May 2025

அசுரனின் குறிஞ்சி மலரே.. 49

குறிஞ்சி மலர்.. 49 கண்களை மூடிப் படுத்திருந்த கோதைக்கு, கணவனின் ஸ்பரிசத்தில் தூக்கம் கலையவே, திறப்பேனா எனச் சண்டித்தனம் செய்த விழிகளை சிரமப் பட்டுத் திறந்து பார்த்தாள். எதிரே அமர்ந்திருந்த கணவனைப் பார்த்ததும், அதுவரை லேசாகப் பின்னுக்குப் போயிருந்த பயம் வேகமாக எட்டிப் பார்க்கவே, உடல் நடுங்க பதறியடித்து எழுந்து சுவரோடு ஒட்டிக் கொண்டாள் கோதை. “என்னாச்சு பேபீ.. பயந்திட்டியா நான் தான்டி..” என்றபடி அவன் அவளை நெருங்க, கண்களை இறுக மூடிக் கொண்டு மீண்டும் சுவரோடு […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 49 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 48

குறிஞ்சி மலர்.. 48 கோதை அசதியோடு படுத்திருந்த அந்த நேரம் பார்த்து வியாகேசின் அழைப்பு வந்தது. திரையில் தெரிந்த அவரின் சிரித்த முகத்தை பார்த்ததும் கொஞ்சம் உற்சாகம் வரவே, வேகமாக அவரது அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் கோதை. ஆனாலும் மனதோடு லேசான பாரம் இருந்தது. “என்ன பிள்ளை.. என்ன செய்றாய்.. என்ன சாப்பிட்டனீ.. ரெண்டு மூண்டு தரம் ஃபோன் எடுத்தன்.. நீ திரும்பி எடுக்கவே இல்லையே..” “……………” “பீட்டர் எங்க பிள்ளை.. ரெண்டு பேரும் ஊரெல்லாம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 48 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 47

குறிஞ்சி மலர்.. 47 ஜேம்ஸும் கோதையும் அவுஸ்திரேலியா வந்து, இரண்டு மாதங்கள் ஓடி விட்டிருந்தன. இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல துணையாகவே மாறி விட்டிருந்தார்கள். ஆனாலும் கோதைக்கு இன்றுவரை தன் கணவன் அண்டகிரவுண்டில் போதைப் பொருள் கடத்தலில் கொடிகட்டிப் பறக்கும் மன்னன் என்பது தெரியவே தெரியாது. அது தெரிய வரும் போது அவள் என்ன செய்வாள் என்ற பயம் வியாகேசுக்கு நிறையவே இருந்தது. ஆனாலும் இது பற்றி அவர் அவளிடம் மூச்சு கூட விடவில்லை. ஜேம்ஸ் போன்ற ஒரு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 47 Read More »

விடாமல் துரத்துராளே 24

பாகம் 24 ‘அச்சோ டைமாச்சு’ என்றபடி தனது பையை தோளில் மாட்டி கொண்டு அவசர அவசரமாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் சௌதாமினி… “அம்மா அப்பா நான் காலேஜ் கிளம்புறேன் பாய்” என்று கூறவும். “ஏய் என்னடி இவ்வளோ அவசரம் சாப்பிடமா? ஒழுங்கா இரண்டு இட்லியாவது சாப்பிட்டு அப்புறம் கிளம்பு”என்று தாய் கௌரியும்,  “நீ சாப்பிட்டு வாம்மா நான் உன்னை காலேஜ்ல டிராப் பண்றேன்” என்று தந்தை செந்திலும் சொல்வார்கள் என்ற சௌதாமினியின் ஆசையும் எதிர்பார்ப்பும் 

விடாமல் துரத்துராளே 24 Read More »

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் – 1)

ஹாய் மக்களே..! சிந்தையுள்_சிதையும்_தேனே..! டீசர் 1 காதை கிழிக்கும் வண்ணம் பாடல்களின் ஓசை ஒலித்துக் கொண்டிருக்க அந்த டிஜே கிளப்பில் ஒரு ஓரமாக நடப்பவை அனைத்தையும் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் நமது நாயகனான கார்த்திகேயன். அவனது பார்வை அங்கு அனைவரின் நடுவில் கையில் மது கோப்பையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் நமது நாயகி நிவேதாவின் மீதே பதிந்து இருந்தது. ஏனோ எதிலுமே மனம் ஒட்டாமல் அனைத்தையும் பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்தவனின் மேசை அருகில் மது கோப்பையுடன் தள்ளாடியபடி

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் – 1) Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 46

குறிஞ்சி மலர்.. 46 மனைவியின் வெட்கப் பார்வையில் உல்லாசமாக வலம் வந்த ஜேம்ஸ், அவளை தனியே எங்கேயும் அனுப்புவதேயில்லை. “பேபீ..” “என்னங்கோ..” “நான் ரூம்ல இல்லாத நேரம்.. ஊரை சுத்திப் பாக்கிறேனு கிளம்பிடாதே..” “நீங்கள் சுத்தி காட்டினா நான் ஏன் கிளம்பிப் போக போறேன்..” “அப்போ இதுவரை நாளும் நடந்தது என்னடி..” “அது வேறை இது வேறை..” “என்னடீ..” “சும்மா எவ்வளவு நேரம் தான் இந்த அறைக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிறது சொல்லுங்கோ..” “உன்னை யாரு அடைஞ்சு கிடக்க

அசுரனின் குறிஞ்சி மலரே.. 46 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 45

குறிஞ்சி மலர்.. 45 அந்தப் பெரிய அறையில், ஜேம்ஸ் போகின்ற பக்கமெல்லாம் தானும் போய்க் கொண்டேயிருந்தாள் கோதை. “என்ன பேபீ.. எம் மேல அம்புட்டு காதலோ..” “ஏனாம்..” “நான் போற பக்கம் எல்லாம் வாரியே.. ஒருவேளை காதல் கூடி பாசத்துல வாரியோனு..” “நினைப்பு தான்..” “நினைப்புக்கு என்னடி குறைச்சல்..” “வெட்டிக் கதையை விட்டிட்டு சீக்கிரமா குளிச்சிட்டு விடுங்கோ.. நானும் குளிக்கோணும்..” “வாயேன் ரெண்டு பேரும் சேர்ந்தே குளிக்கலாம்..” “என்னது..” “இல்லடி.. நேரம் மிச்சமாகுமேனு தான் கேட்டேன்..” “ஒண்டும்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 45 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 44

குறிஞ்சி மலர்.. 44 தன் கணவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, ஊரில் இருக்கும் அத்தனை தெய்வங்களின் பெயர்களையும் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தாள் கோதை. கண்களில் சிறு சிரிப்போடு அவளின் ஒவ்வொரு செயலையும் பார்த்து இரசித்தபடி, கண்டுங் காணாததும் போல அமர்ந்திருந்தான் ஜேம்ஸ். திருமண ஜோடிகள் இருவரும் தங்களின் தேன்நிலவை கொண்டாட அவுஸ்திரேலியாவுக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இது தான் கோதையின் முதல் விமான பயணம். பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 44 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 43

குறிஞ்சி மலர்.. 43 ஜேம்ஸ், கோதை ஜோடியின் திருமண வரவேற்பிற்காக அழைக்கப் பட்டிருந்த அத்தனை பிரமுகர்களும், தொழில் ரீதியான நண்பர்களும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்து விட்ட நிலையில், தில்லையம்பலம் திரிலோகநாயகி இருந்த திசையை திரும்பிப் பார்த்தார். சாப்பாடு அனைத்தையும் ஒரு பிடி பிடித்த பின்னர், இறுதியாக வெற்றிலையை மடித்து தாம்பூலத்தை வாய்க்குள் போட்டு அதக்கிக் கொண்டிருந்தார் திரிலோகநாயகி. அவரையும் அவரது செய்கையையும் பார்க்க பார்க்க தில்லையம்பலத்திற்கு கடுப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இருந்தாலும் அவர் ஏதாவது செய்வார்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 43 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 42

குறிஞ்சி மலர்..42 மார்பில் சாய்ந்திருந்த மனைவியின் ஸ்பரிசத்தில் உடல் இறுக நின்றிருந்தான் ஜேம்ஸ். அவனது முக பாவனையில் அவனது உள்ளத்தை படித்த கோதை, அவனது கன்னம் தொட, அவளது கரத்தை வேகமாக தட்டி விட்டான். “என்னங்கோ கோபமோ..” “……………..” “இப்ப என்ன.. என்னத்துக்கு இப்புடி முறுக்கிக் கொண்டு நிக்கிறியள்..” “…………….” “சரி தப்புதான் சாமி.. தெரியாம அழுதிட்டன் போதுமோ.. இனி அழேல்லை..” “……………..” “அது தான் அழேல்லை எண்டு சொல்லுறன் எல்லே..” என்று சொன்னவளின் கன்னத்தையே ஜேம்ஸ்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 42 Read More »

error: Content is protected !!