அத்தியாயம் 13
அருகாமையில் மயங்கிக்கிடந்த இளவரசனை பார்வையிட்ட அன்னத்திற்கு அவன்பால் இரக்கம் சுரந்தது.
தினமும் பேருந்திற்காக இளவரசன் காத்திருப்பதை தந்தை அறியாமல் பார்த்துவிட்டே செல்வாள். ஆணிற்கான கர்வம் கலந்த திமிர் பார்வையாய் இருக்காமல் அப்பாவித்தனமும் பொறுமையும் கலந்த சாதுவான பார்வையில் ஈர்க்கப்பட்டாள் அன்னம்.
பால் வடியும் முகம் என்பார்களே அப்படித்தான் இளவரசனின் முகமும் தோற்றமும் இருக்கும். அவன் தங்கச்சி செவ்வந்தியை விட இவன் அழகில் நிறத்தில் குறைவுதான் ஆனால் கிராமத்து வழக்கில் பேசாமல் நாகரிகமாக இருக்கிறான் என வியந்து நோக்கினாள் அவன் பேசும் பொழுதினில்.
செவ்வந்தியின் அண்ணன் இவன் எனச் சொன்னால் நம்பத்தான் முடியாது. செவ்வந்தி ஊரே கேளு நாடே கேளுன்னு பேசி வைப்பா, அப்பத்தா மாதிரி வாயாடி. இளவரசன் அப்படியில்ல அமைதி. அவன் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் முத்து முத்தாக எண்ணித்தான் வரும்.
இப்பொழுது கூட பேருந்தை பிடிப்பதற்காகத்தான் நடந்து போயிருப்பான். தான் நேர் வழியில் போகாமல் குறுக்குப் பாதையில் போனால் சீக்கிரம் போகலாமே என இந்த வழியாக வருவதைப் பார்த்துதான் தன்னை தடுப்பதற்காக பின்னே வந்திருக்க வேண்டும்.
இங்கே வந்து இந்த கொடும்பாவியிடம் மாட்டிக்கொண்டான்.
சத்தியசீலனின் தேகம் பனிக்கட்டியின் மீது போடப்பட்ட நெருப்புத்துண்டத்தின் நிலையில் இருந்தது.
மரத்தில் இருக்க தேங்காய்களை பறிக்கும் தருணம் பார்த்து ஏறி இறங்கியவன் தோப்பிற்குள் நுழையும் அன்னத்தை பார்த்துவிட்டான். “யாரு இவ. புதுசா இருக்கா? பாத்த மாதிரி இருக்கே” மரத்தில் இருந்தவன் புருவம் சுருக்கி யோசித்தான்.
கடைசியாக பார்க்கும் போது மரப்பாச்சி பொம்மை மாதிரி இருந்த அன்னத்தை பருவ வயதுக்கே உரிய வனப்புடன் பார்க்க அடையாளம் தெரியவில்லை அவனுக்கு.
“யாரு யாரு யாருன்னு தெரில. அடச்சே இவளை எங்கயோ பாத்து தொலைச்சிருக்கேன். எங்க” நெற்றியை தட்டி தட்டி யோசித்தான் பிடிபடாமல்.
அதுசமயம் “அன்னம்” என அழைத்து இளவரசன் பின்னே ஓடி வர.
“அட நம்ம சுண்டெலி. அடையாளமே தெரியாத அளவுக்கு வளர்ந்துட்டாளே” ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததில் குதூகலமானான்.
அவளை அரை உயிராக மருத்துவமனையில் சேர்த்தவனுக்கே தான் செய்ததை நினைக்க அசிங்கமாய் போனது. சாகிற அளவுக்கா விளையாடனும். அவனை இன்னும் அசிங்கப்பட வைக்கவென ராமாயி அவன் காலில் விழாத குறையாக நன்றி சொல்லி வைத்தார்.
சுலோச்சனா தயாளன் உள்பட அவனிடம் கையெடுத்துக் கும்பிட்டு காலத்துக்கும் உனக்கு நன்றிகடன் படுறோம் சாமி எனக் கூற. “பரவால்லங்க என்ற கடமை இது” மனதுக்குள் அசிங்கப்பட்டபடி வெளியே பெருந்தன்மையாய் சமாளித்தான்.
கருப்புச்சாமியின் சந்தேகப் பார்வை மட்டும் தன்னையே தொடர, “கருப்பு நாயி வந்து ஏதாவது கேக்கட்டும். நான்தாண்டா கொல்லப் பாத்தேன்னு உண்மைய சொல்லி ஒரு சம்பவத்தை பண்ணிப்புடறேன்” மீசையை நீவிவிட்டவன் “வந்து பாருடா” என கருப்புச்சாமியை நக்கலாக பார்த்தான்.
அப்பாறு ஒரு பக்கம் மேலுக்கு சொகமில்லாம இருக்க. தங்கச்சி மயக்கத்துல இருக்கா. அப்பத்தாவுக்கு அதிர்ச்சியில அது ஒருபக்கம் மயங்கி விழுந்து அதுக்கும் டிரிப்ஸ் ஏறிட்டு இருக்க. இவனது சவாலை கவனிக்க அவனுக்கு மனதில்லை. தனக்கு வந்த சந்தேகத்தை அப்பத்திக்கு மனதில் வைத்துக்கொண்டான் கருப்புச்சாமி.
அன்னம் சொகமாகி வீடு சேர்ந்ததை கவனித்து, அதுக்குப் பிறகு அந்தப் பிள்ளை இருக்கும் பக்கமே அவன் போகலை. நோஞ்சாகுருவி மாதிரி இருக்கா லேசா கை வைச்சாவே செத்துப் போய் தொலைஞ்சுருவா போல. எதுக்கு தேவையில்லாம கொலைப் பாவதுக்கு ஆளாவனும் கெரகத்த என அவள் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டான்.
பாகுபலி படத்துல வர ராணா மாதிரி உடற்கட்டிற்கு அவள் உருவம் பொருந்தி நிற்க, கைகள் இரண்டும் பின்னே அவன் கரத்தில் கட்டுண்டு இருந்தது. அவளையே உரித்துப் பார்த்தவனுக்கு அழகை மறைத்த மேலாக்கு இடையூறு சேர்க்க, தூக்கி எறிந்தான்.
மார்பை மறைத்த மேலாக்கை அவன் எடுத்துவிட, “வேண்டாம்” அவமானத்தில் துடித்துப் போனாள். இளவரசன் முன் தனக்கு பிடிக்காத ஒருத்தன் தவறாய் நடக்கிறானே அவனை வெறுப்பாய் நோக்கினாள்.
அவன் கண்களை பறித்த அழகுகள் மீது அவனை கிறுக்கன் ஆக்கியது, அவள் மனநிலையை கிஞ்சித்தும் உணரவில்லை அவன். நெஞ்சத்தின் குழியில் உதடு பதித்தவன் நிமிர்ந்து அவள் வதனம் பார்த்தான்.
அவளோ இளவரசன் கண்விழித்து தன்னைக் காப்பாற்ற வருவானா என அவனையே பார்த்தாள்.
தன் அணைப்பில் இருந்து பிற ஆணை பார்க்கிறாள் என்ற நிலை அவனுக்கு ஒரு சிறிதும் பிடிக்கவில்லை, அவள் கைகளை விடுவித்தவன். மரத்தை ஓங்கி அடிக்க, மரமே முன்னும் பின்னும் பேயாட்டம் ஆடியது. அதோடு அவளும் அவள் மீது சாய்ந்த நிலையில் படுத்திருக்கும் இருவரின் நெருக்கம் இன்னும் அதிகரிக்க.
அன்னமோ மரம் பேயாட்டம் போட “அம்மா” அவன் இடையில் கைப்போட்டு அணைத்துக்கொண்டாள் இன்னும் நெருக்கமாக.
“அவனை லவ் பண்றியான்னு சொல்லு புள்ள” அவன் கேட்டதே ஆமான்னு சொன்ன அடுத்த ஷனம் அவனை கொன்னு மரத்துக்கு உரமா போட்டுவிடுவேன் என்பதை உணர்த்தியது.
சொல்லாமல் சொல்லும் சேதியை உணர்ந்து செயல்பட அவள் அவனது துணைவியும் காதலியும் இல்லை. அறிந்த வயதில் இருந்தே அவனால் சித்தரவதைக்கு உள்ளானாள். அதனால் அவன் உணர்த்தும் சேதியை இன்னதென்று புரிந்துகொள்ளவில்லை அவள்.
“ஆமா ஆமாங்கறேன். அதனால அவன விட்டுருங்க” அவன் இடுப்பில் இருந்த கையை எடுக்க நினைத்து முடியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
வெய்யிலில் கருத்த தேகம், களையான முகம், அடர்ந்த மீசை அதற்குள் ஒளிந்திருக்கும் கள்ளச்சிரிப்பு, கட்டான தேகம் தன்னை வலிக்கச் செய்யும் அகன்று இறுகிய மார்பும் தன் கைகள் உணரும் குறுகிய இடை. திமிரும் ஆணவமும் கலந்த பார்வை, அவன் வியர்வை வாசம் எல்லாம் அவள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாய் பாலில் கலக்கும் குங்குமப்பூவாய் கலந்ததை அறியவில்லை அவள்.
தென்றல் காற்று இருவரையும் உரசிப்போக, அவன் கைகளுக்குள் அவள் தேகம் சிலிர்த்து அடங்கியது.
“காதலுக்கு நானு உதவி செய்யட்டா புள்ள?” கள்ளச்சிரிப்புடன் வினவ.
கனவிலிருந்து விழித்து அவனை பார்வையிட, அவனை பிடிக்கவில்லை அவளுக்கு. அவனும் அவன் பேச்சு மொழியும் கொஞ்சமும் பிடிக்கல.
படித்த தனக்கு இப்படி ஒரு காட்டுமிராண்டி வேண்டாமே. அவன் மீதான மயக்க நிலையை தூசி மாதிரி தட்டி வீசினாள்.
“உதவியா அதுவும் நீங்க? யாராவது கேனையன்கிட்ட சொல்லுங்க நம்புவான். தண்ணில முக்கி கொல்ல பாத்த பாவிதான நீங்க”
“ஒரு சந்தேகம் புள்ள. மனச அரிச்சுட்டே இருந்துச்சு. ஆமா நான்தான் தண்ணிக்குள்ள போட்டு முக்கி சாவடிக்க பாத்தேன்னு நீ யாருகிட்டயும் சொல்லலையே ஏம்புள்ள” நெடு நாள் சந்தேகத்தை அவன் கேட்டான்.
“அப்ப அப்பாறு உடம்புக்கு சொகமில்லாம இருந்தாரு. நான் சாகக்கிடந்தேன்னு தெரிஞ்சு இன்னும் அவர் உடல்நிலை மோசமாத்தான் ஆச்சு. இதுல என்னை நீங்க துன்பப்படுத்துறது தெரிஞ்சா அண்ணனுக்கும் உங்களுக்கும் சண்டைதான் வரும். என்னால யாருக்கும் பாதகம் வரவேண்டாம்னு விட்டுட்டேன். அப்பத்திக்கு அப்பாறு குணமாகறதுதான் எனக்கு முக்கியமா இருந்துச்சு. ஆனா கொஞ்ச நாள்ல செத்துப் போய்ட்டாறு” கன்னங்கள் கண்ணீரால் ஈரமானது.
இளவரசன் மயக்கம் தெளிவதை பார்த்த சத்தியசீலன், அவள் முகத்தை நிமிர்த்தி இதழில் அழுத்தமாய் உதடு பதித்தான்.
அவள் இதழ்களோடு மீசை அடர்ந்த அதரங்கள் முரட்டுத்தனமாய் சேரவும் அவனது இத்தாக்குதலை எதிர்பாராது விழிகளை விரித்தாள்.
முத்தச் சுவையில் மயங்கியவனின் மார்பினை அவள் மென்மையது கூர் பார்த்திட, இன்ப வலியில் கண் சொக்கிப்போனான்.
விலக்க முயன்ற பூங்கரத்தை இழுத்து தன் மார்பில் உள்ள முடிகளை வருடக் கொடுத்தவன் அவள் இதழ்களை விடாமல் கொய்தான்.
மரத்துக்கும் அவன் இறுகிய தேகத்துக்கும் இடையில் மாட்டிக்கொண்டு, அவன் தொடுகை நெருக்கம் முத்தம் எதுவும் பிடிக்கலை அவளுக்கு. தன் உடலை அத்துமீறி தொடுகிறானே. அவமானத்தில் அவள் அங்கமெல்லாம் காந்தியது. பிடிக்காத முத்தத்தில் உதடு எரிச்சலைக் கொடுக்க, மீசை முடிக்கள் சுள் எனக் குத்தி வன்மையாய் வதைத்தது.
அவள் கண்ணீர் மணித்துளிகள் அவன் உதடுகளை நனைத்தது. அவள் அழுகையை உணர்ந்தாலும் மதிக்கும் எண்ணமும் இல்லை அவனுக்கு. எந்தக் காலத்தில் அவள் உணர்வுகளை அவன் மதித்து இருக்கிறான். இப்பொழுது கவனிக்க. ஆண் இனமே இப்படித்தானே படுக்கையில் பெண்ணை பொம்மை போல பாவிப்பர் ஒரு கை ஓசை மட்டுமே அங்கே. ஒரு சிலரே சரிசமமாய் உணர்வை மதித்திடுவார்கள்.
“அன்னம் எங்க இருக்க” மயக்கத்திலிருந்து விழித்து அவளை தேடினான் இளவரசன்.
அன்னமும் சத்தியசீலனும் இருக்குமிடம் அவனுக்கு அகப்படவில்லை மரத்தின் பின் நின்றிருந்ததால் பார்க்கவில்லை அவர்களை.
“அன்னம்” திரும்ப அழைத்து அவளை தேடினான்.
அடித்துப்பிடித்து அவனை தள்ளிவிட்டாள் அன்னம்.
“ஏய்” அவன் திரும்ப அணைத்திட,
“ஒருவேளை அவன் கண்ணுல இப்படி நம்ம இருக்கறது பட்டுருசிச்சுன்னா அவமானத்துல உசுரோட செத்துப் போவேன். யாரும் பாக்காத நேரத்துல இடுப்புல கல்லை கட்டிட்டு உங்க தோப்பு கிணத்துல விழுந்து உசுர விட்டுருவேன். எம்புட்டு காவல் போட்டாலும் என்னை காப்பாத்த முடியாது பாத்துக்கோங்க” கண்கள் சிவக்க அவனை எச்சரித்தாள்.
ஒரு கோணல் சிரிப்புடன் அவளை பார்த்து, “என்னடி தலையில் அடிச்ச கணக்கா பேரு சொல்லிக் கூப்பிடுறான். அந்த அளவுக்கு இடம் தந்திருக்க அவனுக்கு” விழிகள் நெருப்பை அவள் மீது கொட்டியது.
“அவனை எனக்கு பிடிச்சிருக்கு. அவனைத்தான் கட்டிக்குவேன்” திமிராய் சொன்னாள்.
“இதுக்குப் பிறகுமா” தங்கள் நெருக்கத்தை சுட்டிக்காட்டி கேட்டான்.
“ஒரு முத்தத்தால கற்பு போயிடுச்சுன்னு மூலையில் முடங்கிப்போவ மாட்டேன்” சொன்னவளை பார்த்தவன் ஏதும் சொல்லாமல் அவளை விட்டு மரத்தில் ஏறினான் இளவரசன் கண்ணில் படாமல்.