2.3K
விடியல் – 19
எப்போதும் பெண்கள் இயல்பாக இருப்பது தங்களுடைய பிறந்த வீட்டில் தானே.
அப்படித்தான் நந்தினியும் தான் எப்போதும் போல அணியும் குட்டை கவுன் ஒன்றை அணிந்திருந்தாள்.
அது சற்று முழங்காலுக்கு மேலே வரை மட்டுமே இருந்தது.
அவள் சோபாவில் அமர்ந்திருந்ததால் அந்த கவுன் தாறுமாறாக தொடைவரை மேலே ஏறி இருக்க அதைப் பற்றி சிறிதும் கவலையில்லாமல் கையில் இருந்த குளிர்களியை ருசித்தவாறு தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளை அப்படிப் பார்த்தவனுக்கோ பெரும் அதிர்ச்சி.
தாறுமாறாக அலையும் தன் பார்வையை இழுத்து அடக்கியவன் வாசலில் அப்படியே நின்று விட்டான்.
“உள்ள வாங்க மாப்ள.. ஏன் அப்படியே நினைட்டீங்க..” என்றவாறு ராமகிருஷ்ணன் உள்ளே அழைக்க தன் தந்தையின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியோடு “அப்பா வந்துட்டீங்களா…?” என்ற சிறு கூச்சலுடன் திரும்பியவள் அங்கே நின்ற தன் கணவனைக் கண்டதும் உறைந்து போனாள்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவளுடைய முகமோ நொடியில் இஞ்சி தின்ற குரங்கைப் போல மாறிப் போனது.
அவனையும் தன்னையும் குனிந்து பார்த்தவள் சட்டென தன்னுடைய கவுனை இழுத்து விட்டாள்.
என்னதான் இழுத்து விட்டாலும் அது அவளுடைய தொடையை மட்டுமே மறைக்கப் போதுமாக இருந்தது.
முழங்கால்களும் கெண்டைக்கால்களும் அப்படியே தெரிய அவளுக்கோ கூச்சமும் சங்கடமும் ஒருமித்தது.
‘ஐயோ இந்த போலீஸ்காரன் எதுக்கு இங்க வந்திருக்கான்னு தெரியலையே…’ மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள் அவள்.
“பாப்பா என்ன அப்படியே ஷாக் ஆகி நிக்கிற..? மாப்பிள்ளைக்கு இன்னைக்கு ரொம்ப வேலை ஜாஸ்தி… டயர்டாகி வந்திருக்காரு.. உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ ஃபிரெஷ் ஆகட்டும்…” என அவர் கூற,
‘அடப்பாவி டாடி…’ என மனதிற்குள் அலறி வைத்தாள் நந்தினி.
இப்போது அவளுடைய பார்வை தன் கரத்தில் இருந்த குளிர்களியின் மீது பதிந்தது.
“அத அப்புறம் சாப்பிட்டுக்கலாம் கண்ணம்மா..” அவளைப் பற்றி புரிந்தவராய் கூறினார் அவளுடைய தந்தை.
அதே கணம் சமையலறைக்குள் இருந்து வெளியே வந்த நிர்மலாவிற்கோ தன்னுடைய மாப்பிள்ளையைக் கண்டதும் அவ்வளவு சந்தோஷம்.
“அடடா வாங்க மாப்ள.. உள்ள வாங்க.. உட்காருங்க…” என அவர் அவனை வரவேற்க சிறு தலை அசைப்புடன் சோபாவின் அருகே வந்தவன் உட்காராமல் அப்படியே நின்றான்.
“என்னாச்சுப்பா..?” எனக் கேட்டார் ராமகிருஷ்ணன்.
“இல்ல நான் கொஞ்சம் டர்ட்டியா இருக்கேன்.” என்றான் அவன்.
“அதெல்லாம் பிரச்சனை இல்ல.. நீங்க உட்காருங்க..” என நிர்மலா மீண்டும் கூற வேறு வழியின்றி அங்கே இருந்த சோபாவில் அவன் அமர்ந்து கொள்ள வெடுக்கென்று எழுந்து நின்றாள் நந்தினி.
“என்ன சாப்பிடுறீங்க மாப்ள..? ஜூஸ் இல்லன்னா டீ ஸ்னாக்ஸ்..?”
“காபி…” என்றான் அவன் ஒற்றைச் சொல்லாக.
“இதோ கொண்டு வரேன்..” என்ற நிர்மலாவோ சமையலறைக்குள் நுழைய முயன்ற கணம்,
“அம்மா நானே காபி போடுறேன்..” என்றாள் நந்தினி.
நிர்மலாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் பேசியது தன்னுடைய மகளா என தலை சுற்றலே வந்து விட்டது.
இங்கே இருக்கும் போது ஒரு வேலை கூட செய்ய மாட்டாளே..
தன் கணவனுக்கு என்றதும் காபி போடுகிறேன் என்ற மகளை மெச்சுதலாகப் பார்த்தார் நிம்மலா.
பெருமை பொங்க பார்த்தார் ராமகிருஷ்ணன்.
அவர்கள் இவருடைய பார்வையும் பார்த்தவளுக்கோ,
‘அடக்கடவுளே நீங்க எத்தனை தடவை காபி போட்டாலும் அவன் சக்கர கம்மியா வேணும்னு திரும்பத் திரும்ப காபி போட வைப்பான்.. உங்கள காப்பாத்துறதுக்காகத்தான் நான் காபி போடுறேன்னு சொன்னேன்.. இது தெரியாம என்ன இப்படி பார்க்கிறாங்களே..’ என மனதிற்குள்தான் கூறிக் கொண்டாள் அவள்.
பின்னே அவள் நினைப்பதை எல்லாம் தற்சமயம் வெளியே கூறவா முடியும்..?
அவளோ அவனுடன் எதுவும் பேசாது சமையலறையை நோக்கிச் செல்ல அவனுடைய பார்வை அவளைத்தான் தொடர்ந்தது.
அவள் இறுக்கமாக அணிந்திருந்த அந்த சிறிய கவுனோ அவளுடைய இடையின் வளைவை அப்பட்டமாகக் காட்டியது.
இடையில் பதிந்த பார்வையை அப்படியே கீழே இறக்கியவன் அவளுடைய கெண்டைக் கால்களைப் பார்த்து விட்டு சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
உடல் தகிக்க ஆரம்பித்தது.
‘இதுக்கு நடு ரோட்லயே நின்னுருக்கலாம் போலையே…’ என எண்ணிக் கொண்டது அவனுடைய மனம்.
ராமகிருஷ்ணனும் நிர்மலாவும் இயல்பாக அவனுடன் பேச ஆரம்பித்தனர்.
யாரும் நடந்து முடிந்த சம்பவத்தை பற்றிப் பேச விரும்பவில்லை.
அவர்கள் இயல்பாக பேசும் போது அவனால் அதை புறக்கணிக்கவும் முடியவில்லை.
முடிந்த அளவு அவர்கள் பேசுவதற்கெல்லாம் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தான் அவன்.
சற்று நேரத்தில் காபியுடன் அவன் அருகே வந்தவள் அதை அவனுக்குக் கொடுக்க அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு காபியை வாங்கிக் கொண்டவன் அதை அருந்தத் தொடங்கினான்.
அவனுடைய உடலில் இருந்த சோர்வுக்கு அந்த காபி புத்துணர்ச்சியை கொடுப்பது போல இருந்தது.
அவன் எதிர்பார்க்கும் சுவை அப்படியே இருந்தது.
ஆனால் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது குடித்து முடித்தவன் வெறும் கப்பை முன்னிருந்த டீபாய் மீது வைத்தான்.
அதே கணம் உள்ளே இருந்த வெள்ளை நிற நாய்க் குட்டியோ வர்மாவை பார்த்து குரைத்தவாறு ஓடி வந்தது.
புசுபுசுவென்று அழகாக இருந்த நாய்க்குட்டியை எரிப்பது போல பார்த்தான் அவன்.
எத்தனையோ வேட்டை நாய்களுடன் பழகுபவனுக்கு இந்த சிறிய நாயைப் பார்த்தா பயம் வரும்..?
வேகமாக குரைத்துக் கொண்டு வந்த அந்த அழகான நாய்க்குட்டிதான் அவனைப் பார்த்து பின்வாங்க வேண்டியதாக இருந்தது.
“ஏய் டோரா உஷ்.. அவர கடிக்கக் கூடாது..” என அதட்டினாள் நந்தினி.
‘டோராவா.. இது வேறயா..?’ என எண்ணிக் கொண்டான் அவன்.
அவளுடைய டோராவோ சமத்தாக அவளுடைய கால்களை சுற்றத் தொடங்கி விட அப்படியே அதை அள்ளி அணைத்து தன் மார்போடு சாய்த்துக் கொண்டவள்,
“என்னடி பட்டுத் தங்கம்..? உங்களுக்கு பசி வந்துருச்சா…?” என நாயோடு அவள் கொஞ்சத் தொடங்கி விட அவனுக்கோ பொறுமை பறந்தது.
“சரி நான் கிளம்புறேன்..” என்றவாறு எழுந்து கொண்டான் அவன்.
“ஃப்ரஷ் ஆகலாமே மாப்பிள்ளை..?”
“இட்ஸ் ஓகே… தேங்க்ஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்தான் வர்க் இருக்கு..” என்றான் அவன்.
ஆனால் அவனுடைய மனமோ ஃபிரஷ் ஆகினால் சற்று நன்றாக இருக்கும் என்றுதான் எண்ணியது.
உடல் முழுவதும் வியர்வை வழிந்து கசகசவென்று இருந்தது.
“ரொம்ப டயர்டா இருக்கீங்க.. இப்படியே எப்படி ஒர்க் பண்ண முடியும்..? ஏன்டி இப்படியே அமைதியா நிக்கிற.. மாப்பிள்ளைய உன்னோட ரூமுக்கு கூட்டிட்டுப் போ.. அவர் ப்ரஷ் ஆகட்டும்..” என்றார் நிர்மலா.
‘வில்லங்கத்துக்கு ரூம் மேட்டா ஆயிட்டோம்… விபரீதத்த ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்..’ என எண்ணியவள் வேறு வழியின்றி அவனை “வாங்க..” என்று அழைத்தவள் தன்னுடைய அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.
பெற்றோருடன் அவன் அருகே இருக்கும் போது அவளுக்கு எந்தவிதமான பதற்றமும் எழவில்லை என்பதே உண்மை.
ஆனால் அவனைத் தனியாக தன்னுடைய அறைக்குள் அழைத்துச் செல்வதை நினைக்கவே அவளுக்கு தேகம் படபடக்க ஆரம்பித்து விட்டது.
மெல்ல படிகளில் ஏறியவள் முதல் தளத்தில் இருந்த தன்னுடைய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றாள்.
அவனும் அவளிடம் எதுவும் பேசவில்லை
அவளுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அத்துடன் அவள் இப்போது கோபமாக அல்லவா இருக்க வேண்டும் கோபித்துக் கொண்டுதானே வீட்டை விட்டு வந்திருக்கிறாள்.
அந்தக் கோபத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள் “பாத்ரூம் அங்க இருக்கு..” என குளியலறையை அவனுக்குக் காட்டினாள்.
அவளை மேலிருந்து கீழ் வரை ஆழ்ந்து பார்த்தவன்,
“உன் டவல் கொடு..” என்றான்.
“என் டவலா..? என்கிட்ட புது டவல் இருக்கு..” என்றவள் மடித்து வைத்திருந்த புதிய துவாலையை எடுத்து அவனிடம் நீட்ட அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“உனக்கு இன்பெக்ஷஸ் டிசீஸ் இல்லன்னா ரேஷஸ் ஏதாவது இருக்கா..?” எனக் கேட்டான்.
அவளோ அதிர்ந்து போனவள் “வாட்..?” என்றாள் அவனைப் பார்த்து.
“இருக்கா இல்லையா..? எஸ் ஆர் நோ..?” மீண்டும் அவனிடம் அதே அழுத்தம்.
அவனை முறைத்துப் பார்த்தவள் “எனக்கு எந்த டிசீஸும் இல்ல.. ஐ ஆம் ஃபர்பெக்ட்லி ஆல்ரைட்..” என்றாள்.
“தென் வை திஸ் நியூ டவல்..?” எனக் கேட்டான் அவன்.
அவளோ பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனாள்.
என்னவென்று சொல்வது..?
நான் உபயோகித்ததை நீ உபயோகிக்க கூடாது என்று சொல்வதா..?
அவன்தான் மனதை படிக்கும் வித்தைக்காரனாயிற்றே.
கைதிகளின் கண் அசைவிலும் உடலின் அசைவிலும் உண்மையை அறிந்து கொள்பவன் அவளின் எண்ண ஓட்டத்தையும் அக்கணம் அறிந்து கொண்டான்.
“உன்னையே யூஸ் பண்ணிட்டேன்.. உன் டவலை யூஸ் பண்ண மாட்டேனா என்ன..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ மூச்சடைத்துப் போனது.
இதற்கு மேலும் விட்டால் எக்குத் தப்பாக பேசி வைப்பான் எனப் புரிந்து தன்னுடைய துவாலை எடுத்து சட்டென அவனை நோக்கி நீட்டி விட்டாள் அவள்.
அவனோ அதை வாங்கியவன் தன்னுடைய யூனிஃபார்மை கழற்றத் தொடங்க அவளுக்கோ இன்னும் பதற்றம்தான் அதிகரித்தது.
“ஓகே.. நீங்க ப்ரஷ் ஆயிட்டு வாங்க… நான் கீழ வெயிட் பண்றேன்..” என்றவள் அங்கிருந்து நழுவ முயன்ற நேரம்,
“இப்போ நீ ரூமை விட்டு வெளியே போனா நடக்கிறதே வேற..” என்றான் அவன்.
அதிர்ந்து விட்டாள் அவள்.
இது என்ன அநியாயம்..?
நான் இந்த அறையில் இருக்க வேண்டுமா இல்லை வெளியே இருக்க வேண்டுமா என்பதை நான் தானே முடிவு செய்ய வேண்டும்.
இவன் என்ன கூறுவது..?
அவளுக்கோ கோபம் கோபமாக வந்தது.
இங்கே வந்ததும் அராஜகம் பண்ண ஆரம்பித்து விட்டானா..?
“இந்த யூனிஃபார்ம் ரொம்ப டர்ட்டியா இருக்கு.. வேற ட்ரஸ் இருந்தா நல்லா இருக்கும்..” எனக் கூறியவன் யூனிஃபார்மை அங்கிருந்த இருக்கையில் கழற்றி வைத்து விட்டு திரும்ப அவர்களுடைய அறைக் கதவு தட்டப்பட்டது.
அவனோ காக்கி பேன்ட் மட்டுமே அணிந்திருந்தான்.
நந்தினியோ சென்று கதவைத் திறந்தவள் வெளியே நின்ற தன் தந்தையைப் பார்த்ததும் “உள்ள வாங்கப்பா..” என்று அழைத்தாள்.
“பாப்பா மாப்பிள்ளை இங்க மறு வீட்டுக்கு வந்தா கொடுக்கணும்னு கொஞ்சம் ட்ரஸ் வாங்கி வச்சிருந்தேன்.. இப்போ அது அவருக்கு யூஸ் ஆகும்னு நினைக்கிறேன்.. இது எல்லாத்தையும் அவர்கிட்ட கொடு..” எனக் கூறிவிட்டு அவர் சென்று விட, சில பைகளுடன் அவனிடம் வந்தவள் அந்த ஆடைகளை அவனிடம் கொடுத்தாள்.
ராமகிருஷ்ணன் கூறியது அவனுடைய செவிகளையும் எட்டத்தான் செய்தது.
“தேங்க்ஸ்..” என்றவன் அவளுடைய துவையாலையுடன் குளியலுக்குள் சென்றுவிட அவளுக்கோ பெருமூச்சு.
இவன் இங்க இருந்து கிளம்பும் மட்டும் இவன் கூடவே இருந்து இவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் போலையே..
அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டாள் அவள்.
அவளுக்கு அருகே இருந்த அவனுடைய யூனிபார்மை பார்த்தவளின் விழிகள் விரிந்தன.
‘அப்பா ஏதோ ஆக்சிடென்ட் கேஸ்னு சொன்னாரே.. வேலை ரொம்ப அதிகம்னு வேற சொன்னாரு.. இவரும் பாவம்தான்..” என எண்ணிக் கொண்டாள் அவள்.
என்னதான் வெளியே கோபம் போலக் காட்டிக் கொண்டாலும் அவன் தன்னுடைய வீட்டிற்கு வந்தது அவளுடைய அடி மனதில் இனிக்கத்தான் செய்தது.
சற்று நேரத்தில் குளித்து முடித்து அவளுடைய துவாலையை மட்டும் இடையில் கட்டிக் கொண்டு வெளியே வந்தவனைப் பார்த்ததும் அவளுக்கும் இதயம் எகிறி குதிக்கத் தொடங்கியது.
முகம் சிவக்க திரும்பி நின்றவளின் அருகே வந்தவன்,
“வாட்..?” என்றான்.
“மு.. முதல்ல ட்ரெஸ்ஸ போடுங்க..” என்றாள் அவள்.
“ஏன் இதுக்கு என்ன குறைச்சல்..?” என்றான் அவன்.
“எல்லாமே குறைச்சலாதான் இருக்கு..” என்றாள் அவள்
அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன்,
“நீயும்தான் செ**ஸியா ட்ரெஸ் பண்ணிருக்க.. நான் ஏதாவது சொன்னேனா..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
🥀🥀
1 comment
Super super super super super super super super super super super super interesting