக் காட்டிக் கொள்ளக் கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு முதலாளாக நிற்க, வந்ததும் கண்கள் அவனைத் தேடியது.
அதை அவன் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரும் கவனித்தார்கள். அவையெல்லாம் தேடியவன் கிடைக்கும் வரை மட்டுமே! கண்டபின் நீயா! என முகத்தை மாற்றிக் கொண்டு அவனைக் கடக்க, பல்லைக் கடிக்கும் ஓசை தெளிவாகக் கேட்டது அவளுக்கு.
“வாம்மா…” என்ற மாமியாரிடம், “உங்க பையன் வரமாட்டான்னு தான சொன்னீங்க.” முகத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள்.
“நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்க மாட்டேன்னு வந்து நிக்கிறான். எங்களை என்னம்மா பண்ணச் சொல்ற? நீயே மூஞ்சில அடிச்ச மாதிரி வராதடான்னு சொல்லிட்டு வாம்மா…”
“நான் எதுக்குச் சொல்லணும்? உங்க பையனுக்கும், எனக்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லைன்னு உங்களுக்குத் தெரியாதா?”
“கேட்டியாடா. என் மருமகள் என்கூட வரது பிடிக்கலையா உனக்கு? ஒழுங்கா உள்ள போடா…”
“இந்தாம்மா, புது மாமியார் சரளா… நான் உங்ககூட வரேன்னு எப்பச் சொன்னேன்?” என்றதும் ஒரு நொடி அவள் முகம் மாறியது.
அதைக் கண்டதும் கண்ணாடியை விலக்கிக் கண்களைச் சுருக்கிப் பார்த்தவன், “என்னோட புது கேர்ள் ஃபிரண்ட பார்க்கப் போறேன்.” என்றான்.
“அந்தப் பொண்ணு கூடயாவது ஒழுங்கா வாழுடா…” என்ற சத்யராஜ் பேச்சுக்கு அங்குச் சிரிப்பலைகள் எழுந்தது.
வெளிப்படையாகத் திட்ட முடியாததால், வாயிற்குள் திட்டிக் கொண்டவன் தூரம் சென்று நின்று கொண்டான். அனைவரும் வண்டியில் ஏறினார்கள். கடைசியாக ஏற நின்றவள் தூரமாக நிற்கும் அவனைப் பார்த்துவிட்டு ஏற, ‘இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை.’ உள்ளுக்குள் புலம்பிக் கொண்டான்.
வண்டி புறப்பட்டது. உண்மையாகவே அவன் வரவில்லை என நினைத்த வீட்டு ஆள்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ரிதுவைப் பார்க்க, அவளது சிந்தனை மொத்தமும் அவனைச் சுற்றியே இருந்தது. வண்டி நகர ஆரம்பித்ததும், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவளைக் கண்டு கண்ணடித்தவன் வேகமாக உள்ளே வந்து ஏற, ‘இதுவா திருந்தும்?’ என அவளும் புலம்பிக் கொண்டாள்.
“சாரி Guys! என் கேர்ள் ஃப்ரெண்டப் பார்க்க டைம் ஆயிடுச்சு. போற வழியில விட்டுட்டுப் போயிடுங்க.”
முறைத்துக் கொண்டிருக்கும் தன்னவளை உரசிக் கொண்டே அமர்ந்தவன், “சாரில செமையா இருக்க… பார்த்ததும் பத்து குலாப் ஜாமூனை அள்ளி வாயில போட்ட மாதிரி இருந்துச்சு.” எனத் தோளை இடித்தவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.
ஜன்னல் கம்பியோடு ஒடுங்கிப் போகும் அளவிற்கு நெருங்கி அமர்ந்தவன், “சும்மா சொல்லக் கூடாது, செம கட்ட நீ…” என்றிட, அவளின் முறைப்பு அதிகமானது.
“ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கிட்டா…”
நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டும் கேட்காதவன், முத்தம் கொடுப்பதில் குறியாக இருக்க,
“அத்தை!” கத்தி அனைவரையும் தங்கள் பக்கம் திருப்பினாள்.
“உங்க பையன் என்கிட்டத் தப்பா பிகேவ் பண்றாரு. இதுக்குத்தான் நான் வரமாட்டேன்னு சொன்னேன். தேவை இல்லாம வர வச்சு எதுக்கு டென்ஷன் பண்றீங்க?”
“உங்க மருமகள் இப்படித்தான் ஏதாச்சும் சொல்லிட்டு இருப்பாம்மா. நீங்க கண்டுக்காதீங்க…”
“வண்டியை நிறுத்தச் சொல்லுங்க அத்தை. நான் வீட்டுக்குக் கிளம்புறேன்.”
“ஏன்டா, அவகிட்டப் பிரச்சினை பண்ற?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா, அவ சும்மா நடிக்கிறா…”
“இப்ப வண்டிய நிறுத்தச் சொல்றீங்களா இல்லையா?”
“ஏய்! எதுக்கு ஓவரா சீன் போடுற. இப்ப என்ன நடந்து போச்சு? சும்மா பேசிட்டுத் தான இருந்தேன்.”
“நீ யாரு என்கிட்டப் பேச… உனக்கும் எனக்கும் என்ன இருக்கு? நீ வர மாதிரி இருந்தா நான் வரல, வண்டியை நிறுத்தச் சொல்லு, அவ்ளோதான்!”
“என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு ரிது. சும்மா, எல்லாம் நான்தான் பண்ணேன் என்ற மாதிரிப் பேசாத. எவ்ளோ நாள் தான் சாரி கேட்கிறது? உன் ஒருத்திக்காகத் தான் இவ்ளோ செலவு. நீ பாட்டுக்குப் போறன்னு சொல்ற…”
“நானா செலவு பண்ணச் சொன்னேன்? நீ சாரி கேட்டதும், நான் சரின்னு தலையாட்டனுமா? நீ என்கூட வரது எனக்குப் புடிக்கல. ஒன்னு நீ இவங்களோட போ… இல்ல நான் போறேன்!”
அதுவரை வராத கோபம் அவன் உச்சந்தலையில் நின்று அவனை ஆட்கொள்ள, “நீயே போ… திரும்பி நீ வரும்போது நான் இருக்க மாட்டேன்.” என்று விட்டு வண்டியை விட்டு இறங்கினான். யார் பேச்சையும் கேட்காமல் நடை போட, அவன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தையோடு உறைந்து விட்டாள்.
24. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 24
சத்யராஜ் வழியாக அவ்விஷயத்தைக் கேட்டு அனைவரும் அதிர, அறைக்குள் படுத்திருந்தவன் அலறியடித்து வெளியே ஓடி வந்தான். மகன் கன்னத்தில் அறைந்த சரளா, “கேட்டியாடா… எல்லாம் உன்னால தான்.” மீண்டும் போட்டு அடிக்க, “ரி… ரி…” என்றதற்கு மேல் அவன் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.
அடித்து ஓய்ந்த சரளா மருமகளைக் காண அழுது கொண்டே ஓட, அவரைத் தாண்டி ஓடினான். அதிவேகத்தையும் தாண்டி அசுர வேகத்தில் வந்தடைந்தவனை வாசலில் தடுத்துப் பிடித்த பொன்வண்ணன், “எதுக்குடா இங்க வந்த? என் பொண்ணு இருக்காளா, செத்துட்டாளான்னு பார்க்க வந்தியா…” அவ சாவுக்கு நீ தான்டா காரணம்! உன்னையும், உன் குடும்பத்தையும் என்ன பண்றேன்னு பாரு.” கத்திக் கொண்டிருந்தார்.
“ஐயோ மாமா, அவள் அங்க என்ன நிலைமைல இருக்கா… லூசு மாதிரிப் பேசிட்டு இருக்கீங்க. ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போகணும், தள்ளுங்க!” என்றவனை உள்ளே அனுமதிக்காதவர் கதவை மூட முயன்றார்.
அதற்கு இடம் தராது, திடமான தேக்குக் கதவை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் மனைவியைப் பார்க்க ஓடினான். பின்னால் வந்த பொன்வண்ணன் அவன் சட்டையைப் பிடித்துக் கீழே தள்ளிவிட, அவன் வீட்டு ஆள்கள் அனைவரும் வந்துவிட்டனர்.
“முதல்ல அவளைக் காப்பாத்தணும் மாமா…”
“டேய்! என் பொண்ணைக் காப்பாத்த நீ யாருடா? இவ்ளோ பெரிய வசதியை விட்டுட்டு, உனக்காக வந்தவளை மனசாட்சியே இல்லாம துரத்தி விட்டுட்டு இப்ப என்னடா நடிக்கிற? ரிது அப்பவே உன்னைப் பத்திச் சொன்னா… நான் தான் முட்டாள் மாதிரி உன்னை நம்பி இப்படி ஒரு நிலைக்குத் தள்ளிட்டேன். என் பொண்ணு சொன்ன மாதிரி, குடும்பத்தோட சேர்ந்து என் சொத்தை அபகரிக்கத்தான இப்படி ஒரு நாடகத்தைப் போட்டிருக்கீங்க.”
“என்ன பேசுறதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கோங்க மாமா. முதல்ல அவளை நான் பார்க்கணும், போக விடுங்க.”
“மரியாதையா வெளிய போடா. இனிப் பார்க்கக் கூடாத எந்த வேலையும் பார்க்க நான் தயாரா இல்லை.” என்றதும் கையெடுத்துக் கும்பிட்டவன், “நான் பேசுனதெல்லாம் தப்புதான் மாமா… தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. வேணாம்னு சொன்னது அவளோட நல்லதுக்காகத்தான்! அவ நல்லா இருக்கணும்னு தான் அப்படி ஒரு வேலையைச் செஞ்சேன். என்ன ஏதுன்னு தெரியாம வார்த்தையை விடாதீங்க. அவளைக் காப்பாத்தணும்… ப்ளீஸ்!”
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா அவ்ளோதான்! என் பெண்ணை எப்படிக் காப்பாத்தணும்னு எனக்குத் தெரியும். முதல்ல உன் வீட்டு ஆளுங்களைக் கூப்பிட்டுகிட்டுக் கிளம்புடா.” என மருமகனைப் பிடித்துத் தள்ளி விட்டார்.
விழுந்த வேகத்தில் எழுந்து நின்றவன், “யோவ்! அறிவில்ல உனக்கு. பொண்ணு சாகுற நிலைமைல இருக்கா, புத்தி கெட்ட தனமாப் பேசிட்டு இருக்க. நான்தான் சொல்றேன்ல, உன் பொண்ணு நல்லதுக்காகத்தான் அப்படிப் பண்ணேன்னு.” கத்தினான்.
அதைவிட அதிகக் கூச்சலோடு, “அப்படி என்னடா, என் பொண்ணு நல்லதுக்காகப் பண்ண… உன்ன மாதிரி ஒரு தரம் கெட்டவன் வார்த்தையை இன்னும் நம்புவேன்னு நினைச்சியா?” கேட்டார்.
“ஆமாய்யா! நான் தரம் கெட்டவன் தான்… தரமே இல்லாதவன் தான்! இந்தத் தரம் இல்லாதவனுக்கு, உன் பொண்ணு கூட வாழத் தகுதி இல்லன்னு தான்யா மனசக் கல்லாக்கிட்டு, அவ மனச உடைச்சு அனுப்பினேன். இப்படி ஒரு வசதிய என்னால கொடுக்க முடியுமா? காத்து படாம, கஷ்டம் தெரியாம வளர்த்த உன்ன மாதிரி என்னால வச்சிருக்க முடியுமா?
உன் பொண்ணு, அந்தக் குப்பை வீட்டுல வந்து சந்தோஷமா வாழ்வாளா? இந்த ஆட்டோக்காரனைப் புருஷன்னு சொல்லிக்க முடியுமா? தப்பே பண்ணாதவளை, எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ அவ்ளோ அசிங்கப்படுத்திட்டேன். அந்தக் குற்ற உணர்ச்சியைத் தொடச்சிப் போட்டுட்டு, சந்தோசமா இருக்க முடியுமா? உண்மை தெரிஞ்ச நாள்ல இருந்து உள்ளம் குத்துதுய்யா! அவளுக்குச் செஞ்ச பாவத்துக்கு எப்படிப் பிராயச்சித்தம் தேடுறதுன்னு தெரியல.” ஆக்ரோஷமாகத் தன் மனத்தை உடைத்துக் காட்டியவன் அவரை நெருங்கி நின்று,
“உங்க பொண்ண நான் எவ்ளோ லவ் பண்றன்னு தெரியுமா? அவள் என்னை விரும்புறதை விட ஆயிரம் மடங்கு அதிகமா விரும்புறேன். ஏன் எப்படின்னு காரணம் தெரியல. ஆனா, அந்தப் பணப்பிசாசை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லாத்தையும் மறந்துட்டு, அவளுக்கு ஒரு நல்ல புருஷனா இருக்கணும்னு முடிவெடுத்துத் தான் என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன். அவ முகத்துல வேர்வை சிந்திச்சு… ராத்திரி எல்லாம் தூக்கம் வராமல் தவிச்சா… பாத்ரூம் போக சங்கடப்பட்டா…
அதையெல்லாம் ஒரு புருஷனா என்னால பார்க்க முடியல. நீங்க சொல்லலாம், அவளை வசதியா வச்சிக்கலாமேன்னு. எத்தனை வசதியை என்னால தர முடியும்? ஏணி வச்சாலும், எட்ட முடியாத உசரம் உன் பொண்ணு! அந்த உசரத்தை அண்ணாந்து பார்க்கக் கூடத் தகுதி இல்லாதவன் நான்… எந்த ரெண்டு சேரக் கூடாதோ, அந்த ரெண்டைக் கடவுள் சேர்த்துட்டான். சேர்த்ததுக்காக, உன் பொண்ணைக் கஷ்டப்படுத்தி வாழச் சொல்றியா? இல்ல, என் குடும்பம் மொத்தத்தையும் விட்டுட்டு வந்து இந்த வீட்ல என்னை வாழச் சொல்றியா? இந்த ரெண்டுத்துல எது நடந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல சலிப்பு வந்துடும். உன்னால தான் நான் இப்படி இருக்கேன்னு வெறுப்பு வரும். ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த காதல் அர்த்தமில்லாமல் போகும்.” என்றவன் கண்ணில் இருந்து கண்ணீர் படை எடுத்தது.
பொன்வண்ணன் உட்படக் கேட்ட அனைவருக்கும் கருடன் எண்ணம் புரிந்தது. மாமனாரின் கருணைப் பார்வையை உணர்ந்து, “இது எல்லாத்தையும் தாண்டி, என் பொண்டாட்டிய என்னால கஷ்டப்படுத்த முடியாது. அவளோட கம்பீரத்தையும், மிடுக்கையும் பார்த்தவன் நான். அவ பார்க்குற பார்வைல இருந்து, கால் மேல கால் போட்டு ஆணவமா உட்காருற வரைக்கும் அணு அணுவா ரசிச்சு இருக்கேன். அது எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு, எனக்குப் பொண்டாட்டியா கட்டுப்பட்டு வாழுன்னு சொல்ல என்னால முடியாது. அவளுக்கு நான் செஞ்ச எல்லாமே போதும். நான் வரதுக்கு முன்னாடி எப்படி இருந்தாளோ, அப்படியே இருக்கணும்னு தான்…”
அதற்கு மேல் பேச அவனிடம் வார்த்தைகள் இல்லை. மாமனார் முன்பு தலை குனிந்து கண்ணீர் சிந்தினான். அவனது கண்ணீர், அனைவரையும் அழ வைத்தது.
கருடன் செய்தது, ‘சரி தவறு’ என்ற நிலையைத் தாண்டி அவன் நிலையை எண்ணிக் கவலை கொண்டனர். எதிர்த்து நின்ற பொன்வண்ணனுக்குக் கூட மனம் இரங்கி விட்டது. மெதுவாக அவனது தோள் தட்ட, தலை நிமிர்ந்து பார்த்தான் மாமனாரை.
“போ…” என அவர் விலகிக் கொள்ள, ஓட்டம் பிடித்தான் தன்னவளைப் பார்க்க.
“ரிது… ஏய் கதவத் திறடி! ஏன்டி இப்படிப் பண்ண? ஏய் திறம்மா…”
எத்தனை முறை தட்டியும் அந்தக் கதவு திறக்கப்படவில்லை. அவசரத்தின் நிலை உணர்ந்து, வேகமாக நான்கு இடி இடித்து அந்தக் கதவைத் திறந்தவன் உள்ளே ஓடி வர, கால்கள் தட்டுப்பட்டது. தடுத்த இடத்தில் அப்படியே நின்றவனுக்கு இதயம் எக்குத்தப்பாக எகிறியது. கண்கள் விரிந்து, வாய் அகண்ட நிலையில் நின்று கொண்டிருந்தவன் முன்பு, கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள் ரிதுசதிகா.
“அடடடா…” கை தட்டினாள்.
பின், “வெல்கம், மிஸ்டர் கருடேந்திரன்! உங்களுக்காகத் தான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” எனக் காலைத் தோரணையாக ஆட்டினாள்.
“நல்லா இருக்கீங்களா?” கேட்க, பதட்டம் குறைந்து முறைப்பு அதிகரித்தது அவனுக்கு.
“அச்சச்சோ… கண்ணெல்லாம் கலங்கி இருக்கற மாதிரி இருக்கு. உடம்புக்கு எதுவும் முடியலையா? காசு வாங்க வந்தியா… ப்ச்! முன்ன மாதிரி எல்லாம் நீ என் ரூம் வரைக்கும் வரக்கூடாது. அந்த டீலிங் அன்னையோட முடிஞ்சு போச்சு. பிச்சை கேட்கிற மாதிரி இருந்தா, வாசல்ல நின்னு அம்மா, தாயே! உடம்பு முடியல. பிச்சை போடுங்கமான்னு சொல்லணும். ஓகே!”
“அறிவு இருக்காடி உனக்கு!” என அடிக்கப் பாயும் அவனைக் கண்டு சத்தமிட்டுச் சிரித்தவள், “அப்புறம்… பர்பாமன்ஸ் எல்லாம் பயங்கரமா இருந்துச்சு. நீதான் ஸ்கிரிப்ட் எழுதுனியா?” கேலி செய்ய, அடிக்க வந்தவன் கைகள் அப்படியே நின்றது.
“ரிது, செத்த பாம்பா இருந்தாலும், விஷம் உள்ள பாம்பு! சாதாரண மனுஷன் உன்னால ஒன்னும் பண்ண முடியாது.”
“அசிங்கமா இல்லயாடி உனக்கு?”
“ப்ச்! இருந்துச்சு. அன்னைக்கு நீ எல்லாரு முன்னாடியும் என்னை அப்படிப் பேசும்போது.”
“அதுக்குத்தான் இப்படிப் பழி வாங்குறியா?”
“ச்ச! ச்ச!” என இதழ் வளைத்தவள், “நான் ஏமாந்துட்டனா, இல்லையான்னு தெரிஞ்சுக்கப் பண்ணேன்.” என இரு கண்களையும் சிமிட்டினாள்.
கருடேந்திரன் முறைத்தபடி நின்றிருக்க, “உன் கண்ணுல எனக்கான காதலைப் பார்த்திருக்கேன்.” எழுந்து வந்து அவன் முன்பு நின்று ஏளனத்தோடு கூறியவள், “என்ன சொன்னடா கருடா? தொட்டாலே அருவருப்பா இருக்கற உன்ன ரசிச்சுத் தொட்டேன்னா…” என்று அவனைச் சுற்றி வந்தாள்.
“இங்கதான் நீ தோத்துப் போன… நீ பொய் சொல்லலாம், உன் உணர்வு பொய் சொல்லுமா? எந்த நோக்கத்துக்காக என்னைத் தொடுறேன்னு தெரியாம கூடவா இருந்திருப்பேன். எந்தக் காரணத்துக்காக நீ அப்படிப் பேசி இருந்தாலும் தப்பு தப்புதான்! அந்தத் தப்புக்கான தண்டனையை நான்தான உனக்குக் கொடுக்கணும். அதனாலதான் இப்படி ஒரு டிராமா… ரொம்பப் பழைய டிராமாவா இருந்தாலும் செம்மையா ஒர்க் அவுட் ஆச்சுல்ல…” என்றவள் முன்பு, அவள் நின்றது போல் நிராயுதபாணியாக நின்றான் கருடேந்திரன்.
“நீதான் தாலி கட்டுன… நீதான் அன்பு காட்டுன… நீதான் நெருங்கி வந்த… நீதான் வேணாம்னு சொன்ன…” என அவனுக்கு நேராக நின்று கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டவள்,
“இவ்ளோ பண்ண உனக்கு நான் ஏதாச்சும் பண்ணனும்ல.” என்றுவிட்டு அமைதியாகினாள்.
நிசப்தமான அமைதி அங்கு நிலவியது. போதும் என்ற வரை அந்த அமைதியை அவனுக்குக் கொடுத்தவள், “உன்ன மாதிரிக் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளுனாதான் போவியா?” என்ற வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் அவளின் மனத்தைப் படித்தவன் கால்கள் அமைதியாக வெளியேறத் திரும்பியது.
அவன் செல்லும் வரை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவள் சட்டென்று திரும்பிட, ஒளித்து வைத்த கண்ணீர் உருண்டு திரண்டு விழியின் ஓரம் நின்றது.
***
பலம் பொருந்திய இருவரும் இருவரையும் தாக்கிக் கொண்டார்கள். இதில், இருவரின் காதலும் சேதப்படும் என்பதை உணர்ந்தும். ரிது, அந்தச் சம்பவத்தை நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. சுனாமிக்குப் பின்னான சேதாரங்களைச் சரி செய்ய இந்த ஒரு மாதம் போதவில்லை மூத்தவர்களுக்கு.
ஒரு வாரம் அமைதியாக இருந்தவள், பழையபடி தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள். முன்னர் இருந்ததை விட, இன்னும் கடுமை கூடியிருந்தது அவளிடம். பெற்ற மகளைச் சமாதானம் செய்ய முடியாது தினமும் தோற்றுப் போனவர் இன்றைக்கும் பேசுவதற்காக வந்தார். அவர் வரும் வரை ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவள் உடனே மடிக்கணியைக் கையில் எடுத்துக் கொள்ள,
“இன்னும் எவ்ளோ நாள் இப்படி இருக்கப் போற?” பேச்சை ஆரம்பித்தார்.
வார்த்தைகளை வெளியிடத் தயாராக இல்லை அவரின் மகள். அவரது நினைவு, அன்றைய சம்பவத்திற்குத் திரும்பியது.
மனம் நோக உள்ளே வந்தவர் மருமகனைக் கண்டபடி திட்ட, “அவன் நடிக்கிறான் அப்பா…” என்றாள்.
குழப்பத்தோடு நிற்கும் தந்தையை ஏறெடுத்துப் பார்க்காது, “அவன் பண்ணதும், பேசினதும் உண்மை இல்ல. எதுக்காக இப்படிப் பண்றான்னு தெரியல. ஆனா, உண்மை இல்லன்னு மட்டும் தெரியும். அவன் மனசுல நான் இருக்கேன்.” என்றது வரை அமைதியாகப் பேசியவள்,
“இந்த அடங்காப் பிடாரியோட, கடைசி வரை வாழ முடியாதுன்னு இப்படிப் பண்ணிட்டான் போல.” எனக் கண் கலங்கினாள்.
பொன்வண்ணனுக்கு மருமகன் மீது நம்பிக்கை இருந்தாலும், நேரடியாகப் பேசிய பின் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மகளுக்கும், மருமகனுக்கும் இடையில் சிக்கிக் கொண்டவரிடம், “நான் சொல்லற மாதிரிப் பண்ணுங்கப்பா.” எனத் தன் திட்டத்தைக் கூறினாள்.
அவர் வேண்டாம் என்று மறுக்க, “அவன் காதலுக்கு, நான் தகுதியானவள் இல்லயோன்னு வலிச்சுக்கிட்டே இருக்குப்பா. எனக்கு அதுக்கான விடை கிடைக்கும்! அதுக்கப்புறம் அவன நான் எந்த விதத்திலும் தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்றாள்.
“ரெண்டு பேரும் சண்டை போடும்போது ஒன்னா இருந்துட்டு, லவ் பண்ணும் போது இப்படிப் பிரிஞ்சு இருக்கீங்களே. மனச விட்டுப் பேசுனா எல்லாம் சரியாகிடும்னு தோணுது. ஒரே ஒரு தடவை கருடன்கிட்ட பேசிப் பாரு ரிது.”
“அவன் சொன்ன மாதிரி இந்த வாழ்க்கை ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. இது இப்படி இருக்குறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.” என்று விட்டாள் முடிவாக.
***
அவன் வாழ்க்கையில், தாலி என்ற ஒன்று நுழைவதற்கு முன் என்னவெல்லாம் இருந்ததோ அவை அனைத்தும் இருந்தது. அதைத் திருப்பிக் கொடுத்தவள் தான் இல்லை. ஆசையோடு வீட்டிற்கு அழைத்து வந்தவன், அவள் படும் அவஸ்தையில் மனம் நொந்து போனான். இப்படியான கஷ்டங்களை, மனதார நேசித்தவளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக ஒரு முடிவை எடுக்க, அந்த முடிவே இவன் வாழ்க்கையை அஸ்தமனம் ஆக்கிவிட்டது.
வெறுமையாக இருந்தது வாழ்வு. மூன்று இரவுகள் என்றாலும், ஒன்றாகப் படுத்திருந்தவள் ஓயாது இம்சை செய்தாள். அவளின் தொந்தரவு தாங்காது, அதிக நேரம் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தான். பெற்றவர்களுக்குப் பிள்ளையின் வலி புரிந்தது. அவனாகச் சரியாகட்டும் என்று காத்திருந்து இரு மாதத்தைக் கடந்து விட்டார்கள்.
சோர்வாக வந்தமர்ந்த மகனை மடிமீது சாய்த்துக் கொண்ட சரளா, தலைகோதி விட்டார். அன்னையின் அரவணைப்பில் சுகமாகக் கண் மூடியவன் எண்ணத்தில் அவள். இந்த இரு மாதத்தில், எந்தத் தொடர்பும் இல்லை இவர்களிடம். அவன் ஆசை கொண்டது போல், அனைத்தும் முடிந்து விட்டாலும் வலி மட்டும் குறையவில்லை. நடுத்தர வர்க்கத்தில் பிறந்த தனக்கு, மேல்தட்டு வர்க்கத்திலிருந்து மனைவியைக் கொடுத்த கடவுளை வெறுத்தான்.
“கருடா…” என்றழைத்தார் சத்யராஜ்.
அமைதியாக எழுந்தமர்ந்த மகன் பக்கத்தில் அமர்ந்தவர், “ஏன்டா இப்படி இருக்க, நீதான இந்த முடிவை எடுத்த… அப்புறம் எதுக்காக உன்னை நீயே கஷ்டப்படுத்திட்டு இருக்க?” பேச்சைத் தொடங்க தலை குனிந்து அமர்ந்தான்.
“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழறதுக்கு, வசதி தான் பிரச்சினைனு தப்பா நினைச்சிட்டு இருக்க… ஆக்சுவலா மனசுதான் பிரச்சினை!” என்றதும் அன்னையை நிமிர்ந்து பார்த்தான்.
“உன் பொண்டாட்டி சந்தோஷத்துக்கு என்ன தேவையோ, அதை நீ தான் பண்ணனும். கட்டுனவளுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டாலும் தப்பு இல்ல. திமிரா பார்த்த பொண்ணு உனக்காக இந்த வீட்ல வந்து வாழ்ந்தாளே, அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிற? நீ அவளுக்கு வேணும்! உன் கூட வாழுற வாழ்க்கை வேணும். ஏணி வச்சாலும் எட்ட முடியாத தூரம்னு சொல்றியே, அப்படிப்பட்டவள் கடைசிப் படிக்கட்டு வரைக்கும் இறங்கி வந்துட்டா… அவளுக்காக, நீ ஒரு பத்துப் படி ஏன் ஏறக்கூடாது? உன் பக்கம் வந்தா கஷ்டப்படுவான்னு நினைச்சா அவ பக்கம் நீ போயிடு.” என்றதும் கருடேந்திரன் எதிர்த்துப் பேச வர,
“பொண்ணுங்க மட்டும் தான் குடும்பத்தை விட்டுட்டு வாழ வரணுமா?” கேட்டு அவன் வாயை அடைத்தார்.
“நீ அவளை எவ்ளோ நல்லாப் பார்த்துக்கறியோ, அதைவிட அதிகமா அவ இந்தக் குடும்பத்தைப் பார்த்துப்பா… அவ மட்டும் இல்ல, எல்லாப் பொண்ணுங்களும் பார்த்துப்பாங்க. உனக்குள்ள ஆம்பளைன்ற எண்ணம் ஒளிஞ்சிருக்கு. அதுதான், அவள் கூடப் போய் அடிமையா வாழ மாட்டேன்னு தப்பா யோசிக்க வச்சிருக்கு… பொண்டாட்டிக்காக இறங்கிப் போனவன் தோற்க மாட்டான்.
அவளுக்காக அஞ்சு நாள் இரு. அவ உனக்காக ரெண்டு நாள் இந்த வீட்ல இருக்கட்டும். உங்களுக்குன்னு குழந்தை குட்டி வந்ததுக்கு அப்புறம் எங்க எல்லாரையும் மறந்திடுவீங்க. உங்க குடும்பத்துக்கு என்ன வேணும், உங்க குழந்தைங்களுக்கு என்ன வேணும்னு மட்டும் தான் யோசிப்பீங்க. அப்படி ஒரு தருணம் வர வரைக்கும் ரெண்டு பேரும் ஒத்துமையா ஒரு சேர முடிவு பண்ணி வாழ ஆரம்பிங்க.”
இரவெல்லாம் தூங்காமல், மொட்டை மாடியில் நடையாக நடந்து கொண்டிருந்தான் கருடேந்திரன். பெற்றவர்கள் பேசிய அனைத்தும் மனத்தைப் போட்டுக் குடைந்தது. ரிதுவைப் பிரிந்திருந்த இந்த இரு மாதமே, அவள் மீதான பிரியத்தைப் புரிய வைத்துவிட்டது. இனியும், இந்தப் பிரிவை வளர்க்க விரும்பவில்லை கருடேந்திரன். கடைசியாக ஒரு முடிவெடுத்து, மணியைப் பார்த்தவன் விடியற்காலை என்றும் நினைக்காது மாமனாரை அழைத்தான்.
***
“ரிது…” உற்சாகமாக அழைத்தார் மகளை.
தயாராகிக் கொண்டிருந்தவள், தந்தையின் குரலில் இருக்கும் குதூகலத்தை உணர்ந்து தலை உயர்த்த, “இன்ஸ்டிடியூட்டுக்குத் திரும்ப வரதா போன் பண்ணான்.” என்றார்.
“யாரு?” எனத் தெரியாதது போல் கேட்கும் மகளைக் கண்டு சிரித்தவர், “உன் புருஷன்!” என முறைப்பை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
அவனால் உருவாக்கப்பட்ட புது நிர்வாகத்தை, நேற்று வரை கட்டியவள் தான் கவனித்துக் கொண்டிருந்தாள். இன்று காதில் விழுந்த செய்தியால், அந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க விரும்பாது வேறு பக்கம் சென்று விட்டாள். விடிந்ததும், வீட்டில் இருக்கும் அனைவரிடமும் தன் விருப்பத்தைத் தெரிவித்தவன் உற்சாகத்தோடு கிளம்பினான்.
அந்த உற்சாகம் சிறிதும் குறையாது பயிலகம் வந்தவனை வரவேற்றார் பொன்வண்ணன். மாமனாரைக் கண்டு புன்னகைத்தவன் மனதார நலம் விசாரிக்க, தோள் மீது கை போட்டு அரவணைத்தவர், “ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்.” ஒரே வார்த்தையில் தன் மனத்தைத் தெரிவித்தார்.
தன்னறைக்கு வந்தவனுக்கு யோசனை எல்லாம் ரிதுவே. இந்நேரம் விஷயம் தெரிந்திருக்கும். இன்னும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் இருப்பதில் சோர்ந்து போனவன், விடாது முயற்சிக்க முடிவெடுத்தான். அதன்படி நாளும் பொழுதுகளும் ஓட ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் ஆட்டோ ஓட்டி முடித்த கையோடு பயிலகம் வந்து விடுவான்.
மாமனாரிடம், மனைவியைப் பற்றி எப்படிக் கேட்பது என்று தெரியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தவன் இனியும் வேலைக்கு ஆகாது என்று, “என்ன மாமா, உங்க பொண்ணு மசியவே மாட்டேங்குறா…” என முகத்தைப் பாவமாக வைத்தான்.
“தன் வினை தன்னைச் சுடும் மாப்பிள்ளை.”
சட்டென்று முறைத்தவன், “நேரம் பார்த்துக் குத்திக் காட்டுறீங்களா?” கேட்டான்.
“முன்ன விட, இப்ப டபுள் ஸ்ட்ராங்கா இருக்கா… எனக்குத் தெரிஞ்சு ரொம்பக் கஷ்டம்! யானை தன் தலையில மண் அள்ளிப் போட்ட மாதிரி, நல்லா அள்ளிப் போட்டுக்கிட்டு இப்பப் புலம்பி என்ன ஆகுறது?”
“என்னை ஒரே ஒரு தடவை பார்த்தா அவ மனசு மாறிடும் மாமா.”
“அப்போ வீட்டுக்கு வந்துடுங்க மாப்பிள்ளை…”
“மரியாதை ரொம்பப் பலமா இருக்கே மாமா…”
“எல்லாம் அன்னைக்கு, யோவ்! அப்படின்னு பேசின மாயம்தான் மாப்பிள்ளை!”
“சாரி மாமா…”
“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் மாப்பிள்ளை… வீட்டுக்கு வந்து அவகிட்டப் பேசிப் பாருங்க.”
“அது சரி வராது மாமா, முதல்ல அவ என்னை மன்னிக்கணும்!”
“என்னதான் இதுக்கு முடிவு?”
பதில் சொல்லாமல், உதட்டைப் பிதுக்கிய கருடேந்திரன் தீவிரமாக யோசித்தான். அதன் பலனாக, மூன்று சக்கர வாகனம் ஃபேக்டரியை நோக்கி நகர்ந்தது. தினம் அவள் வரும் நேரம், போகும் நேரம் எல்லாம் வாசலில் நிற்க ஆரம்பித்தான். கட்டியவளின் தரிசனம் சிறிதும் கிடைக்கவில்லை. அவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று சாமர்த்தியமாக ஒவ்வொரு நாளையும் கடத்தினாள்.
நாளுக்கு நாள் நொந்து போனான் கருடேந்திரன். என்ன செய்தும் ஒரு பலனும் கிடைக்கவில்லை. அவன் நிலை கண்டு அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். கட்டியளோடு கைகோர்த்த பின்பு தான், இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டான். அவன் வைராக்கியத்தை உடைக்க வந்தாள் நதியா.
“என்னண்ணா, செலபரேஷன பத்தி யோசிச்சிட்டு இருக்க போல…”
“செலபரேஷனா?”
“என்ன அண்ணா இப்படிக் கேக்குற? வீட்ல இருக்கற எல்லாரும் நீ எப்படிக் கொண்டாடப் போறன்னு பார்க்க ஆர்வமா இருக்காங்க.”
“என்னன்னு சொல்லு?” என எரிந்து விழுந்தான்.
“ரொம்ப நல்ல மூட்ல இருக்க போல!”
“வெறுப்பேத்தாத நதியா. நானே உங்க அண்ணி திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்குறான்னு கடுப்புல இருக்கேன்.”
“அப்போ லவ்வர்ஸ் டேக்கு ஒன்னும் இல்லையா?”
“மண்டைய ஒடச்சிடுவேன், மரியாதையாப் போயிடு.”
“கூல் பிரதர்!” என அவனது தோள் தட்டிய நதியா, “வாழ்க்கை, உன்ன வச்சு விளையாடுதா? இல்லை நீ வாழ்க்கையோட விளையாடுறியான்னே புரியல!” தீவிரமாக விட்டத்தைப் பார்த்துப் பேசினாள்.
“இதுவரைக்கும் என்கிட்டக் கேவலமா திட்டு வாங்கினது இல்லையே.”
“இனித் திட்டி என்ன ஆகப்போகுது? போன வருஷம் லவ்வர்ஸ் டேக்கு என்ன பேச்சுப் பேசின, ஞாபகம் இருக்கா…” என்றவளோடு அந்த நாளிற்குச் சென்றான் கருடேந்திரன்.
சென்ற ஆண்டு காதலர் தினத்திற்கு, மனைவிக்குப் பூ வாங்கிக் கொடுத்தார் சத்யராஜ். அதைப் பார்த்தவன் செய்த கேலியில் வாங்கிக் கொடுத்த பூவைத் தலையில் கூட வைக்கவில்லை சரளா. பெற்ற மகனுக்கு, “உன் வாழ்க்கைல லவ்வர்ஸ் டேவே வராதுடா.” சாபம் கொடுத்தார் சத்யராஜ்.
தந்தை முன் நெஞ்சை நிமிர்த்து நின்றவன், “வருஷத்தில் ஒருமுறை தான் காதலர் தினம் வருது. அட, உங்க மருமகளுக்கும் எனக்கும் தான் வருஷம் முழுக்க வருது.” எதிர்காலம் தெரியாமல் ஆடிப்பாடி வெறுப்பேற்றியவன்,
“அடுத்த வருஷம் லவ்வர்ஸ் டேக்குப் பாருங்க நைனா, என் பொண்டாட்டியும் நானும் சும்மா ஜிகுஜிகுஜிகுன்னு செலப்ரேட் பண்ணப் போறதை…” என்றிருந்தான்.
அதை ஞாபகப்படுத்திய நதியா, “போன வருஷம் ஆள் இல்லாம சபதம் போட்ட, இந்த வருஷம் ஆள் இருந்தும்… ம்ஹூம்!” என்ற விட்டுச் செல்ல ரத்த நாளங்கள் கொதித்தது இவனுக்கு.
3. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 3
அன்வியின் கைகளோ மிதமாக புளித்திருந்த மாவை கரண்டியில் எடுத்து இட்லி பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தது.
அப்படியே சிறிது மாங்காய் நறுக்கி, அதனுடன் அரை கைப்பிடி சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், மூன்று பச்சை மிளகாய், இரண்டு பற்கள் பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலையும் உப்பும் சேர்த்து சட்னியை அரைத்து முடித்து, கொஞ்சம் தாளிப்பையும் சேர்த்து முடித்திருந்தாள்.
அவள் சமையல் செய்யும் அழகை மாங்காய் தின்றபடி பார்த்துக் கொண்டு இருந்தாள் ஷிவாஷினி.
“ஏலே! நீ ஒரு ஆர்டிஸ்ட்டுன்னு அடிக்கடி நிருபிக்குற புள்ள… நீ சமைக்கும் அழக பார்த்தாலே சாப்பிட நாக்குல எச்சி ஊருடி…” என்று புகழவும்,
“ஊரும்… ஊரும்…”
“இன்னுமும் அவங்களை காணல பாரேன்…”
“வரட்டும் இன்னைக்கு, சட்னியில நாலு கரண்டி உப்பை அள்ளி போட்டு தரேன்…” என்று அன்விதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஆதித்யனின் புல்லட் சத்தம் காதில் கேட்டது.
ஷிவாவோ, “வந்துட்டான் கரிச்சட்டி, அவனோட தங்க ரதத்துல…” என்று உதட்டை சுழித்துச் சொல்ல,
அன்வி முறைத்து விட்டு, “ஆதிய திட்டாம விட்டுட்டா உனக்கு அந்த நாளே ஓடாது ல…”
“க்கும்… நீயாச்சும் உன் ஆசை நண்பனாச்சு…” என்றவள், ‘என்னை விட இவளுக்கு அவன் தான் ரொம்ப முக்கியம்… வரான் பாரு காலன்… கரிச்சட்டி காலன்…’ என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தபடி இருந்தாள் ஷிவா.
“டேய் மச்சான், அந்த முட்டைகோஸ் வேற இன்னேரம் ஏதோதோ பத்த வச்சி இருப்பா… அதனாலேயே உன் தங்கச்சி செம காண்டுல இருக்கான்னு நினைக்கேன்…” என்று ஆதித்ய கரிகாலன் முழி பிதுங்கிட,
வந்தியத்தேவனோ, “விடுடா… நம்ம அம்மு தானே பார்த்துக்கலாம்… ஒரு அழகான வீடியோவ ஷூட் பண்ணி எடிட்டிங் பண்ணி தந்துட்டா கூல் ஆகிடுவா…” என்று அசட்டையாக கூறிச் சென்றான்.
வீட்டிற்குள் நுழையும் போதே, “தங்கச்சி…” என அன்போடு அழைக்க,
அவனது பாசமலரோ, “தங்கச்சி நொங்கச்சி ன்னு வந்த, கத்திய எடுத்து சொறுகிடுவேன்…” எனவும், ஷிவாவோ சத்தம் போட்டு சிரித்தாள்.
“சுண்டெலி கம்முனு இருந்துடு…” என்று ஆதி கத்திட,
“நான் ஒன்னும் உன் மூஞ்சிய பார்த்து சிரிக்கல… வந்திய பார்த்து தான் சிரிச்சேன்…”
வந்தியனோ, “அம்மாடி பரதேவதை…” என்று அவளுக்கு கையெடுத்து கூப்பிட்டவன், வாயை பொத்திக்கொண்டு இருக்கும்படி சொல்லிவிட்டு,
“அம்மு, நாங்க சும்மா வாய்க்கால் பக்கம் போனோம்… அப்படியே கிணத்தை பார்க்கவும்…”
“விழுந்துறலாம்னு முடிவு பண்ணிட்டங்களோ?” அன்வி கேட்க,
“ச்சீ… ச்சீ… ஒரேயடியா குளிச்சு ஃப்ரெஷ் ஆகிட்டு… நேரா இங்க தான் வந்தோம்… பாரு என் மச்சான் கையில என்ன இருக்குன்னு… என் கையில் லேப்டாப் கூட வச்சி இருக்கேன் பாரு… முதல்ல நாம சுடச்சுட மல்லிப்பூ இட்லியை ஒரு கை பார்த்துட்டு, களத்துல இறங்கறோம்… இன்னைக்கு வேற லெவல் சம்பவம் பண்றோம்… ஓகேவா டி அம்மு…” என்று ஆதித்யா பேசவும், அப்படியே மலையிறங்கி விட்டாள் பெண்ணவள்.
“சரி சரி… அம்மு வா… இட்லி வச்சி எங்களுக்கு குடு… இல்லாட்டி இந்த வெட்டி பீஸே மொத்தத்தையும் முழுங்கிடுவா…” என்றபடி தட்டை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான் வந்தியத்தேவன்.
‘அவன் பேச ஆரம்பிச்சாவே இவளுக்கு கோபம் எல்லாம் போயிடும்… இதுல என் மேல சத்தியம் பண்ணி நீ மட்டும் தான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ன்னு சொல்லுவா… ஹ்ம்ம்… உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…’
ஆதித்யனோ ஷிவாவின் தலையில் தட்டி, “அடியே கிறுக்கி… அங்க மைண்ட் வாய்ஸ்ல புலம்பாம வந்து சேரு…” என்கவும்,
“ஆஹ்! நீ போடா, எனக்கு வரத் தெரியும்…”
“உனக்கு மரியாதை ன்னா என்னன்னே தெரியாதா டி…”
“இந்த அழகு மூஞ்சிக்கு இந்த மரியாதையே ஜாஸ்தி தான் கரிச்சட்டி…”
“அடிங்…”
“அம்மு என்ன காப்பாத்து டி…” என்றபடி ஓடி விட்டாள் ஷிவாஷினி.
“குட்டி சாத்தான்… உன்னைய நான் ஒன்னுமே பண்ணல…”
“அம்மு… அதையெல்லாம் கண்டுக்காத… நீ எனக்கு ரெண்டு இட்லி சேர்த்து வை… சட்னி சூப்பர்…” என்று சப்புக் கொட்டி சாப்பிட்டான் வந்தியத்தேவன்.
ஷிவாஷினியும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க, “தீனி பண்டாரம்… யாரும் அந்த சுண்டெலிய எதுவும் கேட்டுடாதீங்க… அதுனால தான் ரொம்ப ஆடறா…” என்றதும் அவள் அன்வியை முறைக்க,
“ஆதி…” என்று சத்தம் போட்டதும் மௌனமாக சாப்பிட ஆரம்பித்தான்.
அன்வியும் இட்லியை விழுங்கிய படி, “எல்லாரும் சாப்பிட்டு முடிச்சா… தோட்டத்துக்கு கிளம்பலாம்… அங்க போய் இன்னைக்கு விடியோ ஷூட் எடுக்கலாம்… ஒரு சிம்பலான டிரெடிஷனல் ஸ்வீட் ரெசிபி பண்ணலாம்னு யோசிச்சு இருக்கேன்…” எனக் கூற,
வந்தியத்தேவனோ, “அப்படி என்ன செய்ய போற?”
“ஈசு சொல்லி குடுத்த குலுக்கு ரொட்டி தான்… பட் அதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமா சின்ன பிள்ளைங்க விருப்பி சாப்பிடற போல பண்ணலாம்னு இருக்கேன்… பாப்போம் இன்னைக்கு செய்யறது நல்லா இருந்தா வீடியோ அப்லோட் செய்யலாம், இல்லன்னா வேணாம்… வேற ஏதாவது ட்ரை பண்ணுவோம்…”
“நல்லா வராம போனாலும், வீடியோ அப்லோட் பண்ண சொன்னா பண்ணவே மாட்டீயே நீ..” என்று ஷிவு அலுத்துக் கொள்ள,
“அதெப்படி ஷிவு முடியும்… என்ன நம்பி எத்தனையோ பேர் என்னோட வீடியோ பார்த்து அவங்களோட நேரத்தை ஒதுக்கி சமையல் செய்றாங்க… அவங்களை எப்படி நம்ம ஏமாத்த நினைக்கலாம் சொல்லு… உன்னோட கம்பல்ஷனுக்காக தான் சொதப்புன ரெசிப்பி சிரீஸ் ன்னு தனியாவே வீடியோஸ் போடுறோமே… அப்பறம் என்ன… நம்ம கஷ்டபட்டு எடுக்கும் வீடியோ எல்லா வீணாகாம தானே இருக்கு…” அன்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
இடையில் புகுந்த ஆதியோ, “எல்லாரும் அவங்கவங்க செய்யும் வேலைக்கான ஒருசில எதிக்ஸ் வச்சி இருப்பாங்க… அப்படி சிலது அம்மு கிட்டயும் இருக்கு… அதுல நீ ஏன் குறுக்க போற சுண்டெலி…”
“எனக்கு எல்லாம் தெரியும்… யூ ஷட் யோர் மவுத்…” எனக் கூறி முகத்தை திருப்பி கொண்டாள் ஷிவு.
“அன்வி… உனக்கு தேவையான பொருள் எல்லாம் எடுத்து வை போ… இவங்க இந்த ஜென்மத்துல திருந்த மாட்டாங்க… நான் போய்ட்டு வீடியோ எடுக்க லொகேஷன் செக் பண்ணிட்டு வரேன்…” எனச் சொல்லி சென்றான் வந்தியன்.
அதன் பின்னரே நண்பர்கள் இருவரையும் முறைத்து கொண்டே, தேவையான பொருட்களை எடுக்க சென்று விட்டாள் அன்விதா.
“எல்லாம் உன்னால தான்டி… எப்பவும் சண்டை தான்…”
“ஆமா… எனக்கு அது மட்டும் தான் வேலை பாரு… மரியாதையா போய்டு கரிச்சட்டி…”
“சூனிய பொம்மை இப்ப வந்தேன்னு வச்சிக்க அவ்வளவு தான்…” என்றபடி ஆதித்யன் அவளை அடிக்க துரத்த,
ஷிவாஷினியோ அதற்குள், “போடா பொடலங்கா…” என கத்திக் கொண்டே ஓடி விட்டாள்.
அதன் பின்னர், நால்வரும் இணைந்து தோட்டத்திற்கு சென்று அன்வி சமைக்கவும், அதனை படம் பிடிக்கவும் ஏதுவாக அனைத்தையும் எந்த ஒரு அமர்க்களமும் ஆர்பாட்டமும் இல்லாமல் செய்து கொண்டிருந்தனர்.
தஞ்சாவூர் அரோமா சமையல்
அன்விதா அவளுடைய பதினைந்தாவது வயதின் தொடக்கத்தில் ஆரம்பித்த யூடியூப் சேனல், அதாவது கொரோனா தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்து எடுத்த சமையல் வீடியோக்கள் தான் இன்று மூன்று மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இது முழுக்க முழுக்க அவளுடைய சமையல் செய்யும் திறனையும் அவளது குரலையும் வைத்து மட்டுமே கிடைத்த வெற்றி.
சிறு வயதிலிருந்தே அவளுடைய பாட்டி சமைக்கும் பொழுதெல்லாம் எல்லாவற்றையும் பார்த்து, அதனை ரசிக்க, அவளுக்கும் சமையல் மீது ஆர்வம் ஏற்பட, அவளாகவே சமைக்க ஆரம்பித்திருந்தாள்.
அவற்றில் கொஞ்சம் புதுமையையும் சேர்ந்து புதுப்புது வகைகளில் செய்து வீட்டினரை அசத்தினாள், அவளுக்கு சமையலின் மீதிருந்த அந்த ஆர்வமே இன்று இப்படி வளர்ச்சி அடைய வழிசெய்து இருந்தது.
அவளது சமையல் வீடியோவை காணும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பசுமையாகவும் பாரம்பரிய முறையிலும் இருக்கும், அதுமட்டுமின்றி அவளது குரல் கேட்பவர்களை கவர்ந்திழுத்து மயங்க வைக்கும்.
இதுநாள் வரையிலும் அவள் யாரென்று ஒருவருக்கும் தெரியாது, உண்மையான பெயர் கூட என்னவென்று தெரியாது, அவளது முகத்தை கூட இத்தனை வருடத்தில் காட்டியதே கிடையாது.
இன்றளவும் அவளது பெயரை அரோமா என்று தான் காணொளிகளில் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
அவளது இனிமையான குரலும், பக்குவமாக செய்யும் சமையலும் மட்டுமே தஞ்சாவூர் அரோமா சமையலின் ஆணிவேர்.
அதுமட்டுமின்றி அவள் தனித்துவமாக சமைக்கும் விதம்! பாட்டி ராஜேஸ்வரியின் செம்பு பித்தளை பாத்திரங்களிலும், மண்பாண்டங்களிலும் மட்டுமே சமைப்பாள். சில நேரங்களில் இயற்கை சூழலில் தோட்டத்திற்கு சென்று விறகு அடுப்பில் சமைத்தும் வீடியோ போடுவாள்.
அன்வி உடைய சமையல் காணோளிகளின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமே அவளது கையில் இருக்கும் செந்நிற மருதாணியும், அவள் அணிந்திருக்கும் வானவில் நிறத்திலான கண்ணாடி வளையல்களும் தான்! அதுவே அவளது காணொளிகளுக்கு தனி அழகினை சேர்த்திடும் விதமாக அமைந்திருந்தது.
இவை அனைத்தும் தான் மற்ற சமையல் காணொளிகளுக்கும் இவளது காணொளிக்கும் உள்ள வித்தியாசத்தினை அழகாக பிரித்துக் காட்டிடும் வகையில் இருந்திருப்பது கூட தஞ்சாவூர் அரோமா சமையலின் வளர்ச்சிக்கு காரணம் எனலாம்.
அன்விதா தன்னுடைய முகத்தினை எப்பொழுதும் காட்ட நினைத்தது கிடையாது, ஏனெனில், அவளுக்கு அதிலெல்லாம் துளியும் விருப்பமில்லை.
அவள் அவளது திறமையை வெளிக்கொண்டு வர நினைத்தாலே ஒழிய முகத்தினை அல்ல! ஏனோ, அவளுக்கு இந்த சமூக வலைத்தளங்களில் முகத்தை காட்ட துளியும் இஷ்டமில்லாது இருந்தது.
ஆரம்பத்தில் அவளது நண்பர்கள் கூட அவளிடம் கொஞ்சம் சொல்லி பார்த்தனர், ஆனால், பெண்ணவளோ திட்டவட்டமாக மறுத்து விட, கடைசியில் அவர்களும் அன்வியின் விருப்பப்படி விட்டுவிட்டனர்.
அன்விதா குலுக்கு ரொட்டி செய்ய ராகி மாவை எடுத்து அதனுடன் கொஞ்சம் கொக்கோ பவுடரையும் பால் பவுடரையும் சேர்த்து, சிறிது உப்பையும் நெய்யையும் சேர்த்து சுடு தண்ணீரில் பிசைந்து விட்டு, அதனை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வேக வைத்துக் கொண்டிருந்தாள்.
அன்வி செய்யும் அனைத்தையும் விதவிதமான கோணங்களில் அழகாக படம் பிடித்த படி இருந்தான் வந்தியத்தேவன், ஆதித்யனும் அவனுக்கு ஏதேனும் உதவிகளை செய்தபடி இருக்க, ஷிவாஷினியும் சமத்து பிள்ளையாக நண்பிக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
முதலில் அன்வியின் சமையல் வீடியோவிற்கு வந்தியத்தேவனும் ஆதித்ய கரிகாலனும் அவர்களுக்கு தெரிந்த அளவில் படம் பிடித்து, எடிட்டிங் செய்து கொண்டிருக்க, காலப்போக்கில் அதுவே அவர்களுக்கு பிடித்துப் போய் விட, இருவருமாக கல்லூரியில் காட்சி தொடர்பு (Visual communication) பிரிவையே தேர்ந்தெடுத்து படித்து முடித்தனர்.
ஆரம்பத்தில் அன்விதா தான் வருத்தமாக அவர்களிடம் பலமுறை உங்களுக்கு பிடித்து தானே படிக்கிறீர்கள் இல்லை எனக்கு உதவ வேண்டும் என்று இதை எடுத்தீர்களா என கேட்டபடியே இருப்பாள், அதன் பிறகு, அவர்களின் உண்மையான ஆர்வத்தை கண்டு அதுபற்றி கேட்பதை நிறுத்து விட்டு, அவளால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்தாள்.
தற்பொழுது இருவருமாக சேர்ந்து ஒரு ஸ்டூடியோ ஒன்றையும் வைத்து, கல்யாணம், பிறந்தாள், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பிரத்தியேகமாக புகைப்படங்கள் வீடியோக்கள் என்று எடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து நான்கு குறும்படங்களையும் எடுத்து இருக்கின்றனர். அவர்களது கனவு தாங்கள் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது தான்.
கடைசியாக, ஒரு செம்பு பாத்திரத்தில் கருப்பட்டியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, சிறிது ஏலக்காயை தட்டிப் போட்டு, வேக வைத்த உருண்டைகளையும் சேர்த்து துருவிய தேங்காயை கொட்டி இறக்கி விட்டாள் அன்விதா.
ஷிவாஷினி அதனை ருசி பார்க்க, அதன் சுவை நாக்கில் நாட்டியம் ஆட, “அம்மு வேற லெவல் போ… செம டேஸ்டா இருக்கு டி… அப்படியே சாக்லேட் சாப்பிடற போலவே இருக்கு…” என சப்புக் கொட்டி சாப்பிட்டாள்.
ஆதித்ய கரிகாலனோ ஷிவுயை ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு, வந்தியத்தேவன் எடுத்த வீடியோவை எடிட்டிங் செய்ய அமர்ந்து விட்டான்.
அதன் பின்னர், அனைத்தையும் ஒழுங்கு படுத்தி விட்டு, நால்வருமாக வீட்டிற்கு சென்று ராஜேஸ்வரி பாட்டி சமைத்திருந்த மட்டன் குழம்பை ஒரு பிடி பிடித்ததும் தான் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
அன்விதாவும் அவர்களை அனுப்பி விட்டு, ஆதி எடிட்டிங் செய்த காணொளிக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து விட்டு, அதனை வலையொளியில் பதிவேற்றிய பிறகு, அவளுமே ஒரு குட்டி தூக்கத்தை போட்டாள்.
2. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 2
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
என்று முணுமுணுப்பாக சொல்லிவிட்டு, கண்களை திறந்து பார்த்தார் 60 வயதை பூர்த்தியடைந்த ராஜேஸ்வரி. அந்த வீட்டின் மூத்த பெண்மணி.
அவருக்கு வயதானாலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு அவருடைய உடல்நிலை சற்று நன்றாகவே இருந்தது.
காலம்பர எழுந்து குளித்து விட்டு வந்ததும், நேராக தோட்டத்திற்கு சென்று பச்சை பசேலென இருந்த மருதாணிகளை ஒடித்து வந்து, அதன் இலைகளை மட்டும் பறித்து, அம்மியில் இட்டு அதில் கொஞ்சம் சர்க்கரை, இரண்டு கிராம்பு, நெல்லிக்காய் அளவு புளி மற்றும் சில துளி எலுமிச்சை சாற்றையும் சேர்த்து, சதக் சதக் என்று அரைக்கும் சத்தத்தில்,
வேக வேகமாக குளித்து விட்டு வந்து, “ஈசு… உனக்கு எத்தன வாட்டி சொன்னாலும் புரியாதா… எனக்கு தேவையானதா நானே பண்ணிக்க மாட்டேனா… குடு அத… கொஞ்சம் அப்படி தள்ளி உட்காரு…” என்று சிடுசிடு குரலில் சொல்லி அவரது பக்கத்தில் அமர்ந்த பேத்தியை கண்டு,
“ப்ச், அம்மு நீ ஏண்டி எந்திரிச்சு வந்த, அதுக்குள்ள குளிச்சும் முடிச்சு இருக்க… இன்னைக்கு ஞாயிற்று கிழமை தானே… கொஞ்சம் தூங்க வேண்டியது தானே…” என்று சொல்லவும் அவரை முறைத்து பார்த்தாள் அன்விதா.
அவளது கைகளோ அம்மியில் இருக்கும் மருதாணியை அரைத்த படி இருந்தாலும், “உனக்கு என்ன இளமை ஊஞ்சல் ஆடுதா ஈசு… வயசான காலத்துல இப்படி வந்து ஜங்கு ஜங்கு னு அம்மியில அரைச்சிட்டு இருக்க…” என்று கிண்டலாக கூறவும்,
“யாருக்கு டி வயசு ஆச்சுன்னு சொல்ற, உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சி, நீ பெக்குற பிள்ளைக்கு பிள்ளை பொறக்கும் வரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகாது… ஆமா…” என்று ராஜேஸ்வரி சொல்ல, புன்னகை செய்தாள் பெண்.
“அதுக்கு நீ உன் உடம்பை ஒழுங்கா பார்த்துக்கணுமாக்கும்…” என்று உதட்டை சுழித்து சொல்லிய அன்வி, அரைத்த மருதாணியை ஒரு கிண்ணத்தில் வழித்து வைத்தவளை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.
அன்விதா, பத்தொன்பது வயதில் துள்ளி விளையாடும் பூஞ்சிட்டு இவள். மாறன் மற்றும் ரோஷினி ஜோடியின் ஓரே ஒரு மரிக்கொழுந்து.
அவளுடைய ஐந்தாம் வயதில் ரோஷினிக்கு மஞ்சள் காமாலை வந்து, அது மிகவும் முற்றிப் போய் இறைவடி சேர்ந்து விட்டார், அன்றில் இருந்து மாறனே அவளுக்கு தாயுமானவராகி போனார்.
ரோஷினியின் மறைவுக்கு பின்னர் மாறனின் ஒரே ஒரு பற்றுக்கோல் அன்விதா தான். அன்வி அப்பாவின் செல்ல பெண், அவர் சொன்னது தான் வேதம் என்பவள், மாறனும் மகளை எதற்கும் ஏங்க விட்டதே இல்லை.
மாறனின் தாய் தான் ராஜேஸ்வரி. மாறன் பார்த்துக் கொண்டாலுமே அன்விதாவை அன்னையாக இருந்து வளர்ப்பவர், அன்வி தந்தையின் இளவரசியாக இருந்தாலும், பாட்டியின் தேவதையும் அவள் தான். தாய்க்கும் மேலாக இருந்து, அவளின் சிரிப்பில் மகிழ்பவர் அவர்.
அன்விதா டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் என்பதை விட பாட்டிஸ் லிட்டில் பிரின்சஸ் என்றே சொல்லலாம்.
ராஜேஸ்வரியின் கணவர் முத்துவேல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தான் இறந்தார். அவருக்கும் பேத்தி என்றால் உயிர். சில விஷயங்களில் மாறனும் ராஜேஸ்வரியும் கண்டிப்பு காட்டினால் கூட, தாத்தா எதற்கும் கண்டிப்பு காட்டியதில்லை. அவருக்கு பேத்தி சொல்லே வேதவாக்கு.
அவருடைய இழப்பு சிறு பெண்ணை மிகவும் பாதித்து இருந்தாலும், பாட்டிக்காக தன்னை தேற்றி அவரையும் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றினாள்.
அன்விதாவின் வட்டம் என்பது சிறிது தான், அதில் இவர்கள் மட்டுமன்றி இன்னும் சிலரும் உடன் இருந்தனர், அவர்கள் வந்தியத்தேவன், ஆதித்ய கரிகாலன் மற்றும் ஷிவாஷினி.
இவர்கள் மூவரும் தான் அவளுடைய அறுந்த வாலு கூட்டத்தின் உறுப்பினர்கள், அந்த கூட்டத்தின் அமைதியான தலைவி இவளே!
அன்விதாவிற்கு கொஞ்சம் குறும்பு தனம் இருந்தாலும், பொறுப்பான அமைதியான பெண்ணே! வீட்டில் மட்டுமே அவள் கலகலப்பான பெண், வெளியே அவள் எல்லோரிடமும் அளந்து அளந்தே பேசுபவள். அவளுக்கு உரியோரிடமே அவள் குழந்தை தனம் வெளிப்படும்.
அன்விதா இப்பொழுது B.sc. Nutrition and dietetics பிரிவில் கல்லூரி முதலாம் ஆண்டை முடித்து விட்டு இரண்டாம் ஆண்டில் பயின்று கொண்டு இருக்கிறாள்.
அவளுடன் ஷிவாஷினியும் படித்து வருகிறாள். உயிர் தோழி, இருவருக்கும் ஒரே வயது, பக்கத்து பக்கத்து வீடு என்பதால், சிறு வயதிலிருந்தே ஒன்றாக தான் உள்ளனர். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் இருந்து, தற்பொழுது ஒரே துறையில் ஒன்றாக கல்லூரியும் சென்று வருகின்றனர்.
“என்னடி அம்மு மருதாணி வாசம் மூக்கை தொலைக்குது…” என்று முகர்ந்த படி வீட்டில் நுழைந்தாள் ஷிவாஷினி.
ராஜியோ, “என் பேத்தி இன்னும் அடுப்பை கூட பத்த வைக்கல டி… நீ என்னனா மருதாணி வாசத்துக்கே மோப்பம் புடிச்சிட்டு வந்துட்ட…” என்க,
அவளோ, “என்ன ஈசு…” என்று பேச ஆரம்பிப்பதற்கு முன்பே,
“ஈசு பீஸுன்னு சொன்ன, இடுப்பு எலும்பை உடைச்சு அடுப்பில போட்டுடுவேன் பார்த்துக்க…” என்று கோபத்தில் கத்த,
‘நமக்கு எதுக்கு வம்பு…’ என்று எண்ணியவள் ஈஈஈ என பல்லைக் காட்டினாள்.
அன்வியோ, “ஈசு… அவ கிட்ட சண்டைக்கு போகாம சும்மா இருங்களேன்…” எனவும்,
“நீ என்னையே சொல்லு, அவளை ஒன்னும் கேட்டுடாத…” என்று முறுக்கிக் கொள்ளவும்,
“ஷிவு… எதுக்கு டி அவங்களை கத்த வைக்குற… கொஞ்சம் சும்மா தான் இரேன்… வா நம்ம உள்ள போகலாம்… நேத்து நான் புதுசா ஒன்னு கண்டு பிடிச்சு இருக்கேன்…” என்று இருவருக்கும் சமாதான கொடியை பறக்க விட,
ஷிவாவும் அவரை முறைத்து கொண்டே சென்றவள், “உங்க ஆயா எப்ப பார்த்தாலும் என்னைய திட்டிக்கிட்டே இருக்கு டி…” என்று சலித்துக் கொள்ள,
“மொதல்ல நீ அவங்களை வம்பு இழுக்காம இருக்கீயா…”
“அப்படி இருந்தா தான் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குதே டி…”
“ம்ம்… அதே போல என் ஈசுக்கும்…” என்று சொல்லி சிரித்தாள் அன்விதா.
ராஜியும் ஷிவாவும் இப்படி தான் வம்பு சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும், அவளை சொந்த பேத்தி போல தான் பார்த்துக் கொள்வார். இவளுக்குமே பாட்டி இல்லை, அந்த குறையை தீர்த்து வைப்பவராக இருந்தாலும், அவரிடம் ஏதாவது சண்டை போட்டு திட்டு வாங்கிக் கொள்வதில் அலாதி பிரியம். இவர்களின் பாவமான தூது புறா என்னவோ அன்விதா தான்.
சமையல் அறையில் இருந்தே தேங்காயை கடித்து கொண்டே, “என்ன வானரமும் கருங்குரங்கும் இன்னும் இங்க ஆஜர் ஆகாம இருக்காங்க… அதிசயமா இருக்கே அம்மு…” என்று கேட்கவும்,
“ஷிவு… ஈசு போய் இப்ப அவங்க ரெண்டு பேருமா… எல்லார் கிட்டயும் சண்டைக்கு போகாம உன் வாய் சும்மாவே இருக்காதா டி… இப்ப நீ கம்முனு இல்ல நானே உன் லொடலொட வாய்க்கு டேப் போட்டு ஒட்டி விட்ருவேன்…” என்ற நண்பியை கண்டு திருதிருவென விழிக்க,
“இனி நீ திங்க மட்டும் தான் வாயை திறக்கணும்… சரியா…” என்றதற்கு தலையை மட்டும் ஆட்டினாள் ஷிவா.
அன்வியோ நேரத்தை பார்க்க ஏழரை ஆகி இருந்தது.
“அண்ணாவும் ஆதியும் இன்னும் காணும்… இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு, ஏழு மணிக்கெல்லாம் வாங்கன்னு நேத்தே சொல்லி தான் அனுப்பனேன்… ஆனா, கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இன்னும் வராம இருக்காணுங்க பாரு ஷிவு…” என்று புலம்ப,
“அம்மு நான் வேணா கால் பண்ணட்டா?”
“ஒன்னும் வேணா தாயே… நானே பண்ணிக்கறேன்…” என்று விட்டு அவளே அவளது அண்ணனான வந்தியத்தேவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
இரண்டு முறை அழைத்தும் ஏற்காமல் இருக்க, நண்பனான ஆதித்ய கரிகாலனுக்கு அழைத்துப் பார்த்தாள். அவனுமே எடுக்காமல் இருந்தான்.
“பாரு ஷிவு… ரெண்டும் ஃபோன் எடுக்கல… லேட் ஆகும்னு அட்டென்ட் பண்ணியாச்சு சொல்லணும் தானே… அது கூட சொல்லாம உன் ஃபோனையே எடுக்காம இருக்கானுங்க பாரேன் டி…” என்று தோழியிடம் புகார் செய்தாள் அன்விதா.
“ஹ்ம்ம்…”
“ஹிஹி… அம்மு… நீ வேணுன்னா பாரு அவனுங்க ரெண்டு பேரும் இப்போ ஒன்னா தான் இருப்பானுங்க… அதான் நீ ஃபோன் அடிச்சும் எடுக்கவே இல்ல…” எனக் கூறி நண்பியின் கோபத்தில் மண்ணெண்ணெய்யை தாராளப் பிரபுவாக ஊற்றிக் கொண்டிருந்தாள் ஷிவாஷினி.
23. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 23
இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விடியலை வரவேற்றவளைக் காபியோடு வரவேற்றார் சரளா. கனிந்த அவர் முகத்தைக் கண்டபின் அனைத்தும் காணாமல் சென்றது. மருமகள் வந்த நாளைக் கொண்டாட நினைத்தவர், உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பினார். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைத் திட்டிக்கொண்டு அவர் முன்பு நிற்க, அதை இதை வாங்கி வரச் சொல்லிக் கட்டளையிட்டார்.
அங்கிருக்கும் நால்வருக்கும், அரசியைக் கவனிக்கும் சேவகியாகத் தான் தெரிந்தார் சரளா. அவள் அமர்ந்தால் இருக்கையைத் துடைத்து விடுவது, வேர்த்தால் விசிறியை எடுத்து வீசுவது, ஓயாது சாப்பிட எதையாவது கொடுப்பது என்று அமர்க்களம் செய்து விட்டார். ஒரு கட்டத்திற்கு மேல், அங்கிருந்தவர்கள் வயிற்றெரிச்சலை உணர்ந்தவள் அவரைச் சமாளித்துவிட்டு,
“நான் உங்களுக்கு குக் பண்ணித் தரேன் அத்தை.” என்றாள்.
“அய்யய்யோ! அதெல்லாம் வேண்டாம்மா. நீ அவனோட டிவி பார்த்துட்டு இரு. சாப்பாட்டு வேலைய நான் பார்த்துக்கிறேன்.”
“உங்க பர்த்டேக்கு என்னோட ட்ரீட்.”
மொத்தமாக மாமியார் வாயை அடைத்தவள், பிரியாணி செய்வதற்காக அனைத்தையும் வாங்கி வரக் கட்டியவனோடு கிளம்ப, “அவன் மட்டும் போகட்டும் மா.” தடுத்தார்.
ஏன் என்று மூத்த மகன் காரணம் கேட்க, “ஊருக் கண்ணு பொல்லாத கண்ணுடா. என் வீட்டு மருமகள் இப்படிச் செவசெவன்னு இருக்கிறதைப் பார்த்தா வயித்தெரிச்சல்ல புலம்புவாங்க… யாரு கண்ணும் என் மருமகள் மேல படக்கூடாது.” என்றதைக் கேட்டதும் மாமியாரைக் கட்டிக் கொண்டு ரிது சிரிக்க,
“எங்க போய் முடியப் போகுதோ…” கருடேந்திரனின் உடன்பிறப்புகள் புலம்பினார்கள்.
அவர்கள் புலம்பலுக்கு நடுவில், சமைக்க அடுப்பங்கரைக்குச் சென்றவளுக்கு எது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு இருவர் மட்டுமே நிற்கும் இடம் என்பதால், விசாலமாக நடந்தவளுக்கு எதுவும் ஒத்துப்பட்டு வரவில்லை. அவள் நிலையறிந்து உதவிக்கு வந்தான் கட்டியவன். அவனோடு சேர்ந்து நதியாவும், மூர்த்தியும் வந்து உதவி செய்தார்கள்.
ஜன்னல் வழியாக வரும் காற்றுப் போதவில்லை அவளுக்கு. சமையலின் வெப்பம் வேறு பாடாய் படுத்தியது. அங்கு வளர்ந்தவர்களுக்கு அது சகஜமாக இருக்க, கழிவறையில் கூட குளிரூட்டியை வைத்திருந்தவளுக்கு இது நரகமாக இருந்தது. அதிலும், அந்தக் குளிரூட்டியை அதிகபட்சக் குளிர்ச்சியில் வைத்து வளர்ந்த உடம்பு அது. குபுகுபுவென்று வேர்த்ததில் மயக்கம் வருவது போல் இருந்தது. வேகமாக நடுக்கூடத்திற்கு ஓடி வந்தவள் மின்விசிறியின் முன்பு நின்று கொள்ள,
“இதுக்குத் தான்மா நான் சொன்னேன்.” குறைப்பட்டுக் கொண்டார் சரளா.
“நீ உட்கார்ந்து டிவி பாருமா, அத்தையே சமைப்பா…”
“இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும்.”
“பரவால்லம்மா, எல்லாத்தையும் அவ பார்த்துப்பா. உனக்கு என்ன படம் பிடிக்கும்னு சொல்லு, போட்டு விடச் சொல்றேன்.”
மாமனாரின் வார்த்தையை மீற முடியாது அவரோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தாள். இருவரும் கதை பேசிக்கொண்டே நேரத்தைக் கடந்தனர். மதிய உணவை வெற்றிகரமாகச் சமைத்து முடித்த சரளா, அதைச் சிறு கிண்ணத்தில் போட்டுவந்து மருமகளிடம் கொடுத்து ருசி பார்க்கச் சொன்னார்.
அள்ளிப் பருகியவளுக்கு தேவாமிர்தமாக இருந்தது. கண்களை விரித்துத் தலையாட்டும் அவள் அழகில், திருஷ்டி கழித்துப் போட்டவர் சாப்பிட அனைவரையும் அழைத்தார். தனியாகச் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவள் குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டாள். எல்லாம் புது அனுபவமாக இருந்தது. சிரித்துப் பேசி மதிய உணவை முடித்த அனைவரும் மாலை எங்காவது சென்று வரத் திட்டமிட்டனர். அவர்கள் பேசுவதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு மனதாக முடிவு செய்து மெரினா கடற்கரையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இவை அவளுக்குச் சாதாரண ஒன்று. அறையில் இருந்து பார்த்தாலே கடல் அலை துள்ளிக் குதிக்கும். அப்படியான ஒன்றிற்கு, ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் திட்டமிடும் அவர்களை மனமகிழ்வாகப் பார்த்தவள், அதிசயித்துப் போனாள். எப்படிச் செல்வது என்று தனியாகத் திட்டமிடுவதில். கடைசியாக ஒரு முடிவை எடுக்க, நெஞ்சில் கை வைத்தாள் கருடனின் மனைவி.
முன்னிருக்கையில் கருடனோடு சத்யராஜ் அமர்ந்து வர, பெண்கள் மூவரும் பின்னால் அமர்ந்து கொண்டனர். மூர்த்தி நின்றிருப்பதைக் கண்டு, “நீங்க எப்படி வருவீங்க?” கேட்க, “கம்பில உட்கார்ந்துட்டு வருவேன் அண்ணி.” என ஓடி வந்து அமர்ந்தான்.
அமளி துமளியாக, மெரினாவைச் சென்றடைந்தவர்கள் ஆசை தீரப் பொழுதைக் கழித்தார்கள். வீட்டில் இருப்பவர்கள் கைகாட்டிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தான் கருடேந்திரன். இவையும், ரிதுவின் வாழ்வில் மிகவும் புதிது. இதுபோன்ற அனுபவத்தை ஒரு நாள் கூட இதற்கு முன் சந்தித்தது இல்லை. எல்லாம் அவள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடும். இவளாகத் தேடிச்செல்லும் பொருளும், இவளைப் போன்று மினுமினுப்பாக உயர்ந்த இடத்தில் தான் இருக்கும். அங்கெல்லாம் பணம் மட்டுமே அனைத்துமாகத் தெரிந்திருக்கிறது. அவை அனைத்தையும் ஓரம் கட்டியது இந்தக் குடும்பம்.
“உனக்கு ஏதாச்சும் வேணுமா?”
“ம்ஹூம்!”
“சும்மா எதையாவது கேளு.”
பார்வையைச் சுழற்றியவள், “அது!” ஒன்றைக் கை காட்ட, “ஹா ஹா… வா.” அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தான்.
நெருப்பு மூட்டிச் சுட்டுத் தரும் சோளத்தைத் தான் கேட்டாள். ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் கொடுத்தான். ஆசைப்பட்டுக் கேட்டவளுக்கு நான்கு வாய் கூட உண்ண முடியவில்லை.
“ஊ… ஆ…” ஓசை கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.
குடும்பத்தோடு அமர்ந்திருந்தவன் பார்வையில் அவை விழுந்தது. படபடக்கும் கண்களும், உப்பு மிளகாய்த்தூள் சுவையில் நிறம் மாறிப்போன அந்த அதரங்களும் ரசிக்கத் தூண்டியது. அடிக்கடி வலது கையால் உதட்டைத் துடைத்து, அதை ஆடையில் துடைத்துக் கொள்பவள் அவஸ்தை அழகாகத் தெரிந்தது. சுற்றி இருக்கும் குடும்பத்தாரை மறந்தவன் அவள் பின்னே அலைய ஆரம்பித்தான்.
பேசிக் கொண்டிருந்ததால், இவன் நிலையை யாரும் அறியவில்லை. தீவிரமாகச் சோளத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தவளும் இவனைக் கவனிக்கவில்லை. தலைமுடி முதல், மணலில் புதைந்திருந்த பாதம் வரை எல்லாம் அவனுக்காக என்ற எண்ணம் மெய்சிலிர்க்க வைத்தது. முதல்முறையாக இவளைப் பார்க்கும் பொழுது, இப்படியான தருணத்தில் இருப்போம் என்பதை எதிர்பார்த்திடாதவனுக்கு, இந்தத் தருணம் பொக்கிஷமாக அமைந்தது.
“ஊஃப்!” என்றவள் நுனி நாக்கால் இதழை எச்சில் செய்து, “வேண்டாப்பா!” அவனை நோக்கி நீட்ட, அவள் செய்த செயலோடு அவன் இதயம் தொப்பென்று கடற்கரை மணலில் விழுந்தது.
நீட்டிய கையோடு அவனையே ரிது பார்த்திருக்க, அவனது பார்வை அந்த அதரத்தை மொய்த்தது. குடும்ப ஆள்களை எண்ணிக் கண்ணால் கண்டிக்கும் மனைவியைக் கண்ணடித்துக் கவர்ந்தவன், யாரும் அறியா வண்ணம் பறக்கும் முத்தத்தைத் தூதுவிட, அந்தி மறையும் சூரியன் இவள் வெட்கத்தைப் பார்த்து விட்டது.
***
சரளாவின் பிறந்தநாள் அன்றைய இரவை எட்டியது. நேற்று இரவு சரியாக உறங்காதவள், இன்றைய இரவையும் உறங்கா இரவாகக் கழித்தாள். காலை கண் விழித்ததும், கடவுளைத் தேடி ஓடாமல் மருமகளைத் தேடி வந்த சரளாவோடு, சகஜமாகப் பழக ஆரம்பித்தவள் அன்றைய வேலைகள் அனைத்தையும் அவளே செய்ய ஆரம்பித்தாள். அவர் வேண்டாம் என்றதையும் ஏற்காமல் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தாள்.
கருடன் எழுவதற்கு முன்னால், காலை உணவை முடித்துவிட்டுத் தயாராகி வந்தவள் அழகை அங்கிருந்த அனைவரும் ரசித்தார்கள். நீல நிறப் பட்டுடுத்தி, மிதமான அலங்காரத்தில் நின்றவளுக்குச் சிகை மட்டுமே குறையாகத் தெரிந்தது. அதை வாய் விட்டுச் சொன்னால், எப்படி எடுத்துக் கொள்வாளோ என அங்கிருந்த அனைவரும் மனதிற்குள் வைத்துக் கொள்ள, கண்ணாடியைப் பார்த்தவளுக்கு அந்த எண்ணம் சிறிதாக எட்டிப் பார்த்தது.
அதற்குக் காரணம் அன்று அவன் சொன்னதுதான். எப்படியான பெண் பிடிக்கும் என்ற கேள்விக்குப் பதிலாக நிற்கிறாள் ரிது. அன்று பூ வாங்கித் தர ஆசையாக இருக்கிறது என்றவனுக்காக, முடியின் மீது ஆசை பிறந்தது. எப்படியாவது அதையும் வளர்த்து அவனுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தவள் மெல்லத் தட்டி எழுப்பி இன்பத்தில் ஆழ்த்தினாள்.
கதவு திறந்து இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால். அவன் அவஸ்தை கண்டு ஏளனம் செய்தவள், காலை உணவைப் படையல் இட்டு பாராட்டையும் வாங்கினாள். அத்தோடு நிற்காமல், அந்தக் குடும்பத்தோடு சேர என்னென்ன வேண்டுமோ அவை அனைத்தையும் அவளாக ஓடிச் சென்று செய்ய,
“எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுற?” தாழ்ந்த குரலில் கேட்டான்.
“உனக்கு இப்படி இருந்தால் புடிக்கும்ல.”
“உன்ன ரொம்பக் கஷ்டப்படுத்துறன்னு தோணுது.”
“ப்ச்!” என அவன் சட்டை பட்டனைத் திருகியவள், “நீ என் கூட இருக்கிறது தான் எனக்குச் சந்தோஷம்! அது இந்த வீட்ல கிடைக்கும்னா இப்படி எல்லாம் இருக்க நான் ரெடி!” என்றவளை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு உச்சந்தலையில் முத்தமிட்டான். அனைத்தும் சுகம் என்ற மகிழ்வில் சிரித்தபடி அவள் இருக்க, முத்தமிட்டவன் முகம் தான் நிறம் மாறியது.
அடுத்த நாளும் அழகாகப் பிறக்க அவளின் வாழ்வு இனிதே தொடங்கியது. இரவானால், தூக்கம் தான் வசப்படவில்லை. காலை எழுந்ததிலிருந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பவள் மீது தான் அவன் பார்வை இருந்தது. அதை அறிந்தவள் காதலோடு கண்ணடிக்க, இதழ் அசைத்துச் சிரித்தான் குரோதத்தோடு.
வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஓய்வெடுக்க வந்தவளிடம், “இந்த டிரஸ்ஸை மட்டும் கொஞ்சம் வாஷ் பண்ணித் தரியா.” கொடுக்க, மொட்டை மாடிக்குச் சென்றாள். சமையல் தெரியும் என்பதால் அதில் கடினப்படாதவள், துணி துவைத்து முடிப்பதற்குள் ஒரு வழி ஆகிவிட்டாள். பின் இடுப்பு வலியில் நகர மறுத்தது. அதை முடித்த கையோடு,
“காஃபி போடுறியா?” கெஞ்சலோடு கேட்டான்.
“இந்தாப்பா.” என்றதை வாங்கிக் கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தான்.
“என்கிட்டக் கேட்டு இருந்தா நான் போட்டுக் கொடுத்திருப்பேன்ல டா.”
“அவ எதுக்கு இருக்கா?” என்று விட்டான் வெடுக்கென்று.
ஒரு நொடி அங்கிருந்த அனைவருக்கும் முகம் வாட, “இப்படி எல்லாம் இருப்பன்னு எதிர்பார்க்கவே இல்லம்மா… சரளா சொன்ன மாதிரி நீ ரொம்ப நல்ல பொண்ணு. நாங்கதான் உன்னைத் தப்பா புரிஞ்சுகிட்டோம்.” என்றார் சத்யராஜ்.
“ஆமா அண்ணி. நாங்களும் இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அண்ணனை நீங்க கவனிக்கிற விதத்தைப் பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு.” நதியா.
“உங்களை மரியாதை இல்லாமல் பேசிட்டேன் அண்ணி. மனசுல எதுவும் வச்சுக்காதீங்க.” மூர்த்தி.
“ஹா ஹா… ஹி ஹி…”
கருடேந்திரன் போட்ட கூச்சலில் அனைவரின் பார்வையும் அவனிடம் திரும்ப, “யாரு! இவ நல்லவளா?” என்று விட்டு அண்ணாந்து சிரித்தான்.
தன்னவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன், சிரிப்பை நிறுத்தி முறைப்பை வீசினான். வானிலை மாற்றம் போல் மாறும் அவன் முக பாவனைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் புருவம் சுருக்கினாள். அதில் ஏளனத்தைக் கொட்டியவன்,
“இப்படி எல்லாம் பண்ற ஆளா இவ… உங்க பாராட்டெல்லாம் எனக்கு வர வேண்டியது. இந்தப் பணக்காரிக்கு மருமகள் வேஷம் போட்டு மூணு நாளா கூத்தாட வச்சது நான்தான்.” என்றதும் இடியே இடித்தது அவள் இதயத்தில்.
மெல்ல எழுந்து அவள் முன்பு நின்றான். தந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டவள் காதலித்தவனை இன்னும் நம்பிக் கொண்டிருக்க, நின்றவனுக்கோ மலையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற மகிழ்வு. தோல்வியின் பக்கமே செல்லாதவளைக் குண்டுக் கட்டாகத் தூக்கிப் போட்ட மகிழ்வில் மிதப்பாகச் சிரித்தவன்,
“பரவாயில்லையே…” என மேலும் கீழும் பார்த்தான்.
“நான் கூட உன்னை ஜெயிக்கவே முடியாதுன்னு நம்பிட்டேன். அட மடையா, நீ ஜெயிப்படான்னு நம்பிக்கை கொடுத்து அதை நிறைவேத்தி வெச்சிட்டியே!”
“கருடா…”
“எஸ்! கருடனே தான். எப்படி இருக்கு நம்ம ஆட்டம்? பெரிய பணக்காரி! சொடக்குப் போட்டா நாலு பேர் கும்பிடு போட்டு ரெடியா நிப்பாங்க. நடை, உடை, பாவனை எல்லாத்துலயும் பணத்தோட வாசம் தூக்கலா இருக்கும். மரியாதை எல்லாம் என்னன்னே தெரியாது. குடிச்ச டம்ளரை எடுத்து வைக்கக் கூட காலிங் பெல் அடிச்சு ஆளக் கூப்பிடுவ… இந்தப் பட்டுக் கால் மண்ல பட்டதே இல்ல. அப்படி இருந்த உன்னை எப்படி நிக்க வெச்சிருக்கேன் பார்த்தியா?
உன்கிட்ட இப்பவும் காசு இருக்கு. ஆனா, நீ ஒரு செல்லாக்காசு! மரியாதை இல்லாமள் பேசுன என் பெத்தவங்ககிட்ட உன்னை நிக்க வச்சுருக்கேன். என் வீட்ல ஒரு வேலைக்காரி மாதிரி எல்லா வேலையும் செய்ய வச்சிருக்கேன். என்னைத் தூங்க விடாம டார்ச்சர் பண்ண உன்னை, மூணு நாளா இம்சை குடுக்காமலே தூங்க விடாமல் செஞ்சிருக்கேன். ரோட்டுல நடக்க வச்சிருக்கேன். என் வீட்டுச் சாப்பாட்டுக்கு, மூணு வேளையும் உட்கார வச்சிருக்கேன்.” என்ற வார்த்தைகள் அனைத்தும் சாட்டை அடியாக அவள் உடலை வதைத்தது.
அவன் குடும்பத்தார்கள் அனைவரும் நம்ப முடியாத திகைப்பில் நின்றிருக்க, “அது எல்லாத்தையும் விட, நாயி, நாயின்னு சொன்ன ஒருத்தனுக்காக உன்ன நாயா அலைய வச்சிருக்கேன் பார்த்தியா…” என்றதும் அவள் விழிகள் அழுத்தமாகப் பார்த்தது அவனை.
“எப்படி எப்படி? உனக்காகத் தான் எல்லாம் பண்ணேன். உண்மை தெரிஞ்சா உனக்கும் எனக்குமான உறவு முடிஞ்சு போயிடும், நீ எனக்கு வேணும்! ஹா ஹா…”
அழுத்தமான விழிகளுக்குள் தோல்வி ஊடுருவியது. மெல்ல அவள் மனத்திற்கும், புத்திக்கும் அவன் நடத்திய நாடகம் புரிந்தது. தன்னை நேரில் நின்று அடிக்க முடியாததால், அன்பெனும் ஆயுதத்தை நேராக இதயத்தில் குத்தி ரத்தத்தைப் பார்த்திருக்கிறான் என்பதைத் தாமதமாக உணர்ந்தவளால், ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் முன்பு நிராயுதபாணியாக நின்றாள். அதை முழுதாக ரசித்தவன் தாவி அவள் கழுத்தைப் பிடித்து, “என் அம்மாவை வச்சு அடக்கப் பார்த்த உன்னை, உன் அம்மாவ வச்சு அடக்கிட்டேன் பார்த்தியா…” என்று பின்னால் தள்ளி விட்டான்.
பிடிக்க வந்த சரளாவையும், தன்னிடம் பேச வந்த குடும்பத்து ஆள்களையும் ஒரே பார்வையில் அடக்கியவன், “இப்படி ஒரு நாளுக்காகத் தான்டி கனவுலயும் பிடிக்காத உன்னைப் பிடிச்ச மாதிரி நடிச்சேன். என் வீட்ல வந்து இப்படி நீ உட்காரனும்னு தான்டி ஒவ்வொன்னத்தையும் பார்த்துப் பார்த்துச் செஞ்சேன்… கருடா கருடான்னு பைத்தியம் பிடிச்சு அலையத் தான்டி தொட்டாலே அருவருப்பா இருக்க உன்ன, ரசிச்சுத் தொடுற மாதிரி நடிச்சேன்.” என்றதும் அவளது கண்கள் இறுக்கமாக மூடிக்கொண்டது.
“சும்மா சொல்லக் கூடாது. என்ன அருமையா என்னை லவ் பண்ற… அப்படியே உருகி ஊத்திடுச்சு உன் அன்பு. உனக்குள்ள இப்படி ஒரு காதலா!” என்றவன் கைகள் இரண்டையும் நீட்டி, “சொல்லும்போதே எப்படிச் சிலிர்க்குது பாரு!” சிரித்தான்.
அவளோ கண்களைத் திறக்காமல் அதே நிலையில் இருக்க, அழுத்தமாகக் கன்னத்தைப் பிடித்து, “கண்ணத் திறடி! நீ தோத்துப் போய் நிற்கிறதை நான் பார்க்கணும். ஆணவத்துல எவ்ளோ ஆட்டம் போட்ட… எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சு, என் காலுக்குக் கீழே நிக்க வச்சுட்டேன் பார்த்தியா?” என்றவனை அந்நிலையிலும் பார்க்கத் தயாராக இல்லை ரிதுசதிகா.
“ம்ம்… நீ செத்துப்போன பாம்பு! இனி உன்ன அடிச்சு ஒன்னும் ஆகப் போறது இல்ல. இந்த அசிங்கத்தைத் தாங்கிக்க முடியாம ஏதாச்சும் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா, சீக்கிரம் பண்ணிக்க… கோர்ட், டைவர்ஸ்னு அலையுற வேலை மிச்சம்!” என்றவன் சிறிதும் இரக்கம் பார்க்காமல் அவள் பின்னங்கழுத்தில் கை வைத்து, “வெளிய போடி!” தள்ளி விட்டான்.
“என்னடா பண்ற?” என அவசரமாக ஓடிவரும் அன்னையைத் தடுத்துக் கதவைச் சாற்றியவன், “நீங்க என்ன கேட்டீங்களோ, அதை நான் செஞ்சிட்டேன். இதுக்கு மேலயும் இந்த விஷயத்துக்குள்ள வராதீங்க. அவளுக்கும், எனக்குமான உறவு இந்த நிமிஷத்தோட முடிஞ்சு போச்சு.” என்றதையும் மீறி அவர் கதவைத் திறக்கப் போக,
“அந்தக் கதவு திறந்துச்சுன்னா, உங்க புள்ள செத்துடுவான்.” என்றான் அழுத்தமாக.
பிள்ளையின் வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியாதவர் அழுகையோடு நிற்க, மற்ற மூவருக்கும் அங்கிருப்பது கருடனாகத் தெரியவில்லை. இதுபோன்று பேசிக் கூடக் கேட்டதில்லை. அப்படிப்பட்டவனா, இப்படி அரக்கனாக நடந்து கொண்டது என்ற பெரும் அதிர்வில் அப்படியே இருந்தார்கள். குடும்பத்தார்கள் பார்வையைப் பற்றிக் கவலை கொள்ளாது, தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
***
எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்பதைக் கூட அறியாதவள், பிரம்மை பிடித்தவள் போல் ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டிருந்தாள். மகளைக் கவனித்தவர், “என்னடா, அதுக்குள்ள வந்துட்ட. கருடன் வரல…” சிரித்த முகமாக விசாரித்தார்.
புகுந்த வீட்டிற்கு வாழச் சென்ற மகளை அன்போடு விசாரிக்க, பதில் சொல்லும் நிலையில் இல்லாதவள் தாயின் அறை முன்பு நின்றாள். அதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவள் விழிகளில் இல்லை. அவ்வளவு அழுத்தமாக வீடு வந்து சேர்ந்தவள், அன்னையைப் பார்த்ததும் உடைந்து விட்டாள்.
ஓடிச்சென்று ராதாவின் மீது சரிந்தவள் சத்தமிட்டு அழுதாள். அங்கிருந்த பொன்வண்ணனுக்கு உடல் நடுங்கியது. ராதாவிற்காகவும், மூத்த மகனுக்காகவும் அவள் இப்படி அழுது பார்த்திருக்கிறார். அதன்பின் இப்போது தான் பார்க்கிறார். நன்றாகப் புகுந்த வீட்டிற்கு வாழச் சென்ற பெண், இப்படி அழுவதைப் பார்க்க எந்தத் தந்தைக்குத் தான் துணிவிருக்கும்.
பாய்ந்தோடி மகளை அரவணைத்தவர் பயத்தோடு என்னவென்று கேட்க, அப்போதும் எதுவும் சொல்லாமல் அழ மட்டுமே செய்தாள். நேரம் கடந்தும் அவள் அழுகைக்கான காரணம் தெரியவில்லை. எவ்வளவு சமாதானங்கள் சொல்லியும் ரிதுவைச் சரிப்படுத்த முடியவில்லை.
பயத்தில், மருமகனைத் தொடர்பு கொண்டவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சத்யராஜைத் தொடர்பு கொண்டு மகளது அழுகைக்கான காரணத்தைக் கேட்டார். சங்கடத்தோடு நடந்த அனைத்தையும் தெரிவிக்க, இதயம் துடிப்பதை நிறுத்தியது. நம்ப மறுத்தவர் இரண்டு மூன்று தடவை, “நிஜமாவா?” கேட்டார்.
இவ்விருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று முதலில் ஆசை கொண்டது இவர் தான். இவரின் அந்த ஆசைதான் பெற்ற மகளின் நிலைக்குக் காரணம். பிள்ளையின் அழுகையைச் சகித்துக் கொள்ள முடியாத தந்தை ஆதரவாக அரவணைத்து, “நான் பேசிப் பார்க்கிறேன்டா” என்றவரைப் பார்த்தாள்.
அப்பார்வையில் இருக்கும் குற்றத்தை உணர்ந்து, தலை குனிந்தவரை முடிந்த வரை முறைத்து விட்டு அறைக்குச் சென்று விட்டாள். பெரிய சுனாமியே இரு வீட்டையும் சுற்றி அடித்தது போல் இருந்தது நிலவரம். இரு வீடும் பலத்த சேதாரங்களைச் சந்தித்து, எப்படித் தலையெடுப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இரண்டு நாள்கள் அமைதியாக இருந்த பெரியவர்கள் பேசிக் கொண்டனர். அதன்படி மகனைச் சமாதானம் செய்ய சரளாவும், சத்யராஜும் போராடிக் கொண்டிருக்க, அந்த வாய்ப்பையே தந்தைக்குக் கொடுக்கவில்லை ரிது. தன் முடிவில் மாற்றம் இல்லை என்று விட்டான் கருடன். நடந்ததைப் பற்றிப் பேசத் தயாராக இல்லை ரிது. இவர்களின் இந்த முடிவோடு இரண்டு வாரங்கள் கடந்தது.
மிடுக்காகச் சுற்றித் திரியும், மகள் முகத்தில் தெரியும் வேதனையைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானவர், சொல்லிக் கொள்ளாமல் மருமகனைப் பார்க்கச் சென்றார். வழக்கம்போல் ஆட்டோ ஓட்டிவிட்டுக் காலை உணவிற்கு வந்தவன் இவரைச் சிறிதும் மதிக்காது டீவி பார்த்துக் கொண்டிருக்க, “உன் மேல நிறையக் கோபம் இருந்தாலும், அதைக் காட்ட முடியல. காரணம் என் பொண்ணு…
ஒரு பொண்ணப் பெத்தவனா மட்டும்தான் உன்கிட்டப் பேச வந்திருக்கேன். ரிது அன்புக்கு அடங்கற குழந்தை! எதை அவகிட்டக் காட்டக் கூடாதோ அதைக் காட்டித் தோற்கடிச்சிருக்க. என் பொண்ணு ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா, ஏற்கெனவே அவள் நிறைய இழப்பைப் பார்த்திருக்கா… உன்னோடதை நிச்சயம் தாங்க மாட்டா. தயவு செஞ்சு எல்லாத்தையும் மறந்துட்டு…” என அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கருடனின் குரல் ஒலித்தது.
“மரியாதையா வெளிய போயிடுங்க.” என்று.
“என்னடா ஆச்சு உனக்கு? அந்தப் பொண்ணு தான் எந்தத் தப்பும் பண்ணலன்னு தெரிஞ்சிருச்சே. அப்புறம் எதுக்காகடா இப்படி நடந்துக்கிற? எங்களைத் தான அவ தப்பா பேசினா. அதை நாங்களே மறந்துட்டோம். உனக்கு என்னடா? தப்பே பண்ணாதவளுக்குத் தாலி கட்டி நீ தான் பெரிய தப்புப் பண்ணிருக்க. இதுல பேச வந்தவரை மரியாதை இல்லாமல் பேசுற. நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல கருடா…”
திட்டிக் கொண்டிருக்கும் தந்தையைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது, “பொண்ண ஒழுக்கமா வளர்க்கத் துப்பில்லை. இதுல நியாயம் பேச வந்துட்டீங்க. நான் அவ கழுத்துல கட்டினது தாலியே இல்ல. உங்க பொண்ணும் அதை ஒருநாளும் மதிச்சதும் இல்ல. இந்நேரம் கழற்றித் தூக்கிப் போட்டு இருப்பா. வேற எந்த இளிச்சவாயனாவது கிடைச்சா கட்டி வையுங்க.” என்றவனை நம்ப முடியாது பார்த்தார் பொன்வண்ணன்.
சொல்லியும் நகராமல் அமர்ந்திருப்பவரைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன், “எந்த வேலையப் பார்க்கக் கூடாதோ, அந்த வேலையைப் பார்க்குறீங்க.” எனத் தன்னால் எழுந்து செல்ல வைத்தான்.
***
மனம் நொந்து தனியாக அழுது புலம்பியவர் மகளைப் பார்க்க வந்தார். மெத்தையில் கவிழ்ந்து படுத்திருந்தவள் அருகில் வந்தவர், “ரிது…” என அந்த ஏழு அடுக்கு மாடி இடிந்து விடும் அளவிற்குக் கத்தினார். மெத்தை முழுவதும் மாத்திரைகள் சிதறி இருந்தது. அரை மயக்கத்தில் தந்தையின் குரலைக் கேட்டபடி படுத்திருந்தாள். அலறித் துடித்த பொன்வண்ணன், மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல முயல, திறக்க முடியாத கண்களைக் கடினப்பட்டுத் திறந்து,
“என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தான் முதல் காரணம்!” என அவரைத் தள்ளி விட்டாள்.
தலையில் அடித்துக் கொண்டு, செய்த தவறைச் சொல்லிப் புலம்பியவர் கெஞ்சி மருத்துவமனைக்கு அழைக்க, அவரை விரட்டி அடித்துக் கதவைச் சாற்றிக் கொண்டாள்.
கதவைத் தட்டித் தோற்றுப் போனவர் ஆத்திரமடங்காது சத்யராஜை அழைத்து, “என் பொண்ணுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு, அவனை நான் சும்மா விடமாட்டேன். பாவிப் பையன, நம்பிக் கட்டிக் கொடுத்ததுக்கு என் பொண்ணை இப்படிப் பண்ணிட்டானே!” பேரிடியை இறக்கினார்.
1. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 1
சென்னை நகரம்… தூங்கும் நகரமில்லை என்பதற்கு சாட்சியாக, மக்கள் எல்லாம் பரபரப்பாக அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.
வானம் மங்கலான நீலத்தில் படர்ந்து இருக்க… சூரியன் மெது மெதுவாக தனது வெப்பத்தை ஊற்ற ஆரம்பிக்கிறான்.
அந்த காலை பொழுதினை பீக் அவர் என்றே கூறலாம்.
பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கூட்டம். நேரம் ஆகி விட்டது, இப்பொழுது வரும் ஒரு பேருந்தில் கட்டாயம் அடித்து பிடித்து ஏற வேண்டும் என்று எண்ணி பலர் காத்துக் கொண்டிருக்க,
சவாரியை அவசரமாக ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்களையும், வெகு வேகத்தில் இருசக்கர வாகனங்களை செலுத்தும் பயணிகளையும் தடுக்கும் விதமாக போக்குவரத்து சிக்கல் இருப்பதால், வேகமெடுத்து செல்ல இயலாமல் மெதுவாக ஊர்ந்தபடி நகர்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் பல்வேறு சத்தங்கள் – வண்டிகளின் ஹார்ன், போன் அழைப்புகள், வண்டிகளின் கார் கிளச்சின் சப்தம், ரேடியோ எஃப்எம் பேச்சுகள், சிக்னலின் ஓரத்தில் இருக்கும் நாயின் கத்தல், கடைத்தெருவில் இருக்கும் சிறு வியாபாரிகளின் குரல் என்று பற்பல!
அந்த சுறுசுறுப்பான மக்கள் கூட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை! ஒவ்வொரு ஓட்டம்! வெவ்வேறு சூழ்நிலை! பல்வேறு கவலைகள் மற்றும் வலிகள்!
ஆனால், அந்த பரபரப்புக்கு நடுவில், பலரும் யூடியூபில் ஒரு வீடியோவையே பார்த்தபடி இருந்தனர்.
அது ஏதோ ஒரு உண்மையான சம்பவம் பற்றிய செய்தியை விளக்கமாக கூறும் காணொளி.
தற்பொழுது வலையொளியில், அதாவது யூடியூப்பில் உண்மை சம்பவங்களை பற்றிய செய்தியை, சாமானிய மக்களுக்கு விளக்கும் படி சொல்லும் மற்றும் பிறருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் மக்களை ஊக்குவிக்கும் போன்ற காணொளிகளை பதிவேற்றும் சேனல் அது.
“ஹெலோ எல்வி க்ரூஸ் (ELVI CREWS), இது உங்க எல்விபீடியா.
இப்ப நான் எதை பத்தி பேச போறேங்கிறது உங்க எல்லாருக்குமே தெரிஞ்சு இருக்கும்…
எஸ் அஷ்வினி மர்டர் பத்தி தான்,
யாரும் ஷாக் ஆகிட வேணாம்… என்னடா இவன் மர்டர் அப்படின்னு சொல்றானே, அந்த பொண்ணு சூசைட் தானே பண்ணிக்கிச்சு, இவன் எந்த விஷயமும் தெரியாம உளறுறானோ ன்னு யோசிக்கலாம்,
ஆனா, ஒருத்தரை தற்கொலைக்கு தூண்டுகிற செயல் கூட கொலைக்கு தான் சமம் னு சொல்வேன், அப்போ அதுல இருந்த எல்லாருக்குமே இந்த கொலைக்கு சம்பந்தம் இருக்கு… இல்லையா?
என்றவன் அவள் ஏன்? எதனால் இறந்தால்? என்றெல்லாம் விவரித்து கூறியவன்,
மேலும்,
இந்த அஷ்வினியோட இறப்பு ஒன்னும் முதலாவது கிடையாது… இங்க பல பொண்ணுங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் உடலளவிலும் மனதளவிலும் சிதைஞ்சி போய்ட்டு தான் இருக்காங்க… அதுல இந்த மாதிரியான நியூஸ் 0.1 சதவீதம் நம்மளோட கண்ணுக்கு தெரிஞ்சு இருக்கு… தெரியாம எத்தனையோ இறப்புகள், எத்தனையோ கொடுமைகள் ன்னு எக்கச்சக்கமா நடக்க தானே செய்யுது…
ஏன் நாலு வருஷம் முன்னாடி கூட, கேரளாவில் ஒரு பொண்ணு செத்து போச்சு, அந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கணும், நியாயம் கிடைக்கணும்னு சோஷியல் மீடியாவில் கொந்தளிச்சோம், அதுக்கு அந்த பொண்ணோட புருஷன ஜெயிலில் போட்டாங்க, ஆனா, அவங்களே இப்ப ஜாமீனும் கொடுத்து வெளியே விட்டு இருக்காங்க… பலருக்கும் இந்த விஷயம் தெரியாது,
நாமளும் அந்த பொண்ணோட இறப்பை மறந்துட்டு இந்த பொண்ணோட இழப்பை பத்தி பேச ஆரம்பிச்சிட்டோம்,
இப்ப எல்லாம் யாரோட கண்ணீருக்கும், வலிக்கும், அவங்களோட இழப்புக்கும் நியாயம்னு கிடைக்கிறதே அரிதாகி போகுது…
நாம ஒரு விஷயத்தை பரபரப்பாக பேச ஆரம்பிக்கிறோம் அப்படின்னா அதோட ஆயுட்காலம் குறைஞ்சது ஒரு வாரம் தான், அதுக்கு பிறகு வேற ஒரு ஃப்ளாஷ் நியூ வரும், நாமளும் அதுக்கு ஜம்ப் ஆகி வேறொரு புது நியூஸ பேசிட்டு போய்ட்டே இருப்போம்,
இதுல கன்கிளுஷன் சொல்லவெல்லலாம் என் கிட்டயோ உங்க கிட்டயோ எதுமே இல்லங்க… உங்களோட பிரச்சினைக்கு உங்க கிட்ட மட்டும் தான் தீர்வு இருக்கு, எந்த ஒரு சூழ்நிலையிலும் கிவ் அப் மட்டும் பண்ணி தப்பான முடிவை எடுக்காதீங்க, அந்த முடிவினால் பாதிக்கப்பட போறது உங்களை சார்ந்தவங்க மட்டும் தான்.
சோ, ப்ளீஸ் யாருமே தப்பான முடிவை நோக்கி போகாதீங்க, ஏதோ ஒரு நிமிஷ தேவையில்லாத முடிவால் வாழ்க்கையை முடிக்கும் நிலைக்கு போய்டாதீங்க,
தற்கொலை எந்த விதத்திலும் சரியான முடிவா ஆகிடாது, சோ பீ ஸ்ட்ராங், கீப் தின்க் பாஸிட்டிவ்.”
என்பதுடன் அவனுடைய உரையை முடித்துக் கொண்டான் வலையொளியில் (Youtube) பிரபலமான எல்விபீடியாவின் எல்வின் ஆரோன்.
அந்த கானொளி மூலம் அவன் பேசும் வார்த்தைகளை பொதுமக்கள் கேட்கும் பொழுது… அந்த காலை பொழுதின் பரபரப்பையே ஒரு கணம் நிறுத்தி மௌனமாக்கத் தான் செய்தது.
மேலும், அந்த காணொளியின் கீழே அவனுடைய சந்தாதாரர்களும் (subscribers) அவர்களுடைய கருத்துக்களை நேர்மறை எதிர்மறை கருத்துகளை பகிர்ந்தபடி இருந்தனர்.
அங்கு அவனது பேச்சால் அனைவராலும் பேசப்பட்டவனோ, தாயின் மடியில் படுத்து செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்தான்.
“என்னடா கண்ணா இன்னைக்கு வந்த வீடியோவில் ரொம்ப எமோஷனலா பேசிட்டு இருக்க?” என்று மகனின் தலையை கோதியபடி கேட்டார் ஆரோனின் தாயார் பார்வதி.
“ம்மா… நான் ஒன்னும் அப்படி எல்லா எமோஷனலா பேசல…”
“என் புள்ளைய பத்தி எனக்கு தெரியாதா… எல்லா வீடியோவிலும் என்ன நடந்துச்சோ அத மட்டும் தான் பேசுவ… அதுக்கு மீற எதையும் பேசிட மாட்டீயே… ஆனா, இந்த பொண்ணோட சூசைட் கேஸ்ல நீ நிறைய அட்வைஸ் பண்ற போல தான் பேசிட்டு இருந்த.. என்னவாம் என் செல்லத்துக்கு?” என்று அன்னை கேட்கவும்,
“இப்படியான நியூஸ் எல்லாம் கேட்டு கேட்டு ரொம்ப சலிப்பா இருக்குமா… வேதனையாவும் இருக்கு… இந்த பொண்ணு செத்துப் போச்சு வெளியே தெரியுது… பட், ஃபேக்ட் என்னனா இதைவிடவும் பல கொடுமைகளை அனுபவிச்சிட்டு வெளியே சொல்லாம கஷ்டப்படும் பொண்ணுங்க எவ்வளவு பேர் இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க…
இதையெல்லாம் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ம்மா… அதான் கொஞ்சம் நிறையவே பேசிட்டேன் ம்மா.. நான் இப்படி பேசுனதுல எந்த தப்பும் இருக்கல தானே ம்மா?” என்று அவரிடமே கேட்க,
“இல்லப்பா… எதுவும் இல்ல… நீ பேசினது நூத்துக்கு நூறு சதவீதம் சரி தான்… என்ன பண்றது பெண்களோட பிறப்பே இப்படி தான்… அதுல எல்லா கஷ்டத்தையும் அனுபவிக்கணும் ன்னு எழுதி இருக்கு போல..” என்று கவலையாக பேச ஆரம்பிக்கவும்,
“அம்மா… தலையெழுத்து அது இதுன்னு எல்லாம் பேசாதீங்க… இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்க எந்த பொண்ணுக்கும் அவசியம் இல்ல… அதுல இருந்து வெளியே வந்து, அவங்க சுயமா சிந்திச்சு, சுதந்திரமா, சந்தோஷமா அவங்க வாழ்கையை வாழ எல்லாருக்குமே எல்லா உரிமையும் இருக்கு… இருக்கணும்…” என்று படபடவென்று பொரிந்து தள்ளி விட்டு,
“ப்ச்… ம்மா… போதுமே… ஸ்கிப் த டாபிக்… எனக்கு ஒரு சுக்கு டீ வேணும்… கொஞ்சம் தலை வலிக்குது…” எனக் கூறி அமைதியாகி விட்டான் எல்வின்.
அவனை புரிந்துக் கொண்டு, “சரிடா போறேன்…” என சென்று விட்டார் பார்வதி.
எல்வினுக்கு இவற்றை எல்லாம் நினைத்து நினைத்து உண்மையாகவே தலைவலி வந்தது தான் மிச்சம்.
அதனை அகற்றும் விதமாக, பார்வதி போட்ட சுக்கு டீயை குடித்து விட்டு, அவனுடைய கணினியை உயிர்ப்பித்து வேலையை பார்க்க தொடங்கி விட்டான்.
எல்வின் ஆரோன், வயது 29 தொடங்கி பத்து நாட்கள் தான் சென்றிருந்தது. B.E. in Software Engineering படித்து முடித்து, தற்பொழுது ஒரு ஐடி கம்பெனியில் திட்ட மேலாளராக (Project manager) பணியாற்றிக் கொண்டிருக்கின்றான்.
அவனுடைய வேலை ஒருபுறம் இருந்தாலும் ஒரு யூடியூபர் ஆகவும் திறம்பட செயல்பட்டு வருகிறான். அவனுக்கென்று தற்பொழுது நான்கு மில்லியன் சந்தாதாரர்கள் (Subscribers) இருக்கிறார்கள். இது அவனுடைய 7 ஆண்டு உழைப்பிற்கான பலன் தான்.
அவனுடைய இருபத்து மூன்றாம் வயதில் எல்விபீடியாவை தொடங்கி, படிப்படியாக உயர்ந்தோங்கி வேரூன்றி நின்றிருக்கிறான். ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்து இருந்தாலும், இப்பொழுது அனைவராலும் பாராட்டக்கூடிய இடத்தில் வந்திருக்கிறான்.
என்னதான் அவனுக்கு இதில் பெயர் புகழ் பணம் என்று கொட்டி கிடந்தாலும், அவன் வேலையை என்றுமே விட நினைத்தது இல்லை.
ஆரோனுக்கு அவனது வேலையும் முக்கியம், அதேசமயம் அவனுடைய பேஷனும் முக்கியம், எதற்காகவும் எதையும் விட அவன் நினைக்கவில்லை. இரண்டையும் ஒரே தராசில் வைத்து தான் பார்ப்பான். ஆகையால், அவ்விரண்டினலும் எந்த ஒரு தவறும் இன்றி சரியாகவே செய்து கொண்டிருந்தான்.
அவனுடைய யூடியூப் சேனலை எவ்வாறு வளர்த்து விட்டானோ, அதேபோல அவனுடைய வேலையிலும் உயர்ந்து கொண்டே தான் இருந்தான்.
அவனுடைய புகழையும் பாராட்டையும் தலைக்கு ஏற்றால் இருப்பதும், அவனுக்கு வரும் எதிர்மறை விமர்சனங்களை கடந்து வருவதும் தான் அவனுடைய வெற்றிக்கு முதன்மையான காரணம் எனலாம்.
சாமுவேல் மற்றும் பார்வதி தம்பதியரின் தலைப்பு புதல்வன் தான் எல்வின் ஆரோன், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள் பெயர் சஷ்விகா.
சாமுவேலும் பார்வதியும் காதலித்து, இரு வீட்டு எதிர்ப்பையும் மீறி, ஊரை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து, அவர்களின் காதல் வாழ்க்கையை ஆரம்பித்துக் கொண்டவர்கள். அதனாலேயே அவர்களுக்கு உறவென்று யாரும் இல்லை.
அதை எண்ணி பிள்ளைகளை பெரிதாக வருந்த விட்டதும் இல்லை, எந்தவித பாதிப்பும் இன்றி நன்முறையில் நல்ல பிள்ளையாக தான் வளர்த்தனர் பெற்றவர்கள்.
இளையவள் சஷ்விகா இப்பொழுது தான் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சையை எழுத போகிறாள். எல்விக்கும் இவளுக்குமே பன்னிரெண்டு வருடங்கள் வித்தியாசம் இருக்கும். அந்த வீட்டின் செல்லக்குட்டி இவள். அண்ணனின் முதல் குழந்தை என்றே சொல்லலாம். அவனுக்கு இவள் மீது அவ்வளவு பிரியம்.
சாமுவேல் ஒரு நவீன பல்பொருள் அங்காடியை வைத்து நடத்திக் கொண்டிருக்க, பார்வதியோ அரசுக் கல்லுரியில் தமிழ் துறைத் தலைவராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.
அவர்களை பொறுத்தவரை வசதிக்கும் குறைவில்லை! மகிழ்ச்சிக்கும் குறைவில்லை! தெளிந்த நீரோடை போலவே ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாகவே சென்று கொண்டிருந்தது.
16. சிறையிடாதே கருடா
written by Competition writers
கருடா 16
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!”
“அப்படியா?” எனக் கேட்டவனை விலகிப் பார்த்தவள், “ஆமாம்!” எனத் தலை அசைத்து விட்டு மீண்டும் கட்டி அணைத்தாள்.
“அவ்ளோதான் லைஃப்! இறுக்கிப் பிடிக்கத்தான் கயிறு அறுந்து போகும். எங்கயும் போகாதுன்னு நம்பி விட்டுப் பாரு, உன் காலைச் சுத்தி வரும். மௌனம் மாதிரியான கொடிய தண்டனை இந்த உலகத்துல இல்ல ரிது. அதை உனக்கும், உங்க அம்மாக்கும் நீ கொடுத்திருக்க.” என்றதும் அவன் முகம் பார்க்க,
“உன் அண்ணன், சாமியா உன் கூட தான் இருப்பாரு.” என்றான்.
நம்பாது அவனை விட்டு விலகி நின்றாள். அவ்வளவு எளிதாகத் தன்னவள் மனத்தில் நம்பிக்கையை விதைத்து விட முடியாது என்பதை உணர்ந்து அலுத்துக் கொள்ளாமல்,
“நீ ஏன் இப்படித் தனிமையில இருக்கணும்னு ஆசைப்படுற?” கேட்டான்.
வாயிலிருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்க, கை உயர்த்தி நிலவைக் காட்டினாள். ஒன்றும் புரியவில்லை கருடேந்திரனுக்கு. ஆள்காட்டி விரல் நிலவை நோக்கி இருக்க, அவள் முகமும் அதை நோக்கியே இருந்தது. கை இரண்டையும் கட்டிக்கொண்டு அவள் பேசப் போகும் வார்த்தையைக் கேட்கத் தயாராகினான்.
“அந்த நிலா பார்க்க ரொம்ப அழகா இருக்கும். பூமியில இருக்கற எல்லாருக்கும் அதைப் பிடிக்கும். அந்த மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. ஆனா, அதோட மறுபக்கம் யாருக்கும் தெரியாது. கரடு முரடான தோற்றத்தை வெளிக்காட்டிக்காம சாமர்த்தியமா தான் அழகுன்னு காட்டிகிட்டு இருக்கு. பல கோடி மக்கள் அதைப் பார்த்தாலும், அது பார்க்க யாரும் இல்லை. பரந்த இந்த ஆகாசத்துல தனி ஆளாய் தேஞ்சி, தன்னைத் தானே தேத்தி வாழ்ந்துட்டு இருக்கு. உண்மை என்னன்னா, அது ஒரு அனாதை! அதோட அசிங்கத்தைப் பார்த்தா யாரும் அதை ரசிக்க மாட்டாங்க. தேயும் போது அதுக்கு இருக்குற வலியும், வளரும்போது அதுக்கு இருக்குற துடிப்பும் தெரிஞ்சா கேலி செய்வாங்க. தெரியாத வரை அதிசயம்! தெரிஞ்சிடுச்சுன்னா அனாதை!”
இன்னும் விரலைச் சுருக்காமல், பார்வையை மாற்றாமல் அந்த நிலவின் மீது தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியை, இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். இந்த ரிது, புதிதாகத் தெரிந்தாள் அவனுக்கு. இப்படியான ஒரு பிம்பத்தை அவளிடம் இருந்து எதிர்பார்க்காதவன், விழியோரம் விண்மீன் போல் மின்னிக் கொண்டிருக்கும் கண்ணீரைக் கண்டான்.
தாலி கட்டியவளின் பாரத்தை, அந்த ஒரு சொட்டு நீர் தெள்ளத் தெளிவாகப் புரிய வைத்தது. அழுத்தத்தின் பாரம் தாங்காது, இமையை விட்டுக் கீழ் இறங்கிய கண்ணீர், அவளின் வைரக் கம்மலோடு அடங்கிப் போக, பார்வையைக் கீழ் இறக்கிக் கொண்டாள்.
“வா…”
“எங்க?”
“சொல்றேன், வா…”
“நான் எங்கயும் வரல.” என்றதும் அவளைத் தன்னைப் பார்க்குமாறு திருப்பியவன், “இனி உன்னைத் தனிமையில விடமாட்டேன். நீயா வந்தா கூட்டிட்டுப் போவேன், இல்லன்னா தூக்கிட்டுப் போவேன். என் முதலாளிக்கு எது வசதின்னு சொன்னா நல்லா இருக்கும்.” என்றதும் சிரித்து விட்டாள்.
“தூக்கிக்கவா?”
“அடி வாங்குவ!”
“அப்பத் தூக்கியே ஆகணுமே…”
“ஏய்!”
“சும்மா இருங்க முதலாளி. இந்தப் பட்டுக் காலு படிக்கட்டு இறங்குனா, இந்தப் பாவி மனசு தாங்காது.”
“என்ன பயங்கரமா பேசுற?”
“பயங்கரமா தூக்கக் கூடச் செய்வேன்.” என அவளைத் தூக்கிக் கொண்டவன்,
“பரவால்ல, பீல் பண்ணாலும் வெயிட் குறையல.” எனக் கண் சிமிட்டினான்.
“என்ன, எப்பப் பாரு இதையே சொல்ற… நான் என்ன அவ்ளோ வெயிட்டாவா இருக்கேன்.”
“எலும்பு உடையுற சத்தம் கேட்குது முதலாளி.”
“ச்சீ! ப்பே…”
“அசையாதீங்க முதலாளி. கை உடைஞ்சு நீங்க விழுந்திடப் போறீங்க.”
“ஹாஹா…”
“ப்ச்! நீங்க பீல் பண்றதைப் பார்த்து எனக்கும் பீலிங்ஸ் வந்துடுச்சு முதலாளி.”
“ஆஹான்! கதை அப்படிப் போகுதோ?”
“அப்படி எங்கயும் பாதை மாறிப் போயிடக் கூடாதுன்னு தான் தூக்கிட்டேன். என் முதலாளியைத் தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு, பழைய ஃபார்ம்க்கு கூட்டிட்டு வரப்போறேன்.”
“டேய்!”
“பரவால்லையே, சொன்னதுக்கே எஃபெக்ட் தெரியுது.”
“உன் கூடச் சண்டை போட சுத்தமா என்கிட்ட எனர்ஜி இல்லை. ஒழுங்கா கீழ இறக்கி விடு.”
“இந்த மாதிரி நேரத்துலதான், சண்டை போடப் பரபரன்னு மனசு துடிக்குது முதலாளி.”
அவனிடம் வம்பு வளர்க்க விரும்பாதவள் இறங்க முயற்சிக்க, சற்று மேல் தூக்கியவன் அவள் காதில் மீசை உரச, “இன்னைக்குச் சண்டை போடாமல் தூங்குறதா இல்ல.” ரகசியம் பேசினான்.
தாடி கன்னத்தில் உறவாட, மீசை காதுக்குள் கவி பாடியது. இரண்டும் இரண்டு விதமாக அவளைச் சோதிக்க, விலகியவன் முகம் பார்த்தவள் மெல்லக் கைகளைத் தோளுக்கு மாலையாக்கினாள். ரிதுவின் செயலில் கருடன் புருவம் உயர்த்த, தலையை லேசாக அசைத்துச் சிரித்தாள்.
வீட்டை விட்டு வெளியில் வந்தவன் நீச்சல் குளம் அருகில் நின்றான். ‘சொன்னது போல் போட்டு விடுவானோ?’ எனச் சிந்தித்தவள் எண்ணத்தை முகம் பார்த்துப் புரிந்து கொண்டவன் மீண்டும் அவள் காதுக்குள், “தள்ளி விடவா?” ரகசியம் பேசிக் கூச்சத்தை உண்டு செய்தான்.
“இந்த முறை உன்னையும் இழுத்துட்டுத் தான் விழுவேன்.”
“இந்த அழுக்கானவன், தண்ணிக்குள்ள விழுந்தா உங்க உடம்பும் அழுக்காகிடும் முதலாளி”
“பரவால்லடா ஆட்டோக்காரா… நாயக் குளிக்க வைக்கிற சோப்பு என்கிட்ட நிறைய இருக்கு. தண்ணியோட தண்ணியா உன்னை முக்கிச் சோப்பு போட்டு, எல்லாத்தையும் கரைச்சு எடுத்துடறேன்.”
அவள் வார்த்தைக்கு மூக்கைச் சுருக்கியவன், “லொள்! லொள்!” என ஓசை கொடுக்க, வானம் பார்க்கத் தலை உயர்த்தியவள் வாய் வலிக்கச் சிரித்தாள்.
இவ்வளவு சத்தமாக இவள் சிரிப்பதை முதல்முறையாகப் பார்க்கிறான் கருடேந்திரன். சின்ன அதரங்களுக்குள் மாதுளைப் பற்கள் பளபளத்தது. லேசாகப் பூசப்பட்டிருக்கும் அந்த உதட்டுச் சாயத்தை எப்படியாவது துடைத்துவிட்டு, ஒளிந்து கொண்டிருக்கும் அழகை ரசிக்க ஆர்வம் பிறந்தது. தன்னால் புன்னகை நிற்கும் வரை விடாமல் சிரித்துக் கொண்டிருந்தவள், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அவன் பார்வையில், முதல் முறையாகக் கூச்சம் எனும் உணர்வைச் சந்தித்தாள்.
இருவரின் விழிகளும் அவர்களைப் போல் மோதிக் கொண்டது. எப்போதும் சண்டையிட்டு எரித்துக் கொள்ளும் அந்தப் பார்வைக்குள் மிதமான தென்றல் வீசியது. அவள் மீதான பார்வையைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாதவன், நீச்சல் குளத்தின் விளிம்பில் அமர வைத்துக் கால்களைத் தண்ணீருக்குள் விட்டான். ரிது அமைதியாக அவனைப் பார்த்தபடி அமர்ந்திருக்கப் பக்கத்தில் அமர்ந்தவன், அவள் காலோடு தன் கால்களை உரசிக்கொண்டு நீரில் நுழைத்தான்.
“நிலா அனாதைனு யார் சொன்னது?”
கட்டியவளின் கவனத்தைத் திருப்பியவன், அவளுக்குப் பின்னால் சென்று அமர்ந்து கண்களை மூடினான். அவன் கூறியதன் பொருளை உணர்வதற்கு முன் விழிகள் மூடப்பட்டதால், கருடன் கைகளுக்கு மேல் கை வைத்து எடுக்க முயற்சித்தாள்.
“தலை குனிஞ்சு இருக்கிற வரைக்கும் தான் தனியா இருக்கோம்னு தோணும். கொஞ்சம் தலைய மேல உயர்த்திப் பாரு. உன்னச் சுத்தி எத்தனைப் பேர் இருக்காங்கன்னு தெரியும்.” என அவள் விழிகளைச் சிறைப் பிடித்திருந்த கைகளை எடுத்துத் தலையை உயர்த்தினான்.
“உன்னோட கரடு முரடான முகம் தெரிஞ்சும், வானம் உனக்குப் பின்னாடி இருக்கு. உன்ன மாதிரி எவ்ளோ கஷ்டப்பட்டாலும், வெளியவே தெரியாத பல நட்சத்திரங்கள் உனக்குத் துணையா இருக்கு. சுட்டெரிக்கிற சூரியன், உன் மேல இருக்குற பொறாமைல ஒளிஞ்சி இருக்கு. கண்ணுக்கே தெரியலனாலும், உன் கூட தான் இருப்பேன்னு அடம் பிடிச்சுக் காத்து சுத்திட்டு இருக்கு. நீ இருந்தா மட்டும்தான் நான் அழகா இருப்பேன்னு அந்த இருட்டு ஆசையாய் கொஞ்சிட்டு இருக்கு.
உன்னால மட்டும்தான் நிம்மதியான தூக்கத்தைத் தர முடியும்னு ஐந்தறிவுல இருந்து ஆறறிவு ஜீவன் வரைக்கும் பெருமை பேசிட்டு இருக்கு. அப்பப்போ எட்டிப் பார்க்குற மழையும், திடீர்னு அடிக்கிற இடியும், நீ இருக்கும் போது அழகா தெரியும். குழந்தைகளுக்குத் தாயால ஊட்ட முடியாத சோறைக் கூட நீ ஊட்டிடுவ. பல பேரோட காதலே நிலவை நம்பித்தான் இருக்கு. கவிதை தெரியாதவன் கூட உன்னைப் பார்த்தால் கவிதை எழுதுவான். இவ்ளோ சொந்தத்தையும், பாசத்தையும் சுத்தி வச்சுக்கிட்டு அனாதைன்னு சொல்றது முட்டாள்தனம் இல்லையா?”
நீண்ட வார்த்தையைப் பேசி முடித்தவன், அவள் முகத்தை அணுவணுவாகக் கவனித்துக் கொண்டிருந்தான். கருடன் பேசிய வார்த்தைகள் நங்கூரமாக அவள் இதயத்தில் சென்று தங்கியது. துயரத்தில் மட்டுமே நிலவை ரசித்துக் கொண்டிருந்தவள், முதல்முறையாக வேறு பக்கத்தைப் பார்க்கிறாள். அவன் சொன்னது போல் அனைத்தும் அவளுக்காக இயங்குவது போல் தெரிந்தது. உலகமே அவளுக்காக என்ற எண்ணம் பிறந்தது. கட்டிப் போட்டு வைத்திருந்த குற்ற உணர்வு, மாட்டிக் கொண்ட பயத்தில் அவளை விட்டு விலகியது.
கண் மூடியவள் முகத்தைக் காற்று உறவாடி விட்டுச் செல்ல, அவளை அவளே புதிதாகப் பார்த்தாள். மனைவியின் செய்கைகளைக் கண்ட பின் உள்ளம் மகிழ்ந்தவன், “உன் வார்த்தையைக் கேக்குறதுக்காகத் தவம் இருக்கிற அம்மா, என் பொண்ணுக்காகவாவது உயிர் வாழனும்னு நினைக்கிற அப்பா, காத்தா கரைஞ்சாலும் நீ நல்லா இருக்கணும்னு துடிக்கிற அண்ணன் இருக்கும்போது உனக்கு என்ன கவலை?” என்றவன் முகம் பார்த்தவள்,
“நீ…” எனக் கேட்க, அதுவரை சரளமாகப் பேசிக் கொண்டிருந்தவன், வார்த்தைகள் இன்றி ஊமை ஆகினான்.
“உனக்கு ஒன்னு தெரியுமா? நீ வந்ததுக்கப்புறம் தான் நான் நிறையப் பேச ஆரம்பிச்சேன். அது எனக்கு ரொம்பப் புடிச்சுது. அதனாலதான், உன்னை விடாமல் சீண்டிட்டு இருந்தேன். உன்ன மாதிரி இதுவரைக்கும் யாரும் என்கிட்டப் பேசுனது இல்லை. தனிமையில போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சந்திக்காத ஆண்களே இல்லை. ஒவ்வொருத்தனும், ஒவ்வொரு விதமா என் கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கானுங்க. காலடியில இருக்கத் துடிக்கிறவனையும் பார்த்திருக்கேன், என்னைக் கட்டி ஆளணும்னு நினைக்கிற வெறியையும் பார்த்திருக்கேன். முதல் முறையா இது எதுவுமே இல்லாமல் ஒருத்தன், என்னை அடங்காப்பிடாரி, பிசாசு, பணப்பேய்னு திட்டுறதைப் பார்த்தேன்.”
பேசிக் கொண்டிருந்தவள் இடைவெளி விட்டுக் குளத்துக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த நிலவைக் கவனித்தாள். பேச்சு நிற்கும் நொடிவரை அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளைப் போல் நீரின் மீது பார்வையைப் பதிக்க,
“இந்தத் தண்ணி மாதிரி நீ என்னைச் சலசலன்னு திட்டிட்டு இருந்தாலும், அதுல தெரியிற நிலா மாதிரி மெல்ல உனக்குள்ள நான் ஒட்டிக்கிட்டேன்.” என நீரில் நிழலாகத் தெரியும் நிலவைக் கை காட்டினாள்.
கருடேந்திரனின் பார்வை அதன் மேல் பதிய, புதிதாகத் தெரிந்தாள் ரிது சதிகா. இது நானா என்ற ஆச்சரியம் அவளுக்கு. அதே ஆச்சரியம் தான் அவனுக்கும். ஆச்சரியத்தில் அடுத்த வார்த்தைகளை இருவரும் பேச மறந்தார்கள்.
நேரம் கடக்க, ரிது அவன் கைப்பற்றினாள். சில நொடி யோசனைகளுக்குப் பிறகு அவளோடு தன் விரல்களை இணைத்துக் கொண்டான் கருடன்.
11. சிறைமிடாதே கருடா
written by Competition writers
கருடா 11
அமர்க்களத்திற்குக் குறைவில்லாமல் விடிந்தது விடியல். நேற்று இரவு முழுவதும் இருவரும் தூங்காமல் இரவிற்குத் துணை இருக்க, எனக்கும் வேண்டும் என்று வரவேற்றது விடியல். நான்கு மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவன், கன்னியப்பன் நினைவோடு ஏங்கிக் கொண்டிருக்க, பலத்த சிந்தனையோடு கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவனைச் சிறிதும் கணக்கில் கொள்ளாது கிளம்பத் தயாராகினாள் ரிது.
படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையில் போதுமான வருமானம் இல்லை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாடகைக்கு எடுத்த ஆட்டோவைச் சொந்தமாக்கிக் கொள்ளும் அளவிற்கு மாடு போல் உழைத்தான். வீட்டில் இருப்பவர்கள் முதல் கொண்டு, தெரிந்தவர்கள் வரை எதற்கு இந்தத் தொழில் என்று பலமுறை கேட்டும் விட மனம் வரவில்லை கருடேந்திரனுக்கு. என்னவோ, இதுதான் தனக்கான வழி என்று கன்னியப்பனை முழுவதுமாக நம்பி இறங்கி விட்டான்.
சிறு தொகையாக இருந்தாலும் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல், கிடைக்கும் அனைத்துச் சவாரியையும் ஓட்டுவான். அது மட்டுமல்லாமல், காலையில் நான்கு பள்ளி சவாரியையும், அதன் பின் வங்கியில் வேலை செய்யும் இருவரின் சவாரியையும் பிடித்து நிலையான வருமானத்திற்கும் ஏற்பாடு செய்து விட்டான். அவர் இருவரின் உதவியால், மாலை மட்டும் உடல் ஊனமுற்ற ஒருவரைக் கடற்கரை வரை அழைத்துச் செல்லும் சவாரியும் கிடைத்தது. இப்போது அத்தனைப் பேரும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அனைவரையும் அழைத்துப் பத்து நாள் மட்டும் விடுப்புக் கேட்டிருந்தான். இவன் வராதது பெரிய தொந்தரவு தான் என்றாலும், கருடேந்திரன் மனத்திற்காக பழகிய பழக்கத்திற்காகச் சரி என்று சம்மதித்தார்கள். பத்து நாளில் ஆறு நாள் ஏற்கெனவே முடிந்துவிட்டது. இன்னும் நான்கு நாளில் கன்னியப்பனை மீட்க வேண்டும். தனக்காக இல்லை என்றாலும், தன்னை நம்பி இருக்கும் அவர்களுக்காக மீட்க முடிவெடுத்தவனுக்கு வழி ஒன்றும் கிடைக்கவில்லை.
“ஆட்டோக்காரா…”
அவள் அழைத்தும் திரும்பாதிருந்தவன் செயலில் யோசனைக்கு ஆளானவள், “ஏய்! காது கேட்கல?” கேட்டாள் அதிகாரமாக.
“சொல்லு!”
“சொல்லுங்க முதலாளி…”
“காலைலயே வந்துட்டியா?”
“ஆசை பாரு எனக்கு!”
“எப்போ என் கன்னியப்பனைத் தருவ?”
“எப்பவோ அதுக்கான பதிலைச் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.”
“என்னை நம்பி நிறையப் பேர் இருக்காங்க.”
“இதோ பாருடா, சோழ நாட்டு இளவரசர் பேச்சை!” என நக்கலாகச் சிரித்தவள், “ஏண்டா, நீ என்ன கலெக்டரா? இல்ல பெரிய பிஸினஸ் மேனா? உனக்குக் கீழ கைகட்டி நிக்க எத்தனைப் பேர் இருக்காங்க? உன் மயில் வாகனத்தை எடுத்துட்டுப் போகலைன்னா, சாப்பிடாம பட்டினி கிடந்து சாகப் போறாங்களா? கேவலம் ஒரு ஆட்டோக்கு இவ்ளோ சீன் ஆகாது.” என்றவளின் வார்த்தைகள் ஊசியாய் உடலைத் தைத்தாலும், வலியைக் காட்ட முடியாமல் நின்றிருந்தான்.
“வர வர, யாரு எவ்ளோ சீன் போடணும்னு விவஸ்தையே இல்லாமல் போயிடுச்சு. ஒரு நாள் முழுக்க ஓடுனா தான், அடுத்த நாளுக்கு ஓட டீசலைப் போட முடியும். இதுல என்னமோ, கோடி கோடியாய் சம்பாதிக்கிற மாதிரி பீலிங்! உன்ன விட என்கிட்ட வேலை பார்க்குற டிரைவருங்க அதிகமா சம்பாதிக்கிறாங்க தெரியுமா?”
“செய்யும் தொழிலே தெய்வம். என்னைப் பொறுத்த வரைக்கும் சோறு போடுற எந்த வேலையும் கேவலமில்லை. ஏசி ரூம்ல உட்கார்ந்து சம்பாதிக்க என்னாலயும் முடியும். அந்த அளவுக்குப் படிச்சும் இருக்கேன். இருந்தாலும், இந்த ஆட்டோதான் திண்டாடித் தவிச்சப்போ காப்பாத்துச்சு. என்னைக் காப்பாத்துனது, உயிர் இல்லாத ஒரு எந்திரமா இருந்தாலும் எனக்குச் சாமி தான்!”
“அடப்பாவி! ஒரு ஆட்டோக்கா இவ்ளோ பீல் பண்ற? இப்பத் தெரியுதா என் தகுதியும், உன் தகுதியும் எங்க இருக்குன்னு.” என்றதும் அவளை ஏறிட,
“வாழ்க்கையில இதுவரைக்கும் ஒரு தடவை கூட ஆட்டோல போனதில்ல.” என்றாள்.
“உழைக்காம சாப்பிட உடம்பு கூசுது.”
“அவ்ளோதான் உன் பிரச்சினையா? அதுக்கு ஒரு சூப்பரான வழி இருக்கு.” என்றதும் திரும்பி நின்றவன் சட்டைப் பாக்கெட்டில் தன் கார் சாவியை வைத்தவள்,
“இன்னையில இருந்து நீ தான் எனக்கு டிரைவர்…” என இரு கண்களையும் சிமிட்டினாள்.
அதுவரை கன்னியப்பனுக்காக வருந்திக் கொண்டிருந்தவன், அந்த முகத்தை வழியனுப்பி வைத்து ருத்ர முகத்தைப் போட்டுக் கொள்ள, “சம்பளத்தைப் பத்தி ஒன்னும் கவலைப்படாத. நான் கொடுக்கிற காசுல, உன் குடும்பம் மொத்தமும் சாப்பிட்டது போகச் சேர்த்து வைக்கிற அளவுக்கு இருக்கும். என்கிட்ட வேலை பார்க்குற வரைக்கும் தான் இந்தச் சலுகை. புத்தியுள்ளவனா இருக்குற வரைக்கும் சம்பாதிச்சுக்க…” என்றாள்.
“ரோட்ல உட்கார்ந்து பிச்சை எடுத்தாலும் எடுப்பனே தவிர, உனக்குக் கீழ வேலை பார்க்க மாட்டேன்டி.”
“எனக்கு டிரைவரா வேலை பார்த்தா, நாலு பேருக்குப் பிச்சையே போடலாம்.”
வெடுக்கென்று அவள் கழுத்தைப் பிடித்தவன் அங்கிருந்த கண்ணாடிச் சுவரில் சாய்த்து, “இவ்ளோ கொழுப்பு எங்க இருந்து வந்துச்சு உனக்கு. பணம் இருந்தா நீ பெரிய இவளா? என்னைக் குனிய வச்சு மட்டம் தட்டலாம்னு நினைக்காத. உன் ஆசை ஒருநாளும் நடக்காது.” என்றவனிடமிருந்து தன் கழுத்தைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை ரிது சதிகா.
ஆணவத்தோடு தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள் பார்வையில், உஷ்ணம் தலைக்கேறி இன்னும் மூர்க்கத்தனத்தைக் காட்டியவன், “ஒரு நாள் இல்ல ஒரு நாள், ரோட்ல தான்டி நிப்ப. அந்த மாதிரி நேரத்துல ஒரு ஈ, காக்கா கூட உதவி செய்ய வராது. தாகத்துக்குத் தண்ணி கூடக் கிடைக்காம துடிதுடிச்சு சாகப் போறடி.” என்றதும் அவள் உதடுகள் விரிந்தது.
“சிரிக்காத, அப்படியே சாவடிச்சிடுவேன்.”
“உன் சாபம் என்னைக்கும் பலிக்காது.”
“திரும்பத் திரும்ப ஆணவத்துல பேசாதடி. என் சாபம் பலிக்குதோ இல்லையோ, கண்டிப்பா உன்ன ஒரு நாள் அப்படி நிற்க வைப்பேன்.”
“ஹா ஹா…”
“பணத்துக்கும், ஆணவத்துக்கும் பிறந்த ரத்தக் காட்டேரிடி நீ. உன்ன மாதிரி ஒருத்தி பக்கத்துல நிக்கிறது அவ்ளோ அசிங்கமா இருக்கு. கடவுள் எல்லாருக்கும் அளந்துதான் வைப்பான்னு உன் விஷயத்துல நிரூபணம் ஆயிடுச்சு. ஒண்ணுமே இல்லாம வெறும் பணத்த வச்சுக்கிட்டு இவ்ளோ ஆணவமா பேசுறியே, எல்லாம் இருந்துட்டா எவ்ளோ ஆடுவ? உன்னோட பாவம் தான்டி, உங்க அம்மாவ இப்படிப் படுத்த படுக்கையா வச்சிருக்கு.”
“கருடா!” என்றவள் குரலில் அந்த அறை நிலநடுக்கத்தின் அதிர்வைக் கண்டது.
“இன்னொரு தடவை என் பேரு உன் வாயில இருந்து வந்துச்சு, அப்படியே குரல் வளையக் கடிச்சுத் துப்பிடுவேன். என் பேரைச் சொல்றதுக்கு ஒரு தகுதி வேணும். உன்னை மாதிரி ஈவு இரக்கமில்லாத ரத்தக் காட்டேரி சொல்லக் கூடாது.”
“கைய எடு!”
“ஆணவம்!” என அவன் இன்னும் கழுத்தை நசுக்க, “கைய எடுடா…” என்று பல்லைக் கடித்தாள்.
“முடிஞ்சா எடுத்துக்க.”
“நீயா எடுத்துட்டா மரியாதையா இருக்கும்.”
“உன்கிட்ட இருந்து கிடைக்கிற மரியாதை எனக்கு வேண்டாம்டி.”
“எடுடா…”
“உன்னலாம் பேசவே விடக்கூடாது.” என அவள் மூச்சு சிதையும் அளவிற்கு இறுக்கத்தைக் கொடுத்தான். மீட்க முடியாமல் மீட்டெடுத்தவள்,
“பார்த்தீங்களா, உங்க பையன் பண்றதை.” என்றாள்.
இரவு போல் தன்னை ஏமாற்றுவதாக நினைத்தவன், “எங்க அம்மாவக் காட்டி என்னை அடக்கலாம்னு பார்க்கறியா? அவங்க முகத்துக்காகத் தான் இன்னும் நீ உயிரோடு இருக்க.” என்றான்.
“இப்பச் சொல்லுங்க, உங்க வளர்ப்பு நல்ல வளர்ப்பா?”
“எவ்ளோ தத்ரூபமா நடிக்கிற? உன்ன விட்டு வச்சால் தானடி எங்க அம்மா பேரைச் சொல்லி மிரட்டுவ.” என அவன் முழுத் தீவிரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் நேரம்,
“கருடா…” என்ற அன்னையின் குரல் கேட்டது.
வெடிக்கத் துடிக்கும் இரு மின்சார ஒயர்களை முறுக்கி, இதயத்தில் சொருகியது போல் அரண்டு திரும்பினான். மகன் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தபடி கைப்பேசிக்குள் இருந்தார் சரளா. அவரோடு சத்யராஜ் அமர்ந்திருந்தார். இவை ரிதுசதிகாவின் பக்காவான சதித்திட்டம்! நேற்று இரவு அவன் பேசியது மண்டையைக் குடைந்தது. அதற்கான தகுந்த பாடத்தையும், தனக்குக் கீழ் வேலை செய்ய வைக்கவும் முடிவெடுத்தவள் கட்டியவனின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டாள்.
“நம்ம ஸ்டேட்டஸ்க்கு இனி ஆட்டோ ஓட்டாத, ஆபீஸ்ல வந்து வேலை பாருன்னு எவ்வளவோ சொல்லிட்டேன். உங்க பையன் முரண்டு பிடிச்சிட்டு நிக்கிறான். எங்களுக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. அதை ஏற்கெனவே தாலி கட்டி, உங்க பையன் பாதி குறைச்சிட்டான். மீதி இருக்கிறதையும் குறைக்கப் பார்க்கிறான். என்னைப் பெத்த என் அப்பாவுக்கு என்னால எவ்ளோ தலைக்குனிவு தெரியுமா? நீங்களே உங்க பையன் எப்படி நடந்துக்கிறான்னு பாருங்க.” என்றவள் வீடியோ அழைப்பின் மூலம் அனைத்தையும் பார்க்க வைத்தாள்.
“அம்மா!” என்ற வார்த்தைக்குப் பின் கருடேந்திரன் வாயிலிருந்து எந்த வார்த்தையும் உதிக்கவில்லை. மகனைக் கண்காணிப்பதற்காக வாய்க்குப் பூட்டுப் போட்டு அமைதியாக அமர்ந்திருந்த சரளா,
“எதுக்குடா இவ்வளவு முரட்டுத்தனமா அந்தப் பொண்ணுகிட்ட நடந்துக்குற. நீ பண்ண எல்லாத்தையும் மன்னிச்சுட்டு, உன்ன ஒரு நல்ல இடத்துல உட்கார வைக்கணும்னு நினைக்கிறாடா. அதைப் புரிஞ்சிக்காம இப்படி நடந்துக்கறியே. திரும்பத் திரும்ப என்னையும், என் வளர்ப்பையும் ரொம்ப அவமானப்படுத்துற. உன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு. இனி என்னையும், நம்ம குடும்பத்தையும் மறந்துடு.” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
“அம்மா… அப்பா…” என மறைந்தவர்களைக் கண்டு பதறி ஓடி வந்தவன் கையைப் பிடித்தவள்,
“அவங்க போயிட்டாங்க.” என்றாள் குதூகலமாக.
பதில் வாதம் செய்வதற்கு மனத்தில் தெம்பு இல்லாததால் முறைப்பும் தவிப்புமாக நின்றிருக்க, “நானா கண் காட்டுற வரை பேசாதீங்கன்னு சொல்லிட்டு மியூட்ல போட்டுட்டேன். நான் சொல்றதை நம்பி எப்படிச் சத்தம் போடாம இருந்தாங்க பார்த்தியா?” என்றவளின் கூர்மையான சதியைப் புரிந்து கொண்டவனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.
விசில் அடித்துக் கொண்டு தன்னுடைய கைப்பையைத் தூக்கி அவனிடம் போட, பிடித்துக் கொண்டான்.
அதைக் கண்டவள், தன் வழிக்கு வந்து விட்டதை உணர்ந்து, “குட்” எனப் பாராட்டினாள்.
முறைக்கக் கூட முடியாமல் முழுத் தோல்வியில் நின்றிருக்கும் கருடனைப் பார்க்க மகிழ்வாக இருந்தது.
அந்த மகிழ்வோடு தன் மீது முழுவதும் வாசனைத் திரவியத்தை அடித்துக் கொண்டவள், “இன்னையில இருந்து இந்த ரிதுசதிகாவுக்கு நீ தான் டிரைவர். அந்தக் காக்கி சட்டையைத் தூக்கிப் போட்டுட்டு, பக்காவா ஒரு ஒயிட் ஷர்ட் போட்டுட்டு வந்து நில்லு. டிபன் முடிச்சிட்டு வரேன்.” எனக் கையசைத்து விட்டு வெளியேறினாள்.
***
“என்னடா ஆட்டோக்காரா ரெடியா?”
“ரெடிங்க முதலாளி!” என அவன் கை இரண்டையும் கட்டிக்கொண்டு பவ்யமாகக் குனிய, “பரவாயில்லையே, நடப்பைப் புரிஞ்சு சமத்தா நடந்துக்குற.” எனப் பாராட்டியவாறு வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
“எல்லாம் உங்க பாக்கியம் முதலாளி!”
“ரொம்பக் காக்கா பிடிக்காம ஆஃபீஸ்க்கு வண்டியை விடு.”
“சரிங்க முதலாளி!” என ஓட்டுநர் இருக்கையில் ஏறியமர்ந்தவன், இரு கைகளையும் ஒன்று குவித்துத் தலைக்கு மேல் உயர்த்தி, “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” எனச் சத்தமாகக் கூறினான்.
சாதாரணமாக அமர்ந்திருந்தவள், கார்க் கதவுகள் உடையும் அளவிற்குக் கத்தும் அவன் வாசகத்தில் அரண்டு, “டேய்! எதுக்கு இப்படிக் கத்துற?” கேட்க,
“முதல் தடவையா கார் ஓட்டப் போறேன் முதலாளி. எதிர்ல வர வண்டில மோதி உங்க மண்டையை உடைச்சிடக் கூடாதுன்னு அந்த ஆண்டவன் கிட்ட வேண்டுறேன்.” என்றானே பார்க்கலாம்.
“என்னடா சொல்ற?”
அதிர்ச்சியில் வாய் பிளந்து கொண்டதைக் கூட அறியாது முகப்புக் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்திருக்க, “உங்க தயவால இப்படி ஒரு அனுபவம் கிடைச்சிருக்கு முதலாளி.” எனத் திரும்பி வாய்க்குள் இருக்கும் அத்தனைப் பற்களையும் பளிச்சிட்டுக் காட்டினான்.
“நிஜமாவே இதுக்கு முன்னாடி கார் ஓட்டுனது இல்லையா?”
“என்னை மாதிரி ஆளுக்கெல்லாம் ஆட்டோவே அதிகம் முதலாளி. கார் எங்க இருந்து…”
“கார் ஓட்டத் தெரியாதுன்னு முன்னாடியே சொல்றது தான…”
“எங்க முதலாளி சொல்ல விட்டீங்க?”
“ச்சீ! முதல்ல கார விட்டு இறங்கு.”
“டிரைவர் சீட்ல உட்கார்ந்துட்டேன் முதலாளி. இனி நானே நினைச்சாலும் எந்திரிக்க முடியாது. உங்களைச் சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்ததுக்கு அப்புறம் தான் இதுக்குப் பிரியா விடை கொடுப்பேன்.” என்றவன் ப்ளூடூத்தைக் கனெக்ட் செய்து,
“செல்லாத்தா, செல்ல மாரியாத்தா…” என்ற அம்மன் பாடலை மிகச் சத்தமாக வைத்தான்.
உயிர் பற்றிய பயத்தில் உறைந்திருந்தவள், அதை அலற வைப்பது போல் ஒலிக்கும் பாடலில் இன்னும் மிரண்டு, “பாட்ட ஆஃப் பண்ணுடா.” கத்தினாள்.
“இப்படிச் சத்தமாப் பாட்டு ஓடுனா தான், தூங்காம வண்டி ஓட்டுவேன் முதலாளி.”
“எது!”
“அட, ஆமா முதலாளி. ஒரு நாள் ஆட்டோ ஓட்டிட்டுப் போகும்போது என்னையும் மீறித் தூங்கிட்டேன். ஆட்டோல வந்த ரெண்டு பேரு எமதர்மன் காலடியில இடம் கேட்டுப் போயிட்டாங்க. அதுல இருந்து இப்படிச் சாமி பாட்டுப் போட்டா தான் வண்டி ஓட்டத் தெம்பு வரும்.”
“டேய் பரதேசி! இன்னும் என்னென்ன வச்சிருக்க? கொஞ்சம் கொஞ்சமா சொல்லி என் உசுர வாங்காம மொத்தத்தையும் சொல்லித் தொலை. உன்ன நம்பி உட்கார்ந்து இருக்கேன்.”
“இது மட்டும் தான் முதலாளி.” என்றவன் செய்த செயலைக் கண்டு பேசுவதையே நிறுத்தி விட்டாள் ரிது சதிகா.
சட்டைப் பையில் இருந்த முருகர் புகைப்படத்தைக் காரில் ஒட்ட வைத்தவன், அவரின் தந்தை முதல் கொண்டு தமையன் வரை வரிசையாகப் பக்கத்தில் ஒட்ட வைத்தான். அனைவருக்கும் மஞ்சள் நிறச் சாமந்திப் பூவைச் சூட்டியவன், ஊதுபத்தி ஒன்றை ஏற்றித் தீப தூப ஆராதனை காட்டினான். கடவுள் படத்திற்கு மூன்று முறை சுத்திப் புகை போட்டவன், பின்னால் திரும்பி ரிதுவிற்கு மூன்று முறை சுற்ற,
“லொக்! லொக்!” என இருமினாள்.
“நல்ல சகுனம்!” என அவள் இருமலுக்கு ஒரு பாராட்டைக் கொடுத்தவன், திருநீற்றை எடுத்து நெற்றியில் பட்டை போட்டான். ஏதோ மந்திரவாதியைப் பார்ப்பது போல் அவனின் கட்டியவள் பேய் முழியில் பார்த்துக் கொண்டிருக்க,
“வச்சுக்கோங்க முதலாளி!” அவள் புறமும் நீட்டினான்.
குமட்டிக் கொண்டு வந்தது அவன் தோரணையும், செயலும். அதை அவள் விழிகளை வைத்துப் புரிந்து கொண்டவன், “கடவுளே! எங்க முதலாளிக்கு தீர்க்க ஆயுசைக் கொடு!” என்று விட்டு மூன்று விரலில் திருநீற்றை நிரப்பி அவள் நெற்றியில் பட்டை போட்டான்.
“கையை எடுடா”
“கொல்லிமலை திருநீறு மேடம். வேண்டாம்னு சொல்லாதீங்க. எங்க அப்பனுக்குக் கோபம் வந்து சல்லுன்னு மேல இழுத்துக்கப் போறான். இங்கயாவது உங்க அம்மா, அப்பா ரெண்டு பேர் இருக்காங்க. அங்க உங்க அண்ணன் மட்டும் தான் இருக்காரு. அதுவும் இல்லாம அங்கப் பணமெல்லாம் இருக்காது.”
“உன் பைத்தியக்காரத் தனத்தை மூட்டை கட்டி வச்சுட்டு ஒழுங்கா ரோட்டப் பார்த்து வண்டிய ஓட்டு.”
“சரிங்க முதலாளி!” என்றவன் அவ்வளவு எளிதாக அந்த வண்டியை எடுத்து விடவில்லை.
ஆரம்பித்த உடனே சடன் பிரேக் போட்டவன், மீண்டும் இயக்க நான்கைந்து முறைகளை எடுத்துக் கொண்டான். பொறுமை கொஞ்சம் காற்றில் பறக்க ஆரம்பித்தது ரிதுவிற்கு. அதை முடிந்த மட்டும் சோதித்துப் பார்க்க முடிவெடுத்தான். வேகமாகக் காரை இயக்கிக் கேட்டில் இடிக்கச் சென்று அவள் இதயத்தை எகிற வைத்தான்.
“நீ வண்டி ஓட்டவே வேண்டாம். முதல்ல இறங்கு.”
“அம்மாக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க முதலாளி!”
“இறங்குடா…”
“அம்மா கிட்டச் சொல்லிடுவீங்க முதலாளி!” அநியாயத்திற்குச் சிணுங்கினான்.
“வாயில ஏதாச்சும் அசிங்கமா வந்துடும். இறங்குன்னு சொல்லிட்டேன்.”
அதுவரை பச்சைப்பிள்ளை போல் சிணுங்கிக் கொண்டிருந்தவன், கை முட்டியைப் பின்னால் ஓங்கி அவளை அடிக்கச் செல்ல, கைகளை முகத்திற்கு முன்வைத்துத் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
“அந்தப் பயம் இருக்கணும்!” என்று விட்டுக் கையைக் கீழ் இறக்கியவன்,
“இப்படித்தான் ஓட்டுவேன். நானா இறக்கி விடுற வரைக்கும் பேசாம இருக்கணும். இல்லன்னா பல்லு வாயெல்லாம் பறந்துடும். அப்புறம் கோடி கோடியாய் பதுக்கி வச்ச பணத்தைக் கொட்டி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்க வேண்டியதா இருக்கும். இப்பவே உன் மூஞ்சியப் பார்க்க முடியல. இதுல அப்படி எல்லாம் பண்ணினா, எதிர்ல இருக்கிறவன் கண்ணு அவிஞ்சிடும்.” என்றதும் அவளின் முறைப்பு அதிகமானது.
“பெரிய ஆயிரம் கண் கண்ணாத்தா இவ… கண்ணாலயே எரிச்சுப் பஸ்பம் ஆக்கிடுவா. மூடிக்கிட்டு வாடி மூதேவி!”
“யூ ராஸ்கல்! உன்னை என்ன பண்றேன்னு பாருடா.” எனக் கைப்பைக்குள் இருந்த போனைத் தேட,
“இதுவான்னு பாருடி ராட்சசி!” எனத் தன் கைக்குள் இருந்த அவள் போனை உயர்த்திக் காட்டினான்.
“இது எப்படிடா உன் கிட்ட வந்துச்சு?”
“உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை. நானா வண்டிய நிறுத்துற வரைக்கும் இந்தக் கார் உனக்கு ஜெயில், நான் சிறை அதிகாரி! நீ குற்றவாளி!” என வஞ்சகமான சிரிப்பைப் படர விட்டு,
“போவோமா, சிறை ஊர் கோலம்!” பாடினான்.
“வேணாம்டா, மரியாதையா இத்தோட நிறுத்திக்க. உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன் உன்ன. எந்திரிக்க முடியாத அளவுக்கு அடிப்பேன்டா.”
ரிது சதிகா ஆக்ரோஷத்தோடு எச்சரித்துக் கொண்டிருக்க, சிறிதும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை கருடேந்திரன். அதில் அவளின் சினம் எகிறியது. கண்டமேனிக்கு, வார்த்தைகளைக் கடிந்து துப்பினாள். சின்னதாக இருக்கும் முன்பக்கக் கண்ணாடி வழியாக, அவள் முகத்தைக் கண்டவனுக்குக் காலையில் பட்ட அவஸ்தைக்கான மருந்து கிடைத்தது.
“இருடா, உனக்கு இருக்கு.” எனக் காரை விட்டு இறங்க முயற்சிக்கும் நேரம், “ட்டுர்ர்ர்…” வேகமாகக் காரை எடுத்தான்.
“ஆ… ஹே… இடியட்!”
“டோர க்ளோஸ் பண்ணுடி.”
“கார நிறுத்துடா…”
“க்ளோஸ் பண்றியா, இல்ல நேரா போய் செவுத்துல முட்டவா?”
“அப்பா…” எனத் தந்தையை அவள் அழைக்க, மின்னலை ஓட்டத்தில் காட்டினான். அடித்துப் பிடித்துச் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டவள் பலமான மூச்சுகளோடு அமர்ந்து வர, அவனின் வேகம் குறைவதாக இல்லை.
அங்கு ஆரம்பித்த அவளின் ஓட்டம், நான்கு மணி நேரம் ஆகியும் நின்ற பாடில்லை. ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு, நான்கு மணி நேரமாக அலைந்து கொண்டிருக்கிறான். பின்னால் இருந்தவள், கத்திக் கூப்பாடு போட்டும் பிரயோஜனம் இல்லாமல் போனது. காலை உணவை முடித்தவள் மரண பயத்தில் அமர்ந்து வர, தாலி கட்டியவளை ஒருவழி செய்துவிட்டு, நேராக மதிய உணவையே உண்ணலாம் என்ற முடிவோடு ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
ஒரு வழியாக நண்பகல் 12 மணிக்கு அவளது அலுவலகத்தின் முன் காரை நிறுத்தினான். ராட்சத ராட்டினத்தில், ஒரு நாள் முழுவதும் சுற்றிய உணர்வோடு கண் மூடியவளுக்கு இன்னும் அந்தத் தலைசுற்றல் அடங்கவில்லை.
“முதலாளி! எந்திரிங்க முதலாளி!”
அவள் அசையாமல், இருக்கையில் தலை சாய்ந்து கண் மூடியவாறு அமர்ந்திருக்க, “அய்யய்யோ! செத்துப் போயிட்டீங்களா முதலாளி. இப்ப நான் என்ன பண்ணுவேன்? ஒரு நாள் சம்பளம் போச்சே. அப்பவே சொன்னேன், எங்க அப்பன் திருநீறைப் பகைக்காதிங்கன்னு. இப்படி அநியாயமா மொட்டத் தலையோட மேல போயிட்டிங்களே…” என அவளை உசுப்பி ஒப்பாரி வைத்தான்.
அவசரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் காட்டாமல், அழுத்தமான பார்வையோடு கண் திறந்தவள், மூச்சு வழியாகத் தன் கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்க, “அப்பாடா!” என நெஞ்சில் கை வைத்தான்.
அவளின் கனல் மூச்சு இன்னும் அதிகரித்தது. அவை எனக்கு ஒரு விஷயமே இல்லை என்பது போல், “எப்படி முதலாளி இருந்துச்சு, என்னோட டிரைவிங்? சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டிக் கொடுப்பீங்க தான.” என்றான்.
“இதுக்கு உனக்கு இருக்குடா”
“சரிதான் போடி!” எனக் காரை விட்டு இறங்கினான்.
அவளும் இறங்கிட, “இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்திருக்க?” வினவினாள்.
“இந்த இன்ஸ்டிட்யூட்ல எவ்ளோ பெரிய பிரச்சினை போகுதுன்னு தெரிஞ்சும், எட்டிப் பார்க்காமல் இருக்க. இருக்கற பணத்தைப் பாதுகாக்கவே உன் ஆயுசு முடிஞ்சிடும். இன்னும் சேர்த்து வைக்காம உண்மையைக் கண்டுபிடி.”
“எப்ப, என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். நீ எனக்கு ஆர்டர் போடாத.”
“இன்னைக்கு நீ இங்கதான் இருக்கணும். இந்த இடத்தை விட்டு எங்கயும் நகரக் கூடாது.”
பொறுமையே இல்லாதவள் பெயருக்கென்று பிடித்து வைத்த பொறுமையைத் தூக்கி அடித்து விட்டு, “மரியாதை கெட்டுடும். என் வீட்டு வேலைக்காரனா மட்டும் நடந்துக்க. என்னை இது செய், அது செய்யின்னு சொல்லாத. அப்புறம் பின் விளைவுகள் மோசமா இருக்கும்.”
“அடப்போடி!” என்றவன் பவ்வியமாகப் பட்டன் போட்டு வைத்திருந்த கை பட்டன்களை அவிழ்த்து, முட்டிவரை ஏற்றிக் கட்டி, “வா போகலாம்” என அலேக்காக அவளைத் தூக்கிக் கொண்டான்.
சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவன் கொடுத்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாது தடுமாறியவள் துள்ள, “உன்கிட்ட வேலை பார்க்குறவங்க யாராவது பார்த்தாங்கன்னா, உன் மானம்தான் போகும்.” என அவள் வாயை அடைத்தான்.
Newer Posts