
Tag:
tamil love novel
மின்சார பாவை-1
written by Competition writers
மின்சார பாவை-1
“நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா.
அவளை சில நொடிகள் சோதித்த பிறகே எடுத்தாள் வெண்ணிலா.
“ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க.
“தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா.
“பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா.
“ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் கூட மாத்திட்ட.” என்று சபரிகா, தோழியிடம் கோபப்பட.
“அது…” என்று உள் இழுத்தாள் வெண்ணிலா.
“உன் நம்பரை வாங்குறதுக்குள்ள நான் பட்டபாடு.” என்று சபரிகா புலம்ப.
எதற்காக நம்பரை மாற்றினோம் என்பது நினைவு வர, முகம் மாறியவள் தலையை உலுக்கிக் கொண்டாள். “ப்ச்! பழசெல்லாம் எதுக்கு டார்லி. நீ எப்படி இருக்க? உனக்குன்னு அடிமை ஏதாவது சிக்குச்சா? அதான் கல்யாணம் ஆகிடுச்சா.” என்று பேச்சை மாற்றினாள் வெண்ணிலா.
“இவ்வளவு நாள் நீ கோமாவுல இருந்தியா? ஒரு மெசேஜ் கூட போடாத உன்கிட்ட இதை பத்தி சொல்ற ஐடியா இல்ல? நாங்க என்ன தப்பு செய்தோம்?. இல்ல நீ தான் என்ன தப்பு செஞ்ச? இந்த காலத்துல லவ் பண்ணறது அவ்வளவு பெரிய குத்தமா . இதுக்கு போய் உன் படிப்பை பாதில நிறுத்தி பெரிய சீன் கிரியேட் பண்ணினது உன் பேமிலி மெம்பர்ஸ். அதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்? காலேஜ் விட்டு போயிட்டா நீ எங்களோட காண்டாக்ட்டையும் கட் பண்ணுவியா? அப்பக் கூட நான் வார்டனுக்குத் தெரியாமல் இரண்டு, மூனு தடவை உங்க வீட்டுக்கு வந்தேன். ஆனால் வீடு பூட்டியிருந்தது. அங்க யாருமே இல்ல
அக்கம், பக்கம் விசாரிச்சா உனக்கு கல்யாணம்னு தகவல் தான் கிடைச்சது. உன்னை எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு தெரியாமல் நாங்க தவிச்ச தவிப்பு எங்களுக்குத் தான் தெரியும்.”
“ப்ச் சரி விடுடி!பழசை எல்லாம் பேசிக்கிட்டு, பாஸ்ட் இஸ் பாஸ்ட். அதை நினைச்சுப் பார்க்கக் கூட டைம் இல்லை.”
“அது எப்படி விடமுடியும்டி. அவ்வளவுதானா நம்ம நட்பு.உனக்கு கொஞ்சம் கூட எங்க நினைப்பு இல்லைல.ஆனால் புது லைஃப்ல அடாப்ட் ஆனதுக்கு அப்புறமாவது எங்கக் கூட பேசிருக்கலாம். கஷ்டம் வரும் போது கூட இருக்கிறது தானே உண்மையான நட்பு.” என்று மனத்தாங்கலா வினவினாள் சபரிகா.
“லூசு! இதை சொல்லத் தான் இப்ப ஃபோன் பண்ணுனீயா? சரி எனக்கு வேலை இருக்கு. நான் வைக்குறேன்.” என்று வெண்ணிலா கூற.
“எருமை! வச்சுடாத. முக்கியமான விஷயம். அதுக்காகத்தான் அலையோ, அலைன்னு அலைஞ்சு திரிஞ்சு உன் நம்பரை வாங்கிருக்கேன்.” என்று படபடத்தாள் சபரிகா.
“அப்போ மேட்டருக்கு வா!” புன்னகைத்தாள் வெண்ணிலா.
அந்தப்பக்கம் வந்த தீரன், அவளது முகத்தை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே நகர்ந்தான்.
நீ எப்பவும் போல பேசி, சிரிக்கிறப்ப தான் நிம்மதியா இருக்கு. பழசெல்லாம் நினைச்சு, லைஃபை வீணாக்கிட்டியோன்னு கவலையா இருந்தேன்.”
“அப்படியா?” என்று பொருள் விளங்கா குரலில் வெண்ணிலா வினவ.
“சாரி நிலா! பழசெல்லாம் ஞாபகப்படுத்துறேனா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை பரி டார்லி. சரி நீ எதுக்கு என்னை வலை வீசி தேடுன. அதைச் சொல்லு? உனக்கு கல்யாணமா? அதுக்கு இன்வைட் பண்ண தான் கூப்பிடுறியா?”
“ஏதே! இருபத்தாறு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம இருக்க நான் என்ன நைண்டீன் கிட்ஸா? அதெல்லாம் இல்லை. ஐயம் டூ கே கிட்ஸ்யா? அதெல்லாம் ஆச்சு.” என்று மூச்சு வாங்க சபரிகா கூற.
“அப்போ எதுக்கு மேடம் என்னை வலை வீசி தேடுன?”
“ நம்ம காலேஜ்ல ரீ யூனியன்.”
“ரீ யூனியனா? ரொம்ப வருஷமான தானே எல்லோரும் மீட் பண்ண ரீயூனியன் வைப்பாங்க. நம்ம காலேஜ் முடிச்சு ஃபைவ் இயர்ஸ் கூட ஆகலையே. அதுக்குள்ள ரீயூனியனா?” என்று குழப்பத்துடன் வெண்ணிலா வினவ.
“இது நம்ம ஈ. ஸி டிபார்ட்மெண்ட் ஹெச் ஓ டி மதன் சாரோடோ ரிடையர்மெண்ட் பார்ட்டி. ஒன்லி ஈ.ஸி டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட்ஸோட மீட் அப் மட்டும் தான். ஒன்வீக் ப்ரோக்ராம் .
அந்த ஒரு வாரமும் கொடைக்கானலையே தெறிக்க விடுறோம்.” என்றாள் சபரிகா.
“நான் வரலை.” என்று தயக்கத்துடன் வெண்ணிலா கூற.
“எதுக்கு வரமாட்டேங்குறேன்னு தெரியும். யுகி அண்ணாவை நினைச்சு தானே. அவர் பாரின்ல இருக்கார்.அவர் வர மாட்டார்.” என்று குரலை தழைத்துக் கொண்டு கூறினாள் சபரிகா.
“ இல்ல பரி.இது சரிபட்டு வராது.ஸாரி பரி நான் அங்க வரமாட்டேன்”.என்று நிலா சொல்லி முடிப்பதற்குள், “ அப்ப எங்கல எப்பவுமே மீட் பண்ணமாட்டியா? அவ்வளவுதானா நம்ப நட்பு… ஓகே குட் பை அன்ட் லாஸ்ட் பை பை” என்று பொறிந்தபடி போனை வைக்க போனாள் சபரிகா.
பரி குரலில் அவர்களின் நட்பின் ஆழத்தை உணர்ந்தவள்,‘அப்போ ரீயூனியனுக்கு போனால் என்ன?’ என்று வெண்ணிலா யோசித்தாள்.
ஆனால் ஏன் தான் போனோம் என்று எண்ணி வருந்தப் போவதை அறியவில்லை.
அவளது நிம்மதியைப் பறிக்கவென்று ஏர்போர்ட்டில் வந்து இறங்கினான் யுகித்.
வெண்ணிலாவின் ஒரு சில நொடி அமைதி தாங்க முடியாத சபரிகா படபடத்து விட்டாள்.” ஹே நிலா! நம்ம பஞ்சபாண்டவர் குரூப் உனக்காக தான் காத்திட்டு இருக்கு.”
“இன்னும் அந்த குரூப்ப கலைக்கலையா?” என்று வெண்ணிலா சிரிக்க.
“ சிரிக்காதடி கோவமா வருது.”
“ஜில்! எதுக்கு இவ்வளவு கோபம்? இரு! நேர்ல பார்க்கும் போது அந்த மூக்குலே ஒரு பஞ்ச் பண்றேன்.” என்று வெண்ணிலா கூறி முடிக்கவில்லை,
“ஹூர்ரே!” என்ற சபரிகாவின் கூச்சலில் ஃபோனை பதறி தள்ளி வைத்தாள் வெண்ணிலா.
“எருமை! மெதுவா கத்து. காதே செவுடா போயிடும் போல. அப்புறம் நான் வர்றேன்னு சொல்லவே இல்லையே.” என்று புன்னகையுடன் வெண்ணிலா கூற.
“ அதான் நேர்ல பார்க்கலாம்னு சொல்லிட்டியே. அப்புறம் என்ன? முதல்ல நம்ம குரூப்ல நீ வர்ற விஷயத்தை சொல்றேன். அப்புறமா உன்னையும் அந்த குரூப்ல ஆட் பண்றேன்.” என்று படபடத்தவள், வேகமாக ஃபோனை வைத்து விட.
சபரிகாவின் ஆர்ப்பாட்டத்தை ரசித்த வெண்ணிலா புன்னகையுடன் டைனிங் டேபிளுக்கு சென்றாள்.
அங்கிருந்த மொத்தக் குடும்பமும் இவளையே பார்த்துக் கொண்டிருக்க.
“என்ன இன்னைக்கு எல்லாரும் சீக்கிரமா சாப்பிட வந்துட்டீங்க?” என்று வினவ.
“அண்ணி! நீங்க தான் .டென் மினிட்ஸ் லேட். பட்டுக்கே பசிக்க ஆரம்பிச்சிருச்சு. உங்களுக்காக தான் வெயிட்டிங்.” என்றாள் மிதுனா.
அப்போதுதான் கையில் இருந்த ஃபோனில் டைம் பார்த்த வெண்ணிலா தலையில் தட்டிக்கொண்டு, “சாரிடா பட்டு.” என்று அங்கிருந்த குட்டி தேவதையிடம் மன்னிப்பு வேண்டினாள்.
அவள் இனியா. அந்த வீட்டின் முதல் பேரக்குழந்தை. எல்லோருக்கும் செல்லம்.
அவளோ,” மா! சூப்பர்” என்று வெண்ணிலாவை நெட்டி முறித்து செல்லம் கொஞ்சினாள்.
“அடேய் பட்டு! உங்க அம்மாவை விட அத்தை தானே ப்யூட்டிஃபுல்லா இருக்கேன். அத்தைக்கு செய்ய மாட்டியா?” என்று போட்டிப் போட்டாள் மிதுனா.
“நோ! நிலாமா சூப்பர்.” என்றாள் மூன்று வயது இனியா.
“அண்ணா! பாருண்ணா… உன் பொண்ணை…” என்று அண்ணனிடம் சிபாரிசுக்கு செல்ல.
“ பட்டுக்குட்டி சொல்றது போல உன் அண்ணி முகத்துல ஏதோ ப்ரைட்னஸ் தெரியுது.” என்று தீரன் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தப்படி கூறினான்.
“என்ன மாமா சொல்றீங்க? நான் எப்பவும் போல தான் இருக்கேன்.” என்றவள் வேகமாக எழுந்து வாஷ்பேஷன் கிட்ட இருந்த கண்ணாடியில் தன் முகத்தை ஆராய,
அவளது காதருகே, “ இவ்வளவு நேரம் தேஞ்சுப் போன நிலா மாதிரியிருந்த, இப்போ என்னைப் பார்த்ததும் தான் உன் முகத்துல ஒளிவட்டம் தெரியுது. பவுர்ணமி நிலா மாதிரி தகதகன்னு மின்னுற. நீ என் மின்சார பாவை! “என்ற குரல் காதருகே ஒலிக்க …
விதிர்விதித்து திரும்பினாள்.
அங்கு யாரும் இல்லை.
தலையை உலுக்கியவள், தனது ஏமாற்றத்தையும் உதறி விட்டு, டேபிளில் அமர்ந்து, “ சாரி!” என்று விட்டு குழந்தைக்கு ஊட்டிக் கொண்டே அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.
அவளது ஃபோனில் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டுக் கொண்டே இருக்க.
“ யாருமா! மெசேஜ் போட்டுட்டே இருக்காங்க. எதுவும் முக்கியமான விஷயமா” என்று நிரஞ்சன் வினவ.
“ஒன்னுமில்லை மாமா! காலேஜ் ப்ரெண்ட்ஸ் கிட்ட இருந்து தான்.ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் என் நம்பர் கண்டுபிடிச்சு பேசுறாங்க ”
“ ஓ! அது தான் உன் முகம் ப்ரைட்டா இருக்கா?” என்று கேலி செய்ய.
“சும்மா இருங்க! நீங்களும் சின்ன புள்ளையாட்டாம் மருமகளை வம்பு இழுக்குறீங்க.” என்று அதட்டினார் யாழினி.
“ டாட்! மாம் இருக்கும் போது வாய் தொறக்கலாமா? அண்ணன் எப்படி அமைதியா இருக்கார். அவரைப் பார்த்துக் கத்துக்கோங்க.” என்று கேலி செய்தாள் மிதுனா.
தங்கையை அழுத்தமாகப் பார்த்து விட்டு, வெண்ணிலாவிடம் திரும்பிய தீரன்,”நிலா! என்ன திடீர்னு ஃப்ரெண்டஸ்ங்க கிட்ட இருந்து மெசேஜ்.” என்று புருவத்தை உயர்த்தி வினவ.
“அது வந்து… எங்க காலேஜ்ல ரீயூனியன்.” என்று சபரிகா சொன்ன விஷயத்தை பகிர்ந்துக் கொண்டாள் வெண்ணிலா.
“ஓ!” என்ற தீரன், நீ போறியா என்பது போல் பார்க்க.
“ நான் போகலாம்னு இருக்கேன்.” என்றாள் வெண்ணிலா.
அவளை ஆச்சரியமாக பார்த்தவனோ, “குட்! எப்பப் போற? எத்தனை நாள் ப்ரோக்ராம்?” என்று அவளிடம் விசாரித்தான்.
“ஓன் வீக் ப்ரோக்ராம். ஆனால் எப்போன்னு தெரியலை.”
“எப்பவா இருந்தா என்ன? நம்ம ஆஃபிஸ் தானே. லீவ் பத்தி பிரச்சனை கிடையாது. என்னைக்கு மீட்டிங்கோ அதுக்கு இரண்டு நாள் முன்னாடியே கிளம்பிடு. அப்படியே
அத்தை, மாமாவையும் பாத்துட்டு வா. அங்க போய் ரொம்ப நாளாச்சு.” என்ற தீரனைப் பார்த்து முறைத்தாள் வெண்ணிலா.
“என்ன?” என்பது போல் புருவத்தை உயர்த்தினான் தீரன்.
“அது நான் அங்க போகலை மாமா.”
“இப்போ தானே போறேன்னு சொன்ன?”
“ உங்களை எல்லாம் விட்டுட்டு போக முடியாது”
“அப்படியா ?” என்று நக்கலாக வினவினான் தீரன்.
“அதானே!” என்றாள் மிதுனா.
“ப்ச்! அங்க ரொம்ப குளிரும். நான் போகலை.”
“ப்ச்! நீ பிறந்து வளர்ந்த ஊரு கொடைக்கானல். அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று பல்லைக் கடித்தான் தீரன்.
“ பாப்பா ஏங்கிடுவா?”
“ நிலா! பாப்பாவை பத்தி கவலைப் படாதே. நான் தான் இருக்கேனே. நான் பார்த்துப்பேன். அம்மா இருக்காங்க. மிது இருக்கா… அப்புறம் என்ன?” என்று அதட்ட.
கண் கலங்க அமைதியாக இருந்தாள் வெண்ணிலா.
“கோபப்படாமல் பொறுமையா சொல்லு. அவ கேட்டுப்பா.” என்று நிரஞ்சன் சப்போர்ட்டுக்கு வர.
“அப்பா! மருமகளுக்காக சப்போர்ட்டுக்கு வர்றாதீங்க.” என்றவன், “ லுக் நிலா! ஒரு முடிவு எடுத்துட்டா அதுல ஸ்டெடியா இருக்கணும். மனசு தடுமாறக் கூடாது. நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்.” என்று கூற.
அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் வெண்ணிலா.
Episode – 07
மறுநாள் காலை விடிந்ததும், சேவல் கூவுவது போல, காலை வேளையில் அவளை போனில் அழைத்தான் ஆரண்யன்.
சொர்ணாக்கு, போன் அடித்ததும்,
“ஒரு வேளை அவனை இருக்குமோ…. சே…. சே…. போன் அடிச்சா எடுக்க கூட பயமா இருக்கு. அப்படி ஆக்கிட்டானே அந்த ஆளு. அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?, போன எடுக்காம விடுவம். எதுக்கு காலையில சனிக்கு சங்கு ஊதணும்?” என எண்ணியவள்,
இறுதியாக, முடிவு பண்ணி, போனை எடுக்காது குளித்து விட்டு வந்து தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
அவளது போன் விடாது தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் போன் ஒலி ப்பதை நிறுத்தவும்,
பெருமூச்சு ஒன்றை வெளி விட்டவள்,
“எல்லாரும் சொல்றது போல, இது தொலைபேசி இல்ல தொல்லை பேசி தான். சில நேரங்கள்ல.” என முணு முணுத்தவள்,
வேகமாக கிளம்பி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு கிளம்பும் நேரம் மீண்டும் அவளது போன் அடிக்க ஆரம்பித்தது.
அதே நம்பரிலிருந்து பதினைந்திற்கும் மேற்பட்ட மிஸ்ட் கால்கள் வந்து இருந்தது.
“இது கண்டிப்பா அந்த சாத்தானா தான் இருக்கும்.” என நினைத்தவள்,
அதனை அப்படியே வைத்து விட்டு பஸ் ஸ்டாண்ட்ற்கு சென்றாள்.
அங்கு பஸ்ற்காக காத்து இருக்கும் போது, அவளது ஃபோனில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி ஒன்று கேட்டது.
உடனே போனை எடுத்து பார்த்தாள் சொர்ணா.
அதே நம்பரில் இருந்து தான் குறுஞ்செய்தியும் வந்து இருந்தது.
“இந்த குறுஞ்செய்திய ஓபன் பண்ணிப் பார்க்கிறதும், நம்ம நிம்மதிக்கு கேடுதான்.” என எண்ணியவள்,
போனை அப்படியே வைத்திருக்க அதே நம்பரில் இருந்து வாய்ஸ் மெசேஜ் ஒன்று அதிரடியாக வந்து சேர்ந்தது.
“என்னடா இது நமக்கு வந்த சோதனை?” என எண்ணியவள் அதனையும் கண்டுகொள்ளாது பேக்கில் போனை வைத்து விட்டு நிமிர புயல் வேகத்தில் அவளின் அருகே வந்து நின்றது அவனது கார்.
காரிலிருந்து இறங்காமலே, கார்க் கண்ணாடியைத் திறந்தவன்,
அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
அவள் பக்க கார்க் கதவை திறக்க அவளுக்கு புரிந்து விட்டது.
இப்போது அவள் காரில் ஏறவில்லை என்றால் அங்கு அனைவர் முன்பாகவும் அவள் அவமானப்பட நேரிடும் என்பது.
அதனை சரியாக புரிந்து கொண்டவள் உடனடியாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவள் ஏறி அமர்ந்ததும் காரைக் கிளப்பியவன் சற்றுத் தூரம் போனதும்,
ஆள் நடமாட்டம் இல்லாத வீதியின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு,
“மேடமுக்கு நான் போன் பண்ணா…. மெசேஜ் பண்ணினா…. பார்க்க கஷ்டமாக இருக்குது. என் மேல இருந்த பயம் இல்லாம போச்சுது இல்ல. அப்படித்தானே…. அது சரி நான் உனக்கு என்ன மெசேஜ் பண்ணி இருக்கேன்னு இப்போ ஓபன் பண்ணிப் பாரு.” என அவளைப் பார்க்காது நேராக ரோட்டினைப் பார்த்தபடியே அவன் பேச,
அவளோ பயத்தில் எச்சில் விழுங்கியவள் அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க,
அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அவன்.
அந்தப் பார்வையின் அர்த்தம் “நான் சொன்னதை நீ இப்போது செய்தே ஆக வேண்டும் என்பது தான்.”
சொர்ணா அதற்கு மேலும் தயங்குவாளா என்ன?
அவசரமாக போனை எடுத்து ஓபன் பண்ணிப் பார்த்தாள்.
அதிலே, அவள் ஆசையாக வாங்கித் தொலைத்திருந்த அந்த லவ் பர்ட்ஸ்சின் சிலை தான் போட்டோவாக அனுப்பப் பட்டு இருந்தது.
அதனைப் பார்த்து விட்டு அவனை திகைத்துப் போய் பார்க்க,
“வாய்ஸ் மெசேஜ் இருக்கு தானே. அதையும் ஓபன் பண்ணிக் கேள்.” என்று சொன்னான்.
அவசரமாக அதனையும் ஓபன் பண்ணிக் கேட்க ஆரம்பித்தாள் பெண்ணவள்.
அதில், “என்ன சொர்ணா மேடம், உங்களுக்கு உங்க லவ் பர்ட்ஸ் வேணாம் போலயே. நானும் பாவம்னு கொடுக்க, வரச் சொன்னா நீங்க ஆரண்யனுக்கே டப் கொடுக்கிற அளவு பிஸி போல. சோ, இனிமேல் உங்களுக்கு அந்த சிலை இல்லை.” என அந்த வாய்ஸ் மெசேஜ்ஜில் கூறப்பட்டு இருந்தது.
அவளோ, அதனை கேட்டு விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க,
“சோ சாட்….” என கூறி விட்டு,
அடுத்த நொடி கையில் சிலையை தூக்கி காட்டிவிட்டு ஜன்னலைத் திறந்து சிலையை அப்படியே போட்டு ரோட்டில் உடைத்திருந்தான் அவன்.
அவள் விக்கித்துப் போய் அமர்ந்து இருக்க,
அவனே, “உன்னோட கண்ணு முன்னாடியே இத ஏன் செய்தன் தெரியுமா?, உனக்கு என் மேல பயம் இருக்கணும். எனக்கு கோபம் வந்தா என்ன ஆகும்னு தெரிஞ்சிருக்கணும். இது வெறும் சாம்பிள் தான். இதே மாதிரி உன்னோட வாழ்க்கையும் நொறுங்கிப் போகாம இருக்கிறது உன்னோட கையில தான் இருக்கு. ஒரு நாள் இருக்கு. ஒழுங்கா, நான் சொன்ன படி என்னோட கம்பெனியில வந்து ஜாயின் பண்ணுறாய். “ என கூறியவன்,
“கெட் அவுட்.” என கத்தினான்.
அவனது செய்கையில் உண்மையில் ஆடித்தான் போனாள்அவள்.
அவனது மரியாதை இல்லாத பேச்சு, அவமானப் படுத்தும் விதம், அவளை இழிவாக நடத்தும் விதம் எல்லாமே அவளுக்குள் பிரளயம் ஒன்றை உண்டாக்கியது.
ஆனாலும் வெளியே அதனைக் காட்டாது, கீழே இறங்கியவள்,
விலகி நிற்க, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு காரை கிளப்பிக் கொண்டு சென்றான் அவன்.
அவன் போனதும், அங்கு உடைந்து சிதறிப் போய் இருந்த சிலையைக் கண்டவளுக்கு கண்ணீர் துளிர்த்தது.
கண்களை துடைத்து விட்டு, அந்த சிலையின் சிதறிய பாகங்களை எடுத்து உடைந்து போன மனதுடன், ஓரமாக போட்டவள் அங்கிருந்து ஆட்டோ ஒன்றை பிடித்துக் கொண்டு வேலையகம் நோக்கி பயணித்தாள்.
அவளது வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கிறது என அவளுக்கே புரியவில்லை.
ஆனால், அவனது இடத்தில் மட்டும் வேலை செய்வது இல்லை என திடமாக முடிவு எடுத்து இருந்தாள் அவள்.
அடுத்த நாளும் தன் பாட்டில் ஓடிப் போக, அந்த நாள் இரவு அவளுக்கு மீண்டும் அவனிடம் இருந்து ரிமைண்டர் என போட்டு ஒரு மெசேஜ் வந்து இருந்தது.
அதில், “மறு நாள் காலை அவனது ஆபீஸ்ற்கு அவள் வர வேண்டும் எனவும், இல்லை எனில் மதியம், அவளாகவே அவனை சந்திக்க செய்யும் படி செய்வேன்.” என அனுப்பி இருந்தான்.
அந்த மெசேஜ்ஜை படித்தவளுக்கு, உள்ளுக்குள் திக்கென இருந்தாலும், எதுவும் ரிப்ளை அனுப்பாது, அவள் அமைதியாக உறங்கி விட்டாள்.
ஆனால் ஆரண்யனோ, அதற்கு நேர் எதிர் மாறாக, அவள் மெசேஜ் அனுப்பியும் ரிப்ளை பண்ணாது இருப்பதைக் கண்டு, மேலும் கடுப்பாகிப் போனவன்,
“உனக்கு அவ்வளவு திமிர் ஏறிப் போச்சுது இல்ல. நாளையோட எல்லாத்தையும் அடக்குறேன். உன்ன என் காலில விழுந்து கெஞ்ச வைக்கிறேன். அப்போ தெரியும் இந்த ஆரண்யன் பத்தி.” என பல்லைக் கடித்தவன்,
அப்படியே கோபத்துடன் உறங்கிப் போனான்.
மறு நாள், சொர்ணா எந்த வித பதட்டமும் இன்றி, வழக்கம் போல வலைக்கு சென்றாள்.
அங்கு எதுவித உறுத்தலும் இன்றி வேலையும் செய்தாள்.
ஆனால் எல்லாம் மதிய நேரம் வரை மட்டும் தான்.
மதிய நேரம் சாப்பிட சென்றவள், சாப்பிட்டு விட்டு அருணாவுடன் பேசியபடி அவள் வேலை செய்யும் தளத்திற்கு லிப்ட்டில் ஏற,
அங்கு இருந்தவர்கள், அனைவரும்,
“என்ன திடீர்னு மீட்டிங்ணு கால் பண்ணி இருக்காங்க. என்ன விஷயமா இருக்கும்?, எல்லாரும் பரபரப்பா வேற இருக்காங்க.” என தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டு இருக்க,
காரணமே இல்லாமல் சொர்ணாவின் மனது தட தடக்க ஆரம்பித்தது.
“என்னவோ…. நடக்க கூடாதாது ஏதோ ஒன்று நடக்கப் போவது.” போன்ற உணர்வு அவளுக்குள்.
அதே எண்ணத்துடன், தனது
தளத்திற்கு வந்து சேர்ந்தவளுக்கு, அடுத்த நொடி மீட்டிங்கிற்கு வர சொல்லி அழைப்பு வர,
சொர்ணாவோ, “என்ன அருணா சடனா மீட்டிங் ஹால் வரட்டாம். அதுவும் எல்லா டிபார்ட்மென்ட்டும் சேர்த்து…. என்னவா இருக்கும்?, பிளான் பண்ணின ஸ்செடுல் மீட்டிங் மாதிரி இல்லையே.” என கூற,
அருணாவும், “விடு சொர்ணா. இது ஏதும் சும்மா டார்கெட் அச்சீவ் பண்றதுக்கான மீட்டிங்கா இருக்கும். வா போய்ட்டு வருவம். வழமை யானது தானே. என்ன இன்னைக்கு கொஞ்சம் டைம் வித்தியாசம் அவ்வளவு தான்.” என கூறி அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.
அங்கு ஏற்கனவே வேலை செய்யும் அனைவரும் கூடி இருந்தனர். இருவரும் போய் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர்.
“மீட்டிங் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பம் ஆகும்.” என கூறப்பட,
சொர்ணாவும் அங்கு நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
அங்கு அந்த சாப்ட்வேர் கம்பனியின், மேனேஜ்ஜிங் டைரக்டர் உட்பட அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து நின்று,
“ஹாய் கைஸ். ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் உங்க எல்லாரையும் இங்க கூப்பிட்டு இருக்கம். அது என்னன்னா…. இன்னையில இருந்து இந்த சாப்ட்வேர் நிறுவனம் எங்க பொறுப்பு கிடையாது. எங்களோட எல்லா பங்குகளையும் நாங்க வேற ஒருத்தருக்கு கொடுக்கிறதா இருக்கம். இனி மேல் அவர் தான் இந்த நிறுவனத்தோட ஷேர் மென். ஷேர் ஹோல்டர் எல்லாம். நிறுவன மொத்தப் பங்குகளும், அவரோட பேருக்கு மாத்தப்படுது. அவரே விரும்பி வாங்கியும் இருக்கார். எங்கள விட அவர் தான் இந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபர். அவருக்கு இந்த நிறுவனத்தை கொடுக்கிறதுல எங்களுக்கு பெருமை தான்.”
“அவர் வேற யாரும் இல்ல.தி பேமஸ் பிசினஸ் மேன், சாப்ட்வேர் பிஸ்னஸ்ல கிங் மேக்கர்னு பேர் வாங்கிய மிஸ்டர் ஆரண்யன்.” என கூற,
சொர்ணாவோ, “என்னது….” எனஅதிர்ந்து போனாள்.
அதே நேரம் அவளது போனுக்கு.
“என்கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரம் யாரும் தப்ப முடியாது.” என மெசேஜ் வந்தது.
அதனை படித்து விட்டு திகைத்துப் போய் நிமிர்ந்து பார்க்க, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு நிமிர்ந்த நடை உடனும், சிறு புன்னகை உடனும் அந்த இடத்திற்குள் நுழைந்தான் ஆரண்யன்.
வந்தவனின் பார்வை அனைவரையும் ஒரு கணம் கூர்ந்து பார்த்தது.
அதிலும் சொர்ணா மீது அழுத்தமாக படிந்தது.
ஆனால் அது யாருக்கும் தெரியாத அளவு கூலிங் கிளாஸ் போட்டு மறைத்து இருந்தான் அவன்.
அங்கு இருந்த இளம் பெண்களுக்கு அவனை இனி தினமும் சைட் அடிக்கலாம் என்ற சந்தோஷம்.
இளம் ஆண்களுக்கோ, இனி பொண்ணுங்க நம்ம பக்கம் திரும்பவே மாட்டாங்க என்கிற ஆதங்கம்.
அவனைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவனின் ரூல்ஸ்ற்கு கீழே எப்படி வேலை செய்வது என்கிற எண்ணம்.
சிலருக்கும் அவனது ஆளுமையைக் கண்டு பிரமிப்பு.
சிலருக்கு அவனின் மீது பயம்…. இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு உணர்வுகளில் அமர்ந்து இருக்க,
“இவன் எதுக்கு இப்போ இங்க வந்து இருக்கான்?, எதுக்காக இந்த கம்பெனிய வாங்கி இருக்கான்?, ஒரு வேள…. இது என்ன சிக்க வைக்க எடுக்கிற ப்ளானா…. அப்படி இல்லன்னா ஏன் இந்த மெசேஜ்?…. ஒரு மனுஷன் இவ்வளவு தூரம் பழி வாங்க யோசிக்க முடியுமா?, நமக்கு சோதனைக் காலம் ஆரம்பம் போல.” என பலதும் எண்ணிய படி நொந்து போய் அமர்ந்து இருந்தாள் சொர்ணா.
அதே நேரம், அவளது வெளிறிய முகத்தைப் பார்த்து விட்டு,
தனக்குள், “நான் நினைச்சத முடிக்க எந்த எல்லைக்கும் போக கூடியவன் நான். என் கிட்டயே நீ எதிர்ப்பு காட்டு றீயா?, இனி பார்க்கிறன். எப்படி என்கிட்ட இருந்து நீ தப்பிக்கிறாய்னு?” என வன்மத்துடன் எண்ணிக் கொண்டான் ஆரண்யன்.
நம்ம ஹீரோ ஒரு வன்ம குடோன் மக்காஸ். அவன ஒண்ணும் செய்ய முடியாது போலயே.
அடுத்து என்ன நடக்கும்?
சொர்ணா எங்கணம் அவன் பார்வையில் இருந்து தப்பிக் கொள்வாள்?
ஆரண்யன் சொர்ணாக்கு வைத்திருக்கும் தண்டனை என்ன?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவை கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி திங்கள் வரும்…😍😍😍 லேட் எபிக்கு மன்னிச்சு மக்காஸ்….
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….
Episode – 06
சொர்ணாவால் அவர்களின் பிடியில் இருந்து வெளியே வர முடியவில்லை.
முடிந்த வரையும் முயன்று பார்த்து விட்டு,
“விடுங்க…. ப்ளீஸ், என்ன விடுங்க….” என கத்த ஆரம்பித்தாள் அவள்.
அவர்களோ, அவளை இழுத்து வாகனம் உள்ளே தள்ள எத்தனிக்க,
பதிலுக்கு அவர்களை முழு பலத்துடன் தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள் பெண்ணவள்.
அந்தக் கயவர்களோ, இருந்த கோபத்தில், அவளது காலை இடறி விழ வைத்தனர்.
சொர்ணாக்கு விழுந்த வேகத்திற்கு எழுந்து ஓட, கால்கள் ஒத்துழைக்காத காரணத்தினால், கால்களைப் பிடித்துக்கொண்டு மெதுவாக எழும்ப,
மீண்டும் அந்தக் கூடடம் அவளை சுற்றிக் கொண்டது,
“என்ன திமிரடி உனக்கு?, எங்களயே அடிச்சிட்டு ஓடுறாய் என்ன?, உன்ன….” என அவளின் கையைப் பிடித்து முறுக்க,
புயல் வேகத்தில் அவர்களுக்கு அருகில் வந்து நின்றது ஒரு கார்.
அடுத்த நொடி காரில் இருந்து இறங்கினான் ஆரண்யன்.
அவனது கண்களில் கோப அனல் வீச, இருந்த கோபத்துக்கு அங்கு இருந்தவர் களை அடித்து நொறுக்கி ஆரம்பித்தான் அவன்.
அவனின் வேகத்திற்கும், ஒவ்வொரு அடிக்கும், தாக்குப் பிடிக்க முடியாது திணறிப் போயினர் அங்கு இருந்தவர்கள்.
முடிந்த வரையிலும், அவனிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர் அவர்கள்.
ஒவ்வொரு பக்கம் ஆளுக்கு ஒருவராய், பாய்ந்து தப்பிக்க முயல,
ஆரண்யனோ, விடாது துரத்தித் துரத்தி அடித்தவன்,
அவர்கள் உருண்டு புரண்டு “சார்…. சாரி சார்…. மன்னிச்சிடுங்க சார். இனி மேல் இந்தப் பக்கம் வர மாட்டம். தெரியாம வந்திட்டம்.” என கெஞ்சிக் கேட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அங்கிருந்து ஓடிச் சென்றனர்.
ஆரண்யனும், அவர்களை மிரட்டி அனுப்பி வைத்தவன்,
அவர்கள் போனதும் அங்கே வலியில் கையை உதறிக் கொண்டு, நின்று இருந்த சொர்ணாவை ஒரு பார்வை பார்த்தவாறு,
“சரியான இம்சை.”என முணு முணுத்தான்.
“ம்ம்ம்ம்…. கிளம்பு, உன்ன நானே ட்ரோப் பண்ணிட்டுப் போறேன்.” என பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவன்,
அவள் அப்படியே நிற்கவும், “இங்க பாரு எனக்கு பொறுமை ரொம்ப ரொம்பக் கம்மி. இப்போ நீ மட்டும் வரலன்னா…. நான் என் பாட்டு க்கு போய்க் கிட்டே இருப்பன். அப்புறம் உன்னோட பாதுகாப்பு உன் கையில.” என அவன் கூறிவிட்டு நகர,
அவன் ஒருவனின் வன்மம் மட்டும் தான், இவ்வளவும் நடக்க காரணம் என எண்ணிப் பார்த்தவளுக்கு, உள்ளுக்குள் அத்துணை ஆதங்கம் உண்டானது.
ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள், அவளை நரகத்தின் விளிம்புக் கே அழைத்துக் கொண்டு சென்று வந்து விட்டான் அவன்.
அவனிடமே எப்படி உதவி கேட்பது என ஒரு கேள்வி மனதிற்குள் எழுந்தாலும்,
அவளுக்கும் இப்போதைக்கு வேறு வழி இல்லையே. அந்த இரவு வேளையில் அவளது மானத்திற்கு யார் உத்தரவாதம் தருவார்?
எதிரில் நிற்பவன் எதிரியாகவே இருந்தாலும், அவனால் தனது கற்பிற்கு எந்த ஆபத்தும் வராது என உறுதியாக நம்பிய காரணத்தினால் சொர்ணாவும், அமைதியாக அவனது காரில் சென்று ஏறி அமர,
தலையைக் கோதிக் கொண்டு, தானும் ஏறிக் கொண்டவன், புயல் வேகத்தில் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
இருவர் இடத்திலும் மௌனம் மட்டும் தான் பேசும் மொழியாக இருந்தது.
இடையில் அவளை திரும்பிப் பார்த்தவன், அவள் கண் மூடி அமர்ந்து இருக்கவும்,
ஒரு நொடி, பிரேக்கை அழுத்தமாக அழுத்த கார் குலுங்கிப் பின் பழைய நிலைக்கு வந்தது.
அந்த ஒரு நொடியில் திடுக்கிட்டு அவள் கண் விழித்து தன்னைத் தானே சுதாரிக்கும் முன்பாக,
சீட் பெல்ட் போடாமல் இருந்ததன் விளைவாக, தடுமாறி பேலன்ஸ் இல்லாமல் அதிரடியாக முன்னுக்கு சென்று பின்னுக்கு வந்தாள் அவள்.
அவனோ, அவளது செய்கையில் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டவன்,
“என்னாச்சு…. நானும் ரோட கவனிக்கல. அதான் பேலன்ஸ் இல்லாம போச்சுது.” என சீரியசாக கூறும் தொனியில் கிண்டல் செய்ய,
அவன் வேணும் என்றே செய்தான் என தெரிந்தும், பல்லைக் கடித்து அமைதி காத்தவள்,
வேறு புறம் பார்க்க, ஆரண்யனோ,
“உன்ன பழி வாங்கணும்னு எல்லாம் செய்ற நானே கடைசில உன்ன காப்பாத்துற நிலை வந்துடிச்சு. அத தான் என்னால தாங்க முடியல.” என கூறியவன், ஸ்டியரிங் கில் அடிக்க,
அவனது மன நிலையை எண்ணி அழுவதா?, சிரிப்பதா? என புரியாது பெரு மூச்சுடன் அமர்ந்து இருந்தாள் சொர்ணா.
அவளது வீடு இருக்கும் தெரு முனைக்கு அவள் வழி சொல்லும் முன்பாக காரை ஓட்டியவனைக் கண்டு புருவம் சுருக்கியவள்,
அவனைக் கேள்வியாக பார்க்க,
அவளைப் பார்க்காது வண்டியை ஓட்டியபடியே, “என்ன இவனுக்கு எப்படி என் வீட்டு அட்ரஸ் தெரியும்னு பார்க்கிறீங்களோ மேடம்?” என கேட்க,
அவள் உதட்டைக் கடித்தபடி முகத்தை திருப்ப,
“ஒருத்தர் என் வட்டத்துக்குள்ள வர்றாங்க ன்னா….அவங்கள பத்தின முழு டீடெயில்ஸ்சும் என்னோட கையில இருக்கும். அதுவும் மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் இல்லையா. சோ, கும்பகோணம் வரைக்கும் போய் என்னோட டீம் உன்னப் பத்தி துப்புத் துலக்கி இருக்காங்க. உனக்கு கூட உன்னப் பத்தி சில விஷயங்கள் தெரியாம இருக்கும். ஆனா எனக்கு அத்தனை விஷயமும் அத்துப் படி.” என கூறிய படி,
அவள் இருக்கும் தெருவில் அவளை இறக்கி விட்டவன்,
அவள் இறங்கி, அவனைப் பார்க்காது “நன்றி சார்.” என கூறவும்,
“உன்னோட நன்றி எனக்கு தேவையே இல்ல. என்னோட கம்பெனிக்கு முன்னால எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது. அது எனக்குத் தான் தலை குனிவு. ஏற்கனவே உன்னால வந்த தலை குனிவுக்கு, நான் இன்னும் மீடியா முன்னாடி பதில் சொல்லிக் கொண்டு இருக்கன். இதில இதுவும் வெளில வந்தா எனக்கு தான் இன்னும் பிரச்சனை. அந்த ஒரு காரணத்துக்காக தான் உன்ன காப்பாத்தினன். அத புரிஞ்சுக்கோ. அத விட உன் மேல எனக்கு எந்த விதமான பரிதாபமும் இல்லை. பாசமும் இல்லை.” என கூற,
அதற்கு மேலும் அவனிடம் எதுவும் பேச முடியாது அங்கிருந்து விலக எத்தனித்தவளை,
“ஹலோ மேடம் ஒரு நிமிஷம்.” என சொடக்கிட்டவன்,
“நான் சொன்ன மாதிரி, இரண்டு நாளுல ஒழுங்கா வந்து வேலையில சேரப் பார். இல்லன்னா உனக்கு தான் சேதாரம் இன்னும் அதிகம் ஆகும். ஏற்கனவே உன் மேல நான் கொலை வெறில இருக்கன். புரிஞ்சு நடந்துக்கோ. எனக்கு வேண்டியது நடக்க, நான் எந்த எல்லைக்கும் போவன்.” என உறுமியவன் மீண்டும் புயல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு போக,
“ஏண்டா இவன் கண்ணில பட் டோம்?” என நொந்து போய் காரை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தாள் சொர்ணா.
அவள் வீட்டு வாசலை நெருங்கும் போதே, அவளுக்காக காத்துக் கொண்டு இருந்த அவளது தந்தை,
“அம்மாடி சொர்ணா, என்னாச்சும்மா, ஏன் இவ்வளவு நேரம்?, உனக்கு நான் எத்தன தடவ போன் பண்ணேன்?, ஏன்மா முகம் ஒரு மாதிரி இருக்கு?, நீ நல்லாத் தானே இருக்காய்?, வழியில யாரும் ஏதும் சொன்னாங்களா?, போன இடத்தில ஏதும் பிரச்சனையா?….” என தொடர் கேள்விகள் கேட்டவர்,
மகளின் கை சற்று வீங்கி இருப்பதை அப்போது தான் கண்டு கொண்டார்.
உடனே பதட்டத்துடன் “அம்மாடி, சொர்ணா இதென்ன கையில இப்படி ஒரு வீக்கம்?, விரல் அடையாளமும் சேர்ந்து இருக்கு போல….” என கூறி அவளது கையை திருப்பிப் பார்க்க,
“ஸ்ஸ்ஸ்ஸ்….”என கூறிய வாறு வலியில் கையை உதறி யவள்,
“இல்லப்பா…. அது கோவில்ல ஒருத்தங்க இடிச்சதுல சுவரோட போய் மோதிட்டன் அவ்வளவு தான். நீங்க பயப்பிடுற மாதிரி ஒண்ணும் இல்லப்பா. அவ கூட பேசிக் கொண்டு இருந்ததுல கொஞ்சம் டைம் ஆகிருச்சு. போன் கொஞ்சம் பிரச்சனை அப்பா. என்னன்னு பார்க்கணும். நீங்க கால் பண்ணினது எனக்கு வரல.” என தந்தையை மேலும் யோசிக்க விடாது கட கடவென கூறியவள், அவரின் முகத்தில் இன்னும் தெளிவு இல்லாததைக் கண்டு,
“அப்பா இங்க பாருங்க, கோவில்ல இன்னைக்கு கூட் டமே இல்லை. எனக்கு நல்ல தரிசனம் கிடைச்சுது. உங்களுக்காக ஸ்பெஷலா வேண்டிக் கிட்டன். இந்தாங்க ப்பா திருநீறு.” என கூறியவள்,
கோவிலில் நடந்த பூஜைகள், அம்மனுக்கு பாடிய ஸ்தோத்திரம், என அனைத்தையும் கூற,
அவளின் தந்தையும் கோவில் பற்றிய கதைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தந்தையை சமாதானம் செய்து விட்டு, அறைக்குள் வந்தவளுக்கு அப்போது தான், ஆசையாக வாங்கிய சிலையின் நினைவு வந்தது.
“அச்சோ ஆசையா வாங்கின சிலை ஆச்சே. எங்க விழுந்து இருக்கும்…. ரோட்ல விழுந்த மாதிரி இல்லை. ஒரு வேள அந்த ஆளோட காரில விழுந்து இருக்குமோ…. சே…. அமைதியா இருக்கலாம்னு கோவிலுக்கு போனன். ஆனா இருந்த நிம்மதியும் போச்சு. எல்லாம் என்னோட விதி.” என முணு முணுத்துக் கொண்டு தூங்க சென்றவளுக்கு மனதில் பாரம் ஏறிப் போனது தான் உண்மை.
அதே நேரம் அவள் ஆசைப்பட்ட அதே சிலையை கையில் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.
“சிலை அழகா தான் இருக்கு. லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…. சே…. புல்ஷீட் இந்த வசனங்கள் எல்லாம் எங்க இருந்து கண்டு பிடிக்கிறாங்களோ தெரியல. இடியட்ஸ், இந்த மாதிரி செண்டிமெண்ட் பூல்ஸ் இருக்கிறதால தான் இன்னும் நிறைய காதல் தோல்வி, தற்கொலை நடக்குது. என்னவோ….” என உதட்டை வளைத்தவன்,
“இந்த சிலை கண்டிப்பா எனக்கு யூஸ் ஆகும். பார்த்துக்கலாம்.” என கூறிக் கொண்டு,
அந்த சிலையை பத்திரமாக வைத்துக் கொண்டான்.
அவனைப் பொறுத்த வரைக்கும் கையில் உள்ள உயிர் அற்ற சிலையும், நேரில் உள்ள உயிரான பெண் சொர்ணாவும் ஒன்று தான்.
பொம்மைகள் போல உருட்டி விளையாடலாம் என எண்ணத்தோடு இறுமாப்புக் கொண்டு முடிவுகளை எதைப் பற்றியும் யோசிக்காது எடுக்க ஆரம்பித்தான் அவன்.
அவனது எண்ணங்களின் விளைவு என்னவாக இருக்கும்?
சொர்ணா அவன் சொன்னதற்கு சம்மதிப்பாளா?, இல்லையா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவை கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍 லேட் எபிக்கு மன்னிச்சு மக்காஸ்….
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….
கொஞ்சம் வேலை மக்காஸ் அதான் எபி ரொம்ப லேட்.. இனி எபிகள் ஒழுங்காக வரும்.
.
Episode – 05
வெளியில் வந்தவள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காது, குனிந்த படியே லிப்ட்ற்குள் சென்று ஏறிக் கொண்டாள்.
லிப்ட் கதவு மூடியதும், முகத்தை மூடிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,
முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, லிப்ட் திறக்க வெளியே வந்தவள்,
வேகமாக அந்தக் கட்டிடத்தில் இருந்தும் வெளியேறினாள்.
“இனி மேல் இந்தப் பக்கம் வரவே கூடாது.” என எண்ணிய படி, நடந்து சென்றவளுக்கு மனதில் பாரம் ஏறிப் போனது.
நேராக வீட்டுக்கு சென்றவளுக்கு, நேரடியாக தந்தையை எதிர் கொள்ளவும் முடியவில்லை.
அவரிடம் பேசினால் கண்டிப்பாக உடைந்து அழுது விடுவோம் என கண்டிப்பாக அவளுக்கு தெரியும்.
ஆகவே, அமைதியாக அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.
அவன் பேசிய பேச்சுக்களின் தாக்கம், இன்னும் அவளுக்குள் புயலை ஏற்படுத்திக் கொண்டு தான் இருந்தது.
“என்னவெல்லாம் பேசி விட்டான் அவன். எனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்டு அசிங்கப்படுத்திட்டான். நேரடியா சவால் வேற விட்டு இருக்கான். இன்னும் என்ன எல்லாம் நடக்கப் போகுதோ. அவனோட அந்தக் கண்ணுல இருக்கிற வெறி சாதாரண மானது இல்ல. என்ன பண்ணலாம்?, பேசாம அப்பாவ கூட்டிக் கொண்டு இங்க இருந்து போயிடலாமா?, ஆனா எங்க போறது?, இனி புதுசா வேற இடம் மாறுறதுன்னா அதுக்கு வேலையும் தேடணுமே. எல்லாம் குழப்பமாவே இருக்கே. சே…. அந்த ஒரு நாள் வாழ்க்கையில வராமல் போய் இருக்கலாம்னு நினைக்கிற அளவுக்கு என் நிலைமை மாறிப் போச்சு கடவுளே….” என பலதும் யோசித்தவள்,
கடைசியில், “அடுத்த கிழமை முழுதும் எதுக்கும் அமைதியா இருந்து பார்ப்பம். அவன் ஒண்ணும் பண்ணலன்னா ஜாப்ப தொடர்ந்து செய்வம். இல்லன்னா, வேற இடம் மாறிப் போகலாம்.” என முடிவு எடுத்துவள்,
இயன்ற வரையும், இயல்பாக இருக்க முயன்றாள்.
தந்தைக்கு தன் மீது கொஞ்சம் கூட சந்தேகம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் அவள்.
“அப்படி சிறிதாக ஏதும் தெரிய வந்தால் கூட அவர் நிறைய யோசிப்பதோடு, அவளையும் அழைத்துக் கொண்டு உடனடியாக ஊருக்கு பஸ் ஏறி விடுவார். அதன் பிறகு அவரை தடுக்க முடியாது.” என எண்ணியவள்,
கவனமாக தனது உணர்வுகளை வெளியே காட்டாது மறைத்துக் கொண்டு, தந்தையுடன் வழக்கம் போல சந்தோஷமாக நேரம் செலவழிக்க ஆரம்பித்தாள்.
அடுத்தடுத்த நாட்கள், எந்த விதமான பிரச்சனைகளும் இன்றி நார்மலாக கடந்து போனது.
அந்த வார இறுதி நாளில் கோவிலுக்கு செல்லலாம் என எண்ணியவள்,
மாலை நேரம் தந்தையிடம் சொல்லிக் கொண்டு, அருகில் இருந்த அம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றாள்.
அங்கு சென்று மனம் உருகி, “எனக்கு காசு பணம் நிறைய வேணும்னு இல்ல தாயே, மன நிம்மதி தான் வேணும் , என்னோட அப்பாவ நான் நல்லாப் பார்த்துக்கணும். நான் யாருக்கும் வேணும்னு தீங்கு செய்தது இல்லை. தெரியாம ஏதும் பண்ணி இருந்தா மன்னிச்சிடுங்க தாயே.” என கண்ணை மூடிக்கொண்டு வேண்டுதல் வைத்தாள்.
அவளின் வேண்டுதலைக் கேட்ட அம்மனோ,
“என்ன செய்ய சொர்ணா, உனக்கு இனி கொஞ்சம் கஷ்ட காலம் தான். அத நீ தாண்டியே ஆகணும். உனக்கு இன்னும் நிறைய சோதனைகள் காத்து இருக்கு.” என கூறிக் கொண்டார்.
கோவிலில் தரிசனம் முடித்தவள் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து விட்டு,
நேரத்தைப் பார்த்துக் கொண்டே வெளியே வந்து
, அங்குள்ள கடைகளைப் பார்த்தபடி நடந்தாள்.
அப்போது தான் அவளது கண்ணுக்கு அழகான ஜோடி லவ் பேர்ட்ஸ்சின் சிலை கண்களில் பட்டது.
அந்த சிலை குட்டியாக இருந்தாலும், அதில் இருந்த வசனம் தான் அவளை மேலும் கவர்ந்தது.
“லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்.” என எழுதப் பட்டு இருந்தது.
ஏனோ சொர்ணாவின் மனதை அந்த சிலை கவர,
உடனே ஆசையுடன் அதனை வாங்கிக் கொண்டு நடந்தவள்,
அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது.
அந்த டிரைவர், “மேடம் எங்க போகணும்?” என்று கேட்க,
சொர்ணாவும், “நல்ல காலம் ஆட்டோ பிடிக்கணும்னு யோசிக்கும் போதே வந்துடிச்சு.” என எண்ணிக் கொண்டு,
தான் தங்கி இருக்கும் இடத்தின் பெயரை சொல்லி விட்டு, ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.
ஆட்டோ எடுத்த உடனே வேகமாக செல்ல ஆரம்பித்தது.
அதே நேரம் அவள் சொன்ன பாதையை விடுத்து, வேறு பாதையிலும் செல்ல, பயந்து போனவள்,
“ஹலோ, இது நான் சொன்ன ரூட் இல்லையே. நீங்க போற பாதை பிழை. முதல்ல வண்டிய நிறுத்துங்க.” என பதட்டமாக சொன்னாள் சொர்ணா.
ஆனால் ஆட்டோக் காரனோ, முன்பை விட ஆட்டோவை வேகமாக செலுத்தினானே தவிர எந்தப் பதிலும் கூறவில்லை.
சொர்ணாவோ, பயத்தில் வியர்த்து ஒழுக,
“ஹலோ…. ஹலோ…. நிறுத்துங்க…. நிறுத்துங்க…. ஏன் இப்படி வேகமா ஓட்டுறீங்க. யாரு நீங்க?, என்ன எங்க கூட்டிக் கொண்டு போறீங்க?, இப்போ ஒழுங்கா நீங்க நிறுத்தல, நான் போலீஸ்ற்கு போன் பண்ணுவன், இல்லன்னா வண்டில இருந்து குதிச்சிடுவன்.” என கத்தினாள் சொர்ணா.
அவளுக்கு என்ன செய்வது எனவும் புரியவில்லை.
அந்த ஆட்டோக் காரனோ, ஆட்டோவை ஓட்டிக் கொண்டே, ரிங் பண்ணிய தனது கை பேசியை எடுத்துப் பார்த்தவன்,
“அம்மா இது உங்களுக்கு வந்த போன் தான்மா. தயவு செய்து பேசுங்க.” என கூறி, போனை கொடுக்க,
“எனக்கா…. யாரு?, இந்த நேரத்தில எனக்கு எதுக்கு உங்க போன்…. முதல்ல நீங்க வண்டிய நிறுத்துங்க.” என சற்று அழுத்தம் கலந்த குரலில் கேட்டவள்,
ஆட்டோக் காரன் வாய் திறக்காது, போனை நீட்டியபடி ஓட்டவும்,
“சே….” என்ற படி, வேறு வழி இன்றி போனை வாங்கி காதில் வைத்து,
“ஹலோ யாருங்க நீங்க?….” சற்று எரிச்சலான குரலில் கேட்டாள்.
மறு புறம், பதில் எதுவும் இல்லாது போகவே,
“ஹலோ…. ஹலோ…. லைன்ல இருக்கீங்களா இல்லையா?, நேரம், காலம் புரியாம தொல்லை பண்ணிக் கிட்டு….” என கூற,
மறுபுறத்தில் இருந்து, “ம்க்கும்….” என்றகேலி குரலுடன் சிரிப்பு சத்தம் ஒன்று கேட்டது.
அந்த சிரிப்பு சத்தமே சொன்னது எதிரில் இருக்கும் அவன் யார் என?
“நீ…. நீங்க….மிஸ்டர் ஆரண் யன்….” என சொர்ணா தடுமாற,
“என்ன தடுமாற்றம் மேடம்?, சாட்சாத் நானே தான். அப்புறம் என்ன சொன்னீங்க நேரம் காலம் இல்லாமலா…. ஹா…. ஹா…. எல்லாம் நேரம் காலம் பார்த்து தான் நாங்க நடக்கிறம்.”
“சார்…. இப்போ எதுக்கு?, அப்போ இந்த ஆட்டோ டிரைவர்…. இது எல்லாம் உங்க செட் அ ப் தானா?”
“யெஸ், எல்லாத்துக்கும் காரணம் நானே…. சரி உன்னோட கதைக்க எனக்கு நேரம் இல்ல. எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நேர்ல வாங்க மேடம் பேசிக்கலாம்.” என கூறி விட்டு வைத்தவனை என்ன செய்வது எனப் புரியாது கண் கலங்கிப் போனாள் சொர்ணா.
அவள் நேரத்துக்கு வீட்டுக்கு போகவில்லை என்றால் தந்தை பயந்து விடுவார். அதோடு, கோவிலுக்கும் தேடி வந்து விடுவார். வயதான காலத்தில் அவரை அலைய வைக்க அவள் விரும்ப வில்லை.
அதே நேரம் என்ன காரணம் தந்தையிடம் சொல்வது. அவரிடம் பொய் பேசாதவள் இப்போது பொய் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப் பட்டு இருக்கிறாள்.
எல்லாம் அவன் ஒருவனால் தான் என எண்ணியவள், தந்தைக்கு போன் போட்டு,
“அப்பா, கோவிலுக்கு வந்த இடத்தில என்னோட ஸ்கூல் பிரன்ட பார்த்தன் அப்பா. அவ என்னை அவளோட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண கூப்பிடுறா. எனக்கு என்ன பண்ண தெரியல அப்பா. நீங்க என்ன சொல்றீங்க?” என்று பொய் என தெரிந்தும் கேட்க,
“சரியான வெகுளிம்மா நீ. இதுக்கெல்லாம் போய் என்கிட்ட பெர்மிஸ்ஸன் கேட்கணுமா என்ன?, உனக்கு இருபத்து நான்கு வயசு ஆகுது. இன்னும் அப்பா கிட்ட கேட்டு எல்லாம் செய்யனும்னு நினைக்கிறாய் பார். உன்ன மாதிரி பொண்ணு கிடைக்க நான் கொடுத்து வைச்சு இருக்கணும். நீ போய்ட்டு வாம்மா. ஒண்ணும் அவசரம் இல்லை. என்ன ஒண்ணு கவனமா போய்ட்டு வாம்மா அது மட்டும் தான் மா.” என கூறி விட்டு வைத்தார் அவளின் தந்தை.
தந்தையின் பேச்சில் சொர்ணாக்கு இன்னும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டு போனது.
தேவை இல்லாமல், தந்தையிடம் பொய் சொல்கிறோமே என எண்ணி நொந்து போனாள் பெண்ணவள்.
அதன் பிறகு அவள் ஆட்டோக் காரனிடம் எதுவும் கேட்கவும் இல்லை. அவனும் எதுவும் பேசவும் இல்லை.
சரியாக, ஆரண்யனின் சாப்ட்வேர் சோலுஷனுக்கு முன்னாக ஆட்டோவை நிறுத்தியவன்,
அவள் இறங்காது இருக்கவும், “அம்மா, எனக்கு சொன்னத தான் நான் செய்றேன் தயவு செய்து இறங்குங்க. இல்லன்னா எனக்கு தான்மா பிரச்சனை. என்னோட பிழைப் பே ஆட்டோவ நம்பித்தான் இருக்கு. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.” என கெஞ்ச,
சொர்ணாக்கு அவரின் நிலை புரிய,
“சரி நான் இறங்குறன்.” என கூறி விட்டு, இறங்கியவள் அந்த கட்டிடத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு,
பெரு மூச்சு ஒன்றுடன், “ஒரு கிழமைக்கு முதல் தான் இந்த இடத்துக்கு திரும்ப வரக்கூடாதுன்னு வேண்டுதல் வைச்சேன். ஆனா விதி என்ன வைச்சு விளையாடுது.” என முணு முணுத்துக் கொண்டு,
ஆறாம் மாடியில் உள்ள அவனது கேபினுக்கு சென்றவள்,
அறை வாசலில் நின்று, “மே ஐ கம் இன் சார்?” என கேட்டாள்.
உள்ளே இருந்து “யெஸ், கம் இன்.” என்ற குரல் கேட்க,
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள்,
அங்கே கால் மேல் கால் போட்டுக் கொண்டு லேப்பில் வேலை செய்து கொண்டு இருந்த ஆரண்யனை பார்த்து விட்டு,
“எதுக்காக இப்போ என்னை இப்படி வர வைச்சீங்க?” என கேட்க,
அவனோ, “ஸ்ஸ்ஸ்…. எனக்கு ஒரு வேலை இருக்கு அப்படி போய் உட்கார், எல்லாம் முடிச்சிட்டு பேசுறேன்.” என திமிராக கூறியவன்,
லேப்பில் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டான்.
அடுத்து என்ன செய்வது எனப் புரியாது அங்கிருந்த கதிரையில் அமர்ந்தவள்,
அடிக்கொரு தரம் நேரத்தை பார்த்துக் கொண்டாள்.
அவனும் அவள் படும் பாடுகளைக் கவனித்துக் கொண்டே, உதட்டைத் தாண்டாத ஒரு வன்மப் புன்னகை உடன், வேலை செய்து கொண்டு இருந்தான்.
அவன் வேணும் எண்டே செய்கிறான் என தெரிந்தும், எதுவும் செய்ய முடியாது அமர்ந்து இருந்தவள்,
ஒரு மணி நேரம் கடந்த பிறகும் அவன் அசையாது இருப்பதைக் கண்டு,
“சார், டைம் ஆகுது. நான் வீட்டுக்குப் போகணும், அப்பா பார்த்துக் கொண்டு இருப்பார். என்ன விஷயம்னு சொல்லுங்க. இல்லன்னா, நான் கிளம்புறேன்.” என கூறியவள்,
அவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் வேலையைப் பார்க்கவும்,
அவளது பொறுமை எல்லையைக் கடக்க ஆரம்பித்தது.
அதற்கு மேலும் அரை மணி நேரம் பொறுமை காத்தவள்,
அவன் கல்லுப் போல அசையாது இருக்கவும்,
“சாரி சார்…. நான் இப்போ கிளம்பியே ஆகணும்.” என கூறி விட்டு,
கதவைத் திறக்க, அது திறந்தால் தானே…. இழுத்துப் பார்த்தவள் கதவு திறக்கவில்லை என்றதும்,
திரும்பி ஆரண்யனைப் பார்க்க,
அவனோ, ரிமோட்டை தூக்கிக் காட்டி விட்டு,
“என்னோட அனுமதி இல்லாம நீங்க வெளில போக முடியாது மேடம். ஒரு கிழமை ரொம்ப அமைதியா சந்தோஷமா இருந்தீங்க போல, என்னோட தொல்லை எதுவும் இல்லாம, அது தான் என் ஆட்டத்தை ஒரு குட்டி டெமொவோட ஸ்டார்ட் பண்ணலாம்னு இப்படிப் பண்ணேன்.” என கூறினான்.
அவனை, என்ன செய்வது எனப் புரியாது திண்டாடிப் போனாள் சொர்ணா.
“என்ன இவன் இப்படி இருக்கான்?, இப்போ நான் என்ன பண்றது?”, என யோசித்தவள்,
“நான் வீட்டுக்கு போகணும் சார், அப்பா ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிடுவார். பாவம் அவர்.” என கூற,
“ஓஹ்…. அதுக்கு நான் என்ன பண்ணனும்?” என கேட்டான் ஆரண்யன்.
“சார் நீங்க ஒண்ணும் பண்ண வேணாம், தயவு செய்து கதவைத் திறந்து விடுங்க.” என சொர்ணா கேட்கவும்,
அவளின் பதட்டத்தை கண்டு புன்னகை புரிந்தவன்,
“ஓகே, உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. அதனால திறந்து விடுறேன். ஆனா அதுக்கு பதிலா நீ ஒண்ணு பண்ணணுமே.” என கூறினான் அவன்.
“என்ன பண்ணனும் சார்….” என சுற்றும் முற்றும் பார்த்தவாறு சற்று பயந்த குரலில் கேட்டாள் அவள்.
சொர்ணாவின் மூளை அதற்குள் எங்கு எல்லாமோ பயணம் செய்து விட்டு வந்தது.
“பெரிசா ஒண்ணும் இல்ல, நீ உன்னோட ஜாப்ப ரிசைன் பண்ணிட்டு என் கம்பெனில வந்து ஜோயின் பண்ணு. அப்போ தான் நீ என்னோட கண்ட்ரோலுக்குள்ள நீ இருப்பாய். இல்லன்னா உன் மேல என்னோட போக்கஸ் கொஞ்சம் குறைவா இருக்கு. என்ன நான் சொன்னத செய்றீயா?” என கேட்டான் ஆரண்யன்.
சொர்ணாவோ, “எத உங்க கம்பெனிலயா?, சார், நான் வேலை செய்றது சாப்ட்வேர் கம்பெனி….” என ஆரம்பித்து விட்டு,
தான் பேசுவது தப்பு என தெரிந்து பேச்சை நிறுத்தி விட்டாள் சொர்ணா.
பின்னே, அவள் இப்போது வந்து இருக்கும் அவனது கம்பெனியும் அதே வகை தானே ஆகவே அப்படி ஒரு காரணம் சொல்ல முடியாது. அதனால் தான் பேச்சை முடித்துக் கொண்டாள் அவள்.
அவள் எண்ணியது போலவே,
“அப்போ இது என்ன இரும்பு விக்கிற கம்பெனியா…. ஒழுங்கா இரண்டு நாளுல இங்க வந்து ஜோயின் பண்ணு. இல்லன்னா அதனோட பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். அப்புறம் உன் இஷ்டம். இப்போ நீ போகலாம்.” என கூறியவனை ஒரு நொடி அதிர்ந்து பார்த்தவள்,
அவன் ரிமோட்டை எடுத்து கதவைத் திறக்கவும்,
“இப்போதைக்கு இங்க இருந்து கிளம்பினா போதும். மிகுதியை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” என எண்ணிக் கொண்டு வேகமாக அங்கு இருந்து வெளியேறினாள்.
போகும் அவளையே பார்த்து இருந்தவன்,
“ஓடு…. ஓடு…. இன்னும் எவ்வளவு தூரம் ஓடுறாய்னு நானும் பார்க்கிறன்.” என மனதிற்குள் எண்ணிக் கறுவிக் கொண்டான்.
அவள் போனதும் அவனும் கிளம்பி விட்டான்.
வேகமாக வெளியில் வந்து வீதியில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அந்த இராப் பொழுது பயத்தைக் கிளப்பியது.
ஒரு வாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஆட்டோ ஒன்றை ஆப்பில் புக் பண்ணி விட்டு,
வாசலில் காத்து இருக்க, அவளைக் கடந்து சென்றது ஆரண்யனின் கார்.
கடந்து போகும் அவனது காரை வெறித்துப் பார்த்தவள், கார்க் கண்ணாடியூடு அவன் தன்னைப் பார்க்கக் கூடும் என உணர்ந்து, அமைதியாக வேறு பக்கம் முகத்தை திருப்பினாள்.
நேரம் ஆக…. ஆக…. ஆட்கள் நடமாட்டம் குறைய, சொர்ணாக்கு நெஞ்சுக்குள் நீர் வற்றிப் போனது.
அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாது, மெதுவாக நடக்க ஆரம்பித்தவள்,
மனதிற்குள், ஆரண்யனை அர்ச்சிக்கவும் மறக்கவில்லை.
ஒரு பத்து அடி கூட நடந்து இருக்க மாட்டாள். அதற்குள் ஒரு குடிகாரக் கும்பல் அடங்கிய வாகனம் ஒன்று அவளை முந்திக் கொண்டு சென்று சடன் பிரேக் போட்டு நின்றது.
அதே நேரம், சொர்ணாவின் தந்தையும் அவளுக்கு அழைப்பு எடுத்தக் கொண்டே இருந்தார்.
அவள், போனை எடுக்க முதல், அந்த வாகனத்தில் இருந்து குதித்த ஒரு கும்பல் அவளை நோக்கி வர ஆரம்பித்தது.
அதற்கு மேலும் தாமதித்தால் ஆபத்து என உணர்ந்து, அவள் ஓட ஆரம்பிக்க,
அந்தக் கும்பல் சுற்றி வளைத்து அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு தங்கள் வாகனத்தை நோக்கி சென்றது.
அடுத்து என்ன நடக்கப் போகிறது?
சொர்ணா எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கப் போகிறாள்?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍 குட்டி எபின்னாலும் வரும் மக்காஸ்…
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….
Episode – 04
மூன்று மணி ஆனதும் ஒருவாறு அருணாவிடமும் தனது மேல் அதிகாரிகளிடமும் சமாளிப் பாக ஒரு காரணத்தைக் கூறி சமாளித்து விட்டு,
தனக்கு பிடித்த காளி அம்மனை வேண்டிக் கொண்டு,
“அம்மா காளித் தாயே…. நீதான் என்ன அந்த சிடு மூஞ்சிக்கிட்ட இருந்து காப்பாத்தணும். அங்க என்ன நடந்தாலும் எனக்கு அத தாங்குற சக்திய கொடும்மா. போனமா…. சாரி சொன்னமா வந்தமான்னு இருக்கணும்.” என மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டு,
அவனின் சாப்ட்வேர் நிறுவனமான ஆரா சாப்ட்வேர் சொல்யூஷனின் முன்னாக போய் இறங்கினாள்.
இறங்கியவள் தனது முந்தானையால், முகத்தில் அரும்பிய வியர்வையை மெதுவாக துடைத்து விட்டு அங்கிருக்கும் வாட்ச்மேனிடம் தனது பெயரைக் கூற,
அவனும் மரியாதையாக கதவைத் திறந்து உள்ளே செல்ல அனுமதி கொடுத்தான்.
அந்தக் கட்டிடத்தின் பிரமாண்டமே அவளை மிரட்டுவதற்கு போதுமானதாக இருந்தது.
கால்கள் பின்னப் பின்ன மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து உள்ளே சென்றவளுக்கு அந்த ஏசியிலும் வியர்த்து வழிந்தது.
உள்ளே சென்று, அங்கிருந்த ரிசப்சனிஸ்சிடம், “என்னோட நேம் சொர்ணாம்பிகை. எனக்கு இன்னைக்கு ஆரண்யன் சார சந்திக்க அப்பொய்ன்மெண்ட் கிடைச்சு இருக்கு.” என கூற,
அந்தப் பெண்ணும் அவளது ரெஜிஸ்டரில் ஒரு முறை செக் பண்ணியவள்,
“ஒன் செக் மேடம்.” என சொர்ணாவிடம் கூறி விட்டு,
போனை எடுத்து, ஆரண்யன் மெயின் கேபின் தளத்தில் இருக்கும் ரிசப்சனிஸ்ட்ற்கு கால் பண்ணினாள்.
மறு முனையில் பதில் கிடைத்ததும்,
சொர்ணாவிடம், “மேடம் நீங்க போகலாம். ஆறாவது மாடி தான் சாரோட கேபின் இருக்கிற புளோர். அங்க சார் உங்களுக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருக்காராம் போங்க மேடம்.” என கூறி புன்னகை உடன் கையை லிப்ட்டை நோக்கி காட்ட,
“எத, காத்துக் கொண்டு இருக்காரா?” என உள்ளுக்குள் உதறலுடன் எண்ணிக் கொண்டவள்,
அந்தப் பெண்ணிடம், “தங்கி யூ.” என கூறி விட்டு, லிப்டில் ஏறிக் கொண்டாள்.
அவள் வந்ததில் இருந்து அவளின் ஒவ்வொரு செய்கை களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.
அவள் படும் பாடுகள் அனைத்தையும் கூர்மையாக பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.
பொதுவாக ஏதும் பிரச்சனை என்றால் மட்டும், சிசி டீவி பார்ப்பவன் முதன் முறை தனது நேரத்தை விரயமாக்கி சிசி டீவி பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஒருவாறு அந்த தளத்திற்கு, வந்து சேர்ந்தவள், அங்கிருந்த ரீசப்சனிஸ்சிடம் விடயத்தைக் கூற,
அந்தப் பெண்ணும், “ஓஹ்…. நேற்று என் கூட பேசினது நீங்க தானா மிஸ். உங்க நேம் சொர்ணாம்பிகை தானே.” என கேட்டவள்,
சொர்ணா, “யெஸ்.” என கூறவும்,
ஒரு புன் சிரிப்புடன், “யூ ஆர் லுக்கிங் கோர்ஜியஸ் மேம்.” என கூறினாள்.
அவளது பாராட்டில் ஒரு கணம் கன்னம் சிவந்து போனது சொர்ணாக்கு.
மறு நொடியே, “தங்கி யூ.” என புன் சிரிப்புடன் கூறியவள்,
அவனது அறையைக் கண்டு பிடித்து அவனின் அறைக்கு முன்னாக சென்று நின்றாள்.
அவனின் பெயரைக் கண்டதுமே,
அதுவரையும், நின்றிருந்த வியர்வை மீண்டும் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
அவளின் தவிப்பு உள்ளே இருந்த ஒருவனின் பார்வையில் பட்டு அவனுக்கு உதட்டில் வன்மப் புன்னகையை வரவழைத்தது.
சொர்ணா, ஒருவாறு தனது மனதை சமன் செய்து கொண்டு,
“சார், மே ஐ கம் இன்?” என கேட்டாள்.
அவளின் கேள்விக்கு, உள்ளே இருந்து பதில் வராது போகவே,
மேலும் இரண்டு தடவை கூப்பிட்டுப் பார்த்தவள், எதுவும் வராது போகவே,
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் உள்ளே கால் வைத்த அந்த நொடி,
“வாங்க…. மிஸ் சொர்ணாம்பி கை வெங்கட மூர்த்தி குரு க்கள். ஆரண்யனின் பிரமாண்ட அறை உங்களை அன்புடன் வரவேற்கிறது.” என அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டு கூறினான்.
சொர்ணா அவனது குரலில், திகைத்துப் போய் நிமிர்ந்து பார்க்க,
அங்கே சுழல் நாற்காலியில் அமர்ந்து, அவளையே பார்த்த வண்ணம், கையில் பேனையை வைத்து சுழற்றிக் கொண்டு இருந்தவன்,
அவள் அவனையே உறைந்து போய் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு,
“என்ன மேடம், கதவுக்கு உள்ள வர்ற ஐடியா இருக்கா…. இல்லையா…. எதுக்கு என்ன பார்க்க வந்து இருக்கீங்கன்னு கொஞ்சம் உள்ள வந்து சொல்றீங்களா ப்ளீஸ்.” என கிண்டலாக கேட்டான்.
அவளோ, உதட்டைக் கடித்துக் கொண்டு உள்ளே வந்தவள்,
அவனின் மேசைக்கு முன்னாக வந்து நின்று,
“சார் அது வந்து….” என ஆரம்பிக்க,
கை நீட்டி அவளின் பேச்சைத் தடுத்தவன், அவளை ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்தான்.
மெல்லிய ஊதா நிற வாயில்ப் புடவையை ஒழுங்காக அணிந்து இருந்தவள்,
முகம் எந்த ஒப்பனையும் இல்லாது சிம்பிளாக இருந்தது.
கரு நிறப் பொட்டும், அவள் அணிந்து இருந்த வெள்ளைக் கல்லு மூக்குத்தியும் அவளுக்கு ஒரு வித அழகை கொடுத்தது.
முகத்தில் அரும்பிய வியர்வை கூட அவளுக்கு அழகு சேர்த்தது.
கூந்தல் அங்கும் இங்கும் பறந்து இருக்க, அவனையே பயப் பார்வை பார்த்தவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்து விட்டு,
“முதல்ல உட்காருங்க மேடம், அப்புறம் பேசுங்க.” என கூற,
அவளுக்கும் கால்கள் சற்றுப் பலம் இழந்தது போல இருக்கவே, அமைதியாக கதிரையில் அமர்ந்து கொண்டவள்,
அவனை நிமிர்ந்து பார்க்காது, சுற்றிப் பார்த்தவாறு,
“நேற்றுக்கு முதல் நாள் நான் ஆரா ஹோட்டலுக்கு வந்து இருந்தேன்.” என ஆரம்பிக்க,
மறு புறம் அவனிடம் இருந்து “ஓகே…. அப்புறம்” என்ற குரல் கேட்டது.
சொர்ணாவும், அவனைப் பார்க்காது,
“அங்க நீங்க பேரரா இருந்தீங்க.” என நலிந்த குரலில் கூறினாள்.
“ம்ம்ம்ம்…. அப்புறம்….”
“நான்…. நீங்க…. சாப்பாடு மாறிப் போச்சுன்னு….”என அடுத்த வார்த்தை வராது தடுமாறிய சொர்ணா,
“……………….”
மறு புறம் அவன் சைலன்டாக இருக்கவும்,
“தெரியாம…. உங்கள அடிச்சிட்டேன்.” என கூறி முடித்தாள்.
“ஓஹ்…. அப்புறம்….”
“அன்னைக்கு இருந்த டென்ஷன்ல என்னால மன்னிப்பு கேட்க முடியல.”
“ஆஹ்…. அப்புறம்….”
“இல்ல…. நீங்க யாருன்னு எனக்கு அப்போ சரியா தெரியல. இப்போ தான் தெரிஞ்சுது. அதான் அன்னைக்கு நடந்த சம்பவம் ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் அப்படின்னு உங்க கிட்ட சொல்லி….” என அவள் நிறுத்த,
கதை கேட்கும் பாணியில் “ம்ம்ம்ம்…. சொல்லி….” என கிண்டலாக அவனும் இழுக்க,
“மன்னிப்பு கேட்க வந்தன் சார்.” என ஒருவாறு சொல்லி முடித்தாள் சொர்ணா.
சற்று நேரம் அங்கு அமைதியே நிலவியது.
மெதுவாக நிமிர்ந்து பார்த்தவள், அவன் அவளையே கூர் விழிகளுடன் பார்த்துக் கொண்டு இருக்கவும்,
பட்டென தலையைக் குனிந்து கொண்டு,
“என்ன மன்னிச்சிடுங்க. வேணும்னு நான் எதுவும் பண்ணல. தெரியாம தான் அது நடந்துது. உங்க ரேஞ்ச் வேற…. என்னோட ரேஞ்ச் வேற. இதுக்கு மேல இத வளர்க்க வேண்டாம் சார் ப்ளீஸ்.” என கை எடுத்துக் கும்பிட்டவள்,
அவனை நிமிர்ந்தும் பார்க்காது, பட்டென எழுந்து, கதவிற்கு அருகில் செல்ல,
அவளின் பின்னே சொடக்கிடும் ஒலி ஒன்று கேட்டது.
சொர்ணாவும், சந்தேகமாக திரும்பி அவனைப் நோக்க,
“என்ன மேடம் வந்தீங்க?, நீங்களே பேசிட்டு கிளம்புறீங்க?, கொஞ்சம் இருங்க இனி தானே மேடம் நான் பேசணும்.” என கூறியவன், எழும்பி மேசைக்கு முன்னால் வந்து ஸ்டைலாக சாய்ந்து நின்று அவளை ஒரு பார்வை பார்த்தான்.
அவனின் ஸ்டைலிற்கும் அவனது பார்வைக்கும் சம்பந்தமே இல்லை.
ஆம், அவன் விழிகளில் தெரிந்தது என்னவோ வேட்டையாடும் அதே புலியின் பார்வை தான்.
அவனின் பார்வையில் உள்ளுக்குள் கிலி பிறந்தாலும்,
வெளியில் காட்டாது மறைத்துக் கொண்டவள்,
“சொல்லுங்க சார். உங்க டைம வேஸ்ட் பண்ண வேணாம்னு தான் மன்னிப்பு கேட்டுட்டு உடனே கிளம்பினன்.”
“ஓஹ்…. மேடம் எனக்காக பார்க்கிறீங்க போல. என்ன ஒரு தாராள மனசு உங்களுக்கு இல்ல….” என கேலி பேசியவன்,
“அன்னைக்கு நீ அடிச்ச ஒரு அடியால எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?, என் அப்பா முன்னாடி நான் கூனிக் குறுகிப் போய் நின்னன். எத்தனையோ பிசினஸ்களுக்கு ஓனர் நான். எனக்கு வேலை செய்ய எல்லாரும் லைன்ல நிக்கிறாங்க. ஆனா நான் எதுக்காக அப்படி பேரர் வேலை செய்தன்னு தெரியுமா?, உன்னால என்னோட ஒரு பெரிய கனவு வேஸ்ட்டா போயிடுச்சு. எங்க அப்பாக் கிட்ட செஞ்ச சேலஞ்சில மோசமா தோத்துப் போயிட்டேன் நான். அதோட அந்த மீடியாக்காரங்க…. சே…. ” என பல்லைக் கடித்தவன், திரும்பி மேசையில் ஓங்கிக் குத்தி விட்டு,
சொர்ணாவை நோக்கி கை நீட்டி,
“உன்னால தான்…. உன்னால மட்டும் தான் இத்தனையும் எனக்கு நடந்துச்சு. நீ என்னடான்னா சிம்பிளா சாரி சொல்லிட்டு கிளம்புறாய்?” என உறுமிய படி கேட்க,
அப்படியே கதவோடு சாய்ந்து நின்று கொண்டவளுக்கு அவனின் தோற்றம் பெரும் பயத்தைக் கிளப்பியது.
“தெரியாம தான்….” என ஆரம்பிக்க,
“ஸ்ஸ்ஸ்…. நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது. இங்க நான் மட்டும் தான் பேசுவன். நான் சொல்றது மட்டும் தான் நடக்கணும்.”
என மீண்டும் ஒரு முறை அழுத்தமாக கூற,
அதனைக் கண்டு மொத்தமாக பயந்து ஒடுங்கிப் போய் நின்றாள் பெண்ணவள்.
வேறு ஒரு ஆண் மகனாக இருந்தால் அவள் நிலையைக் கண்டு கொஞ்சம் இரங்கி இருப்பான்.
ஆனால் இங்கு இருப்பவன் ஆரண்யன் ஆயிற்றே.
அவனுக்கும் இரக்கத்திற்கும் தான் ரொம்ப தூரம் ஆயிற்றே.
இரக்கமா…. அப்படி என்றால்
என்ன? என கேட்பவன் தானே அவன்.
“உன்னோட சாரி எவனுக்கு வேணும். சும்மா ஒருத்தன் என்ன முறைச்சுப் பார்த்தாலே பதிலுக்கு வச்சு செய்றவன் நான்.
என்ன நீ அடிச்சு இருக்காய். என்னோட அப்பாவே என்ன இதுவரைக்கும் அடிச்சது இல்ல. நீ யாரு என் மேல கைய வைக்க. வாழ்க்கை முழுக்க நீ நிம்மதி இல்லாம வாழுற மாதிரி பண்ணினா தான் என்னோட மனசுல இருக்குற காயம் ஆறும்.” என அசட்டையாக கூறியவனிடம் எதிர்த்து பேசும் அளவிற்கு தைரியம் சொர்ணாவுக்கு இல்லையே.
அவனின் பண பலம், ஆள் பலம் அனைத்தும் அறிந்தவளுக்கு அவனிடம் இறங்கிப் போவதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
அவனை எதிர்த்து அவளால் என்ன செய்து விட முடியும்?
ஆகவே, “சார் கொஞ்சம் என் பக்கம் இருந்தும் யோசிச்சுப் பாருங்க. அவ்வளவு பெரிய தண்டனை எல்லாம் எனக்கு வேணாம். நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க அத செய்றன். வேணும்னா நீங்க இங்க வச்சு என்ன திருப்பி கூட அடிங்க. இல்லன்னா அன்னைக்கு மாதிரி அந்த ஹோட்டல்ல வைச்சு திருப்பி அடிச்சுடுங்க.” என கூறியவளை,
இளக்காரமாக பார்த்தவன், “நீ என்ன அடிச்சதும், நான் உன்னை அடிக்கிறதும் ஒன்னா…. உன்ன இந்த ஊர்ல எவனுக்காச்சும் தெரியுமா?, ஆனா நான் அப்படியா?, என்ன இந்த ஊர்ல தெரியாதவன் எவனாச்சும் இருக்கிறானா?, இந்த லட்சணத்தில நீயும் நானும் ஒன்னா?” என கேலியாக மீண்டும் கேட்டவன்,
ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவளைக் குத்திக் குதறி எடுத்தான்.
அவனின் பேச்சுக்களே அவளின் அழுகையை மேலும் அதிகரிக்க போதுமானதாக இருந்தது.
பொறுத்துப் பொறுத்து பார்த்தவளுக்கு அதற்கு மேல் இயலாது போகவே,
“இப்போ நான் என்னதான் செய்யணும்னு சொல்றீங்க?” என அழுதபடி ஆற்றா மையுடன் கேட்டு விட்டாள் அவள்.
“ஹே…நீ ஒண்ணும் செய்ய வேணாம். இனி மேல் என் அதிரடித் தாக்குதலுக்கு தயாரா இரு. எந்த நேரமும் என்கிட்ட இருந்து உனக்கு அடி விழலாம். அத சொல்லத் தான் உன்ன சந்திக்கணும்னு சொன்னன். நான் ஒருத்தர அடிச்சாலும், அழிச்சாலும் சொல்லிட்டுத் தான் செய்வன். மீட்டிங் முடிஞ்சுது. நீ போகலாம்.” என கூறியவன், விரல்களால் போகுமாறு சைகை செய்ய,
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது, அவசரமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிச் சென்றாள் சொர்ணா.
சொர்ணா எடுக்கப் போகும் முடிவு என்ன?
இனி ஆரண்யன் ஆடப் போகும் ஆட்டம் எப்படி இருக்கும்?
அவன் அவளை ஆட்டுவிப்பானா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் அதிரடியா வரும் மக்காஸ்….
Episode – 03
மதிய நேரம் நெருங்கியதும், உணவு உண்ணலாம் என எண்ணியவாறு பார்த்துக் கொண்டு இருந்த பைலை மூடி வைத்தவள்,
எழுந்து கேன்டீனுக்கு உணவுப் பொதியுடன் சென்றாள்.
அங்கும் ஒரு கூட்டம் கூடி இருக்கவே, “இப்போ என்னடா புதுப் பிரச்சனை?, இன்னைக்கு நாளே சரியில்லை.” என எண்ணிக் கொண்டவள்,
அமைதியாக உணவு உண்ண ஆரம்பிக்க,
அங்கு உள்ள தொலைக்காட்சியில் சற்று முன் நிகழ்ந்த சம்பவம் என குறிப்பிட்டு,
ஆரண்யன் போட்டோவுடன் செய்தி ஒன்று வெளியிடப் பட,
அங்கு இருப்போரின் பார்வைகள் அனைத்தும் ஆர்வமாக அந்தப் பக்கம் திரும்ப,
குழுமமாக, நின்று இருந்த அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு பெண்,
“அங்க பாருங்க, அத தான் நான் சொன்னன். நான் சொல்லும் போது யாராச்சும் நம்பினீங்களா?, அந்த ஆன்டி ஹீரோ சும்மா இருக்க மாட்டார்னு சொன்னேன் தானே. இப்போ பாருங்க.” என கூற,
“அப்படி என்ன தான் டீவி யில் ஓடுகின்றது?” என யோசித்த சொர்ணாவும் பார்வையை தொலைக் காட்சி பக்கம் திருப்ப,
அங்கே, காலையில் ஆரண்யன் பற்றி வெளியிடப்பட்ட செய்தியை, சேகரித்துக் கொடுத்தவர் காரில் அடி பட்டு சீரியசான நிலையில் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி இருப்பதாக செய்திகள் ஓடிக் கொண்டு வந்து இருந்தது.
அந்த தகவலுக்கு கீழே, “இது வெறும் விபத்து தானா?, இல்லை திட்டம் இட்ட செயலா?, ஆரண்யன் அந்த செய்தி வெளி வந்ததுக்காக பழி வாங்கும் படலம் நடத்து கிறாரா?, இல்லை அவரது தந்தை மகனுக்காக செய்த பாவச் செயலா?, காலையில் வந்த செய்தியின் பிரதி பலிப்பு தான் இந்த விபத்தா?, இந்த செய்கை மூலம் நடந்த சம்பவம் இல்லை என்று ஆகி விடுமா?….”
“அடி வாங்கிய மகனுக்காக தந்தை எடுக்கும் பதில் நடவடிக்கையாக இருக்குமோ?, பாதிக்கப் பட்டவனுக்கு என்ன நியாயம் கிடைக்கப் போகிறது?”
“இந்தக் கேசும் மறைக்கப் பட்டு, உண்மைகள் மறுக்கப் பட்டு விடுமா?, இல்லை உண்மைகள் வெளி வருமா?,
வீடியோ எடுத்தவர் மேல் ஏன் கோபம் கொள்ள வேண்டும்?, அடித்த பெண் மீது தானே உண்மையில் கோபம் கொள்ள வேண்டும்?, அந்தப் பெண்ணை நேரடியாக எதிர் கொள்ள துணிவு இல்லாததின் விளைவு தான் இதுவா?, அந்தப் பெண்ணுக்கும் ஆரண்யனுக்கும் என்ன தொடர்பு?….” என அடுத்தடுத்து செய்திகள் வர,
சொர்ணாக்கு உண்ட உணவு தொண்டைக்குள் சிக்கியது.
“என்ன கொடுமை இது…. செய்தி வெளியிட்ட ஆளுக்கே இந்த நிலைமை என்றால்…. அப்போ என் நிலைமை…. மிஸ்டர் ஆரண்யன் என்ன இப்படிப் பட்ட மனுஷனா இருக்கார்?, இப்படி கொடூரமா நடந்து கொண்டு இருக்கார்?, பாவம் அந்த மனுஷனுக்கே அந்த நிலைமைன்னா என்னோட கதை என்னாகும்?” என எண்ணிப் பயந்து போனவள்,
சமாளிப்பாக தொண்டையை செருமி விட்டு, நீரை அருந்தினாள்.
“தேவை இல்லாது ஒரு மனிதரை சீண்டி விட்டு விட்டோமோ….” என எண்ணிக் கொண்டவளுக்கு,
“எதுவுமே வேண்டும் என்று செய்யவில்லையே?” என்கிற ஆதங்கமும், ஒரு வித மன அழுத்தமும் உருவாக, அதற்கு மேலும் சாப்பிடும் எண்ணம் இல்லாது போக, அங்கே இருக்கப் பிடிக்காது கடகடவென தனது இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
சற்று நேரம் தலையில் கை வைத்துக் கொண்டவள்,
“என்னடா இது எனக்கு வந்த சோதனை?” என யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.
கடைசி முயற்சியாக “பேசாமல் அந்த நபருக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டு விடலாமா?” என்று கூட யோசித்தாள் சொர்ணா.
ஏனெனில் அவளுக்கு யாரிடமும் பிரச்சனைக்கு போவதோ…. பிரச்சனையை வளர்ப்பதோ…. பிடிக்காத காரியம் ஆகும்.
அறியாமல் நடந்த செயல் இப்படி கொண்டு வந்து நிறுத்தி விடும் என கனவிலும் எண்ணவில்லையே.
அதை விட தந்தைக்கு இந்த மாதிரியான விடயங்கள் தெரிய வந்தால் அவர் மேலும் குழம்பிப் போகக் கூடும்.
ஏற்கனவே இந்த இடம் பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டு இருப்பவர்,
இப்படி என்று தெரிந்தால் தொடர்ச்சியாக வேலை செய்யவும் அனுமதிக்க மாட்டார். என பலதும் யோசித்தவளுக்கு,
இறுதியில், “ஏண்டா அந்த ஹோட்டலுக்கு அவரை சாப்பிட அழைத்துச் சென்றோம்?” என்ற யோசனை தான் வந்தது.
சற்று யோசித்தவள், பெருமூச்சு ஒன்றுடன், ஆரண்யனின் போன் நம்பரை தேட ஆரம்பித்தாள்.
நாட்டிலே மிகவும் பேமஸ்சான நபர் அவன்.
எப்படியும் அவனை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது என அவளுக்கு நன்கு தெரியும்.
ஆகவே அவனது கம்பெனி பற்றி தேட ஆரம்பித்தாள் பெண்ணவள்.
அப்போது தான் அவன் யார்?, அவனின் நிலை என்ன?, படிப்பு என்ன?, உலக நாடுகள் எங்கும் எத்தனை கம்பெனிகளுக்கு அவன் சொந்தக்காரன்?, அவனது பெயரில் உள்ள பிசினஸ்கள்?, அவனது சொத்துக்கள் பற்றிய விபரங்கள் முழுவதும் அவளுக்கு தெரிய வந்தது.
ஒரு கணம் உண்மையில் மலைத்துத் தான் போனாள் சொர்ணா.
இப்படிப்பட்டவனையா அடித்தோம் என எண்ணி உள்ளுக்குள் உதறல் எடுக்க,
ஒருவாறு அவனுக்கு சொந்தமாக சென்னையில் இருக்கும், ஆரா சாப்ட்வேர் நிறுவனத்தின் ரிசப்ஷன் நம்பரை தேடி எடுத்தவள்,
தனது செல்லில் இருந்து கால் பண்ணி விட்டு,
கடைசி ரிங் போய், மறு புறம் “ஹலோ….” என கூறவும்,
பட்டென கட் பண்ணி வைத்து விட்டாள்.
“சே…. எனக்கு என்னாச்சு?, ஏன் இப்படிப் பயந்து சாகுறேன். ஓகே…. சொர்ணா பி போல்ட். நோ…. நோ…. உன்னால முடியும்.” என தனக்குத் தானே கூறிக் கொண்டு,
மீண்டும் ஒரு முறை கால் பண்ணியவள், இம்முறை பயம் கொள்ளாது, மறு புறம் போன் எடுக்கப்பட்டதும்,
“ஹலோ, என்னோட பெயர் சொர்ணாம்பிகை, நான் மிஸ்டர் ஆரண்யன மீட் பண்ணலாமா?” என கேட் டாள்.
மறு புறம், இருந்த பெண்ணவளோ,
“மேம்…. வாட்ஸ் யுவர் நேம்…. சொர்ர்ர்ர்…. ணா….ம்பிகை ரைட்?” என இழுத்துக் கூற,
“என் பெயர இதுக்கு மேல யாரும் டேமேஜ் பண்ண முடியாது. என்ன இழுவ இழுக்கிறா….” என எண்ணிய சொர்ணா,
“யெஸ் மேம், மை நேம் இஸ் சொர்ணாம்பிகை. நாட் சொர் ர்….ணாம்பிகை.” என மறுபடியும் அழுத்திக் கூற,
“ஓஹ்….ஓகே மேம். நீங்க யாரு?, எங்க இருந்து பேசுறீங்க?, சார் ரொம்ப பிஸி மேடம். அவர ஈஸியா சந்திக்க முடியாது. அப்பொய்ன்மெண்ட் போடணும். அதுவும் சாருக்கு ப்ரொப்பர் ரீசன் சொல்லணும். உங்கள மாதிரி ஆயிரம் கால்ஸ் ஒரு நாளைக்கு வருது. சோ…. நீங்க எதுக்காக சார் கிட்ட பேசணும்னு காரணம் சொன்னீங்கன்னா…. பர்தரா நாங்க பேசலாம். நான் உங்க பெயரை சாரோட கேபினுக்கு அனுப்புவன். அங்க, உள்ள சாரோட பி. ஏக்கள் தான் சாருக்கு உங்கள பத்தி சொல்லுவாங்க. சார் ஓகேன்னு சொன்னா நீங்க அவர சந்திக்கலாம்.” என ஆங்கிலத்தில் தெளிவாக சொல்லி முடிக்க,
சொர்ணாக்கு கண்ணைக் கட்டியது.
“இப்படி ஒரு சாரி கேட்கணுமா?, இவங்க சொல்ற வழில போகணும் னா. மாசக் கணக்கு தான் ஆகும்.” என எண்ணியவள்,
“நோ, தேங்க்ஸ்.” என கூறி விட்டு வைத்து விட்டாள்.
ஆனால், அவளின் பெயரும் சேர்த்து, ஆரண்யனுக்கு அனுப்பப்பட்டது அவளுக்கு தெரியாது போனது.
அன்றைய நாளில் அதற்கு மேல் அவளுக்கு சோதனைகள் எதுவும் இருக்கவில்லை.
வேலையை முடித்துக் கொண்டு, வீட்டுக்கு சென்றவள், அதன் பிறகு தந்தையுடன் நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தாள்.
மறுபுறம் ஆரண்யனோ, அன்றைய நாள் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு, கடைசி மீட்டிங்கையும் சக்ஸஸ் ஆக முடித்து விட்டு நெட்டி முறித்தவன்,
சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவாறு,
நேரத்தைப் பார்க்க, அதுவோ இரவு எட்டு மணி என காட்டியது.
“இப்போ தான் எட்டு மணியா?” என முணு முணுத்தவன் அன்றைய இரவு வேலைக்கான பி. ஏ வை அழைத்தான்.
ஆம், அவனுக்கு மார்னிங் ஒரு. பி. ஏ. நைட் ஒரு பி. ஏ என இரு பி. ஏ க்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
காரணம், காலையில் இருந்து வேலை செய்யும் பி. ஏ. டையர்ட் ஆக கூடாது என்பது தான்.
ஒரு வேளை அவனின் பி. ஏ களைப்பில் தூங்கி வழிந்தால் அவ்வளவு தான்.
ஆரண்யனுக்கு மதம் பிடித்து விடும்.
அவனுக்கு தான், இரவு விழித்து இருக்கும் நேரம் வரைக்கும் விழித்து இருந்து வேலை செய்யும் நபர் தான் வேண்டும். அவன் இராக் கோழி போல் அயராது வேலை செய்வான்.
அதே போல அனைவரும் இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பான் அவன்.
ஆகவே, அவனுக்கு இரண்டு பி. ஏ க்களை நியமித்து விட்டு இருந்தனர்.
இப்போதும் அந்த பி. ஏ வை அழைத்தவன், இன்று யார் யார் கம்பெனிக்கு தன்னை சந்திக்க வந்தார்கள் என கேட்க ஆரம்பித்தான்.
அவர்களில் முக்கியமான சிலரை மட்டும் செலக்ட் செய்து அடுத்த நாளுக்கு அப்பொய்ன்மெண்ட் கொடுக்க சொன்னவன்,
அடுத்தடுத்த பெயர்களும், அவர்களின் பர்போஸ்சும் வாசிக்கப் பட,
“நெக்ஸ்ட்…. நெக்ஸ்ட்….” என கூறிக் கொண்டு சென்றவன்,
“சொர்ணாம்பிகை….” என்ற பெயரைக் கேட்டதும் சுழல் நாற்காலியில் சுற்றுவதை நிறுத்தி விட்டு தனது நெற்றியை இரு விரல்களால் நீவி விட்டு,
“சொர்ணாம்பிகை….” என ஒரு முறை உச்சரித்துப் பார்த்தான்.
“அந்தப் பேர் உள்ள போர்ம்ம மட்டும் தனியா எடுத்து வச்சுக் கொள்ளுங்க.” என்று கூறி விட்டு மீதிப் பெயர்கள் அனைத்தையும் வாசிக்கச் சொல்லி செலக்ட் செய்து விட்டு,
மீண்டும் இறுதியாக சொர்ணாம்பிகை என்று எழுதப்பட்டிருந்த பேருக்குரிய அப்பாயின்ட்மென்ட் படிவத்தை வாங்கிப் பார்த்தான்.
ஒரு கணம் அந்த பெயரை “மிஸ். வி. சொர்ணாம்பிகை, மீன்ஸ் சொர்ணாம்பிகை வெங்கட மூர்த்தி குருக்கள்….” என கூறிப் பார்த்தவன்,
“இவங்க என்ன சந்திக்க கேட்டதற்கான பெர்ப்பஸ் என்ன?” என அழுத்தமான குரலில் கேட்க,
அவனது பி. ஏவோ “போன்ல காண்டாக்ட் பண்ணி இருக்காங்க. அதனால தெரியல சார், அவங்க வேலை செய்ற இடமும், பெயரையும் தவிர வேற எதுவுமே தெரியல சார்.” என்று கூறவும்,
ஒரு கணம் அவளது உதடுகளில் கேலிப் புன்னகை ஒன்று உருவாகி மறைய,
“எனக்கு நல்லாவே தெரியும், நீங்க என்ன பண்றீங்க…. நாளைக்கு ஈவினிங் மூணு மணிக்கு இந்த மேடமுக்கு அப்பாய்மென்ட் கொடுங்க. என்னை கண்டிப்பா வந்து சந்திக்கணும்னு சொல்லுங்க. முக்கியமா ஆரண்யன் சார் கண்டிப்பா சந்திக்கணும்னு சொல்லி இருக்கார்னும் சொல்லுங்க.” என கூறியபடி,
அவளது பெயர் போடப் பட்ட அந்த அப்பாயின்மென்ட் லெட்டரை கசக்கி குப்பைக் கூடைக்குள் எறிந்து விட்டு,
“இனி நான் பார்த்துக்கிறன்.” என பேச்சை முடித்துக் கொண்டான்.
அவனது அந்த செய்கை பி.ஏக்கு கிலியைக் கிளப்பியது.
ஆனாலும் கேட்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால் அமைதியாக எழுந்து சென்று விட்டார் அவர்.
அவர் போனதும் அந்த சுழல் கதிரையில் சாய்ந்து கண்மூடி அமர்ந்தவனுக்கு, அவள் அடித்த நினைவு மீண்டும் உலா வர,
“உன்ன பத்தி எல்லா டீடெயில்ஸும் கலெக்ட் பண்ணிட்டேன். பிங்கர் டிப்ஸ்ல வைச்சு இருக்கேன். வா…. நீயா வரணும். இப்போ உனக்கு இந்த ஆரண்யன் பத்தி தெரிஞ்சு இருக்கும். என்ன சந்திக்கும் வரைக்கும் நீ பயத்தோடயே ஒவ்வொரு நிமிஷமும் இருக்கணும். இனிமேல் தானே ஆரம்பிக்கப் போகுது என்னோட ரீவஞ்ச்.” என கூறிவிட்டு ரௌத்திரம் பொருந்திய கண்களுடன் அங்கிருந்து கிளம்பினான்.
எப்போது ஒருவர் ஒரு நபரின் மீது அவரைப் பற்றி யோசித்து யோசித்து மனதுக்குள் ரௌத்திரத்தை வளர்த்துக் கொள்கிறாரோ அவரின் கோபம் குறித்த ஆளிடம் வெளிப்படும் போது அதி பயங்கரமானதாக இருக்கும் அல்லவா.
அதே விடயம் தான் இங்கும் நடந்து கொண்டு இருந்தது.
ஆரண்யன் அவள் மீதான கோபத்தை தொடர்ச்சியாக வளர்த்துக் கொண்டே இருந்தான்.
அது வெடித்து வெளி வரும் போது அதன் பாதிப்பை சொர்ணாம்பிகை எப்படி எதிர்கொள்ளப் போகிறாளோ?
மறு நாள் பொழுதும் நல்ல படியாக புலர்ந்தது.
வேலைக்கு வந்து அமர்ந்த சொர்ணாக்கு, சற்று நேரத்திலேயே மாலை மூன்று மணிக்கு ஆரண்யனை சந்திக்க வருமாறு அழைப்பு வந்தது.
அந்த ஒற்றை அழைப்பே மீண்டும் அவளின் நிம்மதி பறி போக காரணமாக அமைந்தது.
“நான் வேணாம்னு சொல்லித் தானே போன வைச்சேன். அப்புறம் எப்படி எனக்கு அப்பொய்ன்மெண்ட் கொடுத்து இருக்காங்க.” ஒரு வேள இது மிஸ்டர் ஆரண்யனோட வேலையா இருக்குமோ?, சே…. அவருக்கு இருக்கிற வேலைக்கு என்ன ஒரு ஆளாவே அந்த மனுஷன் மதிக்க மாட்டார். சரி போய்ப் பார்ப்பம். சான்ஸ் கிடைச்சா மன்னிப்பு கேட்பம்.” என முடிவு எடுத்தவள் மாலை மூன்று மணிக்கு அங்கு செல்ல ரெடியானாள்.
ஆனால் அங்கு ஒருவனோ, தனது முக்கிய வேலைகள், மீட்டிங்குகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு அவளின் வருகைக்காகவே காத்து இருந்தான்.
சொர்ணா எப்படி ஆரண்யனிடம் மன்னிப்பு கேட்கப் போகிறாள்?
அவனது கோபத்தை எங்கணம் எதிர் கொள்ளப் போகிறாள்?
ஆரண்யன் எடுத்து இருக்கும் முடிவு என்ன?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
கொஞ்சம் லேட் எபி தான்.. இனி கொஞ்சம் வேகமாக எபிகள் வரும்.
Episode – 02
போகும் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.
“நீ எங்க தப்பி ஓடினாலும் உன்னை விடமாட்டேன். உன்ன என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.” என முணு முணுத்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டான் அவன்.
வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகும் அவனது பார்வை தொடர்ந்தும் சொர்ணாவை உறுத்திக் கொண்டே இருந்தது.
அவனது அந்தக் கழுகுப் பார்வை அவளை துரத்துவது போல உணர்ந்தாள் பெண்ண வள்.
அவளது தந்தை வேறு குழப்பத்துடனும், பசியுடனும் அமர்ந்து இருக்க,
அந்த நேரத்திற்கு தனது நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டு,
தந்தையை சமாதானப்படுத்தி உணவு சமைத்து, உண்ணவும் வைத்தவள்,
தானும் உண்டு விட்டு உறங்க சென்றாள்.
அன்று இரவு ஏனோ அவளுக்கு உறக்கம் வர மறுத்தது.
உறக்கம் வராது அங்குமிங்கும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் அவள்.
வாழ்க்கையில் முதன் முறையாக இப்படி ஒரு அனுபவத்தை அவள் சந்தித்து இருக்கிறாள்.
“மோசமான அனுபவம் என்பதாலோ என்னவோ அடிக்கடி நினைவுக்கு வருகின்றது போலும்.” என எண்ணி அந்த நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டு உறங்க முயன்ற போதும் அந்தப் பெயர் தெரியா ஆடவனின் பார்வை மீண்டும் மீண்டும் அவளது நினைவுக்குள் புகுந்து அவளை இம்சித்தது.
“அந்தப் பார்வையில் ஒரு வித விலங்கின் வெறி தெரிந்ததோ….” என எண்ணியவள்,
“முருகா சரணம்…. முருகா சரணம்….” என கூறிக் கொண்டு, முயன்று
ஒருவாறு உறங்கிப் போனவள் மறுநாள் காலை விடிந்ததும் எழுந்து, வழக்கம் போல தனது வேலைகளை பம்பரம் போல சுழன்று கவனித்து விட்டு,
தந்தைக்கான உணவுகள் மற்றும் மருந்துகளை எடுத்து வைத்து விட்டு, அவரை பத்திரமாக இருக்கும் படி பத்து முறைகள் சொல்லி விட்டு,
தான் வேலை செய்யும் ஐடி நிறுவனத்திற்கு வேலைக்கு கிளம்பி சென்றாள்.
ஆம், சொர்ணா இப்போது வேலை செய்து கொண்டு இருப்பது ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் தான்.
அவளது பூர்விகம் கும்பகோணம் தான்.
அவள் படித்து வளர்ந்தது எல்லாமே அங்கு தான்.
அவளுக்கு பெரிய ஐடி கம்பெனியில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை, சிறு வயதில் இருந்தே நிறைய இருந்தது.
அவளின் குடும்பம் ஐயராத்து குடும்பம் என்பதாலோ என்னவோ…. அவர்களது சூழலில் படித்த பெண்கள் மிக மிக குறைவு.
திருமண வயது வந்தவுடன், திருமணம், குடும்பம் குழந்தை என செட்டில் ஆகி விடுவார்கள்.
அந்த சூழலில், படித்து வேலைக்கு போக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்தவளுக்கு, தாயும், தந்தையும் முழுவதும் சப்போர்ட் ஆக இருக்க, சொர்ணாவும் ஆர்வத்துடன் படித்து தான் எண்ணிய சாப்ட்வேர் துறையில் கோல்ட் மெடலும் வாங்கி இருந்தாள்.
ஆனால், அதே நேரம் அவளது படிப்பு முடிவடையும் தருவாயில் புற்றுநோய் காரணமாக தாயும் இறந்து விட, அழுது தீர்த்த சொர்ணாவும், தந்தையும் அடுத்து என்ன செய்வது எனப் புரியாது கொஞ்சம் குழம்பித் தான் போயினர்.
இருவரில் முதலில் சுதாரித்துக் கொண்டது என்னவோ…. சொர்ணா தான். இனி குடும்ப பொறுப்பையும், தந்தையையும் தான் முன்னே நின்று கவனித்துக் கொள்ள வேண்டிய கட் டாயம் இருக்கின்றது என புரிந்து கொண்டவள், அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தாள்.
தந்தையையும் தானே முன் நின்று தேற்றி ஆறுதல் படுத்தினாள்.
அதே நேரம் அந்த இடத்தில் தொடர்ந்து இருக்க முடியாது, தாயின் நினைவுகள் அவளையும் தந்தையையும் வாட்ட ஆரம்பித்தது.
ஆகவே அந்த இடத்தை விட்டு கிளம்பலாம் என முடிவு எடுத்தாள் சொர்ணா.
முதல் முறை அந்த முடிவை சொர்ணா கூறும் போது அவளின் தந்தை அதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.
“அது எப்படிம்மா பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வேற இடத்துக்கு போறது?, அங்கு உள்ள மனுஷால் எப்படியோ தெரியாது. நாம ஆச்சாரமா இருந்து பழகிட்டோம். வேற இடத்துக்கு போய் எப்படி வாழ முடியும்?” எனக் கூறி கவலைப்பட்டவரை,
“அப்பா, இப்போ மனுஷங்க பூமில மட்டும் இல்ல…. நிலாவிலயும் போய் வீடு கட்டுறாங்க. நீங்க என்னப்பா…. இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படிப் பயப்படுறீங்க. இங்க இருந்தா இன்னும் அம்மாவை நினைச்சு கவலை தான் கூடும். வாங்க அப்பா. நான் உங்கள நல்லாப் பார்த்துக்கிறன். இந்த வீட்ட நாம வாடகைக்கு விட்டுடலாம். அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு கண்டிப்பா இங்க வரலாம். வாங்கப்பா….” என மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறி,
அவரை சமாதானப்படுத்தி ஒருவாறு சென்னைக்கு வந்தவள், தமக்கு ஏற்றது போல ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து தந்தை யுடன் தங்கிக் கொண்டாள்.
கும்பகோணத்திலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே இரண்டு…. மூன்று கம்பெனிகளில் வேலைக்காக விண்ணப்பித்தும் இருந்தாள் சொர்ணாம்பிகை.
அவளது குவாலிபிகேஷனுக்கு ஏற்றது போலவே அருமையான வேலையும் அதற்குரிய சம்பளமும் அவளைத் தேடி வரவே,
அந்த கம்பெனியில் எந்தவித பிரச்சனையும் இல்லாது வேலைக்கும் சேர்த்து இருந்தாள்.
ஆரம்பத்தில், அங்கு இருப்பவர்களுடன் கதைக்க, மிகவும் கஷ்டப் பட்டாள்.
அவர்களின் நாகரீகம், பேச்சு, பழக்க வழக்கங்கள் எதுவும் சொர்ணாக்கு ஒத்து வரவில்லை.
அதுக்காக அவள் ஒன்றும் தெரியாத பட்டிக் காடும் இல்லை. அவளுக்கும் ஓரளவுக்கு நாகரீகங்கள் தெரியும் தான். அவள் அறிந்தது அடக்கமான நாகரீகம். ஆனால் அங்கு சிலரோ மேல் தட்டு நாகரீகத்துடன் உலா வர,
முதலில் பயந்து போனவள், அதன் பின்பு, சமாளித்து, ஒதுங்கி நிற்க ஆரம்பித்தாள்.
ஆனாலும் விடாது அவளின் நல்ல குணத்துக்காக நட்பு பாராட்ட வந்தவர்கள் சிலர் அங்கு இருக்கிறார்கள் தான்.
அதோடு இந்த ஒரு மாதத்தில் அவளுக்கு ஒரு அருமையான நண்பியும் அங்கு கிடைத்து இருக்கிறாள்.
ஆம், அருணா என்கிற பெண் அவளுக்கு தோழியாகவும் மாறி விட்டாள்.
அவள் சொன்னதின் பேரில் தான், குறித்த ஹோட்டலுக்கு தந்தையை சொர்ணா அழைத்தக் கொண்டு போனது.
இப்போதும், வேலைக்கு வந்து அமர்ந்த சொர்ணாவிடம்,
“ஹாய் சொர்ணா, அப்புறம் நேற்று நைட் அப்பா கூட டின்னெர் போனீயே என்னாச்சு?, சூப்பரா இருந்துதா?, எப்படி அந்த இடம் செம இடம் இல்ல. அப்பா ஹாப்பியா என்ஜோய் பண்ணினாரா?…. என்ன பூட் சாப்பிட்டீங்க?….” என தொடர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,
.
அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த சொர்ணா,
அவள் பேசி முடிக்கவும், “என்ன அருணா, எல்லாம் கேட்டு முடிஞ்சுதா?, இல்ல. இன்னும் ஏதாச்சும் மீதி இருக்கா?…. கேட்கிற கேள்வி எல்லாத்தையும் ஒரே தடவையில கேட்டு முடி. அப்புறமா நான் பதில் சொல்றேன்.” என சற்று அழுத்தமாக கூற,
அவளின் அழுத்தமே, ஏதோ தவறு நடந்து உள்ளது என்பதை வெளிக் காட்ட,
சற்று அமைதியான அருணா, “என்னாச்சு சொர்ணா, உன் முகமே சரி இல்லையே. நேற்று அங்க போக முடியலயா?, இல்ல…. சாப்பாடு பிடிக்கலயா?, இல்ல வேற ஏதும் பிரச்சனையா?…. அப்பா நல்லாத் தானே இருக்கார். அவருக்கு ஏதும்….” என இழுக்க,
“ம்ப்ச்…. அதெல்லாம் ஓகே அருணா. அப்பா நல்லாத் தான் இருக்கார். ஆனா அந்த ஹோட்டல் தான் கால வாரி விட்டிடுச்சு. அங்க ஒரு பிரச்சனை ஆகிடிச்சு. அதனால நானே ஒருத்தர அடிக்க வேண்டியதாப் போச்சு.” என கூறவும்,
“எத…. நீ ஒருத்தர அடிச்சீயா?, சும்மா காமெடி பண்ணாத. பஸ்ல யாருக்கும் தெரியாம இடிச்சிட்டு வந்தாலே புலம்புற ஆள் நீ. நீ போய் ஒருத்தன அடிச்சீயா…. சும்மா உருட்டாம கிளம்பு.” என கூற,
அவளை முறைத்துப் பார்த்தவள், “என்ன நடந்து துன்னு முதல்ல கேளு.” என கூறியவள்,
விடயத்தை சொல்ல ஆரம்பிக்க,
அவளின் அருகே பல குரல்கள் கேட்டது.
“ஏய் இங்க பாருங்கடி…. இது அவர் தானே…. அவர யாரோ அடிச்சு
இருக்காங்க போல….”
“அவர அடிக்கிற அளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கு. ஒரு பொண்ணுன்னு வேற போட்டு இருக்கு. அவரு தான் பொண்ணுங்க விஷயத்தில நெருப்பாச்சே….”
“அத விடு…. இவரு கடைசியா இங்க வந்தது ஆறுமாசத்துக்கு முதல் தானே. அவரு இந்தியா வர்றதே பெரிய விஷயம் தான். இப்போ எதுக்கு இங்க வந்து இருப்பார்?….”
“ஒரு வேள கலியாணமா இருக்குமோ?…. இல்ல…. பிசினஸ் ட்ரிப்பா இருக்குமோ?….”
“அவரோட அப்பா இங்க தானே இருக்கார். அவருக்காக வந்து இருப்பார் போல….”
“யாருக்காக வந்தால் என்ன…. போன தடவ மாதிரி நம்ம கம்பெனிக்கு விசிட் பண்ணினா நல்லா இருக்கும் என்ன…. என்ன ஹாண்ட்சம் ஆளு அவரு….”
“ஆமா…. ஆனா அவரு ஒரு ஸ்பீச் கொடுக்க தானே இங்க வந்தார். ஆனா அதுக்காக அவரு வாங்கின பணம் இரண்டு கோடிக்கும் மேலயாம்.”
“பின்னே இருக்காதா ஒவ்வொரு நொடியும் அவருக்கு கோல்டன் செகண்ட் மாதிரின்னு சொல்லுவார். அத செலவு செய்யும் போது, காசு வாங்காம இருப்பாரா என்ன?”
“ஆமா…. அவர பத்தி ஆர்ட்டிக்கல் நிறைய வந்து இருக்கு தானே. அதெல்லாம் ஒண்ணு கூட விடாம நான் படிச்சு இருக்கேன்….”
“ஹலோ நீ மட்டும் இல்ல, நானும் படிச்சு இருக்கேன்.”
“ம்ப்ச்…. நான் அவரோட போட்டோவையே கண்ணாடில ஒட்டி வைச்சு இருக்கேன்.”
“ஆனாலும், அவரோட ஹோட்டல்ல வைச்சு ஒரு பொண்ணு அவர அடிச்சு இருக்கா…. அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?”
“ஆத்தி, அந்த ஆளே ஒரு டெரர் பீஸ் அவர போய் அடிச்சு இருக்கா…. யாரா இருக்கும்?, அந்தப் பொண்ண பார்த்தே ஆகணும்.”
“ஆரண்யன் பேமஸ்சோ இல்லையோ…. அந்தப் பொண்ணு ஒரு நாளுல பேமஸ் ஆகிட்டா….”
“ஆமா…. ஆனா அந்தப் பொண்ணு முகத்த தெளிவாப் போடல. பொதுவா ஹோட்டல்ல ப்ரோப்லம்னு போட்டு இருக்காங்க. யாரோ வேணும்னு பப்ளிக் பண்ணி இருக்காங்க. இது தான் இப்போ ஹாட் நியூஸ். இந்த விஷயம் வெளில வந்ததுக்கே. இன்னும் என்னனென்ன நடக்கப் போகுதோ….”
“ஆமா, வெளியிட்ட ஆளுக்கு இனி மேல் சனி உச்சத்தில தான்….” என ஓயாது ஏனைய பெண்கள் பேசிக் கொண்டு இருக்க,
சொர்ணாவோ, ஆரம்பத்தில் ஏனோ தானோவென அமைதியாக அவர்களின் பேச்சை வேடிக்கை பார்த்தவள்,
“ஹோட்டல்…. பிரச்சனை…. அடி….” என அவர்கள் பேசவும்,
ஒரு கணம், “அந்த ஆளா இருக்குமோ….. சே…. சே…. அந்த ஆளு அங்க வேலை செய்ற ஆளு….” என எண்ணிக் கொண்டாலும்,
மனம் ஏதோ போல் உணர,
அவர்கள் பார்த்த அந்த பேப்பரை தானும் வாங்கிப் பார்த்தாள்.
பார்த்தவளுக்கு அடுத்த வார்த்தை வர மறுத்தது.
அவள் யாரை அடித்தாளோ.. அந்தக் காட்சி அச்சுப் பிசகாது, அங்கு போட்டோ வாக பதிவாகி இருந்தது.
அதற்கு கீழே, “மல்டி மில்லினர் ஆரண்யனின்
ஹோட்டலில் வைத்தே அவரை அடித்த பெண்.
அதன் பின்னணி என்ன?…. மிஸ்டர் ஆரண்யன் வெயிட் டர் உடையில் இருக்க காரணம்?, அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?, அந்தப் பெண்ணுக்கு பயந்து தான் இந்த மாறுவேடமா?, இது வரையும் ஒரு கேஸ்சிலும் சிக்காத ஆரண்யன் இதில் சிக்க காரணம் என்ன?….” என கண்ட பாட்டுக்கு எழுதி இருந்தனர்.
அனைத்தையும் வாசித்த சொர்ணா எச்சில் விழுங்கியபடி, இருக்கையில் அமர, அவளின் முகம் வியர்வையில் குளித்தது.
அதற்குள், அருணாவும் வாங்கிப் பார்த்து விட்டு,
“ஓஹ்…. இவரா…. என்னோட ரீசன்ட் கிரஷ் இவரு. செம ஆளு இல்ல. இந்த ஆள போய் யாரு அடிச்சிருப்பா. சே…. பாவம் அந்தப் பொண்ணு நிலைமை. இனி என்ன ஆகப் போகுதோ. கர்த்தரே…. அந்தப் பொண்ணை நீங்க தான் காப்பாத்தணும்.” என கூறி விட்டு,
சொர்ணாவைப் பார்க்க,
அவளோ இன்னும் பிரீஸ் மோடில் இருக்க,
அவளை உலுக்கி நனவு உலகத்திற்கு கொண்டு வந்தவள்,
“என்னாச்சு உனக்கு?, எதுக்கு இப்படி பேய பார்த்த மாதிரி இருக்காய்?” என கேட்டாள்.
சொர்ணாவோ, மனதிற்குள், “ஆமா ஒரு பேய் கூடத் தான் தெரியாம மோதி இருக்கன் போல.” என எண்ணிக் கொண்டவள்,
வெளியில் அமைதியாக ஒன்றும் இல்லை என தலையை ஆட்டினாள்.
“சரிடி, இத விடு. உன் கதைய சொல்லு.” என கேட்டவளுக்கு, என்ன பதில் சொல்வது எனப் புரியாது திண்டாடிப் போனாள் அவள்.
“அருணாவிடம் சொன்னால் அது கண்டிப்பாக, அனைவருக்கும் சென்று விடும். அதன் பின்பு அவள் அங்கு வேலை செய்ய முடியுமா?, இல்லை மீடியாக் காரர்கள் தான் சும்மா விடுவார்களா?” என எண்ணியவள்,
அமைதியாக, “அப்புறம் சொல்றேன் இப்போ கொஞ்சம் தல வலிக்குது.” என கூறி விட்டு, பைலை எடுக்க,
“சரிடி, நீ டென்ஷன் ஆகாத. ஆறுதலா சொல்லு.” என கூறி விட்டு தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் அவள்.
ஆனால் சொர்ணாவிற்கு தான், தலைக்குள் ரயில் ஓட ஆரம்பித்தது.
அவள் அறியாது செய்த பிழை இப்போது பூதாகரமாக மாறி இருந்தது.
“அடுத்து என்ன ஆகும்?” என யோசித்தவள்,
இப்போதைக்கு அமைதியாக இருப்போம் என எண்ணி விட்டு, முயன்று அந்த பேப்பரை தூக்கிப் போட்டாள்.
போடும் போது தான் ஆரண்யனின் முகத்தையும், அவனையும் உற்றுப் பார்த்தாள்.
அப்படி ஒரு இறுக்கம் அவனது முகத்தில் குடி கொண்டு இருந்தது.
உடல் உரம் ஏறி, சிக்ஸ் பேக் அப்பட்டமாக தெரிந்தது.
அவனது உடலில் உள்ள இறுக்கம் போலவே முகத்திலும் இறுக்கம் தெரிந்தது.
“அவனது கையால் ஒரு அடி வாங்கினால் கண்டிப்பாக தாடை பெயர்ந்து போகும்.” என எண்ணிக் கொண்டவள்,
தனது எண்ணம் போகும் திசை அறிந்து, தலையில் அடித்துக் கொண்டு, மனதை வேலைகளில் செலுத்தினாள்.
ஆனால் மதியம் அவளின் காதுக்கு வந்து சேர்ந்த செய்தியில் முற்றிலும் ஆடிப் போனாள் பெண்ணவள்.
அப்படி அவள் காதுக்கு வந்த செய்தி என்ன?
இருவரும் சந்திக்கும் நிலை வந்தால் சொர்ணாவின் நிலை என்னவாகும்?
ஆரண்யன் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?
பதில்கள் அடுத்த பதிவில் வரும்….
கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
Episode – 50
ஆனால் நேரடியாக போய் அவனை இப்போது அடிக்க முடியாது. அவனே கடுங் கோபத்தில் பிளந்து கட்டிக் கொண்டு இருந்தான்.
அதே போல, அந்த நாள் தான் தனக்கு இறுதி நாள் எனவும் அவருக்கு புரிந்து விட்டது. அதற்கு மேலும் ஏன் தயங்க வேண்டும்.
தமயந்தி கதற வேண்டும், ஆதியும் கதற வேண்டும், அபர்ணாவும் கதற வேண்டும் எனில் ஒரே வழி, தான் இறக்க முதல் தீரனைக் கொலை செய்வது தான்.
என்ன செய்யலாம் என மூளையைத் தட்டி யோசிக்க ஆரம்பித்தார் அவர்.
அதே நேரம், அவரின் செய்கைகளையும், தீரனை நோக்கிய அவரது பார்வையையும் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் தமயந்தி.
ஆம், அவள் ஒளித்து வைக்கப் பட்டு இருந்த இடம், அவர் ஒளிந்த இடத்திற்கு அருகில் தான் இருந்தது.
கோடீஸ்வரனுக்கு, அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தமயந்தி இருக்கும் இடம் தெரியாது.
ஆனால், அவளுக்கு அவரது செய்கைகள் நன்றாகவே புலன் ஆனது.
அவரது பார்வையை வைத்தே, அவர் ஏதோ பிளான் பண்ணி விட்டார் என அறிந்து கொண்டவளின் மனம் தாறு மாறாக துடிக்க ஆரம்பித்தது.
அவளுக்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்தவர்களிடம், கூட அவள் தீரனுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என சொல்லிப் பார்த்தாள்.
அவர்களோ, அவளைத் தடுத்து நிறுத்தியதோடு மட்டும் அல்லாது,
“மேடம், சார் உங்கள, இந்த இடத்தை விட்டு அசையக் கூடாதுன்னு சொல்லி இருக்கார். எங்களுக்கு இருக்கிற ரூல்ஸ்ச நாங்க பொலோவ் பண்ணி ஆகணும். ப்ளீஸ் மேடம் கொஞ்சம் பொறுமையா இருங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாம் முடிஞ்சிடும். நீங்க டென்ஷன் ஆகாம இருங்க மேடம்.” எனக் கூறி, அவளை மீண்டும் அமர வைத்தனர்.
இம்முறை, கணவனின் பேச்சை மீற விரும்பாது,
அவளும், அமைதியாக உட்கார்ந்தாள்.
ஆனாலும் அவளின் மனம் அமைதி அடைய மறுத்தது. மீண்டும் அவளின் பார்வை கோடீஸ்வரனை நோக்கி செல்ல,
அவரோ, அனைவரையம் அடித்துக் கொண்டு முன்னேறி வரும் தீரனை ஒரு பார்வை பார்த்து விட்டு, தனது காலுக்குள் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை மெதுவாக வெளியே எடுத்தார்.
தமயந்தியோ, “அச்சோ, அந்த ஆள் துப்பாக்கியை எடுக்கிறார். கொஞ்சம் அங்க பாருங்க.” என கத்த,
அவளை சுற்றி நின்றவர்கள் அந்த இடம் நோக்கி திரும்பும் முன், கோடீஸ்வரன் தீரன் நோக்கி முன்னேறி இருந்தார்.
அதே நேரம், தமயந்தியின் சத்தம் கேட்டதும், அந்த இடம் நோக்கி சில, பல தோட்டாக்கள், அதிரடியாக சீறிப் பாய ஆரம்பித்தது.
உடனே, அங்கிருந்த தீரனின் ஆட்கள், தமயந்தியை அங்கிருந்து அடுத்த இடத்திற்கு நகர்த்தி செல்ல ஆரம்பித்தனர்.
யாருமே, கோடீஸ்வரன் பற்றி கவலை கொள்ளும் நிலையில் இல்லை.
ஆனால் தமயந்தியின் கண்கள் மட்டும், அவரை நோக்கி நகர,
அவரோ, சரியாக தீரனைக் குறி வைத்து துப்பாக்கியை நீட்டும் நேரம்,
இதற்கு மேலும் தாமதித்தால், அவனைக் காப்பாற்ற முடியாது போய் விடும். என எண்ணியவள்,
யாரும் எதிர் பாரா நேரம், அனைவரையும் தள்ளிக் கொண்டு அவசரமாக தீரனை நோக்கி ஓடிய அதே நேரம் துப்பாக்கியின் ட்ரிகரை தீரனை நோக்கி அழுத்தி இருந்தார் கோடீஸ்வரன்.
அந்த தோட்டா அவனின் நெஞ்சில் பாய்வதற்கு முன்னதாக குறுக்காக பாய்ந்து தனது தோள் பட்டையில் அந்த தோட்டாவை வாங்கிக் கொண்டு அப்படியே கீழே விழுந்தாள் அவள்.
அந்த நொடி அவனது முகத்தில் தெறித்தது அவளது இரத்தம்.
அவன் காப்பாற்றிய உயிரை அவனுக்காக கொடுக்க துணிந்து இருந்தாள் பெண்ணவள்.
அவளின் காதலுக்கு இதை விட சான்று என்ன வேண்டும்?
சில நொடிகளுக்குள் அனைத்தும் நடந்து முடிந்து இருக்க,
நடந்ததை, நம்ப முடியாது, ஒரு கணம் திகைத்து நின்றவன்,
அடுத்த நொடி தமயந்தியை தனது மடியில் போட்டக் கொண்டு,
“ஆதி….” என கத்தினான்.
அவனும், நடந்த நிகழ்வுகளில் உறைந்து போய் நின்றவன், அண்ணனின் குரலில் மீண்டு,
“நீங்க அண்ணியைப் பாருங்க அண்ணா. நான் இங்க பார்த்துக் கொள்றன்.” என கூற,
அப்போதும் தம்பியை தனியாக விட மனம் இல்லாதவன்,
“பார்கவ்….” என கத்த,
அவர்களின் உதவிக்காக வெளியில் நின்று கொண்டு இருந்த பார்கவ்,பாய்ந்து உள்ளே வந்தான்.
வந்தவன், தீரனின் கைகளில் துடித்துக் கொண்டு இருந்த தமயந்தியையும், தீரனையும் கண்கலங்கிப் போய் பார்க்க,
தீரனோ, ஆதியை நோக்கி கண்களால் சுட்டிக் காட்டியவன்,
“அவனுக்கு ஹெல்ப் பண்ணுடா. நீயும் கவனமா இரு.” என கத்தி விட்டு,
ஒரு நொடி தனது சிவந்த ரௌத்திரம் பொங்கிய கண்களை, அங்கே தனது ஆட்களிடம் பிடி பட்டிருந்த கோடீஸ்வரனை நோக்கி செலுத்தி விட்டு,
“இங்கே இருக்கிற எல்லாரையும் முடிச்சுடுங்க. சின்ன தடயம் கூட இருக்க கூடாது. ஆனா இவனை மாத்திரம் நான் தான் வந்து முடிக்கணும். எல்லாம் முடிஞ்சதும் இந்த ஆள எங்க கொண்டு வரணும்னு உங்க ரெண்டு பேருக்கும் தெரியும் தானே. அந்த இடத்துக்கு பிளைட்ல கொண்டு போங்க, அப்பதான் ஈஸியா இருக்கும். நானும் கொஞ்ச நேரத்துல வந்து சேருவன். அப்புறம் இருக்கு இந்த ஆளுக்கு.” என கூறியவன்,
நொடியும் தாமதிக்காது தன்னவளைத் தூக்க,
அவளோ, வலி தாங்காது, “தீரா….” என முனகலுடன் துடித்தவள்,
அவன், தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பிக்கவும்,
அடி படாத கையால், அவனின் கையை இறுகப்பற்றி,
“இப்பவாச்சும் என் காதலை ஏற்றுக் கொள்ளுவீங்களா ப்ளீஸ்?” என திக்கித் திணறிக் கேட்க,
ஒரு கணம் உடல் இறுகிப் போய் நின்ற தீரனின் கண்கள் கலங்கி கண்ணீரை உகுத்தது.
தனக்காக அவன் சிந்திய அந்த ஒற்றைத் துளி கண்ணீரே அவளின் மீது அவன் கொண்ட காதலை வெளிக்காட்ட போதுமானதாக இருக்க,
புன்னகை உடன், “ஐ…. லவ்…. யூ…. புருஷா….” என திக்கித் திணறிக் கூறியவள்,
அவனது கைகளிலேயே மயங்கிப் போனாள்.
அவள் மயங்கியதும், “ஏண்டி இப்படிப் பண்ணாய்?” என உடைந்த குரலில் கேட்டவன்,
உடனடியாக, அவளை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த ஹாஸ்பிட்டல் நோக்கி சென்றான்.
போகும் போதே அங்கு உள்ளவர்களுக்கு அறிவித்தல் கொடுத்தவன்,
தனக்கு தெரிந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் அனைவரையும் அந்த ஹாஸ்பிட்டலுக்கு அடுத்த பத்து நிமிடங்களில் வரவழைத்தான்.
அவளைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவளுக்கு பெரிதாக எந்த விதமான ஆபத்தும் இல்லை எனவும்,
அதிகளவான இரத்தம் வெளியேறியதனால் அவளுக்கு சிறிதளவில் இரத்த இழப்பு பாதிப்பு மட்டும் ஏற்பட்டு உள்ளது எனவும் கூறினர்.
அவர்கள் கூறிய விடயத்தை தீரன் முன்னமே ஊகித்து இருந்தாலும்,
தன்னவளின் நிலையை எண்ணிப் பயந்து போனவனின் இதயமும் எக்குத் தப்பாக துடிக்க ஆரம்பித்தது.
தன்னவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என மனதிற்குள் மீண்டும் மீண்டும் உருப்போட்டுக் கொண்டவன் வாழ்க்கையில் இரண்டாம் முறை அன்னையின் இறப்புக்கு பிறகு பயம் என்றால் என்ன?, கண்ணீர் என்றால் என்ன?, என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டான்.
இல்லை…. இல்லை…. அவனுக்கு அவனின் உயிரானவள் உணர வைத்தாள் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அங்கு உள்ள டாக்டர்கள் மூலம் அவளது தோள்ப் பட்டையில் இறங்கிய தோட்டா எடுக்கப்பட்டு விட்டது.
அதிக இரத்தம் வெளியேறிய தனால், அவளுக்குரிய இரத்தமும் மீண்டும் ஏற்றப்பட்டது.
அவளுக்கு சிறிய பாதிப்பும் இல்லை என கூறிய பின்பு தான் அங்கிருந்த கதிரையில் தொப்பென பெரு மூச்சுடன் அமர்ந்து கொண்டான் தீரன்.
அடுத்த பத்து நிமிடங்களும் கண்ணை மூடி அமர்ந்திருந்தவன் கண்களை திறக்கும் போது முகத்தில் ஒரு வித தெளிவு உருவாகி இருந்தது.
அவளைக் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியவன், அப்படியே அபர்ணாவிற்கு சுருக்கமாக விடயத்தைக் கூறி,
உடனடியாக வரச் சொல்லி போன் பண்ணி விட்டு அடுத்த நொடி, அதே ரௌத்திரம் பொங்கிய கண்களுடன் வெளியேறியவன்,
சொன்னது போலவே பிலைட்டில் சென்று இறங்கிய இடம், கோடீஸ்வரனை வைத்து இருக்கும் இடம் தான்.
அதே மாலை நேரம், அதே இடம்.
ஆம், கோடீஸ்வரன் எந்த இடத்தில் வைத்து அவனது அன்னையை எரித்து கொலை செய்தாரோ…. அதே இடத்துக்கு அவரை கொண்டு செல்ல செய்தவன்,
ஆட்கள் நடமாட்டம் குறைவான, அந்த இடத்தில் கையாலாகாத நிலையில் நின்று கொண்டு இருந்த அவரைக் குரூரமாக பார்த்துக் கொண்டு,
“இந்த இடம் உனக்கு நினைவு இருக்கா கோடீஸ்வரா?, என்னோட அம்மாவையும், தமயந்தியோட அம்மா, அப்பாவையும் துடிக்க துடிக்க கொன்னீயே. அதே இடம் தான் இது. இன்னைக்கு அவங்களோட நினைவு நாள். இவ்வளவு நாளும் எங்க மனசுல எரிஞ்சு கொண்டு இருக்கிற, நெருப்பு இன்னைக்கு தான் அணையப் போகுது. உனக்கு இந்த இடத்தில, இன்னைக்கு நான் சமாதி கட்டுறேன்.” எனக் கூறியவன்,
தனது ஆட்களிடம் திமிறிக் கொண்டு இருந்தவரை நோக்கி பெற்றோலை ஊற்றி விட்டு,
திரும்பி, ஆதியைப் பார்க்க,
அவனும் புரிந்தது என்பது போல தலையை ஆட்டியவன்,
தனது வடுவை ஒரு முறை வருடிப் பார்த்து விட்டு,
லைட்டரை பற்ற வைத்து விட்டு,
கோடீஸ்வரனை நோக்கி, “இன்னைக்குத்தான் என்னோட மனம் முழுசா சாந்தி அடையப் போகுது. உங்களுடைய பாவங்கள் எல்லாத்துக்கும் பெத்த மகனா நானே பரிகாரம் செய்து முடிக்கிறேன். உயிரோடயே கொல்லி வைக்கிறன். உங்க மகனா கடைசிக் காரியத்தை நானே செய்து முடிக்கிறேன்.” என அழுத்தமாக கூறியவன்,
எரிந்து கொண்டிருந்த லைட்டரை அவரை நோக்கி எறிய,
அவனிடம், “வேண்டாம் வேண்டாம்…. ஆதி.” என கத்தியவரின் மீது லைட்டர் பட்டு அவரது உடல் தீப்பிடிக்க ஆரம்பித்தது.
எரிதலின் வலி தாங்க முடியாது, அங்கும் இங்கும் துடி துடித்து ஓடியவர் இறுதியில் அந்த நெருப்புக்குள் எரிந்து சாம்பலாகிப் போனார்.
அங்கு இருந்த அனைவரும் அவர் எரிந்து சாம்பலாகி கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்க,
ஆதியும், தீரனும் கையைக் கட்டிய படி, அவர் எரிந்து முடியும் வரை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இறுதியில் இருவரின் மனதும் அப்படி ஒரு அமைதி அடைந்தாலும், முகத்தில் இருந்த இறுக்கம் முற்றிலும் குறையவில்லை.
அனைத்தும் முடிந்ததும் பார்கவ்வைப் பார்க்க,
அவனும், ஒரு பெரு மூச்சுடன், அருகில் வந்து இருவரையும் அணைத்து விடுவித்தவன்,
“இன்னையோட உங்க கஷ்ட காலம் எல்லாம் முடிஞ்சிடுச்சுடா. இனியாவது மன நிம்மதியோட, உங்கட பொண்டாட்டி, பிள்ளைகள், குடும்பம்ன்னு சந்தோஷமா இருங்க.” எனக் கூற,
“நீயும் தாண்டா.” எனக் கூறி அவனின் தோளைத் தட்டி விடுவித்த தீரன்,
“உன்ன மாதிரி ஒரு நண்பன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்டா. அப்புறம்….” என எல்லாத்தையும் ஒரு பார்வை பார்க்க,
பார்கவ்வும் புரிந்து கொண்டு, “மச்சான் நீ ஒண்ணும் யோசிக்காதடா. நான் பக்காவா எல்லாத்தையும் கிளியர் பண்ணிடுவன். ஒரு துரும்பு கூட எவன் கையிலும் கிடைக்காது.” என கூறியவன்,
“ அப்புறம் மச்சான் தமயந்தி….” என கேட்க ஆரம்பிக்க,
“அவளுக்கு ஒன்னும் இல்ல நல்லா இருக்காடா. அவளுக்கு எதுவும் ஆகாது.” என கூறி விட்டு,
ஆதியுடன் மீண்டும் ஹாஸ்பிட்டல் நோக்கி பயணம் செய்தான் தீரன்.
அந்தப் பயணத்தின் போது தீரனும் சரி , ஆதியும் சரி அமைதியாகவே அமர்ந்திருந்தனர்.
அவர்களது பல வருட போராட்டம் அன்று முடிவடைந்து விட்டது அல்லவா.
அதனால் உண்டான அமைதி தான் அது.
இருவருக்கும் எதுவும் பேச தோன்றவில்லை.
ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்ததும் டாக்டர்கள் அவனைப் பார்த்து,
“உங்க மனைவி கண் விழிச்சுட்டாங்க தீரன். இனி பயப்பிடுறதுக்கு ஒண்ணுமே இல்ல. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா ஓகே. நீங்க போய் தாராளமா அவங்கள பார்க்கலாம்.” என்று கூறியதும்,
“தங்கி யூ டாக்டர்.” என கூறியவன்,
அங்கு நின்று கொண்டிருந்த ஆதியையும், அபர்ணாவையும் பார்த்து விட்டு,
சிவகாமி அம்மாவை நோக்கி,
“நீங்களும் வந்துட்டீங்களா அம்மா. ஓகே மூணு பேரும் போய் முதல்ல பார்த்துட்டு வாங்க அதுக்கப்புறம் நான் போய்ப் பார்க்கிறேன்.” என கூறினான் .
அவர்களும், “சரி.” என கூறி விட்டு,
உள்ளே போய் அவளைப் பார்த்து விட்டு,
வெளியில் வந்தவர்கள் தீரனைப் பார்க்க,
அதுவரையும் கையை கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றவன், ஒரு சிறு தலை அசைப்புடன் தமயந்தியைப் பார்க்க உள்ளே சென்றான்.
உள்ளே சென்றவன், அவளின் மீது பார்வையை செலுத்த ,
அவன் எப்போது வருவான் என்றவாறு, வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகள்,
அவனைக் கண்டதும் அந்த நிலையிலும் மலர்ந்து போனது.
விழிகளால் அவனை அருகில் அழைக்க,
அமைதியாக அவளுக்கு அருகில் சென்று அவளை இமைக்காது பார்த்தபடி கட்டில் ஏறி அமர்ந்தான்.
பத்து நிமிடங்களிற்கும் மேலாக அவனிடம் இருந்து அமைதியே பதிலாக கிடைக்க, அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி,
கஷ்டப்பட்டு, தமயந்தி தான், குரலை செருமி, “என் மேல இன்னும் கோபமா இருக்கீங்களா?” என்று கேட்டதும்,
அது வரையும் இறுக்கமாக இருந்தவன், கண்களில் இருந்து அது வரையும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் முழுவதும் பொல பொலவென கண்களில் இருந்து வடிய,
அவளது கைகளைப் பற்றி முகத்தைப் புதைத்துக் கொண்டவன்,
“ஏண்டி இப்படிப் பண்ணாய்?, கொஞ்ச நேரத்துல என்னோட உயிர் என்கிட்ட இல்லடி. நான் தான் முரடன் கோபக்காரன்னு தெரியும் தானே. நான் சொன்னா நீ அப்படியே செய்திடுவீயா?, அவரோட கதைய முடிச்சதுக்கு அப்புறம் நாம ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்னு இருந்தன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீயேடி. உன்னயும் இழந்தா இந்த உலகத்தில எனக்குன்னு யாரு இருக்கா?, என் மொத்த உலகமும் நீ தானடி.” எனக் கூறி அவன் கண்ணீர் வடிக்க,
கர்வம் மிக்க கணவனின் இன்னொரு குழந்தைத்தனமான பக்கத்தைக் கண்டு உருகிப் போனவள் மெதுவாக மறு கையை வலியோடு உயர்த்தி அவனது தலையை வருட,
“பேபி, அச்சோ உனக்கு வலிக்கும் இல்ல….” என கேட்டபடி, அவளின் கையை இறக்கி விட்டவன்,
அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு,
“எனக்கு இன்னொரு அம்மா போலத்தான் நீ பொண்டாட்டி. இனி எப்பவுமே என் கூட இருப்பீயா?” என்று கேட்டதும்,
அவனை அருகில் வரவழைத்து அவனின் நெற்றியில் பதிலுக்கு முத்தமிட்டவள்,
“உங்க கூட கடைசி வரைக்கும் நான் இருப்பன் மாமா.” என கூறினாள்.
இருவரும், இணைந்து கைகள் கோர்த்து, மென் சிரிப்புடன் அந்த நெகிழ்வான தருணத்தை உணர்ந்து கொண்டிருக்கும் போது,
“நாங்களும் உள்ள வரலாமா?” என கேட்டபடி,
ஆதியும், அபர்ணாவும் கண்களை கைகளால் மூடிக் கொண்டு, குறுஞ் சிரிப்புடன் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களைக் கண்டதும் தீரன் சற்று விலகி அமர,
“நாங்க ரெண்டு பேரும் எதையுமே பார்க்கல.” என கேலி பேசிய ஆதியைக் கண்டு, தீரன் முறைக்க,
அவனோ, அதைக் கவனிக்காது, “இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத் தான் தைரியம் ஜாஸ்தி அண்ணி. உங்க ஹஸ்பண்ட் சொன்னாருன்னு இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கீங்க பாருங்க. நீங்க தான் நவீன யுக வாசுகி.” என குனிந்து நிமிர,
அவனது செய்கையில், தீரனுக்கு அடக்க முடியாது புன்னகை அரும்பியது.
தமயந்தியோ, அந்த நிலையிலும் மெதுவாக புன்னகை செய்தாள் என்றால், அபர்ணா, கணவனின் செய்கையில் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.
அந்த சூழ்நிலையை இலகுவாக்க அவன் எடுத்துக் கொண்ட முயற்சியைக் கண்டு அபர்ணா அவனுக்கு காற்றில் முத்தம் ஒன்றை பரிசளிக்க, அவன் பதிலுக்கு முத்தம் ஒன்றை பரிசளிக்க,
தமயந்தியின் புன்னகையை ஆசையுடன் தீரன் ரசிக்க,
அவனது பார்வையில் நாணம் கொண்டு அவள் கண் சிமிட்டினாள்.
அந்தத் தருணம் மேலும் தொடர வேண்டும், அவர்களின் சந்தோசம் வாழ்க்கை முழுக்க நிலைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு,
சிவகாமி அம்மா, இரு ஜோடிகளுக்கும் நெட்டி முறிக்க,
மேலிருந்து இரு பெண்களின் பெற்றோர்களும், சிவகாமி அம்மாவும், இரு ஜோடிகளையும் அன்பாக வாழ்த்தினர்.
நாமும், இரு ஜோடிகளையும் வாழ்த்தி விடை பெறு வோம்.
தீரன் மற்றும் நம் தமயந்தி காதலுக்காக இந்த வரிகள்….
அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்….
நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார்….
காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை….
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை….
தொட தொட மலர்ந்ததென்ன பூவே. சுடச்சுட நனைந்ததென்ன….
பார்வைகள் புதிது…. ஸ்பரிசங்கள் புதிது…. நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன….
நன்றி.
கதையோடு பயணித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ். 😍😍
லேட் எபி போட்டாலும் மறக்காம படிச்சிட்டு சப்போர்ட் பண்ணிய மக்காஸ் உங்களுக்கு பெரிய நன்றிகள்.
சீக்கிரம் அடுத்த கதையுடன் வரேன்.
உங்களின் அன்பு நண்பி,
தாரதி.
Episode -49
கோடீஸ்வரனின் முகத்தைப் பார்த்ததும், ஒரு நொடி ஆதியும் சரி, தீரனும் சரி அசந்து தான் போனார்கள்.
அவரின் முகத்தில் கை விரல்களின் அடையாளம் அப்படி பதிந்து போய் இருந்தது.
தீரனோ, அவரை ஒரு நொடி கூர்ந்து பார்த்து விட்டு, அப்படியே பார்வையை அங்கே இருந்த தமயந்தி மீது செலுத்த,
அவளும் புருவத்தை உயர்த்தி “என்ன?” என்பது போல அவனைப் பார்த்தாள்.
அவனுக்கு உண்மையில் எப்படி எதிர் வினையாற்றுவது எனப் புரியாத நிலை.
தான் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக இப்படி வந்து நிற்கும் மனைவியைக் கண்டு, அவனுக்கு பேச்சு வர மறுத்தது.
எவ்வளவு பெரிய சிக்கலில் தானே வந்து மாட்டி இருக்கிறாள்?,
இந்த முயற்சியில் அவளது உயிர் கூட போயிருக்க வாய்ப்பு உண்டு.
ஆனாலும் அதனைக் கூட மதிக்காது, இப்படி வந்து நிற்கிறாள் என்றால் அதற்கு காரணம் அவன் மீது அவள் கொண்ட காதல் அன்றி வேறு ஏது?
அவன் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக, அவள் இவ்வளவு தூரம் செய்து இருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் அவன் மீது அவள் கொண்ட உயிர் நேசம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
ஆனால், இப்போது காதலைக் கொண்டாடும் தருணமோ, அதற்கு உரிய சந்தர்ப்பமோ இப்போது இல்லையே.
அவளை இந்த அயோக்கியனிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமே என எண்ணிய போது தான் தமயந்தியை உற்றுக் கவனித்தான் தீரன்.
அவளின் இரு கன்னங்களிலும் கை விரல் அடையாளங்கள் பதிந்து இருந்தது.
ஆனாலும் வலியை வெளியில் காட்டாது திமிராக அமர்ந்து இருந்தாள் பெண்ணவள்.
அவள் எத்துணை மென்மையானவள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்
அப்படிப் பட்டவள் இன்று இப்படி, வலிகளைத் தாண்டி சீறிப் பாய காரணம் அவன் மாத்திரம் தான்.
“தீரன் பொண்டாட்டிடா.” என அவன் மார் தட்டிக் கொள்ள ஆசை கொண்டாலும். அவளின் சோர்ந்த முகம் அவனை வாட்டி வதைத்தது.
அவளை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள் எனத் தெரிந்ததும் அவனின் இரத்தம் மொத்தமும் கொதிக்க ஆரம்பித்தது.
அவனால் ஒரு இடத்தில் நிலை கொள்ள முடியாது போகவே, சிரமப் பட்டு தன்னை அடக்கிக் கொண்டான்.
அவனின் கோபம் அவனது விவேகத்தை தடை செய்யும். அது அவனுக்கு நல்லது இல்லையே.
இப்போது அவனுக்கு வேகத்தை விட முக்கியமானது விவேகம் இல்லையா….
இப்போது கவலையைக் காண்பித்தாலோ, இல்லை கோபத்தைக் காட்டினாலோ அவன் தோற்று விடுவான் அவனின் மனையாளும் தோற்று விடுவாள். ஆகவே அவன் அமைதி காத்தான்.
கெத்தான முகத்தையே வெளியில் காண்பித்தான். கோடீஸ்வரனை நோக்கி இளப்பமான புன்னகை ஒன்றை சிந்தியவன்,
“என்ன கோடீஸ்வரன் அடி பலமா விழுந்து இருக்கு போல. இந்த அடி போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?, என் பொண்டாட்டி சரியான வேலை தான் செய்து இருக்கா.” என கூறி கிண்டலாக சிரிக்கவும்,
அவனது முகத்தில் தமயந்தியைக் கண்டதும், பயம், பதட்டம் வரும் என் எதிர் பார்த்தவர்,
அது எதுவும் இல்லாது போகவும், ஒரு கணம் ஏமாந்து தான் போனார்.
தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என எண்ணியவருக்கு முகம் கன்றிப் போனது.
அவரின் முகக் கன்றலை திருப்தியுடன் பார்த்தான் தீரன்.
“என்ன கோடீஸ்வரன் என் கண்ணில சின்னக் கலக்கத்தைக் கூடக் காணோம்னு ரொம்ப பீல் பண்ற மாதிரி இருக்கே.” என அப்போதும் கேலியாக கேட்க,
பதிலுக்கு கோடீஸ்வரனும், “என்னடா திமிரா நான் இப்பவே உன்ன என் முன்னாடி மண்டியிட வைக்க முடியும். உன் பொண்டாட்டி அதுதான் என்னோட அருமை வளர்ப்புப் புத்திரி என் மேல கை வைக்கும் போது, என் புருஷனுக்கும், ஆதிக்கும் நீங்க செய்த கொடுமைக்கு நான் தர்ற பரிசுன்னு சொல்லித் தான்டா என்னை அறைஞ்சா. நல்லவ போலவே வந்து, அப்பா அவர் சொன்னது எதையும் நான் நம்பலப்பா, உங்கள பத்தி எனக்கு தெரியும் அப்பா. என்னோட சொத்து முழுக்க உங்களுக்கு எழுதித் தரேன்னு சொல்லி, அமைதியாப் பேசிட்டு, என் பக்கத்தில வந்து நான் எதிர் பார்க்காத நேரம் அறைஞ்சிட்டா. ரொம்ப நல்லா நடிச்சு என்ன ஏமாத்திட்டா. ஆனாலும் அவளுக்கு தைரியம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி தான்டா.என் இடத்துக்கு தில்லா தனியா வந்து இருக்கா.”
“பூனை போல இருக்கிறவ இன்னைக்கு புலி போலப் பாயக் காரணம் நீ தான்டா. அவ என்னையே எதிர்த்து நிற்க காரணமும் நீ. ஒரு அடிக்கே சுருண்டு விழுறவ, அத்தனை அடி வாங்கியும் தில்லா நிக்கிறாடா. அதுக்கு காரணம் உன் மேல இருக்கிற காதல். என்ன அடிச்சப்போ உன் பொண்டாட்டிய கண்டம் துண்டமா வெட்டிப் போடணும்ணு எனக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்துதுடா. ஆனா அவளால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு.”
“அந்த ஒரு காரணத்துக்காகத் தான் அமைதி காக்கிறன். அவ முன்னாடியே உன்னையும், உன்னோட அருமைத் தம்பியையும் போட்டுத் தள்ளிட்டு அதுக்கப்புறம் அவளையும் மேலோகம் அனுப்பி வைக்கிறேன். அங்க போய் சந்தோஷமா வாழ்ந்து கொள்ளுங்க. அவ கண்ணு முன்னாடியே நீங்க இரண்டு பேரும் சாகணும் அது தான் அவளுக்கு நான் கொடுக்கப் போற மிகப் பெரிய கிப்ட்.”
“நீங்க இரண்டு பேரும் நான் பாவம் பார்த்து விட்டதால வளர்ந்து நிற்கிற காட்டுச் செடிங்கடா. உங்கள வேரோட வெட்டிப் போட்டா கேட்கிறதுக்கு யாரு இருக்காங்கடா?” என கத்த,
அவரின் பேச்சில், தீரனை விட அதிகம் கோபம் கொண்டு கொந்தளித்து நின்றது என்னவோ ஆதி தான்.
அவனது கை முஷ்டிகள் இறுகிப் போய் நின்றவனின் கைகளைப் பற்றி அவனை சற்று சமாதானப் படுத்தினான் தீரன்.
அண்ணனுக்காக அமைதியாக நின்றவன், அவனை ஏறிட்டுப் பார்க்க,
தீரன் கண்களை ஒரு முறை மூடித் திறந்தவன், குறித்த சைகை மூலம் செய்ய வேண்டியதை உணர்த்த,
ஆதியும் புரிந்து கொண்டு, கண் சிமிட்டி விட்டு,
அடுத்த நொடி க கையை நீட்டி,
“போதும் மிஸ்டர் கோடீஸ்வரன் உங்க பேச்சு. காது வலிக்குது. சும்மா வெட்டிப் பேச்சுப் பேசாம, முக்கியமான விஷயத்துக்கு வருவோமா?, இப்போ என்ன ஒண்ணு நீங்க…. தப்பு…. தப்பு…. நீ சாகணும். இல்ல நாங்க சாகணும் அவ்வளவு தானே. இதுக்கு எதுக்கு பக்கம் பக்கமா டயலாக் பேசுறாய். சும்மா வள வளன்னு.” என கிண்டலாக கூற,
“ஏய்…. நான் உன்னோட அப்பன்டா….”
“யாரு நீ?, அப்பா என்கிற வார்த்தைக்கு உரிய அர்த்தம் தெரியுமா உனக்கு?, அப்பான்னா, பாசம், பாதுகாப்பு, நல்ல பழக்கங்கள் எல்லாத்துக்கும்முன் உதாரணமா இருக்கணும். பிள்ளைங்கள கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துக்கணும். கண்ண மூடிக்கொண்டு கடைசிக் காரியம் பண்ண யோசிக்க கூடாது. இப்போ இருக்கிற பல பேர் பிள்ளைங்கள பெத்தா மட்டும் போதும்ன்னு நினைக்கிறாங்களே தவிர, அவங்கள சமூகத்துல ஒரு நல்ல பிரஜையா உருவாக்கணும்ன்னு நினைக்கிறது இல்லை.”
“பெத்ததோட கடமை முடிஞ்சுதுன்னா…. எப்படி உங்கள அப்பான்னு கூப்பிட முடியும். இன்னைக்கு சமுதாயம் கெட்டுப் போக காரணமே உங்கள மாதிரி ஆட்கள் தான். ஏனோ தானோன்னு பிள்ளைங்கள கவனிக்காம விடுறதால தான், பல பிள்ளைங்க தடம் மாறி அழிஞ்சு போறாங்க. எல்லாப் பிள்ளைகளும் பிறக்கும் போது நல்லவங்க தான். ஆனா வளரும் போது தான் சறுக்கிறாங்க. அதுக்கு காரணம் உன்ன மாதிரி சுயநலமான பெற்றோர்கள் தான்.”
“அதே மாதிரி உங்களோட ஒண்ணுக்கும் உதவாத மூட நம்பிக்கையால தான் சூனியம் வைக்கிறவன் மாடி வீடு கட்டுறான். கஷ்டப் பட்டு உழைச்சு மாடி வீடு கட்டினவன் பிச்சைக் காரன் ஆகிறான். முழுசா கடவுள நம்புற நீங்க எதுக்கு இந்த மாதிரி ஆட்கள நம்பணும். அத விடு. நான் என்னையா தப்பு செய்தன். உனக்கு பிள்ளையா பிறந்தத தவிர.”
“எனக்கு அப்பான்னா நான் கை காட்டுறது என்னோட சதாசிவம் அப்பாவாத் தான் இருக்கும். எனக்கு ஒண்ணு இல்லை இரண்டு அப்பா இருக்காங்க. என்ன குழப்பமா இருக்கா என்னோட இன்னொரு அப்பா என் அண்ணன் தான்.” என தீரனைக் கை காட்ட,
தீரனின் கண்கள் தானாக கலங்கியது.
தமயந்திக்கோ, ஆதியின் பேச்சுக்கு விசில் அடிக்க வேண்டும் போல இருக்க,
கை, கால்கள் கட்டப் பட்ட நிலையில் முடியாது போக,
“அப்படி சொல்லு ஆதி, இவர எல்லாம், மனுஷ ஜென்மத்துல சேர்க்க முடியாது. இன்னைக்கு தான்டா சாட்டையடியாப் பேசி இருக்காய். அப்படியே உன்னோட முகத்தையும் இந்த மிருகத்துக்கு காட்டு, அப்போ தான் உன்னோட வெறியும், கோபமும் புரியும்டா.” எனக் கூறியவளை,
ஆதியும், தீரனும் புருவம் தூக்கிப் பார்த்தனர்.
அவளின் பேச்சில் தீரனுக்கு புது உத்வேகமே பிறந்தது.
ஆதியோ, “அப்படி சொல்லுங்க அண்ணி.” எனக் கூறவும்,
“ஏய், என்னடா ஆளாளுக்கு படம் காட்டுறீங்களா?” என கர்ஜித்த கோடீஸ்வரன்,
மேலும் ஏதோ சொல்ல வர,
காதைக் குடைந்த, ஆதி, “இதுக்கு மேல நோ பேச்சு. ஒன்லி ஆக்ஷன் மட்டும் தான். இப்போ பாருங்க அண்ணி வேடிக்கையை.” என கூறி விட்டு,
சத்தமாக விசில் அடிக்க, அடுத்த நொடி, பட்டென்று மேலிருந்து கூரையைப் பிய்த்துக் கொண்டு, வந்து குதித்த தீரனின் ஆட்கள், கோடீஸ்வரனும், அவரது ஆட்களும் எதிர் பாரா வண்ணம், பட படவென அங்கிருந்த அவரது ஆட்களை சுட்டுத் தள்ள ஆரம்பித்தனர்.
இந்த அதிரடியை கோடீஸ்வரனே எதிர் பார்க்கவில்லை.
அவர், பணயமாக தமயந்தியை வைத்து மிரட்டலாம் என எண்ணி, அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க,
அவரைப் போக விடாது தடுத்து எட்டி உதைந்த தீரன், அவர் எழும் முன் மின்னல் வேகத்தில் தமயந்தியை காப்பாற்றி இருந்தான்.
அதே போல, ஆதியும் ஒரு பக்கமாக, கோடீஸ்வரனின் ஆட்களைப் பந்தாடிக் கொண்டு இருந்தான்.
இரு சிங்கங்களும் இணைந்து அந்த இடத்தை அதகளம் பண்ணிக் கொண்டு இருந்தனர்.
தீரன், தமயந்தியை ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்தததுடன், காவலுக்கு, தனது ஆட்களையும் நிறுத்தி வைத்து இருந்ததனால் வேறு யாரும் அவளை நெருங்கக் கூட முடியவில்லை.
அவளின் அருகில் கூட யாராலும், போக முடியாத நிலை.
ஒரு பக்கம், தீரனும், ஆதியும் சிம்பிளாக ஜெயித்துக் கொண்டு இருந்தனர்.
இருவரின் பலத்துக்கும் முன்னாலும், கோடீஸ்வரனின் ஆட்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கோடீஸ்வரன் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் குறைய ஆரம்பித்தனர்.
தனது ஆட்களை முன்னால் ஏவி விட்டவர், மெதுவாக ஆதி, மற்றும் தீரன் இருவரது கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு,
அங்கும் இங்கும் பார்த்து விட்டு, மறைவான இடம் நோக்கி சத்தம் இல்லாது நகர்ந்து சென்று நின்று கொண்டார்.
அங்கிருந்து மறைந்து நின்றாலும் அவரின் கண்கள் அங்கு நடக்கும் அனைத்தையும் உற்றுக் கவனித்துக் கொண்டு தான் இருந்தது.
ஆதியை விட இப்போது அவருக்கு கோபம் அதிகம் இருப்பது எல்லாம் தீரன் மீது தான்.
அவன் தானே, சிறு வயதில் இருந்து ஆதியை காப்பாற்றி வளர்த்துக் கொண்டு வந்து இருக்கிறான்.
அவர் அழிக்க நினைத்த ஒரு விதையை, அவன் வளர்த்து விருட்சம் ஆக்கி வைத்து இருக்கிறான் அல்லவா.
அவருக்கு எதிராக அவன் வளர்ந்து நிற்க காரணம் அவன்.
தமயந்தி, அபர்ணாவின் சொத்து அவருக்கு வராது போக காரணம் அவன்.
இரு பெண்களுக்கும் உண்மை தெரியக் காரணம் அவன்.
அவரின் சொத்துக்கள் அணு அணுவாக அழிந்து போக காரணம் அவன்.
இன்று, தமயந்தி அவரை அறைய காரணமும் அவனே தான்.
ஆதியை அவர் அழிக்க நினைத்த காரணம் வேறு.
ஆனால் இப்போது தீரனை, அவர் அழிக்க நினைக்கும் காரணம் அவனின் மீது உள்ள அதீத கோபம் தான்.
ஆதியை விட உடனடியாக தீரனைப் பழி வாங்க வேண்டும் என எண்ணினார் அவர்.
அவரின் கேடான ஆசை நிறை வேறுமா?
இல்லை தீரன் அவருக்கு முடிவு கட்டுவானா?
தமயந்தி, கணவனைக் காப்பாற்ற முன் வருவாளா?
Older Posts