February 2025

இன்னிசை-19

,இன்னிசை – 19 மேனகா தான் எடுத்த முடிவை நினைத்து சற்றும் குழம்பவில்லை. இனி தனது வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எண்ணியவள், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனக்குள் யோசித்துக் கொண்டே அந்த பஸ் பிரயாணத்தை கடந்தாள். ‘ ஏதோ ஒரு தப்பு அத்தான் கிட்ட இருக்கு. கண்டுப்பிடிக்கிறேன்‌. நான் அந்த காட்டுல இஷ்டப்படி சுத்துறது அவருக்கு பிடிக்கலை. அதுக்கு என்னென்னவோ காரணம் சொல்லி என்னை முட்டாளாக்கியிருக்கார்.’ என்று எண்ணிக் […]

இன்னிசை-19 Read More »

இன்னிசை-18

இன்னிசை- 18 குழம்பி தவித்து நின்ற மேனகாவை கண்டு கொள்ளாமல் அவனது இருப்பிடத்திற்கு சென்றான் ரிஷிவர்மன். மேனகாவோ இரவு முழுவதும் உறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளது தவத்தை களைப்பதெற்கென்றே வந்திருந்தான் ரிஷிவர்மன். ” ப்ச்… மேனகா… இப்போ எதுக்கு ஊருக்கு கிளம்பாமல் சீன் போட்டுட்டு இருக்க?” என்று உலுக்க. ” ஹான்…” என்று சுயத்திற்கு வந்த மேனகா, அவனை மலங்க மலங்கப் பார்த்தாள். ” என்ன இன்னும் வேடிக்கைப் பார்த்துட்டுருக்க. சீக்கிரம் கிளம்பணும்னு நேத்தே சொன்னேன் தானே.

இன்னிசை-18 Read More »

வேந்தனின் அளத்தியிவள்…

முன்னோட்டம் வேந்தனின் அளத்தியிவள்… ஹாய்… என்னைப்பற்றிய அறிமுகம் ஏற்கனவே தந்திருக்கேன். rajani எனும் பெயரை vageeswari என மாற்றி எழுதுகிறேன். இனிமேல் என்னுடைய கதைகள் அனைத்தும் vageeswari எனும் penname ல வெளிவரும். பொழுது விடிந்து எழுந்தவள் அவனின் குறுஞ்செய்திக்காக மொபைலை எடுக்க, அதில் நேற்று இரவு செய்தி மட்டுமே இருந்தது. தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு வியப்பு என்ன இது எதுவுமே அனுப்பாம இருக்காரு, ஒன்றும் புரியாமல் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தவளுக்கு அப்பொழுதுதான் நிதர்சனம் உரைக்க, “ஆஆ..

வேந்தனின் அளத்தியிவள்… Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14

வாழ்வு : 14 மதுரா தனது கடந்த காலத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “அண்ணனும் அப்பாவும் என்ன சிங்கப்பூரில் கொண்டு விட்டு வந்தாங்க.. அத்தை வீட்டுல நான் ரெண்டு வருஷம் இருந்தேன்.. அங்கிருந்துதான் காலேஜ் போனேன்.. காலேஜ் எல்லாம் நல்லாவே போச்சு கொஞ்சம் கொஞ்சமா நான் வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன், நடந்தது எல்லாத்தையும் மறக்க பழகிட்டேன்.. அத்தையும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க.. மாமா அவர் பொண்ணு மாதிரியே என்னை பாத்துக்கிட்டு.. விக்ரம் ரொம்ப நல்ல நண்பன் எனக்கு..

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13

வாழ்வு : 13 ஆகாஷ் கையில் இருந்த அசிட் பாட்டிலை குறி வைத்து அங்கிருந்த கட்டையொன்றை எடுத்து வீசி இருந்தான் புகழ். அவன் வீசிய கட்டை ஆகாஷின் கையில் பட அந்த அசிட் பாட்டில் கீழே விழுந்தது. பயத்தில் இருந்த மதுரா இன்னும் தன் கண்களை திறக்கவில்லை. தான் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அசிட் பாட்டில் இப்படி கீழே விழ காரணமானவனை திரும்பிப் பார்த்தான் ஆகாஷ். அங்கே அவன் பின்னால் கண்கள் சிவக்க, இரையைக் குறி வைக்கும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12

வாழ்வு : 12 மதுராவின் காதல் கதையை கேட்க மிகுந்த ஆவலாய் மதுராவின் கட்டிலில் வசதியாக உட்கார்ந்து கொண்டு அங்கிருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்து தனது இரண்டு கைகளையும் அதில் ஊன்றி முகத்தை அதில் வைத்தபடி கதை கேட்க தயாரானாள். அவளின் நிலையைப் பார்த்து சிரித்த மதுரா, “ஏன் அண்ணி என்னோட காதல் கதையை கேட்க இவ்வளவு ஆர்வமா?” எனக் கேட்க, அதற்கு சம்யுக்தா,“இருக்காதா பின்ன.. எனக்கு லவ் ஸ்டோரி படிக்கிறது ரொம்ப பிடிக்கும்.. காலேஜ்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 40

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 40 மதியழகியின் அடுத்தடுத்த உடல் மொழி மாற்றங்களையும் செய்கையிலும் அவளுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் ஏதோ ஒன்று அவள் தன்னை நெருங்க விடாமல் தடுக்கிறது என்று புரிந்து கொண்டான் தீரன்.. அது பெண்ணுக்கே உரிய நாணம் என்னும் குணத்தால் உண்டானது என்று புரிந்து கொள்ளாமல் அதை வேறு வித தயக்கம் என்று தவறாகவே புரிந்து கொண்டான் அவன்.. முட்டி தொடும் ஒரு ஷாட்ஸை தானாகவே இடக்கையால் சிரமப்பட்டு அணிந்து

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 40 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 39

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 39 இரண்டு பேருமே கட்டில் மேலே படுத்துக் கொள்ளலாம் என்று மதி சொன்ன வார்த்தைகளை கேட்டு சில நொடிகள் ஆடாமல் அசையாமல் அப்படியே உறைந்து நின்று இருந்தான் தீரன்.. அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை.. “இல்லை மதி.. எனக்கு தெரியும்.. எனக்கு கையில அடிபட்டு இருக்கு.. நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நீ இப்படி சொல்ற.. ஆனா உனக்கு என் பக்கத்துல படுக்குற சிரமம் வேண்டாம்.. அது உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 39 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11

வாழ்வு : 11 தீக்ஷிதன் சம்யுக்தாவை அண்ணி என்று மதுரா அழைப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான். அவன் என்ன சொல்லி விட்டுப் போனான் என்று யோசனையில் இருந்த சம்யுக்தாவிடம், “ஆரத்தி எடுமா.. மது உள்ளே போகட்டும்..” என்று பரந்தாமன் சொல்ல, அவளும் சரி என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு மதுராவிற்கு மகிழ்வோடு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வரவேற்றாள்.  “தேங்க்ஸ் அண்ணி..” என்று அவள் சம்யுக்தாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளிவிட்டு உள்ளே குதித்துக் கொண்டு

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37

அரண் 37 வள்ளி எட்டிப் பார்த்ததும் கதிரை விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அந்தச் சத்தத்தை கேட்டு அவர்கள் இருவரும் கிட்டே நெருங்கி வர என்ன செய்வதென்று தெரியாமல் முழிகள் பிதுங்க, உடல் பயத்தில் உதற தனக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்த முரடர்களோ இடுப்பில் சொருவி இருந்த நவீன ரக துப்பாக்கியை எடுத்து லோட் பண்ணிவிட்டு சத்தம் வந்த இடத்தை நோக்கி பதுங்கிப் பதுங்கி வந்தனர். அப்படியே மெதுவாக பின்னோக்கி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37 Read More »

error: Content is protected !!