May 2025

17. காதலோ துளி விஷம்

விஷம் – 17 காபி போடுவது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல. எத்தனையோ முறை இதே சமையலறைக்குள் எண்ணற்ற காபிகளை அவள் தயாரித்திருக்கிறாள். ஆனால் இன்று தன்னவனுக்கு முதல்முறையாக கையால் தயாரித்துக் கொடுக்கப் போகின்றோம் என்றதும் பார்த்துப் பார்த்து தேன் சேகரிப்பது போல காஃபியை தயாரித்தவள் அந்த காபி கப்பை எடுத்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்தாள். எந்த பந்தாவும் இன்றி தன் அன்னையுடன் நிதானமாகப் பேசிக் கொண்டிருந்த யாழவனைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது. இன்னும் அதிகமாக அவனைப் பிடித்தும் கொண்டது. […]

17. காதலோ துளி விஷம் Read More »

தேவை எல்லாம் தேவதையே……

சிறுவயதில் தொடங்கிய நட்பு ஒரு கட்டத்தில் காதலாய் மாற அவளையே தன் வாழ்க்கை என கருதி வாழும் ஹீரோ ……. தன் குடும்பம்,, நட்பு,, என மகிழ்ச்சியாக வாழும் ஹீரோயின் வாழ்வில் தீடிர் என அவளின் காதல் ……….   அவளோ சீனியரை விரும்ப……  தன் வலியை மறந்து அவள் காதலுக்கு துணை நிற்கும் தன் தோழனையும் கூட சிறிது விலகும் சூழ்நிலை வர.., அதையும் அவளின் மகிழ்ச்சிக்காக ஏற்கும் ஹீரோ……..   ஒரு கட்டத்தில் தன்

தேவை எல்லாம் தேவதையே…… Read More »

யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction

நாயகியின் ஒரு சின்ன அறிமுகம் :  ஆதினி அன்பும் அழகும் நிறைந்தவள்… பல தலைமுறைகளுக்கு பின் அந்த பெரிய வீட்டில் பிறந்த முதல் பெண் வாரிசு.. அதனாலோ என்னவோ அந்த மொத்த குடும்பத்திற்கும் செல்ல பிள்ளை.. சொல்ல போனால் அந்த வீட்டிற்கு மட்டுமல்ல மொத்த ஊருக்கும் அவள் தான் செல்ல பிள்ளை, அவள் பேச்சுக்கு மறுபேச்சே அங்கு இல்லை, குறும்புகளின் ராணி.. ஏழை எளிய மக்களுக்கு அன்னலட்சுமி அதற்காக எல்லாம் அவளை நம்பி விட வேண்டாம்… எந்த

யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction Read More »

உயிர் தொடும் உறவே – டீஸர்

வணக்கம் நண்பர்களே 🙏 உயிர் தொடும் உறவே…இது ஒரு உணர்வுபூர்வமான முக்கோண காதல் கதை❤️❤️❤️. கதையை பற்றி சொல்லுவதை விட படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.   கதை மாந்தர்கள் பற்றி சிறு அறிமுகம் :   நாயகர்கள் : ஈஸ்வரன், ஆதித்யன் . நாயகி : மீனாட்சி. மற்ற முக்கிய கதை மாந்தர்கள்: சங்கரபாண்டியன் -கோமதி. மயில்வாகனம் – வடிவாம்பாள். பாண்டியன். நேகா. புகழினி டீஸர் :   கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள்‌ மீனாட்சி.

உயிர் தொடும் உறவே – டீஸர் Read More »

நேசம் கூடிய நெஞ்சம்(Teaser)

“எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை” – கடுகடுவென்று பேசினான் அரவிந்தன். “புதுசா எதாவது சொல்லுங்க” – கவலை இல்லாமல் பதில் சொன்னாள் மலர்விழி. “நம்ம இரண்டு பேர் வாழ்க்கையையும் கெடுக்க போற நீ!” ” இப்போ உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கா?” அவன் அறையில் கிடந்த மது பாட்டில்களை காட்டி கேட்டாள்.   இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்யும் நம்ம ஹீரோ எப்படி மாறுரார் பார்போம்!  

நேசம் கூடிய நெஞ்சம்(Teaser) Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 28 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 28 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “நான் வேணா சுந்தர் கிட்ட ஒரு தடவை நீ அவனை விரும்புறேன்னு சொல்லி உன்னை கட்டிக்க சொல்லி கேட்கவா? ஒருவேளை நான் சொன்னா அவன் அதை பத்தி யோசிச்சு பார்ப்பான்… உனக்காக இல்லனாலும் அவனுக்காக நீ அவனை விரும்பறங்கறதை நான் அவன்கிட்ட சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி  சொல்லத்தான் போறேன் சுந்தரி..” என்று பாட்டி சொல்ல அதைக்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 28 ❤️❤️💞 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 34

குறிஞ்சி மலர்.. 34 ஜேம்ஸின் அருகில் மணப்பெண்ணாய் அவன் கட்டிய தாலியை சுமந்தபடி தலை குனிந்து அமர்ந்திருந்த கோதைக்கு, கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. இப்படியொரு திருப்பம் தன் வாழ்வில் வருமென்று அவள் கனவு கூட கண்டிருக்கவில்லை. ஆனாலும் அவளும் சராசரி பெண்கள் போல கணவன், குழந்தை என ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்படாதவள் இல்லை. அவளுக்கு தன்னை முதலில் மணம் முடித்த வாகீசன் மீது, திருமணம் முடித்த புதிதில்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 34 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 33

குறிஞ்சி மலர்.. 33 ரூபவர்ஷியை வீடு முழுவதும் தேடியும் அவள் எங்குமே கிடைக்கவில்லை. அதற்குள் பட்டு வேஷ்டி சட்டை போட்டு மாப்பிள்ளை கோலத்தில் ஜேம்ஸ் கீழே இறங்கி வர தில்லையம்பலத்துக்கு பதட்டம் கூடி விட்டது. ஒரு மர்மப் புன்னகையோடு அவரையே பார்த்தபடி போய் மணமேடையில் அவன் அமர்ந்து கொள்ள, மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள் என ஐயர் உத்தரவு கொடுத்தார். முகூர்த்தத்துக்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது, ஐயர் ஏன் இப்போதே பெண்ணை அழைக்கிறார் என

அசுரனின் குறிஞ்சி மலரே.. 33 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 27 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 27 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “நான் ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..” அவன் சொன்னதை கேட்டு சுந்தரிக்கு கண்கள் ஏனோ குளமாகின.. தலையை குனிந்து அவனிடம் இருந்து தன் கண்ணீரை மறைத்து “கங்கிராஜுலேசன்ஸ் சார்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து காலி ரசகுவளையை எடுத்துக்கொண்டு உள்ளே  வேகமாக சென்றுவிட்டாள் பேதையவள்.. உள்ளே சென்று ரசக்குவளையை வைத்தவள் நேரே தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டு கண்ணீர்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 27 ❤️❤️💞 Read More »

error: Content is protected !!