October 2025
விடியல் – 20
யுகேஷ் வர்மா கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் நந்தினிக்கோ தூக்கி வாரிப் போட்டது.
சட்டென தலை குனிந்து தன்னைப் பார்த்தவள் “நான் ஒண்ணும் நீங்க சொன்ன மாதிரி ட்ரஸ் பண்ணல..” என்றாள் சீறலாக.
“பாக்குற எனக்கு அப்படித் தெரியலையே..” என்றான் அவன்.
“உங்க பார்வை சரி இல்ல போல..” என முறைத்தவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“ஓகே.. அப்போ இந்த ட்ரஸ்ஸோட வெளிய வருவியா..?” எனக் கேட்டான் அவன்.
“அது எப்படி இப்படியே வெளிய வர முடியும்..? எங்க வீட்ல மட்டும்தான் இப்படி எல்லாம் போடுவேன்.. வெளியே எல்லாம் போட முடியாது..” என்றாள் அவள் அவசரமாக.
“இதுல எல்லாம் தெளிவுதான்..” என்றவன் நந்தினியின் தந்தை கொடுத்த ஆடையை மாற்றத் தொடங்க, சட்டென திரும்பிக் கொண்டாள் அவள்.
அவனோ அனைத்தையும் இயல்பாகப் பேசுகின்றான், இயல்பாக அவள் முன்பு ஆடை மாற்றுகின்றான்.
அவளுக்குத்தான் அனைத்தும் சிரமமாக இருந்தது.
சற்று நேரத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் நந்தினி.
அவனோ சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
அவனுடைய ஒற்றைக் கரம் அவன் நெற்றியை அழுத்திக் கொண்டிருந்தது.
“என்னாச்சுங்க..”
“ரொம்ப தலைவலி.. இன்னைக்கு நடந்த பஸ் ஆக்ஸிடென்ட்ல நிறைய பேர் இறந்துட்டாங்க.. முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணி டிராஃபிக் எல்லாம் கிளியர் பண்ணி முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.. மறுபடியும் ஹாஸ்பிடல் போகணும்.. பட் தலை வெடிக்கிற மாதிரி இருக்கு..” என்றான் அவன்.
அவனுடைய குரலிலேயே அவளுக்கு அவனுடைய சோர்வு புரிந்தது.
பாவமாகவும் இருந்தது.
“நான் வேணும்னா தைலம் தேச்சு விடவா..” எனக் கேட்டாள் நந்தினி.
“நான் இதுவரைக்கும் தைலம் எல்லாம் தேச்சது இல்ல.. எனக்கு செட் ஆகுமான்னு தெரியல..”
“என்னது.. நீங்க தைலம் தேச்சதே இல்லையா.. நானெல்லாம் தல வலி வந்தா தைலம் தேய்க்காம தூங்கவே மாட்டேன்.. என்னோட ஹேண்ட் பேக்ல எப்பவுமே ஒரு தைலம் இருக்கும்.. இதோ என் பெட்ல கூட இருக்கு.. அதுவும் இந்த கிரீன் கலர் அமிர்தாஞ்சன் டப்பா.. இல்லன்னா அவ்வளவுதான்..” என்றாள் அவள்.
“சரி.. அப்போ எனக்கு கொஞ்சம் போட்டு விடு.. சரியாகுதானு பார்க்கலாம்..” என்றான் அவன்.
“சரி..” என்றவள் கொஞ்சம் தைலத்தை தன்னுடைய விரல்களில் எடுத்து அவனுடைய நெற்றியில் பூசி இதமாக மசாஜ் செய்யத் தொடங்க, அவனுக்கோ அது இதமாகத்தான் இருந்தது.
மெல்ல விழிகளை மூடிக் கொண்டான் அவன்.
அவளுடைய கரங்களின் மென்மையா இல்லை நிஜமாகவே அந்த தைலத்தில் ஏதேனும் மாயாஜாலம் உள்ளதா என்னவென்று தெரியவில்லை அவனுடைய தலைவலி நன்றாகவே குறைந்திருந்தது.
அவளுடைய மெல்லிய வெண்டைப் பிஞ்சு விரல்களின் அழுத்தத்தில் தன்னை மறந்து சோபாவில் சாய்ந்தவாறே உறங்கிப் போனான் அவன்.
அவன் உறங்கியதை உணர்ந்ததும் அவளுக்கோ உள்ளம் உருகிப் போனது.
மெல்ல அவனை விட்டு விலகி, அவன் முன்பு வந்து நின்றவள் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தைப் பார்த்தாள்.
அழகன் தான்.
கம்பீரம் கூட டன் கணக்கில் வழிகின்றதே.
என்ன குணம்தான் சரியில்லை.
கல்லுளி மங்கன் என அவனை மனதிற்குள் திட்டியவள் இப்போது அவனை எழுப்புவதா வேண்டாமா என்ற சிந்தனையில் மூழ்கிப் போனாள்.
சோர்வில் அசந்து தூங்குபவனை எழுப்புவதில் அவளுக்கு கிஞ்சித்தும் விருப்பமில்லை.
கொஞ்ச நேரமாவது தூங்கட்டும், இப்போது எழுப்ப வேண்டாம் என எண்ணியவள் சற்று நேரம் அங்கேயே இருந்தாள்.
இவன் மட்டும் மென்மையான குணம் கொண்டவனாக இருந்திருந்தால் அவளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றிருக்குமே.
பெருமூச்சு வந்தது.
சற்று நேரத்தில் கீழே இறங்கிச் சென்றவள் மீண்டும் தொலைக் காட்சியைப் பார்க்கத் தொடங்கிவிட, அவளை நெருங்கி வந்த நிர்மலாவோ
“மாப்பிள்ளைய அங்க தனியா விட்டுட்டு நீ இங்க இருந்து என்னடி பண்ற..” என அதட்டலாகக் கேட்டார்.
“ஐயோ அம்மா.. உங்க மாப்பிள்ளை என்ன பச்சைக் குழந்தையா.. ஏன் தனியா இருக்க மாட்டாரா..”
“அடியே ட்யூப் லைட்.. உனக்கு போய் கல்யாணம் பண்ணி வச்சேன் பாரு.. என்ன சொல்லணும்.. போய் மாப்பிள்ளைய கவனி..”
“அவர் நல்லா அசந்து தூங்கிட்டு இருக்காரு மா..”
“சரி.. எழுந்தா உன்னைத் தேடுவாரு.. நீ அவர் கூடயே இரு..”
“இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா..”
“இப்போ நீ போறியா இல்ல டிவிய தூக்கி உடைக்கட்டுமா..”
“இதோ கிளம்பிட்டேன்..”
என்றவள் தன் அன்னையை முறைத்து விட்டு மீண்டும் தன்னுடைய அறைக்குள் வந்தாள்.
அங்கே வர்மாவின் போன் வைப்ரேட் ஆகிக் கொண்டிருந்தது.
யாரோ அழைப்பு எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டவள் வேகமாக அந்த அலைபேசியைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள்.
அழைப்பை ஏற்க தயக்கமாக இருந்தது.
ஒருமுறை தூங்குபவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனை எழுப்பவும் மனம் வரவில்லை.
ஏதாவது முக்கியமான வேலையாக இருந்தால் என்ன செய்வது என்ற பதற்றம் வேறு வந்துவிட, தன் தயக்கத்தை உதறிவிட்டு அந்த அழைப்பை ஏற்றவள் “ஹலோ..” என்றாள் மெல்லிய குரலில்.
மறுமுனையில் இருந்த மதனோ பெண்ணின் குரல் கேட்டதும் திகைத்துப் போனான்.
“ஹலோ.. ஏசிபி சார் இல்லையா..” என அவன் கேட்க, “அவர் தூங்கிட்டு இருக்காரு.. ஏதாவது முக்கியமான விஷயமா.. அவரை எழுப்பி போனைக் கொடுக்கட்டுமா..” என நந்தினி தயக்கத்துடன் பேச,
“ஓ.. நந்தினி சிஸ்டரா பேசுறீங்க..” எனக் கேட்டான் அவன்.
“ஆமா..” என்றாள் அவள்.
“ஓகே மா.. வேலையெல்லாம் நாங்களே முடிச்சிட்டோம்.. சார் தூங்கட்டும்.. அவர் எழுந்ததுக்கு அப்புறமா மதன் கால் பண்ணான்னு சொல்லிடுங்க..”
“ஓகே மதன் அண்ணா..”
“சரிமா.. வச்சிடுறேன்..” எனக் கூறிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்து விட, அவனுடைய போனை இருந்த இடத்தில் வைத்தவள் இப்போது அவனைத் திரும்பிப் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்.
அவனோ விழிகளைத் திறந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ஐயோ.. இந்த சிடு மூஞ்சி எப்போ எந்திரிச்சாரு.. ஒருவேளை நான் அவரோட போனை அட்டென்ட் பண்ணி பேசினதுக்கு கோபப்படுவாரோ..’ என எண்ணி பயந்து போனவளாய் அவள் அவனுடைய முகத்தைப் பார்க்க,
“போன்ல யாரு..?” என இறுக்கமான குரலில் கேட்டான் அவன்.
‘இவனுக்கு நார்மலா பேசவே வராதா..?
எப்போ பார்த்தாலும் அக்கியூஸ்டு கிட்ட பேசுறது போலவே டெரரா பேசுறான்..’ என மனதிற்குள் நினைத்தவள், வெளியே அதைக் கூற முடியாமல் “மதன் அண்ணா..” என்றாள்.
“என்னவாம்…?” என அடுத்த கேள்வி அவனிடமிருந்து வந்தது.
“எல்லா வேலையும் அவங்க முடிச்சுட்டாங்களாம்.. உங்களை எழுப்ப வேண்டாம்னு சொன்னாரு..”
“இடியட்.. அவன் யாரு இதை என்கிட்ட சொல்றதுக்கு..” என உறுமியவன் நேரத்தைப் பார்த்தான்.
இரவு எட்டு எனக் காட்டியது கடிகாரம்.
“வாட்.. நைட் ஆயிடுச்சா..” என அதிர்ந்தவன் “இடியட்.. எதுக்கு என்னை எழுப்பல..” என அவளிடம் சீற,
“நீங்க எழுப்புன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே.. அசந்து தூங்கிட்டு இருந்தீங்க.. எழுப்ப எப்படி மனசு வரும்..?” என்றாள் அவள் சற்றே கோபமாக.
இடியட் என்று திட்டிவிட்டானே.
‘நீதான்டா இடியட்..’ என மனதுக்குள் அவனை வறுத்தெடுக்க ஆர்வம் பிறந்தது.
அவன் உற்றுப் பார்க்கும் பார்வையில் எங்கே அவள் மனதில் நினைப்பதையும் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயத்தில் தன் மனதின் ஆர்வத்தை அடக்கிக் கொண்டாள் அவள்.
கடந்த இரண்டு நாட்களாக அவனுக்கு வேலைகள் அதிகமாகத்தான் இருந்தன.
ஏற்கனவே சிசிடிவி கேமராவில் ஃபுட்டேஜ்கள் எல்லாம் ஆராய்ந்து குற்றங்களைக் கண்டுபிடித்தவன், கிட்டத்தட்ட கடந்த சில நாட்களாக நிம்மதியாக உறங்கவே இல்லை.
இன்று வேறு அதிக சோர்வில் இருந்தான்.
அதுவும் மனைவி இதமாக தலையைப் பிடித்து விட்டதும் அவனுக்கு உறக்கம் சொக்கிவிட்டது.
தன் தலையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவனைப் பார்த்து பதறியவள்,
“என்னாச்சுங்க.. திரும்ப தலை வலிக்குதா..?” எனக் கேட்டாள் நந்தினி.
“நோ.. தலைவலி சரியாயிடுச்சு.. தேங்க்யூ..” என்றான் அவன்.
“ம்ம்..”
“சரி.. நான் கிளம்புறேன்..”
“ஒரு நிமிஷம்.. அம்மா உங்களுக்காக டின்னர் பண்ணிட்டு இருக்காங்க.. சாப்பிடலாமே..” என்றாள் அவள்.
அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன் “என்ன மேடம் புதுசா அக்கறை..? என்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டுதானே இங்க வந்த.. இப்போ இதுக்கு சாப்பிடக் கேக்குற..”
“நான் ஒன்னும் டிவோர்ஸ் பண்ணிட்டு வரலையே..” என்றாள் அவள் அழுத்தமாக.
“அடடா.. டிவோர்ஸ் பண்ற ஐடியா எல்லாம் இருக்கா..” எனக் கேட்டவனை முறைத்து விட்டு அவள் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேற முயன்ற கணம், அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பிடித்து தன்னருகே இழுத்தான் யுகேஷ் வர்மா.
அவன் இழுத்த வேகத்தில் அவனுக்கு மிக அருகில் வந்தவளின் தேகமோ படபடத்து விட்டது.
“அன்னைக்கு எல்லாத்தையும் உங்க அப்பாக்கிட்ட சொல்லுவேன்னு சொன்னியே.. நான் கிஸ் பண்ணதையும் உங்க அப்பாக்கிட்ட சொன்னியா..?” என அவளுடைய விழிகளுக்குள் பார்த்தவாறு அவன் கேட்க, அவளுக்கோ முகம் நொடியில் சிவந்து போனது.
அவனுடைய விழிகளை நேரடியாகச் சந்திக்க முடியாமல் அவள் தன் பார்வையைத் தாழ்த்திக்கொள்ள,
அவளுடைய நாடியில் தன் கரத்தைப் பதித்து அவளுடைய முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்தியவன் “என்னைப் பார்த்து பேசு..” என்றான்.
அவளிடமோ அமைதி.
“சொல்லுடி.. நான் கிஸ் பண்ணதையும் உங்க அப்பாக்கிட்ட சொன்னியா..”
“ஸ்ஸ்.. எ.. என் கை…ய விடுங்க..”
“விட முடியாது.. என்ன பண்ணுவ.. உங்க அப்பாவைக் கூப்பிடுவியா..”
“ஐயோ.. இல்ல..” என்றாள் அவள்.
“அப்போ..?”
“நா.. நான் கீழ போகணும்..”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டுப் போ..”
“அதெல்லாம் எப்படி எங்க அப்பாக்கிட்ட சொல்ல முடியும்.. நான் எதுவுமே சொல்லல.. போதுமா..” என்றாள் அவள் படபடப்புடன்.
“அது..”
என்றவாறு அவளை விடுவித்தான் அவன்.
விலகி நின்றவளுக்கோ கை விரல்கள் யாவும் நடுங்க ஆரம்பித்து விட்டன.
“ஓகே.. நான் கிளம்புறேன்..” என்றான் அவன்.
“ஐயோ.. அம்மா உங்களுக்காக டின்னர் செய்றாங்கன்னு சொன்னேனே..”
“பட் நான் அதை சாப்பிடுவேன்னு சொல்லவே இல்லையே..”
“ப்ளீஸ்.. சாப்பிட்டு போங்க.. இல்லனா அம்மா வருத்தப்படுவாங்க..” என்றாள் அவள் நலிந்த குரலில்.
“ப்ச்..”
என அவன் சலித்துக்கொள்ள, அவளுடைய முகமோ வாடிப் போனது.
“இப்போ எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க..”
“மறு வீட்டுக்கும் வரமாட்டேன்னு சொல்லிட்டீங்க.. இப்போதான் கல்யாணத்துக்கு அப்புறமா முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்கீங்க.. எதுவுமே சாப்பிடாம போனா கண்டிப்பா அம்மாவும் அப்பாவும் வருத்தப்படுவாங்க.. அவங்களுக்காக இல்லனாலும் எனக்காக சாப்பிட்டு போகலாமே..”
“உனக்காக நான் எதுக்கு என்னை மாத்திக்கணும்..?”
“உங்களுக்காக நான் தைலம் தேச்சு விட்டேன்ல..” என்றாள் அவள் சற்று கோபமாக.
“அதுக்காக எல்லாம் என்னால என்னை மாத்திக்க முடியாது.. வேணும்னா நான் ஒரு டீல் போடுறேன்.. அதுக்கு நீ ஒத்துக்கிட்டா நான் உங்க வீட்ல சாப்பிடுறேன்.. இதுவரைக்கும் நான் வெளியே எங்கேயும் சாப்பிட்டதே கிடையாது..” என்றவனை அதிர்ந்து பார்த்தவள்
“என்ன டீல்..” என தயக்கத்துடன் கேட்டாள்.
“அன்னைக்கு நான் உனக்கு கிஸ் பண்ணினேன்ல.. இன்னைக்கு நீ எனக்கு கிஸ் கொடு.. அந்த கிஸ் ரொம்ப டீப்பா இருக்கணும்.. இதுதான் டீல்.. டீல் உனக்கு ஓகேன்னா இன்னைக்கு டின்னர் இங்கேயே சாப்பிடுறேன்..” என்றான் அவன்.
“என்னது.. மு.. மு.. முத்தம் கொடுக்கணுமாஆஆ..?” எனக் கேட்டவளுக்கு மயக்கம் வந்துவிடும் போல இருந்தது.
அவனுடைய கூர் விழிகளோ அவளுடைய சிவந்த உதடுகளில் ஆழ்ந்து பதிந்தது.
கரம் விரித்தாய் என் வரமே – 16
நிமிடங்கள் நீள, முத்தத்தால் யுத்தம் செய்தவன் கரங்களில் தொய்ந்தாள் பேதை! அவளின் நிலை புரிய, சட்டென்று தன்னை மீட்டு கொண்டு, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து அவளோடு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான். அமர்ந்தவனை அணைத்து கொண்டாள் அஸ்வினி.
“ஏண்டி இப்படி பண்ணே….?” ஆதங்கமாக கேட்டான் ராஜேஷ்.
“என்ன டா….?” தான் நெருக்கமாக நடந்து கொண்டதை சொல்கிறானோ என்ற சங்கடத்தில் அவன் கண்ணை பார்க்காமல் தலையை குனிந்து கொண்டு கேட்டாள் அஸ்வினி.
“என்னை பார்!” என்றவன் அவள் நாடியை பற்றி அவனை பார்க்க வைத்து,
“இது லவ் தானே….?” என்றான்.
அவள் கண்ணீருடன் தலையசைக்க, “எப்போ இருந்து….?” என்றான்.
“ரெண்டு வருஷமா!” என்றாள் மெதுவாக.
“இவ்வளவு நாள் இல்லாம இப்போ உன் காதலை காட்டணும் ஏன் முடிவு பண்ணே….? என்னை பைத்தியம் ஆக்கவாடி….?என்றான் காட்டமாக.
“என்னடா இப்படி பேசுற….?”
“வேற எப்படி பேச….? இன்னொரு பொண்ணுகிட்டே லவ்னு கமிட் பண்ண நான் உன்கிட்ட என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுது தானே….? ஆனா நீ இப்படி நெருங்கி வரும் போது என்னால உன்னை ஒதுக்கவும் முடியலை, வெளிப்படையா சொல்லணும்னா எனக்கும் ஆசை தான் வருது! அதே சமயம் அசிங்கமாவும் இருக்குடி….!! ஏண்டா இப்படி கேவலமா இருக்கேனு மனசாட்சி துப்புது!” அவமானத்துடன் பேசினான் ராஜேஷ்.
அவனை தாவி அணைத்து கொண்டவள், “உன் மேல் எந்த தப்பும் இல்லை டா…. ப்ளீஸ் அப்படி எல்லாம் பீல் பண்ணாதே…. நான் வேணா பழைய மாதிரி தள்ளியே இருந்துகிறேன்….”
“அறைஞ்சேன்னு வை….” பல்லை கடித்து ஆத்திரத்தை அடக்கினான் ராஜேஷ்.
“என்னை மன்னிச்சுடு டா, என் லவ்வை சொல்றதுக்கு பர்ஸ்ட் எனக்கு தைரியமே இல்லை! உனக்கு என் மேல் அப்படி ஒரு பீலிங் இல்லைனு புரிஞ்சுது! சோ, நீ நோ சொல்லிட்டா உன் ப்ரண்ட்ஷிப் கட் ஆகிடுமே…. அட்லீஸ்ட் அதுவாவது இருக்கட்டும் நினைச்சேன்…. அப்புறம் சொல்லிடலாம்னு முடிவு எடுத்தப்போ அம்மா….” என்று வார்த்தையை முடிக்க முடியாமல் அழுதாள் அஸ்வினி.
“அழாதே அஸ்வினி….” என்று அவளை ஆறுதல் படுத்தியவன், “பார்வதி கிட்டேயே எனக்கு பீலிங்ஸ் எதுவும் இல்லாமலே, அந்த பொண்ணு என்னை இப்படி விரும்புதேனு தான் ஒத்துகிட்டேன்…. உன் மனசில நானிருக்கேன்னு தெரிஞ்சு இருந்தா எப்படிடி உன்னை மிஸ் பண்ணுவேன்…. உன்னை எப்படி வருத்தப்பட விடுவேன்….? என்ன…. முன்னாடியே தெரிஞ்சு இருந்தா, நான் பார்வதிகிட்டே கமிட் ஆகாம இருந்திருப்பேன்….” பெருமூச்சு விட்டான் ராஜேஷ். அதோடு விடாமல்,
“சொல்லு, இவ்ளோ நாள் என்னை இன்னொரு பொண்ணோட வேடிக்கை பார்த்துட்டு இருந்துட்டு இப்போ மட்டும் ஏன் என்கிட்ட உன் லவ்வை எக்ஸ்பிரஸ் பண்ண நினைச்சே….?”
உண்மையை சொன்னால் அவனை பற்றி அவர்கள் பேசியதை சொல்ல வேண்டும், அது அவனுக்கு நிச்சயம் பிடிக்காது என்பதால் அதை எல்லாம் பேச வேண்டாம் என்று,
“நீ தனியா இருந்தவுடனே என்னையும் மீறி வெளியே வந்துடுச்சு டா…. பார்வதி இருந்தா கண்ட்ரோல் பண்ணி இருப்பேன்….” என்றாள் அனைத்தையும் மறைத்து.
“அவக்கிட்டே இந்த விஷயத்தை எப்படி சொல்றதுனு யோசிச்சாவே கொஞ்சம் கஷ்டமா இருக்கு! சிக்கலோ சிக்கல்!!!” என்றான் ராஜேஷ் இயலாமையுடன்.
“நீ அதை அடிக்கடி கமிட்மெண்ட்னு தானே சொல்றே…. லவ் இல்லாம கமிட்மெண்ட் மெண்டாலிட்டி கஷ்டம் தானே….? அதையே சொல்லு….”
“ஆறு மாசம் கழிச்சு தான் அது உனக்கு புரிஞ்சுதானு அவ கேட்டா என்ன சொல்வேன்….?”
“நம்மளை பத்தி சொல்லு!”
“நோ! ப்ளீஸ் அஸ்வினி, நான் பார்வதி கிட்டே நோ சொன்ன அப்புறமும் கொஞ்ச நாள் கழிச்சு நாம நம்ம விஷயத்தை வெளியே சொல்லலாம்…. எனக்கே ஒரு மாதிரி இருக்கும் போது, மத்தவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க….?”
“அப்புறம் எப்படி நோ சொல்லுவே….?”
“யோசிக்கிறேன்….!”
“அதுக்கு அப்புறம், என்கிட்டயும் பீலிங்ஸ் இல்லாம எனக்காக கமிட் பண்ணிக்க போறியா ராஜேஷ்….?” அவனை அவன் கொஞ்சமாவது புரிந்து கொள்ளட்டும் என்று பேச்சு கொடுத்தாள் அஸ்வினி.
“ம்ப்ச்…. என்ன கேள்விடி இது?” முகத்தை சுளித்தான் ராஜேஷ்.
“இல்லை நீ சொன்னதில் இருந்து உன் மனசில என்ன இருக்குனு எனக்கு புரியலை டா அதான் கேட்கிறேன்…. எனக்காக நீ இதை செய்றியோனு….”
“செஞ்சா என்ன தப்பு? யாரோ ஒரு பெண்ணுக்கு செஞ்ச நான், உனக்காக செய்ய மாட்டேனா….?”
அதற்கு மேல் உடைத்து கேட்க முடியாமல் தயங்கினாள் அஸ்வினி. எதுவும் இல்லாமலா எனக்கு முத்தம் கொடுக்கிறாய்? ஒரே நாளில் உனக்கு ஆசையாக இருக்கிறது என்று சொல்கிறாய்….? மனதோடு நினைத்து கொண்டாள் அஸ்வினி.
“என்ன முகம் சீரியஸா இருக்கு…. எதுவா இருந்தாலும் கேளு….!”
“என் விஷயத்தில் உன் மனசில் எந்த வித்தியாசமும் பீல் பண்ணலையா நீ?”
அவளின் கேள்வியில் அவன் முகம் மிருதுவானது! அவளை பார்த்து புன்னகைத்தவன்,
இங்க என் பக்கத்தில் வா பூனைக்குட்டி என்றவன், அவள் வரவும், அவளை அணைத்துக் கொண்டு, “நேற்றில் இருந்து எப்போதும் இதே மாதிரி உன்னை கட்டிப்பிடிச்சு ஏதாவது கசமுசா பண்ணனும்னு தோணிக்கிட்டே இருக்கு…. இதுக்கு முன்னாடி யாரை பார்த்தும் இப்படி இருந்தது இல்லை…. ஏன் உன்கிட்டேயே அப்படி இருந்தது இல்லை!” என்றவன், அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து ஆழ மூச்செடுத்தான். அவன் கைகள் தாரளமாக அவள் மேனியில் எந்த தயக்கமும் இன்றி அத்து மீறியது.
“நான் உன்கிட்ட க்ளோஸா வந்ததால் நீயும் அப்படி பீல் பண்றியோ….?” அவனுக்கு எப்படியும் அவனை உணர்த்தி விடும் வேகத்தில் பேசினாள் அஸ்வினி.
“இருக்கலாம், உன் மேல் ஆல்ரெடி எனக்கு ஸ்பெஷல் பாண்ட், அதுனால இந்த நெருக்கம் ரொம்ப இயல்பா வருது போல் எனக்கு….! ஏண்டி இதுக்கு சந்தோஷப்படாம என்னை வளைச்சு வளைச்சு கேள்வி கேட்கிறே….?”
சரி இவனுக்கு பல்ப் எரிய கொஞ்சம் நாள் டைம் கொடுப்போம்…. பார்வதி பிரச்சனை முதல்ல தீரட்டும் என்று அமைதியானாள் அஸ்வினி.
அன்று மாலை வரை அஸ்வினியுடன் இருந்தவன் மாலையில் வீட்டிற்கு கிளம்பினான். கிளம்பும் வரை அஸ்வினி தவிர எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்தவனுக்கு கிளம்பிய பின் பல சிந்தனை வந்து அவனை தொல்லை செய்தது.
ஒரு பெண்ணிடம் கமிட் செய்து கொண்ட பின் இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக பழகுவது அந்த பெண்ணிற்கு செய்யும் பச்சை துரோகம்! உனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று மனசாட்சி குரல் கொடுக்க, தவித்து போனான் ராஜேஷ். அவனின் இன்னொரு மனமோ, பாரவதியிடம் நோ சொல்லிவிடலாம் என்பது உனக்கு எவ்வளவு ஆசுவாசத்தை கொடுக்கிறது…. அதை நினைத்து பார்…. இப்படி இருக்கும் நிலையில் நீ எப்படி அவளுடன் நீண்ட கால வாழ முடியும்? என்று கேள்வி கேட்டது.
பின் அவனே, இதுவரை நான் என் மனதிற்கு உண்மையாக தான் நடந்து கொண்டேன்…. நான் யாரையும் ஏமாற்ற நினைக்கவில்லை! பார்வதியிடம் விரைவில் ஏதாவது காரணம் கூறி விலகி விடுவேன் என்று அவனே அவனுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டான்.
“விடுவாளா பார்வதி?”
****************
திங்கள் காலை, ஊரில் இருந்து நேரடியாக அலுவலகம் வந்திருந்தவள், காலை பிரேக் நேரத்தில் ராஜேஷை தேடி வந்தாள். ஒரு வாரம் முன்பு அவள் மேல் கோபமாக இருந்தவன் அல்லவா? இப்போது இருக்கும் பிரச்சனையில் அது மறந்து போய் இருந்தது அவனுக்கு. ஆனால் குற்ற உணர்ச்சியில் அமைதியாக இருந்தான்!
“இன்னுமா என் மேல் கோபம் போகலை உனக்கு?” என்ன ராஜேஷ்….? கொஞ்சினாள் பார்வதி. அவள் சிணுங்கியதில் பக்கத்தில் இருந்தவர் எல்லாம் நமுட்டு சிரிப்பு சிரிக்க, ஒரு மாதரியாகி விட்டது ராஜேஷிற்கு.
“ஆபிஸ் ஹவர்ஸ்ல இதெல்லாம் பேச வேண்டாம், நீ போ அப்புறம் பேசலாம்!” பட்டும் படாமல் பதில் சொன்னான் ராஜேஷ். அது நாள் வரை தோன்றாது அன்று தோன்றியது…. இந்த பொண்ணு கொஞ்சம் சாதாரணமா பேசினா என்ன?
**************
மாலையில் பார்வதியுடன் பேசிக் கொண்டு இருந்த ராஜேஷை பார்த்தபடி வீட்டிற்கு கிளம்பினாள் அஸ்வினி. “இனி கொஞ்ச நாளைக்கு ஆபிஸில் என் பக்கத்திலேயே வந்துடாதே பூனைக்குட்டி, என் பார்வையும் சும்மா இருக்காது! கையும் சும்மா இருக்காது….!” என்று சொல்லி இருந்தான் ராஜேஷ். அதனால் அவள் விலகி செல்ல, பார்வதி அவள் தனியே செல்வதை திருப்தியாக பார்த்தாள்.
“சொல்லு ராஜேஷ், இன்னுமா நீ கோபமா இருக்கே….?”
“இல்லை….”
“அப்புறம் பேசவே மாட்டேங்கிற….?”
“எப்போதும் நீ தான் பேசுவே…. நான் கேட்பேன்….” யோசித்து பார்த்தபடி சொன்னான் ராஜேஷ். பாதி நேரம் அவள் எப்போதடா பேசி முடிப்பாள் என்று தான் இருப்பான். அவன் கவனம் அவள் பேச்சில் இருப்பது மிகவும் குறைவு…. அவளுடன் அவன் இருந்த விதம் எல்லாம் அவனுக்கு இப்போது தான் புரிந்தது. கடவுளே வழக்கம் போல் என் ஏஞ்சல் என்னை காப்பத்தி விட்ருச்சு! நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“ம்ம்…. கரெக்ட் தான்! உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லணும்….!”
“என்ன….?”
“எங்க வீட்டில் எனக்கு மாப்பிள்ளை ஒன்னு பார்த்து வைச்சுக்கிட்டு ரொம்ப போர்ஸ் பண்றாங்க! நம்மளை பத்தி சொன்னேன். ரொம்ப பேசின அப்புறம் உன் பேரண்ட்ஸோட உன்னை மீட் பண்ணனும்னு எங்க அப்பா சொல்றார்! எங்க அப்பாவால இப்போ வரமுடியாது, நாம எல்லாரும் எங்க ஊருக்கு போயிட்டு வரலாமா….?”
“ஹேய், எனக்கு ஒரு சிஸ்டர் இருக்கா! இப்போ என்னால என் கல்யாணம் பத்தி எல்லாம் எங்க வீட்டில் பேச முடியாது! ப்ளீஸ் புரிஞ்சுக்கோ….எனக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கு…. இதெல்லாம் உனக்கு முன்னாடியே தெரியும் தானே….?”
“நானும் எங்க அப்பா இவ்ளோ பிடிவாதம் பிடிப்பார்னு எதிர்பார்க்கலை ராஜேஷ்! வேற வழியே இல்லை!”
“ஸாரி பார்வதி! நான் வேணா உன் பேரண்ட்ஸ் பார்க்க வரேன்! ஆனா என்னால் என் பேரண்ட்ஸை இதில் இன்வால்வ் பண்ண முடியாது! ஐயம் வெரி ஸாரி” என்றான் ராஜேஷ்.
மனதினில் போய் பார்த்து விட்டு அவள் அப்பாவிடம் பார்வதியை விட்டு விலகி கொள்வதாக சொல்லி விடலாம் என்று நினைத்தான் ராஜேஷ்.
ஆனால் பார்வதி வேறு சொன்னாள். “இல்லை இல்லை ராஜேஷ், நீங்க தனியா எல்லாம் வர வேண்டாம்! எங்க அப்பா நிச்சயம் ஒத்துக்க மாட்டார்.”
“அப்போ வேற என்ன பண்றது?”
“நாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு மாலையும் கழுத்துமா போய் எங்க வீட்டில் நிற்போம்! உங்க வீட்டுக்கு தெரிய வேண்டாம்…. ஓகே வா…?”
“என்ன….? ரிஜிஸ்டர் மேரேஜா….?” அதிர்ந்து விட்டான் ராஜேஷ்.
கரம் விரித்தாய் என் வரமே – 15
“என்னடி…. நான் ஏதோ புரியாத பாஷையில் பேசின மாதிரி முழிக்கிறே….?” தோழியை உலுக்கினால் தெய்வா.
“ராஜேஷிற்கு நிஜமா என் மேல் ஸ்பெஷல் பீலிங் இருக்குன்னு நீ நம்புறீயா….?”
“நிச்சயமா…. இன்னொரு விஷயம் ஒன்னு சொல்றேன், பார்வதி மேல் அவனுக்கு இருக்கிறது லவ்வே இல்லைங்கிறது என்னோட ஒப்பீனியன் மட்டுமில்லை, ஷிவாவிற்கும் தான்!” என்றாள்.
“ஆனா க்ளோசானா எப்படி எனக்கு புரியலை….?” என்றவளை கொலைவெறியுடன் முறைத்தாள் தெய்வா.
“அவன் மேல் இருக்க பீலிங்ஸ் எல்லாம் என்கிட்ட கொட்டி நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவேல்ல, இப்போ அதையெல்லாம் கொண்டு போய் அவன் தலையில் கொட்டு! அந்த க்ளோஸ் தானா வரும்! உன் மனசில அவனுக்காக ஏற்படுற உணர்வை மறைக்காதே…. அதுவே போதும்!” என்றாள் தெய்வா கடுப்பாக.
மேற்கொண்டு அவளுடன் பேச்சை வளர்க்காமல் ஷிவாவுடன் சென்று சேர்ந்து கொண்டாள் தெய்வா. பார்ட்டி களை கட்ட, டான்ஸ் ஆரம்பித்தார்கள் நண்பர்கள். அனைவரும் ஆட, அஸ்வினி மெதுவாக ராஜேஷ் நோக்கி நடந்தாள். தெய்வாவின் வார்த்தைகள் அவளை நன்றாக உசுப்பேத்தி இருக்க, ராஜேஷை தேடினாள் அஸ்வினி. கொஞ்ச நாட்களாக அவனை ரசிக்கும் மனதிற்கு கடிவாளம் போட்டு இருந்தவள் இன்று இருந்த தளைகள் அனைத்தையும் தகர்த்து விட்டு அவனை ரசிக்க ஆரம்பித்தாள்.
அழகும் ஆண்மையுமாக அவளை கிறக்கினான் ராஜேஷ். அங்கு இருந்த அரை இருட்டு சூழ்நிலையும், காதல் பாடல்களும் அவளை மேலும் கிறக்க, மெதுவாக என்றாலும் ஒரு உறுதியுடனே ராஜேஷை நெருங்கினாள் அஸ்வினி.
அவள் மனமெங்கும் தெய்வாவின் வார்த்தைகளே வியாபித்து இருக்க, ராஜேஷை நெருங்கி அவன் அருகில் நெருக்கமாக நின்றாள் அஸ்வினி. அஸ்வினி வந்தவுடன், அவளின் முகத்தை பார்த்த மதன் தானாகவே அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி சென்றான்.
அஸ்வினியின் அருகாமை ஒன்றும் புதிதல்லவே ராஜேஷிற்கு. அதனால் அவள் முகம் பார்த்து பேச எண்ணி இயல்பாக அவள் பக்கம் திரும்பியவனின் இதயம் இது வரை இல்லாத விதமாக, முதல் முறையாக வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவளின் கண்களை பார்த்தவன் பார்த்தபடி நின்றான். அந்த கண்களில் இருந்த உணர்வில் தான் அவன் இதயத் துடிப்பு எகிறி கொண்டு இருந்தது. அந்த உணர்வு என்ன என்று அவன் அறிவுக்கு புரியும் முன் அவன் இதயத்திற்கு புரிந்தது. புரிந்த இதயம் ராஜேஷிற்கு சிக்னல் கொடுத்தது. அந்த சிக்னலை சரியாக புரிந்து கொள்வானா ராஜேஷ்?
“என்ன அஸ்வினி….?” இரண்டு வார்த்தை பேசுவதற்குள் உள்ளுக்குள் தடுமாறினான் ராஜேஷ்.
சந்தன நிற பேண்ட், கருநீல கலர் சட்டையில் இருந்தவனை அவனுக்கு தெரியும்படியாகவே ரசித்து பார்த்தவள்,
“ரொம்ப அழகா இருக்கே ராஜேஷ்….” என்றாள் குரலில் மொத்த காதலையும் தேக்கி. குரலில் மட்டுமில்லாமல், அந்த பூனை கண்களில் அவள் காதல் ததும்பி வழிய, அதை கண்ட ராஜேஷிற்கு இனம் புரியா உணர்வுகள் உடைப்பெடுக்க, ரத்தம் ஓட்டம் வேகமானது! சீரற்ற மூச்சுகளுடன்,
“தேங்க்ஸ் அஸ்வினி….” என்றவனின் பார்வை இப்போது அவளை அளவெடுத்தது. அந்த பார்ட்டி கவுன் அவளின் வளைவுகளை அழகாக காட்ட, அந்த அகன்ற கழுத்து காட்டிய அவள் தேகத்தின் நிறத்தில் சூடானது ராஜேஷின் உள்ளம்! அவளை அளவெடுத்த பார்வை அவளின் மேனியை அங்குலமாக அங்குலமாக ரசிக்க சொல்ல, திகைத்து போனான் ராஜேஷ்.
சே! இதென்ன என்றுமில்லாத தடுமாற்றம், தவிப்பு? புரியாமல் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பி செல்ல பார்த்தான் ராஜேஷ். இதோ வரேன் என்று முணு முணுத்தபடி அங்கிருந்து நழுவ போனவனின் புஜங்களுக்குள் கைகளை கோர்த்து கொண்டவள்,
“நாம டான்ஸ் பண்ணலாமா ராஜேஷ்? எனக்கு ஆசையா இருக்கு…” என்றாள் அவன் கண்களுக்குள் பார்த்து கொண்டே.
ஏதோ மந்திரத்துக்கு கட்டுபட்டவன் போல், சரி என்று அவன் தலையசைக்க, அவனை இழுத்து கொண்டு நடனம் ஆடும் கூட்டத்திற்கு நடுவே சென்றாள் அஸ்வினி.
அவர்கள் இருவர் மேலும் அவ்வப்போது தன் பார்வையை பதித்து கொண்டு இருந்த தெய்வாவிற்கு, அவர்களின் நெருக்கம் பரம திருப்தி! அவர்கள் நடனம் ஆட போகிறார்கள் என்றதும் கடகடவென்று அஸ்வினிக்கு பிடித்த பாடல்களை சொல்லி, போட வைத்தாள்.
“நீ என் ஸ்வீட் ஹார்ட் மொமெண்டோ ….”
“நீ பார்க்க பார்க்க பரவசம்….”
என்ற வரிகளில் சாதாரணமாக தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் தயக்கமாக ஆரம்பித்த அவர்கள் நடனம்,
“உன் கண்ணால் கண்ணால் சொன்னால் சுகம் கிட்டாது”
“கையால் கையால் மெய்யால் தொடு” என்ற போது,
தயக்கம் விலகி… தொடுகை பழகி…. உடம்பால் உரசியபடி ஆடிக்கொண்டிருந்தனர்!
“என் அழகெல்லாம் வெப்பம் கொள்ள நெருக்கி விடு” என்ற போது ராஜேஷின் கை அவள் இடுப்பை இறுக்கியது….நிஜமாகவே மிகுந்த சூடானாள் அஸ்வினி….!
“என்னை உடைக்காமல் உயிர் இனிக்காது” அஸ்வினியின் கரங்கள் அவன் கழுத்தை வளைக்க, அவள் மென்மைகள் அவனை பதம் பார்த்தன!
“உன் வன்முறை இன்றி எந்தன் இரவு கலையாது” என்ற போது ஆக்டோப்ஸ் போல் அவளை அவனுடன் வளைத்து சேர்த்து இழுத்து இறுக்கி அணைத்தான் ராஜேஷ்!
“தாங்காது நீ தள்ளி சென்றால் ஆடாது”
நீ கோடி கையால் தொடு தொடு”
ஒரு சிறு தீப்பொறி ஒரு காட்டையே அழிக்க வல்லது என்பதை போல், அஸ்வினியின் மனதில் தெய்வா வீசிய ஒரு சிறு பொறி, அவள் காதலை உயிர்ப்பித்து அவளை மட்டுமின்றி ராஜேஷையும் சேர்த்து எரித்தது! அதன் உச்சமாக, இருக்கும் சுற்றுப்புறம் மறந்து, ராஜேஷின் அணைப்பிற்கு பதில் தரும் வகையில் அவன் இதழில் இதழ் பதித்து தன் முதல் முத்தத்தை அவனில் பதித்து இருந்தாள் அஸ்வினி.
இதழோடு இதழ் உறவாட, ஷாக் அடித்தாற் போல் அவர்களை பிண்ணி இருந்த மாயவலை அறுபட இருவரும் சுயநினைவிற்கு வந்தனர். நல்லவேளை இன்னும் ஆட்டம் பாட்டம் முடியாததால் மற்றவர்களுக்கு இவர்களின் நெருக்கம், அதிர்ச்சி எதுவும் தெரியவில்லை.
இருவரும் மெதுவாக விலகி சென்று ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து கொண்டனர்.
அஸ்வினிக்கோ, ராஜேஷ் தப்பா நினைச்சு இருப்பானோ என்று சங்கடமாக இருந்தது. ஆனால் அதே நேரம் அவனுடனான அந்த நெருக்கமான நிமிடங்கள் மிகுந்த சந்தோஷத்தை தந்து இருந்தது. தெய்வா சொன்னது முற்றிலும் உண்மை என்பது போல் சில நிமிடங்கள் என்றாலும் அவன் அவளிடம் நெகிழ்ந்து இருந்தான் என்பது உண்மை தானே? சீக்கிரம் அவனை மொத்தமாக என்னிடம் கொண்டு வந்து விட வேண்டும்!
அஸ்வினி இவ்வாறு இருக்க, ராஜேஷ் என்ன உணர்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை! அஸ்வினி அவனை நெருங்கி வந்ததே அவனுக்கு வித்தியாசமாக இருந்தது என்றால் அவனை அதிர்ச்சி கொள்ள செய்தது அவனின் உணர்வுகள் தான்! தானா இப்படி எல்லாம் உணர்கிறோம்….? அஸ்வினியை தீண்டிய போது அப்பப்பா…. இன்னமும் அந்த துடிப்பும் அசையும் அவனுள் முழுதாக மறையாமல் இருக்கிறதே…. சில நொடி ஸ்பரிசம் என்றாலும் அவள் இடையின் வளைவும், இதழின் மென்மையையும் இன்னும் உணர்கிறானே…. கடவுளே….! இப்படி ஒரு தடவை கூட பார்வதியுடனான நெருக்கத்தில் அவன் உணர்ந்ததும் இல்லை, அதை இவ்வளவு ஆசையாக நினைவு கூர்ந்து ரசித்ததும் இல்லை!
ராஜேஷை பார்த்த அஸ்வினிக்கு அவனின் தவிப்பு புரிய, அவளின் தயக்கம், சங்கடம் அனைத்தையும் மறைத்து கொண்டு அவனிடம் சென்று எதுவுமே நடவாதது போல்,
“எனக்கு பசிக்குது, ஏதாவது சாப்பிடலாம் வா ராஜேஷ்….” என்றாள்.
அவளின் இயல்பான பேச்சில், நடத்தையில் இன்னும் குழம்பி போனவன், ஒன்றையும் கேட்கமுடியாமல் மௌனமாக அவளுடன் எழுந்து சென்றான். உண்ணும் போதும், அவள் இது நல்லா இருக்கு பாரேன் என்று அவனுக்கு ஊட்டி விடுவதை போல் கொடுத்தாள். வாய் திறந்து அவன் வாங்கும் போது அவன் இதழ்களை தீண்டியது அவளின் விரல்கள். சிலிர்த்து அடங்கினர் இருவரும்!
ஏன் என்னிடம் இப்படி புதிய நெருக்கம் காட்டுகிறாய் என்று நெருங்கிய தோழியிடம் எப்படி கேட்க முடியும்? அவள் நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டால்? அவளையும் புரியவில்லை, அவனையும் புரியவில்லை அவனுக்கு இப்போது! புரியாத அவஸ்தையுடனே அன்றைய மிச்ச பொழுதை அஸ்வினியுடன் கழித்தான் ராஜேஷ்…. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அஸ்வினியுடன் நெருக்கமாக கழித்தான். அவளின் தீண்டலும் தொடுகையும் இத்தனை வருடம் இல்லாத வகையில் அவனுக்குள் புதிய புதிய உணர்வுகளை ஊற்றெடுக்க வைத்தது, அதை அவன் உணர்ந்து ரசித்தான். இருவருமே எதையும் வாய் விட்டு பேசிக் கொள்ளாமல் அந்த மாலை பொழுதின் நிகழ்வில் மயங்கி, மலர்ந்து இருந்தனர்.
தெய்வாவும் ஷிவாவும் தான் இவர்கள் அருகில் வரவில்லை என்றால் மதனும் இவர்கள் பக்கமே வரவில்லை! இத்தனைக்கும் மதனிடம் ஷிவாவோ, தெய்வாவோ ஏதும் இதை பற்றி பேசவில்லை!
மறுநாள் ஞாயிறு என்பதால் மெதுவாக தூங்கி எழுந்து அமர்ந்திருந்த அஸ்வினியை தெய்வா அழைத்தாள்.
“என்ன மேடம் ஹாப்பியா?” உற்சாகமாக கேட்டாள் தெய்வா.
“எதுக்கு….?”
“ம்ம்ம்…. கையோடு கைகள் சேராமல், தீராது எந்தன் மோகம்…. அதுக்கு தான்!” அவள் சிரிக்க,
“அடிப்பாவி, எங்களை தான் பார்த்துகிட்டு இருந்தியா….?” வெட்கமாக கேட்டாள் அஸ்வினி.
“புல்லா பார்க்கலை, லேசா பார்த்தேன்…. பரவாயில்லை நல்லா தான் இருந்துச்சு உங்க சாப்ட் ரொமான்ஸ்….”
“ம்ப்ச்….போடி இது நிரந்திரம் இல்லையே…. என்னைக்கு பார்வதி விலகுறாளோ அன்னைக்கு தான் எனக்கு சந்தோஷம்!”
“இது நடக்கும்னு நீ எதிர்பார்த்தியா….? அது மாதிரி அதுவும் நடக்கும்! ஆனா இது எல்லாம் நடக்க தேவை உன் முயற்சி….ஓக்கே வா….?”
“ம்ம்….புரியுது! ஆனா ராஜேஷ் என்ன நினைக்கிறான் தெரியாம பயமா இருக்குடி….ஏதாவது தப்பா நினைச்சு இருந்தா ….?”
“தப்பா நினைச்சு இருந்தா நேத்து பாதியிலே கிளம்பி இருப்பான், கடைசி வரை இருந்து உன் கிட்டே பேசிட்டு இருந்திருக்க மாட்டான்! பயப்படாதே…. குழம்பி தான் இருப்பான் நிச்சயமா…. ஆனா குழம்பின குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும்!”
“ம்ம்….” என்றாலும் பார்வதியை எப்படி விலக வைப்பது? பயந்தாள் அஸ்வினி. கல்யாணப் பெண் தெய்வாவை ரொம்பவும் தொல்லை செய்ய கூடாது, நாமளே யோசிப்போம் என்று நினைத்து கொண்டாள்.
அவர்கள் சொல்லியது போல் மிகவும் குழம்பி கிடந்தான் ராஜேஷ். நேற்றைய நெருக்கத்தில், இன்றும் அஸ்வினியின் அருகாமையை கேட்டு அடம் பண்ணியது அவன் உள்ளம்! இது என்ன புது விதமான போராட்டமாக இருக்கிறது என்று தவித்தான் ராஜேஷ். பார்வதியிடம் ஒரு நாள் கூட நான் இது போல் உணர்ந்ததில்லையே!
அஸ்வினி ஏன் என்னை முத்தமிட்டாள்? அதை அவள் உணர்ந்தாளா? இல்லையா? கேட்பதா வேண்டாமா? எதனால் நேற்று தீடிரென அப்படி நெருங்கி வந்தாள்? இன்று சந்தித்தாலும் அதே போல் இருப்பாளா? ஏதேதோ எண்ணம் அவனை அலைக்கழித்தது! அவை அனைத்தையும் மீறி அஸ்வினியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வெல்ல கிளம்பியே விட்டான் ராஜேஷ்.
காலிங் பெல்லை அடித்து விட்டு அஸ்வினியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று டென்ஷனுடன் நின்றான் ராஜேஷ். அவனை சந்தோஷப்படுத்தும் விதமாக தன் வீட்டின் வெளியே நிற்பவனை கண்டு ஆர்பரித்தாள் அஸ்வினி.
“ஹேய் வா! வா! போர் அடிச்சு இருந்தேன்….”
“அதுக்காக என்னை போர் அடிச்சுடாதே மா….”
“நான் உனக்கு போர் ஆ?” கண்களால் முறைத்தவளை கண்டு,
“பூனைக்குட்டி!” என்றான் கொஞ்சலாக. வார்த்தைக்கு வலிக்குமோ என்று மென்மையாக வந்தது குரல்.
“உனக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வரேன், நீ போய் உட்கார்….” என்றவள், இந்த பூனை குட்டி என்ன பண்ணுது பாரு…. என்று மனசுக்குள் நினைத்தபடி அடுக்களைக்குள் விரைந்தாள்.
ஹால் சோபாவில் சென்று அமர்ந்தான் ராஜேஷ். பின்னேயே அவனுக்கு ஸ்னாக்ஸ் எடுத்து வந்தவள், அதை டீபாயில் வைத்து விட்டு அவன் அருகில் அமர்ந்தாள்.
எப்போதும் அமர்வது தான்! ஆனாலும் முன்பிற்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம். முன்பெல்லாம் உடல் அங்கங்கள் ஒட்டி உறவாடாது! நண்பன் எனும் எல்லை இருந்தது! ஆனால் இன்று அஸ்வினி கொஞ்சம் அசைந்தால் அவளின் மென்மைகள் அவன் மேல் அழுந்தும்!
“தள்ளி உட்காருடி! உன்னை பூனைக்குட்டினு சொல்றதுக்கு பதிலா எருமை மாடுனு சொல்லணும்….சதா உரசிக்கிட்டே இருக்கே….” சிரிப்புடன் சொன்னான் ராஜேஷ். அவனின் தவிப்பை அவள் அதிகமல்லவா செய்கிறாள்!
“எருமைமாடு உரசும், பூனைக்குட்டி என்ன பண்ணும் தெரியுமா?” என்றவள், அவனை கிச்சு கிச்சு மூட்டினாள்…. அவனும் இவளை மூட்ட, எப்படி நிகழ்ந்தது என்றே தெரியாமல் அவனின் இறுகிய அணைப்பிற்குள் இருந்தாள் அஸ்வினி. அவளும் அவனை இறுக்கி அணைக்க, அவளின் இணக்கம் அவனுக்கு புரிய, அவள் முகத்தை நிமிர்த்தியவன், அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தான். அவளை ஊடுருவும் அவன் கண்கள் மேல் முத்தமிட்டவள், அவன் முகமெங்கும் முத்தமிட்டாள். அவளின் வேகம் அலாதியாக இருக்க, அவளை தடுக்க முடியாமல் ஒன்றும் புரியாமல் தவித்தபடி நின்றான் ராஜேஷ். அவன் இதழை அவள் ஓற்றவும் அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியாதவன், அவள் இதழை வன்மையாக கொய்து தன் சஞ்சலத்தை எல்லாம் அதில் கரைத்தான். தீண்ட தீண்ட இன்பம் போல், அவள் இதழ்களை விடவே இல்லாமல் அவைகளை சுவைத்து கொண்டே இருந்தான்!
விடியல் – 19
எப்போதும் பெண்கள் இயல்பாக இருப்பது தங்களுடைய பிறந்த வீட்டில் தானே.
அப்படித்தான் நந்தினியும் தான் எப்போதும் போல அணியும் குட்டை கவுன் ஒன்றை அணிந்திருந்தாள்.
அது சற்று முழங்காலுக்கு மேலே வரை மட்டுமே இருந்தது.
அவள் சோபாவில் அமர்ந்திருந்ததால் அந்த கவுன் தாறுமாறாக தொடைவரை மேலே ஏறி இருக்க அதைப் பற்றி சிறிதும் கவலையில்லாமல் கையில் இருந்த குளிர்களியை ருசித்தவாறு தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளை அப்படிப் பார்த்தவனுக்கோ பெரும் அதிர்ச்சி.
தாறுமாறாக அலையும் தன் பார்வையை இழுத்து அடக்கியவன் வாசலில் அப்படியே நின்று விட்டான்.
“உள்ள வாங்க மாப்ள.. ஏன் அப்படியே நினைட்டீங்க..” என்றவாறு ராமகிருஷ்ணன் உள்ளே அழைக்க தன் தந்தையின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியோடு “அப்பா வந்துட்டீங்களா…?” என்ற சிறு கூச்சலுடன் திரும்பியவள் அங்கே நின்ற தன் கணவனைக் கண்டதும் உறைந்து போனாள்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவளுடைய முகமோ நொடியில் இஞ்சி தின்ற குரங்கைப் போல மாறிப் போனது.
அவனையும் தன்னையும் குனிந்து பார்த்தவள் சட்டென தன்னுடைய கவுனை இழுத்து விட்டாள்.
என்னதான் இழுத்து விட்டாலும் அது அவளுடைய தொடையை மட்டுமே மறைக்கப் போதுமாக இருந்தது.
முழங்கால்களும் கெண்டைக்கால்களும் அப்படியே தெரிய அவளுக்கோ கூச்சமும் சங்கடமும் ஒருமித்தது.
‘ஐயோ இந்த போலீஸ்காரன் எதுக்கு இங்க வந்திருக்கான்னு தெரியலையே…’ மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள் அவள்.
“பாப்பா என்ன அப்படியே ஷாக் ஆகி நிக்கிற..? மாப்பிள்ளைக்கு இன்னைக்கு ரொம்ப வேலை ஜாஸ்தி… டயர்டாகி வந்திருக்காரு.. உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ ஃபிரெஷ் ஆகட்டும்…” என அவர் கூற,
‘அடப்பாவி டாடி…’ என மனதிற்குள் அலறி வைத்தாள் நந்தினி.
இப்போது அவளுடைய பார்வை தன் கரத்தில் இருந்த குளிர்களியின் மீது பதிந்தது.
“அத அப்புறம் சாப்பிட்டுக்கலாம் கண்ணம்மா..” அவளைப் பற்றி புரிந்தவராய் கூறினார் அவளுடைய தந்தை.
அதே கணம் சமையலறைக்குள் இருந்து வெளியே வந்த நிர்மலாவிற்கோ தன்னுடைய மாப்பிள்ளையைக் கண்டதும் அவ்வளவு சந்தோஷம்.
“அடடா வாங்க மாப்ள.. உள்ள வாங்க.. உட்காருங்க…” என அவர் அவனை வரவேற்க சிறு தலை அசைப்புடன் சோபாவின் அருகே வந்தவன் உட்காராமல் அப்படியே நின்றான்.
“என்னாச்சுப்பா..?” எனக் கேட்டார் ராமகிருஷ்ணன்.
“இல்ல நான் கொஞ்சம் டர்ட்டியா இருக்கேன்.” என்றான் அவன்.
“அதெல்லாம் பிரச்சனை இல்ல.. நீங்க உட்காருங்க..” என நிர்மலா மீண்டும் கூற வேறு வழியின்றி அங்கே இருந்த சோபாவில் அவன் அமர்ந்து கொள்ள வெடுக்கென்று எழுந்து நின்றாள் நந்தினி.
“என்ன சாப்பிடுறீங்க மாப்ள..? ஜூஸ் இல்லன்னா டீ ஸ்னாக்ஸ்..?”
“காபி…” என்றான் அவன் ஒற்றைச் சொல்லாக.
“இதோ கொண்டு வரேன்..” என்ற நிர்மலாவோ சமையலறைக்குள் நுழைய முயன்ற கணம்,
“அம்மா நானே காபி போடுறேன்..” என்றாள் நந்தினி.
நிர்மலாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் பேசியது தன்னுடைய மகளா என தலை சுற்றலே வந்து விட்டது.
இங்கே இருக்கும் போது ஒரு வேலை கூட செய்ய மாட்டாளே..
தன் கணவனுக்கு என்றதும் காபி போடுகிறேன் என்ற மகளை மெச்சுதலாகப் பார்த்தார் நிம்மலா.
பெருமை பொங்க பார்த்தார் ராமகிருஷ்ணன்.
அவர்கள் இவருடைய பார்வையும் பார்த்தவளுக்கோ,
‘அடக்கடவுளே நீங்க எத்தனை தடவை காபி போட்டாலும் அவன் சக்கர கம்மியா வேணும்னு திரும்பத் திரும்ப காபி போட வைப்பான்.. உங்கள காப்பாத்துறதுக்காகத்தான் நான் காபி போடுறேன்னு சொன்னேன்.. இது தெரியாம என்ன இப்படி பார்க்கிறாங்களே..’ என மனதிற்குள்தான் கூறிக் கொண்டாள் அவள்.
பின்னே அவள் நினைப்பதை எல்லாம் தற்சமயம் வெளியே கூறவா முடியும்..?
அவளோ அவனுடன் எதுவும் பேசாது சமையலறையை நோக்கிச் செல்ல அவனுடைய பார்வை அவளைத்தான் தொடர்ந்தது.
அவள் இறுக்கமாக அணிந்திருந்த அந்த சிறிய கவுனோ அவளுடைய இடையின் வளைவை அப்பட்டமாகக் காட்டியது.
இடையில் பதிந்த பார்வையை அப்படியே கீழே இறக்கியவன் அவளுடைய கெண்டைக் கால்களைப் பார்த்து விட்டு சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
உடல் தகிக்க ஆரம்பித்தது.
‘இதுக்கு நடு ரோட்லயே நின்னுருக்கலாம் போலையே…’ என எண்ணிக் கொண்டது அவனுடைய மனம்.
ராமகிருஷ்ணனும் நிர்மலாவும் இயல்பாக அவனுடன் பேச ஆரம்பித்தனர்.
யாரும் நடந்து முடிந்த சம்பவத்தை பற்றிப் பேச விரும்பவில்லை.
அவர்கள் இயல்பாக பேசும் போது அவனால் அதை புறக்கணிக்கவும் முடியவில்லை.
முடிந்த அளவு அவர்கள் பேசுவதற்கெல்லாம் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தான் அவன்.
சற்று நேரத்தில் காபியுடன் அவன் அருகே வந்தவள் அதை அவனுக்குக் கொடுக்க அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு காபியை வாங்கிக் கொண்டவன் அதை அருந்தத் தொடங்கினான்.
அவனுடைய உடலில் இருந்த சோர்வுக்கு அந்த காபி புத்துணர்ச்சியை கொடுப்பது போல இருந்தது.
அவன் எதிர்பார்க்கும் சுவை அப்படியே இருந்தது.
ஆனால் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது குடித்து முடித்தவன் வெறும் கப்பை முன்னிருந்த டீபாய் மீது வைத்தான்.
அதே கணம் உள்ளே இருந்த வெள்ளை நிற நாய்க் குட்டியோ வர்மாவை பார்த்து குரைத்தவாறு ஓடி வந்தது.
புசுபுசுவென்று அழகாக இருந்த நாய்க்குட்டியை எரிப்பது போல பார்த்தான் அவன்.
எத்தனையோ வேட்டை நாய்களுடன் பழகுபவனுக்கு இந்த சிறிய நாயைப் பார்த்தா பயம் வரும்..?
வேகமாக குரைத்துக் கொண்டு வந்த அந்த அழகான நாய்க்குட்டிதான் அவனைப் பார்த்து பின்வாங்க வேண்டியதாக இருந்தது.
“ஏய் டோரா உஷ்.. அவர கடிக்கக் கூடாது..” என அதட்டினாள் நந்தினி.
‘டோராவா.. இது வேறயா..?’ என எண்ணிக் கொண்டான் அவன்.
அவளுடைய டோராவோ சமத்தாக அவளுடைய கால்களை சுற்றத் தொடங்கி விட அப்படியே அதை அள்ளி அணைத்து தன் மார்போடு சாய்த்துக் கொண்டவள்,
“என்னடி பட்டுத் தங்கம்..? உங்களுக்கு பசி வந்துருச்சா…?” என நாயோடு அவள் கொஞ்சத் தொடங்கி விட அவனுக்கோ பொறுமை பறந்தது.
“சரி நான் கிளம்புறேன்..” என்றவாறு எழுந்து கொண்டான் அவன்.
“ஃப்ரஷ் ஆகலாமே மாப்பிள்ளை..?”
“இட்ஸ் ஓகே… தேங்க்ஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்தான் வர்க் இருக்கு..” என்றான் அவன்.
ஆனால் அவனுடைய மனமோ ஃபிரஷ் ஆகினால் சற்று நன்றாக இருக்கும் என்றுதான் எண்ணியது.
உடல் முழுவதும் வியர்வை வழிந்து கசகசவென்று இருந்தது.
“ரொம்ப டயர்டா இருக்கீங்க.. இப்படியே எப்படி ஒர்க் பண்ண முடியும்..? ஏன்டி இப்படியே அமைதியா நிக்கிற.. மாப்பிள்ளைய உன்னோட ரூமுக்கு கூட்டிட்டுப் போ.. அவர் ப்ரஷ் ஆகட்டும்..” என்றார் நிர்மலா.
‘வில்லங்கத்துக்கு ரூம் மேட்டா ஆயிட்டோம்… விபரீதத்த ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்..’ என எண்ணியவள் வேறு வழியின்றி அவனை “வாங்க..” என்று அழைத்தவள் தன்னுடைய அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.
பெற்றோருடன் அவன் அருகே இருக்கும் போது அவளுக்கு எந்தவிதமான பதற்றமும் எழவில்லை என்பதே உண்மை.
ஆனால் அவனைத் தனியாக தன்னுடைய அறைக்குள் அழைத்துச் செல்வதை நினைக்கவே அவளுக்கு தேகம் படபடக்க ஆரம்பித்து விட்டது.
மெல்ல படிகளில் ஏறியவள் முதல் தளத்தில் இருந்த தன்னுடைய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றாள்.
அவனும் அவளிடம் எதுவும் பேசவில்லை
அவளுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அத்துடன் அவள் இப்போது கோபமாக அல்லவா இருக்க வேண்டும் கோபித்துக் கொண்டுதானே வீட்டை விட்டு வந்திருக்கிறாள்.
அந்தக் கோபத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள் “பாத்ரூம் அங்க இருக்கு..” என குளியலறையை அவனுக்குக் காட்டினாள்.
அவளை மேலிருந்து கீழ் வரை ஆழ்ந்து பார்த்தவன்,
“உன் டவல் கொடு..” என்றான்.
“என் டவலா..? என்கிட்ட புது டவல் இருக்கு..” என்றவள் மடித்து வைத்திருந்த புதிய துவாலையை எடுத்து அவனிடம் நீட்ட அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“உனக்கு இன்பெக்ஷஸ் டிசீஸ் இல்லன்னா ரேஷஸ் ஏதாவது இருக்கா..?” எனக் கேட்டான்.
அவளோ அதிர்ந்து போனவள் “வாட்..?” என்றாள் அவனைப் பார்த்து.
“இருக்கா இல்லையா..? எஸ் ஆர் நோ..?” மீண்டும் அவனிடம் அதே அழுத்தம்.
அவனை முறைத்துப் பார்த்தவள் “எனக்கு எந்த டிசீஸும் இல்ல.. ஐ ஆம் ஃபர்பெக்ட்லி ஆல்ரைட்..” என்றாள்.
“தென் வை திஸ் நியூ டவல்..?” எனக் கேட்டான் அவன்.
அவளோ பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனாள்.
என்னவென்று சொல்வது..?
நான் உபயோகித்ததை நீ உபயோகிக்க கூடாது என்று சொல்வதா..?
அவன்தான் மனதை படிக்கும் வித்தைக்காரனாயிற்றே.
கைதிகளின் கண் அசைவிலும் உடலின் அசைவிலும் உண்மையை அறிந்து கொள்பவன் அவளின் எண்ண ஓட்டத்தையும் அக்கணம் அறிந்து கொண்டான்.
“உன்னையே யூஸ் பண்ணிட்டேன்.. உன் டவலை யூஸ் பண்ண மாட்டேனா என்ன..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ மூச்சடைத்துப் போனது.
இதற்கு மேலும் விட்டால் எக்குத் தப்பாக பேசி வைப்பான் எனப் புரிந்து தன்னுடைய துவாலை எடுத்து சட்டென அவனை நோக்கி நீட்டி விட்டாள் அவள்.
அவனோ அதை வாங்கியவன் தன்னுடைய யூனிஃபார்மை கழற்றத் தொடங்க அவளுக்கோ இன்னும் பதற்றம்தான் அதிகரித்தது.
“ஓகே.. நீங்க ப்ரஷ் ஆயிட்டு வாங்க… நான் கீழ வெயிட் பண்றேன்..” என்றவள் அங்கிருந்து நழுவ முயன்ற நேரம்,
“இப்போ நீ ரூமை விட்டு வெளியே போனா நடக்கிறதே வேற..” என்றான் அவன்.
அதிர்ந்து விட்டாள் அவள்.
இது என்ன அநியாயம்..?
நான் இந்த அறையில் இருக்க வேண்டுமா இல்லை வெளியே இருக்க வேண்டுமா என்பதை நான் தானே முடிவு செய்ய வேண்டும்.
இவன் என்ன கூறுவது..?
அவளுக்கோ கோபம் கோபமாக வந்தது.
இங்கே வந்ததும் அராஜகம் பண்ண ஆரம்பித்து விட்டானா..?
“இந்த யூனிஃபார்ம் ரொம்ப டர்ட்டியா இருக்கு.. வேற ட்ரஸ் இருந்தா நல்லா இருக்கும்..” எனக் கூறியவன் யூனிஃபார்மை அங்கிருந்த இருக்கையில் கழற்றி வைத்து விட்டு திரும்ப அவர்களுடைய அறைக் கதவு தட்டப்பட்டது.
அவனோ காக்கி பேன்ட் மட்டுமே அணிந்திருந்தான்.
நந்தினியோ சென்று கதவைத் திறந்தவள் வெளியே நின்ற தன் தந்தையைப் பார்த்ததும் “உள்ள வாங்கப்பா..” என்று அழைத்தாள்.
“பாப்பா மாப்பிள்ளை இங்க மறு வீட்டுக்கு வந்தா கொடுக்கணும்னு கொஞ்சம் ட்ரஸ் வாங்கி வச்சிருந்தேன்.. இப்போ அது அவருக்கு யூஸ் ஆகும்னு நினைக்கிறேன்.. இது எல்லாத்தையும் அவர்கிட்ட கொடு..” எனக் கூறிவிட்டு அவர் சென்று விட, சில பைகளுடன் அவனிடம் வந்தவள் அந்த ஆடைகளை அவனிடம் கொடுத்தாள்.
ராமகிருஷ்ணன் கூறியது அவனுடைய செவிகளையும் எட்டத்தான் செய்தது.
“தேங்க்ஸ்..” என்றவன் அவளுடைய துவையாலையுடன் குளியலுக்குள் சென்றுவிட அவளுக்கோ பெருமூச்சு.
இவன் இங்க இருந்து கிளம்பும் மட்டும் இவன் கூடவே இருந்து இவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் போலையே..
அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டாள் அவள்.
அவளுக்கு அருகே இருந்த அவனுடைய யூனிபார்மை பார்த்தவளின் விழிகள் விரிந்தன.
‘அப்பா ஏதோ ஆக்சிடென்ட் கேஸ்னு சொன்னாரே.. வேலை ரொம்ப அதிகம்னு வேற சொன்னாரு.. இவரும் பாவம்தான்..” என எண்ணிக் கொண்டாள் அவள்.
என்னதான் வெளியே கோபம் போலக் காட்டிக் கொண்டாலும் அவன் தன்னுடைய வீட்டிற்கு வந்தது அவளுடைய அடி மனதில் இனிக்கத்தான் செய்தது.
சற்று நேரத்தில் குளித்து முடித்து அவளுடைய துவாலையை மட்டும் இடையில் கட்டிக் கொண்டு வெளியே வந்தவனைப் பார்த்ததும் அவளுக்கும் இதயம் எகிறி குதிக்கத் தொடங்கியது.
முகம் சிவக்க திரும்பி நின்றவளின் அருகே வந்தவன்,
“வாட்..?” என்றான்.
“மு.. முதல்ல ட்ரெஸ்ஸ போடுங்க..” என்றாள் அவள்.
“ஏன் இதுக்கு என்ன குறைச்சல்..?” என்றான் அவன்.
“எல்லாமே குறைச்சலாதான் இருக்கு..” என்றாள் அவள்
அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன்,
“நீயும்தான் செ**ஸியா ட்ரெஸ் பண்ணிருக்க.. நான் ஏதாவது சொன்னேனா..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
🥀🥀
விடியல் – 18
கொய்யாப் பழத்தைக் கையில் வைத்து கொறித்துக் கொண்டிருந்த நந்தினியை கவலையோடு பார்த்தார் நிர்மலா.
அவருடைய மனமோ நந்தினியை நினைத்து பதறிக் கொண்டிருந்தது.
பின்னே திருமணம் முடித்துக் கொடுத்த சில நாட்களிலேயே கணவனுடன் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்தால் எந்தத் தாய்தான் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்..?
தன்னுடைய பெண்ணின் வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சனையாகி விடுமோ என அந்தத் தாயின் உள்ளம் தவித்தது.
நிர்மலாவின் மனநிலைக்கு எதிராக இருந்தார் ராமகிருஷ்ணன்.
அவரைப் பொறுத்தவரை மகளின் மகிழ்ச்சி மட்டுமே பிரதானம்.
அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் சிறிதும் யோசிக்காமல் இந்த வாழ்க்கையிலிருந்து முழுதாக அவளை அழைத்து வந்துவிடும் மனநிலையே அவருக்கு.
ராமகிருஷ்ணனைப் பற்றி தெரிந்ததாலேயே நிர்மலாவின் மனதின் அச்சம் இன்னும் அதிகரித்தது.
சிறிய பிரச்சனையை பெரிதாக எண்ணி கோபித்துக் கொண்டு வந்த மகளுக்கு புத்தி சொல்லி மீண்டும் அவளுடைய வீட்டிற்கு அவளை அனுப்பி வைக்காமல் மகளுடன் சேர்ந்து மருமகனைத் திட்டிக் கொண்டிருந்தால் அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்..?
தன் மகளிடமாவது பேசி புரிய வைக்கலாம் என்ற நம்பிக்கையோடு அவளை நெருங்கினார் நிர்மலா.
“நந்து..”
“என்னம்மா..” என்றவள் கொய்யாப் பழத்தைக் கடித்து விட்டு தன்னுடைய அன்னையின் முகத்தை என்னவென்பது போலப் பார்க்க, அவளை நெருங்கி அமர்ந்து அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டார் அவர்.
“நீ இங்க வந்து முழுசா ஒரு நாள் முடிஞ்சிடுச்சு..”
“என்னம்மா.. என்னை துரத்தி விட பாக்கறீங்களா..”
“புரியாம பேசாதடி.. வாழ்க்கைல சின்னச் சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாமே..”
“அம்மா.. எனக்கு அவரை சுத்தமா பிடிக்கல.. கல்யாணத்தன்னைக்கே அவர் என்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கணும்.. ஆனா இப்போ வரைக்கும் அவர் பண்ணது சரிதான்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு.. அன்னைக்கு நைட் ரெண்டு மணிக்கு திரும்பி வந்தவரு என்கிட்ட எதுக்கு போனேன்னு காரணத்தைக் கூட சொல்லல..”
“அடியே.. மா�ப்பிள்ளையோட வேலை அந்த மாதிரிடி..”
“எனக்கும் புரியுது.. அன்னைக்கு அவர் போனதாலதான் சைக்கோகிட்ட மாட்டிருந்த பசங்களைக் காப்பாத்த முடிஞ்சுது.. அவர நான் போக வேணாம்னு எல்லாம் சொல்லலம்மா.. ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா என்னன்னுதான் கேட்கிறேன்.. எப்பவுமே தான் பண்றது மட்டும்தான் சரின்னு நடந்துக்கிறாரு..” என்றாள் நந்தினி.
“அம்மாடி நந்து.. நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குப் புரியுது.. உன் மேலயும் தப்பு இல்ல.. அவர் மேலயும் தப்பு இல்ல.. அவரோட டியூட்டியைப் பண்ணத்தானே போயிருக்காரு.. அதை நாம தப்பு சொல்ல முடியாது..”
“அம்மா.. நீங்களும் அப்பாவும் கூட என்னை அடிச்சதே இல்லை.. தப்பு பண்ணாம அடி வாங்கியிருக்கேன்..” அவள் குரல் நடுங்கியது.
“உன்னை அடிச்சதுல எனக்கும் வருத்தம்தான்.. எதுவா இருந்தாலும் பேசி புரிய வச்சிருக்கலாம்.. சரி விடு.. நீ எல்லா விஷயத்துலயும் தைரியமா இருக்கணும்னு அவர் எதிர்பார்க்கிறார்போல.. அதனாலதான் இப்படி பண்ணிட்டாரு..”
“என்னம்மா.. நீங்களும் இப்படி பேசுறீங்களே..” என்றாள் நந்தினி.
“அடியேய் அவர் என்ன குடிச்சிட்டு வந்து அடிச்சு கொடுமைப்படுத்துறாரா.. இல்ல வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா.. இல்ல வேற எந்த பொண்ணு கூடவும் தப்பான உறவுல இருக்காரா.? எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனுஷன்டி.. எங்க தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்காது..” என்ற அன்னையை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க தான் மெச்சுக்கணும்..” என முணுமுணுத்தாள்.
“என்னடி.. என்னை திட்றியா..”
“சே சே இல்லம்மா.. அவரைத்தான் திட்டுவேன்..” என்றாள் நந்தினி.
“அப்படிலாம் திட்டக் கூடாது நந்து… இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் சந்திச்சது கூட இல்ல.. இப்பதான் கல்யாணம் பண்ணியிருக்கீங்க.. ஒரு வாரம் கூட ஆகல.. நீங்க ரெண்டு பேரும் பேசி பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க உங்களுக்கு டைம் தேவை.. அவருக்கான டைமை நீ கொடுமா.. எல்லாம் சரியாயிடும் நந்து..”
“இப்போ என்னம்மா சொல்ல வர்றீங்க.. என்னை மறுபடியும் அந்த வீட்டுக்கு போகச் சொல்றீங்களா..”
“இனி அதுதான் உன்னோட வீடு.. உங்க அப்பாவும்தான் நிறைய பிரச்சனை பண்ணுவாரு.. அதுக்காக நான் என்ன கோவிச்சுக்கிட்டு எங்க அம்மா வீட்டுக்கு போறேனா.. இல்லைல்ல.. புரிஞ்சுக்கோடி.. இதுதான் உன்னோட வாழ்க்கை.. இனி இத மாத்த முடியாது..”
“சரிம்மா.. கொஞ்ச நாள் இருந்துட்டு நானே போயிடுறேன்..” எனக் கூறிவிட்டு எழுந்தவள் கையில் இருந்த கொய்யாப் பழத்தை அப்படியே அங்கிருந்த மேசை மீது வைத்து விட்டு தன்னுடைய அறைக்குள் வந்து விட்டாள்.
என்னதான் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அவளுடைய மனதிலும் வேதனை இருக்கத்தான் செய்தது.
அன்றைய நாள் இரவு தன்னுடைய சம்மதம் இல்லாமல் அவன் தன்னை எடுத்துக் கொண்டதை அவளால் இப்போதும் கூட ஜீரணிக்க முடியவில்லை.
அதைப் பற்றி எல்லாம் தன் அன்னையிடமோ தந்தையிடமோ சொல்லிவிட முடியாது.
விழிகளில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் என்ன செய்வது என சிந்திக்கத் தொடங்கினாள்.
இந்தத் திருமண வாழ்க்கையை முறித்துவிடும் எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை.
வர்மாவின் மீது கோபத்தில் இருந்தவள் தந்தையைக் கண்டதும் கிளம்பி வந்துவிட்டாள்.
ஆனால் இப்போது மீண்டும் அங்கே செல்வதற்கு சங்கடமாக இருந்தது.
அதுவும் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு அவன் அணைத்து முத்தமிட்டது நினைவில் வந்ததும் அவள் முகம் சிவந்து போனது.
அதே கணம் தன் மீது கோபமும் வந்தது.
எப்படி அவனுடைய முத்தத்திற்கு ஒத்துழைத்தோம்..?
அவனைத் தள்ளி அல்லவா விட்டிருக்க வேண்டும்..
தன்னை அடித்துவிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்காமல் முத்தமிட்டவனின் முத்தத்தில் உருகி குழைந்திருக்கின்றோமே என்று தன்னையே நொந்து கொண்டாள் அவள்.
“ஓ மை காட்.. இந்த போலீஸ்காரனோட போராடணும்னுதான் என் தலைல எழுதியிருக்கு போல.. இவன் மாறுவானா என்னனு கூட தெரியலையே..” என புலம்பியவாறு தன் நெற்றியை அழுத்தமாக வருடினாள் அவள்.
****
மூன்று நாட்களுக்குப் பிறகு..
நந்தினி வீட்டை விட்டுச் சென்று மூன்று நாட்கள் முழுதாக முடிந்திருந்தன.
வர்மா அவளுடைய வீட்டிற்கு சென்று அவளை அழைக்கவும் இல்லை.
அவளும் அவனுடைய வீட்டிற்கு கிளம்பி வரவும் இல்லை.
இவர்களுடைய பெற்றோர்கள்தான் அவர்களை எண்ணி தவித்துக் கொண்டிருந்தனர்.
அன்று காலையில் பிரதான சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலரின் உயிர் பறிபோயிருந்தது.
ஒன்று கூடிய மக்களை விலக்கி நிறுத்தி உயிருக்கு போராடியவர்களைக் காப்பாற்றி அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளை அங்கே நின்று மேற்பார்வையிட்டு வழங்குவதற்கே வர்மாவிற்கு நேரம் சரியாக இருந்தது.
முடிந்த அளவிற்கு பலரின் உயிரைக் காப்பாற்றியிருந்தார்கள்.
சிலர் அந்த இடத்திலேயே இறந்து போயினர்.
சிலர் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டிராஃபிக் போலீஸின் உதவியுடன் வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தி அந்த வீதியைக் கிளியர் செய்து தனக்குக் கீழே இருந்த காவல் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து முடிக்கவே கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாகியது.
மதிய நேரம் தொடங்கிய பணி அன்று மாலை வரை நீடித்தது.
வர்மாவோ தண்ணீர் கூட அருந்தவில்லை.
இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அதிகாரி அல்ல அவன்.
“சார்.. நீங்க போங்க.. இனி நாங்க பார்த்துக்குறோம்..” என்றார் கான்ஸ்டபிள்.
“இல்ல கணேசன்.. இப்போ வீட்டுக்கு போயிட்டு வர்றதுக்கு எல்லாம் டைம் இல்லை.. சம்டைம் பிரச்சனை வேற மாதிரி கூட போகலாம்.. லாரி டிரைவர் மேல நிறைய பேர் செம கோவத்துல இருக்காங்க.. முதல்ல அவருக்கு பாதுகாப்பு கொடுங்க..” என்றான் யுகேஷ் வர்மா.
சற்று நேரத்தில் மருத்துவமனையில் இருந்த அவனுடைய டீம் மெம்பர்களான ரகு சரவணன் மதன் மூவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.
“எத்தனை பேர் பிழைச்சிருக்காங்க..?”
“பிழைச்சவங்களை விட இறந்தவங்கதான் அதிகம் சார்..” என சற்று கவலையுடன் கூறினான் சரவணன்.
வர்மாவிடமோ பெருமூச்சு.
“இது ரொம்ப பெரிய இழப்பு சார்..” என்றான் மதன்.
“யாரோ ஒருத்தரோட கவனக் குறைவால எத்தனையோ உயிர் இப்படி பரிதாபமா போகுது.. ஷிட்.. எனக்கு தலைவலியே வந்துடுச்சு..” என் தன் தலையை அழுத்தமாக வருடினான் அவன்.
“சார்.. நாங்களாவது இருபது நிமிஷம் பிரேக் எடுத்தோம்.. நீங்க மதியத்துல இருந்து இப்போ வரைக்கும் இங்கேயே நிக்கிறீங்க.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க சார்.. நாங்க பார்த்துக்க மாட்டோமா..?” எனக் கேட்டான் ரகு.
“வீட்டுக்கு போயிட்டு வரவே ரெண்டு மணி நேரம் ஆகும் டா..”
“அப்போ ஏதாவது ஹோட்டல்ல ஃபிரஷ் ஆகலாமே..”
“பாக்கலாம்..” என்றவன் தனக்கு அருகே வந்து நின்ற காரைப் பார்த்ததும் புருவம் உயர்த்தினான்.
காரிலிருந்து வேகமாக இறங்கி வந்தார் நந்தினியின் தந்தை ராமகிருஷ்ணன்.
“மாப்பிள்ளை..” என அழைக்க வந்தவர் அவன் யூனிஃபார்மில் இருப்பதைப் பார்த்து “சார்..” என்று தொடங்கினார்.
“வாங்க..” என்றான் வர்மா சோர்வான குரலில்.
அவனுடைய கம்பீரமான குரல் இப்படி சோர்ந்து ஒலிப்பதைக் கண்டதும் அவருக்கே ஒரு மாதிரியாகிப் போனது.
அவன் இவ்வளவு நேரமும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததை எல்லாம் தொலைக்காட்சியில் நேரலை செய்தி மூலம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.
அந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் அவருடைய வீடும் இருந்தது.
ஏதாவது தன்னாலான உதவியைச் செய்து கொடுக்கலாம் என தன்னுடைய கம்பனியில் இருந்து தன் காரை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்கே வந்துவிட்டிருந்தார் ராமகிருஷ்ணன்.
“ரொம்ப நேரமா இங்கேயே நிற்கிறீங்க.. நியூஸ்ல பார்த்தேன்.. அதுதான் ஏதாவது உதவி வேணுமான்னு கேட்க வந்தேன்..”
“நான் கொஞ்சம் பிரெஷ் ஆகணும்.. இங்க பக்கத்துல உங்களுக்கு தெரிஞ்ச ஹோட்டல் ஏதாவது இருக்கா..?”
“நம்ம வீடு இருக்கே மாப்பிள்ளை.. ஹோட்டல் எதுக்கு..?”
உணர்ச்சிவசப் பட்டு மாப்பிள்ளையென அழைத்து விட்டார் அவர்.
சரவணன் ரகு மதன் மூவருக்கும் அதிர்ச்சி.
“சார்.. உங்க மாமனாரா இவரு..?” சிரித்தபடி கேட்டான் சரவணன்.
சரவணனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் ஆம் என்று தலையசைத்தான்.
“அப்புறம் என்ன.. பக்கத்திலேயே வீடு இருக்கு.. நீங்க அங்க போய் பிரெஷ் ஆகிட்டு ஏதாவது சாப்பிட்டு வாங்க.. நாங்க பார்த்துக்கிறோம்..” என்றான் ரகு.
“வாங்க மாப்பிள்ளை.. போகலாம்..” என்றவாறு ராமகிருஷ்ணன் கார் கதவையே திறந்து விட,
“இட்ஸ் ஓகே.. நானே ஓப்பன் பண்றேன்..” என்றவன் முன்புற கார்க் கதவைத் திறந்தவாறு சட்டென நின்றான்.
“எல்லார் மேலயும் ஒரு கண் வச்சிருங்க.. ரகு, சரவணன் நீங்க ரெண்டு பேரும் இந்த ஸ்பாட்லையே நில்லுங்க.. மதன் நீ கணேசனைக் கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போ.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க வந்துடுறேன்..” எனக் கூறி விட்டு காருக்குள் அமர்ந்தான் வர்மா.
ராமகிருஷ்ணனோ தானும் முன்புறம் அமர்ந்தவர் காரைச் செலுத்தத் தொடங்கினார்.
காரினுள் இருந்த ஏசி வர்மாவை சற்றே ஆசுவாசப்படுத்தியது.
“உங்களால வீட்டுக்கு வர முடியலன்னாக் கூட ஒரு கால் பண்ணியிருக்கலாமே மாப்பிள்ளை.. குடிக்கிறதுக்கு ஜூஸ் ஆவது கொண்டு வந்து கொடுத்திருப்பேனே..” என்ற தன்னுடைய மாமனாரை வியந்து பார்த்தான் அவன்.
இதுவரை அவன் அவருடன் சில வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் பேசியது இல்லை.
வீட்டிற்கு வந்தவரை வரவேற்றது கூட இல்லை.
ஆனால் தனக்காக இவ்வளவு தூரம் சிந்திக்கின்றாரே என நினைத்தவன் “டென்ஷன்ல எனக்கு எதுவுமே தோணல..” என்றான்.
சற்று நேரத்தில் நந்தினியின் வீடு வந்திருந்தது.
“உள்ளே வாங்க மாப்பிள்ளை..”
முதல் முறையாக அவர்களுடைய வீட்டுக்குள் செல்கிறான்.
அவனுடைய தோற்றமோ படுமோசமாக இருந்தது.
உடல் முழுவதும் வியர்வை.
யூனிஃபார்மில் ஆங்காங்கே ரத்தக்கறை வேறு அப்பியிருந்தது.
பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தவன் வரவேற்பறையின் சோபாவில் எக்குத்தப்பாக அமர்ந்திருந்த நந்தினியின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து விட்டான்.
மெல்லிய பிங்க் கலர் சில்க் சாரியில், வெள்ளி நகைகளோடு மஞ்சள் தாலி மின்ன, ஆடம்பரம் இல்லாமல் மிதமான ஒப்பனையோடு நின்றிருந்த தாமரையின் அருகில், கருநீல கோட் சூட்டில் அலட்சியமாக நின்றிருந்தான் தமிழ்.
வந்தவர்களை வரவேற்கும் படலம் ஒரு புறம் நடக்க, இன்னொரு பக்கம் புகைப்படக் கருவி அழகழகாக மணமக்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் நஸ்ரூல் முன்னே வர, அவன் பின்னே ஒயிலாக உள்ளே வந்து கொண்டிருந்தாள் வரலக்சுமி.
வரலக்சுமிக்கு அந்த திருமண வரவேற்பிற்கு வரும் வரையில் கூட தெரியாது, தமிழரசனுக்கு திருமணம் ஆன விசியம்.
“யாருக்கு ரிஷப்ஷன் டார்லிங்.. நீங்கள் சொல்லவே இல்லையே..”
“நமக்கு ரொம்ப ரொம்ப வேண்டப் பட்டவங்க தான்.. அதை நீயே அங்கு வந்து தெரிஞ்சிக்கோ..”
“நீங்கள் எப்பவுமே இப்புடி தான் டார்லிங்.. எல்லாமே சர்ப்ரைஸ் தான் குடுப்பீங்க..”
“என்ன செய்ய எல்லாம் என்ரை கெட்ட நேரம்..”
“புரியலை டார்லிங்..”
“இல்லை கிளைமேட் ரொம்ப மோசமா இருக்குனு சொன்னேன்..”
“லைட்டா அப்புடி தான் இருக்கு.. அப்புறம் சொல்லுங்க நான் என்ன டிரெஸ் போட்டுக்கிட்டா உங்களுக்கு பிடிக்கும்..”
“அது இருக்கட்டும்.. உனக்கு தமிழைத் தெரியுமா..”
“எந்தத் தமிழ்..”
“உனக்கு எத்தினை தமிழைத் தெரியும்..”
“எனக்கு ரெண்டு மூணு தமிழைத் தெரியும்..”
“ஓ.. தமிழரசன் தெரியுமா..”
“ஓ.. ஏன் கேக்கிறீங்க..”
“இல்லை.. அவனோட கம்பெனியோட எனக்கு புது ஒப்பந்தம் ஒண்ணு உருவாகி இருக்கு.. அதோட அவனுக்கும் எனக்கும் ஒரு பழைய கணக்கு ஒண்ணும் இருக்கு..”
“என்ன கணக்கு அது..”
“நாம ஒண்ணா படிக்கிற காலத்துல.. யாருக்கு சூப்பர் பிகரு லவ்வரா வருவானு பாக்கலாம் அப்புடினு ஒரு சாலஞ்ச் பண்ணோம்.. அதான் எனக்கு நீ கிடைச்சிட்டே அதை அவனுக்கு தம்பட்டம் அடிக்க வேண்டாமா..”
“ஐயோ அதெல்லாம் வேண்டாம்..”
“ஹேய் நீ எதுக்கு பதறுறாய்.. உன்னை அவனுக்கு நான் காட்டிப் பெருமைப் பட்டே ஆகோணும்..”
“எப்போ.. எனக்கு இந்த மந்த் முழுக்க நேரம் இருக்காதே..”
“ஓ அப்புடியா.. சரி உனக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லு..”
“அப்போ சரி..”
“அப்புறம் இன்னொரு விசயம் இன்னும் ரெண்டு நாள்ல என்னோட பிரெண்ட் ஒருத்தனுக்கு ரிஷப்சன் அப்புடினு சொன்னேனே.. அதுக்கு வர நேரம் இருக்கா..”
“நான் வரலைனா நீங்க கவலைப் படுவீங்களே டார்லிங்.. கண்டிப்பா வர்ரேன்..”
“கண்டிப்பா நீ வரலைனா நான் கவலைப் படுவேன்..”
என முடித்துக் கொண்ட நஸ்ரூல், இதோ வரலக்சுமியோடு தமிழின் ரிஷப்சனுக்கு வந்திருந்தான்.
வரலக்சுமியை உள்ளே வரும் போதே பார்த்து விட்ட தாமரைச்செல்வி, வேகமாகத் திரும்பித் தன் கணவனைப் பார்த்தாள், அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல வரலக்சுமியை பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
ஆக அவன் சொன்னது பொய்யில்லை, அவன் இப்போது வரலக்சுமியை ஒரு ஆளாகவே மதிக்கவில்லை என்பது, தாமரைக்கு லேசாக உள்ளூர இனம் புரியாத ஒரு நிம்மதியைக் கொடுத்தது.
தான் ஒரு தலையாக நேசித்தவன் தனக்கு மட்டும் காதலனாக இருந்த போது, வேறொருத்தியை நேசிக்கிறான் என்பதை மனதளவில் ஏற்றுக் கொண்டவளால், அவன் தன் கணவனான பின்னர், முன்பு இருந்தது போல அந்த வேறொருத்தி மீது காதலில் இருக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லை என்பது தான் உண்மை.
நஸ்ரூலின் கரத்தை இறுகப் பிடித்துக் கொண்டு, அந்த மண்டபத்தின் பிரமாண்டத்தையும் அலங்காரத்தையும் நோட்டம் விட்டுக் கொண்டு வந்த வரலக்சுமியின் விழிகள் எதேச்சையாக மணமேடைக்குத் தாவி, அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் அப்படியே நிலைகுத்தி நின்றது.
அங்கே மேடையில் மணமகனாக நின்றிருந்தவனைப் பார்த்ததும் அதிர்ந்து விழித்தவள், சட்டென்று அருகில் நின்றிருந்தவளை ஆராய்ந்தாள்.
அந்த நேரத்தில் தாமரை குனிந்து தன் பக்கத்தில் நின்றிருந்த பெண்மணியோடு ஏதோ பேசிக் கொண்டு இருந்ததால் அவளது முகம் சரியாகத் தெரியவில்லை.
“என்ன டார்லிங்.. வேறை யாரோ பிரெண்டுக்கு தானே ரிஷப்ஷன்னு சொன்னீங்க.. இங்க என்ன இவரு இவரு..”
என வரலக்சுமி தடுமாற,
“எவரு.. ஓ தமிழரசனா.. ஆமா எனக்கும் இங்க வரும் வரை தெரியாது இவரு தான் மணமகன்னு..”
என ஒரு பொய்யை வழமை போல நஸ்ரூல் அவிழ்த்து விட, அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் வரலக்சுமி.
“என்ன அப்படிப் பார்க்கிறாய்.. எனக்கு பொண்ணைத் தான் தெரியும்..”
“ஓ பொண்ணு.. ரொம்ப பெரிய இடமோ..”
“இனிமேல் பெரிய இடம் தான்..”
“புரியலை டார்லிங்..”
“தமிழரசனை கட்டினால் இனி பெரிய இடம் தானேனு சொன்னேன்..”
“ஓ..”
என்று கொண்டு, மீண்டும் தமிழின் பக்கத்தில் நின்றிருந்தவளைப் பார்த்தாள் வரலக்சுமி.
அவளை ஏமாற்றாமல் தரிசனம் கொடுத்தாள் தாமரைச்செல்வி.
தாமரையை மணமகளாகப் பார்த்ததும் மேலும் அதிர்ச்சியானாள் வரலக்சுமி.
இந்த ஒரு மாதமாக தமிழரசனிடம் இருந்து ஒரு ஒதுக்கத்தை உணர்ந்த வரலக்சுமிக்கு, அவன் திடுதிப்பென்று தன்னை விட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என்கிற எண்ணம் மட்டும் துளி கூட வரவேயில்லை.
ஆனால் இப்போது அவனை மணமகனாகப் பார்த்ததும் எப்படி உணர்ந்தாள் என அவளுக்கே தெளிவாகத் தெரியவில்லை.
ஒரு வேளை இவள் உண்மையாக நேசித்து, தமிழ் அவளை ஏமாற்றி வேறு பெண்ணைத் திருமணம் செய்திருந்தால், மனமுடைந்து போயிருப்பாளோ என்னவோ, ஆனால் அவளுமே உண்மைக் காதல் செய்யாமல் பணம் பகட்டை மாத்திரமே பார்த்தாள் என்பதால், சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.
அடுத்த நொடியே தன்னை விட்டு வோறொருத்தியை மணந்த தமிழை எப்படிப் பழி வாங்கலாம் என்கிற எண்ணம் சடுதியில் அவளுக்கு உருவானது.
அதற்குள் அவளை அழைத்துக் கொண்டு மேடையேறி இருந்தான் நஸ்ரூல்.
நஸ்ரூலோடு வந்தவளது முகத்தை தமிழ் ஏறெடுத்துக் கூடப் பார்க்காதது, வரலக்சுமியின் ரோஷ நரம்பை வேகமாகப் பிடித்துச் சுண்டியிழுத்தது போலும், அவள் தமிழரசனை முறைத்து விட்டு, தாமரையை வன்மமாகப் பார்த்து வைத்தாள், தாமரையை அந்த இடத்தில் தமிழுக்கு ஜோடியாகப் பார்க்க அவள் மனம் முரண்டியது.
தான் தமிழைக் காதலிக்கிறேன் என்று சொல்லித் திரிந்த காலத்திலேயே, நஸ்ரூலையும் காதலிக்கிறேன் என்று சொல்லி வலம் வந்தது அவளுக்கு தோதாக மறந்து போக, தமிழரசனைக் குற்றவாளி போலப் பார்த்தாள் வரலக்சுமி.
மேடையேறி தமிழ் பக்கத்தில் போனவள்
“என்னைய விட்டிட்டு.. போயும் போயும் இந்த மிடில்கிளாஸைத் தான் நீ கட்டிக்கிட்டியா தமிழ்.. உனக்கு வேறை பொண்ணுங்களே கிடைக்கலையா.. பார்க்கவே காமெடியா இருக்கு.. இவ என்னைய விட எந்த விதத்தில பெட்டர்னு சொல்லு.. சரியான பட்டிக்காட்டு பொண்ணு..”
என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்ல, கேட்க வேண்டியவனுக்கு கேட்டதோ இல்லையோ தாமரைக்கு நன்றாகவே கேட்டது.
அன்றைய நாள் விடிந்ததில் இருந்து பொறுமை பொறுமை என இழுத்துப் பிடித்தபடி இருந்த தாமரைக்கு, வரலக்சுமி சொன்ன வார்த்தைகளில் பொறுமை விடைபெற்றுக் கொண்டு வேகமாக மண்டப எல்லையைத் தாண்டிக் கொண்டு போனது.
அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 22
– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”
கானலாய் ஒரு வாழ்வு..!!
“டிவோர்ஸ் டாக்குமென்ட்டா?”
அவன் அதிர்ந்து கேட்க “ஆமா.. என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்காம உன் குழந்தையை சுமக்க முடியாது.. அதே சமயம் உன்னால காலம் முழுக்க என்னை பொண்டாட்டியா வெச்சு வாழ முடியாது.. இது ரெண்டுத்துக்கும் ஒரு சொல்யூஷன் வேணும்னா நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.. உன் குழந்தையை வாடகை தாயா இருந்து நான் பெத்து கொடுக்கறேன்.. அந்த குழந்தையை பெத்தப்புறம் டிவோர்ஸ் பண்ணி பிரிஞ்சிடலாம்.. அந்த டிவோர்ஸ் பத்திரத்துல நான் இப்பவே கையெழுத்து போட்டுடறேன்… குழந்தை பெத்து கொடுத்த அடுத்த நாளே நீ டிவோர்ஸ் ஃபைல் பண்ணிடலாம்.. மியூச்சுவல் கன்சென்ட்ங்கறதனால ஈஸியா கொஞ்ச நாள்லேயே டிவோர்ஸ் கிடைச்சுடும்” என்றாள் அவள்..
அவள் அவ்வளவு தெளிவாக பேசிக்கொண்டிருந்ததை கேட்டவன் “பரவாயில்லையே சண்டி ராணி.. சூப்பர் ஸ்மார்ட்டா யோசிச்சிருக்கே.. எல்லாருக்கும் ஒத்து வர்ற மாதிரி… நானும் குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ எங்க வீட்ல.. எங்க கண்காணிப்பில தான்.. இருக்கணும்னு சொல்லணும்னு நினைச்சேன்.. இப்போ நீ சொல்ற சொல்யூஷனும் அதுக்கேத்த மாதிரியே இருக்கு.. வெரி ஸ்மார்ட்.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. நான் அருண் கிட்ட சொல்லி இது எல்லா டாகுமெண்ட்ஸையும் உடனே ஏற்பாடு பண்ண சொல்லிடறேன்” என்றான் அவன்..
“எனக்கு இதுல இன்னொரு முக்கியமான ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு” என்றாள் அவள்..
“அதானே எப்பவுமே ஒரு கண்டிஷன்ஸ் அப்ளை போடாம உனக்கு தூக்கம் வராதே.. சொல்லு.. என்ன ரிக்வெஸ்ட்?” என்று கேட்டான் அவன்..
“நான் வாடகை தாயா இருந்து தான் உனக்கு குழந்தை பெத்து குடுக்க போறேன்கிற விஷயமோ இல்ல நம்ம ஒரு வருஷத்துக்கு அப்புறம் விவாகரத்து பண்றதுக்கு இப்பயே இந்த டிவோர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணி இருக்கோம்ன்ற விஷயமோ வெளிய யாருக்குமே தெரியக்கூடாது.. தயவு செஞ்சு இந்த ஒரு ஹெல்ப்பை மட்டும் எனக்கு பண்ணு.. அந்த அருண் கிட்டயும் சொல்லிடு ப்ளீஸ்..” கெஞ்சலாய் கேட்டாள் அவள்..
“ஓகே.. இதுல எனக்கு எதுவும் நஷ்டம் இல்லை.. சோ இந்த விஷயம் நீ.. நான்.. அருண்.. எங்க அப்பா.. நாலு பேரை தவிர வேற யாருக்கும் தெரியாது.. இது என்னோட ப்ராமிஸ்..நீ தைரியமா இருக்கலாம்..” என்று சொன்னான் அவன்..
“இப்படித்தான் முதல் நாள் பார்ட்னர்ஷிப் டாக்குமெண்ட் சைன் பண்ணும் போது நீ சொன்னே.. ஆனா நேத்திக்கு வந்து வேற மாதிரி சொல்லி பெரிய குண்டையே என் தலையில போட்ட.. அதே மாதிரி இந்த விஷயத்திலும் நடந்துக்கமாட்டேன்னு நான் நம்புறேன்.. உன்னை ரெண்டாவது முறையா நம்புறேன்.. உன் வார்த்தையை தயவு செஞ்சு காப்பாத்து.. நீ கொடுத்த பிராமிஸ்ஸை உடைச்சுடாதே..” அவனை தீர்க்கமாய் பார்த்து சொன்னாள் அவள்..
“ஓகே ஓகே.. கூல்.. ஆக்சுவலி இந்த குழந்தை பிரச்சனை வரலேன்னா போன முறையே நான் என் பேச்சிலிருந்து மாறி இருக்க மாட்டேன்.. ஆனா இதுக்கு ஒரு சொல்யூஷன் வேணும்னுதான் நேத்திக்கு நான் என் பேச்சிலருந்து மாற வேண்டியதா போச்சு.. எல்லாம் நல்லபடியா முடியும்னா ஓகே.. எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல..” என்றவன் தொடர்ந்தான்..
“ஆனா இது நடுவுல எந்த பிராப்ளமும் உன்னால வரக்கூடாது.. அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ.. குழந்தையை பெத்து குடுத்துட்டு நடையை கட்டிட்டு போயிட்டே இருக்கணும் நீ.. இந்த வாடகை தாயா இருக்கேன்னு சைன் பண்ற டாகுமெண்ட்லயே குழந்தை பெத்தப்புறம் உனக்கும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு நான் ஒரு கிளாஸ் போட்டு இருக்கேன்.. சோ அதுக்கும் சேர்த்துதான் நீ சைன் பண்றே.. ஞாபகம் வச்சுக்கோ… குழந்தை பெத்து குடுத்துட்டு கொஞ்ச நாள் கழிச்சு அந்த குழந்தையை பார்க்கணும்.. அந்த குழந்தையோட பேசணும்.. இந்த குழந்தைக்காக எங்க வீட்ல வந்து இருக்கணும்.. இப்படி எல்லாம் நீ பிரச்சினை பண்ணினா நடக்கிறதே வேற.. ரொம்ப அசிங்கப்பட்டு போயிடுவே” என்றான் அவன் மனசாட்சியே இல்லாமல்..
“இல்ல.. நான் அதெல்லாம் பண்ண மாட்டேன்.. நீ தாராளமா என்னை நம்பலாம்.. உன்னை மாதிரி நான் ஒரு வார்த்தை குடுத்துட்டு அதுக்கப்புறம் அதிலிருந்து பின் வாங்க மாட்டேன்..” அவ்வப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவன் சொன்ன வார்த்தையில் இருந்து தவறியதை குத்தி காட்டினாள் அல்லி..
“ஓகே தென்” என்றவன்.. “நான் அருணை இது எல்லா டாகுமென்ட்ஸூமே எடுத்துட்டு வர சொல்றேன்.. நம்ப ரெண்டு பேரும் சைன் பண்ணிடலாம்” என்றான் அவன்..
” ஒரு நிமிஷம்” என்றவளை பார்த்து “மறுபடியும் என்ன?” என்றான் அவன்..
“நான் சொன்ன மாதிரி நான் வாடகை தாயா இருக்கறதுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேங்கிறது எங்க அப்பாக்கு தெரிய வேண்டாம்.. நம்ப இப்போ பத்திரத்தில் சைன் பண்ணிட்டு அதுக்கப்புறம் அந்த ப்ரொசீஜர் எல்லாம் பண்ணினோம்னா எங்க அப்பாக்கு நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுரும்.. அவருக்கு சந்தேகம் வரக்கூடாது.. எங்க அப்பா அம்மா முன்னாடி ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல முறையா நீ எனக்கு மாலை போட்டு தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்க வேண்டி இருக்கும்.. இதுக்கு உனக்கு ஓகேன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. நிச்சயமா நான் டைவர்ஸ் பேப்பர்ஸ்ல என்னைக்கு நம்ம மேரேஜை ரெஜிஸ்டர் பண்றமோ அன்னைக்கே சைன் பண்ணிடுவேன்.. இது நான் உயிரா நெனைக்கிற எங்க அப்பா அம்மா மேல சத்தியம்” என்று சொன்னாள்..
“நீ எவ்வளவு ஃபேமிலி அட்டாச்ட்னு எனக்கு தெரியும்.. சோ.. நான் உன்னை நம்புறேன்.. ஓகே.. நீ உங்க அப்பா கிட்ட விஷயத்தை சொல்லி எப்படியோ அவரை இந்த மேரேஜ்க்கு ஒத்துக்கறதுக்கு கன்வின்ஸ் பண்ணிடு.. இந்த மேரேஜ் இன்னும் ஒன் வீக்குக்குள்ள நடக்கிற மாதிரி பார்த்துக்கோ.. என்னால அதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது..” என்றான் அவன்..
“ஒண்ணும் பிராப்ளம் இல்ல.. நீ சொல்றபடியே பண்ணிடலாம்.. “என்று அல்லி சொல்லவும் அவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்..
அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த அல்லி தன் வாழ்க்கை தொடங்கும் போதே அதை முடித்து விட்ட விதியை எண்ணி எண்ணி கண்ணில் தாரைதாரையாக நீர் வழிய அழுது கொண்டிருந்தாள்..
அடுத்து அவள் வாழப்போகும் ஒரு வருட வாழ்க்கையில் அவளுக்கு கணவனாக இருக்கப் போகும் ஆதியும் கிடைக்கப் போவதில்லை.. பிறக்கும் குழந்தையும் அவளுக்கு சொந்தமாக இருக்க போவதில்லை..
அவள் செய்து கொள்ளும் திருமணமும் கானல் நீராய் போகப் போகிறது.. நினைத்து நினைத்து அந்த மேஜையில் கவிழ்ந்து படுத்து குலுங்கி குலுங்கி அழலானாள்…
மாலையில் தன் வீட்டிற்கு சென்றவள் இந்த விஷயத்தை தன் தந்தையிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு அவள் தந்தையிடம் பொய் சொல்லி பழக்கம் இல்லை.. இப்போதுதான் முதல் முறையாக அவள் தந்தையிடம் இருந்து சில விஷயங்களை மறைக்கப் போகிறாள்.. இதை எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டே தன் அறைக்கு சென்றாள் அவள்..
இங்கே ஆதித்யா வீட்டில் அவன் வீட்டிற்கு வந்த உடனே அவன் தந்தையை பார்க்க சென்றான்..
“ஹாய் டாட்.. உங்க ஆசையை நிறைவேத்தி வைக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வந்துட்டேன்..” என்றான் அவன்..
“என்ன.. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வந்துட்டியா? என்ன சொல்ற?”
இவன் என்ன விவகாரம் செய்து வைத்திருக்கிறானோ என்ற கலவரத்துடனே அவர் கேட்கவும் “நீங்க சொன்ன மாதிரியே அன்பா நல்ல குடும்ப பொண்ணா இருக்கிற ஒரு பொண்ணுகிட்ட வாடகை தாயா இருக்கிறதுக்கு சம்மதம் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றான் அவன்..
“இந்த விஷயத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கான்னா அவ நிச்சயமா நீ குடுத்த ஏதோ ஒரு குடைச்சலுக்காக தான் ஒத்துக்கிட்டிருப்பா… தன்னோட மானத்துக்காக பயப்படுற எந்த பொண்ணும் இந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி வாடகை தாயா இருக்கறதுக்கு ஒத்துக்க மாட்டா” என்று சொன்னார் அவர்..
“எஸ் டாட்.. அக்சப்ட்டட்.. அந்த பொண்ணு அப்படித்தான் சொன்னா.. ஆனா அதுக்கு சொல்யூஷனும் அவளே சொல்லிட்டா.. அவ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறம் விவாகரத்தும் பண்ணி தரேன்னு சொல்லி இருக்கா.. சோ.. பிராப்ளம் சால்வ்ட்.. உங்களுக்கு உங்க பேரக் குழந்தையும் கிடைச்சிடுவான்.. எனக்கு வாழ்க்கை முழுக்க ஒரு பொண்ணோட இருக்கணும்னு அவசியம் இல்ல.. சோ.. ரெண்டு பேருக்குமே பிரச்சனை தீர்ந்து போச்சு.. இப்ப என்ன சொல்றீங்க டாட்?” என்று கேட்டான் அவன்..
இவன் என்ன செய்திருந்தால் அந்தப் பெண் எவ்வளவு வலியுடன் இதற்கு ஒத்துக் கொண்டிருப்பாள் என்று யோசித்தார் அவர்..
” ஆதி.. யாருடா அந்த பொண்ணு?” என்று அவர் கேட்கவும்
“அவதான்பா அல்லி மலர்.. எப்பவும் என்னோட சண்டை போட்டுட்டு இருப்பாளே.. அந்த பொண்ணுதான்.. நீங்க கூட அன்னிக்கு சொன்னிங்களே.. அந்த பொண்ணை பத்தி கேட்டா அவ நல்ல அன்பான பொண்ணுன்னு தோணுதுன்னு.. சாக்ஷாத் அவளே தான்..” அவன் சிரித்துக்கொண்டே கூறினான்..
“இதுல எனக்கு ஒரே கல்லில ரெண்டு மாங்காய் அடிச்ச மாதிரி இருக்கு.. அவ வேலையிலயும் அவளுக்கு நான்தான் பாஸா இருக்க போறேன்.. இந்த ஒரு வருஷம் அவளோட பர்சனல் வாழ்க்கையிலும் அவளுக்கு நான்தான் பாஸா இருக்க போறேன்..” ஒரு இறுமாப்போடு சொன்னான் அவன்..
“ஆதி.. இதுக்கு அவங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்களா?”
“ஆக்சுவலி அவங்க வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க போல.. அதனாலதான் அவ அவங்க அப்பாக்கு இந்த டிவோர்ஸ் பத்தியோ இல்ல வாடகை தாயா இருக்கிறது பத்தியோ தெரியக்கூடாதுனு சொன்னா.. அது தவிர முறையா ரெஜிஸ்டர் ஆஃபீஸ் போய் மாலை மாத்தி தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கணும்னு வேற கண்டிஷன் போட்டிருக்கா அந்த சண்டி ராணி..” என்றான் அவன்..
“டேய் ஆதி.. அந்த பொண்ணு பாவம்டா.. அவ அப்பாகிட்ட திடீர்னு ஒருத்தரை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கணும்னு எப்படி போய் சொல்லுவா.. ஒரு பொண்ணா அது அவளுக்கு ரொம்ப கஷ்டம்.. சரி.. நானே முறையா போய் அவங்க வீட்ல இப்பவே பேசிட்டு.. பொண்ணு கேட்டுட்டு வரேன்..” என்றவரை தடுக்க முனைந்தான் ஆதித்யா..
“பொண்ணு கேட்க போறீங்களா? டாட்.. நீங்க எதுக்கு இவ்வளவு மெனக்கெடுறிங்க… அதெல்லாம் வேண்டாம்.. அவளே பாத்துக்குறேன்னு சொல்லிட்டா.. நீங்க கவலைப்படாதீங்க..”
அவன் சொன்னதை கேட்டு “நீ சும்மா இரு.. எனக்கு தெரியும் நான் இப்ப போய் அவங்க வீட்ல பொண்ணு கேக்க தான் போறேன்.. நீ என்னை கூட்டிட்டு போறியா இல்ல நான் டிரைவரோட போகட்டுமா?” என்று கேட்டார் அவர்..
தொடரும்..
கரம் விரித்தாய் என் வரமே – 14
காரில் பயணம் செய்து கொண்டு இருந்த பார்வதியிடம் பலத்த மௌனம். அவள் முகத்தையே பார்த்த சாய்,
“இதெல்லாம் உனக்கு தேவையா?” என்றான் அக்கறையாக.
“இது தான் பர்ஸ்ட் டைம் ராஜேஷ் இப்படி என்னை எடுத்தெறிஞ்ச மாதிரி பேசுறது….”
“இப்போ தான் உனக்கு ராஜேஷ் பத்தி தெரியுதுனு அர்த்தம்….”
“ம்ம்…. அவனுக்கு நிறைய கோபம் வரும்னு அஸ்வினி சொல்லுவா, நான் இப்போ தான் அனுபவிக்கிறேன்….”
“அவன் வீட்டை பார்த்தேல்ல….”
“ம்ம்…. அங்க எல்லாம் நான் போகமாட்டேன்…. அவன் மட்டும் போதும் எனக்கு….”
“ஹாஹா…. குட் ஜோக்…. கல்யாணம் ஆனா அவங்க எல்லாம் உன்னோட தான் இருப்பாங்க…. பையனை விட்டு போக மாட்டாங்க…. வீட்டை கூட மாத்திக்கலாம், ஆளுங்களை மாத்திக்க முடியுமா….? ராஜேஷ் அம்மானு நீ அவங்க கிட்ட பேசி தானே ஆகணும்….”
“அதெல்லாம் பார்த்துக்கலாம்….” என்றவளின் முகம் தீவிர யோசனையில் இருந்தது.
*************
மறுநாள் அலுவலகத்தில்,
என்ன டா….? நீ, நான்னு ரெண்டு பொண்ணுங்க உன்னை எப்போதும் சுத்தி சுத்தி வருவாங்க…. இன்னைக்கு ஒருத்தரையும் காணும்….” ராஜேஷை ஓட்டினான் மதன்.
“அவங்களை எல்லாம் கொஞ்சம் தள்ளி நிறுத்தி இருக்கேன் டா…. என்னை இத்தனை மாசமா பஞ்சர் பண்ணிடுச்சுங்க ரெண்டும் சேர்ந்து…. போதும் டா சாமி….”
“என்னடா இப்படி சொல்றே….?” நண்பனின் கசங்கிய முகம் பார்த்து கவலையாக கேட்டான் மதன்.
அஸ்வினி தவிர யாரிடமும் மனதை வெளியிடாதவன், நண்பனிடம் அன்று தன் மனக்குமுறலை கொட்டினான்.
“ஒரு பொண்ணு உனக்காக வெளிப்படையாக அன்பை கொட்டும் போது நீ என்னடா பண்ணுவே….? நான் எவ்வளவு தவிர்க்க பார்த்தாலும் அது அவளுக்கு புரிஞ்சாலும் என் பின்னாடியே வரும் போது நான் என்னடா பண்ண முடியும்….? என்னால அந்த அன்பை உதாசீனம் செய்ய முடியலை டா….? செய்ய காரணமும் இல்லை என்கிட்ட…. இது எந்த வைகையிலும் என் நட்பை பாதிக்க கூடாதுனு நானும் பார்த்து பார்த்து நடந்துகிட்டேன்…. ஆனா எல்லாருக்கும் நான் தான் இளிச்சவாயன் மாதிரி அவங்க அவங்க எண்ணத்துக்கும், கோபத்துக்கும் என்னை வடிகால் ஆக்க பார்க்கிறாங்க…. அதான் சரி தான் போங்கடினு ரெண்டு பேரையும் தள்ளி வைச்சுட்டேன்….”
அவன் சொல்வது அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்த மதன் கடைசியாக ராஜேஷ் சொன்னதை கேட்டு,
“ஸாரி மச்சி….” என்று கடகடவென்று சிரித்து,
“ரெண்டு பொண்டாட்டிக்காரன் மாதிரி அவஸ்தை படுற மச்சி….” என்று சிரித்தான்.
“ம்ப்ச்…. ஏண்டா…. பார்வதியை விட எனக்கு அஸ்வினி பண்றது தான் கஷ்டமா இருக்கு டா…. அவளுக்கு என்னை தெரியாதா….? பார்வதிக்கு புரியலைனா கூட பரவாயில்லை சரி தான் போனு விட்ருவேன்…. இவ என்னை புரிஞ்சுக்காம பேசுறது வலிக்குது டா….எப்படி பேசிட்டா தெரியுமா….?”
“சரி விடு மச்சி….” என்று தேற்றிய மதனுக்குள் குழப்பம். பார்வதியின் வார்த்தைகள் இவனை பாதிக்காதா….? இவன் அந்த பெண்ணை காதலிக்கிறானா இல்லையா? அவளை சரி தான் போ என்று விடுவேன் என்று ஈசியாக சொல்கிறானே….
ஒரு வாரம் கழித்து,
முன்பே நிச்சயம் செய்து இருந்த தெய்வா ஷிவா திருமணத் தேதி நெருங்கியது. திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் என்ற நிலைமையில், அஸ்வினி, தெய்வாவுடன் நிறைய வெளியில் சென்று கொண்டு இருந்தாள். அதனால் ராஜேஷுடன் அவளின் பிணக்கு சரியாகமலே இருந்தது. ராஜேஷும் அலுவலகத்தில் விலக்கமாகவே நடந்து கொண்டான்.
இவர்கள் இப்படி இருக்க, பார்வதியும் ராஜேஷிடம் ஒரு வாரம் பேசவில்லை. அவள் ஒரு வாரம் ஒர்க் பிரம் ஹோம் வாங்கி கொண்டு ஊருக்கு சென்றிருந்தாள். செல்லும் முன் அவனிடம்,
“என்னால உன்கிட்ட பேசாம ஒரே ஆபிஸில் உன்னை தள்ளி இருந்து பார்த்துட்டு இருக்க முடியாது ராஜேஷ். ஒரு வாரம் தான் உனக்கு டைம், நான் உன்னை விட்டு தள்ளி என் ஊருக்கு போறேன்…. நான் திரும்ப வரும் போது எனக்கு என்கிட்ட கோபப்படாத பழைய ராஜேஷ் வேணும்….ஓக்கே…. எப்படியும் வந்துடுவான் அவன்…. எனக்கு தெரியும்! ” என்று கொஞ்சி விட்டு தான் சென்றிருந்தாள்.
அவளின் கொஞ்சலில் அவனுக்கு தான் சிரிப்பு தான் வந்தது…. என்ன நம்பிக்கை பாரேன் இவளுக்கு…. என்று நினைத்தவன், அமைதியாகவே இருந்தான். அவளிடம் கொஞ்சம் கூட இளக்கம் காட்டவில்லை.
அந்த வாரக்கடைசி,
பார்வதி இல்லாததால் தெய்வா இந்த வாரக்கடைசியிலேயே நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க விரும்பினாள். ஷிவா கூட ராஜேஷ் ஏதும் எடுத்து கொண்டால் என்று தயங்க, தெய்வா உறுதியாக அவன் அப்படி எடுத்து கொள்ள மாட்டான் என்றாள். அப்போதும் அவன் தயங்க, இப்போ பாரு என்றவள், ராஜேஷை அழைத்தாள்.
“ராஜேஷ், இந்த வீகெண்ட் நீ பிரீயா?”
“நான் பிரீ தான் தெய்வா…. என்ன விஷயம்? ஏதும் வேலையா?”
“இல்லை நம்ம பார்ட்டியை இந்த வீக்கெண்டே வைச்சுக்கலாமானு ஒரு திங்கிங்…. அதான்….”
“ஷுயர் வைச்சுக்கலாம் தெய்வா….” அவனுக்கு பார்வதி ஊரில் இல்லையென்றோ, அவளும் கலந்து கொள்ள வேண்டும் என்றோ, அவள் இல்லாமல் தெய்வா ஏற்பாடு செய்கிறாள் என்றோ எந்த எண்ணமும் இல்லை.
போனை வைத்தவள் ஷிவாவை பார்த்தாயா என்று பார்க்க,
“இவனுக்கு பார்வதி நினைப்பே வரலையா? அந்த பொண்ணு இவன் மேல் அவளோ பொஸஸிவ்வா இருக்கு…. இவன் இப்படி இருக்கான்….? குழப்பமாக சொல்லி கொண்டவன், தெய்வாவிடம், உனக்கு முன்னாடியே இது புரிஞ்சிருக்கு….ம்ம்….” என்றான்.
“அவனுக்கு எப்போ இது புரிய போகுதுனு தான் எனக்கு புரியலை….” என்றாள் தெய்வா கவலையாக.
பார்ட்டி அன்று
இவர்களை தவிர இன்னமும் சில பொதுவான நண்பர்கள், ஷிவாவின் நண்பர்கள் என வேறு சிலரும் வந்திருந்தார்கள். அஸ்வினிக்கு அழகான பார்ட்டி கவுன் ஒன்றை பரிசளித்து இருந்தாள் தெய்வா. அதை தான் உடுத்தி கொண்டு வரவேண்டும் என்ற கட்டளையோடு. பார்வதிக்கு இந்த பார்ட்டி பற்றிய தகவலை, கடைசி நிமிஷத்தில் அவசரமாக ஏற்பாடு செய்தோம், ஸாரி, மிஸ் யு என்று பேருக்கு ஒரு மெசேஜ் செய்ததோடு முடித்து கொண்டாள் தெய்வா.
ஒரு வாரமாக பாராமுகமாக இருக்கும் தோழன் இன்று பேசுவானா இல்லையா என்ற தவிப்போடு தான் கிளம்பி கொண்டு இருந்தாள் அஸ்வினி. ராஜேஷும் அஸ்வினியுடன் இன்று நாள் எப்படி போகும் என்ற இனம் புரியா எதிர்பார்ப்போடு தான் வந்திருந்தான்.
வந்த சிறிது நேரத்திலேயே தெய்வாவிடம் சென்றவன், எந்த தயக்கமும் இன்றி, “அஸ்வினி இன்னும் வரலையே….? போன் பண்ணியா நீ….? ஒன்னும் பிரச்சனை இல்லையே….?” என்றான்.
அவன் கேட்டு கொண்டு இருக்கும் நேரத்திலேயே சரியாக அஸ்வினி ராஜேஷிற்கு அழைத்தாள். தான் கிளம்பி வந்த கார் பஞ்சர் ஆகி விட்டதாகவும், வேறு வண்டி ஏற்பாடு செய்து வர சற்று தாமதம் ஆகும், தெய்வாவிடம் சொல்லி விடு என்றாள். தெய்வா பிசியாக இருக்கும் நேரத்தில் அவளை தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தாள் அஸ்வினி.
அவளிடம், “நீ இருக்கும் லோகேஷன் ஷேர் பண்ணு எனக்கு, வேற எங்கேயும் போகாம அந்த காரிலே இரு…. மதன்கிட்ட கால் பண்ணி பேசிட்டே இரு….” என்றவன், வேகமாக ஷிவாவிடம், “கார் கீ கொடு மச்சான்….” என்று கேட்டு வாங்கி கொண்டு, மற்றவர் யாரிடமும் எதுவும் பேசி நேரத்தை வீணடிக்காமல் விரைந்து கிளம்பி விட்டான். அவன் முகத்தில் இருந்த உணர்வில் அவன் எவ்வளவு டென்ஷன் ஆகி விட்டான் என்று மற்ற மூவருக்கும் புரிந்தது. புரிந்த அவர்கள் மூவரும் அவர்களுக்குள்ளேயே அதை வைத்து கொண்டனர். வெளியில் சொல்ல முடியாத குழப்பமான விஷயம் அல்லவா அது!
அவளை சென்று பார்க்கும் வரை மிகுந்த டென்ஷனுடன் தான் இருந்தான் ராஜேஷ். அவள் தெரிந்த டிரைவருடன் தான் வருவாள், ஆனால் மாலை நேரம் தனியான ஏரியா என்று அவனுக்கு பல விஷயம் கவலையை கொடுத்தது. அங்கே சென்று அவளை தன்னுடன் அழைத்து கொண்ட பின் தான் நிம்மதி ஆனான் ராஜேஷ். சற்று நேரம் அவன் மனதின் பதட்டம் குறையும் வரை எதுவுமே பேசவில்லை அவன்.
அவனின் மனநிலை என்னவென்று புரியாமல் அஸ்வினியும் அமைதியாகவே வந்தாள். அவன் நார்மல் ஆன பின் தான் அவளை ஒழுங்காக கவனித்தான் அவன். அவள் ஒரு மாதிரி இருக்கவும்,
“ரொம்ப பயந்துட்டியா….?” என்றான்.
“இல்லை, மதன் கூட பேசிட்டு தானே இருந்தேன்…. அதனால் ஓக்கே….” என்றாள்.
“ரொம்ப டென்ஷன் பண்ணிட்டேன்னா… ஸரரி….” என்றாள்.
“டிரைவர் நல்லா தெரிஞ்சவர் தான்…. இருந்தாலும் ஏதேதோ சிந்தனை…. இனிமே ஈவ்னிங் மேல் எங்கே போறதுனாலும் தனியா போகாதே….” என்றான். சொல்லும் போதே மனம் குத்தியது. இவளுடன் சண்டை என்று அவள் எப்படி வருகிறாள் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் என்ன? இதே சாதாரணமாக இருந்திருந்தால் அவளை தனியே விட்டு வந்திருப்பாயா நீ….? மனசாட்சி கேள்வி கேட்டது.
அஸ்வினியை அழைத்து கொண்டு வந்தவனை பார்த்து சிரித்த மதன், அஸ்வினி தெய்வாவை நோக்கி போகவும்,
“தோழி கிட்ட சமாதானம் செஞ்சுகிட்டே போல்….” என்றான் கிண்டலாக.
“இந்த மாதிரி நேரத்தில் வேற என்ன பண்றது….?” கெத்தை விடாமல் கேட்டான் ராஜேஷ்.
“நான் கூட போய் அழைச்சிட்டு வந்து இருப்பேன்….” மதன் கேலி செய்ய,
“போக வேண்டியது தானே….?” ராஜேஷும் நக்கலாக கேட்க
“விட்டா தானே….? நீ தான் ஒரு வார்த்தை கூட பேசாம, சொல்லாம பறந்து போயிட்டியே….”
“இப்போ என்ன டா….?”
ராஜேஷின் அலுத்து கொள்ளும் தொனியில், “அஸ்வினி மேல் இவ்ளோ பிரியம் இருக்கு…. அப்புறம் என்ன….? அவ மேல் கோபப்படு ஆனா பேசாம இருக்காத….பாவம் அவ!” என்றான்.
“ம்ம்ம்….” என்றான் சம்மதமாக. அவளுடன் பேசாமல் இருப்பது அவனுக்கு மட்டும் சந்தோஷமாக இருந்தது…. எந்நேரமும் மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே தான் இருக்கும்….
*********
தன் அருகே வந்த தோழியை இறுக்கி அணைத்த தெய்வா, “நான் இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் சமாதானம் செஞ்சு வைக்கணும்னு இருந்தேன்…. கடவுளே அதை செஞ்சுட்டார். நீ வர லேட் ஆகும் போதே டென்ஷன் ஆக ஆரம்பிச்சான், உன் போன் வந்தவுடன் அவ்ளோ பதட்டம் அவனுக்கு…. இப்படியே அவன் கூட சமாதானம் ஆய்டு அஸ்வினி” என்றாள் தெய்வா.
“ம்ம்…. உனக்கு போன் பண்ணாம நான் நேரா அவனுக்கு பண்ணினது அவனுக்கு ரொம்ப சந்தோஷம் போல் டி, என்கிட்ட பிரச்சனை பண்ணினாலும் என் நியாபகம் வந்துருக்கே அதிசயம்னு கிண்டல் பண்ணினாலும் அதில் அவன் சந்தோஷம் தெரிஞ்சுது!” என்றாள் அஸ்வினி சிரிப்புடன்.
தோழியை சற்று தள்ளி தனியே அழைத்து சென்ற தெய்வா, “ரொம்ப நாளா உன்கிட்ட சொல்றதா வேண்டாமானு குழப்பிட்டு இருந்தேன், இன்னைக்கு சொல்லியே ஆகணும்னு முடிவுக்கு வந்துட்டேன். ராஜேஷ்க்கு பார்வதி மேல் இருக்கிறது லவ்வே இல்லைடி…. நம்மளை விரும்புற ஒருத்தரோட லவ்வை அக்செப்ட் பண்ண கமிட்மெண்ட் தான்…. அதை ஒரு கடமை மாதிரி தான் பண்றான் அவன்…. அவனை அதில இருந்து காப்பாத்தி விடுடி….பாவம்…. உன்னால தான் அவன் பார்வதி கிட்டே போய் சிக்கினான்….”
“என்னடி இப்படி சொல்றே….? நான் என்ன…. எப்படி…. பண்றது….?”
“என்னடா இப்படி சொல்றா தெய்வானு நீ நினைக்க மாட்டேன்னு எனக்கு தெரியும், அதனால் தான் சொல்றேன்” என்று பீடிகை போட,
“ஹேய் நீ எது சொன்னாலும் என் நல்லதுக்கு தான் சொல்லுவேனு எனக்கு தெரியும், சொல்லு” என்றாள் அஸ்வினி. தெய்வா எப்போதுமே ரொம்ப யோசித்து, கவனமாக சிந்தித்த பின் தான் பேசுவாள், அதனால் அவள் சொல்லும் விஷயத்தை கன்சிடர் செய்வாள் அஸ்வினி. அவள் தவறிய விஷயம் தெய்வா அவ்வளவு வற்புறுத்தியும் ராஜேஷிடம் காதல் சொல்லாதது தான்.
அவனுக்கு உன்மேல் பிரண்ட்ஷிப்பையும் தாண்டின பீலிங்ஸ் இருக்கு…. அவன் அதை உணர்றதுக்கு முன்னாடி நிறைய விஷயம் நடந்துடுச்சு…. அவன்கிட்ட நீ கொஞ்சம் க்ளோஸா பழகு அஸ்வினி…. உன் காதல் நிச்சயம் கைகூடும்! பார்வதியை விலக்குவியோ விலக வைப்பியோ அது உன் சாமர்த்தியம்…. ராஜேஷ் உனக்கு வேணும்னா நீ வேகமாக செயல்படு…. ரொம்ப முக்கியமா பார்வதி மாதிரி செல்பிஷ்ஷா இரு!
அவள் சொன்ன செய்தியை புரிந்து கொண்ட அஸ்வினி கண்களை விரித்து தெய்வாவை பார்த்தாள்! அதில் ராஜேஷிற்கு என் மேல் பீலிங்ஸா….? என்ற கேள்வி இருந்தது.
நெருக்கமாக பழகு என்றால் எப்படி….? என்ற குழப்பமும் இருந்தது!
விடியல் – 17
“என்னடி சொல்ற..? நந்தினி அவங்க வீட்டுக்கு போயிட்டாளா..” என அதிர்ந்து போய் கேட்டார் நாதன்.
“பின்ன இப்படி ஒரு புருஷன் இருந்தா போகாம வேற என்ன பண்ணுவா..? இன்னைக்கு எனக்கு சங்கடமாப் போச்சுங்க.. அந்தப் பொண்ணு ரொம்ப பயந்து போய் வந்திருக்கா.. இவன் என்னடான்னா அங்க போய் அந்தப் பசங்களை அடிச்சிட்டு வந்து இவளையும் அடிச்சிருக்கான்..” என்றார் அவர் கவலையுடன்.
“என்ன சுஜாதா சொல்ற..? நம்ம மருமகள இவன் எதுக்கு அடிச்சான்..?”
“அவ பயந்து போய் அழுதாளாம்.. தைரியமா இருக்கலையாம்.. அதுவும் நடந்த எல்லாத்தையும் இவன்கிட்ட சொல்லாம அவங்க அப்பாக்கிட்ட சொல்லிட்டாளாம்.. இவனுக்கு கோவம் வந்திருச்சாம்.. பொண்ணுன்னா பயப்படக் கூடாது.. அப்படி இப்படின்னு சொல்லி அடிச்சிருக்கான்..
அவ பாவம்.. அவங்க அப்பா இங்க வந்ததும் எல்லாத்தையும் சொல்லி ஓன்னு அழுதுட்டா.. பொண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்திருப்பாங்க போல.. அவங்க மேல தப்பு சொல்ல முடியாது.. ஒரே பொண்ணு.. செல்லமாதானே வளர்ப்பாங்க.. நாம மட்டும் நம்ம அமுதாவை எப்படி வளர்த்தோம்..? எல்லா தப்பும் உங்க பையன் மேலதான்.. எனக்கு வர்ற கோபத்துக்கு அவனை நல்லா திட்டிவிடணும் போல இருக்குங்க..” என்றார் சுஜாதா.
“திட்ட வேண்டியதுதானே.. அதைதானே நானும் சொல்றேன்..”
“ஏன் நீங்க கூப்பிட்டு திட்ட மாட்டீங்களா..? அந்தப் பொண்ணு திரும்பி வருமானு கூட தெரியல.. ரெண்டு நாள் இருந்துட்டு திரும்ப வந்திரும்மான்னு சொல்லித்தான் அனுப்பினேன்.. அதுக்கு அவ பதில் கூட சொல்லல.. இப்போ என்னங்க பண்றது..? நம்ம மேலதான் தப்பு இருக்கு..”
“புரியுது சுஜாதா.. கல்யாணம் பண்ணி இங்க வந்து ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள அவங்க பொண்ணுக்கு இவன் அடிச்சிருக்கான்னு தெரிஞ்சா அவங்க மனசு என்ன பாடு படும்.. நான் ஏதாவது அவங்ககிட்ட பேசவா..”
“நீங்க பேசி என்னங்க பிரயோஜனம்.. அவன்தான் பேசணும்.. இவனே மன்னிப்பு கேட்டு நந்தினியை கூட்டிட்டு வந்துட்டான்னா பிரச்சனை பெருசாகாது.. ஆனா இவன் மன்னிப்பு கேட்கணுமே..”
“பைத்தியமா நீ.. இவனாவது மன்னிப்பு கேட்கிறதாவது.. இப்படி நாம சொன்னா அங்க போய் சண்டை போட்டாலும் போட்டுட்டு வந்திருவான்..” என்றார் நாதன்.
“இல்லங்க.. என்ன இருந்தாலும் இவன் மேலதான் தப்பு.. நான் சும்மா விடப் போறதில்ல.. கொஞ்ச நேரத்துல டின்னருக்கு அவன் கீழே இறங்கி வருவான்.. அப்போ இதைப் பத்தி தெளிவா பேசிடலாம்.. அவனுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டிய நாமளே இப்படி பயந்து போய் அமைதியா இருந்தா அவனுக்கு எப்படி எது சரி எது தப்புன்னு புரியும்..”
“சரிமா.. நீ வருத்தப்படாத.. இன்னைக்கு பேசலாம்..” என்றார் நாதன்.
அறைக்குள் இருந்த வர்மாவிற்கோ நந்தினி பற்றி எந்த எண்ணங்களும் பெரிதாக எழவில்லை.
அவள் சென்றவுடன் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.
இங்கேயே இருப்பாள் என்றுதான் நினைத்தான்.
ஆனால் அவள் தன் தந்தையுடன் கிளம்பியது அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
அடுத்த சில நிமிடங்கள் அவளுடைய இதழ்களைத் தீண்டிய உணர்வில் தத்தளித்தான்.
மீண்டும் அந்த முத்தம் வேண்டும் போலிருந்தது.
இறுக அணைத்து தன்னுடைய உணர்வுகளை அவளில் வடித்துவிட வேண்டும் போல ஆவல் எழுந்தது.
ஆனால் அதற்குத்தான் அவள் இல்லையே.
அட்வைஸ் செய்தால் இப்படியா கோபித்துக் கொண்டு செல்வது..?
அவளுடைய நன்மைக்குத்தானே சொன்னேன் என எண்ணியவன் அதன் பின்னர் அவளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
தன்னுடைய வேலைகளில் மூழ்கிப் போனான்.
கிட்டத்தட்ட ஒரு கேஸ் சம்பந்தமாக பதினைந்து சிசிடிவி கேமராவின் ஃபுட்டேஜ்கள் அவனிடம் இருந்தன.
அனைத்தையும் சரிபார்த்து அதில் ஏதாவது தவறுகள் இருக்கின்றதா ஆதாரம் கிடைக்கின்றதா என அவன்தான் ஆராய வேண்டும்.
அந்த வேலையில் மூழ்கியதால் அவன் நந்தினியை மறந்தே போனான்.
இரவு நேரம் வந்ததும்தான் உணவு எடுத்து வர அவள் இல்லை என்ற நினைவே வந்தது.
‘அவள் இல்லை என்றால் என்னால் சாப்பிட முடியாதா என்ன..’ என நினைத்தவாறு இலகுவான ஆடை ஒன்றை அணிந்து கொண்டு கீழே வந்தவனை அழுத்தமான பார்வையுடன் எதிர் கொண்டார் நாதன்.
அந்தப் பார்வையிலேயே அவனுக்குப் புரிந்து விட்டது.
தன்னுடைய முகத்தை இன்னும் இறுக்கமாக வைத்துக் கொண்டான் அவன்.
சுஜாதா பேசத் தயங்கியவாறு அங்கே அமர்ந்து இருந்தார்.
அவனைப் பார்ப்பதும் பின்பு தன் முன்னே இருந்த தட்டைப் பார்ப்பதுமாக இருந்தவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் அமைதியாக உண்ணத் தொடங்கி விட நாதனுக்கோ தன் மகன் மீது கோபம் அதிகரித்தது.
“என்ன இருந்தாலும் இன்னைக்கு நீ பண்ணது ரொம்ப தப்பு வர்மா..”
தந்தையை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன் “நான் தப்பு பண்ணல..” என்றான் அழுத்தமாக.
“போலீஸா இருந்துட்டு ஒரு பொண்ணைக் கை நீட்டி அடிக்கிறது தப்பு இல்லையா..? அதுவும் உன்னை நம்பி வந்த பொண்டாட்டியை இப்படித்தான் அடிப்பியா..?”
“அவ என்ன குழந்தையா..? அங்க ரெண்டு பசங்க இவள டீஸ் பண்ணியிருக்காங்க.. கண்ணைக் கசக்கி அழுதுகிட்டே வந்திருக்கா.. ஒரு ஏசிபியோட பொண்டாட்டியா இருந்துகிட்டு இப்படியா அழுறது.. எனக்கு அசிங்கமா இருக்கு..” என்றான் அவன் எரிச்சலுடன்.
“என்னடா பேசுற..? அவ ஒரு பொண்ணுடா.. அவளால என்ன பண்ண முடியும்.. அவனுங்களை எதிர்த்து சண்டை போட முடியுமா..”
“ஓ காட்.. உங்க மருமகளுக்கு கண் மூடித்தனமா சப்போர்ட் பண்றதை முதல்ல நிறுத்துங்க.. அவ தனியா காட்டுலயோ இல்ல தனி இடத்திலயோ மாட்டிக்கல.. அவ இருந்தது ஒரு பப்ளிக் ப்ளேஸ்.. அங்க கிட்டத்தட்ட நானூறு பேருக்கு மேல அந்த டைம்ல இருந்தாங்க.. கத்தி ஹெல்ப்னு கேட்டிருந்தாக் கூட அத்தனை பேரும் வந்து அவளுக்கு ஹெல்ப் பண்ணியிருப்பாங்க.. அதை விட்டுட்டு சைலண்டா அழுதுகிட்டே வந்திருக்கா.. வந்ததும் இல்லாம என்கிட்ட கூட சொல்லாம அவங்க அப்பாக்கிட்ட போய் சொல்லி அழுறா.. இப்படி ஒரு பயந்த பொண்ணை எதுக்கு எனக்கு கட்டி வச்சீங்க..” என அவன் அவர்களைக் குற்றம் சுமத்த அவனுடைய பெற்றோர்களுக்கோ தங்களுடைய தலையைச் சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
இவனைப் பற்றி தெரிந்தும் திருமணத்தை ஏற்பாடு செய்து நடத்தி வைத்தது அவர்களுடைய பிழை அல்லவா..?
“நீதானடா பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்ன..” தாங்க முடியாமல் கேட்டு விட்டார் நாதன்.
“இப்படி பயந்தவளா இருப்பாள்னு முன்னமே தெரிஞ்சிருந்தா பிடிக்கலைன்னு சொல்லிருப்பேன்..” என்றான் சாதாரணமாக.
சுஜாதாவின் முகமோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“ஏன்பா இப்படி நடந்துக்குற.. உன்னை நாங்க இப்படியா வளர்த்தோம்..?”
“ப்ச்.. முதல்ல என்னை நீங்க வளர்க்கவே இல்லை.. நான் ஹாஸ்டல்லதான் வளர்ந்தேன்.. மறந்துடுச்சா..” என அவன் எதிர்க் கேள்வி கேட்க சுஜாதாவின் கண்களோ கலங்கி விட்டன.
தன் தாயைப் பார்த்தவன் “என்னோட பொண்டாட்டி எப்படி இருக்கணும்னு நான்தான் முடிவு பண்ணனும்.. இன்னொரு தடவை அவளுக்கு இப்படி நடந்துச்சுன்னா அவளே அந்தப் பிரச்சனையை பேஸ் பண்ணுவா.. இப்படி அழுதுட்டு பயந்து ஓடி வரமாட்டா.. அதுக்காகத்தான் அப்படி பண்ணேன்.. போதுமா..” என சத்தமாகக் கூறியவன் உணவுத் தட்டைத் தள்ளி வைத்தான்.
“இப்போ எதுக்குப்பா சாப்பாட்டைத் தள்ளி வைக்கிற..” பதறினார் சுஜாதா.
“எனக்கு வேணாம்..”
“கண்ணா.. நான் சொல்றது புரிஞ்சுக்கோ.. அம்மா உன்னோட நல்லதுக்குத்தானே சொல்லுவேன்.. இப்பதான் உன்னோட வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ளே பொண்டாட்டி வீட்டை விட்டு போறதெல்லாம் நல்லா இருக்கா..”
“ஓ மை காட்.. உங்களுக்கு புரியுதா இல்லையா.. அவளை வீட்டை விட்டு போகணும்னு நான் சொல்லல.. அவளேதான் போனா.. போனவளுக்கு வாழ்க்கை முக்கியம்னா திரும்பி வரத் தெரியும் தானே.. வாழ்க்கை வேணும்னா அவளே வரட்டும்..”
“நீ போய் நம்ம மருமகளைக் கூட்டிட்டு வா கண்ணா..”
“தயவு செஞ்சு என்னை கண்ணான்னு கூப்பிடாதீங்க.. அடுத்து என்னால எங்கேயும் போக முடியாது.. யாரையும் கூட்டிட்டு வரவும் முடியாது.. உங்களுக்கு வேணும்னா நீங்க போய் கூப்பிடுங்க..”
“வர வர நீ நடந்துக்கறதெல்லாம் சரியில்ல..” எனக் கோபமாகக் கூறினார் நாதன்.
“நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் தான் புதுசா என்னோட விஷயத்துல தலையிடுறீங்க..” என்றதும் அதிர்ந்துவிட்டார் அவர்.
இதற்கு மேல் அவர்களால் என்னதான் பேசிவிட முடியும்..?
கரையவே மாட்டான் என கல்லாய் இறுகி அல்லவா நிற்கின்றான்.
அதே கணம் சுஜாதாவின் அலைபேசி அலறியது.
“ஏங்க சம்மந்தி அம்மாதான் கால் பண்றாங்க.. நான் எப்படிங்க அவங்ககிட்ட பேசுறது..? எனக்கு சங்கடமா இருக்கு..” எனத் தயங்கினார் சுஜாதா.
“இப்போ நீ காலை அட்டென்ட் பண்ணாம விட்டா இன்னும் அவங்க நம்மளை தப்பாதான் நினைப்பாங்க.. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்.. போனை ஆன் பண்ணு..” என்றார் நாதன்.
எழுந்து செல்ல முயன்ற வர்மாவோ அப்படியே அமர்ந்திருந்தான்.
தயக்கத்துடன் அந்த அழைப்பை ஏற்றவர் “சொல்லுங்க சம்மந்தி..” என்றார்.
அழைப்பு ஸ்பீக்கரில் இருந்தது.
“நல்லா இருக்கீங்களா அக்கா..” என சாதாரணமாகக் கேட்டார் நந்தினியின் அன்னை.
அவருடைய இயல்பான பேச்சில் நிம்மதி பெருமூச்சு விட்டவர் சற்றே நிதானமாக பதில் கூறத் தொடங்கினார்.
“நான் நல்லா இருக்கேன் சம்மந்தி..” என்றார் சுஜாதா.
“தப்பா எடுத்துக்காதீங்க சுஜாக்கா.. பொண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம்.. அவ அழுதா இவருக்கு தாங்கிக்கவே முடியாது.. அதனாலதான் நந்தினியை இங்க கூட்டிட்டு வந்துட்டாரு.. நான் கோயிலுக்கு போயிருந்ததால எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல.. வீட்டுக்கு வந்து பார்த்தா அப்பாவும் பொண்ணும் ஒரே ரகளை..”
“இல்லம்மா.. எங்க மேலதான் தப்பு.. நந்தினி பாவம்தான்..” என்றார் சுஜாதா.
அவரை முறைத்துப் பார்த்தான் யுகேஷ் வர்மா.
போடா என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்த சுஜாதாவோ அலைபேசியில் தொடர்ந்து பேசினார்.
“இனி இப்படி எல்லாம் நடக்காது சம்மந்தி..”
“மாப்ள சொன்னதும் சரிதானே அக்கா.. இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் பயந்து அழக் கூடாது.. அவளே எல்லாத்தையும் எதிர்த்து போராடணும்.. அதுதான் என்னோட விருப்பம்.. ஆனா இவர்தான் அவளைத் தனியா எங்கேயுமே விடுறதில்லையே.. ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம்..”
“பரவால்ல சம்மந்தி.. எனக்குப் புரியுது..”
“நானே அவளை சமாதானப்படுத்தி அங்க அனுப்பி வைக்கிறேன்..” என நந்தினியின் அன்னை கூறியதும்தான் சுஜாதாவுக்கும் நாதனுக்கும் நிம்மதியாக இருந்தது.
“இப்ப நந்தினி எப்படி இருக்கா.. அழுதுட்டுதான் இருக்காளா..?” எனக் கேட்டார் சுஜாதா.
“ஐயோ.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.. சோபால படுத்திருந்து டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பாத்துட்டு இருக்கா.. அவளை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க..” என்றவர் சற்று நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்ததும்தான் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.
வர்மாவோ எதுவுமே கேட்காதவன் போல எழுந்து உள்ளே சென்று விட,
“ஏங்க இவனைப் பெத்ததுக்கு நாமளும் பேசாம டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பாத்திருக்கலாம்..” என்றார் சுஜாதா.
சுஜாதாவின் பேச்சில் பக்கென சிரித்து விட்டார் நாதன்.
அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்த வர்மாவிற்கோ நந்தினியின் இதழ்களின் சுவையை அறிய மனம் ஆவல் கொண்டது.
மோகக் குளத்தில் மூழ்கும் நிலையில் இருந்தான் அவன்.
🥀💜🥀