Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 32 (On Going Story)

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 32 (On Going Story)

by Thivya Sathurshi
4.9
(17)

வாழ்வு : 32

மணிகண்டன் மிகுந்த கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். “என்னங்க, என்னாச்சு உங்க முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு? ஏதாவது பிரச்சனையா?”

“உன்ன சொல்லணும் டி.. எல்லாம் நீ பெத்து போட்டியே ஒரு பொண்ணு அவளால வந்த பிரச்சனை. ஓடுகாலி கழுதை.. எவனோட ஓடிப்போச்சுன்னே தெரியல.. இப்போ அந்த விக்டர் வந்து நம்ம பொண்ணு தேவையில்ல ஒன்னும் தேவை இல்லன்னு சொல்லி கத்திட்டு இருந்தான். அப்புறம் நம்ம சொத்து எல்லாம் அவனோட பேருக்கு மாத்தி எடுத்திட்டு போயிட்டான்.”

“என்ன சொல்றீங்க, அப்போ நம்ம பேருல எந்த சொத்தும் இல்லையா? இப்போ என்ன தாங்க பண்றது?” “என்ன பண்றதா? ரோட்ல போய் பிச்சை தான் எடுக்கணும். இந்த வீட்டுக்கு கூட ஒரு நாள் தான் டைம் கொடுத்து இருக்கிறான். ஒரு நாள்ல இங்க இருந்து நம்ம கிளம்பனும் இல்லைன்னா நம்ம உசுரு கூட மிஞ்சாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் உன்னோட பொண்ணு வித்யாவை மட்டும் கண்டுபிடிச்சேன்னு வை என் கையால தான் அவளோட சாவு.”

“என்னங்க இப்படி பேசுறீங்க? என்ன இருந்தாலும் அவ நாம ஆசையா பெத்த பொண்ணுங்க.”

“அதுக்காக இப்படி நம்மள சந்தி சிரிக்க வச்சுட்டு, பிச்சைக்காரங்க ஆக்கிப்புட்டு போனவ அவளை எப்பவும் என்னால மன்னிக்க முடியாது.”

“இப்ப என்னங்க பண்றது?”

“என்ன பண்றது, எங்கையாவது போய் தொலைவோம், உன் ட்ரெஸ் எல்லாம் எடுத்து வை.”

“எங்க தாங்க போறது?”

“எங்க போறது? எங்க போறதுனு என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்? கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?” என்றவர் தனது அறைக்குள் சென்றார். 

‘என்ன இப்படி சொல்லிட்டு போயிட்டாரு.. இவரு இருக்கிற கோவத்தில என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரே. என்ன பண்ணலாம்’ என்று யோசித்தவாறு உட்கார்ந்தார் லீலாவதி.  

அப்போது லீலாவதிக்கு ஒரு போன் வந்தது. “யாரா இருக்கும், புது நம்பர்ல இருந்து கால் வருது. ஒரு வேளை வித்யாவா இருக்குமோ?”என்றவர் உடனே போனை எடுத்தார். 

“ஹலோ யாரு?”

“நான் யார் என்றது முக்கியம் இல்ல. நான் சொல்ல போற விஷயம் தான் முக்கியம்.”

“என்ன விஷயம்?”

“இங்க பாருங்க உங்க வளர்ப்பு பொண்ணு சம்யுக்தாவுக்கும் ஊட்டியில இருக்கிற பெரிய பிஸ்னஸ்மேனுக்கும் நாளைக்கு கல்யாணம்.”

“வாட் சம்யுக்தாவுக்கும் இன்னொரு கல்யாணமா? என்ன விளையாட்டுறீங்களா?”

“இங்க பாருங்க மேடம், நான் சொல்றது உண்மைதான். நாளைக்கு சம்யுக்தா மேடம்க்கும் தீஷிதன் சார்க்கும் கல்யாணம். அதுவும் ஊட்டியில் இருக்கிற பெரிய ஹால்ல நடக்க இருக்கு. நீங்க கண்டிப்பா வரணும்னு எங்க பாஸ் உங்க கிட்ட சொல்ல சொன்னாரு.”

“எவன்டா உன் பாஸ்?”

“என் பாஸ் தீஷிதன் சார். இதோ இப்போ கூட உங்களுக்கு வாட்ஸ் அப்ல அவங்களோட இன்விடேஷன் அனுப்ப சொன்னாரு. நான் அனுப்பி இருக்கேன் பாருங்க. கண்டிப்பா நீங்க இங்க வந்தே ஆகணும்.” 

“அந்த ஒன்னுத்துக்குமே உதவாதவ கல்யாணத்துக்கு நான் எதுக்கு வரணும்? அதெல்லாம் வர முடியாது.”

“நீங்க வநுதே ஆகணும்ன்றது என் பாஸோட ஆர்டர்.”

“டேய் யார்டா உன் பாஸ்? எனக்கு தெரியாது சும்மா ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்க? நான் வேற கடுப்புல இருக்கேன். நீ வேற மரியாதையா போனை வை..” என்று கத்திவிட்டு ஃபோனை வைத்தார். 

பின் தனது போனை எடுத்து வாட்ஸ்அப்பை பார்க்க, அங்கே சம்யுக்தா தீஷிதனின் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் படமும் அவர்களுடைய திருமண அழைப்பிதழும் வந்திருந்தது. அதைப் பார்த்ததற்கே லீலாவின் வாய் வயிறு எல்லாம் எரிந்தது. ‘இங்க நாங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம். இவ எப்படி சந்தோஷமா இருக்கான்னு பாரு..’ என்று கோபப்பட்டவர், “என்னங்க…. என்னங்க…” என்றார். 

அவரது சத்தத்தில் அங்கே வந்த மணிகண்டன், “என்னடி ஒரு மனுஷனை நிம்மதியா கொஞ்ச நேரம்கூட இருக்க விட மாட்டியா?”

“இங்க பாருங்க அந்த வீணா போன சம்யுக்தாக்கு ரெண்டாவது கல்யாணமாம். மாப்பிள்ளை பெரிய பிசினஸ்மேன்னு போட்டு இருக்கு.”

“என்ன ரெண்டாவது கல்யாணமா? எங்க பார்ப்போம்.” என்றவர் அந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

“அடியே இவன் ஊட்டியிலேயே பெரிய பிசினஸ்மேன்.. சென்னைல கூட இவனுக்கு நிறைய கம்பெனிஸ் இருக்கு.. ரொம்ப பெரிய இடம்.. ஆனா இவ எப்படி அங்க இவன் கூட?”

“யாருக்குத் தெரியும்? அதிர்ஷ்டம் தான் பாருங்களேன். அவளுக்கு வந்த வாழ்க்கையை.. இவெல்லாம் நல்லாவே இருக்க மாட்டா. நம்ம இப்போ எப்படி கஷ்டப்படுறோம்.. இவ மட்டும் எப்படி சொகுசா வாழ்றா பாருங்க?” என்று கடுகு போல பொரிந்து தள்ளினார் லீலாவதி. 

சற்று நேரம் அந்த போட்டோவை பார்த்து மணிகண்டனுக்கு ஒரு ஐடியா வந்தது. “லீலா எனக்கு ஒரு ஐடியா தோணுது.”

“என்னங்க?”

“இங்க பாரு இப்போ நம்ம போறதுக்கு போக்கிடம் ஒன்னும் இல்ல. சொத்து பத்து எல்லாம் அந்த விக்டருக்கு போயிடுச்சு. இப்போ நமக்கு இருக்கிற ஒரே ட்ரம் காட் இந்த சம்யுக்தா தான்.”

“என்னங்க சொல்றீங்க?”

“நம்ம போய் சம்யுக்தாவைப் பார்க்கலாம்.. அவ கல்யாணத்துக்கு போற மாதிரி போய் நைசா அவ கூடவே தங்கிக்கலாம். இப்போ இவளை விட்டா நமக்கு வேற வழி கிடையாது.”

“அதுக்காக நம்ம வீட்டை விட்டு விரட்டின அவளோட கால்ல போய் விழச் சொல்றீங்களா? நாம போனாலும் அவ ஏத்துப்பாளா?”

“ஏய் அவ ரொம்ப நல்லவ. அதனால நம்ம எப்போ போனாலும் ஏத்துக்குவா. இப்பா நமக்கு இருக்கிற ஒரே வழி இவதான். இங்க பணம் இல்லாம இருக்க முடியாது. ஆமா உனக்கு கால் பண்ண நம்பருக்கு கால் பண்ணி நம்ம அங்க வர்றதா சொல்லு.”

“என்னால அவன்கிட்ட பேச முடியாது நீங்களே பேசுங்க.” என்றவர் அவரனுக்கு போன் பண்ணினார். கால் அடித்ததும் எடுத்தவர், “ஹலோ யாருங்க நீங்க? என் பொண்ணு சம்யுக்தா எங்க?”

“இருங்க சார் மணிகண்டன் சார்.. எங்க பாஸ்தான் இந்த நம்பருக்கு இன்விடேஷன் அனுப்ப சொன்னாங்க.. கண்டிப்பா நீங்க இதை கல்யாணத்துக்கு வரணும்னு சொல்ல சொன்னாங்க..”

“சரிங்க நான் வரேன் ஆனா நான் எப்படி வர்றது?”

“அதுக்கு ஒன்னும் பயப்பட வேண்டாம் சார்.. எங்க பாஸ் அதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணுவாரு. நீங்க ரெடியாயிட்டு கால் பண்ணுங்க. நான் உங்களுக்கு கார் அனுப்பறேன்.”

“சரி நான் உங்களுக்கு கால் பண்றேன்.” என்றவர் ஃபோனை வைத்துவிட்டு, “பெரிய புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்கா. நம்மள அவனே காரை அனுப்பி நம்மல வீட்டுக்கு கூப்பிடுறான். நாம அங்க போயிடலாம்.. நீ நமக்கு தேவையான ட்ரெஸ்ஸ மட்டும் எடுத்து பேக் பண்ணு.”

“சரிங்க..” என்று லீலாவதி அந்த வேலையை செய்ய உள்ளே சென்றார். 

…………………………………………………

தீஷிதன் வீட்டிற்கு கூட செல்லாமல் நேரே ஹாஸ்பிடலுக்குச் சென்றான். அங்கே அவன் கொண்டு வந்தவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கி டெஸ்ட் எடுக்க அனுப்பி வைத்தார். “தீஷிதன் நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ரிப்போர்ட் இப்போ வந்திடும்.”

“ஓகே டாக்டர். நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி என் ஃபியான்சி மயக்கம் போட்டுட்டாங்கனு கூட்டிட்டு வந்தப்போ ஒரு டெஸ்ட் எடுக்க சொன்னேனே.. அந்த ரிப்போர்ட்டை வந்திட்டா?”

“யெஸ் தீஷிதன். அந்த ரிப்போர்ட் நேற்றுதான் வந்தது.” என்றவர் நர்ஸை அழைத்து தீஷிதன் கேட்ட ரிப்போர்ட்டை எடுத்து வரச் சொன்னார். நர்ஸ் ரிப்போர்ட்டை எடுத்து வந்து டாக்டரிடம் கொடுத்தார். 

தீஷிதன் தனக்கு முன் இருக்கும் டாக்டரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் கூறும் பதிலால் பல மாற்றங்கள் நடக்க இருக்கிறது. தனது கையில் இருந்த ரிப்போர்ட்டை நன்கு பார்த்து விட்டு, தீஷிதனை நிமிர்ந்து பார்த்தார் டாக்டர். அப்போது தீஷிதனுக்கு போன் வந்தது. எடுத்துப் பார்க்க சம்யுக்தாதான் அழைத்திருந்தாள். சிரித்துக் கொண்டு டாக்டரிடம், “டாக்டர் ப்ளீஸ் ஒன் மினிட்..”

“ இட்ஸ் ஓகே தீஷிதன்.” என்றதும் போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். 

“யுக்தா சொல்லுமா”

“எங்க இருக்கீங்க? இன்னும் வீட்டிற்கு வரல.. மாமாவேற உங்களை தேடிட்டு இருக்காங்க.. எங்க போறீங்கனு சொல்லிட்டாவது போயிருக்கலாமே..”என்று படபட என்று பேசினாள். இதைக் கேட்ட தீஷிதன், “என்ன மேடம், படபடனு பட்டாசு மாதிரி வெடிக்கிறீங்க? அக்மார்க் பொண்டாட்டியாவே மாறிட்டீங்க.. எனக்கு வேலை மிச்சம் போ.. நான் நல்லா இருக்கேன்.. ஊட்டியிலதான் இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களை பார்க்க ஓடி வந்திடுவன்” என்றான். 

“இல்லைங்க மாமா தான் உங்களை காணோம்னு…”

“அப்போ மேடம் என்னை தேடலையா?” என்றதற்கு சம்யுக்தா பதில் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். 

“ஓகே இதுக்கு நீங்க இப்போ பதில் சொல்ல வேண்டாம்.. நான் சீக்கிரமாவே வந்துடறேன்..” என்றவன் போனை வைத்து விட்டு டாக்டரிடம் சென்றான். 

“சாரி டாக்டர்..”

“இட்ஸ் ஓகே தீஷிதன்.. இந்த ரிப்போர்ட்ல நீங்க சொன்ன மாதிரி எந்த ப்ராப்ளமும் இல்ல. சம்யுக்தா நல்லா இருக்கிறாங்க. அவங்க ஹெல்த் ரொம்ப நல்லா இருக்கு. அப்புறம் அவங்களால குழந்தை பெத்துக்க முடியும். அதுல எந்த பிரச்சனையும் இல்லை..”

“டாக்டர் நிஜமா சம்யுக்தாக்கு குழந்தை பிறக்கிறதுல ப்ராப்ளம் இல்லையே..”

“உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்கிறாங்க தீஷிதன். நூறு வீதம் நான் அடிச்சு சொல்லுவேன் சம்யுக்தாவால் தாயாக முடியும்.”

இதை கேட்டதும் தீஷிதன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.. யுக்தா இதை நினைச்சித்தான் ரொம்ப கவலைப்பட்டா…”

“அவங்க கிட்ட சொல்லுங்க தீஷிதன்.. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுத்த ரிப்போர்ட்டை எடுத்து வந்தார் நர்ஸ். 

அந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர், தீஷிதனிடம், “தீஷிதன் இன்னைக்கு உங்களோட சந்தேகம் எல்லாம் தீர்ந்து போகணும்னு இருக்கு போல..”

“என்ன டாக்டர் சொல்றீங்க?”

“ஆமா தீஷிதன் நீங்க கேட்டது இப்போ கன்பார்மாகிருக்கு.. உங்களுக்கு இதுல எந்த டவுட்டுமே வேண்டாம்” என்றார் டாக்டர். 

தீஷிதனுக்கு என்ன சொல்றதுனே தெரியல. எல்லாப் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது போல இருந்தது. அதே சமயத்தில் அவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தான். டாக்டரிடம் நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்வாழ்வு : 32

மணிகண்டன் மிகுந்த கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். “என்னங்க, என்னாச்சு உங்க முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு? ஏதாவது பிரச்சனையா?”

“உன்ன சொல்லணும் டி.. எல்லாம் நீ பெத்து போட்டியே ஒரு பொண்ணு அவளால வந்த பிரச்சனை. ஓடுகாலி கழுதை.. எவனோட ஓடிப்போச்சுன்னே தெரியல.. இப்போ அந்த விக்டர் வந்து நம்ம பொண்ணு தேவையில்ல ஒன்னும் தேவை இல்லன்னு சொல்லி கத்திட்டு இருந்தான். அப்புறம் நம்ம சொத்து எல்லாம் அவனோட பேருக்கு மாத்தி எடுத்திட்டு போயிட்டான்.”

“என்ன சொல்றீங்க, அப்போ நம்ம பேருல எந்த சொத்தும் இல்லையா? இப்போ என்ன தாங்க பண்றது?” “என்ன பண்றதா? ரோட்ல போய் பிச்சை தான் எடுக்கணும். இந்த வீட்டுக்கு கூட ஒரு நாள் தான் டைம் கொடுத்து இருக்கிறான். ஒரு நாள்ல இங்க இருந்து நம்ம கிளம்பனும் இல்லைன்னா நம்ம உசுரு கூட மிஞ்சாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் உன்னோட பொண்ணு வித்யாவை மட்டும் கண்டுபிடிச்சேன்னு வை என் கையால தான் அவளோட சாவு.”

“என்னங்க இப்படி பேசுறீங்க? என்ன இருந்தாலும் அவ நாம ஆசையா பெத்த பொண்ணுங்க.”

“அதுக்காக இப்படி நம்மள சந்தி சிரிக்க வச்சுட்டு, பிச்சைக்காரங்க ஆக்கிப்புட்டு போனவ அவளை எப்பவும் என்னால மன்னிக்க முடியாது.”

“இப்ப என்னங்க பண்றது?”

“என்ன பண்றது, எங்கையாவது போய் தொலைவோம், உன் ட்ரெஸ் எல்லாம் எடுத்து வை.”

“எங்க தாங்க போறது?”

“எங்க போறது? எங்க போறதுனு என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்? கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?” என்றவர் தனது அறைக்குள் சென்றார். 

‘என்ன இப்படி சொல்லிட்டு போயிட்டாரு.. இவரு இருக்கிற கோவத்தில என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரே. என்ன பண்ணலாம்’ என்று யோசித்தவாறு உட்கார்ந்தார் லீலாவதி.  

அப்போது லீலாவதிக்கு ஒரு போன் வந்தது. “யாரா இருக்கும், புது நம்பர்ல இருந்து கால் வருது. ஒரு வேளை வித்யாவா இருக்குமோ?”என்றவர் உடனே போனை எடுத்தார். 

“ஹலோ யாரு?”

“நான் யார் என்றது முக்கியம் இல்ல. நான் சொல்ல போற விஷயம் தான் முக்கியம்.”

“என்ன விஷயம்?”

“இங்க பாருங்க  உங்க வளர்ப்பு பொண்ணு சம்யுக்தாவுக்கும் ஊட்டியில இருக்கிற பெரிய பிஸ்னஸ்மேனுக்கும் நாளைக்கு கல்யாணம்.”

“வாட் சம்யுக்தாவுக்கும் இன்னொரு கல்யாணமா? என்ன விளையாட்டுறீங்களா?”

“இங்க பாருங்க மேடம், நான் சொல்றது உண்மைதான். நாளைக்கு சம்யுக்தா மேடம்க்கும் தீஷிதன் சார்க்கும் கல்யாணம். அதுவும் ஊட்டியில் இருக்கிற பெரிய ஹால்ல நடக்க இருக்கு. நீங்க கண்டிப்பா வரணும்னு எங்க பாஸ் உங்க கிட்ட சொல்ல சொன்னாரு.”

“எவன்டா உன் பாஸ்?”

“என் பாஸ் தீஷிதன் சார். இதோ இப்போ கூட உங்களுக்கு வாட்ஸ் அப்ல அவங்களோட இன்விடேஷன் அனுப்ப சொன்னாரு. நான் அனுப்பி இருக்கேன் பாருங்க. கண்டிப்பா நீங்க இங்க வந்தே ஆகணும்.” 

“அந்த  ஒன்னுத்துக்குமே உதவாதவ கல்யாணத்துக்கு நான் எதுக்கு வரணும்? அதெல்லாம் வர முடியாது.”

“நீங்க வநுதே ஆகணும்ன்றது என் பாஸோட ஆர்டர்.”

“டேய் யார்டா உன் பாஸ்? எனக்கு தெரியாது சும்மா ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்க? நான் வேற கடுப்புல இருக்கேன். நீ வேற மரியாதையா போனை வை..” என்று கத்திவிட்டு ஃபோனை வைத்தார். 

பின் தனது போனை எடுத்து வாட்ஸ்அப்பை பார்க்க, அங்கே சம்யுக்தா தீஷிதனின் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் படமும் அவர்களுடைய திருமண அழைப்பிதழும் வந்திருந்தது. அதைப் பார்த்ததற்கே லீலாவின் வாய் வயிறு எல்லாம் எரிந்தது. ‘இங்க நாங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம். இவ எப்படி சந்தோஷமா இருக்கான்னு பாரு..’ என்று கோபப்பட்டவர், “என்னங்க…. என்னங்க…” என்றார். 

அவரது சத்தத்தில் அங்கே வந்த மணிகண்டன், “என்னடி ஒரு மனுஷனை நிம்மதியா கொஞ்ச நேரம்கூட இருக்க விட மாட்டியா?”

“இங்க பாருங்க அந்த வீணா போன சம்யுக்தாக்கு ரெண்டாவது கல்யாணமாம். மாப்பிள்ளை பெரிய பிசினஸ்மேன்னு போட்டு இருக்கு.”

“என்ன ரெண்டாவது கல்யாணமா? எங்க பார்ப்போம்.” என்றவர் அந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

“அடியே இவன் ஊட்டியிலேயே பெரிய பிசினஸ்மேன்.. சென்னைல கூட இவனுக்கு நிறைய கம்பெனிஸ் இருக்கு.. ரொம்ப பெரிய இடம்.. ஆனா இவ எப்படி  அங்க இவன் கூட?”

“யாருக்குத் தெரியும்? அதிர்ஷ்டம் தான் பாருங்களேன். அவளுக்கு வந்த வாழ்க்கையை.. இவெல்லாம் நல்லாவே இருக்க மாட்டா. நம்ம இப்போ எப்படி கஷ்டப்படுறோம்.. இவ மட்டும் எப்படி சொகுசா வாழ்றா பாருங்க?” என்று கடுகு போல பொரிந்து தள்ளினார் லீலாவதி. 

சற்று நேரம் அந்த போட்டோவை பார்த்து மணிகண்டனுக்கு ஒரு ஐடியா வந்தது. “லீலா எனக்கு ஒரு ஐடியா தோணுது.”

“என்னங்க?”

“இங்க பாரு இப்போ நம்ம போறதுக்கு போக்கிடம் ஒன்னும் இல்ல. சொத்து பத்து எல்லாம் அந்த விக்டருக்கு போயிடுச்சு. இப்போ நமக்கு இருக்கிற ஒரே ட்ரம் காட் இந்த சம்யுக்தா தான்.”

“என்னங்க சொல்றீங்க?”

“நம்ம போய் சம்யுக்தாவைப் பார்க்கலாம்.. அவ கல்யாணத்துக்கு போற மாதிரி போய் நைசா அவ கூடவே தங்கிக்கலாம்.  இப்போ இவளை விட்டா நமக்கு வேற வழி கிடையாது.”

“அதுக்காக நம்ம வீட்டை விட்டு விரட்டின அவளோட கால்ல போய் விழச் சொல்றீங்களா? நாம போனாலும் அவ ஏத்துப்பாளா?”

“ஏய் அவ ரொம்ப நல்லவ. அதனால நம்ம எப்போ போனாலும் ஏத்துக்குவா. இப்பா நமக்கு இருக்கிற ஒரே வழி இவதான். இங்க  பணம் இல்லாம இருக்க முடியாது. ஆமா உனக்கு கால் பண்ண நம்பருக்கு கால் பண்ணி நம்ம அங்க வர்றதா சொல்லு.”

“என்னால அவன்கிட்ட பேச முடியாது நீங்களே பேசுங்க.” என்றவர் அவரனுக்கு போன் பண்ணினார். கால் அடித்ததும் எடுத்தவர், “ஹலோ யாருங்க நீங்க? என் பொண்ணு சம்யுக்தா எங்க?”

“இருங்க சார் மணிகண்டன் சார்.. எங்க பாஸ்தான் இந்த நம்பருக்கு இன்விடேஷன் அனுப்ப சொன்னாங்க.. கண்டிப்பா நீங்க இதை கல்யாணத்துக்கு வரணும்னு சொல்ல சொன்னாங்க..”

“சரிங்க நான் வரேன் ஆனா நான் எப்படி வர்றது?”

“அதுக்கு ஒன்னும் பயப்பட வேண்டாம் சார்.. எங்க பாஸ் அதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணுவாரு. நீங்க ரெடியாயிட்டு கால் பண்ணுங்க. நான் உங்களுக்கு கார் அனுப்பறேன்.”

“சரி நான் உங்களுக்கு கால் பண்றேன்.” என்றவர் ஃபோனை வைத்துவிட்டு, “பெரிய புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்கா. நம்மள அவனே காரை அனுப்பி நம்மல வீட்டுக்கு கூப்பிடுறான். நாம அங்க போயிடலாம்.. நீ நமக்கு தேவையான ட்ரெஸ்ஸ மட்டும் எடுத்து பேக் பண்ணு.”

“சரிங்க..” என்று லீலாவதி  அந்த வேலையை செய்ய உள்ளே சென்றார். 

…………………………………………………

தீஷிதன் வீட்டிற்கு கூட செல்லாமல் நேரே ஹாஸ்பிடலுக்குச் சென்றான். அங்கே அவன் கொண்டு வந்தவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கி டெஸ்ட் எடுக்க அனுப்பி வைத்தார். “தீஷிதன் நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ரிப்போர்ட் இப்போ வந்திடும்.”

“ஓகே டாக்டர். நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி என் ஃபியான்சி மயக்கம் போட்டுட்டாங்கனு கூட்டிட்டு வந்தப்போ ஒரு டெஸ்ட் எடுக்க சொன்னேனே.. அந்த ரிப்போர்ட்டை வந்திட்டா?”

“யெஸ் தீஷிதன். அந்த ரிப்போர்ட் நேற்றுதான் வந்தது.” என்றவர் நர்ஸை அழைத்து தீஷிதன் கேட்ட ரிப்போர்ட்டை எடுத்து வரச் சொன்னார். நர்ஸ் ரிப்போர்ட்டை எடுத்து வந்து டாக்டரிடம் கொடுத்தார். 

தீஷிதன் தனக்கு முன் இருக்கும் டாக்டரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் கூறும் பதிலால் பல மாற்றங்கள் நடக்க இருக்கிறது. தனது கையில் இருந்த ரிப்போர்ட்டை நன்கு பார்த்து விட்டு, தீஷிதனை நிமிர்ந்து பார்த்தார் டாக்டர். அப்போது தீஷிதனுக்கு போன் வந்தது. எடுத்துப் பார்க்க சம்யுக்தாதான் அழைத்திருந்தாள். சிரித்துக் கொண்டு டாக்டரிடம், “டாக்டர் ப்ளீஸ் ஒன் மினிட்..”

“ இட்ஸ் ஓகே தீஷிதன்.” என்றதும் போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். 

“யுக்தா சொல்லுமா”

“எங்க இருக்கீங்க? இன்னும் வீட்டிற்கு வரல.. மாமாவேற உங்களை தேடிட்டு இருக்காங்க.. எங்க போறீங்கனு சொல்லிட்டாவது போயிருக்கலாமே..”என்று படபட என்று  பேசினாள். இதைக் கேட்ட தீஷிதன், “என்ன மேடம், படபடனு பட்டாசு மாதிரி வெடிக்கிறீங்க? அக்மார்க் பொண்டாட்டியாவே மாறிட்டீங்க.. எனக்கு வேலை மிச்சம் போ.. நான் நல்லா இருக்கேன்.. ஊட்டியிலதான் இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களை பார்க்க ஓடி வந்திடுவன்” என்றான். 

“இல்லைங்க மாமா தான் உங்களை காணோம்னு…”

“அப்போ மேடம் என்னை தேடலையா?” என்றதற்கு சம்யுக்தா பதில் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். 

“ஓகே இதுக்கு நீங்க இப்போ பதில் சொல்ல வேண்டாம்.. நான் சீக்கிரமாவே வந்துடறேன்..” என்றவன் போனை வைத்து விட்டு டாக்டரிடம் சென்றான். 

“சாரி டாக்டர்..”

“இட்ஸ் ஓகே தீஷிதன்.. இந்த ரிப்போர்ட்ல நீங்க சொன்ன மாதிரி எந்த ப்ராப்ளமும் இல்ல. சம்யுக்தா நல்லா இருக்கிறாங்க. அவங்க ஹெல்த் ரொம்ப நல்லா இருக்கு. அப்புறம் அவங்களால குழந்தை பெத்துக்க முடியும். அதுல எந்த பிரச்சனையும் இல்லை..”

“டாக்டர் நிஜமா சம்யுக்தாக்கு குழந்தை பிறக்கிறதுல ப்ராப்ளம் இல்லையே..”

“உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்கிறாங்க தீஷிதன். நூறு வீதம் நான் அடிச்சு சொல்லுவேன் சம்யுக்தாவால் தாயாக முடியும்.”

இதை கேட்டதும் தீஷிதன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.. யுக்தா இதை நினைச்சித்தான் ரொம்ப கவலைப்பட்டா…”

“அவங்க கிட்ட சொல்லுங்க தீஷிதன்.. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுத்த ரிப்போர்ட்டை எடுத்து வந்தார் நர்ஸ். 

அந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர், தீஷிதனிடம், “தீஷிதன் இன்னைக்கு உங்களோட சந்தேகம் எல்லாம் தீர்ந்து போகணும்னு இருக்கு போல..”

“என்ன டாக்டர் சொல்றீங்க?”

“ஆமா தீஷிதன் நீங்க கேட்டது இப்போ கன்பார்மாகிருக்கு.. உங்களுக்கு இதுல எந்த டவுட்டுமே வேண்டாம்” என்றார் டாக்டர். 

தீஷிதனுக்கு என்ன சொல்றதுனே தெரியல. எல்லாப் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது போல இருந்தது. அதே சமயத்தில் அவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தான். டாக்டரிடம் நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 

உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

You may also like

1 comment

babuvana October 1, 2025 - 4:55 pm

Wow super divima

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!