May 2025

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07

Episode – 07   மறுநாள் காலை விடிந்ததும், சேவல் கூவுவது போல, காலை வேளையில் அவளை போனில் அழைத்தான் ஆரண்யன்.   சொர்ணாக்கு, போன் அடித்ததும்,   “ஒரு வேளை அவனை இருக்குமோ…. சே…. சே…. போன் அடிச்சா எடுக்க கூட பயமா இருக்கு. அப்படி ஆக்கிட்டானே அந்த ஆளு. அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?, போன எடுக்காம விடுவம். எதுக்கு காலையில சனிக்கு சங்கு ஊதணும்?” என எண்ணியவள்,   இறுதியாக, […]

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07 Read More »

ஸ்டில் ஐ லவ் யூ…டீஸர்

ஸ்டில் ஐ லவ் யூ.. டீஸர்   “என்ன பொண்ணு வளர்த்து வச்சுருக்க அன்னம், பாரு உன் பொண்ணு அடிக்கிற கூத்தை பொட்டைப் பிள்ளையை ஒழுங்கா படிக்க வச்சோமா காலா காலத்தில் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் கட்டி வச்சோமான்னு இல்லாமல் மைதானம் மைதானமா சுத்த அனுப்பி இருக்க”. “அந்த டீவி பெட்டியை பாரு உன் மகள் அந்த கிரிக்கெட் விளையாடுற பையனை பார்த்து ஐ லவ் யூ னு போர்டு காட்டிட்டு இருக்கா” என்று பொரிந்து

ஸ்டில் ஐ லவ் யூ…டீஸர் Read More »

22. காதலோ துளி விஷம்

விஷம் – 22 இருள் சூழ ஆரம்பித்த அழகிய மாலை நேரம் அது. யாழவனின் பால்கனிக் கதவு திறந்திருந்ததன் விளைவால் தெளிவான சந்திர ஒளியில் அந்த அறை மெலிதாக மினுமினுக்க, மெழுகுவர்த்தியின் மெளன அலைகளில் இருவரின் நிழல்களும் சிருங்கார ராகமாக ஒன்றோடொன்று கலந்து உருகின. கீழ் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டாள் அவள். அவளுக்கோ அவஸ்தையாக இருந்தது. முன்பு போல அவனுக்குக் கட்டுப்பாடு விதித்து அவனைத் தள்ளி நிறுத்துவதற்கு இப்போது முடியாது அல்லவா..? அவளின் ஒட்டுமொத்த உரிமையாளனாக

22. காதலோ துளி விஷம் Read More »

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் -2)

டீஸர் 2 இரவின் பிடியில் அந்த வைத்தியசாலை மயான அமைதியுடன் இருளில் புதைந்து காணப்பட்டது. தலைமை வைத்திய அதிகாரி மிகவும் பதற்றத்துடன், “நர்ஸ் என்ன நடக்குது இங்க கரண்ட் போயிடுச்சா உடனே ஈபிக்கு கால் பண்ணி என்னன்னு பாக்க சொல்லுங்க..” “ஆமா சார் திடீர்னு போயிடுச்சு இதோ சார் கால் பண்ணிட்டேன் இன்னும் 10 நிமிசத்துல வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்காங்க..” “ஓகே பேசண்ட்ஸ் எல்லாம் பயப்பட போறாங்க சீக்கிரமா அவங்கள வந்து பார்க்க சொல்லுங்க..” “ஓகே

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் -2) Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 61 (எபிலாக்)

குறிஞ்சி மலர் 61 (எபிலாக்) அந்த ஏகாந்த சூழலில், இயற்கையின் அழகான காட்சியில் தன்னை மறந்து தன் மனைவியின் இனிய குரலில் அவள் பாடிய பாடலில் தன்னை தொலைத்திருந்தான் ஜேம்ஸ். “அத்தான்..” “……………” “அத்தான்..” “ம்ம் சொல்லு பேபீ..” “பாட்டு எப்புடி..” “சூப்பர்டி.. எப்பவும் போல ரொம்ப இனிமையாப் பாடின்னீ..” “பாட்டு இனிமை கிடக்கட்டும்.. வரிகள் எப்புடி..” “ம்ம் வரிக்கு என்ன குறை நல்லா தான் இருக்கு..” “பொதுவா நான் உங்களுக்கு பாடிக் காட்டுற பாட்டுகள் எல்லாமே

அசுரனின் குறிஞ்சி மலரே.. 61 (எபிலாக்) Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 60

குறிஞ்சி மலர்.. 60 விருந்தினர் இல்லத்தில் இருந்த போது, பொழுது போகாத நேரங்களில் வியாகேசோடு ஜேம்ஸை எப்படித் தன் வழிக்கு கொண்டு வரலாம் என கோதை திட்டம் போட்ட போது தான், அவரின் மூலமாக லாரன்ஸும் போதை கடத்தும் தொழில் செய்கிறான் என்பது கோதைக்குத் தெரிய வந்தது. அவ்வளவு தான் அடுத்த நொடியே லாரன்ஸுக்கு கோதையிடம் இருந்து ஃபோன் அழைப்பு பறக்க, கொழும்பில் முக்கியமான மீட்டிங்கில் இருந்த லாரன்ஸ், கோதையின் பெயரைப் ஃபோனில் பார்த்ததும், மீட்டிங்கில் இருந்தவர்களிடம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 60 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 59

குறிஞ்சி மலர்.. 59 பங்களாவின் பக்கத்தில் இருந்த விருந்தினர் இல்லத்தின், பின்புறத் தோட்டத்தில் நின்றிருந்த கறுத்தக் கொழும்பான் மாமரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கோதை. தான் தன் கையை அறுத்துக் கொள்ளப் போன போது, தன் கணவனுக்கு வந்த கோபத்தை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்தாள். அதே போல நேற்று இரவு கணவனுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையும் மீட்டிப் பார்த்தாள். “என்னங்கோ..” “ம்ம்..” “அப்ப நீங்கள் உங்கடை போதை கடத்துற வேலையை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 59 Read More »

1. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 1 “என்ன கௌஷிகா இப்படி சொல்றே? எங்க அப்பாவும் அம்மாவும் உன்னை நேரில் பார்க்க எவ்ளோ ஆசையா இருக்காங்க தெரியுமா?” ஏமாற்றமாக பேசினான் ரவி. உள்ளூர கோபம் கனன்றது, ஆனால் அவனின் கோபத்தை காட்ட முடியாதபடி இருந்தது அவன் நிலைமை. அவன் கோபப்பட்டால் கௌஷிகா ரூல்ஸ் பேசுவாள் என்று அவனுக்கு தெரியும். அவன் காதல் சொன்னபோதே அவள் சில விஷயங்களை தெளிவாக அவனிடம் சொல்லி விட்டாள். அதனால் இப்போது ரவி அடக்கி

1. காயமின்றி வாழும் காதல் Read More »

முரடனின் மான் விழி

முரடனின் மான்விழி    கல்லூரி ஆசிரியராக இருக்கும் தன்னுடைய அத்தை மகன் விதுரனுக்கு கல்யாணம் என்ற குதூகலத்தோடு அந்த மண்டபத்தில் வளம் வருகிறாள்  விஹிதா …  கோபத்துக்கும் அதிகாரத்திற்கும் மறுபெயர் என்னவென்று கேட்டால் விதுரன் பெயரையே சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அவனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்க…,  அதிகாரமோ அவனின் கீழ் நூறு பேர் வந்தாலும் ஆளுமை திறன் நிறைந்தது அவனின் அதிகாரம்… இவனிடம் பேசுவதற்கு அங்கு உள்ளவர்கள் பயப்படுவார்கள் இவன் ஒரு பார்வை பார்த்தால் போதும் அப்படியே

முரடனின் மான் விழி Read More »

21. காதலோ துளி விஷம்

விஷம் – 21 “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என்ற மந்திரத்தை புரோகிதர் உச்சரிக்க அந்தப் பொன் தாலியை எடுத்து தன்னுடைய சரிபாதியாக மாறப் போகின்றவளின் கழுத்தில் கட்டினான் யாழவன். அவனுடைய கரங்களில் ஒருவிதமான நடுக்கம். இன்று இந்தக் கல்யாணம் சரி வருமா என அவள் கேட்ட கேள்வியில் அவன் ஆடித்தான் போய்விட்டான். மூன்று முடிச்சுகளை அவளுடைய கழுத்தில் போட்டு முடித்தவனுக்கு நெஞ்சம் காதலில் விம்மியது.

21. காதலோ துளி விஷம் Read More »

error: Content is protected !!